Pages

Search This Blog

Friday, November 12, 2010

கல்கிக்கு வந்த எரிச்சல்-தமிழர்களே உஷார்! உஷார்!!

கேள்வி: நாளை நமது ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, பார்ப்பனீயத்தைப் பாதுகாக்கும் ஆட்சி ஏற்படுமானால் என்ன ஆகும்? என்று முதல்வர் தரம் தாழ்ந்து கேட்டிருக்கிறாரே!

பதில்: இனவுணர்வு அரசியல் என்ற பழைய பெருங்காய டப்பாவை மீண்டும் மீண்டும் தட்டிப் பார்க்கிறார் கலைஞர். அங்கே ஒன்றும் இல்லை என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை.

(கல்கி, 14.11.2010, பக்கம் 5)


இப்படி சொல்கிற கல்கிக்கு இனவுணர்வே கிடை யாதா? கல்கி அலுவலகத்திலும், இந்து அலுவலகத்திலும், டி.வி.எஸ். நிருவாகத்திலும் நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக்கும் பார்ப்பனர்கள் எத்தனை மடங்கு அதிக சதவிகிதத்தில் பணியாற்றுகிறார்கள் என்ற கேள்விக்கு நாணயமான முறையில் கல்கி பதில் சொல்லுமா?

முதலமைச்சராகவிருந்த ஓமாந்தூர் இராமசாமி அவர்களை தாடி இல்லாத ராமசாமி நாயக்கர் என்று பார்ப் பனர்கள் ஏன் கூறினார்கள்? பார்ப்பனர் அல்லாதாருக்கும் வேலை வாய்ப்பில் கொஞ்சம் கருணை காட்டினார் என்பதால்தானே? காந்தியார்வரை சென்று புகார் செய்தது யார்? பார்ப்பனர்கள்தானே!

காந்தியாரிடம் சென்று புள்ளி விவரங்களோடு ஓமாந்தூரார் விளக்கியபோதுதான் காந்தியாருக்கே பார்ப்பன விஷமம் - வல்லாண்மை என்னவென்று தெரிந் தது. உண்மையைத் தெரிந்துகொண்ட காந்தியார் பார்ப் பனர்களைப் பார்த்து, பிராமணர்களாகிய நீங்கள் ஏன் பிணம் அறுக்கும் டாக்டர்களாக ஆகவேண்டும்? வேதம் படிக்கவேண்டியதுதானே? என்று கேட்டாரா - இல்லையா?

காந்தியாரைச் சந்தித்தபின், தம்மைப்பற்றிப் புகார் கூறி எழுதிவரும் இந்து ஆசிரியரை அழைத்து, உங்கள் அலு வலகத்தில் எத்தனைப் பேர் பார்ப்பனர் அல்லாதார் பணி யாற்றுகின்றனர்? என்று கேட்டபோது விழி பிதுங்க வில்லையா?

இந்த யோக்கியதை உள்ள கூட்டம்தான் உண்மையைச் சொன்னால் இன உணர்வு என்பது பழைய பெருங்காயம் இருந்த பாண்டம் என்று சொல்கிறது. இந்தப் பிரச்சினை வெடித்தால் தங்கள் இனத்துக்கு ஆபத்து என்ற உணர்வில் துடிக்கிறது.

பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் அல்லது ஆரியர் - திராவிடர் என்பது ஏதோ தந்தை பெரியாராலும், திராவிட இயக்கத்தாலும் கற்பனையாக உருவாக்கப்பட்டது என்பதுபோல எழுதுகிறார்களே, இது உண்மையா?

பார்ப்பனர்களுடைய வேதங்களும், மனுதர்மங்களும் பிராமணர் - சூத்திரர்பற்றிப் பேசவில்லையா? ஒரு குலத்துக் கொரு நீதி என்பதுதான் தர்மம் என்று கூறவில்லையா?

1967 ஆம் ஆண்டு தேர்தலில் பூணூலைப் பிடித்துக் கொண்டு தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடச் சொன்னதன் பொருள் என்ன? ஏன் பிராமணர்களுக்குத் தனி வேண்டு கோள் விடுத்தார்? பூணூல் என்று ஏன் குறிப்பிட்டுச் சொன்னார்?

தேர்தல் முடிந்து தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், தி.மு.க. பழைய பெருங்காயம் இருந்த பாண்டம் (இப்பொழுது கல்கி பயன்படுத்திய அதே உதாரணத்தை) அதனைத் துடைத்து எடுத்துவிட்டேன் என்று ஆச்சாரியார் (ராஜாஜி) இதே கல்கியில் எழுதினாரோ - அப்பொழுது தந்தை பெரியார் என்ன கூறினார்? நான் கண் ஜாடை காட்டினால் அவர்கள் என்னிடம்தான் வருவார்கள் என்று சொல்லவில்லையா?

அதேபோல் நடந்ததா - இல்லையா? 1971 பொதுத் தேர்தலில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்று வெளிப்படையாகத் தேர்தல் பிரச்சாரம் நடக்கவில்லையா? அதன் காரணமாக தி.மு.க. அமோக வெற்றி பெற்றதே - கல்கி மறந்துவிட்டதா?

இந்தத் தேர்தலில் (1971) என்ன சிறப்பு அம்சம் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா?

முன்பு தந்தை பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்தைத் துவங்கினார். இந்தத் தேர்தலில் ராஜாஜி அதனைத் துவக்கியுள்ளார் என்று பதில் கூறினாரே (3.3.1971) - அதன் பொருள் என்ன?

திருவொற்றியூரில் முதலமைச்சர் ராஜகோபாலாச் சாரியார் பேசினாரே (18.9.1953) தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்றாரே இதற்கு என்ன வியாக்கியானம்?

ஆச்சாரியார் சொன்னதைத்தானே தந்தை பெரியார் வேறு சொற்களில் சொன்னார்?

இன்றைய அரசியல் போராட்டம் என்பதே கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் எல்லாக் கட்சிகளுக்கும் சமுதாயத் துறைத் தத்துவங்கள்தான் அடிப்படை லட்சியமே தவிர, மற்றபடி வாயால் சொல்வதற்குக்கூட கொள்கைகள் கிடையாதே! அதாவது எதுவும் பார்ப்பனர்கள் - பார்ப்பனர் அல்லாதார் என்ற அடிப்படையைக் கொண்டதுதான் (விடுதலை, 22.5.1971) என்றாரே தந்தை பெரியார்.

ஆச்சாரியாரே ஒப்புக்கொண்ட இந்த இனப் போராட் டத்தைத்தான் கலைஞர் உண்மையைச் சொல்லும்போது கல்கிகளுக்கு ஏன் உள்ளங்கால் முதல் உச்சிக்குடுமிவரை எரிச்சல்?

இவ்வளவு எழுதுகிறதே கல்கி - அவாள் வீட்டில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுவதில்லையா? பூணூல் புதுப்பிப்பு நடைபெறுவதில்லையா?

சட்டமன்றத்தில் நான் பாப்பாத்திதான் என்று ஜெய லலிதா சொன்னபோது கல்கி இதே பாணியில் எழுதாதது ஏன்?

அதுவும் பார்ப்பனப் புத்திதானே? கலைஞர் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் மீண்டும் 1971 நடக்கும் என்ற உதறல்தான் கல்கிகளை இப்படி எழுதச் சொல்கிறது.

தமிழர்களே உஷார்! உஷார்!!
தொடர்புடைய இரண்டாம் பதிவு கல்கிக்கு வந்த எரிச்சல் (2)
http://www.viduthalai.periyar.org.in/20101112/news06.html

1 comment:


weather counter Site Meter