Pages

Search This Blog

Saturday, April 28, 2012

தேர்தலில் வென்றிருந்தால் ராமதாஸ் இந்த கருத்தைப் பேசுவாரா?

தமிழர்களின் நலன்களை திராவிட அரசியல் புறக் கணித்துவிட்டதாக தற்போது ஒரு கருத்தை சில அரசியல் கட்சிகள் சொல்கின்றனவே?

இப்போது திராவிடம் என்ற கருத் தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. அது வாக்கு வங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறை தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். கட்சி அரசியல் சார்ந்த குழப்படியாக இது உள்ளது. திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அடையாளச் சொல்லாடல் ஆகும். அந்தப் பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது. நான்கு தென்மாநிலங்களில் உள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமைக்கூறுகள் நிலவுகின்றன. மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். தாய் மாமனுக் கான மரியாதை என்பது இந்த நான்கு மொழிக்காரர்களுக்கிடையே இன்றும் தொடர்கிறது. இரண்டாவது தாய் தெய்வ வழிபாடு. மூன்றாவது இறந்த உடலுக் கான மரியாதை. இது நான்கு மொழிக்காரர்களிடமும் இருக்கிறது.

இன்றைக்கும் பிராமணர்கள், சடலத் துக்கு மரியாதை கொடுப்பதில்லை. பிராமணர்களுக்கும், பிராமணர் அல்லாத வர்களுக்கும் இன்னும் நீடித்திருக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பிராமணர்கள் இன்றும் கருப்பட்டிக் காப்பி சாப்பிடுவ தில்லை. ஏனெனில் கீழ்சாதியினராகக் கருதப்படுபவர்கள் கையில் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால், அவர்கள் அதை விரும்புவதில்லை. பிராமணர் வீடுகளில் பீன்ஸ்கூட போய்விட்டது. ஆனால் இன்னமும் பனங்கிழங்கு செல்ல முடியவில்லை. ஏனெனில் பூமிக்குக் கீழே விளையும் பொருளை சூத்திரனும், பன்றியும் சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் அதை அவர்கள் தொடுவ தில்லை. ஆம்லெட் சாப்பிடுகிறார்கள். உருளைக்கிழங்கு சாப்பிட ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் அவையெல்லாம் துரைமார் கொண்டு வந்த பொருட்கள். சங்கீத சீசனை டிசம்பரில் வைப்பது அவர்களது கண்டுபிடிப்புதானே. ஏன் தொண்டைக் கட்டுகிற டிசம்பரில் சங்கீத சீசன் வருகிறது? கோடையில் தானே வைக்க வேண்டும்? வெள்ளைக்காரர்களை மகிழ்விக்க அவர்களுக்கு உகந்த டிசம் பரில் சங்கீத கச்சேரிகளை வைத்தார்கள். அவர்களுடைய கிறிஸ்துமஸ் விடு முறையில் மகிழ்விக்கத்தானே இந்த ஏற்பாடு? இது இன்றும் தொடர்கிறது. அவர்களின் சாமிக்குக்கூட திரையை மூடித்தானே தளிகை வைக்கிறார்கள். ஆனால் சுடலைமாடனுக்கு முன்னால் பகிரங்கமாக ஆட்டை அறுத்துப் போட்டி ருப்பார்கள். அதை எல்லாரும் பார்க்கலாம். அதனால் பல வழக்கங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று பெரியார் சொன்னதை தமிழ்த் தேசியர்கள் இன்றும் சுட்டிக்காட்டு கிறார்களே?

பெரியார் நிறைய அதிர்ச்சி மதிப்பீடு களை வைத்தார். ராமன் படத்தை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார்தானே செய்தார். வேறு எந்த தமிழறிஞரும் செய்ய முன்வரவில்லையே. அவர் காலத்து தமிழறிஞர்களான மறைமலை அடிகளோ, தெ.பொ.மீயோ, மு.ராகவையங்காரோ செய்யவில்லையே. காட்டுமிராண்டி பாஷையைத் திருத்துவதற்கு அவர் முயற்சி எடுத்தவர் இல்லையா. உரைநடை என்பது மணிக்கொடியால்தான் வளர்ந்தது என்று வேதவசனம் மாதிரி சொல்கின்றனர். ஆனால் 1925 இல் பெரியாரின் தலையங் கங்களைப் பார்க்கவேண்டும். பெரியாரின் உரை நடை அத்தனை அற்புதமாக இருக் கிறது. இதுவெல்லாம் பெரியாரைத் திட்டி அதிகாரத்தைத் தக்கவைக்கிற முயற்சிகள் தான்.

கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் தமிழகத்தில் ஆட்சி செய்யமுடிகிறது என்றும், ஆனால் தமிழர்கள் அவர்கள் மாநிலத்தில் போய் முதலமைச்சராக முடியுமா என்று ஒரு தர்க்கம் முன்வைக்கப்படுகிறதே...

தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வாக்களித்தது இங்குள்ள தமிழன் தானே. அவன் ஒரு குறுகிய எண்ணத் துக்குள் அடைபட்டவன் அல்ல என்பதைத்தானே காட்டுகிறது. இந்தியாவிலேயே அரசியல் தலைவர்கள் சாதிப்பட்டம் போடாமல் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தானே. கருணாநிதி, ஜி.கே.வாசன் ஆகியோரின் சாதி, டெல்லியில் யாருக்காவது தெரி யுமா? ஆனால் வட இந்தியாவில் பார்த் தீர்கள் எனில் குப்தாக்கள், சர்மாக்கள் என எல்லாரும் சாதிப்பெயர் கொண்டவர் கள்தானே. கேரளாவில் கூட நம்பூதிரி, மேனன் எல்லாம் இருக்கிறார்களே. அந்த வகையில் சாதிப்பட்டத்தைத் துறந்தவன் தமிழன்தானே. இது பெரியாரின் வெற்றி அல்லவா. யாவரும் கேளிர் என்ற அடிப் படையில் தெலுங்கனும், மலையாளியும், கேளிர்தான் என்று வாழ்பவன் தமிழன். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் தமிழ னுக்கு விசுவாசமாக இருக்கிறாரா என்றுதான் பார்க்கவேண்டும் என்று பெரியார் தெளிவாகச் சொல்கிறார். காவிரி விஷயத்தில் ஜெயலலிதா தமி ழகத்தை விட்டுக்கொடுக்கமாட்டார் அல்லவா? அப்புறம் என்ன? தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துப் போவதில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வைகோ தெலுங்கர்தானே. அவரை தமிழர் இல்லையென்று சொன்னால் தமிழன் ஒத்துக்கொள்வானா?

திராவிடர் கழகம் மற்றும் திமுகவை தமிழர் கழகம் என்றும் தமிழர் முன்னேற்றக் கழகம் என்றும் வைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்திருப்பது பற்றி...

அதை அவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது புறக்கணிக்க வேண் டும். அது வாக்குவங்கி அரசியலோடு சம்பந்தப்பட்டது. ராமதாஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் இப்படிப் பேசியி ருப்பாரா? இது அரசியல். அறிவியல் சார்ந்த பிரச்சினை அல்ல.

திராவிடம் என்கிற கருத்தாக்கம் இன்னும் வலுவானது என்று நினைக் கிறீர்களா?

வலுவாக இருக்கிறது என்று கருத வில்லை. அர்த்தமுடையதாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

திராவிடமொழிக் குடும்பம் என்று கால்டுவெல் கூறினார். அவர்தான் இந்த திராவிடக் கருத்தாக்கத்துக்கு ஆணிவேர் என்று அவரையும்கூட தமிழ்த் தேசியர்கள் கூட்டங்களில் விமர்சிக்கிறார்கள்?

அவர் இன்னொன்றையும் சொன்னார். அது தமிழ்த்தேசியர்களுக்கு உவக்காத விஷயம். பறையர்களை தனது முதல் பதிப்பில் தூயதமிழ் சாதி என்று எழுதியி ருந்தார். அதற்கடுத்த பதிப்பில் அந்தப் பகுதி அகற்றப்பட்டு விட்டது. அந்தப் பகுதியோடு சேர்ந்து தற்போது ஒரு பதிப்பு கவிதாசரண் மூலம் வெளியிடப்பட் டுள்ளது. அத்துடன் கால்டுவெல் இன வரைவியலாளர்தானே தவிர அரசியல் வாதி அல்ல. அவர் வரலாற்றாய்வாளரும் கூட. அவருடைய கருத்துகளை எடுத்துக் கொள்வதும், மறுப்பதும் இவர்களது நேர்மை சார்ந்தது.

ராமதாஸ் சொல்லும் அதே கருத் துகளின் போக்கிலேயே விரக்தியான மனநிலையில் தலித்து களும் சொல் கிறார்கள். திராவிட அரசியல் ஏமாற்றி விட்டது என்ற விமர்சனத்தை வைக் கிறார்கள். ஆனால் அம்பேத்கரின் எழுத்துகளை முதலில் மொழிபெயர்த்து இங்கே 1935-லேயே அவரை அறிமுகப் படுத்தியவர் பெரியார். திராவிட இயக்கத் தலைமைகள் பின்பு, இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பை நம்பி நாசமாகப் போயின. அப்படி நடந்ததற்கு தொண்டர் கள் அல்ல காரணம்.

தமிழ்த் தேசிய இயக்கத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

எந்த இடத்துக்கும் இந்த இயக்கம் நகரமுடியாது. உலகிலேயே வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுதான் மிகவும் எளிமையானது. ஆனால் அதற்கு நீடித்த மதிப்போ, பலனோ கிடைக்காது.

பார்ப்பனர்கள் மேல் உள்ள வெறுப்பை முன்வைத்து தானே பெரி யாரும் அரசியல் செய்தார் என்கி றார்கள்?

பார்ப்பனர்கள் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் பார்ப்பனரல்லாதார் அரசியலை முன் வைத்து உண்மையான சமூக அதிகாரத் தையும் அரசியல் அதிகாரத்தையும் வென்றெடுப்பதற்கான அரசியலைச் செய்தவர் பெரியார். அதை வெறுப்பரசியல் என்று குறுக்கக் கூடாது. இன்று மாறியிருக்கும் தமிழ்ச் சமூகநிலையை வைத்து, அவர் செய்த அரசியல், வெற்றி பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

- (நன்றி: த சன்டே இந்தியன் 29 ஏப்ரல் 2012)

விடுதலை வியாழன், 26 ஏப்ரல் 2012 14:08
http://www.viduthalai.in/component/content/article/97-essay/32803-2012-04-26-08-43-53.html 

பாவேந்தர் செய்த பாவம் என்ன ?

பெங்குயின் வெளியீட்டகம் உலகளாவிய அளவிலும், இந்திய அளவிலும் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்து வருகிறது. அறிவார்ந்த வாசகர் உலகம் அதற்கு உரிய நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. 2009 என்று ஆண்டு குறிப்பிட்டு பெங்குயின் வைக்கிங் வெளியீட்டகம் The Rapids of a Great River என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளி யிட்டுள்ளது. இந்தத் தலைப்பை ஒரு மகாநதியின் பிரவாகம் என்று நாம் தமிழில் ஆக்கிக் கொள்ளலாம்.

இந்நூலில் சங்க இலக்கியக் கவிதை கள் தொடங்கி 1974 ல் பிறந்தவரான கவிஞர் குட்டி ரேவதி யின் கவிதைகள் வரை தமிழ்க் கவிதைகள் தொகுக்கப் பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளன.

தொகுப்பு நூல் என்பது (Anthology) முழுநூல் அல்ல. இது எல்லாருக்கும் தெரிந்த விசயமே; எல்லாரும் உடன் படுகிற விசயமும் ஆகும். தொகுப்பா சிரியர் எல்லாரும் இது பற்றிக் கருத்து தெரிவித்துப் பொறுத்துக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்வார்கள். இது மாதிரியான குறிப்பு ஏறத்தாழ தொகுப்பு நூல்கள் எல்லாவற்றிலும் இடம் பெறத்தான் செய்கின்றன.

இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. எனவே, எல்லாரும் குறிப்பிடுவது போலவே இவர்களும், ‘An anthology such as this, however representative it needs to be must, in the end, The subjective. We are aware that readers familiar with Tamil poetry may find a few of their favourite poems missing’ என்று பாதுகாப்பாக, எச்சரிக் கையாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு தொகுப்பு நூல் என்பது முழுமையானதாக இருக்க முடியாது என்பதும், சில கவிதைகள் அல்லது சில கவிஞர்கள் விடுபட்டுப் போவது என் பதும் நமக்கும் புரியத்தான் செய்கிறது.

இந்தத் தொகுப்பு நூலின் அடிப் படையான நோக்கம் குறித்து தொகுப் பாளர்கள் தெளிவுபடுத்தும் இடத்தில், தமிழ்க் கவிதை என்பது மிக நீண்ட வளமான மரபை உடையது. இதில் பழைமையும் உண்டு; புதுமையும் உண்டு. பழைமைக்கும் புதுமைக்குமான தொடர்பை, இணைப்பைத் தெளிவு படுத்தும் நோக்கத்துடனேதான் நாங்கள் இந்தத் தொகுப்பைத் தொகுத்தளித் திருக்கிறோம் என்று குறிப்பிட் டிருக்கிறார்கள்.

தொகுப்பாளர்களின் ஆர்வத்தை, உழைப்பை, நோக்கத்தைப் பாராட்டத் தான் வேண்டும். இது ஓர் அரிய முயற்சி என்பதில் எந்தவித அய்யப்பாடும் கொள்வதற்கில்லை.

நூலின் முதலாவது பாகத்தில் கவிதைகள் சங்க இலக்கியத்தில் தொடங்கி கோபால கிருஷ்ண பாரதி யுடன் முடிகிறது. நூலின் இரண்டாம் அத்தியாயம் மகாகவி பாரதியில் தொடங்கி, குட்டி ரேவதியுடன் நிறைவு பெறுகிறது.

நாம் கேட்கும் கேள்வி இவ்வளவு பெரிய, அரிய முயற்சியில், நல்ல முயற்சியில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனுக்கு இடம் இல்லையே, ஏன்? என்பதுதான். பாவேந்தர் ஏன் சேர்க் கப்படவில்லை? காரணம் என்னவாக இருக்கக்கூடும்? என்று எப்படி யோசித்துப் பார்த்தாலும் சரியான காரணம் நமக்குப் புலப்படவில்லை.

முதலாம் அத்தியாயத்தை கோபாலகிருஷ்ண பாரதியுடன் நிறைவு செய்து கொண்டது சரியே; அதே போல, இரண்டாம் அத்தியாயத்தை மகாகவி பாரதியுடன் தொடங்கிக் கொண்டதும் சரியே. இரண்டாவது அத்தியாயத்தில், பாரதியிலிருந்து குட்டி ரேவதி வரை புதுமைத் தமிழ் பிரவாகம் எடுத்து வருகிறது என்று கணித்து, தொகுப்பு முயற்சியில் இறங்கியதும் சரியே!

ஆனால், புதுமைத் தமிழ் என்று வரும்போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இடம் பெற்றிருக்க வேண்டும்தானே! பாவேந்தரின் அரசியலை விட்டு விடுவோம். அவரது ஆரிய எதிர்ப்பு, திராவிட ஆதரவு என்ற நிலைப்பாடுகளையும் விட்டுவிடுவோம். அரசியல், இனப் பாகுபாடுகளை யெல்லாம் தாண்டி, விலக்கிச் சிந்திக்கும்போது பாவேந்தரின் குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, அமைதி (நாடகம்) ஆகிய மூன்றும் ஒருபுதிய அணுகுமுறைப் படைப்புகள் என்பதில் என்ன சந்தேகம்? இயற்கையைப் பாடிய ஏந்தல் என்றும் உலகம் முழுவதிலும் பாராட் டப்படுகிறது ஆங்கிலக் கவிஞர் வொர்ட்ஸ் வொர்த் என்பவரையும் தாண்டி, ஏன் வென்று நிற்கிற கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். மகாகவி பாரதியாரைத் தேர்வு செய்துவிட்டு,, அடுத்து, தொகுப்பாளர்கள், பாரதி தாசன், கவிமணி, நாமக்கல்லார் எல் லாரையும் விட்டு விட்டு, ஒரே பாய்ச் சலாக நா. பிச்சமூர்த்திக்கு வந்து விடுகிறார்கள்.

பாரதிக்கு அடுத்ததாக பிச்ச மூர்த்தியைத் தேர்ந்து எடுப்பதற்குக் காரணமாக தொகுப்பாளர்கள் சொல் லும் போது He broke free of traditional forms while introducing new themes என்று குறிப்பிட்டுக் கொள் கிறார்கள். பிச்சமூர்த்தி தொடங்கி குட்டி ரேவதி வரையிலான புதுக் கவிதைக்காரர்கள் செய்துள்ள யாப்புப் புரட்சி ஒரு வகையான ஆசிரிய யாப்பு மாற்று வடிவமே என்ற கருத்தை தொகுப்பாசிரியர்கள் அறியமாட்டார் கள் போலும்.

கம்பன் நமக்களித்த விருத்தப்பா வகைகளையும், பாவேந்தர் பாண்டியன் பரிசு நூல் முலமும், குடும்ப விளக்கு மூலமும், அழகின் சிரிப்பு மூலமும் அளித்துள்ள விருத்தப்பா வகைகளை யும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், பாவேந்தர் எத்தனை எத்தனை விருத் தப்பா புதுமைகளையும் எளிமை களையும் படைத்துத் தந்துள்ளார் என்று தெரிய வரும்!

மகாகவி பாரதியை எடுத்துத் தொகுத்துவிட்டு, அடுத்து, ஒரே பாய்ச்சலாக பிச்சமூர்த்திக்கு வருகி றோமே. இடையில் சுப்புரத்தினம் என்ற பெயரை விடுத்து, பாரதி தாசன் என்ற பெயர் புனைந்து, தமிழ்க் கவிதை உலகில் ஈடும் இணையும் சொல்லிக் காட்டமுடியாத அளவில் அரசோச் சினாரே ஒருவர், அவரை விட்டுவிட்டு வருகிறோமே என்ற சிந்தனையே, இந்தத் தொகுப்பாளர்களுக்குப் பெயரளவில் கூட இல்லாமல் போனது தான் வெகு ஆச்சரியம்!

