Pages

Search This Blog

Wednesday, December 29, 2010

மனிதன் எனும் விசித்திர பிராணியே, கேள்!-வாழ்வியல் சிந்தனைகள்

எனது மதிப்பிற்குரிய நண்பரும், மருத்துவருமாகிய டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் நிறைய புதிய நூல்களைப் படிப்பவர்; இணைய தளம் வாயிலாகவும் பற்பல புதிய செய்திகளை, அரிய தகவல்களைத் திரட்டி நண்பர்களுக்குத் தந்து, சுவைபட உரையாடக்கூடியவர்.

தேவையற்ற பரிசோதனை விவரங்களை எழுதித் தந்து, நோயாளிகளுக்கு அதிக செலவு வைக்காமல், ஆழமான கேள்விகளையே, தமது பரிசோதனைகளாக அமைத்துக் கொள்ளும் ஆற்றலாளர் - மருத்துவ நிபுணர் - மனிதநேயப் பண்பாளர்.



அவரிடமிருந்து (மற்ற சில நண்பர்கள், குடும்பத்தினரிடமிருந்தும்), இணையத்தின் மூலம் சுவையான தகவல்களை நமக்கு அனுப்பி நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள்.

திபெத்தின் உரிமைக்காக வாதாடும் அதன் அதிபர் தலாய் லாமா அவர்கள் சிறந்த அறிவாளி. அவரது அனுபவமும், ஒப்பற்ற உரையாடல்களும் அறிவார்ந்த கருத்துகளின் அணிவகுப்புகள் போல் இருக்கும். மதவாதியாக பார்க்காமல் மனிதராகப் பார்க்கவேண்டும்.

அவரது பல நூல்களை நான் விரும்பிப் படிப்பதுண்டு. அவரது பேட்டி ஒன்று இணையத்திலிருந்து டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்கள் நேற்று (28.12.2010) அனுப்பியிருந்தார்.

பலருக்கும் பயன்படும் என்பதால், வாசக நேயர்களுக்கும் அதனை விருந்தாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தலாய்லாமாவைப் பார்த்து ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்:

மனித குலத்தில் நடக்கும் எந்த நிகழ்வு தங்களை மிகப் பெரிய வியப்பில் ஆழ்த்தியுள்ளது?

அதற்கு அமைதியின் உருவமான அவர் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்:

மனிதன்!

- அவன் பணத்திற்காகத் தனது உடல் நலத்தைத் தியாகம் செய்பவன்!

- பிறகு அதே மனிதன் தனது உடல் நலத்தைக் காப்பாற்றிக் கொள்ள பணத்தைத் தியாகம் செய்பவன்!

- அவன் தனது வருங்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள அளவற்ற ஆர்வம் கொண்டலைந்து, நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்தவனாகி வாழ்கிறான்! இதன் ஒட்டு மொத்த விளைவு என்ன தெரியுமா?

அவன் நிகழ்காலத்தையும் அனுபவிக்கத் தெரியாதவனாவதோடு, வருங்காலத்தையும் கூட அனுபவிக்க முடியாதவனாகவே வாழும் பரிதாபத்திற்குரியவனாகிறான்!

அவன் வாழும்போது ஏதோ இவனுக்கு இறப்பே கிடையாது என்பது போல எண்ணி இறுமாந்து வாழ்கிறான்!

ஆனால் இறக்கும்போதோ, தான் பயனுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான எண்ணமின்றியே சாகிறான்!

மனிதன் என்கிற விசித்திரப் பிராணி பற்றி எவ்வளவு சுருக்கமாக, ஓங்கிப் பொறி தட்டும்படிச் செய்து அறிவுரை வழங்கியுள்ளார் தலாய்லாமா!

மனிதர்கள் பிறக்கிறார்கள்; சம்பாதிக்க அலைகிறார்கள். கோடி கோடியாகப் பணம் சேர்க்கின்றனர். பதவி, பதவி என்று ஆளாய்ப் பறக்கிறார்கள்! மனநிறைவே அறியாது, எல்லையற்ற ஆசைக்கனவுகளையே கண்டு நிம்மதியற்ற வாழ்வு வாழ்ந்து - மண்ணோடு மண்ணாக மக்கள் எவருக்கும் பயனின்றிப் புதைந்து போகிறார்கள்; அல்லது எரிந்து போகிறார்கள்!

ஓ மனிதர்களே! மனிதர்களே! இந்தக் கருத்தை அசை போட்டுச் சிந்தித்து அதற்கேற்ப உண்மையாக வாழுங்கள்!

உனக்காக வாழ்வதைவிட உலகத்தார்க்குத் தொண்டு செய்து வாழும் வாழ்வை பயனுள்ளதாக்கு மனிதா!

திபெத் லாமாவின் கேள்விக்கு விடை கண்டு வாழ்ந்தால் நம் வாழ்வு சுவையான வாழ்வாக, பொருளுள்ள வாழ்வாக அமையும் - இல்லையா?
http://www.viduthalai.periyar.org.in/20101229/news05.html

நுழைவுத் தேர்வு எதிர்ப்பு - நடந்துவந்த பாதை!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சராக இருந்த எச்.வி. ஹண்டே சட்ட மேலவையில் கோடிட்டுக் காட்டினார்.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் களைச் சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வு (Entrance Exam) நடத்தும் யோசனைபற்றி தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றார்.
ஹண்டே அறிவித்ததுதான் தாமதம். நச்சு விதையை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், அது ஆலகாலமரமாகி மக்களைக் கொன்று தீர்த்துவிடுமே.
செய்தி வந்த அன்றே கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர் கள் நுழைவுத் தேர்வு: ஆபத்தான யோசனை என்று கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். (விடுதலை, 23.3.1982).
காமராசர் அவர்கள் முதல்வராக இருந்தபோதும், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதும், கலைஞர் அவர்கள் முதலமைச் சராக இருந்தபோதும் - ஏற்கப்படவில்லை இந்த யோசனை. செயல்படுத்த முனைய வில்லை அன்றைய அரசுகள் என்றால், அதற்குத் தெளிவான, திட்டவட்டமான காரணங்கள் இருந்தே தீரவேண்டும் என்பதை இன்றைய முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் உணர்வார் என்று நம்புகிறோம்.
அ.தி.மு.க. ஆட்சி வகுப்புரிமையை அடிக்கடி புதைகுழிக்கு அனுப்ப முயற்சிக் கும் ஓர் ஆட்சி என்ற கெட்ட பெயர் தமிழர்கள் மத்தியில் - கட்சி வேறு பாடின்றி பெற்ற ஒரு கட்சியாக ஏற் கெனவே 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணை, பொருளாதார அடிப்படையில் சலுகை தேவை என்ற பேச்சு; என் ஜினீயரிங், மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களைத் தேர்ந் தெடுக்க இன்டர்வியூ மார்க்குகள் 75 ஆக இருந்ததை 30 ஆகக் குறைத்த நடவடிக்கை போன்ற பலவகை முறை களால் இந்த அரசுக்கு ஏற்பட்டிருக் கிறது.
இப்போது புதிய கேடு ஒன்றினைத் தொடங்கி வைக்கும் திருப்பணியையும் வரும் கல்வி ஆண்டிலிருந்து செய்ய முனைகிறார்கள் என்றால், தமிழர்களுக் குப் பேரபாயமான ஒரு புதிய ஏற்பாடும் தயாராகி வருகிறது என்றே அதற்குப் பொருள். (விடுதலை, 23.3.1982) என்று அறிவித்த கழகப் பொதுச்செய லாளர் அந்த அறிக்கையின் இறுதியில் கிளர்ச்சிகள் வெடிக்க வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நுழைவுத் தேர்வு ஆணை கொளுத்தவும் பட்டது (17.6.1984).
நுழைவுத் தேர்வைக் கொண்டு வந் தால் என்ன ஆகும்? அந்த அறிக்கையி லேயே அதற்கும் விடையளித்திருந்தார்.
நுழைவுத் தேர்வு என்று வைத்தால், பார்ப்பனர்களும், பணக்காரர்களும்தான் அதனால் பலன் பெறுவார்கள் டம்மி நெம்பர் வைத்தால்கூட அதற்கும் லஞ்சம் கொடுத்து தெரிந்துகொண்டு, மார்க் வேட்டை ஆடிவிடுவார்கள். பதவியில் உள்ளவர்கள் வீட்டுப் பிள்ளைகளும், பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளும், பணக் கார சீமான் வீட்டுப் பிள்ளைகளும், பட் டணத்துப் பிள்ளைகளும்தான் இதன் மூலம் பயன் அடைவார்களே தவிர, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களும், பட்டிக்காட்டுப் பிள்ளை களும், ஏழைகளும் இதனால் பாதிக்கப் படவே செய்வார்கள்.
மேற்காட்டிய முதல் ரக பிரிவினர்க்கு மார்க் வாங்கும் ரகசியம் தெரியும். ஆனால், அடுத்த பிரிவில் உள்ளவர் களுக்குத் தெரியாது என்று நடைமுறை உண்மையை - தோலை உரித்து சுளையை முழுமையாகக் காட்டினார் கழகப் பொதுச்செயலாளர்.
மாண்புமிகு நாவலர் இரா. நெடுஞ் செழியன் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தநேரத்தில் (1972 இல்) நுழைவுத் தேர்வு என்று தன்னிச்சையாக ஒரு பேச்சை ஆரம்பித்தார். அவ்வளவுதான்! தந்தை பெரியார் அவர்களிடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார் (17.7.1972).
அதற்குப் பின் அதுபற்றிய பேச்சே இல்லை. கப்-சிப் என்று பிறந்த தரு ணத்திலேயே மரணக் குழிக்குப் போய் விட்டது. முதலமைச்சர் மானமிகு கலை ஞர் ஆயிற்றே - அதற்குமேல் அனுமதிப் பாரா? நுழைவுத் தேர்வைத்தான் ஏற்றுக் கொள்வாரா?
இதில் இன்னொன்றையும் இந்த நேரத்தில் நினைவூட்டுவது மிகமிக முக்கியமாகும். நுழைவுத் தேர்வு விடயத் தில் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க் சிஸ்ட்) கட்சி எப்படி பார்ப்பனத்தனமாக நடந்துகொண்டது என்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி அது.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
http://www.viduthalai.periyar.org.in/20101229/news06.html

சோர்ந்து போகும் எதிர்க்கட்சிகள்!

2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை பூமராங்காக திருப்பித் தாக்க ஆரம்பித்துவிட்டது. தணிக்கை அதிகாரி - நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுமுன் நேரில் வந்து வெளியிட்ட தகவல் - இதுவரை ஆட்டம் போட்டவர்களைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை.

ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று பெரும் பிரச்சாரப் புயலில் ஒரு சதிக் கூட்டம் ஈடுபட்டது.

2001 ஆம் ஆண்டிலிருந்தே விசாரணை என்று சொன்ன மாத்திரத்திலேயே சில வட்டாரங்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டது. அதனைத் தொடர்ந்து வெளிவரும் தகவல்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இல்லை.

எந்தத் தணிக்கை அதிகாரியால் வீண் குழப்பம் ஏற் பட்டதோ, அதே தணிக்கை அதிகாரி நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன் தோன்றி, 2ஜி அலைக்கற்றை விடயத்தில் ரூ.57,666 கோடியிலிருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு இருக்கலாம் என்று வெறும் அனுமானத்தால் எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். வெறும் யூகம், அனுமானம் என்ற அடிப்படையில் பழி தூற்றலாம்; அடுத்தவர்களைக் கொச்சைப்படுத்தலாம்; நாடாளுமன்றத்தையே 23 நாள்கள் நடக்கவிடச் செய்யாமல் முடக்கிப் போடலாம் என்றால், இது நாடுதானா? இங்கு நிலவும் நிருவாகத்தின் இலட்சணம் இதுதானா என்று வெட்கத்துடன் கேட்கத் தோன்றவில்லையா?

குற்றச்சாற்றுக்கு ஆளானவர்கள் சி.பி.அய். விசார ணைக்குச் சென்று கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தங்கு தடையின்றி விடையிறுத்துள்ளார்கள். நல்ல ஒத்துழைப்புக் கொடுத்ததாக விசாரணை அதிகாரிகளே கூறியிருக்கிறார் கள். மீண்டும் எப்பொழுது அழைத்தாலும் வரத் தயாராக இருக்கிறேன் என்று மானமிகு ஆ.இராசா கூறியுள்ளார்.

குற்றஞ்சாற்றப்பட்டவர் கம்பீரமாக இருக்கும் நிலையில், குற்றம் சுமத்தியவர்கள் முகம் சுருங்கிக் காணப்படு கிறார்கள்.

அரசியல், தேர்தல் துருப்புச் சீட்டு நம் கையை விட்டே போய்விடும் போலிருக்கிறதே - நமக்கு எதிராகத் திரும்பும் போலிருக்கிறதே என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன் நேரில் வரத் தயாராக இருக்கிறேன் என்று பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங் வாயால் சொன்னதோடு மட்டுமல்லாமல், எழுத்து வடிவத்திலும் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷிக்கு எழுதிவிட்டார்.

இதனை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும்! பிரதமரை அழைக்கும் வழமையில்லை - அவர் நேரில் வரவேண்டுமானால் சபாநாயகர் அனுமதி பெற்றாக வேண்டும்; அதுபற்றி யோசித்து முடிவெடுப்போம் என்று பொதுக் கணக்குக் குழுவின் தலைவரே தடுமாற்றமாகப் பேச ஆரம்பித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையின் பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் என்ன சொல்லுகிறார்? நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின்முன் பிரதமர் வருவது வழமையல்ல; சட்டத்திலும் இடமில்லை. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்கிறார்! பிரதமர் வரமாட்டார் என்ற நினைப்பில் இருந்தவர்களுக்கு, அவர் வரத் தயார் என்றவுடன், பந்து வேறு பக்கம் போய்விட்டதே என்று கலங்குகிறார்கள்.

இவ்வளவுக்கும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷி - பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவர். அவர் தலைமையிலான இந்தக் குழு தன் விசாரணையை வேகமாக நடத்த ஆரம்பித்துவிட்டது.

ஆனால், பா.ஜ.க. தலைவர்களோ அந்த விசாரணையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை - இது என்ன வேடிக்கை - வினோதம்! கட்சிக்குள்ளேயே ஏன் இப்படிப் பட்ட கரணங்கள்!

முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமரையே விசாரிக்கும் பெருமை போய்விடக் கூடாது என்று நினைக்கிறார்களா? அந்த விசாரணை குறிப்பிட்ட சில நாள்களுக்குள் முடிந்து விடும்; ஆனால், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசார ணையோ நீண்ட காலத்திற்கு இழுத்துக்கொண்டே போகும் - அதன்மூலம் நீண்ட காலத்திற்கு அரசியல் லாபத்தைத் துய்க்கலாம்; 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சுயநல அரசியல் நோக்கத்தில்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் பொதுமக்களுக்கும் விளங்க ஆரம்பித்துவிட்டது.

சோ ராமசாமி போன்றவர்கள் (துக்ளக் கட்டுரை) (சு.சாமி உள்பட) நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் பிரயோசனம் கிடையாது. பொதுக்கணக்குக் குழு விசாரணையே போதுமானது என்று எழுத, சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

பீம் சிங், இது என்ன குழப்பம்? என்று அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிடும் வசனம் போல, இன்றைக்கு எதிர்க்கட்சிகளிடையே குழப்பமும், மயக்கமும் போட்டி போடுகின்றன.

இந்த எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஊழல் குடலைப் புரட்டுகிறது. இந்த லட்சணத்தில் வெறும் யூகத் தின் அடிப்படையில் கதைவிடப்பட்ட ஒன்றைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளின் வெறுமையைத் தான் வெளிப்படுத்தும்.

இந்த நேரத்தில் தி.மு.க. இந்தப் பிரச்சினை குறித்துப் பொதுமக்களிடம் பரப்பிட புயல் வேகத்தில் பிரச்சாரத்தைக் கிளப்பியிருப்பது - மேலும் எதிர்க்கட்சிகளைச் சோர்வ டையச் செய்யும் - பொதுமக்களும் உண்மையை உணரக் கூடிய நல் வாய்ப்பும் கிட்டும் - நடக்கட்டும் பிரச்சாரம் நல்ல வகையில்!
http://www.viduthalai.periyar.org.in/20101229/news04.html

உமாபாரதியும், பா.ஜ.க.வும்

செல்வி உமாபாரதி பா.ஜ.கட்சியிலிருந்து விலகி வேறு ஒரு புதிய அமைப்பைத் தொடங்கினார். மீண்டும் பா.ஜ.க.வில் சேரப்போகிறார் என்ற செய்தி அவ்வப் போது வந்து வந்து போகும்.

உண்மையைச் சொல்லப்போனால் உமாபாரதி விடயத்தில் பா.ஜ.க. பெரும் துரோகம் செய்துவிட்டது என்பதில் எள் மூக்கு அளவுக்கும் கூட அய்யப்பாடு கிடையவே கிடையாது.

பா.ஜ.க. வளர்ச்சிக்கு உமாபாரதி மிக முக்கியமான வர்; அதிலும் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு அவர்தான் உயிர் நாடி போன்றவர்.

2003 இல் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்று உமாபாரதி முதல் அமைச்சர் ஆனார். 1994 இல் கருநாடக மாநிலத்தில் ஹூப்ளியில் நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பாக உமாபாரதி மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது - அதாவது பத்தாண்டுகள் கழித்து.

பா.ஜ.க. சங் பரிவார்க் கும்பலில் ஆதிக்கக் கூட்ட மான பார்ப்பனர்கள், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று உமாபாரதி பதவி விலகவேண்டும் என்று கூச்சல் போட்டார்கள். (பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளியான அத்வானி - இந்தியாவின் துணைப் பிரதமராகவே இருந்தார் என்பதை இந்த இடத்தில் நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.) வேறு வழியின்றி, செல்வி உமா பாரதி பதவி விலகினார். (உமாபாரதி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை கவனத்தில் கொள்க!)

நீதிமன்றத்தில் உமாபாரதி குற்றவாளியல்ல என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், தார்மீகப் பண்புக்கே மொத்த குத்தகையைத் தாங்களே எடுத்துக் கொண் டுள்ளதாக டமாரம் அடிக்கும் பா.ஜ.க. தலைவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? செல்வி உமாபாரதியை மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் பதவியில் மீண்டும் அமர்த்தியிருக்க வேண்டும் அல்லவா - அதுதானே நியாயம்?

