Pages

Search This Blog

Monday, May 2, 2011

அடையாறு சிறீசங்கரா மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சுபலா அனந்தராமன் என்னும் பார்ப்பன அம்மையார் மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்குமா?

கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தங்கள் பள்ளியில் ஏழை மாணவர்களைச் சேர்த்தால் பள்ளியின் கல்வித் தரமும் ஒழுக்கமும் கெட்டுப் போய்விடும் என்று சென்னை அடையாறு சிறீசங்கரா மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சுபலா அனந்தராமன் என்னும் பார்ப்பன அம்மையார் தனது பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

பள்ளியின் தரமும், ஒழுக்கமும் கெட்டுப் போவதுடன், ஆசிரியர்களும் ஆர்வம் இழந்து விடுவார்கள் என்று அவர் அதில் கூறியுள்ளார். மாணவரின் செயல்பாட்டை அவரது பொருளாதார நிலையுடன் தொடர்புபடுத்திக் காணும் இந்த அம்மையார் இந்தக் கல்வி பெறும் உரிமை சட்டத்தை எதிர்க்கும்படி மாணவர்களின் பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் சட்டத்தின்படி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களையும் பள்ளியில் சேர்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால், இந்த விதிகள் ஒட்டு மொத்தப் பள்ளியையும் சீரழித்துவிடும் என்றும், அதன் மூலம் மாணவர்களின் கல்வியும் சீரழிந்துபோகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவையெல்லாம் அனைத்துப் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகள் போல தரத்திலும், ஒழுக்கத்திலும் தாழ்த்திவிடும் . இதற்காகவா நம் குழந்தைகளை இது போன்ற நல்ல பள்ளிகளில் நாம் சேர்த்தோம்? என்று அந்த சுற்றறிக்கை கேட்கிறது.

இந்த ஒரு பள்ளி மட்டுமல்ல, அனைத்துத் தனியார் பள்ளிகளும் ஏதோ தங்கள் பள்ளி மட்டும் ஆகாயத்தில் இருந்து குதித்துவிட்டது போலவும், அங்கு அளிக்கப்படும் கல்வியைப் போல் வேறு எந்தப் பள்ளியுமே அளிக்காது என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக் கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் நமது பெற் றோர்களும் அத்தகைய பள்ளிகளிலேயே தங்களின் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்ற விருப்பத் தால், அவர்கள் எவ்வளவு நன்கொடை கேட்டாலும் கொடுத்துச் சேர்த்துவிடுவதால், இந்தப் பள்ளி களின் அட்டகாசம் அதிகரித்துப் போயுள்ளது.

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட கல்வி பெறும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இத்தகைய வெறுப்பினை ஒரு பள்ளியின் முதல்வர் காட்டினால், அப்பள்ளியில் சேரும் ஏழை மாணவர்களின் கதி என்ன என்பதை எண்ணிப் பார்த்தால் அச்சமாகவே உள்ளது. இதைவிட அந்த ஏழை மாணவர்கள் அரசு அல்லது நகராட்சிப் பள்ளிகளிலேயே படித்தாலும் தன்னம்பிக்கையுடன், சுயமரியாதையுடன் நன்றாகப் படித்து முன்னேறு வார்கள் என்பது உறுதி. சமச்சீர்கல்வி என்ற முறை ஓரளவு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கலாம் என்றாலும், கிராமப் பள்ளிகள் முதல் பெருநகரப் பள்ளிகள் வரை எல்லா வசதிகளும் பெற்றவைகளாகத் திகழ வேண்டும்.

இன்றைக்கு அந்த நிலை இல்லை என்பது வெளிப்படை

வாய்ப்பு கொடுத்தால், வசதிகளை செய்து கொடுத்தால், கிராமப் பள்ளிகளில் பயிலும் இருபால் மாணவர்களும் பெருநகர மாணவர்களைத் தூக்கி அடிப்பார்கள்.

சில தனியார் கல்வி நிறுவனங்கள் உயர்ஜாதி மனப்பான்மையுடன் எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கு மேற்கண்ட பார்ப்பன அம்மையாரே எடுத்துக்காட்டாகும்.

அரசு அறிவிக்கும் சட்டத்தைச் செயல்படுத் துவதுதான் இவர்கள் வேலையே தவிர, அதனை வேறு வகையில் தோல்வி அடையச் செய்வது - எதிராக அறிக்கை விடுவது என்பதெல்லாம் அனுமதிக்கப்படக்கூடாது. கல்வித் துறை இத்தகை யவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா? எங்கே பார்ப்போம்.

சட்டத்திற்கு வெளியில் திரியும் நரேந்திரமோடி

இந்தியாவில் அண்மைக் காலத்தில் மிகக் கொடூரமாக மனிதன் என்று ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டுமானால் அது குஜராத்தை ஆண்டுகொண்டிருக்கும் - பா.ஜ.க.வைச் சேர்ந்த நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி என்ற நர வேட்டை நாசகாலர்தான்.

இந்த மனிதரை உச்சநீதிமன்றம் சாடியதுபோல வேறு ஒருவரையும் சாடியது கிடையாது. நீரோ மன்னன் என்பதைவிட வேறு கேவலமான பட்டம் ஓர் ஆட்சியாளனுக்கு வேறு உண்டா?

சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்தும், அதிகார ஆயுதத்தைப் பயன்படுத்தியும் தப்பித்துக் கொண்டு வரும் இந்த மோடி இப்பொழுது உயர் காவல்துறை அதிகாரி உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ள மனுவின் மூலம் அம்பலப்பட்டுள்ளார்.

குஜராத்தில் கலவரம் திட்டமிட்ட வகையில் தூண்டி விடப்பட்ட போது மூத்த காவல்துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட் என்பவர்தான் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்; அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

குஜராத் கலவரத்துக்கும், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. கலவரம் நடந்தபோது நான் அங்கு பணியாற்றினேன். அப்போது நரேந்திரமோடி, தனது வீட்டில் காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, "குஜராத்தில் நடந்து வரும் கலவரத்தைக் கண்டுகொள்ள வேண்டாம். இந்துக்கள் தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளட்டும். அதற்கு அனுமதியுங்கள். கலவரத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம். அவர்களது கூக்குரலை கேட்க வேண்டாம்'' என்று சொன்னார்.

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள புலனாய்வுக் குழுவினரிடம் நான் இதை தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நரேந்திர மோடிக்கும், அவரைச் சார்ந்தவர் களுக்கும் எதிரானவற்றை புலனாய்வுக் குழுவினர் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே நான் தனியாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறேன். இந்த நிலையில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பு கிடைக்க உத்தரவிட வேண்டும். - இவ்வாறு மனுவில் காவல் அதிகாரி கூறி இருக்கிறார். பொறுப்பு வாய்ந்த அதிகாரி, அதுவும் குஜராத்தில் மதக் கலவரம் நடந்தபோது அங்கு பணியாற்றிய உயர்நிலை காவல்துறை அதிகாரி உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாகப் பகிரங்கமான குற்றச்சாற்றை முன் வைத்துள்ளார் என்பது சாதாரணமானது அல்ல. இந்தப் பிடியிலிருந்து மோடி தப்பிப்பதும் அவ்வளவு எளிதும் அல்ல.

இந்த நிலையில் மோடி தனது வழக்கமான பாணியில் தற்போதைய குஜராத் மாநில காவல்துறைத் தலைமை முன்னாள் இயக்குநர் சக்ரவர்த்தி என்பவரைவிட்டு விட்டு முதல் அமைச்சர் மோடி கூட்டிய அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவேயில்லை என்று கூறச் செய்துள்ளனர்.

எவ்வளவு பலகீனமான இடத்துக்கு ஒரு முதலமைச்சர் தள்ளப்பட்டுள்ளார் என்பதற்கு இது ஒன்றுபோதும்.

டி.ஜி.பி.யின் கூற்று உண்மையாகவே இருக்கட்டும். முதல் அமைச்சர் மோடி கூட்டிய அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்துகொண்டனரே - மோடி அமைச்சரவையில் முக்கிய அமைச்சரான ஹரே பாண்ட்யா இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்தானே? உச்சநீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கூறிய இதே தகவலை அப்பொழுதே கூறியுள்ளாரே!

