Pages

Search This Blog

Sunday, August 25, 2013

மதமும் சாமியும் - தந்தை பெரியார்

இன்று நான் குறிப்பிட்ட நேரத் திற்கு வந்து சேர்ந்து விட்டேன். ஆனாலும் மிக்கக் களைப்போடு வந்திருக்கிறேன். சரியாக 24 மணி நேரம் இரயிலில் பிரயாணம் செய்து விட்டு - 10, 15 மைல் மோட்டாரிலும் வந்திருக்கிறேன். ஆகையால் இன் றைய விஷயத்தைப் பற்றி நான் சரிவரப் பேசமுடியா தென்றே கருது கிறேன். அன்றியும் அதிக நேரமும் பேசமுடியாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நிகழ்ச்சிக் குறிப்பில் எனக்கு இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் விஷ யம் "இந்தியப் பொருளாதாரம்" என்பதாகும். இது என்னைக் கேட்டுப் போட்டதல்ல என்றாலும், எந்தத் தலைப்பிலானாலும் என்னுடைய சங்கதி ஏதோ அதைத்தான் சொல் லுவது என் குணம் என்பது நீங்களும் தலைவரும் அறிந்ததேயாகும். ஆனா லும் பொருளாதாரம் என்னும் தலைப்பும் மிக்க நல்ல தலைப்பே யாகும். இதன் மூலம் எனது சங் கதியைச் சொல்ல முடியாவிட்டால் பின் எதன் மூலம்தான் சொல்லக் கூடும்? ஆனால், எனக்கிருக்கும் கஷ்டமெல்லாம் அதிக நேரம் பேசமுடியாதென்பதேயாகும். ஆதலால் மன்னிக்கக் கோருகின்றேன்.
சகோதரர்களே! பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம்ம நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத் தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன்காலத்தில் எல்லாம் பொருளை உடைத்தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந் தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணங் காசு - புழக்கமும் கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்டமாற்றை அடிப் படையாகக் கொண்ட தாகவே இருக் கும். ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவார்கள். கைத்தொழில் காரர்கள், கூலியாள்கள், ஏவான்கள் எல்லோருக்கும் தானியமே கொடுப் பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் பூமி மானியம் விடுவதே தவிரப் பணமாக ஏதும் கொடுப்ப தில்லை. எனக்குத் தெரிய 40,50 வருஷங் களுக்கு முன் வேஷ்டி கொடுப்பவன், உலோகப் பாத்திரம் கொடுப்பவன், நகை செய்து கொடுப் பவன். தோட்டங்களுக்குக் கலப்பை, ஏர், செய்து கொடுப் பவன், செருப்புத் தைத்துக் கொடுப்பவன், சுவர் வைப் பவன் முதலிய வர்கள் எல்லோரும் தானியம் தான் வாங்கிக் கொள்ளு வார்கள். சில ஆட்களுக்கு வருஷத் திற்கு இவ்வளவு என்று இருக்கும்.
பெருத்த மிராசுதாரர்களிடம் பார்த் தாலும் தானியத்தைத் தான் பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டி, போட்டு வைத்திருப்பார்கள். பண்டமாற்றைத் தவிர சாதாரண ஜனங்கள் பணமாய்ப் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும். பெருத்த மிராசுதாரர்களிடமும், அரசாங்கப் புழக்கம் முதலியவற்றிலும் பணம் புழங்கினதானாலும் அதுவும் மிகச் சிறு நாணயமாகத் தான் இருக்கும். ரூபாய் என்கிற பெயர் கூட இந்த நாட்டுப் பாஷையல்ல. நாணயமும் அல்ல. சின்னப்பணம் அதாவது ரூ 1க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும் எத்தனை பணம் என்றுதான் கேட்பார்கள். செல்வ முள்ள வனையும் பணக்காரன் என்று தான் சொல்லுகின்ற வழக்கம் இன்றும் உண்டு. அரசியல் அபராதம் முதலியவற்றிலும் 100 பணம் 200 பணம் 500 பணம் என்று பணக் கணக்கில் தான் கணக்குச் சொல்லு வதாகும். சமீப காலம் வரை கூட மலையாளத்தில், திருவாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்தில் சிவில் கோர்ட் டில் ரூபா என்று பிராது போடுவ தில்லை. 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதா னாலும் அதைப் பணமாகப் பெருக்கி அந்தப் பண எண்ணிக் கையைக் காட்டித்தான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது. சில இடத்தில் இன்றும் இருக்கிறது.