தற்காலிகமாக முதலமைச்சர் பதவியில் அமர்த்தப் பட்ட பாபுலால் கவுரையே முதலமைச்சராகத் தொடரும் படிச் செய்தனர். அது செல்வி உமாபாரதிக்கு இழைக்கப் பட்ட மாபெரும் அநீதியல்லவா? பிற்படுத்தப்பட்டோருக் குள் மோதவிடச் செய்யும் பார்ப்பனிய நரித் தந்திரம் அல்லவா?

பொதுவாக பா.ஜ.க.வில் நிலவும் பார்ப்பன ஆதிக்கம் குறித்து மிக வெளிப்படையாகவே உமாபாரதி சொன்னதுண்டு.

1990 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில் உமாபாரதி கூறியது என்றைக்குமே முக்கியமானது.

எங்கள் கட்சியை மக்கள் பார்ப்பனர் கட்சியாகத் தான் பார்க்கிறார்கள். கல்யாண்சிங், வினய்கட்டியார், நான் எல்லோருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான். ஆனாலும் எங்களையும் மக்கள் பார்ப்பனர்களாகத்தான் பார்க்கிறார்கள்.

பா.ஜ.க. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வுக்குள் அடிமட்டத் தொண்டர்களாக இருந் தாலும் கூட ஒதுக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டி யிட பிற்படுத்தப்பட்டோருக்கு டிக்கெட் கொடுப் பதில்லை.

இந்த அநீதியை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் நான் போராடினேன். ஆனால் அது எடுபடவில்லை. இந்து மதம் என்று நாங்கள் பேசினாலே அது பார்ப்பன ஆதிக்கம் என்றுதான் மக்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்குப் பா.ஜ.க. பார்ப்பனக் கட்சியாகிவிட்டது. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினருக்காக பி.டி.சர்மா போராடினார். அவரை பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத் துக்காரர்கள் போட்டு உதைத்தார்கள். இந்த ஒரு சம்பவத்தால் மத்தியப் பிரதேசத்தில் 40 தொகுதிகளை நாங்கள் இழந்தோம்.

தோல்வி அடைந்த பிறகும் கூட ஜாதி ஆதிக்கம் போகவில்லை. மத்தியப் பிரதேச சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விக்ரம் வர்மாவை தேர்ந்தெடுக்க முயற்சிக்காமல், மத்தியப் பிரதேச மக்கள் ஆதரவே பறிபோகக் காரணமாக இருந்த சுந்தர்லால் பட்வாரியையே கட்சித் தலை வராக்க முயற்சி நடந்தது. அவர் வேண்டாம் என்று மறுத்த பிறகுதான் விக்ரம் வர்மா தேர்ந்தெடுக்கப் பட்டார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடம் அளிக்க வேண்டுமென்று 1996-லேயே நான் போராடினேன். பிற்படுத்தப்பட்டவர் சொன்னால் அம்பலம் ஏறுமா? என்று இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே உமாபாரதி கூறினார்.

இவ்வளவுக்குப் பிறகும் பா.ஜ.க.வுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்று அவர் கருதுவாரேயானால் அது கடைந்தெடுத்த - அரசியல் பதவி சார்ந்த சுய நலமாகத்தானே இருக்க முடியும்?

பா.ஜ.க.வின் உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் இயக்கம் ஒன்றை அவர் நடத்து வாரேயானால், அது மிக உபயோகமான பெருந் தொண்டாக இருக்கமுடியும்- செய்வாரா?
http://www.viduthalai.periyar.org.in/20101228/news04.html

தமிழர் தலைவர் கி.வீரமணி- தந்தை பெரியார் கண்டெடுத்த நல்மணி!

1944 ஆம் ஆண்டு ஆகத்து 27ஆம் நாள் சேலம் மாநகரில் எழுச்சியோடும், தந்தை பெரியாரே எங்கள் தலைவர் என ஏழை எளியோர் ஏராளமாகக் கூடிய நீதிக் கட்சி 16ஆம் மாநாடு சிறப்புடன் நடந்தேறியது.

இயக்க வரலாற்றில் திருப்புமுனையாக நீதிக்கட்சி என்ற பெயரை நீக்கித் திராவிடர் கழகம் என மாற்றுப் பெயரைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றியதற்குப் பிறகு மக்கள் இயக்கமாக மலைக்கத் தக்கவகையில் வளர்ந்து ஓங்கியது.

திராவிட இயக்க வரலாற்றில் 1944 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்களிடையே ஏற்பட்ட புதிய எழுச்சியும்,புத்துணர்ச்சியும் குறிப்பிடத்தக்கவை.

திராவிடர் கழகம் முழுக்க முழுக்க ஏழை, எளிய, பாட்டாளிகளும், பாமர மக்களும் நிரம்பிய கட்சி என்ற பெயர் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல், இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் பெரியார் அண்ணா பேச்சுகளால் ஈர்க்கப்பட்டுக் கழகத்தில் வந்து சேரலாயினர்.

பேரறிஞர் அண்ணா அவர்களைக் கல்லூரிகள் போட்டி போட்டுக் கொண்டு அழைக்கத் தொடங்கின. மேடைப் பேச்சிலே அண்ணா பாணி என்ற ஒன்று ஏற்பட்டது. அந்தப் பாணியிலேயே மாணவர்களெல்லாம் பேசத் தலைப்பட்டனர்.

திராவிடர் கழகத்திற்கு நாவன்மை மிக்க ஒரு பேச்சாளர் பட்டாளமே கல்லூரிகளிலிருந்து வெளிப்பட்டது.

திராவிட இயக்க உணர்ச்சியும் எழுச்சியும் தமிழகத்தில் பொங்கி வழியத் தொடங்கின. அது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். அப்போதுதான் முளைவிட்டுச் செடியாக வெளிவந்தது. வீரமணி என்னும் ஒரு வீர விதை. அந்தச் செடிக்கு நீரூற்றி உரமிட்டு வளர்த்தவர் கடலூர் ஆ.திராவிடமணி என்பவர் ஆவார்.

பள்ளி ஆசிரியரான ஆ.திராவிடமணி அவர்கள் சாரங்கபாணி என்னும் மாணவ மணிக்கு வீரமணி எனத் தனித்தமிழ் பெயர் சூட்டி நாடெங்கும் அழைத்துச் சென்று கொள்கை மணம் கமழச் செய்தார்.

பன்னிரண்டு வயதுச் சிறுவன் வீரமணி பேச்சைக் கேட்க வாரீர்! என்று அந்தக் காலத்தில் துண்டறிக்கைகளை அச்சடித்து விளம்பரம் செய்வார்கள். சிறுவன் வீரமணி வீர முழக்கமிடுவதைக் கேட்க ஒவ்வோர் ஊரிலும் மக்கள் கூடுவார்கள்.

அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஊரான திருக்காரவாசலுக்கு அருகில் உள்ள ஆலத்தம்பாடி என்னும் ஊரில் அந்த ஊரைச் சேர்ந்த சேஷைய ராசு, ஆசிரியர் சண்முகம், தையற்கடை வைத்திருந்த அப்பாண்ட ராஜன் ஆகியோருடன் நானும் சேர்ந்து வீரமணியை அழைத்து கழகப் பொதுக் கூட்டம் நடத்தினோம்.

1946ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் நாள் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அன்றைக்கு முந்திய நாள் காலை திருத்துறைப்பூண்டியில் தஞ்சை மாவட்ட மாணவர் கழக மூன்றாவது மாநாடும், பிற்பகல் முதலாவது கருஞ்சட்டை மாநாடும் நடைபெற்றன.

அந்த மாநாட்டில் கலந்துகொண்ட காஞ்சி கலியாணசுந்தரம், கடலூர் ஆ.திராவிடமணி, கடலூர் வீரமணி, கவிஞர் கருணாநந்தம் ஆகியோரை ஆலத்தம்பாடிக்கு அழைத்து வந்து அந்தக் கூட்டத்தை நடத்தினோம்.

அன்று மாலை தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படத்தை ஏந்தியவாறு கால்நடையாக ஊர்வலம் நடத்தினோம். எங்களுடன் அந்த ஊர்வலத்தில் சிறுவன் வீரமணியும் நடந்துவந்தார்.

அன்று அந்தச் சிற்றூர் மக்களெல்லாம் சிறுவன் வீரமணியின் வீர முழக்கம் கேட்டு வியந்தும் மகிழ்ந்தும் பாராட்டினர்.

அன்று அவர் பந்தலிலே பாகற்காய் என்னும் குட்டிக் கதையை உவமையாக எடுத்துச் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார்.

அதாவது, ஓர் இழவு வீட்டில் ஒப்பாரி வைத்துப் பெண்கள் அழுது கொண்டிருந்தபோது அந்தத் துக்கத்தில் கலந்துகொள்ள இரண்டு பெண்மணிகள் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டின் உள் முற்றத்தில் பாகற்காய் நிறைய காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அந்தப் பெண் மணிகளில் ஒருவர் தமது ஒப்பாரியோடு ஒப்பாரியாகப் பந்தலிலே பாகற்காய் பந்தலிலே பாகற்காய் என்று பட ஆரம்பித்தார். அதைக் கேட்டு மற்றொரு பெண்மணி போகும் போது பார்த்துக்கலாம் போகும் போது பறிச்சுக்கலாம் என்று ஒப்பாரியோடு சேர்த்துப் பாடினாராம்.

இப்படிப் பல குட்டிக்கதைகளையும் அடுக்கடுக்கான உவமைகளையும் சொல்லி மேடையில் சிறுவன் வீரமணி ஆற்றிய உரை பாமர மக்களின் உள்ளத்திலெல்லாம் நமது கொள்கையைப் பதியம்போடச் செய்தது என்றால் மிகையாகாது.

பவள விழா கண்ட வீரமணியும், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் திருமதி மோகனா வீரமணி அவர்களும், அவர்தம் பிள்ளைச் செல்வங்களும் பல்லாண்டு பல்லாண்டு எல்லா நலமும் இனிதே பெற்று வாழ்க என முத்துவிழா கண்ட நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்று பன்னிரண்டு வயது சிறுவனாக நான் பார்த்த வீரமணிதான் என்னுடைய 80 ஆவது பிறந்தநாள் விழாவிலும் 81 ஆவது பிறந்தநாள் முத்து விழாவிலும் கலந்துகொண்டு என்னை வாழ்த்திச் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(கடந்த 2.12.2010 அன்று தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாள்.)

(நன்றி: மீண்டும் கவிக் கொண்டல் - டிசம்பர் 2010)
http://www.viduthalai.periyar.org.in/20101228/news05.html

செய்தியும் சிந்தனையும்! யாகம் என்னும் கலாச்சாரம்!


யாகம் என்ற பெயரால் தீயில் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது ஆரியர்களின் கலாச்சாரம்.

ஆரியர்களின் இந்தத் தாக்கத்தால் தமிழ் அரசர்களும் கெட்டுக் குட்டிச் சுவர் ஆனதும் உண்டு. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிகள் தோன்றினார்கள். சிலப்பதிகாரத்திலும் பார்ப்பன யாகக் கடை விரிக்கப்பட்டுவிட்டது.

வடபுலம் என்று வீரப் பராக்கிரமம் காட்டி கனக விசயன் தலையில் கல்லேற்றி வந்த வீராதி வீரன் செங்குட்டுவன் மாடல மறையோன் என்னும் பார்ப்பன நஞ்சு, ஊட்டிய மதப் போதையில் சிக்கி யாகம் நடத்தி, மானம் கெட்டான்.

பார்ப்பனர்களின் இந்த யாகத்தை எதிர்த்து கவுதமப் புத்தர் 2500 ஆண்டுகளுக்குமுன் போர்க் கொடி தூக்கினார்.

ஆடு, மாடுகளைத் தீயில் பலி கொடுத்து சொர்க்கம் போக முடியும் என்றால், உமது தகப்பனாரை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி, நேரடியாக மோட்சம் போவதுதானே? என்ற அறிவு சார்ந்த வினாவை நாக்கைப் பிடுங்கும்படிக் கேட்டார்.

தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகம், காட்டு விலங்காண்டித்தனமானது. வெட்டுண்ட குதிரைகளுடன் தசரதனின் பட்டத்தரசிகள் கட்டிப் புரண்டனர் என்பது என்னே கண்ணராவி!

யாகப் புரோகிதர்களுடன் பட்டத்தரசிகளை அனுப்பி வைத்து அவர்கள்மூலம் கர்ப்பமாக்க வைத்த காரியம்தான் இந்து மதக் கலாச்சாரத்தின் உச்சகட்டம்.

ஆரியர்களின் யஜுர் வேதம் என்பது முழுக்க முழுக்க உயிர்க் கொலை யாகங்கள் பற்றியே பிரஸ்தாபிப்பதாகும். 30 வகை யாகங்கள்பற்றிக் கூறப்படுகின்றன. அதில் ஒன்று அஸ்வ, மனுஷ்ய, அஜ, கோ பசுப்ர சமஸா என்பதாகும்.

குதிரை, மனிதன், ஆடு, மாடு முதலிய உயிர்களைக் கொன்று யாகம் நடத்துவதாகும்.

அரிச்சந்திரன் என்ற அரசன் புத்திரப் பேறில்லாது வருந்திக் கொண்டிருந்தபோது வருண தேவனின் கட்டளைக்கிணங்கி அஜூகர்த்த முனிவரின் புத்திரனான சுன சேபன் என்பவனை விலைக்கு வாங்கி, அவனைக் கொன்று நர மேத யாகம் செய்த தகவல் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. விசுவாமித்திரனின் சகோதரியின் மகன் அச்சிறுவன்; கடைசி நேரத்தில் தன் தவ வலிமையால் காப்பாற்றினாராம் முனிவர்.

இந்தக் காட்டுவிலங்காண்டித்தனத்தை எதிர்த்த பவுத்தர்களையும், சமணர்களையும் படுகொலை செய்தது பார்ப்பனியம்.

எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிய கொலைகார மதம்தான் இந்தப் பார்ப்பன இந்து மதம்.

வேத வேள்வியை நிந்தனை செய் துழல்

ஆத மில்லிய மனோடு தேரரை

வாதில் வென்றழிக்க திரு வுள்ளமே

வேதங்களை யாகங்களைப் பழிக்கும் சமணர்களை வென்று அழித்திட அருள்புரிவாயாக என்று கடவுளுக்கு விண்ணப்பம் போடுகிறான் தேவார திருஞான சம்பந்தன்.

யாகங்களை பவுத்த சமணர்கள் எதிர்த்ததும், அவர்களைப் பார்ப்பனர்கள் அழித்ததும் நமது வரலாறாகும்.

இவ்வளவு பீடிகையும் எதற்காக? அண்மைக்காலமாகப் பார்ப்பனர்கள் யாகக் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறார்கள். உலக க்ஷேமத்தை யாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

எத்தனை எத்தனை ஆண்டுகாலமாக இத்தகைய யாகங்களை நடத்தி வருகிறார்கள்? நாட்டில் அமைதி தாண்டவம் ஆடிவிட்டதா?

இதோ ஒரு செய்தி:

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பையடுத்த குமாரகுடியில் ஏகாதசி மகா ருத்ர யாகமாம்.

இதில் ஜப்பான் நாட்டினர் நூறு பேர்கள் கலந்துகொண்டனராம். (முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே ஏக போகமா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது).

150-க்கும் மேற்பட்ட வேதப் பார்ப்பனர்கள் இந்த யாகத்தை நடத்தினார்களாம். ஸ்ரீ அகத்திய நாடி ஜோதிட நிலையம் மற்றும் ஜப்பான் நாட்டின் அபி இண்டர்நேஷனல் இன் கார்ப் நிறுவனமும் இணைந்து உலக நன்மை வேண்டி இந்த யாகத்தை நடத்தினவாம்.

எவ்வளவு உணவுப் பொருள்கள் பாழாகி இருக்கும்? எவ்வளவுப் பட்டுச் சேலைகளைக் கொளுத்தியிருப்பார்கள்?

உற்பத்தி நாசம் செய்யும் இந்தக் கொடியவர்களைத் தண்டிக்க வேண்டாமா?

வேதப் பார்ப்பனர்கள் சுரண்டிக் கொழுத்து, பார்ப்பனக் கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்தத்தான் இத்தியாதி யாகங்கள்.

சிந்திக்கும் திறனிருந்தால் சிந்தியுங்கள்!

- கருஞ்சட்டை -
http://www.viduthalai.periyar.org.in/20101227/news04.html

ஆரியர் - திராவிடர் போர்

முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் வேலூரிலும், நாகப்பட்டினத்திலும் ஆற்றிய உரை நேரு கூறிய ஆரியர் - திராவிடர் போர் - நேற்றும் - இன்றும் எனும் தலைப்பில் திராவிடர் கழகம் நூலாக வெளியிட்டுள்ளது. அந்நூல், சென்னைப் பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவு நாளில் வெளியிடப்பட்டது. 32 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கான நன்கொடை ரூபாய் பத்து மட்டும்தான். இந்நூல் பட்டிதொட்டியெல்லாம் பரவும் வகை செய்ய தமிழர்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்வார்களாக!

இன்றைய சூழலில் இந்நூல் கடைகோடி மனிதர்க்கும் கொண்டு போய் போய் சேர்க்கப்படவேண்டியது அவசியம் ஆகும்.

தி.மு.க. ஆட்சியைப் பொறுத்த அளவில் மக்கள் நல அரசு (றுநடகயசந ளுவயவந) என்ற சொல்லாக்கத்திற்குப் பொருத்த மானதாகும்.

தேர்தல் அறிக்கையில் எவற்றையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளனவோ - என்னென்ன வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளனவோ, அவையெல்லாம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது மட்டும் அல்லாமல், தேர்தல் அறிக்கையில் கூறப்படாத பலவும்கூட நிறைவேற்றப்பட்டுள்ளன.

2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று சொல்லப்பட்டது. அவ்வாறே அளிக்கப்பட்டும் வந்தது. அடுத்தகட்டமாக ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த மாநில அரசும் நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்று இது. இதற்காக கிலோ ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 21 இழப்பு என்று கணக்கிடப் பட்டுள்ளது. இருந்தாலும், மக்களின் பசிப்பிணி என்ற நோயைத் தீர்க்கும் இந்தத் திட்டத்தை வெறும் ரூபாய் அணா பைசா எனும் தராசு தட்டில் போட்டு நிறுத்துப் பார்ப்பது - மனிதாபிமானமற்ற மனத்தையே சுட்டிக்காட்டும்.