அந்த உண்மையை வெளிப்படுத்தியதற்காக அமைச்சர் ஹரேன் பாண்டியா அடுத்துக் கொல்லப்பட்டதுதான் மிச்சம். என் மகன் கொல்லப்பட்டதற்குக் காரணம் முதல் அமைச்சர் மோடிதான் என்று அவரது தந்தையார் அப்பொழுதே கூறினாரே!

மோடியின் கதையைத் தோண்டத் தோண்ட பல மர்மப் பூகம்பங்கள் வெடித்துக் கொண்டேதான் இருக்கும்.

உச்சநீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கூறியதுபோலவே குஜராத் கலவரம் நடந்தபோது அங்கு பணியாற்றிய கூடுதல் காவல்துறை அதிகாரி கே.பி. ஸ்ரீகுமார் என்பவரும் மோடியின் சட்ட விரோத செயல்பாடுகளை நானாவதி ஆணையத்தின் முன் கூறியதுண்டே!

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை (குஐசு) போடப்பட்டு இருந்தும் உடனே விடுதலை செய்யப்பட்டனர். அரசுத் துறையின் வழக்கறிஞர்கள் (பப்ளிக் பிராசிக்கூட்டர்) இதற்குத் துணை போனார்கள். குஜராத்தில் ஊடகங்களும் கலவரங்களைத் தூண்டி விடுவதில் அக்கறை செலுத்தின. நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று நானாவதி ஆணையத்தின்முன் கூறியவர் சாதாரணமானவர் அல்லர்; மோடி அரசாங்கத்தின் கூடுதல் தலைமைக் காவல்துறை அதிகாரி.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கூறிய வாக்கு மூலத்தை உச்சநீதிமன்றம் அமைத்த புலனாய்வுக் குழு கண்டு கொள்ளவில்லை என்பதுதான். அதே போல நானாவதி ஆணையமும் இன்னொரு காவல்துறை அதிகாரி கே.பி. ஸ்ரீகுமார் கூறிய வாக்குமூலத்தையும் பொருட்படுத்தவில்லை.

நரேந்திரமோடிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் எதிரானவற்றை புலனாய்வுக் குழுவினர் எடுத்துக் கொள்ள வில்லை என்று ஒரு உயர் நிலைக் காவல்துறை அதிகாரி கூறுகிறார் என்றால் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாமே!
எந்த எல்லைக்கும் சென்று எதையும் செய்யக் கூடிய தீய மனிதர் ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் இருந்தால் நீதியும், விசாரணையும்கூட தலைக்குப்புற விழுந்து விடும் என்பதற்கு வேறு சாட்சியங்கள் தேவை இல்லை.

மோடியின் ஆட்சி எந்தத் தரத்தைச் சார்ந்தது என்பதற்கு மனித உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞர் மேமோன் என்பவர் குறிப்பிட்ட மோடி பற்றிய ஒரு கருத்துப் போதுமானதாகும்.

மோடி ஆட்சியில் பொடா பயங்கரவாதிகளை ஒடுக்கும் சட்டமல்ல; மாறாக பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் சட்டம் (Protection of Terrorist Act - Pota) என்று வெகு அழகாகப் படம் பிடித்துக் காட்டி விட்டாரே - இதற்குமேல் என்ன சொல்ல!

மோடிகளை சட்டத்துக்கு வெளியே அனுமதிப்பது கலவரங் களுக்கு நாளும் பந்தக்கால் முகூர்த்தம் நடத்திக் கொண்டிருப் பதற்குச் சமமாகும் - எச்சரிக்கை. மோடியைத் தண்டிப்பதன் மூலம்தான் நாட்டின் சட்டம், நீதிக்கான மரியாதையை நிலை நிறுத்த முடியும்.

இரு வேறு இந்தியாக்கள்!

இருவேறு இந்தியாக்கள் இருப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் அர்த்தம் மிக்க வினா ஒன்றை எழுப்பியுள்ளது.

நாட்டில் 36 சதவீதத்தினர் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். இவர்களுக்குத்தான் நியாய விலைப் பொருட்கள் அளிக்கப்படவேண்டும் என ஏழைகள் எண்ணிக்கை விவரத்தை திட்டக் குழு குறைத்து பட்டியலிட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாட்டில் பட்டினி சாவுகள் அதிகரித்து வரும் நிலையில் ஏழைகள் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிடுவதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். இதே கேள்வியை உச்ச நீதிமன்றமும் எழுப்பியுள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 36 சதவீதம் பேர்தான் வறுமையில் வாடும் ஏழைகள் என திட்டக் குழு எவ்வாறு கணக்கிட்டது என உச்சநீதிமன்ற அமர்வாய நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் திட்டக் குழுவை விளக்குமாறு கேட்டனர்.

ஏழை இந்தியர்கள், பணக்கார இந்தியர்கள் என இரண்டு இந்தியாவாக பிரிக்கமுடியாது. சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது என நீங்கள் கூறுகிறீர்கள். அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவுகள் ஏற்படுகின்றன. ஊட்டச் சத்துக் குறைபாடு முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என அமர்வாயம் அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனிடம் கூறியது.

நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் இறந்து கொண்டிருக்கும் போது போதிய அளவு உணவுப் பொருள்கள் தொகுப்பில் உள்ளது என மத்திய அரசு கூறுவது வேடிக்கையாகவும் உள்ளது என அமர்வாயம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. இந்திய அரசு ஊட்டச் சத்துக்குறைபாட்டைக் குறைக்கவும் பொது விநியோக முறையை சீரமைக்கவும் உறுதி கொண்டுள்ளது என பராசரன் விளக்கியபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு எதனைக் குறிக்கிறது;

அந்தக் குறைபாடு முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியான பயிர் விளைச்சல் அமோகம், தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்ற செய்தியைக் குறிப்பிட்டனர். அதிக பயிர் உற்பத்தி மகிழ்ச்சியான விஷயம். அதனால் மக்கள் பயன் அடையவில்லை என்றால் அதனால் என்ன பயன் என்று அமர்வாயம் கூறியது. 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு விவரத்தை வைத்துக் கொண்டு 2011 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள 36 சதவீதம் பேர் ஏழைகள் என எப்படி முடிவு செய்ய முடியும் என்று நீதிமன்றம் கேட்டது.

இது ஒரு நியாயப் பூர்வமான வினாதான். பணக்காரர்கள் பட்டியல் ஒரு பக்கத்தில் வளர்ந்து கொண்டே போகிறது. இன்னொரு பக்கத்தில் ஏழைகளின் எண்ணிக்கை - வறுமைக் கோட்டுக்கு கீழே உழலும் மக்களும் வளர்ந்து கொண்டே போகின்றனர்.

நாள் ஒன்றுக்கு வெறும் 20 ரூபாய் வருவாய் ஈட்டக் கூடியவர்கள் 77 விழுக்காடு என்று கூறப்படுவது - ஆரோக்கியமான பொருளாதார நிலையாக இருக்க முடியுமா?

பன்னாட்டு பட்டினி அட்டவணையில் இந்தியா 66 ஆவது இடத்தில் இடம் பிடித்திருப்பது பெருமைக்கு உரியதுதானா?

50 சதவிகித மக்கள் இங்கு ஊட்டச் சத்துக் குறைவு உடையவர்களாக இருக்கின்றனர் என்று தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக இருந்த நீதிபதி ராஜேந்திரபாபு கூறினார்.

பத்தாண்டுகளுக்குள் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்று கூறப்பட்டது - எத்தனைப் பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன.

உயிருள்ள மனிதன் உணவுக்கு அழுகிறான்; குந்த வீடில்லை. ஆனால் குழவிக் கல்லைக் குந்த வைத்து அதற்கு கோபுரங்களை எழுப்பி கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவித்துக் கொண்டே இருக் கிறார்களே.

மக்களிடத்திலே மூடநம்பிக்கை மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களைச் சுரண்டினரே இது பற்றியெல்லாம் நீதிபதிகள் வழிகாட்டும் தீர்ப்புகளை ஏன் சொல்லுவதில்லை.

இந்தியா வறுமையான நாடல்ல - வளங்கள் நிறைந்த நாடுதான். மக்கள் அறிவு மதக் குட்டையில் காய்ந்துகிடக்கிறது. அதைச் சரி செய்தால் நொடிப் பொழுதில் வளமைப் பூத்துக் குலுங்கும்.
http://viduthalai.in/new/page-2.html

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்சவரம்பு எட்டுநாள்கள்தான்- இவர்கள் புளுகுக்கு?