மகாகவி பாரதியின் மறு அச்சுத் தான். மகாகவியை எடுத்துக் கொண் டால், அது பாரதிதாசனையும் எடுத்துக் கொண்டது மாதிரிதானே என்றாவது சமத்காரமாக முன்னுரையிலாவது விவாதித்திருக்கலாம்.

மகாகவி பாரதி பற்றிய வாழ்க்கைக் குறிப்பை, நூலின் பிற்பகுதியில் எழுதும்போது, மகாகவி பாரதி தனது பாண்டிச்சேரி வாசத்தின் போது அவர் அரவிந்தரைச் சந்தித்தார். வ.வே.சு. அய்யரைச் சந்தித்தார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் பாரதியாரும், பாரதிதாசனும் புதுச்சேரியில் சந்தித்துக் கொண்டார்கள் என்று எழுதவில்லை. இந்த இடத்தில் கூட ஒரு சிறு குறிப்பாகவாவது தொகுப்பாளர்கள் புரட்சிக் கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

நூலின் முன்னுரையிலும் பாவேந் தரின் பெயர் இல்லை. பாரதியார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளுக்கு இடையிலும் இல்லை; கவிதைகள் வரிசையிலும் இல்லை.

ஆம், நூலின் எந்த இடத்திலும் பாவேந்தர் குறிப்பிடப்படவில்லை. ஆமாம், அந்த அளவுக்கு புரட்சிக் கவிஞர் செய்த பாவம் என்ன?
- (நன்றி: ஜனசக்தி 11-2-2010)
http://viduthalai.in/page7/32953.html

தோழர் இரவிக்குமாருக்கு

திராவிட இயக்கத்தின் மீது அவ தூறுகளை அள்ளி வீசிட பார்ப்பனர்கள் மடி கட்டி நிற்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டே பார்ப்பனர்கள் திராவிடர் இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தலைவர்கள் மீதும், ஆத்திர நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றனர்.

அதில் ஒன்றுதான் உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும், அந்நிய தலையீடும் என்ற அதற்குப் பதிலடி கொடுத்து உடையும் இந்தி யாவா? உடையும் ஆரியமா? என்ற அரிய வரலாற்றுக் கருவூலத்தைக் கொடுத் துள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்தப் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு, கூட்டத்தில் கோவிந்தா போடும் ஒரு கூட்டம் கிளம்பி இருக் கிறது. அதுதான் தமிழ்த் தேசி யவாதிகள் எனப்படுவோர். பார்ப் பனர்களின் தொடையில் உட்கார்ந்து கொண்டு எரியீட்டி பாய்ச்சிக் கொண்டு திரிகிறார்கள்! பார்ப்பன ஊடகங்கள் நன்கு காற்றடைத்து வானில் பறக்க விடுகின்றன - அத்தகையவர்களை.

தைமுதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ரத்து செய்து - ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் அடிப்படையில் - கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த அறுபது பிள்ளைகள்தான் தமிழ் வருடங்கள் (ஒரு ஆண்டுக்குக் கூட தமிழ்ப் பெயர் கிடையாது.) என்ற அடிப்படையில் சித்திரை முதல் தேதிதான் தமிழ் வருஷப் பிறப்பு என்று பார்ப்பன அம்மையார் முதல்-அமைச்சராக இருந்து சட்டம் இயற்றிய இந்தக் கால கட்டத்தில், அய்ம்பொறிகளையும் அடக்கி ஆமையாக ஒடுங்கிய போதே இந்தத் தமிழ்த் தேசியவாதிகளின் ஆரிய முகவரி அவிழ்ந்து தொங்கி விட்டதே!

இப்பொழுது இன்னொரு பக்கத்தி லிருந்தும் இட்டுக்கட்டும் வேலை.

கொஞ்ச நாளில் சொந்தக் காரணங்களுக்காகவும் அரசியல் போக்கிற்காகவும் பதுங்கி இருந்தது போல காட்டிக் கொண்ட தோழர் ரவிக்குமார் மறுபடியும் தன் முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்.

சண்டே இந்தியன் (20.-4.-2012) இதழில் திராவிட இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தோற்றுநர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் மீதும் அபாண்டமான அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். இது அவருக்குத் தேவையிலலாத வீண் வேலை.

பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து தியாகராயர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, பிராமணரல்லாதார் என்பதில் தாழ்த்தப்பட்டோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர் என நம்புவதற்கு ஒரு ஆதாரமும் அந்தப் பிரகடனத்தில் இல்லை என்று அடித்துக் கூறி, திராவிடர் இயக்கத் திற்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் எந்த விதப் பாத்தியமும் இல்லை. அந்த இயக்கத்தால் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது என்று மங்களம் பாடி முடித்துவிட்டார்.

தியாகராயரின் அந்த அறிக்கையைப் பற்றி இந்து ஏடு என்ன தலையங்கம் தீட்டியிருக்கிறது தெரியுமா? தேசிய நலனுக்கு ஆபத்து (Perilous to the National Cause) என்று எழுதியது! பார்ப்பானுக்கு ஆபத்து என்றால் - அது தேசிய நலனுக்கு ஆபத்துதானே! - பார்ப்பனருக்குத் தெரிந்தது நம் மக்களுக்குத் தெரிய வில்லையே. என்ன செய்வது!

ஜாதி ஒழிப்பு சிந்தனை திராவிட இயக்கத்தவரிடம் இல்லை என்றெல் லாம் மனம் போனபோக்கில் எழுதித் தள்ளியுள்ளார்.

வரலாற்றில் எல்லா வகையான ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தி - இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் இழித்துத் தள்ளி, உரிமைகளற்ற வெறும் கூடாக ஆக்கிய ஆரியத்தை எதிர்த்து போர்கள் பல இதற்கு முன் நடந் திருந்தாலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் தோற்றுவிக் கப்பட்ட திராவிடர் இயக்கம் மிகப் பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும் மலர்வித்தது என்பதை மனச்சாட்சி உள்ளவர்களும் வரலாற்றைக் கோண லாகப் பார்க்காமல் நேர்மையாகப் பார்ப்பவர்களும் அறிவார்கள்.

பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனர் அல்லாதாரை ஒன்று திரட்டும் நோக்குடைய ஓர் அறிக்கையில் அனைத்தும் தாம் நினைப்பதெல்லாம் இடம் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானதுதானா?

அந்த இயக்கத்தின் பிற்காலச் செயல்பாடுகளில் செறிந்திருந்த நடவடிக்கைகளை நாணயமான கண் கொண்டு பார்த்து எடை போட வேண்டாமா?
1917 இல் சென்னையில் நடைபெற்ற மாகாண முதல் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டு உரையில் வெள்ளுடை வேந்தர் என்ன பேசினார்?

பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பித்தோரும், நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே! அவ்வருணாசிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய புத்தர் முயன்றார். முடியவில்லை. பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர்; தோற்றனர். இராமானுஜரும் புரோகிதர் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழி முயன்றார். தோல்வியே கண்டார். பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம்; இதுவே தக்க வாய்ப்பு- _ இப்படிப் பேசியவர்தான் வெள் ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்.

ஜாதி பற்றிய சிந்தனை அவருக் கில்லை என்று எழுதுவது அசாத்திய கற்பிதமே!

எத்தனையோ எடுத்துக் காட்டு களைச் சொல்ல முடியும்.

கோயில்களில் எல்லாச் சாதி யினரும் குருக்களாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிகளைப் பிராமணர் அல்லாதார் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆகமப் புரோகித பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டு, திராவிட பாஷையிலேயே புத்தகங் களும் எழுதிப் பயிற்றுவிக்கப் படவேண்டும் என்று தம் கருத்தைத் திராவிடனில் எழுதி மக்களிடையே சமுதாயச் சமநிலை உணர்வைத் தூண்டினார்.

வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் - முனைவர் பி.அரசு - பக்கம் 86)

பிராமணர்கள் கடவுளின் முகத்திலிருந்து தோன்றியவர்கள். மற்ற இனத்தார் பிற உறுப்புகளில் இருந்து தோன்றியவர்கள் என்று கூறப்படும் மனுநூலைக் கண்டித்துத் திராவிடர் பண்பாடு இதற்கு மாறுபட்டது என்பதை விளக்கினார். திருவள்ளுவர், அவ்வையார் போன்றோரின் கருத்துக் களை எடுத்துக் கூறி மக்கள் அனை வரும் சமம் என்ற கருத்தை வலியு றுத்தினார்.

(வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் - முனைவர் பி.அரசு - பக்கம் 85)

இதற்கு மேலும் தியாகராயரின் சமூகச் சிந்தனைக்கும், ஜாதி பற்றிய அவரின் கோட்பாட்டுக்கும் எடுத்துக் காட்டுகள் தேவைப்படாது.

ஒரு வேடிக்கை. ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்களை ஜாதிச் சிறையில்அடைத்து அவர்களைச் சிறுமைப்படுத்துவதனால், ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட நம் சமுதாய மக்கள் எந்தப் பலனைத் தட்டிப் பறிக்கப் போகிறார்களாம்? வேறு எதைத்தான் சாதிக்கப்போகிறார்கள்? எந்தப் பார்ப்பனராவது தன் சொந்த இனத்தின் தலைவர்களைக் காட்டிக் கொடுக்கிறார்களா? கொலைகாரரையே ஜெகத்குரு என்றுதானே தூக்கிக் கொண்டு ஆடுகிறார்கள்?

நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்பதை அடையாளம் காண்பதில் கூட நம் தோழர்களுக்குத் தடுமாற்றம் இருக்கலாமா?
இன்னும் எத்தனை பெரியாரும் அம்பேத்கரும் தோன்ற வேண்டுமோ தெரியவில்லையே!

ஓர் அபாண்டம்

நீதிக்கட்சிக்குத் தலைமை வகித்த பி.தியாகராஜ செட்டி மேலும் ஒரு துரோகத்தையும் செய்தார். 1821 செப்டம்பரில் கடிதமொன்றை பிரிட் டிஷ் ஆட்சியாளருக்கு எழுதினார்! ஆதி திராவிடத் தொழிலாளர்களை நகரை விட்டு அப்புறப்படுத்தி விடலாம் என்று பிரிட்டிஷ் அரசுக்கு அந்தக் கடிதத்தில் தியாகராஜ செட்டி ஆலோசனை தெரிவித்திருந்தார் என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் முண்டமாக எழுதியுள்ளார். எம்.சி. ராஜாவை சாட்சி போட்டு எழுதியுள்ளார்.

எப்பேர்ப்பட்ட மனிதர் இவருக்குச் சாட்சியாகக் கிடைத்துள்ளார்? அண்ணல் அம்பேத்கரின் முதுகில் குத்திய புண்ணியவான்தான் இவருக் குக் கிடைத்த அக்மார்க் சாட்சியோ!

இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சிதான் முதன் முதலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கு அமைச்சர்பதவியை அளித்து மகிழ்ந்தது. அந்த வாய்ப்பினைப் பெற்றவர்தான் இந்த மயிலை சின்னத்தம்பி ராஜா (எம்.சி.ராஜா).

இவரும், ஜான் ரத்தினமும் சேர்ந்து ஏற்பாடு செய்த கூட்டம்தான் பிரசித்தி பெற்ற சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலை பொதுக்கூட்டம் (7-.10.-1917). பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயரும் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அது. நாயரின் புகழ் பெற்ற உரையாக அது என்றும் பேசப்படும்.

டாக்டர் நாயர் தொடங்கும் போதே எப்படிப் பேசினார்? என் மாபெரும் - முதுபெரும் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டி யார் வள்ளலார் அவர்களே! என் ஆதி திராவிடர் தோழர்களே!, தோழி யர்களே! உங்கள் அனைவருக்கும், உங்கள் மாலை மரியாதைகளுக்கும், உங்கள் உற்சாக ஆரவாரங்களுக்கும் என் தாழ்மையான நன்றி கலந்த வணக்கம்.

உங்களை ஆதி திராவிடர்களென பெருமையோடு விளித்தேன். காரணம் இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர் களான நம் திராவிடர் இனம். மற்றொன்று நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம் என்றெல்லாம் பேசினார்.

நான்காம் ஜாதியான சூத்திரர்களும், அவர்ணஸ்தர்களான பஞ்சமர்களும் தான் இந்நாட்டின் கறுப்பர்களான திராவிடர்கள் என்றார்.

1917 இல் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசிய சென்னை ஸ்பர்டாங் சாலையில் கூடியிருந்த பஞ்சமர்களைப் (ஆதி திராவிடர்களை) பஞ்சைகள் என்றும், இழிசினர் என்றும், வீணர்கள் என்றும் இந்து ஏடு எழுதியுள்ளதைக் கண்டித்து நான்பிராமின் ஏடு எழுதியது (14-.10.-1917).

மாநகராட்சியின் ஆளுகைக் குட்பட்ட முறையில் பல பள்ளிகள் தொடங்கப்பெற வேண்டுமென்றும், அவற்றில் இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்றும் தியாகராயர் பலமுறை எடுத்துக் கூறி வந்தார். அதன் விளைவாக மாதிரிப் பள்ளிகள் பல ஏற்படுத்தப்பட்டன. 1915_-16 ஆம் ஆண்டுகளில் பல பள்ளிகள் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட (பஞ்சமர்) மக்களுக்காக நடத்தப்பட்டன. அவற்றில் அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. மாதிரிப் பள்ளிகளில் பாடத்திட்டம் வகுத்தல், பள்ளிகளைச் சீர்படுத்துதல் ஆகிய வற்றைக் கவனிக்க அமைக்கப் பட்ட குழுவில் தியாகராயர் உறுப்பினராக இருந்து அரும் தொண்டாற்றினார்.

முதன் முதலாக பள்ளிகளில் இலவச உணவை அறிமுகப் படுத்தியது நீதிக்கட்சித் தலைவரான தியாகராயர் மாநகராட்சித் தலைவராக இருந்தபோதுதானே!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அறிமுகப் படுத்தப்பட்டு, பிறகு வேறு சில இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த உணவுத் திட்டத்தால் பலன் பெற்றவர்கள் பெரும்பாலும் யாராக இருக்க முடியும்? இந்தத் திட்டத்தால் மாணவர்கள் வருகை 3075 லிருந்து 3705 ஆக உயர்ந்ததே!

பஞ்சமர் என்று அந்தக் காலக் கட்டத்தில் அழைக்கப்பட்ட ஆதி திராவிடர்களின் பிள்ளைகளை சென்னை மாநகராட்சி தன் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க முனைந்தது. இதைக் கண்டித்தும், தாழ்த்தப் பட்டவர் குழந்தைகளுக்குத் தனிப் பள்ளிக் கூடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்து நேசன் என்ற தேசிய ஏடு எழுதியது (18-.1.-1918)

உண்மைகள் இவ்வாறு இருக்க வாய் புளித்ததோ, மாங்காய் புளித் ததோ என்று சகட்டு மேனிக்கு எழுத லாமா? நிதானம் தேவையில்லையா?
- கவிஞர் கலி. பூங்குன்றன்
- (சந்திப்போம் மீண்டும்.)
விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012
http://viduthalai.in/page-1/32942.html 

இரத்தக்காட்டேரி

விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012
http://viduthalai.in/page3/32946.html

நீதித்துறை ஊழல் பற்றி சோ வா பேசுவது அச்சச்சோ

18.04.2012, தேதியிட்ட ''துக்ளக்'' ஏட்டில் பக்கம் 29-ல் ஒன்றுக்கு பதில் அளித்த ''துக்ளக்'' சோ.

''சென்னை உயர்நதிமன்றத்தில் 1962இல் ஊழல் நீதிபதி கிடையாது. இப்போது? ஊழல் இல்லா நீதிபதிகள் உண்டா என்று தெரியாது. இது தான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்'' என்று புலம்பியிருக்கிறார்.

''இது தான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்'' எனபதிலிருந்தே 1962க்குப் பின்னர் பார்ப்பனரல்லாதார் பெருமளவு (மக்கள் தொகை விகிதாசாரத்திற்கும் குறைவாகத்தான்) நீதிபதிகள் வநது வட்டார்கள் என்பதே பூணூல் அய்யரை இப்படிப் புலம்ப வைத்திருக்கிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்! இப்புலம்பலில் உண்மை அல்லது நாணயம் உள்ளதா என்பதே நமது கேள்வி.

இதோ வரலாற்றுக் குறிப்பு ஆதாரத்துடன் அய்யர்வாளுக்கு சமர்ப்பணம்:-

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர் களாகவே இருந்த காலத்தில், இன்று சென்னை என அழைக்கப்படும் மதராசபட்டினத்தில் 1644-ஆம் ஆண்டு முதன்முதலாக கிராம நீதிமன்றத்திற்கு அதிகாரியாக, அதாவது மாஜிஸ்ட்ரேட்டாக முதன்முதலாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் பெயர் கண்ணப்பா, அவர் பார்ப்பன இனத்தைச் சார்ந்தவர். சிவில் மற்றும் கிரிமினல் சம்பந்தமான சிறு வழக்குகளை விசாரித்து வந்தார். சிறிது காலத்திலேயே அவர் மீது லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார், தகுந்த விசாரணைக்குப்பின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவரை பதவியிலிருந்து நீககினார்கள். இதன் விளைவு என்ன தெரியுமா? 1648லிருந்து ஆங்கிலேயர்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு இநதியர்களுக்கு ''பெயர்'' வாங்கித்தந்த ''புனிதமான்'' புண்ணியவான்கள் தான் இந்தப் பார்ப்பனர்கள் என்பதை நாம் சொல்லவில்லை வரலாறு சொல்கிறது. இதோ ஆதாரம்:

‘’According to the old native system a Choultry court was administering justice in the village area of Madharasapatinam. This court was presised over by the village Headman known as “Adigar”, or a Governor of the Town as he was called. An Indian native Kannappa a Brahmin by caste, was appointed first Adigar and magistrate of the Town in 1644 to decide petty civil and criminal cases. Due to some charges of benbery and corruption against Kannappa, he was arrested and placed behind the bars. His downfall encouraged his enemies and a petition was handed over to the higher authorities against him stating certain serious charges. The Agent and the counsel made enquiry into these charges and held Kannappa guilty, and dismissed him from the office, dishonourably. One important consequence of this incident was that European persons were appointed judges to preside over the Choultry court from 1648 onwards.
ஆதாரங்கள்:

1. Lore “Vestiges of old Madras” Vol I, Pages 272,273

2. India Office records, original correspondence servies No. 2542.

மேலே கண்ட தகவல்கள் “Land Marks in Indian Legal History and consititutional History” by V.D. KULSHRESHTHA - Page 44 -ல் காணப்படுகிறது. இந்நுல் சட்டக்கல்லுரி மாணவர்களுக்கு பாட நுலாக பரிந்துரைக்கப்பட்ட நுல் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இப்பொழுது புரிகிறதா? இந்திய வரலாற்றில் முதல் (பார்ப்பன) நீதிபதியின் யோக்யதை?

