Pages

Search This Blog

Saturday, April 30, 2011

இன உணர்வு கொள் தமிழ் நாடு பிராமணர் சங்கத்தை(தாம்ப்ராஸ்) பார்த்தாவது

ஆதாரம் : நங்கநல்லூர் டாக் 
 
தமிழர்களே பார்ப்பனீயம் செத்த பாம்பாகி விட்டது என்று சொல்லும் மேதாவிகளே இதை படித்த பிறகாவது பார்ப்பனீயம் நசுக்க பட வேண்டி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பார்பனர்கள் இன்றும் சங்கம் வைத்து கொண்டு கூபிடுகிரார்கள் என்றால் என்ன பொருள். பார்பனியத்தின் அடிப்படையே சுருதி பேதம்,மனு தர்மம் பாதுகாப்பு இவை தானே.இவற்றை பாது காத்து இன்னும் நம்மை ஏமாற்றி உச்சாணி கொம்பாக வாழவேண்டும் எனபது தானே. 
 
கடவுள் மத போதனைகளை வளர்க்க வேண்டும்.பார்பனை தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரன் என்கிற மனு தர்மத்தை நிலை நட்ட வேண்டும் இவை தானே இதன் பொருள்.
 
அனால் இவற்றை நேரிடையாக சொல்ல முடியாது அதனால் கல்வி சேவை,ஆன்மிக சேவை என்கிற முக முடி அணிந்து கொண்டு அழைக்கிறார்கள். 
 
இதுவரையில் உறுப்பினராகத பிராமணர்கள் அனைவரும் உறுப்பினர் ஆகுங்கள் என்று சொல்கிறது தாம்ப்ராஸ். அப்படியானால் தமிழர்கள் ஆகிய நாம் எல்லாம் திராவிடர் இயக்கத்தில் இணைந்து நமது இன உணர்வை காட்ட வேண்டாமா? தமிழர்களே இன உணர்வு கொள்.

Saturday, April 23, 2011

நிழலோடு சண்டை போடும் உச்சநீதிமன்றம்

மதுரை அருகே ஜல்லிக்கட்டு நடந்தபோது இரு தரப்பினருக்கிடையே நடைபெற்ற தகராறின்போது இரு தாழ்த்தப்பட்ட தோழர்கள் பன்னீர்செல்வம், மேகமணி ஆகியோரை ஆறுமுகம் சேர்வை, அஜித்குமார் ஆகிய இருவரும் ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதோடு அல்லாமல், அவர்களை அடித்து உதைத்தும் உள்ளனர்.

இதன்மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் குற்றவாளிகளுக்குத் தண்டனை அளித்துத் தீர்ப்பும் வழங்கின.

மேல் முறையீட்டு முறையில் உச்சநீதிமன்றத்திற்கு வழக்கினைக் கொண்டு சென்றபோது, கீழ் நீதிமன்றங் களில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை உறுதி செய்ததோடு, காவல்துறைக்குச் சில வழிகாட்டுதல்களையும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜாதி தொடர்பான கவுரவக் கொலைகள் (வட மாநிலங்களில்), ஜாதிப் பெயரைச் சொல்லி அவமதிப் பது போன்ற குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. இதுபோன்ற குற்றங்கள் நடைபெறும் பகுதிக்குப் பொறுப்பான மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளை இடைநீக்கம் செய்வதோடு, அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நல்ல அறிவுரைதான், காவல்துறை சரியாக நடந்து கொள்ளும் பட்சத்தில் சில குற்றங்களைக் கண்டிப்பாகத் தடுத்து நிறுத்திட முடியும். குறிப்பாக தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையை காவல் துறை நினைத்தால் தடுத்திட முடியாதா? எந்தெந்தப் பகுதிகளில் இந்த மனித விரோதச் செயல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை காவல்துறை யினர் அறிய மாட்டார்களா?

கண்டும் காணாமல் காவல்துறை நடக்கும்போது இரட்டைக் குவளை முறை அனுபவத்தில் நிலவுவது எப்படி தடுக்கப்பட முடியும்?

எந்தெந்த மாவட்டத்தில் இன்னும் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருக்கிறதோ, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் தண்டனைக்குட்படுவர் என்று கறாராக அரசு அறிவிக்க வேண்டும்; கடமையைச் செய்யாத அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - அதில் தயவு தாட்சண்யம் பார்க்கப்படக் கூடாது.

இந்து மதம் என்னும் புற்று நோயின் குணம்தான் இந்த ஜாதிக் கொடுமை. இந்த ஜாதியின் கொடிய விளைவுதான் தீண்டாமை என்பதுமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 17ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது - அதனை எந்த வகையில் கடைப்பிடித்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஒன்றைக் கவனிக்கத் தவறிடக் கூடாது. தீண்டாமை என்பது ஜாதியின் விளைவு என்பதை உணர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட ஜாதி ஒழிப்பு என்பது மூலாதாரம் என்பது வெளிப்படை.

நீதிமன்றங்கள் தீண்டாமையை எதிர்த்து சண்ட பிரசண்டம் செய்கின்றனவே தவிர, அதற்கு மூல ஊற்றான ஜாதியை சட்ட ரீதியாக ஒழிக்க வேண்டும் என்று உதடுகளை அசைப்பதில்லையே ஏன்? அவ்வாறு செய்யாமல் நீதிபதிகள், ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டலாமா? கூடாது - கூடவே கூடாது - அது சட்டப்படி குற்றம் என்று சொல்லுவது உருவத்தை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவதாகும். கற்றறிந்த நீதிபதிகளுக்கே இதில் தெளிவு இல்லை என்பது வருந்தத்தக்கதே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை (1957 நவம்பர் 26) தந்தை பெரியார் அறிவித்து 10 ஆயிரம் திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனரே - மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கறுஞ்சட்டைத் தோழர்கள் மூன்று மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார்களே - நீதிமன்றங்கள் தானே அந்தத் தண்டனையை வழங்கின.

ஜாதி ஒழிப்பில் முக்கிய மைல் கல்லான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை முடக்குவது உச்சநீதிமன்றம் தானே?

மிக முக்கியமான இதுபோன்ற பிரச்சினையில் வேறு மாதிரியாக நடந்துகொண்டு, ஜாதியின் கொடிய விளைவுகள்மீது மட்டும் உரத்த குரல் கொடுப்பதில் பொருள் இருக்க முடியுமா?

ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற சண்டையில் ஜாதிப் பெயரைச் சொல்லித் தாக்கியவர்களுக்குத் தண்டனை அளித்ததை வரவேற்கிறோம்; அதோடு - இதற்கெல்லாம் மூல காரணமான ஜாதியை முற்றாக ஒழிப்பதற்கும் உச்சநீதிமன்றம் வழிகாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

விடுதலை 22-04-2011
http://viduthalai.in/new/page-2/7948.html

கடவுள் அருள் பக்தனுக்கே இல்லை-கைவல்யம்

(கைவல்யம் நினைவு நாளையொட்டி இக்கட்டுரை)
சைவ, வைணவ சமயங்களில் உள் சமயப் பிரிவுகளோ பல.  சைவ சமயத் தில் ஊர்த்த சைவம், அனாதி சைவம், ஆதி சைவம், மகாசைவம், பேத சைவம், அபேத வைசம், அனந்த சைவம் குறை சைவம், நிர்குண சைவம், தத்துவா சைவம், யோக வைசம், ஞான சைவம், அணுச்சைவம், கிரியா சைவம், நாலுபரதச் சைவம், சுத்த சைவம் என்னும் விதங்களும்; வைரவம், வாமம், காளாமுகம், மாவிருதம், பாசுபதம் என்னும் அதனுள் சமயமும்; தெலுங்கு, கன்னட தேசத்து வீர சைவமும், தசானமிகண்டி சைவர்கள், யோக சைவர்கள், பரம அம்ச சைவர்கள், அகோ சைவர்கள், ஊர்த்தவாரி, ஆகாசமுகி, நாகி சைவர்கள், சூடராச்சைவர்கள், ருகார, உகார, சுகார சைவர்கள், சாரலிங்கச் சைவர்கள், சந்நியாசிச் சைவர்கள், நாகச் சைவர்கள் முதலிய வட தேசத்து வைசர்கள் கூட்டமும் இத்தனை பேதமான சைவக் கூட்டங்களெல்லாம் சிவனை வணங்குகிறவர்களானாலும் கொள்கை, ஆச்சாரம், பூசை விதிகள், ஆராதனை முதலியவைகளில் வேறு பட்டவர்கள்.  விஷ்ணுவை ஒரு தேவனா கவும், சிவனின் பெண் ஜாதியாகவும் நினைப்பவர்கள்.

சிவனையும் கோவிலையும் நிந்திக்கும் வைணவர்கள்

வைணவத்திலும் பல பேதங்கள்.  இரணியகப்பம், மாயாவாதம், இரா மானுஜீயம், பாஷ்கரம், தத்துவ விஷாரம் என்னும் பல பிரிவாய் மாலுக் தாசி வைணவம், இராயதாசி வைண வம், சேருபந்தி வைணவம், மீராபாய் வைணவம்.  இராதாபாய் பல்லவி வைணவம், சகீபாவ வைணவம், சாதாரதாசி வைணவம், அரிச்சந்திர வைணவம், சாதனபந்தி வைணவம், மாதோவைணவம், பிராணநாத வைணவம், சாதுவை வைணவம், சதநாம வைணவம், சிவ நாராயண வைணவம், திரிதண்டி வைணவம் முதலிய வடதேசத்து வைணவமுமல் லாமல் கமலா,  ஜமாஸ், கபீர், விமலா, சாது முதலிய கூட்டங்கள் கோவில் விக்கிர பூசையுமில்லாமல் ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டிருக் கும் வைணவக் கூட்டங்களுமிருக் கின்றன.

இவர்களுக்கெல்லாம் தெய்வம் விஷ்ணுவாக இருந்தாலும் ஆச்சாரம், கொள்கை ஏற்பாடு முதலியவைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டே இருக் கும். இவர்களெல்லாம் சிவனை உத்திரனென்றும், உரு மந்திரத்திற்கே அதிகாரி என்றும், அந்த மந்திரமும் பலிப்பதற்கு விஷ்ணுவின் காலிலிருந்து வரும் கங்கையைத் தலையில் அணிந்திருக்கிறார் என்றும் இன்னும் ஆபாசங்களால் சிவனையும் கோவி லையும் நிந்திப்பார்கள்.

ஜாதியிலிருந்து தள்ளப்பட்ட பிள்ளையார்

வடகலை வைணவர்கள் விஷ்ணு வின் தென்கலை நாமத்தைச் சுரண்டி எடுத்தும் விடுவார்கள்.  விஷ்ணு கோவிலுக்குப் பக்கத்து அரசமரத்தடி பிள்ளையாருக்கு நாமமும் போட்டு விடுவார்கள்.  அதைச் சைவர்கள் கண்டு தங்கள் தெய்வத்தின் பிள்ளைக் குச் செய்த அநீதிக்கு சண்டைக்கும் வருவார்கள்.  சமாதானத்தின் பேரில் அந்தப் பிள்ளையாரை ஜாதியிலிருந்து தள்ளிவிட்டும் போய் விடுவார்கள்.

இவையனைத்தும் ஆகமசாஸ்திர மந்திரத்தை உடையது என்கிறார்கள்.  இவ்வளவு சமயங்களிலும் ஆச்சாரி பூசாரிகளுக்கு அந்தத் தெய்வங்கள் பிரத்தியட்சமாவதும், உத்தரவு பண்ணு வதும், சொப்பனம் சாதிப்பது முதலிய காட் சிகள் நடந்து வருவதாகவே சொல்லு கிறார்கள்.  எப்படியிருந்தாலும் இந்தத் தெய்வங்களுக்கும், சமயங்களுக்கும், கோவில்களுக்கும், ஆச்சாரி குருவுக்கும் உண்டாகும் விவகாரங்களையெல்லாம் தீர்த்துவைப்பது கிறிஸ்துவ சமயமும் அந்தக் கடவுள் சக்தியுமேயாகவிருக்கிறது.

சக்தி பூசை

முன்சொன்ன சமயங்களை எல்லாம் விட வெகு சுளுவாகவும் உலகமெல்லாம் ஆச்சரியப்படும்படியான பூசா விதிகளுடன் எல்லாப் பாக்கியங்களையும் கொடுத்து மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய சமயம் ஒன்றிருக்கிறது.  அதாவது, பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் ஒரு சக்தியி லிருந்து வந்ததால் அந்தச் சக்தியே தெய்வம்; இந்தத் தெய்வத்தையும் அதன் பூசைக்கிரமங்களையும் சொல்லுவது தந்திர சாஸ்திரம்; இதுவும் இந்து மதத்தைச் சேர்ந் ததுதான்.  வேதத்தில் ஆகம சாஸ்திரம் இருப்பதுபோல தந்திர சாஸ்திரமும் வேதத்தில் ஒட்டிக் கொண் டிருப்பதுதான்;

அதற்குச் சக்தி மதமென்று பெயர்.  அந்தச் சக்தியைப் பூசிப்பதற்கு சாதனங்கள் வாலிப திடகாத்திரத்துடன் கூடின பெண்ணின் குறிகள், மாமிசம், மீன் இவற்றை அனுபவித்துக் கொண்டே சக்தியான தேவியைப் பூஜித்தால் எல்லா சம்பத்தும் வந்து மோட்சத்தையும் அடைய லாம் என்று சொல்லுகிறது.  கோவில் களிலும் தேர்களிலும் பல சித்திரங்கள் செதுக்கியிருப்பதும் சக்தியின் சின்னங்களே.

நாஸ்திகனைத் தண்டிக்காத அரசன் அரசனுக்குப் பிறந்தவனல்லவாம்!

