Pages

Search This Blog

Sunday, October 31, 2010

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி! தமிழ்க் கடல் மறைமலை அடிகள் கூறுகிறார்

வட நாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீப + ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும். ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.

ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்

நூல்: தமிழர் மதம் பக்கம்: 200-201

மறைமலை அடிகள் ஆன்மிகவாதிதான். அவரே கூறுகிறார் தீபாவளி பார்ப்பனர் புனைவு என்று. தமி ழர்களே நீங்கள் தீபாவளியைக் கொண்டாடலாமா?

சிந்திப்பீர்!
http://www.viduthalai.periyar.org.in/20101031/news06.html

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?

திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின் றும், காமக்களியாட்டங்களை நடத்தினர்.

புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத் தாரில் சிலரை போதைப் பொருள் களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தை யும், உடலையும் பார்த்து பலர் அவர் களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணை-யுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர்.

ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர் களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரிவிக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன் னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தையும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்-களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்-கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத்திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி, ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந் திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப் பட்டுள்ளன.

மேலும் மேற்கண்ட அசு ரர்களை அழித்த இந்திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக்கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர்களின் மணிக்-கட்டை முறி, தோலைக் கிழி, முழங்-கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப் படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண்டாக வெட்டு, நீர்ப்பானை யில் வைத்து வேகவை, பூமி விழுங் கட்டும், படுபாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாச மாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளை-யடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்-கின்றனர்.

இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய் வர். அதனால் அவர்களுக்கு சோம ரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்-களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.

அவற்றில் இரணியாட்சன், நர காசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந் தன், ராவணன், கும்பகர்ணன், இந்திர ஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திரா விடர்களின் பெயர்கள் வரு-கின்றன. அவர்களுக்கு உதவிய துரோகி-களை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திரா விடர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுர குலத்தை, தாஸ இனத்தை, பழை மையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திரா-விடர் களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூ-தனர், பிசாசு, பூதம் என்று குறித் துள்ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்து பவர். அசுரன் என்றால் மது அருந்தாத வர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.

இந்த முறையில் மக் களின் மூளைக்கு விலங்-கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக் கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர்.

இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்-துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்-பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டி-கை-கள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறி வும் இல்லாமல் தங்-களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

விடுதலை, 27.10.௨௦௦௫
http://www.viduthalai.periyar.org.in/20101031/news12.html

Saturday, October 30, 2010

சமூக வலைத்தளம்(Social Networking Site) ஒன்றில் நடந்த விவாதம்

சமுக வலைத்தளம் ஒன்றில் பின்வரும் செய்தி பதியப்பட்டு இருந்தது

இதோ அந்த செய்தி :
கா.சு. பிள்ளை கேட்கிறார்
தமிழர்கள் தீபாவளி கொண்டாடலாமா?



தீபாவளிப் பண்டிகை தமி ழருக்கு உரியதாகத் தோன்றவில்லை. நர காசுரன் என்ற ஓர் அசு ரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண் டிகை வழக்கத்தில் கொண் டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும், சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப் பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திரா விடர்களும் அடங்குவர். ஆதலில் அசுரர் கொலைக் காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.

- தமிழ் அறிஞர் கா. சுப்பிரமணியன் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழர் சமயம் எனும் நூல் பக்கம் 62

கா.சு. பிள்ளை பக்தர்தான் - சைவ மெய்யன் பர்தான். ஆனாலும், தீபாவளி கொண்டாடக் கூடாது என்கிறார் - பக்தர்களே சிந்திப்பீர்!


மேற்கண்ட அந்த பெட்டி செய்திக்கு நண்பர் ஒருவர் கேட்டார் "சரி...அவரை போல நெற்றியில் பட்டை அடித்து சாதி பெயரை வைத்து கொள்வது பற்றி உங்கள் கருத்து?"

இதோ அவருக்கு நான் அளித்த பதில் இந்த பதில் :

சாதி பெயரை அந்த காலத்தில் குறிப்பிடுவது மரியாதையாக கருதப்பட்டது .பெருபாலான தலைவர்கள் அந்த காலத்தில் அவ்வாறே அழைக்க பட்டனர்.
ஏன் பெரியாரையே மற்றவர்கள் நாயக்கர் என்றும்,திரு.வி.வை முதலியார் என்றும்,தியாகராயரை செட்டியார் என்றும்,ஏன் அண்ணாமலை ...பல்கலை கழகத்தை தோற்றுவித்த அண்ணாமலை அவர்களையும்,அவரின் மகன் முத்தையாவை யும் செட்டியார் என்றும் தான் இன்றும் அலுவலக குறிப்பில் கூட குறிப்பிடுகிறார்கள். இதை போல இன்னும் பலர் அவ்வாறே அழைக்க பட்டனர்.இவ்வாறு அழைக்க பட்டபோது சில பெயர்கள் உதாரணதிற்கு கா. சுப்பிரமணியன் பிள்ளை யை கா.சு பிள்ளை என்றே அழைத்தே சுப்பிரமணியன் பிள்ளை,கா.சு பிள்ளை யாக பல பேருக்கு அறிமுக படுத்த பட்டுள்ளார்.எனவே மற்றவர்களுக்கு சுப்பிரமணியன் பிள்ளை என்றால் தெரியாது அல்லது புரியாது .

இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் அரசியல் வாதிகள் சாதி பெயரை போட்டுகொள்வதற்கே யோசிக்கிறார்கள் அல்லது வெட்கப்படுகிறார்கள்.

மாறாக மற்ற மாநிலங்களில் அரசியல் தலைகளை எடுத்துகொண்டால் ரெட்டி என்றும்,கவுடா என்றும்,நாய்டு என்றும்,ஜோஷி என்றும்,சர்மா என்றும் ...இன்னும் பல சாதி பெயரை இன்றும் பயன் படுத்துகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் இன்று அத்தகைய நிலை இல்லை.

பட்டை யார் தான் அடிக்கவில்லை பார்ப்பான் முதல் பறையர் வரை அடித்து கொள்ளுகிறார்கள்.
அவர்களின் நெற்றியில் உள்ளதை பொய் நாம் அழிக்க முடியாது .அது முறையும் அல்ல.

இங்கே காசு பிள்ளை பயன்படுத்த பட்டதே அவர் பக்தாரக இருந்தும் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் அப்படியாவது பக்தர்கள் கொஞ்சம் சிந்திப்பார்கள் என்பதற்காக தான்.

ஒருவன் ஆத்திகராய் இருந்தாலும் அவருடைய கருத்து நம் கருத்தோடு ஒன்றும் பொது அதை ஆதரிப்பது பெரியார் காலத்திலிருந்தே கடை பிடிக்க கூடிய ஒன்று.
சோவும்,சங்கராச்சாரியும் தீபாவளி கொண்டாட வேண்டாம் என்றால் அதையும் ஆதரித்து எழுதுவோம்.அதனால் அவர்களை முழுமையாக ஏற்று கொண்டுவிட்டோம் என்று சொல்ல முடியாது.அடிப்படை கொள்கைகளில், சிலர் ஆதரிக்கும்போது அதை ஆதரிப்பதும்,முரண்படும்போது எதிர்ப்பதும் அப்படித்தான்.இத்தைகைய முடிவுகள் கொள்கையை அடிப்படையாக கொண்டதே தவிர தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பொருத்து அல்ல.அரசியலிலும் இதே நிலை பாடுதான். ஆகவே இதை புரிந்து கொள்ளாத ,புரிந்து கொள்ள மறுக்கிற மக்களை பற்றி கவலை இல்லை.எங்கள் பின்னால் தான் மக்கள் வர வேணுமே தவிர பாமர மக்களுக்காக கொள்கையில் சமரசம் செய்து கொண்டு அவர்கள் பின்னால் செல்பவர்கள் அல்ல நாங்கள்.

அனைத்து சாதிகார்களும் அர்ச்சர்கர் உரிமையை கூட ஆதரிக்கிறோம் எதற்க்காக ? உதாரணத்திற்கு நான் நாத்திகன் ,என் சகோதரன் ஆத்திகன் என்று வைத்து கொள்வோம். என் சகோதரனை ஒருவன் நீ தீண்ட தகாதவன் கோவிலுக்குள் வராதே நீ அர்ச்சனை செய்தால் கடவுள் தீட்டாகி விடுவார் வெளியே நில் என்று கூறினால் நான் நாத்திகனாய் இருந்தாலும் கோபம் வரும் தானே எதற்காக அவனை உள்ள விடமாட்டேன் என்கிறிர்கள் என்று கேட்பேன் தானே.அது தான் சுயமரியாதை .

அந்த சுயமரியாதை கொள்கை அடிப்படையிலே இந்த அனைத்து சாதியினரும் அரச்சர்கர் சட்டத்துக்கு ஆதரவும் போராட்டமும்.

பார்பனர்கள் உச்சாணி கொம்பாக எதன் அடிப்படியில் இருக்கிறார்கள்.இந்த கடவுளையும்,கோவிலையும் வைத்து தானே?அந்த கடவுளை வைத்து தானே தானை உயர் சாதியாக பிரம்மா படைத்தார் என்கிறார்கள் அந்த இழிவும் ஒழிக்க பட்டு விடுமே.

நாளைக்கே அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் உரிமை கிடைத்து விட்டால் உள்ளே மணி ஆட்டுபவர் எல்லாம் நம்மாள் ஆதலால் கோவிலுக்கு செல்லுங்கள் என்று பிரச்சாரம் செய்ய மாட்டோம் .

அப்போதும் கடவுள் இல்லை .கடவுள் இல்லவே இல்லை கடவுளை கற்பித்தவன்  முட்டாள் பரப்பியவன் அயோக்கியன் வணங்குபவன் காட்டு மிராண்டி என்று தான் சொல்லுவோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் உரிமை கிடைத்து விட்டால் நாளைக்கு பார்பனர்கள் எல்லாம் ஒன்றும் கூடி கடவுளுக்கு சக்தி இல்லை.யாரும் கோவிலுக்கு செல்லாதிர்கள் என்று ஒவ்வொரு கோவிலின் வாசலில் நின்று பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் .

ஆகவே பார்பனர்களும் தி.க வினுடைய கொள்கைகளை கடை பிடிப்பவர்கள் ஆகி விடுவார்கள் .
அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்வது அவர்களின் இன நலத்திற்காக இருக்கும்.நாங்கள் சொல்வது திராவிட மக்களின் முன்னேற்றதிக்கானதாக இருக்கும்.

இது தான் பெரியாரியலின் பால பாடமும் கூட.இத்தைகைய புரிதல் என்பது படித்த மேதாவிகளுக்கு கூட கிடையாது பிறகு எப்படி பாமரர்களுக்கு இருக்கும்.இதனால் தான் நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்று சொல்கிறோம்.ஏன் நாங்கள் எல்லாம் இல்லையா என்று கேட்பவர்கள் மேற்கண்ட புரிதல் கொண்டு இருக்கிறார்களா என்பதே என் கேள்வி?

வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு !

இது தான் நான் அளித்த பதில் .இதை இங்கே சொல்ல காரணம் இதை போல் புரிதல்  இல்லாத தோழர்களும்,பெரியோர்களும் உள்ளனர் என்பதற்காகவே .

நன்றி :அசுரன் திராவிடன்

வரதட்சணைக் கொலைகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் கண்டிப்பு

- வரதட்சணைக் கொடுமை காரணமாக நடைபெறும் கொலை களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டிப் புடன் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்தியநாராயண திவாரி என்பவர் தனது மனைவி கீதா என்பவரை கடந்த 2000 ஆம் ஆண்டு நவம் பர் 3ஆம் தேதி அன்று கொலை செய்தார். திவாரியும் அவருடைய தாயாரும் சேர்ந்து கீதா வின் கழுத்தை நெரித் துக் கொன்று, தீ வைத்து எரித்தனர். கொலை செய்யப்படும் போது, கீதாவின் வயது 24 ஆகும்.

இது தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டம் 304-பி பிரிவின் கீழ் வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த செசன்சு நீதிமன்றம், திவாரி மற்றும் அவரு டைய தாயார் இருவரை யும் விடுதலை செய்தது. அதை எதிர்த்து காவல் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப் பட்டது. அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இரண்டு பேருக்கும் ஆயுள் தண் டனை விதித்து தீர்ப் பளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவரும் உச்சநீதி மன்றத்தில் மேல் முறை யீடு செய்தனர். அந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. விசா ரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டது.

அப்போது, வரதட் சணைக் கொலைகளுக்கு எதிராக நீதிபதிகள் கடு மையான கருத்துகளைக் கூறினார்கள். அந்தக் கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரி வித்தனர். திவாரி மற்றும் அவருடைய தாயார் இரு வருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.

தீர்ப்பளித்தபோது, நீதிபதிகள் கூறியதாவது:-

வரதட்சணைக்காக மணமகளைக் கொல் லும் கொடூரச் செயல் களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண் டும். மேல்முறையீடு செய்துள்ள குற்றவாளி களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுப்ப தற்கு எந்த காரணமும் இல்லை. உண்மையில், இதுபோன்ற வரதட் சணைக் கொலைகளுக்கு இந்திய தண்டனை சட் டம் 302ஆம் பிரிவின் (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்து மரண தண்டனை வழங்க வேண்டும். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்த வரை 302ஆம் பிரிவில் குற்றஞ்சாற்று பதிவு செய்யப்படவில்லை. வரதட்சணை கொடுமை சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. எனவே, எங்களால் மரண தண்டனை விதிக்க முடியவில்லை. இதுபோன்ற மணமகள் எரிப்பு வழக்குகள் அனைத்துமே அரிதி லும் அரிதான வழக்குக ளாகவே கருதி மரண தண்டனை விதிக்க வேண்டும்.

பெண்களிடம் மரி யாதை காட்டுவதே ஆரோக்கியமான சமுதா யத்துக்கு அடையாளம். ஆனால், இந்திய சமு தாயம் நலிவடைந்து வருகிறது. மணமகள் எரிப்பு அல்லது தூக்கில் தொங்குவது போன்ற வழக்குகள் நாட்டில் சாதாரணமாகி விட்டன. நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் குவிந்து கிடக்கும் ஏராளமான வழக்கு களே இதற்கு ஆதாரம்.

வரதட்சணைக்காக மணமகளை எரித்துக் கொல்வது, கழுத்தை நெரித்து தூக்கில் தொங்க விடுவது, மண்எண் ணெயை ஊற்றி எரிப் பது போன்றவை காட்டு மிராண்டித் தனமான செயல்கள் என்பது நிச் சயம். நாகரிக சமுதா யத்தில் ஏராளமான பெண்கள் இதுபோன்று கொடுமைப் படுத்தப் படுவது ஏன்? நமது சமுதாயம் எவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கு, அதற்கு உதாரணமாக இருக் கிறது.

பெண்களுக்கு எதி ரான இத்தகைய குற் றங்களை கோபத்தின் வெளிப்பாடு அல்லது சொத்துக்கான சாதா ரண குற்றங்களாகக் கருத முடியாது. இவை, சமூகக் குற்றங்கள். ஒட்டு மொத்த சமூகக் கட்ட மைப்புக்கும் ஊறு விளைவிக்கக் கூடியவை. பணத்தின் மீதுள்ள மோகத்தால் வரதட் சணை கேட்பதோடு, பின்னர் கூடுதலாகப் பணத்தைக் கேட்டு மனைவியைக் கொலை செய்வது நமது சமூகத் தில் நடைபெறுகிறது.

பின்னர், இதே கார ணத்துக்காக (பணத் துக்காக) மீண்டும் மீண் டும் திருமணம் செய்து கொண்டு மனைவியைக் கொலை செய்கின்றனர். ஏனென்றால், நம்மு டைய சமுதாயம் வர்த்த கமயமாகி விட்டது. அற்ப பணத்துக்காக மனைவியையே கொலை செய்யும் நிலைக்கு மக் கள் செல்கின்றனர். சமூ கத்தில் நிலவும் இத் தகைய கொடிய செயலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

-இவ்வாறு நீதிப திகள் தெரிவித்தனர்.
http://www.viduthalai.periyar.org.in/20101029/news11.html

காவிரி நீர்ப் பிரச்சினையும்- நடுவண் அரசும்!

தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்படவேண்டிய காவிரி நீர் வழக்கம்போல கருநாடகாவில் பிரச்சினையாக்கப் பட்டு விட்டது. 205 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு என்பது குறைந்தபட்சம் என்றாலும், அதனை அளிப்பதில்கூட வம்படியை வழக்கம்போலவே தொடங்கி விட்டது.

இதுவரை 84 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழ் நாட்டுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. 2.8 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் சாகுபடிக்கு நாள்தோறும் 1.5 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், கருநாடகம் அளித்து வருவதோ வெறும் ஒரு டி.எம்.சி.தான். நவம்பர் மாதம்வரை தண்ணீர் தேவைப்படும்.

முறைப்படி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கருநாடக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் எஸ். ராமசுந்தரமும், தமிழக அரசின் டில்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரனும் செவ்வாயன்று பெங்களூரு சென்றனர்.

இதற்கிடையே கருநாடக மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூட்டிக் கலந்து ஆலோசனை நடத்தினார். வழக்கம்போலவே, கட்சி வேறுபாடின்றி தமிழ்நாட்டுக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டும் தண்ணீர் தந்து விடக் கூடாது என்பதிலே குறியாக இருந்து சுருதி பேதம் இல்லாத வகையில் குழுக் கானம் பாடியுள்ளனர்.

