Pages

Search This Blog

Monday, May 2, 2011

பகவான் சாயிபாபாவின் மறுபக்கம் - மின்சாரம்

புட்டபர்த்தி சாயிபாபா 24.4.2011 அன்று ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தியில் மரணம் அடைந்தார். 28 நாள்கள் மருத்துவமனையில் படாதபாடு பட்டார். சிறுநீரகம், கல்லீரல் என்று ஒவ்வொரு உறுப்புகளும் பழுதுபட்டு, மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, சாதார ணமாக மனிதர்களுக்கு ஏற்படும் அத்தனைத் துன்பங்களையும் உடல் ரீதியாக அனுபவித்தது பரிதாபமாகத் தான் இருந்தது. 96 ஆண்டுகள் வாழ் வேன் என்று அவர் சொன்னது பொய்த்துப் போய் விட்டது.

அவர் நோய் வாய்ப்பட்டதிலோ, மரணத் துன்பம் அடைந்ததிலோ, மரணம் எய்தியதிலோ கிஞ்சிற்றும் பகுத்தறிவாளர்களுக்கு மகிழ்ச்சி இல்லை.

அதே நேரத்தில் வாழ்ந்த காலத்தில் சாயிபாபா மக்களை மூடநம்பிக்கைச் சகதியில் ஆழ்த்தியது போதாதென்று, அவரது மரணத்தை வைத்தும் மக்களை மடமையில் ஆழ்த்தும் நாசகார செயல்களில் ஈடுபடுவதை மனிதப் பற்றும், பகுத்தறிவும் உடையவர்களால் எப்படிப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும்?

இந்த நிலையில் நாம் நிமிர்ந்து நின்று மூடநம்பிக்கையின் முதுகெ லும்பைப் பிளப்பது என்பது நமது அடிப்படைக் கடமையாகி விட்டது.

முதல் கேள்வி: பகவான் சாயிபாபா என்பது உண்மையானால் அவருக்கு ஏன் நோய் ஏற்பட வேண்டும்? மற்றவர்களின் நோய்களை எல்லாம் தம் பார்வையாலோ தரும் திருநீறாலோ குணப்படுத்தும் சர்வ சக்தி வாய்ந்தவர் என்று கூறுகிறார்களே, - அப்படிப்பட்ட மனிதனுக்கு தெய்வீகப் புருடனுக்குக் கொடும் நோய்கள் தாக்கலாமா?

சாயிபாபாவின் திருநீறும், பிரசாதங் களும் என்னாயிற்று? எதற்காக மிலேச் சன் இங்கிலீஷ்காரன் கண்டுபிடித்த மாத்திரைகளும், மருந்துகளும்?

96 வயது வாழ்வேன் என்றவர் ஏன் 85 வயதிலேயே மாண்டு போனார் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தர வேண்டாமா?

இவர் நாட்டைக் கெடுத்தது போதாதென்று மூன்றாவதொரு சாயிபாபாவும் தோன்றுவார் -_ அவர் பெயர் பிரேமசாய்; கருநாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறப்பார் என்று செத்துப் போன சாயிபாபா சொல்லியுள்ளார் என்பதெல்லாம் அடுத்த ஒரு திட்டமிட்ட மோசடிக்கு முகூர்த்தக்கால் நடுகிறார்கள் என்றே பொருள்.

சிவசக்தி வடிவமானவர் தான் மறைந்த சாயிபாபாவாம்; அப்படி யென்றால் குறிப்பிட்ட ஒரு மதச் சிமி ழுக்குள் அடங்கிக் கிடப்பவர் என்று ஆகி விடவில்லையா? கிறித்துவரும், இஸ்லாமியரும் இவரை எந்தக் கண் கொண்டு பார்ப்பது? என்கிற வினாக்கள் எழத்தான் செய்கின்றன.