ஒரு சமயத்திலிருந்து இத்தனைவித சமயங்களும் உட்பிரிவுகளும் ஏன் உண்டா யிற்று?  எதற்காக உண்டு பண்ணப்பட்டன வென்றால், வேதத்திற்குப் பார்ப்பான் அதி காரி; வேதத்திலுள்ள எந்தச் சமயத்திற்கும் ஆச்சாரி, குரு, கர்த்தா பார்ப்பான்.  வேதத் திற்கோ, வேதத்தைப்பற்றின சமயத்திற்கோ அதிகாரம் யாருக்கும் இல்லை. 

மக்களுக்குள்ள பொது அறிவால் ஏதாவது கேட்டால் தண்டனையுண்டு: கேட்டவர்கள் நாஸ்திகர்கள் -  வேதம், சமயம் முதலி யவைகளைப் பற்றி யுக்திவாதம் செய்கிற வர்களை எந்த அரசன் தண்டிக்க வில்லையோ அந்த அரசன் தன் தகப் பனான அரசனுக்குப் பிறந்தவனல்ல வென்று வேதம் சொல்லுகிறது.

கடவுளால் சொல்லப்பட்ட வேதத்தில் அப்பனுக்குப் பிறக்கவில்லையென்று சொல்கிறதே என்று பயந்து அரசர்களும் தண்டித்துவிடுவார்கள்.  இந்தக் காலத்தில் தண்டனையில்லை.  சமய தர்க்கங்களி னால்தான் இத்தனை சமயங்களும் உண்டாயின் தர்க்கமும் பல சமயம் உண்டு பண்ணினதும் பார்ப்பனர்களே.  அவர் களைக் கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. 

வேதப் பிரமாணம் சமயம், சமயப் பிரமாணம் கடவுள், கடவுள் பிரமாணம் பார்ப்பான்.  எத்தனைச் சமயப் பிரிவுகள் உண்டானாலும் உண்டாக்கிக் கொண் டாலும் ஆச்சாரி புரோகிதன் பார்ப்பான்.  அதிலுள்ள லாபமெல்லாம் அவரவர்கள் கூட்டத்திற்குத்தானே?  உண்டாக்கிக் கொண்டிருப்பதுதானே அவர்கள் தொழிலும்.

தொழில்முறை லாபத்தினால் ஏற்பட்ட பிரிவுகள்

வேதமென்றும், கடவுளென்றும், சமயமென்றும் சொல்லி அதிலேயே நம்பிக்கையுடைய மக்களை ஏய்ப்பதில் நம்பிக்கையுடையவர்கள்தானே பார்ப்பார்களும்; தொழில் முறையான லாபத்தினால்தான் இத்தனை பிரிவுகள் ஏற்பட்டன.

கும்பாபிஷேகம் செய்து கோவிலில் குடிவந்திருக்கும் கடவுளிடம் அருள் சக்தி, கடாட்சம், பாதுகாப்பு, பிரசாதம், அபிஷேகம், மந்திரம் முதலிய சக்தி களும் குருக்களின் அபிஷேக சக்தி புரோகிதர்களுடைய மந்திர சக்தி இன்னும் பல சக்திகளும் நிறைந் திருப்பதாக அல்லவா நிச்சயமாக அதைத்தானே நமக்கும் சொல்லு கிறார்கள்.  அதைத்தானே நாமும் நம்பி கடவுளுக்கு எத்தனையோ செய் தோம்; இப்பொழுதும் செய்து வருகிறோம்.  கடவுளுடைய இத்தனை சக்திக்கும் மேலதிகாரிகளாய் கடவு ளுடைய காரியங்களையெல்லாம் பார்த்துவரும் மடாதிபதிகள், மகந்துக் கள், ஆச்சாரிகள் முதலியவர்களின் ஆபத்திற்கே கடவுளும் அவருடைய மற்ற சக்திகளும் ஒரு உதவியும் செய்யவில்லை என்றால் நமக்கு எப்படி உபயோகப்படும்?  நம் கஷ்டத்தைத் தீர்க்குமா?

மகந்துவை மருந்துதான் காப்பாற்ற வேண்டும்

முன்னிருந்த திருவாடுதுறை பண்டார சந்நதியின் உபத்திரவத்தை சென்னை டாக்டர் ராபர்ட்சன் தீர்த்தார்; பஞ்சாட்சர மந்திரமும், சைவ சின்னங்களும், தேவார திருவாசகமும் மடாதிபதியைச் சுற்றிக்கொண்டு தானிருந்தது.  சிறிது காலத்திற்கு முன் திருப்பதி மகந்துவிற்குப் புத்திக் கோளாறு ஏற்பட்டது.  மால்காமன்ஸ் என்கிற சென்னை டாக்டரைக் கூட்டி வந்து பார்த்தார்கள்.  திருப்பதியில் உங்கள் பெருமாளுக்கும் பிரசாதத் திற்கும் மத்தியில் மகந்து விருந்தால் வியாதி குணப்படாது என்று சொல்லி மகந்துவை சென்னைக்குக் கூட்டிப் போய் இங்கிலீஷ் நர்ஸ் வருகிற வரையிலும் மகந்து கூடவே யிருந்தன.  இருந்தும் மகந்துவை ஒரு மணி நேரம் தூங்கவைக்கக் கூட முடியவில்லை.

அதேபோல சிறிது நாளைக்கு முன் சிருங்கேரி சங்கராச்சாரிக்கும் இங்கி லீஷ் வைத்தியமே செய்யப்பட்டது.  கடவுளிடம் அருள், ஆசிர்வாதம் பெற்று நமக்களிக்கும் குருக்குள், அர்ச்சகர் கள், புரோகிதன் முதலியவர் களெல்லாம் சென்னை டாக்டர்களிடம் தானே அடைக்கலம் புகுகிறார்கள்?  இவர்களுக்கெல்லாம் அருள் சுரக்காத கடவுள் நமக்கென்ன செய்வார்?  நமது கடவுள் சமய ஏற்பாடு அனைத்தும் புரோகிதப் புரட்டும், குருக்கள் கட்டுப் பாடும், நமது அறியாமையும் என்பதை ஆலோசித்துப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.
(உண்மை: 14.12.1973)


ய்யரிடம் கேட்கலாம் என்ற கெட்ட வழக்கம் எப்படி ஏற்பட்டது?

தானம் கொடுப்பது என்றால் பார்ப்பனருக்குத்தான் தானம் கொடுக்க வேண்டும் என்ற நியதி இன்றுவரை நிலவுவதற்குக் காரணம் என்ன? அதற்கும் காரணம் இராமாயண நீதிதான் என்று கைவல்யம் அவர்கள் கூறுகிறார்கள்.

இராமன் காட்டுக்குப் போகிறான்; சீதை தானும் வருவதாகக் கூறுகிறாள். அதற்கு இராமன் ஒரு நிபந்தனை விதிக்கிறான்.

நீ வருவதாக இருந்தால் நான் சொல்கிறபடியே செய்துவிட்டு வரவேண்டும். அதாவது உன் நகைகளையும், உன்னிடமுள்ள மற்ற பொருள்களையும் பிராமணர்களுக்குக் கொடுத்து விட வேண்டும். உனது வேலையாள்களுக்கு நீ ஏதாவது கொடுக்க நினைத்தால் அதையும் பிராமணர்களைக் கேட்டுக் கொடுக்கவேண்டும் என்று சீதையிடம் இராமர் கூறுகிறார்.

இந்தச் செய்தியை எழுதிவிட்டு கைவல்யம் கேட்கிறார். ஊரிலிருந்தாலும், காட்டுக்குப் போனாலும் எல்லாம் பிராமணர்களுக்குக் கொடுத்துவிடு என்று சொல்லவே எல்லாருக்கும் பொதுவாயுள்ள தெய்வம் பூலோகத்தில் அவதாரம் பண்ணி சனங்களுக்கு நடந்துகாட்ட இராமஇராச்சியம் நடத்தி வந்தது என்று விளங்கவில்லையா? நீ உன் வேலைக்காரர்களுக்கு ஏதாவது கொடுக்க இஷ்டப்பட்டாலும் - கொடுப்பதாக இருந்தாலும்  பிராமணர்களைக் கேட்டு, அவர்கள் சொற்படி  செய் என்றுதானே இராமர் தன் பெண்ஜாதியான சீதைக்குச் சொன்னார்.

இந்த உத்தரவினால் ஒரு கூட்டத்திற்கு லாபமும், ஏழைகள் வாயில் மண்ணுமல்லவா விழுந்துவிட்டது என்று குறிப்பிடுகிறார்.

இதற்குக்கூட அய்யரைக் கேட்கணுமா என்று குத்தலாக இன்று சொல்லுகிறோம் என்றால், அது வந்ததற்குக் காரணம் இராமாயணத்தில் இராமன் சீதையிடம் சொன்ன இடம்தான் என்று மிக அழகாகக் கைவல்யம் குறிப்பிடுவது சிறிய விஷயத்தில் பதுங்கிக் கிடக்கும் பெரிய உண்மைகளை வெளிப்படுத்தும் பேரறிவைக் காட்டுகின்றது!

விடுதலை 22-04-2011
http://viduthalai.in/new/page-2/7949.html

தன்மான இயக்கத்தின் தன்னிகரில்லா எழுத்தாளர்- கைவல்யம்

தன்மான இயக்கத்தின் தன்னிகரில்லா எழுத்தாளர் இவர்.

வேதங்களும், உபநிஷத் துகளும், கைவல்ய சூத்திரங் களும், இதிகாசங்களும், புராணங்களும் இந்த மனிதனின் எழுதுகோலில் படாத பாடு பட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும்.

இப்படிப்பட்ட ஓர் எழுத்துப் போர் வீரர் தந்தை பெரியார் பெரும் படைக்குக் கிடைத்தது மிகப் பெரிய வாய்ப்பு என்பதில் என்ன சந்தேகம்?

இவரைப்பற்றி தந்தை பெரியார் கூறுகிறார் - கேளுங்கள், கேளுங்கள்!

கைவல்யம் அவர்கள் மீது பெரு மதிப்பு ஏற்படுவ தற்கு முக்கிய காரணம், இவர் தமக்கென்று இடுப்பு வேட்டியைத் தவிர, சாப் பாட்டைத் தவிர, ஒரு சாத னத்தையும் விரும்பினது மில்லை, வைத்துக் கொண் டிருந்ததுமில்லை. அதனால் தான் அவரைப்பற்றி யாரும் ஒன்றும் சொல்ல முடியாமற் போயிற்று என்கிறார் தந்தை பெரியார்.

இவரது இயற்பெயர் பொன்னுசாமி. கைவல்யம் என்ற பெயர் எப்படி வந்தது? அதற்கொரு சுவையான காரணம் உண்டு.

கரூரில் உள்ள மவுன சாமியார் மடத்துக்கு இவர் செல்வதுண்டு. அந்த மடத் தில் இருந்த சாமியார்களிடம் வேதாந்த விசாரணைகளில் ஈடுபடுவார். அப்பொழுது கைவல்யம் நூலைப் பற்றியும் அக்குவேறு ஆணி வேறாகப் பிய்த்து எடுத்தார். அப்பொழுது முதல் நம் பொன்னுசாமிக்குக் கைவல்ய சாமியார் என்ற பெயரே வழக்கில் அமைந்துவிட்டது.

கைவல்ய நவநீதம் என்பது அத்வைத மார்க் கத்தைச் சார்ந்தது. தாண்ட வராய சுவாமி என்பவரால் 310 பாடல்களால் ஆக்கப் பட்டதாகும். இந்நூல் கூறும் தத்துவ விசாரணையில் கரை கண்டவர் நமது கைவல்யம் என்கிற பொன்னுசாமி ஆவார்.

கோவை மாவட்டத்தில் சங்கராச்சாரியார் செல்லும் பொழுதெல்லாம் இவரும் பின் தொடர்ந்து சென்று, சங்கராச்சாரியாருக்கு எதிர்ப் பிரச்சாரம் செய்வாராம். கதா காலட்சேபம் செய்யும் பாகவ தர்களுக்கு எல்லாம் கைவல்யம் பெயரைக் கேட் டாலே கிலி பிடித்து விடுமாம்.

அவர்கள் கதாகாலட்சேபம் செய்யும் இடத்துக்கு நமது கைவல்யம் சென்றார் என் றால், அவ்வளவுதான் - பாகவதர்களின் சப்தநாடி களும் ஒடுங்கி விடும் - தொண்டை வற்றிப் போய் விடும் என்கிறார் பெரியார். வடகலை, தென் கலை களைச் சேர்ந்தவர்கள்பற்றி கைவல்யம் கூறுவது மிகவும் வேடிக்கையானது.

வடகலை, வைணவர்கள் விஷ்ணுவின் தென்கலை நாமத்தைச் சுரண்டி எடுத் தும் விடுவார்கள். விஷ்ணு கோவிலுக்குப் பக்கத்து அரச மரத்தடி பிள்ளையாருக்கு நாமமும் போட்டு விடுவார் கள். அதைச் சைவர்கள் கண்டு தங்கள் தெய்வத்தின் பிள்ளைக்குச் செய்திடும் அநீதிக்கு சண்டைக்கும் வருவார்கள். அடுத்து சமா தானத்தின் பேரில் அந்தப் பிள்ளையாரை ஜாதியிலி ருந்து தள்ளிவிட்டும் போய் விடுவார்கள் என்று எழுது கிறார் கைவல்யம்.

இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு! அந்தச் சுயமரியாதைக் கருத் துச் சுரங்கத்தின் நினைவு நாள்(22-04-2011) இந்நாள் (1953).

