Pages

Search This Blog

Tuesday, March 22, 2011

வீதி உலா சென்றபொழுது கடவுள் பொத்தென்று கீழே விழுந்தார்! பக்தர்கள் தலைகவிழ்ந்து துயரம்

காளஹஸ்தி, மார்ச் 21- காளஹஸ்தீஸ் வரர் கோவிலில் வீதி உலா வின் போது பல்லக்கில் எடுத்துச்சென்ற காள ஹஸ்தீஸ்வரர் சிலை திடீ ரென்று கீழே விழுந்தது. அம்மன் சிலையும் சரிந்த தால் அங்கிருந்த பக்தர் களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் ராகு- ஞானபிர சுனாம்பிகை உடனுறை காளஹஸ் தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவி லில் ஆண்டு தோறும் பங்குனி மாத பவுர்ணமி விழா கொண் டாடப்படு வது வழக்கமாம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பங்குனி மாத பவுர்ணமியை முன் னிட்டு கோவிலில் மூலவ ருக்கு சிறப்பு அபிஷே கம், அலங்காரம் நடந்த தாம். பின்னர் சிவன் சன்னதி எதிரே உள்ள அலங்கார மண்டபத் தில் உலா மேனிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங் காரம் நடைபெற்றதாம்.

அதைத்தொடர்ந்து இரவு காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை அலங்கரிக்கப்பட்டு நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக செல்வதற் காக பல்லக்கில் வைத்து வீதி உலா சென்று கொண்டு இருந்தனராம்.
அப்போது திடீரென்று காளஹஸ்தீஸ்வரர் பொம்மை பல்லக்கில் இருந்து கீழே விழுந்தது. அத்துடன் ஞானபிர சுனாம்பிகை அம்மனும் பல்லக்கிலேயே இருந்த படி சாய்ந்ததாம். இத னால் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட் டது. சலசலப்பும் உரு வானது.

உடனடியாக கீழே விழுந்த மொம்மை பல் லக்கில் தூக்கிவைக்கப் பட்டு அலங்காரம் செய் யப்பட்டதாம். அதுபோல அம்மையார் சிலையை யும் சரிசெய்யப்பட்ட தாம். அதை தொடர்ந்து நான்கு மாடவீதிகளி லும் ஊர்வலம் நடந்த தாம்.

இதுகுறித்து பக்தர் கள் கூறுகையில், "காள ஹஸ்தீஸ்வரர் கோவி லில் இதற்கு முன்பு இது மாதிரி நடந்தது கிடை யாது. மேலும் கடந்த ஆண்டு ராஜகோபுரம் இடிந்து விழுந்தது. கோவில் கோபுரம் கட்டாததால் இதுபோல நடந்து இருக் கலாம்'' என்று தெரிவித் தனராம்.

Sunday, March 13, 2011

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற இரு நாள் நிகழ்ச்சிகள் திரைப்படம்-நாடகம்-பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் சார்பில் இருநாள்கள் நடைபெறும் நிகழ்ச் சியில் பகுத்தறிவுத் திரைப்படம்- அண் ணாவின் நாடகம், பெரியார் விருது வழங்கல் விழா ஆகிய நிகழ்ச்சிகள் உணர்ச்சி மயமாய் நடைபெறு கின்றன. நிகழ்ச்சியின் நிறைவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உரையாற் றுகிறார்.


தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழா ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கோடைகால விழாவாக கொண்டா டுவது வழக்கம்
15 ஆம் ஆண்டு விழா
இந்த ஆண்டு தந்தை பெரியார் முத் தமிழ் மன்றம் 15ஆம் ஆண்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் 15.3.2011 அன்று மாலை 6.30 மணிக்கு முதல்நாள் நிகழ்ச்சி துவங்கி நடைபெறு கிறது. சிந்திக்கத் தூண் டும் பகுத்தறிவுத் திரைப் படம் காட்டப்படு கிறது. பொதுமக்கள்-இனவுணர்வாளர்கள் கண்டுகளிக்கலாம்.
இரண்டாம் நாள் விழா
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற இரண் டாம் நாள் விழா 16.3.2011 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் எழுச்சிகர மாய் தொடங்கி நடக் கிறது. வரியியல் அறி ஞர் ச.இராசரத்தினம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசுகிறார்.
பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கு ரைஞர் கோ.சாமிதுரை, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றுகின் றனர்.

திராவிடர் கழக தலைமை நிலையச் செய லாளர் வீ.அன்புராஜ் அனைவரையும் வர வேற்று உரையாற்று கின்றார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரை நிகழ்த்து கின்றார்.

கவிஞர் செ.வை.ர. சிகாமணி இணைப்பு ரையாற்றுகின்றார்.

அவன் பித்தனா?அண்ணா நாடகம்
அடுத்து திராவிடர் கழக கலைத்துறை அமைப்பாளர் மு.அ. கிரிதரன் அவர்களின் முயற்சியால் அறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய அவன் பித்தனா? என்ற மிகச் சிறப்பான நாடகம் நடைபெறும்.

இந்நாடகத்திற்கு பிரபல திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் தலைமை வகித்துப் பேசுகிறார்.

கி.வீரமணி, விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்
ஓவியர் டிராட்ஸ்கி மருது, வளர்ந்து வரும் தொழில்முனைவர்கள் ஆர்.கருணாநிதி, த.ரமேஷ் ஆகியோ ருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி விருது வழங்குகிறார்.

நிறைவாக திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரை யாற்றுகிறார்.
நிகழ்ச்சியின் முடிவில் இறைவி நயினார் நன்றியுரையாற்று கின்றார்.


தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்ட கோவில் இடிப்பு!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனை மய்யப் பகுதியில் எந்தவித முன் அனுமதி பெறாமலும், அரசு ஆணைக்கு விரோதமாக புதிதாகக் கட்டப்பட்ட கோவிலை இடித்து அப்புறப் படுத்த வேண்டும் என்று நகர திராவிடர் கழக தலைவர் ப. தேசிங்கு மற்றும் நகர செயலாளர் சு. முருகேசன் ஆகியோர் மூலமாக மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் ஏற்பாட்டின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 3.4.2008 அன்று ளி.ஷி. 143/2008 என்ற வழக்கு தொடுக்கப்பட்டது.

மேற்கண்ட சட்ட விரோத மாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணியை உடனடி யாக நிறுத்தத் தடை விதிக்கக் கோரியும், இதற்கு முன்பே கட்டப்பட்டுள்ள கட்டுமா னத்தை இடித்து அப்புறப் படுத்த வேண்டும் எனவும் வழக்குத் தொடுக்கப்பட்டு, இடைக்கால தடையை நீதிமன்றம் கொடுத்தது.

இந்த வழக்கில் எதிர்மனுதாரர் தரப்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் (டீன்) மற்றும் மாவட்ட ஆட்சியரும் வழக்கு விசாரணையின்போது கட்டப்பட்டு வரும் கோவில் வழிபாட்டுத்தலமாக இதுவரை இல்லை என்றும், இந்த கோவில் யாருடைய அனுமதி யும் இல்லாமல் கட்டப்பட் டுள்ளது எனவும், இதை இடித்து அப்புறப்படுத்த ஒப்புக் கொள்கிறோம் எனவும் அவர்களது வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்த குறிப்பாணையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அந்தக் கோவிலை இடித்து அப்புறப் படுத்த 04.11.2009 அன்று உத்தரவிட்டது.

அதன்பிறகு மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் மூலமாக கழகத் தோழர்களுடன் இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரையும், மருத்துவக் கல்லூரி முதல்வரையும் நேரில் சந்தித்து 21.5.2010 அன்று உத்தரவு நகல்களை இணைத்து மனு கொடுத்தும் மீண்டும் இருமுறை நேரில் சந்தித்து நினைவூட்டி மனு கொடுத்தும் சம்பந்தப்பட்ட நிருவாகம் இடித்து அப்புறப்படுத்தாது காலம் தாழ்த்தி வந்த நிலையில் 4.3.2011 அன்று மருத்துவக் கல்லூரி நிருவாகம் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்துள் ளார்கள்.

மருத்துவக் கல்லூரியின் முக்கியமான இடத்தில் கோவில் கட்டி வழிபாடு என்ற பெயரில் ஒலிபெருக்கி வைத்துப் பயன்படுத்தும் நிலையில், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மிகப் பெரிய தொல்லை கொடுப்பதோடு, இந்த இந்துக்கோவிலை ஒரு முன் மாதிரியாக காட்டி வேறு மதத்தவர்களும் வழிபாட்டுத்தலம் கட்டும் நிலை ஏற்பட்டால் கல்வி நிலையங்களில் தேவை இல்லாத மதப்பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தோடுதான் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களது ஒப்புதலோடு மேற்கண்ட நடவடிக்கை தஞ்சையில் எடுக்கப்பட்டு அதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது.

இதனை மற்ற மற்ற அரசு அலுவலகங்களும், வளாகங்களும் பின்பற்றுமா?

பின்பற்றாவிடின் கழகம் தன் கடமையைத் தொடர்ந்து செய்யும்.
http://viduthalai.in/new/page4/5248.html 

Friday, March 11, 2011

அரசியலில் பெண்கள் பங்கு ஏற்பதில் இந்தியா 98ஆம் இடம்

உலக நாடுகளில் அரசியலில் பெண்கள் பங்கு ஏற்பதில் இந்தியா 98ஆம் இடத்தில் இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லப்பட்டு 64 ஆண்டுகள் ஓடிய பிறகும் இந்த நிலை என்றால் - இதற்கான காரணம் என்ன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். உரிய வகையில் முயற்சிகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாரத மாதா கி ஜே! என்று நாட்டைத் தாய்க்கு ஒப்பிட்டுப் பெருமை பேசினால் மட்டும் போதாது.

மக்கள் தொகையில் சரி பகுதியினராக இருந்து வந்த பெண்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் பெரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார அமைப்பு ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டது (2009). ஆண் - பெண் முன்னேற்றத்தில் இடைவெளி 134 நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. அதில் இந்தியா 114ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1991இல் ஆயிரம் ஆண்கள் என்று இருந்தால் பெண்களின் எண்ணிக்கை 945 ஆக இருந் தது. 2001ஆம் ஆண்டிலோ பெண்களின் எண்ணிக்கை 923 ஆக வீழ்ச்சி அடைந்துவிட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் முன்னேற்றம் மற்ற நாடுகளைவிட குன்றியிருப்பதற்குக் காரணம் - இந்துத்துவா என்னும் மோசமான - மானுடத்தை அரிக்கும் க்ஷயரோக நோய் தான்.

மனுதர்ம சாத்திரத்தையும், கீதையையும் முதலாவ தாகத் தடை செய்ய வேண்டும். அதன் மூலம் அதிர்ச்சி ஒன்று சமுதாயத்தில் உருவாக்கப்பட்டு, புதிய சிந்தனைக்கு நடவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் மக்களவையின் உறுப்பினர் எண் ணிக்கை 544. அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 60 ஆகும் (11 சதவிகிதம்). அதுபோலவே மாநிலங்கள வையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 242. அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 26 தான் (10.2 சதவிகிதம்).

இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில்கூட இதைவிட பன்மடங்கு பெண்களின் சதவிகிதம் அதிகமாகும். வங்கதேசம் 65ஆம் இடத்தில் இருக்கிறது (18.6 சதவிகிதம்).

பாகிஸ்தானைவிட 47 இடங்களும், நேபாளத்தைவிட 80 இடங்களும் இந்தியா பின் தங்கியுள்ளது.

சக்திக்குப் பெண் கடவுள், கல்விக்குப் பெண் கடவுள், செல்வத்துக்குப் பெண் கடவுள் என்று கட்டிக்கொண்டு அழும் பாரதப் புண்ணிய பூமியில்தான் பெண்கள் இந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

33 சதவிகிதம் இடங்களில் நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்கள் தேர்வு செய்யப்படு வதற்கே ஆயிரம் ஆயிரம் எதிர்ப்புகள் - குறுக்குச்சால்கள்!

நாட்டை வழி நடத்திச் செல்ல வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களே பெண்களுக்கு வழிவிட மறுக்கிறார்கள்.

இந்தத் தடைக்குக் காரணமானவர்கள் கட்சிகளைக் கடந்த ஆண்கள் என்பதுதான் மிகவும் முக்கியமான உண்மையாகும்.

கட்சிகளைக் கடந்து பெண்கள் இந்தப் பிரச் சினையைக் கையில் எடுத்துக் கொள்ளாதவரை இதற்குத் தீர்வு காண்பது முயற்கொம்பே!

நாட்டில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கான குழு 1974இல் அமைக்கப்பட்டது. மத்திய கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகத்திடம் அந்தக் குழுவால் அளிக்கப்பட்ட பரிந்துரையில் ஒன்றுதான் - நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

1993இல் ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பகுதி இடங்களை ஒதுக்கிட வகை செய்யும் 73 மற்றும் 74 ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

1996 செப்டம்பர் 12 அன்று தேவகவுடா பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவை களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களுக்கு வகை செய்யும் 81ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

1998இல் வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது 84ஆம் அரசியல் சட்டத்திருத்த மசோதாவாக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

மீண்டும் 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடைசியாக 2010இல் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா மாநிலங் களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டு விட்டது.

ஆனால் மக்களவை இடம் கொடுக்கவில்லை. காரணம் என்ன? உள் ஒதுக்கீட்டுடன் கூடிய இடஒதுக் கீட்டை அளிப்பதற்கு என்ன தயக்கம்? சமூகநீதியை ஆதரிக்கும் கட்சிகள்கூட இந்தத் திசையில் சிந்திக்காதது ஏன்? இடதுசாரிகள் ஏன் இந்தத் திசையில் பார்வையைச் செலுத்தக் கூடாது?

உள் ஒதுக்கீடு கேட்பவர்களால்தான் இந்தச் சட்டம் நிறைவேறாமல் இருக்கிறது என்று திசை திருப்பப் பார்க்கிறார்கள். அது அல்ல உண்மை. இந்தச் சட்டம் எந்த வகையிலும் நிறைவேற்றப்படக் கூடாது என்று எண்ணு கின்ற மனோவியாதிக்காரர்களின் பிரச்சாரம் இது. ஊடகங்களும் பார்ப்பனர்களின் கைகளில் இருப்பதால், மனுவாத சிந்தனையோடு பிரச்சினையை அணுகு கிறார்கள். எல்லாக் கட்டுகளையும் உடைத்தெறிய ஒடுக் கப்பட்ட பெண்கள் வீதிக்கு வந்தால்தான் வழி பிறக்கும் - இது தந்தை பெரியார் காட்டும் அறிவு வெளிச்சமாகும்.

http://viduthalai.in/new/page-2/5179.html 

திருநீற்று மோசடி

(எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. 24.6.1928 குடிஅரசு ஏட்டிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது. - ஆ.ர்)

விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-
நீறு புனைவார் வினையை
நீறு செய்தலாலே
வீறுதனி நாமமது
நீறென விளம்பும்
சீறு நரகத்துயிர்
செலாவகை மருந்தாய்க்
கூறுடைய தேவிகையில்
முன்னிறை கொடுத்தார்.

இதன்பொருள்:- திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒருமருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.

சிவபுராண புளுகு

கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது. அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவபுராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பாவத்திற்குப் பரிகாரம்

தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேசவாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத்துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே. இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன்றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ!

அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும்போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?

http://viduthalai.in/new/page-7/5215.html 

கடவுள்

1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.


2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.

3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர்களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்கு கிறார்கள்.

4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.