இதைப் போல திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் ராசகோபாலச்சாரியார் புலம்பி தனது SWARAJYA இதழில் எழுதியதும் உண்டு. அதே சமயம் கோவையைச் சேர்ந்த பார்ப்பன வழக்கறிஞர் HINDU நாளிதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் இதே கருத்தை வெளியிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்ட வரலாறும் உண்டு.

இப்போது நமது உயர்நீதிமன்றம் என்ன செய்யபபோகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்ககிறோம். இன்னும் இது போன்ற ''சாதி ஆணவம்'' கொண்ட சோவை அறிவாளி என எண்ணும் ஏமாந்த அப்பாவித் தமிழர்களுக்கு இனியாவது இன உணர்வு வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

- பி.நடராசன், நீதிபதி (ஓய்வு), மதுரை
விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012
http://viduthalai.in/page3/32947.html 

Sunday, April 22, 2012

மணியனுக்குத் தம்பி சோ.ராமசாமியா?

ராமன் பாலம் பற்றி நாஸா சொன்னது என்று கயிறு விடும் சோ ராமசாமி மறைந்து போன ஆனந்த விகடன் மணியனுக்குத் தம்பி என்பதைவிட அண்ணன் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஆரிய வர்த்தத்துக்குச் சேவகம் புரிய பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதில் ஆகாய மண்டலம் வரை பூணூல் வாலை முறுக்கித் தாவிக் குதிக்கிறார்.

இப்படித்தான் ஆனந்தவிகடன் மணியன் என்று ஒரு பார்ப்பனர் இருந்தார். ஞானபூமி என்ற ஒரு மாத இதழையும் நடத்தி வந்தார். அதில் ஒரு கற்பனைக் கரடியை அவிழ்த்து விட்டு இருந்தார்; இதோ! நான் சென்ற வெளிநாடுகளிலெல்லாம், விஞ்ஞான வளர்ச்சி பெற்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் நம் மதத்தின் தத்துவங்கள் வேரோடிப் போயிருப்பதைக் கண்டு வியந்தேன். கலிபோர்னியாவில் உள்ள ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத்துக்கு சங்கரா (Sankara) என்று பெயரிட்டிருப்பதைக் கண்டு அவர் களிடம் விசாரித்தபோது, உங்கள் சங்கரரின் ருத்ர தாண்டவத் தத்துவத்தின் அடிப்படையிலேயே பெரிய விஞ்ஞானத் தத்துவம் அமைந்திருக்கிறது என்றார்கள். ஒரு விஞ்ஞானி சொன்னார்: உங்கள் மெய்ஞ்ஞானம் ஏற்கெனவே தேடிக் கண்டிருப் பதைத்தான் (Search) நாங்கள் மீண்டும் கண்டுபிடிக் கிறோம் (Research) என்றார்.

உண்மை என்ன?

அறிவியக்கத்தின் உண்மை நாடுவோர் ஒருவர் செயலில் இறங்கினார். சோமனூர் வழக்குரைஞர் மானமிகு பத்மநாபன் என்னும் அத்தோழர் முத லில் டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளருக்கு இதுபற்றிய விளக்கம் கேட்டு எழுதினார். தூதரகத்திலிருந்து அந்த மடல் சென்னையிலுள்ள அமெரிக்கச் செய்தி நிறுவனத்திற்குத் திருப்பி விடப்பட்டு, அந்நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி தோழர் பத்மநாபன் அவர்கட்கு மடல் எழுதினார்.

திரு. ஜே.எம். கோர்ஃப் எனும் அவ்வதிகாரி வரைந்த மடலில்,

கலிஃபோர்னியாக்காரன் என்ற முறையில் ஓரளவு உறுதிப்பாட்டோடு நான் கூற முடியும், அந்த மாநிலத்தில் சங்கரா என்ற பெயருடன் எந்த விண்வெளி ஆய்வு நடுவணும் நிறுவப் படவில்லை என்பதாக எனக் குறிப்பிட்டுவிட்டு, மேலும் இப்பொருள்பற்றித் தொடர்வதற்கு வாய்ப்பாக அமெரிக்க முகவரிகள் இரண்டினை அவர் கொடுத்தார்.

கோர்ஃப் அவர்களின் மடல் ஒன்றே. போதும் என்பதாக உள நிறைவு எய்திவிடவில்லை தோழர் பத்மநாபன்!

கிடைத்த முகவரிகளில் ஒன்றான கலிஃபோர்னியா மாநில லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழுக்கு எல்லாவற்றையும் விளக்க மாக எழுதிய நம் அறிவியக்க வழக்குரைஞர்க்கு, அவ்விதழின் அறிவியல் பகுதி ஆசிரியர் திரு ஜியார்ஜ் அலெக்சாண்டர் என்பவர் கீழ்க்கண்டவாறு விடையெழுதினார்.

ஹிந்து மதத்தின் அழிப்புக் கடவுள் சங்கரனுக்கான எல்லா மதிப்புடனும், கலிஃபோர்னியாவிலோ அல்லது அமெரிக்காவில் வேறெங்கிலுமோ எந்த ஆய்வுக் கூடமும் அவ்வாறு சங்கரன் பெயர் சூட்டப் பெறவில்லையென்பதை முழு உறுதியோடும் உங்கட்கு நாள் சொல்ல முடியும்.

- இப்படிக் கூறிவிட்டுக் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த லிவெர்மூர் எனுமூரிலுள்ள ஆய்வுக் கூடத்துடன் தொடர்பு கொள்ளுமாறு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழின் அறிவியல் எழுத்தாளர் எழுதினார்.

நம்முடைய வழக்குரைஞரின் உண்மை நாடும் உயர்ந்த குறிக்கோள் ஓய்ந்து போகாமல் ஊன்றி, நின்றமையால் லிவர்மூர் ஆய்வுக் கூடத்துடனும் தொடர்பு பூண்டார்.

அவ்வாய்வுக்கூட அதிகாரி திரு ஸ்டீஃபென்ஸன் என்பவரோ,

கலிஃபோர்னியாவிலோ அல்லது அமெரிக்க மாநிலங்களிலோ சங்கரா எனும் பெயரில் எந்த விண்வெளி ஆய்வுக்கூடமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என எழுதியதுடன் விட்டுவிடவில்லை. ஹிந்து மத நம்பிக்கைகளிலும் பழக்கங்களிலும் பற்றார்வம் தெரிவிப்பதில் விரும்பி ஈடுபடுவதற்கு அமெரிக்க அறவியலார்க்கு எந்தத் தேவையுமில்லை என்று ஓங்கி அறையவும் செய்தார். ஆம்; அந்த அறை, மானம் எனும் ஒரு பொருளிலா மணியன் கூட்டத்திற்குத்தான்!

அறிவியக்கத்தின் முயற்சியால் மணியனின் திருட்டும் புரட்டும் கண்டுபிடிக்கப்பட்டது; உண்மை வெளிக் கொணரப்பட்டது!

சென்னையின் அமெரிக்கச் செய்தியக அதிகாரி செப்புகிறார்; நான் ஒரு கலிஃபோர்னியன் என்னால் ஓரளவு உறுதியுடன் சொல்ல முடியும்! அங்கே சங்கரா எனும் பெயரிலே விண்வெளி ஆய்வுக்கூடம் கிடையாது என்று.

கலிஃபோர்னிய மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழின் அறிவியல் பகுதிப் பொறுப்பாளர் புகலுகிறார்: முழுமையான உறுதியோடு கூறுவேன். இங்கு எங்கும், எந்த விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கும் சங்கரா என்ற பெயர் சூட்டப்பட்டி ருக்கவில்லை என்று.

அதே கலிஃபோர்னிய லிவர்மூர் ஆய்வுக் கூடத்தின் அதிகாரி அறிவிக்கிறார்: சங்கரா எனும் பெயரிடப்பட்ட எந்த விண்வெளி ஆய்வுக்கூடம் பற்றியும் எனக்குத் தெரியாது என்று. இந்த மூன்று கலிஃபோர் னியாக்காரர்களும் தெரிவித் துள்ளதற்கு நேர்மாறாக, புராணப் புளுகர்களின் வழித்தோன்றல் மணியன் எனும் வணிகர், கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத் துக்குச் சங்கரா என்ற பெயரிட் டிருப்பதைக் கண்டதாகக் கதைக்கிறார்! கலிஃபோர்னியாவில் எந்த ஊரில் அந்த ஆய்வுக்கூடம் உள்ளதென்பதைக் குறிப்பிட வில்லை அவர்.

அவர்களிடம் விசாரித்த போது என்று மட்டும் எழுதும் மணியன் எவர்களிடம் என்று பெயர்கள் கொடாமல் ஏய்க்க முயல்கிறார்.

ஒரு விஞ்ஞானி சொன்னார் எனப் பெருமையடித்துக் கொள்ளும் மணியன் அந்த விஞ்ஞானியின் பெயரைக் கூற முடியவில்லை.
எதனால்?...

உண்மையிலேயே கலிஃபோர்னியாவில் சங்கரா எனும் பெயரில் ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத்தை கண்டதில்லை!

உண்மையிலேயே அமெரிக்க அறிவியலாளர்களிடம் மணியன் சங்கராவைப் பற்றிக் கேட்டதில்லை!

உண்மையிலேயே எந்த அமெரிக்க அறிவியலாரும் மணி யனிடம் Search - Research சொல்லாடல் புரிந்தது கிடையாது!

என்றாலும் மணியன் துணிச்சலாகப் புளுகித் தள்ளுகிறார். எத்துணை பெருமை பெற்றது நம் மதம்! என்பதாக. எவ்வளவு திருட்டுத்தனம்! எத்தனை புரட்டு தன்மை!

அவர் எண்ணிவிட்டார் இந்துமதப் பற்றாளன் எவன் போய் இவையெல்லாம் மெய்யாவென்பதைச் சரிபார்க்கப் போகிறான் என்று. மதப்பற்றாளர்கள் அப்படியே நம்பிக் கொண்டார்கள்; ஆனால் மாந்தப் பற்றாளர்கள் உண்மையைக் கண்டுபிடியாமல் விடமாட்டார்களே!

மணியனின் பொய்மையை - புன்மையை பித்தலாட்டத்தை வெளிப்படுத்த அயரா முயற்சிகள் மேற்கொண்ட தோழர் பத்ம நாபன் அவர்கள் பகுத்தறிவாளர் உண்மை நாடுவோர் மாந்தப் பற்றாளர் அனைவரின் பாராட்டுக்கும் உரியர். அவரின் விடா முயற்சி பார்ப்பனியக் கயமையை நாட்டுக்குக் காட்டுதற்குப் பயன் பட்டிருக்கிறது. மணியன் இன்னும் என்னென்ன மணியம் பண்ண முற்பட்டாலும் அறிவியக்கம் கடமையாற்றுவதில் ஓயவே ஓயாது.

(பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ. இறையன் உண்மை 15.6.1982 பக்கம் 28-_31)
மணியன் மறைந்துவிட்டார். அந்தப் பொய்யின் வாரிசாக அவர் தம்பியாக அண்ணனாக இதோ திருவாளர் சோ ராமசாமி கிளம்பி விட்டார்!
http://viduthalai.in/page6/32481.html

ஆமாம், நம்புங்கள் - பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் என்ற இன உணர்ச்சி அறவேயில்லை!

நம்புங்கள் - பார்ப்பனர்களுக்குப் பாப்பான் என்ற இன உணர்ச்சியே கிடையாது - வெறும் மானுடப் பற்று தான். வேண்டுமானால், இந்த வார துக்ளக்கைப் (18.-4.-2012) புரட்டி பாருங்கள்.

கேள்வி: ராமர் பாலம் கற் பனையானது. கற்பனையான வழி பாட்டு அமைப்பை காப்பாற்றுவதற்காக நாட்டின் வளர்ச்சியை காவு கொடுக்கக் கூடாது. சேதுக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்தவேண்டும் என்கிறாரே ராமதாஸ்?

பதில்: ராமர் பாலம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் புகைப்படத்திலேயே காணப் பட்டது. இன்றும் பலர் அங்கு போய் இந்தப் பாலத்தைப் பார்த்து வருகிறார்கள். அது பற்றிய குறிப்புகள், தமிழக அரசு நூல்களிலேயே இருக்கின்றன. அதன் புனிதத் தன்மை பற்றி, ராமர் சீதைக்கு விளக்கிச் சொல்வது, வால்மீகி ராமாயணத்தில் இடம பெறுகிறது. சேது கால்வாய்த் திட்டமோ - பொருளாதார ரீதியாகப் பயனளிக்காது என்று நிபுணர்கள் பலர் விவரித்துக் கூறி யிருக்கிறார்கள். இவையெல்லாம், ஏற்கெனவே துக்ளக் கில் விரிவாக அலசப்பட்ட விஷயங்கள். ராமதாஸ் பேசுவது உண்மையல்ல என்கிறார் சோ. அண்டப் புளுகு பேசுவதில் அக்கிரகார ஆசாமிகளை அடித்துக் கொள்ள அன்டார்டிகாவில் தேடினா லும் கிடைக்கமாட்டார்கள்.

இன்டோ-லிங்க்காம் - வைஷ்ணவா நெட்வொர்க் என்ற பார்ப்பன நிறுவனம் ராமன் பாலம் இருப்பதாக நாசா சொன் னதாக ஒரு கதையைக் கட்டிவிட்டது.

இந்தக் கட்டுக் கதையைக் கேள் விப்பட்ட மாத்திரத்தில் சேது சமுத் திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி அமெரிக்காவில் உள்ள நாசா நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்டார். நீங்கள் வெளி யிட்டுள்ள படத்தால் இங்குப் பிரச்னை எழுந்துள்ளது. ஆதாம் பாலம் செயற்கையாகக் கட்டப் பட்டதா? அல்லது இயற்கையாக அமைந்த மணல் மேடா? என்று கேட்டார். அன்று மாலையே நாசாவிடமிருந்து தகவல் வந்துவிட்டது. இந்தியா இலங்கைக்கிடையே உள்ள பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று முகத்தில் அறைந் தாற்போல் பதில் கூறிவிட்டதே!

இந்தத் தகவலை சேது சமுத் திரத்திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி செய்தியாளர்களிடம் தெரி வித்துவிட்டாரே. (தினமலர் 26--.7.-2007- பக்கம் 5)

அவாளின் தினமலரில் வெளிவந்த சேதிதான் இது!

உண்மை இவ்வாறு இருக்க சோ ராமசாமி துக்ளக்கிலும் திருவாளர் இல.கணேசன்வாள் சன் தொலைக் காட்சியிலும் புளுகுகிறார்களே! புளுகுதல் என்பது அவாளுக்கு புளியோதரையோ!

இராமநாதபுரத்திற்கும் இலங்கைக் கும் இடையே உள்ள மணல்திட்டு ராமன் கட்டிய பாலம் என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேல் இருக்கும் மணல் திட்டை ராமன் தம்பி லட்சுமணன் கட்டினானோ!

இந்தக் கேள்விக்கு இந்த அறிவு ஜீவிகள் இது வரை பதில் சொல்லாதது ஏன்?

இன்னொரு கேள்வி பதில், இதே தேதி துக்ளக்கில்.

கேள்வி: ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திடீ ரென்று தமிழக முதல்வர் கடிதம் ஏழுதுவதன் நோக்கம் என்ன?

பதில்: திடீரென்று கடிதம் எழுதவில்லை. ராமர் பாலம் பற்றி தனது முடிவான கருத்தைக் கூறி மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. ஆகையால் மத்திய அரசு இந்த விவகாரத்தில், இனியும் மழுப்பாமல் ஒரு முடிவான கருத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒட்டித்தான் தமிழக முதல்வர் ராமர் பாலம் தேசியச் சின்னமாக அறிவிக் கப்பட வேண்டும் என்று கோரியிருக் கிறார் என்று மிக சாமர்த்தியமாக பதில் எழுதிட முயற்சிக்கிறார்.

இதே ஜெயலலிதா 2001 சட்டப் வேரவை மற்றும் 2004 மக்களவைத் தேர்தல் அறிக்கைகளில் ராமன் பாலம் என்று குறிப்பிட்டு இருந்தாரா? இல்லையே! அதை மறைப்பதேன் இந்த மனுதர்ம வியாதி.?

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக கிழக்கு நோக்கிக் கப்பல் செல்லவேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள்,; பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப் பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதே. அன்றைய மணல் மேடுகள், பாறைகள் அடங்கிய ஆடம்ஸ் பிரிட்ஜ் - திடீரென்று ராமன் பாலம் என்று செல்வி ஜெயலலிதாவுக்கு ஏதாவது அசரீரி வந்து கூறிற்றா?

