Pages

Search This Blog

Showing posts with label ராமன். Show all posts
Showing posts with label ராமன். Show all posts

Saturday, October 2, 2010

பயிரை மேயும் வேலிகள்! -மின்சாரம்

அப்பாடா! ஒரு வழியாகப் பிரச்சினை தீர்ந்தது என்று பெருமூச்சு விடுகின்றனர் சிலர்; இது என்ன தீர்ப்பு _ கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு என்று விமர்சனம் செய்பவர் சிலர். அடித்த-வனும், அடிபட்டவனும் ஒன்றுதானா என்று ஏக்கப் பெரு மூச்சுவிடுபவர் சிலர்.
இப்படியெல்லாம் பழைய கதை-களைத் தோண்ட ஆரம்பித்தால், அது திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கே ஆபத்து வந்துவிடும். அதற்கு ஏராளமாக ஆதாரங்கள் உண்டு. ஆய்வு நூல்களும் வெளிவந்து இருக்கின்றனவே - _ வீணாகப் புதிய புயலை உண்டாக்-கலாமா அலகாபாத் உயர்நீதிமன்றம் என்று வினா எழுப்புவோர் உண்டு.
நமக்கு ஏன் இந்த வீண் வம்பு என்று பந்தை உச்சநீதிமன்றம் பக்கம் தள்ளி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து-விட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம் என்பது சிலரின் கணிப்பு. 1949 டிசம்பர் 23ஆம் தேதியன்று திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் நுழைந்து பாபர் மசூதியின் மய்யப் பகுதிக்குள் _ அதுதான் ராமன் பிறந்த இடம் என்று கூறி ராமன் பொம்-மையை வைத்தார்களே, அந்த அத்து-மீறல் திருட்டுத்தனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விட்டதா? அப்படி-யென்றால் மதக்காரணத்தைக் காட்டி இதுபோன்ற சட்ட விரோதமான காரி-யங்களில் ஈடுபடுவது சரிதான் _- அது ஒன்றும் குற்றமில்லை என்று உயர்நீதி-மன்றம் கூறி விட்டதாகக் கருதலாமா?
ராமன் பிறந்த இடம் அந்த இடம்தான் என்று சொன்னதன் மூலம் ராம ஜென்ம பூமிக்காரர்களின் குரலுக்கு நியாய வண்ணத்தைத் தீட்டும் ஓவியர்-களாக நீதிபதிகள் மாறி விட்டார்களா?
புராணம் மற்றும் இதிகாசங்களில் புனையப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள் எல்லாம் வரலாற்று மாந்தர்களாக நினைப்பதை பொது அறிவு உடைய-வர்களும், வரலாற்று ஆசிரியர்களும் எப்படி எடுத்துக் கொள்ளப் போகி-றார்கள்? அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு இதன்மூலம் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறதா _ இல்லையா?
ராமன் பிறப்பு என்பதை ஏற்கும்போது, அதே இராமாயணத்தில் ராமன் எப்படிப் பிறந்தான் என்று வால்மீகி வரைந்து தள்ளியிருக்கிறாரே -_ குதிரையோடு தசரதனின் மனைவி-மார்கள் ஓர் இரவு முழுவதும் கட்டிப் புரண்டார்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்? புரோகிதர்களிடம் தசரதனின் மனைவிமார்கள் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள்மூலம் அப்பெண்கள் கர்ப்பம் தரித்தார்கள் என்பதையும் கனம் நீதிபதிகள் கவனத்தில் கொள்ளாமலா இருந்திருப்பார்கள்?
சட்டம் எல்லாம் தேவையில்லை -_ இது மதசம்பந்தமான நம்பிக்கைப் பிரச்சினை _ இதில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது _ -கூடாது என்று சங்பரிவார்க் கூட்டம் உரக்கக் கூறிக் கொண்டு இருந்ததே -_ அந்தக் கூற்றுக்கு ஆமாம் சாமி போட்டு விட்டனரா நீதிபதிகள்?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலை அறிக்கையில் (1.10.2010) குறிப்பிட்டி-ருந்தபடி- _ பிற்காலத்தில் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா? சட்டத்தை நெட்டித் தள்ளிவிட்டு, நம்பிக்கை எனும் வெளிச்சத்தில்தான் இனி நீதிபதிகள் தீர்ப்புகளை தோண்டி எடுப்பார்களோ!
சாட்சியம், ஆதாரம், ஆவணங்கள் என்பவைகளை எல்லாம் குழி தோண்டிப் புதைத்துவிட்டு நம்பிக்கை என்னும் போலிக் கோபுரங்களை எழுப்பிடும் ஆபத்துக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்து விட்டதோ அலகாபாத் உயர்நீதிமன்றம்!
