Pages

Search This Blog

Sunday, August 25, 2013

மதமும் சாமியும் - தந்தை பெரியார்

இன்று நான் குறிப்பிட்ட நேரத் திற்கு வந்து சேர்ந்து விட்டேன். ஆனாலும் மிக்கக் களைப்போடு வந்திருக்கிறேன். சரியாக 24 மணி நேரம் இரயிலில் பிரயாணம் செய்து விட்டு - 10, 15 மைல் மோட்டாரிலும் வந்திருக்கிறேன். ஆகையால் இன் றைய விஷயத்தைப் பற்றி நான் சரிவரப் பேசமுடியா தென்றே கருது கிறேன். அன்றியும் அதிக நேரமும் பேசமுடியாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நிகழ்ச்சிக் குறிப்பில் எனக்கு இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் விஷ யம் "இந்தியப் பொருளாதாரம்" என்பதாகும். இது என்னைக் கேட்டுப் போட்டதல்ல என்றாலும், எந்தத் தலைப்பிலானாலும் என்னுடைய சங்கதி ஏதோ அதைத்தான் சொல் லுவது என் குணம் என்பது நீங்களும் தலைவரும் அறிந்ததேயாகும். ஆனா லும் பொருளாதாரம் என்னும் தலைப்பும் மிக்க நல்ல தலைப்பே யாகும். இதன் மூலம் எனது சங் கதியைச் சொல்ல முடியாவிட்டால் பின் எதன் மூலம்தான் சொல்லக் கூடும்? ஆனால், எனக்கிருக்கும் கஷ்டமெல்லாம் அதிக நேரம் பேசமுடியாதென்பதேயாகும். ஆதலால் மன்னிக்கக் கோருகின்றேன்.
சகோதரர்களே! பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம்ம நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத் தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன்காலத்தில் எல்லாம் பொருளை உடைத்தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந் தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணங் காசு - புழக்கமும் கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்டமாற்றை அடிப் படையாகக் கொண்ட தாகவே இருக் கும். ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவார்கள். கைத்தொழில் காரர்கள், கூலியாள்கள், ஏவான்கள் எல்லோருக்கும் தானியமே கொடுப் பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் பூமி மானியம் விடுவதே தவிரப் பணமாக ஏதும் கொடுப்ப தில்லை. எனக்குத் தெரிய 40,50 வருஷங் களுக்கு முன் வேஷ்டி கொடுப்பவன், உலோகப் பாத்திரம் கொடுப்பவன், நகை செய்து கொடுப் பவன். தோட்டங்களுக்குக் கலப்பை, ஏர், செய்து கொடுப் பவன், செருப்புத் தைத்துக் கொடுப்பவன், சுவர் வைப் பவன் முதலிய வர்கள் எல்லோரும் தானியம் தான் வாங்கிக் கொள்ளு வார்கள். சில ஆட்களுக்கு வருஷத் திற்கு இவ்வளவு என்று இருக்கும்.
பெருத்த மிராசுதாரர்களிடம் பார்த் தாலும் தானியத்தைத் தான் பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டி, போட்டு வைத்திருப்பார்கள். பண்டமாற்றைத் தவிர சாதாரண ஜனங்கள் பணமாய்ப் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும். பெருத்த மிராசுதாரர்களிடமும், அரசாங்கப் புழக்கம் முதலியவற்றிலும் பணம் புழங்கினதானாலும் அதுவும் மிகச் சிறு நாணயமாகத் தான் இருக்கும். ரூபாய் என்கிற பெயர் கூட இந்த நாட்டுப் பாஷையல்ல. நாணயமும் அல்ல. சின்னப்பணம் அதாவது ரூ 1க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும் எத்தனை பணம் என்றுதான் கேட்பார்கள். செல்வ முள்ள வனையும் பணக்காரன் என்று தான் சொல்லுகின்ற வழக்கம் இன்றும் உண்டு. அரசியல் அபராதம் முதலியவற்றிலும் 100 பணம் 200 பணம் 500 பணம் என்று பணக் கணக்கில் தான் கணக்குச் சொல்லு வதாகும். சமீப காலம் வரை கூட மலையாளத்தில், திருவாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்தில் சிவில் கோர்ட் டில் ரூபா என்று பிராது போடுவ தில்லை. 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதா னாலும் அதைப் பணமாகப் பெருக்கி அந்தப் பண எண்ணிக் கையைக் காட்டித்தான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது. சில இடத்தில் இன்றும் இருக்கிறது.
ஆகவே ரூபாய் என்பதும், பவுன் என்பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக் கூடிய நிலை ஏற்பட்டதே பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையை விடச் சற்று உயர்வடைந்தது என் பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே பொது வாகப் பார்த்தால் பொருளா தாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்ல மாட்டேன். மற்ற நாட்டை விட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்த தல்ல. இந்தியாவை நம்பி அனேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக்
கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லையானால் வெள்ளைக் காரனுக்கு இங்கு வேலையில்லை. இது போலவே இதற்கு முன் வெளி நாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கும், முன் வந்த ஆரியர்களுக்கும் இந்த நாட்டில் வேலையே இல்லை.
ஆகவே இவ்வளவு உயர்ந்த பொரு ளாதார நிலையுடைய இந்திய நாடு இந்த நாட்டு மக்களில் பெரும்பான் மையான பேர்களை வயிறார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானமோடு பிழைக்கவும் முடியாதபடி வேறு பல காரியங்கள் கொடுமைப் படுத்துகின்றன. அவற்றில் முக்கிய மானவை மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும்.
மனிதன் எவ்வளவு சம்பாதித் தாலும், மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு விளைந் தாலும் அனேகமாய் எல்லாவற்றையும் மேல் கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளுகின்றன. அதிலும் உலகத் தில் வேறு எப்பாகத்திலும் காண முடியாத மாதிரி இந்த நாட்டில், இம் மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு, அந்த நிலை களைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்பதோடு, சகல போக்கியங்களையும் தங்க ளுக்கே உரிமையுமாக்கிக் கொண்ட தால், இந்த உலகம் உள்ள வரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஏற்பட்டு விட்டது. அது மாத்திர மல்லாமல் இந்த நாட்டில் அரசனுக்கும் குடி களுக்கும் இருக்கும் முறையும், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிராசுதாரனுக் கும் குடியான வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காத வனுக்கும் இருக்கும் முறையும், மேல் ஜாதிக்காரனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக் கும் இருக்கும் முறையும் பார்த்தால், இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகு அளவு கூட மாறி முன்னேற்ற மடைய முடியவே முடியாது என்பது எனது உறுதி. ஆகவே இம்முறைகளும், முன் சொல்லப்பட்ட மதம், கடவுள், அடுத்த ஜன்மம் ஆகிய கொள்கைகளும், இந் தியா எவ்வளவு வளம் பொருந்திய நாடானாலும், செல்வம் பொருந்திய தானாலும், பொன்விளையும் "புண் ணிய" பூமியானாலும், தபோதனர்கள், அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன் மார்கள், முனிகள், ரிஷிகள், மகாத் மாக்கள் பிறந்த நாடானாலும், பஞ்சநதி, அஷ்டநதி, ஜீவநதியாய் ஓடுகின்ற நாடானாலும், தரித்திரமும், கூலியும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தமான தேயாகும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.
நம்முடைய பொருளாதாரக் கஷ்ட மெல்லாம் முதலாவது, அனாவசிய மான செலவுகளும், அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமாகும். இந்திய மக்களின் 100க்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமான வற்றிற்கும், குருட்டுப் பழக்கம், மூட நம்பிக்கையானவற்றிற்கும், சோம் பேறியாய் வாழ்கின்றவர்களின் சுக போகத்திற்கும் செலவு செய்யப்படுவ தனாலேயே வீணாய் விடுகின்றன.
இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக் கமாகப் பொருள் களெல்லாம் போய்ச் சேரும்படியாகியும் விடுகின்றன.
மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும், சக்தியும் குறைந்த வரும் படிக்கே செலவாகும்படியான முறை களே இங்கு வெகு காலமாய் இருந்து வருகின்றன. அதாவது,
புத்தியைச் செலவழித்து, குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்விட்டது. இத்தி யாதி காரணங்களே இந்தியாவின் பொருளாதாரத்தின் குறைவிற்குக் காரணங்களாகும்.
சாமி, பூசை, உற்சவம், புண்ணி யம், யாத்திரை ஆகியவற்றின் பெயரால் தனித்தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும் கணக்குப் பார்த்தால், மனி தனின் மொத்த வரும்படியில் ஒரு குறிப் பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம்.
பிறகு, மதத்தைக் காரணமாய் வைத்து ஏற்பாடுகள் செய்திருக்கும் சடங்குகளையும், அவற்றிற்காகும் செலவுகளையும் கணக்குப் பார்த்தால், அதுவும் ஒரு குறிப்பிட்ட பாகத் தைக் கவர்ந்து கொள்வதைப் பார்க்க லாம்.
மற்றும், மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும்பான்மை யோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலிய வற்றால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்து அவசிய மான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படிச் செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும், கடன்காரர் களாகவும் இருக்கவேண்டிய தாய் இருக்கின்றது.
இவை மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற் சாலைகள், யந்திர சாலைகள் முதலியவை ஏற்பாடு செய்வ தற்கும் மார்க்கமில்லாமல், பொருள்களை எல்லாம் மேல்கண்ட சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்துக் கொள்வதோடு, கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவை செய்துவைத்தல், மற்றும் உற்சவம், பூசை ஆகியவற்றிற்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துகள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்கள் பெரும், பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன.
ஆகவே, இந்த மாதிரியான எல்லாம் - எல்லாப் பொருள் களும் நாசமாகிக் கொண்டும், வீணாகிக் கொண்டும் இருக்கையில், இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில்தான் பொருளா தாரத்தில் சீர் அடைய முடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நம் நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத் தையும் சற்றுக் கவனித்துப் பாருங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை மேல் நாடுகளைப் பார்த்து நாளுக்கு நாள் செலவை அதிகரித்துக் கொண்டு வருகின்றோம். போக போக்கியங் களை அதிகப் படுத்திக் கொள்ளு கின்றோம். முன்னையை விட அதாவது 30,40,50 வருஷங்களுக்கு முன் நாம் இருந்ததை விட அதிகமான ஆடம்பரங்களை விரும்புகின்றோம். மேல்நாட்டு நடை, உடை பாவனை களைக் கண்டு காப்பியடித்துப் படிப்படியாக உயருகின்றோம். இவை எல்லாம் நமக்குத் தகாதென்றோ, குற்றமேன்றோ சொல்ல வரவில்லை. ஆனால், மேல்நாட்டார் எப்படித் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தனது வாழ்வின் சுக போகத்தையும் உயர்த்திக்கொண்டு போகின்றனரோ அதுபோலவே, நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டும், வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வரு வாய்க்கு வகை செய்து கொண்டும் தானே அதில் பிரவேசிக்க வேண்டும். அதுவுமில்லாமல், இதுவு மில்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன் அடையக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். மேல் நாட் டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து நம்மைப் பார்க்கிலும் பன்மடங்கு இலாபம் அடை கிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளு கிறார்கள். நமக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 அணா. மேல் நாட் டானுக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 ரூபாய். இதற்குக் காரணம் அவன் வேலை துரிதமே ஒழிய, வேலை சாமர்த்தியம் அல்ல என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 10 மணி நேரம் செய்யும் வேலையை மேல் நாட்டான் ஒரு மணி நேரத்தில் செய்து விடுகிறான். அதற்கேற்ற சாத னங்களை அவன் கையாளுகிறான். அதற்காகவே மேல் நாட்டுச் செல் வத்தையும், அறிவையும், ஊக்கத்தை யும் செலவு செய்து அந்த நிலை அடைந்திருக்கின்றான். அப்படிப்பட்ட வனைப் பார்த்து வேலை செய்வ திலும், சம்பாதிப்பதிலும் காப்பி அடிக் காமல் அதாவது, அதுபோல் நடக்கா மல், அவன் அனுபவிப்பதில் மாத்திரம் காப்பி அடித்து, அவனைப் போல் நடக்க ஆரம்பித்தால் சாத்தியப்படுமா? - பொருளாதாரம் இடம் கொடுக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.
நமது நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் செத்துப் போன கைத் தொழில்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்கின்றார்கள். உதாரணமாக இராட் டினத்தில் நூல் நூற்கவேண்டும், கைத்தறியால் வேஷ்டி செய்ய வேண்டும் என்கின்றார்கள். போதாக் குறைக்கு தக்களியில் நூல் நூற்பது தேசியப் பொருளாதார பக்தியாக, குழந்தைகளும் நாமும் கற்பிக்கப்படு கிறோம். ஒரு நாளைக்கு ஒரு பெண் இராட்டினத்தில் நூல் நூற்றால், கால் ராத்தல் அல்லது காலேவீசம் ராத்தல் நூற்று 1அணா அல்லது அதிகமானா லும் 0-1-6 அணா கூலி தான் அடை யக்கூடும். அதுவும் வெகு மோசமான சரக்கைத்தான் உற்பத்தி செய்யக் கூடும். மேல்நாட்டானோ ஓர் ஆள் ஒரு நாளையில் இதை விடக் குறைந்த நேரத்தில், இதை விடக் குறைந்த கஷ்டத்தில், இதைவிட உயர்ந்த சரக்காக 5 ராத்தல் 6 ராத்தல் நூற்று, தினம் இரண்டு ரூபாய் சம் பாதிக்கிறான். ஆகவே மேல் நாட்டார் தினம் 2 ரூ சம்பாத்தியத்திற்கும், நம் நாட்டான் தினம் 2 அணா சம்பாதிக் கவும் இதுவும், மற்றும் இது போலவே விவசாயத் துறையிலும், வியாபாரத் துறையிலு முள்ள காரணங்களாகு மேயல்லாமல் வேறு ஒரு காரணமு மல்ல. சமூக சீர்திருத்தம் சம்பந்த மான விஷயங்களுக்கு, நம் பண்டி தர்கள் எப்படித் தொல்காப்பியர் காலத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்து அந்தக்கால நாகரி கத்தைக் கொண்டு சமூக முன் னேற்றம் செய் யப் பார்க்கின்றார்களோ அது போலவே, நமது தேசியப் பொரு ளாதாரப் பண்டிதர்கள் அதைவிட முந்திய காலத்திய கைத்தொழில் களைக் கண்டுபிடித்து, அந்தத் துறை யில் பொருளா தாரத்தை முன்னுக்குக் கொண்டுவரப் பார்க்கின்றார்கள்.
ஆகவே, இந்தியப் பொருளாதார நிலைக்கு இந்தியர்களும், அவர்களது மதமும், கடவுளும், சடங்குகளும், கர்நாடகத்தில் (பழமையில்) பித்துக் கொண்ட தலைவர்களுமே காரண மல்லாமல் வேறு ஒன்றும் முக்கியக் காரணமல்ல என்பது என் அபிப் பிராயம்.
சகோதரர்களே! வருஷம் ஒன் றுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மதம், கடவுள், சடங்கு ஆகியவற்றிற் குச் செலவா வதை மறுக்கின்றீர் களா? பல கோடிக்கணக்கான ரூபாய் கள் சாமி, கோவில், பூசை, உற்சவம், நகை, வாகனம் ஆகிய வற்றிற்காக அடங்கி, முடங்கிக் கிடக்கின்றதை நீங்கள் மறுக்கின் றீர்களா? எனவே இந்தத் துறைகள் எல்லாம் புதிய முறை  - ஆராய்ச்சி முறை - மேல் நாட்டு முறை ஆகியவற்றில் கைத் தொழிலும், வியாபாரமும், விவசாய மும் செய்யப்பட்டு, குருட்டுப் பழக்கம், மூடநம்பிக்கை, சுயநலக்காரர்கள் சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து மீண்டு விட்டோ மானால் நமது பொருளாதார நிலை தானாகவே உயருமா? இல்லையா? என்பதையும், அந்தப்படிச் செய்யாத காரணமே இன்றைய தரித்திர நிலைக்குக் காரணமா? இல்லையா? என்பதையும் நீங்களே யோசித்துப் பாருங்கள். எனவே, எனக்குக் கொடுத்த விஷயத் தின் தலைப்பில் எனக்குத் தோன்றி யதைத் தங்களுக்கு எடுத்துச் சொன்னேன். இது சரியா? தப்பா என்று யோசித்துப் பார்த்து, உங்கள் மனதிற்குச் சரி என்று தோன்றியதை வைத்துக் கொண்டு மற்றதை உடனே மறந்து விடும்படியாய்க் கேட்டுக் கொண்டு இவ்விஷயத்தை முடிக்கிறேன்.
27.12.1930இல் களக்காடு அய்க்கிய முஸ்லிம் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, (குடிஅரசு 18.1.1931).
25-08-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 3

