Pages

Search This Blog

Sunday, March 13, 2011

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற இரு நாள் நிகழ்ச்சிகள் திரைப்படம்-நாடகம்-பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் சார்பில் இருநாள்கள் நடைபெறும் நிகழ்ச் சியில் பகுத்தறிவுத் திரைப்படம்- அண் ணாவின் நாடகம், பெரியார் விருது வழங்கல் விழா ஆகிய நிகழ்ச்சிகள் உணர்ச்சி மயமாய் நடைபெறு கின்றன. நிகழ்ச்சியின் நிறைவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உரையாற் றுகிறார்.


தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழா ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கோடைகால விழாவாக கொண்டா டுவது வழக்கம்
15 ஆம் ஆண்டு விழா
இந்த ஆண்டு தந்தை பெரியார் முத் தமிழ் மன்றம் 15ஆம் ஆண்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் 15.3.2011 அன்று மாலை 6.30 மணிக்கு முதல்நாள் நிகழ்ச்சி துவங்கி நடைபெறு கிறது. சிந்திக்கத் தூண் டும் பகுத்தறிவுத் திரைப் படம் காட்டப்படு கிறது. பொதுமக்கள்-இனவுணர்வாளர்கள் கண்டுகளிக்கலாம்.
இரண்டாம் நாள் விழா
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற இரண் டாம் நாள் விழா 16.3.2011 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் எழுச்சிகர மாய் தொடங்கி நடக் கிறது. வரியியல் அறி ஞர் ச.இராசரத்தினம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசுகிறார்.
பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கு ரைஞர் கோ.சாமிதுரை, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றுகின் றனர்.

திராவிடர் கழக தலைமை நிலையச் செய லாளர் வீ.அன்புராஜ் அனைவரையும் வர வேற்று உரையாற்று கின்றார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரை நிகழ்த்து கின்றார்.

கவிஞர் செ.வை.ர. சிகாமணி இணைப்பு ரையாற்றுகின்றார்.

அவன் பித்தனா?அண்ணா நாடகம்
அடுத்து திராவிடர் கழக கலைத்துறை அமைப்பாளர் மு.அ. கிரிதரன் அவர்களின் முயற்சியால் அறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய அவன் பித்தனா? என்ற மிகச் சிறப்பான நாடகம் நடைபெறும்.

இந்நாடகத்திற்கு பிரபல திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் தலைமை வகித்துப் பேசுகிறார்.

கி.வீரமணி, விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்
ஓவியர் டிராட்ஸ்கி மருது, வளர்ந்து வரும் தொழில்முனைவர்கள் ஆர்.கருணாநிதி, த.ரமேஷ் ஆகியோ ருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி விருது வழங்குகிறார்.

நிறைவாக திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரை யாற்றுகிறார்.
நிகழ்ச்சியின் முடிவில் இறைவி நயினார் நன்றியுரையாற்று கின்றார்.


No comments:


weather counter Site Meter