2ஜி அலைவரிசை வழக்கில் விசாரிக்கப்பட்ட சாதிக் பாட்சாவின் மரணம்பற்றி பல்வேறு அறிக் கைகளை விட்டனர் எதிர்க்கட்சித் தலைவரும், அரசியல் புரோக்கர்களான அய்யர்களும்!

இப்போது தி.மு.க.விற்கு எதிராக கச்சையை வரிந்து கட்டும் தினமணி நாளேடு வெளி யிட்டுள்ள செய்தி இதோ:

பாட்சா மரணத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை

முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் (38) மரணத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை சி.பி.ஐ. போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவரது நண்பரான சென்னை தேனாம் பேட்டையைச் சேர்ந்த சாதிக் பாட்சாவையும் விசாரித்தனர். அதுபோல், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர். 2010 டிசம்பர் முதல் 2011 மார்ச் மாதத்தில் இந்த விசாரணை நடந்தது. இதற்கிடையே மார்ச் 16-ம் தேதி பாட்சா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை போலீஸார் நடத்திய விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

பாட்சா மரணம் குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. போலீஸார் அவர் தற்கொலை செய்துகொண்டதை இப்போது உறுதி செய்துள்ளனர்.

ஆதாரமில்லை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகையை சி.பி.அய். போலீஸார் தில்லி நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்தனர். இதில் பாட்சாவுக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுக்களையோ, ஆதாரங்களையோ சி.பி.ஐ. தாக்கல் செய்யவில்லை.

முன்பு அறிக்கைவிட்ட அரசியல் மேதாவிகள் இப்போது தலையை எங்கே கொண்டுபோய் நுழைத்துக் கொள்வார்கள்? என்று பாமரத் தமிழர்கள்கூட கேட்கமாட்டார்களா?

பார்ப்பனர்களின் இந்த மோசடிக்கு என்ன பெயராம்?

ஜப்பான் பாரு, ஜெர்மனி பாரு என்று அந்தக் காலத்தில் பயாஸ்கோப்புப் படம் காட்டுவார்கள்; காசு கொடுத்தும் பாமர மக்கள் பார்ப்பார்கள். இப்பொழுது ஒரு பயாஸ்கோப் பார்ப்பனரான துக்ளக் ஆசிரியர் காட்டுகிறார்.

இந்த வார துக்ளக்கில் (4-5-2011) தலையங்கம் தீட்டியிருக்கிறார் பாருங்கோ!

ஊழல் செய்பவர்கள் என்றால் அத்தனைப் பேரும் தலித்துகள். ஊழல் செய்யாத உத்தமர்கள் என்றால் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் என்ற பாங்கில் எழுதி யிருக்கும் பார்ப்பனத்தனம்.

இன்று சுப்ரீம் கோர்ட்டிற்கு கே.ஜி.பாலகிருஷ்ணன் போன்ற நீதிபதியே தலைமை நீதிபதியாக இருந்தால், ஸ்பெக்ட்ரம் விசாரணை, இப்பொழுது அடைந்திருக்கின்ற முன்னேற்றத்தைக் கூடத் தொட்டிருக்காதே !

ராசா மீது வழக்கா வந்திருக்கிறது? இராசாவைக் குற்றம் சொன்னவர்கள் மீதல்லவா நடவடிக்கை வந்திருக்கும்! - புரிகிறதா?

தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணனும் குற்றம் சாற்றப்பட்ட ஆ.இராசாவும் தலித்துகள் - என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் சூதான எழுத்துகள்தானே இவை?

* இன்றுள்ள தணிக்கை அதிகாரி நேர்மையானவர் என்பதால்தான் அது பற்றிய அறிக்கையே வெளியில் வந்தது.

* ஒரு சேஷன் பதவிக்கு வந்தவுடன்தான் தேர்தல் கமிஷன் எவ்வளவு அதிகாரம் படைத்தது என்பதே மக்களுக்குத் தெரிய வந்தது.

புரிகிறதா .. . . ஒரு சேஷன் ஒரு தணிக்கை அதிகாரி என்று அவாள் சொல்லவதெல்லாம் யாரை? அவாள்! அவாள்!!

குற்றம் சுமத்தப்படும் கே.ஜி.பாலகிருஷ்ணன் , ஆ.இராசா இருவரும் தாழ்த்தப்பட்டவர்கள்.
அவர்களின் முடிவு என்ன? பார்ப்பானாக இருந்தால் யோக்கியன்.

பார்ப்பனர் அல்லாதார் - தலித் என்றால் - யோக்கியமற்றவர்கள் - சுற்றி வளைத்து இதனைத்தானே சொல்ல வருகிறார்கள்?

இந்த 2011-லும் இப்படி எழுதுகிற ஏய்ப்பர்கள், வகுப்பு வெறியர்கள், பூணூல்மேனிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாய் இருந்து வயதைத் திருத்தி மோசடி செய்து பதவியை நீட்டித்துக் கொண்ட இராமச்சந்திர அய்யரை மறைக்கிறாரே - இந்த மாடலன் மறையன்! வசதியாக மறந்து போய்விட்டதா?

தலைமை நீதிபதியின் மோசடிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து, அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் பாதுகாத்தாரே - பத்திரமாக வழியனுப்பி வைத்தாரே - அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்!

பார்ப்பனர்களின் இந்த மோசடிக்கு என்ன பெயராம்?

ஹி . . . ஹி . . . வாயால் சிரிக்க முடியவில்லையே!

http://viduthalai.in/new/page-2/8505-2011-04-30-10-22-03.html

பகவான் சாயிபாபாவின் மறுபக்கம் - மின்சாரம்

புட்டபர்த்தி சாயிபாபா 24.4.2011 அன்று ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தியில் மரணம் அடைந்தார். 28 நாள்கள் மருத்துவமனையில் படாதபாடு பட்டார். சிறுநீரகம், கல்லீரல் என்று ஒவ்வொரு உறுப்புகளும் பழுதுபட்டு, மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, சாதார ணமாக மனிதர்களுக்கு ஏற்படும் அத்தனைத் துன்பங்களையும் உடல் ரீதியாக அனுபவித்தது பரிதாபமாகத் தான் இருந்தது. 96 ஆண்டுகள் வாழ் வேன் என்று அவர் சொன்னது பொய்த்துப் போய் விட்டது.

அவர் நோய் வாய்ப்பட்டதிலோ, மரணத் துன்பம் அடைந்ததிலோ, மரணம் எய்தியதிலோ கிஞ்சிற்றும் பகுத்தறிவாளர்களுக்கு மகிழ்ச்சி இல்லை.

அதே நேரத்தில் வாழ்ந்த காலத்தில் சாயிபாபா மக்களை மூடநம்பிக்கைச் சகதியில் ஆழ்த்தியது போதாதென்று, அவரது மரணத்தை வைத்தும் மக்களை மடமையில் ஆழ்த்தும் நாசகார செயல்களில் ஈடுபடுவதை மனிதப் பற்றும், பகுத்தறிவும் உடையவர்களால் எப்படிப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும்?

இந்த நிலையில் நாம் நிமிர்ந்து நின்று மூடநம்பிக்கையின் முதுகெ லும்பைப் பிளப்பது என்பது நமது அடிப்படைக் கடமையாகி விட்டது.

முதல் கேள்வி: பகவான் சாயிபாபா என்பது உண்மையானால் அவருக்கு ஏன் நோய் ஏற்பட வேண்டும்? மற்றவர்களின் நோய்களை எல்லாம் தம் பார்வையாலோ தரும் திருநீறாலோ குணப்படுத்தும் சர்வ சக்தி வாய்ந்தவர் என்று கூறுகிறார்களே, - அப்படிப்பட்ட மனிதனுக்கு தெய்வீகப் புருடனுக்குக் கொடும் நோய்கள் தாக்கலாமா?

சாயிபாபாவின் திருநீறும், பிரசாதங் களும் என்னாயிற்று? எதற்காக மிலேச் சன் இங்கிலீஷ்காரன் கண்டுபிடித்த மாத்திரைகளும், மருந்துகளும்?

96 வயது வாழ்வேன் என்றவர் ஏன் 85 வயதிலேயே மாண்டு போனார் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தர வேண்டாமா?