Monday, August 19, 2013

சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார் - மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம்


நீடாமங்கலம் ஆக.19- சமு தாயப் புரட்சியாளர்களில் முதன் மையானவர் தந்தை பெரியார் என்று புகழாரம் சூட்டிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள். இடஒதுக்கீட்டுப் பாதையில்  குறுக்கிட்டுச் சிலர் வித்தைகளைக் காட்டுகிறார்கள். அவற்றையும் சந்தித்து சமூகநீதியை வென் றெடுப்போம் என்றார். நீடாமங் கலத்தையடுத்த வையகளத்தூரில் நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது (17.8.2013).
சமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் முதலிடம் வகிக்கிறார்
ஆண்டொன்று போனால், வய தொன்று போகும் என்று சொல் வார்கள், அதேபோலத்தான், ஆண் டொன்று போனால், பழைய நினை வுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். நம்முடைய வரலாறு நமக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது. அந்த வரலாற்றை உருவாக்கி யவர்களுடைய அற்புதமான செயல் கள் நம்முடைய நெஞ்சைவிட்டு அகலக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற விழாக்கள் நடைபெறு கின்றன. அந்த வகையிலே, சுதந்திரப் போராட்டக் காலத்தில், அரசியல் விடுதலைக்கு மட்டும் போராடாமல், சமுதாய விடுதலைக்கும் ஒரு போராட்டம் வேண்டும் என்று ஒரு இயக்கம் தமிழகத்திலே உருவாகியது.
அந்த இயக்கத்தினுடைய தனிப் பெரும் தலைவர் தந்தை பெரியார் என்பதிலே யாருக்கும் கருத்து வேறு பாடு இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், அகில இந்திய அளவிலே, விரல்விட்டு எண்ணக் கூடிய சமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் அவர்கள் முதலிடம் வகிக்கிறார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. கரும்பு தின்ன கூலி கேட்பார்களா?
அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு, அந்த இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமுதாய விடுதலைக்காகப் போராடிய மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள். அவருடைய 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடு கிறோம்; நீங்களும் வாருங்கள் என்று அழைத்தால், கரும்பு தின்ன கூலியை யாராவது கேட்பார்களா? ஆகவே தான் மகிழ்ச்சியோடு நான் வந்திருக் கிறேன். என்னுடைய இயக்கத் தோழர் கள் வந்திருக்கிறார்கள். குறிப்பாக, அருமை சகோதரர் திரு.திருநாவுக்க ரசர் அவர்களும், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களும் வந்திருக்கிறார்கள்.
திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என்று வழக்கமாக ஒரு கோட்டைக் கிழித்து, இந்தக் கோட் டிற்கு ஒருபுறம் இருப்பவர்கள் திரா விடர்கள்; அந்தப் பக்கம் இருப்ப வர்கள் தேசியம் என்று பிளவுபட்டோ அல்லது பிளக்கப்பட்டோ பேசுவ தும், எழுதுவதும் தமிழகத்தில் ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. ஆனால், வரலாறு அப்படி சொல்லவில்லை. வரலாறு என்ன சொல்கிறது? நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி என்று சொல்கிறது. திராவி டத்திற்கும், தேசியத்திற்கும் பகை, போட்டி, பொறாமை என்று எந்த வரலாற்றுக் குறிப்பும் கிடையாது. நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி இருந்தது உண்மைதான். நான் இல்லை என்று சொல்லவில்லை. அன்றைய காங்கிரசு கட்சி, அரசியல் விடுதலை முக்கியம் என்று போரா டியது. அன்றைய நீதிக்கட்சி சமுதாயப் புரட்சி முக்கியம் என்று போராடியது.
ஒரு மனிதனைப் பார்த்து, இடது கண் முக்கியமா? வலது கண் முக் கியமா? என்று யாராவது கேட்டால், கேட்பவன்தான் முட்டாள். இன்று அந்தப் போராட்டங்கள் எல்லாம் முற்றுப் பெற்று, ஒரு நிலையை அடைந்து, சுதந்திர நாட்டிலே, ஓரளவு சமுதாயப் புரட்சி ஏற்பட்ட நாட்டிலே வாழ்ந்து கொண்டி ருக்கும் நாம், திரும்பிப் பார்க்கும் பொழுது, அரசியல் விடுதலை முக்கிய மான குறிக்கோளா? சமுதாயப் புரட்சி முக்கியமான குறிக்கோளா? என்று கேள் வியை கேட்பது கிடையாது; அப்படிக் கேட்டால், நாம்தான் முட்டாள். இரண் டும் தேவை; இரண்டும் முக்கியமாகும்.
அந்த வகையில், அந்தக் காலத்திலே வாழ்ந்தவர்கள், அவரவர்களுக்கு எது முக்கியமாகப்பட்டதோ, சிலருக்கு அரசியல் விடுதலை முக்கியம் என்று நினைத்தவர்கள், காங்கிரசு இயக்கத்திலே தன்னை இணைத்துக் கொண்டனர்.
சிலர் இல்லை, இல்லை, அரசியல் விடுதலை மட்டும் கிடைத்தால் போதாது. சமுதாயத்திலே ஒரு புரட்சி ஏற்பட வேண்டும்; சமுதாயத்திலே ஒரு மாறுதல் ஏற்படவேண்டும்; சமுதாயத்திலே ஜாதி யின் பெயரால், மதத்தின் பெயரால் இருக் கக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண் டும்; அதுதான் முக்கியம் என்று போராடி யவர்கள் தங்களை நீதிக்கட்சியிலே இணைத்துக் கொண்டார்கள்.
ஆக, நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி நடந்ததேயொழிய, திராவிட இயக்கத்திற்கும், தேசிய இயக் கத்திற்கும் போட்டி, பொறாமை, பகை என்பது கிடையாது என்பதை நான் வலி யுறுத்திச் சொல்லக் கடமைப்பட் டுள்ளேன்.
இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் வலியுறுத்தவில்லை!

