Pages

Search This Blog

Monday, January 31, 2011

சபரிமலை மகரஜோதி மர்மம்

(நக்கீரன் இதழில் ஜன 26-28 தேதியில் வெளிவந்த கட்டுரை இங்கே தரப்படுகிறது)

சபரிமலையில் தெரியும் மகரஜோதி யும், மகர விளக்கும் வேறு வேறென கூறப்படுவது உண்மையா? மகர ஜோதி தானாகவே தெரிகிறதா? அல்லது எப்படி உருவாகிறது?

மகரஜோதி காண்பதற்காக புல் மேட்டுப் பகுதிக்குப் போய் 104 பக்தர்கள் பலியான சம்பவத்தின் வழக்கு குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது- விழி பிதுங்கிப்போன சபரிமலை தேவசம் போர்டு, மகர விளக்கும் மகர ஜோதியும் பக்தர்களின் நம்பிக்கையாக கருதப்பட்டு வருவதால் இதில் எந்த விளக்கமும் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என பணம் கொழிக்கும் சபரிமலையைத் தற்காத்துக்கொள்ளும் பதிலையே தந்தது.

கேரள முதலமைச்சர் அச்சுதானந் தனும் மகர ஜோதி என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மகர ஜோதி வடிவில் பக்தர்கள் கடவுளைக் காண்கிறார்கள். எனவே இதை மதத் தலைவர்களை வைத்தோ, விஞ்ஞானி களை வைத்தோ விசாரனை செய்ய அவசியமில்லை. என பத்திரிகை களிடையே பேட்டியளித்தார்.

ஆனால் கேரள கூட்டுறவுத்துறை அமைச்சர் சுதாகரனோ... மகர ஜோதியை பொன்னம்பம்பல மேட்டில் அங்குள்ள ஆதிவாசிகள்தான் ஏற்றுகிறார்கள். அது மத நம்பிக்கைக்குரிய பிரச்சினை என்பதால் தலையிட விரும்பவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார்.

இதைக் கேட்டு சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரோ, மகர விளக்கு வேறு; மகர ஜோதி வேறு. மகர ஜோதி என்பது வானில் அந்நாளில் உதிக்கின்ற நட்சத்திரம். மகர விளக்கு என்பதுதான் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவது... என கொடுத்த புது விளக்கம் மூலமாய் மகர ஜோதியை அய்யப்ப பக்தர்கள் தம் நம்பிக்கையி லிருந்து வெளியேற்றிவிடக் கூடாது என்ற தன் அக்கறையை ரகசியமாக வெளிப்படுத்தினார்.

இப்படியான நிகழ்வுகளுக்குப் பிறகு... ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 6.40 மணியளவில் பொன்னம்பல மலையில் தோன்றும் ஒளியைத்தானே மகர ஜோதி என நாம் தொலைக்காட்சிகளிலும், நேரடியாகவும் பார்த்தோம் என நாடெங்கும் உள்ள அய்யப்ப பக்தர்களும் பொதுமக்களும் குழம்பிப்போனார்கள்.

உண்மையில் சபரிமலை மகர ஜோதியின் ரகசியம் என்ன? மகர விளக்கு என்பது என்ன? என்ற கேள்வி களோடும், மகர ஜோதியின் உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற தவிப்போடும் இதுவரை மகர ஜோதி காண வந்து பலியாகிப் போன பக்தர் களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என உயிர் களின் மீதான கரிசனத்தோடும், சபரி மலை பொன்னம்பல மேட்டிற்குள் செல்ல நக்கீரன் உறுதியெடுத்தது, களமிறங்கி யது.

தொடர்ந்து பல வருடங்களாய் மகர ஜோதி பொய்யான ஜோதி என போராடிக்கொண்டிருக்கும் சுகுமாரனும் நம்மோடு வருவதாய்ச் சொல்ல... லட்சக் கணக்கான அய்யப்ப பக்தர்கள் சாமி யப்பா அய்யப்பா... சரணமப்பா அய்யப்பா... என சரணம் சொல்லியபடியே கேரளாவில் எந்த பத்தினம் திட்டா வழியாக சபரிமலையின் பம்பைக்குச் செல்கிறார்களோ... அதே வழியிலேயே நாம் பயணித்தோம்.

இந்தப் பயணம் நக்கீரனின் அசாத்தி யமான பயணம். அய்யப்பன் மீதான பக்தியில், எங்கிருந்தோ விரதம் இருந்து, குழந்தை குட்டிகளோடு வரும் மனித உயிர்கள் ஒரு புழுவாக நெரிசலில் மிதிப்பட்டு மடிவதைக் காணச் சகியா மலேதான், இந்தப் பயணத்தை நக்கீரன் தேர்ந்தெடுத்தது. விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுது பயணம் கடும் பனிக்கிடையே ஆரம்பித்தது. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை காரில் பயணிக்க முடியும் என்பதால், கேரள மலையாள நண்பர்களையும் கூட்டிக்கொண்டு வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு சென்றோம்.

சபரிமலை பம்பைக்குப் போகும் வழியில் பிலாப்புள்ளி என்ற இடத்தி லிருந்து வலது புறமாய் பிரியும் பாதை தான் மகர ஜோதி தெரியும் பொன்னம்பல மேட்டிற்கு செல்லும் வழி. அதன் ஊடாக அந்த அடர்காட்டுக்குள் பயணத்தைத் தொடர்கிறோம்.

அந்தக் குறுகலான பாதையில் கார் லைட் வெளிச்சத்தில் தெரிகின்றன - பாதையெங்கும் கொட்டிக் கிடக்கும் யானைகளின் சாணிகள். இடையிடையே குரங்குகளும், சில வகையான பாம்பு களும் நாம் கடக்கும் பாதையை மறித்து கடக்கின்றன.

அந்தக் குறுக்குப் பாதை யில் நின்று மறிக்கிறது ஒரு காட்டெருமை பிரேக்கை அழுத்திக் கொண்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கும் நம் கார் டிரைவரின் சாமர்த்திய சப்தத்தில் பாதையை விட்டுவிட்டு மரங்களுக்குள் ஓடிப்போனது காட்டெருமை.

வெகு தூரத்தில் கேட்கும் யானைகளின் பிளிறல்கள் அடிக்கடி நம் காரின் பின்னாலும் கேட்கிறது. திடீரென ஒரு வளைவில் நம் கார் நிறுத்தப்படு கிறது. அந்த இடம் ஃபாரஸ்ட் செக்போஸ்ட் எவிடே நிங்களு போறது? என கேட்கும் செக்போஸ்ட் ஃபாரஸ்ட் காரனிடம் குமுளியானு என டக்கென சொல்கிறார் நம் நண்பர்.

காரினுள்ளான அந்த ஃபாரஸ்ட் காரரின் தேடலுக்குப் பிறகு அவரிட மிருந்து அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு மறுபடியும் பயணம் தொடர்ந் தது. போகப்போக அந்த அடர்காடு ஒரு பெரும் மலையாகிவிட்டது. மலையேற முடியாமல் திணறிக்கொண்டு மலை யேறும் நம் கார், ஒரு மாட்டு வண்டியின் வேகத்திற்குக் குறைந்து போனபோது மலையில் வெளிச்சம் பரவத் தொடங்கி யிருந்தது.

மலைக்குள்ளான அந்தப் பயணத்தில் எந்த விலங்கு நின்று நம்மை மறிக்குமோ என நமக்குள் ஒரு பயம் படரும் போதேல்லாம் தூரத்தில் தெரியும் பாறைகள் எல்லாம் யானைகளாகத் தெரிந்தன.

காக்கி டேம், யானைத் தோடு டவர், பச்சைக்காணம், பாம்படம் செக்போஸ்ட் என 120 கி.மீ. கடந்து போய்க்கொண்டி ருக்க... கொச்சு பம்பா என்ற இடத்தோடு நம் வண்டி நின்றது. அந்தப் பொன்னம் பல மேட்டிற்குப் போக குறுக்கு வழி இங்கேதான் இருக்கிறது என்ற சுகுமார னின் தகவலோடு காரை விட்டு இறங் கினோம்.

பொன்னம்பல மேட்டின் கீழ் நிற்கும் நாம்... ஆகாசம் தொடும் பொன்னம்பல மேட்டு மலையை பிரமிப்பாய் பார்த்தபடி, அந்த மலைக்குக் கீழ் வசிக்கும் மனிதர்களிடம் மகர ஜோதியைப் பற்றி கேட்க ஆரம்பித்தோம். கோணிப் பையில் விறகுகளை திணித்துக் கொண்டிருந்த அந்த அம்மா, ஏதோ ஒரு ஜந்துவைப் போல நம்மைப் பார்த்துவிட்டு அந்த குடிலினுள் நுழைந்து விட்டார்.

தன் நண்பர்களோடு மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த சிஐ என்ற இளைஞனிடம், இந்த மகர ஜோதியைப் பற்றி இங்குள்ள நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும் என்க... இதே போல தானு இவுடே ஒரு லோக்கல் டி.வி.காரு வந்து மூணு ஆளுக்காருகிட்ட மகர ஜோதியின்டே மர்மம் குறிச்சு கேட்டுட்டுப் போயி. அது டி.வில வந்தப்போ, ஆ மூணு ஆளுக்காரையும் அடிச்சு போலீஸ் கேஸாயிட்டு ஜெயில்ல அடைச்சு. அது கொண்டு இப்போ நிங்களிடத்து நான் எந்தெங்கிலும் பரைஞ்சா போலீஸ் என்னை கொன்னு களையும் என்று ஒதுங்கிக் கொண்டான்.

இலங்கையிலிருந்து அகதியாய் வந்து பொன்னம்பல மேட்டின் கீழ் குடியிருக்கும் தமிழரான முதியவர் சிவலிங்கத்திடம் கேட்டபோது... 30 வருஷமா இங்கேதான் குடியிருக்கேன்.

மகர ஜோதியோட உண்மையச் சொல்லியே ஆகோணும். ஏன்னா... மகர ஜோதியை நம்பி நெரிசல்ல சிக்கி நிறைய பேரு செத்துப்போறத பாத்தா கஷ்டமாயிருக்கு என்கிறவர்.. ஜனவரி 14ஆம் தேதி காலையிலே பெரிய பெரிய அலுமினியப் பாத்திரங் களோடு நாலஞ்சு ஜீப்ல ஆளுக போவாங்க. பொன்னம்பல மேட்டு உச்சிக் குப் போய் தங்கிக்குவாங்க. மாலையில அந்தப் பாத்திரங்கள்ல கற்பூர கட்டி களைப் போட்டு நாலஞ்சு பேரு சேர்ந்து கற்பூர ஒளி தெரியற அந்த அலுமி னியப் பாத்திரத்ததத் தூக்கிப் பிடிப் பாங்க, அதுதான் மகர ஜோதி.

பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஒளியா இப்படித்தான் தோன்றி சபரிமலையிலும், புல்மேட்டிலும் மகர ஜோதி காண காத்துக் கிடக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு காட்சியளிக்கிற அநியாயம் நடக்கிறது. இதெல்லாம் பணத்துக்காக செய்ய றாங்க நீங்கதான் இதை அப்பாவி மக்களுக்குத் தெரியப்படுத்தணும் என்ற ஒரு பெரும் உண்மையைப் போட்டு உடைத்தபோது நாம் பெரு அதிர்ச்சிக்குள்ளானோம்.

அவரிடம் பேசிவிட்டு தலை தெரியாத பாம்பொன்று நெட்டுக்குத் தலாய் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல கிடக்கும் பொன்னம்பல மேட் டின் நுனி வாலைப்பிடித்துக் கொண்டு ஏறத் தொடங்க முயற்சித்தபோது நம்மை மறித்த மலையாள ஆள் ஒருவர்... இதுக்குள்ள போகாம் பெற் றில்லா... மீறி போனா ஃபாரஸ்ட் காரங்க சுட்டுக் கொல்லும் என கண்காணிக்க மரத்திற்குப் பின்னால் நின்று கொண்டார். நாமும் பொன் னம்பல மேட்டிற்குள் நுழையாதது போல் பாவ்லா காட்டிவிட்டு திரும்பவும் பாம்பின் நுனி வாலைப் பிடித்து வனத்துறையால் போடப்பட்டிருக்கும் நோ என்ட்ரி போர்டைத் தாண்டி னோம். நாம் நடக்கும் அந்தக் குறுக லான பாதையில் நம் மீது தேரைகள் எகிறி எகிறிக் குதிக்கின்றன.

தின்று செரிக்க முடியாமல், நெளிய முடியாமல் ஊர்ந்து போனது பெரிய பாம்பொன்று. மிதிபடும் இலைகளின் சத்தத்தோடும், யாரும் பேசாமல் மிக ரகசியமாகச் சென்று கொண்டிருந் தோம். கொஞ்ச தூரம் நடந்தபோது, அந்த மலையாள ஆள், நம்மை மிரட்டிய.... சுட்டுக் கொல்லும் என்ற வார்த்தை எங்களுக்குள் செரிக்க முடியாமல், அந்தப் பாம்பைப் போலவே ஊர்ந்து கொண்டிருந்தது என்பது தான் உண்மை. இந்தப் பயத்தோடு நடக்கிற நமக்கு இன்னும் பயத்தைக் கூட்டவோ என்னவோ ஒரு மேட்டில் நின்று காடே அதிரப் பிளிறியது ஒரு யானை.

அவ்வளவுதான்.. ஏற்கெனவே நடப் பதையே ஓடுவது போல செய்து கொண்டிருந்த நாம் இப்போது ஓட்ட மெடுத்தோம். பாவம் நம்முடன் வந்த வர்களில் இரண்டு பேர் வயதான வர்கள். அவர்களும் நமக்குச் சரி சமமாகவே ஓடி வந்தார்கள். மலைமீது நடப்பது தெரியும். மலையில் ஓடுவது என்பது புதிதுதான். கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் நடந்து பொன்னம் பல மேட்டு பாம்பின் முக்கால்வாசி உடலைத் தொட்டாகிவிட்ட சமயம் ஒரு இடத்தில் பதுங்கினோம்.

(தொடரும்)
http://viduthalai.in/new/page-2/2488.html

நாத்திகம் வெற்றிபெற்று வருவதால் பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார்

நாத்திகம் வெற்றி பெற்று வருவதால் பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

திருச்சியில் 8.1.2011 அன்று நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டையொட்டி இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

முந்தய  உரை  http://naathigam.blogspot.com/2011/01/blog-post_150.html

இராமன் எப்படி பிறந்தான்? இராமன் முதலில் தசரதனுக்குப் பிறந்தானா? என்று ஒரு கேள்வியைக் கேட்டாலே செத்துப்போய்விடுவான்.

இராமன் பிறப்பைச் சொன்னாலே போதுமே!

அவதாரமான ராமன் எப்படி பிறந்திருப்பான்? பிறக்காத ராமன் பெயரைச் சொல்லி ராமன் பாலம் என்று பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை சிலர் தடுக்கப்பார்க்கின்றனர். இது எவ்வளவு பெரிய கொடுமை? இந்த மூடநம்பிக் கையின் விளைவு-ஆத்திக நம்பிக்கையின் விளைவு.

நம்முடைய வளர்ச்சியை, நம்முடைய முன்னேற்றத்தை எவ்வளவு பாழ்படுத்துகிறது இந்த மூடநம்பிக்கை என்பதை நினைத்துப் பாருங்கள். எங்களுக்கு மேளா, கீளா என்பதெல்லாம் கிடையாது. பார்ப்பனர்கள் எழுதிய இராமாயணத் திலிருந்துதான் சொல்லப்போகின்றேன்.

அவர்களுக்கு கடவுள் ஒரு கருவி!

அவர்கள் கடவுளை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்கள். வெறும் தியரி, எத்திசம் - (Athiesm) நாத்திகத்தை மட்டும் எடுத்துச் சொல்லி விட்டுப் போகவில்லை.

இந்த ஜாதியைக் காப்பாற்றுவது மட்டுமல்ல. கடவுள் கருத்தையும் பின்னால் தள்ளி உயர்ஜாதியை உருவாக்கியிருக்கிறான். சமஸ்கிருத ஸ்லோகம் பாருங்கள்: தெய்வாதீனம் ஜகத் சர்வம் என்ன இதற்கு அர்த்தம்? இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.

மந்த்ராதீனம் தூ தைவதம்

இதற்கு என்ன அர்த்தம்? கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது.

மூன்றாவதுதான் மிக முக்கியம்

தன்மந்த்ரம் பிராமணாதீனம் இதற்கு அர்த்தமென்ன? மந்திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. தஸ்பத் பிராமணம் பிரபு ஜெய அப்படியென்றால் என்ன அர்த்தம்? பார்ப்பானை முன்னுக்கு வைத்து கடவுளைத் தள்ளி விட்டான்

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர். மந்திரம் பார்ப்பன ருக்குக் கட்டுப்பட்டது. எனவே பிராமணரை நீங்கள் வணங்க வேண்டும். கடவுளை அல்ல என்று சொல்லி கடவுளை பின்னாலே தள்ளிவிட்டான். பார்ப்பானை முன்னால் வைத்துவிட்டான்.

இந்த இடத்தைத்தான் பெரியார் கண்டு பிடித்தார். அதனால்தான் பெரியாரிசத்தை அசைக்க முடியவில்லை. பெரியார் என்கிற மாமருந்து இருக்கிறதே, அது நாத்திகத்திற்கு மட்டுமல்ல; மனித வாழ்வினுடைய உயர்வுக்கு-பேதமற்ற பெருவாழ்வுக்கு அடித்தளமாக இருந் திருக்கிறது. ஆகவே பெரியாருடைய சிந்தனைகள் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

காவி கழுத்தை வெட்டும்!

அமெரிக்காவிலே பெரியாருடைய கருத்தை ஆராய்ச்சி செய்திருக்கிறார் பவ்லாரிச்சின் என்ற அமெரிக்கப் பேராசிரியை. இராமாயணத்தைப் பற்றி பெரியாரின் மாறுபட்ட கருத்துகளை எடுத்துச்சொல்லியிருக்கிறார்.

அண்மையிலே அந்த அம்மையாரை நான் சிங்கப்பூரிலே சந்தித்தேன். அந்த அம்மையார் சொல்லுகிறார்-காவி கழுத்தை வெட்டும் என்பதைப் பற்றிச் சொன்னார். இதை எல்லாம் கனிமொழி அவர்கள் சொன்னார்.


கடவுள் இல்லை!

தமிழ்நாட்டில்தான் கடவுள் மறுப்பு வாசகத்தை ஒவ்வொரு பெரியார் சிலையிலும் நீங்கள் பார்க்கலாம். கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்று எழுதினார்.

இதுதான் தமிழகத்தில் உள்ள தந்தை பெரியார்சிலையின் கீழ் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சொற்கள் எங்கள் மனதை புண்படுத்துகிறது என்று சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் தார்கள்.

நீதிபதி ஒரு பெரிய பக்திமான். அவர் ஒரு கடவுள் நம்பிக்கையாளர். அவர் ஒரு சிறந்த தீர்ப்பைக் கொடுத்தார். பெரியார் என்ன விரும்பினாரோ, எது அவருடைய கொள்கை என்று சொன்னாரோ. அதைத்தானே அவருடைய சிலையின் கீழே வைக்க முடியும்? இதில் உங்களுக்கு ஒன்றுமில்லையே! என்று சொல்லி தீர்ப்பளித்தார்.

பெரியார் சிலைக்குக் கீழே சங்கராச்சாரி கருத்தையா வைக்க முடியும்? பெரியார் சிலைக்குக் கீழே பெரியார் சொன்ன கருத்தைத்தானே போட முடியும்? சங்கராச்சாரி சொன்னதையா போடுவான்? ஒழுங்காக வழக்கை வாபஸ் வாங்குங்கள்; இல்லாவிட்டால் அபராதம் விதிப்பேன் என்று சொல்லி தீர்ப்பைச் சொன்னார்.