இன்னும் ஒரு கட்டம் மேலே தாண்டி சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்கிற அளவுக்கு ஜெய லலிதா சென்றுவிட்டாரே. தமிழர்கள் இதனை அனுமதிப்பார்களா?

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு ஏன் ரத்தம் கொதிக்கிறது? இதயம் சில நிமிடங்கள் நின்று விடுகிறது? தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

கேள்வி: மன்மோகன்சிங், வி.பி.சிங் ஒப்பிடுங்கள்.

பதில்: மன்மோகன்சிங் பதவியில் இருப்பதால் பல கெடுதல்கள் விளைந்தன. பல கெடுதல்களைச் செய்வதற்காகவே பதவியில் இருந்தார் வி.பி.சிங்.

புரிகிறதா? வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதில் 27 விழுக்காடு வேலை வாய்ப்பில் கொடுக்கச் செய்தார் அல்லவா? அந்த ஆத்திரம் அவாளை இன்றுவரை பாடாய்ப் படுத்துகிறது - படுபாவி என்று மண்ணை வாரித் தூற்றுகின்றனர்.

நூற்றுக்கு நூறு இடங்களையும் முழுவதுமாக சுளைசுளையாக முழுங்கி ஏப்பமிட்ட கூட்டம் அல்லவா! - அதில் மண் விழுந்து விட்டதே என்கிற ஆத்திரம்! பாவம் இவர்களுக்கு பார்ப்பன உணர்ச்சியே இல்லை. நம்பித் தொலையுங்கள்.

கேள்வி: கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு தி.மு.க.விற்கு சாதகமா? பாதகமா?

பதில்: காங்கிரசிற்கு இப்போது உப்பு சத்தியா கிரகம் எவ்வளவு தூரம் சாதகமாக இருக்குமோ, அவ் வளவு தூரம் தி.மு.க.விற்கு பார்ப்பன எதிர்ப்பு சாதகமாக இருக்கும். - இப்படி ஒரு துக்ளக் பதில்.

கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்றால் எதற்காக துக்ளக்கில் பக்கம் பக்கமாக பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான திராவிடர் இயக்கம் பற்றியும், அதன் தலைவர்கள் குறித்தும் பார்ப்பனர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்க வேண்டும்? அந்த உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றி இப்பொழுது எதற்கு எதிர்த்து எழுதிக்கொண்டு இருக்கவேண்டும்?

பரவாயில்லை அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர் எதிர்ப்பு சரியே என்று காலந் தாழ்ந்தாவது சோ அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளாரே!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் அதனை எதிர்த்து இப்பொழுதும் உச்சநீதி மன்றம் செல்பவர்கள் யார்?

தமிழ் செம்மொழியானால் வீட் டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா என்று எழுதுபவர்கள் யார்?

இப்படிப்பட்ட பார்ப்பனர்கள்தான் - கலைஞர் ஏதோ பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதாக பம்மாத்து அடிக்கின்றனர்.

இன்னொரு கேள்வியையும் கேளுங்கள்.

கேள்வி: இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் திராவிடம், ஆரியம், திரா விடப் பாரம்பரியம் என்று கலைஞர் பேசிக் கொண்டிருப்பது எதைக் காட்டுகிறது?

பதில்: தி.மு.க.வை அவர் வளர விடமாட்டார் என்பது: தெரிகிறது - இப்படி ஒரு பதில்.

கம்ப்யூட்டர் காலத்தில் இவர்கள் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் ராமன் பாலம் கட்டி னான் என்று எழுதலாம்.

கம்ப்யூட்டர் காலத்திலும் பூணூலைத் தரிப்பதற்காகவே, புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) கொண் டாடலாம்!
அதன் மூலம் தாங்கள் பிரா மணர்கள் - பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், - இருபிறப்பாளர்கள் என்று கூறி நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சூத்திரர்கள் என்று கூறலாமாம்.

அதனை நாம் எதிர்த்துக் கேட்டால் - கம்ப்யூட்டர் கலத்தில் இப்படிக் கேட்கலாமா என்று கேள்வி கேட்கின்றனர்.
ஆக 2012_லும், நாங்கள் பிராம ணர்கள்தான் என்று மார்பு நிமிர்த்திக் காட்டும் இறுமாப்பைத் திமிர் தண்டத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆமாம். அன்று கலைஞர் வீட்டுக்கு ஓடோடிச் சென்று தேர்தல் கூட்டணிக்காகப் பேரம் பேசியபோது கலைஞர் ஆரியம்-திராவிடம் பேசக்கூடியவர் என்பது திருவாளர் சோ ராமசாமிக்குத் தெரியவில்லையோ!
http://viduthalai.in/page-1/32475.html 

திராவிடம் என்பது கற்பனையா?(2)

 PART 1 - http://naathigam.blogspot.in/2012/04/blog-post_14.html
திராவிடம் என்பது கற்பனை; அது ஒரு மாயை; கால்டுவெல் பாதிரிக்கு பிராமணர்மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே திராவிடம் என்பதனை விளம்பரப்படுத்தித் தனக்குப் புகழ் சேர்த்துக் கொண்டார். திராவிட இயக்கத்திற்கு இப்போது நூற்றாண்டு விழாக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? _ என்று பார்ப் பனர்களும் அவர்தம் அடிவருடிகளும் கேள்விக் கணை தொடுத்திருக்கிறார்கள்.

அரசியலில் ஏதிலிகளாக்கப்பட்ட வர்களும், தமிழ் இன எதிரிகளும், வரலாறு தெரியாத - _ வடிகட்டிய தற் குறிகளைப் போலப் பேசி வருகின்றனர். வரலாற்றை முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்; அல்லது வரலாறு தெரிந்தவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் சிலர் உளறி வருகிறார்கள்.

அண்மையில் செய்தியாளர்களிடம் ஒரு தலைவர், குடியரசுக் கட்சியில் பெரியார், தமிழ்நாடு தமிழருக்கே என்று எழுதினார் என்று பேசுகிறார். குடிஅரசு இதழுக்கும், குடியரசுக் கட்சிக்கும் வேறுபாடு தெரிய வேண்டாமா? அதுவும் கட்சியில் எப்படி எழுதுவது? இவர்களின் வரலாற்றறிவு எப்படிப்பட்டது தெரியுமா? இளம் தலைவர் பேசுகிறார், நாம் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்; நாம் ஆளப் பிறந்தவர்கள்
பல்லவர்கள்
பல்லவர்கள் வடபுலத்திலிருந்து வந்தவர்கள். சமற்கிருதத்தைத் தாய் மொழி எனப் போற்றியவர்கள். அதற்கு இலக்கியம் படைத்துக் கொடுத்தவர்கள். பல்லவர் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே! அவர்களில் ஒருவன் கூடத் தமிழன் இல்லை என்பது! தமிழ் மக்களின் செல்வத்தையெல்லாம் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கிய வர்கள் பல்லவர்கள்! நீங்கள் அவர்கள் வழி வந்தவர்களா?

நாட்டை ஆள வேண்டும் என்ற நசையோடு அலையும் இவர்கள் அந்த நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டாமா? அந்த நாட்டு மக்களின் மொழியைப் பிழையின்றிப் பேச வேண்டாமா? இந்த விளக்கெண்ணெய் வேலைக்கிடையில், திராவிடம் என்பது மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம்; சங்க இலக்கியத்தில் திராவிடம் என்பது இல்லை என்று வேட்டியை உருவித் தலையில் கட்டிக் கொண்டு வீதி வீதி யாய்ப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் தோன்றியது எப்போது?

ஆரியர் _ -திராவிடர் என்ற வேற் றுமையை விதைத்தவர் கால்டுவெல் தான்; திராவிடம் என்ற கற்பனையான ஒரு சொல்லைப் படைத்தவரும் அவர்தான்! என்று இப்போது பார்ப்பனர் புதுக்கரடி விடுகிறார்கள். இப்படியெல்லாம் பிற்காலத்தில் பார்ப்பனர்கள் பேசுவார்கள், வெட்கமில்லாமல் பொய்யுரைப்பார்கள் என்பதை அறிந்தோ என்னவோ கால்டுவெல் பெருமகனார் தொலை நோக்குப் பார்வையோடு தமது கருத்துக்களை வெளியிட்டார்.

திராவிடம் என்பது எனது படைப்பல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பண்டைய வடமொழி ஆசிரியர் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களேயன்றி நானில்லை என்று அறிஞர் கால்டுவெல் கம்பீரமாக நின்று உண்மையை வெளிப்படுத்து கிறார்.

மனுஸ்மிருதியில் பத்தாவது பிரிவில் சத்திரியக் குடியினர், படிப்படியாக ஆரியப் பழக்க வழக்கங்களிலிருந்து வழுவிப் பார்ப்பனர் தொடர்பை விட்டு விலகிக் கீழ்ச் சாதியினர் ஆனார்கள். அவர்கள் பவுண்டரர்கள், ஒட்ரர் திராவிடர், காம்போசர் என்று கூறப் பட்டுள்ளது. மேற்குறித்த குடியினரில் தென்னிந்தியாவிற்குரியவர் திராவிடர் என்று குறிக்கப்பட்டவர்களேயாவர். இதனால் தென்னாட்டு மக்களைப் பொதுப்படையாகக் குறிப்பதற்குத் திராவிடம் என்ற குறியீடு எடுத் தாளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என்றும் மகாபாரதத்திலும் திராவிடம் என்ற சொல்லாட்சி இப்பொருளிலேயே பயின்று வந்துள்ளது என்றும் டாக்டர் கால்டுவெல் விளக்கமாகத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் தம்முடைய நூலில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆதலின் கால்டுவெல் கண்காணியாரின் (பாதிரி யார்) காலத்திற்குப் பல நூற்றாண் டுகளுக்கு முன்பிருந்தே திராவிடம் என்ற சொல்லாட்சி, பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமை புலனாகின்றது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது:

திராவிடம் என்ற சொல் பார்ப்பனர்கள்மீது ஏற்பட்ட வெறுப்பினால் தோன்றியதல்ல மாறாகப் பார்ப்பனர் தமிழ்மக்கள்மீது கொண்ட வெறுப்பினால் அவர்களை இழிபிறப்பினர் என்று சுட்டுவதற்காகத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைப் பார்ப்பனர் நூலாகிய மனுதருமம் தெளிவுபடுத்துகிறது.

திராவிடம் மூவாயிரம் ஆண்டுத் தொன்மையுடையது. மாமன்னர் அசோகன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் இச்சொல் தென்னாட்டு மக்களை (தமிழர்களை) குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புகழ்வாய்ந்த ஓர் இனத்தையும், இடத்தையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் திடுமெனத் தோன்றியிருக்க முடியாது. மக்கள் வழக்காற்றில் அச்சொல் பயின்று பயின்று பண்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருக்க வேண்டும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு தோன்றியதாகப் பார்ப்பனர் கொண்டாடும் மனுதரும சாத்திரம் திராவிட மக்களைச் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்திக் கூறுகிறது. திராவி டத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று சுட்டுகிறது. மனுதருமம் (சுலோ 44 அத்தியாயம் 5) ஆனால் மாமன்னன் அசோகன் காலத்துக் கல்வெட்டு, தென்னாட்டையும், தென்னாட்டு மக்களையும் பெருந்தன்மையோடு திராவிடம் என்ற சொல்லால் குறிக்கின்றது. மாமன்னன் அசோகன் வட இந்தியாவின் பெரும்பகுதியை தன் ஆட்சியின்கீழ் வைத்திருந்தவன். கலிங்கம் (ஒரிசா) வரைதான் அவனால் தெற்கே படையெடுத்து வர முடிந்தது. கலிங்கத்திற்குத் தெற்கில் தமிழர்கள் வலிமையோடிருப்பதையறிந்து தெற்கே வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கலிங்கப் போருக்கு முன்பே கைவிட்டவன் மாமன்னன் அசோகன். அவன் திராவிட மக்களை மதித்தவன் பேரரசன்! ஆனால் நாடோடிகளான ஆரியப் பார்ப்பனர்கள், திராவிடத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று இழிவு படுத்திக் கூறியவர்கள்.

திராவிடம் என்ற சொல் கி.பி. முதல் நூற்றாண்டில் எழுத்தாளப்பட்டுள்ள தாகவும் இச்சொல் தமிழர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள தாகவும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனித்குமார் சட்டர்ஜி குறிப்பிடுகிறார்.

மனுவின் காலத்திற்குப்பின்னர்

மனுவின் காலத்திற்குப் பின்னர் வந்த வடமொழி ஆய்வாளர் பலரும் திரா விடம் என்ற சொல்லைத் தொன்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண்டுள்ளனர் என்பதையும் இந்திய பாகத மொழிகளைத் தொகைப் படுத்தி இனம் பிரித்த பண்டைய ஆராய்ச்சியாளர்கள் திராவிடி எனும் பெயரால் திராவிட மொழியினத்தைச் சேர்த்துள்ளனர் என்பதையும் கால்டு வெல் எடுத்துக்காட்டுகிறார். மேலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகக் கருதப்படும் சிறந்த வடமொழி அறிஞரான குமரிலபட்டர் என்பார் திராவிடாதி பாஷா என்ற சொற் றொடரைக் கையாண்டுள்ளதாகவும் அறிஞர் கால்டுவெல் குறிப்பிடுகிறார். இவ்வாறு எண்ணற்ற சான்றுகளை எடுத்துக்காட்டித் திராவிட என்ற சொல் மிகப் பழங் காலந்தொட்டே தென் னாட்டு மக்களையும் மொழியையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாக வடமொழியாளர்களால் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது என்று கால்டுவெல் நிறுவுகிறார்.

மேலும் இந்தியத் தொல்குடியினரில் ஒருவராகிய சத்திய விரதர் என்ப வரைப்பற்றிக் குறிப்பிடும்போது பாகவத புராணம் திராவிட மன்னர் என்று குறிப்பிடுவதாகவும் கால்டுவெல் கூறுகிறார்.

திராவிடச் சங்கம்:

சமணமும், பவுத்தமும் மனிதநேயம் கொண்ட -_ இயற்கை நெறிபோற்றும் அமைப்புகள் அறிவு நெறிப்பட்ட கருத்துக்களைப் பவுத்தரும், சமணரும் மக்களிடையே பரப்பிவந்தனர். இவை இரண்டும் தமிழகத்தில் ஒரு காலத்தில் உயர்ந்த நிலையில் சிறப்புற்றிருந்தன. இவற்றை அழிப்பதற்காக வைதீகப் பார்ப்பனர்கள் இடைவிடாத முயற்சி களை மேற்கொண்டு செயல்பட்டு வந்தனர்.

மக்களிடையே மூடநம்பிக்கைகளை விதைத்து அவர்களை அடிமைப்படு குழியில் தள்ளிவிட்டனர் வைதீக வெறியர்கள். கோயில்கள் என்ற இருட்சிறையிலிருந்து மக்கள் விடுபட முடியாமல் அல்லற்பட்டனர். மேல் உலகம், சொர்க்கம், நரகம், விதி, மறு பிறவி முதலான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை மீளாத் துயரில் பார்ப்பனீயம் ஆழ்த்திவிட்டது. இந்நிலையில், கி.பி. நான்காம் நூற்றாண்டில் வச்சிரநந்தி என்ற சமணத் துறவி மதுரையில் திராவிடச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

மக்களின் வாழ்வியல் முறைகளுக்கு எதிரான பார்ப்பனர்களின் வைதீகப் பழக்க வழக்கங்களை முறியடிப்ப தற்காகவும் மக்களிடையே அன்பு நெறியை வளர்ப்பதற்காகவும் அறிவு நெறி சார்ந்த கருத்துக்களையும், மனித நேயத்தையும் பரப்புவதற்காகவும், மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு மக்கள் முன்னேற்றம் காண முன்வர வேண்டும் என்பதற்காகவும் வச்சிர நந்தி ஒரு சங்கத்தை ஏற்படுத் தினார். அதற்கு அவர் திராவிடச் சங்கம் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் காணப்படும் திராவிடம் என்ற சொல், தென்னாட்டு மக்களையும் (தமிழர்கள்) தென்னாட்டையும் குறித்து நின்றது. வச்சிரநந்தியின் திராவிடச் சங்கம் திராவிடம் என்பதற்கு ஒரு மெய்யியல் அடிப்படையை அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது
திராவிடம் என்றால்,

1. மக்கள் வாழ்வியலுக்கு எதிரான ஆரியப் பார்ப்பனரின் வைதீகத்தை எதிர்ப்பது

2. மனிதநேயத்தை மக்களிடையே வளர்ப்பது.

3. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவது.

4. அறிவுநெறி சார்ந்த வழிமுறை களை மக்களுக்கு வகுத்துக் கொடுப்பது.

5. மூடநம்பிக்கைகளிலிருந்து மக் களை விடுவித்து அவர்களை நல் வழிப்படுத்துவது.

6. மக்களிடம் இயற்கையான அன்புநெறியை வளர்த்து ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களைப் பயன்படுத்துவது.

என்று பொருள்படுவதை நாம் அறிய முடிகிறது. இத்தகைய இயற்கை யான, எளிமையான கருத்துக்களால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். சமணத்தின் மதிப்பு மக்களிடையே உயர்ந்தது.

திருஞானசம்பந்தரின் திருவிளையாடல்:

வச்சிரநந்தியின் காலத்திற்குப் பின்வந்த சீர்காழி திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பனர், தமிழ்நாட்டில் சமணர் தொகை பெருகுவதைக் கண்டு மனம் வெதும்பி அவர்களை அழிப் பதற்கான முயற்சியை மேற்கொண்டான். மக்கள் நலப் பணியாளர்களாக விளங்கிய எண்ணாயிரம் சமணர்களை (அத்தனைப் பேரும் தமிழர்கள்) தேர்வு செய்து பாண்டிய மன்னன் துணை யோடு அவர்களை வைகையாற்றங் கரையில் கழுவிலேற்றிக் கொன்றான் திருஞானசம்பந்தன். (இந்தக் கழுவேற்று நிகழ்வின் நினைவாக ஆண்டுதோறும் வைகைக் கரையில் கழுவேற்றித் திருவிழா கொண்டாடப்பட்டுவருவதை வரலாற்று ஆய்வாளர் பலர் பதிவு செய்துள்ளனர்).

