Pages

Search This Blog

Saturday, November 27, 2010

என்னைப் பற்றி.... தந்தை பெரியார்

மக்களை அறிவாளியாக்கும், துறையில் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் துறையில் யார் பாடுபட்டாலும் அவர்கள் பொது மக்களால் வெறுக்கப்-படவும், நாத்திகர்கள் என்று கூறப்-படவும், தொல்லைக்கு ஆளாக்கப்-படவும், கொல்லப்படவுமான தன்மை உலகிலேயே இயற்கையாக இருந்து வருகிறபோது, அந்த நிலை நம் நாட்-டில், நம் மக்கள் இருக்கும் யோக்கி-யதையில் ஏற்படாமல் இருக்க முடியுமா? அதலால், அந்த நிலைக்கு ஆளாகும் தன்மையை எதிர்பார்த்தே நான் இந்தக் காரியத்தில் பிரவேசித்துத் தொண்டாற்றி வருகிறேன்.
இதன் பயனாக நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன்; வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்கிறேன்; இதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்-திற்கு என் பெயராலும், இயக்கத்தின் பெயராலும் அரசாங்கத்தாராலோ, அரசாங்கத்தில் உள்ள மேல் ஜாதி மக்களாலோ அல்லது இந்தக் கருத்துக்கு மாறுபட்டவர்கள் என்பவர்களாலோ எனது முயற்சியைத் தடுக்கவும், ஸ்தா-பனத்தை ஒழிக்கவுமான தன்மையாக ரூபாய் 15,00,000 (பதினைந்து இலட்ச ரூபாய்)க்கு மேல் கடந்த காலத்துக்கு என்று இன்கம் டாக்ஸ் வரி (வருமான-வரி) போடப்பட்டிருக்கிறது என்பதுடன் நிகழ்காலத்திற்கும் ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போல் இன்கம்டாக்சும் போடப்பட்டும் வருகிறது.
இவை தவிர நம் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனராலும் வெறுக்கப்-பட்டிருக்கிறேன். மேல் ஜாதியார் என்று பார்ப்பனரைப் போல் தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் எல்லாச் சைவர்கள் என்பவர்களாலும் பெரிதும் வெறுக்கப்பட்டிருக்கிறேன். இவை மாத்திரமா? 100 க்கு 90 கிறிஸ்துவர்களாலும் வெறுக்கப்படுகிறேன். இஸ-லாமியர்களாலும் வெளிப்படையாய் வெறுக்கப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
இவற்றுள் ஒரு அதிசயமென்னவென்றால் ஆதி திராவிட மக்களுக்குள் பதவியில் உள்ள சிலர் தவிர, ஒருவர்கூட எனக்கு ஆதரவாளர் கிடையாது. யாராவது சிலர் அவர்கள் சொந்த சுயநல காரியங்களுக்கு வருவார்கள். அவ்வளவு-தான். சிலர் எதிரிகளாகவே, அலட்சியப்-படுத்துபவர்களாகவே ஆகிவிட்டார்கள். எதற்கு இவற்றைச் சொல்கிறேன் என்றால் என் இந்தத் தொண்டுக்கு ஆதரவாளர்களாக, பாராட்டுபவர்-களாகப் பெரும்பாலான மக்கள் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவேயாகும்.
இதில் நான் மகிழ்ச்சியும், பெருமை-யும் அடையத்தக்கதும், குறிப்பிடத்-தக்கதுமான காரியம் என்னவென்றால் என் இயக்கத்தில் (இந்தத் தொண்டுக்கு ஏற்பட்ட இந்த இயக்கத்தில்) வேறு எந்த இயக்கத்தையும் விடக் கட்டுப்-பாடும், அதற்கேற்ற கடமைப்பாடும் நல்ல அளவுக்கு இருந்துவருகின்றன. இயக்கத் தோழர்கள் யாராயிருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் வெளியே போய்விடுகிறார்கள் என்பதுதான். நாத்திகர் என்பதற்காக யாரும் பயப்படாதீர்கள். சாக்ரட்டீஸ் நாத்திகர்; பெர்ட்ரண்ட் ரஸல் நாத்திகர்; பெர்னாட்ஷா நாத்திகர்; இங்கர்சால் நாத்திகர்; நேரு நாத்திகர். மற்றும், இயேசு-நாதரும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு கொலையுண்டார்; முகமது நபியும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு அடித்து விரட்டப்-பட்டார். புத்தர்களும், சமணர்களும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு அவர்-களின் வீடுகள், மடங்கள் கொளுத்தப்-பட்டு வெகுபேர் கொல்லப்பட்டு, கழு-வேற்றப்பட்டு, அவர்கள் பெண்கள் மான-பங்கப்படுத்தப்பட்டு அல்லலுற்றனர். இவர்கள் தவிர, அமெரிக்காவில் பல நாத்திகச் சங்கங்களில் மூன்று கோடிக்கு மேல் வெளிப்படையான நாத்திகர்கள். இங்கிலாந்திலும் அதுபோலவே அரைக்கோடிக்கு மேலும், ஜெர்மனியில் ஒரு கோடியும், சைனாவில் 60 கோடியும், ரஷ்யாவில் 25 கோடியும், ஸ்பெயினில் முக்கால் கோடியும், பிரான்சில் முக்கால் கோடியும், பர்மாவில் அரைக்கோடியும், சயாமில் ஒரு கோடியும் இருக்கிறார்கள்.
இப்படியாக நூற்றுக்கணக்கான கோடி மக்கள் நாத்திகர்களாக இருக்-கிறார்கள். பல தேசங்கள் நாத்திக தேசங்களாகவே இருந்து வருகின்றன. இத்-தனைக்கும் அவர்கள் எல்லோரும் பகுத்-தறிவு கொண்ட தேச மக்கள் ஆவார்கள்.
(தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் - 1973)
http://www.viduthalai.periyar.org.in/20101127/snews08.html

பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம்

அதுகள் - அவை
அத்திம்பேர் - அத்தையன்பர்
அமஞ்சி - அழுமஞ்சி
அம்மாஞ்சி - அம்மான்சேய்
அம்மாள் - அம்மை அரட்டவாளை - அரைத்தவளை
அரணாக்கயிறு, அண்ணாக்கயிறு - அரைஞாண்
அருகாமை - அருகண்மை
அலமேல் - அலர்மேல்
அவங்க, அவன்ங்கள் - அவர்கள்
அறுதலி - அறுதாலி
ஆத்துக்கு - அகத்துக்கு
ஆம்படையான் - அகமுடையான்
ஆம்பிளை - ஆண்பிள்ளை
இத்தினி - இத்துணை
இருவாட்சி - இருள்வாசி
ஈர்கலி - ஈர்கொல்லி
உன்னி - உண்ணி
எம்பளது - எண்பது
ஒண்டியாய் - ஒன்றியாய்
ஒப்படியாள் - ஓர்படியாள்
கசமாலம் - கழிமலம்
கடற்கண்ணி - கடற்கன்னி
கண்ட்ராவி - கண்ணராவி
கண்ணாம்பூச்சி - கண்ணாம்பொத்தி
கண்ணாலம் - கலியாணம்
காணும் - காணோம்
கார் - கா
குரவளை - குரல்வளை
குறுணா - குறுநொய்
நன்றி: (வெல்லும் தூய்தமிழ் 2041 துலை, நவம்பர் 2010)
http://www.viduthalai.periyar.org.in/20101127/snews07.html

ஆசிரியர் விடையளிக்கிறார்-கி.வீரமணி

கேள்வி: வேலூரில் கூடிய பார்ப்பனர் சங்கத்தில் தமிழகத்தில் 40 லட்சம் பார்ப்பனர்கள் இருப்பதாக வும், அவர்களில் பெரும்பாலோர் வறுமையில் வாடுவதாகவும், பார்ப்பனர்களுக்குக் கல்வி, உத்தியோகத் துறையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றி இருக்கிறார்களே, இது நியாயமான கோரிக்கையா? - இர. செங்கல்வராயன், செய்யாறு
பதில்: எத்தனை பார்ப்பனர் குடிசைகளில், தெருவோரத்தில் நடைபாதையில் வசிக்கிறார்கள்? ஒருவரைக்கூட காட்டமுடியாதே! மற்ற அதிகம் சம்பாதிப்பவரைப் பார்க்கையில் அந்தஸ்தில் குறைவாக இருக்கலாம். ஆனால், அது வறுமையில் BPL (Below the Poverty line) வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் இதில் எவ்வளவு பேர்? உத்தியோகத்தில் தங்களுக்கு 10 சதவிகிதம் கேட்டால் மற்றவர்கள் எவ்வளவு கேட்பர்? 2 அல்லது 3 சதவிகித மக்கள் தொகைதான் பார்ப்பனர் இருப்பர்; அவர்களுக்கு 3 முதல் 5 விழுக்காடு தந்தாலே தாராளம் ஆகுமே!
கேள்வி: உலகில் பிறந்த - பிறக்கக்கூடிய மனிதர்கள் எல்லாம் -ஏதாவது ஒரு மதத்தையும், அதோடு சேர்ந்த கடவுளையும் ஏற்று, பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்ற சூழலை ஒரு தனி நபருக்கு நிர்ணயிப்பது அரசின் பொதுச் சட்டமா?
பதில்: கட்டாயமல்ல. மத அடிப்படையில் சிறு பான்மை, ஜாதி அடிப்படையில் உரிமைகள் இடைக் காலத்தில் தேவைப்படுகின்ற நிலையில் அப்படி உள்ளது. மற்றபடி அரசின் விதியேதும் அப்படி அல்ல.
கேள்வி: உலக அளவில் வரலாற்று நிகழ்வுகளை கி.மு., கி.பி., என்று பிரித்துக் குறிப்பிடுவது போன்று, தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வரலாறு, முன்னேற்றம் பற்றி அறிய பெரியாருக்கு முன் - பெரியாருக்குப் பின் என்று பிரித்துப் பார்த்து ஆய்வு பண்ணும் பக்குவம் என்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட சமுதாய மக்க ளுக்கு எப்போது வரும்? தங்கள் பதில் என்ன? . - த. சுரேஷ், நாகர்கோவில
பதில்: பெரியார் ஆண்டு போடுகிறோமே! தங்களது அருமையான யோசனைதான் சமூக எழுச்சி வரலாற்றின் - அடையாள வரலாற்றின் குறிப்பு - காலக்கட்டம் ஆகும்!
கேள்வி: தீபாவளி பட்டாசு, திருவண்ணாமலை கார்த்திகை தீபம் போன்றவற்றால் அறிவு நாசம் ஒரு புறம், பொருளாதார நாசம் இன்னொரு புறம் - இதற்குத் தீர்வுதான் என்ன? - து. புனிதா, வடமட்டம்
பதில்: சட்டப்படி தடுக்கும் துணிவுகொண்ட ஓர் சர்வாதிகார ஆட்சியால்தான் முடியும். வாக்கு வங்கி ஜனநாயகத்தால் ஆகாது.
கேள்வி: ஆந்திரா செக்ஸ் புகழ் கவர்னர் என்.டி.திவாரி பா.ஜ.க. மேடையில் தோன்றுகிறாராமே? - மாரி. கோபால், சென்னை- 40
பதில்: பலே பலே! பார்ப்பன திவாரி கிருஷ்ண பக்தி - இராமர் பக்தி உடையவர். எனவே, அங்கே (பா.ஜ.க) தோன்றுவதே நல்ல ஹரே ராமா? ஹரே கிருஷ்னா!
கேள்வி: மியான்மாவில் சூகியின் விடுதலை - சுதந்திரமாக அரசியல் நடத்த அவர் அனுமதிக்கப்படுவாரா? - சீ. மணிமேகலை, வரகூர்
பதில்: காலம் அதை அவருக்குத் தந்தே தீரும்! முதல் கட்டு உடைந்தது; பிறகு மற்றவை!
கேள்வி: கொஞ்ச காலமாக அமுங்கிக் கிடந்த புட்டபர்த்தி சாயிபாபா பற்றி மீண்டும் விளம்பரங்கள் கிளம்பியுள்ளனவே? - சு.மூர்த்தி, காரைக்கால்
பதில்: திட்டமிட்டே ஊடகங்களில் விளம்பரங்கள். 1 கோடி ரூபாய் கொடுங்கள், கழுதையைக் கூட மகானாக்கிக் காட்டுகிறேன் விளம்பரத்தால் - என்றரே பெரியார்! கேள்வி: காங்கிரசுக்கு ஜெயலலிதா வலிய போய் ஆதரவு தந்தும் அதனைக் காங்கிரஸ் நிராகரித்து விட்ட நிலையில், ஜெயலலிதா வின் அந்த நிலைப்பாட்டைப் பெரிய ராஜதந்திரம் என்று சில ஏடுகள் எழுதுகின்றனவே? - வ. மோகன், ஆண்டிப்பட்டி
பதில்: அதற்குப் பெயர்தான் மனுதர்மம்! ஞானசூரியன் படியுங்கள்! அவாள் செய்தால் எதுவும் பிரமாதமே!
கேள்வி: ஞானசூரியனுக்கு என்ன திடீர் மவுசு?
- க. துரையரசன், சென்னை - 12
பதில்: நிலைமை அப்படி போவதால் திடீர் தேவை. நோய் முற்றினால் மருத்துவம் தேவையில்லையா?
கேள்வி: எத்தனையோ வழக்குகள் இருந்தும் மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே தண்டிக்கப்படாமல் ராஜாவாகத் திரிகிறாரே - அவரைப் பற்றியெல்லாம் இந்த ஊடகங்கள் கண்டு கொள்ளாதது ஏன்?
- செ. இராசாமணி, சித்தூர்
பதில்: துணிவுள்ள மகராட்டிர அரசு இன்னும் வரவில்லை!
http://www.viduthalai.periyar.org.in/20101127/snews14.html

பா.ஜ.க.வுக்கு உத்தரகிரியை!

ஸ்பெக்ட்ரம் ஊழல் ஸ்பெக்ட் ரம் ஊழல் என்று பெரிதுபடுத்தி ஒப்பாரி வைத்த கூட்டம் ஊழல் விவகாரத்தில் சிக்கி ஊர் மக்கள் மத்தியில் விழி பிதுங்கி நிற்கிறது.பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத் தில் ஊழல் என்பது அன்றாட நிகழ்ச் சியாகி விட்டது. மகன், மகள், மருமகன் என்று அரசு நிலங்களைத் தூக்கிக் கொடுத்த கதை ஊர் சிரிக்கிறது. எடியூரப்பாவை முதல் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும், வெளியேற்ற வேண்டும் வெளியுலகத்திற்குத் தெரிவித்துக் கொண்டு, அவரையே தொடரச் செய்யும் உள்கட்டுமான வேலையை பா.ஜ.க., தலைமை செய்து கொண்டு இருக்கிறது.
எடியூரப்பா பதவி விலகப் போகிறார் _ பா.ஜ.க., முடிவு என்று பார்ப்பன ஏடுகள் மத்தியில் பரப்பிக் கொண்டு இருக்கின்றன. ஆனாலும் எடியூரபச்்பாவாவது -பதவி விலகு-வதாவது - அது நடக்காது என்பது - தான் பிரத்தியட்ச நிலையாகும். 120 சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் இருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்ய முடியும் என்று இந்தி-யாவின் தலைநகரிலேயே பேட்டி கொடுக்கிறார். தன்னைச் சுற்றிலும் கருநாடக மாநில பா.ஜ.க., எம்.பி.-களையும் உட்கார வைத்துக் கொண்டு ஆணவமாகப் பேட்டி கொடுத்துள்ளார். குற்றச்சாற்றுகள் வெளியிலிருந்து மட்டுமல்ல; உள்கட்சியிலிருந்தும் ஓங்கி ஒலிக்கிறது. நில மோசடியில் 6000 கோடி ரூபாய் வரை ஊழல் கரை புரண்டு ஓடியிருக்கிறது. தன் குடும்ப உறுப்பினர்களுக்கு வாரி வழங்கியது மட்டுமல்ல; மாநில பா.ஜ.க., தலைவர் ஈஸ்வரப்பாவின் மனைவி மக்களுக்கும் மானாவாரி-யாகத் தூக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரப்பாவின் மனைவி ஜெய-லட்சுமி, மகன் கந்தேஷ், மருமகன் ஷாலினி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள பாரத் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்துக்கு 24 நாள்களுக்குள் 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.ஈஸ்வரப்பாவின் மகன் கந்தேசுக்கு 7682 சதுர அடி நிலம் ஒதுக்கப்-பட்-டுள்ளது. ஈஸ்வரப்பாவின் மருமகன் நிர்மல்குமார் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு 11.20 ஏக்கர் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஊழல்களும் விசாரணை நடத்திக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை விட்டு வைக்கவில்லை கருநாடக முதல்வர் எடியூரப்பா. இந்தக் குற்றங்களைச் செய்தது எல்லாம் உண்மை என்று ஒப்புக் கொண்டு விட்டார். நஞ்சன் கூடு கோவிலில் நஞ்-சுண்டேஸ்வரன்முன் ஒரு மணி நேரம் நின்று, வணங்கி இனிமேல் இது மாதிரி தவறுகளைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டிருக்கிறார். நேற்று முதல்தான் பக்தி வந்து இன்றைக்குத்தான் கோயில்முன் நின்று சத்தியம் செய்ததாகக் கூற முடியாது. சாலையில் நிற்கும் மைல்கல் முன்கூட தண்டால் எடுக்கும்பேர் வழி இவர். இவர் பக்தி _ கடவுள் நம்பிக்கை இவரை யோக்கியராக இருக்கச் செய்யவில்லை. கடவுள் தன் கைவசம் இருக்கிறார் என்ற தைரியத்தில் ஊழல்களில் உருண்டு புரள்வதில் அவர் தயக்கம் காட்டவில்லை. இந்த நிலையில் உள்ள யோக்கி-யர்கள் ஆ. இராசா ஊழல் செய்து விட்டார். அவரைப் பதவி விலகச் செய்ய வேண்டும்; அவர்மீது நாடா-ளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ரகளையில் ஈடுபடும் வருகின்றனர். 14 நாள்கள் பிரதமராக இருந்தார் அடல் பிஹாரி வாஜ்பேயி. அவசர அவசரமாக என்ரான் மின் உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதில் அவசரம் காட்டினார். அதன் விளைவு _ பல நூறு கோடிகணக்கில் அரசுக்கு நட்டம் ஏற்பட்டது. எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து அகற்றாமல் எந்த யோக்கியதையில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்? பார்ப்பன ஏடுகள் ஸ்பெக்ட்ரம் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல கருநாடாவின் எடியூரப்பா ஊழல் சாம்ராஜ்யம் பக்கம் தலை வைத்துப் படுக்காதது ஏன்? தென் மாநிலத்தில் ஒரே ஒரு இடத்தில், கருநாடகாவில் ஆட்-சியைப் பிடித்து, அது இடைக்கால கர்ப்பச் சிதைவாகி விட்டதே - பதவி விலகச் சொன்னால், ஊழலை ஒப்புக் கொண்டதாகப் பொருளாகி விடுமே -_ அது இந்தியா பூராவும் பா.ஜ.க.-வுக்கு எதிரான வெறுப்புப் புயலாகச் சுழன்றடிக்குமே என்ற அச்சம் உலுக்கி எடுக்கவே, பா.ஜ.க. சங்பரி-வார் வட்டாரம் ஆப்புதனை அசைத்து விட்ட குரங்கின் நிலைக்கு ஆளாகி விட்டன! அந்தோ, பரிதாபம்! பொய்யான புகார் கிளப்பி ஆ. இராசாவை வெளி-யேற்றிய நிலையில், இப்படி ஒரு அபவாதமா நமக்கு வந்து சேர வேண்-டும் என்ற நிலையிலே நிலை குலைந்து போய்விட்டது பா.ஜ.க. வட்டாரம். முரளி மனோகர்தான் சரியான புரோகிதர். பூணூலை வெளியே தொங்கவிட்டு அரை நிர்வாணமாக நின்று, காஞ்சி சங்கர மடத்தின்முன் கூட்ட நெரிசலை சரிபடுத்திக் கொண்டு இருந்தவர். சமஸ்கிருதத்தை - பல்கலைக் கழ-கங்களில் படிக்க வைத்தார். சமஸ்-கிருதமும் கற்றவர் அவரை அழைத்து டில்லியிலே பா.ஜ.க. அலுவலகத்தில் மந்திரங்களைச் சொல்லி, பா.ஜ.க.-வுக்கு உத்திரகிரியை நடத்தச் செய்து விடலாமே!
-மின்சாரம்
http://www.viduthalai.periyar.org.in/20101127/snews01.html

தருமபுரி மாவட்டத்தில் காவல் நிலையங்களா - பஜனை மடங்களா?

தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களிலும், காவல் நிலையங்களுக்குட்பட்ட இடங்களிலும் கோவில்கள் அதிக அளவில் கட்டப்-பட்டுள்ளதுடன், கோவிலை கட்டுவ-தற்குப் பல காவல் துறை அதிகாரிகளே துணையாக இருந்துள்ளனர் என்பதும் தெரியவருகிறது. சிறந்த காவல் துறையாக உலகிலேயே ஸ்காட்லாந்து காவல் துறைக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருப்பது நமது தமிழக காவல்துறை என்பதை நாமும் அறி-வோம். நாடும் அறியும். ஊசி நுழை-யாத இடத்தில்கூட தமிழக போலீஸ் நுழைந்துவிடும் என்பார்கள். அது ஓரளவு மட்டும் அல்ல, பேரளவும் உண்மையே. அதற்கு பல எடுத்துக் காட்டுகள் உண்டு.

அந்த வகையில் சிறந்து விளங்கும் காவல்துறைதான் பல சாமியார்களை; கண்டுபிடித்து சிறைக்கனுப்பி உள்ளது. பல களவுபோன கடவுளர்களின் சிலைகளையும் கண்டுபிடித்துள்ளது. தினம் தினம் ஏதோ ஒரு பகுதியில் கோயிலில் கொலையுடன் கூடிய கொள்ளைகளும் நடந்தே வருகிறது. அதையும் இந்த காவல்துறைதான் கண்டுப்பிடித்துள்ளது. ஏன் பல கடவு-ளர்களுக்கு நமது காவல்துறை கையில் துப்பாக்கியுடன் நின்றுதான் பாதுகாக்கிறது. துப்பாக்கியும் போலீசும் இல்லை என்றால் இன்று கடவுளர்களின் நிலையே கேள்விக்குறியாகி இருக்கும்.

கடவுளுக்கு காவல் இருந்து கடவுளை காவல்காத்த காவல்துறை, இன்று தன்பலம் என்ன என்று தெரியாமல் தன்னம்பிக்கை இழந்து காவல் நிலையத்திற்கு கடவுளை காவல் வைத்துள்ளனர் என்பதுதான் வேடிக்கை.

மத சார்பற்ற ஆட்சி செய்யும் நாட்டில், மதசார்பற்ற அரசில் எந்த மதத்தைச் சேர்ந்த கடவுள் படங்-களையோ, சிலைகளையோ (சாதுக்கள், மகான்கள், அவதாரங்கள் உட்பட) கோயில்களையோ அரசாங்க அலுவ-லகத்தில் அல்லது அரசுக்குச் சொந்த-மான இடத்தில் வைக்கக்கூடாது என்று தமிழக அரசு 7553/66- 2 - நாள் 29 ஏப்ரல் 1968 இல் ஓர் ஆணையைப் பிறப்பித்துள்ளது.

அந்த ஆணை முதலில் கடைப் பிடிக்கப்பட வேண்டுமானால் நீதித் துறையும், காவல்துறையும் தான் முதலில் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக யார் இந்த ஆணையை நடை-முறைப்படுத்த வேண்டுமோ அவர்களே அரசு ஆணையை அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில காவல் நிலையங்களைத் தவிர மற்ற காவல் நிலையங்களில் தவறாமல் கோயில் கட்டப்பட்டுள்ளன. கட்டப்-பட்டுள்ள கோயில்களில் தினம் தினம் பூஜை புனஸ்காரம் என்று நடந்து-கொண்டே இருக்கிறது. காவல் நிலை-யத்திற்குள் கோயிலா? கோயிலுக்குள் காவல் நிலையமா? என்று பார்த்தால் கோயிலுக்குள்தான் காவல் நிலையமே உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. மொத்தத்தில் பஜனை மடமாகவே காட்சியளிக்கிறது.


அரூரில் 25 சென்ட் இடத்தில் முத்து மாரியம்மன் கோயில்

அரூரை எடுத்துக் கொண்டால் நகர காவல் நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 25 சென்ட் (பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளது) நிலத்தில் முத்துமாரியம்மன் கோயில் ஒன்று கட்டி உள்ளார்கள். இந்தக் கோயிலில் ச.குமார் என்னும் இளைஞர் அர்ச்-சகராக உள்ளார். இக்கோயில் பெண்-களுக்காகவே கட்டப்பட்டுள்ளதுதாம். இந்த இடம் முழுக்க முழுக்க காவல் நிலையத்திற்குச் சொந்தமான இடம் என்பதால் ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் ராமன் என்பவர்தான் தர்ம-கர்த்தாவாம். அவரும், அர்ச்சகரும் சேர்ந்துதான் கோயிலின் வருமானத்-தைப் பார்க்கிறார்களாம். இத்துடன் இக்கோயிலுக்கு வந்த 12 பவுன் தங்க நகைகள் காவல் நிலையத்தில் கொடுத்து வைக்கப்பட்டுள்ளதாம்.

அதை அடுத்து அரூர் டி.எஸ்.பி. அலுவலகத்தின் அருகில் ஓம்சக்தி என்னும் கோயில் உள்ளது. அதன் அருகில் புற்றுக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலை லட்சுமி என்பவர் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த இரண்டு கோயில்களும் பங்காரு அடிகளார் கிளைகளாம். இந்தப் பகுதி-யில் உள்ளவர்கள் இங்கு வந்துதான் இருமுடி கட்டுகிறார்கள் என்பதுடன் காவல்துறை அதிகாரிகளே இதற்குத் துணை நிற்கிறார்கள். அவர்களுக்கு சிறப்புப் பூஜை செய்கிறேன் என்கிறார் லட்சுமி. இது டி.எஸ்.பி. அலுவலகத்-திற்கு ஒதுக்கப்பட்ட கடவுள்.

டி.எஸ்.பி அலுவலகத்தின் பக்கத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. (இவர்கள் மட்டும் தன் பங்-கிற்கு கோயில் இல்லாமல் இருப்-பார்களா என்ன?) மகளிர் காவல் நிலையத்திற்கு வேப்பமரம் அருகில் வேல் ஒன்று நட்டு வேப்ப மரத்திற்கு புடவை கட்டியிருக்கும் கோயில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உரியது. காவல் நிலையத்திலிருந்துதான் ஓம் சக்தி கோவிலுக்கு இலவசமாக மின்சாரம் கொடுத்து உதவி இருக்-கிறார்கள். இந்த மின்சாரத்தில்தான், மின் விளக்குகள், ஒலி பெருக்கிகள் என அரசு பணத்தில் -ஓம்சக்தி கோயிலின் வியாபாரம் ஓகோவென ஓடுகிறது. மகளிர் காவலருக்கு தினம் தினம் பொங்கலும், சுண்டலும் தவறாமல் கொடுக்கப்படுகிறதாம்! வேப்ப-மரத்திற்குப் புடவை கட்டியிருக்கும் கோயில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உரியது.

கடத்தூர் காவல் நிலையத்தில் 8 கை அம்மன்

அடுத்து கடத்தூர் காவல் நிலைய குடியிருப்புப் பகுதியில் சக்தி கோயில், வெளி-யில் 8கைகளுடன் உள்ள அம்மன் சிலை. அதற்கு தனது பெயரையே சக்தி என்று வைத்துள்ள பூசாரி, இதுவும் காவல் துறை குடியிருப்புப் பகுதியில் சுமார் பத்து சென்ட் நிலம். (பல லட்ச ரூபாய் மதிப்புடையது). கடத்தூர் காவல் நிலைய குடியிருப்புக்கு ஒதுக்-கப்பட்ட கடவுள்.

அடுத்து பாலக்கோடு காவல் நிலை-யத்தை கையில் வேலுடன் காவல் காக்கும் முருகன் சிலை, முருகனுக்கு காவல் நிலையத்தால் தினம் தினம் பூஜை.

அடுத்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன் சிறிய வேப்ப-மரக்கன்றுக்குக் கீழ் சிலை வைத்து பூஜை ஆரம்பித்துள்ளார்கள். இது தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட கடவுள்.

ஆக தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் இன்று பஜனை மடங்களாக மாறி உள்ளன.

இப்படி மதசார்பற்ற நாட்டில், மதசார்பற்ற அரசின் காவல் நிலை-யங்களிலேயே ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு கடவுள் கோயில் என்று அரசாணையை அலட்சியப்-படுத்தி கோயில் கட்டி இருக்கிறார்கள். இந்து மதக்கடவுளர்களின் கோயில்-களும், சிலைகளும்தான் உள்ளதே தவிர பிற மதக் கோயில்கள் இல்லை.

ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அரசு அலுவலகத்தில் கோயில் கட்டப்படுவதைப் போல, பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் அரசின் அலுவலகத்-தில் மசூதியோ அல்லது சர்ச்சோ கட்ட முன் வருவார்களேயானால் அதற்கு அர சும், அதிகாரிகளும் இடமளிப்-பார்களா?

அரசு அலுவலகம் அரசு இடம் என்றால் போதும் எவன் வந்தாலும் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்ற கேவலமான நிலை உள்ளது தமிழகத்-தில். காவல் நிலையத்தை நம்ப-வேண்-டாம். கடவுளை நம்புங்கள் என்ற அர்த் தத்தில் காவல் நிலையங்களில் சிலைகளை யும், கோயிலையும் கட்டி வைத்துள்ளனர்.

தந்தை பெரியார் அவர்கள் சொன்-னதுபோல மனிதனுக்கு எங்கு அறிவு தட்டையாகிறதோ, தன் திறமைமீது நம்பிக்கை குறைகிறதோ அப்பொழு-தெல்லாம் கடவுள்மீது நம்பிக்கை வந்துவிடுகிறது. அதுபோல தன்மீது உள்ள நம்பிக்கையை காவல்துறையினர் இழந்துள்ளனர்.

காவல் நிலையங்களில் உள்ள துப்பாக்கிகளை பத்திரமாக வைக்கா-விட்டாலும்கூட (அதியமான்கோட்டை பென்னாகரம் காவல் நிலையங்களில் துப் பாக்கிகள் கொள்ளை கொடுக்கப்-பட்டுள்ளது). சாமி சிலைகளை மட்டும் பாதுகாப்பாக வைக்கிறார்கள். வீரத்-தையும், விவேகத்தையும் செயல்படுத்தும் காவல்துறையினர் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கோயிலை கட்டிக்-கொண்டு பஜனைமடமாக மாற்றி அதில் நேரத்தை செலவழிப்பதால் குற்றங்கள் பெருகுகிறதோ என மக்கள் சிந்திக்கத் தொடங்கி உள்ளனர்.


அரசு ஆணைகள் எங்கே?

அரசு அலுவலகங்களில், அரசு பொது இடங்களில் கோயில் கட்டப்-பட்டிருந்தாலும், இந்தக் கட்டடங்களை இப்போதும் (கோயில் சிலைகள், படங்கள்) இருக்குமாயின் அவற்றை படிப் -படியாகவும் எவ்வித ஆடம்பரமும் இல் லாமல், பிறர் கவனத்தை ஈர்க்காத வகை யிலும் அவற்றை அகற்ற வேண்-டும் என அரசு ஆணை பிறப்பித்-துள்ளது.

1 . Government Lr. No. 3379/L & OB/91-3 Public (L&OB) Department Date: 16.9.1993
2 . From the Government of India Ministry of Home Affairs Lr No/5/23/94 CHC dt 4.5.1994.

எனவே இவ்வரசாணையைப் பின்பற்றி காவல் நிலையங்களில் உள்ள கோயில்களை காவல்துறை அதிகாரிகள் அகற்ற முன் வரவேண்டும்.

இல்லை எனில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி அரசு அலுவலகங்களில் அதன் இடத்திலோ ஒரு கோயில் கட்டப்பட்டாலும் அந்த இடத்திற்குத் தொடர்புடைய அதிகாரி தண்டிக்-கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள் ளது. அரசின் ஆணையை அதிகாரிகள் மதிப் பார்களா? (அ) சட்டத்தின் கடமையை அரசு செய்யுமா?

- அ. தமிழ்ச்செல்வன்,

விடுதலை செய்தியாளர்,

மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்,

தருமபுரி
http://www.viduthalai.periyar.org.in/20101127/snews11.html

Friday, November 26, 2010

சு, சோ சாமிகளும்- குமூர்த்திகளும்!

மத்திய அமைச்சராக இருந்த ஆ. இராசா அவர்கள் பதவி விலகியதுபற்றி எழுத வந்த திருவாளர் சோ ராமசாமி, இராசா பதவி விலகலோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிடவில்லையாம்; இதன் பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று எழுதுகிறார் (துக்ளக், 1.12.2010).

ஸ்பெக்ட்ரம் என்ற பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து விடக்கூடாது. இதனை நீட்டிக் கொண்டே போகவேண்டும்; தமிழ்நாடு தேர்தல்வரை வளர்த்துக் கொண்டே போகவேண்டும்.

செத்துப் போனதற்குப் பிறகுகூட திதி, திவசம் என்று சுரண்டும் கூட்டத்தைச் சேர்ந்தவர் அல்லவா! அந்தப் புத்தியில் அவர் எழுதியிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை வரும்போது அது ஆ.இராசா காலத்தில் மட்டும் தொடங்கப்பட்டதில்லை. பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரிவரை இந்தத் துறையின் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்களே - அவர்கள் காலத்தில் என்ன நடந்தது என்பதையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமே - அதனால், அதுபற்றியெல்லாம் அவாள் மூச்சுவிடமாட்டார்களே!

இதே தலையங்கப் பகுதி பக்கத்தில் எச்சரிக்கை-1 எனும் தலைப்பில் பெட்டிச் செய்தி ஒன்றும் துக்ளக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

கருநாடகத்தில் எடியூரப்பா தன் மகன்களுக்கு அரசு நிலங்களைத் தருவதில் சலுகை காட்டியிருக் கிறார் - என்ற புகாருக்கு, அவர் அளிக்கிற பதில்கள் திருப்தியாக இல்லை. அவர் பதவியில் தொடர்வது, பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல. இந்த நில முறைகேடு காரணமாக, அகில இந்திய அளவில் ஊழலை எதிர்ப்பதில் பா.ஜ.க. காட்டுகிற முனைப்புகூட பாதிக்கப்படும். கருநாடகாவில் பா.ஜ.க. தலைமை தலையிடவேண்டும் என்பதுதான் துக்ளக் வெளியிட்டுள்ள பெட்டிச் செய்தியாகும்.

பா.ஜ.க.வுக்குச் சொல்லும்போது வெறும் புத்திமதி; தி.மு.க.வுக்குச் சொல்லும்பொழுது மட்டும் குற்றச்சாற்று.

இதற்குப் பெயர்தான் பார்ப்பனர்களுக்கே உரித்தான மனுதர்மப் புத்தி என்பது. இந்தத் தலையங்கத்தில் மனுதர்மத்திலிருந்து சுலோகங்களையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

எத்தனையாவது அத்தியாயம்? எத்தனையாவது சுலோகம்? என்றெல்லாம் கிடையாது. எப்பொழுதுமே அப்படியெல்லாம் ஆதாரப்பூர்வமாக வெளியிடவேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதில்லை. ஏதோ குத்து மதிப்பில் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா!

அரசன் செயலற்று இருக்கும்போது, அவன் இருள் (கலியுகம்) விழிப்புள்ளவனாக இருக்கும்போது அவன் தெளிவு (துவாபரயுகம்) ஒரு நற்செயலில் முனைகிறபோது அவன் மேன்மை (த்ரேதாயுகம்) அறச்செயல் புரிவதற்கு முனைந்து இயங்குகிறபோது அவன் சிறப்பு (பொற் காலமாகிய க்ருதயுகம்) என்று மனுஸ்மிருதி கூறுகிறது என்று கூறுகிறார்.

இந்த யுகங்கள் எல்லாம் இருக்கின்றனவா? இவற்றிற்கு ஆதாரங்கள் என்ன என்று கேட்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த யுகங்கள் எல்லாம் ஒரு யுகம் போய் அடுத்த யுகம் வரவேண்டும். சோ சொல்லுவதைப் பார்த்தால் கலியுகம் பூராவும் ஆட்சி செய்யும் அரசன் இருள்தானா? அதில் மேன்மையானவன் இருக்கவே முடியாதா? க்ருதயுகம் தான் பொற்காலம் - அதுதான் சிறப்பு என்றால், இந்த யுகத்தில் ஆளும் அரசன் எவனும் தவறே செய்யாதவனா?

அரசன் நல்லவனாக இருப்பதற்கும், கெட்டவனாக இருப்பதற்கும் அவன் பொறுப்பல்ல - அந்த யுகம்தான் பொறுப்பா?

இப்படி எழுதும் பைத்தியங்கள்தான் அவாள் பாஷையில் அறிவு ஜீவிகள்! வாய்விட்டுச் சிரிக்கக் கூடியவைகளா இவை?

இந்தத் தலையங்கத்தில் இடுக்கோடு இடுக்காக தங்களின் அபிமானி - இனமானியான ஜெயலலிதாவை ஒரு தூக்குத் தூக்கி விடுகிறார்.

ஜெயலலிதா, மத்திய அரசுக்கு அளிக்க முன்வந்த ஆதரவுக்குப் பிறகு இந்தக் கூட்டணி தர்ம புருடா எடுபடாது என்பது எல்லோருக்குமே தெரியும் என்று எழுதுகிறார்.

ஜெயலலிதாவைப்பற்றி தெரிந்தவர்களுக்கு, அவரின் வாக்கு நாணயம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியுமே! வெகுதூரம் போய் விசாரிக்கவேண்டாம். சோவின் அபிமான புருஷரான அடல்பிஹாரி வாஜ்பேயியைக் கேட்டாலே போதுமே. தான் அமைதியிழந்து இருந்த காலம் ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்திருந்த காலம்தான் என்று பேட்டி கொடுத்தாரே - வாஜ்பேயி!

ஜெயலலிதா மூக்கறுபட்டுப் போனார் என்பதைத் தலைகீழாகப் புரட்டுகிறார்.

ஏதோ ஜெயலலிதா பேட்டி கொடுத்துதான் இராசா வெளியேற்றப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை உண்டாக்கி அரசியலில் ஜெயலலிதாவுக்கு மரியாதையை ஏற்படுத்த முயலும் தந்திரம்தான் இதில் வெளிப்படுகிறது.

சு.சாமிகளும், சோ சாமிகளும், கு மூர்த்திகளும் எந்த உணர்வோடு அலைகிறார்கள் என்பதைத் தமிழ்மண் அறியும்.