- மயிலாடன்

விடுதலை 22-04-2011

Wednesday, April 20, 2011

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்ச வைபவமாம்

தனது காலினை முதலை பிடித்து இழுத்தவுடன் கஜேந்திரன் (யானை) கண்களில் கண்ணீர் மல்க, ஆதிமூலமே! என்று அலறி அழைத்தவுடன் விஷ்ணுபகவான் தன் கருட வாகனத்துடன் பறந்தோடி வந்து, சக்ராயுதத் தினால் முதலையை அழித்து, கஜேந்திரனுக்கு (யானைக்கு) விடுதலை யளித்ததோடு மட்டும் அல்லாமல், முதலை உருவத்தில் இருந்த ஹீ ஹீ வென்ற கந்தர்வனுக்கும் சாபவிமோசனம் அளித்தாராம். எப்படி இருக்கிறது கதை?
ஆதிமூலமே என்று யானை கூப்பிடுமா? கடவுள்தான் சகலமும் அறிந்தவராயிற்றே - அவனன்றி ஓர் அணுவும் அசையாததாயிற்றே - அப்படி இருக்கும்போது தனது பக்தனான கஜராஜனை முதலை கவ்விக் கொண்டதை அறியமாட்டாரா?

யானை இருக்கட்டும். கோவிந்தா, கோவிந்தா! என்று பக்தர்கள் கோஷம் போடுகிறார்களே, எந்தப் பக்தன் வீட்டுக்குச் சங்கு சக்கரத்தோடு வந்து, அவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளை சம்ஹாரம் செய்திருக்கிறார்?

திருப்பதி வெங்கடாசலபதியென்னும் விஷ்ணு பகவானைத் தரிசிக்கச் செல்லுவோரும், தரிசித்துவிட்டுத் திரும்புவோரும் விபத்தில் பலியாகிறார்களே, அப்பொழுதெல்லாம் விஷ்ணு பகவான் ஏன் ஓடோடி வரவில்லை?

இந்த இலட்சணத்தில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்ச வைபவமாம், அதற்குப் பக்தர்கள் கூட்டமாம். கேழ்வரகில் நெய் வடிகிறதாம். குண்டாஞ்சட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடோடி வாருங்கள் வாருங்கள்!

ஹி . . ஹி. . பக்தி நோயிலிருந்து இவர்கள் புத்தி எப்பொழுது குணமாகப் போகிறதோ! தேவை - ஈரோட்டு மருந்து!

சார்லஸ் டார்வின்-நினைவு நாள் (1882)

நூல் ஒன்று மதவாத மண்டபத்தை இடித்துத் தள்ளியது என்றால், அது சார்லஸ் டார்வினால் எழுதப் பட்ட உயிரினங்களின் உற்பத்தி என்னும் நூலாகும்.

அந்த நூல் என்ன அணுகுண்டா? வெடி குண்டா?

ஆமாம். அதுவரை உயிர் களைக் கடவுள்தான் படைத் தான் என்ற பைபிள் கோட்பாட் டுக் கருத்திற்குக் கசையடி கொடுத்துக் கவிழ்த்து விட்டது ஒரு நூல் என்றால் அது சாதாரணமா?

இந்தக் கருத்துகள் பரவு மானால் மதமாவது மண்ணாங் கட்டியாவது - கடவுளாவது கத்தரிக்காயாவது என்று கண்ட மாதிரி மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்களே.

அந்த ஆத்திரத்தால் வசை மாரி பொழிந்தது கிறித்துவக் கோட்பாட்டு உலகம். மனிதனின் வரலாறு என்ற நூலையும் வெளியிட்டார். இந்த இரு நூல்களையும் படித்து சிகப்புத் துணியைக் கண்ட காளையாக மிரண்டனர்.

குரங்கிலிருந்துதான் படிப் படியாக பரிணாம வளர்ச்சித் தத்துவப்படி மனிதன் பிறந்தான் என்கிறாரே டார்வின், அப்படியா னால் அவரின் மூதாதையரான பாட்டியை பார்த்தா, தாத்தாவைப் பார்த்தா என்று கேட்டார் ஒரு மே(ல்)தாவி!

1860ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டில் பிரிட்டீஷ் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற விவாத அரங்கில் டார்வினின் இயற்கைத் தத்துவத்தைக் கேலி செய்து பாதிரியார் வில்-பர் -போர்லஸ் தான் இவ்வாறு கூறினார்.

டார்வினின் தாத்தா, தந்தை யார் இருவருமே பிரபலமான டாக்டர்கள், வசதி வாய்ப்புள்ள குடும்பத்தில் ஆறு பிள்ளை களில் 5 ஆவது மகனாகப் பிறந்தவர் இவர்.

மகன் பாதிரியாராக வர வேண்டும் என்று தந்தையார் கருதினார். அதற்காக மருத் துவக் கல்வியை இடையில் முறித்துக் கொள்ளும் நிலை யெல்லாம் ஏற்பட்டது. அவர் மனம் அதில் ஈடுபடவில்லை. இயற்கை ஆய்வில் மொய்த்துக் கிடந்தது.

கேப்டன் ஃபிட்ஸ்ராய் என்பவர் மேற்கொண்ட கப்பல் பயணத்தில் உதவியாளராக செல்லும் வாய்ப்பு டார்வினுக்குக் கிடைத்தது. அதுதான் பரிணா மத் தத்துவத்தை டார்வின் கண்டு பிடிக்கப் பெரிதும் உதவியது (5 ஆண்டுகள் அந்தப் பயணம்).

சுற்றுப் பயணத்தைத் தொடங்கியபோது பைபிளின் கருத்துதான் டார்வின் கருத் தாக இருந்தது. பயண முடிவின் போது கருத்துத் தலை கீழானது.

19 ஆண்டுகள் ஆய்வு செய்து மனிதனின் மூதாதை குரங்குதான் என்ற ஆய்வை வெளிப்படுத்தினார்.

The Mystery of the begining of all things is insoluable by us and I for one must be content to remain agnostic என்று தன் சுயசரிதை யில் எழுதினார் டார்வின்.

பல பொருள்களின் துவக்கம் எப்படி என்பது ஒரு புதிர் என்றாலும், எளிதில் அதனை நாம் ஜீரணித்துக் கொள்ள இயலாது என்ற போதிலும் நான் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன் என்பதே போதுமானது என்று நினைக்கிறேன் என்று அந் நூலில் பதிவு செய்துள்ளார். (அந்தக் கால கட்டத்தில் அதற்கு மேல் அவரால் சொல்ல முடியாது என்பதே உண்மை) 360 ஆண்டுகளுக்குப்பிறகு போப் பாண்டவர் ஜான்பால் டார்வின் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு பள்ளிகளில் போதிக்க ஒப்புக் கொண்டார் (‘The Hindu’ 26.10.1996) இறுதி வெற்றி மதத்துக்கு அல்ல, மதிக்குத்தான்! இன்று(19-04-2011) டார்வின் நினைவு நாள் (1882).

- மயிலாடன்

Tuesday, April 19, 2011

தமிழக அமைச்சரவைகள்

விடுதலை-ஞாயிறு மலர்-- 02-04-2011

ஆனந்த விகடனின் சண்டப் பிரசண்டம்

2010 இல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் என்ற தலைப்பிலும் 2010 டாப் 25 பரபரா என்ற தலைப்பிலும் 2011 ஜனவரி 3 நாளிட்ட ஆனந்தவிகடன் இதழில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவங்களை விகடன் டீம் தொகுத்து, எழுதி, தயாரித்து உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பத்திரிகையாளர் இதைத்தான் எழுதவேண்டும் என்று சொல்லவோ, இதனை எழுதக்கூடாது என்று சொல்லவோ யாருக்கும் உரிமை இல்லை. குறைந்த அளவு விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையோடு எழுத வேண்டும் என்று சொல்லக் கூட யாருக்கும் உரிமை இல்லை.

ஏன் என்றால் மனிதன் என்று இருந்தால் அவனுக்கு விருப்பு வெறுப்பு இல்லாமல் இருக்கவே முடியாது. முற்றிலும் துறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சங்கராச்சாரியார் களுக்கும், நித்யானந்தாக்களுக்கும் கூட விருப்பு, வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் ஒரு பத்திரிகை தன் சொந்த, தனது சொந்த இனத்தின் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படை யில் எழுதுகிறது என்று சுட்டிக் காட் டும் உரிமை எவருக்கும் உண்டு என் பதை எவராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் எனது மனக் குமுறலாக இதனை எழுத நேர்ந்தது.

விஷயத்துக்கு வருவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட டாப் 25 பரபரா கட்டுரையில், சங்கி-மங்கி என்ற உப தலைப்பில் கலைஞர் பாராட்டு விழாக்களில் ரஜினி - கமல்தான் பஃபூன்கள் ஜெகத்ரட்சன், இராம நாராயணன், போன்ற நிலைய வித் வான்களையே பீட் செய்ததில் ரஜினி,-கமல் இருவரும் பாராட்டு விழா சங்கி-மங்கி 2010 என்று எழுதியுள்ளது.

திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள நிலம் ஒதுக்கியதற்காக முதல்வருக்கு திரைப்படத்துறையினர் நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்தினர். முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்படுவது விகடனுக்கு தமாஷாக உள்ளது. ஏனென்றால் அவர் விகடனாயிற்றே.

பத்துகோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்கும் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தலாம். உலக நாயகனுக்குப் பாராட்டு விழா நடத்தலாம். இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோருக்கெல்லாம் பாராட்டு விழா நடத்தலாம். ஆனால் கலைஞருக்குப் பாராட்டு விழா நடத்தினால் மட்டும் இவர்களுக்கு ஏன் வலிக்கிறது? எங்கு வலிக்கிறது?

தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மய்யக் கருத்துப் பாடல் பற்றி எள்ளி நகையாடப்படுகிறது. மு.க. அழகிரி கிண்டல் செய்யப்படுகிறார்.

தஞ்சைப் பெரிய கோயில் விழாவில் கொல்லைப்புற வழியாகப் போன பகுத்தறிவுக் காமெடி, உமாசங்கர் பிரச்சினை, தமிழ் வழக்காடு மொழி விவகாரம், பார்வதி அம்மாள் சிசிக்சை என்று எவ்வளவு அடித்தாலும் கலைஞர் தாங்கினாராம். ஸ்பெக்ட்ரம் மில் கிறுகிறுத்துப் போனாராம். ஏதோ எல்லாப் பிரச்சினைகளுக்கும் கலைஞர்தான் காரணம் போலவும், ஆ.இராசாவினால் அவரது அரசியல் வாழ்வே ஆட்டம் கண்டுவிட்டது போலவும் புலம்பும் விகடன், கலைஞர் தனது வீட்டை மருத்துவமனைக்கு கொடையாகக் கொடுத்ததையும் கொச்சைப்படுத்தி நகையாடுகிறது.

கலையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் அஜீத் பேசியது, ரஜினி கைதட்டியது, ஜாகுவார் தங்கத்தின் பல்டி என்று இந்த நிகழ்ச்சியை ஏதோ உலகமகா முக்கியத்துவம் வாய்ந்தது போலக் கதைத்துள்ளது விகடன்.

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம் என்று கல்வி நிறுவன நிலங் களைப் பயன்படுத்தப் பார்த்த ஜெய லலிதா முயன்று கைவிட்டது பற்றி குறிப்பிடாமல், அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட மாளிகை பற்றி நக்கல் அடிக் கிறது. கட்டிய வீட்டிற்கு நொட் டாரம் சொல்வது என்பது இதுதானோ?

தலைமைச் செயலகம் கட்டிய தொழிலாளிகளுக்கு விருந்து அளித்தது இவர்களுக்கு கேலிக்குரிய விஷயம். சங்கமம் விழா, கோவை செம்மொழி மாநாடு, இவையெல்லாம் இவர்களுக்கு நகைப்புக்குரிய விஷயங்களாம்.

பேச்சு மொழி அல்லாத, இலக்கியத் துறையினர், மத நம்பிக்கையாளர்கள் தவிர மற்றவர்களால் படிக்கவோ எழுதவோ முடியாத சமஸ்கிருதம் செம்மொழியாம். மூன்று சங்கங்கள் அமைத்து, மூவாயிரம் இலக்கியங்கள் படைத்த தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று போராடிப் பெற்றதைக் கொண்டாடிய செம்மொழி மாநாடு இவர்களுக்கு வேடிக்கை, விளையாட்டு.

பா.ம.க. தலைவர் ராமதாசு, அன்புமணி பற்றிய கிண்டல். குஷ்புவின் அரசியல் பிரவேசம் பற்றிய கமெண்ட். டி.ராஜேந்திரனின் தொலைக் காட்சி நிகழ்ச்சி பற்றிய கிண்டல். இவ்வளவை யும் சொல்லத் தெரிந்த விகடனுக்கு, ஜெயலலிதா, விஜயகாந்தின் கோமாளித் தனங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை போலும்.

ஜெயலலிதா ஆட்சியில் பத்திரிகைச் சுதந்திரம் என்ன பாடுபட்டது என்பது விகடனுக்குத் தெரியாதா? விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு சபாநாயகர் வழங்கிய சிறைத் தண்டனை, இந்து நாளிதழ் செய்தியாளரை பெங்களூர் வரை துரத்திச் சென்று கைது செய்ய முயன்றது, தேர்தல் ஆணையர் சேஷன் தங்க இருந்த தாஜ் ஓட்டலைத் தாக்கி சேதப்படுத்திய அரசால் ஏவப்பட்ட ரவுடித்தனம் இவைகள் எல்லாம் மறந்து போய் விட்டன போலும்.

சுப்பிரமணிய சாமிக்குத் தான் எப்படிப்பட்ட வர வேற்பு! இப்போது ஜெயலலிதாவும், விஜயகாந்தும் அவர்களுக்கு நல்ல பிள்ளைகளாகத் தெரிகிறார்கள் போலும். அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று விஜய காந்த் கூறுகிறார். அதிமுக வெற்றி பெறப்போவதில்லை.

அப்படியே தவறி வெற்றி பெற்றாலும் அது என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிக் கூற விஜயகாந்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. தனது வேட்பாளரின் பெயரையே நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல், அதனை நினைவுபடுத்திய வேட் பாளரை பொது மக்கள் முன்னிலை யில் அவமானப்படுத்தி அறைந்த விஜயகாந்த் வந்துதான் நாட்டு மக்களை உய்விக்கப் போகிறாரா?