5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேர்களே படித்திருக்கின்றார்கள்.

6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர்கள் படித்திருக்கிறார்கள்.

7. கோயில்கள் சாமிக்காக கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக் கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாக்கவும் கட்டப்பட்டதாகும்.

8. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.

9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது.
ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக் கின்றான்.

10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

http://viduthalai.in/new/page-7/5214.html 

Wednesday, March 9, 2011

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு இடமில்லை

இந்தியா முழுமையும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்திடும் முடிவை அகில இந்திய மருத்துவக் குழு தன்னிச்சையாக அறிவித்தது.

தொடக்கத்தில் அந்த முடிவுக்குப் பச்சைக் கொடி காட்டிய மத்திய அரசு- தி.மு.க. ஆளும் தமிழ்நாடு அரசு மற்றும் சில மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போர்க்கொடி உயர்த்தின.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டும் விட்டது.

இந்த நிலையில், மத்திய மருத்துவக் குழு உச்சநீதிமன்றம் சென்றது. மத்திய அரசு புதிய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. மாநிலங்களைக் கலந்துகொண்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறியது. இந்த வழக்கில் தி.மு.க. அரசும் தன்னை இணைத்துக் கொண்டது.

மத்திய மருத்துவக் குழுவுக்கு அதிக அதிகாரமா? மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா? என்ற கேள்விக்கிடையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களும் தான்.

அரசுக்கு மேலாக சில குழுக்கள் இருந்துகொண்டு மேல் வருண மனப்பான்மையுடன் நடந்துவருகின்றன. மக்களுக்கு நேரடியாகத் தொடர்பு கொள்ளவேண்டியதும், பதில் சொல்ல வேண்டியதும் அரசுதானே தவிர, மருத்துவக் கவுன்சில் போன்ற அமைப்புகள் அல்ல - அவர்கள் கொழுத்த சம்பளத் தைத் தின்றுகொண்டு குளிர்பதன அறையில் சொகுசான அனுபவத்தில் திளைக்கக் கூடியவர்கள்.

நியாயமாக இதுபோன்ற குழுக்களில் கூட அனைத்துப் பிரிவினருக்குமான பிரதிநிதித்துவம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பிரதமருக்கு ஆலோசனை கூறிடக் குழு ஒன்று உண்டு (முடிறடநனபந ஊடிஅஅளைளடி) அதில் பார்த்தாலும் சமூகநீதி என்றால், இளக்காரமாகப் பார்க்கும் மெத்தப் படித்த பேர்வழிகள்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அனுமதி வழங்காத நிலையில், மருத்துவக் கவுன்சில் தானடித்த மூப்பாக நடந்துகொள்வது சரியானதுதானா?

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசுகளே மருத்துவக் கல்லூரிகளை நிதி நெருக்கடியையும் சந்தித்து நடத்திக்கொண்டு இருக்கின்றன.

அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்ப மாணவர்களைத் தேர்வு செய்வது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பொறுப்பாகும். இதில் தலையிடுவதற்குத் தார்மீக ரீதியில் எந்தவித உரிமையும் மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது.

மத்திய தொகுப்பு என்று கூறி, பிற மாநிலங்களில் உள்ள மொத்த எண்ணிக்கையில் (எம்.பி.பி.எஸில்.) 15 சத விகிதத்தை எடுத்துக் கொள்கிறது. முதுநிலைப் படிப்புக்கோ 50 விழுக்காட்டைக் கபளீகரம் செய்து கொள்கிறது.

ஒட்டகத்தைக் கூடாரத்துக்குள் நுழையவிட்டால், அதற்குப் பிறகு கூடாரமே அதன் கைக்குப் போய்விடும்.

மாநில மருத்துவக் கல்லூரிக்கான இடங்களில் சில சதவிகிதங்களை மாநில அரசுகள் கொடுக்கப் போய், கடைசி யில் உள்ளதும் போச்சே என்று கைபிசையும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இந்தத் தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுபட கல்வி என்பது பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படவேண்டும். நெருக்கடி நிலை காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி பொதுப் பட்டியலுக்குக் கவர்ந்து செல்லப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு கிடையாது என்று அறுதியிட்ட பின்பு, சென்னை உயர்நீதி மன்றமும் அந்தச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்தபின், வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டில் திணிக்க இவர்கள் யார் என்பதுதான் முக்கியமான கேள்வியாகும்.

கடந்த திங்களன்று உச்சநீதிமன்றம் நுழைவுத் தேர்வு குறித்து ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்புக் குறித்துத் தொலைக்காட்சிகளில் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கும், நேற்று நாளேடுகளில் வெளிவந்த தகவலுக்கும் முரண்பாடாக உள்ளது.

நுழைவுத் தேர்வை நடத்துவதா? கூடாதா? என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும் என்று உச்சநீதிமன் றம் சொன்னதாகத் தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன. நேற்று காலை ஏடுகளின் சேதியோ நுழைவுத் தேர்வு நடத்திட உச்சநீதிமன்ற உத்தரவு என்று வெளிவந்துள்ளது.

இதற்கிடையே நேற்று பிற்பகல் - நுழைவுத் தேர்வு கிடையாது; கல்வித் துறை அறிவிப்பு என்று தொலைக் காட்சிகள் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டன.

இன்று காலை செய்தியோ வேறுவிதமாக உள்ளது. நுழைவுத் தேர்வு நடத்திட மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இருந்தால் நடத்தலாம். அப்படிக்கில்லாமல் மத்திய அரசின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுவதாகக் கருதினால் மத்திய அரசின் அறிவுரையைக் கேட்டு செயல்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளதாகச் செய்தி வெளியாகி யுள்ளது.

இது என்ன தீர்ப்பு?

இதைவிடகுழப்பமான உத்தரவைக் கண்டுபிடிப்பது கடினமே!

எது எப்படியாக இருந்தாலும் நுழைவுத் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இடம் கிடையாது - கிடையவே கிடையாது. காரணம், சமூகநீதிக் கதிரவன் தந்தை பெரியார் உதித்த மண் இது. அவர் கண்ட திராவிடர் கழகம் சமூகநீதி வாளினைக் கையில் இன்றளவும் ஏந்தி நிற்கும் பூமியாகும் - எச்சரிக்கை!

http://viduthalai.in/new/page-2/5040.html

மோடியின் பதில் அறிவுக்குப் பொருந்தாதது! தெகல்காவின் படப்பிடிப்பு

விசாரணை அலுவலர் மேலும் வற்புறுத்திக் கேட்டபோது, தவறை அதிகாரிகள் மீதும், காவல்துறை அதி காரிகள் மீதும் மோடி தள்ளிவிட்டார்.

மாநில புலனாய்வுத் துறைக்குக் கிடைத்த துப்புத் தகவல்கள் அரசுக்கு அனுப்பப்பட்டனவா? அப்படியானால் எப்போது, யாரால் அனுப்பப்பட்டது? என்று மல்ஹோத்ரா கேட்டார்.

ராம் மகாயக்ஞத்துக்காக குஜராத் திலிருந்து சில ராம் சேவகர்கள் அயோத்திக்குச் செல்வதாக எனக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்களின் பயணத் திட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இதுபற்றி தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் பணி காவல் துறை அதிகாரிகள் மற்றும் உள்துறையைச் சார்ந்தது என்று மோடி பதிலளித்தார்.
மாநில புலனாய்வுத் துறை கரசேவ கர்கள் பயணத்தைப் பற்றி எந்தக் கடிதத்தையாவது அனுப்பியதா? அப்படி யானால் எப்போது, யாருக்கு அனுப்பப் பட்டது? மல்ஹோத்ரா மறுபடியும் அவரைக் கேட்டார்.

மாநிலப் புலனாய்வுத் துறையிலி ருந்து இது போன்ற கடிதம் எதுவும் வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரி யாது. அப்படி கடிதம் ஏதேனும் வந்திருந் தால் அது அத்துறையில் இருக்க வேண்டும் என்று மோடி பதிலளித்தார்.

ஒவ்வொரு நாள் காலையிலும் முதலாவதாக ஒரு முதலமைச்சர் தவ றாமல் செய்வது மாநிலப் புலனாய்வுத் துறைத் தலைவரை சந்தித்து துப்பறியப் பட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்வது தான். எனவே, மோடியின் பதில் அறிவுக்குப் பொருந்தாததாகத் தோன் றுகிறது. தனது அரசின் விவகாரங் களில் ஓர் இறுக்கமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஒரு திறமை மிகுந்த நிருவாகி என்று கூறப்படு பவரின் தோற்றத்தை அது சிதைப்ப தாகவும் இருக்கிறது.

இரு முறை இடைவெளி விட்டு, விடியற்காலை 1 மணி வரை மோடியிடம் கேள்வி கேட்கும் பணி தொடர்ந்தது. மொத்தமாக 71 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகளைத் தவிர்த்த மற்ற சில முக்கியமான கேள்விகள் இங்கே கீழே அளிக்கப்பட்டுள்ளன.

கேள்வி: கோத்ரா ரயில் எரிப்பு முன்னதாக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும், இதன் பின்னணியில் பாகிஸ் தானின் அய்.எஸ்.அய். உள்ளது என்றும் நீங்கள் அறிவித்தீர்களா? அறிவித் திருந்தால், அதற்கு அடிப்படை என்ன?
மோடி: சட்டமன்றத்தில் இது போன்ற சொற்கள் எதையும் நான் கூறவில்லை. ஊடகங்கள் என்னிடம் சில கேள்விகள் கேட்டன; ஆனால், விசாரணை இன்ன மும் நடந்து வருவதால், அதைப்பற்றி எதுவும் சொல்ல முடியாது என்றுதான் நான் கூறினேன்.

கேள்வி: கோத்ரா ரயில் எரிப்பு விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அகமதாபாத்துக்குக் கொண்டு வருவது என்ற முடிவை யார் எடுத்தார்கள்? எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது?

மோடி: இறந்தவர்களின் உடல் களை அகமதாபாத்துக்குக் கொண்டு செல்வ தென்ற முடிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், அங்கு வந்திருந்தவர்களுடன் கலந் தாலோசித்தபின் எடுக்கப்பட்ட கூட்டு முடிவாகும். பதற்றம் அதிகமாகக் கூடாது என்பதற்காக அந்த உடல்களை அகமதாபாத் புற நகர்ப் பகுதியில் உள்ள சோலா சிவில் மருத்துவமனையில் வைக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தி யிருந்தேன். இறந்தவர்களில் பெரும் பாலோர் அகமதாபாத்தையும், அதற்கு அப்பால் உள்ள இடங்களையும் சேர்ந்த வர்கள் என்பதாலும், அவர்களது உறவி னர்கள் உடல்களை அடையாளம் காட்ட வும், பெற்றுக்கொள்ளவும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த கோத்ராவுக்கு வரவேண்டாம் என்பதாலும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

கேள்வி: அப்போது மாவட்ட ஆட்சிய ராக இருந்த ஜெயந்தி ரவி இறந்தவர் களின் உடல்களை அகமதாபாத்துக்குக் கொண்டு செல்வதற்கு ஆட்சேபணை தெரிவித்தாரா?

மோடி: இறந்தவர்களில் பெரும்பா லோர் அகமதாபாத் மற்றும் அதற்கு அருகில் உள்ள இடங்களைச் சேர்ந்தவர் கள் என்பதால் அவர்களது உடல்களை சோலா சிவில் மருத்துவமனைக்கு எடுத் துச் செல்ல கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து கோத்ராவிலேயே இருந்தால், பதற்றம் இன்னும் அதிகமாகும் என்று அஞ்சுவதால், அந்த உடல்களை கோத்ராவிலிருந்து உடனே எடுத்துச் செல்லவேண்டும் என்று மாவட்ட ஆட்சிய ராகவும், மாவட்ட குற்றவியல் நீதிபதி யாகவும் இருந்த ஜெயந்தி ரவி கருத்து தெரிவித்தார்.

கேள்வி: அப்போதைய வி.இ.ப. பொதுச் செயலாளர் ஜெய்தீப் படேலை உங் களுக்குத் தெரியுமா? உங்களை கோத்ராவில் சந்தித்த அவர், இறந்தவர் களின் உடல்களுடன் தானும் அக மதாபாத்துக்குச் செல்ல அனுமதிக் கப்படவேண்டும் என்று கேட்டாரா?

மோடி: அவரை நான் அறிவேன். அவரை கோத்ராவில் சந்தித்ததாக எனக்கு நினைவில்லை. இறந்த வர்களின் உடல்களை அகமதா பாத்துக்குக் கொண்டு செல்ல முடிவு எடுத்தபிறகு, அவற்றை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது பற்றி முடிவெடுப்பது மாவட்ட நிருவாகத்தின் பொறுப்பு. உடல்கள் எப்போது, எப்படி அகமதாபாத்தை வந்தடைந்தன என்பது போன்ற விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. என்றாலும், இறந்தவர்களின் உடல்கள் மாவட்ட நிருவாகம், கால்துறை அதிகாரிகள், மருத்துவ மனை அதிகாரிகள் ஆகி யோரின் பாதுகாப்பில் இருந்தன.

கேள்வி: 27.2.2002 அன்று கோத்ரா விலிருந்து திரும்பிய பிறகு, அப்போது நிலவிய சட்டம், ஒழுங்கு சூழ்நிலையைப் பற்றியும் , கோத்ரா ரயில் எரிப்பினால் ஏற்படக்கூடிய கடும் விளைவுகளைப் பற்றியும் பரிசீலனை செய்யவும் ஒரு கூட்டத்தைக் கூட்டினீர்களா?
மோடி: அன்று வீட்டுக்குத் திரும் பியவுடன், சட்டம்- ஒழுங்கு பற்றிய ஒரு கூட்டத்தினைக் கூட்டினேன். அக் கூட்டத்தில் நிருவாக, உள்துறை, காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நன்றி: தெகல்கா 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
http://viduthalai.in/new/page-2/5042.html

Tuesday, March 8, 2011

பெண்களே, புதிய உலகினைப் படைக்க பெரியார் பாதையில் பயணம் செய்யுங்கள்-கி. வீரமணி

உலக மகளிர் நாளாகிய இன்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று உலக மகளிர் நாள் - என்பது மகளிர் உரிமை பற்றி வெறும் பெண்களுக்கான புகழுரை, சம்பிரதாயமாக வாழ்த்துகளைக் கூறுதல் என்ப தோடு, முடிந்துவிடக் கூடாது.

உண்மையில் உலகின் சரி பகுதி மக்கள் தொகையான மகளிர் - மனிதத் தன்மையோடு, சம உரிமை சமவாய்ப்புடன் நடத்தப்படுகிறார்களா இந்த 21ஆம் நூற்றாண்டில்கூட என்ற சுயசிந்தனைப் பரிசோதனைக் கேள்விகளை எழுப்பி, அதற்குத் தக்க விடைகளை - விடியலை செயல் வடிவத்தில் காணுவதே சரியான பகுத்தறிவாளர் அணுகு முறையாகும்.

பெண்ணுரிமைக்காக பெரியார்போல் போராடியவர் உண்டா?

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களைப் போன்று பெண்ணுரிமைக்குப் போராடி வெற்றி கண்டு, பழஞ் சமுதாயத்தைப் புரட்டிப்போட்ட புரட்சியாளர் உலக வரலாற்றில் எவருமிலர்.

வரலாற்றில் அது இருட்டடிக்கப்பட்ட பகுதியாகும்! இன்னமும் பெண்ணாகப் பிறந்த அந்த மனித ஜீவனுக்கு வாழ்வுரிமை கிடைக்காமல், தாய்ப்பாலுக்குப் பதில் கள்ளிப்பாலும் எருக்கம்பாலும் தந்து கொல்லப்படும் நிலைதானே!