இந்திய தேசியம் பேசும் காங்கிரசும், இதில் விதிவிலக்கு இல்லை. காஷ்மீர்பற்றி ஏதாவது மாறுபட்ட ஒரு கருத்தினைச் சொன்னால், ஆபத்து, ஆபத்து, தேசியத்துக்குப் பேராபத்து! என்று கூச்சல் போடும் இந்தக் கட்சிகள்தான், தேசியத்துக்கு உலை வைக்கும் வகையில் நதிநீர் பிரச்சினையில் நடந்துகொள்கின்றன.

தண்ணீர் என்பது ஒரு ஜீவாதாரப் பிரச்சினை யாகும். பொதுக் கண்ணோட்டத்தோடு அணுகப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்வளவுக்கும் கருநாடக மாநிலத்தில் உள்ள அணைகள் அத்தனையும் முழு அளவு நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஒற்றுமையையும், மனிதநேயத்தையும் காட்ட வேண்டிய இந்த ஜீவாதாரப் பிரச்சினையில், இப்படி முரண்டு பிடிப்பவர்கள்தானே இந்தியத் தேசியத்திற் கான முதல் எதிரிகள்?

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசும் சரி, உச்சநீதிமன்றமும் சரி, சரியாக நடக்கின்றன என்று எண்ணுவதற்கும் இடம் இல்லை. நடுவர் ஆணையம் பரிந்துரைத்து, உச்சநீதிமன்றம் உறுதி செய்து ஆணையிட்டதையே கருநாடக மாநில அரசு உதாசீனம் செய்கிறது என்றால், அதன் காதைத் திருகிச் செயல்பட வைப்பது மத்திய அரசு - மற்றும் உச்சநீதிமன்றத்தின் அடிப்படைக் கடமையல்லவா?

நீதிமன்றத்திற்கு ஏன் இதில் தள்ளாட்டம்? ஏற்கெனவே இதே உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி விற்பன்னர் குழு அமைக்கப்பட்டு, அது அறிக்கையை கொடுத்துவிட்ட நிலையில், மறுபடியும் ஆய்வுக்குழு எதற்கு? தனது ஆணையை தானே மறுக்கும் விசித்திரம் அல்லவா! இது வீண்காலம் கடத்தும் விபரீதப் போக்கு அல்லவா? பல லட்சம் ஏக்கர் விவசாயம் - பல லட்சம் விவசாயிகளின் வேலை வாய்ப்பு - பல கோடி மக்களின் உணவுப் பிரச்சினை என்பதெல் லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஒரு பிரச்சினையில் இப்படியா ஒரு அரசு நடந்துகொள்வது?

நடுவண் அரசாக நடந்துகொள்ளவேண்டிய நடுவண் அரசு அரசியல் பார்வையோடு நமக்கு ஏன் வீண்வம்பு! என்ற நிலையில் சற்றும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் நடந்துகொள்ளலாமா?

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இதில் உணர்ச்சிவயப்படாமல், வீண் வார்த்தைகளைக் கொட்டாமல் முறைப்படி பிரதமரிடம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சரிடமும் பிரதிநிதி களை அனுப்பியுள்ளார்.

இதற்குமேலும் ஒரு முதலமைச்சர் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? வீதியில் இறங்கிப் போராடவேண்டுமா? அதற்கும் தயாராக இருக்கக் கூடியவர்தான் என்றாலும், உணர்ச்சிமிகுந்த இந்தப் பிரச்சினையை இலாவகமாகக் கையாள வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாகத்தான் அடக்கிவாசிக்கின்றார்.

செய்தியாளர்கள் குடைந்து குடைந்து கேட்கும் போதுகூட ஏடுகளில் வெளிவந்துள்ள செய்தியை வைத்துக்கொண்டு, அவசரப்பட்டு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருக்கிறாரே! சட்டப்படி செயல்படுவோம் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தப் பண்பாட்டைப் பலகீனமாக எடுத்துக்கொள் ளக் கூடாது. இதனை அரசியல் தளத்திற்கு இழுத்துச் செல்ல இடம் அளிக்கக் கூடாது.

நியாயப்படியும், சட்டப்படியும் கருநாடக மாநில அரசு நடந்தகொள்ளத் தவறும் பட்சத்தில், தமிழ்நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடவும் தயங்கமாட்டார்கள்.

யாருக்கோ வந்த விருந்து என்று மத்திய அரசும், காங்கிரசும் நடந்துகொண்டால், ஏதோ ஒரு வகையில் மக்கள் தங்கள் சினத்தைக் காட்டத்தான் செய்வார்கள்.

கரணம் தப்பினால் மரணம் என்கிற இந்தப் பிரச்சினையில், மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு மத்திய அரசு நடந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளது என்று வலியறுத்துகிறோம்.
http://www.viduthalai.periyar.org.in/20101029/news06.html

Friday, October 29, 2010

பெரியார் போற்றிய பெண்ணியம்!


தந்தை பெரியாரின் தனித்துவம் பற்றி பகுத்தறிவுப் பகலவனின் அருமையான படப்பிடிப்பு `அவர் ஒரு விருப்பு-வெறுப்பற்ற பவுதிகத் தராசு என்பதை எடுத்துச் சொல்கிறது.

வழக்காடும் வன்மையில் தமிழ்நாட்டு வால்டேர்

முழக்குச் சிந்தனையில் முதியவர் சாக்ரட்டீஸ்

போதனைத் துறையில் புரட்சிசேர் புத்தன்

சாதனை புரிவதில் நபிகள் நாயகம்

பொருளியல் வகுப்பதில் புலமைசேர் மார்க்ஸ் கருத்து வண்ணத்தில் உருக்கு கன்பூசியஸ்

மறுத்துரை கூறலில் மதிப்புறு இங்கர்சால்

பழைமையைச் சாடலில் அறிஞர் பெர்னாட்ஷா

புதுமைகள் சேர்த்தலில் புயலெனும் ரூசோ

இத்தனைப் பேரின் மொத்தச் சரக்கவர்.

வைதீகர்க்கெல்லாம் ஒற்றைத் தலைவலி மெய்யறிவாளர்க்கோ மிதந்த பூங்காற்று விருப்பு வெறுப்பற்ற பவுதிகத் தராசு

மானுடசமத்துவம் என்ற விருப்பே தந்தை பெரியாரை சாதனைத் தலைவராய் செதுக் கியது. காலத்தின் நெருக்கடி பிரசவித்த பெம்மான் பெரியார் மட்டும் பிறவாது போயி ருந்தால் தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் இன்றைய முன்னேற்றம் கானல் நீரே. பல்வேறு நூற்றாண்டுகளை-அந்த நூற்றாண்டுகளில் தோன்றிய சிந்தனையா ளர்களின் சிந்தனைகளை உள்ளடக்கியவர் பெரியார் என்பது பேரறிஞர் அண்ணாவின் கணிப்பு. பெரியார் தனிமனிதரல்லர்- அவர் ஒரு வரலாறு

காலகட்டம்

திருப்பம் என்றும் புகழ்ந்தார் அண்ணா.

உலக அனுபவம் என்னும் கலாசாலை யில் முற்றுணர்ந்த பேராசிரியர்என்று பெரி யாரை போற்றினார் கல்கி. `பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக்கவிஞர்.

பாராட்டை எதிர்பார்க்காத ஈரோட்டுப் பாதையின் ஏந்தலான தன்மானத் தந்தை பெரியார்.

அனைத்துவித ஒடுக்குமுறைகளிலிருந் தும் மக்களை மீட்டெடுக்கும் பெரும் போரில் ஈடுபட்டார். அவரின் போராட்டத்தின் வெற்றி பெருமிதமான வாழ்க்கையை நம் மக்களுக் குத் தந்தது. அறிவில் திருவுண்டானது; ஆற்றலில் புதுவேகம் பிறந்தது; அடிமைத் தளை அகன்றது; எட்டா நிலையிலிருந்த வேலை வாய்ப்புப் பெற்றனர் மக்கள். காரணம் கிட்டா கனியாயிருந்த கல்வி கிடைத்ததால்! சமூகநீதி மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு அந்நீதி கிடைக்கச் செய்தவர் பெரியாரே! ஒடுக்கப்பட்ட இடத்தில் எல்லாம் பெரியார் நுழைந்தார்; உடைந்து நொறுங்கின ஆதிக்க கதவுகள்! பெரியாரின் எண்ணம் ஈடேறியது-ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமையால்!

ஒடுக்குமுறைகளிலேயே கீழான-மோச மான ஒடுக்குமுறை பெண்கள் மீதான ஒடுக்குமுறையே! ஜாதீய ஒடுக்குமுறை மைக்கும் கொடுமையானது பெண்ணிய ஒடுக்குமுறை. அதனால் தான் நாட்டின் விடுதலை என்பது கூட பெண் விடுதலைக் குப் பிறகே என்பதற்கொப்ப புரட்சிக்கவிஞர் பெண்ணடிமை தீருமட்டும்-பேசுந் திரு நாட்டு மண்ணடிமை தீருவது முயற் கொம்பே என்றார்.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது.

மேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதிக் காரர்களை நடத்துவதைவிட, பணக்காரர்-ஏழையை நடத்துவதைவிட, எஜமான்-அடிமையை நடத்துவதைவிட மோசமான தாகும். அவர்கள் எல்லாரும் இருவருக்கும் சம்பந்தம் ஏற்படும் சமயங்களில் மாத்திரம் தான் அடிமையாக நடத்துகிறார்கள். ஆனால் ஆண்களோ பெண்களை பிறப்பு முதல் இறப்பு வரை அடிமையாகவும் கொடு மையாகவும் நடத்துகிறார்கள் என்று ஆணாதிக்க மனோபாவத்தையும், பெண் ணடிமையின் நீட்சியையும் பெரியார் குறிப்பிட்டார்.

சிறுவயதில் தந்தைக்கும், திருமணமான வுடன் கணவனுக்கும், வயது முதிர்ந்த நிலையில் மகனுக்கும் கட்டுப்பட்டவளாக பெண் இருக்க வேண்டும் என்பது கொடுமை அல்லவா? என்றார் பெரியார்.

பெண்களை அடிமைத்தளையிலிருந்து விலக்கி அவர்களுக்கு சுதந்திர உணர்ச் சியும், உலக ஞானமும், கல்வி அறிவும், கூட்டு வாழ்வில் சமபொறுப்பும் ஏற்படும்படிச் செய்து விட்டோமேயானால் மனித சமூகத் தின் நன்மைக்கு செய்ய வேண்டிய காரியங் களில் பெரும்பாகத்தையும் செய்தவர்கள் ஆவோம்என்று சமுதாயப் பொறுப்பினை அறிவுறுத்தியவர் பெரியார்.

ஆண்மை-தாய்மை

பெண்கள் வியாதியஸ்தர்களாய் ஆவ தற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற் கும், ஆயுள் குறைவதற்கும் இந்தக் கர்ப்பம் என்பதே முலகாரணமாக இருக்கின்றது.... பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று பெண்கள் கருதுவதால் சுதந்திரமும், வீரமும் இன்றி அடிமையானதுமான காரியங்களுக்கு ஆளாகிறார்கள்....

`ஆண்மையின் கொடுமையிலிருந்து மட்டுமல்லாது பெண்கள் தாய்மையின் கொடுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்றதோடு,

ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிக் காரனாய் இருப்பதனாலேயே தான் யோக்கி யமாகவும், சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாகி விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது என்றும் பிள்ளைப் பேறு என்பது பற்றிய தமது மதிப்பீட்டை வெளிப்படையாக பகன்றவர் பெரியார்.

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்ற பெரியார் பெண்கள் கல்வியையும், வேலையையும்தான் தங்கள் அழகாகக் கருதிட வேண்டும் என்றார். உலகப் பெண் கள் எல்லோரையும் விட இன்பமாகவும், சுதந்திரமாகவும், முழுவாழ்க்கை வாழுகின் றவர்களாகவும் மாறவேண்டும் என்றார்.

அதிசயம் அவர்!

ஆணாதிக்கச் சமுதாய அமைப்பில் மிகமிக அற்புதமான காணக்கிடைக்காத அதிசயம் பெரியார். பெரியாரின் சிந்தனை யிலும், செயலிலும் மிக உன்னதமானது பெண்ணுரிமைக் கோட்பாடு. தனி வாழ்க்கை வேறு; பொதுவாழ்க்கை வேறு என்று பிரித்துப்பார்க்க முடியாதது பெரி யாரின் வாழ்வு. உண்மையும், நேர்மையும், துணிச்சலும் மனிதத்துவமும் நிறைந்த அவரைப் போன்ற பொதுத்தொண்டு புரிந்தோர் அரிதினும் அரிதானவர்களே! உலகில் பெண்ணியச் சிந்தனைக்கும், பெண் விடுதலைக்குமான செயல்பாடு களுக்கும் முன் மாதிரியாகவும், வேறு எவரையும் ஒப்பிடமுடியாதபடி திகழ்ந்த வரும் பெரியாரே ஆவார். பெண் உரிமைக் காவலர் என்பதன் முழு அடையாளமும் அவரே.

தொலைநோக்கு

புத்துலக தீர்க்கதரிசி அவர். பெண் களுக்கான புதுயுகம் காணப் போராடியவர். அதனால் பெண்ணடிமைச் சாடலில் அவரிடம் சுட்டெரிக்கும் சொற்களை காண் கிறோம். தார்மீக கோபம் நிரம்பி வழிந்தது அவரின் வார்த்தைகளில்.

பெண் விடுதலைக்கான தொலை நோக்குச் சிந்தனையில் கர்ப்பத்தடையை அறிமுகம் செய்து வலியுறுத்திய முதல் பெண்ணுரிமைப் போராளி பெரியார். குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரத்தை இந்த நாட்டில் அரசு தொடங்குவதற்கு முன்பே பெண்கள் கருப்பாதையைச் சாத்திட ஆணையிட்டவர் பெரியார்.

எவரும் கற்பனை செய்துகூட பார்க்காத காலத்திலேயே ஆண்-பெண் சேர்க்கை யின்றி பிள்ளை பெறும் காலம் வரும் என்று சோதனைக் குழாய் குழந்தை சிந்தனையை வெளியிட்ட சமூக விஞ்ஞானி பெரியார். அவரின் அன்றைய முன்னறிவிப்பு இன்று நிரூபணமாகி உள்ளதை-வெற்றி பெற்றுள் ளதை நாம் பார்க்கிறோம்.

ஆணாதிக்கச் சூழலும், பழைமைவாதி களும், புராண-இதிகாச விரும்பிகளும், வேத படைப்பாளர்களும், ஆரவார சுகபோகிகளும் பெண்களின் இருப்பை மறுத்தவர்கள்தாம். பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு அர்ப் பணிக்க வேண்டிய கடமையே என்று உறுதிப் படுத்தினர். பெண்களின் கோபத்தைக்கூட ஊடல் என்று உருக்குலைத்தார்கள். பெண் களையும், பெண்களின் உறுப்புகளையும் அழகின் அடையாளம் என்றார்கள்.

ஜாதிபேத சமுதாய அமைப்பு கெட்டிப் படுத்தப்பட்ட இந்திய சமுதாயத்தில் ஆண்கள் எஜமானர்கள். பெண்களோ எல்லாவிதமான ஆதிக்கச் சமூக அமைப்புக்கும் அடிபணிந்து போன ஆண் அடிமைகளுக்கும் அடிமை யாகித் தவித்தார்கள். ஆண்களின் ஆழ்மன தில் பெண்கள் தீனியாகவே திணிக்கப் பட்டார்கள் நமது சமுதாய அமைப்பில்!

மொழிகளையும், நாடுகளையும் கடந்து விரிந்து நின்ற பெண்ணடிமைத் தனம் மானுட உலகின் அவமானச் சின்னமன்றோ! ஆணாதிக்கத்தால் வாழ்வின் இனிமைகள் எல்லாம் மன உணர்ச்சிகள் எல்லாம் மறுக் கப்பட்ட கொடுமை-கொடுமையிலும் கொடு மையன்றோ!

உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண் குலத்தை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண் டும். பெண்ணடிமை ஒழிந்த இடமே சமத்து வம், சுதந்திரம் எனும் முளை முளைக்குமிடம் என்று அறிவித்தவர் பெரியார் மட்டுமே! பெண்களுக்கான விடுதலைத்தீர்வாய்-தியாக முத்திரையாய் பெரியார் ஒருவரே திகழ்ந்தார்.

இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும் பெண்களை அழைத்துச் சென்றவர் பெரியார். பெண்ணடிமைச் சாடலில்-பெண்ணுரிமை கோரலில் தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பு மாத்திரமல்ல; அவருக்குப் பின்பு கூட இதுவரையில் யாரும் தோன்றவில்லை... எதிர்காலத்திலும்... கேள்விக்குறியே! பெண் ணுரிமைக்கான தளத்தில் உலகின் தன்னி கரில்லா சுய சிந்தனையாளராக உயர்ந்து நிற்பவர் பெரியார் மட்டுமே!


வேறுபாடு ஏன்?