என்ன செய்வது, எழுதுகிறவர் களுக்கும் வெட்கமில்லை, பேசுகிறவர் களுக்கும் வெட்கமில்லை, கேட்கிற வர்களுக்கும் வெட்கமில்லை.

நல்லது கெட்டது என்பதில் படித் தவர்கள்தான் அதிகமாகக் குழப்பிக் கொள்கிறார்கள். ஆனால் பாமர பொது மக்கள் பேரறிவுடன் அமைதியாக இருக்கிறார்கள். நாட்டுக்கும், மக்களுக் கும் நன்மை செய்தவர்கள், செய்கிற வர்கள், செய்யப் போகிறவர்கள் யார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். இந்தத் தேர் தலில் அதிமுக கூட்டணி டெபாசிட் வாங்கினால் பெரிய விஷயம். இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், ஜெயலலிதா பட்டிமன்றம் நடத் துவது பரிதாபத்துக்குரியது.

மே 13 அன்று வெளிவரப்போகும் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியல் வாதிகளுக்கும், காங் கிரஸ்காரர்களுக்கும் தமிழ் நாட்டின் தனித்தன்மையை எடுத்துக் கூறும்.

த.க. பாலகிருட்டிணன்

விடுதலை-ஞாயிறு மலர்-- 02-04-2011

உலகமொழிகளில்தமிழ் - முனைவர். கு. அரசேந்திரன், சென்னைக் கிறித்தவக் கல்லூரி


உலகமொழிகள்
உலக மொழிகள் சற்றொப்ப 2,796 என்பர் அறிஞர் (1)

இம் மொழிகளை
1. இந்தோ அய்ரோப்பியம் (Indo - European)

2. செமித்திக் _ அமித்திக் (Semito - Hamitic)

3. ஊரால் _ அல்தாய் (Ural - Altaic)

4. சப்பானிய _ கொரியன் (Japanese - Korean)

5. சீனதிபெத்தியம் (Sino - Tibetan)

6. திராவிடம் (Dravidian)

7. மலேய _ பொலினீசியம் (Malayo - Polynesian)

8. ஆப்பிரிக்க நீக்கிரோனியம் (African - Negro)

9. அமெரிக்க இந்தியம் (American Indian) என ஒன்பதாகப் பிரிப்பார் மரியோ பெய் (MarioA.pei)

முதன்மொழி

உலகமொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியிலிருந்து பிறந்திருக்கலாம் என்ற கருத்து மொழிநூலறிஞர்களிடம் இருந்து வருகின்றது. விவிலியத் திரு மறையில் ஆதிகாலத்தில் ஒரு மொழியே பேசப்பட்டு வந்ததென்ற செய்தி காணப்படுகின்றது.

எபிரேயமொழியே (Hebrew) உலகில் தோன்றிய முதன்மொழி என்ற கருத்தும் அறிஞரிடை உண்டு. இதனை மொழி நூல் வல்லுநர்கள் அவ்வளவாய் ஏற்ப தில்லை. சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்களே எகிப்தில் (Egypt) குடியே றினர் என்ற முடிவும் அறிஞர்களி டையே உண்டு.

இலேநாடு வுல்லி (Leaonard Wooly) என்னும் தொல்பொருளாய்வறிஞர் எகிப்தின் ஊர் நாகரிகம் பற்றி எழுதிய நூலில் சுமேரியர்கள், தங்கள் முன்னோர் நாகரிக முதிர்வுடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்து குடியேறியவர்கள் என்ற கருத்துள்ளதென்று இயம்பியுள் ளார்.

பண்பாட்டின் தொடக்கம் _ தென்னிந்தியா... (Beginning of civilisation in south India - by H.D. Sankalia) என் னும் நூலில் அதன் ஆசிரியர் உலகில் முதன் முதலாக கிடைக்கப்பட்ட எழுத்து, சிந்துவெளி எழுத்தே என்றும் எகிப்திய நாகரிகத்தினும் தமிழர் நாகரிகம் முந்தியதென்றும் கூறியுள்ளார்.

தெற்கிலிருந்து வடக்கா அல்லது வடக்கிலிருந்து தெற்கா

தமிழர், எகிப்து தேசத்திலிருந்து சிந்துவெளிப் போந்து அதன் பின்னர்த் தெற்கு நோக்கி நகர்ந்த இனத்தவர் என்று அறிஞர் பலராலும் தமிழர் தெற்கேயிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்காகச் சென்று ஏந்தியம் கடந்த நைல் ஆற்றங்கரையில் குடியேறினர் என்று அறிஞர் சிலராலும் இருவகை யிலும் கருத்துகள் சொல்லப்படுவ துண்டு.

உலக மொழிகளில் தமிழ், என்னும் இக்கட்டுரை 1. சுமேரிய மற்றும் இந்தோ அய்ரோப்பிய மொழிகளில், 2. ஆத்தி ரேலியப் பழங்குடிகளின் மொழிகளில். 3. ஆப்பிரிக்க மொழிகளில், 4. சீன மொழியில் தமிழ் என இவைகளில் கலந்து விரவி மூலமாயிருப்பதைச் சான்றுகள் சில கொண்டு விளக்கி அமையவுள்ளது.

1. சுமேரிய மற்றும் இந்தோ அய் ரோப்பிய மொழிகளில் தமிழ்

சுமேரியாவில் அய்பிராத்து (Euphrates) ஆற்றின் தென்மேற்குக் கரையில் விளங்கிய ஆபிரகாமின் தலை நகரம் ஊர் (Ur) என்றே அழைக்கப்பட் டது. இப்பெயர், பல்லாயிரக்கணக்கில் அரியலூர், தஞ்சாவூர், திருநின்றவூர், வடலூர், கடலூர், மணலூர் போன்ற இடங்களில் வழங்கும் தமிழ்ச் சொல் லேயன்றி வேறில்லை.

தமிழ்நாட்டில் தான் (ஊர்) வழக்குகள் மிகுதி. தமிழர் வடக்கே வடமேற்கே பரவினர் என்பதற்கு இவ் வழக்குகள் செல்லச் செல்ல அருகி இருப்பதே காரணம். ஆபிரகாமின் காலம் கி.மு. 20 ஆம் நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது. எபிரேய மொழியிலும் அதனோடு உறவுடைய மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் ஏராளமாகக் கலந்துள்ளன. சான்றுகள் சில வருமாறு:

கானானிய   மொழி எபிரேய     மொழி பொருள்

    EI                           EI                              கடவுள்
Bal, Baal                   Bal, Baal                       ஆண்டவன்
ab                              ab                                அப்பன்
am, em                       am,em                          அம்மா
beth                            beth                              வீடு

மேலான எல், பால் அப்பா, அம்மா, வீடு ஆகிய தமிழ்ச் சொற்களேயாகும்.

கதிரவக்கல் வழிபாடு, மற்றும் புதியகற்காலங்களில் மாந்த இனப் பரவல்

குமரிக்கண்டத்தில் அய்ம்பதனாயிரம் ஆண்டின் முன் தமிழ் தோன்றியது. மாந்தன் பேசத் தொடங்கிய காலமும் இதுவே என்பர் மாந்த நூலார். தமிழ், கிழக்கே ஆத்திரேலிய கண்டத்திலும் மேற்கே ஆப்பிரிக்கக் கண்டத்திலும் 20000_30000 ஆண்டுகள் அளவிலேயே பரவிவிட்டது.

ஆத்திரேலியப் பழங்குடிமக்கள் பேசிவரும் மொழி. தமிழோடு உறவுடையதென ஆர்.எம்.டபிள்யூ திக்சன் கூறியுள்ளார்.

இப்பழங்குடிகள், உலகின் வேறெந்த மக்களுடனும் தொடர்புகொள்ளாமல் பத்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்திருக்கின்றனர். என்று தாமசு. ஆர். திராட்மன் கூறியுள்ளார். தமிழர் வடக்கேயிருந்து தெற்கே நகர்ந்து கி.மு. 2000 அளவில் தமிழகத்தில் குடிபுகுந்தவராய் இருந் திருப்பின் பத்தாயிரம் ஆண்டு உறவற்று வாழ்ந்த இப்பழங்குடிமக்கள் மொழியில் தமிழ் எவ்வாறு கலந்திருக்க முடியும். தமிழர்கள் பழுப்புநிற மேனியர். மாநிறம். மாமைநிறம் என இதனைக் கூறலாம்.

யாயா கியளே மாயோள் (குறுந் 9.1) என்பது குறுந்தொகை தமிழ்ப் பெண் பழுப்பு நிறத்தவள் என்பதற்கு இது சான்று.

உலக வரலாற்றுப் பேராசிரியர் எச்.சி.வெல்சு (H.G.Wells) கி.மு. 15000-_1000 ஆண்டுக் காலமாகிய கதிரவக்கல் வழிபாடு (heliolithic) மற்றும் புதிய கற்காலங்களில் (Neolithic) பழுப்பு நிற மக்கள் (brownish) வெப்பநாட்டி லிருந்து உலகெங்கும் பரவினர் என்று தெளிவுபடக் கூறியுள்ளார். இதிலிருந்து தமிழரே உலகெங்கும் பரவினர் என்பதைக் குறிப்பால் அறியலாம்.

இந்தோ அய்ரோப்பிய மொழிகள் எகிப்திய சுமேரிய மொழிகளின் செமித்திக்_அமித்திக் (Semito-Hamitic) குடும்பத்தினின்று வேறெனச் சொல்லப் படும். என்றாலும் முந்தைய சுமேரிய மொழிகளின் தாக்கம் இந்தோ அய்ரோப்பிய மொழிகளில் அதிகம். சுருக்கம் கருதி இரண்டு சொற்களுக்கு மட்டும் உறவு காட்டுவோம். எல். என்னும் சொல், தமிழில் கதிரவனைக் குறிக்கும். இதே சொல் அசிரியர்கள், சீரியர்கள் ((Assyrian, Syrian) வரலாற்றில் கதிரவக் கடவுளைக் குறிக்கும். இவ். எல். சொல் பிமீறீவீஷீ, பிமீறீவீ என்ற வடிவில் எகிப்தியர்களின் கதிரவக் கடவுளைக் குறிக்கும். கிரேக்கர்களைக் குறிக்கும் Elenies, Helinies என்ற சொற்கள் கிரேக்கர்களின் ஓர் பழங்குடியினரான தெசலியன் (Thessalian)என்பார் கதிரவனை வழிபட்டதனால் உருவான வையாகும்.

திருத்தந்தை ஈராசு (Rev.H.Heras) சிந்துவெளித் தமிழர் கடவுளை இறுவன். என அழைத்ததாகச் சொல்லு வார். இலத்தீனில் Ira, era என்ற சொற்கள் கடவுளைக் குறித்துப் பின் அவையே Hera என மாறி Hero, hercules என்ற சொற்களுக்கு வழி திறந்துள்ளது.

ஆத்திரேலியப் பழங்குடிகள் மொழிகளில் தமிழ்

சேம்சுகுக்கு (James Cook) என்னும் ஆங்கிலக் கப்பல் படைத்தளபதியால் 1770 இல் காணப்பெற்று 1788 இல் ஆங்கிலேயரால் கைப்பாற்றப்பட்ட நாடே இன்றைய ஆத்திரேலியாவாகும். இந்நாடு ஆங்கிலேயர் வருமுன் அங்கிருக்கும் பழங்குடி மக்களுக்கே முழுச்சொந்தமாகும்.

இந்நாட்டில் வாழும் பழங்குடி மக்கள் 250 வகையான மொழிகளைப் பேசுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இவை 26 குடும்பங்களாக மொழியறி ஞர்களால் பிரிக்கப்பட்டுள்ளன.

நிக்கு தீபெர்கர் (Nick Thiebeger) வில்லியம் மாக்ரிகோர் (William Mc Greagor) ஆகியோர் பதிப்பித்த (1994) ஆத்தி ரேலியப் பழங்குடிகளின் மொழிபற்றிய அகராதிவழி தமிழுக்கும் ஆத்திரேலியப் பழங்குடி மக்களுக்கும் இடையிலான உறவிற்குச் சில சான்றுகள் காண்போம்.

தமிழ்நாட்டுத்தமிழ் ஆத்திரேலியத் தமிழ்

அப்பா-_ தந்தை _ Pappa-Father

அரத்தம்-_ குருதி_ arkuga-blood

உகிர்-_ கைகால் நகம்_ Yulu-Nail of finger

எல்_ சூரியன்_ Walu-Time, day, sun

கட்டை-_ மரக்கட்டை_ Katta-heay stick to fight
whith-club

கலம்-_ சிறு படகு_ galwaya-canoe

கருப்பு-_ கரிய நிறம்_ Kob-blacp

கணை-_ கூரிய ஆயுதம்_ ganay-digging stick

காற்று-_ காற்று_ Yartu-Wind/ gale

காளான்-_ காளான்_ ngalangala-mushroom

குருதி-_ அரத்தம் _ Kurrk-Red (Literally having the colour of Blood)

ஞாயிறு-_ ஞாயிறு_ nyaui-sun

தொடை-_ கால் உறுப்பின் மேற்பகுதி_ tharra, tyat-thigh

பந்தல்-_ கட்டப்பட்டது_ Pantail-to tie

படகு-_ நீரில் செல்லும் கலம்_ bagul-canoe

பிறை-_ இளநிலா_ Pira-moon

புகை-_ புகை_ buyu, buya, buyi, buwi-smoke buku-rangu-dark

மலை-_ மலை_ mulha-hill, ridge

மாமன்-_ மாமன்_ Mahman-Father, uncle

முகம்-_ முகம்_ mulha-face, nose

முணிதல்-_ முடைதல்_ muni-to tie, muni- police man (literally to tie up)

மூக்கு-_ மூக்கு_ muruh, muru-nose

மெழுகு-_ தேனடை_ muyi-bees wax

மையல்-_ மயக்கம், அறியாமை_ mayaal-incompetent, ignorant

வாரணம்_ கடல்_ wadam-sea

விழி-_ கண் (முழி, முயி_உலகு வழக்கு)_ mai, mil, milki, miyi-eye

விரல்-_ கை உறுப்பு_ mara-hand, finger, five

நன்றி: Tamil Internet 2002, California, USA


நன்றி: ஊற்று - 2011 - மார்ச்
விடுதலை-ஞாயிறு மலர்-பக்கம்  7 - 02-04-2011

Monday, April 18, 2011

கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஜெயலலிதா

எந்த அரசியல் கட்சியை எப்போது ஆதரிப்பார், எப்போது எதிர்ப்பார் என்பது ஜெயலலிதாவுக்கே தெரியாது. ஆதாயம் இருந்தால் ஆதரிப்பார்!