கருணைக் கொலையைக்கூட மறுக்கும் நமது நீதி அமைப்புகள் - இந்தப் பெண் குழந்தை கருவிலேயே அழிக்கப்படுவதைக்கூட (சட்டத்தின் தவறான பயன்பாட்டினை) தடுக்க முன் வருவ தில்லையே!

என்னே கொடுமை!

பாலியல் கொடுமைகள், வன்புணர்ச்சி, வக்கிரச் செயல்கள் பிஞ்சுகளைக்கூட விட்டு வைக்காத நஞ்சு பாய்ச்சிடும் நரிமனங் கொண்டோரிடமிருந்து நாரியர் பாதுகாக்கப்படாத நிலை.

தந்தை பெரியார் எதையும் தனது வாழ்விணையர் மூலமே துவக்கி, செயல் முறை விளக்கமாக்கி, செல்வாக்கு பெற்றனர். போராட்டக் களம், சிறைச் சாலை இவற்றை நோக்கி அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் ஆகியோரை அனுப்பிடத் தவறவில்லையே!

படித்த பெண்களுக்கு இரு மடங்கு வேலை

படித்த பெண்கள், இன்னும் இரு மடங்கு பணி செய்வோராகவே உள்ளனர். அலுவலகம், வீடு, கணவர், குழந்தை வளர்ப்பு என்பனபோன்ற சுமை களை முதுகொடியும்வரை செய்துவிட்டு, இயந்திரங் களாகிய பின்பும், சுகமான வாழ்க்கையைத் தேடும் சுமைதாங்கிகளாகியல்லவா வாழுகிறார்கள்?

இது புறத்தோற்றத்தில் வளர்ச்சி - நம் நாட்டு அகத்தில் வீழ்ச்சி - என்ன செய்வது!

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற பண்புகள் பற்றி பெண்ணுக்கு இலக்கணம் வகுத்தோர், அதுபோல ஆணுக்கு வைத்ததுண்டா? பயிர்ப்பு என்றால் அருவருப்பு, அசிங்கம், அசுத்தம் என்று தமிழ்ப் பேரகராதிகள் கூறுகின்றனவே.

அதன் பின்பும் பெண்களுக்கு அக்குணநலன்கள் தேவையா? என்ற கேள்வியைக் கேட்டவர் பெண் ணியப் புரட்சியின் இமயமான ஈரோட்டு ஏந்தல் தானே!

எனவே, உண்மையான விடுதலை நகை நட்டு, பட்டுச் சேலை படாடோபம், ஒப்பனைகள் நிறைந்த ஒய்யார வாழ்வில் இல்லை என்பதை அன்னை நாகம்மையாரும் அன்னை மணியம்மையாரும் வாழ்ந்தே காட்டினார்கள்! வசதி படைத்தவர்களிடம் எளிமை குடியேறும் போதுதான் அது அதன் உண்மை மதிப்பைப் பெறுகிறது!

பெரியார் கூறுவதைக் கேளுங்கள்!

எனவே மகளிர் தோழியர்களே, நீங்கள் தந்தை பெரியார் கூறியபடி,
(1) அலங்காரப் பொம்மைகளாகவோ
(2) வெறும் சமையல் கருவிகளாகவோ
(3) பிள்ளை பெறும் இயந்திரங்களாகவோ வாழாமல், மனித சமுதாயத்தின் மான வாழ்விற்கு, உரிமை வாழ்விற்கு, உறுதி கூறும் புதியதோர் உலகு படைக்கப், புரட்சியாளர்களாகப் புறப்பட சூளுரைத்து,

சுயமரியாதைபுரியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!

மனிதம் ஆளட்டும்! மடமை மாளட்டும்!

இது இந்நாளில் எம் செய்தி!

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

http://viduthalai.in/new/page1/4973.html

மகளிர் நாள் சிந்தனைகள்!

மார்ச் 8 - உலகம் முழுவதும் மகளிர் உரிமை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் நியூயார்க் நகரில் 1857 மார்ச்சு 8ஆம் நாள் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமையைக் கண்டித்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1903ஆம் ஆண்டிலும் அதே மார்ச் 8ஆம் நாள் அதே  நியூயார்க் நகரில் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் கூடுதலாக பெண்கள் தங்களுக்கு வாக்குரிமை தேவை என்பதை வலியுறுத்தினர்.

1910ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் கிளாரா ஜெட்சின் என்பவர் தலைமையில் கோபன்ஹேகனில் சோசலிசப் பெண்களின் இரண்டாவது பன்னாட்டு மாநாடு நடை பெற்றது. அந்த மாநாட்டில்தான் மார்ச் எட்டை உலக பெண்கள் நாளாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபகுதி அளவு பெண்களாக இருந்து வந்தனர். அண்மைக் காலமாக அதில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதற்குக் காரணம்  பெண்கள் என்றால் வீட்டுக்கும், நாட்டுக்கும் சுமை என்கிற கருத்தோட்டமாகும்.

ஏன் பெண்கள் அவ்வாறு சுமையாகக் கருதப்படு கிறார்கள்?  ஆண்களுக்கு உரிய அத்தனை உரிமைகளும், வாய்ப்புகளும் பெண்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் எப்படி சுமையாக இருக்க முடியும்?

கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, சிவில் உரிமைகள் எல்லாம் ஆணுக்கு நிகராகப் பெண்களுக்கு இருந்திருக்குமேயானால், பெண்களால் வீட்டுக்கும், நாட்டுக்கும் பெரும் நன்மைகள் கிட்டியிருக்குமே!

அதற்கான வாய்ப்புகளைப் பெண்களுக்குக் கொடுக்காமல், ஆண்களைச் சார்ந்தேதான் எல்லா நிலைகளிலும் பெண்கள் இருந்தே தீர வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தால், கண்டிப்பாக ஒரு சுமையான பண்டமாகத்தான் பெண்கள் இருக்கக்கூடிய நிலை ஏற்படும்.

ஆண் - பெண் ஏற்றத் தாழ்வு என்பது சற்று மாறு பாட்டாலும் பொதுவாக உலகெங்கும் ஆண் ஆதிக்க நுகத்தடியில் பெண்கள் பூட்டப்பட்டு இருக்கின்றனர் என்பது உண்மை.

இதில் மதங்களின் பங்கு மிக அதிகமாகும். பிறப் பிலேயே பெண்கள் அடிமைத் தன்மை கொண்டவர்கள் என்று அனேகமாக எல்லா மதங்களுமே சித்திரிக்கின்றன.

பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று இந்து மதத்தின் பெருமைக்கெல்லாம் கிரீடமாகக் கூறப்படும் கீதை கூறுகிறது.

சமூகத்தில் நிலவும் இந்த அடிப்படைச் சிந்தனை ஓட்டத்தின் ஊற்றுக் கண்களை நிரந்தரமாக மூடச் செய்யாமல் பெண்ணுரிமை என்பது முயற்கொம்பே!

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள்தான் பெண்ணடிமைத் தனம் என்ற கட்டை உடைக்கக் கூடியவை!

தந்தை பெரியார் அளவுக்குப் பெண்ணுரிமைபற்றிச் சிந்தித்தவர்களோ, பேசியவர்களோ, எழுதியவர்களோ யாரும் கிடையாது.

அதற்கு அடுத்த நிலையில் களத்தில் நின்று போராடியவர்; சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்திற்குத் தனக்குப்பின்னால் தலைமையேற்க ஒரு பெண்ணை தந்தை பெரியார் உருவாக்கிச் சென்றதும் இந்த இடத்தில் எண்ணத் தகுந்ததாகும்.

அந்தத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களும் தலை சிறந்த தலைமையை வெளிப்படுத்திச் சென்றார்கள்.

வாய்ப்பே கொடுக்காமல் பெண்கள் என்றால் பலகீனமானவர்கள் என்ற ஒரு சிந்தனை ஓட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த எண்ணத்தை உடைத்துத் தரைமட்டமாக்க வேண்டும்.

தோற்றத்தில்கூட ஆண் - பெண் என்று தெரியாத நிலையும், பெயரை வைத்துக்கொண்டுகூட பாலினத்தைத் தெரிந்து கொள்ளக்கூடிய நிலை இருக்கக் கூடாது என்றும் தந்தை பெரியார் சொன்னதெல்லாம் எத்தகைய உயர் எண்ணங்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பல உரிமைகள் பெண்களுக்குக் கிடைத்திருப்பது உண்மை. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களும், அவர் கண்ட இயக்கமும்தான்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே பெண்களுக்குச் சொத்துரிமை என்ற சட்டம் 1989-90-களில் தமிழ்நாட்டில்  இயற்றப்பட்டது.

பெண்களுக்கு வாக்குரிமை என்பது நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் கிடைத்தது.

பெண்கள் வளர்ச்சிக்காக பெண்களின் பெயர்களை முன்னிலைப்படுத்தி, பெண்களுக்கான நலவாழ்வுத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துவதும் திராவிட இயக்கமான மானமிகு கலைஞர் அவர்களின் தலைமை யிலான திமுக ஆட்சியாகும்.

நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில்கூட இந்தக் கண்ணோட்டத்தில் பெண்கள் செயல்படுவார்கள் -  செயல்படவும் வேண்டும்.

பெண்கள் மத்தியில் திமுக அரசு செய்துள்ள சாதனைகள், முக்கியமாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். பெண் உரிமைகளை முன்னிறுத்தக் கூடிய ஆட்சியே நாட்டுக்குத் தேவை!

http://viduthalai.in/new/page-2/4977.html

உலக மகளிர் தின வாழ்த்து செய்தி-முதல் அமைச்சர் கலைஞர்

``தமிழக பெண்கள் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் பெற வேண்டும்`` என்று முதல்-அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள, உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்ப தாவது:-

மகளிர் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்திடும் உலக மகளிர் நாள் விழா 8-3-2011 அன்று மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்க நாட்டில், நியூயார்க் நகரில் நெச வாலைகளில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணி நேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8ஆம் நாள். பின்னர் அந்நாளே உலக மகளிர் நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக் கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

தந்தை பெரியாரும் - அறிஞர் அண்ணாவும்


தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியா ரும், பேரறிஞர் அண்ணாவும் அறிவுறுத்திய சமத் துவ, சமதர்மக் கொள்கைகளின்படி, பெண்கள் சமுதாயம் ஆண்களுக்கு இணையாக முன்னேற்றம் காண்பதற்குக் கல்வியறிவு பெற்று, வேலை வாய்ப்புகள் எய்தி, பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காகத் தி.மு.க. அரசு இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டிடும் வகையில் பல்வேறு பெண்கள் நலத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.

1973இல் இந்தியாவிலேயே முதல் முறையாக காவல் துறையில் மகளிர் பணி நியமனம் செய்யப் பட்டு; மகளிர் பலர் இன்று காவல் துறையின் உயர் அதிகாரிகளாக விளங்குகின்றனர்.

மகளிர் வளர்ச்சித் திசையில் திமுக ஆட்சி

1989இல் தொடங்கப்பட்ட மகளிர் திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 682 மகளிரை உறுப்பினர்களாக கொண்ட ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 493 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மூலம் 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கி கிராமப்புற மகளிர் பொருளாதார முன்னேற்றம் காண வழி வகுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பத்தாம் வகுப்புவரையேனும் படிக்க வேண்டும் என்பதற்காக 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989இல் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1996இல் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில்; 2001இல் பொறுப் பேற்ற அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை முடக்கி வைத்திருந்தது.

ஆனால், ஏழை - எளிய மகளிரின் முன்னேற்றம் கருதி தி.மு.க. அரசு 2006இல் பொறுப்பேற்றபின் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி திட்ட நிதியை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதுடன், 2008இல் 20 ஆயிரம் ரூபாய் எனவும், 2010இல் 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி கடந்த அய்ந் தாண்டுகளில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 538 ஏழை மகளிர் திருமணங்களுக்கு 832 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்கி மகளிர் நலம் காத்துள்ளது.

ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டுமெனக் கருதி 1989இல் அறிமுகப்படுத்திய ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம் 2007இல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மகளிர் பயனடைகின்றனர்.

இவைமட்டுமல்லாமல், 1990இல் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிர்க்கு 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்; அதே ஆண்டில் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குத் சமஉரிமை அளித்திடும் தனிச் சட்டம்; 1996இல் உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்;

2006இல் தி.மு.க. அரசு பொறுப்பேற்றபின் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம்;

டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி யுதவித் திட்டத்தின்கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண் களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம்; 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் என்பன உள்பட பல்வேறு திட்டங்களைப் புதிது புதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தி பெண்கள் சமுதாயம் முன்னேற தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடுகிறது.

பெண்கள் மேலும் ஏற்றம் பெறும்வகையில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் அவர் களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்திட மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது.
வாழ்த்துகள்
இந்நிலையில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நிகழ்ந்திடவும், தமிழக மகளிர் அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் எய்திடவும் இந்நன்னாளில் எனது உளமார வாழ்த்துகிறேன்.
- இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் முதல்-அமைச்சர் கலைஞர் கூறியுள்ளார்.
http://viduthalai.in/new/page-7/5001.html

Monday, March 7, 2011

அபசகுனமும்,துக்ளக் சோ வின் பதட்டமும்

அழகிரியும் ஸ்டா லினும் ராவணன் - கும்ப கர்ணன் மாதிரி வாழட் டும்! என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் - திமுக தலைவர் மானமிகு மாண் புமிகு கலைஞர் அவர்கள் குமுதம் பேட்டியில் கூறி விட்டாராம். பொறுக் குமா துக்ளக் திருவாளர் சோ ராமசாமி அவர்களுக்கு?

அட்டைப் படத்துக்கு ஒரு கார்ட்டூனுக்கான சமாச்சாரம் கிடைத்து விட்டது - பிழைக்க வேண்டும் அல்லவா!

துக்ளக்கை நடத் துவதால் எந்தப் பலனும் இல்லை என்று எப்படிச் சொல்வது? எனக்குப் பிழைப்பு நடந்திருக்கிறதே!

(துக்ளக் 24.10.2007 பக்கம் 26)

என்ன எழுதுகிறார்?

இந்த நேரத்திலே இப்படி அபசகுனமா வாழ்த் தனுமா? ராவணன் - கும்பகர்ணன் மாதிரி ஆட்சியை இழக்கப் போற மோன்னு கவலையா இருக்குது (துக்ளக் கார்ட்டூன் 9.3.2011)

கும்பகர்ணன் - இரா வணன் என்று கலைஞர் அவர்கள் கூறியது எந்தப் பொருளில்? சோ அதனை திசை மாற்றிக் கூறுவது எந்தப் பொரு ளில்?

பெரிய விவாதப் புலி என்று பார்ப்பனர்கள் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு நிலாச் சோறு ஊட்டுகிறார்களே, கொஞ்சுகிறார்களே, அந்த அறிவாளியின் அறிவுத் திறன் எந்தத் தரத்தில் உள்ளது என்ப தற்கு இது ஒன்று போதுமே!

மணமக்களைப் பார்த்து இராமனும் சீதை யும் போல வாழவேண்டும் என்று சோ திருக்கூட்டம் சொல்லுகிறதே - அதற் கும் இதுபோல வியாக் கியானம் செய்ய முடியுமே!

அட பாவமே, ஒரு நல்ல மங்கலகரமான நேரத்தில் இப்படி அபச குனமாகப் பேசலாமா?