உண்மையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் சாயிபாபா ஒரு மேஜிக் வித்தைக்காரர், நாலு ரோடுகளில் வித்தை காட்டுபவர்கள் நம் நாட்டில் இல்லையா? அவர்களுக்குப் பிழைக்கத் தெரியவில்லை. இவரோ பக்திப் போதையில் சிக்கிக் கிடக்கும் மக்களை ஏமாற்றி ஏற்றம் கொள்ளலாம் என்று திட்டமிட்டு அதில் வெற்றி கண்டவர் என்று வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

நமது கழகத்தில் மந்திரமா? தந்திரமா? கலையில் விற்பன்னராகத் திகழ்ந்த புரபசர் கே.ஆர். குமார் நினைத்திருந்தால், சாயிபாபாவுக்கு மேல் போய் குந்தியிருக்கலாமே! இன்னும் எத்தனை எத்தனையோ நம் கருஞ் சட்டைத் தோழர்கள் இந்தக் கலையில் தேர்ந்தவர்கள் ஆயிற்றே! இந்தத் தோழர்கள் மக்களின் அறியாமை இருளை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சத்யநாராயண ராஜுவோ பிழைக்கத் தெரிந்த ஆசாமி, மக்களின் மடமையை அஸ்திவாரமாக்கி, அதன் மீது மாட மாளிகை கட்டி உல்லாச வாழ்வை மேற்கொண்டவர்.

ஒரு பி.சி சர்க்கார் நினைத்திருந்தால் அவர் கற்றறிந்த தந்திரக் கலையைப் பயன்படுத்தி ஆயிரம் சாயிபாபாக் களுக்கு இணையாக நடமாடியிருக்க முடியுமே! அவர்கள் எல்லாம் அதனை ஒரு கலையாகக் கொண்டவர்கள். பகவான் சாயிபாபா என்று நடமாடும் ஒருவரின் முகத்திரையைக் கிழித்து எறிய பிரபல பி.சி. சார்க்கார் விரும்பினார்.

ஒரு பெண்ணை இரண்டு துண்டாக்குவது, ஒரு யானையைக் காற்றில் மறைந்து போகச் செய்வது போன்ற மயிர்க் கூச்செறியும் நிகழ்ச்சிகளை யெல்லாம் கண்மூடி கண் திறப்பதற்குள் செய்து காட்டும் அந்தக் கலைஞர் சாயிபாபாவைச் சந்திப்பதற்கு வாய்ப்பினைக் கேட்டார். அனுமதி கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் பி.சி. சர்க்கார் என்ன செய்தார்? தான் ஒரு அஸ்ஸாம் வியாபாரி என்றும் தனக்கு ஆஸ்மா நோய் இருக்கிறது என்றும், அதிலிருந்து குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறி, அனுமதியும் பெற்று சாயிபாபா ஆசிரமத்துக்குள் நுழைந்தாரே!

(பகவான் சாயிபாபா அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சரியான தமாஷ்!)

சாயிபாபா ஆசீர்வதிக்கும் அறைக்குள் கடைசி நபராக நுழைந்தார் சர்க்கார்; அஸ்ஸாமும், இந்தியும் கலந்த மொழியில் பேசினார். சாயிபாபாவால் புரிந்து கொள்ள முடியவில்லை; புரியவில்லை என்ற தொனியில் தலையை அசைத்தார் (பகவானாயிற்றே எந்த மொழியைப் பேசினாலும் தெரிந்து கொண்டு இருக்க வேண்டாமா -_ இப்படியெல்லாம் யார் சிந்திக்கப் போகிறார்கள்?) மொழி பெயர்ப்புக்கு ஆள் ஏற்பாடு செய்தனர்; என்ன பிரச்சினை? என்று சாயிபாபா கேட் டார். ஆஸ்த்மா பிரச்சினை என்றார் பி.சி. சர்க்கார்; என்னைப் பார்க்க வந்து விட்டீர்களே, உங்கள் நோய் குணமாகி விடும்! என்றார் சாயி.

எனக்கு ஏதாவது மந்திர மருந்து, திருநீறு போன்று தாருங்கள் என்றார் சர்க்கார்.

கக்கத்தில் வைத்திருந்த திருநீற்றுப் பையில் இருந்த சரக்குத் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று சாயிபாபாவுக்குத் தயக்கம்.

