Pages

Search This Blog

Thursday, October 14, 2010

குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து கன்னியாஸ்திரியை கற்பழித்த கிறிஸ்தவ பாதிரியார் திருச்சி ஜோசப் கல்லூரியின் முதல்வர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ்மேரி (வயது28). கன்னியாஸ்திரி. திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று நேற்று இரவு கொடுத்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2006-ம் ஆண்டு திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தேன். அப்போது திருச்சி ஜோசப் கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் ராஜரத்தினத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் இசை ஆல்பம் தயாரிப்பவர் என்பதால் அடிக்கடி அவரை சந்திப்பேன்.

கடந்த 22.1.2006 அன்று ராஜரத்தினத்தை பார்க்க சென்றேன். அப்போது பாதிரியார் ராஜரத்தினம் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.

இதில் மயங்கிய என்னை பாதிரியார் ராஜரத்தினம் கற்பழித்து விட்டார்.

மேலும் அதை செல்போன் காமிராவில் படம் எடுத்தார். மயக்கம் தெளிந்து எழுந்த நான் பாதிரியார் நியாயம் கேட்டேன். அதற்கு ராஜரத்தினம் செல்போனில் ஆபாசபடம் எடுத்ததை காட்டி அவருக்கு உடன்படாவிட்டால் வெளியில் பரப்பிவிடுவன் என்று மிரட்டினார்.

தொடர்ந்து என்னை பாதிரியார் ராஜரத்தினம் பல ஊர்களுக்கு அழைத்து சென்றார். அங்கு உடல் உறவு வைத்து கொண்டார். இதற்கிடையே நான் கர்ப்பம் அடைந்தேன்.

இதை பாதிரியார் ராஜரத்தினத்திடம் கூறினேன். உடனே கடந்த 2008-ல் கருவை கலைத்து விடுமாறு கூறினார். அதன்படி திருச்சியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரிக்கு சென்று கருவை கலைத்தேன்.

இதற்கிடையே கன்னியாஸ்திரியுடன் நான் கர்ப்பமான தகவலும் கருகலைத்த தகவலும் வெளியில் தெரிந்தது. கன்னியாஸ்திரிக்கு உரிய புனிதத்தை மீறியதாக கூறி என்னை சபையில் இருந்து நீக்கி விட்டார்கள்.

இதனால் கன்னியாஸ்திரி உடையை அணியாமல் ஊருக்கு சென்றால் அசிங்கமாகி விடுமே என பயந்தேன். பாதிரியார் ராஜரத்தினிடம் சென்று நியாயம் கேட்டேன். அப்போது பாதிரியார் ராஜரத்தினம் இது தொடர்பாக என்னை பார்க்ககூடாது வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது. மீறினால் கொன்று விடுவதாக மிரட்டினார்.

பாதிரியார் ராஜரத்தினத்துக்கு ஆதரவாக திண்டுக்கலை சேர்ந்த பாதிரியார் தேவதாஸ், மதுரை பாதிரியார் சேவியர் பிரான்சிஸ் கருமாந்தூர் சேவியர் ஆகியோரும் என்னை மிரட்டினார்கள்.

இவ்வாறு அவர் மனுவில் கூறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கோட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக பாதிரியார் ராஜரத்தினம் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், கருமாந்தூர் பாதிரியார் சேவியர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து கோட்டை போலீசார் பாதிரியார் ராஜரத்தினத்திடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் கன்னியாஸ்திரிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோட்டை உதவி கமிஷனர் சீனிவாசனிடம் கேட்டபோது பிரான்சிஸ்மேரி கொடுத்த புகார் மீது விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.

கன்னியாஸ்திரியை பாதிரியார் கற்பழித்து கருவை கலைத்து, கொலை மிரட்டல் விட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகாருக்கு உள்ளான ராஜரத்தினம் முதல்வராக உள்ள ஜோசப் கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மத்திய மந்திரி நெப்போலியன், உள்பட பல பிரபலங்கள் படித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 150 ஆண்டு பாரம்பரியமிக்க ஜோசப் கல்லூரியின் முதல்வர் மீது எழுந்து உள்ள செக்ஸ் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://www.maalaimalar.com/2010/10/12160507/pastor-torture-to-lady.html

1 comment:

நம்பி said...

தவறு செய்தவனை மன்னித்துவிடு...அவன் தவறே அவனை திருத்தும் என்ற அடிப்படையில் ஏசுநாதர் கூறியதை இவர்கள் வேறுமாதிரி பரப்பியவர்கள்....

இயேசு பிரானிடம் ஒருவன் கேட்டான் ஒருவன் ஒருமுறை தவறு செய்கிறான் மன்னித்து விடலாமா...? மன்னித்து விடு...மறுபடியும் தவறு செய்தால் மன்னித்து விடு....இன்னொரு முறையும் தவறுசெய்தால்,,,அப்போதும் மன்னித்து விடு...என்னடா இது? அப்பவும் திருந்தவில்லை, மீண்டும் தவறு செய்தால் கூட மன்னிக்கவேண்டுமா..? என்று கேட்டான்...தேவையில்லை அதுவரை அவன் உயிரோடு இருக்கமாட்டான்...என்று அன்று இருந்த கரடுமுரடான மக்களுக்கு பிரசங்கம் செய்தது...அப்ப எதற்கெடுத்தாலும் வெட்டிப்புடுவாங்க...அன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் ஆயுட் காலமும் அதிகம்...150....200 வருடங்கள் கூட நோய் நொடி தாக்காமல், இதுமாதிரி விபத்துகளினால், பொலைபாநக செயலினால் பாதிக்கப்படாமல் இருந்தால் வாழ்ந்திருக்கமுடியும்....