பெரியார் அங்கும் வெற்றி பெற்றார் (கைதட்டல்). ஆகவே தமிழ்நாட்டில்தான் இதை நீங்கள் பார்க்க முடியும். பெரியாருடைய கடவுள் மறுப்புக்கொள்கையை நீதிமன்றமே சரி என்று ஒத்துக்கொண்டிருக்கிறது. இராமாயணத்தை வால்மீகி எழுதினார். அதுதான் ஒரிஜினல், முற்பட்டது. துளசிதாஸ், கம்பன் எழுதிய இராமாய ணங்கள் பிறகு திருத்தி எழுத்தப்பட்டவை.

சச்சின் இராமாயணத்தை-உண்மை இராமாய ணத்தை அரசாங்கம் தடை செய்தது. பிறகு வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் சொன்னது: பெரியார் தனது கருத்துகளைச் சொல்வதற்கு உரிமை படைத்தவர். அவர் இராமாயணத்தைப் பற்றி தனது கருத்து களைச் சொல்லுவதற்கு முழு உரிமை படைத்தவர். ஆகவே பெரியாரின் சச்சி இராமாயணத்திற்கு உத்தரப்பிரதேசம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது.

அதுவும் நெருக்கடி காலத்திலே வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்றவர்களால் அந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. பெரியார் ஏன் இராமாய ணத்தை நினைத்தார்? ஒன்றே ஒன்றைச் சொல்லு கின்றேன்.

உத்தரகாண்டத்தை வெளியிட மறுப்பதேன்?
உத்தரகாண்டத்தையே வெளியிட மாட்டேன் என்கிறார்கள். அந்த உத்தரகாண்டத்தில்தான் மனுதர்ம தத்துவம் இருக்கிறது. ராம ராஜ்ஜியம், ராம ராஜ்ஜியம் என்று சொல்லுகிறார்களே, இந்த இராம இராஜ்ஜியம் வந்தால் எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளம் பாருங்கள்.

ராமராஜ்ஜியம் நடக்கிறது. ராமராஜ்ஜியத்தில் ஒரு குழந்தை இறந்துபோய் விட்டது. உத்தர காண்டத்தில் இருப்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லுகின்றேன். இராமா! உன்னுடைய ராம ராஜ்ஜியத்தில் இவ்வளவு பெரிய அநீதி நடக்கலாமா? தர்மத்திற்கு கேடு வரலாமா? என்று கேட்கிறார்கள்.

என்னுடைய பிராமணக் குழந்தை இறந்து போனான். ஏன் இறந்து போனான் தெரியுமா? யார் உன்னுடைய குழந்தையை கொன்றது என்று கேட்கிறார்கள்.

தர்மத்திற்கு விரோதமாக சம்பூகன் என்று சொல்லக்கூடிய ஒரு சூத்திரன் தவம் செய்கிறான். தவம் செய்வது என்றால் நேரடியாகக் கடவுளைத் தொழுவது.

சூத்திர சம்பூகன் கடவுளைத் தொழுததால்...

சூத்திர சம்பூகன் கடவுளை நோக்கித் தவம் செய்தான். அந்த அதர்மத்தால் என்னுடைய குழந்தை இறந்தது என்று ராமனிடம் முறை யிட்டார்கள்.

ஆகவே, இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் சூத்திர சம்பூகன் கழுத்தை வெட்டு என்று சொன்னார்கள். உடனே ராமன் விசாரணை எல்லாம் செய்யவில்லை. நேராக இராமன் போகிறான். சூத்திர சம்பூகன் கழுத்தை இரண்டு துண்டாக வெட்டுகின்றான். உடனே இந்தக் குழந்தை பிழைத்துக்கொண்டது என்று சொல்லுகின்றான். சூத்திரனை ஒழிப்பது?

இதுதான் இராமாயணத்தில் இருப்பது. அப்படியானால் அதன் தத்துவம் என்னவென்று சொன்னால் சூத்திரரை ஒழிப்பது. அதனால்தான் ஞானசூரியன் என்னும் நூலை எல்லோரும் படியுங்கள் என்று கலைஞர் சொன்னார்.

ஞானியானாலும், மூடனானாலும் சூத்திர னுக்குத் தெய்வம் பிராமணனே ஆவான். இதுதான் மனுதர்மத்தில் இருக்கின்ற ஸ்லோகம். சூத்திரனுக்கு நேரடியாகக் கடவுளைத் தொழ உரிமை இல்லை-இந்து வர்ணாஸ்ரம தர்ம மனுதர்மப்படி. ஆகவே சூத்திர சம்பூகனின் கழுத்தை வெட்ட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லுகின்றான்.

ஏகலைவன் கதையும் அதே!

அதே போன்ற கருத்து. ஏகலைவன் கதை- பாரதத்தில் உங்களுக்குத் தெரியும். ஏகலைவன் குறிபார்த்து அம்பு எய்து ஒரு நாயை வீழ்த்தினான். நேற்று இரண்டு பார்ப்பன நீதிபதிகளே உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். ஏனய்யா கட்டை விரலை வெட்டிக்கொடு என்று துரோணாச்சாரியார் கேட்டதை இந்தக் காலத்தில் எவராவது ஒத்துக்கொள்வார்களா?

பெரியார் அங்கும் வெற்றி பெறுகிறார். பெரியாருடைய தத்துவங்களை ஆரம்பத்தில் மறுத்தவர்களாலே இன்றைக்கு முடியாது என்று காட்டக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறார்கள்.

பெரியார் உலகமயமாகிறார்

பெரியார் உலகமயமாவது மட்டுமல்ல. எந்தெந்த இடத்தில் எல்லாம் பெரியாருடைய கருத்துகள் தடுக்கப்பட்டனவோ, எங்கெல்லாம் பெரியா ருடைய தத்துவங்கள் மறைக்கப்பட்டனவோ, எங்கெல்லாம் பெரியாருடைய கருத்துகளை ஏற்க தயக்கம் இருந்ததோ அங்கெல்லாம் கூட பெரியா ருடைய ஒளி இன்றைக்குப் பரந்து பாய்ந்து கொண்டிருக்கிறது.

நாத்திகத்தின் வெற்றி

அது நாத்திகத்தின் வெற்றி. ஆத்திகத்தின் தோல்வி என்பதை இந்த மாநாட்டின் மூலம் பிரகடனப்படுத்துவதுதான் இந்த மக்கள் வெள்ளத் தில் மிகப்பெரிய பணி என்று கூறி நாளைய நிறைவுரையில் பல முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

http://viduthalai.in/new/page-4/2476.html

மேலவன்னிப்பட்டு வழிகாட்டுகிறது டாக்டர் கி.வீரமணி எடைக்கு எடை 10 ரூபாய் நோட்டு அளிப்பு

உரத்தநாடு ஒன்றியம் மேல வன்னிப்பட்டு என்னும் ஒரு சிறிய கிராமத்தில் நேற்று (30-1-2011) நான்கு விழாக்களை இணைத்து ஒரு பெருவிழா நடைபெற்றது.

தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம், டாக்டர் கி.வீரமணி நூலகம் ஆகியவற்றின் திறப்பு விழாக்களும், தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை 10 ரூபாய் நோட்டு அளிப்பும் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தையே ஈர்த்த ஒன்று என்பதில் அய்யமில்லை.

தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும் எடைக்கு எடை பரிசுப் பொருள்கள் குவிக்கப்பட்டதுண்டு. ஆனால், எடைக்கு எடை ரூபாய் நோட்டு அளிப்பது என்பது இதுதான் முதல் தடவை என்பதால் பொதுமக்களின் கவனம் அந்தப் பக்கம் சுழன்றது.

தங்களின் மதிப்புக்கும், அன்புக்கும், வழிகாட்டுதலுக்கும் உரிய தலைவருக்கு பரிசுப் பெருள்கள் கொடுப்பது என்பது இயல்பானதே என்றாலும், தந்தை பெரியார் அவர்களுக்குத் தொண்டர்கள் வகைவகையாக ஆசை தீரப் பொருள்களை வழங்கியது போல உலக வரலாற்றில் வேறு எவருக்கும் வழங்கப்பட்டதில்லை.

மாட்டு வண்டி, டயர், கைத்தறிப் போர்வைகள், அரிசி, வெல்லம், வெங்காயம், காய்கறி என்று விதவிதமாகப் பொருள்களை வழங்கினர்.

1957 நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சாவூரில் ஜாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாடு ஒன்றை தந்தை பெரியார் நடத்தினார்.

அந்த மாநாட்டில்தான் எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் அளிக்கும் துலாபாரம் நடந்தது. கொடுக்கப் பட்ட தொகை ரூ. 7704 ஆகும். அந்தக் காலத்தில் இது பெரிய தொகையே! பல லட்சம் மக்கள் கூடிக் கண்டு களித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உணர்ச்சித் தீப் பிழம்பு வெடித்துக் கிளர்ந்த மாநாடு அது!

ஜாதி ஒழிப்புக்கான திட்டம் தந்த மாநாடு. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதி அகற்றப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அவகாசமும் அளிக்கப்பட்டது. அதற்குள் அரசமைப்புச் சட்டத் தைத் திருத்தாததால் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பகுதியைக் கொளுத்துவது என்று அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 26 (1957) அந்தப் போராட்டம் மநடைபெற்றது. 10 ஆயிரம் பேர் பங்கு கொண்டனர். 15 பேர்களைக் காவு கொண்டது.

பரிசுகளைப் பெற்றுக் கொண்ட தந்தை பெரியார் மகிழ்ச்சி அடைந்தாலும், தனது நிலை எத்தகையது என்பதில் தெளிவாகவே இருந்தார்.

ஒரு கால கட்டத்தில் என் கூட்டங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள், பாம்பைக் கூட்டத்தில் விட்டுக் கலைக்கச் செய்ய முயன்றவர்கள், கழுதைகளின் வாலில் வெடிகளைக் கட்டி, தீவைத்து கூட்டத்துக்குள் விரட்டி விட்டவர்கள் எல்லாம் உண்டு. அதே மக்கள் அல்லது அவர்களின் சந்ததியினர் இப்பொழுது பரிசுப் பொருள்களை வாரித் தருகின்றனர் என்றால் அதன் பொருள் என்ன?

தந்தை பெரியார் சிந்தித்தார் - சிந்தித்துப் பரிசுகளைக் கொட்டிக் கொடுத்த அந்தப்  பொது மக்களைப் பார்த்து ஒரு வினாவை எழுப்பினார்.

நான் என் கொள்கையில் பல்டி அடித்தேனா? அல்லது  உங்களுக்கு நல்ல புத்தி வந்தது என்று காட்டிக் கொள்கிறீர்களா? என்ற வினாவை எழுப்பி அதற்கு விடையும் தந்தார்.

நான் என் கொள்கையில் மேலும் மேலும், நாளும் நாளும் தீவிரம் அடைந்துதான் வருகிறேன். என்னிடம் சமரசம் இல்லை. அப்படியென்றால் உங்களுக்கு நல்ல புத்தி வந்து விட்டது என்று இப்பொருள்களை எனக்கு அளித்ததன் மூலம் காட்டிக் கொள்கிறீர்கள் என்றாரே பார்க்கலாம். அதற்கும் இந்நாட்டு மக்கள் கைதட்டி ஆரவாரித்து மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.

1938 நவம்பர் 13 இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெரியார் என்று பட்டம் கொடுக்கப்பட்ட மாநாட்டிலேகூட பெண்களே இந்தி எதிர்ப்புப் போரில் குதியுங்கள் என்று அழைப்புக் கொடுத்தார்.

நமது தலைவர்கள் நாம் அளிக்கும் பொருள்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வார்கள்தான்; அதற்காக புகழ் மயக்கத்தில் வீழ்ந்துவிடக் கூடியவர்கள் அல்லர்.
அது போலவே தமிழர் தலைவருக்குத் தங்கம், வெள்ளி உள்பட பொருள்களைக் குவித்துக் கொடுத்தாலும், அந்தப் பொருள்களை ஆக்க ரீதியான பணிகளுக்குத்தான் பயன் படுத்தி வருகிறார்.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் வந்ததும், டில்லியில் பெரியார் மய்யம் நிலை கொண்டதும் இந்த அடிப்படையில் தான்.

மேலவன்னிப்பட்டில் கழகத் தொண்டர்களின் கடும் முயற்சியினால் எடைக்கு எடை அளிக்கப்பட்ட தொகை ரூபாய் 8 லட்சமும். எதற்குப் பயன்படும் என்பதை அந்த விழாவிலேயே அறிவித்தார்.

நம் நாட்டு அறிவியல் சாதனங்களான தொலைக் காட்சிகள், ஊடகங்கள் ஆகியவை அறிவியல் வளர்ச்சிக்கு, முற்போக்குச் சிந்தனைக்குப் பயன்படாமல், மூட நம்பிக்கைகளை, பிற்போக்குத் தனங்களை மக்கள் மத்தியில் திணிப்பவைகளாக உள்ளன.

இந்த அறிவு நாணயமற்ற  தன்மையிலிருந்து மக்களை மீட்க, மூட நம்பிக்கைகளை ஒழிக்க, சமத்துவச் சிந்தனைகளைத் தட்டி எழுப்பிட பெரியார் தொலைக் காட்சி உருவாக்குவது எனும் திட்டம் கழகத்திடம் உண்டு.

அந்தத்  திசையில் நாம் முக்கியமான அடியை எடுத்து வைக்க மேலவன்னிப்பட்டில் அளிக்கப்பட்ட ரூ. 8 லட்சம் நிதி பயன் படுத்தப்படும் என்று தமிழர் தலைவர் வெளியிட்ட அறிவிப்பானது - உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள், தமிழர்களுக்கு அப்பாற்பட்ட வேறு நாடுகளைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள், மனித நேய மாண்பாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை, ஆர்வ அலைகளைத் தட்டி எழுப்பிடும் என்பதில் அய்யமில்லை.

ஆனாலும் இந்தத் தொகையெல்லாம் கூட யானைப் பசிக்குச் சோளப் பொரி போன்றதுதான். ஒரு தொலைக் காட்சி தொடங்குவது என்றால் இந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் நிதி தேவைப்படும்.

விழாவில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு ராஜகிரி கோ. தங்கராசு அவர்கள் குறிப்பிட்டது போல, மேலவன்னிப்பட்டு தொடங்கிக் கொடுத்ததை மற்ற மற்ற பகுதிகளிலும் தொடர வேண்டியது அவசியமாகும்.

பொருள் - பொருள் பொதிந்த வார்த்தையாகும். அதற்கான பொருளைக் கொடுத்த வன்னிப்பட்டு கிராமத்தைப் பாராட்டுகிறோம்.

பகல் - இரவு பாராமல் உழைத்த கழகக் கண்மணிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
http://viduthalai.in/new/page-2/2487.html

Sunday, January 30, 2011

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் என்ன காரணத்துக்கு ஆக ஆரம்பிக்கப்பட்டது என்பதும், அக்காரணத்தை இது வரை சுயமரியாதை இயக்கம் ஆதரித்து வந்திருக்கிறதா அல்லது மாறிவிட்டதா என்பதும் வாசகர்கள் அறிந் ததேயாகும். ஆனாலும், அதைப்பற்றி சிறிது மறுபடியும் எடுத்துக்கூறுவது மிகையாகாது என்றே கருதுகிறோம்.

பார்ப்பனரல்லாத மக்கள் சமுகத் துறையிலும், அரசியல் துறையிலும் பார்ப்பனர்களால் ஏய்த்து, அடிமைப்படுத்தப்பட்டு, சுயமரியாதை உணர்ச்சியில் லாமல் தாழ்ந்து கிடப்பதை மாற்றி, அவர்களை எப்படியாவது பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தை முக்கிய மாய்க் கொண்டே ஆரம்பிக்கப்பட்டதாகும். மற்றும் பலநோக்கங்களும் இருக்கலாம்.

இந்த நோக்கத்தில் ஈடுபட்டு உழைத்ததில் ஆரம்ப முதல் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவையும், ஒத்துழைப் பையும் ஏற்றே நடந்து வந்திருப்பதுடன் அரசாங்கத்தின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் கூட அவசியம் நேர்ந்த போதெல்லாம் ஏற்று நடந்து வந்திருக்கிறது.

இவற்றால் ஏற்பட்ட பயன்கள் என்ன என்பதைப் பற்றி இந்த வியாசத்தில் நாம் விவரிக்க முன் வர வில்லை.

சுயமரியாதை இயக்கம் ஆரம்பகாலம் முதல் ஒவ் வொரு நிமிஷமும், ஒவ்வொரு துறையிலும் காங்கிரசை எதிர்த்தும், பார்ப்பன ஆதிக்கத்தை வெறுத்தும் வந்திருப்பதுடன், சுயமரியாதை இயக்கத்தில் பார்ப் பனர்கள் அங்கத்தினராவதற்கு தடையும் விதிக்கப் பட்டிருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய மெல்லாம் சமுகத்துறையில் பார்ப்பனியத்தை அழிப் பதை எப்படி ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு வந்ததோ, அதேபோல் அரசியலிலும் காங்கிரசைத் தாக்கி அதன் ஆதிக்கத்தை ஒழிக்க ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு மூச்சும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது சுயமரியாதைக்காரர்கள் மாத்திரமல்லாமல் மற்றும் எவரும் உணர்ந்ததேயாகும்.

சைமன் கமிஷனை வரவேற்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பெண் மக்களுக்கும், தொழிலாளிகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்றும், வகுப்புவாரிப் பிரதி நிதித்துவமுறை அனுசரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது முதல் சென்ற மாதம் பண்டிட் ஜவஹர்லாலை பகிஷ்கரித்தது வரை காங்கிரசின் ஒவ்வொரு நிலையையும் எதிர்த்தே வந்திருக்கிறது. இதனால் சுயமரியாதைக்காரர்கள் நாஸ்திகர்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் அழைக்கப் பட்டார்கள். காங்கிரசும் தன்னால் கூடுமானவரை சுயமரியாதை இயக்கத்துக்கு விரோதமாகவே அதன் சகல ஆயுதங்களையும் பயன்படுத்தி வந்திருக்கிறது.

இந்த நிலையை பூரணமாய் உணர்ந்தே காங்கிர சிலிருந்த பலர் சுயமரியாதை இயக்கத்துக்கு வந்து சேர்ந்ததும், சுயமரியாதை இயக்கத்தில் இருந்த பலர் காங்கிரசில் போய்ச் சேர்ந்ததுமான காரியங்கள் நடந்திருக்கின்றன. ஆகவே, இவற்றை பொதுமக்கள் அறியாததல்ல என்பதே நமது நம்பிக்கை.

இந்நிலையில் இன்றும் சில சுயமரியாதைக் காரர்கள் காங்கிரசில் சேர்ந்தும், காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரசுக்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்தும், அப்பிரச்சாரங்களில் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் இகழ்ந்து கூறியும் வருவதுடன், காங்கிரஸ் சார்பாய் சில தேர்தல் ஸ்தானங் களுக்கு அபேட்சகர்களாய் இருக்க முயற்சிப்பதாயும் சேதிகள் வருகின்றன.

இவற்றைப்பற்றி நாம் ஆச்சரியப்படவில்லை. இப்படிப் பட்ட நிலை இன்று நேற்று அல்லாமல் இயக்க ஆரம்ப காலம் முதல் கொண்டே நடந்து வந்திருக்கிறது. இது நமது இயக்கத்துக்கு மாத்திரமல்லாமல், ஜஸ்டிஸ் கட்சிக்கும் இதுபோலவே இந்த 15 வருஷ காலமாகவே நடந்து வந்திருக்கிறது.