14 வருஷம் காட்டில் திரிந்து வாழ வேண்டிய பரிதாபத்துக்கு ஆளான வர்களைக் கூறியா ஆசீர்வதிப்பது?

கணவனை விட்டுப் பிரிந்து, மாற்றானால் கடத்தப்பட்டு, அல்லல் பட்ட ஒரு பெண்தானா போயும் போயும் ஆசீர் வாதத்துக்குக் கிடைத் தார்?

தனது கர்ப்பம் கண வனால் சந்தேகிக்கப் பட்டு, அதன் காரண மாகக் காட்டுக்குள் கொண்டு போய் விடப் பட்ட பெண்தானா இவர் களுக்குக் கிடைத்த உதாரணம்?

கடைசியில் ராமன் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்.

சீதை பூமி பிளந்து தற்கொலையானாள் என்று தானே வால்மீகி சொல்கிறார்?

இந்த மணமக்களும் தற்கொலை செய்து கொண்டுதானா சாக வேண்டும்? இப்படி அபச குனமா ஆசீர்வதிக்க லாமா? சீ... ச்சீ, இவர் களுக்கு ஏன் இந்த அற்பப் புத்தி? என்று கேட்டால் திருவாளர் சோ ராமசாமி தன் மூஞ் சியை எங்கே கொண்டு போய்ப் பதுக்கிக் கொள் வார்?

- மயிலாடன்
http://viduthalai.in/new/home/archive/4678.html

மகரஜோதி மோசடி

சபரிமலையில் தோன் றுவதாகக் கூறப்படும் மகரஜோதி என்பது இயற்கையானதல்ல - அய்யப்பக் கடவுளின் சக்திக்கும் அதற்கும் எவ் வித சம்பந்தமும் இல்லை. கேரள மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் சட்டியில் சூடத்தைக் கொளுத்திக் காட்டுகிறார்கள். அதனை மகர ஜோதி என்று நம்பிப் பக்தர்கள் சேவிக்கிறார்கள் என்ற உண்மை அம்பலமாகி விட்டது.

கேரள மாநிலம் பகுத் தறிவாளர்கள் மகரஜோதி காட்டப்படும் அந்தப் பொன்னம்பல மேட்டுக்கே சென்று உண்மையைக் கண்டுபிடித்து மக்களுக் குத் தெரிவித்து விட் டார்கள். அவர்கள் கண்டுபிடித்த அந்தத் தகவல்கள் பிளிட்ஸ் (16-1-1982) ஏட்டில் வெளி வந்தது. இல்லஸ்ரேட்டட் வீக்லி ஏடும்(1988) அம்பலப்படுத்திவிட்டது.

கேரளமாநில முதல மைச்சர் ஈ.கே.நாயனாரும் ஒப்புக் கொண்டார். ஆனாலும் அதில் தலை யிடமாட்டோம் என்று கூறிவிட்டார்.

இப்பொழு துள்ள முதல் அமைச்சர் அச்சுதானந்தனும், உண்மை எப்படி இருந் தாலும் இதில் அரசு தலையிடாது; மக்களின் மத நம்பிக்கையில் குறுக் கிடப் போவதில்லை என்று ஒரு மார்க்ஸிஸ்டு முதல் அமைச்சரே கூறி விட்டார்.

இதற்கிடையே இந்தப் பிரச்சினையைத் திசை திருப்பினார்கள்.

மகர விளக்கு என்று கூறப்படுவது பொய்தான்; மனிதர்கள் செய்யும் ஏற்பாடுதான்; ஆனால் மகரஜோதி என்பது வேறு - அன்றைய தினம் வானில் தோன்றக் கூடி யது என்று சபரிமலைக் கோயில் மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரு கூறினார்.

சரி, அதாவது உண்மையா? மனிதர்கள் ஏற்றும் மகர விளக்கு அல்லாமல் அன்றைய தினம் அவர் கூறும் மகர ஜோதி தனியாக வானத் தில் தோன்றுகிறதா? இந்தக் கேள்விக்கு இது வரை பதில் கிடையாது.

இது பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் (கொலைக் குற்றத்தில் பிணையில் நடமாடிக் கொண்டு இருப்பவர்) ஜெயேந்திர சரஸ்வதி யிடம் காமகோடி என்னும் ஆன்மிக மாத (மார்ச் 2011) இதழ் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது.

கேள்வி: ஸ்ரீ சபரிமலை யில் தோன்றும் மகர ஜோதி என்பது அன்றைய தினம் வானில் தோன்றக் கூடிய பிரகாசமான நட் சத்திரம் ஆகும். ஆனால் மகரவிளக்கு என்பது பொன்னம்பல மேட்டில் காலம் காலமாக ஏற் றப்படும் தீபம் ஆகும்.

ஆகவே பக்தர்களின் நம்பிக்கையைக் குலைக் கும் விதத்தில் யாரும் செயல்படக்கூடாது என்று  ஸ்ரீ சபரிமலை கோயில் மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரு குறிப்பிட்டுள்ளது பற்றி?

ஜெயேந்திரர் பதில்: மகரஜோதி - மகர விளக்கு இரண்டும் ஒன்றுதான்.

(காமகோடி, மார்ச் 2011 பக்கம் 4)

இவர் கூற்றுப்படி மகர விளக்கும், மகர ஜோதி யும் ஒன்றுதான் என்றால் இரண்டும் மோசடி சமாச் சாரங்கள்தானே!

பீம்சிங், இது என்ன குழப்பம்?
- மயிலாடன்
http://viduthalai.in/new/page1/4916.html

தி.மு.க., காங்கிரசால் கேவலமாக நடத்தப்பட்டது-சித்தார்த் கவுதம்

மூத்த பத்திரிகையாளர் ஆசிரியர் குறிப்பு: திரு. சித்தார்த் கவுதம், டில்லியின் மூத்த பத்திரி கையாளர். அரசியல் விமர்சககரும் கூட. அவர் Free Lance எழுத்தாளர் என்ற நிலையில் அவரது தனி இணைய தளத்தில் வெளிவந்துள்ள இந்த கருத்துகள் முழுக்க முழுக்க அவருடைய கருத்துக்கள்.

அரசியல், கட்சி, ஜாதி, மதம் முதலிய உணர்வுகளுக்கு அப்பாற் பட்டு எப்படி தமிழ்நாட்டின் கூட்டணி அரசியல் போக்கைப் பார்க்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டத்தக்கது.

- ஆசிரியர்

2ஜி  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றிய பிரச்சினை எழுந்த நாள் முதல், அண்மையில் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி யது வரை, காங்கிரஸ் கட்சியின் மனப்போக் கினால் வெறுப்படைந்து போன தி.மு.க. இறுதியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததன் மூலம் தனது எரிச்சலைக் காட்டிக் கொண்டது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதற் கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி தொடங் கியபோது, காங்கிரசில் இருந்த பல்வேறுபட்ட குழுக்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமான அளவில் இருந்தன. இப்போதோ அவர்களின் உற்சாகம் படுபாதாளத்தில் வீழ்ந்துவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க.வுக்கு எதிராக  பல அறிக்கைகளை தமிழ்நாடு காங்கி ரசில் உள்ள ராகுல் காந்தி படை தொடர்ந்து வெளியிட்டு அச்சுறுத்தி வந்தது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒற்றுமையைக் குலைப்பது பற்றி அவர்கள் சிறிதும் கவலைப் படவில்லை.

கூட்டணியைப் பலவீனப்படுத் துவதின் மூலம் தாங்கள் ஜெயலலிதாவுக்கு உதவுகிறோம் என்பதை புரிந்து கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை என்பது மட்டுமன்றி,  கூட்டணியின் ஒற்று மையைக் குலைக்கும் பணியை  அவர்கள் பெருவிருப்பத்துடன் செய்தார்கள் என்று கூடக் கூறலாம். தலைமையைத் துதிபாடும் ஒரு கட்சியமைப்பில் இவ்வாறு ஏற்படவே செய்யும்.

பொதுமக்கள் ஆதரவற்ற, கட்சித் தலைமை யினால் நியமிக்கப்பட்ட  உள்ளூர் கட்சிப் பொறுப் பாளர்களினால் டில்லியில் முடிவு எடுக்கும் நிலையில் உள்ளவர்கள் எப்போதுமே தவறாக வழி நடத்திச் செல்லப்பட்டு வந்துள்ளனர்.

தனது லாப்டாப் பகுத்தாய்வு, அறிவியல் கணக்கு ஆகியவற்றில் கைதேர்ந்தவராக வேண்டு மானால் ராகுல் காந்தி இருக்கலாம். ஆனால், மாயாவதி, லாலு போன்ற களத்தில் உள்ள தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்து வெற்றி பெறும் அளவுக்கு அவர் ஒன்றும் திறமையோ அனுபவமோ படைத்தவர் அல்லர்.

இந்த முறை தனது அதிருஷ்டத்தை அவர், நாட்டின் திறமை மிகுந்த அரசியல் வாதிகளில் ஒருவரான தி.மு.க. முதல்வர் மு.கருணாநிதிமீது சோதித்துப் பார்த்தார்.  இந்த முயற்சி காங்கிரசுக்கே கேடு விளைவிப்பதாக ஆகிவிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 90 இடங்களைக் கேட்டது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அவர்கள் 48 இடங்களில் போட்டியிட்டனர்.  குறைந்த பட்ச பொதுச் செயல்திட்டம், கூட்டணி ஆட்சி, தங்களுக்குத் தேவையான தொகுதிகளைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை என்று அவர்களின் தேவைப்பட்டியல் வளர்ந்து கொண்டே போனது.

தேர்தலில் தாங்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடு வோம் என்றும், தேர்தல்கள் நடந்து முடிவுகள் அறிவிக்கப் படுவதற்கு முன்னமேயே தங்களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றும் காங்கிரசார் கருதுவதையே அவர் களது கோரிக்கைகள் காட்டுவனவாக இருந்தன. பகற்கனவு கண்டு கொண்டிருந்த காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டணி பேச்சு வார்த்தைக்காக டில்லிக்கும் சென்னைக்கும்  பறந்து கொண்டிருந்தனர்.

4ஜி தகவல் தொடர்பு வசதிகள் உள்ள ஒரு காலத்தில்   சோனியா காந்தியுடன் பேசுவதற்கு ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏன் டில்லிக்கு நேரடியாகப் போய் வந்தனர் என்பதை நினைத்தால் வியப்பாகத் தான் இருக்கிறது.

ராடியா டேப் விவகாரத்துக் குப் பிறகு தொலைபேசியில் பேசுவதற்கே அவர்கள் அஞ்சுகிறார்கள் போலும்! காங்கிரசு டனான கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வெளிப்படையாக வைத்துக் கொண்டே, சிறுசிறு கட்சிகளுடனான கூட் டணியை முடிவு செய்யும் முயற்சியில் தி.மு.க. தலைவர் படிப்படியாக ஈடுபட்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. போட்டியிட்ட அதே 31  தொகுதிகளை இப்போதும் அளித்து பா.ம.க.வுடனான கூட்டணியை விரைவில் பேசி அவர் முடித்தார்.  பாரம்பரியமான கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. சிறீதர் வாண்டை யாரின் மக்கள் முன்னேற்றக் கழகக்  கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தை களுக்கு  (கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அவர்கள் போட்டியிட்ட 9 தொகுதிகளை விட ஒரு தொகுதி அதிகமாக) பத்து தொகுதிகள் அளிக்கப்பட்டன. புதியதாக கூட்டணிக்கு வந்துள்ள கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவை அனைத்தும் தி.மு.க. முதல் அமைச்சரால் செய்யப்பட்டவை.

இந்தச் சில்லறைக் கூட்டணிக் கட்சிகளுடன் தங்களுக்கு எந்த உறவும் இல்லை என்று கருதுவது போன்று காங்கிரஸ் கட்சி உண்மை நிலைக்கு பொருந்தாத வகையில் தங்கள் கோரிக்கைகளை உயர்த்திக் கொண்டே சென்றனர். கேக்கைத் தயாரிக்கும் பணி எதனையும் செய்யாமல், அதனைச் சாப்பிட மட்டும் விரும்புபவர்களைப் போன்றவர்களாக காங்கிரசார் இருந்தனர்.

சிறுசிறு கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிமுக கூட்டணியில் ஆரவாரமின்றி அமைதியாக நடந்துவரும் நிலையில்,  தி.மு.க. கூட்டணியிலும் அது போல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள காங்கிரசார் தவறிவிட்டார்கள்.

தமிழ்நாட்டிலும் கூட்டணி அரசை தி.மு.க. வின் மீது திணிக் கும் அளவுக்கு, மிகமிகக் குறைந்த எண்ணிக் கையிலான தொகுதிகளிலேயே தி.மு.க. வெற்றி பெறவேண்டும்  என்று காங்கிரஸ் விரும்புவதாகக் கூடக் கூறப்பட்டது. ஸ்பெக்ட் ரம் பிரச்சினையை வைத்து மத்தியப் புலனாய் வுத் துறை மூலம் தி.மு.க.வை காங்கிரஸ் அச்சுறுத்தி பிளாக்மெயில் செய்தது என்றும் கூட ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த் தைகளை காங்கிரஸ் இழுத்தடித்துக் கொண்டே சென்றது, விஜயகாந்தை அதிமுக அணியில் சேர வைத்துவிட்டது. வெள்ளிக்கிழமை விஜயகாந்த் ஜெயலலிதாவை சந்தித்து தே.மு.தி.க.வுக்கு  41 தொகுதிகள் ஒதுக்கப் பட்டதை ஏற்றுக் கொண்டார்.

அது விரித்த வலையில் காங்கிரஸ் வீழ்ந்து விட்டது. மற்ற அனைத்துக் கட்சிகளும் தி.மு.க. கூட்டணி யிலோ, அதிமுக கூட்டணியிலோ சேர்ந்து முடிந்து விட்ட நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர காங்கிரசுக்கு வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்வதற்கான காலமும் கடந்துவிட்டது.

காங்கிரசின் இத்தகைய முடிவற்ற பிடிவாதப் போக்கு படிப்படியாக தி.மு.க. ஒரு ஆதாயமான நிலையைப் பெறுவதற்கு வழிவகுத்தது. சிறுசிறு கூட்டணிக் கட்சிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தி.மு.க. இடங்களை ஒதுக்கி வந்த நிலையில், காங்கிரசுக்கு ஒதுக்குவதற்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. காங்கிரசு அளித்து வந்த நெருக்கடிகளுக்கு பதிலடி கொடுப்பது போன்று - வாழைப் பழத்தில் ஊசி குத்துவது போன்ற ஒரு உத்தியாக இதனை தி.மு.க. தலைவர் கருதினார். விஜயகாந்தும், ஜெயலலிதாவும் நேருக்குநேர் சந்தித்தனர் என்ற செய்தி வெள்ளிக் கிழமை மாலை கிடைக்கும் வரை தி.மு.க. தலைவர் அமைதியாகக் காத் திருந்தார்.

அதற்குப் பின் உடனடியாக காங்கி ரசுக்கு எதிராகத் தனது குரலை கருணாநிதி உயர்த்தத் தொடங்கிவிட்டார். அதுவரை தி.மு.க.வினர் எவரும் காங்கிரசுக்கு எதிராகப் பேசவில்லை. சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் காங்கிரசு கூட்டணியை விட்டு விலகி வரவேண்டும் என்று தி.மு.க.வுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மட்டும் ஆலோசனை கூறிவந்தார்.

இந்தச் சூழ்நிலையில், சனிக்கிழமை நடை பெற்ற தி.மு.க.வின் உயர்அதிகாரக் குழுக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவையிலிருந்து தங்கள் கட்சி அமைச்சர்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது என்ற முடிவு மேற்கொள்ளப் பட்டது.