அதை இந்த பயக இப்படி எடுத்துகினாக... என்ன பாவம் செய்தாலும் கடவுள் மன்னிப்பார் என்று...அதான் இவர்களே பாவமன்னிப்பு வழங்கும் தலைமை பொறுப்பில் இருக்கும் பொழுது...பாவம் செய்தால் என்ன தப்பு என்று உண்மையான நாத்திகத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள்...திகில் படம் எடுக்கிறவனுக்கு, திகில் கதை எழுதறவுனுக்கு பயமில்லை.... படிக்கிறவனுக்கு, பார்க்கிறவனுக்கு மட்டுமே பயம்...படைப்பாளிக்கு தெரியாதா...எந்த வார்த்தையை எங்கே போட்டால் மக்கள் அதிர்ச்சியுடன் படிப்பார்கள், எந்தக் காட்சிக்கு பயப்படுவார்கள் என்று எல்லாம் தெரியும்...

கடவுள் சிறு தவறு செய்தாலும்...ஏமாற்றினாலும் தண்டித்துவிடுவார், கொன்று விடுவார் என்ற நம்பிக்கை போனாப்போகுது அதனால் சமூகத்திற்கு நன்மை, அதனால் குற்ற செயல்கள் நடைபெறுவது குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட வாய்ப்புண்டு...என்ன தவறு செயதாலும் கடவுள் காப்பாற்றுவார் என்று அனைவரும் இல்லாத கடவுளை சாட்சிக்கு வைத்துகொண்டு இவர்களே இந்த பாவங்களை செய்து கொண்டிருக்கின்றனர். இது தான் நாட்டிற்கு பேராபத்து...

போதாக்குறைக்கு டி.பி நோயை (காச நோயை) குணப்படுத்தும் மருந்து என்று கேட்கப்பட்ட பள்ளி கல்லூரித் தேர்வு கேள்விக்கு ஸ்ரட்ரெப்டோ மைசின் என்று பதிலெழுதி பாஸ் ஆகி மதிப்பெண் பெற்று பட்டமெல்லாம் போட்ட பாதிரி மார்கள் தான்...காசுநோயை குணப்படுத்துவார்...இயேசு அழைக்கிறார் என்று பிராத்தனை கூட்டம் நடத்துகிறார்கள்...அப்படியென்றால் இவர்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் அல்ல, இருந்திருந்தால் உண்மையில் இந்த கேள்விக்கு என்ன பதில் எழுதி இருக்கவேண்டும்...காசநோயை குணப்படுத்த இயேசு நாதரிடம் போய் பிராத்தனை பண்ணால் தீர்ந்துவிடும்,,, என்று பதில் எழுதியிருக்கவேண்டும் எழுதினார்களா?.இல்லை ஏன் ?..அது நம் (பாதிரியார்) அறிவுக்கு ஏற்றதல்ல என்று தெரியும்...ஆனால், ஊரானை மூடனாக்க, அவனை அறிவுக்குருடனாக்க இந்த வித்தை தான் சரி என்று அறிவியல் படிப்பு பட்டத்தையெல்லாம் எப.ஆர்.சி.எக்ஸ், ஒய்..இசட் என அத்தனை பட்டங்களையும் போட்டுக்கொண்டு பிராத்தனை கூட்டம்...நடத்துவார்கள் மார்ல அடித்துக்கொள்வார்கள்...எல்லா இழவும் நடக்கும். ஊர்ல கிறவ தூக்கத்தையும் கெடுப்பாங்க...நோயாளிகளை தொந்தரவு பண்ணுவாங்க...

இதெல்லாம் ஏசு நாதர் சொன்னாரா?...ஏசுநாதர் சிலுவையில் அறையும் பொழுது எல்லோரும் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் தானே! (பழைய எகிப்து, இஸ்ரேலிய மக்களை குறிப்படுவது..அது எப்படி? என்று இங்கிருக்கிறவர்கள் சண்டைக்கு வரக்கூடாது...அங்கிருந்து வந்த சமயம் தான் இது)..மன்னருக்காவது சிறிது பச்சாதாபம் இருந்தது...அவரை கடவுளாக பாவித்த எவருக்கும் புரட்சி செய்து காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லையே...(என்னதான் இயேசு நாதர் தடுத்ததாக கூறினாலும்...)

அவரை வைத்து ஆளாளுக்கு ஒவ்வொரு சமயமாக பிரித்து கொண்டனர்...ஏசுநாதரை காட்டிக்கொடுத்ததாக கூறப்படும் யூதாஸ் பெயரிலும் ஒரு பைபில் இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்...அதாவது தோலில் எழுதப்பட்ட பைபிள்...யூதாஸை புனிதராக காட்டி...எந்த பைபிளில் சொல்வது உண்மை...புரோட்டஸ்தாந்தா...பெந்தகொஸ்தேவா...ரோமன் கத்தோலிக்கமா....ஆர்த்தடக்சா...செவன்த் டே...இதுவே ஒரு 45 கிட்ட போகும் போலிருக்குது...அப்பா இப்பவே க்ண்ணை கட்டுதே....


weather counter Site Meter