காங்கிரசுக்கும் நடந்து வந்திருக்கிறது. ஆதலால், அரசியலை வாழ்வுக்கு ஆதாரமாய்க் கொண்டவர்கள் உள்ளவரையில் இக்காரியங்களுக்கு அனுமதி அளித்துத் தான் தீர வேண்டும். இப்படிப்பட்டவர்களால் பொது ஜனங்கள் ஏமாந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டி யது தான் தவிர்க்க முடியாத நமது கடமையாகும். அதென்னவென்றால் இன்று பல பத்திரிகைகளில் சுய மரியாதைக்காரர்கள் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்கள் என்றும், சுயமரியாதை இயக்கத் தலைவர் நடத்தை பிடிக் காமல் சிலர் காங்கிரசுக்கு வந்து விட்டார்கள் என்றும் எழுதுவதுடன் சுயமரியாதை இயக்கமே காங்கிரசில் கலந்துவிட்டது போலவும் கருதும்படி விஷமத்தனமாகவும் சில பத்திரிகைகளில் எழுதி பாமர மக்களை ஏய்க்கிறார்கள். அதனால் சிற்சில சமயங்களில் இயக்க முயற்சிக்கு கெடுதி உண்டாக இடமேற்படுகிறது. ஆதலால் அதைப்பற்றி எழுத வேண்டியிருக்கிறது.

சுயமரியாதை இயக்கத்துக்கும், காங்கிரசுக்கும் உள்ள முரண்களில் முக்கிய முரண் சுயமரியாதை இயக்கம் ஜாதிப் பிரிவுகளை ஒழிக்க வேண்டும் என்றும், அரசியல் பிரதிநிதித்துவம், உத்தியோகம் ஆகியவைகளில் ஜாதி மதம் உள்ள வரை ஜாதி மத வகுப்பு எண்ணிக்கைக்கு தகுந்தபடி பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதுமாகும்.

இந்தக் காரியங்களுக்கு மாறாகவே இன்று காங்கிரஸ் வேலை செய்து வருகிறது. காங்கிரசின் உயிர் வாழ்வுக்கு அவசியம் வகுப்புகளை காப்பாற்றவும், வகுப்பு உரிமைகளை ஒழிக்கவுமான காரியமே. ஆகையால், அந்நிலையில் இருந்து காங்கிரஸ் மாறுகிறவரை அல்லது தனது நிலையில் இருந்து சுயமரியாதை இயக்கம் மாறுகிறவரை காங்கிரசும், சுயமரியாதை இயக்கமும் இரண்டு நேர்கோடுகளே யாகும். ஒன்றுக்கொன்று சம்பந்தம் ஏற்பட இடமே இருக்க நியாயமில்லை. இந்த இரு லட்சியங்களையும் ஜஸ்டிஸ் கட்சி ஒப்புக்கொண்டு அதற்கு ஆகத் தன்னாலான காரியத்தை செய்து வந்ததாலும், செய்து வருவதாலும் ஜஸ்டிஸ் கட்சியினிடம் சுயமரியாதை இயக்கம் சம்பந்தம் வைத்திருக்கிறது.

இந்த இரண்டு காரியமும் தங்களுடைய லட்சியம் அல்ல என்று கருதுகின்ற எவருக்கும் சுயமரியாதை இயக்கத்தில் இடமில்லை. இடம் ஏற்பட்டால் அது நாணயக் குறைவான முறையின் சம்பாத்தியமும், வினியோகமுமேயாகும்.

இந்த இரண்டு காரியத்துக்கு ஆக சுயமரியாதை இயக்கம் ஏகாதிபத்தியமோ, அந்நிய ஆட்சியோ அல்லது வேறு எதுவோ ஆனாலும் அவற்றுடன் அவசியம் ஏற்படும் போதெல்லாம் ஒத்துழைத்தும், ஆதரித்தும்தான் தீரும். இந்த இரண்டு காரியமும் வெற்றிபெறாமல் சுயமரியாதை இயக்கம் அரசாங்கத்தாரோடு போரிடவோ அல்லது அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ ஒருநாளும் சம்மதியாது. மற்றும், இந்த இரண்டு காரியங்களுக்கு விரோதமாய் இருக்கும் எந்த ஸ்தாபனமும் சுயமரியாதை இயக்கத்துக்கு விரோதமானதே என்பது நமது தாழ்மையான அபிப்பிராயம்.

மற்றொரு விஷயம் கூட சொல்லுவோம். அதாவது தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் சொன்னதுபோலவே நாமும் சொல் லுவோம்.

சத்தியமூர்த்தியார் என்ன சொன்னார் என்றால், அபேத வாதிகள் என்பவர்கள் எனது விரோதியாவார்கள்; காங்கிரசின் விரோதியே ஆவார்கள் என்பதாகக் கூறினார். அதுபோல் தான் நாமும் மற்றொரு விஷயத்தில் கூறுவோம். அதாவது, ஜாதிப்பிரிவு ஒழிப்பதற்கும், அது உள்ளவரை வகுப்பு வாத பிரதிநிதித்துவத் துக்கும் எவன் விரோதியோ அவனெல்லாம் சுயமரியாதை இயக்கத்துக் கும் விரோதி என்றே சொல்லுவோம்.

இதற்கு மாறாக ஏதாவது சுயமரியாதை இயக்கத்தில் ஏற்படு மானால் அது எது அதிக கெடுதி? எது குறைந்த கெடுதி என்கின்றதைப் பொறுத்துத்தான் இருக்குமே ஒழிய, விட்டுக்கொடுப்பதற்கு ஆக ஒரு நாளும் ஏற்பட்டு விடாது.

சுயமரியாதை இயக்கம் தனிப்பட்ட ஒரு சமதர்ம இயக்கத்தில் சேரக்கூடாதா என்று சிலர் கேட்கலாம்; சேரலாம் என்றே பதில் கூறுவோம். ஆனால், வகுப்புகள் ஒழியும் வரை வகுப்புவாரி சம உரிமைகளுக்கு இணங்கி வரக்கூடிய சமதர்ம இயக்கமாய் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களே தங்களை சுயமரியாதை சமதர்ம வாதிகள் என்று அழைத்துக் கொள்ளக்கூட உரிமை யுடையவர்களாவார்கள். அதில்லாமல் சுயமரியாதை சமதர்மவாதிகள், சுயமரியாதை காங்கிரஸ்காரர்கள், சுயமரியாதை தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் ஏமாற்று வித்தை அல்லது நாணயக் குறைவான காரியம் அல்லது அறியாத்தனம் என்றுதான் சொல்லவேண்டும்.

இதை ஏன் எழுதுகிறோம் என்றால், இந்த மாதிரி யான பெயர்களைக் கண்டு பொது ஜனங்கள் ஏமாந்து போகக்கூடாது என்பதற்கு ஆகவே எழுதுகிறோம்.

சுயமரியாதை இயக்கம் ஒரு குறிப்பிட்ட கொள் கையையே அடிப்படையாகக் கொண்டது. அதற்கு ஆக வேண்டி ஒரு குண்டு இருக்கிறவரையிலும் அது போராடியே தீரும். மற்றும் அது தனக்கு போதிய ஆதரவு இருக்கிறது, எதிரிகளின் தொல்லை நமது முயற்சியைக் கெடுக்காது, நம்மைக் காட்டிக் கொடுப் பதற்கு ஆள் இல்லை, அதனால் நமக்கு இடையூறு உண்டாகிவிடாது என்றெல்லாம் விளங்கும் வரை அரசாங்கத்தாரோடு முரண்பாடு செய்துகொள்ள முயற்சிக்காது என்பதையும் பட்டவர்த்தனமாகத் தெரிவித்து விடுகிறோம்.

இதன் மத்தியில் அவசியம் நேர்ந்தால் அது தனிப்பட்ட முறையில் தனிநபர்கள் காரியமாய் இருக்க நேருமே அல்லாமல் இயக்கத்தின் கொள்கையாக இருக்க இன்றைய நிலையில் முடியவே முடியாது.

தோழர்கள் டி.என். ராமன் அவர்களும், டி.எஸ்.எஸ். மணியம் அவர்களும் விடுதலையில் (குடிஅரசில் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறது) எழுதி இருப்பது போல் தங்கள் தங்கள் சொந்த தனிப்பட்ட சுயநலம் காரணமாகவும், வெறுப்பு விருப்பு காரணமாகவும் பல மாஜி சுயமரியாதை தோழர்கள் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும், அதன் உழைப்பாளிகளைப் பற்றியும் செய்துவரும் விஷமப் பிரச்சாரங்களுக்கு மக்கள் இடம் கொடுக்காமல் எவ் விஷயத்தையும் ஆற அமர பொறுமையாய் யோசித்து, ஒரு துறையில் இறங்கி பார்ப்பனரல்லாதார் சமுகத்துக்கு தங்கள் தங்களால் ஆன தொண்டை ஆற்ற வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 06.12.1936

http://viduthalai.in/new/page-2/2396.html

இந்துக்களே, ஒன்று சேர்வீர்! என்று சொல்லும் கூட்டமே! முதலில் வடகலையும், தென்கலையும் ஒன்றாகச் சேர்க்க முடிந்ததா?

இந்துக்களே, ஒன்று சேருங்கள் என்று சொல்லும் இராமகோபாலன் கூட்டமே முதலில் வடகலையையும், தென்கலையையும் உன்னால் ஒன்றாக சேர்க்க முடிந்ததா?என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

திருச்சியில் 8.1.2011 அன்று நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டையொட்டி இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

காஞ்சிபுரம் யானைக்கு நாமம்...!

கடவுளுக்காக காஞ்சிபுரம் கோயிலுக்கு யானை கொடுத்தார்கள். அந்த யானைக்கு நாமத்தைப் போட்டார்கள். யானைக்கு வடகலை நாமத்தைப் போடுவதா? தென்கலை நாமத்தைப் போடுவதா? என்று இந்தச் சண்டை 150 வருடங்களாக நடக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. வெள்ளைக்கார நீதிபதிக்கு வடகலை என்றாலும் தெரியவில்லை. தென்கலை என்றாலும் தெரிய வில்லை. ஏன் இந்த இரண்டு பிரிவினரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். நாமம் என்றால் என்ன? பிரிவி கவுன்சிலில் பிரிட்டிஷ் நீதிபதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நாமத்தைப் பற்றித் தெரியாது.

புத்திலிசாலி வழக்குரைஞர் ஒருவர் நீதிபதியிடம் விளக்கி சொன்னார், மைலார்டு! நீதிபதி அவர்களே, இவர்கள் இரு பிரிவினருக்கும் ஏற்பட்டுள்ள சண்டைலு க்கும் ரு க்கும் ஏற்பட்டுள்ள வழக்கு சண்டை என்று சொன்னாராம். ஆங்கில எழுத்து லு என்பது பாதம் வைத்த நாமம். ரு என்பது பாதம் வைக்காத நாமம் என்று சொன்னாராம். அன்றைக்கு ஏற்பட்ட இந்த வழக்குச் சண்டை இன்றைய வரைக்கும் தீரவில்லை.

இந்துக்கள் முதலில் ஒன்றாக இருக்கிறீர்களா?

இந்து மதம் ஒரே மதம் என்று சொல்லுகின்றான். இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லு கின்றான். இந்துக்களை ஒன்று சேர்ப்பது அப்புறம் இருக்கட்டும். வடகலைக்காரரையும், தென்கலைக் காரரையும் ஒன்று சேர்க்காத உன் மதம், என்ன மதம்? எச்சக்கலை மதம் அல்லவா, உன் மதம்? (சிரிப்பு-கை தைட்டல்).

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்தை யாராவது எள்மூக்கு முனையளவுகூட மறுத்துவிட முடியுமா? தந்தை பெரியாருடைய கருத்து உலகம் பூராவும் பரவுகிறது என்று சற்று நேரத்திற்கு முன்பு சொன்னோம். இதோ என்னுடைய கையிலே இருக்கின்ற ஆதாரம்-நவீன இந்தியாவை உரு வாக்கியவர்கள்-ஆயமநசள டிக ஆடினநச ஐனேயை என்கிற புத்தகம் இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு உயர் ஜாதியைச் சார்ந்தவர். எங்களுக்கு ஜாதிப் பிரச்சினையைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர் பெரியார் கருத்துக்கு மாறுபட்டவர், பெரியாரிஸ்ட் அல்ல.

பெரியாரைப் புறந்தள்ள முடியவில்லை

பெரியாரிஸ்டாக அல்லாதவர்கள்கூட இன் றைக்குப் பெரியாரைப் புறந்தள்ள முடியவில்லை. (கைதட்டல்) பெரியாரை மறைத்துவிட முடிய வில்லை. பெரியாரைக் கொண்டுவர வேண்டி யிருக்கிறது.
எப்படி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நோய்க்கு உரிய மருந்தைத் தேடுவார்களோ அதே போல கடவுள், மதம், ஜாதி என்ற நோய்க்கு உரிய மருந்தைத் தேடுகிறார்கள் என்றால் அதுதான் பெரியார் என்கிற தத்துவம் (கைதட்டல்). ராமச்சந்திர குகா என்பவர்தான் மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இண்டியா என்ற புத்தகத்தை எழுதி யிருக்கின்றார்.

ஆங்கில நூலில் பெரியார் பற்றி....

19 முக்கிய நபர்களைப் பற்றி எழுதியிருக் கின்றார். முக்கியமாக அவர் தேர்ந்தெடுத்தது-ஒன்று, சமுதாயத்துறையிலே ஜோதிபா ஃபுலே டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர். அதே வரிசையிலே தென்நாட்டிலேயிருந்து ஒரே ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கின்றார். அவர்தான் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் என்று மிகத்தெளிவாக இந்த நூலிலே பெரியார் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

இவ்வளவு காலம் ஆங்கில நூல்களிலே பெரியார் இடம்பெறுவதில்லை. பெரியார் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தார். ஆனால் இன்றைக்கு முடியவில்லை. எவ்வளவு காலத்திற்கு அவர்களாலே தடுக்க முடியும்? தடுக்க முடிய வில்லை.

காற்றுக்குத் தடை போட முடியுமா?

காற்றுக்கு எப்படி ஒருவர் தடை போட முடியாதோ அதே போலத்தான் பெரியார் கொள்கைக்கும் எவரும் தடை போட முடியாது என்று சொல்லக்கூடிய அளவிலே இன்றைக்கு வந்திருக்கிறது.

The Radical Reformer E.V.Ramasamy என்று தலைப்பு கொடுத்திருக்கிறார். பெரியாரைப் பற்றிச் சொல்லும்பொழுது, தீவிரமான புரட்சியாளர் சீர்திருத்தவாதி-அவர்தான் புரட்சியாளர் என்று அர்த்தம்.

1938ஆம் ஆண்டிலிருந்து ஈ.வெ.ராமசாமி, பெரியார் என்று அழைக்கப்பட்டார். பெரியார் என்றால் தலைசிறந்த மாமனிதர். அதற்கு காரணம் பெண்களின் உரிமைக்காகப் போராடினார். மூடநம்பிக்கை ஒழிப்புக்காக அரும்பாடு பட்டார். கர்ப்பத்தடை-குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தினார். நாத்திகக் கருத்துகளை அறிவியல் உண்மைக் கருத்துகளை மக்களிடத்திலே எடுத்துச் சொன்னார். அதுமட்டுமல்ல; தென்னாட்டிலே இந்தியை கட்டாயமாகத் திணிக்கின்ற அந்த ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்து மிகப்பெரிய அளவுக்கு ஒரு போராட்டத்தைத் தொடங்கி இறுதியிலே பெரியார் வெற்றி பெற்றார்.

பெரியாரின் தனிச் சிந்தனை

மேலும் பெரியார் அவர்கள் மிக ஆழமாக இராமாயணத்தைப் பற்றி சிந்தித்து விமர்சனம் செய்தார், எழுதினார், ஆய்வு செய்தார். யாருக்கும் இல்லாத துணிவோடு இராமாயணத்தை ஆய்வு செய்தார்.
பெரியாருடைய தனித்த சிந்தனையை, சிறப்பைப் பற்றி இந்த நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது ஒரு செய்தியை மிக அழகாகச் சொன்னார். பெரியாரின் போர் முறைக்கும், மற்றவர்களுடைய போர் முறைக்கும் இருக்கின்ற வித்தியாசம் ஒன்று.

பெரியாரின் போர் முறை

பெரியாரின் போர் முறை இருக்கிறதே அது மூலபலத்தைத் தெரிந்து முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று சொன்னார். அதாவது நேரடியாக இருக்கிற எதிரியைவிட அந்த மூலம் எங்கேயிருக்கிறது, நோய் நாடி நோய் முதல் நாடக்கூடியது-அந்த அடிப்படையிலே போகக் கூடியவர் அவர்.

பார்ப்பனர்களுக்கு புரசீஜர் கோட்

ஜாதி எப்படியிருக்கிறது? ஜாதிக்கு என்ன அடையாளம்? பார்ப்பனர்களைப் பொறுத்த வரையிலே சங்கராச்சாரியார் கொஞ்ச நாள்களுக்கு முன்பு சொன்னார். சங்கராச்சாரி சொன்னது மட்டுமல்ல; அவர் சனாதனத்திலே- ஆத்திகத்திலே சங்கராச்சாரியார் சொன்னார். அரசியலிலே இருந்த ராஜகோபாலாச்சாரியார் சொன்னார். எப்பொழு தெல்லாம் பார்ப்பனர்களுக்கு சங்கடங்கள் வருகிறதோ. அப்பொழுதெல்லாம் வெளியே வருவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்றால் ஞசடிஉநனரசந ஊடினந என்று எப்படி நாம் சட்டத்தைப் புரட்டுகின்றோமோ- அதே போல நமக்குள்ள புரசீஜர் கோட் என்னவென்றால் இராமாயணம் தான். அந்த இராமாயணத்திலே எப்படி நடந்தி ருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்த இராமாய ணத்தைப் பின்பற்றுங்கள் என்று சொன்னார்.

கனிமொழி அழகாகச் சொன்னார்

அதைத்ததான் கவிஞர் கனிமொழி அவர்கள் அழகாகச் சொன்னார். நம் கையைக் கொண்டே நம் கண்களைக் குத்த ஏற்பாடு செய்திருக்கின்றான். அதிலே விழிப்பாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை அவர்கள் சொன்னார்களே, அதற்கு என்ன அர்த்தம்.
நமது சமுதாயத்திலே துரோகிகளைப் பிடித்து நம்மால் விளம்பரப்படுத்தப்பட்டவர்கள், நம்மால் ஆளாக்கப்பட்டவர்கள் - நம் இனத்தவர்களையே பிடித்துக் காட்டுவார்கள்.

அதுதான் விபீஷ்ணன், அதுதான் அனுமார். உலக நாத்திகர் மாநாடு என்றவுடன், நடப்பதற்கு முன்னாலே அவர்களுக்கு அதிர்ச்சி.

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்! என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

உலக நாத்திகர் மாநாட்டை இவ்வளவு பெரிதாக திருச்சியிலே நடத்துகிறார்களே என்ற ஆத்திரம் -பார்ப்பனர்களுக்கு. நான் காலையில் சென்ற பொழுது ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன்.

இராமாயண் பஜன் மேளாவாம்!

வருகிற 23ஆம் தேதி இந்து முன்னணியினுடைய தலைவர் ராமகோபாலய்யர் என்ன பேசுவார் என்றால் இராமாயண் பஜன் மேளா! என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இந்திக்காரர்களுக்கு இந்தி மொழியில் சொல்லுகிறோம். வங்கத்தில் இருந்து வந்தவருக்கு அந்த மொழியில் சொல்லுகின்றோம். பஞ்சாப் காரருக்கு பஞ்சாப் மொழியில் சொல்லுகின்றோம். தெலுங்கு மொழிக்காரர்களுக்கு தெலுங்கு மொழியில் சொல்லுகிறோம் -அது வேறு. உடனே ஒரு மாற்று சொல்ல வேண்டும் என்பதற்காக இராமாயணத்திற்குச் செல்லு கின்றான். நம்முடைய மக்களை அடிமைப்படுத்த வேண்டும், நம் மக்களுக்கு மூளைச் சாயத்தை ஏற்ற வேண்டும் என்பதற்காக இராமாயணத்தைச் சொல்லுகின்றான். இராமாயண் பஜன் மேளா? நடைபெறும் என்று எழுதி வைத்திருந்தான். நாங்கள் என்ன சாதாரண ஆளா? மாவட்ட தலைவரைக் கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே கூப்பிட்டேன். 24ஆம் தேதி நீங்கள் ஒரு விளம்பரம் போடுங்கள்! (கைதட்டல்).