காரணம், இது தந்தை பெரியார் பிறந்த இனமானம் செழித்த மண் - எச்சரிக்கை!
http://www.viduthalai.periyar.org.in/20101126/news03.html

தியாகராயர் அரங்கில் வேட்டுச் சத்தம்! - மின்சாரம்

24.11.2010 அன்று சர்.பிடி. தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற ஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன்? ஊடகத்துறை அறிஞர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பார்வையாளர்கள்


நாட்டைப் பீடித்த 5 நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று தந்தை பெரியார் சொன்னாலும் சொன்னார் - அதனை நாள்தோறும் மக்கள் அனுபவித்துத் தீர வேண்டிய கட்டத்துக்குள் தள்ளப்பட்டு விட்டனர்.
யாரை வேண்டுமானாலும் இந்தப் பத்திரிகைப் பிர்மாக்கள் விமர்சிக்கலாம் - களிமண்ணைக் கடவுள் என்று கூறலாம்; கடலை வாய்க்கால் என்று வருணிக்கலாம். கூழாங்கல்லைக் கோமேதகம் என்று கூசாமல் சொல்லலாம் - கோமேதகத்தின் மீது எச்சில் துப்பலாம்.
கொலை வழக்கில் சிக்கிய ஆசாமியை ஜெகத்குரு என்று எழுதுவதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை. ஆனால், எந்தவிதத் திலும், எந்த ஆவணத்திலும் ஆ.இராசா குற்றம் புரிந்தவர் என்று சொல்லப்படாத நிலையில், ஸ்பெக்ட்ரம் ராஜா என்று முத்திரை குத்தி, பதவியைப் பறித்து மூலையில் ஒதுக்குவதற்கு முண்டியத்துக் கொண்டு நிற்பதைப் பார்க்க முடிகிறது.

இப்படி யாரையும் எடுத்தேன் - கவிழ்த் தேன் என்று விமர்சிக்கும் பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள் எல்லாம் உத்தமப் புத்திர சிகாமணிகள்தானா? ஊழல் என்பதை ஊறுகாய் அளவுக்குக் கூடத் தொட்டுக் கொள்ளாதவர்கள்தானா?

ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களா? முதலாளிகளின் கையு றையாக இருக்க மறுப்பவர்களா?

இந்தக் கேள்விகள் இப்பொழுது மக்கள் மத்தியில் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்து விட்டன.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச் சராகவிருந்த ஆ.இராசா விடயத்தில் ஊட கங்கள் நடந்துகொண்டுவரும் முறைகளைப் பார்த்ததற்குப் பிறகு - சாமான்ய மக்கள்கூட ஊடகங்கள் மீது வெறுப்பு நெருப்புத் துண்டு களைக் கக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

இந்தப் பிரச்சினையில் ஊடகங்கள் நடந்து கொள்ளும் கீழிறக்கத்தைக் கண்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கூறும் அளவுக்கு ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் குப்பைத் தொட்டிகளாகி விட்டன.

ஊடகத்துறையை விமர்சிக்க முடியுமா? அப்படி விமர்சித்தால் அவர்களின் சாபத்துக் கும், சக்ராயுதத்துக்கும் பலியாக நேரிடுமே என்று எண்ணியிருந்த அச்ச மாயையை தமிழ் ஊடகப் பேரவைக் கிழித்து எறிந்துவிட்டது.

பத்திரிகைத் துறை என்பதும் ஒரு தொழில்தான் - அதிலும் ஏராளமான உருட்டல் - புரட்டல்கள், ஊழல் குப்பைகள் - உள் குத்துகள், முதுகுக் குத்துகள், கையுறைக் கையூட்டுகள் அச்சுறுத்திப் பணம் பறிப்புகள் (பிளாக் மெயில்) முதலாளிகளின் முகவர்கள் (ஏஜெண்ட்) மதத் தலைவர்களின் பினாமிகள் என்று ஏராளம் உண்டு.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகார வர்க்கத்துடன் உறவுகொண்டு, சிங்களவர்களின் ஏஜெண்டுகளாகப் பணி யாற்றி, அவர்கள் கொடுக்கும் சன்மான எச்சில் மூலம் மாட மாளிகைக் கட்டி வாழ்ந்து வருப வர்கள் யார்?

தமிழர்களைக் காட்டிக் கொடுத்து அவர்களின் ரத்தத்தையே சந்தனமாகக் குழைத்துத் தடவிக் கொண்டிருக்கும் பத்திரி கையாளர்கள்பற்றி அறியமாட்டோமா?

இதுவரை மற்றவர்களைப் பற்றி விமர் சிக்கும், சேறு வாரி இறைக்கும் இந்தப் பத் திரிகை உலகம் - விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல - விமர்சிக்கலாம் - நன்றாகவே விமர்சிக்கலாம் - நார் நாராகவும் கிழிக்கலாம் என்ற ஒரு தைரியத்தை தமிழ் ஊடகப் பேரவை ஊட்டிவிட்டது! (வாழ்க தமிழ் ஊடகப் பேரவை!).

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் தமிழ் ஊடகப் பேரவையின் சார்பில் ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. (24.11.2010 மாலை). ஆ. இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் தமிழ் ஊடகப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்திற்குத் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரும், விடுதலை ஆசிரியரு மான (48 ஆண்டுகாலம் விடுதலையின் ஆசிரியர்) மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

இப்படி ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விளம்பரம் வந்தது முதல் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பும், எதிர்பார்ப்பும் இருந்தன. குற்றமுள்ள ஊடகக்காரர்கள் மத்தியில் ஒரு சொர சொரப்பும், குருதிக் கொதிப்பும் இருந்ததாகக் கேள்வி.

மாலை 6.30 மணிக்குக் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாலை 5 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது. இந்த மன்றத்தில் இதுவரையிலும் இந்த அளவு மக்கள் திரள் நிரம்பி வழிந்ததில்லை என்பது பத்திரிகையாளர்களின் கணிப்புக்கூட.

ஒரு பரபரப்போடு பல்துறைப் பெருமக்கள் கூடியிருந்தனர். தமிழ் ஊடகப் பேரவையின் நோக்கம் குறித்தும் கடந்த ஏழ ஆண்டுகாலத் தில் அதன் செயல்பாடுகள் குறித்தும், அதன் நிறுவனரான வளர்தொழில் ஆசிரியர் க. ஜெயகிருட்டிணன் தம் வரவேற்புரையில் எடுத்துக் கூறினார்.

மாதந்தோறும் இவ்வமைப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது - பல்வேறு பொதுப் பிரச் சினைகள் குறித்து விவாதங்கள், சிறப்புரை கள், காட்சி உரைகள் நிகழ்த்தப்பட்டு வந்திருக் கின்றன.

பத்திரிகையாளர்கள் மட்டத்தில் இருந்த இந்தப் பேரவையின் செயல்பாடு மக்கள் மத்தியில் இப்பொழுதுதான் முதன்முதலில் வெளிவந்திருக்கிறது - இனியும் வரும் என்று வரவேற்புரையில் தோழர் செயகிருட்டிணன் குறிப்பிட்டார்.

ரமேஷ் பிரபா

சன், கலைஞர் தொலைக்காட்சிகள்மூலம் நன்கு அறியப்பட்ட தோழர் ரமேஷ் பிரபா, தொலைக்காட்சியில் அவர் மேற்கொண்டு வரும் இயல்பான யதார்த்தமான மொழியில் சில கருத்துகளையும், தகவல்களையும் பதிவு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போகிறீர்களா? அதன் பாரதூர விளைவுகள் பற்றி யோசித்தீர்களா? என்று தம் நண்பர்கள் எழுப்பிய வினாக்களுக்கு எடுத்த எடுப்பி லேயே விடை பகன்றார்.

இதில் கலந்துகொள்வதால் என்னாகும் என்று நினைப்பது - யோசிப்பது - தயங்குவது என்பது வியாபாரக் கணக்காகும். இதில் கலந்துகொள்ளவேண்டும், நம் கடமையைச் செய்யவேண்டும் என்று நான் முடிவு செய்தது - நியாய உணர்வு - இன உணர்வு ஆகும் என்று அவர் சொன்னபோது மண்டபமே அதிரும் அளவுக்கு அப்படியொரு கையொலி!

(எல்லாவற்றையும் ரூபாய் அணா கண்ணோட்டத்தில் பார்த்துப் பாழாய்ப் போகும் இனவுணர்வற்ற தமிழர்கள் - ரமேஷ் பிரபாவின் இந்தப் பொறிதட்டும் உணர்வுக்குப் பிறகாவது, தங்கள் தங்கள் உடம்பைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கொண்டு ரோஷம் பெறுவார்களாக!)

ஆ.இராசாமீது சொல்லப்படும் குற்றச்சாற்று ஒரு யூகத்தின் அடிப்படையில் கற்பனைக் குதிரையின்மீது சவாரி செய்யும் அற்பக் குற்றச்சாற்று என்பதற்கு ரமேஷ் பிரபா மாந்தோப்புக் கிளி திரைப்படத்திலிருந்து சுருளிராஜனின் விகடத்தை எடுத்துக் காட்டினார்.

பள்ளிக்குச் செல்லும் தன் மகனுக்குப் பேருந்து செலவுக்காக 5 ரூபாய் கொடுத்தார் அவனின் அப்பா.

மாலையில் பள்ளியிலிருந்து வந்த மகன் அப்பாவைப் பார்த்து அப்பா நீ கொடுத்த 5 ரூபாயை மிச்சப்படுத்தி விட்டேன் என்றான். என்னடா கதை விவரமாகச் சொல்லு என்றார் அப்பா.

நான் பேருந்தில் பயணம் செய்யாமல் பேருந்தின் பின்னாலேயே ஓடி பள்ளிக்குப் போய்விட்டேன் - 5 ரூபாய் மிச்சம் என்றான் மகன்.

அட மடையனே, பேருந்தின் பின்னால் ஓடாமல் ஆட்டோவின் பின்னால் ஓடியிருந்தால் 50 ரூபாய் மிச்சப்பட்டு இருக்குமே! (பலத்த சிரிப்பு) என்று சுருளிராஜன் சொல்லுவார். அந்தக் கதைதான் 2ஜி ஸ்பெக்ட்ரமில் இராசா ஊழல் செய்தார் என்பது என்று எடுத்துக் காட்டியது சுவையானது என்பதைவிட சுருக்கென்று புரிய வைக்கக் கூடியதாகும்.

மின்னணு ஊடகக்காரர்கள் கடைப்பிடிக்கும் சில வழிமுறைகளை - அத்துறையில் அவருக்கு அளப்பரிய அனுபவத்தின் காரணமாக எடுத்துரைத்தவர்.

தமிழ்த் தொலைக் காட்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில செய்தியைத் திடீரென்று போடும்போது முக்கிய செய்திகள் என்று போடுவோம். ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் என்று போடுவார்கள். அதன் உண்மையான பொருள் பெரும்பாலும் உண்மைகளைத் தகர்ப்பதாகவே இருக்கும்.

ஆங்கில தொலைக்காட்சிகளில் பேட்டி காண்போர் கடைபிடிக்கும் ஒரு தந்திரம் - அதனையும் அம்பலப் படுத்தினார்.

யாரிடம் பேட்டி காண்கிறார்களோ, அவர்களைப் பெரும்பாலும் பேசவிடுவதில்லை. பாதி வார்த்தையைப் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கே இடையில் புகுந்து, மடக்குவதுபோல வேறு விஷயத்துக்குச் சென்று திணற வைப்பதுதான் அவர்களின் நோக்கம். கூடுமான வரை அடுத்தவர்களைப் பேச வைப்பதில்லை. மாறாக, இவர்களின் கேள்விகள்தான் ஆதிக்கம் செலுத்தும்.

முதலில் இதனை முறியடிக்க வேண்டும் - கேள்வி கேட்பவர்களைத் திருப்பிக் கேள்வி கேட்டுத் திணற அடிக்கவேண்டும். அந்த நிலை ஏற்பட்டால்தான் அவர்கள் அடங்குவார்கள் (நுனி நாக்கு ஆங்கிலம், மூச்சு முட்டப் பேசும் திறன் உள்ளவர்கள்தான் அறிவாளிகள் என்று நினைக்கும் அப்பாவித் தனத்திற்கும், மூடத்தனத்துக்கும் முடிவு கட்டவேண்டும்).

எல்லோரிடமும் இதே பாணியில் நடந்துகொள் கிறார்களா? தங்களுக்கு வேண்டியவர்கள் அல்லது தங்களுக்குச் சாதகமானவற்றை வரவழைக்கவேண்டும் என்று நினைத்து வேறு சிலரிடம் பேட்டி காணும்போது, எவ்வளவுப் பவ்யமாக அமர்ந்து, அவர்கள் கூறுவதைக் கடைசிவரைக் கேட்டு, அடுத்த கேள்விக்குப் போகிறார்கள். இது என்ன பத்திரிகை தர்மம்?

இன்னொரு தகவல் தோழர் ரமேஷ் பிரபா கூறியது கோடிட்டுக்கொண்டு படிக்கவேண்டியதாகும்.

ஒருவரைப்பற்றி செய்தி சொல்லும்போது, பக்கத்தில் அதற்குச் சம்பந்தமேயில்லாத வகையில் சம்பந்தப்பட்டவர் சாப்பிடுவது, நடப்பது, மூக்கு நோண்டுவது வரை படங்களாக (விஸுவல்) காட்டுவது நாகரிகமும் அல்ல - நேர்மையானதும் அல்ல - விஷமத்தனமானது.

இன்னொன்று, அமைச்சர் ஆ.இராசா டில்லியிலிருந்து ஊருக்கு வருவதை எப்படி செய்தியாக்குகிறார்கள்? ராஜா எஸ்கேப்!

ராஜா எஸ்கேப் ஆகி வெளிநாடு சென்றுவிட்டாரா? தலைமறைவாகி விட்டாரா? ஏனிந்த கேவலமான பிரச்சாரம்? ஒருவரை அசிங்கப்படுத்தவேண்டும் என்று அந்த வட்டாரம் நினைத்துவிட்டால், எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கீழ்த்தரப் புத்திதானே இதில் நெளிகிறது?

(கொலை வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியார்பற்றி செய்தி ஒளிபரப்பியபோது அவர் நடப்பது, சாப்பிடுவது, கைப்பேசியில் பேசுவது (யாருடன் பேசினார் என்பதெல்லாம் ஊருக்கே தெரியும்!) என்பது போன்ற காட்சிகளைக் காட்டியதுண்டா?)

ஓர் அரிய புள்ளி விவரம்:

ரமேஷ் பிரபா சொன்ன ஒரு புள்ளி விவரம் ஒரு புதிய உலகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

பல விஷயங்களை நாம் தெரிந்துகொண்டு இருப்ப தாகப் பாவலா செய்து கொண்டிருக்கிறோம் - உண்மை வேறு விதமானது என்பதற்கு இந்தப் புள்ளிவிவரம் அத்தாட்சி.

ஆங்கிலத் தொலைக்காட்சியில் வந்துவிட்டால் போதும், அதற்குமேல் என்ன வேண்டியிருக்கிறது? என்ற மனப்பான்மை இருப்பதுண்டு.

உண்மையிலேயே இந்த ஆங்கிலத் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் யார் - எத்தனைப் பேர் என்கிற புள்ளி விவரத்தை (கூசுஞ) அவிழ்த்துக் கொட்டினார்.

உதாரணத்துக்குச் சில:

சி.என்.என். அய்.பி.என். மும்பையில் பார்ப்போர் 0.24

கொல்கத்தாவில் 0.06

டில்லி 0.21

சென்னை 0.03

பெங்களூரு 0.11

அய்தராபாத் 0.17

சராசரி விகிதம் 0.16.

என்.டி.டி.வி.

மும்பை 0.16

கொல்கத்தா 0.11

டில்லி 0.13

சென்னை 0.14

பெங்களூரு 0.07

அய்தராபாத் 0.06

சராசரி சதவிகிதம் 0.12

டைம்ஸ் நவ்

மும்பை 0.08

கொல்கத்தா 0.08

டில்லி 0.09

சென்னை 0.33

பெங்களூரு 0.19

அய்தராபாத் 0.12

சராசரி 0.13

இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துவது என்ன?

ஒரு சதவிகிதம் கூட இந்த ஆங்கிலத் தொலைக் காட்சிகளைப் பார்ப்பவர்கள் கிடையாது.

ஆனால், இவர்கள்தான் மக்கள் மத்தியிலே கருத்துத் தாக்கத்தை உருவாக்கக் கூடியவர்களாக இருக் கிறார்கள். தங்கள் கருத்தை மக்களிடம் திணிக்கிறார்கள்.

இவற்றை முறியடிக்கும் வகையில் ஓர் ஊடகம் நம் கைகளில் இருந்தால் ஒழிய, இந்த நச்சுத்தன்மையை நம்மால் முறியடிப்பது மிகவும் கடினமாகும்.

இந்த ஆங்கிலத் தொலைக்காட்சிகள் வெறும் செய்தியை மட்டும் வெளியிடுபவை. வேறு நிகழ்ச்சிகள் கிடையாது. விளம்பர வருமானங்களும் குறைவு. பெரும் பாலும் நட்டத்தில்தான் இயங்குபவை. ஆனாலும், இவர்களால் இவற்றை நடத்த முடிகிறது என்றால், அது எப்படி? இவர்களின் பின்ப(பு)லத்தில் இருப்பவர்கள் யார்? முதலாளிகள்! முதலாளிகள்! முதலாளித் திமிங் கலங்கள்!!!

அப்படியென்றால், இதன் பொருள் இவர்கள்தம் முதலாளிகளின் குரலை (ழளை ஆயளவநச ஏடிஉந)த்தான் ஒலிக்கிறார்கள். அதனை மக்கள் கருத்தாக மாற்ற முயலுகிறார்கள் என்பதுதானே உண்மை!