அதேபோல, மனிதனுக்கு மிக முக்கியமானது உடல் நோய் தீர்க்கும் பிரச்சினையாகும். கலைஞர் உயிர் காக்கும் திட்டம்; 108 ஆம்புலன்ஸ் உதவி - இவை எல்லாம் அடித்தட்டு மக்களின் நல்வாழ்வைத் தன் அடிமனத்தில் கொண்ட ஓர் அரசால்தான் செயல்படுத்த முடியும்.

அதேபோல குடியிருக்கக் கான்கிரீட் வீடு 21 லட்சம் மக்களுக்கு என்பது - எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருக்கக் கூடியதாகும்.

வேலை வாய்ப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை - இது சில வெளிநாடுகளில் உண்டே தவிர, இந்தியாவுக்குள் கிடையாது.

சமூக மறுமலர்ச்சித் திசையில், பெரியார் நினைவு சமத்துவபுரம், தமிழ் செம்மொழி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு என்பன காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கக் கூடியவையாகும்.

இவ்வளவு நடந்தும் ஒரு சிறு கும்பல் இந்த ஆட்சியின் மீது மண்ணை வாரி இறைக்கிறது. இந்தக் கும்பலிடம் ஊடகம் என்பது வசதியாக, வளமாகச் சிக்கிக்கொண்டு இருக்கிறது. அந்தக் கும்பல் எண்ணிக்கையில் சிறுபான்மையான பார்ப் பனர்களாக இருந்தாலும்கூட, ஆதிக்கக் சக்திகளாகத்தான் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது.

தூசைத் துரும்பாக்கிக் காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களான பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான அரசாக இது அமைந்துள்ளதால், அதனை இந்தச் சிறு நரிக் கூட்டத்தால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை.

இந்தச் சிறு கும்பலுக்கும், இந்த நாட்டுக்குரிய மக் களுக்கும் நீண்ட காலமாகப் போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. இராமாயணம் என்பதேகூட இந்த அடிப்படை யில்தான் என்று நேரு - விவேகானந்தர் போன்றவர்களே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே - தேவாசுர யுத்தமே என்று அறுதியிட்டுக் கூறியிருக்கின்றார் தந்தை பெரியார் (விடுதலை, 22.5.1967).

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார். தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை (18.9.1953 இல் முதல மைச்சராக இருந்த நிலையில், திருவான்மியூரில் பேசியது) என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையேதான் வேலூர், நாகை நகரங்களிலும் (முறையே 27.11.2010, 10.10.2010) நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களும் வழிமொழிந்து பேசும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

1971 ஆம் ஆண்டு தந்தை பெரியார்: இப்பொழுது நடைபெறுவது திராவிட - ஆரிய யுத்தம் என்று சொன்னார். பெரியார் என்ன? இராமாயணத்தைப்பற்றி எழுதிய பண்டித ஜவகர்லால் நேரு அவர்களே, தேவாசுர யுத்தம் என்பது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் என்று எழுதியிருந்தாலும்கூட, இது திராவிடர்களுக்கும், ஆரியர்களுக்கும் நடந்த போராட்டம்தான் என்று ஜவகர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதம் என்ற புத்தகத்திலே எழுதியிருக்கிறார்.

இப்பொழுது அரசியல் ரீதியாக அந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தாங்கவேண்டிய பெரும் பொறுப்பு நம்முடைய தோள்களுக்கு வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர்.

சிலர் குழப்புவதுபோல பிரச்சினையைத் திசை திருப்பு வதற்குக் கூறப்பட்ட ஒன்றல்ல இது. நாட்டு நடப்பும், பார்ப்பனர் களும், அவர்கள் கையில் சிக்குண்டு கிடக்கின்ற ஊடகங்கள் மேற்கொண்டிருக்கிற அடாவடித்தனமான பிரச்சாரங்களும் முதலமைச்சர் கூறுவது - கணித்திருப்பது மிகச் சரியானது தான் என்பதை வெளிப்படுத்துகின்றன.

இது ஒன்றும் இராமயண காலம் அல்ல; திராவிடர் இயக்கமும், தந்தை பெரியார் அவர்களும் எழுப்பியிருக்கிற தன்மான உணர்ச்சி தலைதூக்கி நிற்கும் காலகட்டம். 1971 பொதுத் தேர்தல் அதனை நிரூபித்தும் உள்ளது. 2011 தேர்தலும் அதற்கு மேலாகவும் திராவிடர்கள் தங்கள் ஆளுமையைக் காட்டுவார்கள் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.

தமிழா, தமிழனாக இரு!

தமிழா, இன உணர்வு கொள்!!
http://www.viduthalai.periyar.org.in/20101227/news03.html

கற்பனை குற்றச்சாற்று 2ஜி-யும் சீரழிக்கப்படும் பத்திரிகை தர்மமும்!

கொழுந்துவிட்டு எரிந்த அரசியல் நெறி என்று ஆரம் பித்து, கடந்த 22.12.2010 ஆனந்த விகடன் இதழில், காலப்பெட்ட கம் 2000 என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டம் வந்துள்ளது.

கோவை கல்லூரி மாணவிகள் பேருந்து எரிப்பு சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ள செய்தியில், மிகக் கொடூரமான கொலை பாதகம்! கடவுளுக்கே பொறுக்காது! என் றெல்லாம் எழுதிவிட்டு அந்தக் கொலைகாரர்களின் பெய ரையோ, அதற்கு காரணமான அரசியல் நிகழ்வைப் பற்றியோ அதில் சம்பந்தப்பட்ட கட்சியின் பெயரையோ, அந்தக் கட்சியின் தலைமையின் பெயரையோ குறிப் பிடவேயில்லை. செய்தியையே மொட்டையாகத்தான் போட்டி ருக்கிறார்கள்.

அதே இதழின் முதல் பகுதியில் வந்துள்ள ஸ்பெக்டரம் தொடர் பான கட்டுரையில் ஆ.இராசா பெயரை ஒரு பத்து முறையாவது குறிப்பிட்டிருக்கிறார்கள். திரா விட முன்னேற்றக் கழகம் என்று கட்சியின் பெயரைக் குறிப்பிட் டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா, அதிமுக சம் பந்தப்பட்ட செய்திகள் என்றால் ஓர் அணுகுமுறை! ஆ.இராசா, திமுக என்றால் ஓர் அணுகுமுறை! இத்தனைக்கும் அதிமுக சம்பந்தப் பட்ட அந்தக் கொடூரம், ஒட்டு மொத்த உலகமே கண்ணீர் விட்ட ஒரு கொடூரம்! ஆ.இராசா அவர் களுடையதோ அனுமானமாக போடப்பட்ட ஒரு காகிதக் கணக்கு! அது கூட நேரத்துக்கு, நேரம் ஆளுக்கு ஆள், என்று மாறி மாறி வெவ்வேறு தொகையாக காட்டப்பட்ட ஒரு காகிதக் கணக்கு!

முதன் முதலில் 2008இல் - ரூ.30ஆயிரம் கோடி என்றார்கள்.

பின்னர் 2009ல்இ - ரூ.60ஆயிரம் கோடி என்றார்கள்.

பின்னர் இப்பொழுது ஊஹழு அறிக்கை - ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்கிறார்கள்.

ஊக்ஷஐ போட்ட கணக்கு - ரூ.22 ஆயிரம் கோடி

இந்து பத்திரிகை பேட்டியில்

அருண்ஷோரி தெரிவித்துள்ள தொகை - ரூ.30 ஆயிரம் கோடி

இந்த லட்சணத்தில் இவ்வளவு தொகை அரசுக்கு இழப்பு என் பதையே மாற்றி ஆ.இராசாவின் ஊழல் என்று பத்திரிகைகள் தொடர்ந்து இம்போசிஷன் (தண் டனைப் பாடம்) எழுதும் பள்ளி மாணவர்களைப்போல எழுதிக் கொண்டே இருப்பதன் பின்னணி என்ன? ஆனந்த விகடனா? ஆரிய விகடனா? என்ற கேள்வி நடுநிலை சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதை மறுக்க முடியுமா? ஆனந்த விகடனால்!

ஆனந்த விகடன் ஒரு சிறிய உதாரணம்தான்! பார்ப்பன ஊட கங்கள் எல்லாவற்றின் நிலைப் பாடும் இதுதான்! க்ஷதுஞ. மற்றும் ஜெயலலிதா தலைமையில் இயங் கும் மனுதர்மக் கூட்டணிக்கும், முத்தமிழ் முதல்வர் கலைஞர் தலைமையில் இயங்கும் மனித தர்மக் கூட்டணிக்கும் இடையில் நடக்கும், இந்தப் போராட்டத்தில் பார்ப்பன பத்திரிகை ஊடகங்கள் மனுதர்மக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

நடுநிலை பத்திரிகைகளுக்கு முழுப்பொறுப்பு அதனுடைய ஆசிரியர்! பார்ப்பனப் பத்திரி கைகளுக்கோ, ஆசிரியர் என்பதே ஆரியர் எனச் சுருங்கி விட்ட நிலைமை! காப்பாற்ற வேண்டிய பத்திரிகையாளர்களாலே சீரழிக்கப்படுகின்ற பத்திரிகை தர்மம்! மனுவாதிகளுக்கும், மனித வாதிகளுக்கும் நடைபெறும் இப்போரில் மனிதமே இறுதியில் வெல்லும்! ஏனெனில் மனித வாதிகள் பக்கம் தந்தை பெரியார் இருக்கிறார்! தந்தை பெரியாரை வெல்லும் சக்தி உலகில் எந்தக் கொம்பனுக்கும் கிடையாது!

- ஊமைக்குரல்
http://www.viduthalai.periyar.org.in/20101227/news06.html

Saturday, December 25, 2010

தினமணி ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பான் வைத்தியநாதனுக்கு பெரியாரின் மீது என்ன பாசம்?

தினமணி அய்யர்வாளும் - வால்களும்!- மின்சாரம்

தந்தை பெரியார் நினைவு நாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அய்யா அவர்களின் சிந்தனைகளை, கொள்கைகளைப் பரப்பும் நாளாகவும், கூர்தீட்டிக் கொள்ளும் நாளாகவும், உறுதி எடுக்கும் நாளாகவும் கடைப்பிடிக்கின் றனர்.

சென்னையில் திராவிடர் கழகத் தலைமை இடத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவும், கருத்தரங்கமும் நடைபெற்றன. தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் நினைவு நாளில் கொள்கை வழிப்பட்ட செயல்பாடு களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வரலாற்றுக் குறிப்பு நாளில் - பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரரும், திருவாளர் சோ ராமசாமியின் சீடருமான ஒருவரை ஆசிரியராகக் கொண்ட பார்ப்பன நாளேடு ஒன்று தந்தை பெரியார் நினைவு நாளைக் கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. இயக்கத்திலிருந்து ஒழுங்கு கட்டுப்பாட்டின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட சிலரை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதுபோன்றவர்கள் தமிழகத்தில் மலிவாகக் கிடைப்பார்கள் என்பதுதான் தெரிந்த செய்தியாயிற்றே!

தந்தை பெரியார் இறுதியாகப் பயன் படுத்திய வேன் புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறதாம் - அடடே, பெரியாரின் வேன் மீது இந்த ஆர்.எஸ்.எஸ். பத்திரிகைக் காரருக்கு எவ்வளவு பெரிய அக்கறை - எத்தகைய கரிசனம்!

திருச்சி பெரியார் மாளிகையில் பெரியார் வேன் ஒன்றும் குப்பை போல கிடக்கவில்லை. அதற்கென்று ஷெட் ஏற் பாடு செய்யப்பட்டு, அதில்தான் நிறுத்தப் பட்டுப் பொதுமக்கள் பார்வைக்கு வைக் கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் நேரில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். அந்த ஷெட்டின் முகப்பில் தந்தை பெரியார் இறுதியாகப் பயணம் செய்த வேன் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்திலேயே அய்யா - அம்மா படிப்பகம் இருக்கிறது.

இதில் உள்ள பார்ப்பனத்தனம் என்ன தெரியுமா? அந்த எழுத்துகள் தெரியா மலும், பக்கத்தில் உள்ள படிப்பகத்தை மறைத்தும் நிழற்படத்தை வெளியிட் டுள்ளது.

அதேநேரத்தில் பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன் என்ற பெயர்ப் பலகை தெரியும் வகையில் அந்தப் படத்தை வெளியிட்டு பார், பார்! பெரியார் கடைசியாகப் பயன் படுத்திய வேன் எப்படி இருக்கிறது? பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன் எப்படி இருக் கிறது? என்று விளையாட்டு காட்டுகிறது. இதில் என்ன பெரிய பிரச்சினை இருக் கிறது? பெரியார் வேன் பெரியார் மாளிகை யில் இருக்க வேண்டிய இடத்தில் பத்திர மாக இருக்கிறது - சர்வீஸ் ஸ்டேஷன் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறது. இதில் எந்தப் புதிரைக் கண்டுபிடித்துவிட் டார் இந்தப் புதிய பூணூல் வாஸ் கோடகாமா?

பெரியார் கற்றுத் தந்த புத்தி என்று ஒன்று இருக்கிறது. பார்ப்பான் ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்கிறான் என்றால், அதுவும் தந்தை பெரியார் பற்றிப் பேச வருகிறான் என்றால், அதில் ஏதோ வஞ்சகம் இருக்கிறது, வன்மம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டாமா?

தந்தை பெரியார் மீதோ, அவர்தம் கொள்கை மீதோ - இந்தத் தினமணிப் பார்ப்பானுக்கு என்ன அக்கறை?

தந்தை பெரியார் சொல்லுவார் - இராமாயணத்தில் இராமனுக்கென்று இருந்த சொந்தப் படை என்ன? ஒன்றும் கிடையாது - வானரப் படையைக் கொண்டே இராவணனை எதிர்த்துச் சண்டை போட்டான்; ஒரு பார்ப்பனர் இராமாயணத்தில் செத்தான் இல்லை என்பார்கள்.

பார்ப்பனர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இராமாயணத் தைப் படித்துக் கொள்ளவேண்டும் என்று சர்.சி.பி. இராமசாமி அய்யர் சொன்னது தான் இப்பொழுது நினைவிற்கு வரு கிறது.

அந்த இராமாயண யுக்தியை அனுசரித்தே இந்த மூன்று பேர்களைப் பிடித்து தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற பணிகளை வீரியத்துடனும், விவேகத்துடனும் நடத்தி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர்மீது சேறு வாரி இறைக்கச் செய்கிறது ஒரு பார்ப்பன ஏடு என்றால், இதன் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் என்ற வார்த்தையை உச்சரித்தால் மட்டும் போதாது. ஒரு பார்ப்பன ஏடு எந்த நோக்கத்தில் தங்களைக் கையாளாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்கிற அடிப்படையைக் கூடப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், ஒரு காலத்தில் எப்படித்தான் கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு கழகத்தில் இருந்தனர் என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

எப்படியோ விளம்பரம் கிடைத்து விட்டது - போட்டோவும் வெளிவந்து விட்டது பார்ப்பன ஏட்டில் - அதுபோதும் என்கிற மலிவான நிலைக்கு ஆளான வர்களைக் கண்டு பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

அய்யயோ பெரியார் சொத்துகளை விற்கிறார்கள், விற்கிறார்கள் என்று மாரடித்து ஒப்பாரி வைக்கிறார்கள்.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துகள் என்ன? பெரியார் மறை விற்குப் பிறகு அவை வளர்ந்திருக்கிறதா - தேய்ந்து இருக்கிறதா என்பது கருத்துக் குருடர்களைத் தவிர மற்றவர் கள் அனைவருக்குமே தெரிந்த விடயம்.

பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றம் எப்படி இருந்தது? இப்பொழுது அது எப்படி இருக்கிறது? விடுதலைப் பணிமனை எப்படி இருந்தது - இப்பொழுது அதன் பொலிவு என்ன?

விடுதலை அச்சுக்கூடம் எப்படி இருந்தது? இப்பொழுது எந்த அளவுக்கு நவீன மயமாகி உள்ளது? விடுதலை யின் அச்சும், வடிவமும் எப்படி இருந்தது? (விடுதலையைப் படிப்பதற்கே ஒரு தனிப் பயிற்சி வேண்டும் என்ற நிலைதான் அன்று) இப்பொழுது அதன் எழிலும், தெளிவும் வாசகர்களை எப்படிக் கவர்ந் திருக்கிறது. உண்மை இதழும் அப்படியே!

தந்தை பெரியார் காலத்தில் வெளி வந்த இயக்க வெளியீடுகளையும், இப்பொழுது வெளிவரும் வெளியீடு களையும் ஒப்பிட்டுப் பார்க்கட்டும். அறிவு நாணயம் உள்ளவர்கள் உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.

டில்லியில் கம்பீரமாக நிற்கும் பெரியார் மய்யம் எதிரிகளையும், துரோகிகளையும் பார்த்து எள்ளி நகையாடும். டில்லியில் பெரியார் மய்யம் கொள்கிறார் என்றால், தினமணிக் கூட்டத்துக்கு நெரி கட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது; விபீடணர்களுக்கு வாந்தியும், பேதியும் ஏற்படுவானேன்?

பெரியார் படிப்பகங்கள்பற்றியெல்லாம் கிறுக்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களிலும் நிரந்தரமான கான்கிரீட் கட்டடங்களாக அவை உருமாறியிருக் கின்றன என்ற உண்மையைக் கூடத் தெரியாமல், உளறுகிறார்களே, என்ன செய்ய! புதிய இடங்களில்தான் எத் தனை எத்தனை பெரியார் படிப்பகங்கள் - நூலகங்கள்!

பெரியார் திடலில் இயங்கும் நூலகம் - ஆய்வகம் உலகத் தரத்தில் ஓங்கி நிற்கிறதே! 52333 நூல்கள் அணி வகுக்கின்றனவே - தமிழர் தலைவர் அரிதில் சேர்த்து வைத்த தமது சொந்த 10,277 நூல்களை அளித்து உதவி னாரே! பன்னாட்டைச் சேர்ந்தவர்களும் ஆய்வுக்காக இங்கே தானே வந்து கொண்டிருக்கின்றனர்!

வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று எழுதலாமா?

ஒரு பெரியார் மய்யத்தை பி.ஜே.பி. ஆட்சியில் இடித்தார்கள் என்றால், அதன் பலன் என்ன? ஒன்றுக்குப் பதில் இரண்டு பெரியார் மய்யங்கள் - புதுடில்லியில்.