சுற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பழக்கப்பட்ட சாயி சீடர்கள் தானே! குறிப்பை உணர்ந்து சாயிபாபாவுக்கு முன்னிருந்த பலகாரத் தட்டு எடுத்த சீடர் அதில் ஒரு சந்தனத்தை நைசாகப் போட்டு அந்தத் தட்டை சாயிபாபா பக்கத்தில் வைத்தார்.

இந்த ஜாலங்கள் எல்லாம் அன்றாடம் அங்கு நடப்பதுதானே!

பாபா கையை அசைத்து சந்தனத்தை வரவழைத்துக் கொடுத்தார்; பி.சி. சர்க்காருக்கு இந்தத் தந்திரம் தெரியாதா? உடனே இவர் கையை அசைத்து பக்கத்துத் தட்டிலிருந்து ரசகுல்லாவைக் கையில் வரவழைத்துக் கொடுத்து அசத்தினார்.

அவ்வளவுதான் வியர்த்துக் கொட் டியது ஆசாமிக்கு; சத்தம் போட்டார்; சாயிபாபாகூட இருந்த சிஷ்யர் களுக்கோ ஆத்திரம் கரை புரண்டது.

நான்தான் பி.சி. சர்க்கார் என்று கூறி வெளியேறினார். இவ்வளவு தகவல் களையும் பி.சி. சர்க்காரே இம்பிரிண்ட் ஆங்கில மாத இதழில் (1983 ஜூன்) விரிவாக எழுதி பகவான் என்னும் மூடு திரைக்குள் மறைந்திருந்த மோசடிப் பேர் வழியின் முகத்திரையைக் கிழித்தெறிந்தார். அப்பொழுதே விடுதலையும் அதனை மொழி பெயர்த்து வெளியிட்டது (விடுதலை 21.7.1983)

உண்மை இவ்வாறு இருக்க, சாயிபாபா பெரிய மகான் என்றும், பகவான் என்றும், சிவனின் அவதாரம் என்றும் தூக்கிப் பிடிக்கின்றனர் என்றால் - _ இது எவ்வளவு பெரிய சமூக மோசடி!

இன்னொரு முக்கிய தகவலும் உண்டு.

1992-இல் புட்டபர்த்தியில் நவீன வசதிகளைக் கொண்ட திருமண மண்டபம் ஒன்றை சாயிபாபா கட்டி யிருந்தார்; அதன் திறப்பு விழாவுக்குக் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டில், உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், ஆந்திர அமைச்சர் விஜய பாஸ்கர ரெட்டி, மத்திய விவசாய அமைச்சர் பல்ராம் ஜாக்கர் முதலியோரும் வந்திருந்தனர்.

அந்த விழாவில் திருமண மண்டபத்தை வடிவமைத்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஏ. இராம கிருஷ்ணா என்னும் கட்டடக் கலை ஞருக்கு, விழா மேடையில் சாயிபாபா ஒரு நினைவுப் பரிசை வழங்கினார். உடனடியாக தன் கையை அசைத்துத் தங்க சங்கிலி ஒன்றை வரவழைத்து அந்தக் கலைஞருக்கு வழங்கி அனை வரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
அந்த நிகழ்ச்சிகள் முழுவதும் ஆந்திரத் தொலைக்காட்சி நிறுவனத் தால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அரை டஜன் பேர்கள் ஒளிப்பதிவு (வீடியோ) செய்திருந்தனர்.

தொலைக்காட்சி நிறுவனத்தினர் தங்கள் நிலையத்துக்குச் சென்று போட்டுப் பார்த்தபோது பேரதிர்ச்சி ஒன்று அவர்களுக்காகக் காத்திருந்தது.

புட்டபர்த்தி சாயிபாபாவின் உதவியாளர் மேடையில் _ சாயிபாபா கட்டடக் கலைஞருக்குத் தர வேண்டிய நினைவுப் பரிசைத் தரும்போது அதனோடு சேர்த்து தங்கச் சங்கிலி ஒன்றையும் தெரியாமல் வழங்குகிறார்.