இவர் நாட்டைக் கெடுத்தது போதாதென்று மூன்றாவதொரு சாயிபாபாவும் தோன்றுவார் -_ அவர் பெயர் பிரேமசாய்; கருநாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறப்பார் என்று செத்துப் போன சாயிபாபா சொல்லியுள்ளார் என்பதெல்லாம் அடுத்த ஒரு திட்டமிட்ட மோசடிக்கு முகூர்த்தக்கால் நடுகிறார்கள் என்றே பொருள்.

சிவசக்தி வடிவமானவர் தான் மறைந்த சாயிபாபாவாம்; அப்படி யென்றால் குறிப்பிட்ட ஒரு மதச் சிமி ழுக்குள் அடங்கிக் கிடப்பவர் என்று ஆகி விடவில்லையா? கிறித்துவரும், இஸ்லாமியரும் இவரை எந்தக் கண் கொண்டு பார்ப்பது? என்கிற வினாக்கள் எழத்தான் செய்கின்றன.

உண்மையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் சாயிபாபா ஒரு மேஜிக் வித்தைக்காரர், நாலு ரோடுகளில் வித்தை காட்டுபவர்கள் நம் நாட்டில் இல்லையா? அவர்களுக்குப் பிழைக்கத் தெரியவில்லை. இவரோ பக்திப் போதையில் சிக்கிக் கிடக்கும் மக்களை ஏமாற்றி ஏற்றம் கொள்ளலாம் என்று திட்டமிட்டு அதில் வெற்றி கண்டவர் என்று வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

நமது கழகத்தில் மந்திரமா? தந்திரமா? கலையில் விற்பன்னராகத் திகழ்ந்த புரபசர் கே.ஆர். குமார் நினைத்திருந்தால், சாயிபாபாவுக்கு மேல் போய் குந்தியிருக்கலாமே! இன்னும் எத்தனை எத்தனையோ நம் கருஞ் சட்டைத் தோழர்கள் இந்தக் கலையில் தேர்ந்தவர்கள் ஆயிற்றே! இந்தத் தோழர்கள் மக்களின் அறியாமை இருளை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சத்யநாராயண ராஜுவோ பிழைக்கத் தெரிந்த ஆசாமி, மக்களின் மடமையை அஸ்திவாரமாக்கி, அதன் மீது மாட மாளிகை கட்டி உல்லாச வாழ்வை மேற்கொண்டவர்.

ஒரு பி.சி சர்க்கார் நினைத்திருந்தால் அவர் கற்றறிந்த தந்திரக் கலையைப் பயன்படுத்தி ஆயிரம் சாயிபாபாக் களுக்கு இணையாக நடமாடியிருக்க முடியுமே! அவர்கள் எல்லாம் அதனை ஒரு கலையாகக் கொண்டவர்கள். பகவான் சாயிபாபா என்று நடமாடும் ஒருவரின் முகத்திரையைக் கிழித்து எறிய பிரபல பி.சி. சார்க்கார் விரும்பினார்.

ஒரு பெண்ணை இரண்டு துண்டாக்குவது, ஒரு யானையைக் காற்றில் மறைந்து போகச் செய்வது போன்ற மயிர்க் கூச்செறியும் நிகழ்ச்சிகளை யெல்லாம் கண்மூடி கண் திறப்பதற்குள் செய்து காட்டும் அந்தக் கலைஞர் சாயிபாபாவைச் சந்திப்பதற்கு வாய்ப்பினைக் கேட்டார். அனுமதி கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் பி.சி. சர்க்கார் என்ன செய்தார்? தான் ஒரு அஸ்ஸாம் வியாபாரி என்றும் தனக்கு ஆஸ்மா நோய் இருக்கிறது என்றும், அதிலிருந்து குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறி, அனுமதியும் பெற்று சாயிபாபா ஆசிரமத்துக்குள் நுழைந்தாரே!

(பகவான் சாயிபாபா அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சரியான தமாஷ்!)

சாயிபாபா ஆசீர்வதிக்கும் அறைக்குள் கடைசி நபராக நுழைந்தார் சர்க்கார்; அஸ்ஸாமும், இந்தியும் கலந்த மொழியில் பேசினார். சாயிபாபாவால் புரிந்து கொள்ள முடியவில்லை; புரியவில்லை என்ற தொனியில் தலையை அசைத்தார் (பகவானாயிற்றே எந்த மொழியைப் பேசினாலும் தெரிந்து கொண்டு இருக்க வேண்டாமா -_ இப்படியெல்லாம் யார் சிந்திக்கப் போகிறார்கள்?) மொழி பெயர்ப்புக்கு ஆள் ஏற்பாடு செய்தனர்; என்ன பிரச்சினை? என்று சாயிபாபா கேட் டார். ஆஸ்த்மா பிரச்சினை என்றார் பி.சி. சர்க்கார்; என்னைப் பார்க்க வந்து விட்டீர்களே, உங்கள் நோய் குணமாகி விடும்! என்றார் சாயி.

எனக்கு ஏதாவது மந்திர மருந்து, திருநீறு போன்று தாருங்கள் என்றார் சர்க்கார்.

கக்கத்தில் வைத்திருந்த திருநீற்றுப் பையில் இருந்த சரக்குத் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று சாயிபாபாவுக்குத் தயக்கம்.

சுற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பழக்கப்பட்ட சாயி சீடர்கள் தானே! குறிப்பை உணர்ந்து சாயிபாபாவுக்கு முன்னிருந்த பலகாரத் தட்டு எடுத்த சீடர் அதில் ஒரு சந்தனத்தை நைசாகப் போட்டு அந்தத் தட்டை சாயிபாபா பக்கத்தில் வைத்தார்.

இந்த ஜாலங்கள் எல்லாம் அன்றாடம் அங்கு நடப்பதுதானே!

பாபா கையை அசைத்து சந்தனத்தை வரவழைத்துக் கொடுத்தார்; பி.சி. சர்க்காருக்கு இந்தத் தந்திரம் தெரியாதா? உடனே இவர் கையை அசைத்து பக்கத்துத் தட்டிலிருந்து ரசகுல்லாவைக் கையில் வரவழைத்துக் கொடுத்து அசத்தினார்.

அவ்வளவுதான் வியர்த்துக் கொட் டியது ஆசாமிக்கு; சத்தம் போட்டார்; சாயிபாபாகூட இருந்த சிஷ்யர் களுக்கோ ஆத்திரம் கரை புரண்டது.

நான்தான் பி.சி. சர்க்கார் என்று கூறி வெளியேறினார். இவ்வளவு தகவல் களையும் பி.சி. சர்க்காரே இம்பிரிண்ட் ஆங்கில மாத இதழில் (1983 ஜூன்) விரிவாக எழுதி பகவான் என்னும் மூடு திரைக்குள் மறைந்திருந்த மோசடிப் பேர் வழியின் முகத்திரையைக் கிழித்தெறிந்தார். அப்பொழுதே விடுதலையும் அதனை மொழி பெயர்த்து வெளியிட்டது (விடுதலை 21.7.1983)

உண்மை இவ்வாறு இருக்க, சாயிபாபா பெரிய மகான் என்றும், பகவான் என்றும், சிவனின் அவதாரம் என்றும் தூக்கிப் பிடிக்கின்றனர் என்றால் - _ இது எவ்வளவு பெரிய சமூக மோசடி!

இன்னொரு முக்கிய தகவலும் உண்டு.

1992-இல் புட்டபர்த்தியில் நவீன வசதிகளைக் கொண்ட திருமண மண்டபம் ஒன்றை சாயிபாபா கட்டி யிருந்தார்; அதன் திறப்பு விழாவுக்குக் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டில், உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், ஆந்திர அமைச்சர் விஜய பாஸ்கர ரெட்டி, மத்திய விவசாய அமைச்சர் பல்ராம் ஜாக்கர் முதலியோரும் வந்திருந்தனர்.

அந்த விழாவில் திருமண மண்டபத்தை வடிவமைத்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஏ. இராம கிருஷ்ணா என்னும் கட்டடக் கலை ஞருக்கு, விழா மேடையில் சாயிபாபா ஒரு நினைவுப் பரிசை வழங்கினார். உடனடியாக தன் கையை அசைத்துத் தங்க சங்கிலி ஒன்றை வரவழைத்து அந்தக் கலைஞருக்கு வழங்கி அனை வரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
அந்த நிகழ்ச்சிகள் முழுவதும் ஆந்திரத் தொலைக்காட்சி நிறுவனத் தால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அரை டஜன் பேர்கள் ஒளிப்பதிவு (வீடியோ) செய்திருந்தனர்.