திராவிட சிசு!

இந்தப் படுகொலைப் பழியிலிருந்து ஞானசம்பந்தனைக் காப்பாற்றப் பார்ப்பனர் பல முயற்சிகளை மேற் கொண்டனர். எப்படியேனும் அவனுக்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டும் என்று அரும்பாடுபட்டனர். ஒரு நாள் ஞானசம்பந்தன் எங்கோ போய்விட்டுத் தன் இருப்பிடம் திரும்புகையில் தெரிந்தோ தெரியாமலோ ஆதி திராவிடர் வாழும் சேரிவழியாக வந்துவிட்டான். உடனே அவனைச் சுற்றியிருந்த பார்ப்பனர்கள் இதைக் கருவியாகப் பயன்படுத்தி மண்ணுக்கும், விண்ணுக்கும் எகிறிக் குதித்துப் பூணூலைக் கையில் பிடித்துக் கொண்டு, சம்பந்தப் பெருமாள் பெரிய புரட்சியே செய்துவிட்டார், சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பிறந்தவர் என்று கூச்சல் போட்டு ஞானசம்பந்தனுக்கு நற்பெயர் பெற்றுத் தர முயன்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் ஆதிசங்கரர் திருஞான சம்பந்தனைத் திராவிடச் சிசு என்று அழைத்துக் கொலைகாரன் என்ற பெயர் மறைவதற்கு உதவி செய்தார் ஆதிசங்கரர்! ஆனால் எந்தப் பார்ப்பனரும் திராவிடச் சிசு என்று ஞானசம்பந்தரை இன்றுவரை அழைப் பதில்லை! அவர்கள் திராவிடத்தை வெறுப்பவர்களாயிற்றே!

இங்கே நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியது திராவிடம் என்ற சொல் சாதி ஒழிப்பைக் குறித்து நிற்பது என்பதைத்தான்! ஆதிதிராவிடர் வாழும் சேரித் தெருவில் நடந்து வந்ததே பெரும் புரட்சியாகி விட்டது. அவன் எதற்காக அங்கே போனான் என்பது ஆய்விற்குரியது. என்றாலும் திராவிடம் என்பது சாதி ஒழிப்பைக் குறித்து நிற்கும் ஒரு குறியீடாகி விட்டது. திராவிடன் என்றால் சூத்திரன் என்று நம்மை இழிவுபடுத்திய பார்ப்பனியம் தனக்குத்தானே சூத்திரப் பட்டத்தைச் சூட்டிக் கொண்டு ஆப்பசைத்த குரங்கின் கதை போல அதனை விடவும் முடியாமல் பாராட்டிச் சொல்லவும் முடியாமல் தடுமாறியது. தந்தை பெரியார் பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்று கூறியதை நாம் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கி.பி. 1850 வரையில் அதாவது அறிஞர் கால்டுவெல் காலத்திற்குச் சற்று முன்புவரை வாழ்ந்த சமற்கிருத அறிஞர் பலரும் தென்னிந்திய மொழி களைத் திராவிட மொழிகள் என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்தி மொழி நூலறிஞரான பாபு இராசேந்திரலால் மித்ரா என்பவர் 1854ஆம் ஆண்டில் திராவிடி என்ற சொல்லைத் திராவிட மொழிகளைக் குறிப்பதற்குப் பயன் படுத்தி வந்துள்ளார். 1891இல் பேரா சிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும் என்று மனங்குளிரப் பாடுகிறார். வங்கக் கவிஞர் தாகூர் திராவிட உத்கலவங்கா என்று பாடு கிறார். இப்பாடல் இந்தியாவின் தேசியப் பாடலானது எப்படி என்பதைப் பார்ப்பனர் விளக்குவார்களா?

சிந்துவெளி நாகரிகம்

திராவிட இனம்பற்றிய ஆய்வும் மொழிபற்றிய ஆய்வும் இன்று உலக அளவில் விரிவடைந்து விட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதனை அறிவுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஆரியர் -_ திராவிடர் உண்மையைச் சமூகவியல், அடிப்படையிலும் அறிவியல் அடிப் படையிலும் தந்தை பெரியார் மிக விரிவாக விளக்கியிருக்கிறார். திராவிடர் என்பதற்குத் தந்தை பெரியார், தந்துள்ள கருத்துரைகளுக்கு மறுப்புரைக்க இன்றுவரை எவரும் முன்வரவில்லையே! ஆகவே திராவிடம் என்பது கற்பனை என்போர் கருத்துக் குருடர்கள்! அவர்கள் மனம் மாசுபடிந்தது!

திராவிடம் என்பது ஒரு குறியீடு:

திராவிடம் என்பது ஒரு குறியீட்டுச் சொல்; அசோக மாமன்னன் காலத்தில் திராவிடம் என்பது தென்னகத்தையும், தமிழ்த் தொல்குடி மக்களையும் குறித்தது. வச்சிரநந்தியின் காலத்தில் மக்கள் நலப் பணி என்ற மெய்யியல் கோட்பாட்டைக் குறித்தது. கால்டுவெல் காலத்தில் திராவிடம் என்பது திராவிட மக்கள் பேசிய மொழித் தொகுதியைக் குறித்தது. நீதிக்கட்சித் தலைவர்களின் காலத்தில் பார்ப்பனரல்லாத தென்னாட்டு மக்களைக் குறித்தது. தந்தை பெரியார் காலத்தில்தான் திராவிடம் என்ற சொல் அதன் முழுப்பொருண்மையைப் பெற்றுச் சிறப்படைந்தது.

கடல் என்பது ஒரு குறியீடு (ஷிஹ்னீதீஷீறீ), நடந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு பேராசிரியரைச் சுட்டிக்காட்டி, அவர் ஒரு பெரிய கடல் என்றால் அளந்தறிய முடியாத கடலின் ஆழத்தைப்போன்று அவர் ஆழ்ந்த அறிவு உடையவர் என்று பொருள்; கடலின் அகற்சியைப் போன்று விரிந்த அறிவுடையவர் என்று பொருள். அருமைப்பாடு மிக்க பல பொருள்களை (முத்து, பவளம், சங்கு) கடல் தன்னகத்தே கொண்டு விளங்குவதைப் போலப், பல்கலை பயின்ற தெளிவும் பன்னூற் பயிற்சியும், பட்டறிவுச் செல்வமும் நிறையப் பெற்றவர் என்று பொருள்.

இதைப் போன்றே திராவிடம் என்பது ஒரு குறியீடு. அது கடலைப்போல் பன்முகப் பொருளாற்றல் கொண்டது. திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும்; இனத்தைக் குறிக்கும்; இயக்கத்தைக் குறிக்கும்; தமிழோடு உறவுடைய பல மொழிகளின் தொகுப்பான ஒரு மொழித் தொகுதியைக் குறிக்கும். தமிழை மட்டுமே குறித்து நிற்கும் இடமும் உண்டு. கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, தன்மானம், சாதி ஒழிப்பு, சம உரிமையுடன் கூடிய சமஉடைமை, அறிவியல் நெறி முதலான பல்வேறு பொருள்களை உணர்த்தும் பன்முகப் பொருளாற்றல் கொண்ட, வலிமை வாய்ந்த ஒரு குறியீட்டுச் சொல்லாகத் திராவிடம் திகழ்கிறது இத்தகைய பொருள்களையும் இச்சொல்லுக்குள் அடக்கி, அதனைச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போல ஆக்கியவர் தந்தை பெரியார் அவர்களேயாவார்கள். இதன் பொருளை உணராத மொழித்திறம் முட்டிய மூங்கைகள் குன்றுமுட்டிய குருவியைப் போல இடர்ப்படுவர் என்பது உறுதி.

தோழர்களே! வரலாற்றை உற்று நோக்கிப் படியுங்கள். நீங்கள் இந்த நிலைக்கு உயர்ந்துவர எந்த இயக்கம் உற்றுழி உதவியது என்பதை எண்ணிப் பாருங்கள்!

திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் பயின்று வரவில்லை, அதனால் அதனை ஏற்க முடியாது என்கிறார் மருத்துவர் அய்யா! ஏறுதழுவுதல் என்ற வீர விளையாட்டு, தொல்காப்பியத்தில் இல்லை; கலித்தொகையைத் தவிர்த்த பிற சங்க இலக்கியங்களில் இல்லை. தொல்காப்பியத்தில் பயின்று வரும் பல அரிய சொற்கள் சங்க இலக்கியத்தில் இல்லை. அதனால் இவற்றையெல்லாம் நீக்கி விடலாமா? பாட்டாளி என்ற சொல்கூடச் சங்க இலக்கியத்தில் இல்லையே! அதைவிட்டு விடுவீர்களா!

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாட வேண்டிய அவசியம் என்ன என்கிறார்கள். அய்யா! 1912ஆம் ஆண்டு தொடங்கி 2012 ஆண்டுடன் திராவிடர் இயக்கத்திற்கு அமைப்பு வழியில் நூறாண்டுகள் ஆகிவிட்டன. 1912_-க்கும் 2012_க்கும் இடையில் நூறு ஆண்டுகள் இருக்கின்றன என்பதை எண்ணிப் பாருங்களேன்! கணக்கிலும் தடுமாற்றமா? நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாடாமல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தா கொண்டாடு வீர்கள்!

திராவிடத்தால் எழுச்சி பெற்ற இளைஞர்கள் அரசியல் அதிகா ரத்தையும், ஆட்சிப் பொறுப்பையும் கைப்பற்றினார்கள். ஆசிரியர் அலுவலர், மருத்துவர், பொறியாளர் என்று பல்கிப் பெருகிய அவர்கள் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அடுத்த தலைமுறை அறிவியல் வளர்ச்சியை உற்றுநோக்கித் தகவல் தொழில் நுட்பத்தை, தன் வயப்படுத்திக் கொண்டுவிட்டது. இன்று உலகெங்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ் இளைஞர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்! இத்தகைய புரட்சிக்கு யார் காரணம்? தந்தை பெரியாரின் கல்விக் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா இது! தேர்தலில் தோற்றுப் போன வுடன், பதவிகள் பறிக்கப்பட்டவுடன், பார்ப்பனர்களைப் போல பேசுவதும் அவர்கள் உதவியை நாடுவதும் நன்றி மறந்த செயல்!
 http://viduthalai.in/page2/31986.html

Wednesday, April 18, 2012

துக்ளக் சோ ராமசாமி அய்யர் மீது சென்னை உயர்நீதிமன்றம் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது


கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த துக்ளக் சோ ராமசாமி அய்யர்,

சென்னை உயர்நீதிமன்றத்தில் 1962 இல் ஊழல் நீதிபதி கிடையாது. இப்போது? ஊழல் இல்லா நீதிபதிகள் உண்டா என்று தெரியாது; இதுதான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்.(துக்ளக், 18.4.2012 - பக்கம் 29 என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போதுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊழலற்றவர்களா, இல்லையா என்கிற அய்யப்பாட்டை இதன்மூலம் உருவாக்கியிருக்கிறார் சோ.

இதன்மீது சென்னை உயர்நீதிமன்றம் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

1962 இல் ஊழல் நீதிபதிகள் கிடையாது என்று நற்சான்று கொடுத்திருக்கிறார் திருவாளர் சோ.

அப்படியா....?

தலைமை நீதிபதியாக இருந்த பார்ப்பனர் ஒருவர், தன் பிறந்த தேதியை மாற்றியது ஊழலுக்கு அப்பன் அல்லவா?

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இராமச் சந்திர அய்யர் பிறந்து 11 மாதம் கழித்து அவரது தம்பி பிறந் திருக்கிறாரே - இந்த அதிசயம் எப்பொழுது நடந்ததாம்?

பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் அல்லவா - (இ)எப்படியும் பிறந்திருக்கலாம் - ஆமென்க!

இதுபற்றி கோயங்கா வீட்டுக் கணக்குப்பிள்ளை எஸ். குருமூர்த்தி அய்யர் என்ன எழுதினார் தெரியுமா?

20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் பிறப்புச் சான்றுகள் என்பது அதிகாரபூர்வமாக இல்லையாம். அதனால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாம்! உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு போடப்பட்ட நிலையில், பதிவாளர் சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதி இராமச்சந்திர அய்யருக்கு முறைப்படி தெரிவித்த அடுத்த சில விநாடியே பதவி விலகி விட்டாராம். பதவி விலகவில்லை என்றால் என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியுமே - சங்கராச்சாரியார்களே கம்பி எண்ணியிருக்கிறார்களே! தலைமை நீதிபதியும் கம்பி எண்ணினார் என்ற பார்ப்பனர்களின் சாதனை வீண் போயிற்று!

அவர் பதவி விலகி இருந்தாலும், தேதியைத் திருத் தியதற்கான மோசடிக்கான தண்டனை எப்படி தப்பியது? குடியரசுத் தலைவர் ஒரு பார்ப்பனர் (டாக்டர் ராதாகிருஷ்ணன்) இவர் ஒரு பார்ப்பனர் என்ற பாசக்கயிறுதானே!

டில்லி தலைமைச் செயலகத்தில் இந்த இராமச்சந்திர அய்யர்வாளின் உடன் பிறப்பு பெரும் பொறுப்பில் இருந் தார். அந்த சாய்காலோடுதான் அய்யர்வாள் இப்படித் திமிர் முறித்தார்.

இதுபோன்ற குற்றம் பார்ப்பனர் அல்லாத பிரதம நீதிபதியான ராஜமன்னார் அவர்கள் மீதோ, அல்லது ஓய்வு பெற்றுள்ள தமிழர் நீதிபதிகளான சோமசுந்தரம், கணபதியாபிள்ளை போன்றவர்கள்மீதோ அவர்களது பதவிக் காலத்தில் வந்திருக்குமாயின் இந்நேரம் அக்ரகார ஏட்டினர் இதை அகில உலகத்திற் கும் தெரியும் வண் ணம் தம்பட்டம் அடித்திருக்க மாட்டார்களா? கூப் பாடு போட்டிருக்க மாட்டார்களா? என்று அன்று விடுதலையில் எழுதியவர் அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (20.4.1964). சென்னை - கடற்கரை பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தினார், சமூகநீதியின் தந்தையான பெரியார் (19.4.1964).

பார்ப்பனர்கள் நீதிபதியாக இருந்தால் ஊழல் நடக் காது என்ற பொருளில் எழுதியுள்ள சோவைப் புரிந்து கொள்வீர்.http://www.viduthalai.in/headline/32265-2012-04-18-08-31-56.html

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - கி.வீரமணி

புராணங்கள் என்பவை எவை? அவைகள் எப்படி உருவாயின.

1. வேதங்களை - சூத்திரர்களோ, பெண்களோ படிக்கக் கூடாது என்ற தடை உண்டு.

ஏன் சமஸ்கிருத பாஷையே தேவ பாஷை - அவை சூத்திரர் அறியக் கூடாது.

வேதங்கள் ஓதுவதை காதால் கேட்கும் சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவேண்டும்; நாக்கை அறுக்கவேண்டும்.

ஆரியர்கள் - பிராமணர்கள் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப வழிவேண்டுமே!
இதோ அதற்காக நவாலியூர் நடராஜன் கூறுகிறார்:
வேதங்களோடு ஒத்த பெருமையுடைய புராண இதிகாசங்கள், சூத்திரரும், பெண்டிரும் படிப்பதற்கே ஏற்பட்டவை என்றார்.

இவை பாபங்களைப் போக்குமாம்!
வேதம் - வேதியர் - கீழ்ஜாதி
புராணம் - புரோகிதர் - மற்றவை

வேதங்களுக்கு அடுத்தபடியாகப் புராணங்கள் அய்ந்தாவது வேதமாகக் கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தைப் போலவே புராணங்களும் சமய இலுக்கியமாகக் கருதப்பட்டு வந்துள்ளன. வேதங்களைப் போலவே அமையும் பழைமையுடைனவென்பது ஆன்றோர் கருத்து. உருவத்திலும், பொருளிலும் அவை இதிகாசங்களோடும், ஸ்மிருதிகளோடும் ஒப்பிடத்தக்கன. இந்திய தரிசனங்களின் வரலாற்றையும், விரதானுட்டானங்களையும் அறிவதற்குப் புராணங்கள் மிகப் பயனுடையன. இந்திய நாகரிகத்தின் கருவூலம் புராணங்களே எனலாம். புராதனமாக இருந்து வருவது புராணம் எனப்படுகிறது. புராணம் செவி வாயிலாக வந்த புராதனச் செய்திகளெனவும் கூறலாம். வேத காலந்தொட்டு வந்த கதைகளும், வரலாறுகளும் மக்களிடையே பிரபலம் பெற்றுப் புராணமாக வடிவெடுத்தன. இவை சூதர் என்ற பாடகர்களால் ஆதியிற் பாடப்பட்டு வந்தன. அதனாலேதான் புராணங்கள் சூதபவுராணிகராற் கூறப்பட்டன என வழங்கும். புராணங்கள் மக்களிடையே பிரபலமடைந்து வந்ததால், புரோகிதர்கள் புராணங்களைப் பயன்படுத்திச் சமய போதனை செய்யவும், விரதானுட்டானங்களைப் பற்றிப் பிரசாரஞ் செய்யவும் முயன்றனர்.