இன்னும் சொல்லப்போனால், ஒரு முறை தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது சொல்கிறார், அரசியலிலே எங்களைப் பிற்போக் காளர்கள் என்று சிலர் சாடுகிறார்கள்? நாங்கள் எந்த வகையில் பிற்போக் காளர்கள். அரசியல் துறையில் காங்கிரசுக் காரர்கள் ஆங்கிலேயர்கள் அந்நியர்கள்; அவர்கள் இந்நாட்டைவிட்டு விரட்டப் படவேண்டும் என்று சொன்னால், நாங்கள் அதனை வேண்டாம் என்றா சொல்கிறோம்? காங்கிரசு பூரண சுயாட்சி வேண்டும் என்று சொன்னால், நாங்கள் கூடாது; கால் சுயாட்சி, அரை சுயாட்சியா வேண்டும் என்றா சொல்கிறோம்? காங்கிரசுகாரர்கள் குடிமக்களுக்கு வரி போடக்கூடாது என்றால், நாங்கள் வரி போட்டுத்தான் ஆகவேண்டும் என்றா சொல்கிறோம்? காங்கிரசுக்காரர்கள் மக்கள் எல்லாம் எழுத, படிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால், இல்லை, இல்லை அது தப்பு, ஒரு ஜாதியினர் மட்டும்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் படிப்பது குற்றம் என்றா சொல்கிறோம்? காங்கிரசுக் காரர்கள் மக்கள் எல்லாம் கோவிலுக்குள் யாதொரு தடையுமின்றி நுழையலாம் என்று சொன்னால், நாங்கள் அதை தவறு என்று சொல்கிறோமா?
காங்கிரசுக்காரர்கள் இந்த நாட்டில் வரி கொடுக்கும் சகல ஜாதி, மத வகுப்பு களுக்கும், நிர்வாகத்திலும், நீதியிலும்,
பதவியிலும் சம உரிமை அளிக்கப்படவேண்டும்; அதற்குள்ள குறைகள் தகர்க்கப்படவேண்டும் என்று சொன்னால், நாங்கள் அதைக் கூடாது என்றா சொல்கிறோம் என்று இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை வலியுறுத்தினாரே ஒழிய, இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் வலியுறுத்தவில்லை.
இன்னும் சொல்லப்போனால், இரண்டு இயக்கங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. அந்த ஒற்றுமைதான் பல நேரங்களில், இரண்டு இயக்கங்களையும் ஒன்று சேர்க்கிறது. இரண்டு இயக்கங்களையும் நெருங்கி வரச் செய்கிறது. சில நேரங்களில் இரண்டு இரண்டு இயக்கங்களும் நெருங்கி வருகின்றன; சில நேரங்களில் இரண்டு இயக்கங்களும் விலகி நிற்கின்றன. ஆனால், விலகி நிற்கும் நேரத்தில், திராவிடத்திற்கும், தேசியத்திற்கும் பகை என்று யாரும் கருதக்கூடாது என்று நான் மெத்த அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
படிப்பறிவினை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்!
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்பினை எல்லாம் இங்கே எடுத்துரைத்தார்கள். குறிப்பாக, திராவிடர் கழகத் தலைவர் பெரியவர் வீரமணி அவர்களும், அருமைச் சகோதரர் திருநாவுக்கரசு அவர்களும் பல வரலாற்றுக் குறிப்புகளைச் சொன்னார்கள், அருமைத் தம்பி ராஜேந்திரன் அவர்களும், டாக்டர் கனிமொழி அவர்களும் தங்களுடைய நேரடி அனுபவங்களையெல்லாம் இங்கே பகிர்ந்து கொண்டார்கள். அவற்றையெல்லாம் இங்கே விரிவாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான கால அவகாசமும் இல்லை. ஆனால், ஒன்றிரண்டு செய்திகளை மட்டும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்.
முதல் செய்தி, அந்தக் காலத்திலேயே, சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்தினுடைய தந்தையார் அவர்கள், தன்னுடைய மூன்று மகன்களையும் எப்படி வளர்த்தார்? எப்படி படிக்க வைத்தார்? அதிலிருந்து என்ன படிப்பறிவினை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
மூத்த மகன் பொறியாளர்; பணியாற்றச் சென்றது உத்தரப்பிரதேச மாநிலம்; இரண்டாவது மகன் மருத்துவர்; புகழ் பெற்ற மருத்துவர்; சென்னையில் கண் மருத்துவத்துறையில் மிகவும் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார். மூன்றாவது மகன் வழக்கறிஞர்; சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களை அந்தக் காலத்திலேயே இங்கிலாந்திற்கு அனுப்பி, பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்.
கல்வி முக்கியம்; கல்வியைவிட முக்கியமானது ஒன்றுமில்லை.
ஆக, நான் சொல்வது, 20 ஆம் நூற்றாண்டு தொடக்கம்; 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், திருவாரூருக்கும், நீடாமங்கலத்திற்கும் இடையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒருவர், ரயில்வே துறையில் எழுத்தராகப் பணியாற்றியவர்; பிறகு கிராம முன்சீப்பாகப் பணியாற்றியவர். தன்னுடைய மூன்று மகன்களுக்கும் கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்தி,, அன்று எல்லோராலும் ஏற்றுக்கொள் ளப்பட்ட மூன்று முக்கிய துறைகளில், ஒன்று, மருத்துவத் துறை; இரண்டு, நீதித்துறை; மூன்று பொறியியல் துறை. இம்மூன்று துறைகளிலேயே மூன்று மகன்களையும் புகுத்தி, அதிலே அவர்களை தலைசிறந்த படிப்பாளிகளாக உருவாக்கி, தலை சிறந்த குடிமக்களாக உருவாக்கினார் என்றால், நூறாண்டுகள் கழித்தும், இன்னும் பல சமுதாயங் கள் கல்வியினுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவில்லையே என நான் உண்மையாக வருத்தப்படுகிறேன். கல்வி முக்கியம்; கல்வியைவிட முக்கியமானது ஒன்றுமில்லை. எல்லோருக்கும் அந்தக் உயர்ந்த கல்வி கிடைக்கவேண்டும் என்பதற் காகத்தான், இங்கே தொடர்ந்து வரும் அரசுகள் பல காரியங்களைச் செய்து வருகின்றன.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ கத்திலே கல்வித் துறையிலே பெரிய புரட்சியினை ஏற்படுத்தினார்; மதிய உணவுத் திட்டம் வந்தது; சத்துணவுத் திட்டமாக உருவாகியது; பிறகு கல்விக் கடன் திட்டம் என்று ஒரு மகத்தான திட்டத்தை உருவாக்கி, இன்று 50 ஆயிரம் கோடி ரூபாய் நாடு முழுவதும் கல்விக் கடனாகப் பெறப்பட்டிருக் கிறது. கல்வியை சட்ட உரிமையாக்கி இருக்கிறோம்; எந்தக் குழந்தையும் பள்ளிக்குப் போகாமல் இருக்கக்கூடாது என்று பல வகையிலே நம்முடைய அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றன.
ஆனால், இன்னும் சில சமுதாயத்தினர் கல்வியினு டைய முக்கியத்துவத்தை உணராமல் இருக்கிறார் களே என்பதற்காக நான் கவலைப்படுகிறேன், வருந்துகிறேன்; கல்வி முக்கியம் என்பதை சர்.ஏ.டி .பன்னீர்செல்வம் அவர்களுடைய தந்தையார் உருவாக்கிய அந்தப் பரம்பரையில் இருந்து நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
இட ஒதுக்கீடு இல்லை என்றால், எப்படி  வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும்?
இரண்டாவது செய்தி, கல்வி முக்கியம் என்றால், அந்தக் கல்வியினுடைய உண்மையான பயன் கிடைக்கவேண்டும் என்றால், எல்லோருக்கும் அந்த வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். பள்ளிக் கூடங்களிலே, கல்லூரிகளிலே, குறிப்பாக, மருத்துவக் கல்லூரியிலே, பொறியியல் கல்லூரி யிலே, உயர் பட்டப் படிப்பு நிறுவனங்களிலே, இட ஒதுக்கீடு இல்லை என்றால், எப்படி அந்த வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும்?
ஒருபுறத்தில், நம்முடைய பிள்ளைகளை 10 ஆவது படிக்க வைத்து, 12 ஆம் வகுப்புவரை படிக்க வைக்கிறோம். கல்லூரி படிப்பையும் முடிக்கிறார்கள். ஆனால், உயர் படிப்புகளில், இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையில், இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்பவர்கள் அன்றும் இருந்தார்கள்; இன்றும் சிலர் இருக்கிறார்கள். நான் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்கிறேன். இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்பவர்கள், எல்லா வகையான வித்தைகளையும் கையாள்கிறார்கள். அய்யா வீரமணி அவர்கள் சொன்னார்கள், சில வங்கிகளில் நம்முடைய பிள்ளைகளுக்கு கல்விக் கடன் வழங்குவதில்லை என்று சொன்னார்கள். நான் அதற்காக வருத்தமடைகிறேன். அது ஒரு வித்தை; ஒரு லட்சத்திற்கும் மேல் வங்கிக் கிளைகள் உள்ளன; ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒரு அதிகாரி இருக்கிறார். நான் ஒரு லட்சம் அதிகாரிகளையும் கட்டி வைக்க முடியாது. ஆனால், ஒரு வங்கிக் கிளையில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி, கல்விக் கடன் கொடுப்பதில், உயர்ந்த ஜாதி, பிற்படுத் தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று பேதம் பார்த்து, கல்விக் கடன் தந்தால், உயர்ந்த ஜாதியினருக்குக் கல்விக் கடன் கிடைக்கிறது; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்குக் கல்விக் கடன் கிடைக்கவில்லை என்றால், இது நம்முடைய இட ஒதுக்கீடு கொள்கையை முறியடிப்பதற்கான ஒரு வித்தை; அதிலே ஒரு வித்தைதான் நீதிமன்றத்தை அணுகுவது.
ஒரு நீதிமன்ற தீர்ப்பு வந்து அதில் நுழைந்து...
நாம் சட்டங்களை வடிக்கிறோம்; விதிகளைப் போடுகிறோம்; திடீரென்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு வந்து அதில் நுழைந்து, நம்முடைய சட்டத்தை, நம்முடைய விதியை முனை மழுங்கச் செய்கிறது. அகில இந்திய மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) என்று மிகப்பெரிய உயர்கல்வி மருத்துவ நிறுவனம் ஒன்று டில்லியில் இருக்கிறது. அதில் தொடர்ந்து ஒரு வழக்கு; ஸ்பெஷாலிட்டி; சூப்பர் ஸ்பெஷா லிட்டி; அதாவது, எம்.பி.பி.எஸ்.,சை, எம்.டி.,யைத் தாண்டி ஸ்பெஷாலிட்டி; சூப்பர் ஸ்பெஷாலிட்டி. அதிலே இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்பது வழக்கு. இது ஒன்றும் புதிய வழக்கு அல்ல; ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குதான். அந்த வழக்கில்திடீரென்று ஒரு தீர்ப்பு வெளிவருகிறது.
ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி
அந்தத் தீர்ப்பு என்ன சொல்கிறது. ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி, அதாவது எம்.பி.பி.எஸ்., அதிலே அல்ல; அதைத் தாண்டி எம்.டி.,  அதிலே அல்ல; அதனையும் தாண்டி ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆகிய துறைகளில், சாதாரணமாக இட ஒதுக்கீடு கூடாது என்று அந்தத் தீர்ப்பு சொல்கிறது. அந்தத் தீர்ப்பு சரியா? இல்லையா? என்பதை நாம் விவாதிக்கலாம்.
அந்தத் தீர்ப்பை சொன்னார்களே, அதோடு நிறுத்திக் கொள்ளலாம் அல்லவா! கேட்கப்பட்ட கேள்வி, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷா லிட்டியில் இட ஒதுக்கீடு செல்லுமா? செல்லாதா? இதற்கு ஆம் என்றும் பதில் சொல்லலாம்; இல்லை என்றும் பதில் சொல்லாம்.
மூன்று நீதிபதிகளிலே, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டிலே இட ஒதுக்கீடு கூடாது என்று சொன்னார்கள்; அந்தத் தீர்ப்பு அதோடு நின்றுவிடவில்லை.
தீர்ப்பினுடைய கடைசி இரண்டு பத்திகளில், இந்த வழக்கு, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பொறுத்த வழக்கு, இதில் நாங்கள் முன்னுதாரணத்தை வைத்து, முக்கோலை தீர்ப்பு சொல்லியிருக்கிறோம். ஆனால், பொறியியல் துறை, மருத்துவத் துறை இன்னும் பல துறைகளில் இட ஒதுக்கீட்டின் காரணமாக, தரம் குறைந்துவிடுகிறது என்று நாங்கள் கவலைப்பட்டு, இந்தத் தரக்குறைவை நிறுத்துவதற்காக அரசு வழிவகைகளைக் கண்டு, அதற்கான காரியங்களைச் செய்யவேண்டும் என்று கூறுகிறோம் என்று, தேவையில்லாமல், இரண்டு பத்திகளில் சொல்லியுள்ளார்கள். அதன் காரணமாக, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுவிட்டது.
நீங்கள் கேட்கின்ற இடத்தில் இருக்கிறீர்கள்;  கோபப்படலாம்; நான் பேசுகின்ற இடத்தில் இருக்கின்றேன்;
அதனை அந்நீதிபதிகள் எழுதவேண்டிய அவசியமும் கிடையாது; அந்தக் கேள்வி எழவும் இல்லை; அப்படி எழுந்தால், அதற்கு ஏற்கெனவே 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து விட்டது. அந்த 9 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பின்படி, எல்லாக் கல்லூரிகளிலும், அரசு நடத்தக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும், அரசு நிதியுதவி பெறக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. திடீரென்று இரண்டு பத்திகள், ஒரு 150 வார்த்தைகளை வைத்து, நாட்டிலே 10, 15 ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த ஒரு முன்னேற்றத் தினை, தடை போட்டு நிறுத்திவிடலாம் அல்லது முனை மழுங்கச் செய்துவிடலாம் என்று ஒரு தீர்ப்பு வந்தால், சிலருக்குக் கோபம் வருகிறது; சிலருக்கு வருத்தம் ஏற்படுகிறது. நீங்கள் கேட்கின்ற இடத்தில் இருக்கிறீர்கள்; ஆகவே கோபப்படலாம்; நான் பேசுகின்ற இடத்தில் இருக்கின்றேன்; ஆகவே வருத்தம்தான்பட முடியும்.
அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்துவது என்று நம்முடைய அரசு முடிவெடுத்துள்ளது.
ஆகவே, இதற்கு ஒரு வழிவகை காணவேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய அரசு தெளிவான முடிவை எடுத்திருக்கிறது. மீண்டும் நீதிமன்றத்தினை அணுகி, நீங்கள், உங்கள் தீர்ப்பின் பிற்பகுதியில் கூறியுள்ளவை தேவையற்ற வார்த்தைகள்; அந்த வார்த்தைகளை, அந்தத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும். அந்தத் தீர்ப்பு, எந்தக் கேள்வி எழுப்பப் பட்டதோ, அந்தக் கேள்விக்கு மட்டும்தான் நீங்கள் தீர்ப்பு அளிக்கவேண்டுமே தவிர, எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்பால், தேவையில்லாத ஒரு பொருளை எடுத்துக்கொண்டு, தேவையில்லாத ஒரு கருத்துக்களைச் சொல்லி, அரசின் நடவடிக்கை களை நீங்கள் தடை செய்தது தவறு; எனவே, அந்தப் பாராக்களை நீக்கவேண்டும் என்று மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவினை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய தீர்ப்பினை மறு ஆய்வு செய்து, நாம் விரும்பும் தீர்ப்பு வந்தால் நல்லது; வரவில்லை என்றால், அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்துவது என்று நம்முடைய அரசு முடிவெடுத்துள்ளது.
முதல் திருத்தத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் கருத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார்
அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்தினைப் பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள்; முதல் திருத்தத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் கருத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார். அந்த முதல் திருத்தத்தினைக் கொண்டுவர வேண்டும் என்று, சட்ட வல்லுநர்களைக் கலந்து, அதனை வடித்து, டில்லிக்கு எடுத்துச் சென்றவர் பெருந்தலைவர் காமராசர். அந்த முதல் திருத்தத்தினை ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் திருத்தத்தினை முன்மொழிந்து, அரசியல் சாசனத்தை முதன் முதலாகத் திருத்தியவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு.
தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமரா சரும், பண்டிதர் ஜவகர்லால் நேரும், 1951 ஆம் ஆண்டு, சண்பகம் துரைராஜன் என்ற பெண் தொடர்ந்த வழக்கில் தரப்பட்ட தீர்ப்பினை முறியடிப்பதற்காகக் கொண்டு வந்த திருத்தத் தைப்போல, இப்போது, ஏறத்தாழ 62 ஆண்டு களுக்குப் பிறகு, இன்னொரு திருத்தத்தினைக் கொண்டுவர வேண்டும் என்றால், பரமபத விளையாட்டா நாம் விளையாடிக் கொண்டிருக் கிறோம்? 62 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் சாசனத்தைத் திருத்தி, இந்த திசையில்தான் அது பயணப்படவேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திலே இருக்கிறது; அதுபோல, சமுதாய ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது நம்முடைய நாட்டிற்குத் தேவை என்று, 1951 ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. மீண்டும் மீண்டும் அதேபோன்ற திருத்தங்கள்; மீண்டும் மீண்டும் அதையொட்டியே திருத்தங் களைச் செய்யவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள் ளதற்காக நான் வருந்துகிறேன். ஆனால், நம்முடைய அரசு தெளிவாக இருக்கிறது. உச்சநீதிமன்றத் தினுடைய அண்மைக்கால தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்படாவிட்டால், கண்டிப்பாக அரசியல் சாசனம் திருத்தப்படும் என்பதிலே நாங்கள் தெளிவாக இருக்கிறோம்; திருத்தவேண்டும் என்பதிலே நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதை இங்கே நான் சொல்லக்கடமைப்பட்டு இருக்கிறேன்.
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப்பற்றி விரிவாகச் சொல் வதற்கு இங்கே வாய்ப்பில்லை. ஆனால், அவர்கள் எங்களுக்கு நிறைய செய்திகளைத் தந்திருக் கிறார்கள்; அவற்றை எல்லாம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துப் பெரும் பயன் அடைந்தேன் என்று சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார்; அவர் மறையும்பொழுது அவருக்கு வயது 52. அவர் இங்கிலாந்திற்கு புதிய பொறுப்பினை ஏற்பதற்காக செல்லும்பொழுது, விமான விபத்தில் அவர் மரணமடைந்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய தலையங்கம் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் இங்கிலாந்திற்குப் புறப்படுவதற்கு முன்னால், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தலையங்கம் எழுதினார், அதிலே, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய பெருமைகளையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு, நமது சர்.செல்வம் அவர்கள், பொறுப்புள்ள பதவிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்; பொறுப்புள்ள நிர்வாகம் அவருக்குப் புதிதா?
எனக்கு வாதாடத் தான் தெரியுமே தவிர, எனக்கு நாடாளத் தெரியாது என்று கூறவேண்டிய நிலையில் உள்ளவர் அல்லர் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இறுதியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்கிறார்கள், பொறுப்பும், புகழும் பொருந்திய பதவி அவருக்கு வழங்கப்பட்டு, அவர் இங்கிலாந்து சீமை சென்று, இந்திய அரசின் ஆலோசகராக வீற்றிருக்கப்போவதைக் கேட்டு, நாம் மிகமிக மகிழ்ந்தோம். சர்.பன்னீர்செல்வம், தமிழர்களின் செல்வம்; அவருக்குக் கிடைத்துள்ள பதவி தமிழருக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி; அவருடைய உயர்வு தமிழர் உயர்வு; அவர் மகிழ்வு தமிழர் மகிழ்வு; எனவே, அவரை வாழ்த்துகிறோம் எனில், தமிழ்நாட்டாரை வாழ்த்துகிறோம் என்று பொருள் என்று முடிக்கிறார். பெரும் பேற்றினை எனக்குத் தந்த அனைவருக்கும்  நன்றி
அந்த வகையிலே, தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவர்; சமுதாய இயக்கத்தினுடைய தலைமகன்களில் ஒருவர்; சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர்; தன்னுடைய வாழ்நாளில் சமுகப் புரட்சிக்காக, அனைத்து சமுதாயமும் நீதி பெறவேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவர்; கடுமையான உழைப்பாளியாக இருந்து, அந்த இயக்கத்தை வளர்த்தவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நான் என்னுடைய மரியாதையை செலுத்தி, அவருடைய உருவச் சிலையை திறந்து வைக்கக்கூடிய பெரும் பேற்றினை எனக்குத் தந்த அனைவருக்கும் தலைவணங்கி நன்றி சொல்லி, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய புகழ் வாழ்க; புகழ் என்றென்றைக்கும் நிலைத்து நிற்க என்று சொல்லி விடை பெற்றுக்கொள்கிறேன்.
வணக்கம்.
- இவ்வாறு மத்திய அமைச்சர் ப.சிதம்பம் அவர்கள் உரையாற்றினார்.
19-08-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 1