தொலைக்காட்சி நிறுவனத்தினர் தங்கள் நிலையத்துக்குச் சென்று போட்டுப் பார்த்தபோது பேரதிர்ச்சி ஒன்று அவர்களுக்காகக் காத்திருந்தது.

புட்டபர்த்தி சாயிபாபாவின் உதவியாளர் மேடையில் _ சாயிபாபா கட்டடக் கலைஞருக்குத் தர வேண்டிய நினைவுப் பரிசைத் தரும்போது அதனோடு சேர்த்து தங்கச் சங்கிலி ஒன்றையும் தெரியாமல் வழங்குகிறார்.

நினைவுப் பரிசுக்கும் கீழே தங்கச் சங்கிலியை வைத்திருந்தது வீடியோ காமிராவில் பதிவாகி இருந்தது. தனது ஒரு கையில் நினைவுப் பரிசினை வழங்கும் சாயிபாபா, அப்படியே தங்கச் சங்கிலியை கைக்குள் மறைத்து, பிறகு கை அசைப்பின் மூலம் கொண்டு வருவதாக நடித்து, அதனைத் தந்து விட்டார். பதிவான இந்தத் தகவல் சாயிபாபாவின் கவனத்துக்கு வந்தவுடன், உடனே அதனை எரித்துவிடும்படி கட்டளை யிடப்பட்டது.

சொல்பவர் பாபா ஆயிற்றே -_ கோடிக்கணக்கான சொத் துக்கு அதிபர் ஆயிற்றே _ அவ்வாறே அது எரிக்கப்பட்டது. ஆனாலும் தனியார் தொலைக்காட்சிகள் எடுத்த வீடியோவை என்ன செய்வது! அதற்கும் முயற்சி வேகமாக மேற்கொள்ளப் பட்டன. ஆனாலும் அதற்குள் அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேடு படத்துடன் அப்படியே வெளி யிடவும் செய்து விட்டது (24.11.1992)

டெக்கான் கிரானிக்கல்லில் வெளி வந்த அந்தச் செய்தியைப் படத்துடன் விடுதலையும் வெளியிட்டது (26.11.1992 முதல் பக்கம் தலைப்புச் செய்தி)

பகவான் பெயரில் எவ்வளவுப் பெரிய மோசடி! இதற்கு இந்நாட்டில் உள்ள குடியரசுத் தலைவர்களும், பிரதமர்களும், தலைவர்களும் பராக்குப் பாடுகிறார்கள் என்றால் இது நாடுதானா? நாகரிக உலகில்தான் நாம் வாழுகிறோமா? கூட்டத்துடன் கோவிந்தா போடு வதுதான் நல்லவர்களுக்கு அழகா?

பகவானுக்குப் பணம் எதற்கு? ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்தாம்; 50 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பாம்.

கை அசைப்பில் எதையும் சாதிக்கக் கூடிய ஒரு பகவானுக்கு ஏன் இவ்வளவு திரண்ட சொத்துகள்? கேள்வி கேட்பதுதானே அறிவு நாணயம்?

சாயிபாபா பார்ப்பனர் அல்லர் _ சூத்திரர்தான். ஆனாலும் அவர் குவித்து வைத்திருக்கும் திரண்ட சொத்துக்களை நிருவகிப்பது யார்? உள் குத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதற்குள்ளும் நுழைந்து தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து விடுவார்கள் போல் தோன் றுகிறது.

டி.வி.எஸ். அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் வேணு. சீனிவாசன், தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யஜித் என்ற இன்னொரு பார்ப்பனர், முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான சக்ரவர்த்தி என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர்- _ இவர்களுள் ஒருவர் மோசடியாக சேர்க்கப்பட்ட சொத்துக்கு அதிபதியாக ஆகப் போகிறார்கள். கொட்டிக் கொடுத்த பக்தர்களோ வாயில் விரலை வைத்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

மருத்துவமனைகளைக் கட்டினார்; கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார் என்பதெல்லாம் நல்ல காரியங்கள்தாம்; தவறு செய்கிறோம்; மக்களை மோசடி செய்கிறோம் என்பதைத் தெரிந்து தனக்குள் முற்றாக அறிந்த நிலையில் _ இவை போன்ற காரியங்களைச் செய்வது அவரைப் பொறுத்தவரை தவிர்க்கப்பட முடியாதவை ஆகி விட்டன என்பதுதான் உண்மை.

(அடுத்தடுத்துப் பல திடுக்கிடும் கசப்பான உண்மைகள் அணி வகுக்கும்)

http://viduthalai.in/new/page-1/8487.html

சமூக சீர்திருத்த வரலாற்றில் நாராயணகுருவின் பங்களிப்பு

இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் அது வடக்கில் ஆனாலும் தெற்கில் ஆனாலும் சமூக சீர்திருத்தம், சமூக சீர்திருத்த இயக்கம் ஆகியவை பிறப்பில் உயர்வுற தாழ்வு கற்பிக்கும் ஜாதியத்திற்கு எதிராகவும், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் நடைபெற்றுள்ளன.

தென்னகத்தில் சமூக சீர்திருத்தம் மேலே குறிப்பிட்ட முதன்மையான இந்த இரு விஷயங்களை பொருளைச் சுற்றியே வந்துள்ளது. இது நம் மாநிலத்திலிருந்து பிரிந்துசென்ற கேரள மாநிலத்திற்கும் பொருந்தும். தனிப்பெரும் மாமனிதர்கள் இந்த இரண்டு தீமைகளுக்கு எதிராகப் போராடி அவமதிப்பு, அவமானம், இழி மொழி, பழிச்சொற்கள் ஆகிய சிலுவைகளைச் சுமந்தனர். வைதீகத்தின் எதிர்ப்பு என்னும் முள் கிரீடத்தை அணிந்தனர்.

தமிழகத்தில் தந்தைபெரியார் _ அவருக்கு முன் வைகுண்டசாமி, வள்ளலார் வாழ்ந்து அப்பணியைச் செய்தனர். கேரளத்தில் நாராயணகுரு. இவர்கள் ஒவ்வொருவர் வழியும் முறை களும் வேறு, வேறு. தந்தை பெரியாரின் வழியே தனி வழி. மண்ணுக்கு மண் நிலைமை வேறு.

இந்தியா முழுவதிலும் பரவியிருந்த ஜாதிக் கொடுமைகள் கேரளாவில் மிகக் கடுமையாகப் பரவியிருந்தன என்பதைக் கேரள வரலாற்று நூல்கள் பல எடுத்துக் காட்டுகின்றன.

கேரளாவை இந்தக் கொடுமை களுக்காகவே ஒரு பைத்தியக்கார விடுதி என்றார் விவேகானந்தர். ஆசிரியர் தமிழர் தலைவர் கேரளாவிலே கோயில் கள் அதனாலேதான் அதிகமாக உள்ளன.

என்ன என்ன கொடுமைகள் என்பதன் பட்டியல் இது:

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட வகுப்பினர் தங்கள் பிள்ளை களுக்கு உயர்ஜாதியினரின் கடவுளர் களின் பெயர்களையோ, நாகரிகமான பெயர்களையோ வைக்கக்கூடாது.

அவர்கள் உயர் ஜாதியினர் போல் மீசை வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி மீசை வைத்துக் கொள்ள விரும்பினால் அதற்கென வரி ஒன்றை அப்போதைய திருவாங்கூர் சமஸ்தான அரசுக்குச் செலுத்த வேண்டும்.

அவர்கள் ஆண்களும், பெண் களும் மேலாடை அணியக் கூடாது.

தண்ணீர் சுமந்து செல்லும்போது குடத்தை இடுப்பில் வைக்காது தலையில் வைத்து, அதுவும் இடுப்புச் சேலையாலே சும்மாடு வைத்துக் கொள்ள வேண்டும். வேறு துணியோ, பொருள்களோ பயன்படுத்தக் கூடாது.

அவர்கள் கல்வி கற்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

உயர் ஜாதி வகுப்பார் வசிக்கும் தெருக்களில் நுழையக் கூடாது. கோயிலில் இருந்து நாற்பதடி தள்ளி நிற்க வேண்டும். உயர் ஜாதியினர் தெய்வங்களை வணங்கக்கூடாது.

