Pages

Search This Blog

Monday, December 20, 2010

தான் போட்ட கையொப்பத்தையே மறுத்த ஜெயலலிதா- ஊழல்பற்றிப் பேசலாமா? முதலமைச்சர் கலைஞர் கடிதம்

தன் கையொப் பத்தையே தான் போடவில்லை என்று மறுத்த ஜெயலலிதா ஊழலைப் பற்றிப் பேசத் தகுதி உடையவர்தானா என்ற வினாவை எழுப்பியுள்ளார் முதலமைச்சர் கலைஞர்.


முரசொலியில் கடிதமாக அவர் எழுதியிருப்பதாவது:

உடன்பிறப்பே,
ஸ்பெக்ட்ரம் பிரச்சினை குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக் கையில் மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் பலம் வாய்ந்த பெரும்பா லோனோர் இந்த ஊழலின் பின்ன ணியிலும், இந்த ஊழலுக்குத் துணை யாகவும் செயல்பட்டிருக்கிறார்கள் என்று வழக்கம்போல நீட்டி முழக்கி அறிக்கை விட்டிருப்பதைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. ஊழலைப் பற்றி ஜெயலலிதா குற்றம் சாட்டி அறிக்கைவிட்டால் சிரிப்பு வராதா என்ன? அதிலும் மத்திய புல னாய்வுத் துறையின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தான் வரவேற்பதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக் கிறார்.

உச்சநீதிமன்றம் இந்த ஒரு வழக் கிலே மாத்திரமா தீர்ப்பு சொல்லி யிருக்கிறது. தமிழக அரசுக்குச் சொந்த மான டான்சி நிலத்தை முதல் அமைச்சர் பொறுப்பிலே இருந்த போது ஜெயலலிதா அடிமாட்டு விலைக்கு வாங்கியதைப் பற்றி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன? அந்தத் தீர்ப்பையும் ஜெயலலிதா வரவேற்றிருக்க வேண்டியதுதானே?


டான்சி வழக்கில் முக்கிய சில பகுதிகள் :-

அரசிடம் அனுமதி பெறப்பட்டதா?

பொதுத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு, அவர் முதல மைச்சராக பதவியிலே இருந்த காலத் தில் விற்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. டான்சி நிறுவனத்தின் விதிமுறைகளின்படி அதை விற்பனை செய்வதற்கு முன்பு அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றாக வேண்டும். அதுவரை விற்பனை முழுமை அடைந்ததாகாது. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு கம்பெனிகளை விற்க வேண் டியதற்கான அனுமதியினை முதல் குற்றவாளியின் (ஜெயலலிதா) தலை மையிலே நடைபெறும் அரசே வழங்க வேண்டிய நிலையில், அரசு தன் னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதால் அங்கே ஒரு அக்கறை மோதுதல் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட இரு வேறு அக்கறை மோதுதல்கள் இருக்கும்பட்சத்தில், நியாயமான விற்பனை நடைமுறை களைக் குந்தகப்படுத்தக் கூடிய வாய்ப் புள்ள ஒருவருக்கு இந்த விற்பனை, சட்டப்படி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து எங்களின் முடிவு எதுவாக இருந்த போதிலும், அதிலே ஜெயலலிதா விற்கு லாபம் இருந்ததா இல்லையா என்பதைவிட, முதல் அமைச்சரே வழக்கு சொத்துக்களை வாங்க யத்தனித்துவிட்ட நிலையில், அதிகார வர்க்கம் அளவுக்கு மீறி அதிலே ஆர்வம் காட்டி இந்த விற்பனையை சுமூகமாக முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பும் விலைக்கே முடித்திருக்கி றார்கள் என்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்த நிலையி லும், ஜெயலலிதாவின் இந்தச் செயல் கள் நடத்தை விதிகளின் உட்பொரு ளுக்கு விரோதமானதாகும். நியாய மாக பேசவேண்டுமென்றால், அரசின் சிறு அதிகாரிகளுக்காக ஒரு சட்ட மும், முதலமைச்சருக்காக ஒரு சட்ட மும் இருக்க முடியுமா? இதுபோன்ற நிலைகளில், நன்னடத்தை விதி என்பது அருங்காட்சியகத்திலே வைக் கப்பட வேண்டிய வெறும் ஆடம்பரப் பொருள் மட்டும்தானா? அது கடைப் பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல் லவா? இவைகள்தான் எங்களுடைய மனச் சாட்சியைத் துன்புறுத்துகிறது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா தான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக டான்சி நிலப் பத்திரத்திலே உள்ள, அவருடைய ஆடிட்டரும் அரசு அதி காரிகளும் ஏற்றுக்கொண்ட அவரு டைய கையெழுத்தையே இல்லை என்று மறுக்கக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்.