Sunday, August 4, 2013

திராவிடர்களும் இந்து மதத் தோற்றமும் - பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.,

திராவிடர்கள், சிறப்பான செயல் களை செய்து இந்திய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தினார்கள். இந்த திராவிடர்களுக்கு இந்திய சட்ட அமைப்பில் அங்கீகாரம் உள்ளனவா? திராவிடர்கள் தொன்மையானவர்களா? அல்லது இந்து மதம் தொன்மை யானதா? என்பது இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகின்றது.
இந்து மதம் பற்றி இந்துக்கள்:
இந்தியத் தகவல் அறியும் சட்டத்தின் படி இந்து மதம் எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது? என்று கேட்டால் பதில் சொல்ல தலைமை பீடம் எதுவும் இல்லை. இருந்த போதி லும் இந்துக்கள் ஏற்றுக் கொண்ட தலைவர்களில், சுவாமி விவேகானந் தரும் சுதந்திர போர் வீரரும் ஆன்மீக வாதியுமான பாலகங்காதர திலகரும் கூறியுள்ள தகவல்கள் கீழே தரப்பட் டுள்ளன.
1.    ஆரியர்கள் சிறுசிறு கூட்டங் களாக  இந்தியாவிற்குள் நுழைந் தார்கள். நாளடைவில் இந்தக்  கூட்டங் கள் பெருகி, இறுதியில் அவர்கள் இந்தியாவின் எதிர்ப்பற்ற ஆட்சியாளர் கள் ஆயினர். பின்னர் வந்தது இந்தப் பெரும் போர். ஒரு குடும்பத்தின் இரு கிளையினரிடையே  அதுதான் மகா பாரதப்போர்'.
(ஆதாரம்: கலிபோர்னியாவில் விவேகானந்தர் 01.02.1900 அன்று நிகழ்த்திய உரை)
2.    ஆங்கிலேய அரசால் சிறையில் வாடிய திலகர் பேராசிரியர் மேக்ஸ் முல்லரிடமிருந்து ரிக் வேதம்' என்ற நூலைப் பெற்றார். ரிக்வேதத்தின் மூல நூலான அவெஸ்தன் மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படித்தார். நிலவியல் (Geology) மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி (Archaeology)க் குறிப்புகளைப் படித்தார். இறுதியில் 1903இல் வேதங்களின்  துருவப்பிரதேச பிறப்பிடம் (Arctic Home in the Vedas) என்ற நூலை வெளியிட்டார். இதன்படி ஆரியர்கள் ஆர்க்டிக் பிரதேசத்திலி ருந்து பாரசீகம் வழியாக இந்தியாவிற் குள் வந்தார்கள் எனவும், ஆரியர்களின் மூதாதையினர் ஆன ரிஷிகள் பனிப் பிரதேசத்தை பிறப்பிடம் ஆகக் கொண் டவர்கள் எனவும் தெரிந்து கொள்ள லாம். இந்த ஆரியர்கள் இயற்றிய வேதங்களின் அடிப்படையில் ஆரியர் களின் மதத் கொள்கைகளே வேதமத மாக அழைக்கப்பட்டது. இந்த வேத மதம் புத்த சமண மதங்கள் தோற்றத் தால் (கி.மு.6ஆம் நூற்றாண்டு) வீழ்ச்சி யடைந்தது.
3.    ஆரியர்களின் மதக் கொள் கைகள் அனைத்தும் வேதகாலத்தில்  வேதமொழியில் (இந்திய மொழிகளும் பாரசீகமொழியும் கலந்த மொழி) எழுதப்பட்டன. இந்த வேதமொழியை புத்த சமண மதங்கள் ஆதரிக்கவில்லை. எனவே வேத மொழி வீழ்ச்சியடைந்தது இந்த வேத மொழியை செம்மைப் படுத்தி பாணினி இலக்கணம் அமைத் தார். செம்மைப்படுத்தப்பட்ட மொழிக்கு பாஷா' எனப் பெயரிட்டார். இந்த பாஷா மொழியே பிற்காலத்தில் சமஸ்கிருத மொழியாக மாற்றம் பெற்றது.
4.    சமஸ்கிருத மொழியில், ஆரம்பகாலத்தில்  நிக்கை வளைத்து ஒலிக்கும் ஒலிகளான‘‘T, Th, D, Dh’’  /ட, த, ண, ள (Retro Flex) இடம் பெற வில்லை. மேலும் இந்த ஒலி வடிவங்கள் ஆரிய மொழிக் குடும்பத்திலும் மற்றும் அய்ரோப்பிய மொழிக் குடும்பத்திலும் காணப்படவில்லை. இந்த ஒலி வடிவங்கள் திராவிட மொழிகளில் இருந்து பெறப்பட்டுள்ளன. இந்த ஒலி வடிவங்களைப் பெற்ற பின் தான் சமஸ் கிருதம் (த) என்ற பெயர் தோன்றி யிருக்க வேண்டும். (ஆதாரம் = மொழி யியல் குறித்த நூல்கள் மற்றும் பாட நூல்கள்)
அ.இந்து என்ற சொல் உருவான கதை:
1.  இந்து என்ற சொல் பெருமைக் குரிய சொல் அல்ல. அதன் பொருளைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. இந்து என்ற சொல்லின் பொருளை மேம்படுத்தும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.இதைக் கூறுபவர் இந்து மதத்துறவி விவேகானந்தர். இது அவருடைய சொற்களில் தரப்படு கின்றது.
நாம் இந்துக்கள், இந்து என்ற வார்த்தையை மோசமான பொருளில் நான் பயன்படுத்தவில்லை. இந்த சொல்லிற்கு மோசமான பொருள் இருக்கிறது என்று கூறுபவர்களின் கருத் தையும் ஏற்கவில்லை. பழங்காலத்தில் அந்த சொல் இந்து நதியின் மறு கரையில் வாழ்பவர்கள் என்று பொருள் பட்டது. நம்மை வெறுப்பவர்களுள் பலர் அதற்கு மோசமான பொருள் தற்போது கூறலாம், ஆனால் பெயரில் ஒன்றுமே இல்லை.
நம் செயல்கள் மூலம் அந்த வார்த்தையை உலகில் உள்ள எந்த மொழியும் உருவாக்க முடி யாத உயர்ந்த வார்த்தையாக மாற்றுவோம். நமது முன்னோர்களைக் குறித்து அவமானம் கொள்ளக் கூடாது என்பது என் வாழ்க்கையின் கோட் பாடுகளுள் ஒன்றாக உள்ளது' (ஆதாரம்: இது லாகூரில் 1897 நவம்பர் 5_இல் செய்யப்பட்ட உரை).
இந்த உரையின் மூலம் ஆரியர்கள் சிந்து நதிக்கரையில் வசித்தவர்கள் என்பதை அறியலாம். மேலும் சிந்து சமவெளி நாகரிகம் முடிவடைந்த பின் ஆரியர்களின் வேதகால நாகரிகம் தோன்றியது எனக் கூறலாம்.  சிந்து நதிக்கரையில் வாழ்ந்த ஆரியர்கள் பின்னர் கங்கைக் கரைக்கும் தென் னாட்டிற்கும் பரவினார்கள் என் பதையும் அறியலாம்.
2. இன்றைய இந்து மதம் ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண் டது. இந்த ரிக்வேதம் பாரசீக நாட்டின் மதக் கொள்கைகளை உள்ளடக்கியது. மேலும் பாரசீக மொழியால் அவஸ்தன் மொழியை ஒட்டி இந்த ரிக் வேதம் ஆரியர்களால் உருவாக்கப்பட்டபோது, இந்துக்கள்  என்றால் திருடர்கள் என பொருள் தந்த காரணத்தால் ஆரியர்கள் தங்கள் மதத்தை இந்து மதம் என்று அழைக்கவில்லை. வேதமதம் அல்லது வைதிக மதம் என்றே அழைத்தார்கள்.
3.  இந்து என்றால் சைவ சித்தாந்த நூல் பதிப்பில் வெளிவந்துள்ளது. அக ராதி கீழ்க்கண்ட பொருளைத் தரு கின்றது.அவை மதி, சந்திரன், மிருக சீரிடம், இந்துப்பு (மருந்து) எட்டி.
4. வீரமாமுனிவர் தனது சதுரக ராதியில் (கி.பி.1732) இந்து என்ற சொல் லுக்கு தரும் பொருள் கரடி, கரி, (கருப்பு) சந்திரன்.
5. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்துத்வா என்ற நூலில் இந்து என்ற சொல்லுக்கு மதத்தின் பெயரைக் குறிப்பதாக இந்திய மொழிகளில் எதிலும் இடம் பெற வில்லை எனக் கூறுகின்றார். கமலாபதி திரிபாதி நூல்:-  இந்து என்ற சொல் இந்து மத  நூல்களான, வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றில் காணப்படவில்லை. கி.பி 1323இல், தென்னிந்தியாவில், காசுமீரில், நூல்களில் இந்து என்ற சொல் காணப் பட்டது. மேலும் 1618  ஆண்டுகளில், வங்காளி கௌடியன வைஷ்ணவ மத நூல்களில் இருந்து அன்னியர்களிடம் இருந்து இந்தியரை  வேறுபடுத்த இந்தியர்கள் இந்துக்கள் என்று சொல்லப்பட்டனர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட் டத்தில்  இந்துக்கள் என்ற சொல்லின் பொருள் குறித்து, உச்சநீதிமன்றம், 1995, 2005, 2006 ஆண்டுகளில் பல விளக் கங்களை, தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்து என்ற சொல்லின் உண்மை யான பொருள் கீழே தரப்பட்டுள்ளது  1) கருப்பு மற்றும் கோரமானவன் 2) நாகரிகம் இல்லாத காட்டு மிராண் டிகள் 3) திருடர்கள் 4) இந்தியாவை சேர்ந்தவர்கள். (ஆதாரம்: 1) கமலபதி திரிபாதி (முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் மற்றும் முதலமைச்சர் எழுதிய நூல் 2) சப்தசாகர் என்னும் இந்தி மொழி பேரகாரதி, வாரணாசிப் பதிப்பு)
இந்து மதம் பற்றி கா.சு.பிள்ளை:
இவர் இந்து மதம் ஒரு மதமன்று என்று கூறுகிறார்.இந்து என்ற சொல் இடத்தைக் குறிக்கும் சொல் சிந்து நதிக்கரையில் வாழ்பவன் என்று பெயர். ஆங்கிலேயரும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வசித்த மக்களை இந் துக்கள் என்று அழைத்தனர். இவ்வாறு இந்தியாவில் வசிப்பவர்களை இந் துக்கள் என்று அழைத்தால் சப்பானிய மதம் ஆங்கில மதம் அமெரிக்க மதம் என்று நாட்டின் பெயர்களை மதங் களுக்கு வைக்கப்படுதல் வேண்டும். எனவே இந்து மதம் என்று கூறுவது சரியல்ல.(13-07-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6)
ஆ.இந்து மதம் பற்றி இஸ்லாமியர்கள்
1.  கி.பி.998_1030இல் வாழ்ந்த கஜினி முகம்மது, தனது இளம் வயது  முதல் உருவ வழிபாடு செய்பவர்களை (infidels and idolatry)
வெறுத்தார். அவர் இந்தியாவின் மீது படையெடுத்து, பிராமண மதத்தலைவர்களை அழிப்பதற்கு பல யுத்தங்களை நடத்தினார். கஜினி செல்வத்தை அதிகம் விரும்பவில்லை. இலஞ்சத்தை ஏற்பவர் இல்லை'.இதைக் கூறுபவர் ஜியாவுதின் பரணி, இவர் Medcival India
என்ற இதழில் 1958இல் எழுதியுள்ளார்.