ஒவ்வொரு வகுப்பினருக்கும் குறிப்பிட்ட இடைவெளி கடைபிடிக்கப் பட்டது. ஒவ்வொரு ஜாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப் பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனைத் தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல; எட்டடிக்கு மேல் விலகி நிற்கவில்லை என்றால் தீட்டு ஆகி விடும். ஈழவர் புலையருக்கு எட்டடி தள்ளி நிற்க வேண்டும். நாயாடிகள் என்ற குறவர் குலத்தைச் சேர்ந்தவர்களைக் கண் ணால் காண்பதே தீட்டு என்றனர்.

1. ஜாதியமைப்பும் கேரள வரலாறும், பி.கெ. பாலகிருஷ்ணன், சுருக்கமான தமிழாக்கம் _ ஜெயமோகன் காலச்சுவடு _ 13.

இவ்வாறான கேரளச் சமூகம் குறித்த படப்பிடிப்பை நமக்கு அளிக்கக் கூடிய இரு முதன்மை நூல்கள் நிர்மால்யா எழுதிய கேரளதலித் போராளி அய்யன்காளி, அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் கதை ஆகியன ஆகும் கேரளச் சமுதாயத்தில் புலையர் முற்றும் அடிமையாக இருந்தனர். ஈழவர் மற்ற காலங்களில் சுதந்திர மனிதர்களாக வாழ்ந்து, தேவை ஏற்படும்போது அடிமைத் தளையில் இருந்தனர்.

இத்தகு சூழலில் கேரளத்தில் ஈழவ சமுதாயத்தில் நாராயண குரு பிறந்தார் இவர் பிறந்த ஊர் திருவனந்தபுரம் அருகே உள்ள செம்பழஞ்சி என்னும் சிற்றூர். தீண்டப்படாத ஜாதியினருக் குக் கல்வி மறுக்கப்பட்ட அக்காலத்தில் நாராயண குரு வேதங்களையும், உபநிடதங்களையும், தரிசனங்களையும் கற்றறிந்தது வியப்புக்குரிய செய்தி.

ஈழவ சிவன்

1888இல் திருவனந்தபுரம் அருகே யுள்ள அருவிக்கரை என்னும் சிற்றூரில் ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்துச் சிவலிங்கமாகப் பிரதிட்டை செய்தார் என்பது அவருடைய வாழ்க்கை வர லாறு கூறும் பதிவுகள் பதிவு செய் துள்ள பதிவு.

ஈழவனுக்கப் பிரதிட்டை உரிமை உண்டா என்ற வினாவுக்கு நான் நிறுவியது நம்பூதிரிகளின் சிவன் அல்ல என்று பதில் சொன்னார் நான் நிறுவியது ஈழவர் சிவன் என்று அவர் குறிப்பிட்டார் எனப் பாரதி உட்பட பலரும் பதிவு செய்துள்ளனர். நாரா யண குரு என்னும் இயக்கம் எனும் கட்டுரையில் ஜெயமோகன் அவ்வாறு கூறவில்லை என்று மறுக்கிறார்.

எங்கள் சிவன் ஈழசிவன். அந்தக் கோயிலின் வாயிலில் ஜாதிமத பேதமில்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாரண தலமிது என்று எழுதிவைத்தார், என அறிகிறோம். கேரள மாநிலத்தில் தீண்டத்தகாதவர் களுக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப் பட்ட காலத்தில் அருவிப்புரம் சிவன் கோவில் அமைப்பு ஒரு புரட்சியான செயலாக அமைந்தது. பாரதியார் தம் படைப்பில் இதை ஈழவ சிவன் கோயில் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எஸ்.என்.டி.பி.

டாக்டர் பல்பு என்கிற பத்மநாபன் கேரள பண்பாட்டு வாழ்வை மாற்றி யமைத்த பேரியக்கமான எஸ்.என்.டி.பி. எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா என்பதை 1903இல் திருவனந்தபுரத்தை மய்யமாக்கி அருவிப்புரத்தில் நிறுவி னார். 1928 இல் குரு தமக்குப்பின் தம் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாக ஒரு சன்யாசி மடத்தை சிவகிரி மலை மீது வற்கலை எனும் ஊரில் தர்மசங்கம் எனும் பெயரில் தொடங்கினார்.

நாராயணகுருவின் வழிமுறை

நாராயண குருவின் அணுகுமுறை நேரிடையானது. எதிர்மறை மன நிலைக்கு அதில் இடமில்லை. அவர்தம் வாழ்நாள் முழுமையிலும் எதிர்மறை யாக எதைப்பற்றியும், எவரைப்பற்றியும் சொன்னதும் கண்டித்ததுமில்லை. ஈழவ இளைஞர்கள், நாயர்கள் தங்களைத் தீண்டப்படாதவர்களாக நடத்துகி றார்கள் என்று குமுறியபோது, அதைத் தடுக்க ஒரே வழி _ நாம் புலையர்களை அணைத்துக்கொள்வதே என்று போதித்துள்ளார்.

அவர் பொதுவாக உபதேசம், போதனைகள், பேருரைகள் ஆற்றும் வழக்கமில்லை என்று அறிகிறோம். தனிப்பட்ட முறையில் பேசும்போது நகைச்சுவைமிக்க சில வரிகளைச் சொல்வார். முதன்மையான வேளை களில் அவர் சொல்ல சில வரிகளில் பிறர் எழுதியெடுத்து அதிகார பூர்வமாக வெளியிடுவார்கள் என்றும் அறிகி றோம்.

தீண்டாமை முதலிய கொடுமைகள் மறைய நாராயணகுரு உருவாக்கிய வழிமுறை, தீண்டாமைக்கு அதீதமான வர்களாகத் தங்களைக் கல்வி, செல்வம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் மேம் படுத்திக் கொள்ளுதல், ஆதிக்கச் சக்திகளைவிட கல்வி, செல்வம், ஆன்மிக வல்லமை மிக்கவர்களாதல் எனச் சுருக்கமாகக் கூறுவர்.

எஸ்.எஸ்.டி.பி.யின் செயல்பாடுகள்

எஸ். எஸ்.டி.பி.யின் ஆரம்பகாலச் செயல்பாடுகள் இருதளங்களில் தீவிரமாய் விளங்கின சமயம், கல்வி நாராயணகுரு முதலில் உருவாக்கிய மாற்றம்_ அனைவரும் கூடும் பொது இடங்களாகக் கோயில்களை அமைத்தல் ஆகும். 1904 இல் சிவகிரியில் அம்பாள் ஆலயம் அமைத்தார். கண்ணூர், அஞ்சு தெங்கு, கோழிக்கோடு, கூர்க்கஞ்சேரி, பெரிங்கோட்டு களா, தலைச்சேரி, ஆலுவா, மங்களூர், நாகர்கோவில், கொழும்பு முதலிய இடங்களில் முதன்மையான கோயில்களைக் கட்டி சிவன், திருமால், தேவி முதலிய தெய்வங்களைப் பிரதிட்டை செய்தார்.

பிரதிட்டைஏன்? - சமூகப் பொது இடங்கள்

நாராயணகுரு முதலில் உருவாக்கிய மாற்றம் அனைவரும் கூடும் பொது இடங்களாகக் கோயில்களை அமைத்தல். அன்று மக்கள் அனைவரும் சாதாரண மாகக் கூடும் பொது இடம் கேரள சமூக அமைப்பில் இல்லை. ஈழவர்களும், பிறஜாதியினரும் தங்கள் குலவழிபாட்டு முறையையே அன்று கொண்டிருந்தனர். கடவுள்கள் பெரும்பாலும் அந்தந்தக் குடும்பத்துக்குச் சொந்தமானவை.

சிறுதெய்வ வழிபாட்டை ஒழித்துக் கட்டி அனைவரும் பொது இடத்தில் கூடி வழிபடும்படி ஆலயங்களை அமைத்தார். தற்காலப் பார்வையில் நாட்டார் கடவுள்களை அகற்றிப் பிராமணீயப் பெருந் தெய்வங்களை நிறுவினார்.