ஆகவே ரூபாய் என்பதும், பவுன் என்பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக் கூடிய நிலை ஏற்பட்டதே பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையை விடச் சற்று உயர்வடைந்தது என் பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே பொது வாகப் பார்த்தால் பொருளா தாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்ல மாட்டேன். மற்ற நாட்டை விட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்த தல்ல. இந்தியாவை நம்பி அனேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக்
கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லையானால் வெள்ளைக் காரனுக்கு இங்கு வேலையில்லை. இது போலவே இதற்கு முன் வெளி நாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கும், முன் வந்த ஆரியர்களுக்கும் இந்த நாட்டில் வேலையே இல்லை.
ஆகவே இவ்வளவு உயர்ந்த பொரு ளாதார நிலையுடைய இந்திய நாடு இந்த நாட்டு மக்களில் பெரும்பான் மையான பேர்களை வயிறார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானமோடு பிழைக்கவும் முடியாதபடி வேறு பல காரியங்கள் கொடுமைப் படுத்துகின்றன. அவற்றில் முக்கிய மானவை மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும்.
மனிதன் எவ்வளவு சம்பாதித் தாலும், மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு விளைந் தாலும் அனேகமாய் எல்லாவற்றையும் மேல் கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளுகின்றன. அதிலும் உலகத் தில் வேறு எப்பாகத்திலும் காண முடியாத மாதிரி இந்த நாட்டில், இம் மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு, அந்த நிலை களைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்பதோடு, சகல போக்கியங்களையும் தங்க ளுக்கே உரிமையுமாக்கிக் கொண்ட தால், இந்த உலகம் உள்ள வரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஏற்பட்டு விட்டது. அது மாத்திர மல்லாமல் இந்த நாட்டில் அரசனுக்கும் குடி களுக்கும் இருக்கும் முறையும், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிராசுதாரனுக் கும் குடியான வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காத வனுக்கும் இருக்கும் முறையும், மேல் ஜாதிக்காரனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக் கும் இருக்கும் முறையும் பார்த்தால், இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகு அளவு கூட மாறி முன்னேற்ற மடைய முடியவே முடியாது என்பது எனது உறுதி. ஆகவே இம்முறைகளும், முன் சொல்லப்பட்ட மதம், கடவுள், அடுத்த ஜன்மம் ஆகிய கொள்கைகளும், இந் தியா எவ்வளவு வளம் பொருந்திய நாடானாலும், செல்வம் பொருந்திய தானாலும், பொன்விளையும் "புண் ணிய" பூமியானாலும், தபோதனர்கள், அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன் மார்கள், முனிகள், ரிஷிகள், மகாத் மாக்கள் பிறந்த நாடானாலும், பஞ்சநதி, அஷ்டநதி, ஜீவநதியாய் ஓடுகின்ற நாடானாலும், தரித்திரமும், கூலியும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தமான தேயாகும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.
நம்முடைய பொருளாதாரக் கஷ்ட மெல்லாம் முதலாவது, அனாவசிய மான செலவுகளும், அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமாகும். இந்திய மக்களின் 100க்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமான வற்றிற்கும், குருட்டுப் பழக்கம், மூட நம்பிக்கையானவற்றிற்கும், சோம் பேறியாய் வாழ்கின்றவர்களின் சுக போகத்திற்கும் செலவு செய்யப்படுவ தனாலேயே வீணாய் விடுகின்றன.
இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக் கமாகப் பொருள் களெல்லாம் போய்ச் சேரும்படியாகியும் விடுகின்றன.
மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும், சக்தியும் குறைந்த வரும் படிக்கே செலவாகும்படியான முறை களே இங்கு வெகு காலமாய் இருந்து வருகின்றன. அதாவது,
புத்தியைச் செலவழித்து, குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்விட்டது. இத்தி யாதி காரணங்களே இந்தியாவின் பொருளாதாரத்தின் குறைவிற்குக் காரணங்களாகும்.
சாமி, பூசை, உற்சவம், புண்ணி யம், யாத்திரை ஆகியவற்றின் பெயரால் தனித்தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும் கணக்குப் பார்த்தால், மனி தனின் மொத்த வரும்படியில் ஒரு குறிப் பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம்.