இதனால் பிராமண மதம் என்று அழைக்கப்பட்ட வேத மதத்தைச் சேர்ந் தவர்களை விக்கிரக வழிபாட்டு    மக்கள்' என்று கஜினி முகம்மது காலத் தில் அழைத்தார்கள்.இந்துக்கள் என்று அழைக்கப்படவில்லை என்பதை அறியலாம்.
2. மீர்சையது அலி ஹம்தரனி (1384) இவர்  சஹிராத்' (Zahirat) என்ற நூலை நிர்வாகத்தை நடத்துவதற்காக எழுதினார். இவர் ஒரு இந்திய அரசர். இந்த நூலின்படி இந்திய குடிமக்கள், அவர்களின் மதச்சட்டத்தின்படி நடத்தப்படுவார்கள். இவர் குடிமக்களை இரண்டாகப் பிரித்தார்.அவை முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதார். முஸ்லீம் அல்லாதவர்கள் (Kafirs)தீயை வணங்குபவர்கள் என்று அழைக்கப்பட் டார்கள்' இதன்படி வேத மதத்தைச் சேர்ந்தவர்கள் தீயை வணங்குபவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் இந்துக் கள் என்று அழைக்கப்படவில்லை.
3.  கிபி 1526இல் தோன்றிய முகலாயர் ஆட்சியில் பிராமணர்கள்  மதிக்கப்பட் டார்கள். அக்பர் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மாற்றம் செய்ய உதவினார். அந்த நூலுக்கு முன்னுரை எழுதினார். இவர் அவதாரங்களை நம்பினார். இவர் புருஷோத்தமன் என்ற பிராமணனிடம், தியானம், யோகம் கற்றுக் கொண்டார். இவர் காலத்தில் பிராமண மதம் இந்து மதம் என்று சிறிய அளவில் அறிமுகமானது.
இ.இந்து மதச்சட்டங்கள் பற்றி ஆங்கிலேயர்:
நெல்சன் என்ற ஆங்கிலேய நீதிபதி சென்னையில் 1877இல் இந்துக்களின் சட்டம், சட்டம் தெரியாத சமஸ்கிருத பண்டிதர்களாலும், சமஸ்கிருதம் தெரியாத நீதிபதிகளாலும் நிர்வகிக்கப் படுகிறது என்று கூறினார். ஏனென்றால் இந்துக்களின் தர்ம சாஸ்திரங்களை பண்டிதர்கள் கூற நீதிபதி தீர்ப்பு சொல் லுவார். இதற்குக் காரணம் ஆங்கிலேயர் ஆட்சியில் (1772_1864). இந்துக்களின் பொதுச்சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தச் சட்டம், ஆரியர்களின் தர்ம சாஸ்திரம், வேதங்கள், ஆட்சியாளர் களால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் ஆகியவைகளின் அடிப்படையில் உரு வானது. இந்தச்சட்டம் பிராமணர்களா லும், ஊர் பெரிய மனிதர்களாலும் (Elite) தரப்பட்டது. இந்தப் பொதுச் சட்டம், பெரும் எண்ணிக்கை கொண்ட பிராமணரல்லாதாரை அடக் கியாள பெரிதும் பயன்பட்டது. இந்தச் சட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் சாஸ்திரம் தெரிந்த பண்டிட் (பிராமண) சட்ட அதிகாரி யாக நியமிக்கப்பட்டார். இத்தகைய நீதிமன்றம் 1864 வரை தொடர்ந்தது. பின்னர் பண்டிட் மற்றும் மௌல் விகள் பதவி நீக்கப்பட்டது. இதன் பின்னர் சுதந்திரமடையும் வரை இந்த நிலையே நீடித்தது. (ஆதாரம்: இந் துக்களில் பொது சட்ட அறிமுகம் என்ற நூல். ஆசிரியர்கள் திமோத்திலேபின், டொனால்டு டேவிஸ், கிருட்டிணன்.)
ஆங்கிலேயர் காலத்தில் உருவான இந்துக்களின் பொதுச் சட்டம், 1955ல் சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்துக்களின் சட்டம் கீழ்க்கண்ட வர்களை இந்துக்களாக வரையறை செய்கின்றது. அவை.
1. இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கீழ்க்கண்டோரை விலக்கு அளித்துள் ளது  பார்சிகள், யூதர்கள், இஸ்லாமியர், கிறித்துவர்கள் மற்றும் தங்களுக்கான தனிச்சட்டம் உள்ளவர்கள்.
2.    இந்துக்களில் அடங்குபவர்கள் கீழ்க்கண்டவர் ஆகும். இந்துக்கள், சமணர்கள், புத்தமதத்தினர், தங்களுக்கு எனத் தனிச்சட்டம் இல்லாதவர்கள். மேலும் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை, இந்தியர் தாதைகளின் மதத்தின் அடிப்படையிலும், இரத்த உறவு கொண்டவர்களின் மதத்தின் அடிப்படையிலும் நிர்ணயம் செய்யப் பட்டது.
இந்த சட்டத்தில் உள்ள குறைகள் பின்வருமாறு:
அ.    இந்துக்கள் என்றால் சிந்து நிதிக்கரையில் வாழ்ந்த இந்தியன் ஒரு பகுதியினராகத்தான் குறிக்கின்றது. இது குமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்குப் பொருந்தாது.
ஆ.    இந்து மதம் ஒரு தலைமையின்  கீழ் இயங்கும் இயக்கம் அல்ல. ஆனால் இந்துக்கள் என்ற தலைப்பில் சேர்க்கப் பட்டுள்ள சமண மதம், புத்தமதம், சீக்கிய மதம் ஆகியவற்றுக்குத் தலைமை பீடங்கள் உள்ளன. அவற்றிற்குத்தனியே அமைப்பு, வேதங்கள் உள்ளன. அந்த மதங்கள் யாரால் எப்போது எங்கு உரு வாக்கப்பட்டது என்பதினைக் குறித்து தெளிவான செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.
இ.    இந்து மதத்துக்குள்ளேயே பல உட்பிரிவுகள், தனித்தனியே இயங்கு கின்றன. அவைகளுள் சில கீழே தரப்பட்டுள்ளன. சைவ மதம், வைணவ மதம், அத்வைத மதம், துவைத மதம், விசிஷ்டாத்வைத மதம், தனிப்பட்ட ஆசிரமங்கள், மடங்கள் என்று சுயக் கட்டுப்பாட்டில் Independent)  இயங்கும் இயக்கங்கள், இந்நிலையில் எல்லாப் பிரிவினரையும் இந்துக்கள் என்பது ஒரே அளவுள்ள சட்டைகளை பலமக் களுக்குத் தருவதற்குச் சமம். இது நடை முறைக்கு ஒவ்வாத நீதிமுறையாகும்.
ஈ.    இந்துக்கள் என்று சட்டத்தில் குறிக்கப்படுபவர்களில் பிராமணர்கள் மட்டும் தான் இருமுறை பிறந்தவர்கள். ஒரு முறை பிரம்மாவின் முகத்திலும், மறுமுறை வேறு விதமாக பூணூல் மூலமாகப் பிறக்கிறார்கள். இத்தகைய ஆரியர்களுக்கும் இரண்டு முறைப் பிறக்காதவர்களையும் ஒரே மதத்தில் சேர்ப்பது முரண்பட்டது ஆகும்.
உ.    தற்போது ஆரியர்கள் முன்பு போல ஆரிய குருக்களிடம் குருகுலக் கல்வியை 12 முதல் 48 ஆண்டுகள் கற்ப தில்லை. மாறாக சூத்திரர்களுடன் சேர்ந்து, சூத்திர மருத்துவமனையில் பிறக்கிறார்கள். சூத்திரர்களுடன் சேர்ந்து, செருப்பு அணிந்து குடைப் பிடித்து, சீருடை அணிந்து கல்வி கற்கிறார்கள். சூத்திரர்களைப் போல் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கிறார்கள். எனவே ஆரியர்களுக்கு மனுநீதிதர்மத்தில் தரப்பட்டுள்ள சலுகைகளை தருவதில் எந்தவித நியாயமும் இல்லை.
ஊ.    வேதமதம் அல்லது சனாதன தர்மத்தின்படி ஒவ்வொரு இந்துவும் கீழ்க்கண்ட நிலைகளை அல்லது ஆசி ரமங்களை தன்னுடைய வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டும். 1. பிரம்மச்சர்யம், 2.கிருகச்சர்யம், 3.வானப்பிரஸ்தம், 4.சன்னியாசம். இதில் கிருகஸ்தனேமற்ற மூன்று வாழ்க்கை நிலையில் உள்ளவர் களுக்கு ஆதாரம் ஆனவன். இதன்படி ஒரு இந்து தனது 27 வயதில் (12+15) வானப்பிரஸ்தம் பணி ஓய்வு நிலையை எட்ட வேண்டும். இதற்குமாறாக தசரத மன்னன்  60000 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவதாரமான இராமன் 11,000 ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே வேதத்தில் விதிக்கப்பட்ட தர் மங்களைக் கடைப்பிடித்தல் சாதாரண இல்லறம் செய்பவனுக்கு இயலாத ஒன்று. அதுவும் தற்போது பால்ய விவாகம் கிடையாது. பிரம்மச்சர்ய வாழ்க்கை (மாணவர் பருவம்) 12 ஆண்டுகளுக்கு மேலானது. பதிவுத் திருமணங்கள், சுயமயாதை திருமணங் கள் நடைபெறுகின்றன. மேலும் விதவை மறுமணம் அனுமதிக்கப்பட் டுள்ளது. ஆண்டவனின் படைப்புத் தொழில், குடும்பக் கட்டுப்பாடு முறை யால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துமுறை பெரும் அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. மேலும் குருகுலக்கல்வி முறை தற்போது கிடையாது. குருதட்சினை எதுவும் கிடையாது. முதியோர் இல்லம் நடை முறையில் உள்ளது. இவ்வாறு கிரகஸ் தனின் இல்லறதர்மம் மிகவும் மிகவும் மங்கிப்போய்விட்டது. இத்தகைய சனாதன தர்மத்தை அடிப்படையான இந்துக்களின் பொதுச் சட்டங்கள் செயல்படும் தன்மையை இழந்து விட்டன.
மேலே கூறப்பட்டவற்றின் அடிப் படையில், இந்துக்களின் பொதுச்சட்டம் முரண்பாடானவை. செயல்படுத்த முடியாதவை. இந்து மதத்தின் வேதகால நாகரிகம், வேளாண்மையுகத்தைச் சார்ந்த ஆசிரம வாழ்க்கை வாழும் ரிஷிகளுக்கு ஏற்ற கிராம  நாகரிகம் ஆகும்.
இத்தகைய இந்து மதம், தற்போது நடைபெறும், தொழில் மயமாக்கப்பட்ட நகரமயமாக்கப்பட்ட, விஞ்ஞானம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு உலகமயமாக்குதல் கொண்ட நவீன நாகரிகயுகத்திற்கு சிறிதும் ஏற்றது அல்ல. எனவே இந்துக்களின் பொதுச்சட்டம் இற்றுப்போன சட்டம். இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு, மாற்றங்களுக்கு வகைசெய்யக் கூடிய எதிர்காலத்தை உருவாக்க துணைபுரியும் புதிய சட்டத்தை இழிவான பொருள் கொண்ட சூத்திரப்பட்டம் நீங்கும் வகையில் புதிய சட்டத்தினை இந்து மதம் என்ற சொல்லிற்குப் பதிலாக சைவம், வைணவம், நாத்திகமதங்களை சமண, புத்தமதத்தினை தனித்தனியே பிரித்து உருவாக்க வேண்டும்.(20-07-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6)