நினைவுப் பரிசுக்கும் கீழே தங்கச் சங்கிலியை வைத்திருந்தது வீடியோ காமிராவில் பதிவாகி இருந்தது. தனது ஒரு கையில் நினைவுப் பரிசினை வழங்கும் சாயிபாபா, அப்படியே தங்கச் சங்கிலியை கைக்குள் மறைத்து, பிறகு கை அசைப்பின் மூலம் கொண்டு வருவதாக நடித்து, அதனைத் தந்து விட்டார். பதிவான இந்தத் தகவல் சாயிபாபாவின் கவனத்துக்கு வந்தவுடன், உடனே அதனை எரித்துவிடும்படி கட்டளை யிடப்பட்டது.

சொல்பவர் பாபா ஆயிற்றே -_ கோடிக்கணக்கான சொத் துக்கு அதிபர் ஆயிற்றே _ அவ்வாறே அது எரிக்கப்பட்டது. ஆனாலும் தனியார் தொலைக்காட்சிகள் எடுத்த வீடியோவை என்ன செய்வது! அதற்கும் முயற்சி வேகமாக மேற்கொள்ளப் பட்டன. ஆனாலும் அதற்குள் அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேடு படத்துடன் அப்படியே வெளி யிடவும் செய்து விட்டது (24.11.1992)

டெக்கான் கிரானிக்கல்லில் வெளி வந்த அந்தச் செய்தியைப் படத்துடன் விடுதலையும் வெளியிட்டது (26.11.1992 முதல் பக்கம் தலைப்புச் செய்தி)

பகவான் பெயரில் எவ்வளவுப் பெரிய மோசடி! இதற்கு இந்நாட்டில் உள்ள குடியரசுத் தலைவர்களும், பிரதமர்களும், தலைவர்களும் பராக்குப் பாடுகிறார்கள் என்றால் இது நாடுதானா? நாகரிக உலகில்தான் நாம் வாழுகிறோமா? கூட்டத்துடன் கோவிந்தா போடு வதுதான் நல்லவர்களுக்கு அழகா?

பகவானுக்குப் பணம் எதற்கு? ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்தாம்; 50 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பாம்.

கை அசைப்பில் எதையும் சாதிக்கக் கூடிய ஒரு பகவானுக்கு ஏன் இவ்வளவு திரண்ட சொத்துகள்? கேள்வி கேட்பதுதானே அறிவு நாணயம்?

சாயிபாபா பார்ப்பனர் அல்லர் _ சூத்திரர்தான். ஆனாலும் அவர் குவித்து வைத்திருக்கும் திரண்ட சொத்துக்களை நிருவகிப்பது யார்? உள் குத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதற்குள்ளும் நுழைந்து தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து விடுவார்கள் போல் தோன் றுகிறது.

டி.வி.எஸ். அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் வேணு. சீனிவாசன், தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யஜித் என்ற இன்னொரு பார்ப்பனர், முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான சக்ரவர்த்தி என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர்- _ இவர்களுள் ஒருவர் மோசடியாக சேர்க்கப்பட்ட சொத்துக்கு அதிபதியாக ஆகப் போகிறார்கள். கொட்டிக் கொடுத்த பக்தர்களோ வாயில் விரலை வைத்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

மருத்துவமனைகளைக் கட்டினார்; கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார் என்பதெல்லாம் நல்ல காரியங்கள்தாம்; தவறு செய்கிறோம்; மக்களை மோசடி செய்கிறோம் என்பதைத் தெரிந்து தனக்குள் முற்றாக அறிந்த நிலையில் _ இவை போன்ற காரியங்களைச் செய்வது அவரைப் பொறுத்தவரை தவிர்க்கப்பட முடியாதவை ஆகி விட்டன என்பதுதான் உண்மை.

(அடுத்தடுத்துப் பல திடுக்கிடும் கசப்பான உண்மைகள் அணி வகுக்கும்)

http://viduthalai.in/new/page-1/8487.html

No comments:


weather counter Site Meter