Pages

Search This Blog

Friday, October 8, 2010

சமாதியான விடுதலைபுலிகள் இயக்கத்தை எழுப்பும் வீரமணியும்,வைகோவும் -தினமலர்(ம்) கேலி

திரிநூல் - தினமலர் இன்று ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. (தனியே காண்க).
  • விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதியாகிவிட்டது; அதற்குக் கல்லறை எழுப்பி யாகிவிட்டது; இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வும் வீணாக அதுபற்றிக் கட்டி அழுகிறார்கள் என்பது இந்தக் கார்ட்டூனின் நோக்கம்.
  • ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமைக்காகக் குரல் கொடுக் கும் அமைப்புகளும், அதன் தலைவர்களும் கேட்கும் வினாவை ஏதோ ஒரு வகை யில் தினமலரும் வழிமொழி கிறது என்று கருதலாமே!
  • அவர்களின் கருத்துப் படியே சமாதி செய்யப்பட்டு விட்ட ஒரு இயக்கத்துக்கு ஏன் தடைகளை விதித்துக் கொண்டு இருக்கிறார்கள்?
  • இன்னொரு வகையிலே இதே கார்ட்டூனைக்கூட கொஞ்சம் மாற்றிப் போட லாமே தினமலர்... தமிழர் தலைவர் வீரமணி மற்றும் வைகோ ஆகியோரின் படங் களை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் பிரதமர் மன் மோகன்சிங் படத்தைப் போட்டு தடை விதிப்புமூலம் - கல்லறைக்குப் போன வர்களுக்கு உயிர் கொடுக் கிறார் என்று போடலாமே!
  • ஏன் போடவில்லை? விடுதலைப்புலிகள் என்ற பேச்சே இருக்கக்கூடாது. புலிகள் என்ற ஒரு வார்த்தை யைக் கேட்கும் மாத்திரத்தி லேயே சிங்களக் கூட்டமும், இந்தியாவில் உள்ள அவர் களின் இனத்தைச் சேர்ந்த வர்களுமான பார்ப்பனர் களும் சப்த நாடிகளும் ஒடுங்கி விடுகிறார்கள்.
  • சிங்களவர் ஆரிய இனத் தைச் சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று உண்மை. ஒருமுறை ஜெயவர்த்தனே கூட என் மூக்கும் இந்திரா காந்தியின் மூக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் - காரணம் நாங்கள் இருவரும் ஒரே ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல வில்லையா?
  • விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படு கிறது என்ற போர்வையில், வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழர் கள்மீது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தவேண்டும்; ஈழத் தமிழ்- இளைஞர்கள் விடு தலைப்புலிகள் கண்ணோட் டத்தில் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற தீய நோக்கம்தானே இதில் பதுங்கி இருக்கிறது?
  • தமிழ்நாட்டிலும், இந்தியா விலும் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசினாலோ, அதன் விடு தலைப்புலிகளுக்கு ஆதர வான பேச்சு - கருத்து என்று கூறி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டத்தை ஏவச் செய்யவேண் டும் என்ற கொடூர ஈனப் புத்திதானே இதன் பின்னணி யில் இறக்கை கட்டிப் பறக்கிறது.
  • சோவாக இருந்தாலும், குருமூர்த்தியாக இருந்தாலும், இந்து ராம் ஆனாலும், தினமலர் வகையறாக்கள் ஆனாலும் புலிகள் என்றாலே கிலி அடையக் காரணம் என்ன?
  • இனத் துவேஷம்! இனத் துவேஷம்!! இனத் துவேஷம் தான்!!!
  • ஆதிக்க இனம் இன் னொரு இனத்தை ஒடுக்க ஒடுக்கப் புலிகளும், சிங்கங் களும், சிறுத்தைகளும் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதைத் தினமலர் கூட்டம் உண ரட்டும்!
- மயிலாடன்-
http://www.viduthalai.periyar.org.in/20101008/news12.html

No comments:


weather counter Site Meter