இந்து மதத்தால் தாழ்ந்தோம்:
இந்து மதம் ஆங்கிலேயரால் சட்ட பூர்வமாக ஆக்கப்பட்ட மதம் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் நம்மை திராவிடர்களை இந் துக்கள் என்று அழைத்தது. இந்த ஆங்கி லேயன் சட்டம் அப்படியே எந்தவித மாறுதலும் இல்லாமல், இந்தியக் குடியரசு சட்டத்தில் சேர்க்கப்பட்டது, திராவிடர்களுக்கு, சூத்திரர்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப் பட்ட மாபெரும் கொடுமை. இதனால் சுதந்திர இந்தியாவில் வர்ணாசிரம தர்மம் சட்டபூர்வமாக நிலைபெற்றது. இந்த கொடுமையான சட்டத்தால் ஆரியர் அல்லாத திராவிடர்களுக்கு எந்த விதப் பலனும் கிடையாது. இதனால் ஏற்படும் தீமைகள் சில கீழே தரப்பட்டுள்ளன.
1.    பகவத் கீதையில் சொல்லப் பட்ட வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில், நாம் சூத்திரர்களாக அழைக்கப்படுவோம். இந்த  சூத்திரப் பட்டத்தை நீக்க, சுதந்திர இந்தியாவில் எந்த வித சட்டமும் இல்லை.
2.    அரசியல் சட்டத்தில், சட்டத் திற்கு முன்பு எல்லோரும் சமம் என்று சொல்லப்பட்ட அடிப்படை உரிமை இந்துமதம் என்ற போர்வையில் பறிக்கப்படுகின்றது.
3.    இந்து மதத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. வேதம் படிக்க உரிமை இல்லை. அர்ச்சனை செய்ய உரிமை இல்லை. ஆண்களுக்குச் சமமாக பெண் சொர்க்க லோகம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
4.    மத நம்பிக்கைகளின் அடிப் படையில், சடங்குமொழியான சமஸ் கிருதத்திற்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. பேச்சு வழக்கில் இல்லாத மொழிக்கு செய் யப்படும் பணம் எந்தவிதப் பலனையும் தராது இந்தப் பணத்தை சமஸ்கிருத மல்லாத மாநில மொழிகளுக்குச் செல விட்டால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இந்திய பண்பாடு மேம்படும்.
5.    இந்தியாவில் ஜாதிகளை உருவாக்கியது ஆரிய கலாச்சாரம். இந்தச் ஜாதிமுறை இந்தியர்களைப் பிரிக்கின்றது. ஜாதிக் கலவரங்களால் பொருள் சேதம், உயிர் சேதம் உண் டாகின்றன. சட்டத்தில் எல்லோரும் சமம் என்று கூறும் இந்திய அரசியல் சட்டம் ஜாதிகளை தடை செய்யும் சட்டப்பிரிவுகளை கொண்டிருக்கவில்லை.
6.    ஆண்டவன் முன் அனைவரும் சமம். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.  ஆனால் ஆண்டவருக்கு அர்ச்சனை செய்யும் தகுதி ஆரியர் களுக்கு மட்டும் தனி உரிமையாக இருப்பது ஆங்கிலேயர் கொண்டு வந்த இந்து சட்டத்தின் படி எல்லா கோவில்களையும் கட்டுப்படுத்துகிறது.
திராவிடம் பற்றி புத்தர்:
புத்தர் கோசல நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அரச குடும்பத் தில் பிறந்தார். இவர் ஆரியர்களின் வேத காலத்தின்  (கி.மு.1600-_500) இறுதியில் பிறந்தார். இவர் இளம் வயதில் கல்விப் பயில கல்விக்கூடம் சென்றார். அப்போது அவர் ஆசிரியர் முன்பு பல தேசங்களின் பெயர்களை (திராவிடர் உள்பட) லிபி பலகையில் (கரும்பலகை என்று தற்போது அழைக்கப்படும் பலகை புத்தர் காலத்தில் லிபி பலகை என்று அழைக்கப்பட்டது எழுதி காட்டினார். பலகை என்ற சொல் தமிழ் சொல் ஆகும். இது தமிழின் தொன் மையைக் குறிக்கின்றது) எழுதிக் காண்பித்தார். இந்த செய்தியைத் தருபவர் சமஸ்கிருத அறிஞர், வேத நாகரிக எழுத்து முறையில் நூல்கள் அச்சிட பயன்படுத்தியவர் ஆன மேக்ஸ்ணில்லர் என்ற செர்மானியர் ஆவர்.
வேத மதங்களில் தமிழ்சொற்கள்:
மாலதி சென்டகே என்ற சமஸ்கிருத ஆய்வாளர் பல ஆய்வு நூல்களை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளார். இவரது நூலில் ரிக்வேதத்தில், தமிழ் உள்பட்ட பல திராவிட மொழிச் சொற் கள் காணப்படுவதாகக் கூறியுள்ளார். ஆரியர்கள்தங்கள் மதத்தில் இறைவனை வேத முதல்வன் என்று கூறுகிறார்கள். வேதங்களுக்கு உரை எழுதிய சயணர் என்பவர், வேதங்களின் அடிப்படை யிலே இறைவன் இந்த உலகத்தையும், மனிதர்களையும் படைத்ததாகக் கூறுகிறார். மேலும் வேதங்களை நம்பு பவர்கள் ஆஸ்திகர்கள் என்றும், வேதங் களை நம்பாதவர்களை நாத்திகர்கள் என்றும் ஆரியர்கள் கூறினார்கள். இத்தகைய வேத மதத்தில், சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய வேதமதத்தில், வேதங்கள் தமிழ் சொற்களை பயன்படுத்தியது, தமிழ் மொழி மற்றும் திராவிட மொழிகள் இந்துமதத்தை விட தொன்மையானது என்பதைக் குறிக்கின்றது அன்னியர் களான ஆரியர்கள் பல தவறான கொள்கைகளை தங்களது வேதத்தில் சொல்லியதால் வேதமதம் அழிந்தது. நாத்திக மதங்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்ட சமண மதம், புத்த மதம் வளர்ந்தன.
திராவிடம் பற்றி வீரமாமுனிவர்:
இந்தியாவில் பண்டைய காலத்தில், 56 தேசங்கள் இருந்ததாகக் கூறுகிறார். அதில் காணப்படும் தேசங்களின் பெயர்கள் சில இங்கே தரப்படுகின்றன.
கோசலம், கூர்ச்சரம், பாஞ்சாலம், மகதம், கேரளம், கொல்லம், வங்காளம், அவந்தி, அருணம், காம்போசம், காசுமீரம், கன்னடம், ஆந்திரம், யவனம், திராவிடம், சிந்து, சிங்களம், சீனம், நிபாளம், நடதம்,, பல்லவம், பப்பரம், புவிதம், பாண்டியம், மாரடம், மலையாளம்......'இவ்வாறு வீரமாமுனிவர் தந்துள்ள பட்டியலில் திராவிடம்' என்ற தேசம் இடம் பெற்றதைக் காண்போம். மேலும் இந்த 56 தேசங்கள் இருந்த காலத்தில் சீனம், யவனம், சிங்களம், சிந்து போன்ற அயல் நாடுகளும் இடம்பெற்று இருப்பது ஆய்வுக்கு உரியது.
திராவிடத்தால் எழுந்தோம்: வர்ணாசிரமத் தர்மத்தில் சூதாடுவது சத்திரியர்களின் தர்மமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் மகாபாரதக்கதையில் தர்மர் துரியோ தனனுடன் சூதாடி தன் நாடு, மனைவி, சகோதரர்கள், வேலைக்காரர்களை இழந்தார்கள். மேலும் குப்தர்கள் காலத்தில் சூதாட்டம் மூலம் அரசுக்கு வருமானம் வந்ததற்கு சான்றுகள் உள்ளன. சூதாட்ட கண்காணிப்பு அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும் என்று கவுடில்யன் அர்த்த சாஸ் திரத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தைவிட வேறு இடங்களில் சூதாட்டம் நடந்தால் 12 பணம் அபராதம் வசூலிக்கப்படும் வகை செய்யப்பட்டுள்ளது. சூதாடுபவன் வெற்றி பெற்ற  பணத்தில் 5% அரசுக்கு வரியாக செலுத்தவேண்டும் என்று கவுடில்யர் கூறியருக்கிறார். இந்த சூதாட்டத்தினால் அரசு வசூலிக்க வேண்டிய வரிகளைப் பற்றி நாரதர், யாக்ஞ வல்கியர்,மனு  ஆகியோர் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
1) இத்தகைய சூதாட்டக் கலாச் சாரத்தை ஆரியர் தர்மசாஸ்திரங்கள் அனுமதிப்பதால் இன்று கூட கிரிக்கெட் சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கலைஞர் தலைமையில் நடந்த ஆட்சியில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டது. இது திராவிட இயக்கத்தால் கிடைத்த பலன்.
இவ்வாறு இரண்டு மடங்கு இழிவைத் தாங்கும் சூத்திரர்களுக்கு மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை' தர வேண்டும்.(27-07-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6)


