Pages

Search This Blog

Sunday, November 14, 2010

அம்பேத்கரின் 22 உறுதி மொழிகள் -கி.வீரமணி ,தலைவர் திராவிடர் கழகம்


அம்பேத்கர் அவர்கள் புத்த நெறியை பின்பற்றிய பொழுது மொத்தம் 25 உறுதிமொழிகளை பின்பற்றுகின்றார்.புத்தம் சரணம் கச்சாமி! தம்மம் சரணம் கச்சாமி ! சங்கம் சரணம் கச்சாமி ! என்று இந்த மூன்று உறுதி மொழிகளை ஏற்கின்றார் .அடுத்து 22 உறுதிமொழிகளை ஏற்கின்றார்.

ஏனென்றால் இது அறவே மறைக்கப்பட்டு விட்டது.

நான் இந்த தலைப்பில் பேச வேண்டும் என்று வந்ததே இப்படி மறைக்கப்பட்ட பல செய்திகளை இங்கு பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அம்பேத்கர் அவர்கள் எழுதி கொடுத்து தயாரித்த உறுதி மொழி .இந்த உறுதிமொழியை அம்பேத்கர் அவர்களும் சொல்லுகின்றார்.

அவரோடு சேர்ந்து ஐந்து லட்சம் பெரும் நாகபுரியில் ,தீட்க்ஷா பூமி என்று சொல்ல கூடிய இடத்தில சேருகிறார்கள்.

அம்பேத்கர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை இங்கு படிக்கின்றேன்.

=> 1) "நான் பிரம்மா ,விஷ்ணு ,சிவன் ஆகியவைகளை கடவுளாக மதிக்க மாட்டேன் ". அவர்களை வணங்க மாட்டேன்.(அம்பேத்கர் அவர்கள் ஏற்று கொண்ட முதல் உறுதிமொழி இது தான்.அம்பேத்கர் பெயரை சொல்லி விட்டு இந்து கடவுள்களின் படங்களை மாட்டிகொண்டிருக்கலாம?)

=> 2) இராமனையோ ,கிரிஷ்ணனையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன் .அது மட்டுமல்ல அவர்களை நான் கும்பிட மாட்டேன்.வணங்க மாட்டேன்.

=> 3) இந்து மதத்தில் உள்ள கடவுள்களான கவுரி அல்லது கணபதி அல்லது இந்து மதத்தில் சொல்லபடுகின்ற எந்த கடவுளையும் வணங்க மாட்டேன்.ஏற்க்க மாட்டேன்.

=> 4) கடவுள் என்பவர் அவதாரம் எடுத்தார் என்ற கருத்தை நான் ஒரு போதும் ஏற்க்க மாட்டேன்.(ஏனென்றால் புத்தரையே அவதாரம் என்று சொல்லி விட்டனர் பாருங்கள் .அவதார் என்ற சமஸ்கிரத வார்த்தைக்கு என்ன பொருள் என்றால் மேலேயிருந்து கீழே இறங்குதல் என்று பொருள்)

=> 5) புத்தர் என்பவர் மாகாவிஷ்ணுவினுடைய அவதாரம் என்பது இருக்கின்றதே ஒரு போதும் அந்த பிரசாரத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன்.(அது மட்டுமல்ல அந்த பிரச்சாரம் பொய்யானது.குறும்பு தனமானது)

=> 6) சிரார்த்தம் கொடுப்பதும் பிண்டம் போடுவது ,இந்த மாதிரி சடங்குகளை ஒரு போதும் இனி நான் செய்ய மாட்டேன் .

=> 7) பார்பனிய மதம் தான் இந்து மதம் .இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை.புத்த நெறியில் தம்மதிர்க்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபடமாட்டேன்.