பெரியார் மய்யத்தின் அருமை - அதனால் ஏற்படப் போகும் விளைவு பார்ப்பனர்களுக்கும், சங் பரிவார்க் கூட்டத்துக்கும் நன்கு தெரிந்திருக் கிறது. பெரியார் அங்கு சுற்றி இங்கு சுற்றி இந்தியாவின் தலைநகரான டில்லிக்கே வந்துவிட்டாரே என்கிற ஆத்திரப் புயலில் அவதிப்படுகிறார்கள்.

இவர்களுக்கு என்ன வந்தது? பெரியார் மய்யம் இடிக்கப்பட்டபோது ஒருக்கால் - இவர்களும் லட்டு சாப் பிட்டு இருப்பார்களோ!

நாகம்மையார் குழந்தைகள் இல் லத்தின் பழைய நிலையையும், புதிய பொலிவையும் பார்த்துப் பூரித்துப் போகிறார்கள்; பொறாமைக்காரர்களோ புழுங்கிச் சாகிறார்கள்.

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தமது கவிதை (ஒரு துளி வானம் ஒரு துளி பூமி!) நூல் விற்பனை இலாபத்தை நாகம்மையார் இல்லத்திற்கு அளித்து மகிழ்ந்தார். நல்லவர்கள் பாராட்டு கிறார்கள்; நல்லவர்களாக இருக்க முடியாதவர்கள் தங்களின் அருங் குணங்களைக் காட்டிக் கொள்கி றார்கள், அவ்வளவுதான்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் இயக் கத்தால் விளம்பரம் ஆனவர்கள். அவ்வப்போது துரோகிகள் ஆகாமல் தப்பிக்க முடியாதவர்களாகவே ஆகி யிருக்கின்றனர். தமிழர்களின் யோக் கியதை இதுதான் போலும்!

தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார் ஆகியோரின் மறைவிற்குப் பிறகு கழகத்தின் பணிகள், தமிழர் தலைவர் தலைமையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற சாதனை கள் அளப்பரியன.

திராவிடர் கழகம் - பெரியார் திடல் விடுதலை என்ன வழிகாட்டுகிறதோ அதுதான் உண்மையான பெரியார் பாட்டை என்பது உலகம் பூராவும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.

இந்தத் தலைமை, அமைப்பின் மூலம் தான் தந்தை பெரியார் என்ற அங்கீ காரத்தோடு காரியங்களைச் சாதித்துக் கொடுக்க முடியும்; தமிழர்களின் உரிமை களை மீட்டுக் கொடுக்க முடியும்; சமூகநீதிக் கொடியை வெற்றிகரமாகப் பறக்க விட முடியும்; பகுத்தறிவுப் பணியை வலுவாகச் செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட ஒன்று. தினமணிகள் நற்சான்று கொடுக்கத் தேவையில்லை.

கிராமப் பிரச்சாரம், கல்வி நிறுவனங் கள் முன் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், புத்தகக் கண்காட்சி, பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை, பெரியாரியல் பயிற்சி முகாம்கள், குழந்தைகள் பழகு முகாம், சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம், பெரியார் சமூகக் காப்பு அணி, பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் சடுகுடுப் போட்டிகள், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி பேச்சுப் போட்டி; தலா முதல் பரிசு ஒரு லட்சம்; இரண்டாம் பரிசு 75 ஆயிரம்; மூன்றாம் பரிசு 50 ஆயிரம்; 2010 இல் மாணவ, மாணவிகள் பங்கேற்பு 20 ஆயிரம்.

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, பெரியார் திரை குறும்படப் போட்டி, பெரியார் வலைக்காட்சி, திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யம் உருவாக் கம், தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா (புரட்சிக்கவிஞர் விழா), முத்தமிழ் மன்ற விழா,

பெரியார் திரைப்படம் சாதாரணமா? (தெலுங்கிலும் வெளிவந்துவிட்டது). உலகப் புகழ்பெற்ற நாத்திக நெறி நூலான கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (கூந ழுடின னுநடரளடி லெ சுஉயசன னுயறமளே) என்ற பெயரில் தமிழில் வெளியிடும் உரிமை பெற்று வெளியிடப்பட்டது.

குடியரசுத் தொகுப்பு இதுவரை 25.

4 பக்கங்களாக வெளிவந்த விடுதலை இப்பொழுது எட்டுப் பக்கங்கள்;

சென்னையில் மட்டும் இருந்த பதிப்பு, மேலும் திருச்சியிலும் ஒரு பதிப்பு.

தந்தை பெரியார் காலத்தில் மாதம் ஒரு முறை வெளிவந்த உண்மை இதழ் இப்பொழுது மாதம் இருமுறை.

நிறுத்தப்பட்ட தி மாடர்ன் ரேசன லிஸ்ட் மீண்டும் தொடங்கி வெளிவருதல்;

புதிதாகக் குழந்தைகளுக்காகப் பெரியார் பிஞ்சு மாதப் பத்திரிகை.

அலை அலையான மாநாடுகள்; அண்மைக் காலத்தில் மட்டும் சென்னை யில் மாணவர் கழக மாநாடு; மதுரையில் மாணவர் கழக மாநாடு; கரூர், வாலாஜா, சீர்காழி, திருப்பத்தூர், திருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடுகள்;

இந்தியப் பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் (ஃபெரா) 7 ஆவது இந்திய மாநாடு - சென்னையில்!

ஒரு ஆறு மாத காலத்துக்குள் இத் தனை இத்தனை மாநாடுகளையும், மாநாடுகளை ஒட்டிய மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிகளையும் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த அமைப்பு கள் நடத்தியுள்ளன என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

போராட்டங்கள்தான் கொஞ்சமா, நஞ்சமா?

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம் (16.2.2010).

மத்திய அரசின் புதிய கல்வி மசோ தாவை எதிர்த்து திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் சென்னையில் பேரணி (23.2.2010).

சாமியர்களின் கயமத்தனங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (11.3.2010).

ஜாதிவாரிக் கணக்கெடுப்பைக் கோரி மத்திய அரசை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் (10.5.2010).

சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டத்தை உடனடியாகச் செயல்படுத்தக் கோரி ரயில் மறியல் போராட்டம் (5.6.2010).

என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் (30.6.2010).

தமிழக மீனவர்கள் சிங்களவர்களால் தாக்கப்படுவதைக் கண்டித்து

நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் (14.7.2010).

நாடாளுமன்ற முடக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (10.12.2010).

நுழைவுத் தேர்வை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் கழக மாணவரணி - இளைஞரணி சார்பில் வரும் 29 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம். இப்படி அலை அலையாகப் போராட்ட நிகழ்ச்சிகள்! சாதனைகள்தான் கொஞ்சமா?

எம்.ஜி.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணை ஒழிக்கப்பட்டதற்கு யார் காரணம்? அதன் விளைவாக 49 சதவிகிதமாக இருந்து வந்த இட ஒதுக்கீட்டின் சதவிகிதம் 68 ஆக உயர்ந்ததற்குக் காரணம் யாருடைய முயற்சி?

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு அறவேயில்லை என்பதை மாற்றி, மண்டல் குழுப் பரிந்துரைப்படி 27 சதவிகித இட ஒதுக்கீடு இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத் திடக் காரணமாக இருந்தது யார்?

(42 மாநாடுகள், 16 போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியுள்ளது!).

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை (கலைஞர் அவர்கள் 5 ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நிலையில், மீண்டும் இதற்காக மசோதா நிறைவேற்றம் - உச்சநீதிமன்ற முட்டுக்கட்டையால் தீர்ப்பின் தாமதத்தால் நிலுவையில் நிற்கிறது).

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு.

சிதம்பரம் நடராஜன் கோயில், தீட்சதர்ப் பார்ப்பனர்கள் கையிலிருந்து இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

(பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் கழகம் நடத்தியது!).

இவ்வளவையும் தொகுத்துப் பார்த்தால், இவை நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த கழகத் தினருக்கே மலைப்பாகத் தோன்றுகிறது!

பார்ப்பனர்களுக்கு இதன் தன்மை நன்கு புரிந்தே இருக்கிறது. அதனால்தான் பழனியில் மாநாடு கூட்டி தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைப் பார்ப்பனர்கள் பாடை கட்டித் தூக்கிச் சென்றனர். இதுதான் முக்கியமான அளவுகோல்.

தினமணியின் பூணூல்தேள் கொடுக்கை நீட்டிக் கொண்டு அலைவதற்குக் காரணமே, தமிழர் தலைவர் தலைமையிலான திராவிடர் கழகத்தின் இத்தகு ஓய்வறியா மலை மலையான, அலை அலையான நடவடிக்கைகளே!

இந்தக் காரணத்துக்காகப் பார்ப்பனர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள் - கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால்,

கழகத்தால் வெளியேற்றப்பட்டவர்கள் கடை விரித்தேன் கொள்வாரில்லை; கட்டிக் கொண்டோம் என்ற வெறுமையில், இயலாமையில் பார்ப்பனர்களோடு கூட்டணி சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். விளம்பர சடகோபம் எத்தனை நாளைக்கு?

வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!

1974 இல் மூன்று தொகுதிகளை வெளியிட்டு, அதற்குப்பின் 36 ஆண்டுகள் கழித்து அடுத்த பதிப்பைக் கொண்டு வந்த சாதனை சக்ரவர்த்தி ஒருவரும் சேர்ந்துகொண்டு மண்ணை வாரி இறைக்கிறார்.

அரசாங்கத்திடம் இடம் வாங்கி அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளாரே - அரசிடம் எந்தக் காரணங்களைப் பணிகளைச் செய்வதற்கு இனாமாக இடம் வாங்கினாரோ அந்தப் பணிகள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்வியை எழுப்பினால், அந்த டிரஸ்ட் அரசாங்கத்தின் கஜானாவுக்குள் முடங்கிவிடுமே!

திருச்சி அருகில் (நாத்திகக் கல்லூரிக்காக) அரசிடம் நிலம் வாங்கி தனிச் சொத்தாக்கி விற்றுக் கடன் கட்டப்பட்டதா இல்லையா?

தோழர்களே,

1971 நிலை தமிழ்நாட்டில் மீண்டும் சுழன்று வீசிக்கொண்டு இருக்கிறது.

2011 சட்டப் பேரவைத் தேர்தலும், 1971 தேர்தலின் மறு அச்சாக நடைபெற உள்ளது.

1971 தேர்தலில் இதே தினமணி அய்யப்பனையும், வினாயகனையும் வேண்டிக் கொள்ளவில்லையா - தி.மு.க. தோற்கவேண்டும் என்று!

அந்த நிலையை இப்பொழுதும் பார்ப்பனர்கள் கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

மானமிகு கலைஞர் அவர்களும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சந்திக்கத் தயார் என்று தோள் தட்டிவிட்டார்!

ஆரியத்தின் படைக்கலன் வரிசையிலே தினமணி பூணூலை முறுக்கி முண்டா தட்டுகிறது.

இந்த நிலையில், திராவிடர் கழகத்தைக் கொச்சைப் படுத்தித் தீரவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டு இருக்கிறது.

யுத்த இரகசியத்தில் எப்பொழுதும் அந்தக் கால இராமாயண சுக்ரீவன், விபீஷணன்கள், இந்தக் கால கருணாக்களும் தேவைப்படுவார்கள்.

அய்ந்தாம் படைதானே ஆரியத்துக்குத் தேவை. அதில் ஒரு கட்டம்தான் தினமணி கட்டுரையின் (24.12.2010) சாரமாகும்.

தினமணி அய்யர்வாளுக்கு வால்களும் கிடைத்திருக்கின்றன.

நமது செயல்பாடு என்கிற எரிமலை வீச்சுக்கு முன்னே இந்தப் பஞ்சு மூட்டைகள் எம்மாத்திரம்!


குறிப்பு: இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான்.
                                                                                                                    - தந்தை பெரியார்
                                                                                                        (விடுதலைமலர், 17.9.1969).

பெரியாரின்  குறித்து தினமணி வெளியிட்ட செய்தி:http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=350906&SectionID=129&MainSectionId=129

http://viduthalai.periyar.org.in/20101225/news03.html

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வெடிகுண்டு வழக்கு ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தவில்லை - ஏன்?-கி. வீரமணி

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் வெடிகுண்டு வழக்கு இவைகளில் சிக்கியவர்கள் யார்? இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தினவா? இராசாவை மட்டும் குற்றம் சுமத்தி ஊடகங்கள் பெரிதுபடுத்தக் காரணம் இராசா திராவிடர் என்பதுதானே? என்று திராவி டர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பி னார்.

தந்தை பெரியார் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 24.12.2010 அன்று காலை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:

தந்தை பெரியாருடைய நினைவு நாள் இன்று. இன்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார். பார்ப் பன ஊடகங்கள் ஆரியர் - திராவிடர் போராட் டத்தை எப்படி இன்றைக்கும் நடத்திக் கொண்டி ருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழர்கள் என்று சொல்லுவதற்கு நான் சங்கடப் படுகின்றேன். ஏனென்றால், தமிழர்கள் என்ற பெய ரில் பார்ப்பனரும் சேர்ந்து நானும் தமிழன்தான் என்று வரக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

திராவிட உணர்வு

எனவே, திராவிடர் என்ற உணர்வை தந்தை பெரியார் அவர்கள் மக்களிடம் பரப்பினார். திரா விடர் கழகம் என்றே அதற்குப் பெயரிட்டார். தொலைந்து போன நம்முடைய அடையாளத்தை மீட்டெடுத்தார் தந்தை பெரியார்.
இந்த உணர்வை இன்னும் பல தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய மகத்தான கடமை நமக் கெல்லாம் உண்டு. 1925 ஆம் ஆண்டுதான் சுயமரி யாதை இயக்கம் தொடங்கியது. 1925 ஆம் ஆண்டு தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தோன்றியது. சுய மரியாதை இயக்கத்திற்கு நேர் எதிரிடையான அமைப்புதான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவெறித்தனம் இன்றைக்கு கொடி கட்டிப் பறக்கிறது.
ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைந்தால் அது தனக்கே என்று சொல்லக் கூடிய அளவில் வந்து, இந்த நாட்டு மக்களை ஏமாற்றி, மதவெறியை மூல தனமாக வைத்து பி.ஜே.பி. கட்சி மத்தியிலே ஆண்டது.

ஜெயலலிதாவுக்குப் பிரதமர் என்று நினைப்பா?

இனிமேல் நாம்தான். எல்லாம் நாம்தான். வரலாற்றைப் புரட்டிப் போடலாம். அரசியலை நாம் தான் நிர்ணயிப்போம் என்ற ஆணவத்தோடு இருந்த ஆரிய சக்திகளின் இயக்கமாகத்தான் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. இருந்தது. அந்த மதவெறி சக்தியை தோற் கடித்து மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. தமிழகத்திலே கலைஞர் தலைமையிலே ஆட்சி நடைபெறுகிறது.
இங்கே எதிர்கட்சித் தலைவியாக இருக்கின்ற ஜெயலலிதா இராசாவை விசாரித்தால் போதாது; கைது செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றார். இவர் என்ன பிரதமர் ஸ்தானத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பா? (கைதட்டல்) அல்லது அதி காரத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பா? இந்த அம்மையாருக்கு அறிவு நாணயம் உண்டா?ஜெயலலிதா மீது சி.பி.அய். வழக்கு 10 ஆண்டு களாக நடந்துகொண்டு இருக்கிறது (கைதட்டல்).இராசா மீது யூகத்தின் அடிப்படையிலே குற்றச் சாற்று சொல்லுகிறார்கள்.இந்த அம்மையார் முதலமைச்சராக இருக்கும் பொழுது வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. அப்படி பணம் வந்தால் ஒரு முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும்? அரசாங்க கஜானாவிற்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணத்தை யார் அனுப்பினார்கள் என்று தீர விசாரிக்க வேண்டும்.அதை விட்டு, விட்டு யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லி தன்னுடைய கணக்கிலே வெளிநாட்டுப் பணத்தை வரவு வைத் துக் கொண்டார்.


யோக்கியன் வருகிறான் சொம்பைத் தூக்கி உள்ளே வை!

பெரியார் ஒரு பழமொழி சொல்லுவார்: யோக் கியன் வருகிறான்; சொம்பைத் தூக்கி உள்ளே வை என்று சொல்வார் (சிரிப்பு - கைதட்டல்).
இராசாவை கைது செய்ய வேண்டும் என்று இந்த அம்மையார் சொல்லுகிறார். இராசாவை கைது செய்ய முகாந்திரம் வேண்டும் வழக்குபடி. வழக்கில் முகாந்திரம் இருந்தால்தானே கைது செய்ய முடியும்? இதோ இங்கே வழக்கறிஞர்கள் உட்கார்ந் திருக்கிறார்கள். நீதிபதிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்.


இது என்ன, இடிஅமீன் ஆட்சியா?

எதுவும் சட்டப்படிதான் செய்ய முடியும். உடனே கைது செய்ய வேண்டும் என்றால் இது என்ன இடி அமீன் ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா?
சரி, இந்த அம்மையார் வழிகாட்டியிருக்கின் றாரா? இந்த அம்மையாருக்கு சி.பி.அய்.சம்மன். அனுப்பியிருக்கிறதே, அதற்காக இந்த அம்மை யாரைக் கைது செய்திருக்கிறார்களா? 30 வாய்தா வுக்கு மேலே இவருக்கு வழங்கியிருப்பதாலே முத லிலே ஜெயலலிதாவை அல்லவா சி.பி.அய். கைது செய்திருக்க வேண்டும்? (கைதட்டல்). எந்த பத்திரி கைக்காரராவது இதை எழுதியிருக்கிறாரா?
காரணம் என்ன? முதுகில் பூணூல், அவ்வளவு தான். எனவேதான் சொல்லுகிறோம், இந்த நாட் டிலே மீண்டும் மனுதர்மத்தைத் துளிர்க்க விட மாட்டோம். குழி தோண்டிப் புதைப்போம். இந்த அம்மாவே சி.பி.அய். என்ன வானத்திலிருந்து குதித்ததா? என்று கேட்டவர்தானே!
ஒரே ஒரு காரணம் இராசா திராவிடர் இனத் தைச் சார்ந்தவர். அது மட்டுமல்ல; ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சார்ந்தவர். எனவே, அவருக்காகக் கேட்க நாதியில்லை என்ற நினைப்பு!