2) தந்தைப் பெரியார் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் தீவிர முயற்சியால் தமிழ்நாட்டில் 1929ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
3) கம்யூனிச சிந்தாந்தவாதிகளுக்கு முன்னோடியாக கலைஞர் தமது ஆட்சிகாலத்தில் பேருந்து போக்கு வரத்தை நாட்டுடைமையாக்கியது. அதுபோல், நில உடைமைக்கு உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டது (1969_1976).
4) பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் பிராமணர் இல்லாமல் நடந்த சுயமயாதை திருமணங்களை செல்லத்தக்கதாக சட்டம் இயற்றினார். (6769)
5) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தவர் இராசாசி.பலபள்ளிக் கூடங் களை மூடியவர் இராசாசி இத்தகைய ஆட்சியை அகற்றியவர் தந்தை பெரியார்(1952).
6) முகலாயர் காலத்தில் உருவான மொழிகள், இந்தி, இந்துஸ்தானி, உருது. இவை பேச்சு வழக்கில் ஒரே மொழி யாகும். போதிய வளர்ச்சி பெறாத இந்தியை ஆட்சிமொழியாக்கி, இந்தி மொழி பேசாத மக்களை இரண்டாந்தர மக்களாக்கும் முயற்சிகளை எதிர்த்து திராவிட இயங்கங்கள் இணைந்து போராடின. தமிழக அரசு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை நீக்கி இரு மொழி கொள்கைகளாக மாற்றி உத்தரவிட்டது. (67_69)
7) அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை தந்தை பெரியாரின் கனவை நனவாக்க, தமிழக அரசு கொண்டுவந்தது.
8) மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம்  பெறுவதற்காக மாநில சுயாட்சி குழுவை இராசமன்னார் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நியமித்து அதன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது. (1974)  இது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த திமுக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கியது.
9) சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில்
9ஆவது அட்டவணையில் சேர்ப்பதற்கு திரா விடர் கழகத் தலைவர் கோரிக்கையை ஏற்று அதிமுக அரசு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தந்தது.
10)  மேனாள் முதல்வர் கலைஞர் கோரிக்கையை ஏற்று தமிழுக்கு செம்மொழி என்ற சிறப்பினை மத்திய அரசு வழங்கியது.
11) மேனாள் முதல்வர் கலைஞர் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சேது சமுத்திரக் கால்வாய் திட்டப் பணிகளைத் துவக்கியது.
12) கலைஞர் தலைமையில் அமைந்த தமிழக அரசு 1989இல் பெண்களுக்குத் தந்தையின் சொத்தில் சம பங்கு அளித்தது.
13) 1996இல் உள்ளாட்சி தேர்தலில் விகிதாச்சார முறையில் (33 1/3%) பெண் களுக்கு போட்டியிட வாய்ப்பு அரசு ஆணையால் வழங்கப்பட்டது.
14) 1970இல் பரம்பரை அர்ச்சகர் களுக்குப் பதிலாக அறங்காவலருக்கு அர்ச்சகரை நியமிக்கும் உரிமை அளிப்பதற்கு சட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து பரம்பரை அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கினை உச்ச நீதிமன்றம் 14.03.1972ல் தள்ளுபடி செய்தது.
இவ்வாறு இந்திய வரலாற்றினை மாற்றியமைக்கும் வகையில் திராவிட இயக்கங்கள் மக்கள் பிரச்சினைகளை முன் எடுத்துச் சென்று பல சீர் திருத்தங்களுக்கு வழிவகுப்பதில் ஆரியர்களைவிட திராவிட இயக்கங்கள் தங்கள் பங்களிப்பை செய்திருக் கிறார்கள் என்பதனை அறியலாம்.
முடிவுரை:
ஆரியர்கள், இந்தியாவின் முன் னேற்றத்திற்கு எதிராக பல நேர்வுகளில் செயல்பட்டார்கள். ஆரியர்களின் ஆதிக்கத்தில் இந்தியா இருந்த போது இந்திய பூர்வீகக்  குடிமக்களை சூத்தி ரர்களாக சித்தரித்து அடிமைகளாய் வைத்து இருந்தார்கள். ஆரிய நாகரி கத்தால் திராவிடர்களுக்கு ஏற்பட்ட தீங்குகள் கீழே தரப்பட்டுள்ளன.
1.    திராவிடர்கள் நாகரிகமான, நகர நாகரிகம் கொண்ட சிந்து வெளி நாகரிகத்தை வளர்க்காமல், தங்கள் கிராம நாகரிகத்தை வளர்த்தார்கள்.
2.    திராவிடர்களின் நகரங்களை அழிக்க ஆரியர்கள் யாகங்களில் கால்நடைகளைப் பலியிட்டார்கள். மேலும் யாகக் கடவுளான இந்திரனுக்கு திராவிடர்களை அழிக்க யாகத்தில் கோரிக்கை வைத்தனர்.
3.    பாரசீக மொழியான அவெஸ் தன் மொழியுடன் பிராகிருத மொழிச் சொற்கள் மற்றும் திராவிட மொழிச் சொற்கள் கொண்ட வேத மொழியில் வேதங்கள் இயற்றினார்கள்.
4.    ஆரியர்களின் மதக் கொள் கைகள் மற்றும்  மொழிக் கொள்கை களை எதிர்த்து, சமண புத்த மதங்கள் உருவாகின. இந்த மதங்கள்  அர்த்த மாகதி மற்றும் பாலி மொழிகளை ஆதரித்தன. ஆரியர்களின் வேத மதம், வேத மொழியும் அழிந்தன (கிமு 600)
5.    கிமு 1500ல் தோன்றிய வேத மதம் மீண்டும் கி.பி.150ல் ருத்ரதாமன் என்ற மன்னன் காலத்தில் புத்துயிர் பெற்று சமஸ்கிருதத்தில்  கல்வெட்டு உருவானது.
6.    பின்னர் கி.பி. 7ஆம் நூற்றாண் டில் சமஸ்கிருதத்தில் வேதம் எழுதப் பட்டது. பல நூல்கள் சமஸ்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இதனால் சமஸ்கிருதம் தன்மை மொழியானது.
7.    புத்தர் சமணர் காலத்தில் குடைவரைக் கோவில்கள் குப்தர்கள் காலத்தில் (கிபி. 320_470) கற்களால் கட்டப்பட்ட சிறு சிறு கோவில்கள் தோன்றின. அந்தக் கோவில்கள் எதுவும் ஆகம விதிப்படி கட்டப்படவில்லை. இதனால் எல்லா பிரிவு மக்களும் கட வுள் சிலை அருகே சென்று இஷ்டப் பட்ட மொழியில் வணங்கினார்கள். இந்த  குப்தர்கள் காலத்தில் இந்துமதம் என்று எதுவும் தோன்றவில்லை. சைவ வைணவ மதங்களே இருந்தன.
8.    ஆரியர்களால் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்ட அன்னியர்கள் ஆங்கிலேயர்கள் இந்தப் புண்ணிய பூமியை ஆண்டபோது பூமாதேவி என்ற தெய்வத்திற்கு களங்கம் /தீட்டு ஏற்படவில்லை.
9.    இந்து மதத்தில் சூத்திரர்கள், பஞ்சமர் என்று அழைக்கப்பட்டவர்கள் இந்த பாரத பூமியில் பல காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் பூமாதேவி என்ற தெய்வத்திற்கு தீட்டு ஏற்படவில்லையே.
10.இந்து  மதத்தில் கங்கை நதி ஒரு கடவுள். இந்த நதியில் சகல சாதி யினரும் மதத்தினரும் எந்தவித வேறு பாடும் இன்றி ஒன்றாக குளிக்கிறார்கள். அதை அனுமதிக்கும் போது எல்லா சாதியினரும் அர்ச்சகராவதில் என்ன தவறு இருக்கிறது?
11.    ஒரு கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி தேரில் சூத்திரர்களால் இழுத்து வரப்படுகிறார். தேரில் இருக்கும் உற்சவமூர்த்திக்கு தேரை இழுப்பவர்கள் அர்ச்சனை செய்தால் என்ன தீட்டு ஏற்பட்டுவிடும். (மூல விக்ரகம் வெளியே உலா வராது)
12.    அரசாங்க ஆதரவுடன் செயல் படும் பொது இடங்களில் குடிநீர் நிலைகள், பொதுக் குளியல் இடங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் ஒரு இந்திய குடிமகனை, சாதியின் பெய ராலோ, இனத்தின் பெயராலோ பிறப்பின் அடிப்படையாலோ பாலியல் வேற்றுமையாலோ அனுமதிக்க மறுப்புத் தெரிவிக்கக் கூடாது என்று இந்திய அடிப்படை உரிமைகள் சட்டத்தில் (ART15) தெரிவிக்கப்பட்டுள் ளது. இதைக் கருத்தில் கொண்டால், தன்னைப் படைத்த ஆண்டவனுக்கு, தனக்கு தெரிந்த மொழியில் அர்ச்சனை செய்து கொள்ள மதங்களோ, சட்டங் களோ தடை செய்ய வாய்ப்பு இல்லை. எனவே, கேரள மாநிலத்தில் இந்து மதத் தில் உள்ளது போல், நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் அனைத் துச் சாதியினரும் அர்ச்சகர்களாகும் நிலை விரைவில் வந்தே தீரும்.
13.    தேரில் அல்லது பல்லக்கில் வரும் உற்சவ மூர்த்திக்கு, சூத்திரர் அர்ச்சனை செய்தால் தீட்டு ஏற்படும் என்று கருதினால், காயத்திரி மந்திரம் சொன்னால் அல்லது உபநயன மந்திரம் சொன்னால் போய்விடும்.
14.    ஆரியர், சூத்திரர் என்று பேத மில்லாமல் வாழ்தலே நம் இந்தியா அல் லது ஜம்புத்விப (நாவலந்தீவு) வல்லரசு நாடாக மாறுவதற்கு உதவி புரியும்.
15.    சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழில் அர்ச்சனை செய்தால் ஆண் டவன் அருள் கிடைக்காது, என்றாலும் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய்வதையே விரும்புவார்கள்.
16.    இந்து மதத்தில் உள்ள சூத் திரர்களுக்கு இந்து மதத்தால் இரண்டு முறை அவமானப்படுத்தப்படுகிறார்கள். விவேகானந்தர் சொல்படி இந்து என்ற சொல் பெருமை தரவில்லை; மாறாக இழிவைத் தருகின்றது. மேலும் வர்ணாசிரமதர்மம் சூத்திரர்களை தஷ்யூக்கள் என்றும், தாசர்கள் என்றும் இழிவுப்படுத்துகின்றது. இவ்வாறு இரண்டு மடங்கு இழிவைத் தாங்கும் சூத்திரர்களுக்கு மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை' தர வேண்டும்.(03-08-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6)
(நிறைவு) 