இது பல காங்கிரஸ்காரர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ராகுல் போடும் கணக்கு (ஃபார்முலா) என்னும் பருப்பு தமிழ் நாட்டில் வேகாது என்று அவர்கள் இப்போது உணருகிறார்கள். தேசிய அளவில், தி.மு.க. மேற்கொண்ட முடிவு, காங்கிரசுக்கு கூடுதல் தலை வலியை அளிக்க திரிணாமுல் காங் கிரசுக்கு துணிவையும் ஏற்படுத்தி விட்டது.

தமிழ்நாட்டு அரசியல் விவகாரங்களில் ராகுல் காந்தியின் தலையீட்டினால் மூத்த தலைவர் கருணாநிதி மிகவும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டார் என்பதே இவற்றுக் கெல்லாம் காரணம் என்றும் கூறப்படுகிறது. 

ராகுல் காந்தி பல முறை தமிழகத்திற்கு வந்து போனபோதும், ஒரு முறை கூட - கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் மரியாதையின் நிமித்தமாகக் கூட அவர் தி.மு.க. தலைவரை சந்திக்கவில்லை. தி.மு.க.வின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் தனக்கு மட்டுமே தெரிந்த காரணங்களால் இவ்வாறு வெறுப்பை அவர் வளர்த்துக் கொண்டிருக்கலாம். கடந்த முறை சோனியாவை சந்திக்க கருணாநிதி டில்லி சென்றபோது பலமணி நேரம் அவர் காக்க வைக்கப்பட்டார்.

கூட்டணி பேச்சு வார்த்தை களில் பங்கு கொள்ள கோல்ஃப் மைதானத்துக்கு விளையாடச் சென்ற ராகுல் காந்தி திரும்பி வரவேண்டும்  என்பதே இதன் காரணம் என்பதை அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவித்தன. நினைவில் வைத்துக் கொண்டு தக்க சமயத்தில் தனது கோபத்தைக் காட்ட கருணாநிதிக்கு இதுவே போதுமானதாக இருந்தது.

தமிழ்நாட்டில் சுத்தமாக காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடுவதைத் தவிர்த்துக் காப்பாற்ற வேண்டுமானால்,  தி.மு.க.வின் பின்னால் காங்கிரஸ் ஓடவேண்டிய நேரமிது. இன்னும் ஒரு சில நாட்களில் தி.மு.க. தனது நிலையை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டால், கூட்டுப் பிரச்சாரம் மேற்கொள்ளவதைத் தவிர்த்து தொகுதி உடன்பாடு மட்டும் செய்து கொண்டு நட்புடன் காங்கிரசும் திமுகவும் போட்டியிடுவது என்ற இடைப்பட்ட வழியும் உள்ளது.

(நன்றி: (புதுடில்லி) பேர்மாலிங்க் மார்ச் 5, 2011 - தமிழில் த.க.பாலகிருட்டிணன்)

பட்டுக்கோட்டை தீர்மானங்கள்

பட்டுக்கோட்டையில் கடந்த சனியன்று நடைபெற்ற தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக ஊடகங்கள் நடந்து கொண்டு வரும் போக்குப்பற்றி தீர்மானம் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது.

குழந்தைகள், சிறுவர்கள் உட்பட இந்த மின்னணு ஊடகங்களால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதுபற்றி தீர்மானம் பேசுகிறது.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டிய இந்த விஞ்ஞான சாதனங்கள் அதற்கு நேர்மாறாக மக்களிடத்திலே மூடநம்பிக்கைகளை வலிமையாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இளைஞர்கள் மத்தியிலே வக்கிர உணர்ச்சிகளை ஊட்டுகின்றன. இதனால் ஏற்படக் கூடிய ஆபத்து சாதாரணமானதன்று.

இளைஞர்கள் கலாச்சாரச் சீரழிவின் பக்கம் திசை திருப்பப்படுகின்றனர். எதிர்கால சமுதாயம் இதன் காரணமாகப் பெரிய பாதிப்புக்கு ஆளாகும் என்பதில் அய்யமில்லை.

கல்லூரி ஆசிரியைகளை மாணவர்கள் கேலி செய்வது, சாலையில் போகும் பெண்களைச் சீண்டுவது என்பது போன்றவை - இளைஞர்கள் மத்தியில் அத்தகு உணர்வுகள் பெருகுவதற்குத்தான் தூண்டுதலேயாகும்.

பெண்களை வில்லியாக உருவாக்குவது, பெண்கள் எப்பொழுது பார்த்தாலும் புலம்புவது, கண்ணீர் வழிவது என்பது போன்றவை பெண்களைக் கோழைகளாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் சித்திரிக்கும் கேவலமான போக்குகளாகும்.

இதில் என்ன கொடுமையென்றால் - இதுபோன்ற தொடர்களைப் பெண்களே ரசித்துப் பார்க்கும் ஒரு மனநிலைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதுதான்.

பெண்களுக்காக உரிமைக் குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் அமைப்புகள்கூட இதுபற்றியெல்லாம் சிந்திப்பவர்களாகவோ, விமர்சிப்பவர்களாகவோ இல்லை.

லண்டன் தொலைக்காட்சியின் விளம்பரத்தில் இடம் பெற்ற ருத்திராட்சம் குறித்த மூடநம்பிக்கைக் காட்சி உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. அறிவியல் ஊடகத்தில் அதற்கு எதிர்மாறான காட்சிகள் இடம் பெறக் கூடாது என்று அந்நாடு கருதுவதுதான்.

ஊடகங்களில் இந்தப் போக்குக் குறித்து திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணியினர் மக்கள் மத்தியிலே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் திட்டமிட்ட வகையில் இந்தத் திசையில் கழகம் தன் பணிகளைத் தொடங்கும்.

சின்னத் திரைகளை ஒரு ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கும் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறோம்.

பட்டுக்கோட்டை மாநாட்டில், ஜாதி ஒழிப்புக்கு ஜாதி மறுப்புத் திருமணங்கள் அவசியம் என்றும், ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து கொண்டவர்களுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மிக முக்கியமாகும்.

21ஆம் நூற்றாண்டில் ஜாதி உணர்வு இருப்பது வெட்கப்படத்தக்கதாகும். எந்த விலை கொடுத்தாவது ஜாதியை ஒழித்தாக வேண்டும். தந்தை பெரியார் அவர்களின் மிக முக்கியமான கொள்கை ஜாதி ஒழிப்பேயாகும். ஜாதியின் காரணமாகத்தான் ஏற்றத் தாழ்வுகள், பேத உணர்ச்சிகள், மனிதனை மனிதன் வெறுக்கும் கேவலங்கள், இவற்றின் காரணமாக கலவரங்கள் ஏற்பட ஏதுவாக உள்ளன. மனிதவளம் இந்த ஜாதியத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது -திசை திருப்பி விடப்படுகிறது.

இடஒதுக்கீடுகூட ஜாதி ஒழிப்பின் மிக முக்கியமான கூறுதான். இடஒதுக்கீடு காரணமாக கல்வி, வேலை வாய்ப்புகள் பெருகும்போது சிந்தனையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நமது பாடத் திட்டத்திலும்கூட, ஜாதி, தீண்டாமை ஒழிப்புத் தொடர்பான பாடங்கள் இடம் பெற்றாக வேண்டும். மாணவர்கள் மத்தியில் இது தொடர்பான எழுச்சியை, உணர்வை ஊட்டும் சொற்பொழிவு, கட்டுரைப் போட்டிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

கல்வியில் இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது, அந்தக் கல்வி மாணவர்கள் மத்தியில் முற்போக்குச் சிந்தனைகளை, ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட சமத்துவ சமதர்மச் சிந்தனைகளை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டாமா?

இளைஞரணி மாநாட்டில் ஜாதி ஒழிப்புத் தொடர்பான இத்தகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி தோழர்களும் மாணவர்கள் மத்தியில் (கல்வி நிறு வனங்கள், விடுதிகள்) ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - அதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://viduthalai.in/new/page-2/4922.html

மாநிலத்திற்கு வெளியில் வாழும் மாநில மக்களைப் பாதுகாக்க கேரள அரசின் திட்டமும் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கையும்

வெளிநாட்டில் வாழும் கேரள மக்களுக்காக மலையாளிகள் நல வாரியம் சென்னையில் அமைக்கப் பட்டுள்ளதும் மற்றும் இந்தியா விலுள்ள அனைத்து மாநிலங்களி லும் கேரள இல்லம் அமைப்பது என கேரள அரசின் அறிவிப்பும் மிக உன்னதமான திட்டங்களா கும். மலையாளிகள் நலவாரியம் கடந்த 15 ஆண்டு காலமாக கேரள அரசால் மிகச் சிறப்பாக நடத் தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வெளிநாட்டிலும் வெளிமாநிலங் களிலும் வாழும் மலையாளிகளின் நலனை இந்த வாரியம் பேணிப் பாதுகாத்து வருகிறது. அவர் களுடைய மனித உரிமைப் பிரச் சினைகள், சம்பள பட்டுவாடா, வேலைக்கு உத்தரவாதம், பண் பாட்டு பாதுகாப்பு, மொழிப் பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், பாஸ்போர்ட், விசா விவரங்கள் என பலவற்றை பேணி - பாதுகாத்து வருகிறது.

கேரள சகோதரர்கள் வெளிநாட்டில் சென்று பணி யாற்றி, உழைத்துச் சம்பாதித்து வரும் பணத்தை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதால் இந்தியா விற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் அந்நிய செலாவணி வரு கிறது. இவர்களுடைய நலனைப் பாதுகாக்க இந்திய அரசாங்க வெளியுறவுத் துறையும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

மலையாளிகள் அதிகமாக வாழும் வெளிநாடுகளில் கேர ளாவைச் சார்ந்த மலையாள மொழி தெரிந்த அதிகாரியை மத்திய அரசு நியமிக்கிறது. வெளி நாட்டில் வாழும் மலையாளிகள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் இந்திய தூதரகம் உரிய உதவி களைச் செய்து வருகிறது.

இதன் மூலமாக நமக்கு தெரியவருவது என்னவென்றால், மாநிலத்திற்கு அதிக அதிகாரம் தேவை. அப் போதுதான் மாநில மக்களை பாதுகாக்கும் பொறுப்பு மாநிலத் திற்கே உரியது என்பதும் தேவை யானதாகவும் அமையும், மாநில அரசாங்கம் மாநில மக்களைப் முனைந்து பாதுகாக்கும் பணியினை யாரும் தடுக்க முடியாது. இந்தப் பணி மாநில சுயாட்சியின் ஒரு முக்கிய படியாகும்.

இதனுடைய தொடர்ச்சியாகத் தான் தமிழ்நாட்டில் தமிழக அரசு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளிநாட்டுத் தமிழர் நல வாரியம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்த அமைப்பு வெளிநாட்டிலும், வெளி மாநிலங்களிலும் வாழுகின்ற தமிழர் களின் வாழ்க்கை நிலை, சமூகப் பிரச் சினை, பொருளாதார பிரச்சினை, மனித உரிமைப் பிரச்சினை, பாஸ் போர்ட் விசா பிரச்சினை, கலை பண் பாட்டு மற்றும் மொழி பிரச்சினை அனைத்திலும் அக்கறை செலுத்திப் பணியாற்றும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

இன்றைய தமிழக அரசும் தி.மு.க. வும் மாநில சுயாட்சி பெற பெரிதும் முனைந்து செயல்பட்டு வரும் வேளை யில் இதை ஒரு மிகச் சிறப்பான திட்டமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தை மாநில அரசு நிறைவேற்றுவது மத்திய அரசு மாநில மக்களை பாதுகாக்க உரிய நட வடிக்கை எடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

இந்தியா பல மாநிலங்களை உள்ள டக்கியது. பல தேசிய இனங்களை உள்ளடக்கியது. அந்தந்த மாநில மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய கடமை மெல்ல மெல்ல மாநில அரசின் கடமையாக மாறி வருகிறது. இதுதான் மாநில சுயாட் சியின் அடிப்படைத் தத்துவமாகும்.

இதனுடைய தொடர்ச்சியாகத் தான் கேரள அரசாங்கம் சிறந்த பணி வருகிறது. அதாவது ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டிற்குப் போய் தூதரகம், பண்பாட்டு மய்யம் தொடங்குவது வழக்கம். அதன் அடிப்படையில்தான் அனைத்து மாநிலங்களும் டில்லியில் அந்தந்த மாநிலத்தினுடைய இல்லங் களைத் தொடங்கி,

அங்கு தங்குவதற் கான அறைகளைக் கட்டி, உணவு விடுதிகளையும் ஏற்பாடு செய்து, கலாச்சார நிலையத்தையும் ஏற்படுத்தி மாநில அரசாங்க அலுவலகத்தை நடத்தி வருகின்றன. இப்படிப்பட்ட தமிழக அரசின் அமைப்பிற்கு தமிழ்நாடு இல்லம் என்றும், கேரள அமைப்பிற்கு கேரள பவன் என்றும், கர்நாடக அமைப்பிற்கு கர்நாடக பவன் எனவும் ஒவ்வொரு மாநிலங் களும் இப்படி தொடங்கி நடத்தி வருகின்றன.

கேரள மாநிலம் மேலும் ஒருபடி சென்று கேரள பவன் எனும் கேரள இல்லத்தை இந்தியாவின் அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் உரு வாக்கி கேரளாவைச் சார்ந்தவர்கள் அங்கு வந்தால் தங்குவதற்கான அறைகள், கேரள உணவு, கேரள பண் பாட்டு மய்யம், கேரள நூல்நிலையம், மாநாட்டுக் கூடம் மற்றும் திருமணக் கூடம் இவையனைத்தையும் ஒன்றி ணைத்து ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் உருவாக்கி வருகிறது.

சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரள முதல்வர், அதற்கான இல் லத்தை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கி வைத்தார். இதேபோல பம்பாயிலும், கொல்கத்தாவிலும், பெங்களூருவிலும் என ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் தொடங் கப்பட்டுள்ளது.

இவை மாநிலத்தினு டைய தூதரகம் போலவே பண்பாட்டு மய்யம் போலவே இயங்கி வருகிறது. இது மிகவும் பாராட்டத்தக்கது; போற்றத்தக்கது, இது கேரள மக்கள் நலனை பாதுகாக்கத் தக்க ஓர் உன்னதமான முடிவாகும். இது மாநில சுயாட்சியின் ஓர் அங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது.

மாநில சுயாட்சி கோரி வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு இது போன்று தமிழ்நாடு இல்லத்தை இந்தியாவில் உள்ள 30 மாநிலத்தின் தலைநகரில் உருவாக்கவும், அந்த இல்லங்களில் தங்குவதற்கான அறைகள், தமிழர் உணவு, தமிழ் நூல் நிலையம், மாநாட்டுக் கூடம், திருமண மண்டபம், கலாச்சார மய்யம் என அனைத்தும் உருவாக்கி அந்தந்த மாநிலத்தில் வாழும் தமிழர் களைப் பேணி பாதுகாக்க வேண் டும்.

அந்தந்த மாநிலத்தில் வாழும் தமிழர்கள் அதனைப் பயன் படுத்திக் கொள்ளவும் அதே போல தமிழ் நாட்டிலிருந்து மும்பைக்கோ, சண்டிகருக்கோ, கொல்கத்தா வுக்கோ, அகமதாபாத்திற்கோ செல்லும் போது பயன்படுத்திக் கொள்ளவும், அந்தந்த மாநில மக்களுடன் தமிழ்நாட்டு மக்களை நெருங்கி பழகுவதற்கும் மாநில அரசின் தூதரகம் போல இருக்க ஏதுவாக அமையும்.