அங்க அமைப்பின்றி அறிவின் பெருக் கிலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் களுக்கும், பெண்களுக்கும் ஏற்றத்தாழ்வான வித்தியாசம் இல்லை, என்ற பெரியார் ஆணுக்குத் தனிச் சொத்து என்ற முறை ஏற்பட்ட காலத்தில்தான் அவனது மனைவி அச்சொத்துக்கும் பாதுகாப்பாக மட்டுமல் லாது, அவனது தனிச்சொத்தாகவும் அமைந்து போனதை உறுதிசெய்து கொண்டார்.

ன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால், அவளைத் தனக்கே உரிமை யாக்கிக் கொள்ளவும் அவளைத் தன்னை யன்றி வேறு புருஷனை நாடாமல் இருக்கும் படிச் செய்யவும் ஆன நிர்ப்பந்தம் ஏற்பட்ட தானது-பெண் அடிமையாக்கப்படவும், அவளது இயற்கை ஆளுமை பறிமுதல் செய் யப்படவும், ஆணுக்கு மட்டும் சொத்துரிமை கொடுக்கப்பட்டதுதான் அடிப்படை காரணம் என்று ஆய்ந்து, தனியுடைமை ஒழியாமல் பெண்ணடிமைத்தனம் ஒழியாது என்னும் முடிவுக்கு வந்தார்.

வீரம்-துணிச்சல் என்பது ஆணின் குணமாகவும், மென்மை-அச்சம் போன் றவை பெண்ணின் குணமாகவும் ஆணா திக்கச் சமூகத்தில் உருவகிக்கப்பட்டதை பெரியார் கடுமையாக மறுத்தார். ஆணுக்கும் `சாந்தம்,`மென்மை போன்ற குணஇயல்புகள் தேவையானவையே; பெண்ணுக்கும் `வீரம், `துணிச்சல் ஆகியவை இயற்கையான குணங்களே என்றார். பிள்ளை பெறுகின்ற உடலமைப்பைப் தவிர பெண்ணுக்கும், ஆணுக்குமிடையே வேறெந்த பாகுபாடும் இல்லையென்றார். பெண்களின் உயிரியல் வேறுபாடுகளை வைத்து அவர்களுக்கு பாலியல் தன்மை கற்பிக்கப்படுவதை கண்டனம் செய்தார் பெரியார்!

திருமண முறை

பெண்களை ஒரு பொருளாகக் கருதி `ஒருவருக்குக் கொடுப்பது என்கின்ற முறை ஒழிய வேண்டும் என்றார். பெண்களை நாம் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடி வாழச் செய்வது தான் கடமை என்றார்.

நமது நாட்டில் நடக்கும் திருமணமுறை பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கும் சூழ்ச்சிதான் என்றார். புருஷன்-மனைவி சம்மந்தமே, எஜமான்-அடிமை சம்பந்தமேயொழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்புமுறை சம்பந்தமோ அல்ல! என்றார்.

ஓர் அரசனுடைய மகளாயினும் ஒரு பெண் ஒரு வேலைக்காரனுக்கு வாழ்க் கைப்பட நேரிட்டால் அவனும் அடிபணிந்து நடக்க வேண்டியதுதான். தந்தை ஒரு நாட்டுக்கு அரசனாயிருக்கிறான் என்ற அளவுக்குத்தான் பெருமை அடையலாமே யன்றி, மனைவி என்ற முறையில் மற்ற பெண்களைப் போலவே அவளும் தன் கண வனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியவள் தான் என்றார் பெரியார்.

பெண்ணுரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென் பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் கூறியவர் பெரியார். ஓர் ஆணுக்கு என்னென்னவெல்லாம் உரிமை களாக உள்ளதோ-அத்துணையும் பெண் ணுக்கும் உண்டு என ஓம்புவதே பெண் ணுரிமை என்றும் கூறினார்.

கற்பு

`கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது என்பதை பெரியார் மட்டுமே உணர்ந்தார். `கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்பட வில்லை என கேட்டார். `கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண்மக்களை உலகம் முன்னேற்ற மடையச் செய்ய முடியாது என்றார்.

புருஷன்-மனைவி, கற்பு, பிள்ளைப் பேறு, போலவே விதவை, விபச்சாரம் என்பனவும் கூட பெண் அடிமைத்தனத்தை உறுதி செய்யும் கருத்தாக்கங்களே என்பது அய்யா பெரியாரின் கருத்து. மனைவியை இழந்த ஆண் `விதவன் என்றோ விலை மகளிரிடம் செல்லும் ஆண் `விபச்சாரன் என்றோ ஏன் குறிப்பிடப்படுவதில்லை என்று பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடைபகர்ந்தார் எவரும் இல்லை.

விதவைத்தன்மை என்பது எளியாரை வலியார் அடக்கி இம்சிப்பதல்லாமல் வேறல்ல என்றார். விதவைப் பெண்களின் நிலையையும், வேதனையையும், எண்ணிக் கையையும் எடுத்துக்கூறி விதவை மறு மணத்தை வலியுறுத்தினார் பெரியார். விபச் சாரம் என்பதற்குப் பொருள் என்னவென் றால் தங்கள் ஆசைக்கும், மன உணர்ச்சிக் கும் விரோதமாய் வேறு நிர்ப்பந்தத்திற்காக அடிமைப்படுவதே ஆகும் என்றார்.

இளமை மணம்

`பால்ய விவாகம் என்ற பேரால் பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டதை பெரியார் எதிர்த்தார். பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகளுக்கு, கல் யாணம் என்ற கடுவிலங்கு பூட்டி பிஞ்சிலே பழுக்கச் செய்து, வெம்பி அழியச் செய்யும் கொலை பாதகத்தைக் கண்டு எந்தக் கருணை உள்ளம்தான் சகித்துக் கொண்டி ருக்க முடியும்? என்றார்.

பெண்களின் திருமண வயது உயர்த் தப்படவேண்டும்; வயது அதிகம் ஆக ஆகத் தான் ஒரு பெண் உளவியல், உணர்ச்சி இயல் அடிப்படையில் திருமணத்தை எதிர்கொள்ளவும் முடியும். என்றதுடன், இளம்பெண் திருமணத் தடைச்சட்டத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரமும் அந்தக் கால கட்டத்தில் செய்தவர் பெரியார். தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வர குரல் கொடுத் தார். தேவதாசிகள் சமுதாயத்தில் இருந்து தான் தீர வேண்டும் என்ற சத்தியமூர்த்தி பரம்பரையை முறியடித்தார்.

சொத்துரிமை

பெண்விடுதலைக்கு சொத்துரிமை இன்றியமையாதது என உணர்ந்த பெரியார், பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும், பொருளாதார ரீதியான பாதுகாப்பும் சுதந் திரமும் பெண்களுக்கு இருக்க வேண்டுமா னால், அதற்கு சுயமாகச் சம்பாதிப்பதற்கு வேலையும், கல்வியும்தான் அவசியம் என்றார். ஆண்கள் புரியும் அனைத்து வேலைகளிலும் பெண்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றார். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சமவாய்ப்பு தேவை என்றார். என்னிடம் ஆட்சி இருந்தால் ஆண்களுக் கான கல்வியைத் தடை செய்துவிட்டு பெண்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட காலம் படிக்க உத்திரவிடுவேன் என்றார்.

பெண் கல்வி

`வெறும் ஆண்களை மாத்திரம் படிக்கவைத்துவிட்டு, பெண்களை படிக்க வைக்காமல் இருக்கும் சமூகம் ஒரு கண் குருடாக உள்ள சமூகத்தை ஒத்ததாகும் என்பது பெரியாரின் கருத்து.

பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இவை இரண்டும் பெற்றோர்களால் கற்பிக் கப்பட்டு விட்டால் சொத்து சம்பாதிக்கும் சந்தி வந்துவிடும். பிறகு தனக்கு வேண்டிய துணையைத் தேர்ந்தெடுக்கவும், சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும் கூடிய தன்மை உண்டாகும். பெண்ணடிமை என் பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள் சொத் துரிமை இல்லாததும் முக்கியக் காரணம் ஆகும். ஆதலால், பெண்கள் தாராளமாய், துணிவுடன் முன்வந்து சொத்துரிமைக் காகக் கிளர்ச்சி செய்து பெற வேண்டும் என்றார் பெரியார்.

தந்திர ஏற்பாடு....

ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதின் கருத்தே பெண் களை அடிமையாக்கவும், அடக்கிப் பய முறுத்திவைக்கவும் செய்த தந்திரமே ஆகும் என்றும், காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு, அவைகளில் உலோகங்களை மாட்டிவைப்பது, மாடுகளுக்கு மூக் கணாங்கயிறு போட்டதால் அது எப்படி இழுத்துக்கொண்டு ஓடாமல், எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில், மூக்கில் ஓட்டைகளைப் போட்டு ஆணிகள் திருகி இருப்பதால், ஆண்கள் பெண்களைப் பார்த்து கை ஓங்கி னால் எதிர்த்து அடிக்க வராமல் இருக்க, எங்கே காது போய் விடுகிறதோ, மூக் கறுந்து போய் விடுகிறதோ என்று தலை குனிந்து முதுகைக் காட்டத் தயாராய் இருப்பதற்காகவே அது உதவுகிறது என் றும் பெண்களின் அணிமணிகள் ஆசை யையும், அதனை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் ஆண்களின் மனோபாவத்தையும் கண்டித்தார்.

நகை என்பது பெண்உரிமைக்குப் பூட்டப்பட்டிருக்கின்ற பொன்விலங்கு என்பதைப் பெண்இனம் மறக்கக் கூடாது. கொத்து கொத்தாக நகை அணியும் பித்து நம் குலப் பெண்களை அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அளவுக்கு மிஞ்சி நகை அணிவதைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன். ஓரளவு நகை களுக்கு மேல் அணிகின்றவர்களுக்குத் தண்டனை அல்லது வரிவிதிக்கச் சட்டம் இயற்றும் சர்க்காரை நான் வரவேற்கி றேன். பெரியாரின் கோபமொழிகள் இவை. ஏன்? பெண் விடுதலையின் மீது அய்யா பெரியாருக்கு இருந்த தாகம்!

பெண்களின் ஆசையிலும், வாழ்க்கை லட்சியத்திலும் தலைகீழான புரட்சி ஏற்பட வேண்டும். ஆண்கள் செய் கின்ற எல்லா வேலைகளுக்கும் பெண்கள் தங்களைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆண்களைப் போன்று துணிவாக நடந்துகொள்ள வேண்டும். பெண்கள் தனியாக வாழமுடியும், எதனை யும் சாதிக்கமுடியும் என்கின்ற நிலைக்கு வரவேண்டும். சுதந்திரமாக, கவலையற்று வாழ, தொல்லையற்று வாழ அறிவைக் கொண்டு சிந்தித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இதுதான் மகளிர் சமுதாயம் சுயசார்போடு வாழும் வல்லமை பெறுவதே பெண்ணுரிமைக்கும், பாதுகாப் புக்கும் வழி என்பது தந்தை பெரியாரின் தீர்க்கமான முடிவு.

பொதுவாக மக்களின் அடிமைத்தனம் அகல-அடிமைத்தொழில் அகல பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்பது அய்யாவின் கருத்து. பெண்களை அடிமை களாக ஆக்கியதன் பயனாய் மக்கள் அடிமை களால் வளர்க்கப்பட்டார்கள். அடிமைகளால் வளர்க்கப்பட்டதன் பலனாய் மக்கள் சகலத் திலும் அடிமைகளானார்கள். எனவே மக்கள் அடிமைத் தொழிலினின்றும் நீங்க வேண்டு மானால் பெண்கள் அடிமை நீங்க வேண்டும்! பெண்கள் அடிமை நீங்க வேண்டும்!! முக்காலமும் பெண்கள் அடிமை நீங்க வேண் டும்!!!- இப்படி பெண்ணடிமை ஒழிவதே அனைத்து அடிமைத்தனங்களும் அகல வாய்ப்பாகும் என்று பெரியார் கருதிய காரணத்தால்தான் பெண்ணுரிமைக்காகப் பாடுபடலானார்- போராடலானார்- பரப்புரை யில் ஈடுபடலானார். அம்முயற்சியில் பெரியார் பெரு வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும். மகளிர் சமுதாயம் இன்று அடைந்துள்ள வளர்ச்சி அனைத்துக்கும் காரணம்-அடிப்படை பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனையே!

தமிழ்நாட்டில்,
இந்திய துணைக் கண்டத்தில்,

ஏன்? உலக அளவில் `பெண்ணினத்தின் வரலாறு புதுப்பிக்கப்பட்டது தந்தை பெரி யாரின் அரிய தொண்டினால் தான். பெண் விடுதலைக்காகப் பெரியார் தம்மை அர்ப் பணித்துக் கொண்ட புதுயுகம் இது . பெண் களின் ஆளுமையும், ஆற்றலும் வெளிப் படுத்தப்பட்டது அவராலே.

உங்களுக்குப் பெருமை வேண்டு மானாலும், உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதர்களுக்குத் தொண்டு புரிவதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்ளுங்கள் என்ற பெரியார்,

`மனித வாழ்க்கை என்பது தொண்டு செய்வதுதான். தொண்டு செய்யாத வாழ்க்கை மிருக வாழ்க்கைக்குச் சமம் என்றும் மனிதத் தொண்டுக்கு மகிமை ஏற்படுத்தியவரும் பெரியாரே!

ஜாதீய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை...

கல்வி-வேலைவாய்ப்பு எனும் வாழ் வுரிமைக்கான வாய்ப்பு...

மொழி உரிமை....

இன மேம்பாடு-விடுதலை...

வழிபாட்டுரிமை....

அனைத்துவிதமான ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை....

இப்படி பல்வேறு தடங்களில் முத்திரை பதித்த பெரியாரின் தொண்டு `பெண் விடுதலை எனும் தடத்திலும் புதுப்பாதை சமைத்தது! பெண்ணடிமைத்தனத்தை பெரியார் போல் உலக அளவில் சாடியவர்கள் வேறு எவரும் இலர். பெண்களே கூடி நடத்திய பெண்கள் மாநாட்டில் `பெரியார் எனும் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தனர் தந்தைக்கு! பெரியார் போற்றிய பெண்ணுரிமை காப்போம்!

(புதுச்சேரி வானொலி நிலையத்தில் 17.9.2010 அன்று ஒலிபரப்பப்பட்ட ` பெரியாரின் பெண்ணுடிமைச் சாடல்! எனும் தலைப்பில் துரை.சந்திரசேகரன் ஆற்றிய உரை)
http://viduthalai.periyar.org.in/20101028/news05.html
http://www.viduthalai.periyar.org.in/20101029/news07.html

அய்யப்பன் பக்தியால் ஒழுக்கம் வளருகிறதா - பம்மாத்து இல்லாமல் சொல்லுங்கள், பார்க்கலாம்

அய்யப்பன் கோயிலுக்கு விரதம் இருந்து செல்லு கிறார்கள். விரதம் இருப்ப தன்மூலம் ஒழுக்கம் வளரு கிறது. பயபக்தி - பத்தியம் என்பதன்மூலம் நல்ல பழக் கங்கள் வருகின்றன என் றெல்லாம் சொல்லுவதுண்டு.

விரதம் இருக்கும் நாள் களில் மட்டும் ஒழுக்கமாக இருந்தால் போதுமா? மற்ற காலங்களில் கேடுகெட்ட வகைகளில் நடக்கலாமா என்று பகுத்தறிவாளர்கள் எதிர்கேள்வி வைப்பதுண்டு. அதற்கெல்லாம் யாரும் பதில் சொன்னது கிடையாது.

சரி, அவர்கள் சொல்லு கிறபடி பார்த்தாலும்கூட, அதாவது உண்மையா என்ற கேள்விக்கு நடைமுறை பதில் வேறு விதமாகவே இருக் கின்றது.

கேரள இந்து அறநிலை யத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஜி. சுதா கரன் சொன்ன தகவல் ஏடு களில் எல்லாம் நிரம்பி வழிந்தது (24.4.2008).

சென்ற சீசனில் ரூபாய் நோட்டுகளை சபரிமலை கோயில் பக்தர்களே திருடிக் கொண்டு போன 67 சங்கதி களைக் கண்டுபிடித்தோம்.

கோயிலுக்குக் காணிக் கையாக அளிக்கப்பட்ட அரி சியை கடத்திக் கொண்டு போய் கள்ளச் சந்தையில் விற்கிறார்கள். காணிக்கை யாக அளிக்கப்பட்ட தங்கம் காணாமல் போய்விடுகிறது. நிருவாகத்தில் லஞ்சம், ஊழல் பெருகி வருகிறது என்று சொன்னாரே அம்மாநில கோயில் மந்திரி - இதற்கென்ன பதிலாம்?

பார்ப்பன இதழான ஜூனியர் விகடனே (7.12.2005) ஒரு தகவலை வெளியிட்டதே!