இராமாயணப் புரட்டைப் பற்றி வீரமணி பேசுவார்!

வீரமணி இராமாயணப் புரட்டைப் பற்றி திருச்சியில் ஓர் ஆராய்ச்சி உரையாற்றுவார் என்று போடுங்கள் என்று சொன்னேன் (கைதட்டல்). நான் கன்னா, பின்னா என்று யாரையும் தனிப்பட்ட முறையில் பேசமாட்டேன். இராமாய ணத்தில் இராமன் பிறந்த ஒரு கதையைச் சொன்னாலே போதும் (பலத்த கைதட்டல்). அதே போல சீதைக்கு ஏற்பட்ட ஆபத்து என்ன என்று சொன்னாலே தெரிந்துவிடும்.

அண்ணா அழகாகச் சொன்னார்

அண்ணாவே ரொம்ப அழகாகச் சொன்னார். கம்பன் பாடியதையே எடுத்துச் சொன்னார். மனத்தினால், வாக்கினால் மறு உற்றேன் எனினும் சினத்தினால் தீயேன்! என்று கம்ப இராமாய ணத்தில் உள்ளதை எடுத்துச்சொன்னார்.

சீதையைப் பற்றி இராமன் சந்தேகப்படுகின்றான். சீதை சொல்லுகிறாள்: நான் மனதால் தப்புப் பண்ணவில்லை. அதே மாதிரி வாக்கினால் சொல்லினால் நான் தப்புப் பண்ணவில்லை. சினத்தினால் தீ சுடும் என்று சொல்லுவார்கள்.

அண்ணா இந்த இடத்தில் ரொம்ப அழகாகச் சொன்னார். அண்ணா, தந்தை பெரியார் பள்ளிக் கூடத்தில் படித்தவரல்லவா? ராமகோபாலய்யருக்கு வெட்கம் இல்லையே!

சமஸ்கிருதத்தில் மனோ, வாக்கு, காயம். மன தினால் தப்பு பண்ணவில்லை. உள்ளத்தினால் தப்பு பண்ணவில்லை. வாக்கினாலே-சொல்லினாலே தப்பு பண்ணவில்லை. காயத்தையும் சேர்த்துத்தானே கம்பன் சொல்லியிருக்க வேண்டும்.

ஏன் கம்பன் காயத்தை விட்டான்? அண்ணா சொன்னார். ரொம்ப அழகாக-கம்பன் காயத்தைத் தெரிந்தே விட்டுவிட்டான் கவிதையிலே-காரணம் காயம் காயப்பட்டுவிட்ட காரணத்தினாலே என்று சொன்னார் (கைதட்டல்).

இந்த ஒன்றைச் சொன்னால் போதாதா? ராமகோபாலய்யருக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இராமாயணத்தை இனிமேல் எவராவது கையிலே தூக்குவார்களா?

-(தொடரும்)

தாராசிங் தண்டனையும் தேவையான சிந்தனையும்

ஒரிசா மாநிலம் மனோகர்பூரில் உலகமே வெட்கித் தலைகுனியும் ஒரு கோரச் செயல் நடைபெற்றது. அதற்குக் காரணமான அமைப்பு - சங்பரிவார்க் கும்பலின் கூர்மையான படையான பஜ்ரங்தள் (குரங்கு என்று பொருள்) ஆகும்.

தொழு நோயாளிகளுக்காக தொண்டூழியம் செய்து வந்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் (வயது 58) அவர்தம் மகன்கள் பிலிப்ஸ் (வயது 9), திமோத்தி (வயது 6) ஆகியோர் ஒரு கிராமத்தில் தொண்டூழியம் செய்து இரவில் ஜீப்பில் தூங்கிக்கொண்டு இருந்தபோது பஜ்ரங்தள் கும்பலின் தலைவன் தாராசிங் தலைமையில் ஒரு காட்டு விலங் காண்டிக் கூட்டம் ஜீப்போடு கொளுத்தி தமது இந்துமத வெறித்தனத்தைக் குடித்துத் தீர்த்தது. (23.1.1999)
தொழுநோயாளிகளுக்கு உதவி செய்யலாமா? இந்து மதத் தத்துவப்படி அது கர்ம பலன் ஆயிற்றே!

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்கூட இது கர்மபலன் ஆண்டவனே, பிச்சை போடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு இந்துத்துவாவின் கீழ்மை பாதிக்கப்பட்ட மக்களின் மூளையில்கூட நம்பும்படித் திணிக்கப்பட்ட கொடுமை!
இந்தக் கொடுஞ் செயலுக்குக் காரணமான தாராசிங் என்பவனுக்கு மாவட்ட நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. மேல் முறையீட்டால் உயர்நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதற்கு மேலும் கொலையாளி உச்சநீதிமன்றம் சென்றபோது ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், கொலை செய்யப்பட்ட அந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த புண்ணியவான் லால்கிஷண் அத்வானி.
தான் பொறுப்பு வாய்ந்த ஓர் உள்துறை அமைச்சர் என்பதைக் கூடப் புறந்தள்ளிவிட்டு, தான் ஒரு இந்துமத ஆர்.எஸ்.எஸ். வெறியர் என்ற உணர்வோடு என்ன சொன்னார் தெரியுமா?

பஜ்ரங்தள்காரர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இதுபோன்ற காரியங்களைக் செய்திருக்க மாட் டார்கள் - என்றாரே - என்னே கொடுமை!
இவர் நற்சான்று கொடுத்த கும்பலின் தலைவனுக்கு நீதிமன்றங்கள் ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறதே - அத்வானி இதற்காக நாணிக் குறுக வேண்டாமா? மக்கள் மத்தியில் தான் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்புக் கோர வேண்டாமா?

ஸ்டெயின்ஸ் பாதிரியார் பரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டபோது பஜ்ரங்தள் என்ற அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சுரேந்திர ஜெயின் என்பவர் என்ன கூறினார் தெரியுமா?

இந்துக்களை அழிக்க நினைப்பவர்கள் எங்களை நினைத்துக் கதி கலங்க வேண்டும். அவர்கள் எங்களை நினைத்துப் பீதி அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசாங்கமே எங்களைப் பார்த்துப் பயப்படுகிறது என்றாரே! தாராசிங்குக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள் ளதே - இதனைப் பார்த்தாவது அவர்களுக்கு நல்ல புத்தி ஏற்படுமா?

இப்பொழுது ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட இதே தாராசிங் கும்பல்தான் அதே ஒரிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், தாகூர் முண்டா பகுதியில் 1999ஆகஸ்ட் 29ஆம் தேதி (ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொல்லப்பட்டதற்கு ஏழு மாதங்களுக்குப் பிறகு) ஷேக் ரகுமான் என்ற 32 வயதுடைய ஆயத்த ஆடை (ரெடிமேடு) வியாபாரம் செய்து கொண்டிருந்த முசுலிம் இளைஞனை பட்டப் பகலில் பயங்கரமான முறையில் சித்திரவதை செய்து கொன்றனர்.

முதலில் கைகளை வெட்டினார்கள். அவ்விளைஞன் துடிக்கத் துடிக்கக் கதறியபோது தீ வைத்துக் கொளுத் தினார்கள் என்றால், அதனை - 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது படித்தாலும், நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறதே!

ஷேக் ரகுமான் என்ற இந்த முசுலிம் இளைஞன் இப்படிக் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டபோதுகூட, அதே உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?

கொலையாளிகளை ஒரிசா மாநில காங்கிரஸ் அரசு இதுவரை கைது செய்யவில்லை. அது அம்மாநிலத்தில் சட்ட -ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. ஒரிசா மாநில முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார்.

எவ்வளவு தகிடுதத்தம் - பித்தலாட்டம்! படுகொலைக் குக் காரணம் தமது அமைப்பைச் சார்ந்தவர்கள் என்கிறபோது அந்தப் பிரச்சினைக்குள் போகாமல் அதிலும் அரசியல் செய்வது எத்தகைய அநாகரிகம்?

1999இல் படுகொலைகள் செய்யப்பட்டும் இறுதித் தீர்ப்பு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது என்றால் - நிருவாகம், நீதிமன்றத்தின் இத்தகைய கால தாமதத்தால் ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து இதே திசையில் ஏராளமான மதவெறியாட்டங்கள் திட்டமிட்டு நடத்தப் பட்டன. அம்மாநிலத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தில் 1,25,000 தொண்டர்களும், 1,50,000 ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், 50 ஆயிரம் பஜ்ரங்தள்காரர்களும் இருக்கிறார்கள் என்றால், இந்தக் கேடு கெட்ட வளர்ச்சிக்குக் காரணம் - குற்றவாளி களுக்கு உரிய காலத்தில் தண்டனை அளிக்கப்படாததே!

2007இல் அம்மாநிலத்தில் எந்த அளவுக்குக் கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறை திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டது.

இதேபோல 1992இல் டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான கும்பல்மீது இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதன் விளைவுதான் நாட்டில் அன்றாடம் நடக்கும் வன்முறைத் தாண்டவங்களும், குற்றுயிர் குலை உயிருமான படுகொலைகளும்.
பாபர் மசூதி இடிப்புக்கு முன் இந்தியா - அதற்குப்பின் இந்தியா என்று கோடு போட்டுப் பார்க்க வேண்டிய அவலம் அல்லவா நாட்டில் தலை தூக்கி நிற்கிறது?

ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களாக!

http://viduthalai.in/new/archive/2330.html

வகுப்புவாரிப் போரில் வீரமணி!

வீரமணி வரைவு: வகுப்புவாரி உரிமைப்போரில் தந்தை பெரியாருக்குப் பின்னர் திராவிடர் கழகத்தலைவர் வீரமணி 69 விழுக்காட்டை உறுதிப்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசிற்கு உருவாக்கி அளித்த அரசியல் சட்டத்திருத்த வரைவு 31 (சி) ஆகும்.

தமிழ்நாடு அரசு வழியாக டில்லி சென்ற அந்த வரைவினை நாடாளுமன் றம் 76ஆம் அரசியல் சட்டத்திருத்த வரைவாக ஏற்றுக்கொண்டு நிறை வேற்றித் தந்திருக்கிறது.

நாடாளுமன்றம் நிறைவேற்றிய அந்த வரைவிற்கு அன்றைய குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா _ 19.7.1994 ஆம் நாள் அவருடைய ஒப்புதலை அளித்திருக்கிறார்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற வரைவினை மாநிலங்கள் அவையும் _ மக்கள் அவையும் 24, 25.8.1994 ஆம் நாள் வாக்கில் ஏற்றுக் கொண்டு வகுப்புவாரி வரைவைப் பாதுகாக்கும் பொருட்டு அரசியல் சட்ட ஒன்பதாம் அட்டவணையிலும் சேர்த்துக்கொண்டது.

விசயன் வழக்கு: ஒன்பதாம் அட்ட வணையில் ஏறிய 76 ஆம் திருத்தத்தை எதிர்த்து வாய்சு விசயன் என்பவர் வழக்கொன்றைப் போட்டார்.

2007 ஆம் ஆண்டு அவ்வழக்குத் தொடர்பான எல்லா வழக்குகளும் மேல் விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட் டன.

விரிவாக வழக்கை ஆராய்ந்த உச்சநயன் (சுப்ரீம் _நீதி) மன்றம் தன்னு டைய வழிகாட்டுத் தீர்ப்பொன்றை 13.7.2010 ஆம் நாள் வாக்கில் வழங்கியது.

தீர்ப்பும் திருப்பமும்: வழக்கம்போல ஏமாற்றாமல் வந்துள்ள தீர்ப்பின் வாயிலாக ஓராண்டிற்கு 69 விழுக்காடு வகுப்புவாரி உரிமை தொடர வழி ஏற்பட்டிருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணை யம் விழுக்காட்டின் அளவை உறுதிப் படுத்தி ஆணை பிறப்பிக்கலாம்; அரசு அதன் அடிப்படையில் வகுப்புவாரி உரிமை அளவை நிறைவேற்றலாம்.

வெற்றியும் விளைச்சலும்: வீரமணியின் வகுப்புவாரிக் காப்பு வரைவு எதிர்ப்பு வழக்கினால் பல நன்மைகள் விளையத் தொடங்கி இருக்கின்றன.

உள்ஜாதி ஒதுக்கீட்டிற்கு ஜாதிவாரிக் கணக்குத் தேவை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு நடுவண்அரசும் ஒப்புதலைத் தந்திருக் கிறது.

அரசு வேலைகளில் மேல்ஜாதிக் காரர்களின் கொடுமையான வல்லாண் மையைத் தடுக்க வாய்ப்பு அமைந் திருக்கிறது.

விடியல் போருக்கு முறைப்படி வரவேண்டிய வெற்றித் தீர்ப்பு வந்திருக்கிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியைச் சேர்ப்பது ஜாதி உணர்ச்சியை வளக்கும் என்று கூறி நடுவண் _ மாநில அரசினர் செய்த _ செய்து வருகிற தடுப்புகளைத் தீர்ப்பு மெல்ல வந்த போதிலும் வலிவோடு தகர்த்தெறிந் திருக்கிறது.

காகாகலேல்கர் _ மண்டல் _ அம்பா சங்கர் குழுக்களின் கணக் கெடுப்பு வேண்டுகோள்கள் கைகூடி இருக்கின்றன.

முதலமைச்சர், தலைமையமைச்சர், குடியரசுத் தலைவர் ஆகிய மூவரும் பார்ப்பனராய் இருந்த காலத்தில் நிறைவேறிய வீரமணியாரின் வரைவு வழக்கு எதிர்ப்புத் தீர்ப்பு மாபெரும் வரலாற்று வெற்றியாகும்.

வெற்றித் தீர்ப்பின் எல்லையைத் தாண்டி ஜாதிவாரிக் கணக்கெடுப்புப் பணி நடைபெறும் என்று நடுவணரசு அறிவித்திருப்பது மற்றோர் முட்டுக் கட்டையாகும்.

வேண்டுமென்றே தள்ளிப் போடு வது அவாள் வேலை.

விரைந்து நடவடிக்கைக்குப் பணியவைப்பது நம்முடைய வேலை.

போராளி வீரமணி வென்று, மக்களின் வாழ்த்தையும் பாராட்டையும் பெறுவாராக!

- புலவர் குறளன்பன்
http://viduthalai.in/new/page7/2317.html

துக்ளக்கே புலியை இடற வேண்டாம்!

பதில்: முதல்வரின் பல பேச்சுக்கள் இந்தியன் பீனல் கோட் விவரித் துள்ள குற்றங்கள் சிலவற்றின் கீழ்வருபவைதான்

(துக்ளக் 26.11.2011 பக்கம் 20)

நமது விளக்கம்: பிராமணன் என்று ஒருவன் தன்னைச் சொல்லிக் கொள்வதைவிட பெரிய குற்றம் வேறு எதுவாக இருக்க முடியும்? நீவிர் பிராமணன் என்றால் நாங்கள் யார்?

நீ பிர்மாவின் நெற்றியில் பிறந்த வன் என்றால் நான் பிர்மாவின் பாதத்தில் பிறந்தவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமே.

நான் சூத்திரன் என்றால் உன் மனு தர்மப்படி எங்கள் நிலைப்பாடு என்ன?

நாங்கள் விலைக்கு வாங்கப்பட்ட வர்கள், விபச்சாரி மகன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே. (மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)

என்னை விபச்சாரி மகன் என்று சொல்லும் பிராமணனாகிய நீ குற்றவாளியா? சுயமரியாதை உணர்வின் அடிப்படையில் அதனை எதிர்க்கும் கலைஞர் குற்றவாளியா? கலைஞர் சொன்னது இந்தியன் பீனல்கோட் விவரித்துள்ள குற்றங் கள் சிலவற்றின் கீழ்வரும் என்று உறுதியாக நீவிர் கருதினால், உமக்குத் துணிவிருந்தால், அறிவு நாணயம் இருந்தால் கலைஞர்மீது வழக்குத் தொடு பார்க்கலாம்.

அதைத்தானே நாங்களும் எதிர் பார்க்கிறோம். வீதியில் முழங்குவதை நீதிமன்றத்தில் முழங்குவோமே! தோலை உரித்து மஞ்சள் பொடி தடவிக் காயப் போட்டு விடுவோமே!

முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அரசியலில் -_ ஆட்சியில் இருப்பதால் சிலவற்றைக் கூறிடத் தயக்கம் காட்ட முடியும்.

எங்களுக்கு என்ன வந்தது? எங்களி டம் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லை.

இனத் தலைவர் _ தந்தை பெரியார் இடித்துச் சொல்லி விட்டும் போய்விட் டார் -_ அதுவும் தன் இறுதி உரையிலே _ மரண சாசனமாக (19.12.1973).

நண்பர் வீரமணி சொன்னதுபோல, கிறிஸ்தவன், முஸ்லிம், பார்சி தவிர, மற்றவன் எல்லாம் இந்து. நூற்றுக்கு மூன்று பேர் பார்ப்பனர் தவிர பாக்கி 97 பேர் தேவடியாள் மக்கள், பார்ப் பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சட்டத்திலே எழுதி வைத்திருக்கிறார் கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? திருப்பிச் சொல்லாத காரணம், அவர்களைக் கண்டிக்காத காரணம்; பார்ப்பானைக் கண்டால் வாப்பா, தேவடியாள் மகனே, எப்ப வந்த? என்று கேட்க வேண்டும். ஏண்டா அப்படிக் கேட்கிறாய்? என்றால் நீ எழுதி வைத்ததடா _ என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே, உன்னைத் தேவடி யாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும்! அதில் என்ன தப்பு? என்று ஈரோட்டு எரிமலை, தன்மான உணர்வை தமது இறுதி உரையிலே சொல்லி விட்டுச் சென்றுள்ளாரே அடுத்த கட்டம் இதுதான் நடக்கப் போகிறது.

கலைஞரை மிரட்டலாம் என்று நினைக்க வேண்டாம். கருஞ்சட்டைப் பட்டாளத்தை முதலில் சந்தித்து விட்டுத்தான் அவரை அணுக வேண் டும் _ எச்சரிக்கை!

கடவுள் இல்லை என்று சொல்ப வனின் தலையை அறுக்க வேண்டும் என்று உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார் (நாலாயிரப் பிரபந்தம்) கூறுவான். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் -_ எதிர்த்து ஒரு கருத்துக்கூட கூறக் கூடாது.

பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களின் கற்பை அழிக்க வர வேண்டும் என்று உங்கள் திருஞான சம்பந்தன் பாடுவான் _ அதனையும் பயபக்தியோடு நாங்கள் பவ்யமாக ஏற்க வேண்டும்.

இவற்றையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்டால் இந்தியன் பீனல் கோட் காட்டி அச்சுறுத்துவீர்களா?

இந்திய அரசியல் சட்டம் அசல் மனுதர்மத்தின் மறுபதிப்பு என்று அரசியல் நிர்ணய சபை கூடி அதனைத் தயாரித்து வெளியிட்ட நேரத்திலேயே எங்கள் ஆசான் அய்யா அடித்துச் சொல்லி விட்டாரே!

சட்டத்தை நானே உருவாக்கியி ருந்தாலும், அதைக் கொளுத்துவதிலும் நான்தான் முதல் மனிதனாக இருப்பேன் என்று அண்ணல் அம்பேத்கர் மாநி லங்களவையிலேயே பதிவு செய்தாரே -_ அதுவும் இந்த அடிப்படையில்தான்.

6 பேருக்கு 4 பார்ப்பனர்கள் அரசமைப்புச் சட்டத் தயாரிப்பில் பங்கு கொண்டிருந்தால் அது அசல் மனுதர்ம சாஸ்திரமாகத்தானே இருக் கும்?