=> 8) பார்பனர்கள் செய்யும் எந்த சடங்கிலும் நான் என்னை ஈடுபடுத்தி கொள்ள மாட்டேன்.(இன்றைக்கு எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள்?அம்பேத்கர் படத்தை ஆர்.எஸ்.எஸ். காரர்களே மாட்டி வைத்து கொண்டு வித்தை காட்டுகிறார்கள்.இப்பொழுது அம்பேத்கர் கொள்கையை பரப்புவது முக்கியம்மல்ல .பெரியார்,அம்பேத்கர் கொள்கைகள் தானாக பரவும் .அதை தடுப்பதற்கு ஆள் கிடையாது.இப்பொழுது நாம் செய்ய வேண்டியது எல்லாம் கல்கியை பரப்புவது முக்கியம் அல்ல.கொள்கையை பாதுகாப்பது தான் மிக முக்கியம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.திரிபு வாதங்களில் இருந்து பாது காக்க வேண்டும்.)

=> 9) எல்லா மனிதர்களையும் சமதுவகமாககருதுவேன்

=> 10) நான் சமத்துவத்திற்காக தான் பாடுபடுகிறேன்

=> 11) புத்தர் சொன்ன எட்டு வழிகலான நேர்மை ,நியாயம் ,ஒழுக்கம் போன்ற அந்த எட்டு வழிகளையும் நான் கடை பிடிப்பேன்.

=> 12) புத்தர் சொன்ன 10 உறுதிமொழிகளை நான் ஏற்பேன்.

=> 13) நான் எல்லா மனிதர்களுக்கும் கருணை காட்டுவதும்,அவர்களை அலட்சிய படுத்தாமல் அவர்களை பற்றிய சிந்தனைக்கு ஆளாவேன்.

=> 14) நான் திருட மாட்டேன்.

=> 15) நான் பொய் சொல்ல மாட்டேன்

=> 16) நான் எந்தவிதமான தீய போதிக்கும் அடிமை ஆக மாட்டேன்.

=> 17) நான் மதுவை குடிக்க மாட்டேன்.

=> 18) புத்த நெறியின் தம்மம் என்கிற அறவழியில் உள்ள மூன்று கொள்கைகள் ஆன தியானம் ,சீலம் ,கருணை என்னும் அடித்தளங்கள் மீதே என் வாழ்கையை அமைத்து நடப்பேன்.

=> 19) மனித இனத்தின் என்னுடைய பழமையான குடியானவர் வகுப்பாரின் முன்னேற்றத்தை தடுத்தும்,அந்த மனித பிறவிகளை இழிவானவர்களாக சம உரிமை அற்றவர்களாக எண்ணி ஒடுக்கியதும் இந்து மதமே.எனவே அத்தகைய இந்து மதத்தை நான் துறக்கிறேன்.
=> 20) இதுதான் (இப்படி இந்து மதத்தை துறந்து வெளியேறுவதுதான்) உண்மையான தம்மம் என்கிற அறவழி என்பதாக புரிந்து கொள்கிறேன்.

=> 21) ஒரு புதிய பிறவியை (இப்பொழுதான் ) எடுத்திருப்பதாக நான் எண்ணுகிறேன்.

=> 22) இந்த நேரம் முதல் இனிமேல் புத்தருடைய போதனைகள் வழியே நடந்து கொள்வேன் என்னும் சூளுரையை எடுத்து கொள்கிறேன்.

=> 23) புத்தமே எனக்கு அடைக்கலம்

=> 24) தம்மமே எனக்கு அடைக்கலம்

=> 25) சங்கமே எனக்கு அடைக்கலம்

இன்னொரு கருத்தை மிகவும் ஆழமாக அம்பேத்கர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.கடவுள் ஆத்மா என்பதெல்லாம் புத்த கொள்கை அல்ல.

இன்னும் கொஞ்சம் ,கொஞ்சம் சிலர் நழுவி சிலர் என்ன சொல்கின்றார்கள் என்றால்,கடவுளை பற்றி கவலை படாதே என்று புத்தர் சொன்னார் என்று சொல்லுகின்றனர்.