சமீபத்தில் தண்டை யார்பேட்டையில் (சென்னை) அய்யப்பன் பூஜை ஒன்று நடந்தது. அதற்கு நானும் போயிருந் தேன். நிறைய கூட்டம், பாடலும், தாளமுமாக பஜனை முடிந்து தீபாரா தனையும் காட்டப்பட்டது. அடுத்து பிரசாதம் வழங் கப்பட வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக, வெளி யேறிக் கொண்டிருந்தார் கள். அப்போது திடீர் பர பரப்பு, விசாரித்தபோது தான் தெரிந்தது அங்கு வைத்திருந்த பெரிய குத்து விளக்கை யாரோ திருடிக் கொண்டுபோய் விட்டார் கள் என்று. பக்தர்கள் மனம் நொந்தாலும் பர வாயில்லை என்று விசா ரணை நடத்தப்பட்டது. இறுதியில் மாலை போட் டிருந்த ஒரு சாமிதான் குத்துவிளக்கைத் திருடியி ருந்தது தெரிய வந்தது. வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்து அப்படியே மறைத்துவிட் டோம்.

இது ஒரு சம்பவம் என்றால், போன வருடம் சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு வந்த வர்கள் சிலரும், அடுத்தவர் பைகளில் பிக்பாக்கெட் அடித்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்கள் என்று கூறுகிறார் 20 ஆண் டுகளாக சபரிமலைக்குச் சென்று வரும் ராஜேந்தி ரன் -என்று சொல்லுவது விடுதலை அல்ல - ஜூனி யர் விகடன் (7.12.2005).

பக்தியால் ஒழுக்கம் வளருகிறதா - பம்மாத்து இல்லாமல் சொல்லுங்கள், பார்க்கலாம்.

- மயிலாடன்

http://www.viduthalai.periyar.org.in/20101029/news03.html

இடது... சாரி!

சபரிமலைக்கு இயக்கப் படும் மாநில அரசு போக்கு வரத்துக் கழகப் பேருந்து களில் சுவாமியே சரணம்! என்றோ, அம்மே நாரா யணா என்றோ எழுதிடத் தடையேதும் இல்லை என்று கேரள மாநிலப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் ஜோஸ் தெற்றியல் தெரி வித்துள்ளார் என்ற செய்தி ஏடுகளில் வெளிவந்துள்ளது.

இதன் பொருள் என்ன?

இவ்வாறு எழுதக் கூடாது என்ற சரியான ஒரு நிலை எடுத்த காரணத்தால், சங் பரிவார்க் கூட்டத்தின் எதிர்ப்புக் காரணமாக, முடிவு மாற்றப்பட்டு விட்டது என்பதுதானே!

மதச் சார்பின்மைபற்றி வாய் நீளமாகப் பேசும் இடது சாரி ஆளும் ஒரு மாநிலத் தின் சிந்தனையும், போக்கும் எந்த நிலையில் உள்ளன என்பதுதான் முக்கியம்.

மற்ற மற்ற மதக்காரர் களும் இந்த நிலையைப் பின்பற்றலாமா? பின்பற்ற மாட்டார்களா? பகுத்தறிவு வாதிகள் தங்கள் கருத்து களை அரசுப் பேருந்துகளில் எழுதிட அனுமதிக்கப்படு வார்களா என்ற கேள்விகள், நியாயமாக -உரிமையின் அடிப்படையில் எழத்தானே செய்யும்?

அத்தகையவர்களுக்கும் மார்க்சிஸ்ட் ஆட்சி பச்சைக் கொடி காட்டுமா என்பதை அறிந்துகொள்ள விரும்புகி றோம்.

ஆர்.எஸ்.எஸ்., எதிர்ப்புக் குரல் கொடுத்தால், அதற்கு ஒரு மார்க்சிஸ்ட் அரசு பணிந்துவிடவேண்டுமா? அப்படியானால் பா.ஜ.க. - சங் பரிவார்களின் மதவாதத்தை இந்திய அளவில் எதிர்ப்ப தாகக் கூறுவதில் என்ன பொருள் இருக்க முடியும்?

சபரிமலைக் கோயிலில் மகரஜோதி என்பது அசல் பித்தலாட்டம் - கேரள மாநில மின்வாரியத்தைச் சேர்ந்தவர் கள் பொன்னம்பல மேட்டில் இருந்து சூடத்தைக் கொளுத்திக் காட்டி செயற் கையாக ஜோதியை அதா வது வெளிச்சத்தைக் காட்டு கிறார்கள் என்று கேரள மாநிலப் பகுத்தறிவாளர்கள் நிரூபித்துவிட்டனர்.

இந்த உண்மையை கேரள மாநில முதலமைச் சராக இருந்த ஈ.கே. நயினார் அவர்களைச் சந்தித்து ஜோசப் எடமருகு (இந்தியப் பகுத்தறிவாளர் அமைப்பின் தலைவர்) சொன்ன பொழுது, நீங்கள் கூறுவது உண்மை தான்; ஆனாலும், அதில் தலையிடமாட்டோம்! என்று சொன்னாரே - இதுதான் மார்க்சிய அரசின் நிலைப் பாடா?

தற்போதைய கேரள மாநில அரசின் அறநிலையத் துறை அமைச்சர் ஜி. சுதா கரன் கூட மகரஜோதி பொய் தான் என்று ஒப்புக் கொண்டுவிட்டாரே! அதனை கோயில் அர்ச்சகர் கே. மகேஸ்வரரும் வழி மொழிந்தாரே!

ஆயமயசய ஏடையமமர ளை ஆய-ஆயனந, ளயல ஞசநைளவ ஆளைவநச (Makara Vilakku is Man-Made, say Priest Minister (The New Indian Express, 29.5.2008)) என்று செய்தி வெளியிட்டதே!

பொய்யென்று பச்சை யாகத் தெரிந்துகொண்ட பிறகும் அதற்குப் பச்சைக் கொடியா?

ஆட்சி, பதவி என்று வந்துவிட்டால், மார்க்ஸிய மாவது - மண்ணாங்கட்டியா வது - எல்லாம் சமரசம் தானோ!

- மயிலாடன்
http://viduthalai.periyar.org.in/20101028/news03.html

செவ்வாய் தோஷம்?

என் நண்பர் ஒருவர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். முன்பு அவர் பணியில் இருந்த போது மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்தார். தன் மகனுக்குச் செவ்வாய் தோஷம் என்பதால் அதே தோஷம் உள்ள பெண்ணையே தேடினார். கிடைக்கவில்லை.

செவ்வாய் தோஷம் இல்லாத பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். நண்பருக்கு பெரியாரைப்பற்றித் தெரியும். கொள்கையும் பிடிக்கும். ஆனால் அவர் வீட்டார் அழுத்தமான மூடநம்பிக்கையாளர்கள்.

அவருடைய இனத்திலேயே மகனுக்குப் பெண் அமைய வேண்டும். அப்பெண் அழகாகவும், படித்தும் இருக்க வேண்டும். அவர் எதிர்பார்த்தபடியே பெண்ணும் இருந்தது. இருந்தாலும் பையனுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் பெண் தரமாட்டார்களே என்கிற கவலையில் என்னிடம் வந்தார்.

நான் அவரிடம் கவலையே வேண்டாம் மன உறுதியோடு இருங்கள். நான்சொல்லுகிறபடி செய்தால் கண்டிப்பாகப் பெண் கொடுப்பார்கள் என்றேன். அவர் மிகவும் ஆவலோடு சொல்லுங்கள் செய்கிறேன் என்றார். நான் அவரிடம் ஒரு ஜோசியரை பாருங்கள். அந்த ஜோசியர் கேட்கும் பணத்தையும் கொடுங்கள். பையனுக்கு செவ்வாய்தோஷம் இல்லாதபடி ஒரு ஜாதகத்தைத் தயார்படுத்திக் கொடுக்கச் சொல்லுங்கள். அவரும் பணத்திற்காகக் கண்டிப்பாகச் செய்வார் என்றேன்.

நண்பர் முதலில் பயந்தார். கெடுதல் ஏற்படுமே என்றார். பயப்படாதீர்கள். நான் இருக்கின்றேன், சொன்னதை செய்யுங்கள் என்றேன். நல்லதே நடக்கும் என்று உறுதியாக சொன்னபின் அவ்வாறே செய்தார். வீட்டாருக்கும் செவ்வாய்தோஷம் கழித்து விட்டதாகவும், அதுபற்றி எதுவும் பேசக்கூடாது என்றும் சொல்லிவிட்டார்.

அவர்கள் விரும்பிய அதே பெண்ணை மகனுக்கு மணம் முடித்தனர். பையன் மத்திய அரசுப் பணியில் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றான். மணமக்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இரண்டு குழந்தைகள். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

அறிவாசான் தந்த அறிவு மருந்து மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் மாமருந்து. வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- தா.திருப்பதி, காவேரிப்பட்டணம்
http://www.viduthalai.periyar.org.in/20101029/news23.html

சட்டசபையில் கடவுள் பட்டபாடு! - ஒரு தொகுப்பு

ஆண்டவனாலும் ஆகவில்லை

கிட்டப்பா (தி.மு.க.): பிற்போக்குக் கூட்டணியினர் ஆண்டவன் படத்தைப் போட்டு மிகவும் கேவலமான தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆண்ட வனால் கூட அவர்கள் கட்சிகளைக் காப்பாற்ற முடிய வில்லை. ஆண்டவனின் சக்தியையும் மீறி மாயூரத்தில் நான் வெற்றி பெற்றேன்.

(30.3.1971 அன்று ஆளுநர் உரைக்கான நன்றிப் பேச்சின் போது)

காவிரிப் பிரச்சினைக்கு குருவாயூரப்பன்

தியாகராசன் (த.அ.கழகம்): குருவாயூரப்பனுக்குத் தமிழ்நாடு அரிசி வழங்குகிறது. இந்த நிலையில் காவிரி நீர் பற்றி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு நல்ல முடிவு ஒன்று ஏற்பட குருவாயூரப்பன் அருள் புரிவாரா?

அமைச்சர் ப.உ.ச.: பக்தர்கள் எனப்படுவோர் வேண்டிக் கொள்ள வேண்டிய விஷயமல்லவா இது.

(காவிரிச் சிக்கல் பற்றி தமிழ்நாடு அரசின் தீர்மானம் மீதான விவாதத்தின் போது: 8.7.1971)

கும்பி வெம்பிய குருவாயூரப்பன்

சங்கமுத்துத் தேவர் (சிண்டிகேட்): குருவாயூரப் பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து இப்போது அரிசி அனுப்பப்பட்டு வருகிறதா?

அமைச்சர் ப.உ.ச.: ஆம்; அனுப்பப்பட்டு வருகிறது.

நரசிம்மன்: கேரளத்தின் திருவனந்தபுரத்தில் பத்மனாபசாமி கோயில் உள்ளது. அப்படி இருக்க குருவாயூரப்பன் கோயிலுக்கு மட்டும் - ஏன், அரிசி தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்படுகிறது?

அமைச்சர் ப.உ.ச.: இந்தக் கோயிலுக்கும் தமிழ்நாட்டு அரிசி அனுப்பப்பட்டு வருகிறது.

ஆறுமுகம்: தமக்கு அரிசி வேண்டும் என்று குருவாயூரப்பனே தமிழ்நாடு அரசிடம் மனு செய்து கொண்டிருந்தாரா?

அமைச்சர் ப.உ.ச.: இல்லை; தர்மகர்த்தாக் குழுவினர்தான் விண்ணப்பம் அனுப்பியிருந்தார்கள்.

பொன்னப்ப நாடார் (சிண்டிகேட்): கேரள அரசே குருவாயூரப்பனுக்கு அரிசி வேண்டும் என்று கேட்டதா - அல்லது தர்மகர்த்தாக் குழுதான் அரிசி கேட்டதா?

அமைச்சர் ப.உ.ச.: தர்மகர்த்தாக் குழுதான் கேட்டது.

வீராசாமி (தி.மு.க.): ஆண்டவன்தான் மக்களுக்குப் படியளப்பதாகச் சொல்வார்கள்; இப்போது ஆண்டவ னுக்கே (குருவாயூரப்பனுக்கு) தமிழ்நாடு அரசு தான் படியளக்கிறது. (சிரிப்பு)

- (கேள்வி நேரம்: 8.7.1971)

அர்ச்சனைக்கு அப்ளிகேஷன்

சுப்ரமணியம் (தி.மு.க.): சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆண்டவன் விண்ணப்பம் போட்டிருந்தாரா?

அமைச்சர் கண்ணப்பன்: அப்படி விண்ணப்பம் எதுவும் போடவில்லை; தமிழ் உணர்ச்சி உள்ளவர்கள் மூலம் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று ஆண்டவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கே.எம்.சுப்பிரமணியம் (சிண்டிகேட்): ஆண்ட வன் கேட்டாரா என்றெல்லாம் கூறி புண்படுத்தலாமா?

அவைத் தலைவர் மதியழகன்: ஆண்டவனைப் புண்படுத்துகிறமாதிரி கேட்கவில்லை.

கே.எம்.சுப்பிரமணியம் (சிண்டிகேட்): மனிதர் களை அவமானப்படுத்துவதே ஆண்டவனை அவமானப்படுத்துவது போல் தான்.

அவைத் தலைவர்: அப்படி எதுவும் இல்லை.

-(கேள்வி நேரம், 12.7.1971)

ஆண்டவனுக்கும் அரசின் பாதுகாப்பு

அனந்தநாயகி (சிண்டிகேட்): ஜனாதிபதி, ஆளுநர் போன்றவர்களின் உயிரைப் பாதுகாக்க அரசு ஏற்பாடு செய்வதாகக் கூறப்பட்டது; ஆண்டவனே அவர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு தவிர அரசு பாதுகாப்பு கொடுக்கத் தேவையா?

கலைஞர்: சில சமயங்களில் ஆண்டவனையே கூட அரசு காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

- (கேள்விநேரம், 17.6.1971)

சைவ ஓட்டல்களில் சிவ-பார்வதி தாண்டவம்

சங்கமுத்துத் தேவர் (சிண்டிகேட்): சென்னை எத்தனை சைவ - அசைவ ஓட்டல்களில் உணவு - நாட்டியம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது?

கலைஞர்: ஆறு புலால் உணவு விடுதிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது; சைவ விடுதிகள் எதற்கும் அனுமதி இல்லை.

வீராசாமி (தி.மு.க.): சைவர்கள் எனன பாவம் செய்தார்கள்? உணவு நடனத்தை சைவ விடுதிகளிலும் நடத்த அரசு ஏற்பாடு செய்யுமா? கலைஞர்: சைவ விடுதிகளில், வேண்டுமானால் சிவ- பார்வதி நடனம் ஏற்பாடு செய்யப்படலாம்.

-(கேள்வி நேரத்தின் போது, 21-7-1971)

http://www.viduthalai.periyar.org.in/20101029/news23.html

Thursday, October 28, 2010

எங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன்...!


எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?

கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன் பணத்தை
எங்கே தேடுவேன்?

பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?

எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?

திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
எங்கே தேடுவேன் பணத்தை

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே

Song: எங்கே தேடுவேன் - enge theduven
Movie: Panam - திரைப்படம்: பணம்
Singers: N.S. Krishnan, பாடியவர்: என்.எஸ். கிருஷ்ணன்
Lyrics: N.S. Krishan இயற்றியவர்: என்.எஸ். கிருஷ்ணன்
Music:
Year: 1952
பாடலை பதிவிறக்கம் செய்ய

முதல்வரின் முக்கிய கவனத்துக்கு - ஒருங்குறி (யுனிகோட்) என்ற அமைப்புக்குள் பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்! ஊடுருவல்!!

யுனிகோட் (Unicode) எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங் கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையதளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் (Download) இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம்.

தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு
கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒரு எழுத்துரு, குறியீட்டு முறை என்று சிக்கல் இருந்தது. இதனால் ஒருவர் உருவாக்கிய கோப்பை (File) வேறொருவர் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனில் அந்தக் குறிப்பிட்ட எழுத்துரு வேண்டும். இணையம் வளர்ந்த சூழலிலும் இது பெரும் இடராகவே இருந்தது.

ஆனால் ஒருங்குறியின் வரவினால் இணையத்தில் இருந்த இடர்ப்பாடு களையப்பட்டது. இதனால் தமிழ் இணைய தளங்கள் பெருகியதோடு, உலகம் முழுக்க தமிழர்கள் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, எண்ணற்ற படைப்புகளையும், தகவல்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துள்ளனர். இன்றைய தலைமுறையே கணினியைப் பெருமளவில் பயன்படுத்துகிறது என்றால், வளரும் தலைமுறை முழுக்க கணினியை அடிப்படையாகக் கொண்டே மொழியைக் கற்கும் சூழல் வரும்.

ஏற்கெனவே இத்தகைய உலகளாவிய ஒதுக்கீட்டில் தமிழ் எழுத்துகளுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

அதை அதிகப்படுத்தினால் அனைத்துத் தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ் கணினி வல்லுநர்கள் யுனிகோட் சேர்த்தியம் (Unicode Consortium) அமைப்பிடம் முறையிட்டு வருகின்றனர்.

பார்ப்பனர் சதி!
இந்நிலையில் கடந்த 2010 ஜூலை 10ஆம் நாள், சிறீரமண சர்மா என்ற பார்ப்பனர் யுனிகோட் சேர்த்தியம் அமைப்புக்கு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளார். அதன்படி தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கிரந்தம் என்பது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுத தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த எழுத்து முறையாகும். பல்லவர் காலத்திலும், பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்திலும் சமஸ்கிருதத்திற்கான தேவநாகரி தவிர்த்த மற்றொரு லிபியாக கிரந்தத்தைப் பயன்படுத்தி வந்தனர். தமிழின் தனித்தன்மையை ஒழிக்க ஆரியர்கள் மேற்கொண்ட சூழ்ச்சிகள்தான் மணிப்பிரவாள நடையில் எழுதியதும் கிரந்த எழுத்துகளை பிரபலப்படுத்தியதும் ஆகும்!