புதன் மாலை தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கூட்டம் படித்தவர்களையும் கண் திறக்கச் செய்து விட்டது - பாமர மக்கள் மத்தியிலும் உண்மைகளைக் கொண்டு செல்ல அவசியமான முயற்சிகள் தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. மக்களைச் சுற்றி ஓட்டை விழுந்த ஓசோன்கள்

ஆபத்தான ஆரிய வலைப் பின்னல்கள்! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

(தொடரும்)

தியாகராயர் அரங்கில் வேட்டுச் சத்தம்! வரிப் புலிகளே புறப்படுக!
- மின்சாரம் -
நேற்றைய தொடர்ச்சி...
ஜெகத் கஸ்பார்
சென்னை தியாகராயர் அரங்கத்தில் தமிழ் ஊடகப் பேரவையின் சார்பில் (24.11.2010) நடைபெற்ற கூட்டத் தில் தமிழ் மய்யம் நிறுவனர் ஜெகத் கஸ்பார் ஆற்றிய உரை சற்று வித்தியாசமாகவே இருந்தது. கருஞ்சட்டைத் தோழன் ஒருவன் கர்ச்சனை செய்ததுபோலவே இருந்தது!
நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்லுவார் எம் பெரியார் என்றார் ஒரு கவிஞர். ஆம், அந்த நீதிமன்றத்திலேயே நேருக்கு நேர் சென்று, சிங்கத்தை அதன் குகைக்கே சென்று சந்தித்ததுபோல பார்ப்பன நீதிபதிகளுக்கு முன்பாகவே பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலிகள் வாழும் காடு என்று கர்ச்சனை செய்தார்.
கஸ்பார் அவர்களும் நீதிமன்றத்தை விமர்சிக்கக் கூடாதா? நீதிமன்றங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்ட வையா?
ஊடகத் துறைகள் ஊழல்களுக்கு அப்பாற்பட்ட வையா? என்ற அர்த்தமிக்க வினாக்களை எழுப்பி அசத்தினார்.
கதை ஒன்றும் சொன்னார். கோழி ஒன்றை அறுத் துக் கறி சமைத்து உறவினர்களுக்கு விருந்தளிக்கப் பட்டது.
அடடே, அந்த ஒரு கோழியை அறுத்துச் சமைக் காமல் இருந்தால் வருடத்துக்கு நூறு முட்டைகள் போடுமே, அதன்மூலம் 50 குஞ்சுகள் கிடைத்திருக்குமே, அந்தக் குஞ்சுகள் வளர்ந்து கோழிகள் ஆனால் 5000 ரூபாய் வருமானம் வந்திருக்குமே. ரூ.5000 வருமானம் வந்தால், மாடுகள் வாங்கி மாட்டுப் பண்ணையே வைத்திருக்கலாமே - மாட்டுப் பண்ணை வைத்து லட்சம் லட்சமாக சம்பாதித்து மாடி வீடு கட்டி மகிழ்ச்சியாக வாழலாமே என்பவனுக்கும், 2ஜி அலைக்கற்றையை ஏலம் மூலமாக விற்றிருந்தால், இப்படியெல்லாம் இலாபம் குவிந்திருக்குமே - ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசு கஜானாவுக்கு வந்து சேருமே என்று கூறும் பேர்வழிகளுக்கும், ஊடகங்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற வினாக் கணையை எய்தார்.
ஒரு பாட்டில் குடிநீர் விலை 15 ரூபாய். உண்மையி லேயே அதனை உற்பத்தி செய்பவர்களுக்கு அடக்கம் ஒரு ரூபாய்க்குமேல் கிடையாது. ஆனால், அதுபற்றி விளம்பரம் செய்வதற்கு நாலே முக்கால் ரூபாய் செலவு செய்கிறான்.
தனியார் குவிக்கும் இந்த லாபத்தை அரசே எடுத்து நடத்தினால் ஆண்டு ஒன்றுக்கு லட்சம் கோடி ரூபாய் கிடைக்காதா?
அரசுக்கு வருமானம் என்பதைவிட எவ்வளவு மக்களுக்குப் போய்ச் சேருகிறது என்பதுதான் முக்கியம்.
டிராய் என்பதுதான் இதுபற்றிய கொள்கை முடிவினை எடுக்கிறது. 60 கோடி மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்ற திட்டமிடப்படுகிறது.
இராசா பொறுப்பேற்றபோது 30 கோடி பேர்கள் பயனாளிகளாக இருந்தனர். அது 71 கோடியாக உயர்ந் தது ஆ.இராசா காலத்தில்தானே - இதுகுறித்து யாரா வது பேசுகிறார்களா? ஊடகங்கள் எழுதுகின்றனவா?
உண்மையைச் சொல்லப்போனால், அலைக்கற்றை கூட்டுக் கொள்ளைக் கூட்டத்தை ராஜா உடைத்தெறிந் தார் - அதற்கான விலையைத்தான் இராசா கொடுத்தி ருக்கிறார் என்று கஸ்பார் பேசினார்.
எங்கள் குரலை எவராலும் அடக்க முடியாது - உங்கள் சக்தி எதுவாக இருந்தாலும் என்ற ஆளுமையோடு உரையை நிறைவு செய்துகொண்டார்.
ஏ.எஸ். பன்னீர்செல்வம்
பேனாஸ் சவுத் ஏசியா ஊடக அமைப்பைச் சேர்ந்த வரும், ஆங்கில ஊடக உலகில் கொடிகட்டிப் பறப்பவரு மான ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களின் உரை ஓர் ஆய்வுரையாக அமைந்திருந்தது.
இந்தத் தணிக்கைத் துறை அறிக்கை என்பது 2004 முதல் 2010 ஆம் ஆண்டுவரைக்கானது. ஆனால், மற்ற ஆண்டுகளையெல்லாம் விட்டு விட்டு 2008 ஆம் ஆண்டை மட்டும் தேர்ந்தெடுத்து, அதற்கான அறிக்கையை அளிக்க வேண்டும் என்ற பன்னீர்செல்வத்தின் பளிச்சென்ற கேள்வி பகுத்தறிவு அடிப்படையிலானது.
தொலைத்தொடர்புத் துறையில் முதலீடு செய்வது என்பது சமூக நலனைச் சார்ந்தது (Social Investment).
தொலைத்தொடர்பு வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் பொருளாதார நிலை வளர்ச்சி அடையும் தன்மையைக் கொண்டது.
2003 ஆம் ஆண்டுவரை நட்டக் கணக்கு 36,993 கோடி ரூபாய்.
அதைப்பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை? எந்த ஊடகங்களும் மூக்கைச் சிந்துவதில்லை.
அமைச்சர் இராசா முறைப்படி சட்ட அமைச்சருக்கு எழுதுகிறார் - பிரதமருக்குத் தெரிவிக்கிறார் - டிராய் நிறுவனத்தின் வழிகாட்டுதலும் இருக்கிறது. இந்த நிலையில் எந்த இடத்தில் இராசா தவறு செய்துவிட்டார்?
இவை வினாக்கள் மட்டுமல்ல - வெடிமருந்துகளாகும். 2ஜி மூலம் இலாபம் என்பது தொடர்ந்து வந்து கொண் டிருக்கக் கூடாது. இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் சிந்திக்கவில்லை?
அவர்களின் நிலை குழப்பமானது என்று கூறினார்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
கருஞ்சட்டைத் தமிழர் இதழின் ஆசிரியர் பேரா சிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் பல அணுகுண்டு களைக் கொளுத்திப் போட்டார்.
மத்திய அரசு பல கொள்கைகளை, முடிவுகளை எடுக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் நிபுணர் குழுக்களை வைத்துக் கொண்டுள்ளனர்.
உணவுக் கொள்கை, தேசிய தொடர்புக் கொள்கை, தொழிற் கொள்கை என்று வகுத்துள்ளார்கள். அமைச் சர்களாக தனியே கொள்கைகளை வகுத்துக் கொள்ள முடியாது.
இது தெரியாதா? இராசாவை வீழ்த்தவேண்டும் என்பதுதான் இலக்கே தவிர உண்மையைப்பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை.
ஓர் அருமையான நடைமுறை எடுத்துக்காட்டைச் சொன்னார். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு தி.மு.க. ஆட்சியில் வழங்கப்படுகிறது.
அதனால் அரசுக்கு நட்டம்தான். அதற்காக அரசு தவறு செய்துவிட்டது, ஊழல் செய்துவிட்டது என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார். (உண்மைதானே. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்தது மாபெரும் ஊழல் என்று பொதுமக்களைப் பார்த்து இந்த ஊடகக் காரர்கள் சொல்லிப் பார்க்கட்டுமே - ஒரு வாழைப் பழத்தைக் கடிக்கக்கூட ஒருவருக்கும் பல் இருக்காது).
அமைச்சர் இராசா குற்றம் செய்தார் என்று சொன் னால், அது பிரதமர்வரை செல்லுமே - செல்ல வேண்டுமே!
இராசா செய்தால் மட்டும் குற்றமா? அவர் கறுப்பராக இருப்பதால் குற்றமா?
ஒரு பத்திரிகை எழுதுகிறது - இராசா கறுப்பு அடையாளத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று. கறுப்பு அடையாளம் எங்கள் அய்யா கொடுத்துச் சென்றதடா! (பலத்த கைதட்டல்!).
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலையில் இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தெரு முனைக் கூட்டங்கள் எங்கும் நடக்கட்டும் - மக்கள் மத்தியில் உண்மைகள் போய்ச் சேரட்டும் என்று கூறி யிருக்கிறார். அதனை அப்படியே நான் வழிமொழிகி றேன் என்று சுப.வீ. அவர்கள் சொன்னபோது, கர வொலி அடங்க வெகுநேரமாயிற்று. (மக்கள் மத்தியில் இராசா பழிவாங்கப்பட்டுள்ளார் என்ற உண்மை தெரிய ஆரம்பித்துவிட்டது என்பது ஒரு நல்ல சைகையாகும்).
தமிழ் மக்கள் கிளர்ந்து எழவேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் பாய்ந்து கிளம்பட்டும்.
இராசாமீது சுமத்தப்பட்ட கறை நீங்கும்வரை நாம் ஓயப் போவதில்லை என்று கர்ச்சித்தார் சுப.வீ.
அமைச்சர் ஆ.இராசாவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவரை வீட்டுச் சிறையில் வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் சு.சாமி.
அப்படியானால், இராசாவைக் கொல்லப் போகிறவர் யார் என்று இந்த சு.சாமிக்குத் தெரிந்திருக்கிறது. அந்த ஆள் யார் என்று அவர் தெரிவிக்கவேண்டும். இல்லா விட்டால் சு.சாமியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சுப.வீ. சொன்னபொழுது, கைது செய்! கைது செய்!!. சு.சாமியைக் கைது செய் என்ற கோடை இடியென மக்கள் சமுத்திரத்திலிருந்து புறப்பட்டது.
(மாவீரன் பிரபாகரனை பறையா என்ற சொல்லைப் பயன்படுத்தி அழைத்தவர் இதே சு.சாமி.தான். எனவே, எப்பொழுதுமே சு.சாமிக்கு தனியே ஜாதிப் புத்தி உண்டு. வெட்ட வெளியில் சிலம்பம் ஆடும் இந்த அனாம தேயத்தை, அடேயப்பா இந்தப் பார்ப்பன ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் ஷமத்து இருக்கிறதே - கொஞ்சமல்ல, நஞ்சமல்ல - இந்த ஆளிடம் கவர் வாங்கிச் செய்தி போடும் ஊடகப் பெருச்சாளிகளும் உண்டு).
நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் அவர்களின் படத்திற்கு பிரதமர் உள்பட பலரும் மாலை அணிவித்துச் சென்றனர். அந்த நிகழ்ச்சிக்கு ஆ.இராசா அவர்களும் சென்றிருந்தார். பிரதமர், இராசாவின் முதுகைத் தட்டிக் கொடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து ஒரு பத்திரிகை பிரதமர் இராசா முதுகை எப்படி தட்டிக் கொடுக்கலாம் என்று எழுதுகிறது. இதற்காக தினமணி ஆசிரியர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவேண்டாமா? என்று கேட்டார் சுப.வீ.
தமிழர் தலைவரின் உரை வீச்சு
(முழு உரை நேற்றைய விடுதலையில் வெளி வந்துள்ளது).
1. இது ஏதோ இராசா என்ற தனி மனிதர் பிரச்சினை அல்ல. ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் ஒரு கட்டம்.
2. கலைஞர் தலைமையிலான சூத்திரர் ஆட்சி மீண்டும் வரக் கூடாது என்பதற்கான ஒத்திகை.
3. 2ஜி, 3ஜி என்பதெல்லாம் வெறும் புறத்தோற்றம் - உள்ளே இருப்பது மனுதர்மம்.
4. இராமாயணக் காலம் முதல் தொடர்ந்து வரும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு கட்டம் இது.
5. சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தபோது, அதனை எதிர்த்து நந்தன்களை எரித்தார்களே - அதே கூட்டம் தான் இப்பொழுது ஒரு கறுப்பு இராசாவுக்கு எதிராகக் கச்சை கட்டி எழுந்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 151 ஆவது பிரிவு என்ன கூறுகிறது? தணிக்கை அதிகாரி (CAG) அறிக் கையைத் தயாரித்து குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டும்; பிறகு நாடாளுமன்றத்தில் வைத்து விவா திக்கப்படவேண்டும்.
நாடாளுமன்றத்தில் அறிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த அறிக்கையில் இருப்பதாகக் கூறப் பட்டவை எப்படி வெளியில் கசிந்தது?
இதற்கு யார் பொறுப்பு?
இதற்கொரு விசாரணை தேவையா, இல்லையா?
7. இராசா முதுகில் பிரதமர் தட்டிக் கொடுத்தார் என்றால், அதன் பொருள் என்ன? இராசா குற்றமற்றவர் என்றுதானே பொருள்? (பலத்த கைதட்டல்).
8. அடுத்து தமிழர் தலைவர் வெளிப்படுத்திய தகவல் முக்கியமானது இந்த வார ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தி அது.
பூனைக்குட்டி வெளியே வந்தது!
ஜூனியர் விகடன் வார ஏட்டில் (28.11.2010) வெளியான செய்தி (பக்கம் 44).
....இந்த அடிப்படையில் இந்திய தபால் மற்றும் டெலிகாம் துறையின் ஆடிட்டர் இயக்குநர் ஜெனரல் ஆர்.பி. சிங்கை சந்தித்தோம்.
பொதுமக்கள், பத்திரிகைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசு சார்பற்ற அமைப்புகள் எல்லாம் எங்களிடம் வந்து, இந்த முறைகேடு தொடர்பான பல தகவல்களைச் சொன்னார்கள். இதன் அடிப்படையில்தான் எங்களது விசாரணையே நடந்தது. எங்களால் அறிக்கை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால், சி.பி.அய். போன்ற அமைப்புகளே தவறு செய்தவர்கள்மீது சட்டப்பூர்வமான நட வடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கு இந்த அறிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... என்றார்.
2ஜி விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த இவர்கள் இருவரும் இதுதொடர்பான ஆவ ணங்களைத் திரட்டுவதில் இன்னமும் மும்முரமாக வும் இறங்கி இருக்கிறார்கள்.
- சரோஜ்கண்பத், டெல்லி,
இதன்மூலம் என்ன தெரிகிறது? திட்டமிட்டு ஏற் பாடுகள் நடந்திருக்கின்றன என்று தெரியவில்லையா?
தந்தை பெரியார் ஒன்றைக் கூறுவார், பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது என்பார் - அதுதானே இது!
தணிக்கை அதிகாரி என்ன அரசியல்வாதியா? அமைச்சரா? அவர் பேட்டி கொடுக்கலாமா? மக்களிடம் மனுக்கள் வாங்கலாமா? எல்லாம் திட்டமிட்டு நடந் திருக்கின்றன என்று கருதுவதில் என்ன தவறு?
தமிழர் தலைவரின் இந்தக் கருத்து மிகவும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது.
ஒரு பெரிய ச(ா)திப் பின்னல் இதன் பின்னணியில் இருக்கிறது என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் 60 ஆயிரம் கோடி ரூபாய் கைப்புழக்கம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால், தனக்குத் தெரிந்த உண்மையை அவர் தெரிவித்தாகவேண்டும் - இல்லையேல் சட்டப்படியாக லாயர் நோட்டீஸ் வழங்கப்படவேண்டும் - வழங்கப்படும் என்று தெரிவித்தார். தமிழர் தலைவர்.
இராசா ஒரு தனி மனிதர் அல்லர். ஒரு இனத்தின் தளபதி என்று தமிழர் தலைவர்தானே சொல்ல முடியும்! அதைச் சொல்லவேண்டியவர் சொல்லவேண்டிய முறையில் சொல்லியிருக்கிறார்.
இராசா பிறக்கும்போதே மந்திரியாகப் பிறக்கவில்லை. மந்திரியாக இல்லாவிட்டாலும் மக்கள் மத்தியிலே என்றென்றும் ராஜாவாகவே ஜொலிக்கிறார் என்றபோது, மக்கள் கடல் துள்ளிக் குதித்தது.
இங்கே வந்திருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் நூறு பேருக்கு உண்மையை எடுத்துக் கூறவேண்டும் என்ற வேண்டுகோளையும் தமிழர் தலைவர் வைத்தார்.
யார் யார் கைகளில் எல்லாம் கைப்பேசிகள் உள்ள னவோ, எந்தக் காலம் வரை உள்ளதோ அந்தக் காலம் வரை ராஜாதான் தொலைத்தொடர்புத் துறை மந்திரி (பலத்த ஆரவாரம்!).
கைதட்டி வெறும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது.
தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் பார்ப்பன ஊடகங்களைப் புறக்கணிக்க உறுதி கொள்ளவேண்டும். வெறுக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுவான் என்றார் தந்தை பெரியார். அதனை நினைவுபடுத்துகிறேன்.
ஊழலில் திளைத்த அம்மையார்கள் எல்லாம் ஊழலைப் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்கள்.
தனித் தமிழர் ஆட்சியை - சூத்திரர் ஆட்சியை ஒழிப்பதே எதிரிகளின் நோக்கம். அதற்கு இல்லாத ஊழலைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளனர்.
உடலால் பலராயினும் உள்ளத்தால் நாம் தமிழர்கள் என்ற உணர்வு பெறவேண்டும். அதுதான் இராசாவுக்கு நாம் அளிக்கும் உண்மைப் பரிசு என்றார் தமிழர் தலைவர்!
சூத்திரர்களின் அரசு என்று சட்டப்பேரவையில் சூளு ரைத்தார் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள்.
அந்தச் சூத்திர ஆட்சியைக் காப்பாற்றிட, மீண்டும் அரியணையில் ஏற்றிட உறுதி கொள்வோம். உறுதி கொள்வோம் என்று தமிழர் தலைவர் சொன்னபோது மக்களின் உணர்ச்சிப் பிரவாகம் அலைமோதியது.
1971 இல் இருந்த அதே சூழல் இப்பொழுதும் ஏற்பட்டுவிட்டது.
இதுகுறித்து முதலமைச்சர் கலைஞர் கூறியது இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.
கேள்வி: தினமணி என்ற பத்திரிகை அண்மைக் காலமாகத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு எதிரான செய்திகள் - கார்ட்டூன்கள் வெளியிட்டு வருகின்றதே அது தி.மு.க.வின் தேர்தல் வெற்றியைப் பாதிக்குமா?
கலைஞர்: 1971 தேர்தலில் தினமணி காட்டிய தி.மு.க. எதிர்ப்பு. திரிபுரம் எரித்த சிவனின் நெற்றிக் கண்ணின் தீப்பொறிகள்போல் இருந்தது. ஆனால், அப்போது தி.மு.கழகம்தான் வெற்றி மாலை சூடியது. இப்பொழுதும் திராவிடர் கழகம் நம்முடன் இருக்கிறது - நமக்கு ஆதரவாக - அருந்துணையாக! அன்றுபோல் இன்றும் தினமணி நம்மை எதிர்த்தே இயக்கம் நடத்துகிறது.
அதனால் 1971 என்பது திரும்பவும் நடக்கும் என நம்பி, தினமணியாருக்கு நன்றி கூறுவோமாக.
(முரசொலி, 5.5.2006).
கலைஞரின் கணிப்புத் தப்பப் போவதில்லை.
தமிழர்களே, 1971 இல் தி.மு.க.வுக்குக் கிடைத்த அதே 183, 2011 லும் கிடைக்கக் கிளர்ந்தெழுக! கிழக்குச் சூரியன் - சாகா அந்தக் கிழவரின் கீர்த்திமிகு வரிகளை வரித்துக் கொண்டு வரிப்புலியாய்ப் புறப்படுக! புறப்படுக!!


http://www.viduthalai.periyar.org.in/20101125/news16.html
http://www.viduthalai.periyar.org.in/20101126/news27.html

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்! ஓர் அபாரமான கற்பனையே! ஊமைக்குரல்

நாவில் பிழை இருந்தால் ஒழிய தேன் கசக்காது! வேம்பு இனிக்காது!

பிறவியில் மாற்றம் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது!

அதுபோலத்தான் பார்ப்பனர்களின் தன்மையும்!

என்பது திராவிட இயக்க அறிஞர், செம்மல், தந்தை பெரியாரின் கூற்று.

ஏமாற்றி மற்றவரை ஏட்டால் அதை மறைத்து

தாம் மட்டும் வாழச் சதை நாணா ஆரியம்

என்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைப் படைப்பு!

பார்ப்பனர்களின் தன்மை குறித்து மேலே கூறப்பட்டுள்ள கணிப்புகள், எக் காலமும் பொருந்தும் பண்புவரிகளைப் போல இன்றைய காலகட்டத்தின் நிகழ்வுகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும் பொருத்தமாகவே இருக்கின்றன.

இப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் முன்புபோல இல்லை. நிறைய மாறி விட்டார்கள் என்று பேசும் பார்ப்பனர் அல்லாதவர்களின் தலையில் ஓங்கி குட்டு வைத்தது போன்ற ஒரு நிகழ்வுதான் - பொய்யாகப் புனையப்பட்ட 2-ஜி அலைக் கற்றை ஊழல் குற்றச்சாற்று!

சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு என்னும் மனிதநேயக் கொள்கைகளை உயர்த்திப்பிடித்துக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் குரல் வளையைப் பிடித்து நெரிக்கும் கொடிய வன்முறையின் மறு பெயர்தான் பார்ப்பனியம்!

இன்றைய காலகட்டத்தில் சமூக நீதியின் முகவரிகளாக இருக்கின்ற தமிழக முதல்வர் அவர்களும், தமிழர் தலைவர் அவர்களுமே இதுபோன்ற வன்முறைகளைச் சந்தித்தவர்கள்தான்!

பார்ப்பனச் சவுண்டிகளால், பாடை யிலே கட்டி தூக்கி எடுத்துச் செல்லப்பட் டது, தமிழர் தலைவரின் உருவ பொம்மை. வடநாட்டில் நடைபெற்ற மண்டல் எதிர்ப்புப் போராட்டத்திலே எரிக்கப்பட்டது கலை ஞரின் உருவ பொம்மை!

இராமாயணம் தொடங்கி இராசாவரை

இதற்கு முந்தைய காலகட்டத்தில் வேதகால அசுரர்கள் தொடங்கி, இராவ ணன், இரணியன், ஏகலைவன், வாலி, அதன்பின் நந்தனார், சித்தர்கள், அறி வின் மறுஉருவான புத்தர், வள்ளல் ராம லிங்க அடிகளார், அறிவாசான் தந்தை பெரியார், பேரறிவாளர் அண்ணல் அம் பேத்கர், மண்டலுக்காக மகுடத்தைத் துறந்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் என இன்றுவரை நீண்டு கொண்டிருக்கும் இந்த வன்முறை வரலாற்றின் இன்றைய இலக்கு (target) முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள்!

இந்திய அரசியல் எத்தனை எத்த னையோ ஊழல் வரலாறுகளை கண்டிருக் கிறது. அதிக அளவில் பணம் கைமாற் றப்பட்ட சர்வதேச ஊழல் குற்றச்சாற்றுகள், முகாந்திரம் (Prima facie) உள்ளது என கண்டறியப்பட்டு, சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், String Operation எனச் சொல்லப்படும் பொறி வைத்து குறி பார்க் கப்பட்டு அதிரடியாக கையும் களவுமாக தெகல்கா வீடியோ மூலம் பிடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரைபேர ஊழல் குற்றச்சாற்றுகள், கேள்வி கேட்பதற்குக்கூட பணம் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீதான ஊழல் குற்றச்சாற்றுகள்.

அரசியல் ரீதியாக வேண்டுமென்றே முன்னாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள்மீது சுமத்தப்பட்ட செயின்ட்கிட்ஸ் ஊழல் குற்றச்சாற்று, தொலைத்தொடர்புத் துறை கருவிகள் உபகரணங்கள் வாங்கியதில் நடைபெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீதான ஊழல் வழக்குகள்.

சி.பி.அய். என்னும் மத்திய புலனாய் வுத் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், CVAC எனப் படும் (Central Vigilance and Anti corruption) என்னும் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை பொறி(Trap) ச் வைத்து பிடித்த ஊழல் குற்றச்சாற்றுகள்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர் களின்மீது இருக்கும், ஊழல் குற்றச் சாற்று பட்டியல்கள், மருத்துவக் கல்லூரி அனுமதிக்கு கையூட்டுப் பெற்று, கத்தை கத்தையாக பணம் கைப்பற்றப்பட்ட கேதன் தேசாய் மீதான ஊழல் குற்றச் சாற்றுங்கள் என ஒரு மிகப்பெரிய பட்டி யலே உண்டு.

தலித் விரோத வலைப்பின்னல்

ஆனால், மேலே உள்ள இந்தப் பட் டியலின் எதற்குள்ளும் அடங்காத, விசித் திரமான, பொய்யான வேண்டுமென்றே புனையப்பட்ட ஒரு ஊழல் குற்றச்சாற்று தான் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குற்றச்சாற்று, ஏதோ அமைச்சர் ஆ.இராசா அவர்கள் 1.76 லட்சம் கோடி ரூபாய்களையும் தன் வீடு முழுவதும் ரகசியமாக நிரப்பி வைக்கும்பொழுதோ, அல்லது வெளிநாட்டு சுவிஸ் வங்கியில் போடும்போதோ பிடிபட்டதுபோன்ற ஒரு தோற்றத்தை அம்மையார் ஜெயலலிதா தலைமையில் இயங்கும் தலித் விரோத வலைப்பின்னல்(Anti Dalit Network) உருவாக்கி, இதற்காக நாடாளுமன்றத் தின் அன்றாட அலுவல்கள் முடக்கப் பட்டு, கோடிக்கணக்கில் மக்கள் வரிப் பணம் பாழடிக்கப்பட்டுக் கொண்டிருக் கிறது.

இந்தப் பிரச்சினையில் காங்கிரசின் மென்மையான அணுகுமுறைதான் பிரச் சினையை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத் துவதற்குக் காரணமாக அமைந்துவிட் டது என்பதை மறுப்பதற்கில்லை! இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அய்யா கி. வீரமணி அவர்கள் அண்மையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில், விரட்ட விரட்ட ஓடுபவர்களைக் கண்டால், விரட்டுபவர் விரட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். கொஞ்சம் நின்று திரும்பியாவது பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள்.

பார்ப்பனிய முன்வரலாறு:

இந்த நேரத்தில் சில முன் வரலாறு களையும் தாம் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். மிகப்பெரிய முற்போக்கு சிந்தனையாளர் என்று போற்றப்பட்ட ஜவகர்லால் நேரு அவர்களேகூட, இந்து சனாதனவாதிகளிடம் சரணடைந்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொண்டு வந்த இந்து மசோதா திருத்த பில் தீர்மானத்தை ஏற்க மறுத்து, தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், சமூகநீதியை நிலை நாட்ட முடியாத இந்த சட்ட அமைச்சர் பதவி எனக்குத் தேவையில்லை என முடிவெடுத்து அண் ணல் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1925 இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி தீர்மானத்தை நிறை வேற்றியே தீரவேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, எந்த தந்தை பெரி யாரால் திரு.வி.க. அவர்கள் மாநாட்டுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதே தந்தை பெரியார் கொண்டு வந்த வகுப்புரிமைத் தீர்மானத்தை, காங்கிரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி திரு.வி.க. அவர்களே தோற்கடித்த வரலாறும் உண்டு! பொய்யாகப் புனையப்பட்ட இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாற்றில், பொதுமக்கள் மத்தியில் கோடிக்கணக் கான ஊழல், கோடிக்கணக்கான ஊழல் என்று தொடர்ந்து கோயபல்ஸ் பாணி யில் பத்திரிகைகளும், ஊடகங்களும், பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன?

மக்களில் Common Mass என்று கருதப்படும் சாமான்ய மக்களுக்கு 1-ஜி, 2-ஜி, 3-ஜி அலைக்கற்றை, தொழில் நுட்பம் குறித்து அடிப்படைத் தகவல் கள்பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்துக்கு மிகவும் வாய்ப்பாக போய்விட்டது. தொழில்நுட்ப ரீதியான அந்தத் தகவல்களையும் பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்.

1-ஜி என்பதுFirst Generation என்று சொல்லப்படும் முதல் தலைமுறை தொழில்நுட்பம். மிகக் குறைந்த அளவே அலைக்கற்றை வேகம் இருந்ததால், ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செல்போன் சேவை இருந்தது.

இந்தச் சேவையை தனியார் நிறு வனங்களான மோட்டரோலா, ஆர்.பி.ஜி., பி.பி.எல்., போன்ற நிறு வனங்கள் மட்டுமே வழங்கி வந்தன. அப்பொழுது பி.எஸ்.என்.எல். என்னும் பொதுத் துறை உருவாகவில்லை. அப் பொழுது இருந்த அரசுத் துறையான தொலைத்தொடர்புத் துறை (DOT) இந்த செல் சேவையில் இறங்கவில்லை. ஒருவருக்கொருவர் பேசும் (வாய்ஸ் மெயில்) வசதி, பேஜர் சேவை வசதி (பேஜர் சர்வீஸ்) மட்டுமே 1-ஜி தொழில் நுட்பத்தில் வழங்க முடிந்தது. அப் பொழுது செல்போனின் வெளி அழைப்பு கட்டணம் ரூ.16 ஆக இருந்தது.

1-ஜி-க்கு பிறகு வந்த தொழில்நுட்பம் தான் 2-ஜி.

2-ஜி என்பது Second Generation என்று சொல்லப்படும், இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம்.

2-ஜியின் அலைக்கற்றை வரிசை 900MHZ மற்றும 1800 MHZ

(1 மெகா ஹெர்ட்ஸ் என்பது 1000 கிலோ ஹெர்ட்ஸ், 1 கிலோ ஹெர்ட்ஸ் என்பது 1000 ஹெர்ட்ஸ்)

அதிக வேகம் உடையதால் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இந்தச் சேவை கிடைக்க ஆரம்பித்தது. முதலில் தனியார் நிறுவனங்கள் மட்டும்தான் இந்தச் சேவையை வழங்கிக் கொண்டிருந்தன. பி.எஸ்.என்.எல். பொதுத்துறை 2002 ஆம் ஆண்டிலிருந்து செல்போன் சேவையில் நுழைந்தது. இந்த 2-ஜி அலைக்கற்றை தொழில் நுட்பத்தில் வாய்ஸ் கால் எனப்படும் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்தி சேவை, இண்டர் நெட் ப்ரவுசிங் எனப்படும் இணையத் தேடல் சேவை, புளூ டூத் (படங்களைப் பரிமாறிக் கொள்ளுதல்), எம்.எம்.எஸ். போன்ற மதிப்புக் கூட்டு சேவைகள் இந்த 2-ஜி தொழில் நுட்பத்தில் கிடைத்தன.

ஆரம்ப காலத்தில் இதில் அழைப்புக் கட்டணங்கள் அவுட்கோயிங் ரூ.1.80 ஆகவும், இன்கமிங் 0.90 பைசா ஆகவும், எஸ்.எம்.எஸ். கட்டணம் 0.80 பைசா ஆகவும் இருந்தன. தனியார் நிறுவனங் களான ஏர்செல், ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா இண்டிகாம், டொக்கோமோ, எம்.டி.எஸ். அய்டியா, யுனிநார், வீடியோ கான் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த சேவையை வழங்கிக் கொண்டிருக் கின்றன.

2-ஜிக்குப் பின்னர் வந்த சேவைதான் 3-ஜி.

3-ஜி என்பது Third Generation எனப்படும் மூன்றாம் தலைமுறை தொழில் நுட்பம். இதனுடைய அலைக்கற்றை வேகம் 10,782 MHZ

2-ஜியைப் போல 10 மடங்கு அலைக்கற்றை வேகமுடையதுதான் 3-ஜி. அதிக வேகம் உடையதால் ஏராளமான நவீன சேவைகள் கிடைத்தன. தந்தை பெரியார் அவர்கள் இனிவரும் உலகம் என்ற தலைப்பில் கூறிய கருத்துகளில் ஒன்றான ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசும் வசதி எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்று கூறியது உண்மை ஆனது, இந்த 3-ஜி தொழில் நுட்பத்தால்தான்.

இந்த 3-ஜி தொழில்நுட்பத்தில் வீடியோ கால் எனப்படும் முகம் பார்த்துப் பேசும் வசதி, மொபைல் டி.வி. எனப்படும் மொபைல் தொலைக்காட்சி சேவை, VOD, GOD போன்ற சேவைகள், அதிவேக இன்டர்நெட் ப்ரவுசிங், 7.2 MbpS (Mega Bits per Second) டேட்டா வேகமுடைய 3-ஜி டேட்டா கார்டுகள், போன்ற பல சேவைகள் இந்த 3-ஜி தொழில்நுட்பத்தில் வழங்கப்படுகின்றன. இந்த 3-ஜி சேவையை 3-ஜியின் நுட்பம் கட்ட மைக்கப்பட்ட இரண்டு கேமராக்கள் உடைய செல்போன் செட்களில்தான்(3G Enabled Set) பெற முடியும்.

தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியாக அமைச்சர் ஆ.இராசா அவர்கள் முயற்சியால் இந்த 3-ஜி தொழில்நுட்பம் முதன்முதலாக பொதுமக்கள் துறையாம்; பொதுத் துறையான பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. இப்பொழுதுதான் தனியார் நிறுவனங்கள் ஏலத்தில் எடுத் துள்ளன. இதுதான் 1-ஜி, 2-ஜி, 3-ஜி.யின் தொழில்நுட்ப வரலாறு!

(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101124/news05.html


2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்!ஓர் அபாரமான கற்பனையே! (2)
நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி...- ஊமைக்குரல்

அய்வருக்கும் தேவி அழியாத பத்தினிக் கதைதான்

இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர் பான பொய்யான ஊழல் குற்றச்சாற்று 2008 இல் தொடங்கி, கின்னஸ் சாதனை என்று சொல்லப்படும் அளவிற்கு திரும்பத் திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டு, ஊழல் தொகை ரூ.20,000 கோடியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடிவரை கற்பனை யாகவே உயர்த்தப்பட்டு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அய் வருக்கும் தேவியாம்; அழியாத பத்தினி யாம் என்று பொய்யான தகவல் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சொல்லப்படு வதைப்போல பொய்யாகவே உருவாக் கப்பட்டு, பொய்யாகவே வளர்க்கப்பட்டு, அந்தப் பொய்யின் அடிப்படையில் கற் பனையாகப் போடப்பட்ட ஒரு கற்பனைக் கணக்கீடுதான் இந்த ரூ.1.76 லட்சம் கோடி என்பது.
நாம் சற்று பின்னோக்கிச் சென்றால் பி.ஜே.பி. மத்தியில் ஆண்டபொழுது அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்பதற்கென்றே Disinvestment Minister திரு. அருண் ஷோரி இருந்த வரலாறும் இங்கே நினைவு கூரத்தக்கது. அதே பி.ஜே.பி. ஆண்ட பொழுது தனியார் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று தொலைத் தொடர்புத் துறையில் லைசென்ஸ் கட் டணம் ரூபாய் 85 ஆயிரம் கோடி தள் ளுபடி செய்யப்பட்டது என்பது தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாடு என்று பொருள் கொள் வதா? அப்பொழுது இதனை யாரும் இந்த அளவு எதிர்க்கவில்லை என்பது உண்மை.
இந்தப் பிரச்சினையில் அறிவார்ந்த வர்கள் மத்தியிலும், நடுநிலைச் சிந்த னையாளர்கள் மத்தியிலும் நிலவிவரும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், பொய்க் குற்றம் சுமத்தும் அந்தத் தலித் விரோத சக்திகள் கண்டிப்பாகப் பதில் அளித்தே தீரவேண்டும் என்பது காலத் தின் கட்டாயம்.

கேட்கிறார்கள்... தலைவர்கள்

மத்திய அரசாங்கத்தின் கொள்கை யான தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை அடிப்படையில் 1999 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வந்த அதே நடைமுறையில், அதாவது இதற்கு முன் இருந்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் ஆகி யோர் பின்பற்றிய அதே நடைமுறைதான், அலைக் கற்றை ஒதுக்கீட்டில் ஆ. இராசா அவர்கள் செய்திருக்கும்பொழுது, முன் தேதியிட்டு, பின் தேதியிட்டு, இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந் தால் என ஆயிரத் தெட்டு குற்றச்சாற்று களை ஏன் இதற்கு முன் இருந்த அமைச்சர்கள்மீது சுமத்தவில்லை? அப்பொழுது இந்த அறிவாளிகளின் மூளைகள் எல்லாம், அவர்களது தலையைவிட்டு வெளியேறி எங்கே யாவது சுற்றுப்பிரயாணமா செய்து கொண்டி ருந்தன?
6.2 MHz -க்கு மேல் ஒதுக்கீடு செய்யும் பொழுது 3ஜி-க்கு இணையாக கட்டணம் நிர்ணயிக்கவேண்டும் என்ற வழிகாட்டுதல் 2010 ஆம் ஆண்டில்தான் TRAI (Telecom Regulatory Authority of India) ஆல் அறிவிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு கணக்கீட்டை 2008-க்கும் பொருத்திப் பார்ப்பது ஒரு கற்பனைக் கணக்கீடு (Imaginary Calculation).
இதற்குமுன் இருந்த தொலைத் தொடர்பு அமைச்சர்களும் 6.2MHz -க்கு மேல் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 6.2MHz -லிருந்து 10MHz -வரை மாண்பு மிகு அமைச்சர் பிரமோத் மகாஜன் அவர்களும், 21MHz வரை மாண்புமிகு அமைச்சர் அருண்ஷோரி அவர்களும், 38.8ஆழண வரை மாண்புமிகு அமைச்சர் தயாநிதிமாறன் அவர்களும் ஒதுக்கீடு செய்துள்ளபொழுது இவர்கள் மூவரும் இந்தக் கணக்கீட்டில் வராதது ஏன்? அமைச்சர் ஆ.இராசா அவர்களை மட்டும் குறி வைக்கப்படுவது ஏன்?
இன்றைக்கு இந்த அளவுக்கு பிளந்து கட்டும் திறமை வாய்ந்த மத்திய தணிக் கைத் துறை மூளைகள் 2000 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை, தலையணை போட்டு மெத்தையில் உறங்கிக் கொண்டா இருந்தன? 2000 ஆம் ஆண்டில் அது சமர்ப்பித்த கடுமை யான ஆட்சேபங்களுக்கும், அறிக்கை களுக்கும் PAC என்று சொல்லப்படும் பொதுக் கணக்குத் துறை ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கேள்வி அவர்களுக்கு 10 வருடங்களாக வரவேயில்லையா? திடீரென்று இப் பொழுது மட்டும் சலங்கை கட்டி ஆட வேண்டிய அவசியம் என்ன? 10 வரு டங்களாக மெய், வாய் அனைத்தும் மூடி இருந்ததற்கு என்ன காரணம்?
ரகசியமானதோ, ரகசியம் இல்லா ததோ, ஓர் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே, வெளியில் பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு தெரிவிக் கப்பட்டதன் உள்நோக்கம் என்ன? 
http://www.viduthalai.periyar.org.in/20101125/news07.html



2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்!
ஓர் அபாரமான கற்பனையே! (3) - ஊமைக்குரல்

இதுதான் பத்திரிகை தர்மமா?

இந்திய வரலாற்றில் முன் எப் பொழுதும் இல்லாத அளவிற்கு, இந்தப் பொய்க் குற்றச்சாற்றில் பார்ப்பன பத் திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங் களும் ஈடுபாடு காட்டுவது பத்திரிகை தர்மமா? இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து தங்கள் தலித் விரோத மனப் பான்மையைக் காட்டும் பத்திரிகைகளும், ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் நடுநிலை என்ற வார்த்தையை உச் சரிக்க யோக்கியதை உள்ளவர்கள் தானா?
Mother of Scandals என்று அமைச்சர் ஆ. இராசாவை விமர்சிக்கிற யோக்கிய தையும், பொறுப்பும், தார்மீகமும் ஊழல் ராணி என மக்களால் புறக் கணிக்கப் பட்டு, தெருவில் தூக்கி வீசி எறியப்பட்டு, நீதிமன்றப் படிக்கட்டுகளை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சி அம்மை யாருக்கு உண்டா? என்பது கிண்டலாகக் கேட்கப்படும் கேள்வி!

இந்தக் கேள்விகள் அனைத்தும், தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களாலும், முத் தமிழ்க் காவலர் முதல்வர் டாக்டர் கலை ஞர் அவர்களாலும், அமைச்சர் ஆ.இராசா அவர்களாலும் தன்னிலை விளக்கமாக வும் தொடுக்கப்பட்ட கேள்விகள்! பொது மக்கள் மத்தியிலும் நிறைய கேள்விகள் பரவலாகக் கேட்கப்படுகின்றன.

