Pages

Search This Blog

Thursday, October 21, 2010

வாழ்வியல் சிந்தனைகள்

தத்துவஞானி சாக்ரட்டீசின் கேள்வி கள் சிந்தனையைத் தூண்டும் சிறந்த அறிவின் ஏவுகணைகள் இதோ:
வாள் முனையின் சக்தியால் ஜன நாயகத்தைப் பலர் விரும்புவது எந்த வகையில் நியாயம்?
கண்ணை மூடிக்கொண்டு ஒன்றை நம்புவது ஏன், எதற்கென்று கேட்காமல் அதற்குக் கீழ்ப்படிவதில் பொருள் உண்டா?
அழகான சுவர்களில் வண்ண வண்ணச் சித்திரங்கள், போருக்கு எப் போதும் தயாராக இருக்கும் அத்தீனிய நாட்டுக்கப்பல்கள், பளபளவென பிர காசிக்கும் அழகுச் சிலைகள் - இவற் றால் என்ன பயன்? அதனை உருவாக் கியவர்கள் - செய்தவர்கள் மகிழ்ச்சியான வாழ்வு வாழாமல் இருந்தால்?
இப்படிக் கேட்ட சாக்ரட்டீஸ் மேலும் கூறுகிறார்:
அறிவைத் தேடுவது அனைத்திலும் முக்கியமானது - நாம் சுவாசிக்கும் உயிர்க் காற்றைப்போல; எனவே, அறிவுக்கே முன்னிடம் தாருங்கள்.

மனித வாழ்க்கையின் முக்கிய அடிப்படையான அம்சங்கள் எவை நம்மை மகிழ்வுடன் இருக்க உதவுகின்றன? எது நமக்கு நன்மை தருகிறது? அன்பு என்றால் என்ன? பயம் - அச்சம் என்றால் என்ன? இவற்றுக்கிடையே நமது வாழ்க் கையை நாம் மிகச் சரியாக அமைத்துக் கொள்வது எப்படி?

இன்றைய உலகியல் வாழ்விலும் சாக்ரட்டீசின் இந்தக் கேள்விகள் முக் கியத்துவம் வாய்ந்தவையாகத்தானே உள்ளன?

உலகம் நவீனமயமாகி இருந்தாலும் மனிதனின் வாழ்க்கைப் பரிமாணம் மாறவில்லை. கவலை, மகிழ்ச்சி, துன்பம், அச்சம் இவற்றால் அவனது வாழ்வு அல்லாடுகிறதா - இல்லையா?

உலகத்தில் உள்ள பலவற்றையும் பற்றிப் பட்டியல் போட்டுப் பார்ப்பதால் என்ன லாபம்?

அவற்றை நேசிக்க வேண்டாமா? அவைமீது அன்பை, பாசத்தை, பரிவைக் கொட்டவேண்டாமா?

அன்பு என்ற ஒன்றுதான் எனக்குப் புரிகிறது. (சாக்ரட்டீசின் மனிதநேயம் அவரை வானத்திற்கும் மேலே உயர்த்திக் காட்டவில்லையா?)

அர்த்தமற்ற அலங்காரப் பேச்சுகள் - வாதங்கள் மிகவும் வெறுக்கத்தகுந்தவை. உண்மையைப் புறந்தள்ளிவிட்ட ஆடம்பர வார்த்தை ஜாலங்கள், நல்ல சமுதாயத் திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்கள் ஆகும்.

இன்றைய தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளை சாக்ரட்டீஸ் இன்று இருந்து சாடுவதுபோல் இல்லையா?

- எதையும், எதற்கு என்று ஆராயாத வாழ்க்கை, வாழத் தகுதியற்ற வாழ்க்கை யேயாகும்.

சாக்ரட்டீசின் வாழ்வு முடிந்த பிறகே அவரது அறிவுரைகளின் பயணம் அன்றுமுதல் இன்றுவரை நாடு தழுவிய ஒளியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது!

மேற்கு மட்டுமல்ல, கிழக்கும்கூட அவரது அறிவாயுதத்தால் ஈர்க்கப்பட்டு நிற்கிறது.

அதனால்தானே யுனெஸ்கோ என்ற அய்.நா.வின் கலாச்சார அமைப்பு தந்தை பெரியாருக்கு விருது வழங்கி சிறப்பித்த போது, தந்தை பெரியார் அவர்களை மிகப் பொருத்தமாக ஞசடியீநவ டிக வாந நேற யபந; ளடிஉசயவநள டிக வாந ளடிரவா நயளவ யளயை... என்று தொடங்கி வர்ணித்தது!

புது உலகின் தொலைநோக்காளர், தென் கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ் என்றுதான் பொருத்தமாக வர்ணித்தது!

எழுதப் படிக்கத் தெரியாத அந்த மேதை சாக்ரட்டீஸ் - பகுத்தறிவு, பட்டறி வால் உலகின் அறிவின் ஏழு தூண்களில் ஒன்று என்று அல்லவா அழைக்கப் படுகிறார்!

சாக்ரட்டீஸ் - பெரியார் - தம் மண்டைச் சுரப்பை, சிந்தனை ஊற்று களை - உலகம் தொழுகிறது!

http://www.viduthalai.periyar.org.in/20101021/news10.html

No comments:


weather counter Site Meter