தமிழும் - சமஸ்கிருதமும் ஒன்றல்ல!
இவையெல்லாம் காலப்போக்கில் கழிந்து, இன்றும் தமிழ் தமிழாகவே நிலைத்து நிற்கிறது. எக்காலத்திலும் தமிழ் வடமொழியின் உள்ளீடுகளை ஏற்க முடியாது. காரணம் இரண்டும் வெவ்வேறானவை. இரண்டின் எழுத்து, ஒலிப்பு முறை, மொழிப் பகுப்பு ஆகியவை எப்போதும் ஒன்றுபோல் இருக்க முடியாது.

இன்றும் புழக்கத்தில் இருக்கும், ஜ, ஷ, ஹ, ஸ ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளிலும், யுனிகோட் முறையிலும் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. ஆனால் சிறீரமணசர்மா எனும் இந்தப் பார்ப்பனர் முன்வைத்துள்ள 26 கிரந்த எழுத்துகளை எந்தத் தமிழனும் படித்திருக்கவோ, பயன்படுத்தியிருக்கவோ முடியாது. காரணம் அடிவயிற்றிலிருந்து எழுப்பும் g, gh, kh, chh, jh உள்ளிட்ட ஒலிகளை எக்காலத்திலும் தமிழர்கள் பயன்படுத்தியதே கிடையாது.

பச்சையான ஊடுருவல்!
சர்மாவே தனது முன்வைப்பில் எழுதியிருப்பதைப் போல சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக சேர்க்கப்பட வேண்டிய எழுத்துகள் தானாம் அந்த 26 கிரந்த எழுத்துகளும்!

யுனிகோட் குறியீட்டு முறையில் சமஸ்கிருதத்தின் தேவநாகரி எழுத்துக்கு முன்பே இடம் ஒதுக்கப்பட்டிருக் கிறது. அதில் கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதானே இந்த எழுத்துகளை! அல்லது கிரந்தத்திற்கென தனி ஒதுக்கீட்டைப் பெறவேண்டியது தானே! அது அவ்வளவு எளிதல்ல!
புதிதான ஒரு வரி வடிவத்தை சேர்க்க வேண்டுமா? என்று யுனிகோட் சேர்த்தியம் அமைப்பு கேட்கும் கேள்விக்கு, இல்லை, இது ஏற்கெனவே இருக்கும் தமிழ் வரி வடிவத்தை விரிவுபடுத்துவதற்கான பரிந்துரை என்று குறிப்பிட்டுள்ளார். இவை இம்மொழியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளனவா? என்ற கேள்விக்கு, ஆம். சில நேரங்களில் என்றும் சமஸ்கிருத எழுத்துகளை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்குப் பயன்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட தமிழ்
அதற்கு அவர் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள்: 1951ஆம் ஆண்டு சென்னை, காமகோடி கோஷஸ்தனம் வெளியிட்டுள்ள ஸ்ரீசதாஸிவ பிரமேந்திராவின் ஸிவ மானச பூஜா கீர்த்தனாஸ் மற்றும் ஆத்ம வித்யா விலாச என்னும் நூலும், 1916ஆம் ஆண்டு வெளியான டி.எஸ். நாராயண சாஸ்திரி என்பாரின் போஜ சரிதம் என்னும் நூலுமாகும்.

இவைதான் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இதை தமிழ் ஒதுக்கீட்டில் இணைத்து விரிவாக்கப்பட்ட தமிழ் (Extented Tamil) என்ற பெயரில் அங்கீகரிக்க வேண்டுமாம். அப்படி இவ்வெழுத்துகள் தமிழ் என்ற பெயரில் இணைக்கப்பட்டால், அது விரிவாக்கப்பட்ட தமிழாக இருக்காது. படுகொலை செய்யப்பட்ட தமிழாகத் தான் (Assassinated Tamil) இருக்க முடியும்.

காஞ்சி சங்கரமடத்தின் சூழ்ச்சி!
இந்தப் பரிந்துரைக்குப் பின்னால் காஞ்சி காம கே(கோ)டிகளின் கரம்தான் இருக்கிறது என்பது அய்ய மில்லாமல் தெரியும் ஒன்றாகும். சிறீ ரமண சர்மா தந் திருக்கும் எடுத்துக்காட்டுகள் மட்டுமல்ல. இது குறித்த அவர் விவாதித்ததாகக் கூறியிருக்கும் வல்லுநர்கள் மதராஸ் சமஸ்கிருதக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட், சிறீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் வேணுகோபால் ஷர்மா போன்றவர்களாவர்.
தமிழில் மேம்படுத்த சமஸ்கிருதப் பேராசிரியர் களிடம் கேட்பானேன்? வேலிக்கு ஓணான் சாட்சியா?

இணையத்தில் தமிழ் மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது. அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழ் கணினியில் பெரும் சாதனைகள் செய்கிறார்கள் என்ற பொறாமையில் நடத்தப்படும் திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்பே இது! இச்செய்தியறிந்ததும் உலகத் தமிழர்கள் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு - முதல்வரின் கவனத்திற்கு...
ஆயினும், இது குறித்த கடுமையான கண்டனமும், மறுப்பும் உடனடியாக தமிழக அரசுத் தரப்பிலிருந்து யுனிகோட் சேர்த்தியம் அமைப்புக்கு சென்றால்தான் இந்தக் கொடுமையைத் தடுக்க முடியும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை இப்பிரச்சினை யில் உடனடி கவனம் எடுத்து செயல்பட வேண்டும். முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் காலத்திலேயே தமிழக அரசுக்குத் தெரியாமல் கொல்லைப்புற வழியாக தமிழுக்குக் கேடு பயக்க நினைக்கும் ஆரியத்தின் சதிச்செயல் வெற்றிபெற்று விடக் கூடாது. தமிழின் வளர்ச்சிக்கு ஆரிய சமஸ்கிருதத் திணிப்பு பெரும் தடையாக அமைவதோடு, தமிழைப் பின்னோக்கி படுகுழியில் தள்ளிவிடும். உடனடி நடவடிக்கை மட்டுமல்லாது, இத்தகைய திரிபு வேலைகளும், திணிப்புகளும், பண்பாட்டுப் படை யெடுப்புகளும் எவ்வகையிலும் நிகழ்ந்துவிடாமல் இருக்க கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களும், கணித் தமிழ்ச் சங்கம், உத்தமம் போன்ற அமைப்புகளும் இத்திணிப்பு முயற்சிக்கு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து, இது நடக்கக்கூடாது என்று யுனிகோட் அமைப்புக்கு முறையிட்டுள்ளன.


கண்டனங்கள் வெடிக்கட்டும்!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப் பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், பார்ப்பனர்கள் தங்களின் வழக்கமான ஊடுருவல் சதியில் ஈடுபட்டுவிட்டனர், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் அவசர அவசரமாகத் தலையிடுவார்களாக!
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் (Tamil Virtual University Society) முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள், ஒருங்குறி (யுனிகோட்) சேர்த்தியத்தின் தலைவர் டாக்டர் லிசா மூர் (யு.எஸ்.ஏ.) அவர்களுக்கு தமிழில் திணிக்கப்படும் கிரந்த எழுத்துகள்பற்றிய சதி குறித்து விரிவாக எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் இந்தப் பார்ப்பனச் சதியை முறியடிக்க அனல் கக்கும் குரலை எழுப்புவார்களாக!

கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
28.10.2010
http://viduthalai.periyar.org.in/20101028/news01.html

Wednesday, October 27, 2010

தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

தமிழகத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி வழங்கி பிறப்பித்த உத் தரவை, மறு பரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளு படி செய்தது.
இட ஒதுக்கீட்டில், 50 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என, மண்டல் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கெ னவே தெரிவித்து இருந் தது. ஆனால், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், 50 சத விகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு செயல்படுத் தப்பட்டு வருகிறது. பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட் டோருக்கு உதவும் வகை யில் இந்த நடைமுறை உருவானது. இந்நிலை யில், கடந்த ஜூலையில் உச்சநீதிமன்றம் பிறப் பித்த உத்தரவில், தமிழ கத்தில் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த் தப்பட்ட மக்களுக்கான 69 சதவிகித ஒதுக் கீட்டை கல்வி நிலையங் கள் மற்றும் வேலை வாய்ப்பில், மேலும் ஓராண்டுக்கு அமல்படுத்த அனுமதி அளித்தது. இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி, வாய்ஸ் கன்ஸ் யூமர் கேர் கவுன்சில் சார்பில், உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய் யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.க பாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ஸ்வா தந்தேர் குமார் ஆகியோ ரைக் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசார ணைக்கு வந்தது.

இது குறித்து நீதிபதி கள் விவாதித்த பின், 69 சதவிகித இட ஒதுக் கீட்டை அமல்படுத்த அனுமதி வழங்கி பிறப் பித்த உத்தரவை மறு பரி சீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத் தரவிட்டனர். 69 சத விகித ஒதுக்கீட்டு பிரச் சினையை, பிற்படுத்த பட்டோர் நல ஆணை யம் ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம் என் றும், இதன்பின், தேவைப் பட்டால் தமிழக அரசு இது தொடர்பாக புது சட்டத்தை இயற்றலாம் என்றும் கடந்த ஜூலை யில் உச்சநீதிமன்றம் உத் தரவிட்டிருந்தது. எனவே, இந்த நடை முறை இன்னும் முடி யாத சூழ்நிலையில், இட ஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு அமல் படுத்த விதித்துள்ள இடைக்கால உத்தரவை மாற்றம் செய்ய வேண் டியது இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட் டனர்.
http://www.viduthalai.periyar.org.in/20101027/news02.html

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை தேவை -திருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம்

திருப்பத்தூர் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை தேவை என்பதாகும்.

தீர்மானம் வருமாறு:

450 ஆண்டுகளுக்குமுன்பு அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட பாபர் மசூதி - 1992 டிசம்பர் 6 ஆம் தேதி - அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பா.ஜ.க. - மற்றும் சங் பரிவார்க் கும்பலால் இடித்து நொறுக்கப்பட்டது.

18 ஆண்டுகள் உருண்டோடிய பிறகும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீதான தண்டனை இதுவரை வழங்கப்படாத நிலையில்,

அயோத்தி - பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சி.யு. கான் ஆகிய மூவரும் சட்டத்தின் அடிப்படையில், ஆவ ணங்களின் அடிப்படையில் இல்லாமல் வெறும் நம்பிக்கை என்பதை முக்கியமாக மய்யப்படுத்தி வழங்கியுள்ள தீர்ப்பு (க்ஷநடநைக யனே கயவை) சட்டம், நீதி, மதச் சார்பின்மை, சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துப் பொதுத் தன்மைகளையும் அடித்து நொறுக்கக் கூடியதாகும்.

சட்டங்களையும், சாட்சியங்களையும் புறந்தள்ளி, சட்டப்படியான நீதிமன்றம் (ஊடிரசவ டிக டுயற) என்பதற்குப் பதிலாக நம்பிக்கை மன்றம் (ஊடிரசவ டிக கயவை) என்ற நிலை ஏற்படக்கூடிய அபாயம் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டு விட்டது.

சிந்தனைக்கு இடம் கொடுக்காத நம்பிக்கை என்பது மூட நம்பிக்கையாளர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் மலிவான ஒரு சொல்லாகும். அதனை ஒரு உயர்நீதிமன்றம் பயன்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல!

யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கட்டப் பஞ்சாயத்து முறையில் பாகப் பிரிவினை வழக்காக இதனை அலகாபாத் உயர்நீதிமன்றம் மாற்றிவிட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டத்தில், அயோத்திப் பிரச்சினையில் இடம் யாருக்குச் சொந்தம் என்பதில் கருத்துக் கூறத் தயாராக இல்லை என்று உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில், மீண்டும் அலகாபாத் தீர்ப்பினை மேல்முறையீடாக உச்சநீதிமன்றம் விசாரிக்கும் ஒரு நிலை ஏற்பட்டு இருப்பது விசித்திரமான நிலையாகும்.

1947 ஆகஸ்ட் 15 இல் இருந்த நிலை எதுவோ அதுவேதான் தொடரப்படவேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங் கள் பற்றிய சிறப்புச் சட்டம் கூறும் நிலையினை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

வரலாற்றில் பின்னோக்கிப் பயணத்தைத் தொடங்கினால், அது வேண்டத் தகாத புதிய தலைவலிகளை ஏற்படுத்தும் என்பதையும், குறிப்பாக ஆயிரக்கணக்கான புத்த விகார்கள் இந்துக் கோயில்களாக மாற்றப் பட்டுள்ள நிலையைப் பரிசீலித்து இந்துக் கோயில்களை பழையபடி புத்த விகார்களாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையும், போராட்டமும் வெடிக்க வாய்ப்புள்ளது என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் அத்தனைப் பேரும் விளம்பரம் பெற்ற அரசியல் பிரமுகர்கள் ஆதலால் அவர்கள்மீதான தண்டனை அளிப்பதில் சட்டம் - நீதிமன்றம் தயக்கம் காட்டுகிறது என்பது வெளிப்படை.

சட்டத்துக்குமுன் அனைவரும் சமம் என்று பெருமையாகக் கூறிக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.

பாபர் மசூதி இடிப்பின் எதிரொலியாக மும்பையில் நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்ட நிலையில், மூல வழக்கு மூலையில் குறட்டை விடுகிறதே - ஏன் என்ற கேள்வி எழாதா?

துணைப் பிரதமராக இருந்த அத்வானி போன்றவர்கள் நீதி மன்றத்தில் வழக்கை விரைவாக நடத்திட ஒத்துழைப்புக் கொடுக் காமல், வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் தந்திரத் தில்தான் ஈடுபட்டனர் என்பது எத்தகைய வெட்கக்கேடு - பா.ஜ.க. வின் தார்மீகத்தின் சாயம் இதன்மூலம் வெளுத்துவிடவில்லையா?

லிபரான் ஆணையத்தின்முன் அத்வானி வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்ட கேள்வி கடுமையாக இருப்பதாகவும், அவரிடம் மென்மையான முறையில் கேள்வி கேட்கப்படவேண்டும் என்று அரசு வழக்கறிஞருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டாரே!

அத்வானி தலைமையில் சங் பரிவார் - காவிக் கும்பல் பட்டப் பகலில் பாபர் மசூதியை இடித்ததற்குக் கனமான சாட்சிக்குவியல்கள் இருக்கின்றன. வீடியோ காட்சி உள்ளது. நேரில் பார்த்த செய்தியாளர்கள் இருக்கிறார்கள். அத்வானியின் பாதுகாப்புக்கு அதிகாரப்பூர்வமாகச் சென்ற பாதுகாப்பு அதிகாரி அஞ்சு குப்தா என்ற பெண் அய்.பி.எஸ். அதிகாரியே, எல்.கே. அத்வானி, வினய் கட்டியார், உமாபாரதி, சாத்வி ரிதம்பரா ஆகியோர் பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டவேண்டும் என்று கரசேவகர்களைத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்று ரேபரேலி சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டார். அதைவிடக் கொடுமை நாடாளுமன்றத்தில்- மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.க.) கொஞ்சம்கூட கூச்சப்படாமல், மிகமிக வெளிப்படையாக ஆமாம், பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான் - தண்டனையை ஏற்கத் தயார் என்று பேசியிருக்கிறார் (8.12.2009). இதற்குப் பிறகும் தூங்கு மூஞ்சி நீதிமன்ற நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நகர்கிறது என்றால், இதன் பின்னணி சாதாரணமானதா என்ன என்ற அய்யம் பொது மக்களுக்கு எழாதா? ரேபரேலி சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தாலும்கூட, அதற்குப்பின் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று சொல்லி காலத்தைக் கரியாக்கிவிடமாட்டார்களா?

இந்தியாவில் சட்டமும், நிருவாகமும், நீதித்துறையும் எந்தத் தரத்தில் இருக்கின்றன என்பதற்கு இந்த வழக்கு ஒன்று போதுமானது.

எந்த வன்முறையை மேற்கொண்டாலும், அரசியல் செல்வாக்கு என்பது பின்னணியில் இருந்தால், பெருங்கூட்டமாக ஒன்றைச் செய்தால், அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதான் இன்றைய பிரத்தியட்ச நிலையாகும்.

இந்தத் துணிச்சலால்தான் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பல் நாடு தழுவிய அளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப்பின் இந்தியா முழுமையும் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்புகளுக்கு இந்தக் கும்பல்தான் காரணம் - திட்டமிட்ட சதி வலைப்பின்னல் இருந்திருக்கிறது என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

மாலேகான் குண்டுவெடிப்பு என்ற ஒரு கயிற்றின் முனையைத் தொட்டுக்கொண்டே போனால், அது மும்பை குண்டு வெடிப்பு, அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஷெரீஃப், அகமதாபாத் குண்டுவெடிப்புகள் தென்காசி வரை இந்தக் கூட்டத்தின் கைவண்ணம் இருப்பது தெரிய வந்தது.