சமூகப் புரட்சித் தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் அதனால்தான் இதில் ஒரே கருத்தில் சுருதிப்பேதம் இல்லாமல் சொல்லியுள்ளனர்.

இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்ச மர்கள் என்றும், உரிமையற்றவர்கள் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ள வேதங்களை, (சுருதிகளை), உபநிஷத் துக்களை, மனுதர்ம சாஸ்திரங்களை (ஸ்மிருதிகளை) இதிகாசங்களை, புராணக் குப்பைகளைக் கொளுத் தாமல், அவற்றை உச்சி மோந்து தலையில் தூக்கி வைத்து ஆடும் பார்ப்பனர்கள், சட்டத்தைக் காட்டி மிரட்டுவார்கள் என்றால், அடுத்த கட்டத்தைப் பற்றி பெரும்பான்மை யான மக்கள் யோசித்துத்தான் தீர வேண்டும்.

பார்ப்பனர்களின் வக்கீலாக இன்றைய தினம் சோ ராமசாமி களத்தில் நிற்கப் பார்க்கிறார்.

பச்சையாக மனுதர்மத்துக்கு வக் காலத்து வாங்கி எழுதிக் கொண்டும் இருக்கிறார். நம்மைத் தேவடியாள் மக்கள் என்று சொல்லாமல் சொல் லுகிறார். மறைக்காமல் உண்மையாக பார்ப்பனர்களின் புத்தியைக் காட்டிக் கொள்வதற்காக ஒரு வகையில் அவரைப் பாராட்டக் கூடச் செய்யலாம்.

இப்பல்லாம் பார்ப்பனர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் எப்பொழுதோ மாறி விட்டனர்? என்று சொல்லக் கூடிய அதி மேதா விகள் பார்ப்பனர் அல்லாதாரில் பலரும் இருக்கத்தானே செய் கிறார்கள்?

அவர்களுக்கு அடையாளம் காட்ட அடையாளப் பூர்வமாக ஒருவரைக் காட்டித் தொலைக்க வேண்டாமா? அதற்கு சோ ராம சாமிதான் பொருத்தமானவர். எனவே அசல் அவாளாக பிரா மணராக ஆரியப் புத்திரராக பூணூலை உருவிக் கொண்டு தம் அடையாளத்தைக் காட்டட்டும் _ அதுதான் நம் மக்கள் இனவுணர்வு மழுங்காமல் இருக்கப் பெரிதும் பயன்படும்.

கேள்வி: பிராமணர்கள் ஓட்டு எல்லாம் திமுகவுக்குத்தான் என்று பிராமணர்கள் முடிவெடுத்தால் கருணாநிதி, தனது பிராமண எதிர்ப் புக் கொள்கையையும், கடவுள் மறுப்புக் கொள்கையையும் மாற்றிக் கொள்வாரா?

பதில்: அதோடு மட்டுமல்ல; இலவச பூணூல் திட்டம்கூட கொண்டு வருவார்.
(துக்ளக் 26.1.2011)

நமது விளக்கம்:

அப்பொழுதுகூட பார்ப்பனர்கள் தங்களின் ஜாதி ஆணவத்தை பிறப்பின் அடிப்படையில் நாங்கள் பிராமணர்கள் தான் எனும் ஆணவத் திமிரை விட்டுக் கொடுக் கத் தயாராக இல்லை _ அந்த ஆணவத்தைக் குறிக்கும் பூணூலை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர்களின் சாணக்கியரான ஆச்சாரியார் என்ன சொன்னார்?

பிராமணர்களே, பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரிய னுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லவில்லையா? அப்பொழுது அண்ணா இலவசமாகப் பூணூல் தருவேன் என்றா தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்?

ஆச்சாரியாரைத் தான் சாணக் கியர் என்று சொல்வார்கள். அந்தச் சாணக்கியரையே சட்னி யாக்கி, தேர்தல் வெற்றியை, திருச்சியில் இருந்த தந்தை பெரி யாரை நோக்கிச் சென்று காணிக் கையாக ஆக்கினாரே அறிஞர் அண்ணா _ நினைவிருக்கிறதா?

இப்பொழுது எகிறிக் குதிப்பது போலத்தான் 1971 தேர்தலிலும் இதே சோ கும்பல் தினமணி திரிக் கூட்டம் ஆட்டம் போட்டது.

ஆரியர் _ திராவிடர் யுத்தமே நடந்தது. முடிவு என்ன? 1967-இல் 138 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 1971இல் 183 இடங்களை யல்லவா கைப்பற்றியது?

இராமனை செருப்பாலடித்த கட்சிக்கா ஓட்டு என்று பிரச்சாரம் செய்து பார்த்தீர்களே! கோயில் கதவு பெரிசு சுவரொட்டிகளை ஒட்டினீர்களே! துக்ளக் சிறப்பிதழே வெளியிட்டதே! பிள்ளை பிழைத் ததா? விளக்கெண்ணெய்க்குத்தானே கேடாய் முடிந்தது?



இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. நாட்டை விட்டே வெளியேறத் தீர்மானித்து விட்டார்கள் என்று உங்கள் மூதறிஞர் குல்லுகப்பட்டர் ராஜாஜி சரணாகதி அடையவில்லையா? அவரை விடவா நீங்கள்?

புலியை இடறிப் பார்க்க ஆசைப் பட வேண்டாம். எச்சரிக்கை!

மின்சாரம்
http://viduthalai.in/new/page-1/2295.html

Tuesday, January 25, 2011

புஸ்வாணமாகிப்போன 2G பாணம்! கிட்டு மாமா - பட்டு மாமி புலம்பல்!

பட்டு மாமி: ஏன்னா! சீக்கிரம் இங்கே வாங்களேன்! இந்த டி.வியில என்ன செய்தி போடறா பாருங்க!

கிட்டு மாமா: ஏன்டி இப்படி பதர்றே! என்ன செய்தி டி.வி.யில?

பட்டு மாமி: பாருங்கோன்னா! இந்த CAG காராளை. நம்மவா எல்லாம் இந்த ஸ்பெக்ட்ரம் பிரச் சினையை வச்சுத்தானே, இந்த மு.கவை வீட்டுக்கு அனுப்பலாம்னு திட்டம் போட்டு, நம்மவா பத்திரிகையெல்லாம், இந்த பொய்ச் செய்தியை திரும்பத் திரும்ப போட வச்சு, இவ்ளோ கஷ்டப் பட்டோம்.

கிட்டு மாமா: அதுக்கு என்னடி இப்ப!

பட்டு மாமி: இந்த PAC முன்னாடி விசாரணையில, இந்த CAG சொல்றப்ப, ஸ்பெக்ட்ரம் நட்டம் 56,666 கோடி யிலிருந்து 1,76,000 கோடின்னு சும்மா ஒரு ஊகத்துல விளையாட்டுத்தனமா சொன்னோம்னு சொல்லிட்டாளாம். இந்த ஸ்பெக்ட்ரம் கேசு இவ்வளவு வீக்காயிடுச்சேன்னா?

கிட்டு மாமா: பட்டு! இன்னைக்கு இல்லைடி! என்னைக்கு இந்த தி.க. வீரமணி இந்தக் கேசை கையில எடுத் தாளோ, அன்னைக்கே இந்தக் கேசு வீக்காயிடுச்சுடி!

பட்டு மாமி: இந்த தி.க.வும், மு.கவும் இருக்கிற வரை நம்மவா பருப்பு ஒன் னும் வேகாது போல இருக்கேன்னா?

கிட்டு மாமா: என்னடி பண்றது! நம்பவாளும் கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்!

பட்டு மாமி: என்னாண்ணா சொல்றேள்!

கிட்டு மாமா: பின்ன என்னடி! இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை எடுத்துக் கோயேன், முதல்ல 30,000 கோடின்னா; பின்னாடி 60,000 கோடின்னா; சிஙிமி வெறும் 20,000 கோடின்னா; இப்ப வந்து 1,76,000 கோடின்றா; அருண் ஷோரி உடனே பதறிப்போய் ஓடிவந்து இந்து பேட்டியில் 30,000 கோடிதான் இருக்கும் 1,76,000 கோடியைப் பிடிச் சுட்டு தொங்காதேள்ன்னார். நம்மவா கேட்டாளா! திரும்பத் திரும்ப 1,76,000 கோடி கோடின்னு கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி சொல்லின்டே இருக்காளே!

பட்டு மாமி: அருண்ஷோரி கரெக் டாத்தான் சொல்லிருக்கார்! பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல-னுமோன்னா?

கிட்டு மாமா: பொய்யைச் சொன்னா மட்டும் போதாதுடி பட்டு! உண் மையை மறைக்கவும் தெரிஞ்சிருக்கணும்!

பட்டு மாமி: நன்னா சொன்னேள்! போங்கோ! அதனாலதான் நம்மவா பத்திரிகையெல்லாம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் வந்த லாபமான ரூ.77,938 கோடியைப் பற்றி மூச்சுக் கூட விடலே!

கிட்டு மாமா: இவா மூச்சுவிட்டிருந்தா, அவ் வளவுதான் பிரச்சினை காத்துபோன பலூனா போயிருக்குமேடி!

பட்டு மாமி: எனக்கு ஒரு விஷயத்தை நினைச்சா, மனசே ஆறலை போங்கோ!

கிட்டு மாமா: என்னடி அது!

பட்டு மாமி: இதோ அரெஸ்ட் பண்ணப் போறாள்! அதோ அரெஸ்ட் பண்ணப் போறாள்! சி.பி.அய். விசாரணை முடிச்சு அங்க வைச்சே அரெஸ்ட் பண்ணப் போறான்னு நம்மவா டி.வி.யெல்லாம், CBI வாசல்லே ராப்பகலா காமிராவை ரெடியா கையிலே பிடிச்சுண்டே, கண்ணுல ஒரு பொட்டுத் தூக்கம்கூட இல்லாம பழியாக் கிடந்தாளே! அவங்க மனச் சாந்திக்காவது அரெஸ்ட் பண்ணியிருக் கலாமேன்னா!

கிட்டு மாமா: ஏண்டி! நீயும் நம் ஜெயலலிதா மாதிரி அரெஸ்ட்பண்ணு! அரெஸ்ட் பண்ணுன்றே! CBI என்ன உங்க தோப்பனார் வீடா! நீ நினைச்சா மாதிரியெல்லாம் நடந்துக்கறதுக்கு!

பட்டு மாமி: நம்ம ஜெயலலிதாவை நினைச்சா நேக்கு ரொம்ப அழுகை அழுகையாய் வர்றதுண்ணா!


கிட்டு மாமா: ஏண்டி!


பட்டு மாமி: கூட்டணிக்காக இவாளும் மாய்ஞ்சு மாய்ஞ்சு கூப்பிட்டுப் பார்க் கறா? காங்கிரசுகாரா இவளை கண்டுக் கவே மாட்டேங்கறாள்! நம்மாத்து மனுஷி இவ்ளோ கஷ்டப்படறாளேன்னு நேக்கு ரொம்ப வருத்தமா இருக்குன்னா?


கிட்டு மாமா: காங்கிரஸ்காரா ஜெயலலிதா கிட்டே எப்படிடி வருவா! அந்தக் காலத்திலே சோனியாவை எவ்வளவு மோசமான்னா திட்டிருக்கா! புருஷாளுக்கே துரோகம் பண்ணவள்னு ஒரு பழியைப் போட்டாளே! இவா தமிழ்லே சொன்னதை யாராவது ஒரு காங்கிரசுகாரா சொல்லாமலா விட் டிருப்பா? பட்டு மாமி: அதான் டைம்ஸ் நவ் பேட்டியில பழசையெல்லாம் மனசுல வச்சுக்கக் கூடாதுன்னு ஜெயலலிதா சொல்லிட்டாளே! நடந்ததுக்கு வருத் தம் தெரிவிச்ச மாதிரி தானேன்னா!

கிட்டு மாமா: அப்படியே வச்சுக்கிட் டாலும் அந்தத் தப்பை இவா இன்னும் பண்ணிக்கிட்டேதானே இருக்கா?

பட்டு மாமி: என்னண்ணா சொல் றேள்!

கிட்டு மாமா: பின்னே என்னடி! ஒரு பக்கம் கூட்டணிக்கு அழைப்பு விடறா! இன்னொரு பக்கம் சுப்பிரமணிசாமிய விட்டு ஜெயா டிவில சோனியாவைப் பத்தி மோசமா பேட்டி குடுக்க வைக்கறா! ராஜிவ்காந்தி, இந்திரா காந்தி இவாளின் கொலைக்கே, சோனியா காந்திதான் காரணம்னு பேட்டி கொடுத்துண்டிருக்கா. ஸ்பெக்ட்ரம் பணம் சோனியா காந்தியின் சிஸ்ட்டர்ஸ்கெல்லாம் போய் சேந்திருக்குன்னு சொல்றா சுப்பிரமணிய சாமி! இத ஏன் ஜெயா டி.வி.யில போடணும்?

பட்டு மாமி: இதுக்காக நீங்க ஏண்ணா ரொம்ப அலுத்துக்கறேள்! நம்ப தமிழ்நாட்டு காங்கிரசு காரா ளுக்குத்தான் இதைப் பெரிசா எடுத் துண்டு போயி சோனியாவிடம் சொல் லவா போறாள்?


கிட்டு மாமா: அப்படி இல்லடி பட்டு! ஒருத்தருக்கு இல்லைன்னாலும் இன்னொருத்தருக்கு கொஞ்சமானும் உறைக்குண்டி! ஜெயலலிதா போடற இரட்டை வேடத்தை அவா புட்டு, புட்டு வச்சிருவாளே! இதென்ன! ஜெய் சங்கர், சோவுடன் இரட்டை வேடத்தில் நடித்த வந்தாளே மகராசி சினிமா வா இது! அரசியல்டி! அரசியல்!

பட்டு மாமி: போங் கோண்ணா! நீங்க ஒரு சுத்த விவஸ்தை கெட்ட பிராம்மணன்! செத்துப் போன ஜெய்சங்கர் பேரை இந்த நேரங்கெட்ட நேரத்துலே ஏன் இழுக் கறேள்!

கிட்டு மாமா: சரிடி பட்டு! ஜெய்சங்கரை நான் இழுக்க மாட்டேன்! இந்த சுப்பிரமணிய சாமிய நினைக் கறப்ப, இந்த சந்திரலேகாவோட ஆசிட் மேட்டரும் எனக்கு நினைப்பு வந்து தொலையறதேடி! இதேமாதிரி ஜனங் களுக்கும் நினைப்பு வந்திடுமோன்னு பயமாயிருக்கேடி!

பட்டு மாமி: அதுக்காக நீங்க ஒன்னும் பெரிசா வருத்தப்படாதேன்னா! ஆம்படையானைப் பறி கொடுத்த சங்கரராமன் ஆத்துக் காரியவே பல்டி அடிக்க வச்சவா நாம! சந்திரலேகா, அனுராதா ரமணன், சங்கரராமன்னு நம்மவாளையே நாம காலி பண்ணினாலும் பிராமண தர்மத்தை காப்பாத்தறதில் எவ்வளவு ஒத்துமையா இருக்கோம்! அதைப் பாருங்கோண்ணா?

கிட்டு மாமா: அதுவும் கரெக்ட் தாண்டி பட்டு! நல்ல வேளையா, நம்ப பெரியவா சங்கராச்சாரி பத்தியோ, ஜெயா வழக்கு பத்தியோ, ஒரு வார்த்தை கூட எழுதாம ரொம்ப உஷாரா இருக்கா! நம்மவா பத்திரிகைகளுக்கு இருக்கற இந்த ஒற்றுமையை நினைச்சா நேக்கு ரொம்ப பெருமையா இருக்குடி!

பட்டு மாமி: பாத்திரிகைன்னதும்தான் நேக்கு ஞாபகம் வர்றது! நம்மவா ஜூவி ஒரு மிகப்பெரிய கின்னஸ் சாதனையைப் பண்ணி இருக்கா.

கிட்டு மாமா: என்னடி அந்த சாதனை!

பட்டு மாமி: ஜூ.வி.யில் ரிப்பீட்டா வந்த ஒரு வார்த்தை ஆ.ராசா. உலகத்திலேயே எந்த ஒரு பத்திரிகையும் ஒரே வார்த்தையை இத்தனை தடவை எழுதினதா வரலாறே இல்லையாம் போங்கா! மிகப்பெரிய ரெகார்ட் பிரேக்கே பண்ணி இருக்கா நம்ம ஜூ.வி! அதுமட்டுமில்லேண்ணா; ஜூ.வி. நிறுவனத்துல இருக்கறவாளுக்கும் பொம்பனாட்டிகள் உட்பட ஜூ.வி. குடும்பத்தாரும் ஆ.ராசாவை பற்றி மட்டும்தான் நினைக்கனும்னு உத்திரவே போட்டிருக்கான்னா பாத்துக்கோங்கோ! கிட்டு மாமா: இந்த கின்னஸ் ரெக் கார்டெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்மவா பத்திரிகை அத்தனைக்கும் சவால் விடறாளே இந்தத் தி.க. விடுதலையும், மு.க. முரசொலியும்! பட்டு மாமி: ஆமாண்ணா! பொய் யானாலும் பவர்புல்லாதான் நம்மவா பாணம் தொடுக்கறா! ஆனா நம்மவா கொடுக்கற பவர்புல்லான பாணத்தை எல்லாம் புஸ்வாணமாக்கிடறாளே, இந்த விடுதலையும், முரசொலியும்!

கிட்டு மாமா: அது மட்டும் இல்லடி பட்டு! இப்ப தி.மு.க. எதிர் பிரச்சாரம் சூறாவளி மாதிரி திடீர்னு சூடுபிடிச்சி எல்லாரையும் ஆட்டிண்டிருக்கு. நம்மவா இப்ப கப்சிப்னு ஆய்ட்டா!

பட்டு மாமி: அச்சச்சோ! இப்ப நம்மவா என்னண்ணா பண்ணுவா?

கிட்டு மாமா: அதான்டி தெரியலை! நேக்கும்! பத்தும் பத்தாதற்கு இந்த தி.க. வீரமணி வேற பழசையெல்லாம் தோண்டி தோண்டி எடுத்துக் குடுத்துக் கிட்டே இருக்கா! லைலா புயலாவது பரவாயில்ல! இந்த ராடியா புயல் வேற எப்படி எந்தப் பக்கம் வரும்னே சொல்ல முடியலேடி! அனந்த குமார், எல்.கே. அத்வானி, நிதின் கட்காரின்னு நம்ம பி.ஜே.பி. வேற இந்த ராடியா புயல்ல இப்ப லேட்டஸ்ட்டா மாட் டிண்டிருக்கா!

பட்டு மாமி: தி.க. வீரமணி எடுத்துக் கொடுக்கற செய்தில, நம்ம ஜென்டில் மேன் வாஜ்பேயி, அருண்ஜெட்லி, சுக்ராம், ஜக்மோகன், அருண்ஷோரி, பிரமோத் மகாஜன்னு எல்லாக் கதையும் இப்ப வர்றது!

கிட்டு மாமா: தொலைத்தொடர்புத் துறையை அதிகமா சாதனைக்காக நம்ம வாஜ்பாயிக்கு நோபல் பரிசு வேற கொடுக்கணும்னு எல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டா. இன்னும் என்னனென் னத்தா நோண்டப்போறாளோ தெரியல. 2001இல் இருந்துவேற விசா ரணை வைக்கனுனிட்டா.

பட்டு மாமி: அய்யய்யோ! அப் புறண்ணா! இந்த கபில் சிபல் நம்மவா தானேண்ணா! வாயை வச்சுண்டு சும்மா இருக்கப்படாதோ! பி.ஜே.பி. பீரியட்ல 1,43,000 கோடி லாஸ்னு எடுத்துக் கொடுக்கறாரே! என்.டி.டி.வி. பேட்டியில!

கிட்டு மாமா: நல்ல வேளைடி பட்டு! நம்மவா பத்திரிகையெல்லாம், கொஞ்சம் கூட இந்த விஷயத்தை சட்டை பண்ணலேடி!