பிரமாணங்களிற் புராணம் பற்றிய செய்தி

புராணம் என்ற சொல் பிராமணங்களிலும், உபநிடதங்களிலும் காணப்படுகின்றது. பண்டைக் கதைகள், உலக வரலாறுகள் என்ற பொருளிலேயே அங்கு இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. வேத சுருதிகளுக்கு முன்னரே இத்தகைய புராணக் கதைகள் இருந்திருக்கலாம். ஆனால், இன்று உள்ளதுபோலத் தனிப்பட்டதோர் இலக்கியமாகப் புராணங்கள் இருக்கவில்லை. அதர்வ வேதத்திலே புராணத்தைப்பற்றி, றூச: சாமானி சந்தாம்னி புராணம் எனத் தனிப்பட்டுக் கூறப்பட்டபோதிலும், அவை புராண இலக்கியங்களே எனக் கூறிக் கொள்ள முடியாது. சாந்தோக்கிய உபநிடதம் சதுர்த்த கிதிஹாச புராணம் பஞ்சமம் வேதானாம் வேத மிதி எனக் குறிப்பிடுகிறது. இதிகாசம் புராணம் என்பன பழைய சரித்திரக் கதைகளையும், ஆக்கியானங்களையும் குறிப்பிட்டன. பின்னர், சூத்திர இலக்கியங்களிலே புராணம் திட்டமாக ஒரு தனி இலக்கியமாய்க் குறிப்பிடப்படுகின்றது. மகாபாரதத்திலே இருடிகளின் பாரம்பரியம் தேவர்களின் விருத்தாந்தம் முதலியவற்றைக் குறிப்பிடப் புராணமென்ற சொல் வழங்குவதாயிற்று. வேதங்களை விளக்குவதற்கு (உப பிராமணம்) புராணங்கள் பயன்படுவதாக ஸ்மிருதிகள் குறிப்பிடுகின்றன. இருக்கு வேத சூக்தங்களிலே பரிச்சயமான புரூரவன், ஊர்வசி, சரண்யூ, முட்கலன் போன்ற கதைகள் புராணங்களிலே காணப்படுகின்றன. அரசன் வேதத்தையும், தர்ம சூத்திரங்களையும், வேதாங்கங்களையும் பிரமாணமாகக் கொள்வது போலவே, புராணங்களையும் நீதி பரிபாலனத்துக்குப் பிரமாணமாகக் கொள்ளவேண்டும். ஒழுக்கம், வழக்கு, தண்டம் எனப் பரிமேலழகர் திருக்குறள் உரையிற் கூறிய நீதி பரிபாலனத்துக்கு இப்புராணங்களும் பிரமாண நூல்களாய்க் கருதப்பட்டு வந்தன என அறிந்துகொள்ளலாம்.

சூத்திர இலக்கியத்திற் புராண மேற்கோள்கள்

ஆபஸ்தம்ப தரும சூத்திரத்திலே புராணங்களிலிருந்தும் பவிஷ்ய புராணத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டப்படுகின்றன. இத்தரும சூத்திரங்கள் கி.மு. 4 ஆம் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. கௌடிலிய அர்த்த சாத்திரத்திலே, அரசர்க்குக் கல்வி புகட்டுவதற்குப் புராணக் கதைகளைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுகின்றது. இது கி.பி. 3 ஆம் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்.

மகாபாரதம், ஒரு புராணமாகவே தன்னை வருணித்துக் கொள்கின்றது. அத்துடன் புராணங்கள் கதையை ஆரம்பிப்பது போலவே, புராணங்களிற் புலமை பெற்றவரும் லோமஹர்ஷணர் மகனுமான சூதர் சொன்னார் எனப் பாரதம் ஆரம்பிக்கின்றது. இவற்றிலிருந்து மகாபாரதம் இப்போதைய உருவத்தைப் பெறுவதற்கு முன்னரே புராணங்கள் தனி இலக்கியமாக இருந்தன என்று சொல்லலாம். புராணங்களும், மகாபாரதமும் போலவே பல ஆசிரியராற் காலத்துக்குக் காலம் விரித்தும் புதுக்கியும் செய்யப்பட்டன. எனவே, புராணங்களிற்கூட முந்திய பகுதி, பிந்திய இடைச் செருகல் என்றெல்லாமுண்டு. மகாபாரதக் கதைகளுக்கும், புராணக் கதைகளுக்கும் ஒற்றுமை காணப்பட்டால், அது ஒருகால் இரண்டுக்கும் பொதுவானதொரு கதைக் களஞ்சியத்திலிருந்து வந்திருக்க வேண்டுமென்று கருதவேண்டும். அல்லது ஒன்றை மற்றொன்று பின்பற்றியதென்று கொள்ளவேண்டும்.

கதைமூலம்

பொதுவான கதையூற்று கேள்வியாக வந்திருக்கலாம். அதிலே, வேத காலத்திலிருந்து வாய்மொழியாக வந்து பிராமணத்திற் கலந்த கதைகளிலிருக்கலாம். அரசர் அவைக் களங்களிலே சூதர் என்ற பாணர் வகையினராற் பாடப்பட்ட கதைகளிருக்கலாம். சில திட்டமான புராண உருவில் இருந்திருக்கலாம். விஷ்ணு புராணத்திலே ஆதியில் நான்கு புராணங்களே இருந்தனவெனக் கூறப்படுகின்றது. இந்தப் புராணங்களில் மூல சங்கிதையைச் சூதலோமஹர்ஷணரும் அவருடைய மாணாக்கர் மூவரும் கூறினர். சில ஆசிரியர்கள் எல்லாப் புராணங்களும் ஆதியானதாம் புராணமொன்றிலிருந்தே கிளைத்திருக்க வேண்டுமெனப் பலர் கூறுகின்றனர். அஃது அத்துணைப் பொருத்தமுடைய கருத்தன்று. பழைய கிரந்தங்களிலே புராணம் என்று குறிக்கப்பட்டால், அது பழைய மரபு என்றே கொள்ளவேண்டும். வேதம், மிருதி, சுருதி என்பவற்றிற்குச் சாதாரணமாக என்ன பொருளுண்டோ அதே பொருளையே புராணத்துக்கும் கொடுக்கவேண்டும். ஆதியிலே புராணம் என வழங்கப்பட்டவற்றுக்கும் இக்காலத்திற் புராணமென நாம் கொள்ளும் நூல்களுக்கும் பல பேதங்களுண்டு.

புராண இலக்கணம்

புராணங்களுக்கு இலக்கணம் வகுத்த பிற்காலத்தவர் அய்ந்து இலக்கணத்தைக் குறிப்பிடுவர். அவை சர்க்கம் (சிருட்டி), பிரதி சர்க்கம் (அழித்து மறுமடி உண்டாக்குவது), வம்சம் (தெய்வபரம்பரை), மன்வந்தரம் (மனுக்களின் காலம்), வம்சியானு சரிதம் (அரச வமிசங்களின் வரலாறு) என்பனவாகும்.

இன்று நிலவும் புராணம் எதிலும் இந்த இலக்கணங்களை முற்றாய்க் காண முடியாது. சில புராணங்களிலே இவற்றைவிட வேறுபல விஷயங்களும் காணப்படுகின்றன. வேறு சில இந்த இலக்கணங்கள் சிறிதுமின்றி வேறு விஷயங்களைக் குறிப்பிடுகின்றன. இன்றுள்ள புராணங்களிலே பல தானம், விரதம், தீர்த்தம், மூர்த்தி, தலம், சிராத்தம் முதலியவற்றைக் குறிப்பிடுகின்றன.

பிற்காலத்திற் புராணத்துக்கு இலக்கணம் வகுத்தவர்கள் பஞ்சலக்கணம் உபபுராணங்களுக்கே யுரியனவென்றும், மகாபுராணங்கள் தசலக்கணம் பெற்றிருக்க வேண்டுமென்றும் விதித்தனர். இவை விருத்தி (தொழில்), ரக்ஷா (தெய்வங்களின் அவதாரம்), முத்தி (வீடு), ஹேது (அவ்யக்தமான உயிர்), அபாச்ரய (பிரமம்) என்பனவாகும்.

இவற்றைவிட, பிரமா, விட்டுணு, சூரியன், உருத்திரன் என்ற தெய்வங்களின் பராக்கிரமத்தைக் கூறுவனவாயும், உலகின் சிருட்டி, திதி, சங்காரம் என்பனவற்றையும், அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றையும் கூறுகின்றனவாயுமிருக்கின்றன. இது கூடப் பூரணமான இலக்கணம் எனச் சொல்ல முடியாது. புராணங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களையும் அடக்கியுள்ளன என்று ஹரிப்பிரசாத சாஸ்திரி என்னும் அறிஞர் கூறுகிறார்.

பதினெண் புராணங்கள்

பரம்பரையாகக் கூறப்பட்டு வந்த புராணங்கள் 18. இவை மகாபுராணங்கள். பின்வருமாறு:

பிரமம், பதுமம், விஷ்ணு, வாயு, பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், அக்கினி, பவிஷ்யம், பிரம்மவைவர்த்தம், வராகம், லிங்கம், ஸ்காந்தம், வாமனம், கூர்மம், மத்ஸ்யம், கருடம், பிரமாண்டம் என்பன.

வாயு புராணத்துக்குப் பதிலாகச் சிவபுராணமும், பாகவதத்துக்குப் பதிலாக
தேவீபாகவதமும் பேசப்படுகின்றன.

 

http://www.unmaionline.com/new/807-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html 

April 01-15

- தொடரும்

Sunday, April 15, 2012

நீடாமங்கலத்துக்கு நீதி - தந்தை பெரியார்

நீடாமங்கலத்தில் 28-12-1937இல் நடைபெற்ற காங்கிரஸ்காரர்கள் மகாநாட்டில் நடந்த சாப்பாட்டு பந்தியில் சில ஆதிதிராவிட கிறிஸ்தவ தோழர்கள் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவர்களை அடித்துத் தொந்தரவு செய்து மொட்டை அடித்து அவமானப் படுத்தியதாக விடுதலைப் பத்திரிகையில் வந்த செய்தியை அம்மகாநாட்டை நடத்திய பிரமுகர்கள் பொய் என்று மறுத்ததுடன் அச்செய்தி வெளியானதால் தனக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதென்று விடுதலைப் பத்திரிகை பிரசுரிப்பவர் மீதும், ஆசிரியர் மீதும் டிப்டி மேஜிட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்திருந்ததும், அந்த வழக்கு சுமார் 4,5-மாதமாக நடந்து வந்ததும் வாசகர்கள் அறிந்த விஷயமேயாகும். இந்த 4,5-மாதமாக நடந்த வழக்கு சகல விசாரணையும் முடிந்த பிறகு இம்மாதம் 15தேதி முடிவு கூறப்பட்டது. அம்முடிவானது விடுதலை பிரசுரிப்பவரான தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர் களுக்கு ரூ. 200 அபராதமும் விடுதலை பத்திராதி பரான தோழர் பண்டித முத்துச்சாமிப்பிள்ளை அவர் களுக்கு ரூ. 200 அபராதமுமாக தண்டனை விதித்து முடிவு பெற்றுவிட்டது.

இந்த வழக்கின் முடிவு இப்படித்தான் முடியலாம் என்று ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்டதென்றே சொல்லலாம். ஏனெனில் காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவாய் இருந்தாலும் அதைக் குற்றமானதென்று காங்கிரஸ் ராஜ்ஜியத்தில் ஒரு வேலை காயமில்லாத நீதிபதியிடம் இருந்து நீதி பெற்றுவிடலாம் என்று யாரும் கருதமாட்டார்கள். காங்கிரஸ் பார்லிமெண்டரி செகரட்டரி என்பவர் பெட்டியேறிச் சரியாகவோ, தப்பாகவோ ஒரு கட்சிக்குச் சார்பாய்ச் சாட்சி சொல்லி இருக்கும்போதும் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களும் ஒரு கட்சிக்கு அனுகூலமாய்ச் சாட்சி சொல்லியிருக்கும்போதும் ஒரு மேஜிஸ்ட்ரேட் நீதிபதி அதற்கு மாறாக முடிவு கூறுவ தென்றால் இது சராசரி யோக்கியதையுள்ளவர் களிடம் எதிர்பார்க்கக்கூடாத காரியமேயாகும். ஆதலால்தான் இந்த முடிவு ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்ட தென்றே சொல்ல வேண்டியதாயிற்று. இந்த முடிவினால் யாரும் கலங்கவோ அல்லது நீடாமங்கலம் தோழர்களுக்கு காங்கிரஸ்காரர்கள் செய்த கொடுமை உண்மையற்றதாய் இருக்குமோ என்று யாராவது சந்தேகப்படவோ வேண்டிய தில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

எந்தத் தைரியத்தைக்கொண்டு அப்படிச் சொல்லு கிறோமென்றால் நீடாமங்கலம் சம்பவம் நடந்ததாக விடுதலை, குடிஅரசு பத்திரிகைகளில் சேதி வந்தவுடன் அதன் உண்மையை விசாரிக்க சென்னை மாகாண தேவேந்திர வேளாள சங்கத்தார் உடனே ஒரு கூட்டம் கூடி இந்த விஷயத்தைப் பற்றி விசாரித்து முடிவு தெரிவிக்கும்படி ஒரு கமிட்டியை நியமித்து விட்டார்கள். அக்கமிட்டியில் சாதாரண ஆள்களை நியமிக்காமல் அச்சங்கத்தின் மாகாண பிரசிடெண்டான தோழர் எம். பாலசுந்தரராஜ் அவர்களையும், அச்சங்கத்தின் காரியதரிசி தோழர் விஜயராஜ் அவர்களையும், அக்கமிட்டியின் பொருளாளரும் காங்கிரஸ் எம்.எல். ஏயுமான தோழர் எ. சி. பாலகிருஷ்ணன் அவர்களையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பரான தோழர் ஏ. அய்யனார் அவர்களையும், தோழர் ஜே. தேவாசீர்வாதம், தோழர் எ.வி. அக்கினிமுத்து ஆகியவர்களையும் நியமித்தார்கள். அக்கமிட்டியார் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நீடாமங்கலம் சென்று நீடாமங்கலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அநேக சாட்சிகளை முறைப்படி விசாரித்து சாட்சி பதிவு செய்து கவலையோடு ஆராய்ந்து பார்த்து முடிவு எழுதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அவ்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் - இந்த கமிட்டியார் உடனே புறப்பட்டு போய் நீடாமங்கலம் முதலிய சுற்றுப் பக்கங்களில் விசாரித்ததில் தாழ்த்தப்பட்ட மக்களுக் குச் செய்யப்பட்டக் கொடுமைகள் உண்மையானவை என்று தெரிந்தார்கள் என்பதாகவும் மற்றும் கட்டி வைத்து அடித்ததைப் பற்றியும், மொட்டை அடிக்கப் பட்டதைப் பற்றியும், சாணிப்பால் ஊற்றி அவமானப்படுத்தப்பட்டதைப் பற்றியும் பலபேர் சாட்சி சொன்னார்கள் என்றும், இதை மறைக்க பலர் முயல்வதாய்த் தெரிகிறதென்றும் சொல்லி இருக்கிறார்கள்.

எனவே, இந்த விஷயம் நடந்தது உண்மையா? பொய்யா? என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு கோர்ட் நடவடிக்கையில் நியாயம் கிடைக்காத தால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேற்படி கேஸ் சம்பந்த மான கோர்ட் ஜட்ஜ்மெண்டை நாம் பார்க்காததால் அதன் உள் விஷயங்களைப் பற்றி நாம் ஒன்றும் எழுத முற்படவில்லை என்றாலும், அந்த ஜட்ஜ்மெண்ட் எப்படிப் பட்டதாய் இருந்தாலும் நீடாமங்கலம் சம்பவம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வருவதை அது தடுக்கவில்லை என்றே கருதுகிறோம். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமுகத்தில் ஒரு மனிதனாய் இருந்து கொண்டு மானத் துடன் வாழ முடியாது என்பதுடன் இம்மாதிரியான அவமானங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது என்பதேயாகும். அவமானப்பட்டு, அடிபட்டு, உதைபட்டு, துன்பப்பட்ட ஆட்களில் கிறிஸ்துவர்கள் அதிகமாய் இருந்துங்கூட அவர்களுக்கும் நியாயம் கிடைக்க முடிய வில்லை. ஆனால், இவர்கள் முஸ்லிம்களாய் இருந்து இப்படிப்பட்ட அவமானம் நடந்திருந்தால் இதற்குப் பரிகாரம் கிடைக்காமல் இருந்திருக்குமா என்பதை நீடாமங்கலம் ஆதி திராவிட தோழர்கள் சிந்தித்துப் பார்க்கும்படி வேண் டிக் கொண்டு இதை இப்போது முடிக்கிறோம். மற்றவை ஜட்ஜ்மெண்ட் பார்த்தபிறகு விளக்குவோம்.

குடிஅரசு - தலையங்கம் - 19.06.1938http://viduthalai.in/page-2/32109.html

Saturday, April 14, 2012

அடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரகாம் லிங்கன்

இன்று உலகிலேயே முதன்மையான வல்லரசாக விளங்கும் அமெரிக்க அய்க்கிய நாடுகள் 19 ஆம் நூற்றாண் டில் ஓர் உள்நாட்டுப் போரைச் சந்திக்க வேண்டி இருந்தது. என்றால் சாமான்ய மக்களுக்கு வியப்பாக இருக்கும். இந்த உள்நாட்டுப் போருக்கு மய்யப் பிரச்னையாக விளங்கியது கறுப்பின மக்களின் அடிமைப் பிரச்சினையே ஆகும். அமெரிக்காவின் வடபகுதி மக்கள் கறுப்பின மக்களின் அடிமைத் தனத்தைத் தீவிரமாக எதிர்த்தனர். தென்பகுதி மக்கள் அடிமைத் தனத்தை ஆதரித்தனர். ஆப்ரகாம் லிங்கன் குடியரசுத் தலைவராக 1861 ஏப்ரல் 4 ஆம் நாள் பதவி ஏற்றால். 1861 ஏப்ரல் 12 ஆம் நாள் உள்நாட்டுப் போர் தொடங்கி 1865 ஏப்ரல் 9 ஆம் நாள் முடிந்தது.

லிங்கன் உள்நாட்டுப் போரின் போது, குடியரசுத் தலைவராகப் பதவி வகித்து கறுப்பர்களின் அடிமைத் தனத்தை ஒழித்து, உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று அமெரிக்க அய்க்கிய நாடுகளின் ஒருமைப்பாட்டையும் காத்தார்.