ஆதாயம் இல்லாவிட்டால் எதிர்ப்பார்! எது எப்படியிருந்தாலும், ஓர் அரசியல் கட்சியை விமர்சிக்கும் போது, குறைந்தபட்ச நாகரிகத்தை ஒரு தலைவர் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், அத்தகைய குறைந்தபட்ச அரசியல் நாகரிகத்தை ஜெயலலிதாவிடம் எதிர்பார்க்க முடியாது என்பதற்குச் சிறந்த உதாரணம், அவர் முதலமைச் சராக இருந்தபோது, சட்டசபை யிலேயே கம்யூனிஸ்டுகளை விமர்சித் ததுதான்!

முதலமைச்சராக இருந்த ஜெய லலிதா, ஒருமுறை சட்டசபையில் பேசும் போது, கம்யூனிஸ்டுகள் நாள்தோறும் விவசாயத் தொழிலாளர்களைப் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள். நான் சாம்பலாக வேண்டும் என்று சாபம் கொடுக்கிற குழாய்ச்சண்டைக் கோமாளிகளுக்குக் கூறிக் கொள்கிறேன்! கம்யூனிஸ்டுகள் வெத்துவேட்டுப் போராட்டங்களை நடத்துவார்கள். சலுகைகளைப் பெறும் பேராசையோடு செயல்படுவார்கள்.

இவர்கள் பேராசைக்காரர்கள்! இவர்களுக்கு நான் பதிலே சொல்லமாட்டேன். அமைச்சர் கள் எவரும் இவர்களை மதித்துப் பதில் சொல்லத் தேவையில்லை என்று சட்டமன்றத்திலே எதிர்க்கட்சிகளைப் பற்றி ஆணவத்தோடு பேசிய முதல மைச்சரை, வேறு மாநிலங்களில் இந்திய ஜனநாயகம் எங்காவது கண்ட துண்டா? கேள்விப்பட்டதாவது உண்டா? இது தமிழர்கள் செய்த தவப்பயனா?

காஞ்சிபுரத்தில் 10.3.2004 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, இந்தக் கூட்டணிக் கும்பலில் இன்னும் சில உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வலது சாரி கம்யூனிஸ்டுகள் என்றும் இடது சாரி கம்யூனிஸ்டுகள் என்றும் பெயர் போன பெருமக்கள் இவர்கள்!

இவர்கள் வேடிக்கையான மனிதர்கள்! இவர் களுக்குக் கொல்கத்தாவில் நியாயமாய்த் தெரிவது, சென்னையில் அநியாயமாய்த் தெரியும். ஒரே நடவடிக்கை, வங்கத்தில் எடுக்கப்பட்டால், பூ தூவி வாழ்த் துவார்கள்; தமிழகத்தில் எடுக்கப்பட் டால், மண் அள்ளித் தூற்றுவார்கள். இவர்களது அளவுகோல் ஆளுக்கு ஆள் வேறுபடும்! ஊருக்கு ஊர் வேறுபடும்! நாட்டுக்கு நாடு வேறுபடும்! நேரத்துக்கு நேரம் மாறுபடும்!

இவர்களுடைய ஒரே குறிக்கோள் என்னை எதிர்ப்பது! கொள்கை வேண்டாம்! கோட்பாடு வேண்டாம்! என்னை எதிர்த்தால் போதும் இவர் களுடைய ஜன்மம் சாபல்யம் அடைந்து விடும்! நல்லதற்கும், கெட்டதற்கும் வித்தியாசம் தெரியாத இந்த நிறக் குருடர்கள், இந்த நாட்டுக்கு என்ன நன்மையைச் செய்யப் போகிறார்கள்? மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய விடாமல் தடுத்தார்கள். சட்டசபையில் எந்த ஆக்க பூர்வமான நடவடிக்கையும் நடக்கவிடாமல் கூக்குரலிட்டார்கள். கூட்டமாக வெளிநடப்பு செய்தார்கள்!

ஒரு நாளாவது தங்களது ஜனநாயக கடமைகளை ஒழுங்காகச் செய்யாத கம்யூனிஸ்டுகளை நாடாளுமன்றத்தில் அனுமதித்தால், நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாகி விடாதா? மக்களுக்காக இவர்கள் என்ன செய்தார்கள்? மற்றவர்களைத்தான் என்ன செய்யவிட்டார்கள்? (நமது எம்.ஜி.ஆர்., 11.3.2004) என்று தரக் குறை வாகக் கம்யூனிஸ்டுகளை விமர்சனம் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கம்யூனிஸ்டுகளைக் குறிப்பிட்டு ஜெயலலிதா பேசும்போது, மாண்புமிகு உறுப்பினர் மார்க்சிய சித்தாந்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். இதனால்தான் இந்தக் கம்யூனிஸ்டு இயக்கங்களே மக்களுக்குப் பயன்படாமல் போய் விட்டன. (மேஜையைத் தட்டும் ஒலி) இந்தக் கம்யூனிஸ்டு இயக்கங்கள், இரண்டே காரியங்களைத்தான் செய் கின்றன.

எப்போது பார்த்தாலும், எங்கே பார்த்தாலும் போராட்டம்... போராட் டம்... போராட்டம்... போராட்டம்...! இல்லையென்றால், அவர்களுடைய பொலிட்பிரோ செயற்குழுவில் ஏதோ ஒரு கூட்டத்தைப் போட்டு 3 நாள்கள், 5 நாள்கள், 7 நாள்கள் என்று பேசிக் கொண்டே இருப்பார்கள். இதைத் தவிர வேறெந்த ஆக்கப்பூர்வமான நடவடிக் கையிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை.

மேற்கு வங்கத்தில் அவர்களுடைய இயக்கம் இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியில் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா? ஒவ்வொரு தேர்தலின் போதும் மிக அதிகப்படியாக ரிக்கிங் செய்து வெற்றி பெறுவது தான். அங்கே கம்யூனிஸ்டு ஆட்சியின் லட்சணத்தைக் குறிப்பிட ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். அங்கு பஸ் கட்டண உயர்வைக் கண்டித்துச் சட்டசபை முன்பு போராட்டம் நடந்தது.

அப்போது மறியல் செய்த ஒருவரைப் போலீஸ்காரர் துப்பாக்கியால் அடித்து விரட்டும் காட்சி நாளேடுகளில் புகைப்படமாக வெளிவந்தது. இது கோவை மாலை மலர் பத்திரிகையிலும் வெளிவந்தது. அதற்குத் தலைப்பே தரும அடி என்று கொடுக்கப் பட்டிருந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். (8.4.2003 சட்டமன்றப் பதிவேடுகள், பக்கம் : 120,121)

தலித் நிலங்களை அபகரித்து, பையனூர் பங்களா கட்டியதாக ஜெய லலிதாவை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்தியது அந்தக் காலம்!

பத்துச் சீட்டுகளுக்காகப் போயஸ் தோட்டத்து இரும்புக் கதவுகள் திறக் காதா என்று ஏங்கியிருப்பது இந்தக் காலம்! அந்தோ பரிதாபம்!

(தேசிய முரசு - 2011 ஏப்ரல் (1-15 மற்றும் 16-30)

பெண்களே நடத்திய இறுதி ஊர்வலம்

திராவிடரின் வரலாற்றுச் சிறப்புகள் -P. கோவிந்தராசன் B.E., M.B.A., (M.A)

இந்தியா இயற்கை வளங்களையும், மனித வளத்தையும் கொண்ட மிகப் பழைமையான நீண்ட நெடிய வரலாற் றினையும் கொண்ட ஒரு துணைக் கண்டம். இந்தியா என்று அழைக்கப் படும், நாவலந் தீவின் சமூக, இலக்கிய, நாகரிக மேம்பாட்டினை நேரில் காண வும், பொருளாதார வணிக தொடர்பு கொள்ளவும், அந்நியர்கள் படை யெடுத்து வந்தனர்.

அவ்வாறு வந்தவர் களில் முதன்மையானவர்கள் ஆரியர்கள். இறுதியாக வந்தவர்கள் ஆங்கிலே யர்கள். ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் இருந்த காலம் 1857 முதல் 1947 வரைதான். அந்த காலகட்டத்தில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், படை நிருவாகம், அரசு நிருவாகம் ஆகியவற்றில் நவீன தொழில்நுட்பங் களைப் புகுத்தி ஒரு தொழிற்புரட்சியை ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் இருந்த மொழிகளில் எல்லாவற்றையும் விட தமிழ்மொழியை நேசித்தார்கள். ஒப்பிலக்கணம் தந்தார்கள்.

காவியம் தந்தார்கள். அறிவு, அன்பு ஆகிய வற்றை புத்தர் வழியில் போதித்தனர். திருக்குறள் போன்ற நூல்களை ஆங்கி லத்தில் மொழி பெயர்த்து ஆங்கிலத் தின் வளத்தை விரிவுபடுத்தினார்கள். அய்ரோப்பிய கண்டத்திலிருந்து வந்து, தமிழ் வளர்த்து, திராவிட நாகரிகத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய பெருமை கிறித்துவ மதத்தையே சாரும்.

அதே சமயத்தில் இந்து மதம் என்றும், இந்தியா என்றும் அழைத்துக்கொண்டு தமிழையும் திராவிடர் நாகரிகத்தையும் அழிக்க இன்று நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காணும்போது கிறித்துவர்கள், ஆங்கிலேயர்கள் செய்த சேவைகள் வரலாற்று சிறப்புடையாதாக விளங்குகின்றது.

அதானால் தான் திராவிடத்தின் தலைமகன் தந்தை பெரி யார் ஆங்கிலேயர் ஆட்சி தொடர வேண்டும் என்று கூறினார். நாவலந் தீவு எனப்பட்ட இந்தியாவில் இந்து மதம் என்ற பெயரில் திராவிடர் நாக ரிகத்தை அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதால் திரா விடரின் வரலாற்றுச் சிறப்பினை மீள வும் நினைவுகூர வேண்டிய கட்டாயத் தில் இருக்கிறோம்.

கடல் வாணிகம்

மதவாதிகள் கூறுவதைப்போல் இந்த உலகம் ஒருநாளில் கடவுளால் படைக்கப்படவில்லை. ஏனென்றால் இந்த பூமிபந்து நெருப்புக் கோளாய் இருந்து, பின் குறிர்ந்து பல கண்டங் களாக பிரிந்து, உயிர்கள் தோன்றி, நாகரிகம் பெற பல கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயின. இவ்வாறு உயிர்கள் தோன்றியபோது முதல் மனிதன் தோன்றியது பூமத்திய ரேகை அருகே இருந்த லெமூரிய கண்டத்தில்தான். இந்த லெமூரியாக்கண்டம் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களை இணைத்து ஒரே நிலப்பரப்பாக விளங்கியது.

முதல் மனிதன் தோன்றிய லெமூரியாக் கண் டத்தில் வாழ்ந்தவர்கள், எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். கடல் வாணிகத்திலும் சிறந்து விளங்கின வர்கள் இவர்களே. பின் அய்ரோப் பாவில், சிந்துசமவெளியில், கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் நிலப்பகுதியில் குடியேறினர் (ஆதாரம் Atlantis and Lost World என்ற நூல் ஆசிரியர் ஜோசப் பிராங்க்). இதையே புகழ்பெற்ற வரலாற் றாளர் எஸ். ஆர். இராவ் அவர்கள், திராவிடர்கள் தெற்கு அய்ரோப்பாவில் சென்று குடியேறினர் என்ற தனது Memoirs of Archaeology of India என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். பன் மொழிப்புலவர் அவர்கள் Trazan என்ற அய்ரோப்பா நாட்டினரை திராஜன் என்ற தமிழ் மொழிபெயர்ப்பாளர் படைத்துள்ளார்.

மேலும் பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர், அரேபி யருடனும், கிரேக்கருடனும், உரோம ருடனும், ஜாவனியருடனும் மற்ற அயல் நாட்டினருடனும் வாணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்ற கூறுகிறார். இதை எடுத்துக்காட்டும் வகையில் நில நூலாசிரியர்கள் பிளினி (கி.பி. 75), தாலமி (கி.பி. முதல் நூற்றாண்டு) மற் றும் செங்கடற்பயணம் ஆய்வுக்குறிப்புக் கள் கடைசியில் (Periplus Maris Erithrerien) எரித்திரையன் இந்துமாக் கடல் போன்ற நூல்களில் குறிப்பிடப் படும் தமிழகத்தில் இருந்த துறைமுக நகரங்களை விரிவாக ஆய்வு செய் துள்ளார்.

அவற்றில் சில நகரங்கள்:

1. பாலைப்பட்டினம்: (palae Patme) Dabhol என்று தற்போது குஜராத்தில் விளங்குகின்றது.

2. மந்தராகிரி: (Mandagore) Bankote என்று தற்போது பெயர் பெற்றுள்ளது. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. கப்பல் கட்டுமான நகரமாக விளங்கியது.