பிறகு, மதத்தைக் காரணமாய் வைத்து ஏற்பாடுகள் செய்திருக்கும் சடங்குகளையும், அவற்றிற்காகும் செலவுகளையும் கணக்குப் பார்த்தால், அதுவும் ஒரு குறிப்பிட்ட பாகத் தைக் கவர்ந்து கொள்வதைப் பார்க்க லாம்.
மற்றும், மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும்பான்மை யோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலிய வற்றால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்து அவசிய மான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படிச் செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும், கடன்காரர் களாகவும் இருக்கவேண்டிய தாய் இருக்கின்றது.
இவை மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற் சாலைகள், யந்திர சாலைகள் முதலியவை ஏற்பாடு செய்வ தற்கும் மார்க்கமில்லாமல், பொருள்களை எல்லாம் மேல்கண்ட சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்துக் கொள்வதோடு, கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவை செய்துவைத்தல், மற்றும் உற்சவம், பூசை ஆகியவற்றிற்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துகள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்கள் பெரும், பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன.
ஆகவே, இந்த மாதிரியான எல்லாம் - எல்லாப் பொருள் களும் நாசமாகிக் கொண்டும், வீணாகிக் கொண்டும் இருக்கையில், இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில்தான் பொருளா தாரத்தில் சீர் அடைய முடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நம் நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத் தையும் சற்றுக் கவனித்துப் பாருங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை மேல் நாடுகளைப் பார்த்து நாளுக்கு நாள் செலவை அதிகரித்துக் கொண்டு வருகின்றோம். போக போக்கியங் களை அதிகப் படுத்திக் கொள்ளு கின்றோம். முன்னையை விட அதாவது 30,40,50 வருஷங்களுக்கு முன் நாம் இருந்ததை விட அதிகமான ஆடம்பரங்களை விரும்புகின்றோம். மேல்நாட்டு நடை, உடை பாவனை களைக் கண்டு காப்பியடித்துப் படிப்படியாக உயருகின்றோம். இவை எல்லாம் நமக்குத் தகாதென்றோ, குற்றமேன்றோ சொல்ல வரவில்லை. ஆனால், மேல்நாட்டார் எப்படித் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தனது வாழ்வின் சுக போகத்தையும் உயர்த்திக்கொண்டு போகின்றனரோ அதுபோலவே, நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டும், வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வரு வாய்க்கு வகை செய்து கொண்டும் தானே அதில் பிரவேசிக்க வேண்டும். அதுவுமில்லாமல், இதுவு மில்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன் அடையக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். மேல் நாட் டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து நம்மைப் பார்க்கிலும் பன்மடங்கு இலாபம் அடை கிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளு கிறார்கள். நமக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 அணா. மேல் நாட் டானுக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 ரூபாய். இதற்குக் காரணம் அவன் வேலை துரிதமே ஒழிய, வேலை சாமர்த்தியம் அல்ல என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 10 மணி நேரம் செய்யும் வேலையை மேல் நாட்டான் ஒரு மணி நேரத்தில் செய்து விடுகிறான். அதற்கேற்ற சாத னங்களை அவன் கையாளுகிறான். அதற்காகவே மேல் நாட்டுச் செல் வத்தையும், அறிவையும், ஊக்கத்தை யும் செலவு செய்து அந்த நிலை அடைந்திருக்கின்றான். அப்படிப்பட்ட வனைப் பார்த்து வேலை செய்வ திலும், சம்பாதிப்பதிலும் காப்பி அடிக் காமல் அதாவது, அதுபோல் நடக்கா மல், அவன் அனுபவிப்பதில் மாத்திரம் காப்பி அடித்து, அவனைப் போல் நடக்க ஆரம்பித்தால் சாத்தியப்படுமா? - பொருளாதாரம் இடம் கொடுக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.