இந்த உண்மைகளை வெளியுலகுக்குக் கொண்டு வந்த காவல்துறை உயர் அதிகாரி சுட்டுக் கொல்லப்படுகிறார் என்பதெல்லாம் சாதாரணமானதுதானா?

நாட்டில் என்ன நடக்கிறது? இவ்வளவுக்குப் பிறகும்கூட பாபர் மசூதி இடிப்புப் பேர்வழிகள் மீதான வழக்கு விசாரணையில் வேகம் காணப்படவில்லை.

இதனைத்தான் திருப்பத்தூர் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதவரை இந்தியாவின் சட்ட- ஒழுங்கு என்பதெல்லாம் அசல் கேலிக்குரியதுதான்.

அரசியல் கட்சிகள் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கவேண்டும் என்பதே நமது கருத்தாகும்.
http://www.viduthalai.periyar.org.in/20101027/news07.html

ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க் கப்பட்டிருந்த விடுத லைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது. பொட்டு அம்மான் பெய ரும் நீக்கப்பட்டுள்ள தாக இந்திய அரசு அறி வித்துள்ளது. இறுதி யுத் தத்தில் புலிகளின் தலை வர் பிரபாகரன் கொல் லப்பட்டதாக கூறப்பட் டதை இதுவரை உறு திப்படுத்தாமல் இருந்த இந்தியா, முதல் முறை யாக இப்போது இந்த அறிவிப்பை வெளியிட் டுள்ளது.
1991 ஆம் ஆண்டு, மே 21 இல் ராஜீவ் காந்தி திருப்பெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சிபிஅய் தொடர்ந்த வழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முதன்மைக் குற்றவாளி யாகவும், புலிகள் அமைப் பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம் மான் அடுத்த முக்கிய குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங் கையில் தமிழீழ விடுத லைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் நடந்த இறுதி யுத் தத்தில் புலிகளின் தலை வர் பிரபாகரனும், பொட் டம்மானும் கொல்லப் பட்டதாக இலங்கை அறிவித்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 'உடலை'யும் காட்டியது. ஆனால் இதனை புலிகளின் ஆத ரவாளர்கள் நம்ப மறுத்த தோடு, அவரும் பொட்டு அம்மானும் உயிருடன் இருப்பதாகவும் கூறி வந்தனர்.

இந்தியாவும் இது தொடர்பாக எதுவும் கூற வில்லை. ராஜீவ் கொலை வழக்கை முடிக்க ஏது வாக பிரபாகரன், பொட் டம்மான் இறப்புச் சான் றிதழை அனுப்புமாறு இலங்கையிடம் தொடர்ந்து கோரி வந் தது. ஆனால் இலங்கை அரசு இதுவரை இறப் புச் சான்றிதழ் எதையும் அனுப்பவில்லை. மாறாக, பிரபாகரன் இறந்துவிட் டார் என்ற கடிதத்தை நீதிபதி ஒருவரின் அத் தாட்சியுடன் அனுப்பி வைத்தது. இதனை ஏற்ற தாகவோ, மறுப்பதா கவோ எதையும் தெரி விக்காமலிருந்தது இந் திய அரசு.

சி.பி.அய்.யின் இணைய தளங்களில், ராஜீவ் கொலை வழக்கில் தேடப் படும் குற்றவாளிகள் பட் டியலில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம் மான் பெயர்கள் நீக்கப் படாமல் இருந்தன.

இந்நிலையில், இப் போது இந்த இருவரது பெயரையும் ராஜீவ் கொலை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாகவும் அவர்கள் மீதான குற்றச்சாற்றுகள் கைவிடப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித் துள்ளது.

சென்னையில் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தடா நீதிமன்ற நீதிபதி தட்சி ணாமூர்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள குறிப் பில், முதன்மைக் குற்ற வாளி பிரபாகரன், இரண் டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என் கிற சண்முகநாதன் சிவ சங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கி லிருந்து நீக்கப்பட்டுள்ள னர். அவர்களுக்கு எதி ரான குற்றச்சாற்றுகளும் கைவிடப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

குற்றவாளியின் மர ணத்துக்குப் பிறகு அவர் மீதான குற்றச்சாற்றுக ளும் தானாகவே காலா வதியாகிவிடும் என்ற இந்திய குற்றவியல் சட்ட அடிப் படையில் இந்த முடிவை மேற்கொள்ள சிபிஅய் அனுப்பிய குறிப் புகளின் பேரிலேயே நீதிபதி தட் சிணாமூர்த்தி இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளார்.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்த அமிர்தலிங்கம் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம் மான் பெயர்கள் நீக்கப் பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதை யும் சிபிஅய் தனது குறிப் பில் தெரிவித்திருந்தது.
http://www.viduthalai.periyar.org.in/20101027/news05.html

முதுமை இளமையாக -வாழ்வியல் சிந்தனைகள்

கடந்த 13 ஆம் தேதி அன்று சென்னை யிலிருந்து துபாய் வழியாக குவைத் சென்றடைய மறு விமானத்தில் பயணித்த போது, நியூயார்க் டைம்ஸ் International Tribune என்ற ஆங்கில நாளேட்டில் மிகவும் தரமான பலரது கட்டுரைகள் பலவற்றை படித்து இன்புறக் கூடிய நல்வாய்ப்பு கிடைத்தது!

இதற்கிடையில், முற்பகல் (உள்ளூர் நேரம்) 12 மணியளவில் சென்னையிலி ருந்து சென்ற நாங்கள், மாலை 4 மணிக் குத்தான் தொடர்பு விமானம் என்றவுடன் எங்கள் விமானத்திலிருந்து வெளியே வந்து அடுத்த விமானம் உள்ள நுழைவு வாயிலுக்குச் செல்ல நாங்கள் நடந்தோம்.

காலை நடைபயிற்சி செய்யவில்லையே என்ற ஏக்கம் தீருமளவுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தோம்.

கழிப்பறைகள்தான் எவ்வளவு தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன!

நடந்து செல்லும்போது உயரமான கட்டடத்தின் இடையில் அதனைத் தாங்கும் உலோகத் தூண்கள் மதுரை திருமலை நாயக்கர் மகாலின் தூண்களைவிட சுற்றளவிலும் பெரிது!

வழவழப்பான ஒளிவீசும் தரைகள் - படுத்து உறங்க வசதியானவை என்பதற்கு ஒப்ப அவ்வளவு நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது. அந்தந்த நுழைவு வாயில் (கேட்) எதிரே ஏராளமான இருக்கைகள் - அமருவதற்கு. அதன்கீழே நிம்மதியாக பல பயணிகள் காலை தாராளமாக நீட்டிப் படுத்து திருவரங்கப் பெருமாள்போல்(!) உறங்கிடும் நிலை கண்டு வியந்தோம். (ஆடாமல், அசையாமல் நன்றாக தூங் கியதால் அந்த உவமை!) அந்தப் பள்ளி கொண்ட - அரங்கநாதர்கள் கொண்ட தூக்கம், எந்த ஓசையாலும் எளிதில் எழுப்ப முடிவதில்லை. காரணம், இருபுறமும் கொஞ்சம் தள்ளி, சுங்கத் தீர்வையற்ற கடைகள் - அதற்கு நடந்து செல்லும் பயணிகள் - இடையிடையே ஒலி பெருக்கி அறிவிப்புகள் - இவற்றைப் பொருட்படுத் தாது உறங்கியவர்களைக் கண்டு வியந்து நடந்தோம்!

என்னே அழகுடன் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம்! மூன்றாவது தளம் (Third Terminal) அவர்களது எமிரேட்ஸ் விமான சேவை தளம் ஆகும்!

பாலைவனத்தில் - மணல் மேடுகள் நிறைந்தவிடத்தில் இப்படி ஒரு மாநகரம் - உலகமெங்கிலுமிருந்து பணத்தைக் கொண்டு வந்து கொட்டிச் செலவிட்டு மகிழவும், தொழில் வளர்ச்சிக்கான பல் வகை தொழில்களைப் பரிமாறும் அளவுக்கு செய்தது அறிவின், ஆய்வின், பகுத்தறி வின் சாதனை அல்லவா?

அந்த அறிவு வளர வளர எப்படியெல் லாம் மனிதர்களின் வாழ்க்கை மாறப் போகிறது என்பது வருங்காலப் புதிர்களில் ஒன்றாகவே அமைவது உறுதி!

மற்ற கோள்களில் மனிதர்கள் குடியேறும் காலம் மனித குலத்தை நோக்கி விரைந்து வருகிறது!

மனிதர்களுக்கு வயது ஏற, ஏற, நினைவு வன்மை குறையத் தொடங்கு கிறது. இந்த மறதி - ஞாபக சக்தி குறைவு. மிக மோசமானால், அதுதான் அல் ஷைமர்ஸ் (Alzimers) நோயாகவும், அம்னீஷியா, டெம்னீஷியாவாக பலருக்கு பல்வகை தாக்குதல் நோய்களாக உரு வெடுத்து, அவர்களை மீண்டும் குழந்தைப் பருவத்திற்கோ(!) அல்லது அவர்களைப் போலவே ஆக்கிடும் கொடுமையில் தள்ளி விடுகிறது!

இந்த முதுமை மறதி நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்படுபவர்கள் - அதைத் தடுத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை இங்கிலாந்து, அமெரிக்கப் பல்கலைக் கழக ஆராய்ச் சியாளர்கள் ஆய்வு செய்து, பல்வேறு பரிசோதனைகளை - பல முதியவர்களை வைத்து - நடத்தி சில முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்!

சிலர் வயதாகியும் நல்ல நினைவாற் றலுடன் இருப்பதற்கு - முதல்வர் கலைஞர் 87 வயதிலும் நினைவாற்றலுக்குப் பரிசு பெறத் தகுதியானவராகக் காட்சி அளிக்கிறார். அதுபோலவே தந்தை பெரியார் அவர்களும்கூட. தந்தை பெரியார் அவர்கள் 95 வயதிலும் தக்க நினைவாற் றலுடன் இறுதிவரை வாழ்ந்தார்கள். அவரது மூன்று மணிநேரப் பேச்சில் - உவமை - கதை என்ற லூப் லைனில் சென்று, மீண்டும் தொடர்பு அறாத மெயின் லைனுக்கு வரத் தயங்கவே மாட்டார்கள் என்பது கேட்டோர் வியந்த செய்தி.

தொடர்பு விட்டுவிடாமல் எடுத்து வைத்த செய்தி மீது பேசிக்கொண்டே செல்வார்கள். யாரையாவது ஒருமுறை பார்த்தால், அதைப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவு கூறுவார்கள். சிலரை குடும்பப் பெயர் சொல்லி அழைப்பார்கள் - உறவினர்களைப்பற்றி ஞாபகமாக பெயர் சொல்லி விசாரிப்பார்கள். அவர்கள் ஆச்சரியத்தால் அதிர்ந்தே போவார்கள்.

இப்படி நினைவு சக்தி அவர்களுக்கு இருப்பதற்கு மூல காரணம், மூளைக்கு சதா வேலை கொடுப்பதுதான். எப்படி உடற்பயிற்சியில் உடல் உறுப்புகள் பலம் பெறுகின்றனவோ, அதுபோலவே, மூளை - சிந்தனையால் மிகுந்த நினைவு ஆற்றலை - வளத்தைப் பெறுகிறது என்பது அறிவியல் ரீதியான, உளவியல் ரீதியான முடிவுகளாக மேற்கண்ட பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்!

சிலர் குறுக்கெழுத்துப் போட்டி (Cross Word Puzzles), சொடுக்கு (Sodukku) முதலியவைகளில் ஈடுபட்டு மூளையை கூர்தீட்டிக் கொள்ள முயலுகின்றனர்.

ஆனால், அந்தச் சொற்கள், கணிதத்திற்கு அதிக பயன் என்பது இந்த ஆய்வாளர்களின் முடிவாகும்!

எனவே, எப்போதும் நீங்கள் உங்கள் சிந்தனைக்கு ஓய்வு கொடுக்காதீர்கள் - நேற்று முன்னாள் யாரை யாரைச் சந்தித் தோம்; என்ன உணவு, பதார்த்தங்களை உண்டோம் - எத்தனை வகைகள் - எந் தெந்த நிகழ்வுகள் - படித்த செய்திகள், கேட்ட கருத்துகள் - இவைகளை வரிசைப் படுத்தி நினைவூட்டிக் கொள்ளுங்கள். அதுவே மூளைக்கு நல்ல பயிற்சி. படித்தவைகளை அசை போடுங்கள் - உட்கார்ந்து நினைவுபடுத்தி எழுதிப் பாருங்கள் - முதுமை இளமையாகும்!

மனம் உடைந்துபோக வேண்டாம்!
http://www.viduthalai.periyar.org.in/20101027/news08.html

Tuesday, October 26, 2010

சீரங்கம் போகாமல் இருப்போமா?-மின்சாரம்

புதுத் திருப்பம் கண்ட திருப்பத்தூருக்குப் பிறகு,

தோழர்களே, தோழர்களே,

நாம் சீரங்கத்தில் சந்திக்க இருக்கிறோம் (8.11.2010).

சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ? என்று அன்று பாடப்பட்டது. அதன் பொருள் - பிஜேபி, சங்பரிவார் போல கடப்பாரை, மண் வெட்டியை எடுத்துக் கொண்டு உடைத்துத் தூள் தூளாக்குவதல்ல.

ரெங்கநாதன் - நடராஜன் என்ற உருவங்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆரிய ஆதிக்கப் பண்பாட்டுப் படையெடுப்பை சுக்கல் நூறாக உடைப்பது என்பதுதான்.

இந்த அரங்கநாதனும், நடராஜனும் அந்நியர் படையெடுப்புகளிலிருந்து காப்பாற்றப்படுவதற்காக பல ஊர்களுக்குத் தூக்கிக் கொண்டு அலைந்தார்கள் - பக்த சிரோன்மணிகள் என்பதெல்லாம் படு தமாஷ்!

அந்த வகையில் இதே திருவரங்கம் கோயில் 50 ஆண்டுகளாக மூடிக்கிடந்தன. காலைத் தூக்கி ஆடும் சிதம்பரம் நடராஜனே 37 ஆண்டுகள், பத்து மாதங்கள், இருபது நாள்கள் அப்ஸ்காண்ட் ஆனான். மதுரை மீனாட்சி கோயிலும் அரை நூற்றாண்டு காலம் மூடிக்கிடந்தது.

அடேயப்பா, இந்தக் கோயில்களின் மூர்த்திகளைப் பற்றி இந்தப் பார்ப்பனப் பண்டாரங்கள் எப்படியெல்லாம் கீர்த்தி பாடி வைத்திருக்கின்றன.

எத்தனை எத்தனை அற்புதங்களை இந்த விக்ரகங்களுக்குள் ஏற்றிப் போற்றி வைத்திருக்கின்றன.

வைணவர் புரியாகிய அந்த திருவரங்கம் கழகத்தின் பாசறையாக இருந்து வந்திருக்கிறது. வீறு நடைபோட்டு இயக்கப் பணியாற்றிட எத்தனையோ கருஞ்சட்டைச் சிங்கங்கள் கர்ச்சனை செய்து வந்துள்ளன.

பற்பல மாநாடுகள் - பேரணிகள் - தந்தை பெரியார் அவர்களை அழைத்து ஊர்வலங்கள் - ஒன்றல்ல - இரண்டல்ல. அரங்கநாதன் கோயிலுக்கு முன் தந்தை பெரியார் கம்பீரமாக சிலை வடிவத்தில் வீற்றிருக்கிறார்.

நீ - யார்! ஆரியப் பார்ப்பனர்களின் கலாச்சாரச் சின்னம்! மூடநம்பிக்கைகளை மொத்தமாகக் குத்தனை எடுத்தவன் நீ! நான் யார் தெரியுமா? அடித்தட்டு மக்களை கரை ஏற்ற வந்தவன்.

மூடக்கிருமிகளை முற்றிலும் அழிக்கவந்த சமூக நல மருத்துவன்! ஆரியக் கலாச்சாரத்தின் ஆணிவேர் வரை சென்று அழித்து முடிக்க வந்த அழிவு வேலைக்காரன் நான் என்று ரெங்கநாதனைப் பார்த்து சொல்வதைப்போல அய்யாவின் சிலை அங்கு. நவம்பர் 8இல் திராவிடர் எழுச்சி மாநாடு திருவரங்கத்தில்.

அன்று தந்தை பெரியார் அவர்களுக்குத் தமிழர்கள் போட்டி போட்டுக் கொண்டு அன்பளிப்புகளைக் குவித் தனர். எடைக்கு எடை எத்தனை எத்தனை வகையான பொருள்களை எல்லாம் வாரி வழங்கினர்! இறைவனுக்குத் தான் துலாபாரம் என்ற நிலையைத் துடைத்தெறிந்து இறைவன் ஏதடா? என்ற பகுத்தறிவு வினா எழுப்பிய ஈரோட்டு இறைவனுக்குத்தான் தமிழ் நாட்டு மக்கள் இத்தனை இத்தனை வகையான அன்பளிப்புகள்.