3. கண்ணனூர்: கேரளாவில் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

4. Baryagaza: குஜராத்தில் உள்ள புரோச் (Broach).

5. Colchi - தற்போதுள்ள Cochi சிலப்பதிகாரத்தில் கொற்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6. Kayal - Morcopola வால் Coil என்று குறிப்பிடப்பட்டுள்ள நாகர் கோவில்.

7. Tyndis- (பொன்னானி) தமிழகத் தின் முதல்தர துறைமுகம் (மஜும்தார் இதனை தமிழகத்தின தொண்டி துறைமுகம் எனக் கூறுகிறார்).

8. முசிறி (Cranganore) கேரளாவில் உள்ளது. அரபு நாட்டுடன் கடல் வணிகம் நடந்தது.

9. நீல்கண்டா (Nelganda என்று Fabricius என்பரால் அழைக்கப்பட்டது. Melkynda என்று கால்டுவெல் அழைத் தார்). இது கோட்டயம் அருகே உள் ளது.

10. Camara (காவிரிப்பூம்பட்டினம்)

11. Poduca (பாண்டிச்சேரி) அரிக் கமேடு ஆய்வுகள் இதனை உறுதிப் படுத்தியுள்ளது.

12. Supatana (Fairtown) (சென்னைப் பட்டினம்) மதராஸ் என்ற அழைக் கப்பட்ட சென்னை. இந்த துறைமுகம் கங்ககைக்கரை வரை இணைப்புச் சாலைகள் கொண்டது).

13. Maisolai or Ma Solia இது மசூலிப்பட்டணத்தை குறிக்கின்றது. இங்கிருந்து மரக்கலங்கள் (Vessels) சைனா, மெக்கா, சுமத்ரா போன்ற நாடுகளுடன் வாணிகம் நடந்தது.

14. கண்டசாலா: இந்த துறைமுகம் கிருஷ்ணா நதி முகத்துவாரத்தில் உள்ளது. இது சுவர்ண தீவுடன் வாணிபத் தொடர்பு கொண்டது.

15. சரித்திரபுரா: சீனாவின் யுவான் சுவாங்கினால் குறிக்கப்பட்டுள்ளது. இது ஒரிசாவில் உள்ளது.

16. Paloura (பாலூரா) ஒரிஸ்ஸாவில் உள்ளது. பர்மாவுடன் வணிகம் நடந்தது.

17. தாம்ரலிப்தி (Tamaralipti): வங்கா ளத்தில் உள்ளது. மவுரிய பேரரசர் அசோகர் இங்கு வந்தார். அப்போது போதிமரத்தின் கிளை தாம்ரபோன் என்றழைக்கப்பட்ட சிலோனுக்கு அனுப்பப்பட்டது.

மேலும் கிரேக்க நாட்டில் இருந்து வந்த மார்க்கோபோலோ மற்றும் நிக்கோலா கோண்டி (Nichoicolo Conti) ஆகியோர், தென்னிந்தியர்கள் கப் பல்கள் கட்டும் துறையில் சிறந்து விளங்கினார்கள்.

அவர்கள் கட்டிய கப்பல்கள் 25 யானைகளை ஒரே சமயத்தில் ஏற்றிச்செல்லக் கூடிய வலிமை பெற்றவைகளாக விளங்கின என்று கூறினார்கள். தமிழில் நாவாய் என்ற சொல்லே ஆங்கிலத்தில் Navy என மாறியது. இது தமிழின் சிறப்பு மற்றும் கடல் வணிகத்தின் சிறப்பு ஆகும்.

எனவே முதல் மனிதன் திராவி டத்தை உள்ளடக்கிய லெமூரியர்கள் முதல் தற்போதுள்ள திராவிடர்கள் வரை (குமரி முனை முதல் கங்கைக் கரையைத் தொடும் விந்திய மலை வரை பரவியவர்கள்) கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கி பொன்னும், மணியும் குவித்தனர் என்பதை அறியலாம். பெருகிய செல்வம் இலக்கியங்கள் படைக்க உதவின. திராவிடம் என்பதும் திருவிடம் என்பதும் திரைகடல்களால் சூழ்ந்த திரைவிடமாக விளங்கியது.

ஆரிய இலக்கியங்கள்

இந்தியாவின் தொன்மையான மொழிகள் தமிழும், சமஸ்கிருதமும் ஆகும். சமஸ்கிருதம் இன்று எந்த மாநில மக்களாலும் பேசப்படவில்லை. 2001இல் சமஸ்கிருதம் பேசுபவர்கள் எண்ணிக்கை 14135 (ஆதாரம் Encyclopedia of wicky pedia). சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை. (இந்துமத தர்ம வினா _ விடை -_ ஆசிரியர் சங்கராச்சாரியார்) இதற்கு இலக்கணம் அமைத்து சமஸ்கிருதம் என்று பெயரிட்டவர் பனை என்ற ஊரில் பிறந்த கி.மு. 400 அய் சார்ந்த பாணினி (Panini) என்பவர் ஆவார்.

1. எரித்திரையன் கடற்பயணம்: செங்கடற்பயணம் அல்லது செங்கடல், பாரசீக வளைகுடா மற்றும் இந்துமாக் கடல் அடங்கிய கடற்பயணம்

2. Ratnaray - அரபிக்கடல்

3. Mahadadhi - வங்காள விரிகுடா

4. பாணிணி எழுதிய இலக்கணம் நூல் (சமஸ்கிருதம்) எட்டு அத்தியா யங்களைக் கொண்டது. எனவே அஷ்டத்யாயி என அழைக்கப்பட்டது. இது தமிழ் மரபின்படி அமைந்த பெயர்.

உதாரணம்: எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, நாலடியார். சமஸ்கிருதம் தோன்றி பலகாலம் இலக்கியங்கள் இயற்றப்படவில்லை.

கி.பி. முதலாம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தில் இலக்கியம் என்று எதுவுமே கிடையாது. சமஸ்கிருதத்திற்கு மாறாக தமிழ் பல. இலக்கியங்களைக் கொண்டிருந்தது. அவை தமிழர் வாழ்க்கை மட்டுமல்ல, இந்தியாவின் பிற பகுதிகள் பற்றியும் பல அரிய தகவல்களை தந்தன.

இதிகாசங்கள்

வேதகாலத்தில் இயற்றப்பட்ட ரிக்வேதம் அவெஸ்தன் என்ற பாரசீக நூலின் இந்திய பதிப்பு ஆகும். இதனை தொடர்ந்து யஜுர், சாம அதர்வன வேதங்கள் ஆகும். பின்னர் இராமா யணம், மகாபாரதம் போன்ற காவி யங்கள் கி.மு. 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை இயற்றப் பட்டன. ஆனால் இவை அனைத்தும் எழுத்து வடிவில் எழுதப்பட்டவை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான். இவை நடந்தது _ ஏறக்குறைய குப்தர்கள் ஆட்சிகாலத்தில்தான்.

இராமாயணத்தில் வால்மீகியால் சில காண்டங்கள் புனையப்பட்டன. பிற் காலத்தில் அயோத்தியா காண்டம், பால காண்டம், உத்ரகாண்டம் முதலியன மற்ற ஆசிரியர்களால் எழுதி சேர்க்கப்பட்டன. இதேபோல் மகா பாரதத்தின் உண்மையான காவிய நாயகன் அர்ஜுனன். இவனின் வில் லாற்றலினையே மூல பலமாகக் கொண்டு பல வீரச்செயல்கள் நடை பெற்றன.

இப்பேர்பட்ட மாவீரன் போர்க்களத்தில் மனச்சோர்வடைந்து போரிட மறுப்பதாக சித்திரிக்கப் பட்டுள்ளது. அவனை போரில் ஈடு படுத்தும் பணி பரமாத்மா கிருஷ்ண னால் பகவத்கீதை மூலமாக நிறை வேற்றப்படுகின்றது. இந்த பகவத்கீதை மகாபாரதம் இயற்றிய பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து பிற்சேர்க்கை யாக சேர்க்கப்பட்டதாகும். வீரத்தை சித்திரிக்கவேண்டிய நூல் பக்தி நூலாக மாற்றம் அடைந்தது.

தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள்:

அரசர்களையும், கடவுள்களையும், மதச்சடங்குகளையும் மய்யமாக வைத்து புனையப்பட்டவை சமஸ்கிருத இலக்கியங்கள். தமிழர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தார்கள். முதல் தமிழ்ச்சங்கம் 4400 ஆண்டுகள் தென் மதுரையில் இருந்தது. இந்த முதல் சங்கத்தில் 4449 புலவர்கள் தங்கள் படைப்புகள் சமர்ப்பித்தார்கள். இடைச்சங்கம் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் நடைபெற்றது.

அதில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவர் பாண்டுரெங்கன் திரையன் மாறன் (துவாரகை மன்னன்). இந்தச் சங்கத்தில் இயற்றப்பட்ட நூல்களில் தொல்காப்பியமும், அகத்தியமும் அடங்கும். இறுதியாக தற்போதைய மதுரையில் கடைச்சங்கம் 1850 ஆண் டுகள் நடைபெற்றது. எனவே சங்க காலம் (4449+3700+1850 = 9999) ஆண் டுகள் கொண்ட ஒரு நீண்ட நெடிய காலம். இது தமிழ் நீண்ட காலம் சிறப்புடன் இருந்ததை அறியலாம்.

தமிழர்களின் வீர வரலாறு:

வீரம் என்ற சொல்லை மற்ற மொழிகளுக்குத் தந்தது தமிழ் மொழியாகும். உதாரணம் வீரபூமி, வீரசக்கரா விருது, மகாவீர் தியாகி, மாகவீர்பிரசாத், மகாவீரர், இதேபோல் ஆங்கிலத்தில் சொல்லப்படும் வேலர் என்ற வேல் ஆயுதத்துடன் தொடர்பு கொண்டிருக்கவேண்டும். எனவே வீறு கொள்ளுதல், வேலெறிதல் சேரனின் விற்கொடி, சோழனின் புலிக்கொடி முதலானவை தமிழ் மண்ணைச் சார்ந் ததாகும். தமிழர்கள் வீரத்தை பெரிதும் போற்றினார்.

வீர விளையாட்டுகள், போட்டிகள், மிருகங்களை அடக்குதல் முதலியன தமிழர்களின் வாழ்க்கையில், திருமணங்கள் மற்றும் திருவிழாக் களுடன் இரண்டறக் கலந்தவை. புலியை வேட்டையாடி புலிப்பல்லுடன் கூடிய மங்கல நாணைக் கொண்டு வரும் மணமகனுக்கு மணமகளை பரிசாகத் தந்தார்கள். போர்க் களத்திலே புறமுதுகு காட்டுவது வீரனுக்கு அழகல்ல.

மார்பிலே காயப் பட்டு இறப்பதையே பெரிதும் விரும் பினார்கள். இத்தகைய வீர மறவர் களுக்கு இணையான வீரர்களை உலகில் காண முடியாது. முதுகில் காயப்பட்டதினால் பெற்ற மகனை தாயே வெட்டிக்கொன்ற காட்சிகளை இலக்கியங்களிலே காணுகின்றோம். திராவிடர்களின் முக்கியப் போர் ஆயுதங்கள் வாள், ஈட்டி, சூலம், வில் முதலியனவாகும். ஆரியர்கள் குதிரையைப் பெரிதும் பயன்படுத் தினார்கள். மாறாக, மகாபாரதத்தில் பீஷ்மர் முதுகில் அம்புகள் துளைக்க படுத்திருந்தார். இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் 13 முதல் 14 ஆண்டுகள் வரை காவியக் கதாநாயகர்கள் வனவாசம் சென் றார்கள்.

அப்போது அவர்கள் காட்டில் உண்மையாகவே வசிக்கும் புலி, சிங்கம், யானை போன்ற மிகக் கொடிய மிருகங்களுடன் போரிட வில்லை. மாறாக தேவர் உலகத்தில் இருந்து வந்த, சமஸ்கிருதம் பேசும், ஜடாயு, ஜாம் பாவான், வாலி, ஆஞ்ச நேயர், இலங்கைக்கு பாலம் கட்டியதாக சொல்லப் படும் நளன் என்னும் குரங்கு முதலி யனவற்றைத்தான் சந்தித்தார்கள்.

திராவிடநாட்டில் கேரளாவில் ஆலப்புழாவில் நடைபெறும் படகுப் போட்டி, மதுரை ஜல்லிக்கட்டு, திருச்சூர், மைசூர் ஆகிய நகரங்களில் நடை பெறுகின்ற திருவிழாக்களில் யானைகளின் அணிவகுப்பு நடை பெறுகின்றது. இது திராவிடர்களின் கடல் வாணிகத்தின் சிறப்பினையும், காட்டு மிருகங்களை அடக்கி, நாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்துவதையும் தெரிவிக்கின்றது. ஆரிய கலாச்சாரத்தில் உறியடிக்கும் நிகழ்ச்சி திருவிழாக்களில் பெரிதும் காணப்படுகின்றது.

ஆரியர் வரலாறும் - கோவில்களும்:

சரகோணிய (Sargonya) ர்களின் வம்சத்தில் அசுரபணிபால் (Ashurapanipal) (கி.மு. 669_ 627) பாபிலோனியாவை ஆண்டான். அவன் ஈழத்தை ஆண்ட மன்னன் மற்றும் மகன் தாமரிதுவை வென்றான். அவனது அரசு நைல்நதி முதல் காகஸ் மலை வரையிலும், மற்றும் மத்திய தரைக்கடல் முதல் பாரசீக வளைகுடா வரை பரந்து இருந் தது. இந்த மன்னன் சிறந்த நூலகத்தை நிறுவினான். இலக்கியங்களை வளர்த் தான்.