பெரிய பெரிய கம்பெனிகளே பல இடங்களில் விருந்து இல்லங் களை வைத்து நடத்துகிறபோது மாநில அரசு இது போன்ற இல் லங்களை தொடர்ந்து நடத்துவது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கோட்பாட் டிற்கு இணங்க அமையும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

இதனால் தனது மாநில மக் களைப் பாதுகாக்க மாநில அர சாங்கம் மேலும் சிறப்பான பணி களை செய்யமுடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

முற்போக்குத் திட்டங்களை செயற்படுத்திவரும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் இந்தியாவின் 30 மாநில தலைநகரிலும் தமிழ்நாடு இல்லம் திறந்திட வேண்டும், இதற்கு மேலும் ஒருபடியாக வெளிநாடு களிலும் குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடு களிலும் தமிழ்நாடு இல்லத்தை நிச்சயம் ஏற்படுத்தி செயற்படுத் துவார் என்பதில் சிறிதும் அய்ய மில்லை. மாநில சுயாட்சியின் மீது எப்போதும் அக்கறை கொண் டுள்ள தமிழக மக்களும் இதனைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

(நன்றி: சட்டக்கதிர், மார்ச் 2011)
http://viduthalai.in/new/page-2/4922.html

Thursday, March 3, 2011

13 ஆம் எண் கெட்ட சகுனமா?

மூடநம்பிக்கைகள் பலவிதம்; அதில் ஒன்று இந்த எண் மூடநம்பிக்கை, தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துவிடும்.

சிலர் தன்பெயரில்கூட ஓர் எழுத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ மாற்றியமைப்பதுண்டு. எதிர்க் கட்சித் தலைவர் அண்ணா பெயரைக் கட்சியில் தாங்கிக் கொண்டிருப்பவர்கூட தன் பெயரில் ஓர் எழுத்தைச் (ய) சேர்த்துக் கொண்டார். அதனால் பலன் என்ன கிடைத்து விட்டது?

தான் போட்டியிட்ட தொகுதியில்கூடத் தோற்றதுண்டு. கடந்த முறை ஆட்சியையா பிடித்துவிட்டார்?

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13 என்றும், வாக்கு எண்ணிக்கை மே 13 என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டதாம். 13 என்பது கெட்ட நாளாயிற்றே - சகுனம் சரியில்லையே என்னாகுமோ என்று அரசியல் வாதிகள் அச்சப்படுகிறார்கள் என்று ஓர் ஏடுகூட எழுதியிருக்கிறது.

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று அவர்கள் நம்புவது உண்மையானால், இந்த 13ஆம் எண்ணைப் படைத்தவனும் கெட்டவனாகத்தானே இருக்க வேண்டும்? அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள், வெலவெலத்துப் போய் விடுவார்கள் - பதில் வராது.

இன்னும் சில பேருக்கு எட்டாம் எண்ணும் பிடிக்காது; பெரிய மேதை என்று பி.ஜே.பி.காரர்கள் பிதற்றுவார்களே - அந்த அடல்பிஹாரி வாஜ்பேயிகூட இதற்கு விதிவிலக்குக் கிடையாது. பிதமராக அவர் ஆனபோது அவருக்கு டில்லியில் பங்களா ஒன்றை ஒதுக்கினார்கள். அதன் எண் 8. அவ்வளவுதான் தனக்கு எட்டாம் எண் இராசி கிடையாது என்று கூறிவிட்டார்.

என்ன செய்தார்கள்? வேறு பங்களாவை ஒதுக் கினார்களா? அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை; எண்ணை 6ஹ என்று மாற்றிவிட்டார்கள் அவ்வளவுதான், பங்களா மாற்றப்படவில்லை. ஆனால் எண் மட்டும் மாற்றப்பட்டவுடன் அந்த மேதை திருப்திப் பட்டுக் கொண்டாராம்.

விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (51A) அந்தச் சட்டத்தின்கீழ் சத்தியம் செய்துதான் பதவியை ஏற்றுக் கொள்கிறார்கள். பிரதமர் என்ற நிலையில் உள்ளவர்களே அதற்குத் தயாராக இல்லையே - அரசியலமைப்புச் சட்டத்துக்கு என்னதான் மரியாதையோ!

டில்லி உயர்நீதிமன்றத்தில் குரோவர் என்ற நீதிபதி இருந்தார். அவரை குற்றவாளி ஒருவன் கத்தியால் குத்தி விட்டான். உடனே அந்த நீதிபதியை மருத்துவமனையில் சேர்த்தார்கள். நீதிபதி கண் திறந்து பார்த்தார். அறை எண் 13 என்று இருந்தது.

அவ்வளவுதான் உடனே இந்த அறையிலிருந்து மாற்றுங்கள் என்று கத்தினார். நான் கத்தியால் குத்தப்பட்டது 13ஆம் தேதி. நான் அன்று விசாரித்தது 13ஆவது வழக்கு - எனக்கு இந்த எண் சரிப்பட்டு வராது - ஆகாதது என்றார்.

என்ன செய்தார்கள்? அவர் சற்றுக் கண்ணயர்ந்த போது அந்த அறை எண்ணை அகற்றிவிட்டு 12ஏ என்று போட்டு விட்டனர். கண் திறந்து பார்த்த அந்த நீதிபதிக்கும் ஆத்ம திருப்தி.

இத்தகு மூடநம்பிக்கைக்காரர்கள் ஒன்று செய்யலாமே - இந்த எட்டு, 13 போன்ற எண்களை நாள்காட்டியில் இருந்து அறவே எடுத்துவிட வேண்டும் என்று சங்கம் அமைத்துத் தீர்மானம் போடலாமே - ஏன் போராட்டம்கூட நடத்தலாமே!

13ஆம் எண்ணைக் கண்டு அலறும் மக்கள் உலகின் பல பகுதிகளிலும்கூட உண்டு.

இலண்டனில் அரசி குடும்பத்தில் இரண்டாம் எலிசபெத்தின் தங்கை 1930 ஆகஸ்டு 21 இல் பிறந்தார்.

ஆனால் பிறந்த அந்தக் குழந்தையை உடனடியாக பதிவு செய்யவில்லை. ஏன் தெரியுமா? பிறந்த நாளன்று பதிவு செய்திருந்தால், அந்தக் குழந்தை 13ஆம் எண் வரிசையில் இடம் பெற நேர்ந்திருக்குமாம்.

இந்த முட்டாள்தனத்தைக் கேலி செய்யவும், பகுத்தறிவைத் தூண்டவும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துணிவுடைய பகுத்தறிவுவாதிகள் 13 பேர் கூடினார்கள். 1982 சனவரி 13 ஆம் நாளைத் தேர்வு செய்து ஒரு சங்கத்தை நிறுவினார்கள். அதன் பெயரே 13ஆவது சங்கம் என்பதாகும் (Thirteenth Club).

ஓர் உணவு விடுதியில் 13ஆவது அறையில் 8.13 மணிக்கு விழா நடத்தி, 13 மணிக்கு (அதாவது பிற்பகல் ஒரு மணிக்கு) முடித்தனர். ஒவ்வொரு மாதமும் 13ஆம் தேதிகூடி விருந்துண்டு மகிழ்வார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்தது. உறுப்பினரிடமிருந்து 13.13 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. முட்டாள் தனத்தை வேறு எப்படித்தான் தோல் உரிப்பது?

சென்னை மாநகராட்சி கதவு இலக்கம் பொறிக்கப்படும் பொழுது 13அய் விரும்புவதில்லையாம். திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பழைய வீட்டின் எண் 13 ஆகும்.

இன்னின்ன காரணங்களுக்காக எங்களுக்கு வாக்கு அளியுங்கள் என்று கூறக்கூடத் துணிவு இல்லாதவர்கள், அப்படிக் கூற தங்கள் வசம் சரக்கு இல்லாதவர்கள்தான், பகுத்தறிவற்றவர்கள்தான் இந்த 13ஆம் எண்ணைக் கட்டிக் கொண்டு அழுவார்கள்.

நாட்டு மக்களுக்கு உணவைவிட உண்மையில் முக்கிய மாகத் தேவைப்படுவது பகுத்தறிவே. அது சரியாக இருந் தால்தான் மற்றவைகளும் சரியாக இருக்கும் - சரிதானே!
http://viduthalai.in/new/page-2/4657.html

அட, இந்திரனே-மழை பெய்ய வேண்டுமென்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டிக் கொண்டார்


இந்தியாவில் வரும் காலத்தில் போதுமான அளவு மழை பெய்ய வேண்டுமென்று இந்திரனை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டிக் கொண்டார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய பிரணாப் கடந்த ஆண்டு நாட்டிடை ஒரு பகுதியில் வறட்சியால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு பயிர்களை நாசப்படுத்தியது.

எனவே இந்த ஆண்டு நாட்டில் தேவையான அளவு மழை பெய்ய வேண்டுமென்று மழைக் கடவுளான இந்தி ரனை வேண்டிக் கொள்கி றேன்.

அப்போதுதான் இந்த ஆண்டில் சிறப்பான பொரு ளாதார வளர்ச்சி இருக்கும். மழையும் பொருளாதா ரத்தைப் பாதிக்கும் காரணி யாக உள்ளது என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோதும் குறிப்பிட்டார் (தினமணி 27.2.2010)

நடப்பு ஆண்டு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோதும் (28.2.2011) அதே கதைதான். கூடுதலாக லட்சுமியையும் அழைத்துக் கொண்டார்.

இந்திரன் ஆசி வழங்க வேண்டும். சரியான நேரத் தில் மழை பொழிய,அவர் உதவ வேண்டும். அதேபோல், கடவுள் லட்சுமியை வணங் குகிறேன். அபாயமான சூழலில் இம்மாதிரி உத்திகள் பலன் தரும் (தினமலர் 1.3.2011) என்று கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சர் இப்படி மதக் கடவுள்களை அழைத்துக் கொள்கிறாரே, வணங்கு கிறாரே அவற்றால் காதொ டிந்த ஊசி முனைக்காவது பலன் உண்டா?

படித்த மக்களிடத்தில் கூட இத்தகைய மூடநம் பிக்கைகள் குடிகொண்டு இருக்குமாயின் மற்றவர் களைப்பற்றி என்ன சொல்ல!

ஏன் இந்து மதக் கட வுள்களை மட்டும் அழைக் கிறீர்கள்? என்று பிஜேபி யைச் சேர்ந்த ஒரு உறுப் பினர்கூட நிதி அமைச்சரைக் கடாசியிருக்கிறார்.

அறிவுப் பூர்வமாக சிந் தனையைச் செலுத்த வேண் டிய ஒரு இடத்தில்கூட மத நம்பிக்கையைத் திணிப்பது சரியானதுதானா? தங்களின் பொருளாதாரத் தோல்வியை மக்களின் மதநம்பிக்கை என் னும் போர்வையின் பின்பக்கம் நின்று மறைத்துக் கொள்ள லாம் என்கிற யுக்தியாகக்கூட இருக்கலாமோ!

மழைக்குக் காரணம் இந்திரன்தான் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி யின் பேரனோ, பேத்தியோ பரீட்சைத் தாளில் எழுதினால் மதிப்பெண் சுழிதான் கிடைக் கும்.

நேரு போன்ற பகுத்தறிவு வாதிகள் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால், அந்த இடத்திலேயே பிரணாப்பை வம்புக்கு இழுத்திருப்பார். பீகார் பூகம்பத்துக்குக் கார ணம் கடவுளின் கோபம்தான் என்று காந்தியார் சொன் னபோது நேரு அதனைக் கேலி செய்யவில்லையா?

மும்பையில் மத்திய ரயில்வேயில் பணிபுரிந்த சுவாதிசிட்னிஸ், சுஜாதா ஷிண்டே ஆகியோர் பதவி உயர்வுக்காக எழுத்துத் தேர்வு எழுதினர். நன்றாக எழுதியும் தோல்வி அடைந் தனர் - என்ன காரணம் தெரியுமா? விடைத்தாளில் ஸ்ரீ சுவாமி சாம்ரத் மற்றும் ஓம் என எழுதியிருந்தனர். விடைத்தாளில் மதத்தைக் கலந்ததால் அந்த விடைத் தாளை ரத்து செய்து விட் டனர் (தினமலர் 8.7.2008).

இதே கண்ணோட்டம் இந்திரனையும், லட்சுமி யையும் பட்ஜெட்டில் குறிப் பிடும் மத்திய நிதி அமைச் சருக்கும் பொருந்தும் தானே?

மழைக் கடவுள் இந்திரன் இருப்பதாகக் கூறப்படும் இந்நாட்டில்தான் வறட்சி வணக்கம் போட்டு வரவேற் கிறது. செல்வக் கடவுள் லட்சுமி என்று கதைக்கும் இந்நாட்டில் தான் வறுமைக் கோடுகள் வஸ்தாத் செய் கின்றன! ஆகா இதுவல் லவோ பாரதப் புண்ணியத் திருநாடு!

- மயிலாடன்

http://viduthalai.in/new/page1/4650.html

நல்லவர் போல் தோற்றமளிக்கும் திறமைமிக்க ஏமாற்றுக்காரர் நரேந்திர மோடி - தெகல்கா அம்பலப்படுத்தியது

ஒரு மதக் கலவரப் படுகொலைகளில் மோடியின் பங்கு  என்ன என்பது பற்றி விசாரணையில் கேள்வி கேட்கப்படும் முதல் முதலமைச்சர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு உண்டு.  மென்மை யானவையாக இருந்தாலும், நேரடியாக பதில் கூறாமல் தவிர்ப்பவையாக இருந்த  அவர் அளித்த பதில்கள் குஜராத்தின் இரும்பு மனிதர் என்பவரின் மறுபக் கத்தைக் காட்டுவது போல் உள்ளன.

28.3.2010 காலை 9 மணிக்கு காந்தி நகரில் உள்ள சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்தின் முன் கூடியிருந்த தெலைக்காட்சி செய்தியா ளர்களை நோக்கி கை அசைத்துக் கொண்டே  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்திற்குள் நுழைகிறார். அதன் பின் நடந்த விசாரணை குஜராத் தின் இரும்பு மனிதர் எனப்படும் அவரின் ஆர்வத்தை அளிக்கும் மறுபக்கத்தைக் காட்டுவதாக இருந்தது.

கவுரவ யாத்திரையின் ஒரு பகுதியாக 9.9.2002 அன்று மேக சேனா மாவட்ட பெச்சார்ஜி என்ற ஊரில் தாங்கள் நிகழ்த்திய சொற்பொழிவை தயவு செய்து பாருங்கள்  என்று கூறிய விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா மதஉணர்வுகளைத் தூண்டும் முதல் வரின் பேச்சு அடங்கிய ஆவணத்தை மேஜை மீது வைக்கிறார்.

நிவாரண முகாம்களைக் கொச்சைப்படுத்திய மோடி

என்ன சகோதரர்களே, நாம் நிவா ரண முகாம்களை நடத்த வேண்டுமா? குழந்தைகளை உற்பத்தி செய்யும் மய் யங்களை நான் ஆரம்பிக்க வேண்டுமா? குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பின்பற்றி முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் 5 பேர், ஆனால் அவர்களோ 25 பேர். குஜராத் மாநிலத்தில் குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தவே முடியாதா? அதற்குக் குறுக்கே எவரால் தடைகள் ஏற்படுகின்றன?