ஆலய நுழைவு மறுக்கப்பட்ட மக்களுக்கு அது அளித்த நம்பிக்கை சாதாரணமானதுதான். அவ்வால யங்களில் பூஜைகளையும் அன்றைய தீண்டப்படாத மக்களே செய்தனர். மலையாளத்திலும், வடமொழியிலும் குரு வழிபாட்டு மந்திரங்களை உரு வாக்கி அளித்தார். அவற்றில் தெய்வ சதகம், சுப்ரமணிய சதகம், காளிநாடகம், சாரதா தேவி துதி முதலியன உக்கிரமான கவித்துவம் கொண்டவை.

1913 இல் ஆலுவாவில் அத்வைத ஆசிரமம் அமைக்கப்பட்டது. இந்த ஆசிரமத்தின் முதன்மைக் கொள்கை யாக கடவுளின் கண்களுக்கு அனைத்து மனிதர்களும் சமம் என்ற வாசகம் வலியுறுத்தப்பட்டது.

மற்றொரு நோக்கம்

குலதெய்வ வழிபாட்டை ஒழித்ததில் இன்னொரு நோக்கமும் இருந்தது எனலாம். குலதெய்வங்கள் ஒரு வகை யில் குலச் சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கை முறையும், உலகநோக்கு அவற்றிலும் ஊடுருவி இருந்தன. கள், மாமிசம் ஆகியன படைத்து உண்டுகளிப்பது இவ்வழிபாட்டின் முதன்மைக் கூறு. குடி, களியாட்டம் ஆகியவற்றாலான வழிபாட்டுக்குப் பதிலாக பிரார்த் தனையும், அறிவார்ந்த தத்துவ விவாதங்களும் கொண்ட வழிபாட்டு முறை _ நவீன சமூகக் கூட்டுச் செயல்.

பவுத்தம்

பவுத்த வழிபாட்டு முறையை மீண்டும் கொண்டு வந்தது என்று சொல்வர். நாராயண குரு தன்னை பவுத்தன் என்று சொல்வதுண்டு. அவர் முன்வைத்த அத்வைதம், யோகாசார பவுத்தத்தின் பிரிதொரு வடிவமே. நாராயண குருவை நவபுத்தன் என்பர்.

மூன்று வகைத் தெய்வ உருவங்கள்

உலக அளவில் தெய்வ உருவங்களை மூன்று வகையாக

1. செயல்வகைத் தெய்வங்கள் 2. முழுமுதல் தெய்வம் 3. தத்துவார்த்த தெய்வம் என்று பகுக்கிறார்கள்.

1. செயல்வகைத்தெய்வங்கள்: தொல் வழங்காலப் பழங்குடி வாழ்க் கையிலிருந்து முளைத்து நாட்டார் பண்பாட்டில் வேரூன்றியவை. பழங்குடியினம் தன் செயல்பாடுகள் வாயிலாகக் கண்டடைந்த ஆழமான இறையனுபவங்களின் வெளிப்பாடுகள். அவை எண்ணற்றவை, ஒழுங்கற்றவை, குறுகிய எல்லைக்குட்பட்டவை. வரப்புக்கு நேரு தெய்வம்; வாய்க்காலுக்கு ஒரு தெய்வம்.

2. முழு முதல் தெய்வம்: பெரு மதங்களின் உருவாக்கங்கள் இதன் போக்கில் தத்துவமும், புராணங்களும் உருவாகிப் பெருகுகின்றன. முழுமுதல் தெய்வம் உலகுக்கு அப்பால் நின்று உலகை இயக்குவது. அது பிரபஞ் சத்தின் உறுப்பு அல்ல. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழிலைச் செய்வது இன்றும் சமூகப் படிநிலைகளின் கீழ்த்தளத்தில் நிற்கும் இனக்குழுக்களே சிறுதெய்வ வழிபாட் டில் அதிகமாக ஈடுபட்டுள்ளன. படிநிலை மேலே செல்லச் செல்ல முழு முதல் தெய்வ வழிபாடு காணப்படு கிறது.

ஒரு சமூகம் முழுமுதல் தெய் வத்தை அடையும்போது அதன் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தகு மாறுதல்கள் உருவாகின்றன. அவை அச் சமூகத்தைப் பொருளியல் சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் முன் நகரச் செய்கின்றன.

சிறு தெய்வங் களை வழிபடும் சமூகங்கள் தங்கள் இனக்குழு அடையாளத்துக்குக் கட் டுப்பட்டுத் தங்களுக்குள் சுருண்டு கொள்கின்றன. முழுமுதல் தெய்வத்தை ஏற்கும் சமூகங்கள் தத்துவார்த்தமாக வழிபாட்டை விளக்க ஆரம்பிப் பதனால் மாற்றங்களை உள்வாங்க ஆரம்பிக்கின்றன.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பிரிதற்குரிய மனநிலை விலகி ஒருங்கிணைவதற்கான மனநிலை உருவாகிறது.

முழுமுதல் பெருந் தெய்வங்களை அளிக்கும் மதங்கள் அய்ந்து _ சைவம், வைணவம், சாக்தம், கிறித்துவம், இசு லாம். கிறித்துவம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமுதல் தெய்வத்தை அளித்து அவர்களின் பொருளியல், சமூக வாழ்வில் மிகப் பெரிய மாறுதல்களை உருவாக்கியது. சைவமும், வைணவமும், சாக்தமும், பக்தி இயக்க காலகட்டத்தில் அப் பணியைச் செய்தன. ராமானுஜர், நாயன்மார்கள், சித்தர்கள் _ முழுமுதல் தெய்வக் கருத்தை உருவாக்கியவர்கள்.

நாராயண குரு துஞ்சத்து எழுத் தச்சனின் அடுத்த கட்டம். ராமாய ணத்தையும், மகாபாரதத்தையும் எழுதி முழுமுதல் தெய்வத்தைக் கேரளமண்ணில் நிறுவியவர்.

கேரள _ எளிய மக்களின் முதல் பிரதி நிதி கேரள சமூகத்தின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கியவர் எழுத் தச்சனே என்று கேரளம் மலையாளி களின் மாத்ருபூமி _ என நம்பூதிரிபாட் கூறியுள்ள நூல் கூறும் எழுத்தச்சன் உருவாக்கிய மாற்றம் உறைந்து போய் விட்டநிலையில் அதை உயிர் பெறச் செய்தவர் நாராயண குரு. எழுத்தச்சன் தொடங்கினார்; நாராயண குரு நிறைவு செய்தார்.

தத்துவார்த்த தெய்வம்

தெய்வ உருவங்களில் மூன்றாவது உச்சமானது தத்துவார்த்த தெய்வம் ஆகும். நாராயண குரு முழுமுதல் தெய் வத்தை அளித்து, அடுத்தபடியாக தத்து வார்த்தமான தெய்வத்தை முன்வைத்தார்.

நாராயண குருவைப் பொறுத்தவரை, ஒரு தெய்வம் என்பது மனித சமத் துவத்தின் முதல்படி என்பார் ஜெய மோகன்.

1921 இல் ஆலுவாயில் சகோதரன் அய்யப்பனின் முயற்சியால் கூட்டப்பட்ட உலக சகோதரத்துவ மாநாட்டில் குரு வெளியிட்டது இது.

ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் மனிதனுக்கு இது அவருடைய மய்யமான உபதேசமாகக் கொள்ளப்படுகிறது. மாப்பிள்ளா கலவ ரங்கள் என்ற பேரில் மதக்கலவரங்கள் விளைந்த காலகட்டம் இது.

பிரபஞ்சம் குறித்த ஒருவகைப் புரிதலே தத்துவார்த்த தெய்வம். முழுமுதல் தெய்வம் என்ற உருவகத்தின் அடுத்தபடி. மேலும் நுண்மையான தளம் தத்துவார்த்த தெய்வம் அல்லது கருத்துருக் கடவுள் என்பதே.

இங்கே தந்தை பெரியார் நாராயண குருவிடமிருந்து மாறுபடுகிறார். ஒரு ஜாதியையோ, ஒருமதத்தையோ, ஒரு தெய்வத்தையோ ஏற்காத ஒரே உலகப் புரட்சியாளர் தந்தை பெரியார். ஜாதி ஒழிய வேண்டும் _ மதம் ஒழிய வேண்டும், கடவுள் ஒழிய வேண்டும். இதுதான் பெரியாரின் புரட்சிச் சிந்தனை.