உலக வரலாற்றில் இடம் பெற்ற பல தலைவர்கள் மிக எளிய குடும்பத்தில் பிறந்து தங்களின் அறிவாற்றலாலும் மக்கள் தொண்டாலும் மிக உயர்ந்த தலைமைப் பதவியை அடைந்தார்கள். அமெரிக்காவில் பதினாறாவது குடியரசுத் தலைவர் லிங்கன், தாமஸ் லிங்கன்-நான்ஸி ஹாங்க்ஸ் என்ற ஏழைத் தம்பதிகளுக்கு 1809 பிப்ரவரி 12 ஆம் நாள் பிறந்தார். ஏழ்மை காரண மாக லிங்கன் வெவ்வேறு பாட சாலைகளில் பன்னிரண்டு மாதங் களுக்கு மேல் கல்வி கற்கவில்லை! இளமைப் பருவத்தில் மரம் வெட்டுதல், நிலத்தில் உழவு செய்தல், மளிகைக் கடை ஊழியர், அஞ்சல் அலுவலர், இராணுவ அலுவலர் என்று பல்வேறு அலுவல் களில் ஈடுபட்டார். படித்து வழக் குரைஞர் தேர்வில் வெற்றி பெற்று 1837 இல் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார்.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை

என்பது வள்ளுவரின் வாய்மொழி. தேவையான போதெல்லாம் உதவி புரிந்து தாங்கி நிற்கும் தன்மைதான் நட்பின் இலக்கணம். வழக்குரைஞர் தொழில் செய்த போது ஏழை கட்சிக் காரர்களிடம் மிக உயர்ந்த மனிதாபி மானத்தோடு நடந்து கொண்டார்.

அமெரிக்க அடிமை எதிர்ப்பு சங்கம் 1839-ல் கறுப்பின மக்கள் வெள்ளைக் காரர்களால் கொடுமைப்படுத்தப் படுவதைப் பற்றி ஒரு நூலை வெளி யிட்டது. கொதிக்கும் நீரில் அவர்களின் கைகள் மூழ்கடிக்கப் பட்டன. கத்தியால் குத்தப்பட்டனர். இடுப்பிலே குழந்தை களை வைத்திருந்த தாய்மார்களிடமி ருந்து குழந்தைகள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏலச் சந்தையில் ஏலம் போடப்பட்டனர். கறுப்புப் பெண்களை கர்ப்பவதியாக் குவதற்கு கட்டுடல் கொண்ட வெள்ளைய இளைஞர்களுக்கு 25 டாலர் பரிசு கொடுக்கப்பட்டது! இப்படிப் பிறக்கும் குழந்தைகள் சிகப்பாக இருப்பதால் ஏலத்தில் அதிக தொகைக்கு விற்கப்பட்டன.

லிங்கன் அமெரிக்காவில் வெள்ளை முதலாளிகளுக்கும் கறுப்பின அடிமைப் பெண்களுக்கும் பிறந்த கலப்பினத்தவர் 4 லட்சம் போர் இருப்பதாகத் தெரி வித்தார்!

இல்லினாய்ஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர், தலைநகர் வாஷிங்டனில் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஆகிய பதவிகளை லிங்கன் வகித்தபோது அவை பிற்கால நாடு தழுவிய அரசியல் பணிக்குப் பயிற்சிக் களமாக அமைந்தன.

லிங்கன் 1859 நவம்பரில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்று 1861 ஏப்ரல் 4 ஆம் நாள் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்பதற்கு முன்பாகவே தென்கரோலினா, அலபாமா, புளோரிடா, ஜியார்ஜியா, மிஸிஸிபி, டெக்ஸாஸ் ஆகிய மாநிலங்களின் நடுவண் அரசிலிருந்து பிரிந்தன. லிங்கன் பதவி ஏற்ற சில நாட்களிலேயே ஏப்ரல் 12 ஆம் நாள் நடுவண் அரசுக்கும் தென்; மாநிலங் களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கிவிட்டது.

உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும்போதே, 1863 நவம்பர் 19 ஆம் நாள் கெட்டிஸ்பர்க் கல்ல றையில் வரலாற்றுப் புகழ் மிக்க சொற்பொழிவு ஆற்றினார். உரையில் மக்களாட்சியின் இலக்கணத்தை விவரிக்கிறார்: மக்களுடைய, மக்களால், மக்களுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி இந்த உலகிலிருந்து என்றும் அழியாது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவது அரசியல் சட்டப்படி மரபு. 1864 நவம்பர் 8 ஆம் நாள் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மெக்கல்லனைவிட மிகப் பெரும்பான்மை வாக்குகள் பெற்று புகழ் மிக்க வெற்றி பெற்றார். 1864 நவம்பர் 8 ஆம் நாள் நடந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப் பெட்டிகள் கண்டுபிடிக்கப் பட்டபின் உலகில் நடந்த மிகப் பெரிய தேர்தல் ஆகும். லிங்கன் 1865 மார்ச் 4 ஆம் நாள் இரண்டாம் முறையாக குடியரசுத் தலைவராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

பதவி ஏற்பு விழாவில் லிங்கன் வரலாற்றுப் புகழ் மிக்க உரை யாற்றினார். உரையின் இறுதிப் பகுதி வருமாறு: போரினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள புண்களை ஆற்றவும், போரில் ஈடுபட்டு ஊனமுற்றோரைப் பாதுகாக்கவும், போரில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் விதவைகளையும், குழந்தைகளையும் பராமரிக்கவும் நாம் பணி மேற்கொள்வோமாக! நம் நாட்டிற்குள்ளும், பிற நாடுகளுடனும் நியாயமான நிரந்தரமான அமைதியை ஏற்படுத்த நாம் புனிதப் பணியை மேற்கொள்வோமாக!

லிங்கன் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த போது மிகுந்த எளிமையைக் கடைப்பிடித்தவர். இந்தப் பண்பை தமிழர் தலைவர் வீரமணியார் பின் வருமாறு குறிப்பிடுகிறார்: லிங்கன் தன் மகனுக்காக ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதுகிறார் இராணுவத் தளபதிக்கு!

என் மகன் ராணுவத்தில் சேர்ந்து வேலை செய்ய விரும்புகிறான். என்னைத் தலைவராக எண்ணாமல் நண்பனாகக் கருதி என் மகனுக்கு மற்ற அலுவலர்களுக்கும் பாதகமில்லாமல் ராணுவத்தில் அவனுக்கு ஏற்ற வேலை தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று எழுதுகிறார். இதைப் போல் எந்தக் குடியரசுத் தலைவராவது தன் கீழ் பணிபுரியும் படைத்தளபதிக்கு அடக்கத் துடன் கடிதம் எழுதுவாரா? லிங்கன் விருப்பப்படியே மூத்த மகன் ராபர்ட் இராணுவத்தில் சேர்ந்து பணியாற் றினார். லிங்கன் இரண்டாம் முறையாகக் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற அய்ந்து நாள்கள் கழித்து ஏப்ரல் 9 ஆம் நாள் காலை போர் முடிவுக்கு வந்தது. 1861 ஏப்ரல் 12 ஆம் நாள் காலை ;தென்கரோலினா மாநிலத்தில சம்ப்டர் கோட்டையில் தொடங்கிய உள்நாட்டுப் போர் 1865 ஏப்ரல் 9 ஆம் நாள் வர்ஜீனியா மாநிலத்தில் ஒரு சிற்றூரில் தளபதி கிராண்ட்டிடம் தென்னகத் தளபதி லீயின் சரணாகதியுடன் முடிந்தது. நான்காண்டு காலம் நடந்த சகோதரப் போரில்இரு தரப்பிலும் அய்ந்து லட்சம் வெள்ளைப் படைவீரர்கள் மாண்டனர்.

லிங்கன் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றதோடு கறுப்பர் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். அமெரிக்க நாட்டின் ஒருமைப்பாட்டையும் காப்பாற்றினார்.

இன்று கறுப்பர் இன பராக் ஒபாமா அமெரிக்கக் குடியரசுத் தலைவராக வீற்றிருக்கிறார் என்றால் அதற்கு ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னால் அடித்தளம் அமைத்தவர் ஆப்ரகாம் லிங்கனே ஆவார்.

தோல்வி அடைந்த தென்னகப் படையிடம் லிங்கன் சகோதரப் பாசத்தோடு நடந்து கொண்டார். லிங்கன் ஆணைப்படி அவர்கள் படையிலிருந்து விடுவிக்கப்பட்டு உழவிலும், வணிகத்திலும் ஈடுபட வீடுகளுக்கு அனுப்பப் பட்டனர்.

ஏப்ரல் 14 ஆம் நாள் இரவு லிங்கன் தன் குடும்பத்தாருடன் வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் நாடக அரங்கில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார். பூத் என்ற கொலைகாரன் இரவு 10.13 மணிக்கு லிங்கனின் இடது காதுக்கு அருகில் கைத்துப்பாக்கியால் சுட்டான். 1865 ஏப்ரல் 15 ஆம் நாள் காலை 7.22 மணிக்கு லிங்கன் இயற்கை எய்தினார்.

கறுப்பர் இன அடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரகாம் லிங்கனின் புகழ் மனித குல வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

--செய்யாறு இரெ.செங்கல்வராயன் http://viduthalai.in/page6/31994.html

திராவிடரைச் சீண்டும் ஆரியம்

தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் வீடு இல்லாதவர் களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்ற வாக்குறுதிக்கு இங்கே அமோகமாக ஒட்டுகள் குவிகின்றன. வீடே இல்லா விட் டாலும் சரி.. பொதுக் கழிப்பிடம் கட்டித் தருகிறோம் என்று சொல்லி சுகாதாரத்தை மேம்படுத்தத்தான் யாரும் இல்லை.

இருள் பிரியும் நேரத்தில் ஒதுக்குப்புறப் புதர்களையும் தண்டவாள ஓரத்தையும் நோக்கி பெரும்பான்மைத் தமிழர்களைக் கூனிக் குறுகி ஒதுங்க வைத்ததுதான் திராவிடக் கட்சிகள் இத்தனை ஆண்டுகளில் ஆற்றிய சாதனையா? தன்மானம், சுயமரியாதை என்று சொல்லியே மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழனின் சுயமரியாதைமேல் கொண்டு இருக்கும் மரியாதை இவ்வளவுதானா என்று தலையங்கத்தில் எழுதுகின்றது ஆனந்தவிகடன் (10.4.2012).

பார்ப்பன ஏடுகளின் ஒரே இலக்கு என்ன தெரியுமா? எந்தப் பல்லவியைத் தொடங்கினாலும் சரணம் என்பதுமட்டும் கண்டிப்பாக திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த வேண் டும் என்பதுதான்; இதில் ஆனந்தவிகடனும் விதி விலக்கு இல்லை என்பதற்கு மேலே கண்ட எடுத்துக் காட்டுப் போது மானது. ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) முதல் நிதி அமைச் சர் ஆனபோது செக்குப்படம் போட்டு அவர் ஜாதியைச் சுட்டிக்காட்டிய ஏடாயிற்றே -_ இன்றுவரை அது தொடர்கிறது.

தமிழ்நாட்டில்தான் போதுமான கழிவறைகள் இல்லை; பா.ஜ.க., ஆளும் கருநாடகத்திலோ, மத்திய பிரதேசத்திலோ எல்லோருக்கும் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டனவா?

அங்கே கழிப்பறைகள் இல்லாததற்குக் காரணம் திராவிடர் இயக்கத்தின் தாக்கம் என்று சொல்லுவார்களோ!

திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதிலே பார்ப்பனர்களோடு தமிழ்த் தேசியவாதிகளும் கை கோர்க்கத் தயாராகி விட்டதால், பார்ப்பனர்களுக்கு மேலும் தைரியம் பொத்துக் கொண்டு கிளம்பி விட்டது போலும்!

இந்தத் திராவிடர் என்ற சொல்லைக் கேட்டாலே பார்ப்பனர் களுக்கு அதிர்ச்சியும் ஒவ்வாமையும் தானே!

திராவிடர் என்றாலே ஆரியர் என்பது எதிரே பஞ்சக் கச்சம் கட்டி நிற்கிறதே! இந்த எதிர்ப்புணர்வு தானே தமிழ் நாட்டில் ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்க வேர்களைச் சாய்த்தது? வருணாசிரமத் திமிரை நொறுக்கியது. எங்களுக்கும் இடஒதுக்கீடு தாருங்கள் என்று பிச்சைப் பாத்திரம் ஏந்தும் ஒருநிலையை ஏற்படுத்தியது. மாநிலத்தில் மட்டும் இந்த பிற்படுத் தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அகில இந்திய அளவி லும் கொண்டு வந்ததற்குக் காரணம் இந்த் திராவிடர் இயக்கம் தானே?

கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை தூக்கி எறிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சட்டத்தைக் கொண்டு வந்ததும் இந்தத் திராவிடர் இயக்கம்தானே!

பார்ப்பனர் புரோகிதர்களை அழைத்துத்தான் தங்கள் வீட்டுக் கல்யாணங்களை நடத்தியாக வேண்டும் என்கிற நிலையை மாற்றி சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப் படுத்தி, அதற்குச் சட்ட வடிவம் கொண்டு வந்ததும் இந்தத் திராவிடர் இயக்கம்தானே!

அறநிலையத்துறை சட்டத்தைக் கொண்டு வந்து அக்கிர காரத்தின் தனி உடைமையாக இருந்த கோவில்களிலிருந்து பார்ப்பனர்களை வெளியே தூக்கி எறிந்ததும் இந்தத் திராவிடர் இயக்க ஆட்சிதானே?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்ற முழக்கத் தைக் கொடுத்ததும் தன்மான இயக்கமான திராவிடர் இயக்கம் தானே?

அதனால் திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும் போது அந்தத் தன்மானம் என்ற சொல்லையும் சேர்த்துக் குதறுகிறது -_ ஆரியம்
திராவிடர்களைச் சீண்டுகிறது ஆரியம் _ திராவிடரே எச்சரிக்கை! எச்சரிக்கை!!
http://viduthalai.in/page7/31996.html 

திராவிடம் என்பது கற்பனையா?

திராவிடம் என்பது கற்பனை; அது ஒரு மாயை; கால்டுவெல் பாதிரிக்கு பிராமணர்மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே திராவிடம் என்பதனை விளம்பரப்படுத்தித் தனக்குப் புகழ் சேர்த்துக் கொண்டார். திராவிட இயக்கத்திற்கு இப்போது நூற்றாண்டு விழாக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? _ என்று பார்ப் பனர்களும் அவர்தம் அடிவருடிகளும் கேள்விக் கணை தொடுத்திருக்கிறார்கள்.

அரசியலில் ஏதிலிகளாக்கப்பட்ட வர்களும், தமிழ் இன எதிரிகளும், வரலாறு தெரியாத - _ வடிகட்டிய தற் குறிகளைப் போலப் பேசி வருகின்றனர். வரலாற்றை முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்; அல்லது வரலாறு தெரிந்தவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் சிலர் உளறி வருகிறார்கள்.

அண்மையில் செய்தியாளர்களிடம் ஒரு தலைவர், குடியரசுக் கட்சியில் பெரியார், தமிழ்நாடு தமிழருக்கே என்று எழுதினார் என்று பேசுகிறார். குடிஅரசு இதழுக்கும், குடியரசுக் கட்சிக்கும் வேறுபாடு தெரிய வேண்டாமா? அதுவும் கட்சியில் எப்படி எழுதுவது? இவர்களின் வரலாற்றறிவு எப்படிப்பட்டது தெரியுமா? இளம் தலைவர் பேசுகிறார், நாம் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்; நாம் ஆளப் பிறந்தவர்கள்
பல்லவர்கள்
பல்லவர்கள் வடபுலத்திலிருந்து வந்தவர்கள். சமற்கிருதத்தைத் தாய் மொழி எனப் போற்றியவர்கள். அதற்கு இலக்கியம் படைத்துக் கொடுத்தவர்கள். பல்லவர் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே! அவர்களில் ஒருவன் கூடத் தமிழன் இல்லை என்பது! தமிழ் மக்களின் செல்வத்தையெல்லாம் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கிய வர்கள் பல்லவர்கள்! நீங்கள் அவர்கள் வழி வந்தவர்களா?

நாட்டை ஆள வேண்டும் என்ற நசையோடு அலையும் இவர்கள் அந்த நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டாமா? அந்த நாட்டு மக்களின் மொழியைப் பிழையின்றிப் பேச வேண்டாமா? இந்த விளக்கெண்ணெய் வேலைக்கிடையில், திராவிடம் என்பது மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம்; சங்க இலக்கியத்தில் திராவிடம் என்பது இல்லை என்று வேட்டியை உருவித் தலையில் கட்டிக் கொண்டு வீதி வீதி யாய்ப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் தோன்றியது எப்போது?

ஆரியர் _ -திராவிடர் என்ற வேற் றுமையை விதைத்தவர் கால்டுவெல் தான்; திராவிடம் என்ற கற்பனையான ஒரு சொல்லைப் படைத்தவரும் அவர்தான்! என்று இப்போது பார்ப்பனர் புதுக்கரடி விடுகிறார்கள். இப்படியெல்லாம் பிற்காலத்தில் பார்ப்பனர்கள் பேசுவார்கள், வெட்கமில்லாமல் பொய்யுரைப்பார்கள் என்பதை அறிந்தோ என்னவோ கால்டுவெல் பெருமகனார் தொலை நோக்குப் பார்வையோடு தமது கருத்துக்களை வெளியிட்டார்.

திராவிடம் என்பது எனது படைப்பல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பண்டைய வடமொழி ஆசிரியர் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களேயன்றி நானில்லை என்று அறிஞர் கால்டுவெல் கம்பீரமாக நின்று உண்மையை வெளிப்படுத்து கிறார்.