சி.பி.அய்.யிடம் சிக்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்

இந்தக் கூட்டத்தில் இருக்கிறவர்களுக்குச் சொல்லுகின்றேன். ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவரை சி.பி.அய். பல மணி நேரம் குடை, குடை என்று குடைந்திருக்கிறது. ஆனால், இந்த சி.பி.அய்களைத் தாண்டி வரக்கூடிய ஆற்றல் இராசாவுக்கு உண்டு (கைதட்டல்). காரணம், அவர் பயின்ற பள்ளிக் கூடம் திராவிடர் இயக்கத்துப் பள்ளிக்கூடம். பெரியார், அண்ணா, கலைஞர் பள்ளியிலே பயின்றவர் (கைதட்டல்)..
ஆர்.எஸ்.எஸ். தலைவரை பல மணி நேரம் சி.பி.அய் குடைந்து கேள்வி எழுப்பியும், அவர் நேரடியாக எந்தப் பதிலையும் சொல்லவில்லை என்று சாதாரணமாக ஒரு செய்தியை வெளியிட்டி ருக்கின்றார்கள்.
இதுபற்றி பெரிதுபடுத்தி யாராவது செய்தி சொல்லியிருக்கின்றார்களா?
சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணுப் பார்ப்புக்கொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று, சதி எனக் கண்டோம் என்று பார்ப்பனப் பாரதி பாடியிருக்கின்றாரே. பார்ப்பன பாரதிக்கே பொறுக்க முடியாமல்தானே சொல்லயிருக்கின்றார்.
அய்தராபாத் மெக்கா மசூதியில் வெடிவிபத்து வழக்கில் இந்த ஆர்.எஸ்.எஸ் தலைவருக்குப் பங்கு இருக்கிறது என்று ஆதாரத்துடன் கேட்கிறார்கள். இது பயங்கரவாதத்தைச் சேர்ந்தது. இராசா வழக்கு பயங்கரவாதத்தைச் சேர்ந்ததா?


சி.பி.அய். வழக்கில் சொல்வதென்ன?

இவ்வளவு இழப்பு நடந்திருந்தால் என்று தானே ஸ்பெக்ட்ரம் வழக்கிலே சொல்லுகிறார்கள்.
மக்களிடம் இதைச் சொல்ல வேண்டும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அடுக்கி வைத்துக் காட்டினால் எப்படியிருக்கும் என்று சொன்னால் போதுமா? ஆனால், சி.பி.அய். வழக்கிலேயே வெறும் 22 ஆயிரம் கோடி என்றுதான் போட்டிருக்கின் றார்கள்.
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியில் 22 ஆயிரம் கோடியை கழித்து விட்டால், ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடி புஸ் என்று போய்விட்டது. அனுமான இழப்பு - கற்பனையிலேயே இந்த நிலை.
எவ்வளவு நாளைக்கு இப்படியே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? பார்ப்பன ஊடகங்கள் உங்கள் கைகளிலே இருக்கிறது.
இராசாவை நெருங்கி விட்டார்கள். கோபால புரம் திக் திக். என்ன திக் திக். திக் திக் என்று வேறு இடத்தில் இருப்பவர்களுக்குத்தான் இருக் கிறது (சிரிப்பு கைதட்டல்).
இன்றைய விடுதலையில் இதைப்பற்றி எழுதி யிருக்கின்றோம்.


நெருக்கடி காலத்தையே சந்தித்தவர்கள்

நெருக்கடி காலத்தைவிட மோசமான காலம் இனிமேல் வரப்போவதில்லை. அதைச் சந்தித்த இடம் தான் கோபாலபுரம். அதைச் சந்தித்த இடம்தான் பெரியார் திடல்.
மக்கள் குரல் என்ற அய்யங்கார் பத்திரிகையில் எழுதினார்கள். அன்னை மணியம்மையார் பெரியார் திடலில் இருக்கின்றார். பெரியார் திட லுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுகிறார்கள்.
இந்தச் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று சொன்னார்கள். ஏன், பெரியார் திடலுக்கு வருமான வரித்துறையினர் சென்றார்கள் என்றால், கருணாநிதி யின் கருப்புப் பணம் அங்கேதான் உள்ளே இருக்கிறது என்று சொன்னார்கள்.


கலைஞரின் பொற்கால ஆட்சி

நாங்கள் கேட்டோம். எங்ககிட்ட ஏதய்யா கருப்புப் பணம்? அவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்; அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். அதைத் தாண்டி கலைஞர் அவர்கள் இன்றைக்கு அய்ந்தாவது முறையாக பொற்கால ஆட்சியை நடத்துகிறாரா? இல்லையா?


ஆறாவது முறையாகவும் கலைஞர் வருவது உறுதி

மீண்டும் ஆறாவது முறையாக அவர்தான் முதலமைச்சராக வரப்போகின்றார். உறுதியாகத் தெரிந்து போய் விட்டது. மக்கள் தயாராகிவிட் டார்கள். பார்ப்பனர்களே நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மீண்டும் ஆறாவது முறையாக அமையப் போவது கலைஞர் ஆட்சி தான். நீங்கள் எவ்வளவு அதிகமாக இந்தப் பிரச் சாரத்தைச் செய்கிறீர்களோ அடிக்க அடிக்க எழும் பந்து போல மக்கள் மனுதர்மத்தை - ஆரியத்தை குழி தோண்டிப் புதைப்பார்கள்.
மீண்டும் வரப்போவது கலைஞர் ஆட்சிதான், திராவிடர் ஆட்சிதான் என்ற சூளுரையைப் பெரியார் நினைவு நாளில் எடுத்துக் கொள்வோம். பார்ப்பன ஊடகங்களே! நீங்கள் திராவிடர் இனத் தின் மீது வீசுகின்ற குப்பைகள், கூளங்கள், மலங்கள், சேறுகள் எல்லாம் எங்கள் கொள்கை வயலுக்கு இட்ட உரங்கள், உரங்கள் என்று கூறி முடிக்கிறேன். - இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
http://viduthalai.periyar.org.in/20101225/news05.html

நாத்திகமே நன்னெறி

கவிஞர் வாலி அவர்கள் ஆனந்தவிகடன் இதழில் ஒரு தொடரை எழுதிக் கொண்டு வருகிறார். எளிய தமிழில் சுவையாகவே இருக்கிறது. அவர் ஓர் ஆன்மிக வாதி என்பது அவரது தோற்றத்தைப் பார்த்தாலே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வார இதழில் இரண்டு நாத்திகர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் - அவரது ஊர்க் காரர் - இளமைக்காலந் தொட்டுப் பழகி வந்த நண்பர் நடராஜசுந்தரம்.

சிறீரங்கம் கழுதை மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் வாலியும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்த போது, வாலியின் பின்னால் வந்த கோதுமை நாகத்தை அடித்துக் கொன்று வாலியை மரணத்திலிருந்து நடராஜசுந்தரம் காப்பாற்றினாராம்.

அந்த நண்பர் - நடராஜ சுந்தரம் சிறீரங்கம் பொதுக் கூட்டத்தில் பேசினாராம். பாம்பையும், பாப்பானையும் கண்டால் முதலில் பாப்பானை அடி எனப் பேசி னாராம்.

ஆனால் மறுநாள் வாலி என்ற பாப்பானை பாம்பு கடிக்க வந்தபோது, அவரது நண்பரான நடராஜசுந்தரம் வாலியை அடிக்காமல் பாம்பை அடித்து, அதன் மூலம் வாலியான பார்ப்பனரைக் காப்பாற்றியிருக்கிறார்.

இந்தப் பழமொழி பெரியார் சொன்னதாக அவர் கூறியுள்ளார். அதுகூடத் தவறுதான். தந்தை பெரியார் அப்படிக் கூறியதாக எந்த இடத்திலும் இல்லை; இன்னும் சொல்லப்போனால் அது வட இந்தியாவி லிருந்து வந்த ஒன்று என்ற ஒரு கருத்துக்கூட இருக்கிறது.

பார்ப்பான் பணக்காரனாக ஆவது பற்றி எனக்குக் கவலையில்லை. அவன் உயர்ஜாதிக்காரனாகவும், இன்னொருவன் தாழ்ந்த ஜாதியாகவும் நிலவும் நிலை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் தனது கருத்து என்று பார்ப்பான் பணக்காரனானால் என்னும் கட்டு ரையிலே குடி அரசில் (9.11.1946) தந்தை பெரியார் எழுதியுள்ளார்.

நீ சினிமாவுல ஒரு பெரிய ஆளா வருவே! என்று தமது நாத்திக நண்பர் சொன்னது இப்பொழுது பலித்துவிட்டது என்று எழுதும் கவிஞர் வாலி , நடராஜ சுந்தரத்தின் வாக்கு தெய்வ வாக்காகப் பலித்தது; நான் சினிமாவில் பெரிய கவிஞனாக வளர்ந்து விட்டேன். அதைப் பார்க்க அவன்தான் இல்லை என்கிறார்.

நாத்திகரான நடராஜசுந்தரம் கூறியது ஒரு கணிப்பே தவிர, அது தெய்வவாக்கு என்பது நடராஜ சுந்தரம் ஏற்றுக் கொண்ட கருத்தை ஒரு வகையில் கொச்சைப் படுத்துவதாகவே கருதவேண்டும்.

இதற்கு முன்பேகூட இதே தொடரில் (17.11.2010) பின்வருமாறு எழுதியுள்ளார்:

சுப்பிரமணிய துதியமுது பாடிய பாவேந்தர் - பின்னாளில் பகுத்தறிவைப் பாடினாலும் - அதையும் அவர் உள்ளிருந்து ஓதிய எம்பிரான் முருகன் எனலாம் என்று எழுதியுள்ளார். இதுவும் தன் கருத்தை புரட்சிக் கவிஞர் மேல் திணிக்கும் முறையாகும்.

1926 இல் சுப்புரத்தினமாக இருந்த நிலையில், சிறீ மயிலம் சுப்பிரமணியன் துதியமுது நூலை எழுதியது உண்மைதான். 1928 இல் தந்தை பெரியார் கொள் கையை ஏற்றுக் கொண்ட நிலையில், 1933 இல் ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடை பெற்ற நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில், நான் ஒரு நிரந்தர நாத்திகன் என்று எழுதி கையொப்பமிட் டுள்ளார் புரட்சிக்கவிஞர்.

அத்தகைய புரட்சிக் கவிஞரை வாலி அவர்கள் பாடபேதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மானமிகு கலைஞர் அவர்களைப் பற்றிக்கூட இதே பாணியில் கவிஞர் வாலி கூறியதுண்டு. அதே போல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கைப் பற்றிக் கூறும்போது ஒரு காலத்தில் அவர் நாத்திகராக இருந்தார். இப்பொழுது குருத்துவாரத்தில் சரண டைந்தார் என்று எழுதியுள்ளார்.

ஆனால், குஷ்வந்த் சிங் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்து டெக்கான் கிரானிக்கல் ஏட்டில் (28.11.2010) வெளிவந்துள்ளது. அதில் தன்னை, அக்னாஸ்டிக் என்றே குறிப்பிட்டுள்ளார். அதாவது கடவுள் உண்டு என்றோ, இல்லை என்றோ கூறாத - நம்பாத ஒரு நிலையினர் ஆவார்.

இந்த வார ஆனந்த விகடனில் (29.12.2010) இன் னொரு நாத்திகரைக் குறிப்பிட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் என்னைச் சந்தித்து, எனக்குப் பேச்சு வரும் என்று சொல்லி, அவர் சொன்ன சொல் பலித்தது என்று சொன்னேனே - அவர் ஒரு நாத்திகர். அவர்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு திரு. வீரமணி அவர்கள் என்று கூறியுள்ளார்.

தமது கருத்தை இந்த நாத்திகர் மீது திணிக்காதது வரவேற்கத் தக்கது.

இந்தத் தொடரில் ஒரு கருத்தை கவிஞர் வாலி பதிவு செய்துள்ளார்.

நாணயமான ஒரு நாத்திகன், நாணயமற்ற ஓர் ஆத்திகனை விட நூறு மடங்கு மேலானவன் என்று எழுதியுள்ளார்.

உண்மைதான். நாணயமான மனிதராக வாழ நாத்திகமே நன்னெறி!
http://viduthalai.periyar.org.in/20101225/news02.html

Friday, December 24, 2010

பா.ஜ.க.வின் ஆட்சிக் காலத்தில் வாஜ்பேயி பிரதமராக இருந்த காலகட்டத்தில், ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியதை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை

2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை: வாஜ்பேயி பிரதமராக இருந்த காலகட்டத்தில் ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி இழப்பு! மத்திய அமைச்சர் கபில்சிபல் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார் அரசியல் நோக்கத்தோடு தேர்தலுக்காக பா.ஜ.க. செய்யும் சூழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்
தமிழர் தலைவர் வெளியிட்ட அறிக்கை
ஆ.இராசா அவர்கள் காலத்தில் 2ஜி அலைக்கற்றை அலைவரிசையில் வெறும் யூகத்தின் அடிப்படையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று சொல்லும் பா.ஜ.க.வின் ஆட்சிக் காலத்தில் வாஜ்பேயி பிரதமராக இருந்த காலகட்டத்தில், யூகத்தின் அடிப் படையில் இல்லாமல் நேரடியாகவே ஆதாரப்பூர்வமாக ஏற்பட்ட இழப்பு ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியதை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் திரு. கபில்சிபல் அவர்கள் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி (ஆங்கிலத்தில்) ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித் தரமான முறையில் விளக்கியுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சியில் இழப்பு

1999 ஆம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டத் தில் - கடைப்பிடிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்த மாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற யூகத்தின் (கற்பனையின்) அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்!

9.12.2010 அன்று சென்னைப் பொதுக்கூட்டத்தில் நாம் பேசியபோது, இதுபற்றிய விசாரணை 2001 முதல் தொடங்குவதைவிட, நியாயமாகப் பார்த்தால் 1999 ஆம் ஆண்டு முதலே தொடங்கப்படல் வேண்டும் என்று வற்புறுத்தினோம். காரணம், அப்போது வெளியான நியூ ஏஜ் (CPI) ஏட்டின் கட்டுரை ஒன்றில் ரூ.50 ஆயிரம் கோடிக்குமேல் வாஜ்பேயி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் இழப்பு - ஊழல் என்று வெளிவந்தது. இதைச் சுட்டிக்காட்டினோம்!

மத்திய அமைச்சர் கபில்சிபல் இதனைக் கூறுவ தோடு, எப்படி இது ஏற்பட்டது என்பதையும் விளக்கி யுள்ளார்.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த ஏலத்தில் விடும் கொள்கைக்குப் பதிலாக, வருவா யில் பங்கு (Revenue Sharing) என்ற அடிப்படையில், ஒதுக்கீடு மாற் றப்பட்டதுடன், 10 ஆண்டுகாலத்துக்கு இருந்த லைசென்சு முறையை 20 ஆண்டுகளுக்கு அப்போது உயர்த்தி சலுகை காட்டப் பட்டது.

யூகத் தொகை நட்டம் - இன்றைய கணக்கு ஆய்வு அதிகாரி அறிக்கைப்படி ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி - இதை அவரே விவாதித்து முடிவு செய்யலாம் என்று முடித்துக் கையொப்பமிட்டுள்ளார்.

அருண்ஷோரி கூறியது என்ன?

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, பிரமோத் மகாஜனுக்கு அடுத்து, அத்துறைக்கு அமைச்சரான அருண்ஷோரி (2001 இல்) கூற்றுப்படி, உத்தேச இழப்பு இப்போது ரூ.30,000 கோடிதானே ஒழிய, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல என்று கூறியுள்ளார்- சில நாள்களுக்குமுன் சென்னைக்கே வந்து.

21 அக்டோபர் 2009 இல் பதிவான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சி.பி.அய்.யால் குறிப்பிடப்பட்ட தொகையோ 22,000 கோடி ரூபாய்தான் உத்தேச இழப்பு என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டும்.

பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இழப்பு - ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், எது அதிகமானது?

அதில்கூட கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது ரூ.1,76,000 கோடி இழப்பு வெறும் யூகத்தின் அடிப் படையில்,

அது ரூ.22,000 கோடி என்ற சி.பி.அய். அறிக்கை முரணானது.

பா.ஜ.க. காலத்திய ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடித் தொகை இழப்பு பெரிய தொகையா?

22,000 கோடி ரூபாய் இழப்பு பெரிய தொகையா?

ஒரு பொய்யையே திரும்பத் திரும்பக் கூறினால், அது மெய்யாகி விடுமா?

ஏற்கெனவே 2001 இல் பா.ஜ.க. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுப் (Telecom Policy) படி தானே, அமைச்சர் இராசா காலத்திலும் செயல்பட்டிருக் கிறார்கள்.

அதுவும்கூட டிராய் (TRAI) என்ற அந்த அமைப்பை மீறியா செயல்பட்டிருக்கிறது இராசாவின் அமைச்சகம்?

இராசா காலத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகம்

2001 இல் 3 கோடி தொலைப்பேசி பயனாளிகளாக இருந்தது; 2009 இல் (அமைச்சர் இராசா காலம்) இது 79 கோடியாக உயர்ந்து, நாட்டின் தொழில் வர்த்தகப் புரட் சிக்கும் உதவியது என்பதைக் குறிப்பிடத் தவறவில்லை அமைச்சர் கபில்சிபல்.

மிகக் குறைந்த லைசென்ஸ் தொகை 1658 கோடி ரூபாய்தான் ஒரு போட்டியாள் ஒருமுறை நுழைய என்பது 2001 முதல் 2009 வரை இருந்தது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார் - அந்தப் பேட்டியில்.

இப்படிப் பல்வேறு செய்திகள் வெளியே வரவிருப்ப தால்தான் பா.ஜ.க.வினர் அந்த விசாரணையை ஏற்க மறுக்கின்றனர் அல்லது தயங்குகின்றனர்!

ஜே.பி.சி. (JPC) என்று திரும்பத் திரும்ப எதிர்க்கட்சி கள் கோஷ்டிகானம் பாடிக் கொண்டுள்ளனரே என்று கேட்டபோது, அமைச்சர் கபில்சிபல் மிகவும் தெளிவாகப் பதிலளித்துள்ளார்!

பொதுக்கணக்குக்குழு (PAC) தனது விசாரணையைத் தொடங்கி செயல்படும் நிலையில், இந்தக் கோரிக்கை அர்த்தமற்றது; உள்நோக்கம் கொண்டது.

தேர்தலுக்கான தந்திரம்!