எந்த மதம் இதற்குக் குறுக்கே நிற்கிறது? பணம் ஏன் ஏழைகளைச் சென்றடைவதில்லை? சிலர் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே போனால், அக்குழந்தைகள் சைக்கிள் டியூபுக்கு பஞ்சர் ஒட்டும் வேலையைத்தான் செய்ய முடியும். 2002 செப்டம்பரில் கவுரவ யாத்திரை என்ற பெயரில் மோடி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் பேசியது இது.

இந்தக் குறிப்புகள் முஸ்லிம்களைக் குறிப்பிடுபவையா? என்று மல்ஹோத்ரா கேட்கிறார்.
இந்தப் பேச்சு எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையோ, மதத்தினரையோ குறிப்பிடுவது அல்ல. இது ஒரு அரசியல் பேச்சு. அதில் வளர்ந்து வரும் இந்திய மக்கள் தொகையைச் சுட்டிக் காட்ட நான் முயன்றிருக்கிறேன். சில தீய சக்திகள் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ற வாறு எனது பேச்சுக்கு தவறான விளக் கம்  அளித்து திரித்து வெளியிட்டிருக் கின்றன. எனது தேர்தல் பேச்சுக்குப் பிறகு பதற்றமோ, கலவரமோ ஏற்பட வில்லை என்பது கவனிக்கத்தக்கது என்று மோடி பதிலளித்தார்.

இத்தகைய பதிலை ஏற்றுக் கொள்ள மல்ஹோத்ரா தயாகரா இல்லை. அவரது அறிக்கையில், மோடி அளித்த பதில் மனநிறைவை அளிப்பதாக இல்லை. நிச்சயமாக அது வளர்ந்து வரும் சிறுபான்மை மக்கள் தொகையைப் பற்றி யதுதான் என்று அவர் தெரிவித் துள்ளார்.

விசாரணை தொடரும்போது, - தனக்கு சாதகமானவற்றை தேர்ந்தெடுத் துக் கூறுவது, நேரடியாக பதிலளிக்காமல் தட்டிக் கழிப்பது, நினைவுமறதி, பச்சைப் பொய், தந்திரமான - திறமையான பேச்சுக்கலை - போன்ற புத்தகத்தில் உள்ள அத்தனை வித்தைகளையும் மோடி பின்பற்றிக் காட்டுகிறார்.

எதிர்வினையா?

1.3.2002 அன்று ஜீ தொலைக் காட்சியின் சுதிர் சவுத்ரிக்கு நீங்கள் அளித்த பேட்டியில், இவை ஒரு சங் கிலித் தொடர் போன்ற வினைகளும், எதிர் வினைகளுமாகும். வினைகளும், எதிர்வினைகளும் நிறுத்தப்படவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்  என்று கூறியிருக்கிறீர்கள். கோத்ரா நிழ்ச்சி இந்தியாவிலும், உலகம் முழுமையிலும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று நீங்கள் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். 

கோத்ரா பகுதி மக்கள் குற்றவியல் குணங்களைக் கொண்டவர்கள்; இதற்கு முன் அவர்கள் பெண் ஆசிரியர்களைக் கொன்றிருக் கின்றனர். இப்போது அவர்கள் இந்த மிருகத்தனமான குற்றத்தைச் செய்திருக் கின்றனர். அதன் எதிர்வினைதான் இப்போது அவர்கள் உணர்வது என்று கூறியிருக்கிறீர்கள். இதைப் பற்றி விளக்கமுடியுமா? என்று மல்ஹோத்ரா கேட்கிறார்.

நேரடியாக பதில் அளிப்பதை மோடி தவிர்த்துவிட்டுக் கூறுகிறார் : குஜராத் வரலாற்றைப் படித்தவர்களுக்கு மத வன்முறைகள் இங்கே ஒரு நீண்ட வரலாற்றைப் பெற்றிருக்கின்றன என்பதை நிச்சயமாக அறிந்திருப்பார்கள். நீண்ட காலமாக, நான் பிறப்பதற்கு முன்பே, இது போன்ற மதக் கலவரங்களைத் தொடர்ச் சியாக குஜராத் சந்தித்து இருக்கிறது. 1714 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, ஆயிரக்கணக்காக மதக் கலவரங்கள் குஜராத்தில் நிகழ்ந்திருப்ப தாக வரலாறு கூறுகிறது.

இன்னமும் அவர் கேள்விக்குப் பதில் கூறவில்லை.  1.3.2002 அன்று ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைப் பொறுத்தவரை, எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், நான் பயன்படுத்திய சொற் களை அவ்வாறே நினைவுபடுத்திக் காண என்னால் இயலவில்லை. என்றாலும், எப்போதுமே அமைதி நிலவவேண்டும், அமைதி மட்டுமே நிலவவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்து வந் துள்ளேன். மக்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று நேரடியான, எளிய மொழியில் கூறியிருக்கிறேன்.

இந்த பதில்களிலிருந்து தேர்தல் பேரணியில் தோன்றிய மோடியைப் பற்றி அறிந்து கொள்வது எளிதல்ல. ஷெரா புடீன் ஷெயிக் கொல்லப்பட்ட போலி என்குவுன்டர் 4-12-2007 அன்று நடந்த தற்குப் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு பெருங்கூட்டத்திடம் மோடி கேட்கிறார்: ஷொராபுடீனை நான் என்ன செய் திருக்க வேண்டும். உணர்ச்சி வயப்பட்ட கும்பல், அவனைக் கொல்; அவனைக் கொல் என்று கத்துகிறது. பின் மோடி சீறுகிறார் :

அதைச் செய்ய நான் சோனியா காந்தியின் அனுமதியை வாங்கவேண்டுமா?

ஆனால் அந்த மோடி இப்போது முற்றிலுமாகக் காணாமல் போய்விட்டார்.

ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை நிச்சயம் உண்டு என்ற நியூட்டனின் விதியைக் குறிப்பிட்டு கோத்ராவுக்குப் பிறகு நடந்த கலவ ரங்களைப் பற்றி ஊடகத்தினரிடம் நீங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட் டீர்களா? என்று மல்ஹோத்ரா கேட்கிறார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி

இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இண்டியா ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. உண்மை என்னவென்றால் டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் இருந்து எவருமே வந்து என்னை சந்திக்கவில்லை என்பது தான் என்று மோடி பதிலளிக்கிறார்.  வினை-எதிர்வினைக் கோட்பாடு என்று அழைக்கப்படுவதன் பொய்த் தன்மை இந்த உண்மையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அது போன்ற எந்த ஒரு பேட்டியையும் கொடுக்க வில்லை என்ற ஒரு மறுப்பை மாநில அரசு வெளியிட்டிருந்தது. அந்த நாளி தழின் உட்பக்கத்தில் ஒரு மூலையில் வெகுநாள்கள் கழித்த பிறகு அந்த மறுப்புச் செய்தி வெளியிடப்பட்டது என்று மோடி கூறினார்.

அந்த நேரத்தில் மோடி கூறுகிறார்:

குஜராத் மொழியில் ஒரு பழமொழி உண்டு. வன்முறைக்கு வன்முறையே பதிலாக இருக்க முடியாது என்பது எனது நிலையான கருத்தாக இருந்து வருவதாகும். அமைதி காக்கவேண்டும் என்றுதான் நான் வேண்டுகோள் விடுத்தேன். ஏதுமறியா அப்பாவிகள் மீது ஒரு கும்பல் மேற்கொண்ட வினை யையோ,  எதிர்வினையையோ நான் எப்போதுமே நியாயப்படுத்தியதில்லை; நியாயப்படுத்தவும் மாட்டேன்.

இன்னமும் சிக்கல்நிறைந்த கேள்வி களுக்கு மோடி தெளிவற்ற குழப்பமான பதில்களை அளித்தார். மோடி மீதான சிறப்பு விசாரணைக் குழுவிற்கு எந்த வித அதிகாரமும் அளிக்கப்பட்டிருக்க வில்லை என்பதால், மோடியால் இவ்வாறு செய்ய முடிந்தது. அவர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை.

மோடி விரும்பி யிருந்தால், சிறப்பு விசாரணைக் குழு வின் முன் ஆஜராவதற்கே அவரால் மறுத்திருக்க முடியும். சட்டத்தை மதிக்காதவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள அவர் விரும்ப வில்லை என்பதுதான் உண்மை. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் விசாரணை அதிகாரியார் தன்னை பதில் அளிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார்.

எனவே, மிகவும் மோசமான மதப் படுகொலை நடந்த 28.2.2002 அன்று மோடியின் நடமாட்டம் பற்றி மல் ஹோத்ரா கேட்டபோது, மோடி கூறி னார்: 28.2.2002 பிற்பகல் ஷாஹி பாக் சர்க்யூட் ஹவுஸ் இணைப்பில் செய்தியாளர்களை நான் சந்தித்தேன்.  ஒரு விசாரணைக் கமிஷன் அமைப்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதை  அப்போது நான் ஊடகத்தி னரிடம் தெரிவித்தேன்.

அமைதியையும், மதநல்லிணக்கத்தையும் காக்கும்படி அவர்கள் மூலம் நான் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அன்றைய தினமே, அமைதியையும் மத நல்லிணக் கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு நான் வெளியிட்ட வேண்டுகோள் பற்றிய ஒரு செய்தி தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

2001 அக்டோபரில் குஜராத் முதல மைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடிதான் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்த வகையில், சட்டம், ஒழுங்கு, உளவுத் துறை, புலனாய்வு ஆகியவை அனைத்தும் அவரது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால் இவை பற்றிய பிரச்சினைகளில் சிறப்பு விசாரணைக் குழு கேள்விகள் கேட்ட போது, தனது எதுவும் தெரியாதது போலவே மோடி நடித்தார்.

உளவுத்துறை

2002 ஆம் ஆண்டில் அயோத்தி யாவில் விசுவ இந்து பரிசத் நடத்த திட்டமிட்டிருந்த ராம் மகாயக்ஞம் தொடர்பாக குஜராத் மாநில புலனாய் வுத் துறை திரட்டிய உளவுத் தகவல்கள் என்னென்ன? என்று மல்ஹோத்ரா கேட்டார்.

2001 அக்டோபரில்தான் நான் குஜராத் முதலமைச்சராக ஆனேன். அதற்குமுன் டில்லியில் பா.ஜ.கட்சியின் பொதுச் செயலாளராக நான் இருந்தேன். 2001 இல் குஜராத்தில் நடந்த நிலநடுக்கத்திற்குப் பிறகுதான், இங்கு நிவாரணப் பணியையும், மறு கட்டமைப்புப் பணியையும் செய்ய கட்சி யின் தலைமை என்னை அனுப்பியது.

ராஜ்கோட் சட்டமன்றத் தொகுதியில் போட்டி யிட்டதுதான் நான் முதன் முதலாகத் தேர்தலில் கலந்து கொண் டது என்பதை இங்கு குறிப்பிட வேண் டும். 24.2.2002 அன்று அந்த இடைத் தேர்தல் நடைபெற்றது.  ராம் மகாயக்ஞம் பற்றிய உளவுத் துறை அறிக்கைகளைப் பொருத்தவரை, அவை பொதுவாக காவல்துறை தலைவர் மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகிய வர்களிடம் வரும்; அலுவலக விதிகளின் படி இவ் விவகாரங்களை அவர்கள்தான் கவனித்து வந்தார்கள்.

நன்றி: தெகல்கா 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
http://viduthalai.in/new/page-2/4658.html

Wednesday, March 2, 2011

மருத்துவமனைகளைவிட மருத்துவ மனங்கள் முக்கியம்(வாழ்வியல் சிந்தனைகள்)

கோவையின் தொண்டறச் செம்மல் டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் அவர்களது மிகப் பரந்து வளர்ந்தோங்கி நிற்கும் மருத்துவ, கலை அறிவியல், கணினித் துறை, செவிலியத் துறை முதலிய பல்கலைக் கல்விக் கூடங்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சீரிய செயலாற்றல் மிக்க புத்தாயிரத்து இந்தியக் குடிமகன் என்ற விருது வழங்கி, அவர்களை ஊக்க, ஊட்டச் சத்தாக இளைய தலைமுறை யினருக்குக் காட்டி எழுச்சியூட்டக் கூடிய தனித்தன்மையான விழா எடுத்து பெரு மிதம் சேர்க்கிறார்.

இவ்வாண்டு ஆந்திராவின் மிகப் பெரிய நிருவாகியும், சேவையாளருமான வெங்கட் சங்கவள்ளி எம்.பி.ஏ. அவர் களுக்கும், எனக்கும் விருது அளித்துப் பெருமைப்படுத்தினார்.

எனக்கு இது மிகவும் சங்கடமாக அமைந்தபோதிலும், 26 ஆண்டுகளுக்கு முன் (1985 வாக்கில்) எனக்கு கோவை யில் மாரடைப்பு (Heart Attack) முதன் முதலில் நள்ளிரவில் திடீரென்று வந்த நிலையில், அவரது கே.ஜி. மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரு டைய அருமையான சேவை, கவனிப்பு கண்காணிப்பு மூலம் நான் மீண்டும் புதுவாழ்வு பெற்றேன் என்பதால் அவரது விருப்பத்தை அன்புக் கட்டளையாகவே ஏற்று மறுப்பேதுமின்றி ஒப்புக் கொண்டு சென்றேன் - இணையரோடு.

அவ்விழா எளிமை, இனிமை, விருந் தோம்பல், உற்சாகம், மாணவ சமுதாயத் தின் எடுத்துக்காட்டான கட்டுப்பாடு - இவைகளின் எடுத்துக்காட்டாக நடை பெற்ற விழாவாகும்!
கூட்டுக் குழு வெற்றி (Team Spirit) என்பது அன்னார் அருமைச்செல்வன் அசோக் பக்தவத்சலம் தலைமையில் அவரது சக கூட்டுப் பணித் தோழர்கள் உற்சாகத்துடன் தொண்டாற்றி மகிழ்ந் தனர்!

அதில் பாராட்டு விருது பெற்ற பெருந்தகையாளர் வெங்கட் சங்கவள்ளி அவர்கள் ஆந்திராவின் நிறுவனமான சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் வளர்ந்தோங்கிட மூல காரணமானவர்.

அவர் தந்த திட்டம்தான் இப்போது தமிழ்நாட்டில் நாம் கலைஞர் ஆட்சியில் மக்கள் உயிர் காக்கும் திட்டமான 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆந்திராவில் அறிமுகப்படுத்த காரணமானவராக கருத்துரை கூறியவர் என்று அறிமுகப் படுத்தினார்.

திரு. வெங்கட் அவர்கள் பேசும்போது ஒரு முக்கிய தகவலைக் கூறினார் - வியத்தகு செய்தி.

இந்த ஆம்புலன்ஸ் சர்வீஸ் துவக்கப் பட்டதிலிருந்து சுமார் 65,000 தாய்மார் களின் மகப்பேறு (பிரசவங்கள்) நடைபெற்றுள்ளதாகவும், சுமார் 40 லட்சம் பேர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டி ருப்பதாகவும் குறிப்பிட்டு, கேட்டவர்களை மிகவும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக் கினார்கள்!

அதற்கு முதலில் கிராமங்களில் உள்ள தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் கயிற்றுக் கட்டிலில் வைத்து பல மைல் தூக்கிச் சென்று, வழியிலேயே சரியான மருத்துவ வசதி கிட்டாத தினால் இறந்தவர்கள் பலர் என்பது இப்பொழுதும் மாற்றப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் - திருவாரூர் - மயிலாடு துறை சாலையில் உள்ள கங்களாஞ் சேரியிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் பக்கத்து மற்றும் சுற்று கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்த போது அங்கே பெரிதும் விவசாயிகளான அன்றாடம் பணிபுரியும் இருபாலர் -பெரிதும் தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதர - சகோதரிகள் நிறைந்த பகுதி என்ற நிலையில் நான் கண்ட காட்சி மனதை மிகவும் நெருடச் செய்தது!