எடைக்கு எடை வெள்ளி ரூபாய் (தஞ்சை, 6.11.1957), எடைக்கு எடை நவதானியம் (லால்குடி, 24.9.1963), கார் டயர் - ட்யூப்புகள் (கள்ளப்பெரம்பூர், 2.11.1963), எடைக்கு எடை மிளகாய் (பெருவளப்பூர், 10.6.1964), எடைக்கு எடை எண்ணெய் (இடைப்பாடி, 11.9.1964), எடைக்கு எடை மஞ்சள் (ஈரோடு, 3.10.1964), துவரம்பருப்புத் துலாபாரம் (திருச்செங்கோடு, 17.10.1964), எடைக்கு எடை காய்கறி (திருவள்ளூர், 21.10.1964), எடைக்கு மேல் ஒன்றரை மடங்கு படுக்கை விரிப்புகள் (பெட் ஷீட்டுகள்) (கரூர், 25.10.1964), எடைக்கு எடை திராட்சைப் பழம் (பெங்களூர், 15.11.1964), எடைக்கு எடை இங்கிலீஷ் காய்கறிகள் (பெங்களூர், 6.11.1964), எடைக்கு எடை அரிசி (திருவாரூர், 1.12.1964), பால் துலாபாரம் (திருச்சி, 10.12.1964), எடைக்கு எடை இரண்டு காசுகள் (வ.ஆ., திருப்பத்தூர், 13.12.1964), எடைக்கு எடை சர்க்கரை (திருக்கழுக்குன்றம், 14.12.1964), பெட்ரோல் துலாபாரம் (குளித்தலை, 10.1.1965), எடைக்கு எடை காப்பிக் கொட்டை (சிதம்பரம், 16.1.1965), எடைக்கு எடை பிஸ்கட்டுகள் (பண்ருட்டி, 18.1.1965), எடைக்கு எடை மணிலா எண்ணெய் (அரகண்டநல்லூர், 19.1.1965), எடைக்கு எடை கைத்தறி நூல் (குடியாத்தம், 21.1.1965), எடைக்கு எடை நெல் (செங்கம், 22.1.1965), எடைக்கு எடை நெல் (அனந்தபுரம், 23.1.1965), எடைக்கு எடை இரு மடங்கு வாழைக்காய் (வள்ளியூர், 1.5.1965), எடைக்கு எடை பருப்பு மற்றும் உப்பு (தூத்துக்குடி, 2.5.1965), எடைக்கு எடை சர்க்கரை (அலங்காநல்லூர், 16.2.1970), எடைக்கு எடை நெல், வெங்காயம், உப்பு (பெண்ணாடம், 21.9.1970), நெல் துலாபாரம் (இலந்தங்குடி, 8.7.1972).

இவை அன்னியில் டயர் வண்டி (லால்குடி), கறவைப் பசு (தஞ்சை).

புளி, பச்சைப் பட்டாணி, மிளகாய், துவரை, கொத்துக்கடலை, உளுந்து, தேங்காய், ஆட்டுக்கிடா, தட்டைப்பயிறு, காளைக்கன்று, ரூ.3500 மதிப்புள்ள தென்னந்தோப்பு பட்டயம், பசுமாடு, எள், பச்சைப்பயறு, கோதுமை, அரிசி, கழகக் கொடிபோட்ட முக்கால் பவுன் மோதிரம், தேங்காய், உப்பு, நெல், கிழங்கு, எலுமிச்சம்பழம், வெங்காயம், ராகி, கம்பு, மலர்கள், முத்துச்சோளம், எருமை மாடு, செங்கல் ஆயிரம், விறகு 5 எடை என்று கொடுக்கப்பட்டது உண்டு.

ஒரு கடவுள் மறுப்பாளருக்கு மக்கள் அள்ளி அள்ளிக் கொடுத்து, தம் அன்பு வெள்ளத்தால் மூழ்கடித்தது - தந்தை பெரியார் என்ற மாசற்ற மாபெரும் புரட்சியாளருக்கு மட்டும்தான்.

சில இடங்களில் கோயிலில் பயன்படுத்தும் அதே சப்பரத்தில் - தேர்களில் கூட தந்தை பெரியாரை அமர வைத்து வீதி வீதியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றதுண்டு.

தெய்வச் சிலையை தெப்பத்தில் வைத்து அழைத்துச் சென்றதுபோல, தெய்வத்தை சில்லு சில்லாக உடைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கும் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டதுண்டு.

அந்தப் புரட்சியாளர் மறைவுக்குப் பிறகும், அந்தப் புரட்சிச் சுடர் எந்த சூறாவளியானாலும் அணைந்து விடக் கூடாது என்ற எண்ணம் திராவிட மக்கள் நெஞ்சில் நின்றது.

அன்னை மணியம்மையாரும், அவர்களுக்குப் பிறகு ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும், அணையா விளக்காக அய்யா கொள்கைகளை ஏந்திச் சென்றனர். பணிகள் தொடர்கின்றன!

தமிழ் மக்களும் அய்யாவிடம் காட்டிய அதே அன்பை - ஆதரவை அய்யாவின் சீடர்களுக்கும் காட்டி வருகின்றனர் - காரணம் அய்யா பணி தொடரப்பட வேண்டும் என்பதற்காகவே!

அதனுடைய பிரதிபலிப்புதான் தஞ்சையிலே தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம், புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி, ஒவ்வொரு ஊரிலும் இரு மடங்கு எடை அளவுக்கு ரூபாய் நாணயங்கள்.

நவம்பர் 8இல் திருவரங்கத்தில் நடைபெறும் திராவிடர் எழுச்சி மாநாட்டிலும் தமிழர் தலைவருக்கு விதவிதமான பொருள்களை எடைக்கு எடை அளித்து மகிழ இருக்கிறார்கள்.

திருப்பத்தூர் பொதுக்குழுவில் லால்குடி மாவட்டக் கழக செயலாளர் ஆல்பர்ட் அவர்கள் அந்தப் பட்டியலைத் தெரிவித்தபோது உற்சாகத்தால் தோழர்கள் பலத்த கரஒலி எழுப்பினர் (என்ன பண்டக சாலையா வைக்கப் போகிறீர்கள்? என்று குறுக்கிட்டுக் கேட்டார் கழகத் தலைவர் - ஒரே சிரிப்பொலி).

திருவரங்கத்தில் நேற்று (25.10.2010) நடைபெற்ற மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்; தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் (கரூர் மாவட்ட மற்றும் லால்குடி மாவட்ட கழகத் தலைவர் தே.வால்டர்), புள்ளம்பாடி ஒன்றியம் சார்பில் வெங்காயம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சார்பில் பொன்னி அரிசி, முசிறி ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தேங்காய், தொட்டியம் ஒன்றியக் கழகம் சார்பில் வாழைக்காய், துறையூர் ஒன்றிய தி.க., ப.க., சார்பில் வேர்க்கடலை, உப்பிலியாபுரம் ஒன்றிய தி.க., ப.க., சார்பில் எலுமிச்சம் பழம், லால்குடி ஒன்றிய கழகம் சார்பில் பரங்கிக்காய், பூசணிக்காய், திருவரங்கம் எஸ்.கே.பி. குடும்பத்தின் சார்பில் பொன்னி அரிசி, மாவட்ட இளைஞரணி சார்பில் 78 பொருள்கள் என்று பட்டியல் விரிந்து கொண்டே போகிறது.

கழகத் தோழர்களும், பொதுமக்களும் திராவிடர் கழகத்தின் மீதும், அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் மீதும் வைத்திருக்கும் பற்று, மதிப்பு, எதிர்பார்ப்பு எத்தகையது என்பதற்கான எடுத்துக் காட்டுகள் இவை.

இதில் எந்த ஒரு பொருளும் கடுகத்தனை அளவுக்குக் கூட தனிப்பட்ட முறையில் தலைவரைச் சேரப்போவ தில்லை; எல்லாம் இயக்கத்திற்கும், கல்வி நிறுவனங் களுக்கும்தான்.

ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு வகையில் களைகட்டி வருகிறது.

திருவரங்கம் வேறொரு பரிமானத்தில் பளிச்சிடுகிறது.

தில்லை போகாமல் இருப்பேனா - தில்லை நடராஜனைத் தரிசிக்காமல் இருப்பேனா என்று சொன்னது அந்தக் காலம். மூடத்தனத்தில் மூழ்கிக் கிடந்த பக்தனின் உள்ளம் அது.

திருவரங்கம் போகாமல் இருப்போமோ - திராவிடர் எழுச்சி மாநாட்டைக் காணாது இருப்போமா என்பது இன்றைய எழுச்சிச் சகாப்தத்தின் இன்னொரு முகம்.

சீரங்கம் வைணவத்தின் கோட்டையல்ல. கருஞ் சட்டைப் பாசறையின் பாடி வீடு என்பதைக் காட்ட கருஞ்சட்டைப் பட்டாளமே புறப்படு! புறப்படு!
http://www.viduthalai.periyar.org.in/20101026/news35.html

தீபாவளி என்றால் என்ன? -தந்தை பெரியார்

புராணம் கூறுவது
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு-போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்-பன்றி-யுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாக பூமி கர்ப்ப-முற்று நரகாசுரன் என்ற பிள்ளை-யையும் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசுரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்-தாரான திராவிட மக்கள் கொண்டாட-வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகை-யின் தத்துவம்!

இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று-தானே கருத வேண்டியிருக்கிறது.

பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?

சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடி-யுமா?

எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்-திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும், மிருக உரு-வுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும்- தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரை-யில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிர-கித்ஜோஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்து அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்-கிறார்கள்.

வங்காளத்தில் தேவர்களும், அசுரர்-களும் யாராக இருந்திருக்க முடியும்? இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்-பதற்காகவும், சொல்கிறான் என்-பதற்-காகவும் நடுஜாமத்தில் எழுந்து-கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்-களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு-மிராண்-டிகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈன-நிலை அடைந்தது ஏன்? என்பதை தமி-ழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க-வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.
http://www.viduthalai.periyar.org.in/20101026/news11.html

திருப்பத்தூர் தீர்மானங்கள்

23.10.2010 அன்று வேலூர் - திருப்பத்தூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

குறிப்பாக ஈழத் தமிழர்கள் பிரச்சினைபற்றி இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்கள் போக, இன்னும் உயிரைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே அக்கறை காட்டுவார் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தன மானதே! இந்தியா உள்ளபடியே அழுத்தம் கொடுத் தால் ஏதாவது நடக்கலாம். ஆனால், இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் கொடுத்துவரும் கடுங்குரலுக் காக ஏதோ வார்த்தை விளையாட்டில் இந்தியா ஈடுபட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவு என்றோ, தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவின் ஒரு பகுதியில்தான் இன்னும் வாழ்கிறார்கள் என்றோ நினைக்கக்கூடிய மனப்பான்மை இந்திய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு முதலமைச்சர் உண்ணாவிரதம் இருந்து தமிழ்நாட்டின் உணர்வுகளை வெளிப்படையாகப் புலப்படுத்திய பிறகும்கூட - எல்லோருக்கும் பெப்பே என்கிற போக்கில் இந்தியா கண்ணாமூச்சி விளையாடிக் காட்டுகிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல - இடிஅமீனையும் பிச்சை வாங்கச் செய்யும் ராஜபக் சேவை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்திய அரசு அழைக்கிறது என்றால், இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது!

தமிழர்களின் உணர்வை மிகக் கேவலமாக மதிக்கிறது - காலில் போட்டு மிதிக்கிறது என்று தானே பொருள்! வடவர் உணர்வு - தென்னவர் உணர்வு என்ற எரிமலை மீண்டும் வெடிக்க வேண்டும் போலும்!

எதற்கும் ஓர் அளவு உண்டு. இந்திய அரசு உலகத் தமிழர்களின் உணர்வை மிகவும் சோதிக் கிறது.

திருப்பத்தூர் மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், இந்திய அரசின் போக்கைக் கடுமையாக விமர்சித் துள்ளார். அதில் உள்ள நியாய உணர்வை பல்லா யிரக்கணக்கில் கூடியிருந்த பொதுமக்கள் புரிந்து கொண்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசில் - வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக ஒரு துறை அமைச்சகத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற தீர்மானம் முக்கியமானது - திருப்பம் தரக் கூடியதுமாகும். அப்படி அமைத்தால் அது ஒன்றும் புதிதும் அல்ல. பஞ்சாப், கேரள மாநிலங்களில் அத்தகைய ஒரு துறை ஏற்கெனவே இருக்கிறது. அதனைச் சுட்டிக்காட்டித்தான் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் இதனைக் கவனத்தில் எடுத்துக்கொள் வார் என்று கருதுகிறோம்.

திபெத் உரிமைக்காக சீனாவில் மூன்று அமெரிக்கர்கள் போராடினார்கள்; அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றவுடன் அமெரிக்கா துடிக் கிறது - சீனாவை எச்சரிக்கிறது - சீனாவும் உடனே கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களை விடுதலை செய்கிறது - ஆனால், தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா எப்படி நடந்துகொள்கிறது?

லண்டனில் வாகனம் ஓட்டும் சீக்கியர்கள் தலைப்பாகை அணியவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தால், அந்த சீக்கியர்களுக்காக இந்திய அரசு வக்காலத்து வாங்குகிறது.

ஒரு தலைப்பாகைக்காகக் குரல் கொடுக்கும் இந்தியா - தமிழர்களின் தலைகள் எல்லாம் போகின் றனவே - அதற்காகக் குரல் கொடுக்க ஏன் மறுக் கிறது - தலையைக் கொய்கின்ற கொடுங்கோல னுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கிறது?

இந்திய அரசின் மீதுள்ள கோபக்கனலை தமிழ் நாட்டில் உள்ள மக்கள் காங்கிரசிடம் காட்டுகி றார்கள் என்ற அரசியலைக் கூடப் புரிந்துகொள் ளாமல் இருக்கிறதே மத்திய அரசு.

அதையும் தாண்டிய தமிழர்கள்மீதான வெறுப் புணர்வு அவர்களை ஆட்டிப் படைக்கிறது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது - தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸ் தமிழர்களாவது இந்த நிலையை அகில இந்தியத் தலைமைக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா?

பெரியார் பிறந்த நாளான செப்.17இல் விஸ்வகர்மா பிறந்தாரா? ஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு!

இந்த நாட்டை மதவெறிக் காடாக மாற்றி பார்ப் பன ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான முயற்சி யில் இறங்கியுள்ள ஆர். எஸ்.எஸ். கும்பல் பல் வேறு பித்தலாட்டங் களைச் செய்து வரு கிறது. குழந்தைகள் தினம் என்பது நேரு பிறந்த நாள் அல்ல, கோகு லாஷ்டமிதான் அது என் றும், ஆசிரியர் நாள் செப்டம்பர் 5இல் அல்ல, அது துரோணாச்சாரி யார் பிறந்தநாள்தான் என்றும் மதரீதியாக எல்லாவற்றையும் மாற்றி வருகிறது.


அதுபோல மே 1 என்பது தொழிலா ளர் நாள் அல்ல விஸ் வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்றும், அது தந்தை பெரியார் பிறந்தநா ளான செப்டம்பர் 17தான் என்றும் கடந்த சில ஆண்டுகளாக ஆர்எஸ் எஸின் தொழிற்சங்க மான பாரதீய மஸ்தூர் சங்கம் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு திருச்சி பெல்லில் செப்.17அன்று விஸ்வ கர்ம ஜெயந்தி கொண் டாடப்படும் என்று அறிவிப்பு வந்தவுடன் பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக அறிவுப்பூர் மான சில கேள்விகளைக் கேட்டு துண்டறிக்கை வெளியிடப்பட்டது.

இந்து மதத்தில் எந்த ஒரு பண்டிகையும் குறிப் பிட்ட தேதியில் வராத போது விஸ்வகர்மா ஜெயந்தி மட்டும் செப்.17 அன்று வருவதாகக் கூறு வது பித்தலாட்டம் என் றும் தந்தை பெரியார் பிறந்த நாளுக்குரிய சிறப் பைக் குறைக்க ஆர். எஸ்.எஸ். செய்து வரும் சதியே இது என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் தி.தொ.க சார்பாக வெளியிடப் பட்ட துண்டறிக்கையில் விஸ்வகர்மாவுடைய அப்பா, அம்மா யார்? அவர் எப்பொழுது பிறந் தார்? எப்படிப் பிறந்தார்? என்றும், தொழிலாளர் தினமாக விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடி னால் அப்புறம் ஆயுத பூஜை எதற்காக என்றும் இன்னும் பல வினாக் களையும் எழுப்பியிருந் தோம்.

பாரதீய மஸ்தூர் சங்கத்தின் வாயிற்கூட் டத்தில் பேசிய அதன் பேச்சாளர் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் விஸ்வகர்மா செப்.17இல் தான் பிறந்தார் என்பது எங்கள் நம்பிக்கை என் றும் அவர் பிறந்ததற்கு பிறப்புச் சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை என்றும், வெள்ளைக் காரன் இந்த நாட்டுக்கு வருவதற்கு முன்பு இந்த நாட்டில் 80 சதவிகிதம் பேர் படித்திருந்தார்கள் என்றும் வங்காளத்தில் மட்டும் 12000 பள்ளிகள் இருந்ததாகவும் வெள் ளைக்காரன் வந்த பிறகு தான் இந்த நாட்டில் கல்வி வந்தது என்று கூறுவது பொய் என்றும் இன்னும் பல பொய் களையும் அவிழ்த்து விட்டார்.

