Pages

Search This Blog

Sunday, November 7, 2010

கடவுள் நல்லவரா கெட்டவரா?-கமல்

தீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட் டினார்.

ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?

கமல் பதில்: நான் கட வுளையே பார்க்கவில் லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்?

என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். பகுத்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான் - சுவைத்திருப்பான்.

இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன் றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு.

என்னுடைய வாழ்க் கையை நானே தீர்மானிக் கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கை யில் தலையிட முடியாது.

நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன் - கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன் மிகம் நம்பிக்கையை மழுங் கடித்து சிந்தனையை நிலை யானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறது.

ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்பு கிறேன். என்னையே கேள்வி கேட்டு, என் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்பு கிறேன். எனது உடலை புதைக்கும் போதோ, எரிக் கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார்.

ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன் னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும்.

இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது?

நாம் சொல்லத் தேவை யில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக் கிறார்.

ஒரு காலத்தில் விடி யற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக் கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வ மான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் - 7-20-2009) என்றாரே.

எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர் களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமல ஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவ ரையும் தந்தை பெரியார் சிந் தனை புரட்டிப் போடும் தான்.

அய்யயோ, அந்தத் தாடிக்கார கிழவரின் பேச்சைக் கேட்க மாட்டேன்; வரிகளைப் படிக்க மாட் டேன்; அப்படிக் கேட்க நேர்ந்தால், படிக்க நேர்ந் தால் நான் திருந்தி விடு வேன், என்ன செய்வது? என்று கதறும் கோழை களிடத்தில் பெரியாருக்கு என்ன வேலை? அவருக்கு வேறு வேலையில்லையா?
- மயிலாடன்
http://www.viduthalai.periyar.org.in/20101107/news01.html

1 comment:

Santharam's said...

அல்லா கெட்டவரா? நல்லவரா? மொஹம்மது நபி நல்லவரா? கெட்டவரா?

இந்த மாதிரியும் கேள்வி கேட்டு பதிலும் சொல்ல வேண்டியது தானே?


weather counter Site Meter