ஆனால் புத்தர் தெளிவாகவே சொல்லி விட்டார் கடவுள் இல்லை என்று .கேள்வி கேட்கின்றார்கள் .அப்பொழுது கடவுளை பற்றிய கருத்தை சொல்லுகின்றார்."கடவுள் தான் உலகத்தை உண்டாக்கினார் ;மனிதனை உண்டாக்கினார் என்றால் ,எல்லாம் அவன் செயல் என்று சொன்னால்அப்புறம் மனிதனுக்கு என்ன வேலை?" என்று அம்பேத்கர் கேட்டார்.
பக்கம் (44,45,46,47,48)
அவர் நாஸ்திகர்

டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர் .அதன் காரணமாகவே அவர் ஒரு பெரிய நாஸ்திகர் .அவர் தனது சொந்த அறிவை உபயோகித்தது தான் கண்டதை தைரியமாக எடுத்து சொல்லி இருக்கிறார்.நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாம் எடுத்து சொல்ல பயப்படுவார்கள்.அவர் இது போலல்லாமல் தைரியமாக எடுத்து சொல்லி வந்திருக்கிறார்.
--தந்தை பெரியார் ,இந் நூல் பக்கம் 81

அம்பேத்கருக்கு மாபெரும் துரோகம்

நண்பர்களே நம்முடைய நாட்டில் நம் நண்பர்களில் பல பேர் கூட பவுத்தத்தை பற்றி பேசுகிறார்கள்.அம்பேத்காரை பின்பற்றி விட்டோம்.நாங்களும் பவுத்தத்தை பின்பற்றி விட்டோம் என்று சொல்லி விட்டு, எல்லா இந்து கடவுள்களின் படங்களையும் ஒன்று விடாமல் டஜன் கணக்கில் மாட்டி வைத்து கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் படங்களை மாட்டி வைத்து கொண்டு,அம்பேத்கர் அவர்களுடைய படத்தையும் மாட்டி வைத்து கொண்டிருந்தால் ,இதை விட அம்பேத்கருக்கு செய்யக் கூடிய மாபெரும் துரோகம் வேறு இருக்க முடியாது.

ஏனென்றால் தலைவர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவது,அம்பேத்கர் ஜெயந்தி என்று சொல்வது ,சிலைக்கு மாலை போடுவது - இதுதான் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் காட்டுகின்ற மரியாதையா? அவருடைய கொள்கைக்கு திரிபுவாதம் இல்லாமல் நடக்க வேண்டும்.அம்பேத்கர் அவர்கள் எதை சொன்னாரோ அதை கடை பிடிக்க வேண்டும்.
--கி.வீரமணி ,இந்நூல் பக்கம் 44

'தம்மம்' என்றால் என்ன ? தர்மம். புத்த நெறி என்ன?புதர் கற்பித்த அறவழி ."புத்தம் சரணம் கச்சாமி ,தம்மம் சரணம் கச்சாமி ,சங்கம் சரணம் கச்சாமி " என்று இந்த அமூன்று வாக்கியங்களை புத்தரின் தொண்டர்கள் உச்சரிப்பார்கள்.
என்னை புதரிடத்தில் ஒப்படைத்து கொள்கிறேன்.அதாவது பகுத்தறிவு சிந்தனைக்கு ஒப்படைத்து கொள்கிறேன் என்று பொருள் .இரண்டாவது தம்மம் சரணம் கச்சாமி என்று சொல்லுகின்ற பொழுது ,அந்த கொள்கையில் மாறாமல் இருப்பேன் .அந்த கொள்கையில் என்னை ஒப்படைத்து கொள்கிறேன்.
மூன்றாவதாக ,சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுகின்ற பொழுது ,அந்த அமைப்புக்கு நான் என்றைக்கும் துரோகம் செய்யாமல் ,அந்த அமைப்பை பாதுகாத்து பரப்புபவனாக இருப்பேன் என்பது தான் அதன் பொருள்.

1 comment:

NAREN said...

good to know everyone


weather counter Site Meter