உடனடியாக 18.9.2010 அன்று காலையிலேயே பிஎம்எஸ் வாயிற்கூட் டம் போட்ட அதே இடத்திலேயே பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக பதிலடியாக வாயிற் கூட்டம் போடப் பட்டது. பெல் திதொக தலைவர் க.வெ.சுப்பிர மணியன் தலைமை தாங்க திராவிடர் தொழி லாளர் கழகப் பேரவை செயலாளர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.

விஸ்வகர்மா பிறந்த தற்கு ஆதாரம் இருந் தால்தானே ஆதாரம் காட்டுவதற்கு? எல்லாம் பித்தலாட்டம் என்கிற போது பிஎம்எஸ் பதில ளிக்க முடியுமா? என்று வினா எழுப்பினார். சூத் திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக் காதே என்ற மனுதர்மம் கோலோச்சிய நாட்டில் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும். காதில் கேட் டால் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் சட்டம் இருந்த நாட்டில் 80 சதவிகிதம் பேர் படித்திருந்தார்கள் என்பது கடைந்தெடுத்த பொய்ப்பிரச்சாரம் என் றும் திருமலை நாயக்கர் காலத்தில் மதுரையில் இருந்த சமஸ்கிருதப் பல் கலைக் கழகத்தில் பத் தாயிரம் பேர் பார்ப் பனர் மட்டுமே படித்து வந்ததையும் பார்ப்பனர் களுக்கு மட்டுமே கல்வி இருந்தது என்பதையும் ஆதாரங்களுடன் விளக்கிப் பேசினார்.

வெள்ளைக்காரன் வந்தபிறகுகூட பார்ப் பனரல்லாதாருக்கு கல்வி கிடைக்க விடாமல் செய்த பார்ப்பன சூழ்ச் சியையும் எண்ணெய்க் கடைக்காரனும் வெற் றிலை பாக்குக் கடைக் காரனும் சட்டமன்றத் துக்கு செல்லவேண்டும் என்று ஆசைப்படுவது எதற்கு? என்று பேசிய திலகர் பற்றியும் மருத் துவம் படித்த நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தென்னம் பிள்ளையைக் கொடுத்து நாடார் ஜாதியைச் சேர்ந்தவன் கள் இறக் கித்தான்பிழைக்க வேண் டுமே தவிர மருத்துவம் படித்தது தவறு என்று திருவாங்கூர் சமஸ்தான திவான் சர்.சிபி. இராம சாமி அய்யர் சொன்ன தையும், வெள்ளைக் காரன் சென்ற பிறகுகூட ஆறாயிரம் பள்ளிகளை இழுத்துமூடி குலக் கல்வித்திட்டத்தை இராஜாஜி கொண்டு வந்த வரலாற்றையும் எடுத்துச் சொல்லி பார்ப் பனரல்லாதார் படிப் புக்கு எதிராக பார்ப்ப னர்கள் செய்து வந்த சதியையும் எடுத்துக்கூறி வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பே 80 சத விகிதம்பேர் படித்திருந்தார்கள் என்று கூறும் பிம்எம்எஸின் பித்த லாட்டத்தை எடுத்துக் கூறினார்.

தந்தை பெரியார் மாத்திரம் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித்திட்டத்தை எதிர்த்துப் போராட வில்லையென்றால் தமிழர்கள் படித்தி ருக்க முடியாது. பட் டம், பதவி பெற்றிருக்க முடியாது சமூக ரீதி யாகவும், கல்வி ரீதி யாகவும் முன்னேறி இருக்க முடியாது என் பதையும் தந்தை பெரி யார் இல்லையென் றால் தமிழன் முன் னேறியிருக்க மாட் டான் என்று நன்றியு டன் தமிழர்களால் பேசப்படுவதைக் கண்டு பொறுக்க முடி யாத ஆர்.எஸ்.எஸ். கும்பல் அவருடைய சிறப்பைக் குலைக்கவே செப்.17 அன்றுதான் விஸ்வகர்மா பிறந்தார் என்று கூறும் ஆர்.எஸ். எஸின் பித்தலாட்டங் களையும் விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் ஏராள மான தொழிலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆர்எஸ் எஸுக்கு சரியான சவுக்கடி கொடுத்தீர் கள் என்று பாராட்டி னார்கள்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் கொள்ளை போகும் பல்கலைக் கழக நிதி! பார்ப்பனத் துணைவேந்தரின் தொடரும் அத்துமீறல்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை வெளியிடாமல் இருக்க பத்திரிகைகளுக்கு கூவிக் கூவி விளம்பரம் கொடுத்து வரும் பல்கலைக்கழக பார்ப்பனத் துணைவேந்தர் மீனாவின் விநோத செய லால் பல்கலைக் கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் பொறுப்பேற்ற சில மாதங்களிலே ஒன்றல்ல, இரண்டல்ல பலமுறை கேடுகள் தொடர்ந்து கொண்டே போகின்றன. பல்கலைக் கழகத்திற்கு எந்த பொருள்கள் வாங்க வேண்டுமானலும், அதற்கென இருக்கக் கூடிய பல்கலைக் கழக பொருள்கள் கொள் முதல் செய்யும் குழு ஒன்று உள்ளது.

அந்த குழு மூலம் தான் பல் கலைக் கழகத்திற்கான எந்த பொருளையும் வாங்க முடியும். ஆனால் துணை வேந்தர் மீனாவோ, அவர் நடத்தும் இந்திரா காந்தி கல்லூரியில்தான் பல்கலைக் கழகத்திற்கு வாங்கப்படும் பொருள்கள் கொள்முதல் செய்வது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, திருச்சியி லுள்ள தனக்கு வேண்டிய பல்வேறு முன்னணி நிறுவனங்களில்தான் கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது.

இதற் காக அந்நிறுவனங்களி லிருந்து பல இலட்சம் ரூபாய் கமிசன் வருகிற தாக கூறப்படுகிறது. கொள்முதல் செய்வதற் கான குழு இருந்த போதி லும், தனது அதிகாரத் தைப் பயன்படுத்தி அவர் களை செயல்பட விடாமல் தடுத்து வருகிறார். மேலும் அண்மையில் நடைபெற்ற பேராசிரி யர்கள் பணி நியமனத்தில் கையூட்டு பெற்றுக் கொண்டு தான், பணி நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது பல்கலைக் கழகத்தில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப் பட்டு வருகின்றன. அப் பணியிடங்கள் அனைத்தி லும் துணைவேந்தர் தனக்கு வேண்டியவர் களை இந்திராகாந்தி கல்லூரியில் பணியாற்றி வந்த துதிபாடிகளைப் பணியமர்த்தி வருகிறார்.

இதுபோன்று பல்கலை.யில் நடை பெறும் முறைகேடுகள் பத்திரிகைகளில் வெளி வராமல் தடுக்க சில முன்னணி நாளிதழ் களின் ஆசிரியர்களிடம், துணைவேந்தர் நேரி டையாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தீபாவளி பண்டிகை யைக் காரணம் காட்டி விளம்பரங்கள் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

தீபாவளி என்பது பார்ப்பனிய இந்து பண்டிகையாகும். திராவிடரை வீழ்த்த ஆரியர்கள் செய்த சூழ்ச்சியே இந்த தீபாவளி. தீபாவளியைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் கடுமையாக சாடியுள்ளார். அவர் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகம் அரசுக்குச் சொந்த மான இந்த பல்கலைக் கழக நிதியிலிருந்து தாராள மாக பல லட்ச ரூபாய்க்கு நாளிதழ்களுக்கு விளம் பரம் கூவிக் கூவிக் கொடுப் பதன் உள்நோக்கம் என்ன? நாளிதழ்களுக்கு விளம்பர முகவர்கள் பலர் இருக்கின்றனர்.

அவர்கள் சென்று விளம்பரம் கேட்ட பொதெல்லாம் கொடுக்காத துணை வேந்தர், மேலும் விளம்பர முகவர்களை பலமுறை அலைக்கழித்துவிட்டு இப்போது தானே முன் வந்து நேரிடையாக பத்திரி கைகளுக்கு விளம்பரங் கள் கொடுத்து வருவது. விளம்பர முகவர்க ளுக்கே வியப்பாக இருப் பதாக கூறுகின்றனர்.

வார, மாத நாளிதழ் களுக்கு விளம்பரங்கள் கொடுத்து பல்கலை.யில் தான் செய்து வரும் ஊழல்களையும், முறை கேடுகளையும் மறைத்து விட முயல்கிறார் என் பது தெளிவாகத் தெரி கிறது. இப்படி கூவிக்கூவி! கொடுக்கப்பட்ட விளம் பரத்தை சில பத்திரி கைகள் துணைவேந் தரின் சூழ்ச்சியை அறிந்து விளம்பரம் வேண்டாம் என தவிர்த்து விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஊழல், முறைகேடுகளை எழுதும் பத்திரிகைகளுக்கு, செய்தியாளர் களுக்கு விளம்பரத்தைக் கொடுத்து தடுத்து விடுவ தும், செய்தி யாளர்களைத் தொடர்பு கொண்டு மிரட்டுவதும் திருச்சியில் பத்திரிகை யாளர்களுக்கு பாதுகாப் பில்லாச் சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. பாரதிதாசன் பல் கலைக் கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒன்றாக இருந்த இந்திரா காந்தி கல்லூரி, அக் கல்லூரியின் முதல்வராக இருந்த மீனா தனது பார்ப்பன தந்திரத்தால் பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பிறகு பாரதிதாசன் பல் கலைக் கழகத்தையே தனக்கு சொந்தமான இந்திரா காந்தி கல்லூரியின் கீழ் இயக்கப்படும் நிலையை உருவாக்கி உள்ளார்.

இவ்வாறு செயல்படு வதால், கல்வியாளர்களி டையே பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாரின் தொலைநோக்கு திருமணமில்லாத வாழ்க்கை!

மேல்நாடுகள் பலவற்றில் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். அதனால் அவர்கள் ஒன்றும் கெட்டுவிடவில்லை.

திருமணம் என்பது கூட நமக்குத் தெரிய நம் சரித்திர ஆதாரங்கள், வாழ்வு முறைகள், மற்ற ஆதாரங்கள் மூலம் (நமக்கு) தமிழர்களுக்கு இருந்தது என்று சொல்ல முடியாது.
இப்படி ஒரு காரியம் இருந்தது என்று பகுத்தறிவிற்கேற்ப ஆதாரத்தோடு சொல்ல முடியாது. நாம் இல்லை என்று சொல்வதற்கு என்ன ஆதாரமிருக்கிறது என்று கேட்கக் கூடும். இது போல் ஆணும், பெண்ணும் சேர்ந்து சில சடங்குகள் செய்து, அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்தார்கள் என்பதைக் குறிக்கத் தமிழில் எந்த சொற்களும் இல்லை. கல்யாணம், - விவாகம், - கன்னிகாதானம்,- சுபமுகூர்த்தம் என்பதெல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல என்பதோடு, இச்சொற்களும், இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதாக இல்லை. தமிழனுக்கு இம்முறை இருந்திருந்தால் அதற்கான ஒரு சொல் இருந்திருக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியின் அடிப்படையெல்லாம் பெண்ணை ஆணுக்கு அடிமையாக்குவது, ஆணுக்குத் தொண்டு செய்ய, அவனைக் காப்பாற்ற, அவன் வேலைகளைக் கவனிக்க ஒரு வேலைக்காரியை நியமிப்பது என்பதேயாகும். தாலி கட்டுவதன் கருத்தே ஆணுக்குப் பெண் அடிமை என்பதை வெளிப்படுத்தக் கூடிய ஒரு சாதனமேயாகும். பெண்கள் தங்களின் இழிவை இன்னும் உணராமலே இருக்கிறார்கள். தங்களைக் காப்பாற்ற ஓர் ஆண் எஜமானன் வேண்டுமென்றே கருதுகின்றனர். பெண்கள் தாங்களே தாலி கட்டிக் கொள்ள ஆசைப்படுகின்றார்கள். அவர்கள் இழிவை ஒழிக்க முற்பட்டால் அவர்களே அதை எதிர்ப்பார்கள்.

நம் பெண்கள் தங்களுக்கு இருக்கும் இழிவையும், குறையையும் உணராமலிருக்கின்றார்கள். தாங்கள் ஆண்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டியவர்களாகத் தங்களைக் கருதுகின்றார்களே தவிர, சுதந்திரமுள்ள மனித ஜீவனென்று தங்களைக் கருதுவதில்லை.

மற்றவர்கள் அவர்கள் இழிவினையும், குறையினையும் நீக்க முயற்சிக்கும் போது அதனை எதிர்க்கவும் செய்கின்றனர். சுமார் 100 வருடங்களுக்கு முன் வரை நம் நாட்டில் ஒரு பழக்கமிருந்தது. கணவன் இறந்து விட்டானென்றால் அவனோடு சேர்த்து அவனுடைய மனைவியையும் கட்டி உயிரோடு அவளையும் சேர்த்துக் கொளுத்தி விடுவார்கள்! இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர்! வெள்ளைக்காரன் வந்த பின் தான், இப்படிச் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றவுடன் தான், இப்பழக்கம் மறைந்தது. இப்போது எந்தப் பெண்ணும் தன் கணவனுடன் தன்னையும் சேர்த்து எரிக்க-வில்லை என்பதற்காகக் குறைபட்டுக் கொள்-வதில்லை. அதனால் எந்தப் பெண்ணும் கெட்டுப் போவதில்லை. அதுபோலத்தான் இப்போதும் பெண்கள் இந்தத் திருமணம் என்பதன் கொடுமையினை உணராமலிருக்-கின்றார்கள். இன்னும் 40, 50 வருடங்களில் திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக ஆக்கப்படலாம். பெண்கள் தாங்களே திருமணம் செய்து கொள்ள முன்வர மாட்டார்கள். தாங்களே தங்களுக்கு வேண்டிய துணைவரைத் தேர்ந்-தெடுத்துக் கொள்வார்கள்.

நான் முன்னே குறிப்பிட்டபடி தமிழர்-களாகிய நமக்கு இந்தப் பழக்கம் - திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்கிற பழக்கம் இருந்தது கிடையாது. இடையிலே தோன்றியது தானாகும்.

தமிழ்ப் புலவர்கள் நமக்குத் திருமணம் இருந்தது என்பதற்கு எதையோ இரண்டு, மூன்று கவிதைகளை எடுத்து ஆதாரமாகக் காட்டு-கின்றனர். அவை அறிவிற்கும், நடப்-புக்கும் பொருந்தக் கூடியனவாக இல்லை. ஒன்று பெண்ணைப் பெற்றவன் பெண்ணோடு சேர்த்து ஒரு காளையை வளர்ப்பானாம். அந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்ள வருகிறவன், அந்தக் காளையை அடக்கினால் தான் அவனுக்கு அந்தப் பெண்ணைக் கொடுப்-பானாம்! இன்னொன்று, பெண்ணைக் கட்டிக் கொள்ள ஆசைப்படுகிறவன் காட்டிற்குச் சென்று ஒரு புலியைக் கொன்று அதன் பல்லைக் கொண்டு வந்து அவளுக்கு அணிவித்து அவளைப் பெற வேண்டுமென்பது! மற்றொன்று, நந்தவனத்தில் ஆணும், பெண்ணும் தற்செயலாகச் சந்தித்து, அதன் மூலம் காதலுண்டாகி வாழ்வது என்பதாகும். இதுதான் நம் இலக்கியங்கள் என்பதில் கூறப்பட்டிருப்பவை ஆகும். இவை எப்படி நடக்கக் கூடும் என்பதை நீங்களே சிந்திக்க வேண்டும். இவையெல்லாம் கற்பனைக்குச் சரியாக இருக்கலாமே ஒழிய, நடப்பிற்குப் பயன்படக் கூடிய காரியங்கள் அல்ல.

நான் 1928 முதல் இந்த முறையில் சுயமரியா-தைத் திருமணம், பகுத்தறிவுத் திருமணம் என்னும் பெயரால் நடத்திக் கொண்டு வருகின்றேன். 40 வருடங்களாக இந்த முறையில் பல ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருந்தும், இதுவரை இருந்த ஆட்சிகள் யாவும் பெரும்பாலும் பார்ப்பனர்-களுடையவும், பார்ப்பன அடிமை-களுடை-யவும் ஆட்சியாக இருந்த காரணத்தால் இம்முறையானது இதுவரை சட்டப்படிச் செல்லாததாகவே இருந்தது. இப்போது அமைந்துள்ள ஆட்சியானது பகுத்தறிவாளர்-கள் ஆட்சியானதால், இவர்கள் வந்ததும் முதல் காரியமாக சுயமரியாதைத் திருமணத்தை சட்டப் பூர்வமாக்கி இருக்கின்றார்கள்.

இம்முறையில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் முட்டாள்தனமான, மூட நம்பிக்கையான கருத்துகளைப் பின்பற்றாமல் பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும். சிக்கனமாக வரவிற்குள் செலவிட்டுப் பழக வேண்டும். அதிகமான குழந்தைகள் பெறக் கூடாது.

வரவிற்கு மேல் செலவிடுவதும், அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதுந்தான் மனிதனைக் கவலையில் ஆழ்த்தக் கூடியதாகும்.

ஆடம்பரமான வாழ்வு வாழ ஆசைப்படக் கூடாது. கூடிய வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

(10.3.1968 அன்று கோவை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 30.3.1968.
http://unmaionline.com/2010/october/01-15/page04.php

weather counter Site Meter