மனுஸ்மிருதியில் பத்தாவது பிரிவில் சத்திரியக் குடியினர், படிப்படியாக ஆரியப் பழக்க வழக்கங்களிலிருந்து வழுவிப் பார்ப்பனர் தொடர்பை விட்டு விலகிக் கீழ்ச் சாதியினர் ஆனார்கள். அவர்கள் பவுண்டரர்கள், ஒட்ரர் திராவிடர், காம்போசர் என்று கூறப் பட்டுள்ளது. மேற்குறித்த குடியினரில் தென்னிந்தியாவிற்குரியவர் திராவிடர் என்று குறிக்கப்பட்டவர்களேயாவர். இதனால் தென்னாட்டு மக்களைப் பொதுப்படையாகக் குறிப்பதற்குத் திராவிடம் என்ற குறியீடு எடுத் தாளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என்றும் மகாபாரதத்திலும் திராவிடம் என்ற சொல்லாட்சி இப்பொருளிலேயே பயின்று வந்துள்ளது என்றும் டாக்டர் கால்டுவெல் விளக்கமாகத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் தம்முடைய நூலில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆதலின் கால்டுவெல் கண்காணியாரின் (பாதிரி யார்) காலத்திற்குப் பல நூற்றாண் டுகளுக்கு முன்பிருந்தே திராவிடம் என்ற சொல்லாட்சி, பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமை புலனாகின்றது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது:

திராவிடம் என்ற சொல் பார்ப்பனர்கள்மீது ஏற்பட்ட வெறுப்பினால் தோன்றியதல்ல மாறாகப் பார்ப்பனர் தமிழ்மக்கள்மீது கொண்ட வெறுப்பினால் அவர்களை இழிபிறப்பினர் என்று சுட்டுவதற்காகத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைப் பார்ப்பனர் நூலாகிய மனுதருமம் தெளிவுபடுத்துகிறது.

திராவிடம் மூவாயிரம் ஆண்டுத் தொன்மையுடையது. மாமன்னர் அசோகன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் இச்சொல் தென்னாட்டு மக்களை (தமிழர்களை) குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புகழ்வாய்ந்த ஓர் இனத்தையும், இடத்தையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் திடுமெனத் தோன்றியிருக்க முடியாது. மக்கள் வழக்காற்றில் அச்சொல் பயின்று பயின்று பண்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருக்க வேண்டும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு தோன்றியதாகப் பார்ப்பனர் கொண்டாடும் மனுதரும சாத்திரம் திராவிட மக்களைச் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்திக் கூறுகிறது. திராவி டத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று சுட்டுகிறது. மனுதருமம் (சுலோ 44 அத்தியாயம் 5) ஆனால் மாமன்னன் அசோகன் காலத்துக் கல்வெட்டு, தென்னாட்டையும், தென்னாட்டு மக்களையும் பெருந்தன்மையோடு திராவிடம் என்ற சொல்லால் குறிக்கின்றது. மாமன்னன் அசோகன் வட இந்தியாவின் பெரும்பகுதியை தன் ஆட்சியின்கீழ் வைத்திருந்தவன். கலிங்கம் (ஒரிசா) வரைதான் அவனால் தெற்கே படையெடுத்து வர முடிந்தது. கலிங்கத்திற்குத் தெற்கில் தமிழர்கள் வலிமையோடிருப்பதையறிந்து தெற்கே வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கலிங்கப் போருக்கு முன்பே கைவிட்டவன் மாமன்னன் அசோகன். அவன் திராவிட மக்களை மதித்தவன் பேரரசன்! ஆனால் நாடோடிகளான ஆரியப் பார்ப்பனர்கள், திராவிடத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று இழிவு படுத்திக் கூறியவர்கள்.

திராவிடம் என்ற சொல் கி.பி. முதல் நூற்றாண்டில் எழுத்தாளப்பட்டுள்ள தாகவும் இச்சொல் தமிழர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள தாகவும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனித்குமார் சட்டர்ஜி குறிப்பிடுகிறார்.

மனுவின் காலத்திற்குப்பின்னர்

மனுவின் காலத்திற்குப் பின்னர் வந்த வடமொழி ஆய்வாளர் பலரும் திரா விடம் என்ற சொல்லைத் தொன்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண்டுள்ளனர் என்பதையும் இந்திய பாகத மொழிகளைத் தொகைப் படுத்தி இனம் பிரித்த பண்டைய ஆராய்ச்சியாளர்கள் திராவிடி எனும் பெயரால் திராவிட மொழியினத்தைச் சேர்த்துள்ளனர் என்பதையும் கால்டு வெல் எடுத்துக்காட்டுகிறார். மேலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகக் கருதப்படும் சிறந்த வடமொழி அறிஞரான குமரிலபட்டர் என்பார் திராவிடாதி பாஷா என்ற சொற் றொடரைக் கையாண்டுள்ளதாகவும் அறிஞர் கால்டுவெல் குறிப்பிடுகிறார். இவ்வாறு எண்ணற்ற சான்றுகளை எடுத்துக்காட்டித் திராவிட என்ற சொல் மிகப் பழங் காலந்தொட்டே தென் னாட்டு மக்களையும் மொழியையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாக வடமொழியாளர்களால் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது என்று கால்டுவெல் நிறுவுகிறார்.

மேலும் இந்தியத் தொல்குடியினரில் ஒருவராகிய சத்திய விரதர் என்ப வரைப்பற்றிக் குறிப்பிடும்போது பாகவத புராணம் திராவிட மன்னர் என்று குறிப்பிடுவதாகவும் கால்டுவெல் கூறுகிறார்.-   (தொடரும்)http://viduthalai.in/page2/31986.html

வளமிக்க இந்நாட்டில் அறிவுக்குத்தானே பஞ்சம்?

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே! இந்தக் கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பாக கூட்டப்பட்ட கூட்டமாகும்.

திராவிடர் கழகம் சட்டசபைக்கு நிற்பது அல்ல; கழகத்தின் பேரால் பொதுத் தொண்டால் வயிறு வளர்க்கும் ஸ்தாபனமும் அல்ல; பொதுமக்களுக்கு அறிவுப் பிரச்சாரம் செய்து வரும் இயக்கம் அறிவுறுத்த இவன் யார் என்று எண்ணலாம். நான் மக்களுக்கு அறிவுறுத்துவது எனது கடமையாகக் கொண்டவன்.

நமது மக்களுக்கு எந்தவிதமான குறையும் இல்லாத இயற்கை அமைப்பைக் கொண்ட நாடாகும், நமது நாடு. இப்படிப்பட்ட நாடு மற்ற நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது காட்டுமிராண்டி நாடாக இருக்கக் காரணம் என்ன?

நாம் காட்டுமிராண்டியா என்ற அய்யம் பலருக்குப் பிறக்கும். சந்தேகம் இல்லாமல் நாம் காட்டு மிராண்டிகள்தான். இதை மெய்ப்பிக்க வேண்டுமா னால், உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதி நம் நாட்டில்தானே உள்ளது? கழுதை, நாய் இவற்றிடம் கூட இல்லாத ஜாதி நம்மிடையே தான் உள்ளது.

அடுத்து நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு நமக்கு இருக்கின்ற மாதிரி கடவுள்கள் உலகில் வேறு எங்காவது உண்டா? எத்தனை கடவுள்? எவ்வளவு ஒழுக்கம், நாணயம் அற்றதுகள் எல்லாம் கடவுள்கள்? எவ்வளவு மடத்தனம்?

எனவே, இப்படிப்பட்ட ஜாதி, கடவுள் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவது எவ்வளவு மகாமகா காட்டுமிராண்டித் தனம், நீங்கள் சிந்திக்க வேண்டும். நம் கடவுளோடு மட்டும் நிற்காதீர்கள். நமது மதம் எவ்வளவு முட்டாள்தனமான மதம்? மதம் என்றால் நாமம், சாம்பல் அடித்துக் கொள்ளத் தெரியும். இந்து மதம் என்றால் என்ன என்று எவனுக்காவது தெரியுமா?

இதுதான் நம் மதம், இதனை நாம் ஏற்றுக் கொண்டு இதன் பேரால் கீழ் ஜாதியாகவே உள்ளோம்.

அடுத்து நமது சாஸ்திரங்கள், நமக்கு இருக்கும் காட்டு மிராண்டி சாஸ்திரங்கள், புராணங்கள் உலகில் வேறு எங்காவது உண்டா?

பெண் ரொம்ப அழகுதான். 32 லட்சணத்தில் 30 இருக்கின்றது. மூக்கும், கண்ணும் இல்லாவிட்டால் என்ன பிரயோசனம்? அதுபோலத்தான் இவை ஆகும்.

இன்னும் சொல்லுகின்றேன், இந்த நாட்டில் உள்ள இத்தனைக் கோவில்கள் உலகில் எந்த நாட்டிலாவது உண்டா? இதன்பேரால் நடக்கின்ற மடத்தனம் உலகில் எங்காவது உண்டா? ஒவ்வொரு கோவிலிலும் 50 லட்சம்; 80 லட்சம்; கோடி இப்படிப் போட்டாலும் கட்ட முடியாது. இவைகளால் ஒரு காதொடிந்த ஊசி நன்மையாவது உண்டா?

தோழர்களே, நான் முன் கூறியதுபோல நமது நாடு எல்லா வளப்பமும் பொருந்திய இயற்கை அமைப்புடையது. ஆனால், அறிவு மட்டும்தான் குறைவாக உள்ளது. இதனை எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வதுதான் எங்கள் தொண்டாகும். நான் இன்று நேற்று செய்யவில்லை. காங்கிரசை விட்டு வெளிவந்த 30, 35 வருஷத்திய தொண்டு இதுதான். நம்மை மடையர்களாக காட்டுமிராண்டிகளாக ஆக்கி வைத்துள்ள இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், ஜாதி இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராடுகின்றேன். 1926-இல் குடிஅரசுவில் என்ன கொள்கைகளை வைத்து எழுதினேனோ அதே கொள்கைப்படிதான் இன்றும் பாடுபடுகின்றேன். கொஞ்சங்கூட மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படிப்பட்ட கேடானவைகளைப் பற்றி எடுத்துச் சொல்லி மாற்றவும், அறிவுப் பிரச்சாரம் செய்யவும் எவருமே முன்வரவில்லை. 2,500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றி அறிவுப் பிரச்சாரம் செய்தார். அவருக்குப் பிறகு அவரது மார்க்கமும், அவரைப் பின்பற்றியவர்களும் பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டு விட்டனர்.

அப்படி அறிவுப் பிரச்சாரம் செய்த புத்தனையும், சமணனையும் ஒழித்துக்கட்ட தலைசிறந்து விளங்கி யதுதான் இந்த காஞ்சிபுரம் ஆகும். புத்தருக்குப் பிறகு எவரும் தோன்றவே இல்லை. நாங்கள்தான் துணிந்து அறிவுப் பிரச்சாரம் செய்கிறோம்.

எங்களைப் போல வேறு எவரும் இந்த கடவுள், மதம், சாஸ்திரங்கள், மூடநம்பிக்கைகள், காட்டுமிராண்டித் தன்மைகள் இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்றும், இதனால் நாம் அடைந்துள்ள காட்டு மிராண்டித் தனங்கள் ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துப் பேச மாட்டார்கள்.
எந்த பெரிய மனிதன் அறிவாளி என்பவர்களை எடுத்துக் கொண்டாலும் முன்னோர்கள் சொன்னது, மகான் சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது, அதற்கு மாறாக நடக்கக் கூடாது என்பதில் தான் கருத்தைச் செலுத்தி எடுத்துச் சொல்வார்களே ஒழிய, இவற்றைக் கண்டிக்க மாட்டார்கள்.

இவற்றை எல்லாம் சுத்த மடத்தனம், காட்டுமிராண் டித்தனம் என்பது இப்படிப்பட்டவர்களுக்குத் தெரியாது என்பதல்ல. தெரிந்தும் எடுத்துச் சொல்ல அஞ்சு கின்றார்கள்.

இந்த 20-ஆம் நூற்றாண்டில் 1961-ஆம் ஆண்டிலும் விஞ் ஞான, அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து சந்திர மண்டலத்துக்குச் செல்லுகின்ற காலத்தில் இப்படிப்பட்ட 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி காட்டுமிராண்டிக் காலத்து கடவுள், மதம், சாஸ்திரம், நடப்புகள் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவதா?

நாங்கள் இன்று எடுத்துக் கொண்டு பாடுபடும் துறையானது, இதுவரை எவனும் ஈடுபட்டு வெற்றி பெறாத துறையாகும். எவனும் ஈடுபட அஞ்சிய துறையாகும். இன்று நாங்கள் இந்தத் துறையில் துணிந்து பாடுபட்டு வரும் எங்கள் கொள்கைகள் வீண் போகவில்லை. நல்ல பலனை அளித்துத்தான் உள்ளது என்பதை நாங்கள் நன்கு உணருகிறோம்.

தோழர்களே, நான் அடுத்த அரசியலைப் பற்றி சில வார்த்தைக் கூற வேண்டும். அரசியலைப் பற்றி எனக் காகவோ, வேறு யாருக்காகவோ பேச வரவில்லை. உங்களுக்காகப் பேசுகின்றேன்.

எந்தக் கெட்டிக்காரனாக இருந்தாலும், யாராயி ருந்தாலும் உங்கள் மத்தியில் வந்து பேசுவார் களேயானால் பேசுவது எல்லாம் பேசிவிட்டு கடைசியில் தங்களுக்கோ, தங்கள் கட்சிக்கோ ஓட்டு கேட்பவர் களாகவே இருப்பார்கள்.

நான் பேசுகின்றேன் என்றால், நான் பேசிவிட்டு எனக்கோ, எங்கள் கட்சிக்கோ ஓட்டு கேட்கவில்லை. இப்படி இருக்க நீங்கள் யார் பேச்சைக் கேட்கணும்? எவன் ஒருவன் தனக்காகவோ, தங்கள் கட்சிக்காக வோ ஓட்டு கேட்காமல் ஓட்டுப் பற்றி பேசுகின்றானோ, அவனுடைய பேச்சைக் கேட்க வேண்டுமா அல்லது தனக்காக ஓட்டுக் கேட்பவர்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனக்காக ஓட்டுக் கேட்காத நாங்கள் சுயநலம் இல்லாமல் நடுநிலையில் இருந்து பேசுபவர்கள். நாங்கள், இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறுவதுகூட இன்னாருக்கு ஓட்டுப் பண்ணி கெட்டு விடாதீர்கள் என்பதற்காகத்தான் ஆகும்.

நமது கையில் சரித்திர ஆதாரங்கள் எல்லாம் உள்ளன. நமது நாட்டை மூவேந்தர்கள், பல்லவர்கள், மராட்டியவர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டு இருக்கின்றனர். வெள்ளைக்காரன் போன பிறகு பார்ப்பான் ஆண்டு இருக்கின்றான். அவனுக்குப் பிறகு தமிழன் ஆள்கின்றான்.

இத்தனை பேர்கள் ஆண்டதில் மனிதனுக்கு அறிவு வளர வழி வகுத்துக் கொடுத்திருப்பார்களா? அறிவு ஏற்பட வேண்டும், மானம் ஏற்படச் செய்ய வேண்டும் என்பது மிக மிக முக்கியம். இந்த மூவேந்தர்கள் காலம் முதல் பார்ப்பான் ஆட்சி வருகின்றவரை இந்த அறிவு வளர்ச்சிப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ கவலைப்பட்டு ஆளப்பட்டு இருக்கின்றதா என எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் இந்த நாட்டை ஆளத் தொடங் கின காலத்துக்கு முன்வரை எந்த அரசனாவது எந்த நாயக்கன், முஸ்லிம், மராட்டிய ராசாவாவது ஒரு பள்ளிக்கூடம் மக்கள் படிக்க ஏற்படுத்தினார்களா என்றால் இல்லையே! மாறாக ஏராளமான சமஸ்கிருதப் பள்ளிகள், கோவில், குட்டிச்சுவர்கள் சோம்பேறி களுக்கு மடங்கள் கட்டினார்களே ஒழிய, எழுத் தறிவுக்கு வகை செய்யவில்லையே!

ஏதோ வெள்ளைக்காரன் ஆட்சியில்தான் கொஞ் சம் பள்ளிகள் ஏற்படலாயின. இதுவும் பார்ப்பான் படிக்கப் பயன்பட்டனவே ஒழிய, நமது மக்களுக்குப் பயன்படவில்லை. பார்ப்பானுக்கு வைத்த பள்ளியா னாலும் நம்மை புகாதே என்று தடுக்க முடியவில்லை. அதற்காக நாம் படிக்காது இருப்பதற்கு என்ன என்ன வழியோ அதுகளெல்லாம் செய்யப்பட்டன. நாம் 100-க்கு 6-7 படித்தவர்களாக இருக்கும்போதே பார்ப்பான் மட்டும் 100-க்கு 100 வெள்ளைக்காரன் பள்ளிகளால் படித்து இருந்தார்கள். இந்த வெள்ளைக்காரன் 200 ஆண்டு ஆட்சி செய்து விட்டு அவன் போகும் போது நாம் 100-க்கு 12-14 பேர்கள்தான் படித்து இருந்தோம்.

வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போன பிற்பாடும் காமராஜர் பதவிக்கு வரும் வரையிலும் கூட நாம் 100-க்கு 16 பேர்களே படித்து இருந்தோம். இன்று காமராசர் ஆட்சியில்தான் 100-க்கு 32 பேர்கள் படித்து இருக்கின்றோம் என்று எடுத்துரைத்தார்.

மேலும் பேசுகையில், இன்றைய காமராசர் ஆட்சி மீண்டும் ஏற்பட நாம் காங்கிரசை ஆதரிக்க வேண்டிய அவசியம் பற்றியும், எதிர்க்கட்சிகளின் பித்தலாட்ட பிரச்சாரங்கள் பற்றியும் விளக்கும்போது மழையின் காரணமாக கூட்டம் நிறுத்த வேண்டி வந்தது.

(10.9.1961 அன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 30.9.1961) http://viduthalai.in/e-paper/32040.html

weather counter Site Meter