பிரதமர் தானே, வழமைக்கு மாறாக, அக்குழுவின் முன் ஆஜராகி விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவும் தயார் என்று கூறிய பிறகும், ஏன் பிடிவாதம் இவர்களுக்கு எனக் கேட்ட கபில்சிபல், சி.பி.அய். எப்படி விசாரணையை நடத்துவது என்பதை உச்சநீதிமன்றமே கண்காணித்து ஆணை வழங்கு வதைவிட ஜே.பி.சி. அதிகமாகச் செயல்பட்டுவிட முடியுமா? முடியாதே! பின் ஏன் இந்தக் கோரிக்கை என்றால், இதை வைத்து நீட்டி, 2014 தேர்தல் வரை மக்களிடம் இதனைத் தங்களுக்கு ஒரு பிரச்சார மூலதனமாக்கவே எதிர்க்கட்சிகள் முயலுகின்றன. 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரலில் - இன்னும் 5 மாதங்களுக்குள் வர இருப்பதால் - அதற்கு இதைப் பயன்படுத்தவேண்டும் என்பதே அவர்களின் உள்ளூரத் திட்டம் என்பதை நன்கு விளக்கி விட்டார்!

தூங்குகிறவர்களைத்தான் தட்டி எழுப்ப முடியும்; தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களை எப்படி எழுப்ப முடியும் என்பதுபோல, எல்லாம் தெரிந்து கொண்டே வேறு சரியான வாய்ப்பு இல்லாததால் இதை ஊதி ஊதிப் பெரிதாக்கி அரசியல் லாபம் பெற எண்ணுகிறார்கள்.

இவர்கள் இப்பிரச்சினையை, ஊதி ஊதி பலூனைப் பெரிதாக்க நினைத்தால், கடைசியில் அது வெடித்து புஸ் என்று ஆவது நிச்சயம்!
   


தலைவர்,திராவிடர் கழகம்


http://www.viduthalai.periyar.org.in/20101222/news01.html

பாரதீய ஜனதா ஆட்சியில், அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி இழப்பு மத்திய அமைச்சர் கபில்சிபல் பகிரங்கக் குற்றச்சாற்று

பார தீய ஜனதா கூட்டணி ஆட்சி காலத்தில் கடைப் பிடிக்கப்பட்ட தொலை தொடர்பு கொள்கை யினால், கடந்த 1999 ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய அமைச்சர் கபில் சிபல் குற்றம்சாற்றினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு புகார் நாட்டை உலுக்கி வரும் நிலையில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் முறை கேடு நடைபெற்றதாக மத்திய அரசு குற்றம்சாற்றி வந்தது. அப்போதைய மத்திய அரசு கடைப் பிடித்த கொள்கையி னால், 1999 ஆம் ஆண் டில் மத்திய அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய தொலை தொடர் புத் துறை அமைச்சர் கபில்சிபல் நேற்று அறி வித்தார். தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி அவர் மேலும் கூறியதா வது: ஏற்கெனவே நடை முறையில் இருந்து வந்த ஏலத்தில் விடும் கொள் கைக்குப் பதிலாக, வரு வாயில் பங்கு என்ற அடிப் படையில் ஒதுக்கீடு மாற்றப்பட்டதுடன், 10 ஆண்டு காலத்துக்கு இருந்த உரிமம் வழங்கும் முறையை 20 ஆண்டு களுக்கு அப்போது உயர்த்தப்பட்டது குறிப் பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீட்டை பொறுத்தவரை, எந்த வித பாரபட்சமும் இல் லாத கொள்கையை கடைப்பிடித்து வருகி றோம். கடந்த 2001 முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டிற்காக யாரும் பணம் செலுத்தவில்லை.

ஒவ்வொரு ஆப்ரேட் டர்களும் ஒரு முறை மட்டும் நுழைவுக்கட் டணமாக ரூ.1658 கோடி மட்டும் செலுத்தினால் போதும். இந்த அள வுக்கு குறைந்த கட்ட ணம் அமலில் இருந்த தால்தான், கடந்த சில ஆண்டுகளில், தொலை தொடர்பு துறையில் இந்த அளவுக்கு அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள செல்போன்களின் எண்ணிக்கை விகிதம் 3 சதவிகிதம்தான். 2007 ஆம் ஆண்டில் இது 18.22 சதவிகிதமாகவும், 2009 இல் இது 61 சத விகிதமாகவும் (அதாவது 72 கோடி செல்போன் கள்) அதிகரித்தது குறிப் பிடத்தக்கது.

தொலைத் தொடர்பு கொள்கையை அமல் படுத்தியதில் நடை பெற்ற முறைகேடு தொடர் பாக, சில நிறுவனங்க ளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி இருக் கிறோம். அதுகுறித்து இப்போது மேற்கொண்டு விவரங்கள் எதையும் சொல்ல முடியாது. ஆனால், கொள்கை தொடர்பான முறைகேடு குறித்து தொலை தொடர்பு துறை அமைச்சகம் ஏற்கெனவே நடவடிக்கையை தொடங்கி விட்டது. கிரிமினல் குற்றச்சாட்டு குறித்து சி.பி.அய். விசாரணை நடத்தி வரு கிறது.

இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, மத்திய அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி அளித்த அறிக்கையில் குற்றம் சாற்றப்பட்டு இருந்ததைத் தொடர்ந்து இந்த பிரச்சினை பெரிதானது.

இந்த நிலையில், பா.ஜனதா ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட தொலை தொடர்பு கொள்கையால், ஒரே ஆண்டில் அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக, கபில்சிபல் குற்றம் சாட்டி இருப்பது குறிப் பிடத்தக்கது.

தொழிலதிபர்கள் சந்திப்பு

இதற்கிடையில், நாட்டில் உள்ள முக்கிய தனியார் தொலை தொடர்பு நிறுவன அதிபர்களை கபில்சிபல் நேற்று சந்தித்து பேசினார். சுனில் மிட்டல் (பார்தி), அனில் அம்பானி (ரிலையன்ஸ்), ரத்தன் டாடா (டி.டி.சி.எல்.) ஆகியோருடன் ஏறத்தாழ 45 நிமிடம், துறையின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை நடத்தி னார்.

இந்த சந்திப்பின்போது ஸ்பெக்ட் ரம் அலைக்கற்றை பற்றாக்குறை பற்றி தங்கள் கவலையை தெரிவித்த தொழில் அதிபர்கள், அதை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீடு கொள்கையில் வெளிப் படையான தன்மை கடைப்பிடிக்கப் படும் என்று, அவர்களிடம் அமைச்சர் கபில்சிபல் உறுதி அளித்தார்.
http://www.viduthalai.periyar.org.in/20101222/news04.html

இராசா எங்கே - அத்வானிகள் எங்கே?

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2ஜி அலைக்கற்றை தொடர்பான பிரச்சினையில் சி.பி.அய். தனது விசா ரணையை ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் சோதனை கள் நடத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து சம்பந் தப்பட்டவர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

சோதனைகள் நடந்தபோது முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று சி.பி.அய். அதிகாரிகளே கூறியிருக்கின்றனர். அதேபோல, விசாரணைக்கும் போதிய ஒத்துழைப்பை அளிப்பதாக கூறியிருக்கின்றனர்.

அதே நேரத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன?

பாபர் மசூதி இடிப்பு வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே - போதிய ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் இந்த வழக்கு விசாரணை முடிந்து பா.ஜ.க.வின் பெரும் தலைவர்கள் சிறைக் கொட்டடியில் கிடந்திருக்கவேண்டிய நிலைகூட ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டே!

குற்றங்கள் என்ன சாதாரணமானவையா? இந்திய குற்றவியல் சட்டம் 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகள் ஆயிற்றே!

கலகம் விளைவித்தல் மக்களிடையே குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், பீதியை உண்டாக்குதல் என்கிற குற்றங்கள் சாதாரணமானவையா?

ஊழலை விட பன்மடங்கு அபாயகரமான குற்றங் களாயிற்றே!

இதில் வெட்கக்கேடு என்னவென்றால் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட திருவாளர் எல்.கே. அத்வானி அதிகாரத்தில் இருந்த காரணத்தால், தொழில்நுட்பக் காரணங்களைச் சொல்லி இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாரே! ஆகா, எவ்வளவுப் பெரிய யோக்கிய சிகாமணிகள்; அதிகாரத்தைச் சற்றும் துஷ்பிரயோகம் செய்யாத உத்தம சீலர்கள் இவர்கள் - அப்படித்தான் மற்றவர்களும் நம்பித் தொலைக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு!

மேல்முறையீட்டின் காரணமாக அலகாபாத் உயர்நீதிமன்றம் மீண்டும் அத்வானியை வழக்கில் இணைக்கும்படி நேர்ந்தது.

அதேபோல, பாபர் மசூதி இடிப்புக் குறித்த நீதிபதி லிபரான் ஆணையத்தின் விசாரணையில் இதே அத்வானி எப்படியெல்லாம் நடந்துகொண்டார்?

அத்வானியைக் குறுக்கு விசாரணை செய்தவர் அரசு வழக்கறிஞர் அனுபம் குப்தா என்பவர். இவரின் கேள்வி களுக்கு முன் அத்வானி நிலை குலைந்து போனார். நேர்மை இல்லாத இடத்தில், இத்தகைய இடர்ப்பாட்டைச் சந்திக்கத் தானே நேரும்?

அத்வானி நீதிபதி லிபரானிடம் சரணடைந்த நிலையில், நீதிபதியே அரசு தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லையா?

லிபரான் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி பெயரும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், என்ன சொன்னார்கள் இந்த உத்தமப் புத்திரர்கள்? வாஜ்பேயியை எப்படி சேர்க்கலாம் என்று எகிறிக் குதிக்கவில்லையா?

ஒரு நீதிபதியின் தலைமையில் அமைந்த ஆணையம் சங் பரிவார்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடனம் ஆட வேண்டுமா? இதுதானே இந்தக் கூட்டத்தின் எதிர்பார்ப்பு?

இப்படி விசாரணைக்கும், நீதிமன்றத்திற்கும் ஒத்துழைக்காது அடம்பிடித்த ஆசாமிகள் எங்கே?

2ஜி அலைக்கற்றை விசாரணைக்கு எல்லா வகைகளிலும் ஒத்துழைப்புக் கொடுத்துவரும் இராசாக்கள் எங்கே?

விசாரணைக்குத் தயார் - எந்தத் தேதியில் சி.பி.அய்.க்கு வசதிப்படுகிறதோ அந்தத் தேதியில் நேரில் வரத் தயார் என்று மிகவும் நேர்மையாகப் பதில் தந்துள்ள இராசாவைப் பார்த்து கைநீட்டிப் பேச அத்வானி வகையறாக்களுக்குக் கிஞ்சிற்றும் தகுதி உண்டா என்று சவால் விட்டுக் கேட்கின்றோம்.

பா.ஜ.க.வைப் போலவே அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் நடந்து கொள்கிறார். இவர்மீது சாற்றப்படாத ஊழல் குற்றச்சாற்றா?

நீதிமன்ற நடவடிக்கைகளை முடக்குவதிலும், கால தாமதத்துக்கு ஆளாக்குவதிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர் இவர்.

இந்த அம்மையார் ஊழலைப்பற்றிப் பேசினால், அது கடைந்தெடுத்த நகைச்சுவைப் பெரும் விருந்தாகத்தான் இருக்கும்.

ஊழல் வண்ணத்தால் கறைபடிந்த மனிதர்களும், நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத பேர்வழிகளும், வெறும் யூகத்தின் அடிப்படையில் இழப்பு ஏற்பட்டது என்று கூறி ஆ.இராசாமீது சேறு வாரி இறைக்கத் தகுதி உடையவர்கள்தானா?

சி.பி.அய். விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் இராசாமீது, விசாரணைகளுக்கு ஒத் துழைக்காத பேர்வழிகள் விமர்சனம் செய்யக்கூடத் தகுதி அற்றவர்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்களாக!
http://www.viduthalai.periyar.org.in/20101222/news05.html

நுழைவுத் தேர்வும் - எதிர்ப்பின் வரலாறும் - கலி. பூங்குன்றன்

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தொழிற்கல்லூரிகளில் சேர மாணவர் களுக்கு நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாடு அரசு செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டு (செய்தி வெளியீட்டுத்துறை) செய்தி வெளி யீடு எண். 322; நாள் 30.5.1984 நுழைவுத் தேர்வுக்கான சுற்றறிக்கையாக இது அமைந்தது.

இதனை எதிர்த்து முதலாவதாகப் போர்ச் சங்கு ஊதி கலகக் கொடி உயர்த்தியவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி ஆவார்கள் (விடுதலை, அறிக்கை, 8.6.1984).

நுழைவுத் தேர்வுக்கு அரசு ஆயத்தமாகிவிட்டதாம்; நாமும் கிளர்ச்சிக்கு ஆயத்தமாவோம்!

கிராம மக்களே,

பெற்றோர்களே,

தயாராகுங்கள்!

பல ஆயிரக்கணக்கானோர் சிறைச் சாலைகளை நிரப்பத் தயாராகுங்கள்!

அரசின் வீண் பிடிவாதம் உடையும்வரை போராடு வோம்!

காமராஜர் செய்யாததை, அண்ணா செய்யாததை, எம்.ஜி.ஆர். செய்வது எவ்வளவு சமூகத் துரோகம்?

இதனை எதிர்த்துப் போராடுவோம்!

நுழைவுத் தேர்வு ஒட்டகம் நுழையும் கதைதான் - மறந்து விடாதீர்கள்! (விடுதலை, 8.6.1984) என்று திரா விடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.

அதற்கு முன்னதாகவே திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று அவசர அவசரமாக சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்டது (25.3.1984). திராவிடர் கழகப் பொதுச்செயலாளர், கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: திருவாளர்கள் எஸ்.ஜே. சாதிக் பாட்சா (தி.மு.க. பொருளாளர்) அப்துஸ் சமது எம்.பி., டி.என்., அனந்தநாயகி (காங்கிரஸ், தேவர் பேரவை) தி.சு. கிள்ளிவளவன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்), கே.ஆர். ராஜகோபால் (தலைவர், ஜனநாயகக் கட்சி, இளைஞர் பிரிவு) அய். சங்கரமணி (சாலியர் மகாஜனசங்கத் தலைவர்) ஆர். அருணாசலம் (பொதுச்செயலாளர், பிற்படுத்தப்பட்ட அரசு அலுவலர் சங்கம்) கே. சண்முகவேலு (தலைவர், தமிழ்நாடு சேனைத் தலைவர், மகாஜன சங்கம்), டாக்டர் வி. இராமகிருஷ்ணன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு தேவர் பேரவை), ஆர். கதிர்வேலு (தலைவர், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முற்னேற்ற சங்கம்), ஆர். நாகராசன் (துணைத் தலைவர், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் இரயில்வே தொழிலாளர் கழகம்), அர. அரவிந்தன் (பொதுச்செயலாளர், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் அஞ்சல் - தந்தித் துறை ஊழியர் சம்மேளனம்), பண்டரிநாதன் அய்.ஏ.எஸ்., (ஓய்வு) (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் இயக்குநர்) முதலியோர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் தொழில் படிப்பு சொல்லித்தரும் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களைச் சேர்க்க, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நேர்முகத் தேர்வை நிறுத்திவிட்டு, இந்த ஆண்டுமுதல் நுழைவுத் தேர்வு ஒன்றைக் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதை இந்தக் கூட்டம் மிகவும் கவலையோடு விவாதித்தது. நம்முடைய வருங்கால சந்ததியினருடைய படிப்பு பெரிதும் பாதிக் கப்படும் என்பதாலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தொழிற்கல்வி வாய்ப்புப் பெரிதும் பாதிக்கப்படும் என்பதாலும், குறிப்பாகத் திறந்த போட்டி என்ற பொதுப் போட்டியில் கிடைக்கவேண்டிய பங்கு மற்ற முன்னேறிய ஜாதிக்காரர்களால் கபளீகரம் செய் யப்படும் என்பதாலும் ஊழலை ஒழிப்பது என்பதுதான் இதன் அடிப்படை என்றால், நுழைவுத் தேர்வுமூலம் ஊழல் வராது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை என்பதாலும், தமிழக அரசு அறிவித்துள்ள நுழைவுத் தேர்வு முறையை உடனடியாக கைவிடவேண் டும் என இக்கூட்டம் ஒருமனதாகக் கேட்டுக்கொள் கிறது.

அப்படி உடனடியாகக் கைவிடவில்லையானால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்துவதென்றும், திராவிடர் கழகம் இதனை முன்னின்று நடத்தவேண்டுமென்றும் இதற்கு அனைவரும் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்புக் கொடுப்போம் என்றும், இதை அரசியல் பிரச்சினை யாகக் கருதாமல் சமுதாயக் கண்ணோட்டத்தோடு எல்லா அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் இதற்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

திராவிடர் கழகம் மூட்டிவிட்ட எதிர்ப்புத் தீ நாடெங் கும் பற்றிக்கொண்டு விட்டது. எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் கண்டன மாரி பொழிந்தார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

செய்தியாளர்: தொழிற் கல்லூரிகளுக்கெல்லாம் இன்டர்வியூ முறையை நீக்கிவிட்டு நுழைவுத் தேர்வு முறையை வைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் களே?

கலைஞர்: இண்டர்வியூ முறையினால் ஊழல் ஏற்படுகிறது என்று சொல்லிவிட்டு அதை ஒழிப்பதாகச் சொல்கிறார்கள். இண்டர்வியூ முறை என்பது காமராசர் காலம், பக்தவத்சலம் காலம், அண்ணா அவர்கள் காலம், நான் முதலமைச்சராக இருந்த காலம் - அப் போதெல்லாம் அந்த முறையில்தான் நடைபெற்றிருக் கிறது. அப்போது யாராவது மாணவர்கள் ஒன்றிரண்டு பேர் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால், எம்.ஜி.ஆர். ஆட்சியில் 140-க்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு நீதிமன்றம் சென்று மீண்டும் ஒரு இண்டர்வியூ தேர்வு அவர்களில் பெரும் பாலோருக்கு நடைபெற இருக்கிறது. அதனால் அந்த முறையில் ஒன்றும் தவறு இல்லை. அதை நடைமுறைப் படுத்துகிறவர்கள் ஊழல் புரிகின்ற காரணத்தி னால்தான் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படுகிறது.