இந்த நம்பிக்கை என்பது இந்து-மதக்காரர்களுக்கு மட்டுமே உள்ள ஏகக் குத்தகையா? அதே நம்பிக்கையைக் காட்டி கிறித்தவர்களோ, முஸ்லிம்-களோ, பவுத்த மார்க்கத்தவர்களோ பிரச்சினைகளைக் கிளப்பினால் நாட்டின் கெதி என்னாகும்?
விநாயகன் கோயில்கள் எல்லாம் ஒரு காலத்தில் புத்தர் விகார்கள் அல்லவா! புத்தருக்குத்தான் விநாயகன் - _ தலைவன் என்று பெயர் இருந்தது என்பதற்கு எதிர்க்க முடியாத ஆதாரங்கள் உண்டே!
சாஸ்தா என்றுகூட புத்தருக்குப் பெயருண்டு. அந்தப் பெயரைத் திருடி அய்யப்பனுக்கு வைத்துக் கோயில் எழுப்பி விட்டனரே _ அய்யப்பன் கோயில்களை மீண்டும் புத்தர் விகார்-களாக மாற்றிட அலகாபாத் உயர்நீதி-மன்றம் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்துவிட்டது என்று நம்பலாமா?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று நீதிமன்றம் பச்சை மையால் கையொப்-பம் போட்டுக் கொடுத்து விட்ட பிறகு பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் நியாயவான்கள் ஆகிவிட்டார்களா? இந்தத் தீர்ப்பு வெளிவந்த அந்தக் கணமே அத்தனைக் குற்றவாளிகளும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று பொருளா?
நிலுவையில் இருக்கும் அந்த வழக்கில் அலகாபாத் தீர்ப்பு முக்கிய இடம் பெற வாய்ப்பு _ இருக்குமோ!
ஏற்கெனவே ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் -_ இந்து சாம்ராஜ்யத்தை நிறுவப் போகிறோம் என்று இசுரேல் வரை சென்று திட்டம் தீட்டியவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டது என்று அந்த வெறிபிடித்த காவிக் கொடி அனுமார்கள் பூமிக்கும் வானுக்கும் தாவிக் குதிக்க மாட்டார்களா? அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமா?
அயோத்தியைத் தவிர காசி உள்பட ஆயிரக்கணக்கான மசூதிகளின் பட்டியல் எங்கள் கைகளில் இருக்கின்றன என்று கனல் கக்கிக் கொண்டிருந்தவர்களுக்குக் கைலாகு கொடுத்துவிட்டது நீதித்துறை என்று குற்றம் சொன்னால், அது தவறாகுமா?
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளது. அது என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகிறதோ!
வேலியே பயிரை மேயலாமா என்ற கேள்வியை இனியாரும் கேட்க முடியாது! மேய்கிறது! மேய்கிறது!! மேய்ந்துகொண்டே இருக்கிறது!!! 
http://www.viduthalai.periyar.org.in/20101002/snews01.html

Thursday, September 30, 2010

இந்து முன்னணியே! இந்து முன்னணியே! இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?

சேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி - பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள்! ஊர்வலத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது.
அவ்வளவுதான்! மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனையும் பிரார்த்தித்தது தினமணி - தி.மு.க. தோற்க வேண்டுமாம்
முடிவு என்ன தெரியுமா? ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார்? தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.
இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.
இந்து முன்னணியே! இந்து முன்னணியே! இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?
ஆஸ்திகம் - நாஸ்திகத்தை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ்திகம் வென்றுவிட்டதே - நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா? வீண் சவடால் வேண்டாம்! ஓடாதே, நில்!
------------மின்சாரம் அவர்கள் 10-7-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_11.html

weather counter Site Meter