கயிற்றுக் கட்டிலில் வைத்து பிரசவ வலியால் துடிக்கும் ஏழை - எளிய தாய்மார்களை திருவாரூருக்கோ, நாகூருக்கோ அழைத்துச் செல்லும் (தூக்கிச் செல்லும்) காட்சியைக் கண்டு, அந்தப் பகுதியில் எப்படியாவது ஒரு மகப்பேறு மருத்துவமனை தொடங்கிடத் திட்டமிட்டு, இன்று சோழங்கநல்லூரில் (திருவாரூர்) அந்த கங்களாஞ்சேரி - நாகூர் சாலையில் நிலத்தைப் பெற்று பெரியார் மருத்துவமனை பல படுக்கை வசதிகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது; (அரசுகளின் எந்த உதவியும் இதற்குக் கிடையாது; இன்னமும் கிட்டவில்லை என்றாலும்) சிறப்பாக நடைபெறுகிறது.

மருத்துவ வசதிகள் எங்கணும் சிறப் புடன் நடைபெற மருத்துவமனைகள் மட்டும் போதாது; மருத்துவ மனங் களும் தேவை.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்த கிராமப்புற இளைஞர்கள் (இருபால்) கூட, கிராமங்களில் போய் தங்கி மருத்துவ சேவை செய்ய முன் வர மறுக்கிறார்கள் - அரசு சம்பளம் விகிதம் தந்தாலும்கூட மருத்துவர்கள் கிடைப்பதில்லை.

இதற்கொரு திட்டம் 108 ஆம்புலன்ஸ் போன்று அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும் போலும்!

என்ன செய்வது! பணமே வாழ்க்கை என்றாகிவிட்டதால் குணம் விடை பெற்று, பணம் ஆட்சி செய்து, மக்களை பிணம் ஆக்கும் கொடுமை நீடிக்கிறது!

நிலைமை மாறும் - கலைஞர் போன்ற மனிதநேயர்கள் ஆட்சியில். அதற்கும் ஒரு விடையும் - விடியலும் கிடைக்கும் என்று நம்புவோமாக!

கருஞ்சட்டைக் கடலே, கை வரிசையைக் காட்ட வருக! வருக!! பட்டுக்கோட்டையாம் பாடி வீடு அழைக்கிறது! அழைக்கிறது!!

அஞ்சா நெஞ்சன் அழகிரி
பட்டுக்கோட்டை என்றாலே சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை என்று பொருள். இந்தக் கோட்டையிலிருந்து கிளம்பிய சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் ஏராளம், ஏராளம்! கருஞ்சட்டைக் காளையர்கள் கணக்கற்றவர்கள்!

அஞ்சா நெஞ்சன் அழகிரி என்ற சொல்லை உச் சரிக்கும் போதே உடலின் ஒவ்வொரு அணுவும் புல்லரிக்கும். அரிமாவின் கர்ச்சனை என்பார்களே, அது அவருக்கே பொருந்தும்.

ரத்தம் கக்கக் கக்க தன்மான எரிமலைக் குழம்பை யொத்த உரையை, மரத்துப் போன தமிழர்களின் உடலில் சூடேற்றும் வண்ணம் பொழிந்தவர் அவர். ஆண்டு அரை நூறு அடைவதற்கு முன்பே இயற்கை அவரைக் கொத்திக்கொண்டு போய்விட்டதே!

இன்னும் எத்தனை எத்தனையோ மாவீரர்கள் உண்டு. இன்று நூறு வயதைத் தொட்டுக்கொள்ளத் துடிக்கும் மாமுண்டி என்று அன்போடு அழைக்கப்படும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நா.இராமாமிர்தம் அவர்கள் வரை எடுத்துச்சொல்ல ஆரம்பித்தால் அதுவே ஒரு தொகுப்பாக வளரும்.

இந்த ஊரிலே எத்தனை எத்தனையோ மாநாடுகள்!

அதிலே ஒரு குறிப்பிடத்தக்க மாநாடுதான் 1929ஆம் ஆண்டு மே மாதம் 25, 26 நாள்களிலேயே நடைபெற்ற முதலாவது தமிழர் மாகாண சுயமரியாதைத் தொண்டர் கள் மாநாடாகும். தொண்டர்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட முதல் மாநாடு என்ற மகுடத்திற்குரியது அந்த மாநாடு. அந்த மாநாட்டில் பங்கேற்ற பெருமக்கள் யார் யார்? குடிஅரசு (12.5.1929) பட்டியலிடுகிறது-இதோ,

26ஆம் தேதி மகாநாடன்று தஞ்சை திருச்சி ஜில்லா சுயமரியாதை மகாநாடு பட்டுக்கோட்டையிலேயே நடைபெறும். சர்வகட்சி பார்ப்பனரல்லாதாரும் மகா நாட்டுக்கு விஜயமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாகாண முழுவதுமுள்ள சங்கங்கள் மற்ற கட்சி நண்பர்கள் தங்களூரிலிருந்து எத்தனைப் பிரதிநிதிகள் விஜயமாகின்றார்கள் என்ற விவரத்தை வரவேற்புக் கழகத்திற்கு அறிவிக்கக் கோருகிறோம்.

மகாநாட்டிற்கு சென்னை அரசாங்க சட்ட மெம்பர் கனம் திவான் பகதூர் எம்.கிருஷ்ணன் நாயர் அவர்கள் வைக்கம் வீரர் திரு.ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் திருஉருவப்படத்தைத் திறந்து வைப்பார்.

அவ்வைபவத்திற்கு இரண்டாவது மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் தலைமை வகிப்பார். மகாநாட்டுப் பந்தலில் சட்ட மெம்பர் திவான்பகதூர் எம். கிருஷ்ணன்நாயர், திரு.ஈ.வெ.ராமசாமியார் திரு.பி.டி. ராஜன் முதலிய தலைவர்களுக்கு வரவேற்பளிக்கப்படும். உபசாரப் பத்திரமளிப்புக் கூட்டத்திற்கு தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் ராவ் பகதூர் ஏ.டி.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.

சுயமரியாதைத் தொண்டர்கள் மாகாண மாநாட்டிற்கு ரிவோல்ட் உதவி ஆசிரியர் திருவாளர் எஸ்.குருசாமி அவர்கள் தலைமை வகிப்பார். காரைக்குடி குமரன் ஆசிரியர் திரு.சொ.முருகப்பர் மாநாட்டைத் திறந்து வைப்பார்.

திருச்சி திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் சுயமரியாதைக் கொடியை உயர்த்துவார்.

உயர்திரு. கைவல்ய சாமியாரின் திருஉருவப்படத்தை திரு.கே.வி.அழகர்சாமி திறந்து வைப்பார்.

அவ்வைபவத்திற்கு திரு.சாமி சிதம்பரனார் தலைமை வகிப்பார்.

மகாநாட்டிற்குக் கட்டணம் அடியிற்கண்டவாறு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

வரவேற்பு அங்கத்தினர் ரூ.5

பிரதிநிதி ரூ.2

மாகாண சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாட்டு பொக்கிஷதார் திரு.எஸ்.கே.சிதம்பரம் அவர்கள் மகாநாட்டின் நன்கொடை வசூலிக்கவும், வரவேற்புக் கழக அங்கத்தினர்கள் சேர்க்கவும் வெளி ஜில்லாக்களில் சுற்றுப் பிரயாணம் செய்கிறார். 5,6 நாட்கள் வரையில் திருச்சி, நாமக்கல், சேலம் தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் முதலிய இடங்களுக்குச் செல்வார். அந்தந்த ஊர் சகோதரர்கள் தக்க ஆதரவு காட்ட வேண்டுகிறோம்.

-வரவேற்புக் கழகத்தார்.

மாநாடு முடிந்தவுடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது பொதுக்கூட்டத்திற்கு சிவகங்கை வழக்குரைஞர் இராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

காரைக்குடி குமரன் இதழின் ஆசிரியர் சொ.முரு கப்பா உரையில் கேலியும், கிண்டலும் பீறிட்டுக் கிளம்பின. இந்து மதத்தின் ஆபாசமும், பார்ப்பனர் ஏற்படுத்திய புரட்டும் என்பது தலைப்பானால் முருகப்பா போன்றோர்களின் பேச்சைப் பற்றிக் கேட்கவும் வேண் டுமோ! பேச்சின் கால அளவு இரண்டு மணிநேரம்.

அந்தப் பேச்சு வெறும் கேலி, கிண்டலோடும், சிரிப்பை வரவழைத்ததோடும் நின்று விட்டதா? அதுதான் இல்லை.

அது பற்றி குடிஅரசு (2.6.1929) எழுதுகிறது:

முருகப்பாவின் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண் டிருந்தவர்களில் நாமத்தை அழித்தவர்கள் பலரும், ருத்திராட்சத்தைப் பிடுங்கி எறிந்தவர்கள் பலரும், கூட்டத்தில் பிடுங்கி எறிய சங்கோஜப்பட்டு மறைத்துக் கொண்டவர்கள் பலரும், நாமக்காரர்களையும், விபூதிக் காரர்களையும், பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பவர்கள் பலரும், விஷயங்களை எங்கு வினயமாய்க் கவனித்து இதுவரையிலும் தாங்கள் மவுடிகத் தன்மானவும், மூடத் தனமாகவும் நடந்து வந்ததையும் மாற்றிக்கொண் டவர்கள் பலருமாய் இருந்த காட்சி அற்புதக் காட்சியாக இருந்தது,

கலப்பு மணம், விதவை மணம் சம்பந்தமான தீர்மானம் வந்தபோது தலைவர் அத்தீர்மானத்தை நடவடிக்கையில் நடத்தக்கூடியவர்களை எழுந்து நிற்கும்படி கேட்டபோது சுமார் 200 வாலிபர்களும் 2,3 பெண்களும் எழுந்து நின்ற காட்சி, எல்லாக்காட்சிகளையும் விட மேலான காட்சி யாயிருந்தது என்று குடிஅரசு குறிப்பிட்டிருப்பதைப் படிக்கும்பொழுது விம்மிதம் கொள்கிறோம்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகக் குருதியில் குடைந்து ஊறிக்கிடந்த பழக்க வழக்கங்களை அதன் அடிவேர், சல்லிவேர் வரை சென்று ஒரு மாநாடு-ஒரு பொதுக்கூட்டம் பிடுங்கி வெளியில் எறிகிறது என்றால், இந்தச் சாதனைக்கு நிகரானதை எந்த நிகண்டுவில் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?

அந்த உணர்வு இன்றைக்கும் கூடத் தேவைப்படு கிறது. பார்ப்பனீயம் பல வகைகளில் மாறுவேடம் தரித்து தன் அற்பப் புத்தியை அரங்கேற்றிக் கொண்டுதானிருக் கிறது. அதற்கு அவ்வப்போது சூடு கொடுக்கவும், நம்மக்களுக்குச் சூடு, சொரணையை ஏற்படுத்தவும் கழகத்தின் மாநாடுகளும், பிரச்சாரங்களும் தேவைப் பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில் கழகத்தின் சார்பில் அலை அலையாக மாநாடுகள் நடத்தப்பட்டது வேறு எந்தக் காலகட்டத்திலுமே கிடையாது.


2011ஆம் ஆண்டு தொடக்கமே களை கட்டியது!

உலக நாத்திகர்கள் மாநாட்டை திருச்சி மாநகரில் நடத்திக்காட்டி (2011, சனவரி 7,8,9) உலகத்தையே நம்மை நோக்கிப் பார்க்க வைத்தோம்.

இதோ மார்ச் 5ஆம் தேதி பட்டுக்கோட்டையில் மகத் தான பேரணியுடன்கூடிய தஞ்சை மண்டல இளைஞரணி மாநாடு. கழகப் பாரம்பரிய மிக்க பட்டுக்கோட்டைப் பாசறையில் கழக இளைஞர்கள் கூடி எக்காளமிட இருக்கின்றனர்.

தேர்தல் களம் சூடு கிளம்பும் ஒரு காலகட்டத்தில், தமிழ் மண்ணை இனமான நெருப்புச் சூளையாக வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நமது கழகத்திற்கு இருக்கிறதே!

ஆரியர்- திராவிடர் போர் என்று அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கும் கலைஞரே ஆவேசத்துடன் அறிவித்துவிட்ட நிலையில், நமது மாநாட்டுக்குக் கூடுதல் உத்வேகமும் பொறுப்புணர்ச்சியும் தானாகவே வந்து சேர்ந்துவிட்டது.

ஊழலைப்பற்றிப் பார்ப்பனர்களா பேசுவது? அவர் களின் பிறப்பே ஊழல் தன்மையானது. (அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்றால், அதன் பொருள் இதுதானே?).

அவர்கள் நடப்பே ஊழல் மயமானது! கடவுளிடம் காணிக்கை என்னும் லஞ்சம் கொடுத்து கரையேறப் பார்க்கும் கயமைத்தனமானது.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப் பானுக்கே மோட்ச லோக டிக்கெட் கொடுப்பதற்கு-பசுமாட்டுக்குப் புல் போட்டாலேபோதும் என்கிற அளவுக்குக் கையூட்டுக்குப் பெயர் போனது.

இந்து மதமே ஊழல்மயம்தானே?

மதத்தையும், ஜாதியையும், கடவுளையும், மூடநம்பிக் கைகளையும் விமர்சிக்கும் ஒரே ஒரு முதல்வர் உலகி லேயே நமது மானமிகு கலைஞர்அவர்கள்தாம்!

தமிழர் தலைவர் மிக நேர்த்தியாகச் சொன்னது போல நெருக்கடி கால எரிமலையையே விழுங்கி ஏப்பமிட்டவர் அவர்!

இளைஞர்களைத் தயார் செய்ய வேண்டும். சினிமா மாயை என்னும் தொற்று நோய்க்குப் பலியாகாமல், பகுத்தறிவுத் தடுப்பூசி போடும் கடமை சமுதாய மருத்துவப் பாசறையாம் நம்மைச் சார்ந்தது.

பட்டுக்கோட்டையில் ஒரு திட்டத்தோடு சந்திப்போம். பட்டுக்கோட்டை கொடுக்கும் குரல் தமிழ் மண்ணையே அதிரச் செய்யட்டும்!

அரிமாக்களே, அவசியம் வாருங்கள்! தமிழர் தலைவர் அழைக்கிறார். தன்மான முரசு கொட்டுவோம், தவறாமல் கூடுங்கள்! கூடுங்கள்!!

என்ன தைரியம் இருந்தால் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் தெய்வத்தைத் துணை கொண்டு தேர்தலில் குதிப்போம் என்று கூப்பாடு போடுவார்கள்?

அந்த ராமன் தெய்வத்தைத்தான் சேலத்திலேயே பார்த்தோமே! ராமன் கை கொடுத்தானா? - பெரியார் ராமசாமி (ராமனுக்கே சாமி) கை கொடுத்தாரா? என்பது நாட்டுக்குத் தெரியுமே!

கருஞ்சட்டைக் கடலே,
கை வரிசையைக் காட்ட வருக! வருக!!
பட்டுக்கோட்டையாம் பாடி வீடு
அழைக்கிறது! அழைக்கிறது!!
தங்கள் வருகையைத் தருக! தருக!!

மின்சாரம்

http://viduthalai.in/new/home/archive/4487.html

weather counter Site Meter