நமது நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் செத்துப் போன கைத் தொழில்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்கின்றார்கள். உதாரணமாக இராட் டினத்தில் நூல் நூற்கவேண்டும், கைத்தறியால் வேஷ்டி செய்ய வேண்டும் என்கின்றார்கள். போதாக் குறைக்கு தக்களியில் நூல் நூற்பது தேசியப் பொருளாதார பக்தியாக, குழந்தைகளும் நாமும் கற்பிக்கப்படு கிறோம். ஒரு நாளைக்கு ஒரு பெண் இராட்டினத்தில் நூல் நூற்றால், கால் ராத்தல் அல்லது காலேவீசம் ராத்தல் நூற்று 1அணா அல்லது அதிகமானா லும் 0-1-6 அணா கூலி தான் அடை யக்கூடும். அதுவும் வெகு மோசமான சரக்கைத்தான் உற்பத்தி செய்யக் கூடும். மேல்நாட்டானோ ஓர் ஆள் ஒரு நாளையில் இதை விடக் குறைந்த நேரத்தில், இதை விடக் குறைந்த கஷ்டத்தில், இதைவிட உயர்ந்த சரக்காக 5 ராத்தல் 6 ராத்தல் நூற்று, தினம் இரண்டு ரூபாய் சம் பாதிக்கிறான். ஆகவே மேல் நாட்டார் தினம் 2 ரூ சம்பாத்தியத்திற்கும், நம் நாட்டான் தினம் 2 அணா சம்பாதிக் கவும் இதுவும், மற்றும் இது போலவே விவசாயத் துறையிலும், வியாபாரத் துறையிலு முள்ள காரணங்களாகு மேயல்லாமல் வேறு ஒரு காரணமு மல்ல. சமூக சீர்திருத்தம் சம்பந்த மான விஷயங்களுக்கு, நம் பண்டி தர்கள் எப்படித் தொல்காப்பியர் காலத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்து அந்தக்கால நாகரி கத்தைக் கொண்டு சமூக முன் னேற்றம் செய் யப் பார்க்கின்றார்களோ அது போலவே, நமது தேசியப் பொரு ளாதாரப் பண்டிதர்கள் அதைவிட முந்திய காலத்திய கைத்தொழில் களைக் கண்டுபிடித்து, அந்தத் துறை யில் பொருளா தாரத்தை முன்னுக்குக் கொண்டுவரப் பார்க்கின்றார்கள்.
ஆகவே, இந்தியப் பொருளாதார நிலைக்கு இந்தியர்களும், அவர்களது மதமும், கடவுளும், சடங்குகளும், கர்நாடகத்தில் (பழமையில்) பித்துக் கொண்ட தலைவர்களுமே காரண மல்லாமல் வேறு ஒன்றும் முக்கியக் காரணமல்ல என்பது என் அபிப் பிராயம்.
சகோதரர்களே! வருஷம் ஒன் றுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மதம், கடவுள், சடங்கு ஆகியவற்றிற் குச் செலவா வதை மறுக்கின்றீர் களா? பல கோடிக்கணக்கான ரூபாய் கள் சாமி, கோவில், பூசை, உற்சவம், நகை, வாகனம் ஆகிய வற்றிற்காக அடங்கி, முடங்கிக் கிடக்கின்றதை நீங்கள் மறுக்கின் றீர்களா? எனவே இந்தத் துறைகள் எல்லாம் புதிய முறை  - ஆராய்ச்சி முறை - மேல் நாட்டு முறை ஆகியவற்றில் கைத் தொழிலும், வியாபாரமும், விவசாய மும் செய்யப்பட்டு, குருட்டுப் பழக்கம், மூடநம்பிக்கை, சுயநலக்காரர்கள் சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து மீண்டு விட்டோ மானால் நமது பொருளாதார நிலை தானாகவே உயருமா? இல்லையா? என்பதையும், அந்தப்படிச் செய்யாத காரணமே இன்றைய தரித்திர நிலைக்குக் காரணமா? இல்லையா? என்பதையும் நீங்களே யோசித்துப் பாருங்கள். எனவே, எனக்குக் கொடுத்த விஷயத் தின் தலைப்பில் எனக்குத் தோன்றி யதைத் தங்களுக்கு எடுத்துச் சொன்னேன். இது சரியா? தப்பா என்று யோசித்துப் பார்த்து, உங்கள் மனதிற்குச் சரி என்று தோன்றியதை வைத்துக் கொண்டு மற்றதை உடனே மறந்து விடும்படியாய்க் கேட்டுக் கொண்டு இவ்விஷயத்தை முடிக்கிறேன்.
27.12.1930இல் களக்காடு அய்க்கிய முஸ்லிம் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, (குடிஅரசு 18.1.1931).
25-08-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 3

No comments:


weather counter Site Meter