ஏற்கெனவே ப்ளஸ் 2 (பன்னிரண்டாவது வகுப்பு) அரசுத் தேர்வு எழுதி அதில் தேறியவர்கள் மீண்டும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரு பரீட்சை எழுதவேண்டும் என்பது முதலில் அரசாங்கம் நடத்திய பரீட்சையை சந்தேகிப்பதாக ஆகும்.

புதிய முறை ஏற்கப்பட்டால், இண்டர்வியூ முறை எடுக்கப்பட்டால், அது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்குத்தான் தீங்காக முடியும்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ - இட ஒதுக்கீட்டு முறை யின்மீது எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு ஒரு வெறுப்பு உண்டு. அதை பலமுறை அவரே வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உண்மையான திராவிடர் இயக் கத்திற்குப் பயந்துகொண்டுதான் அந்த முறை இப் பொழுது அமலில் இருப்பதற்கு எம்.ஜி.ஆர். இடம் கொடுத்திருக்கிறார். அவருடைய எண்ணத்தைச் செயல்படுத்தக் கையாளுகின்ற வேறொரு வழிதான் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முறையாகும்.

மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி அட் மிஷன்களுக்கு அமைச்சர்களும், ஆளுங்கட்சிக்காரர் களும் லட்சக்கணக்கிலே லஞ்சம் பெற்றதால் இப் பொழுது ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கு இன்டர்வியூ முறையைக் குறை கூறுவது சரியல்ல.

இது எப்படி இருக்கிறது என்றால், ஜலதோஷம் பிடித்துவிட்டது என்பதற்காக மூக்கை அறுப்பதுபோல் இருக்கிறது என்று கூறினார் கலைஞர் அவர்கள்.

முசுலிம் லீக், வன்னியர் சங்கம் (வன்னிய அடி களார்), ஃபார்வர்டு பிளாக், யாதவர் மகாசபை, நாயுடு சங்கம், அம்பேத்கர் மக்கள் இயக்கம், மக்கள் கட்சி (டாக்டர் சந்தோஷம்), இந்தியக் குடியரசுக் கட்சி, ஜனதா கட்சி, காமராஜ் காங்கிரஸ் (பழ. நெடுமாறன்) முதலியோர் எதிர்ப்புக் கற்களை வீசினர்.

அ.தி.மு.க.வுக்குள்ளேயே மதுரை முத்து அவர்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டார். அமைச்சர் கள் காளிமுத்து, எஸ்.டி. சோமசுந்தரம் போன்றவர் களும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்ததில் அதிருப்தி உள்ளவர்களாக இருந்தனர்.

எம்.ஜி.ஆர். அவர்களுக்கு திராவிட இயக்கப் பின் னணியோ, அதனைச் சார்ந்த சித்தாந்தமோ தெரிந் திருக்க - தெரிந்திருந்தாலும் உளப்பூர்வமான ஈடுபாடு கொள்ள வாய்ப்பில்லையே! அவர் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்ததும், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பினைக் கொண்டு வந்ததும் இந்தத் தன்மையால்தான்.

இல்லாவிட்டால் இப்படிப் பேசியிருப்பாரா?

பிராமணர்கள் சங்கம் வைத்திருக்கிறார்கள். இதற்கும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. அவர்கள் ஏன் சங்கம் வைத்திருக்கிறார்கள்? அந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் (மாலைமுரசு, 31.5.1981, தஞ்சாவூர்).

இப்படிப் பேசியிருப்பவர் எப்படி திராவிட இயக்கத் தைச் சேர்ந்தவராக, அய்யா - அண்ணா கொள்கை களைப் புரிந்தவராக இருக்க முடியும்?

இன்னொரு படி மேலே சென்றும் பேசினார்:

நானாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கிய பொழுது, ராஜாஜி என் பின்னால் இருந்து ஆதரவு காட்டி அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறிய அறிவு ரையைப் பயன்படுத்திய நேரத்தில், அதைப் பார்க்க அவர் இல்லையே என்று எண்ணுகிறேன். (சென்னை, பாரதீய வித்யா பவன் நடத்திய விழாவில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசிய பேச்சு, 20.4.1984).

அரசியலில் நுழைந்த திராவிடர் இயக்கத்தின் பாட்டையில் பல காலகட்டங்களில் இத்தகு தடு மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்த்துப் போராட்டத்தினை அறிவித்துவிட்டார்!

23 இடங்களில் நுழைவுத் தேர்வு ஆணையினை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் இப்போராட்டத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் குதித்தனர். நாடே தீப்பற்றி எரிந்தது போன்ற உணர்வு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலே தகித்தது.

இதுதான் தமிழ்நாடு. இதனைப் புரிந்துகொள்ளா மல், டில்லியில் உள்ள மருத்துவக் குழுமம் வாலாட்டிப் பார்க்கிறது.

வரும் 29 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் மாணவர் கழகம் - இளைஞரணியினர் களத்தில் குதிக்கின்றனர். ஆர்ப்பாட்டப் போர்ச் சங்கு முழங்க இருக்கின்றனர்.

தமிழகம் தொடங்கிவிட்டது - இந்தியா எதிரொலிக்கப் போகிறது.
http://www.viduthalai.periyar.org.in/20101223/news18.html

தடை செய்க சோதிடத்தை!

சோதிடம் என்னும் மூட நம்பிக்கையால் அன்றாடம் நிகழும் கொடுமைகள் நாளேடுகளில் வந்துகொண்டுதானிருக்கின்றன.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த வில்வராஜ் என்ற துணி வியாபாரி, சோதிடன் கூறினான் என்று கூறி, ஏற்கெனவே மனைவி இருக்க, வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்காக ஈடுபட்ட நிலையில், இன்னொரு பெண்ணால் ஆள் வைத்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஏடுகளில் வெளிவந்துள்ளது.

தன் பிள்ளை பிறந்த நேரம் சரியில்லை என்று சோதிடர் சொல்ல, பெற்ற பிள்ளையையே அடித்துக் கொன்றான் என்ற ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன்பு வந்தது.

சோதிடனின் பேச்சைக் கேட்டு தான் பெற்ற பிள்ளையைக் கிணற்றில் வீசி எறிந்தாள் ஒரு பெண் என்ற செய்தி இந்த வாரமே வெளிவந்தது.

சென்னையில் பிரபல ஓட்டல்காரர் சோதிடனின் பேச்சைக் கேட்டு, இன்னொரு பெண்ணைத் திரு மணம் செய்து, அதன் பின்விளைவாக என்னென்ன வெல்லாம் நிகழ்ந்தன என்பது பரவலாகத் தெரிந்த தகவலாகும்.

உலகில் ஒரே ஒரு இந்து ராஜ்ஜியம் நடக்கும் நாடு என்று பெருமையாகப் பேசப்பட்ட நேபாளத்தில் என்ன நடந்தது?

சோதிடன் பேச்சை நம்பி இளவரசனுக்குத் திரு மணத் தேதியைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போனதால், ஆத்திரப்பட்ட இளவரசன் தன் பெற் றோர்கள் உள்பட பலரை துப்பாக்கிக் குண்டுகளால் தீர்த்துக் கட்டி தன்னையும் சுட்டுக்கொள்ள வில்லையா?

இவ்வளவுக்குப் பிறகும் கூட சோதிடக் கிறுக்கு நம் மக்களை ஆட்டிப் படைப்பது ஒரு வகையில் பரிதாபமும், இன்னொரு வகையில் வேதனையும் பகுத்தறிவாளர்களை, மனிதநேயர்களைப் பிய்த்துத் தின்னுகிறது.

மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்துக் கொண்டு - இதுபோன்ற சோதி டர்களை அனுமதிப்பது எந்த வகையில் சரி?

ஆங்கில ஏடுகள் உள்பட சோதிடப் பலன்களை, அன்றாட இராசிப் பலன்களை வெளியிட்டுக் கொண்டிருந்தால் மக்கள் புத்தி எப்படி திருந்தித் தொலையும்? போதும் போதாதற்குத் தொலைக் காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு, இந்த சோதிட மூட நம்பிக்கையைப் பரப்புவதில் தீவிரம் காட்டித் தொலைகின்றன.

ஒரு நாளேட்டில் ஒருவருடைய இராசிபலன், வியாபாரம் லாபம் என்று இருக்கும். அதே ஆசா மிக்கு இன்னொரு ஏட்டில் நட்டம் என்றிருக்கும். இந்த முரண்பாடுகளை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்ற தைரியம்தான்.

தெய்வப் பிரசன்னம் பார்க்கும் உன்னிக் கிருஷ்ண பணிக்கரே இப்பொழுது சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறார். ஜெயமாலா என்ற சினிமா நடிகை அய்யப்பன் விக்ரகத்தைத் தொட் டது தொடர்பான பிரச்சினையில் உன்னிக்கிருஷ்ண பணிக்கர்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப் பட்டுள்ளார்.

ஜெயலலிதா அம்மையாருக்கும் இவர்தான் சோதிடர். தன் சோதிடத்தை அவரால் கணித்துக் கொள்ள முடியவில்லையே! சோதிடத்தின் யோக்கியதை இதுதான்!

காந்தியாருக்கு திருத்தணி சோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரி என்பர் 125 வயது என்று ஆயுள் கணித்தாரே - என்ன நடந்தது - எண்பது ஆண்டு காலம் கூட அவர் உயிர் வாழ முடியவில்லையே!

கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் சோதிடத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

விளைவு என்ன? விளக்கெண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லையே!

மக்களை மடையர்களாக்கும், இழப்புகளுக்கு ஆளாக்கும் சோதிடத்தை அரசுகள் கண்டிப்பாகத் தடை செய்யலாம். தனி மனித உரிமை என்று சொல்லுவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. திருடுவது, விபச்சாரம் செய்வதுகூட தனி மனித உரிமை என்ற தலைப்பின்கீழ் வந்துவிடுமே!

எனவே, மக்களின் நலன் கருதி சோதிடத்தைத் தடை செய்யவேண்டும் என்பதே நமது வேண்டு கோள்!
http://www.viduthalai.periyar.org.in/20101223/news17.html

அலைவரிசை அரசியல்... அரசிற்கு வருவாய் இழப்பா...? இல்லவே இல்லை... எப்படி?

உலகிலேயே மிகப்பெரிய சிறந்த ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் எவ்வித விவாதமுமின்றி கூச்சல் குழப்பத்துடன் முழுமையாக செயல்படாத நிலையில் முடிவுற்றுள்ளது. இச்செயல் ஜன நாயகத்திற்கே விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும்.

தொலைத்தொடர்பு துறையில் இரண்டாம் தலை முறை 2ஜி சேவைக்கான உரிமம் ஏலமின்றி முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற திட்டத்தின் அடிப்படையில் 2008இல் வழங்கப்பட்டதால் அரசுக்கு 1,76,645 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்று இந்திய தலைமை கணக்கு அதிகாரி குறிப்பிட்டுள்ளது பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிடிவாதமாக வலியுறுத்தி இச்செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டன.

இதுபற்றிய சில உண்மைகளை பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஏதோ இராசா அதுவரை கடைப்பிடித்து வந்த ஏல முறையைக் கைவிட்டது போன்ற தோற்றத்தை உரு வாக்க முயற்சிக்கிறார்கள். ஏல முறையை கைவிட்டது யார்? ஏன்?

1994 தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை

இக்கொள்கையின் அடிப்படையில் டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரு நகரங்களுக்கு, ஒவ்வொரு நகருக்கும் தலா இரண்டு நிறுவனங்களுக்கு ஏலமின்றி மிகக் குறைந்த உரிமக் கட்டணத்தில் (உ.ம் - சென்னை RPG/Skycell: முதலாண்டுக்கு ரூ.1 கோடி, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.2 கோடி, 3 ஆம் ஆண்டுக்கு ரூ.4 கோடி) உரிமம் வழங்கப் பட்டது. M4.4 MHzஅலைக் கற்றையும் கட்டணமின்றி வழங்கப்பட்டது.

1995 - ஏலமுறை அறிமுகம்

மேலே குறிப்பிட்ட பெருநகரங்கள் தவிர, பிற 18 நகரங்களுக்கு ஏலமுறை அடிப்படையில் இரண்டு இரண்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. மிகப் பெரிய வருவாயை எதிர்பார்த்து ஏலத்தில் போட்டி போட்டு பங்கேற்ற நிறுவனங்களால் போதிய வருவாய் இல்லாததால் அரசிற்கு செலுத்த ஒப்புக் கொண்ட உரிமக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தத்தளித்தனர். சேவை விரிவாக்கமும் முடங்கியது. 1994 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் நோக்கம் நிறைவேறவில்லை. இந்த தேக்க நிலையை கருத்தில் கொண்ட வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. அரசு இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சுமார் ரூ.50,000 கோடியை 1999ஆம் ஆண்டில் ரத்து செய்தது. புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை உருவாக்கியது.

1999 - புதிய தொலைத்தொடர்புக் கொள்கை

இந்தக் கொள்கையின்படி 2000-த்தில் BSNL/MTNL மூன்றாவது நிறுவனமாக செயல்பட அனுமதி வழங்கப் பட்டது. 2001 இல் 17 நிறுவனங்கள் ஒரு சேவைப் பகுதியில் 4 ஆவது நிறுவனமாக செயல்பட ஏலமுறை யில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டனர். இந்த ஏலக் கட்டணம் தான் ரூ.1658 கோடியாகும்.

2003- ஒருங்கிணைந்த சேவைக்கான உரிமம்

டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல. இந்த செயல்களை மறைத்து விட்டு, மறந்துவிட்டு பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தற்போது இராசா மீது பழிபோட முயற்சிக்கிறார்கள்.

தலைமைக் கணக்கு அதிகாரியின் வரம்பு

அரசின் கொள்கை முடிவுகளில் CAG/CVC தலையிட உரிமை இல்லை என்று 10-க்கும் மேற்பட்ட உச்சநீதி மன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, மத்திய சட்ட அமைச்சகம் 13.8.2010 அன்று தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் உச்சநீதி மன்றம் இப்பிரச்சினையில் இத்தீர்ப்புகளை வசதியாக கண்டு கொள்ளாதது வியப்பாக உள்ளது.

என்னதான் சொல்கிறது CAG?

இல்லாத ஏலமுறையை 2ஜி உரிமம் வழங்குவதில் கடைப்பிடிக்காததாலும், ஒருங்கிணைந்த உரிமம், புதிய நிறுவனங்களுக்கு வழங்குவதில் ஏலமுறை பின் பற்றப்படாததாலும், மற்றும் அனுமதிக்கப்பட்ட அலைக் கற்றைக்கு உபரியாக பயன்படுத்தும் அப்போதைய நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாத தாலும் இராசா காலத்தில் ரூ.1,76,645 கோடி வருவாய் இழப்பு என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கூற்று சரி தானா?

முதலாவதாக, 2001-க்குப் பின்பு ராசா பதவி ஏற்கும் மே 2007 வரை, ஏலமுறை எந்த அமைச்சராலும் பின் பற்றப் படவில்லை. முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உரிமைக் கட்டணமாக ரூ.1658 கோடி என்ற நடைமுறைதான் பின்பற்றப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 28.8.2007இல் கூட டிராயின் வழிகாட்டுதலிலும் 2ஜி-க்கு ஏலமுறை தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (In the 2G bands (800 MHz, 900MHz, 1800MHz, allocation through auction may not be possible.)

இந்த அடிப்படையில்தான் 2008-லும் 122 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இது பற்றிய சர்ச்சை மற்றும் விவாதங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பிறகும் இந்தக் கொள்கைகளில் வழிக்காட்டக் கூடிய TRAI அமைப்பும் 11.5.2010இல் 2ஜி அலைக்கற்றைக்கு ஏலமுறைதேவை யில்லை என்று குறிப்பிட்டுள்ளது. (Spectrum in 800, 900 and 1800 MHz bands should not subject to Auction).

தவிரவும், 3ழு சேவைக்கான 800, 900, 1800 MHz. MHz ஏலக்கற்றைகளுக்கு, ஏல முறையை பரிந்துரைத்து உள்ளது. இப்போதைய அமைச்சர் கபில்சிபல் அவர்களும் ஏலமுறை சிறந்த வழியல்ல (­Auctions may not be the best way to award spoectrum) என்றும்,இது கட்டண உயர்விற்கே வழி வகுக்கும் என்றும், மீண்டும் 1995 ஆம் ஆண்டு தோல்வி அடைந்த ஏலமுறையை சுட்டிக் காட்டிக் கருத்துக் கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

எனவே முந்தைய அமைச்சர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் இராசா அவர்களும் உரிமங்கள் வழங்கியுள்ளார். எந்த புதிய நடை முறையையும் அவர் கையாளவில்லை. எனவே வருவாய் இழப்பிற்கு இராசா அவர்கள்தான் காரணம் என்பது நியாயமற்றது.

தவறான தகவல் அடிப்படையில் சில நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளதாக CAG -யால் தற்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த நிறுவனங்கள் தங்களின் தகுதியை நிரூபிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கூட உரிமம் பெறும் நிறுவனங்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாமே தவிர, அரசிற்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கு இடமில்லை. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.1658/- கோடியில் மாற்றம், ஏதுமில்லாதபோது வருவாய் இழப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை. எனவே, ஏலமின்றி 2ஜி உரிமங்கள் கொடுக்கப்பட்டதால் ரூ.1,02498/- கோடி வருவாய் இழப்பு என்பது ஒரு மாயத் தோற்றமே!

2003-இல் அமைச்சரவை முடிவின்படி, (Uniful Access Service) ஒருங்கிணைந்த சேவைக்கான உரிமங்கள், புதிய நிறுவனங்களுக்கு வழங்குவதில் ஏலமுறை பின்பற்றப்படவில்லை என்று கூறுகிறதுCAG.
TRAI--ன் வழிகாட்டுதலின் படி முந்தைய அமைச் சர்களால் 51 புதிய நிறுவனங்களுக்கு ஏலமின்றி உரி மங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதே நடை முறையையே இராசா அவர்களும் பின்பற்றியுள்ளார். இதில் நடை முறை மீறல் எதுவுமில்லை. எனவே இதனடிப் படையில் ரூ.37,154/- கோடி வருவாய் இழப்பு என்பதும் அர்த்தமற்ற கூற்றாகும்.