யார் இந்த ஜெயலலிதா?

ஸ்பெக்ட்ரம் ஊழலை பகடைக் காயாகப் பயன்படுத்தி காங்கிரசுக்கு நான் ஆதரவு தருகிறேன் என்று சொல் லும் தார்மீக யோக்கியதை (Moral High Ground) அம்மையார் ஜெயலலிதா அவர் களுக்கு இருக்கிறதா? என்ற கேள்வி!
ஜானகி அம்மையாரை விமர்சித்த அதே பாணியில்,
ஆளுநர் சென்னாரெட்டியை விமர் சித்த அதே பாணியில்,
எம்.ஜி.ஆர். என் புகழைக் கண்டு பொறாமைப்படுகிறார், என்னை அடக்கி வைக்க நினைக்கிறார் என்று குற்றம் சுமத்திய அதே பாணியில்,
கிழடு தட்டிப்போனாது என்று பி.ஜே.பி.யை விமர்சித்த அதே பாணியில்,
கொஞ்சும்கூட நாக்கும், வாயும் கூசா மல் கணவனுக்குத் துரோகம் இழைத்த சோனியா காந்தி! பதிபக்தி இல்லாத சோனியா காந்தி! என்று குற்றம் சுமத் திய அதே வாயால் எப்படி காங்கிரசுக்கு நான் ஆதரவு தருகிறேன்! என்று சொல்லத் துணிந்தார்? என்பது மக்கள் மன்றத்தில் எழுந்துள்ள கேள்வி!
மூச்சுக்கு முந்நூறு முறை அன்னை! அன்னை! என்று அழைக்கும் தலைவியை கேவலமாக விமர்சித்த ஜெயலலிதா அம்மையார் எப்படி எங்கள் கட்சிக்கு ஆதரவு தருகிறேன் என்று சொல்லலாம்? என்று கோபமும், ஆத்திரமும் ஏன் யாருக்கும் பொங்க வில்லை?
அதேபோன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த யதார்த்த நிலை சிந்தனையாளர்கள் மத்தியிலும் ஒரு கேள்வி பிறந்துள்ளது! ஆ.இராசாவை நீக்கினால் ஆதரவு என்று சொன்னால், ஆ.இராசாவை நீக்குவது ஒன்றுதான் அ.தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையா? அல்லது அடிப்படை லட்சியமா? அதற்கு வேறு கொள்கைகளே இல்லையா?
இதுபோன்று ஏன்? எப்படி? என்று கேட்கப்பட்டுள்ள அத்துணை கேள்வி களுக்கும் ஒரே, ஒரு விடைதான்.

ஆ.இராசா... ஆதிதிராவிட இராசா என்பதுதான்!

இந்தப் பிரச்சினையில் கைகொட்டிச் சிரித்த கருங்காலிகளும் உண்டு! கைகட்டி வேடிக்கை பார்த்த கோழை களும் உண்டு! இந்தப் பிரச்சினையின் உள்ளடக்கமும், உண்மையும் தெரிந் திருந்துமே, வெளியில் சொல்லாமல், மாட்டியிருப்பது ஒரு தலித் சமூகத்துக் காரன்தானே! என்று மெத்தனமாக இருந்த மெத்தப் படித்த மேதாவிகள், அறிவு ஜீவிகள், பொருளாதார மேதை கள் என்று தங்களை சொல்லிக் கொண் டவர்களும் உண்டு!

ஒரு மிகப்பெரிய ஊதிய மாற்றத் துக்கு வித்திட்ட ஒரு மத்திய அமைச்சர் என்ற உணர்வு ஏதுமின்றி அமைச்சரைக் களங்கப்படுத்துபவர்களுடன் கைகோத்த தொலைத்தொடர்பு தொழிற்சங்கங் களும், அதனுடைய தலைவர்களும் உண்டு!

இவ்வளவு பெரிய போராட்டக் களத்திலே அமைச்சர் ஆ.இராசா தனித்து விடப்பட்டு விடுவாரோ, என்று இந்திய நாட்டின் ஒட்டுமொத்த தலித் சமூகம் கலங்கிக் கொண்டிருந்த வேளையில், இப்பிரச்சினையில் ஆரம்பம் முதல் இன்றுவரை தோன்றாத் துணை யாக, தொட்டு அணைத்துத் தூக்கி நிறுத்திய தாயாய், தந்தையாய் இருந் தவர்கள் இரண்டு தலைவர்கள் - தந்தை பெரியாரின் நீட்டிக்கப்பட்ட வரலாறுகளாய் வாழ்ந்து கொண்டி ருக்கும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும்தான்.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர், அன்புச் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள், தலித் விரோத பார்ப்பனிய ஜாதிய வளையத் தின், சதிவலைதான் இந்தப் பொய்க் குற்றச்சாற்று என முழங்கியிருக்கிறார்.

மானமிகு மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கிய புரட்சி யாளர் என்ற பட்டம் ஆ.இராசா வுக்குப் பொருத்தமான பட்டம்! தந்தை பெரியார் மொழியில், சொல்வதென்றால், புரட்சி என்றால் புரட்டிப் போடுதல்!

ஒரு காலத்தில் செல் அழைப்புக் கட்டணம், தனியார் நிறுவனங்கள் மட்டும் இருந்த காலத்தில் ரூ.16. அதற்குப் பின் இருந்த அமைச்சர்கள் காலத்திலும் அழைப்புக் கட்டணம் ஒரு ரூபாய்க்குக் கீழே இறங்கவில்லை. இப்பொழுதோ வினாடிக்கு ஒரு பைசா, அம்மா, உங்களை பார்க்க நாளை வைகையில் வருகிறேன் என்று சென்னையில் இருக்கும் மகன், மதுரை யில் இருக்கும் தன் அன்னைக்கு ஒரு விநாடியில் சொல்லும் இந்தச் செய்திக்கு கட்டணம் ஒரு பைசா மட்டுமே!
இந்தக் கட்டணம் வந்த காலகட்டம், யாருடைய காலகட்டம்?
அமைச்சர் ஆ.இராசா அவர்களின் காலகட்டம் அல்லவா!

சமூகப் புரட்சியல்லவா!

சமூகத்தின் உயர்மட்டத்திலிருந்து, அடித்தட்டு மக்கள் வரை செல்பேசி சேவையை அனுபவிப்பது ஒரு சமூகப் புரட்சி அல்லவா?
தொலைத்தொடர்புத் துறையின் தொழிற்சங்கத் தலைவர்களும், அதி காரிகள், சங்கத் தலைவர்களும் வைத்த வேண்டுகோளை ஏற்று பி.எஸ்.என்.எல். பொதுத் துறையில் 74 சதவிகித பங்கு களை தனியாருக்கு விற்கும் முடிவை நிறுத்தி வைத்து, ஊழியர் நலத்துறையாக பொதுமக்கள் நலத்துறையை பி.எஸ். என்.எல். துறையை நிலை நிறுத்தியது ஒரு புரட்சி அல்லவா!
தந்தை பெரியார் அஞ்சல் உறை மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டதும், அமைச்சர் ஆ.இராசா அவர்களின் கால கட்டத்தில்தான். கலைஞர் அவர்கள் பொருத்தமாகத்தான் பாராட்டியிருக்கிறார் ஆ.இராசாவை - புரட்சியாளர் என்று!

மாண்புமிகுவைப் பறிக்கலாம்!மானமிகுவைப் பறிக்க முடியுமா?

என்று தமிழர் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்களைத் தவிர, வேறு யாரால் இதுபோன்று கேட்க முடியும்!

இந்த ஸ்பெக்ட்ரம் பொய்க் குற்றச் சாற்றில், தலித் சமூகத்திற்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? எதிர்த்து நின்றவர்கள் யார்? என்பது தலித் சமூகத்துக்கும் தெரியும்!

அவர்கள் ஒன்றும் தெரியாத மூடர்கள் என்றோ, முட்டாள்கள் என்றோ யாராவது தப்புக்கணக்கு போடுவார்களேயானால், அவர்கள்தான் முட்டாள்கள்!

தலித் சமூகம் உறைந்துவிட்ட பனி மலை அல்ல! மாறாக, ஆறாத உள் நெருப்புடன் உறங்கும் எரிமலை!

அவர்களை எழுப்ப ஓர் அலாரம் அடிக்கும்! வெடித்துக் கிளம்பும் வெப் பத்துடன்! சரியான நேரத்துக்கு அவர்கள் விழிப்பார்கள்!

தேர்தல் என்னும் உணவுக் கூடத்தில், வெடித்து கிளம்பும் அந்த எரிமலையின் வெப்பத்தில், எரிக்க வேண்டியதை எரிப்பார்கள். சமைக்க வேண்டியதைச் சமைப்பார்கள்! படைக்க வேண்டிய வர்களுக்குப் படைப்பார்கள்!

கருஞ்சிறுத்தை கண் விழித்தால் தெரியும் சேதி! என்ற புரட்சிக்கவிஞரின் புரட்சி வரிகளின் வழியில் ஒரு சரித்திரம் நிகழும்!
(நிறைவு)

http://www.viduthalai.periyar.org.in/20101126/news04.html

Thursday, November 25, 2010

சேர்ந்தே இருக்கவேண்டுமா? தனியாக இருக்கவேண்டுமா? சொல்லுங்கள், யோசிக்கிறோம்-முதலமைச்சர் கலைஞர் உரை

மத்திய அரசு, மாநில அரசுகள் என்று சிலர் தனியே பிரித்துப் பேசுகிறவர்களுக்கு, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பதிலளித்துள் ளார்.

தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (24.11.2010) நடைபெற்ற வேளாண் கருத்தரங்கம் மற்றும் அலுவலர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:-


மத்திய அரசை விட்டுவிட்டுச் செய்வதில்லை

நம்முடைய அரசு உங்களுடைய ஒத்துழைப் போடு, உறுதுணையோடு எத்தனையோ திட்டங் களையெல்லாம் தீட்டியிருக்கிறது. இந்த அரசு திட்டங்களை தீட்டுகிறபோது, மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுகிறது என்கிறபோது, இந்த அரசு என்று நான் குறிப்பிடும்போது சில பேர் தமிழ்நாட்டில், நான் ஏதோ மாநில அரசை, தமிழக அரசை மாத்திரம்தான் குறிப்பிடுகிறேன் என்று கருதிக்கொண்டு, மத்திய அரசுக்கு இதில் பங்கு கிடையாதா என்றெல்லாம் கேட்கிறார்கள். மத்திய அரசு என்று எதைச் சொல்லுகிறோம், அது மாத்திரமல்ல, இந்த நாட்டில் எந்தக் கட்சிக்காரர் களும் அதிகமாகச் சொல்லாத வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன். மத்திய அரசு என்கிறபோது, மத்திய அரசு என்று மாத்திரம் நான் சொல்லுவதில்லை, இந்தியப் பேரரசு என்று சொல்லுகிறேன். பேரரசு என்றாலே இந்த அரசும் உள்ளிட்டதுதான், அதுதான் பேரரசு. நாங்கள் சிற்றரசுதான். இந்த சிற்றரசுகள் எல்லாம் அடங்கியதுதான் பேரரசு. நாங்கள் ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்றால், மக்களுக்காக ஒரு சாதனை புரிகிறோம் என்றால், மக்களுக்காக ஒரு செயலை முடிக்கிறோம் என்றால், அவர்களுக்காக ஒரு திட்டத்தை வகுக்கிறோம் என்றால், அந்தத் திட் டத்தைச் செயல்படுத்துகிறோம் என்றால், அதிலே மத்திய அரசை விட்டுவிட்டு செயல்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் எட்டடி பாய்ந்தால் நாங்கள் பதினாறடி பாய்வோம். அந்த எட்டைக் கூட்டித் தான் பதினாறு - நான் அதை மறக்கவில்லை. அந்த எட்டடியையும் கூட்டித்தான் பதினாறடி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் கணக்கிலே அவ்வளவு முட்டாள் அல்ல. அந்த எட்டடியோடு சேர்த்துதான் பதினாறடி பாய்வோம் என்று நான் சொல்லுகிறேன். நாங்கள் தனியாக பதினாறடி பாய்வோம் என்று சொல்லவில்லை. தனியாக பதினாறடி பாயக்கூடும் என்று தான் அண்ணா காலத்திலே அப்படிக் கேட்டோம், நாங்கள் தனியாகப் பதினாறடி பாய வேண்டும் என்று. இல்லையில்லை, சேர்ந்தே பதினாறடி பாய்வோம் என்று சொன்ன பிறகுதான் அவர்களை நம்பி, சேர்ந்தேயிருக்கி றோம். சேர்ந்தே இருப்பது தீது என்று சொன்னால், சொல்லுங்கள்! யோசிக்கிறோம். அவ்வளவுதான் சொல்ல முடியும். திராவிட நாடு, தமிழ் நாடு என் றெல்லாம் ஒரு காலத்திலே கேட்ட போது, தமிழ் நாடு தனி, தமிழ்நாட்டின் திட்டங்கள் தனி, பக்கத்து நாடுகளின் திட்டங்கள் தனி, என்ற அந்த அளவிலே தான் எங்களுடைய உரிமை, எங்களுடைய பொரு ளாதாரத்திற்கு ஏற்ற, பயன்பாடுகளுக்கு ஏற்ற திட்டங்கள் இவைகளெல்லாம் எங்களுக்குத் தேவை என்ற முறையிலேதான் இந்த அரசு - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலே உள்ள இந்த அரசு தொடக்க காலத்தில் அந்தக் கருத்தை வெளி யிட்டது. அப்படிச் சொன்னபோது, எங்களுக்கு அளிக்கப்பட்ட அறிவுரை என்ன?

நாமெல்லாம் ஏக இந்தியா அல்லவா? ஒரே இந்தியா அல்லவா? நாங்கள் போடுகிற திட்டங் களும், நீங்கள் போடுகிற திட்டங்களும் மக்களுக்குப் பயன்படக் கூடியவை அல்லவா? என்று கேட்டு நாங்களும் யோசித்து, ஆமாம்! எங்களால் அதைப் பங்கிட்டுக் கொள்ள முடியவில்லை என்று கேட்ட போது, அதைப் பங்கிட்டுக் கொள்ளக்கூடிய அள விற்கு நாங்கள் பயனளிக்கிறோம் என்று சொன்ன போது, அதை நம்பித் தான் ஒன்றாக இருக்கிறோம். ஒன்றாக இருப்பதற்குக் காரணமே, நீங்கள் எங் களை என்றைக்கும் வளத்தோடு வாழ வைப்பீர்கள் - ஒரு பகுதி வாழ்வதும், ஒரு பகுதி வீழ்வதும் என்ற நிலைமை இந்தியாவிலே இருக்காது. இந்தியா சமமாக இருக்கும். இந்தியாவிலே எல்லா பாகங் களும் சமமாக இருக்கும். ஒரு பாகம் உயர்ந்து, ஒரு பாகம் நலிந்திருக்கக்கூடிய நிலைமை இந்தியத் திருநாட்டிலே இருக்காது என்று எண்ணித்தான், நம்பித்தான் இன்றைக்கு தென்னகப் பகுதி, தமிழகப் பகுதி வடக்கே உள்ள பகுதிகளோடு கலந்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் ஒருமைப்பாடு, இந்தியா வின் ஒற்றுமை இவைகளெல்லாம் தமிழர்களுக்கு மாத்திரம் தானா என்றால், இல்லை. நாங்களும், நீங்களும் சேர்ந்து தான் இந்தியர்கள். நாங்கள் மாத் திரம் என்றால் தமிழர்கள் அல்லது திராவிடர்கள். நாங்களும் நீங்களும் சேர்ந்துதான் இந்தியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்தியர்களுக்காகத் தீட்டப்படுகிற திட்டம் - அது எந்தத் திட்டமாக இருந்தாலும், இந்தியாவிலே இருக்கின்ற எல்லா மக்களும் பயன்பெறவேண்டிய திட்டம். இந்தியாவிலே இருக்கின்ற தெலுங்கர்களுக் கான திட்டம் என்றால் அது தனியாக இருக்கலாம். இந்தியாவிலே இருக்கின்ற கன்னடியர்களுக்கான திட்டம் என்றால் அது தனியாக இருக்கலாம். இந்தியாவிலே இருக்கின்ற பஞ்சாபிகளுக்கான திட்டம் என்றால் அது தனியாக இருக்கலாம்.

பாகுபாடு இருக்கக் கூடாது

ஆனால், எல்லாம் சேர்ந்த இந்தியர்களுக்கான திட்டமென்றால், அதிலே பாகுபாடு இருக்க முடி யாது, இருக்கக்கூடாது. இருந்தால், இந்தியாவிலே பல மாநிலங்களை, பல பிரதேசங்களை, பல இனங்களை அவமதித்த குற்றத்திற்கு நாம் ஆளா வோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அந்த வகையிலே இது யாருடைய திட்டம், இது மாநில அரசின் திட்டமா? மத்திய அரசின் திட்டமா? என் றெல்லாம் சில பேர் குழப்பி, மாநில அரசின் திட்டங் கள் எல்லாம் மத்திய அரசின் திட்டங்களாகத்தான் இன்றைக்கு இருக்கின்றன என்று யாராவது சொல் லுவார்களேயானால், மாநில அரசுத் திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள்தான் என்று மக்களைக் குழப்ப முன்வருவார்களேயானால், நான் அவர்களுக் குச் சொல்லுகிறேன் - நாங்கள் திட்டவட்டமாக, தெளிவாக இதிலே இருப்பதற்கு எங்களுக்கு தயவு செய்து வழிவிடுங்கள். இதைத்தான் நான் சொல்ல முடியும்.

மத்திய அரசு வேறு, மாநில அரசு வேறு என்று நான் கருதாத காரணத்தால், இரண்டும் ஒரே அரசுதான் - மத்தியிலே ஒரு காரியம் நடந்தால் அது மாநிலங்களைப் பாதிக்கக்கூடியதுதான் என்பதை நான் எண்ணுகிறவன், யோசிப்பவன், சிந்திப்பவன். அதனால்தான், இரண்டையும் ஒரே அரசாகக் கருதுகிறேன். மாநிலம், மத்தி என்பதெல்லாம் நிருவாக வசதிக் காக பிரிக்கப்பட்டவைகள். அதற்காக இன்றைக்கு இருக்கக் கூடியவைகள். அதை மறந்துவிடக்கூடாது. மாநிலம் - மத்தி என்ற இந்த இரண்டு தத்துவங்களும் நிருவாகத்திற் காக இருப்பவைகளே தவிர, பேதங் களுக்காக அல்ல, பிளவுகளுக்காக அல்ல என்பதை அரசியல் சிந்தனை யாளர்கள் நிச்சயமாக மறந்து விடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதனால்தான் உங்களுக்குச் சொல்கிறேன். படித்த மக்கள் நீங்கள், வேளாண் துறையிலே பணியாற்று கின்ற நீங்கள், இவைகளை யெல்லாம் சிந்திக்க முடியாதவர்கள் அல்லர், சிந்திக்கக் கூடியவர்கள். அப்படிச் சிந்திக்கக்கூடியவர்கள் இருக்கின்ற இந்தக் கூட்டத்தில் உங்களுடைய சிந்தனைக்கு கொஞ்சம் எரு போட்டதைப் போல, தீனி போட் டதைப் போல இந்தக் கருத்துகளைச் சொல்லியி ருக்கிறேன். உங்களுக்கே இது பயன்படுமேயானால், உங்களையும் என்னையும் சேர்த்து ஆளுகின்ற வர்களுக்கு - மாநிலத்திலே இருந்து ஆளுகின்றவர்க ளுக்கு, ஏன் மத்தியிலும் இருந்து ஆளுகின்றவர்க ளுக்கு - அப்படி ஆளுகின்ற கட்சிகளுக்கு - மாநி லத்தை, மத்திய அரசை ஆளுகின்ற கட்சிகளிலே உள்ளவர்களுக்கு இது புலப்படாமல் போக முடியாது.