பட்டு மாமி: ஏன்ணா அவாளுக்கு மட்டும் தெரியாதா என்ன? எந்தச் செய்தியை பெருசா போடணும், எந்த செய்தியை சைலண்டா விடனுமின்னு!

கிட்டு மாமா: இருந்தாலும் வீரமணி விடுதலையும், மு.க. முரசொலியும் இதைக் கொட்டை எழுத்தில் போட்டு பேட்டியோட போட்டுட்டாளே!

பட்டு மாமி: எது எப்படியோண்ணா! உச்சநீதி மன்றம் நம்மவா கஸ்டடியிலதான இருக்கு! புதுவருடம் 2011 இல் நமக்கு சாதகமாக நல்ல செய்தியை பத்திரிகைகள் போடத்தான் போறா! நம்ம அக்ரஹார மனுஷா வீட்டில் எல்லாம் பால் பாயசம் பொங்கி கொண்டாடத்தான் போறாள்!

கிட்டு மாமா: நீ ஒரு அவசரக் குடுக்கைடி பட்டு! முன்ன ட்ரிப்பு ஈழப் பிரச்சினையில நம்மவா இப்படித்தான் ஸ்டன்ட் அடிச்சா? எல்லாமே வேஸ் டாயிடுத்தே! ஸ்பெக்ட்ரம் பிரச்சினை யில் நாம பாயசம் வக்கப்போறமா, இல்லை, நம்மளையே கலக்கி பாயசமா ஆக்கப் போறாளான்னு பொறுத் திருந்து தாண்டி பார்க்கணும்!

பட்டு மாமி: ஈழப்பிரச்சினைன்னு சொன்னதும்தான் எனக்கு ஞாபகம் வர்றது! இந்த வி.சி. காரா மறைமலை நகரில் நடத்துன மாநாட்டில், எக்கச்சக்கமான கூட்டமாமே! நம்ப வேலைக்காரி அஞ்சலை செல்போனில் யார்ட்டயோ பெருமையா சொல்லிட் ருந்தா! தி.க. வீரமணியும் கலந்துண்டு அவாளையெல்லாம் உற்சாகப் படுத்திட்டாளாமே!

கிட்டு மாமா: நல்ல வேளைடி பட்டு! நம்மவா பத்திரிகை எல்லாம் அது பத்தின போட்டோ, ஈழப்பிரச்சனை ஒட்டிய தீர்மானம், இவை பற்றி ஏதும் பெரிசா செய்தி போடலே!

பட்டு மாமி: ஆமாண்ணா பின்னே! சேரிக்காராளையெல்லாம், படம் எடுத்தா நம்மவா காமிரா தீட்டாயிடு மோன்னா! மனுஷாள்னா தலைலே ஜலம் விட்டுண்டு தீட்டுக் கழிச்சுக்க லாம். காமிரவுக்கு அந்த மாதிரி பண்ண முடியாதேண்ணா!

கிட்டு மாமா: ஆமாண்டி பட்டு! கரெக்டா சொன்னே!

http://viduthalai.in/new/archive/1813.html

Monday, January 24, 2011

பெண்களின் நலம் பேணிய பெரியார் - டாக்டர் பி.சுசீலா எம்.ஏ., எம்.பில்., பிஎச்டி.,

காலங்காலமாய்ப் பெண்கள் போகப் பொருளாகவும் பிள்ளை விளைவிக்கும் பண்ணையாகவும், வேலைக்காரியாகவும் கருதப்பட்டு வந்தனர். வரலாற்றின் வழி நெடுகிலும் பெண்கள் பட்ட துயரங்கள், ரத் தத்தால் எழுதப்பட்ட சிறப்புப் பட்டயங் களை நமக்குச் சான்றுகளாகத் தந்து கொண்டிருக்கின்றன.

கிரேக்க நாட்டின் ஆதிகாவியமான இலியத். எலன் (HELEN) என்ற அரசகுலப் பெண்ணை விருந்திற்கு வந்த பக்கத்து நாட்டு இளவரசன் கடத்திக்கொண்டுபோய்ப் பத்து ஆண்டுகளுக்கு மேல் தன் அரண்மனையில் வைத்திருந்தான் என்பதை எடுத்துக் காட்டுகிறது. போரில் தோல்வி யுற்ற நாடுகளைச் சேர்ந்த பெண்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு போவதும் _ அவர்களை அந்தப்புரங்களில் அடைத்து வைப்பதும் வாடிக்கையாக இருந்துவந்துள் ளது. குழந்தை இல்லாத சூழ்நிலையிலும், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக வும் ஓர் ஆடவன் பல பெண்களை மணந்து கொள்வதும் இன்றும் தொடர்கிறது. தசரத மன்னருக்கு 60003 மனைவியர் இருந் தனர் என்று இராமாயணம் கூறுகின்றது.

பெண்களுக்கு உயிர் என்பது இல்லை. அவள் ஒரு சடப் பொருள் என்ற மனு தருமக் கருத்து மக்கள் மீது திணிக்கப்பட்டுப் பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். கற்பு, ஒழுக்கம், குடும்பநலம் ஆகியவை பெண்களுக்கு மட்டுமே உரிய பண்புகளாக _ பெண்பாற் சொற்களாக ஆக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் இருபாலர்க்கும் பொது வானவை என்பதை முதன்முதலாக எடுத்துக்காட்டி முழங்கியவர் தந்தை பெரியார் அவர்களே யாவார்.

பெண்களின் அடிமைத் தன்மை பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. அது ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது என்ற உண்மையை எடுத்துக்காட்டிப் பெண்விடுதலை வேண்டிப் புரட்சி செய் தவர். பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே என்று புரட்சிக்கவிஞர் பெரி யாரின் கருத்தை வழிமொழிந்து பாடுகிறார்.

மக்கள் தொகைப் பெருக்கம்

மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகின்றது. இதனால் வறுமையும் பஞ்சமும் பிணியும் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஆகையால் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த வேண்டும். அதற்குக் குடும்பக் கட்டுப்பாடு கண்டிப்பாகத் தேவை. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் உணவு உற்பத்தி இல்லை. ஆதலினால் உடனடியாகக் குடும்பக் கட்டுப்பாட்டு முறையை நடைமுறைக்குக் கொண்டுவந்து மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று மால்தசைப் போன்ற பொருளியல் அறிஞர்கள் கூறிச் சென்றுள் ளனர். இதனையும் பெண்களே மேற் கொள்ள வேண்டும் என்பது அவர்கள் விருப்பம் ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு என்பதைப்பற்றி எவரும் சிந்திக்காத காலத்தில் தந்தை பெரியார் குடும்பக்கட்டுப்பாட்டைப் பற்றிப் பேசினார். ஆனால் அக்காலத்துப் பொருளியல் மேதைகள் தெரிவித்த கருத்துகளுக்கும் தந்தை பெரியாரின் கருத்துகளுக்கும் பெருத்த வேறுபாடு இருந்தது.

மேலைநாட்டுப் பொருளியல் வல்லுநர் கள் குடும்பக் கட்டுப்பாடு என்பது மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மிக மிக இன்றியமையாதது என்றனர். முதலா வதாக, இதனைப் பெண்களுக்கே உரித் தாக்கினர். அனால் தந்தை பெரியார் குடும்பக்கட்டுப்பாட்டை வரவேற்றார். அதே வேளையில் அது எதற்காக என்றால், பெண்ணின் உடல் நலத்தைக் காப்பதற்காக அது அவசியம் என்றார். இரண்டாவதாக, குடும்பக் கட்டுப்பாடு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. மேலும் பெண்களைவிட ஆண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்வது மிக எளிது எனும் அறிவியல் உண்மையை எடுத்துக்கூறினார் தந்தை பெரியார்.

திருமண வயது

பெண்களின் திருமண வயதை உயர்த்தவேண்டும் என்றும் முதன்முதலில் தந்தை பெரியார் குரல் கொடுத்தார். சின் னஞ்சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதனால் உண்டாகும் கேடுகளைப் பெரியார் விளக்கிக் கூறுகிறார். சிறுவயதில் அதாவது குடும்ப வாழ்க்கைக்குக் கொஞ்சமும் தகுதியில்லாத நிலையில் கணவனைக் கூடி வாழ்வதினால் அவர் களுக்குண்டாகும் உடல் நலக் கேட்டையும் அவர்கள் கலியாணமான மறு வருடத்தி லேயே கையில் குழந்தையுடன் காட்சி யளிக்கின்ற புதுமையையும் அக்குழந்தைகள் எலிக்குஞ்சுகளைப்போல் நோஞ்சானாகப் பலவீனத்துடன் காணப்படும் கேட்டையும் இதனால் நாட்டு மக்களின் சராசரி வயதும் குறைந்து நாட்டுக்கு உழைப்புச் சக்தியும், ஒரு பக்கத்தில் இந்த மாதிரி பலவீனமான சந்ததிகளைப் பற்றிக்கொள்ளும் நோயைப் போக்குவதற்காக ஏற்பட்டு வரும் நாட்டின் பொருட்கேட்டையும், இதற்கு முன்பு பலவகையிலும் எடுத்துச்சொல்லி இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டு மென்று வற்புறுத்தி வந்திருக்கிறோம். தந்தை பெரியார் குடிஅரசு 13.12.1947)

சரியான பருவம் வந்த பின்னரே பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறும் பெரியார் அந்த நிலையிலும் டாக்டரின் சர்டிபிகேட் பெற்று உடல் தகுதியைப் பரிசோதனை செய்துகொண்ட பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.

குழந்தை மணம்

குழந்தைப்பருவத்திலேயே பெண்களுக் குத் திருமணம் செய்து வைத்தலை சமஸ்கிருத நூல்கள் வற்புறுத்திக் கூறு கின்றன. ஏன் எனில் பெண் என்பவள் நிலையில்லாத _ அலைமோதும் மனம் கொண்டவள். அவள் எந்த நேரத்திலும் தவறு செய்யக்கூடும். ஆதலால் எவ்வ ளவு விரைவில் அவளுக்குத் திருமணம் செய்விக்க முடியுமோ அவ்வளவு விரை வில் திருமணம் செய்து கொடுத்துவிடுக என்று மனுதரும சாத்திரம் கூறுகின்றது. இதனால் இந்தியத் துணைக் கண்டத்தில், ஆரியர் வருகைக்குப்பின்னர் குழந்தைத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. இதன் பின்னர் இளம் விதவைகளின் எண்ணிக்கையும் வளர்ந்தது. ஒருவயதுள்ள விதவைகள், இரண்டு வயது நிரம்பிய விதவைகள், மூன்று வயதுள்ள விதவைகள் என்று 1921 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைப்பட்டியலில் உள்ள விதவைகளைக் கணக்கிட்டுக் காட்டும் பெரியார் இதனை நினைந்து அய்யகோ என் நெஞ்சம் துடிக்கின்றது என்று வருந்துகிறார், (பெண் ஏன் அடிமையானாள்: (ப.60) ஆங்கிலேயே ஆட்சியினரால் சாரதா சட்டம் (குழந்தை மணத் தடைச்சட்டம்) கொண்டுவரப்பட்டபோது அன்றைய தேசியவாதிகள் அதனை தேசியத்திற்கு விரோதமானது என்று பேசினார்கள். ஆனால் தந்தை பெரியாரின் அயராத உழைப்பினாலும் பிரசாரத்தினாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுக் குழந்தை மணம் ஒழிக்கப்பட்டது. இன்று 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணுக்குத் திருமணம் செய்யவேண்டும் என்று சட்டமே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இருப்பினும் தொலைதூரக் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 18 வயது நிரம்பா முன்னர் சில திருமணங்கள் அரங் கேறுகின்றன. அவை அரசின் கவனத் திற்குக் கொண்டுவரப்படும்போது தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. பிள்ளைப்பேறு கூடப் பெண்களின் நலத்திற்கும், முன்னேற் றத்திற்கும் பெரும் தடையாக விளங்குகிறது என்பதைத் தந்தை பெரியார் எடுத்துக் காட்டி, அதனால் கர்ப்பத்தடை என்பது தவிர்க்கமுடியாதது என்று வற்புறுத்துகிறார்.

இவ்வாறு தம் வாழ்நாள் முழுவதும் பெண்களின் நலத்திற்காகவும் முன்னேற்றத் திற்காகவும் ஓய்வறியாது உழைத்த தலைவருக்குப் பெண்ணுலகம் பெரியார் எனும் பட்டத்தையளித்துத் தன் நன்றியைப் புலப்படுத்திக்கொண்டது பெண்களின் நலம் பேணிய பெரியார் புகழ் ஓங்குக!.

http://viduthalai.in/new/archive/1809.html

பகுத்தறிவு மேதை இங்கர்சால்

இந்த உலகம் கண்ட பகுத்தறிவு மேதைகள் மேற்கிலும், கிழக்கிலும் பலராவர். கிழக்கில் இந்திய மண்ணில் தந்தை பெரியாரைப் போற்றி மகிழ்வது போல் கிழக்கு வானில் தோன்றிய வெளிச்சம் போல், மேற்கில் தோன்றிய மேதை இங்கர்சால். ஆனால் ஒரு வேறுபாடு _ அய்யா தந்தை பெரியார் தேர்தல், போட்டி என்று தேர்தல் களத்தில் இறங்காமல் தொண்டாற்றி மறைந்தார். இங்கர்சால் வாழ்க்கை தேர்தல் களத்தில் தொடங்கி விரிகிறது.

1860 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் மக்கள் அவைக்கு இல்லினாய்ஸ் தொகுதியில் ராபர்ட் இங்கர்சால் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இங்கர்சாலை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டார் ரிபப்ளிக்கன் கட்சியின் வேட்பாளர் நீதிபதி கெல்லாக். நீதிபதி கெல்லாக் இங்கர்சாலை விட வயதில் மூத்தவர். இங்கர்சாலோ இளைஞர். அமெரிக்க நாட்டு ரிபப்ளிக்கன் கட்சியைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர். ஏற்கெனவே இருமுறை உறுப் பினராக இருந்தவர். அமெரிக்கநாட்டு விடுதலை வீரர் ஆபிரகாம் லிங்கனின் ஆதரவாளர்.

இந்த அரசியல் பெரும்புள்ளி கெல்லாக்கை எதிர்த்துப் போட்டியிடும் இங்கர்சால் இருபத்தேழு வயது நிரம்பிய இளைஞர். அப்போதுதான் அரசியல் அரிச்சுவடி கற்று வருபவர் இங்கர்சால். ஆனால், மேடையில் முழங்கிய இங்கர்சாலின் பேச்சுத் திறன் அனைவரையும் ஈர்த்தது. ஒரு கூட்டத்திற்குப் பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கூடச் செய்த முதற் பேச்சாளர் என்று புகழ் பெற்றவர், இவ் வளவு திறமையாகப் பேசியவர் அமெ ரிக்க நாட்டிலே எவரும் இருந்திலர் என்று கூறத்தக்க பேச்சாளராக விளங்கினார்.

தென்னாட்டு இங்கர்சால் என்று பேரறிஞர் அண்ணாவைப் போற்றுவது, இந்த இங்கர்சாலின் பேச்சுக்கு இணையான பேச்சு என்பதால்தான். பிறகென்ன? இங்கர்சால் வெற்றி பெற்றார். ஆனால் இவர் தாம் சார்ந் திருந்த டெமாக்ரெடிக் கட்சியை விட்டு ஆபிரகாம் லிங்கனின் ரிபப்ளிக்கன் கட்சியில் சேர்ந்தார். இதற்குக் கார ணம், மனிதரை மனிதர் அடிமை செய்வதை, மனிதருக்கு மனிதர் அநீதி விளைவிப்பதை எப்போதும் வெறுத் தும், எதிர்த்தும் வந்த இவர்தம் கொள் கையே. எனவே 1864 இல் லிங்கனுக் காகத் தேர்தல் பிரச்சார வேலைகளி லும் ராபர்ட் இங்கர்சால் முழுமூச்சாகப் பங்கு பெற்றார். மத்திய இல்லினாய்ஸ் மாவட்டத்திலுள்ள சிறிதும், பெரிது மான எல்லா ஊர்களிலும் இவருடைய சொற்பொழிவு அனைவரையும் ஈர்த்தது.

அவருக்குப்பின் தலைமை ஆளுந ராக விளங்கிய ரிச்சார்டு ஆகல்ஸ்பி என்பவர், இங்கர்சால் வழக்கறிஞர் ஆதலால் அரசுத் தலைமை வழக்கறி ஞராக 1867இல் நியமித்தார். இரண் டாண்டு காலப்பதவி. இது ஒன்றே இவர் வகித்த ஒரே ஒரு அரசுப் பதவி.

இவர் இக்காலத்தில் மதங்களை, கடவுள் கோட்பாட்டை எதிர்த்துப் பேசிவந்தவர். 1868 இல் நடை பெற்ற ரிபப்ளிகன் கட்சி மாநில மாநாட்டில் இவர் இக்கட்சிப் பிரதிநிதியாக தேர்தல் வேட்பாளராக_ முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் பாமர், இவரு டைய சமய எதிர்ப்புணர்வை, இவருக்கு எதிராகப் பயன்படுத்தி கடவுளை நிந்திப்பவர் என்று எதிர்ப்பிரசாரம் செய்து வந்தார்.

இவர் இனிமேல் மதம் தொடர்பாக, மத அமைப்புகளைக் கண்டித்துப் பேசுவதில்லை எனும் உறுதிமொழியை இவரிடம் பெற முயற்சித்தவர். ஆனால் இவரோ, அது போல வாக்குறுதி ஏதும் தரமுடியாது என்று கண்டிப்பாகத் தெரிவித்துவிட்டார். விளைவு _ தேர்தல் வெற்றி இவரை விட்டு நழுவி விட்டது. இதோடு இவருடைய அரசி யல் வாழ்க்கை முற்றுப் பெற்று விட்டது. ஆறு ஆண்டுக்காலம் அரசியலில் கலந்துகொள்ளவில்லை. 1876 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தம் பிரச்சார வன்மையால் ரிபப்ளிகன் கட்சி மாபெரும் வெற்றி பெறச் செய்தார்.

குடியரசுத் தலைவரிடம் இவருடைய நண்பர்கள் இவரை ஜெர்மனியில் அமெரிக்க அரசுப் பிரதிநிதியாக நியமிக்குமாறு யோசனை கூறினர். இவரிடம் அவர்கள் இதனைத் தெரிவிக்கவில்லை. இவர் அதற்குரிய அமைச்சரைச் சென்று கண்டு, தாம் அப்பதவியை ஏற்பதற்கில்லை என்றும், எந்தப் பதவியும் ஏற்கத் தமக்கு விருப்பம் கிடையாதென்றும் தெரிவித்துவிட்டார்.

தள்ளாடும் முதுமை வயது என்றாலும் இவர் தமது பொது நலப் பணியை _ அறிவியல் பிரச்சாரப் பணி யைக் கைவிடவில்லை. நாடெங்கிலும் தந்தை பெரியாரைப் போல் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். அதிக அயர்வு ஏற்பட்டால் ஓய்வு கொள்ளவும், தனது குடும்பத்தினரைக் காணவும் மட்டும் அவ்வப்போது வால்ஸ்டன் மாளிகைக்கு வருவாராம்.
உடல் நலிவுற்று இருக்கிறது ஓய்வெடுங்கள் என்று நம் ஓய்வறியாத் தலைவர் அய்யா பெரியாரிடம் சொன்ன போதெல்லாம், எப்படி, மேடையில் பேசுவது, மக்களைச் சந்திப்பது தமக்கு மருந்து என்று கூறினாரோ அது போலவே உடல் நலிவிலும் விடாமல் பிரச்சாரப் பணியைச் செய்தார். ஜென்ஸ்வில்லி என்றும் ஊரில் சொற்பொழிவு ஆற்றும்போது மயக்கம் அடைந்தவர், எப்படியோ சமாளித்துப் பேசிச் சொற்பொழிவை முடித்தார். இதன் பிறகும் சொற்பொழிவு ஆற்று வதை நிறுத்தினாரா என்றாலும் நிறுத்தவில்லை.