மேலும் அனுமதிக்கப்பட்ட (4.4MHz) அலைக்கற் றையை விட கூடுதலாகப் பயன்படுத்தும் நிறுவனங் களிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என்பது CAG- ன் கண்டுபிடிப்பு. உரிமக்கட்டணத்துடன் GSM உரிமம் பெற்றவர்களுக்கு 4.4 4.4 MHz--ம், CMDA உரிமம் பெற்றவர்களுக்கு 2.5 MHz- ம், கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும். ஆனால், 1996 - 2001, மற்றும் 2002-லும் எந்தவிதமான ஏலமோ, நிர்ணயிக்கப்பட்ட கட்டணமோ இன்றி, இலவசமாக 1.8 MHz அலைக் கற்றை, ஏர்டெல், வோடபோன், அய்டியா, ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. 2002-இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் மறைந்த மகாஜன் இதே நடைமுறையை பின்பற்றி எந்தவிதமான முன் கட்டணமுமின்றி (Upfront Charges) ஒலிக்கற்றை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இராசா அவர்கள் பொறுப்பிற்கு வரும்வரை 150 MHz அலைக்கற்றை மிகத் தாராளமாக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முடிவுகட்ட உத்தேசித்த இராசா TRAI- இன் கருத்தினைக் கேட்டிருந்தார். அந்த அமைப்பு 2010- மே மாதத்தில்தான் 6.2 MHz -க்கு மேல் 2ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தும் நிறுவனங் களிடமிருந்து 3ஜி ஏலத்தொகைக்கு இணையான தொகையை வசூலிக்கப் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பிரச்சினை கூடுதலாக அலைக்கற்றையை அனுபவித்த நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் எதிர்ப்புகளை ஒட்டி மீண்டும் TRAI -ன் பரிசீலனையில் உள்ளது. எனவே இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டி கூர்மைப் படுத்திய ஒரே அமைச்சர் இராசாவால் ரூ.36,645/- கோடி அரசிற்கு வருவாய் இழப்பு என்பது விந்தை யானது.

எனவே, 2003-ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் கைவிடப்பட்ட ஏலமுறையை இராசா பின்பற்றவில்லை எனக் கூறுவதும், அதனால் வருவாய் இழப்பு என்றும் கூறுவதும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது.

விண்ணப்பம் பெறும் தேதி மாற்றம்(Cut off - Date)

விண்ணப்பங்கள் பெறுவதற்கு 1.10.2007 என்று தேதி நிர்ணயிக்கப்பட்ட போதும் 25.9.2007 கடைசிதேதி என்று நிர்ணயித்தது ஏன்? என்ற சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே உரிமம் கோரி காத்திருந் தோர் மற்றும் ஓரிரு தினங்களில் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 232-ஐ தாண்டிய நிலையில் 1.10.2007 வரை 575 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றுள் 25.9.2007 வரை பெறப்பட்ட 232 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 122 நோக்கம் தெரிவிக்கும் கடிதம் (Letter of Indent) கொடுக்கப்பட்டுள்ளது. மீதமிருப் போருக்கும் அலைக்கற்றை இருப்பை கணக்கில் கொண்டு பரிசீலிக்கலாம் என்று அமைச்சர் பதவியில் இருந்த வரை இராசா அவர்கள் கூறியுள்ளார். எனவே, முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற கொள்கை யின் அடிப்படையில் இந்தத் தேதி மாற்றத்தால் பயன்பெறப் போகும் நிறுவனங்களின் வரிசை மாறப் போவதில்லை. கையிருப்பில் உள்ள அலைக்கற்றை அளவைக் கணக்கிட்டு 122 பேருக்கு மட்டுமே வழங்க முடியும் என்கின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப் பட்டது. இதில் எவ்விதத் தவறும் நிகழவில்லை. நோக்கம் தெரிவிக்கும் கடிதம் கொடுக்கப்பட்ட உடனேயே 122 நிறுவனங்களில் 78 பேர் உடனே கேட்புக் காசோலை (Demand Draft) களைக் கொடுத்தது எப்படி? என்று கேட்கப்படுகிறது. தகுதியிருப்பின் தாங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணம் (ரூபாய் 1,658/- கோடி) என்பது எல்லோருக்கும் முன்பே தெரிந்த நிலையில் அதற்குரிய முன்னேற்பாடுகளுடன் வருவதில் வியப்பென்ன?

2001 ஜனவரியில் அடிப்படைச் சேவைக்கு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற விதிகளின்படி விண்ணப்பங்கள் பெற காலை 4மணி முதலே கையில் கேட்புக் காசோலைகளுடன் காத்திருந்த முன்னு தாரணங்கள் ஏராளம்.

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை விதி மீறப்பட்டுள்ளதா?

நோக்கம் தெரிவிக்கும் கடித (LOI) த்தின்படி தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதலில் உரிமம் தரப்படும். இந்தச் சூழ்நிலையில் தங்களது தகுதியை (கட்டணம் செலுத்துதல், வங்கி உத்திரவாதம் போன்ற) முதலில் நிரூபிக்கும் நிறுவனங்களுக்கு அந்த அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடை முறை இந்திய சொலிசிட்டர் ஜெனரலிடமும் ஆலோசிக் கப்பட்டு கருத்து பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே, முதலில் வருவோர்க்கு முன் னுரிமை என்ற விதி மீறல் இல்லை.

ஏலமுறை இல்லாததால் வருவாய் இழப்பா?

ஏலமின்றி முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு (Revenue Sharing) வழங்கப்பட்டு உள்ளதால் இதுவரை ரூ.90,000/- கோடிகள் அரசிற்கு வருவாய் வந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.13,588/- கோடியாகும். 3ஜி ஏலத்தில் பெற்ற தொகை ரூ.67,718 கோடிதான் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். உயர் தொழில்நுட்பமான 3ஜி-க்கே ரூ.67,718/- கோடி என்றால், 2ஜி-தொழில்நுட்பத்திற்கு எவ்வளவு கிடைத்திருக்கும் என்று சிந்திக்கவேண்டும்.

மேலும் இந்த வருவாயில் பங்கு என்ற நடைமுறை ஒரு பொன் முட்டையிடும் வாத்து. மேலும் இன்னும் 10 ஆண்டுகளில் இந்த வருவாய் பல மடங்காக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. நாளும் பெருகி வரும் தொலைபேசி அடர்த்தி (Tele density) இதற்கு வழி வகுக்கும். அது மட்டுமல்ல, 3ஜி-க்கு மக்களிடம் உள்ள வரவேற்பும், சந்தையும் உற்சாகம் அளிப்பதாக இல்லை. சமீபத்தில் நீல் சன் ஆய்வு நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற வாடிக்கையாளரிடம்கூட 5 இல் ஒருவர் மட்டுமே 3ஜி-க்கு மாறத் தயாராக உள்ளனர். இந்த நிலையில் 2ஜி-சேவை மூலம் தற்போதைய நிலையில் நிரந்தர வருவாய் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதுதான் உண்மை. மிகப்பெரிய அளவில் வருவாயை ஈட்டிக் கொடுக்கக்கூடிய இந்த வருவாயில் பங்கு என்ற இந்த சிறப்பான திட்டத்தை CAG தன்னுடைய கவனத்தில் கொள்ளாதது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

இராசா அவர்களின் காலத்தில்...

இராசா அவர்கள் பொறுப்பேற்றபொழுது தொலைப்பேசி இணைப்புகளின் எண்ணிக்கை சுமார் 29 கோடி; ஆனால் இன்று 73 கோடி தொலைத் தொடர்பு அடர்த்தி - 100 பேருக்கு 75 பேர்கள் என்ற அளவில் உள்ளது. 2007 இல் ஒரு நிமிடத்திற்கு ரூ.1/- என்றிருந்த கட்டணம் இன்று 0.30 பைசாவாகக் குறைந்துள்ளது. மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. உலகில், இந்தியா மொத்தத் தொலைத் தொடர்பு எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் கட்டண அடிப்படையில், உலகிலேயே மிகக் குறைந்த கட்டணம் இந்தியாவில்தான் உள்ளது. இந்திய அரசின் மொத்த வருவாயில் 25 சதவிகிதம் தொலைத் தொடர்பு துறை மூலம் கிடைக்கிறது. 2007 இல் மாதம் ஒன்றுக்கு 7.5 லட்சம் புதிய இணைப்புகள் என்ற நிலை மாறி இன்று மாதம் ஒன்றுக்கு 1.75 கோடி இணைப்புகள் கொடுக்கப் படுகிறது. மூடி மறைக்கப்பட்டு, போட்டியை உருவாக் காமல் ரகசிய பரிவர்த்தனையாக இருந்த அலைக் கற்றையை கவனத்திற்குக் கொண்டு வந்தவர் இராசா அவர்கள்தான்.

எதிர்ப்புகளுக்கு இடையில், இரண்டு ஆண்டு களுக்கு முன்பே 3ஜி ஒலிக்கற்றை சேவையை தனியார் போட்டிகள் நிறைந்த சூழலில் பொதுத் துறை நிறுவனங்களான BSNL/MTNL நிறுவனங்களுக்கு வழங்கி, குறைந்த கட்டணம் நிர்ணயிக்கச் செய்து, மக்களுக்கு வழங்கினார். இதனால் 3ஜி சேவையில் நுழைய உள்ள தனியார் நிறுவனங்களின் உயர் கட்டண வசூல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது அமைச்சர் இராசாவின் பொதுத் துறைக்கு ஆதரவான நிலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

BSNL பங்கு விற்பனையை தடுத்து நிறுத்தியதின் மூலம் தனியார் ஆதிக்கத்தை தனியார் நுழைவை தடுத்து BSNL - அய்ப் பாதுகாத்தார்.

தொலைத் தொடர்பு ஊழியர்களைப் பொறுத்தவரை பொறுப்பேற்ற காலம் முதல் ஊழியர்களின் 50 சதவிகித அகவிலைப்படி இணைப்பு, புதிய ஊதிய உயர்வு, புதிய பதவி உயர்வு, பென்சன் பிரச்சினைகள்,ITS அதிகாரி களை நிறுவனத்திற்குள் கொண்டு வருதல், ஊழியர் களின் சங்க சந்தாவை சம்பளத்தில் பிடித்தம் செய்தல் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் நலத் திட்டங் களுக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் செயல்பட்டு தான் தலைவர் கலைஞர் அவர்களின் உண்மைத் தம்பி என்பதை நிரூபித்து ஊழியர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

யாருக்கு இழப்பு?

பல்லாண்டுகளாக தொலைபேசி உயர் கட்டணம் மூலமாக இந்திய மக்களைக் கொள்ளையடித்து வந்த ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை, புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் தகர்த்தெரிந்து கட்டணக் குறைப்பிற்கு வழி வகுத்த காரணத்தால் கொள்ளை லாபம் அடித்த அந்த கும்பலுக்குத்தான் வருவாய் இழப்பு. இந்தியாவிலுள்ள 110 கோடி மக்களில் 70 கோடி மக்கள் இன்றைக்கு தொலைபேசி வசதியை, உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தி வரும் ஒரு மாபெரும் புரட்சியை இராசா நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஆனால், தங்கள் ஆதிக்கத்தை இழந்த தனியார் நிறுவனங் களுக்கும், இதை பூதாகாரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சில அரசியல் கட்சிகளுக்கும், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வணிக நோக் கோடு பரபரப்போடு வெளியிட்டு அற்ப சந்தோசப்படும் ஊடகங்களுக்கும் வேண்டுமானால் இராசாவின் செயல்பாடுகள் இழப்பாகத் தோன்றலாம். ஆனால் அரசுக்கோ, இந்திய மக்களுக்கோ அல்ல.

வே. சுப்புராமன்

செயலாளர், தொ.மு.ச. பேரவை

அகில இந்தியப் பொதுச்செயலாளர்,

தொலைத்தொடர்பு தொ.மு.ச.
http://www.viduthalai.periyar.org.in/20101223/news29.html

Monday, December 20, 2010

பெரியார் நேரம்!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (18.12.2010) முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டுள்ளது. நீண்ட காலமாகக் கழகத் தோழர்களும், கழகத்திற்கு அப்பாற்பட்ட பெருமக்களும் கோரி வந்த கருத்துக்குச் செயலுருவம் கொடுக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது.

2011 ஜனவரி முதல் தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில் பெரியார் நேரம் என்ற பகுதியைத் தொடங்கி, பெரும் அளவில் பகுத்தறிவுக் கருத்துப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் அந்தத் தீர்மானம்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பின் கொள்கைப் பிரச்சாரப் பயணத்தில் காலத்திற்கேற்ற அணுகுமுறை களோடு, அறிவியல் ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

விடுதலை ஏட்டைப் பொறுத்தவரை 8 பக்கங்களாக ஆக்கப்பட்டது; திருச்சிராப்பள்ளியில் கூடுதலாக இன் னொரு பதிப்புத் தொடங்கப்பட்டது. நவீன வகையில் கணினி, நவீன அச்சு இயந்திரம் இவையெல்லாம் நிறுவப் பட்டு, வணிக ஏடுகளையும் விஞ்சக் கூடிய அளவுக்குச் சிறப்பான பொலிவோடு கருத்து வளத்தோடு ஏறுநடை போட்டு வருகிறது.

கழக வெளியீடுகள் என்பது நமது பிரச்சாரக் களத்தில் முன்னிலை வகிக்கக் கூடியதாகும். தொழில் ரீதியான பதிப்பகத்தார்களை மிஞ்சும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டு, அச்சிடப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. புதிய புதிய வெளியீடுகள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன.

அரசு மற்றும் தனியார் நடத்தும் கண்காட்சிகளில் எல்லாம் நமது புத்தக அரங்கு கண்டிப்பாக இடம் பெற்று விற்பனையிலும் சாதனை படைத்து வருகிறது. பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை அதன் பணியைப் பூமிப் பந்தின் தொடர் சுழற்சிபோல செய்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டு வரும் ஞானசூரியனை வாங்கிப் படியுங்கள் என்று அறிக்கை வெளியிட்டாலும் வெளி யிட்டார், அந்நூல் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் சென்றடையும் வண்ணம் திட்டம் தீட்டப்பட்டு, அனேகமாக அந்தப் பணியும் முற்றுப் பெற்றுவிட்டது. பல்லாயிரக் கணக்கில் மக்கள் மத்தியில் சென்றடைந்துவிட்டது. ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் ஒவ்வொருவரும், திராவிட இயக்கத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளும் சிப்பாயாகப் புறப்படுவார்கள் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

பார்ப்பனியத்தின் ஒடுக்கும் கருவிகளாக இந்து மதமும், அதன் வேத, புராண இதிகாசங்களும், உபநிஷத்துகளும் எந்த அளவு கூர்மையுடையவை என்பதை அக்கக்காக ஆதாரங்களுடன் திகழும் நூல்தான் சுவாமி தயானந்த சரசுவதி அவர்களால் எழுதப்பட்ட ஞானசூரியன் ஆகும்.

இந்நூலுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அணிந்துரை - சிறப்புரை தந்திருக்கிறார். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் புகழ் மகுடம் சூட்டியிருக்கிறார்.

பார்ப்பனர் அல்லாதார் உணர்வைப் பெறுவதற்கான நுழைவு வாயில் இந்நூல் என்று கூடச் சொல்லலாம்.

ஆரியர் - திராவிடர் போராட்டம் தோன்றவேண்டிய உணர்வினைப் பார்ப்பனர்களே முன்வந்து முரசு கொட்டி விட்ட இக்காலகட்டத்தில், ஒரு சரியான சந்தர்ப்பத்தில் ஞானசூரியன் நூலைக் கையில் எடுத்துக் கொள்ளச் சொல்லியிருந்தார் - மானமிகு கலைஞர் அவர்கள்.

திராவிட இயக்கத்தின் புதிய தலைமுறையினர் தம் வாசிப்பை உடனடியாகத் தொடங்கவேண்டும். ஆரிய ஏடுகள் கழுகு நகங்களை எழுதுகோலாக்கிக் கோர நர்த்தனம் பொழிகின்றன. அதன் திமிர் அடக்கும் ஆயுதம்தான் இந்த ஞானசூரியன்

இது ஒரு பக்கத்தில் நடந்துகொண்டாலும், இன்றைய முக்கிய ஊடகமாகத் தொலைக்காட்சி ஒவ்வொரு வீட்டின் அறையிலும் சட்டமாக உட்கார்ந்து கொண்டு விட்டது. துளித்துளி விஷமாக நம்முடைய மூளை நரம்புகளில் பார்ப்பனியச் சரக்குகள், பிற்போக்குக் கசுமாலங்கள் நம்மை அறியாமலேயே ஏறிக் கொண்டு இருக்கின்றன. அதன் ஆபத்துகள் நமக்கு நன்றாகவே புரியவும் ஆரம்பித்தன. நம் வீட்டுக் குழந்தைகளின் போக்கில்கூட அடாத போக்குகள்; இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில்கூட சமூக உணர்வு, பகுத்தறிவு உணர்வு ஏற்படுவதற்குப் பதிலாக அழுகல் உணர்வுகளும், ஆரோக்கியமற்ற போக்குகளும் தலை எடுப்பதைப் பார்த்து கவலைப்பட்டால் மட்டும் போதாது.

இந்த அபாயப் போக்கிலிருந்து தமிழர் வீட்டுப் பிள்ளைகளையும், இளையோரையும் மீட்டெடுக்க, முள்ளை முள்ளாலே எடுப்பதுபோல, தொலைக்காட்சி என்ற நவீன ஊடகத்தை நாமும் பயன்படுத்தியே தீரவேண்டும்.

பெரியாரியல் சிந்தனை மூலிகைதான் நம் மக்களின் மயக்கம் தீர்க்கும் நல் மருந்தாக இருக்க முடியும்.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு எடுத்த முடிவு - உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரியார் தொலைக்காட்சி வருவதற்குமுன் முன்னோட்டமாகப் பெரியார் நேரம் பவனி வரவிருக்கிறது. பொருளாதாரம் - மிக முக்கியம் - விளம்பரங்கள் கிடைக் காமல் தொடர்ந்து நடைபோடுவது கடினம் என்பதை நன்குணர்ந்து விளம்பரங்களைப் பெற்றுத் தருவதில் நமது தோழர்கள் போதிய முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.

வணிக நிறுவனங்களை நடத்தும் நமது ஆதர வாளர்கள், தமிழர்கள் கழகம் மேற்கொண்டிருக்கும் இந்த உன்னதப் பணிக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் - நீட்டுவார்கள் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது!

நாம் எடுத்த செயல் எதிலும் தோல்வி கண்டதில்லை. அதேபோல, இந்த அரும்பணியிலும் வெற்றி பெறுவோம் - வாழ்க பெரியார்!
http://www.viduthalai.periyar.org.in/20101220/news01.html

weather counter Site Meter