ஒரு குழந்தையை இரு தாய் உரிமை கோரிய கதை

எனவே, எந்த ஒரு திட்டம் ஆனாலும், வேளாண் மைத் துறைக்காகப் போடப்படுகிற திட்டமாக இருந்தாலும், அந்தத் திட்டத்திலும் மத்திய அரசின் பங்கு இருக்கிறது. அதைப் போலவே, மத்திய அரசு திட்டத்தில் மாநில அரசுக்குப் பங்கு இருக்கிறது.

ஒரு குழந்தையை நான்தான் பெற்றேன் என்று தாய் உரிமை கொண்டாடினால்கூட, அதிலே தந்தைக்குப் பங்கில்லாமல் இல்லை. தந்தைக்கும் பங்கு இருக்கிறது. ஒரு குழந்தையை தன்னுடைய குழந்தை என்று இரண்டு தாய்கள் அதற்காகப் போராடிய போது, சாலமன் காலத்திலே அவரு டைய சபா மண்டபத்தில், சாலமன் என்ற அந்த மன்னன் தீர்ப்பு கூறினான். எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் - இது உன்னுடைய குழந்தை அல்ல, அந்த அம்மாவுடைய குழந்தை, அந்த அம்மாதான் கண்ணீர் வடிக்கிறார்களே, கொடுத்துவிடு என்ற போது - இன்னொருத்தி, முடியாது என்றாள். பிறகு யோசித்துப் பார்த்து, கடைசியாக முடிவு செய்தான் - சரி, இந்தக் குழந்தையை என்னுடைய வாளால் வெட்டி, இரண்டு துண்டாக்கி, ஆளுக்கொரு துண்டு கொடுக்கிறேன். எடுத்துக் கொண்டு போங்கள் - என்று சொன்ன போது, அந்த போலித்தாய், சரி, சரி என்றாள். ஏனென்றால், குழந்தையைத் துண்டாக்கி னால் என்ன, அதைத் துண்டு துண்டாக ஆக்கினால் என்ன, கவலையில்லை. ஏனென்றால், அவள் உண் மையான தாய் அல்ல. அதே நேரத்தில், உண்மை யான தாய் என்ன சொன்னாள்? அய்யோ! குழந்தை யைத் துண்டாக்காதீர்கள். அது என் குழந்தை. வெட்டி விடாதீர்கள். வேண்டுமானால் குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள். குழந்தை உயி ரோடு இருந்துவிட்டுப் போகட்டும். அவளிடத்திலே கொடுத்து விடுங்கள். அவளே தாயாக இருந்து விட் டுப் போகட்டும் என்று சொன்னாள். அதற்கு என்ன காரணம்? குழந்தை உயிரோடு இருக்கவேண்டும். அதுதான் அந்த உண்மையான தாயின் சிந்தனை.

உண்மைத் தாயின் நிலையிலிருந்து சொல்கிறேன்

அதைப் போல, அந்தத் தாயின் நிலையிலிருந்து நான் சொல்லுகிறேன். யாராவது இருந்துவிட்டுப் போகட்டும், யார் வீடு கட்டினால் என்ன, யார் ரோடு போட்டால் என்ன, யார் செய்தால் என்ன, 108 திட்டத்தை யார் நிறைவேற்றினால் என்ன, யார் பல்கலைக்கழகங்களை நடத்தினால் என்ன, யார் வேளாண்மைத் துறையை வகித்தால் என்ன - மக் களுக்கு திட்டங்கள் பயன்பட்டால் போதும். அது பயன்படுகிற வரையில், அது எனக்கு, உனக்கு என் றெல்லாம், நான்தான் அதைச் செய்தேன் என்றெல்லாம் சொல்வது, நான்தான் பெற்றேன் என்று போலித்தாய் பங்குக்கு வருவது போன்ற கதை யாகிவிடும். குழந்தை காப்பாற்றப்பட வேண்டும் - இந்தியாவினுடைய சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் - இந்தியாவினுடைய சுதந்திரத்தைக் காத்து, அதை வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, வேளாண்மைத்துறை அன்பர்கள் கூடியிருக்கின்ற இந்தக் கூட்டத்தை ஓர் பயிற்சி வகுப்பாக நான் ஆக்கிவிட்டேனோ, என்ற அந்த வருத்தத்தோடு, அந்த வருத்தத்திலும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை நீங்கள் தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணிப் பார்த்து அதற்கேற்ப நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, உங் களுடைய இனிய வரவேற்பு, எழுச்சி மிகுந்த வாழ்த் துக்கள் இவற்றுக்காக மீண்டும் மீண்டும் நன்றி கூறி, நம்முடைய வேளாண்மைத்துறை அமைச்சர் வீர பாண்டி ஆறுமுகம் அவர்களின் கோரிக்கைகள் முழுவதும் இன்று நிறைவேறாவிட்டாலும்கூட, அவரும் அமரக்கூடிய அமைச்சரவைக் கூட்டத் திலே, இந்த நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் ஆழ்ந்த பரிசீலனையோடு அமலாக்கப்படும். அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படும்.

துணை முதலமைச்சர் இன்றைக்கு முன் நின்று நடத்தும் காரியமாக ஏழை, எளியவர்க்கு இலட்சக் கணக்கான வீடுகள் கட்டுவதற்கான கலைஞர் வீடு வழங்கும் திட்டம் - ஒரு மாபெரும் திட்டம். அதன் படி, 21 இலட்சம் வீடுகள் 6 ஆண்டுக் காலத்திலே கட்டப்பட வேண்டும். இந்த முதல் வருடத்திலே 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட இருக்கின்றன. அநேகமாக முடிக்கப்படப் போகிறது. அவ்வளவு வீடுகள் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் அழுத்தமாக, உறுதியாகக் கட்டப்படுகின்றன. அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 21 லட்சம் குடிசை வீடுகள் கல் வீடுகளாக, கான்கிரீட் வீடுகளாக ஆக இருக்கின்றன. 6 வருடங்களில் - 6 வருடங்களா, அவர்கள் வந்து செய் வார்களா என்றால் வரமாட்டார்கள், கவலைப்படா தீர்கள் நாமே அதை செய்து முடிப்போம் என்று சொல்லி முடிக்கின்றேன். - இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
http://www.viduthalai.periyar.org.in/20101125/news02.html

ஆ.இராசாமீது குற்றம்சாற்றிட எந்த இடத்திலும் ஆதாரமில்லை-கி. வீரமணி

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா மீது எங்கும், எந்த இடத்திலும் குற்றம் சாற்றப்படவில்லை. அதற்குரிய ஆதாரம் எங்குமே இல்லை. கலைஞர் ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று திட்டமிட்டு, பார்ப்பனர்களும், ஊடகத்தினரும் செய்து வருகின்றனர். மக்களே அத்தகைய ஊடகத்தை, பத்திரிகைகளைப் புறக்கணியுங்கள். மீண்டும் கலைஞர் ஆட்சி மலர விழிப்புணர்வோடு செயல்படுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தமிழக ஊடகப் பேரவை சார்பில் ஆ.இராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் ஊடகத்துறை அறிஞர்கள் பங்கேற்ற சிறப்புப் பொதுக்கூட்டம் நேற்று (24.11.2010) சென்னை தியாகராயர் நகரில் ஜி.என்.செட்டி சாலை, தியாகராயர் அரங்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மிகவும் உணர்ச்சிப் பிரவாகமாக தகவல் செய்திகளை பொதுமக்களுக்கு எடுத்து அள்ளிவீசும் நிகழ்ச்சியாக அனல் தெறிக்கும் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து ஆற்றிய சிறப்புரை வருமாறு:


மக்களிடையே எரிமலையாய் உணர்ச்சி

எந்த உணர்வை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்க வேண்டும் என்று நினைத் தோமோ அந்த உணர்ச்சி மக்களிடையே எரிமலை யாக இருக்கிறது. இந்த அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறதைப் பார்க்கும் பொழுதே எங்களால் எளிதில் உணர முடிந்தது. இங்கே பேசிய ரமேஷ் பிரபா, ஜெகத்கஸ்பார், ஏ.எஸ்.பன்னீர் செல்வம், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எல் லோருமே சிறப்பாகப் பேசினார்கள். ஆ.இராசாவை நேசிப்பதற்கு என்ன காரணம் என்று ஜெகத்கஸ்பார் அவர்களும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் தங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

அதே காரணத்திற்காகத்தான் இராசா குற்றவாளியாக நிறுத்தப்பட்டார். ஊடகங்களும் அவர் மீது பழியைப் போடுகின்றன.

நான் ஒரு பெரியார் தொண்டன்; இது வெறும் ஆ.இராசா என்ற தனி நபரைச் சார்ந்த பிரச்சினை அல்ல. இது ஆரிய- திராவிட போராட்டத்தின் முக்கியமான காலகட்டம்.


ஆதிக்கவர்க்கத்தால் பின்னப்பட்ட சதிவலை

முதல்வர் கலைஞர் அவர்கள் சூத்திரர் ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்றார். வரக்கூடிய தேர்தலிலே மீண்டும் கலைஞர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக ஆதிக்க வர்க்கத்தினரால் பின்னப்பட்ட ஒரு சதிவலை.

2ஜி ஸ்பெக்ட்ரம், 3ஜி ஸ்பெக்ட்ரம் என்பதெல் லாம் ஒரு புறத்தோற்றம். ஆனால் உண்மையிலேயே நடக்கின்ற போராட்டம் மனுதர்மத்திற்கும் - மனித தர்மத்திற்குமிடையே நடக்கின்ற போராட்டத்தின் முக்கிய கட்டம். யார் இதை ஊதி, ஊதிப் பெரிது படுத்தினார்கள் என்று ரமேஷ் பிரபா இங்கே எடுத்துச் சொன்னார்.

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் எங்கே போனது என்று கேட்கிறார்கள். வடமாநில ஆங்கில ஊடகத்தைப் பார்ப்பவர்கள் வெறும் 00.1 சதவிகிதம் என்று சொன்னார்கள். மேல்தட்டுவர்க் கத்தினர், ஆளும் வர்க்கத்தினர், அதிகார வர்க்கத் தினர் கலைஞர் ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதற்காக ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் விளைவு என்ன?

ஊடகங்கள் சூத்திரர் ஆட்சிக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றன. இராமாயண காலத்திலிருந்தே இதற்கு உதாரணம் இருக்கிறது. நம்மை சிந்திக்கவிடாமல் நமது மூளைக்கு விலங்கு போட்டார்கள்.

மண்டல் கமிசன் நடைமுறைப்படுத்தியபொழுது...

ஆ.இராசா பதவி விலகிய நிகழ்ச்சி மிகப் பெரிய போராட்டத்தின் தொடர்ச்சி, மண்டல் கமிசன் ஆணையை வி.பி.சிங் அவர்கள் நடைமுறைப்படுத் தினார். அப்பொழுது ஊடகங்கள் என்ன செய்தன தெரியுமா? இட ஒதுக்கீடு தொடர விட்டு
விடக் கூடாது என்று நினைத்த பார்ப்பன ஊடகத்தினர் அப்பாவி மாணவர்களைப் பிடித்து
நீங்கள் தீக்குளிப்பதுபோல நாடக மாடுங்கள். உங் களுடைய முகம் தொலைக்காட்சியில் தெரிய வரும். உங்களுடைய முகங்கள் ஆங்கிலப் பத்திரிகை களிலே வரும் என்று சொல்லி அவர்களை ஏமாற்றி உண்மையிலேயே தீக்குளிக்க வைத்து எரித்துக் கொன்றனர். பிறகு ஊடகத்துறையினரே அதை ஒப்புக்கொண்ட ஆதாரங்கள் இதோ எங்களிடம் உள்ளன.

ஆ.இராசா விசயத்திலும் அதே நாடகம்

எப்படி உயர்ஜாதிக்காரர்கள் தங்களுடைய ஆதிக்கத்திற்கு ஆபத்து வரும் என்று கருதிய பொழுது எப்படி நாடகம் ஆடினார்களோ அதே போன்ற நாடகத்தை ஆ.இராசா விசயத்திலும் ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்கியிருக்கிறார்கள். ஆ.இராசா மீது சில ஊடகங்கள் வேட்டை ஆடுவது ஏன்?

காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரிவரை ஊடகங்கள் அவர்களுடைய கையிலே தான் இருக்கின்றன.


தாழ்த்தப்பட்ட சகோதரன் பெரிய பதவியில் இருப்பதா?

ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரன் முன்னேறி அமைச்சராகப் பெரிய பதவியில் இருப்பதா? அவரை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள்.

ஆ.இராசா வீழ்ச்சி தற்காலிகம்தான்!

இராசா வீழ்ச்சி தற்காலிக வீழ்ச்சிதான். தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அவர்கள் ஒத்திகை பார்த்திருக் கிறார்கள். அரசியல் சட்டம் 151ஆவது பிரிவில் தெளிவாக சட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட் டுள்ளன.

நீங்கள் எங்களிடம் வாதாட எந்த அரங்கத்திற்கு வந்தாலும் உங்களை சட்ட ரீதியாக நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம். சு.சாமி போன்ற சாமிகள், அவாள்கள் எல்லாம் ஆட்டம் போடு வார்கள்.


அறிக்கை எப்படி கசிந்தது?

அரசியல் சட்டம் 151 ஆவது சட்டப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறபடி மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை முதலில் குடியரசுத் தலை வருக்குக் கொடுக்கப்பட வேண்டும். உடனே நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை. இது சட்டப்படி நடந்ததா? நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ஊடகத்துறைக்கு இந்த அறிக்கை எப்படிக் கசிந்தது? எப்படி வெளியே வந்தது?

விசாரணைக் கமிசன்மூலம்...

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று எப்படிச் சொன்னார்கள்? எனவே, இதைப்பற்றி ஒரு பெரிய விசாரணை கமிசன் வைத்தால்தான் உண்மைகள் வெளியே வரும். பால் கமிசன் அறிக்கை வெளியானது என்று அன்றைக்கு கலைஞர் மீதும், அவருடைய செயலாளர் சண்முக நாதன் மீதும் எம்.ஜி.ஆர். வழக்குப் போட்டாரே!

பிரதமர் மறைமுகமாக சொன்ன செய்தி

டில்லியில் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி விட்டுச் செல்லும் பொழுது பிரதமர் மன் மோகன் சிங் அங்கே நின்று கொண்டிருந்த இராசா முதுகை தட்டிக்கொடுத்ததை தொலைக்காட்சியினர் திரும்பத் திரும்பக் காட்டினர்கள்.

இராசா நீ குற்றமற்றவன் என்பதை நானே உணருகிறேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்று விட்டாரே.


ஜூனியர் விகடன்

இன்றைய ஜூனியர் விகடன் ஏடு (28.11.2010) இராசா மீது எப்படி சதிவலைப் பின்னப்பட்டிருக் கிறது என்ற உண்மைச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ள செய்தியை உங்களுக்குச் சொல்லுகின்றேன். இந்த அடிப்படையில் இந்திய அஞ்சல் மற்றும் தொலைபேசித் துறையின் ஆடிட்டர் இயக்குநர் ஜெனரல் ஆர்.பி.சிங்கை சந்தித்தோம்.

பொதுமக்கள், பத்திரிகைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசு சார்பற்ற அமைப் புகள் எல்லாம் எங்களிடம் வந்து, இந்த முறைகேடு தொடர்பான பல தகவல்களைச் சொன்னார்கள். இதன் அடிப்படையில்தான் எங்களது விசார ணையே நடந்தது. எங்களால் அறிக்கை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால் சி.பி.அய் போன்ற அமைப்புகளே தவறு செய்தவர்கள் மீது சட்டபூர்வ மான நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நட வடிக்கைக்கு இந்த அறிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இராசாமீது திட்டமிட்டே குற்றம் சுமத்தப்பட்டி ருக்கிறது என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா? இப்பொழுது பூனைக்குட்டி வெளியே வந்ததா இல்லையா?


யாரிடம் முறையிடுவது?

ஒரு பிரச்சினை, ஒரு மனு என்றால் பிரதமரிடம் கொடுப்பார்கள். அல்லது முதலமைச்சரிடம் கொடுப்பார்கள். ஆனால் பத்திரிகைகள், ஊடகத் துறையினர் ஆடிட்டர் ஜெனரலிடம் தகவல்களை கூறுவானேன்?

ஆடிட்டர் ஜெனரல் தாக்கல் செய்தது வெறும் அறிக்கைதானே! இதில் இவ்வளவு பரபரப்பு ஏன் காட்டப்பட வேண்டும்? காரணம், இவர்கள் முகத்திலே பிறந்த ஜாதி.

எளிய மக்கள் கைகளில் எல்லாம் செல்ஃபோன் 21 ஆம் நூற்றாண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் தந்தை பெரியாரின் கனவை, நிறைவேற்றியிருக்கிறாரே இராசா. அதனால் தான் இன்றைக்கு சாதாரண குப்பன், சுப்பன், முனியம்மாள் கைகளில் எல்லாம் செல்ஃபோன் இருக்கிறது.

செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனையா?

செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனையா? என்று அறிக்கை எழுதினோம்.

உலகத்திலேயே இவ்வளவு மலிவாக செல்போன் எந்த நாட்டு மக்களின் கையில் இருக்கிறது.

பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளத்தான் எல்லோரும் ஞான சூரியன் புத்தகத்தைப் படியுங் கள் என்று கலைஞர் சொன்னார்.


சூத்திரனுக்கொரு நீதி-பார்ப்பானுக்கு ஒரு நீதியா!

பார்ப்பனர் குற்றம் செய்தால் உச்சிக்குடுமியில் இரண்டு முடியை வெட்ட வேண்டும் அவ்வளவு தான். சூத்திரன் தவறு செய்தால் அவனுக்கு கொலை குற்றத்தண்டனை கொடுத்து கொல்ல வேண்டும். மரண தண்டனை விதிக்க வேண்டும்

இதுதானே உங்களுடைய மனுதர்மச் சட்டம்? சூத்திரனுக்கு ஒரு நீதி; பார்ப்பானுக்கு ஒரு நீதி


வழக்கு போடப்படும்

இந்தப் புகாரை நாங்கள்தான் கொடுத்தோம் என்று சொல்லுகின்ற வீரர்களை கேட்கிறோம். 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் 60 ஆயிரம் கோடி ரூபாய் புழங்கியிருக்கிறது என்று சந்தேகப்படு கிறோம் என்று சொல்லுகிறார்களே! அப்படி யானால் யார் வாங்கினார்கள் எப்படி கொடுத்தார் கள் என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும். வழக்கு வரும்.

மந்திரியாக இல்லாவிட்டாலும்,ராஜா ராஜாதான்!

எனவே இராசா தனி மனிதரல்ல; திராவிட இனத்தின் தலை சிறந்த தளபதி; திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற கொள்கை பரப்புச் செயலாளர். மந்திரியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராஜா ராஜா தான்!

ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சொல்லுங்கள்

ஆகவே மக்களுக்குப் புரியும் படியாக இங்கு வந்திருக்கிறவர்கள் ஒவ்வொருவரும் நூறு பேருக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தப் பார்ப்பன ஊடக சதி வலையைப் பற்றி.

அரசாங்கம் பொது மக்களுக்கு நன்மை செய்யும் பொழுது நட்டங்கள் வரும்; அதைப்பற்றி அர சாங்கம் கவலைப்படாது.

அரசுக்கு நட்டம் மக்களுக்கு லாபமாயிற்றே

போக்குவரத்துத் துறையில் கல்வித் துறையில், உணவுத் துறையில் அரசுக்கு நட்டம் ஏற்படத்தான் செய்யும்; ஆனால் மக்களுக்கு லாபம் அல்லவா?