பகுத்தறிவுப் பிரச்சாரத்தை ஓய்வு ஒழிச்சலின்றித்தான் நடத்தினார். இடைவிடாது ஒலி பெருக்கி முன் நின்றதால் இருதய நோய், இருதய ரத்த நாளங்கள் நலிவுற்றன. ஆகவே, இனி அதிகம் பேசினால் ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடித்தனர்.

ஆனால், பொதுநலனே தன் வாழ்க்கை அலட்சியமாகக் கொண்ட இந்த அமெரிக்கப் பெரியார், என் உடல் இந்த மண்ணுலகில் இருக்கும் வரை நல்லறிவினை மக்கள் பெறச் செய்வதே, நாட்டு மக்கள் நல்லறிவும், பகுத்தறிவும் பெற்று மடமையை ஒழித்து, நல்வாழ்வு வாழச் செய்ய உழைப்பதே என்று உறுதிபூண்டார். என் வாழ்நாள் சொற்ப நாள்களே யாயினும் சரியே, அந்தச் சொற்ப நாள்களையும் பொது நலப் பணிக்கே செயல்படுத்துவேண் என்று இறங்கினார்.

தனக்கு மருத்துவம் செய்த மருத் துவரிடம் ஒரு விசித்திர உறுதி மொழி பெற்றார். தனது உடல்நிலை பற்றி வெளியில் _ குறிப்பாகத் தன் குடும்பத் தாரிடம் கூறவேண்டாம் என்று மருத் துவரிடம் உறுதிமொழி பெற்றார். எனவே, மருத்துவரும் இந்தப் பகுத்தறிவு மேதையின் விருப்பத்திற்கு இணங்கி அவருடைய நோயைப்பற்றி வெளியில் சொல்வதில்லை என்று உறுதி அளித்தார்.

1899 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாள் காலை 10.30 மணிக்கு நான் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்; தூங்கி எழுந்தவுடன் வால்ஸ்டனுடன் விளையாட வருவதாகத் தெரிவியுங்கள்! என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றவருடன் மனைவியாரும் உடன் சென்று அவர் தூங்கும் வேளையில் படுக்கை அருகிலேயே அமர்ந்திருந்தார். பன்னிரண்டேகால் மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்து நாற்காலியில் சென்று அமர்ந்தார். மனைவியுடன் பேசிக்கொண்டே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிய அவர் கண்கள் ஒரேயடியாக மூடி விட்டார்.

ஒருவர் இறந்ததும் வழக்கமாகக் கிறித்துவக் குடும்பங்களில் அழைக்கப் படும் மதத் தரகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. மோட்சம் கேட்க கொடுப்பதாகக் கடவுளுக்கு அறிமுகம் செய்து வைப்ப தாகப் புளுகிடும் எந்த வேத பாராய ணமும் நடத்தப்படவில்லை. அவரு டைய உடலை அறையில் கிடத்தி, கட வுள் கண்ணுக்கு அறிமுகம் செய்ய வில்லை.

வால்ஸ்டன் மாளிகையிலேயே அவர் உயிர் துறந்த அதே மேல் மாடி அறையிலேயே அவருடைய உடல் தூய உடையுடுத்திக் கிடத்தப்பட்டிருந்தது. 1899 ஜூலை 25 ஆம் நாள் அவருடைய நண்பர்களும், அவருடைய பகுத்தறிவுத் தோழர்களுமான 34 பேர்களும், குடும்பத்தினரும் கூடியிருந்தனர்.

பேராசிரியர் ஜான் கிளார்க் ரிவாத் என்பவர் சுதந்திரவாதியின் அறிக்கை என்பதையும், மேஜர் ஆர்லண்டோ ஜேஸ் மித் என்பவர் எனது மதம் அல்லது அறிவியலின் சிறப்பு லங்ஜாய் என்பவர் பென்சி இங்கர்சாலுக்குப் பாராட்டு என்ற உரையையும் படித் தனர். இவை அனைத்தும் இங்கர்சா லின் எழுத்தோவியங்கள். 1899 ஜூலை 27 ஆம் நாள் வியாழனன்று இங்கர்சாலின் சடல் புதைக்கப்படாமல் சுடுகாட்டில் எரி யூட்டப்பெற்றது. அவருடைய அஸ் தியை குடும்பத்தினர் திரட்டிக்கொண்டு அவர் வாழ்ந்த வால்ஸ்டன் மாளி கைக்குத் திரும்பினர்.

சித்திரப் பூ வேலைகள் செய்யப் பட்ட வெண்கலக் குடத்தில் அந்த அஸ்தி அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் குடத்தின் மீது இந்தக் குடத்தில் அவரது அஸ்தி _ எங்கள் உள்ளத்தில் அவரது நினைவு என்றும், ராபர்ட் இங்கர்சால் என்றும் பொறிக்கப்பட் டிருந்தது. அவருடைய துணைவி அமீலியா இங்கர்சால் இயற்கை எய்திய பின்னரும் இதே போல் அவருடைய அஸ்தியும் வெண்கலக் குடத்தில் வைக்கப்பட்டது.

இந்த இருவரின் அஸ்திகளும் இன்றும் அமெரிக்காவில் _ முதுபெரும் நகரான ஆர்லிங்டன் கல்லறை விடுதி யில் பளிங்குக் கற்களால் அமைக்கப் பட்ட நினைவுக் கூடத்தில் இருந்து வருகின்றன. இங்கர்சாலின் அறிவொளி நூல்கள் உலகு எங்கும் பரவியுள்ளன.

பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன்


http://viduthalai.in/new/archive/1808.html

மகரஜோதியில் கரைந்த மார்க்ஸியம்

Is Sabari Light Man -made? He wants to know.
People should be told the truth, court tells govt.
(The Times of India 21.1.2011 பக்கம் 1)

சபரிமலை மகரஜோதி மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்டதா? இந்த உண்மை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ் ணன், கோபிநாத் ஆகியோர் நுணுக்க மான கேள்வியை எழுப்பியுள்ளனர்.

வழக்கம்போல இவ்வாண்டும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு மகர ஜோதியைத் தரிசிப்பதற்காகப் பக்தர்கள் சென்றனர் (14.1.2011) மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும் போது நள்ளிரவில் புல்மேடு எனும் இடத்தில் கடுமையான பக்தர்களின் நெரிசல் ஏற்பட்டது. அதில் 102 பேர் பரிதாப கரமான முறையில் சாகடிக்கப்பட்டனர். இந்த

விபத்துக்கான காரணம் குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இது தொடர்பாக கேரள மாநிலம் காவல்துறை, வனத்துறை, திருவாங்கூர் தேவஸ்தானம் ஆகிய மூன்று துறைகளுக்கும் கேரள உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது.

மூன்று துறையினரும் விளக்கம் அளித்தனர். திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் வழக்குரைஞர் பரனேஸ்வர் கூறியதாவது: வானத்தில் தோன்றும் புனிதமான தெய்வீக நட்சத்திரங்களில் ஒன்றாக மகர ஜோதி கருதப்படுகிறது. அது புனித மானது என்பது போன்ற எந்தவிதமான விளம்பரத்தையும் தேவஸ்வம் போர்டு செய்வது கிடையாது என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார்

மிகவும் ஜாக்கிரதையாக இவர் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது; பாம்பும் நோகாமல் பாம்படித்த கொம்பும் நோகாமல் அப்படியும் இப்படியுமாகக் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்.
நீதிபதிகள் கேட்ட கேள்வி என்ன? மகரஜோதி தானாகத் தோன்றுகிறதா, அல்லது மனிதர்களால் தோற்றுவிக்கப் படுகிறதா என்பதுதான் கேள்வி.

ஆம் என்று சொல்ல வேண்டும்; அல்லது இல்லை என்று சொல்ல வேண்டும்; மாறாக என்ன செய்கிறார்? சொதப்புகிறார் (அதற்குப் பெயர்தானே பக்தி?) தெய்வீகமானதாக மகரஜோதி கருதப்படுகிறதாம்; அதே நேரத்தில் அது புனிதமானது என்பது போன்ற எந்தவிதமான விளம்பரத்தையும் தேவஸ் வம் போர்டு செய்வது கிடையாதாம்.

தெய்வ ஜோதி என்று அரசு கருதும் பட்சத்தில் அவ்வாறு விளம்பரம் செய்யத் தயாராக உள்ளது என்பது இந்தப் பதிலில் அடங்கிக் கிடக்கிறது. ஏன் விளம்பரம் செய்யவில்லை? அது தெய்வீக ஜோதி என்று அரசு கருத வில்லை; அதனால் விளம்பரம் செய்ய வில்லை என்பதுதானே உண்மை!

இதுகுறித்து கேரள மாநில முதல் அமைச்சர் அச்சுதமேனன் என்ன சொல்லியிருக்கிறார்?

மகரஜோதியின் உண்மை தன்மை குறித்து உறுதி செய்வதற்காக ஜோதிடர் களிடமோ அல்லது வானியல் ஆராய்ச் சியாளர்களிடமோ கேரள அரசு ஆலோசனை நடத்தாது.

சபரிமலையின் கிழக்கே உள்ள பொன்னம்பல மேடு பகுதி முழுவதும் வானில் தெரியும் மகர ஜோதியை புனிதமான நட்சத்திரமாக லட்சக்கணக் கான பக்தர்கள் கருதுகின்றனர். மக்களின் நம்பிக்கையில் தலையிடு வது தேவையற்றது (தினத்தந்தி 21.1.2011 பக்கம் 9) என்று கூறியிருக் கிறார்.

ஒரு முதல் அமைச்சர் இப்படிக் கூறுவது சரியானது தானா? இதைவிட பொறுப்பற்ற பதில் ஒன்று இருக்க முடியுமா?

சட்டத்துக்கு முன் மதமாக இருந்தாலும் சரி, மற்ற விவகாரங்களாக இருந்தாலும் சரி ஒன்று தானே!

மக்கள் நம்பிக்கை என்கிற காரணத் தால் தலையிடக் கூடாது என்பது எந்த சட்டத்தில் உள்ளது? தீண்டாமை என்பது கூட மக்கள் நம்பிக்கையாகத்தான் இருந்தது. அதனை ஒழிக்க சட்டம் செய்யப்படவில்லையா?
கோயிலுக்குள் குறிப்பிட்டவர்களைத் தவிர மற்ற ஜாதியினர் நுழையக் கூடாது என்பதைக்கூட ஒரு வகையான மத நம்பிக்கையாக, கோட்பாடாக இருந்தது. அதனை சட்டத்தின் மூலம் தூக்கி எறிந்திடவில்லையா?

பார்ப்பனர்கள் மட்டும்தான் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற ஆகமக் கோட்பாடும், நம்பிக்கையும் வெகு காலமாக இருந்து வரத்தான் செய்தன. அதற்கு எதிரான சட்டம் தமிழ்நாட் டில் கொண்டு வரப்படவில்லையா? கேரள மாநிலத்தில் நடைமுறைப்படுத் தப்படவில்லையா?

பக்தர்களின் மதநம்பிக்கை _ அது தலையிடவே முடியாத ஒரு பகுதி என் பதைவிட ஆபத்தான _- அபாயகரமான சமாச்சாரம் வேறு ஒன்று இருக்க முடி யுமா?
அதுவும் அச்சுதமேனன் யார்? மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராயிற்றே! அதுவும் சாதாரண மான மார்க்ஸியமா? டயலிட்டிக் மெட்டீரியலிசத்தைக் கரைத்துக் குடித்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே! ஏன் நழுவுகிறார்? ஏன் நெளிகிறார்? ஏன் ஓடி ஒளிகிறார்?

பண முதலாளிகள் தான் அவர்களின் எதிரிகளா? கல் முதலாளிகள் அவர் களின் கூட்டாளிகளா?
மதவாத எதிர்ப்பு என்றால் பா.ஜ.க.வை எதிர்ப்பது மட்டும்தானா? மத நம்பிக்கை என்ற பெயரால் நடத்தப்படும் மோசடியை எதிர்ப்பது என்பது மார்க்ஸியப் பதாகைக்குள் வரவே வராதா?

பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்? சாஸ்தா கோயிலில் செத்துப் போன குரங்குக்கு செங்கொடி போர்த்தி முஷ்டியை உயர்த்தி, புரட்சி ஓங்குக! என்று புரட்சிக் குரல் கொடுப்பவர்களாயிற்றே - (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 30.12.2009 பக்கம் 9) அவர்களின் சித்தாந்தம் சித்தம் கலங்கிப் போய்தானிருக்கும். செத்த குரங்கைக் கடவுளாகக் கருதி வீர வணக்கம் செலுத்தியவர்கள் சாதாரண உறுப் பினர்கள் அல்லர்!

கேரள மாநிலத்தின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்.கே. பிரேமச் சந்திரன் மற்றும் சி.பி.எம். கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் கோவூர் குஞ்சுமோன்.
சி.பி.எம். ஆளும் மேற்கு வங்கத்தில் மட்டும் என்ன வாழ்கிறது? அம் மாநிலத்தில் போக்குவரத்துத்துறை அமைச் சராக இருந்த சுபாஷ் சக்ரவர்த்தி காளி கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் கழித்தாரே! உண்டியலில் காணிக்கை யும் செலுத்தினாரே (செப்டம்பர் 2006). மேற்கு வங்க முதல் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிபாசு அவர்கள் அதனைக் கண்டித்தபோது அந்த மார்க்ஸிஸ்ட் மந்திரி என்ன பதில் கூறினார்?

நான் முதலில் ஒரு ஹிந்து, அடுத்து பிராமணன், அடுத்துதான் நான் ஒரு கம்யூனிஸ்ட். என்னால் மரபுகளை மீறவே முடியாது! என்று மனுவின் அபி மான புத்திரராக - பதிலடி கொடுக்க வில்லையா?

கட்சியின் பெருந் தலைவராக இருந்த சோம்நாத் சட்டர்ஜி தன் பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்தினாரே, அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கெல்லாம் அழைப்புக் கூடக் கொடுத்தாரே;

அடேயப்பா, மற்றவர்கள் விஷயத் தில் இந்த மனுவாதிப் புத்திரர்கள் முண்டாவைத் தட்டிக் கொண்டு, முஷ்டியைத் தூக்கிக் கொண்டு குரல் கொடுப்பார்கள் பாருங்கள் வானமே இடிந்து விழுந்து விடும் - அவ்வளவு வேகம்; ஆனால், நடப்பிலோ அடிப் படை ஆன்மீகவாதிகள் கூடத் தோற்க வேண்டும்!

கேரள மாநில முன்னாள் முதல் அமைச்சர் ஈ.கே. நாயனார், வாடிகனில் போப்பைச் சந்தித்து கீதையைக் அன்பளிப்பாகக் கொடுத்தாரே அதிலேயே தெரிந்து போய்விட வில்லையா -_ இவர்கள் பின்பற்றும் மார்க்சின் தத்துவம்?
கீதை கர்மா தத்துவத்தைப் போதிக்கக் கூடியது. ஏழையாகப் பிறப்பதும், பணக்காரனாக இருப்பதும் போன ஜென்ம பலா பலன் _ விதியின் முடிவு என்கிற கீதை எங்கே? மார்க்ஸ் சொன்ன பொதுவுடைமை எங்கே?

பொதுவுடைமைப் போர்வையில் கர்மாவை மண்டைக்குள் புதைத்து வைத்திருப்பவர்கள் இங்கு முதல் அமைச்சர்கள்.

இந்த மகர ஜோதி என்பது ஒரு மோசடி _ பித்தலாட்டம் -_ தானாகத் தோன்றுவது கிடையாது. கேரள மின்வாரியத் துறையைச் சேர்ந்தவர்கள் செய்யும் திருகுதாளம் என்பதை கேரளப் பகுத்தறிவாளர்கள் இன்றைக்கு 29 ஆண்டுகளுக்கு முன்பே நேரில் சென்று நிரூபித்துக் காட்டி விட்டார்களே.

அவர்களின் கண்டுபிடிப்பைப் பட விளக்கத்துடன் பிளிட்ஸ் ஏடு விலாவாரியாக வெளியிட்டதே (16.1.1982 பிளிட்ஸ்) பிளிட்ஸ் இதழ் வெளியிட்ட தகவல்: மகரஜோதி கேரளாவில் சபரிமலை கோயிலின் எதிர்புறமுள்ள 2000 அடி உயரமுள்ள மலையில் சமதரையில் குளிர்காலமான டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தோன்றுமாம்.
இந்தக் கேலிக்கூத்தை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் பகுத்தறி வாளர்கள், இதன் பின்னணி என்ன? என்பதைப் பல ஆண்டுகளாக நிரூ பித்து வருகிறார்கள்.

மகர விளக்கு என்று சொல்லப்படும் வெளிச்சத்தைக் கடந்த 10 வருடங் களாக உண்டாக்கிய மனிதனை கேரளப் பகுத்தறிவாளர்கள் கண்டு பிடித்துவிட்டனர். அவர் பெயர் கோபி. இவர் கேரள மின் துறையில் ஓட்டு நராகப் பணியாற்றி வருகிறார். அவர் பொன்னம்பலமேடு என்ற இடத்தில் சூடத்தைப் பானையில் நிரப்பி, அதை கொளுத்தி, கொழுந்துவிட்டு எரியச் செய்து மகரஜோதியை உற்பத்தி செய்கிறார் என்பதையும் கண்டுபிடித் துள்ளனர்.

மேலும் சிறிய மகரஜோதி, புனித ஜோதி என்பதெல்லாம், பந்தங்களின் ஒளியும், பட்டாசுகளின் ஒளியும், சத் தமும் ஆகும் என்பது வெட்ட வெளி யாகியிருக்கிறது.
இந்தப் புரட்டை கேரள பகுத்தறி வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். யாரும் அணுக முடியாத அந்தப் பொன்னம்பலமேடு என்ற இடத்தை மாட்டு வண்டியில் பயணம் செய்து பல்வேறு இடர்ப்பாடுகளை அனுபவித்த பிறகே பகுத்தறிவாளர்கள் அடைந் தார்கள்.

அங்கே சென்றபோது வியப்பு காத் திருந்தது! 500 பேர் அங்கே குழுமியிருந் தனர். அரசாங்கத்தின் பல்வேறு துறை களைச் சார்ந்த ஜீப்களும், தேவஸ் தானத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தார்கள். இதிலிருந்து அரசாங்கமே இந்த ஏமாற்று மோசடியை பின்ன ணியில் இருந்து இயக்குகிறது என்பதை அறியலாம்.

அவர்களின் ஆலோசனைப்படி கோபி என்கிற கோபிநாதன் (கேரள மாநில மின்துறையின் ஓட்டுநர்) பானையில் உள்ள சூடத்தைக் கொளுத்தி, பக்தர்கள் ஜோதியை தரிசிக்கக் கூடி காத்திருக்கும் சபரிமலை இருக்கும் பக்கத்தில் மூன்றுமுறை தூக்கிக் காட்டுவாராம் (கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஓட்டுநர்தான் இந்த மோசடியை செய்து வருகிறார். அனுபவம் காரணமாக இந்தத் தொழிலுக்கு தொடர்ந்து அவரே நியமிக்கப்பட்டு வருகிறார்).
1979-_ஆம் வருடம் இந்த மகரஜோதி தோன்றவில்லை. மகரஜோதிக் கடவுள் வேறு எங்காவது முக்கியமான வேலையில் ஈடுபட்டது இதற்குக் காரணமல்ல; கோபி என்ற கோபிநாத நாயர் பொன்னம்பல மேட்டிற்குச் செல்லாததே காரணமாகும்.