மதக்கொடுமை - தந்தை பெரியார்

நம் மதமும், நம் நீதிகளும், நம் தெய்வங்களுமே நமது கல்வியற்ற நிலைமைக்குக் காரணமாகும். உதா ரணமாக வேத தர்ம சாஸ்திரங் களைப் பாருங்கள் அவற்றில் இன் னார்தான் படிக்கலாம். இன்னா ருக்குச் சொல்லிக்கொடுக்கக் கூடாது என்கின்றதான நிபந்தனை யிருக்கிறது. இதனாலேதான் நம் நாட்டில் கல்வி இல்லை.
சூத்திரன் படிக்கக் கூடாது. அவனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல் லப்பட்டிருக்கிற இந்து மதத்திற்கு நாம் கட்டுப்பட்டதால் சூத்திரா என்ற நாமத்தை நாம் ஏற்றுக் கொண்டதால் படிக்க முடியாமல் போய் விட்டது.
மி. மேயோ பனகால் அரசரைக் கண்ட போது பார்ப்பனரல்லாதா ருக்கு மூளையில்லையா? ஏன் படிக்கவில்லை என்றார். அதற்கு பனகால் அரசர் அது பார்ப்பனர் மூளையின் சூழ்ச்சியாலேயே பார்ப் பனரல்லாதார் படிக்க முடியாமல் போயிற்று என்றார். அப்படியே மேயோ அம்மையாரும் எழுதி விட்டார்.
திரு. சத்தியமூர்த்தி சாதிரி இந்தக் குற்றத்தை மறுக்கையில் மாட்டிக் கொண்டார். அவர் சூத் திரர்கள் வேத சாதிரந்தான் படிக்கக் கூடாதே யொழிய மற்றவற்றைப் படிக்கலாம் என்று இருப்பதாகச் சொன்னார். முன் காலத்தில் வேதம், சாதிரம், இவைதவிர வேறு படிக்க நூல் இல்லை. இங்கிலீஷ்காரன் வந்த பிறகு தான் புத்தகம் ஏற்பட்டது. முன் காலத்தில் படிப்புக்கு வேறு வசதி இல்லை. நீதி நூல்கள் தான் இருந்தன. புராணங்கள் தவிர வேறு இலக்கியம் இல்லை. அவைகளும் வடமொழியில்தான் இருந்தன. இப்படியெல்லாம் இருந்ததால் நாம் படிக்க முடியவில்லை வெள்ளைக் காரர்கள் வந்த பின்பே நாம் இப்போது 100-க்கு 7 சதவீதமாவது படிப்பு அனுபவிக்க முடிந்தது. இக்காலத்திலும் பார்ப்பனர்கள் கேள்வியின்றி ஆட்சியிலிருந்ததால் அவர்கள் மாத்திரமே படிக்கச் சௌகரியமாக விருக்கும் படியாக வழிகளை வகுத்து வந்தார்கள்.
வீண் செலவால் தரித்திரம்
பயனில்லாத வழியில் மதத்தின் பேரால் நமது பணத்தையெல்லாம் பாழாக்குகிறோம். ஒரு மனிதன் தினம் 8 அணா சம்பாதித்து 4 அணா மிச்சம் பிடித்தால் அவன் அதை பிதிர்களுக்கும், சடங்குகளுக்கும், சாமிகளுக்கும், பொங்கல்களுக்கும் செலவு செய்யவே வழி காட்டப் படுகிறான். அவன் ஒரு வாரத்தில் சேர்த்ததைக் குடியில் செலவு செய்கிறான். ஒரு மாதத்தின் மீதத்தைப் பண்டிகையில் செலவு செய்கிறான். ஒரு வருஷ மீதத்தைத் திதியில் செலவு செய்கிறான். 10 வருஷ மீதத்தைக் கலியாணம் கருமாதியில் செலவு செய்து விடு கிறான். இவையன்றியும் சில்லறைச் சடங்குகளும், சில்லறைத் தேவதை களும் உற்சவங்களும் நம் செல் வத்தை விழுங்கிவிடுகின்றன. மேற்கொண்டு கடனும் வாங்கச் செய்கின்றன. இவைகளே நாம் நிரந்தர கடனாளியாகவும் தரித்திர வான்களாகவும் இருப்பதற்குக் காரணங்களாகும். இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. படிப்புக்குப் போதுமான பணம் இல் லையா? நமது தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். உற்சவங் கள் காரணமாய் வருடம் 40 ஆயிரம், 50 ஆயிரம், லட்சம் ரூ. வரை வருஷ வருமானமுடைய 30, 40 கோயில்கள் இருக்கின்றன. சமயங்கள் காரண மாய் வருடத்தில் 5 லட்சம், 10 லட்சம் வரும்படியை உடைய பல மடங்கள் இருக்கின்றன. கணக்குப் போட்டால் எவ்வளவு ரூபா மொத்த மதிப்பு ஆகிறது. உற்சவ செலவும்  ஜனங்கள் போக்குவரத்து, ரயில் முதலிய செலவும் சேர்த்து எல்லாம் பார்த் தால் எந்த காரணத்தினாலும் 1 கோடிக்கு குறையாது. திருச்சி ராபள்ளி ரங்கநாதர், தென்னாற்காடு நடராஜர், மதுரை மீனாட்சி, ராமனாதபுரம் ராமலிங்கம் ஆகிய சாமிகளும், மற்றும் வட ஆர்க்காடு ஜில்லா அருணாசலம், செங்கற்பட்டு வரதராஜ உடையார்; சொன்னப் பட்டினம் கபாலீசர், சித்தூர் வெங் கிடாசலபதி ஆகிய சாமிகளின் உற்சவங்கள் கணக்கு எவ்வளவு திருப்பதி கோயிலில் 20 லட்ச ரூபாய் காணிக்கை; ஏழரைக் கோடி ரூபாய் சொத்து, நகை, பாண்டுகள், வாகனங்கள், கட்டிடங்கள் இவற்றை எல்லாம் விற்றுக் கணக்குப் போட்டுப் பார்த்து 100க்கு 6 வட்டி வீதம் 40 லட்சம் ரூ வட்டி அடையலாம். இந்த ஜனங்கள் காணிக்கைகள் உண்டி யலில் கொடுத்தல் போக வர செலவு எல்லாம் 60 லட்சம் ரூபாய் ஆகும். அவ்வளவும் நம் மக்கள் வீண் செலவு  செய்து விடுகிறார்கள். திருப்பதிக் குப் போய் மொட்டை அடித்துக் கொள்ளுகிறவர்களின் செலவு எல்லாம் சேர்த்து மொத்தத்தில் 1 கோடி ரூபாய் ஆகிறது. இது போலவே இந்த இரண்டு ஜில்லா விற்கு மாத்திரம் மேற்படி 2 கோடி ரூபாயாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? மற்ற சாமிகள் பணத்தாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ஜில்லாவிலுள்ள மடங்கள் என்ன போதிக்கின்றன? என்ன அறிவை வளர்க்கின்றன?
தலைக்கு  நாள் ஒன்றுக்கு, 2, 5, 10, 15 ரூபாய் வரை, சராசரி சம்பாதிக்கக் கூடிய மக்களையுடைய அய்ரோப்பிய தேசங்கள் இருக் கின்றன. நம் தேசத்தில் ஒருவன் சராசரி ஒன்றரை அணாதான் சம்பாதிக்கிறான். இது கூட இரண்டரை அணா செலவு செய்யக் கற்ற பிறகுதான். இத்தனைக்கும் நாம் ஒரு செல்வக் கடவுளைக் கும்பிடுகிறோம். விளக்கமாறு, முறம், அம்மிக் குழவி, சாணிச் சட்டி உள்பட எல்லாம் லட்சுமி என்கிறோம். அப்படிக் கும்பிடும் நாம் இன்னும் ஏழையாகவே இருக்கிறோம். நம் மக்கள் சிங்கப்பூர், கொளும்பு, நேட்டால், தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களுக்குக் கூலி ஆட் களாகப் போகிறார்கள். இத்தனை லட்சுமிக் கடவுள்கள் இருந்தும் இந்தத் தரித்திர நிலைமையில் தான் இருக்கின்றோம். இதற்கு நம் சோம்பேறித்தனமும் நம் மக்கள் பணம் அனாவசியச் செலவு செய் யப்படுவதுமே காரணம். பணக்காரன் தொழில் துறையில் பணம் செலவு செய்வதில்லை. பணம் சேர்ந்தவன், கடவுள் தந்தார் என்கிறான். ஏழையானவன் கடவுள் நமக்குக் கொடுக்கவில்லை என்று நினைக் கிறான். ஏழை மக்கள் கடவுள் கொடுக்க வில்லை என்கின்றார் களேயொழிய அப்படிப்பட்ட கடவுளை ஒரு கை பார்ப்போம் என்று நினைப்ப தில்லை. எதற்கும் கடவுள் செய் வான் என்ற கொள்கையே இருக் கிறது.
செல்வமானது கல்விக்கும் தொழிலுக்கும் உபயோகமாகும்படி செலவு செய்யப்படாமல் பணக்காரர் களால் சாமிக்கும், கோயில்களுக் கும் சடங்கிற்கும் போய்விடுகிறது. சாமிக்கு 3 வேளை 6 வேளை பூசை செய்தல் தாசி, மேளம் ஏற்படுத்தல் மரக்கட்டைகளின் மேல் பொம் மைகளை ஏற்றி தேர் என்று சொல்லி இப்படியாக 5,000,10,000 பேர் இழுப் பதில் பணத்தைப் பாழ் செய்கிறார் கள். இது மோட்சமாம்! இப்படி யெல்லாம் ஏழை மனிதன் தலையில் கை வைத்து மேனாட்டார் சாமிக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் குழவிக் கல்லை நட்டு கும்பிடுவதுமில்லை. ஒரு மேல் நாட்டான் தன் சொத்தைத் தர்மம் செய்ய எண்ணினால் மருத்துவ ஆஸ்பத்திரி கல்வி அபி விருத்திக்குக் கொடுப்பான். ஒரு கண் ஆஸ்பத்திரிக்குக் கொடுப் பான். குஷ்டரோக ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான். தொத்து வியாதிகள் வராமல் தடுக்கக் கூடிய ஆஸ்பத் திரிக்காகவும் கொடுப்பான். இத்து டனில்லாமல் அவன் தன் நாட் டையும் படிக்க வைத்த பின் நம் நாட்டிலுள்ள ஏழைகளும், அனாதை களும் உயர்த்தப் படுவதற்காக மிஷன் பாடசாலைகள் ஏற்படுத்தி யிருக்கிறான். தொழிற் சாலை வைக்கிறான். நாமும் அதில் பங்கு அனுபவிக்கிறோம். நம் பிள்ளை களையும் அவர்களுடைய பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புகிறோம். அவர்களது ஆஸ்பத்திரிகளுக்கும் செல்லுகிறோம். நாமோ தவறான வழியாகக் குழவிக் கல்லின் தலை யில் நம் செல்வத்தைப் பாழாக்கு கிறோம். நம்மிடம் அறிவு இல்லை. ஆகையினால் செல்வ விருத்தியும் இல்லை.
திருடனுக்குத் திருடி பணம் வந்தாலும் அவன் காத்தானுக்கும், காளிக்கும் பொங்கல் போட்டு பாழாக்குகிறான். புதையல் எடுத் தாலும் சாமி தலையில் போட்டு விடுகிறான். இந்த நிலைமைக் கெல்லாம் நம் மூட நம்பிக்கை களே காரணம். மற்ற நாட்டான் நம் நாட்டின் இந்த நிலைமையைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியாது. கல்லுக்கு 15 தேவடியாள், 20  ஆயிரம் ரூபாய்  செலவில் உற் சவம்! அது தினம் 10 வேளை தின்பது! இவை போன்றவைகளுக்கு நம் முட்டாள் தனமே காரணம். நம் முட்டாள் தனத்தையெல்லாம் வெள் ளைக்காரன் உணர்ந்து கொண் டான். இந்த நிலையில் அவன் எப்படி நமக்குப் பயப்படுவான்? நாம் இப்படி யிருக்க வெள்ளைக்காரனுக்குத் தான் நன்மை. இப் பொழுது எங்கும் நூல் நூற்கப்படுகிறது. ஒரு கொட்டங்கச்சியில் உப்புத் தண் ணீரை முகந்து 2 அணா விறகைச் செலவு செய்து உப்பு காய்ச்சினால் வெள்ளைக் காரன் ஓடிப் போய் விடுவானா? தக்ளியில் நூல் நூற்ப தால் வெள்ளைக்காரன் நடுங்கி விடுவானா? நமது குற்றங்களை உணர்ந்து நாம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டாமா?
கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்
உங்களுடைய தெய்வமும், மதமும் விடப்பட்டொழிந்தாகவே வேண்டும். நான் கடவுளை உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல வரவில்லை. கடவுள் இருந்தால் அது இருக்கட்டும். அது இந்த ராமசாமிக்காக ஓடிப்போய் விடாது. அதற்கு எவனும் வக்கீலாக இருக்க வேண்டியதில்லை. ராமசாமி கடவுள் இல்லை என்கிறான். பூசை வேண் டாம் என்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள். நல்ல கடவுளாக இருந்தால் அது உங்களது பணச் செலவை எதிர்பார்க்குமா? அல்லது உங்கள் எண்ணெயையும், பாலையும் பஞ்சாமிர்தத்தையும் குளிப்பாட்டு தலையும் எதிர்பார்க்குமா? கடவுள் உண்டு, இல்லை என்ற சண்டை உலகம் தோன்றிய நாள் முதல் நடக்கிறது. நமக்கு அதை முடிவு செய்ய அவசியமில்லை. உன் அறிவையும் முயற்சியையும் உன் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்து. உன் செல்வத்தை வீணாக கடவுளுக் கென்று அழிக்காதே என்றே சுய மரியாதை இயக்கம் சொல்லுகிறதே தவிர வேறில்லை. உங்கள் தெய் வங்களது நிலைமையில் நான் இருக்க சம்மதிக்கமாட்டேன். ஏனெனில் நீ குளிப்பாட்டும் போது தான் குளிக்கவேண்டும். நீ வேஷ்டி கட்டிவிடும் போது தான் கட்டிக் கொள்ள வேண்டும். நீ எண்ணெய் தேய்த்து விடும்போது தான் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு யார் சம்மதிப்பார்கள்? கடவுள் உன் பூசையையும் உற்சவத் தையும் நகைகளையும் விரும்புகிறது என்று சொல்லுவது வெட்கக்கேடு.
ஆலயங் கட்டியவர்கள் கதி
தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன்னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்திரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டிருக்கிறானா? அந்த கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசு தாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளைக் காரன் தான் சொத்துக்கு கொடுக் கிறான். அந்த சாஸ்திரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?
பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டுகிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழியாகிறது. ஏழைகளின் குழந்தை கள்பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக்கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்குகிறார்கள். அந்த குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலையில் கொட் டாதே என்று தான் யோக்கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித் துக் கொள்ளாது. அப்படி கோபித் துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்யமுடியும்? (சிரிப்பு) இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகாருண் யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்?
கைலாசம், வைகுண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப்பட்டது. முதல் மனிதன் அயோக்கியனானான். இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான். கொடுமை செய்தான். ஒரு சிம்டா விபூதிக் காக எல்லாப் பாவமும் போக்கி மோட்சம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று. இந்த மோட்ச நம்பிக்கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும். இவ்வுலக அனுபவங்கள் லட்சியம் செய்யாமல் நாம் எப்பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதினோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடமில்லாமற் போய் விட்டது. தான் மோட்ச மார்க்கத்தை நாடுவதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமை செய்பவனாகவும் இருக்க வேண்டி யதாயிற்று. இது ஒருகாலும் உண்மையான நாகரிகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல.
- குடிஅரசு - சொற்பொழிவு  10.08.1930, 17.08.1930

04-08-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2



weather counter Site Meter