இன்றைக்கு ஏழை, எளிய மக்கள் கையில் எவ் வளவு காலம் தொலைபேசி இருக்கிறதோ அவ்வளவு காலத்திற்கும் மக்களும் இராசாவை நினைத்துக் கொண்டிருப்பார்கள். தி.மு.க. ஆட்சியை நினைத்துக் கொண்டிருப்பார்கள். கலைஞரை நினைத்துக் கொண்டிருப்பார்கள்.


தமிழர்களுக்கு எதிரான பத்திரிகையை வாங்காதீர்!

எனவே, தேர்தல் வரப்போகிறது, நாம் எச்சரிக் கையாக இருக்கவேண்டும். தமிழர்களுக்கு எதிரான ஊடகத்தை புறக்கணியுங்கள்; தமிழர்களுக்கு எதி ரான செய்தித் தாள்களை வாங்காதீர்கள். புறக் கணியுங்கள். தி.மு.க. ஆட்சிக்கு நாம் காவலர்களாக இருப்போம்.

இராசா பெயர் எந்த இடத்தில் இருக்கிறது?

இராசாவை கைது செய்ய வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவை புரிந்து கொள்ளுங்கள். ராசா குற்றம் செய்தார் பணம் வாங்கினார் என்று எந்த இடத்தி லாவது இருக்கிறதா? ஆதாரம் எங்கே என்று அட்டர்னி ஜெனரல் அந்தியார்ஜுனா கேள்வி கேட்டாரே. உச்சநீதிமன்றத்தில் இதற்கு என்ன பதில்?

மீண்டும் கலைஞர் ஆட்சியே!உணர்ச்சி பெறுங்கள் மக்களே!

சிலர் தமிழர் ஆட்சியை திராவிடர் ஆட்சியை வீழ்த்த இதை ஒரு சாக்காகப் பயன்படுத்த நினைத்தார்கள்.

இனி ஒருபோதும் அது நடக்காது. தமிழர்களே விழிப்பாக இருக்கவேண்டும். கலைஞர் ஆட்சியைக் காப்பாற்றி, மீண்டும் கலைஞர் ஆட்சியை மலரச் செய்வது ஒன்றுதான் நமது கடமை. - இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.
http://www.viduthalai.periyar.org.in/20101125/news01.html

ஞானசூரியன்-6

ஞானசூரியன்

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

முதல் பதிப்பு : 1928

(19ஆம் பதிப்பு : 2008)

உரை நூற்களாகையால், இந்து மதத்தின் உண்மைக் கருத்துகள் ஸ்மிருதிகளால் அறியமுடியும். இந்நூற்களின் கொள்கைகளை ஆசாரம், விவகாரம் என இரண்டாகப் பிரிக்கலாம். முதற்பிரிவில் வருணாச்சிரம தருமங்கள், உணவின் பாகுபாடுகள், பதார்த்தங்களைச் சுத்தி செய்யும் முறைகள். தானம், சிரார்த்தம், பிராயச்சித்தம் இவைகள் அடங்கியுள்ளன. விவகாரமோ அரசியல் முறைகளாதலால், சமய முறையில் ஆசாரத்தைப் போல் அவ்வளவு பொறுப்பில்லை.

கவுதம, நாரதசங்க, பிரகஸ்பதி, யாக்ஞவல்கியர், ஸ்வாயம்பு, ஸ்வாயம்புவ முதலியஅநேக ரிஷிகள் தரும நூற்களை இயற்றியுள்ளார்கள். இவைகளில் மனுஸ் மிருதிதான் சிறந்தது. சாந்தோக்கிய பிரமாணத்திலும் வேறு பல நூற்களிலும் இதை (மனு)ப் புகழ்ந்து கூறியிருக்கிறது. அவைகளில் சில வருமாறு:

(1மனுர்வையத் கிஞ்சிதவதத் பேஷஜம் (மனுவின் வாக்கு, நோயாளிக்கு மருந்துபோல மனிதனுக்கு இதத்தைக் கொடுக்கும். ஆதலால், சிரேஷ்டமன பிரமாணமாம். இது சாந்தோக்கிய பிரமாணத்தில் உள்ளது.) மற்றும்:-

வேதார்த்தோப நிபந்ஸ்முருத்வாத்

ப்ராதான்யம் ஹிமனோ: ஸ்ம்தரும்:

மன்வர்த்த விபரீதாது

யாஸ்மிருதி; ஸாநசஸ்யதே

நானாசாஸ்த்ராணி சோபந்தே

தர்க்கவ்யா கரணானிச:

தர்மார்த்த மோக்ஷோபதேஷ்டா

மனுர்யாவந்நத் ருஸ்யதே

பொருள்: மனுவின் வாக்கு வேதத்தின் உரையா தலால், வேதம் போலவே பிரமாணமாம். மனுஸ் மிருதிக்கு முரண்பட்ட ஸ்மிருதிகள் ஏதேனுமுளதேல் அவை பிரமாணமாகா. தர்க்கம் வியாகரணம் முதலிய சாஸ்திரங்களும் இவ்வாறே (பிரகஸ்பதி 2யாகமத்தில் 3நிரவ்யாஹ வசனம்)

இக்காரணங்களைக் கொண்டு இந்நூலில் பிரமாணவாக்கியங்கள் பெரும்பாலும் மனு ஸ்மிருதி யிலிருந்தே எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

1. மனு: மந்திரம் வேதமென்பது இக்காலத்து ஆசிரியர்களின் உரை. இது முற்காலத்திய கருத்துக்கு ஒத்து வராததால், தள்ளத்தக்கதேயாகும்.

2. ஈண்டு ஆகமம் என்ற சொல் தரும நூலுக்காம்.

3. நிரவ்யாஹர் என்பார் ஓர் இருடி.

இரண்டாம் அத்தியாயம்

வைதிக கால (வேதம் எழுதிய கால)த்தில் விண் ணுலக வாழ்க்கையையே முத்தி என்று எண்ணப்பட் டிருந்தது. ஆயினும், அங்குள்ளவர்களாகிய தேவர் களுக்குள்ளும் உயர்வு தாழ்வுகளும் காமம், வெகுளி மயக்கங்களும் இருந்தனவாக வேதத்திலேயே கூறப் பட்டுள்ளதால், சுவர்க்கத்தில் துக்கமில்லை என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. அத்தகைய சுவர்க் கத்தை யாகத்தினால்தான் அடையமுடியும். சுவர்க் கத்தை அடைவதற்குக் காரணமாகிய யாகத்தை நடத்துவிப்போர்கள் புரோகிதர்களாகிய பார்ப்பனர்களே. ஆதலால், சுவர்க்கத்தின் திறவுகோல் அவர்களிடத் தில்தான் இருக்கிறது என்று நம் மக்கள் பெரிதும் மயங்கினார்கள். அதுபற்றியே ஜாதி வேற்றுமையும் உண்டாயிற்று,. மேலும், புரோகிதர்களுக்குப் பூதேவ ரென்ற பட்டத்தைச் சாற்றிப் பொதுமக்கள் வழிபட்டு வந்ததும், வருவதும் இவ்வுரிமை (சுவர்க்கம் அடைவிக்கும் உரிமை) பற்றியேயாகும்.

வரவர மக்களுக்கு அறிவு வளர்ந்து வரவே, ஆத்மா வைப்பற்றிய கவலையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதன் பயனாகத்தான் உபநிடதங்கள் பல ஏற்பட்டன. அவற்றுள் பெரும்பகுதியும் பகவான் கவுதம புத்தருக்குப் பிறகே உண்டாயினவென்றும் முன்னரே கூறியுள்ளோம். ஏதோ ஒன்றிரண்டு கவுதம புத்தருக்கு முன்பே இருந்தன என்று வைத்துக்கொள் வோமாயினும், அவைகளை எழுதியவர்களும் பார்ப்பனராக மாட்டார்கள். காரணம் யாதோவெனில், இவர்கள் தங்கள் தேவத் தன்மையைப் போக்கடித்துக் கொள்ள மாட்டார் களன்றோ? இதனால் மற்றைய வருணத்தாரில் உயர்ந்த நிலையிலிருந்த அறிவினால் முதிர்ந்த அரசர்களே (க்ஷத்திரியர்) உபநிட தங்களை இயற்றியவர்கள். அங்ஙனம் எழுதியவைகளை மிகவும் மறைபொருளா கக் காத்தும் வந்திருக்கிறார்கள். 1உபநிஷத்து என்ற சொல் லிற்கே (ரகசியம்) மறைத்து வைக்கத்தக்கது என்று பொருள்.

சந்தோக்கியோபநிஷத்தில், பாலாகி என்ற பிரா மணனுக்கும், அஜாத சத்துரு என்னும் அரசனுக்கும் நடந்த வாக்குவாதத்தில், இந்த வித்தையை இதுவரை க்ஷத்திரியர்களே கையாண்டு வந்தார்கள். பிராமணர் களுக்குக் கிடைக்கவில்லை; ஆயினும், கருணையோடு உனக்குச் சொல்லுகிறேன் என்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன. இதன் பிறகே அரசர்களையும், ஏனையோரையும் பலவகையிலும் அடக்கியாளத் தலைப் பட்டார்கள். அடக்கி வந்த முடிவில் பிரம்மவித்தை என்று பெயரிட்டுச் சங்கராச்சாரியாருக்கு, ஜெகத்குரு வென்று பெயரிட்டு யாவரையும் மயக்கி வருகின்றார்கள்.

1. உபநிஷத்களுக்கு இராஜ வித்தை என்று மற்றொரு பெயரும் உள்ளதே இதற்குச் சான்று பகரும்.

(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101125/news12.html

ஞானசூரியன்-5

ஞானசூரியன்

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

முதல் பதிப்பு : 1928

(19ஆம் பதிப்பு : 2008)


வேதம் அபவ்ருஹஷேயம் (புருஷனால் செய்யப் படாதது) ஆகையால், குற்றமற்றதும் மற்றொரு பிரமாண நூலின் உதவியின்றிச் சுதந்திரமாகவும் இருப்பது என்பது வைதிகர்களுடைய கொள்கை. மேலும், எல்லா நூற்களும், ஒழுக்கங்களும் இதற்குக் கீழ்ப்படிந்தே இருக்கவேண்டும் என்பதாகக் கவுதம ஸ்மிருதியின் முதலில் வேதோ தர்மமூலம் என்ற சூத்திரத்தால் முடிவு கூறப்பட்டிருக்கிறது. வேத வாக்கியத்திற்கு முரண்படாத ஸ்மிருதி வாக்கியமும், ஸ்மிருதிக்கு முரண்படாத ஒழுக்கங்களும் பிரமாணங் களாகும்.

தத்விதாம்ச ஸ்மரணசீலே என்னும் சூத்திரத்தால் இக்கருத்தைக் கவுதமர் வெளியிட்டுள்ளார். ஆனால், இரண்டு, ஸ்மிருதிவாக்கியங்கள் ஒரு விஷயத்தைக் குறித்துக் கூறும்போது, ஒன்றுக்கொன்று முரண்பட்டால், இரண்டு பிரமாணங்களே இத்தருணத்தில் விகற்பமே கொள்ளத் தக்கது. சுருக்கமாகக் கூறுங்கால், மேற்சொன்ன ஸம்ஹிதை, பிரமாணம், உபநிஷத்துகள் இவைகளடங்கிய வேதம் தானே பிரமாணமும், தரும நூல் வேதத்தைக் கருதிய பிரமாணமும் இவைகளுக்கு முரண்படாத ஒழுக்கங் களாகும். ஆனால், வேத ஸ்மிருதிகளை ஒத்துக் கொள்ளாமல், இந்நூற்களுக்கு விரோதமான வேறொரு வசனம் யுக்திக்குப் பொருத்தமாய் இருந்தாலும் பிரமாண மென்று சொல்வது பெரிய குற்றமாகும் என்பது:

ஸ்ருதி ஸ்துவேதோவிஜ்ஞேயோ

தர்ம சஸ்த்ரம்து வைஸம்ருதி

தேஸர் வார்த்தேஷ்வமீமாம்

ஸ்யேதாப்யாம் தர்மோவிநிச்சித:

யோவமன்யேததேமூலே ஹேது

சாஸ்தராஸ் ரயாந்நர;

ஸஸாது பிர்பஹிஷ்கார்

யோ நாஸ்திகோ வேதநிந்தக - மனு

பொருள்: வேதங்களும், ஸ்மிருதிகளும் தருமத்திற்கு இருப்பிடங்களா தலால் இவைகளை யுக்தி வாயிலாக எவனாவது கண்டிக்க முயன்றால், அத்தகைய வேத நிந்தகனான நாஸ்திகனை நல்லோர்கள் ஊரைவிட்டுத் துரத்திடவேண்டும் என்றும் இதனால் அறியக் கிடக்கின்றது.

இவ்வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் சொல்லப்படுவது தான் ஹிந்து சமயம் இந்நூற்களில் சொல்லுகிறபடி ஒழுகுகின்ற மனிதன், எல்லாவகையிலும் முன்னேற்ற மடைவான் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், வேதத்திற்கு அதிகாரமில்லாத தமிழ்மக்கள் தங்களை இந்துக்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக்கொண்டும் நினைத்துக் கொண்டும் இருந்தாலும், இவர்களுக்கு வேத ஸ்மிருதிகளில் சற்றேனும் உரிமையோ, அதிகாரமோ இல்லை. ஆயினும், பார்ப்பனர்களும், இவர்களை (பார்ப்பனல்லாதாரை) இந்துக்கள் என்று சொல்லுகிறார்களே எனின், இது தங்கள் சுயநலத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பார்ப்பனரல்லாதாரை என்றென்றைக்கும் அடிமைப் படுகுழியிலேயே அமிழ்த்தி வைக்க வேண்டுமென்ற மோசக்கருத்தை உள்ளடக்கிக் கொண்டு மயக்குகின்ற பசப்பு வார்த்தை என்றறிந்து கொள்க.

சமய நூற்கள் இம்மைக்குரிய உயர்வுக்கும், மோட்சத் திற்கும் வழிகாட்டிகளன்றோ? ஆனால், இந்துக்களின் மதநூல்களில் மிகப் பழமையான இருக்கு வேதத்தில் மறுமையைப் பற்றிக் கூறுகிற பாகம் மிகக் குறைவே. இயற்கைப் பொருள்களை மேன்மைப்படுத்தித் தேவர் களாகக் கூறுவதும், அங்ஙனம் புகழ்ந்து கூறப்பட்ட தேவர்களிடம் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பதும் இதிலடங்கியிருக்கின்றன. இத்தகைய தேவர்களுக்கு இருப்பிடம் சுவர்க்கமும், அதை ஆட்சி புரிபவன் இந்திரனு மாவான். இதை எழுதி வைத்தவர் விரும்புகிற பொருள் களைத் தேவர்களும் விரும்புகிறார்கள். இவர்கள் வெறுக்கிறவர்களைத் தேவர்களும் வெறுக்கிறார்கள். (இதனால், பார்ப்பனர்கள் தங்களையே தேவர்களாக நினைத்துள்ளார்கள் என்று எண்ண இடந்தருகிறது. பூசுரர் என்ற பெயரும் இதற்குச் சான்றாகும்.) அருந்தல், பொருந்தல் முதலியவைகளிலும், பொழுதைப் போக்கும் மற்ற விளையாட்டுகளிலும், இவர்களுக்கும் தேவர்களுக்கும் வேற்றுமை இல்லை. இறந்து போகிற புண்ணியவான்கள் உயிருடனிருக்கும்போது, இங்குத் தேவர்களுக்குக் கொடுத்த சோமம், மாமிசம் (கள்ளு, இறைச்சி) இவைகளின் உயர்வு தாழ்வுக்கேற்றவாறு அங்கும் (சுவர்க்கத்திலும்) சோமம், அமிர்தம், அழகிய பெண்கள் இவைகளை அனுபவிப் பார்கள். புண்ணியம் முடிந்தவுடன் பழையபடியே பூமியில் பிறக்கின்றார்கள். இதுவே இருக்கு வேதத்தில் சொல்லப்பட்ட இன்பநிலையின் சுருக்கம். இத்தோத்திரங்களைப் பார்க்கிற வர்களுக்கு, அக்காலத்தில் இருந்த கொடியவர்களின் எண்ணங்கள் நன்கு புலப்படும். இந்நாட்டின் பழைய குடிகளாகிய நம்மவர்களை, இவர்கள் பலவிதத்திலும் துன்புறுத்தி வந்ததும், தங்களுக்கு உதவி செய்யும்படி இந்திரனையும் ஏனைய தேவர்களையும், அழைத்திருப்பதும் ஆகிய செய்திகளே அத்தோத்திரங்களில் மலிந்து கிடக் கின்றன.

இருக்கு வேதத்திலுள்ள மந்திரங்களையே வேள்வி புரியுங் காலங்களில், ஓதவேண்டிய முறைப்படிக்குக் கோவை செய்ததே யஜுர் வேதமாகும். அன்றியும், அத்வர்யு என்கிற ஓர் இனத்தாரின் (யாகத்தில் சம்பந்தப் பட்ட புரோகிதர்களுள் ஒரு வகையினர்) உபயோகத்திற் குள்ள சில நியமங்களும் இதில் அடங்கி இருக்கின்றன. ஸாம என்ற சொல்லிற்கே பாட்டு என்று பொருள். இதில் உத்காதா என்கிற புரோகிதக் கூட்டத்தாரால் யாக காலங்களில் பாடும் பொருட்டுப் பல ரிக்கு மந்திரங்கள் தொகுக்கப்பட்டிருக் கின்றன.

இருக்கு வேதம் போலவே, பல தோத்திரங்களும் அடங்கிய 1அதர்வ ஸம்ஹிதையில் கர்ம சம்பந்தமில்லாத தனால், மற்ற மூன்று வேதங்களோடு சேராமல் தனித்து நிற்கிறது. வேதத்தின் பயன் சுவர்ககாதி சாதனங்களான யாகம் முதலியவைகளில் மனிதர்களை ஏவுவதும், கருமங்களைச் செய்யுங்கால், பொருளை நினைப்பூட்டு வதைக் கொண்டு மந்திரங்கள் பயனையுடையன வென்றும் வைதிகர்கள் எண்ணுகிறார்கள். பிரமாணக் கிரந்தங்கள் அனைத்தும் கருமங்கள் செய்யும் முறைகளைக் கூறு கின்றன. புரோகிதர்களின் சொத்தாகிய இந்நூல் கருமங் களை விளக்கிக் காட்டுவதேயாகும். இத்துடன் முடி வடையாது, அனந்தாவை வேதா (வேதங்கள் எண் ணிறந்தன) அவைகளில் இப்போது கிடைத்துள்ளவைகள் தவிர, மற்றவை கற்றலும், கற்பித்தலும் இன்றி அறியப்படாமற் போயின. இவைகளின் (பல வேதங்களின்) பொருட்களை அறிந்த ரிஷிகள், பிறருக்கும் பயன்படுமாறு அவைகளை வெளியிட்டார்கள். அவைகளே ஸ்மிருதிகள். ஆதலால், ஸ்மிருதிகள் வேதத்தின் உரை நூற்களாம். ஸ்மிருதிகளில் சொல்லப்பட்ட எல்லா விதிகளும் வேதத்தில் இல்லை. ஆயினும், வேத சம்பந்தங்களும் பிரமாணங் களுமாகையால், அவைகளைப் பின்பற்றியே மனிதன் ஒழுக வேண்டுமென்பது வைதிகர் (ஆரியர்)களின் முடிவு.

1. இஃது பிற்காலத்தியதெனக் கருதப்படுகிறது. காரணம் வேதமத்ரயீ என்ற வசனத்தாலென்க. -(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101124/news09.html

weather counter Site Meter