Pages

Search This Blog

Sunday, October 3, 2010

ராஜபக்சேவிடம் மன்னிப்பு கேட்க மாட்டோம் பொன்சேகாவின் மனைவி ஆவேசம்

எனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை. ஆகவே அவரோ, நானோ ராஜபக்சேவிடம் மன் னிப்பு கேட்கும் பேச் சுக்கே இடமில்லை என்று சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா கதறி அழுதபடி ஆவேசமாக கூறினார்.
இலங்கை ராணுவத் தின் முன்னாள் தலைமை தளபதி பொன்சேகா மீது ராணுவ நீதிமன்றத் தில் 2 வழக்குகள் தொட ரப்பட்டன. ஒரு வழக் கில் அவரது ஜெனரல் என்ற தகுதி மற்றும் ராணுவ தளபதிக்கான முத்திரைகள் பறிக்கப் பட்டன.
ராணுவத்துக்கு ஆயு தம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக இன்னொரு வழக்கும் தொடரப்பட் டது. இந்த வழக்கில், அவருக்கு ராணுவ நீதி மன்றம் 30 மாதம் கடுங் காவல் சிறை தண்டனை விதித்தது. அதற்கு அதி பர் ராஜபக்சேவும் ஒப்பு தல் அளிக்க, பொன் சேகா கொழும்பு வெலிக் கடையில் உள்ள சிறை யில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சிறையில் அடைக்கப் பட்டுள்ள பொன்சேகா மன்னிப்பு கேட்டால், அவரை மன்னித்து விடு தலை செய்ய அதிபர் ராஜபக்சே பரிசீலிப்பார் என்று பாதுகாப்புத் துறை செயலாளரும், அதிபர் மகிந்தா ராஜ பக்சேவின் தம்பியுமான கோதபய்ய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், பொன்சேகா மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது அல்ல. ராணுவ நீதிமன்றம் எடுத்த நட வடிக்கை. அதனால், இந்த விவகாரத்துக்கு போராட் டத்தின் மூலமோ, மூன் றாம் நபரின் தலையீட்டு மூலமோ தீர்வு காண முடியாது. பொன்சேகா தனக்கு அளிக்கப்பட்ட 30 மாத சிறைத் தண் டனையை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை விடுத்தால், அதை பரி சீலிக்க அதிபர் ராஜ பக்சே தயாராக இருக் கிறார் என்று சொன்னார்.
ஆனால், மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொன் சேகாவின் மனைவி அனோமா திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள தனது கணவரைப் பார்க்க அனோமா சென்று இருந் தார். அவரைப் பார்த்து விட்டு திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போரை வென்று இந்த நாட்டை மீட்டுக் கொடுத்த எனது கணவ ருக்கு அதிபர் கொடுத் துள்ள சன்மானமே 30 மாத சிறை தண்டனை. அவர் மன்னிப்பு கோரு மளவுக்கு எந்தக் குற்ற மும் இழைக்கவில்லை. எனவே மன்னிப்பு கோரு வது என்பது சாத்திய மற்றது. எனது கணவர் உண் மையிலேயே குற்றம் புரிந்து இருந்தால் மன் னிப்பு கோரலாம். அவர் நிரபராதி என்கிற போது ஏன் மன்னிப்பு கோர வேண்டும்? அவர் மீதான நடவடிக்கை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை. அதிபர் ராஜபக்சேவின் விருப்பத்துக்கு இணங்க, எனது கணவருக்கு தண் டனை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆகவே எந்த தவறும் செய்யாத என் கண வரோ, நானோ ராஜ பக்சேவிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. மன்னிப்பு கேட்பது என்பதை நினைத்துப் பார்ப்பது கூட கஷ்டமானதே. ஏனென்றால், எனது கண வர் போரை வென்று நாட்டை மீட்ட ராணுவ வீரர்.
அவருக்கு சிறை தண் டனை வழங்கப்பட்டு இருப்பது மிகவும் கொடு மையானது. 30 வருட போரை வென்ற எனது கணவருக்கு இறுதியில் எஞ்சியது ஒரு பீங்கா னும், ஒரு கோப்பையும், பாயும், தலையணையும் மட்டுமே. (சிறையில் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளவை). அவரது தேசிய உடை யும் கழற்றப்பட்டு, கைதி உடை வழங்கப்பட்டு உள்ளது. (இவ்வாறு கூறும்போது அனோமா கண்ணீர் விட்டு அழுத படி பொன்சேகாவின் கழற்றப்பட்ட தேசிய உடையையும், கைப்பை யையும் காண்பித்தார்.)
எனது கணவர் அடைக் கப்பட்டுள்ள இடம் சுத்தமானதாக இல்லை. அவரது இருப்பிடம் பாம்புகளால் சூழப் பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். அவரது உடல் நிலை சற்று தளர் வடைந்து உள்ளது. அவ ருக்கு அங்கு எந்த வித வசதிகளும் செய்து தரப் படவில்லை. எதனை மனதில் வைத்து அவர் இவ்வாறு நடத்தப்படு கிறார் என்று எங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை என்றார் அவர்.
http://www.viduthalai.periyar.org.in/20101003/news29.html

No comments:


weather counter Site Meter