நாராயண குரு தம் வாழ்க்கை முறையில் தத்துவார்த்த தெய்வத்தை எப்படி முன்வைத்தார், முதலில் சிவலிங்கம், சுப்பிரமணியர், தேவி, ஜகன்னாதர் ஆகியவைகளைப் பிர திட்டை செய்தவர் அவர்.

பிறகு அடுத்த கட்டத்தில் விளக்கையும், பிறகு சத்யம், தர்மம், தயை என்ற சொற்களையும் கருவரை தெய்வமாகப் பிரதிட்டை செய்தார். கடைசியில் பெரியார் வழிக்கு வந்த நாராயணகுரு கோவில்கள் போதும்; கல்விக் கூடங்கள் எழட்டும் என்றார்.

இறுதியில் சேர்த்தலை களவங்கோடு கோவிலில் மூலவராக நிலைக் கண் ணாடியை நிறுவிய பிறகு மேலும் கோயில்கள் வேண்டாம் கல்விச் சாலைகளே போதும் என்று சொல்லி விட்டார். இது அவருடைய இறுதி நிலை.

அவர் அருவிக்கரையில் கோயில்கள் நிறுவிய போதே சொன்ன கருத்துத்தான் என்பர். ஆனால் அது படிகளிறங்கி வந்து கோயில்கள் நிறுவி, மீண்டும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு தொடங்கிய தனத்துக்கே வந்து சேர்ந்தார். பி.கே. பாலகிருஷ்ணன் தன் நாராயண குரு தொகை நூலில் விரிவாக விளக்கிய கருத்துத்தான் இது.

நாராயணகுரு புதுமை செய்யவில்லையா?

இந்திய சமூக விடுதலைப் போராளிகள் மேற்கொண்ட வழிதான் அது. அவர்கள் பழங்குடித் தெய்வங் களைத் தவிர்த்து முழுமுதல் தெய் வங்களை நோக்கிச் செல்ல வழிகாட் டியுள்ளனர். அய்யா வைகுண்டர் அவ்வாறே செய்துள்ளார். வள்ளலார் அவ்வாறே செய்துள்ளார். விவே கானந்தரின் ராமகிருட்டின இயக்கமும், அம்பேத்கரின் புதிய பவுத்த இயக்கமும் இவ்வகையினதுதான்.

நாராயண குருவின் அடுத்த பணி

நாராயண குருவின் அடுத்த முதன் மைப் பணி கல்வித் துறையில்தான்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் கல்வி, செல்வம், ஆன்மிகம் போன்றவற்றில் உயர்ஜாதி யினரைப் போல் முன்னிலைக்கு வந்தால் உயர்வு _ தாழ்வு என்னும் பாகுபாட்டு நிலை இல்லாமல் போய் விடும் என்ற எண்ணத்தின் விளைவே இது. ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபாவின் வழி ஏராளமான பள்ளி களையும், கல்விக் கூடங்களையும் அமைத்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் வட மொழியை, முழுமையாகக் கற்றுக் கொள்ள வலியுறுத்தி, சீடரில் ஒருவரான நடராஜகுருவை மேலை நாட்டிற்கு அனுப்பினார்.

இக்காலத்தில் முழு எழுத்தறிவுள்ள ஒரே மாநிலமாகக் கேரளா உள்ள தற்குக் காரணமே நாராயண குருவின் அறிவியக்கமே. ஈழவ சமூகமே படிப்பு மிக்க சமூகமாகியது. மதஞானமும், தர்ம ஞானமும் வடமொழியில் அமைந்ததும் இந்தியா முழுமைக் குமான பொது ஊடகமாக அமைந்தது என்பதால், சமஸ்கிருதத்தை மறுப்பது வரலாற்றை மறுப்பதுதான்.

நாராயண குருவின் வழிமுறை எதிர்ப்பதும், புறக்கணிப்பதும் அல்ல. புறக்கணிப் பதன் வாயிலாக மத அதிகாரம் அதை ஏற்கனவே கையில் வைத்திருப்பவர் களிடமே தங்கிவிட வழிவகுக்கிறோம் என்பதே அவர் கருத்து. நாராயண குருவின் காலம் முதல் இன்றுவரை சமஸ்கிருதக் கல்வி ஈழவ சமூகத்தாரின் முதன்மைக் கூறாக இருந்து வந்துள் ளது. நாராயண குரு உருவாக்கிய இந்த சமஸ்கிருதக் கல்வி ஆர்வத்தைப் பாரதியார் தன் கட்டுரைகளில் மிகுந்த ஆர்வத்துடன் எழுதியுள்ளார் (பாரதி யார் கட்டுரைகள், தொகை நூல், செல்வம்

சமூக அதிகாரத்தில் செல்வத்தின் இடம் குறித்தும் நாராயண குரு புரிந்துவைத்துள்ளார். குரு தன் வாழ் நாளில் முப்பது ஆண்டுகள் தொழில் மேம்பாடு குறித்து மீண்டும், மீண்டும் பேசியுள்ளார். ஈழவ குடும்பங்கள் தொழில் துறையில் இறங்க நாராயண குரு வலியுறுத்தினார்.

கேரளத்தின் கயி-று, ஒரு தொழில்கள் உருவாக அவரே காரணம். பெரியாருக்கு ஜாதியை, மதத்தை, கடவுளை ஒழிப்பதில் முழு நேரப் பணி இருந்தமையால் கல்விப் பணியில் புக வாய்ப்பில்லை. ஆனால் அவர் கல்வி பெற வலியுறுத்தியதன் பயனே இன்றைய பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம்.

முடிவுரை

எல்லாவற்றையும்விட அறிவுத்துறை யில் குரு உருவாக்கிய மாற்றமே குறிப்பிடத்தகு பங்களிப்பு. ஈ.எம்.எஸ்., கேரள பொதுவுடைமை அரசியல் நாராயண குருவில் தொடங்குகிறது என எழுதியுள்ளார். குமரன் ஆசான், சகோதரன் அய்யப்பன், நடராஜகுரு குறிப்பிடத்தக்கவர்கள்.

நாராயண குருவின் அணுக்கத் தொண்டர் சகோதரர் அய்யப்பன் _ நாத்திகர். அடிப்படைக் கருத்துகளில் குருவை நிராகரித்தவர். புலையர்களை அணி திரட்டிக் கிளர்ச்சிகளை நடத்தியவர். அதனாலே புலையன் அய்யப்பன் என்று அறியப்பட்டவர். மலையாளத் தின் பாரதி குமரன் ஆசான். அவரு டைய கருணை_சண்டாள பிட்சுகு, துர வல்தை கேரள இலக்கிய மறுமலர்ச் சிக்குக் களம் அமைத்தமை.

கேரள பண்பாட்டு வரலாற்றில் அறிவுத்துறை மறுமலர்ச்சிக்கு வித்திட் டவர்களில், ஆழமான பங்களிப்பினை ஆற்றிய கேரள கவுமுதி குழுமம் சிவி. குஞ்சுராமன் நாராயணகுருவின் மாணவர்.

பி.கே. பாலகிருஷ்ணன், வரலாற்றாசிரியர், இதழாசிரியர், நாவலாசிரியர், திறனாய்வாளர் ஆகிய தளங்களின் கேரள சிந்தனையின் அடிப்படைகளைச் செதுக்கிய மேதை எனப் போற்றப்படுபவர்.

காந்தி 1925 இல் நாராயன குருவைச் சந்தித்து அவதாரபுருஷர் என்று குறிப்பிட்டிருக்கிறார். தன் மனத்தில் இருந்த அய்யங்கள் பல அன்றுதான் முழுமையாக நீங்கின என்று காந்தி திருவனந்தபுரத்தில் நடந்த வழி பாட்டுக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காந்திக்கு வர்ணாசிரம தர்மம் ஏதோ ஒரு வகையில் தேவையானது என்று இருந்ததை நாராயண குரு மறுத்துள்ளார். காந்தியின் தாழ்த்தப் பெற்றோர் இயக்கம், மதுஒழிப்பு இயக்கம் ஆகியன நாராயண குரு இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்று அவர் ஏற்றுக் கொண்டவை என்பர்.

இதைப் போலவே 1927 இல் பெங்களூருவில் காந்தியைச் சந்தித்த பெரியார், காந்தியின் வருணாசிரமக் கோட்பாட்டில் வெறுப்புற்றுக் காங் கிரசிலிருந்து முழுமையாக வெளி யேறினார்.
http://viduthalai.in/new/page2/8488.html

weather counter Site Meter