கி.மு. 1000இல் ஆரியர்கள் ஒரு பகுதி யினர் காகஸ் மலைப்பகுதி (ஆர்மெனியா) யில் இருந்து வெளியேறி பாரசீகத்தில் தங்கினார்கள். இதன்பின் பாரசீகம் எழுச்சி பெற்றது. யூதர்களால் “The Lords” மற்றும் ‘anointed’ என்ற அழைக் கப்பட்ட சைரஸ் (Syrus). அவரது மகன் ஷெர்ஷா (கி.மு. 486_465) இருவரும் அய்ரோப்பா வரை படையெடுத்துச் சென்று கிரேக்க கட்டடங்களையும், கோவில்களையும் கொளுத்தினார்கள். இதற்குப் பழி வாங்க அலெக்ஸாண்டர் கி.மு. 331இல் பாரசீக நகரங்களைக் கொளுத்தினார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், இந்தியாவுக்குள் கி.மு. 1500இல் நுழைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ் சமாக வளர்ந்து கி.பி. 325 இல் வைசிய ரான குப்தர்களால் கருடக்கொடியுடன் கூடிய வைணவப் பேரரசை நிறுவி னார்கள். இவர்கள் காலத்தில் வேதமதம், வைணவமதமாக மாறி புராணங்கள், இதிகாசங்கள் வளர்ந்தன. குப்த மன்னர்கள் பாகவதர்கள் என்றழைக்கப் பட்டனர். குப்தர்காலத்துக்குப்பின் சமஸ் கிருதம் வட்டார மொழியானது. மேலும் ஆரியர்கள் மதச்சடங்குகள் செய்து தானம் பெறுவதில் நாட்டம் கொண் டார்கள்.

கோவில்களும் , திராவிடர்களும்:

திராவிட நாகரிகத்தினை பிரதி பலிப்பவை கோவில்களாகும். கோ என்றால் அரசனை அல்லது இறை வனைக் குறிக்கும். அரசனும், இறை வனும் வசிக்கும் இடம் நகர். நகர் என்றால் கோவில் என்ற ஒருபொருள் உண்டு. நாகரிகம் வளர்ச்சி அடைந்த போது கோவில் நகரங்கள் தோன்றின. நகரத்தை மட்டும் எல்லையாகக் கொண்ட நகர அரசுகள் (City States) தோன்றின.

உதாரணம் சிப்பாய் கலகத்தின் போது (1857) முகலாய மன் னன் பகதூர்ஷா டில்லியை மட்டும் ஆண்டார். இந்தியாவில் 56 தேசங்கள் இருந்ததாக சொல்லப்படுவது 56 நகரங்களைக் குறிக்கின்றது. மேலும் புரம் என்றால் கோட்டை என்று பெயர். இவ்வாறு நகர் என்றும் கோவில் என்றும், குடி என்றும், குன்றம் என்றும், ஊர் என்றும், பட்டணம் என்றும் வழங்கப்படும் ஊர்கள் இந்தியாவெங்கும் பரவி இருக்கின்றன.

இந்த பெயர்கள் அனைத்தும் இந்த உலகத்திற்கு திராவிடரின் நாகரிகத்தைப் பறை சாற்றுகின்றன. இந்த திராவிட நாகரி கத்தின் அடையாளமாக்க, சிந்து சமவெளியில் காணப்படும், நகர நாகரிகம் ஆகும். மற்ற நாட்டினரெல்லாம் கல்லறை கட்டிய காலத்தில் நகர நாகரிகம் படைத்தவன் திராவிடன்.

பழங்காலத்தில் நாவலந் தீவில் (இந்தியாவில்) திகழ்ந்த கட்டடக் கலைகளில் முதன்மையானவை (அ) காந்தாரக்கலை (ஆ) பாரசீகக்கலை (இ) திராவிடக்கலை இவைகளின் சிறப் புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காந்தாரக் கலை

இந்தக் கலை அலெக்சாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது இந்தியாவில் பரவியது. இதன் விளைவாக இந்தியாவில் இருந்த கனிஷ்கர் போன்ற மன்னர்கள் புத்த விகாரங்கள், புத்தர் சிலைகளை உரு வாக்கினார்கள். காந்தாரக்கலையின் சிறப்புகள் அகன்ற மதிற்சுவர்கள், குறுகிய இடைவெளியில் தூண்கள், துண்களை இணைக்க விட்டங்கள் இந்தக் கலையின் காலம் கி.மு. 650 முதல் 100 கி.மு. வரை.

பாரசீக கட்டடக் கலை:

1526 பாபர் உருவாக்கிய பேரரசு 1540இல் முடிவுற்றது. முகல் (Mughal) என்றால் பாரசீகமொழியில் மங் கோலியரை குறிக்கும். எனவே 1540இல் நாட்டை இழந்த ஹுயூமான் பாரசீகத்தில் தஞ்சம் அடைந்தார். பின் பாரசீக இளவரசியை மணந்து படைதிரட்டி வந்து 1555-இல் டில் லியைப் பிடித்தார். இந்த இடைக் காலத்தில் 1528 இல் கட்டப்பட்ட பாபர் மசூதி யாரிடம் இருந்தது என சிந்திக்கவும்.

ஹுமாயூன் பாரசீகத்தின் துணையால் அமைத்த டில்லி பேரர சில், டில்லியைச் சுற்றி கோட்டைகள், மசூதி அரண்மனைகள் டில்லியை அலங்கரிக்கின்றன. பாரசீக கட்டடக் கலையை ஒட்டி அமைந்தவற்றில் அமெரிக்க குடியரசு தலைவர் பாரக் ஒபாமா கண்டுகளித்த ஹுமாயூன் Tomb. தாஜ்மஹால் முதலியனவாகும். பாரசீக கலை இல்லையேல் டில்லி இல்லை. இந்தக் கால கட்டத்தில் ஆரிய கட்டடக்கலை என்று இருந்ததாக வரலாறு சொல்லவில்லை.

திராவிட கட்டடக் கலை:

இந்தியாவில் குப்தர்கள் காலம் (கி.பி. 320 முதல் 650 வரை) சிறு கோவில்களே கட்டப்பட்டன. இதில் கி.பி. 500 முதல் கி.பி. 800 வரை உருவான குடைவரை கோவில்கள் பிராம்மானியம் அல்லது சமணம் சார்ந்தவை. கி.பி. 800 இல் சாளுக்கியர்கள் வீழ்ந்து ராஷ்டிர கூடர்கள் வந்தார்கள். இவர்கள் திரா விட கட்டடக்கலையை ஊக்குவித்து எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டினார்கள்.

சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் நாகரா மற்றும் திராவிடக்கலை கலந்த வேசர அமைப்பைக் கொண்டு கோவில்களை வடகர்நாடகாவில் கட் டினார்கள். உதாரணம் பட்டக் கல்லில் உள்ள காசிநாதர்கோவில் (கி.பி. 450 முதல் 650) திராவிடக் கட்ட டக் கலையை வளர்த்தவர்கள் கீழ் வருமாறு:

1. பல்லவர்கள் (600 முதல் 900) மாமல்லபுரத்தில் கல்லில் குடையப் பட்ட இரதங்கள், காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவில்.

2. சோழர்கள் (900 முதல் 1200) திராவிடக்கலை முழுமை அடைந்தது. தஞ்சையில் கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்கள் குறிப்பிடத்தக்கவை.

3. விஜயநகர அரசர்கள் (1350 முதல் 1565) மதுரை, திருவரங்கம் , ஹம்பி, விட்டல்லா கோவில்கள் கட்டினார்கள்.

4. நாயக்கர்கள் (1600 முதல் 1750) இவை தவிர சண்டெல்லா இனத் தவர் எழுப்பிய கஜுராஹா, சோலங் கியர் எழுப்பிய குஜராத் சூரியனார் கோவில்கள் தனித்தன்மை வாய்ந்தவை. மேலும் கூர்ஜரர்கள் சோமநாதபுரத்தில் தங்கத்தால் ஆலயத்தைக் கட்டினார்கள். இந்த ஆலயத்தை கட்டிய பீமதேவ் என்ற மன்னன் கஜினிமுகமதுவுடன் போரிட் டுத் தோற்றான்.

திராவிடர்களின் இன்றைய நிலை:

சேலத்தில் ஆரியர் ஒருவர் வழக் குரைஞர் தொழில் நடத்தி வந்தார். அவர் குதிரை வண்டியில் பயணம் செய்தபோது சோதனைச்சாவடி ஊழியர் வண்டியை நிறுத்தினார். கோபங்கொண்ட வழக்குரைஞர் உடனே துப்பாக்கியை எடுத்து சுட்டார். உடனே ஊழியர் இறந்தார். வழக் குரைஞர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவர் வேறு யாரும் அல்லர்; ராஜாஜி தான். பின்னாளில் அவர் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு அடுத்து கவர்னர் ஜெனரல் ஆனார். இவ்வாறு நீதி தேவன் மயக்கமடைந்ததற்கு காரணம் ஆரியமாயை போன்ற நூல்களை படித்தவர்களுக்கு தெரியும்.

அடுத்து சென்னை மாநகரத்தில் 1996 _ 2001 காலத்தில் மேம்பாலங்களின் தரத்தைக் கண்டறிந்து அரசுக்கு அறிக்கை தர குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு மேம்பாலங்களை பக்கச்சாலைகள் போதிய அகலம் கொண்டிருக்கவில்லை. அதனால் இடிக்க முடிவு செய்தது.

அறிக்கை என்னிடம் ஒப்புதலுக்கு வந்தது. கட்டுமான விதிகளுக்குட்பட்டு, தரங்கள் சோதிக்கப்பட்ட மேம்பாலங் களை இடிப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்ற அறிக்கை சமர்ப்பித்தேன். இந்தப் பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு இன்றும் தொடர்கிறது என்பதில் என்னைப் போன்ற திராவிடர்களுக்கு மகிழ்ச் சியைத் தருகின்றது.

மேலும் சென்ற ஆண்டு, உச்சநீதிமன்ற நீதிபதியாக மாண்புமிகு கே.ஜி. பாலகிருஷ்ணன் இருந்தார். மத்திய அமைச்சராக மாண்புமிகு ஆ.ராசா இருந்தார். மக்களவை சபாநாயகராக மாண்புமிகு. மீராகுமார் இருந்தார்; தற்போதும் இருக்கிறார். ஆனால் திராவிடர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இந்தப் பலக்குறைவு ஓர் இடைக்கால நிகழ்வு.

மீண்டும் திராவிடர்களின் பலம் நிருவாகத்தில் அதிகரிப்பது உறுதி. உதாரணமாக முன்னொரு காலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை ஆரியப் படைகள் சூழ்ந்தன. ஆனால் வெற்றி திராவிடருக்கே.

திராவிடர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால், நீதிமன்றங்களில், தலைமைக் கணக்காயர் அலுவலகத்தில், அரசு அலுவலகங்களில், வர்த்தக நிறுவனங்களில், ஊடகத் துறையிலும் திராவிடர்களின் ஆதிக்கம் பெருக வேண்டும்.

சுயமரியாதையைக் காப்பாற்றவேண்டும். தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் வழியில் நடந்து இழந்த திராவிடரின் மாண்பு களை மீட்கவேண்டும்.

வளர்க திராவிடர்கள்!

http://viduthalai.in/new/page2/7492.html 

பல்வேறு திருக்கோயில் நிருவாகிகள் சந்திப்பு

ஜனசக்தியின் பழி

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பற்றி விமர்சித்தால், ஜனசக்திக்கு நெறி கட்டுவது ஏன் என்று புரியவில்லை.

(மொழிப் போராட்டம்; இனப் போராட்டம் -_ சி.கே.எம் -_- ஜனசக்தி 12-.4.-2011 பக்கம் 5).

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஸ்ரீ என்ற வடமொழிக்கும், திரு என்ற தாய் மொழிக்கும் போராட்டம் என்று கூறி விட்டாராம். இதனை இனப் போராட் டமாக, மொழிப் போராட்டமாக சித்திரித்து விட்டாராம்.

இது தவறு; நடப்பது இனப்போராட் டமல்ல என்று கூறி பார்ப்பனர்களுக்கு வக்காலத்துப் போட்டு எழுத வந்தால்கூட வரவேற்கலாம். ஆனால் ஜனசக்தியோ பந்தை அடிக்க முடியாமல் காலை அடிக்கும் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டதே- என் செய்ய!

தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதையும், பாதுகாப்பதையும்விட, தனது சொத்தைப் பாதுகாப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இருப்பதால் வீரமணி ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிப் பதையே கொள்கையாகக் கொண்டுள்ளார் என்று நிதானமின்றி தரம் தாழ்ந்து எழுதுகிறது ஜனசக்தி.

தந்தை பெரியார் அவர்களின் அறக்கட்டளைச் சொத்தை வீரமணியின் சொத்தாக பாவித்து எழுதியுள்ளது. அசல் விஷமத்தனமே! சேர்வார் தோஷம் என்பார்களே -_ ஜனசக்திக்கு பார்ப்பனீயப் புத்தி தொற்றிக் கொண்டுவிட்டது போலும்.

தந்தை பெரியார் அவர்களின் சொத்தைப் பாதுகாப்பது என்பது ஒன்றும் பஞ்சமா பாதகம் அல்ல! அது அவரது கடமை. குற்றம் சுமத்தலாம் என்று நினைத்து மானமிகு வீரமணிக்கு பாராட்டு மாலை அணிவிப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம்.

ஜெயலலிதா முன்னாள் முதலமைச் சராக இருந்த போது 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தார். அப்போது இதே வீரமணி ஜெயலலிதாவை சமூக நீதி காத்த வீராங்கனை என்று வாயாரப் புகழ்ந்து தள்ளினார் என்று அடுத்த குற்றப்பத்திரிகை படிப்பதாக நினைத்துக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தார் ஜெயலலிதா என்று ஒற்றை வரியில் தன் முகத்தைப் புதைத்துக் கொள்ளும் ஜனசக்தி, 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவைத் தயாரித்துக் கொடுத்ததே வீரமணி அவர்கள்தான் என்பதை மறைத்து அற்ப சந்தோஷத்தில் திளைக் கிறது -_ அதுவும் ஒரு வகையில் பார்ப் பனீயம்தான்.

