Pages

Search This Blog

Sunday, October 3, 2010

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமராக உருத்திரகுமாரன் தேர்வு நியூயார்க்கில் நடைபெற்ற முதல் பாராளுமன்ற கூட்டம்

நியூயார்க், அக்.3- இலங்கை தமிழர்களுக் காக அமைக்கப்பட் டுள்ள நாடு கடந்த தமி ழீழ அரசு முறைப்படி செயல்படத் தொடங் கியது. நியூயார்க்கில் நடந்த கூட்டத்தில் முதல் பிரத மராக உருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டார். இலங்கையில் நடந்த உச்சகட்ட போரில் விடு தலைப்புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டதாக, அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. இதனால், இலங்கைத் தமிழர்களின் தனி ஈழ நாடு அமைக்கும் கனவு முடிந்து விட்டதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாடு களில் இருந்தபடியே தமிழீழ அரசை செயல் படுத்துவது என இலங்கை தமிழர் ஆதரவு அமைப் பினர் முடிவு செய்தனர். அதன்படி, நாடு கடந்த தமிழீழ அரசு அமைக் கப்பட்டது. அதற்காக, உலக அளவில் இலங்கைத் தமிழர்களிடையே வாக் கெடுப்பு நடத்தி மக்கள் பிரதிநிதிகள் (எம்.பி.க் கள்) தேர்வு செய்யப்பட் டனர்.
இணைய தளம் வாயிலாகவே, இத் தகைய முயற்சிகள் அனைத்தும் நடைபெற் றன. இத்தகைய நட வடிக்கைகள் மூலமாக நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த பிரதிநிதிகளின் முதல் கூட்டம் அமெ ரிக்காவில் நடைபெற் றது. மூன்று நாள் கூட்டம்.
நியூயார்க் நகரில் அய்.நா.சபை அருகே உள்ள ஓர் உணவு விடுதி யில் நடந்த அந்த கூட் டத்தில் ஏராளமான பிர திநிதிகள் பங்கேற்றனர். லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண் டனர். கடந்த 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடந்த அந்த கூட்டத்தில், தமிழீழ அரசுக்கான அரச மைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முதல் நாள் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் போரில் உயிரிழந்தவர் களுக்கு அமைதி மரி யாதை செலுத்தப்பட் டது. அதன் பின்னர் நடந்த கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் சட்ட அமைச்சர் கிளார்க், மலேசியாவில் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, கொலம்பியா பல்கலைக் கழக மனித உரிமைகள் கல்வி மய்யத் தின் பேராசிரியர் பிலிப், வாஷிங்டன் சட்டக் கல்லூரி பேராசிரியர் அலி பெய்டவுன் போன் றோர் உரையாற்றினர்.
பிரதமர், சபாநாயகர் அதைத்தொடர்ந்து, மரபு சார்ந்த பாராளு மன்ற கட்டமைப்பே தமிழீழ அரசுக்கு உகந் தது, அரசின் தலைவராக பிரதமர் செயல்படுவார், அவருக்கு உதவியாக மூன்று துணைப் பிரதமர் களை தேர்வு செய்வது, ஏழு அமைச்சர்களை நியமிப்பது போன்ற தீர்மானங்களை பிரதி நிதிகள் அடங்கிய பாரா ளுமன்றம் நிறைவேற்றி யது.
மக்கள் பிரதிநிதிகள், நியமன பிரதிநிதிகள் (செனட்) என இரண்டு அவைகளைக் கொண் டதாக பாராளுமன்றம் செயல்படும். தேர்வு செய் யப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடைமுறை யும் பாராளுமன்றத்தால் வகுக்கப்பட உள்ளது. மேலும், நாடு கடந்த தமிழீழ அரசின் முத லாவது புதிய பிரதமராக விசுவநாதன் உருத்திர குமாரன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தின் சபா நாயகராக கனடாவை சேர்ந்த பொன் பால் ராஜன் என்பவரும் துணை சபாநாயகராக சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுகன்யா புத்திரசிகா மணி என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
http://www.viduthalai.periyar.org.in/20101003/news02.html

No comments:


weather counter Site Meter