இந்த மகரஜோதி கேலிக்கூத்து 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கிய தாகும். கேரள மின்துறை பம்பா திட்டத்திற்காக காடுகளை அழிப்பதற்கு முன்பு காடர், மலையர் என்ற மலை வாசிகள் அந்தக் காட்டை ஆக்கிரமித்து இருந்தனர். இவர்கள் தங்களை குளிரில் இருந்து பாதுகாக்கவும், மாமிசத்தை வேக வைக்கவும் நெருப்பை உண்டாக் கினர். ஆனால், இந்த வெளிச்சத்தை சபரிமலையில் உள்ள கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டும் கூட்டம் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பணம் திரட்டும் வழியாகப் பயன் படுத்திக் கொண்டனர். அதை மகர ஜோதி என்றனர். அதன்பின் ஒரு மோசடிக் கூட்டம் இத்தகைய ஒரு மோசடியைத் திட்டம் போட்டுச் செய்து வந்தது. கேரள பகுத்தறிவாளர்கள் கழ கம் கேரள அரசுக்கு இந்த மோசடியை அம்பலப்படுத்தி விசாரணைக் கமிஷன் வைக்கவேண்டுமென்று கோரிக்கை விட்டார்கள்.
ஆனால், அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கோரிக்கை மனு தூக்கி எறியப்பட்டுவிட்டது. எளிதில் ஏமாறும் அப்பாவி மக்கள் சபரிமலைக்கு வந்து ஜோதி தரிசித்து ஏமாறும், ஏமாற்று வித்தை நாடகம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. (பிளிட்ஸ் 16.1.1982).

தெகல்கா இதழ் தரும் தகவல்கள்

தெகல்கா ஆங்கில இதழ் (21.6.2008) இதுபற்றி என்ன கூறுகிறது?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு தானாகத் தெரியும் என்றனர். சபரிமலைக் கோயிலின் காப் பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம்; இக்குடும்பத்தின் பி.ரவிவர்மா சொல் கிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார் கள் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், தெகல்கா இதழ் வெளிப் படுத்தும் உண்மைகள்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் காட்டு இலாகாவும், மின்சாரத் துறை யும் சேர்ந்து மோசடியை ஆரம்பித்தனர். கற்பூரத்தை மூட்டை மூட்டையாகத் கொட்டி கொளுத்தி மகரவிளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்கு கோயிலிருந்து அனுப்பப்படுகிறது.

பொன்னம்பல மோசடியை அம்பலப்படுத்திடப் பகுத்தறிவாளர்கள் முயன்றனர். 1973-இல் 24 பேர்கள் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தைத் தெளிவிக்க முயற்சி செய்தனர். கைது செய்து வழக்குத் தொடுத்தது, கேரள மாநில அரசு. இந்தியக் குற்றச்சட்டப் படி எந்தக் குற்றமும் பகுத்தறிவாளர்கள் செய்யவில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

1980-ஆம் ஆண்டில் திருச்சூரிலிருந்து பொன்னம்பலமேடு வந்து, வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத் தினர் பகுத்தறிவாளர்கள்.
இப்போது அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரரு மகேஸ் வரரு, ஆமாம், ஆமாம், மகர விளக்கை மனிதன்தான் கொளுத்துகிறார் என்று ஒப்புக்கொண்டார்; தேவஸ்வம்போர்டு தலைவர் கி.கே.குப்தனும் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு மேலாக அறநிலையத் துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவர்களும் ஆமாம் என்று ஆமோதித்துவிட்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ன கூறுகிறது?

இதுநாள்வரை தெய்வீக அற்புதம் என்று கருதி வரப்பட்ட, புகழ் பெற்ற, சபரிமலை மகர விளக்கு, மனிதரால் ஏற்றப்படுவதுதான் என்று இறுதியாக சான்றளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக் கான மக்களை பரவசப்படுத்தி வந்த, ஆண்டுதோறும் மகர மாத முதல் நாள் அன்று மூன்று முறை ஒளிவிடும் ஒளிப் பிழம்பிற்குப் பின்னால் தெய்வீகத் தன்மை கொண்டது எதுவுமில்லை என்று கோயில் பரம்பரை பூசாரி கண்டரரு மகேஸ்வரரு மற்றும் கோயில் விவகாரங்களுக்கான அமைச்சர் ஜி.சுதாகரன் இருவரும் உறுதிப்படுத்தி யுள்ளார்கள். மூட நம்பிக்கையின் சாயல் சிறிது இருந்தாலும், அதனை எதிர்த்துப் போராடுவது என்பது அலைபோல பெருகிவரும் இந்த நேரத்தைவிட இந்த அறிவிப்புக்கு வேறு நேரம் பொருத்த மாக இருக்க முடியாது. கேரளாவில் பொதுமக்களின் பெரும் ரகசியங்களில் ஒன்றாக விளங்கும் மகர விளக்கைப் பற்றிய இந்த அறிக்கை பாராட்டத் தக்கதே. மூட நம்பிக்கையின் கடைசிக் கோட்டை இடிந்து விழுந்ததற்காக அல்ல இந்தப் பாட்டு; இந்த மகர விளக்கு நிகழ்ச்சியில் அரசுக்கும் பங்கு இருந்தது என்பதை ஒப்புக்கொண்ட நேர்மைக்குத்தான் இந்தப் பாராட்டு. மகர தொடக்க நாளுக்கு தெய்வீக மதிப்பைச் சேர்ப்பதற்காக நடத்தப்படும் இந்த மகர விளக்கு நிகழ்ச்சி ஒரு ஆன்மிக மோசடியே என்று பரவலாக மக்களாலும், குறிப்பாக பகுத்தறிவாளர் கள், நாத்திகர்களாலும் வெளிக் கொண்டு வர முயன்ற பல முயற்சிகள் காவல் துறையினராலும், பவனத் துறையினராலும் காட்டுத்தனமாக நசுக்கப்பட்டன.

தினமலர் சொல்லுவது என்ன?

இந்த மகர விளக்கு பொன்னம்பலம் மலைப் பகுதியில் மூன்று முறை ஒளிர்ந்து மறையும். இதைக் கண்ட பின்புதான் அய்யப்பப் பக்தர்கள் வீடு திரும்புவர். மலைப் பகுதியில் தெரியும் இந்த மகர விளக்குத் தரிசனம் இயற்கையானது என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால், அந்த விளக்கு ஒளிரும்போது சாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் அந்தப் பகுதியையே அதிர வைக்கும்.
ஆனால், இந்த மகர விளக்கு இயற்கையானது அல்ல; செயற்கையா னது. தேவஸ்வம் போர்டு அதிகாரிகளால் ஏற்றப்படுகிறது என, இக்கோயில் தலைமைத் தந்திரியின் குடும்பத்தினரும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் ராமன் நாயரும் தெரிவித்துள்ளனர். (தினமலர், 29.5.2008)

இந்தியப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜோசப் எடமருகு சார்பில் கோயிலில் நடக்கும் இந்த மோசடி குறித்து கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே.நாயனாரிடம் கூறியதாக ஜோசப் எடமருகு கூறினார். (ஜோசப் எடமருகு பேட்டி, விடுதலை 21.2.1993)

டில்லியில் இருந்த இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தில் தலைவர் ஜோசப் எடமருகினை நேரில் அழைத்தவரே _ டில்லிக்கு வந்திருந்த கேரள மாநில முதல் அமைச்சர் ஈ.கே. நாயனார்தான்; அப்பொழுதுதான் இதுபற்றிக் கூறினார்.

மகர ஜோதி மோசடிதான். எங்களுக்கே தெரியும். அந்த இடத் திற்குப் போக முயற்சிக்க வேண்டாம் என்று கூறினர் என்று எடமருகு பேட்டியில் பதிவு செய்துள்ளார் (விடுதலை 21.2.1993 பக்கம் 1)

மத சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி களுக்குத் தெரியாதா? தெரிந்துதானே வினாவைத் தொடுத்துள்ளார்கள். மகரஜோதி உண்மையானதுதானா? மனிதர்களால் காட்டப்படுகிறதா? என்று நீதிபதிகளே கேட்ட பிறகு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று ஒரு மார்க்ஸிஸ்ட் முதல் அமைச்சர் மகர ஜோதி மோசடியை அம்பலப்படுத் திட முன் வந்திருக்க வேண்டாமா?

இந்த மகரஜோதி மோசடி காரணமாகத்தானே கூட்ட நெரிசலில் மக்கள் பலியாகிறார்கள்? சிந்திக்க வேண்டாமா?

மதம் ஒரு அபின் என்று மார்க்ஸ் சொன்னதை நிரூபிக்கக் கிடைத்திட்ட கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று துள்ளிக் குதித்து மளமளவென்று காரியத்தில் இறங்கி இருக்க வேண்டாமா?

கொள்கைக் கோட்பாடுகளில், சித்தாந்தங்களில் ஆழ்ந்த பிடிப்பும், ஈடுபாடும், லட்சியத்திற்காக உயிரையும் கொடுப்போம் என்ற உறுதிப்பாடும் இருந்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பார்களா?

சாதாரண - மிக மிகச் சாதாரண அரசியல் அபிலாஷைகளுக்கும், பதவிப் பித்துக்கும் பலியானவர்களிடம் இதனை எதிர்ப்பார்க்க முடியுமா?

மக்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரமும் செய்ய மாட்டார்கள், சட்ட ரீதியாக வாய்ப்பு இருந்தும், அதிகாரத்தில் இருந்தும் அதனையும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்றால் இதன் தன்மை என்ன?

இந்தநாட்டில் இந்து மதம் இருக்கும் வரைக்கும் இங்கு கம்யூனிசம் பரவி விடும் என்ற பயம் யாருக்கும் வேண்டாம் என்று சர் சி.பி. ராமசாமி அய்யர் சொன்னது சரியாகத்தான் போய் விட்டது.
====================================================

மகர ஜோதி அற்புதமா? மோசடியா?
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அன்று சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குக் கிழக்கே மலை நடுவில் தோன்றும் ஒளிக் கற்றையை மகர ஜோதி என்று கூறி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு வழிபடுவது வழக்கம்.  இது தெய்வச் செயலால் தோன்றும் ஜோதி என்றே இது வரை கதைக்கப்பட்டு வந்தது.
இந்த ஜோதி தோன்றும் ஒரு சில நிமிட நேரத்திற்கு கூடியிருக்கும் லட்சக் கணக்கான பக்தர்கள் பக்தி வெறியுடன் சாமியே சரணம் அய்யப்பா என்று ஒன்று போலக் குலவையிடுவர். சிறிது நேரத்தில் ஜோதி மறைந்ததும் அமைதி திரும்பி விடும்.
இந்த மகரஜோதி நிகழ்ச்சியினால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு நல்ல வருமானம். கடந்த பத்து ஆண்டுகளில் போர்டின் வருமான உயர்வுக்கு இந்த மகரஜோதியும் ஒரு காரணம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் சபரி மலை வருகின்றனர்.
இந்த மகரஜோதி மனிதர்களால் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட  நேரத் திற்கு ஏற்றப்படுகிறது; இது தெய்வ அருளால் தோன்றுவதல்ல; இது மக்களை ஏமாற்றும் ஒரு வேலையே என்று பகுத்தறிவாளர்கள்  கூறிவந்தது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
இந்த மகரஜோதி இயற்கையாகத் தோன்றுவது அல்ல; செயற்கையாக மனிதர்களால் ஏற்றப்படுவதே என்று அண்மையில் தேவசம் போர்டும், கேரள சமய அறநிலையத் துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டனர். என்றாலும் இந்த மகரஜோதி நிகழ்ச்சியை நிறுத்த அவர்கள் தயாராக இல்லை. பொய்ம் மையையே வைத்து வியாபாரம் செய்து வரும் மத வியாபாரிகள் அவ்வளவு எளிதாக தங்கள் வியாபாரத்தைக் கை விடுவார்களா?
(ஆதாரம்: The Illustrated Weekly of India, 15 (1987)
http://viduthalai.in/new/archive/1807.html 

உலகமயமான பெரியார்-நக்கீரன்

திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் கழகம், விஜய வாடா நாத்திகர் மய்யம் ஆகியவை இணைந்து நடத் திய 8ஆவது உலக நாத்திகர் மாநாடு ஜனவரி 7,8,9 ஆகிய தேதிகளில் திருச்சியைக் கலக் கியது.

ஆந்திரா, கேரளா, ஒரிசா, பஞ்சாப், டில்லி, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர், மலேசியா, பின்லாந்து என பல பகுதி களிலிருந்தும் 430 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந் தனர். அவரவரின் உணவு முறைகளை முன்கூட்டியே கேட்டறிந்து, அதற்கேற்ப உணவுவகைகள் தயாரிக் கப்பட்டிருந்தாலும் வெளிநாட்டவர் பலரும் இந்திய உணவுகளையே விரும்பிச் சாப்பிட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகள் பலவற்றையும் தி.க.வின் தலைமை நிலையச் செயலாளரான வீ. அன்புராஜ் கவனமாகச் செய்திருந்தார்.

தமிழக முதல்வரின் வாழ்த்துச் செய்தியுடன் முதல்நாள் மாநாடு தொடங்கியது. திராவிட இயக்கம், பெரியாரின் பெரும் பணி, பெண் ணுரிமை, ஆரிய - திராவிட யுத்தம் உள்ளிட்ட ஆங்கில - தமிழ் நூல்கள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றன. பெரியார் மணியம்மை கல்வி நிறுவனத்தில் பயில்பவர்களின் கலை நிகழ்ச்சிகள், பகுத்தறிவு நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், 3 வயது யாழினியின் பெரியார் பேச்சு, வெற்றிச்செல்வனின் நாத்திக உரை ஆகியவை பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
இரண்டாம் நாள் நிகழ்வின்போது வல்லம் பெரியார் மணியம்மை வளாகத்தின் பெரியார் தாவர கருவூலத்தில் உள்ள டார்வின் பூங்காவில் 25 வகைகளுக்கு மேலான 500 மரங்களை 200-க்கும் மேற்பட்ட பன்னாட்டு அறிவாளர்கள் நட் டனர். அங்குள்ள மூங்கில் பண்ணையைப் பார்வையிட்டு மகிழ்ந்தவர்கள் அங்கேயே சிற்றுண்டியும் சாப்பிட்டனர். மூடநம்பிக் கையில் செய்யப்படும் காரியங்களை, பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் விளக்கும் தீச்சட்டி ஏந்துதல், தீமிதித்தல் போன்றவற்றை தி.க. தோழர்களுடன் வெளிநாட்டு அறிஞர்களும் செய்தது பலரையும் வியக்க வைத்தது. சர். ஏர்க் சர் ஏர்க்.. என்றபடியே நார்வே லூயிஸ் ரோஸ்டு, ஆந்திரா சாரய்யா, கேரளா ஜேம்ஸ் ஆகியோர் தீ மிதித்தனர். நாத்திகர் பேரணியில் 4 வயது குழந்தை முதல் 80 வயது பெரியவர் வரை கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டே தீச்சட்டி ஏந்தியதையும் தீ மிதித்ததையும் அலகு குத்தி கார் இழுத்ததையும் திருச்சி மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள். சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே நின்றிருந்த அய்யப்ப பக்தர்கள் 300 பேர் சுமார் 3 மணி நேரம் நடந்த இந்தப் பேரணியை முழுமையாகப் பார்த்துவிட்டுத்தான் கிளம்பினார்கள். பேரணியை புத்தூரில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து பார்வையிட்ட வீரமணி, கனிமொழி, சுப.வீர பாண்டியன் ஆகியோர் தி.க. தொண்டர்கள் அளித்த தீச்சட்டியை ஏந்தியபோது பலத்த கைதட்டல்.

மாநாட்டின் முக்கிய நிகழ்வு, வெளிநாட்டு நாத்திக - பகுத்தறிவு அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்குகளை மதச் சார்பின்மை, மனிதநேயம், மக்கள் உரிமை, அறிவியல், ஊடகம், நாத்திகம் உள்ளிட்டவை தொடர்பான 9 கருத்தரங் குகள் நடைபெற்றன. அனைத்திலுமே கேள்வி - பதில் பாணியிலான உரையாடல் களும் இருந்ததால் தேவையான விளக்கங்களைப் பங்கேற்பாளர்களாலும் பார்வையாளர்களாலும் உடனுக்குடன் பெற முடிந்தது. நாத்திக அறிஞர்கள் சிலரின் உரைகள் கவனிக்கத்தக்க வகையில் இருந்தன.

நார்வே மனிதநேய அமைப்பின் பொதுச் செயலாளர் கிருஷ்டி மெலி - பிற நாடுகளைக் காட்டிலும் நார்வேயில் பெண்கள் நல்ல முன்னேற்றத்தில் இருக்கிறார்கள். பெண்களுக்கான பல்கலைக் கழகங்கள் நிறைய உள்ளன. மதங்கள் எப்போதுமே பெண்களின் முன்னேற்றத்திற்கு அனுமதிப்பதில்லை. நார்வே நாட்டு கிறிஸ்தவ சபைகள் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆந்திர மாநில நாத்திகப்போராளி கோராவின் மகன் விஜயன் - நாத்திகம் என்பதை இங்கு எதிர்மறையான கண் ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அப்படி இல்லாமல் நேர்மறையாக நோக்க வேண் டும். தமிழ்நாட்டில் பதிவுத் திருமணங் களையும் கலப்புத் திருமணங்களையும் அதிக அளவில் பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம், நாத்திகத்தின் பங்களிப்பு. ஆனால் வட இந்தியாவில் வேறுவிதமாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஜாதி என்ற இடத்தில் வெற்று என்று எழுதும் பழக்கம் உள்ளது. இங்கும் அது வர வேண்டும்

நிறைவுநாளில் நிகழ்த்தப்பட்ட உரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப. வீரபாண்டியன் -இங்கே இருப்பது 2 வழிகள்தான். ஒன்று, கேள்வியே கேட்கக் கூடாது என்கிறது பக்தி மார்க்கம். மற்றொன்று, கேள்விகளை எழுப்பும் பகுத்தறிவு மார்க்கம். பகுத்தறிவுதான் மாற்று வாழ்வியல் பண்பாடு என்பதை மக்கள் உணர வேண்டும்.

கவிஞர் கனிமொழி எம்.பி., - என்னை நாத்திக வாரிசு என்று அழைத்ததை பெருமை யாக நினைக்கிறேன். நானும் தீச்சட்டி ஏந்தினேன். சட்டியின் அடியில் தானியம் போடுவதால் அது சூடு இல்லாமல் இருக்கிறது. இதில் உள்ள தொழில்நுட்பம் இது. இதைச் சொல்லா மல் மக்களை ஏமாற்றுகிறார்கள். நாம் விழிப்புணர்வு அடைய வேண்டும்.

மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் - நாட்டில் நடக்கிற நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால் மானுடம் சந்திக்கும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் மதம்தான்

தி.க. தலைவர் கி. வீரமணி - மூட நம்பிக்கைகளைத் தகர்ப்பதற்காக நம்முடைய கருஞ்சட்டை வீரர்கள் அலகு குத்துவது, கார் இழுப்பது என்று தங்களை வருத்திக் கொள்வது எனக் கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. அறிவியலைப் படிப்பது மட்டுமல்லாமல் அதனை மக்கள் உணர்ந்து கொள்ளவும் வேண்டும். உலகத்திலேயே நாத்திக இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்துவது தமிழகத்தில் தான். பல நாட்டு பகுத்தறிவாளர்கள் இங்கு வந்து தீச்சட்டி ஏந்துகிறார்கள். தீ குண்டம் மிதிக்கிறார்கள் என்றால் பெரியார் உலகமயமாகிறார் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர் களும் தமிழகப் பகுத்தறிவாளர்களும் இணைந்து பானையில் பொங்கல் வைத்து, கரும்பு வெட்டி, பொங்கலோ பொங்கல் என்று தமிழர் திருநாளைக் கொண்டாடினார்கள். நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு அல்ல, மனிதகுலத்தின் மீதான அக்கறை என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது 8ஆவது உலக நாத்திகர் மாநாடு.
நன்றி: நக்கீரன் 2011 ஜனவரி 15-18
http://viduthalai.in/new/page-2/1962.html

weather counter Site Meter