Pages

Search This Blog

Thursday, November 25, 2010

ஞானசூரியன்-6

ஞானசூரியன்

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

முதல் பதிப்பு : 1928

(19ஆம் பதிப்பு : 2008)

உரை நூற்களாகையால், இந்து மதத்தின் உண்மைக் கருத்துகள் ஸ்மிருதிகளால் அறியமுடியும். இந்நூற்களின் கொள்கைகளை ஆசாரம், விவகாரம் என இரண்டாகப் பிரிக்கலாம். முதற்பிரிவில் வருணாச்சிரம தருமங்கள், உணவின் பாகுபாடுகள், பதார்த்தங்களைச் சுத்தி செய்யும் முறைகள். தானம், சிரார்த்தம், பிராயச்சித்தம் இவைகள் அடங்கியுள்ளன. விவகாரமோ அரசியல் முறைகளாதலால், சமய முறையில் ஆசாரத்தைப் போல் அவ்வளவு பொறுப்பில்லை.

கவுதம, நாரதசங்க, பிரகஸ்பதி, யாக்ஞவல்கியர், ஸ்வாயம்பு, ஸ்வாயம்புவ முதலியஅநேக ரிஷிகள் தரும நூற்களை இயற்றியுள்ளார்கள். இவைகளில் மனுஸ் மிருதிதான் சிறந்தது. சாந்தோக்கிய பிரமாணத்திலும் வேறு பல நூற்களிலும் இதை (மனு)ப் புகழ்ந்து கூறியிருக்கிறது. அவைகளில் சில வருமாறு:

(1மனுர்வையத் கிஞ்சிதவதத் பேஷஜம் (மனுவின் வாக்கு, நோயாளிக்கு மருந்துபோல மனிதனுக்கு இதத்தைக் கொடுக்கும். ஆதலால், சிரேஷ்டமன பிரமாணமாம். இது சாந்தோக்கிய பிரமாணத்தில் உள்ளது.) மற்றும்:-

வேதார்த்தோப நிபந்ஸ்முருத்வாத்

ப்ராதான்யம் ஹிமனோ: ஸ்ம்தரும்:

மன்வர்த்த விபரீதாது

யாஸ்மிருதி; ஸாநசஸ்யதே

நானாசாஸ்த்ராணி சோபந்தே

தர்க்கவ்யா கரணானிச:

தர்மார்த்த மோக்ஷோபதேஷ்டா

மனுர்யாவந்நத் ருஸ்யதே

பொருள்: மனுவின் வாக்கு வேதத்தின் உரையா தலால், வேதம் போலவே பிரமாணமாம். மனுஸ் மிருதிக்கு முரண்பட்ட ஸ்மிருதிகள் ஏதேனுமுளதேல் அவை பிரமாணமாகா. தர்க்கம் வியாகரணம் முதலிய சாஸ்திரங்களும் இவ்வாறே (பிரகஸ்பதி 2யாகமத்தில் 3நிரவ்யாஹ வசனம்)

இக்காரணங்களைக் கொண்டு இந்நூலில் பிரமாணவாக்கியங்கள் பெரும்பாலும் மனு ஸ்மிருதி யிலிருந்தே எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

1. மனு: மந்திரம் வேதமென்பது இக்காலத்து ஆசிரியர்களின் உரை. இது முற்காலத்திய கருத்துக்கு ஒத்து வராததால், தள்ளத்தக்கதேயாகும்.

2. ஈண்டு ஆகமம் என்ற சொல் தரும நூலுக்காம்.

3. நிரவ்யாஹர் என்பார் ஓர் இருடி.

இரண்டாம் அத்தியாயம்

வைதிக கால (வேதம் எழுதிய கால)த்தில் விண் ணுலக வாழ்க்கையையே முத்தி என்று எண்ணப்பட் டிருந்தது. ஆயினும், அங்குள்ளவர்களாகிய தேவர் களுக்குள்ளும் உயர்வு தாழ்வுகளும் காமம், வெகுளி மயக்கங்களும் இருந்தனவாக வேதத்திலேயே கூறப் பட்டுள்ளதால், சுவர்க்கத்தில் துக்கமில்லை என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. அத்தகைய சுவர்க் கத்தை யாகத்தினால்தான் அடையமுடியும். சுவர்க் கத்தை அடைவதற்குக் காரணமாகிய யாகத்தை நடத்துவிப்போர்கள் புரோகிதர்களாகிய பார்ப்பனர்களே. ஆதலால், சுவர்க்கத்தின் திறவுகோல் அவர்களிடத் தில்தான் இருக்கிறது என்று நம் மக்கள் பெரிதும் மயங்கினார்கள். அதுபற்றியே ஜாதி வேற்றுமையும் உண்டாயிற்று,. மேலும், புரோகிதர்களுக்குப் பூதேவ ரென்ற பட்டத்தைச் சாற்றிப் பொதுமக்கள் வழிபட்டு வந்ததும், வருவதும் இவ்வுரிமை (சுவர்க்கம் அடைவிக்கும் உரிமை) பற்றியேயாகும்.

வரவர மக்களுக்கு அறிவு வளர்ந்து வரவே, ஆத்மா வைப்பற்றிய கவலையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதன் பயனாகத்தான் உபநிடதங்கள் பல ஏற்பட்டன. அவற்றுள் பெரும்பகுதியும் பகவான் கவுதம புத்தருக்குப் பிறகே உண்டாயினவென்றும் முன்னரே கூறியுள்ளோம். ஏதோ ஒன்றிரண்டு கவுதம புத்தருக்கு முன்பே இருந்தன என்று வைத்துக்கொள் வோமாயினும், அவைகளை எழுதியவர்களும் பார்ப்பனராக மாட்டார்கள். காரணம் யாதோவெனில், இவர்கள் தங்கள் தேவத் தன்மையைப் போக்கடித்துக் கொள்ள மாட்டார் களன்றோ? இதனால் மற்றைய வருணத்தாரில் உயர்ந்த நிலையிலிருந்த அறிவினால் முதிர்ந்த அரசர்களே (க்ஷத்திரியர்) உபநிட தங்களை இயற்றியவர்கள். அங்ஙனம் எழுதியவைகளை மிகவும் மறைபொருளா கக் காத்தும் வந்திருக்கிறார்கள். 1உபநிஷத்து என்ற சொல் லிற்கே (ரகசியம்) மறைத்து வைக்கத்தக்கது என்று பொருள்.

சந்தோக்கியோபநிஷத்தில், பாலாகி என்ற பிரா மணனுக்கும், அஜாத சத்துரு என்னும் அரசனுக்கும் நடந்த வாக்குவாதத்தில், இந்த வித்தையை இதுவரை க்ஷத்திரியர்களே கையாண்டு வந்தார்கள். பிராமணர் களுக்குக் கிடைக்கவில்லை; ஆயினும், கருணையோடு உனக்குச் சொல்லுகிறேன் என்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன. இதன் பிறகே அரசர்களையும், ஏனையோரையும் பலவகையிலும் அடக்கியாளத் தலைப் பட்டார்கள். அடக்கி வந்த முடிவில் பிரம்மவித்தை என்று பெயரிட்டுச் சங்கராச்சாரியாருக்கு, ஜெகத்குரு வென்று பெயரிட்டு யாவரையும் மயக்கி வருகின்றார்கள்.

1. உபநிஷத்களுக்கு இராஜ வித்தை என்று மற்றொரு பெயரும் உள்ளதே இதற்குச் சான்று பகரும்.

(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101125/news12.html

No comments:


weather counter Site Meter