சரி, 69 சதவிகிதத்தைப் பாதுகாத்துக் கொடுத்த ஜெயலலிதாவைப் பாராட்டுவதில் என்ன தவறு? திராவிடர் கழகம் என்ன அரசியல் கட்சியா? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போன்றதா?

எல்லாத் துறைகளிலும் படுதோல்வியடைந்த மக்கள் விரோத அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை அகற்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும், ஜன நாயகத்துக்கும், சமூக நீதிக்கும் உறுதியளிக்கும் மாற்றாட்சி என்பது அவசியம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது

(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 2006 தேர்தல் அறிக்கை பக்கம். 5)

இந்த - எல்லா வகைகளிலும் படு தோல்வியடைந்த மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிதான் மீண்டும் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - 69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காக்கும் சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக ஜெயலலிதாவைப் பாராட்டியதைக் குற்றம் கூறுகிறது.

ஸ்ரீக்கும் திருவுக்கும் போராட்டம் என்று தமிழர் தலைவர் சொன்னதில் உள்ள தத்துவார்த்தத்தினைப் புரிந்து கொண்டு, கூடுதல் சமுதாயப் பொறுப்புடன் சிந்திக்க வேண்டாமா? தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டும் ஜனசக்தி, அவரின் ஆழமான சமுதாயப் பார்வையைப் புரிந்து கொள்வதில் தடுமாறுகிறதே!

சட்டசபையிலேயே தன்னைப் பாப்பாத்தி என்று பிரகடனப் படுத்திக் கொண்டவராயிற்றே ஜெயலலிதா.
கலைஞரைப் பரம்பரை எதிரி (Traditional Enemy) என்று கடந்த தேர்தலில் கூறினாரே (Dr. நமது எம்.ஜி.ஆர்.17-.4.-2006 பக்கம்-6) இந்த அம்மையார். அதன் பொருள் என்ன?

Traditional என்று அம்மையார் சொல்லுவதற்கு என்ன பொருள்? தனிப்பட்ட முறையில் கலைஞர் குடும்பத்துக்கும், ஜெயலலிதா குடும்பத்திற்கும் பகையா? எந்தப் பொருளில் அவர் கூறினார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? சமுதாயப் போராட்டங்களின் தொடர்ச்சியைப் புரிந்து கொண்டால்தான் இதன் உண்மை புலனாகும்.

கலைஞரை இராவணன் என்று அடிக்கடி ஜெயலலிதா வருணிக்கிறாரே _- அதன் பொருள் என்ன? இராமாயணம் என்பது ஆரியர் _ திராவிடர் போராட்டம் என்கிற வரலாற்று அறிவைத் தெரிந்து கொண்டிருந்தால் ஜெயலலிதா கலைஞரை இராவணன் என்று குறிப்பிடுவதற்கான முகாந்திரமும் புரிந்திருக்கும்.

17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமன் பாலம் கட்டினான் -_ அந்தப் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சென்று முடக்கி இருப்பவர் யார்? ஜனசக்தி ஜால்ரா அடிக்கும் ஜெயலலிதாதானே?

இராமன் மீது இந்த அம்மையாருக்கு ஏன் இந்த அளவு அபிமானம்? இதனைப் புரிந்து கொள்வதற்கு ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மவுடீகத்தை, மூடநம்பிக்கையை முன் வைத்து முடக்கும் ஜெயலலிதாவை கண்டிக்கத் துப்பில்லாதவர்கள் எல்லாம் மிக முக்கியமான திட்டத்தைக் கண்டு கொள்ளாமல் வெறும் சட்டமன்றப் பதவிக்காக தங்களை அடகு வைக்கும் ஆசாமிகள் எல்லாம் பகுத்தறிவு இயக்கத்தை நோக்கிப் பாய்வது பரிதாபமே!

இராமன் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என்று பேசிய (29-.7.-2003) ஜெயலலிதாதான் மார்க்சிய கண்ணோட்டத்தில் புடம் போட்ட மதச்சார்பின்மையின் மாணிக்க விளக்கோ!

பெயர்கள் சூட்டுவதில்கூட மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் -_ திராவிடர் இயக்கம். நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனதும், இராமையன் அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம் மதியழகன் ஆனதும் எல்லாம் திராவிட இயக்கத்தால் ஏற்பட்ட இன, மொழி எழுச்சியும் பண்பாட்டுப் புரட்சியுமாகும்.

தமிழ்மொழியில் சமஸ்கிருத ஆதிக்கத்தின் ஊடுருவலால் விளைந்த கேடுபாடுகள் கொஞ்சமா, நஞ்சமா?

இதன்மீது ஆழமான பார்வை இருந்தால் மட்டுமே ஸ்ரீ க்கும், திருவுக்கும் இடையிலான போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் கூறியதன் கொள்கைப் பார்வை புரியும்.

ஜெயலலிதா போகும் இடங்களில் எல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவது உண்டே! தப்பித் தவறி இதுவரை ஒரு குழந்தைக்காவது தமிழில் பெயர் வைத்ததுண்டா?

ஜெயஸ்ரீ, ஜெயப்பிரியா, ஜெயச்சந்திரன், ஜெயராமன், ஜெயகிருஷ்ணன்...

_ இத்தகைய வடமொழிப் பெயர்களை வலிந்து வைப்பதேன்? இதனைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தால் ஸ்ரீக்கும், திருவுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் கூறியதற்கான பொருள் புரிந்திருக்குமே!

நாரதன் என்ற கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற கடவுளுக்கும் (ஆணுக்கும் _ ஆணுக்கும்) பிறந்த 60 குழந்தைகள்தான் தமிழ் ஆண்டுகள் என்றும் அவை பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடியக் கூடியவை என்றும் கூறுவது அறிவுக்குப் பொருந்தக் கூடியதுதானா? இந்த 60 ஆண்டுகளுக்கான பெயர்களில் ஒரே ஒரு பெயராவது தமிழில் உண்டா? தமிழ் அறிஞர் களும், திராவிர் கழகமும் தொடர்ந்து வலியுறுத் தியதன் விளைவாக முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இந்த மூடப் புராணப் புழுதியைத் தூக்கி எறிந்து தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று அறிவித்து திருவள்ளுவர் ஆண்டை சட்டரீதியாக நடைமுறைப்படுத்தினாரே _- இதனை வரவேற்க ஜெயலலிதா மறுப்பது ஏன்?
இதனைப் புரிந்து கொண்டால் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் சொன்னதற்கான காரணமும், கருத்தும் விளங்கும்.

நீதிக்கட்சி ஆட்சியின் போது திரு என்ற சொல்லை அறிமுகப்படுத்திய போது ஆச்சாரியார் (ராஜாஜி) என்ன சொன்னார்? ஸ்ரீ என்றே போட வேண்டும் என்றாரே - _ அது ஏன்? அதனைப் புரிந்து கொண்டால், திராவிடர் கழகத் தலைவர் ஸ்ரீக்கும் திருவுக்கும் இடையே போராட்டம் என்று சொன்னதற்கான நியாயம் விளங்கும். இது போல் எத்தனை எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் கூற முடியும்.

தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் தொகுதியைத் தேர்வு செய்ததற்கு என்ன காரணம்? அய்யங்கார்களின் வாக்குகள் அதிகம் என்பதால்தானே!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் நடைபெற்ற அரிய நிகழ்வுகளைக்கூட கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலை, என்ன செய்வது!

இனப்போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவராகப் பார்த்துக் கற்பிதம் செய்தது போல கடுகடுக்கிறதே ஜனசக்தி.

தமிழ்நாட்டின் தேர்தல் களம் பார்ப்பனர் -_ பார்ப்பனர் அல்லாதார் என்ற மய்யப் புள்ளியை வைத்துச் சுழன்றது இல்லையா? பூணூலைப் பிடித் துக்கொண்டு பிராமணர்களே ஓட்டுப் போடுங்கள் என்று ஆச்சாரியார் கூறவில்லையா?

1971 இல் நடைபெற்ற தேர்தல் நினைவு இருக் கிறதா? சேலத்தில் இராமனைப் பெரியார் செருப் பாலடித்தார் என்று சொல்லி அந்தத் தேர்தலைப் பற்றி பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தன? அந்தத் தேர்தலில் வெளிப்படையாக நடந்த பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் குறித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் என்ன கூறினார்?

இன்று ஆஸ்திகம் என்பது உயர்ஜாதி யினரின் நலம். இன்று நாஸ்திகம் என்பது பெரு வாரியான தமிழ் மக்களின் நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்? (19.-2.-1971) என்று வினா தொடுத்தாரே, அதனை அறியுமா ஜனசக்தி? இந்த வரலாற்றையெல்லாம் அறிந்து வைத்திருந்தால் திராவிடர் கழகத் தலைவரின் கருத்தை நையாண்டி செய்ய முன்வந்திருக்காது.

காவி உடைக்காரருக்குப் புரிந்தது சிகப்புச் சட்டைக்காரர்களுக்குப் புரியாமல் போய் விட்டதே! காரணம் -_ அடிப்படையில் தெளிவற்ற தன்மையே!

ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த மறுநாளே சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வைணவக் கோயில் பட்டாச்சாரியார்கள் கோயில் பிரசாதத்துடன் வந்து ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசீர்வதித்து, அ.இ.அ.தி.மு.க.விலும் உறுப்பினர்களாகச் சேர்ந்து விட்டார்களே _ இதற்கு மேலும் ஜனசக்திக்குச் சொல்ல வேண்டுமா?

தந்தை பெரியாரைத் தூக்கி, தந்தை பெரியார் அவர்களுக்குப் பின் அவர் கண்ட இயக்கத்தை கண்ணிமையாகப் போற்றி வழி நடத்திச் செல்லும் திராவிடர் கழகத் தலைவரை சிறுமைப்படுத்தி எழுதும் ஜனசக்திக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் புரியும் வகையில் தந்தை பெரியார் அவர்கள் கூறிள்ளதை இந்த இடத்தில் எழுதிக் காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்.

இன்றைய அரசியல் போராட்டம் என்பதே - கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் எல்லாக் கட்சிகளுக்கும் சமுதாயத் தத்துவங்கள் தான் அடிப்படை இலட்சியமே தவிர, மற்றபடி வாயால் சொல்லிக் கொள்வதற்குக் கூட, கொள்கைகள் கிடையாதே! அதாவது எதுவும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற அடிப்படையைக் கொண்டதுதான். (விடுதலை 22.-5.-1967)

கம்யூனிஸ்ட்களையும் சேர்த்துத்தான் தந்தை பெரியார் கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட்கள் இதனைப் புரிந்து கொள்ளாவிட்டால் அதற்குத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களா பொறுப்பு?

உத்தரப்பிரதேசம், பிகார், பஞ்சாப் மாநிலங்களில் அன்றைய ஜனசங்கத்துடன் சி.பி.அய். பதவிகளைப் பகிர்ந்து கொண்டது போன்ற கொள்கைத் தெளிவு திராவிடர் கழகத்துக்கு இல்லை என்பதை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளத் தயார்!

ஜனசக்தியின் பார்வைக்கு....
http://viduthalai.in/new/page-1/7490.html

Wednesday, April 6, 2011

பார்ப்பன சங்க சங்கர நாராயணன் கொலைவெறி பேட்டி

தேர்தல்ஆணையம் என்ன செய்யப் போகிறது? பூணூல் தன்மானத்தின் சின்னமாம்;பூணூல்பற்றி கலைஞர் பேசினால் வாஞ்சிநாதனாக மாறுவார்களாம்!

பூணூல் தன்மானத்தைக் காக்கும் அடையாளச் சின்னம் - தெய்வீகச் சின்னமாம். அதுபற்றி கலைஞர் அவதூறாகப் பேசினால், வாஞ்சிநாதனாக மாறுவோம் என்று பார்ப்பன சங்கத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சங்கர நாராயணன் செய்தியாளர்களுக்கு நாகர்கோவிலில் பேட்டியளித்துள்ளார்.

பார்ப்பன சங்கத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சங்கர நாராயணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
(தினமலர் நெல்லைப் பதிப்பு, 5.4.2011).

தேர்தல் பிரசாரத்தில் பூணூலைப்பற்றி பேசியதற்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் சங்கர நாராயணன் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது;

தமிழக முதல்வர் கருணாநிதி வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் பிராமணர்களின் தெய்வீக தன்மை வாய்ந்த பூணூலைப்பற்றி அவதூறாக பேசியுள்ளார். இப்பேச்சானது எங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தும் செயலாக கருதவேண்டியுள்ளது. ஒவ்வொரு அந்தணருக்கும் பூணூல் தன்மானத்தை காக்கும் அடையாள சின்னமாகும். இதை அவமதிப்பதை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் மனு அளிக்கப்படும். எங்களைப் பற்றி அவதூறு பேசுவதை நிறுத்திக்கொண்டு தேர்தல் பணியை மட்டும் கருணாநிதி பார்த்துக்கொள்ளட்டும். இல்லையென்றால் எங்கள் சமுதாய வீர இளைஞன் வாஞ்சிநாதன் எடுத்த புரட்சிகரமான முடிவை எடுக்க தயங்கமாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இத்தேர்தலின் தி.மு.க. கூட்டணி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராக வாக்களிப்பது என்றும், நமது சமுதாய வாக்குகளை அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வோம்.
- இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றதுபோல, பூணூலைப்பற்றிப் பேசும் கலைஞரையும் சுட்டுக் கொல்லுவோம் என்பதுதான் இதன் பொருள்.

வன்முறையைத் தூண்டும் இந்தப் பேச்சின்மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடே எதிர்பார்க்கிறது.

http://viduthalai.in/new/e-paper/6830.html 

weather counter Site Meter