Further, criminal law is meant to deal with criminals ordinarily, while code of conduct is observed as gentlemen’s agreement.
Good ethical behaviour on the part of those who are in power is the hallmark of a good administration and people in public life must perform their duties in a spirit of public service rather than by assuming power to indulge in callous cupidity, regardless of self imposed discipline. Irrespective of the fact whether we reach the conclusion that A.1 is guilty of the offences with which she is charged or not, she must atone for the same by answering her conscience in the light of what we have stated not only by returning the property to TANSI unconditionally but also ponder over whether she had done the right thing in breaching the spirit of the Code of Conduct and giving rise to suspicion that rules and procedures were bent to acquire the public property for personal benefit, though trite to say that suspicion however strong cannot take place of legal proof in a criminal case and take steps to expiate herself.

வெட்கப்பட்டாரா ஜெயலலிதா?

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்றாரா? அதற்காக வெட்கப்பட்டாரா? மனச் சாட்சிக்கு இடம் கொடுத்தாரா? அப் படிப்பட்டவர் தற்போது ஊழல்பற்றி அறிக்கைவிட தகுதி படைத்தவரா?

வருமானத்துக்கு அதிகமாக ஊழல் செய்து 66 கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்து, அதற்காகவே ஏழாண்டு காலமாக ஜெயலலிதா மீது வழக்கு நடைபெறுகிறதே; அந்த வழக்கிலே, நீதி பரிபாலன முறையின் புனிதத்தையும், அதன் மீது சாதாரண மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை யும் நிலைநாட்ட இந்த வழக்கு விசாரணையை கருநாடக மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுகிறேன் என்று உச்சநீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.என். வரியவா மற்றும் எச்.கே. சேமா ஆகியோர் 18.11.2003 அன்று தீர்ப்பு வழங்கினார்களே, அந்தத் தீர்ப்பைப் பெற்ற ஜெயலலிதா அந்தத் தீர்ப்புக்கு ஒத்துழைக்கும் வகையில் பெங்களூ ருவில் வழக்கு விசாரணையை விரை வில் முடிக்க ஒத்துழைப்பா கொடுக் கிறார்? எந்த அளவிற்கு அதனை தாம தப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு தாமதப்படுத்த முயற்சிக்கிறார். தற் போதுகூட அந்த வழக்கை தாமதப் படுத்த உச்சநீதிமன்றம்வரை ஜெய லலிதா மேல் முறையீடு செய்து, உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை தடைசெய்ய மறுத்து தீர்ப்பளித்துள் ளதே! அதுவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தானே?

1993-94ஆம் ஆண்டுக்கான வரு மான வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித் துறையே அவர்மீது வழக்கு தொடுத்து - அந்த வழக்கில் 24.2.2006 அன்று ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போதே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர் வால், ஏ.கே. மாத்துர் ஆகியோர் லுடிர (துயலயடயடவையய) யசந அயமபே ய அடிஉமநசல டிக வாந துரனஉயைட ஞசடிஉநளள. ழடிற டடிபே லடிர உய னசயப வாந யீசடிஉநநனபேள? என்று விமர் சனம் செய்தார்களே, அதை ஜெய லலிதாவே மறந்துவிடலாமா? உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்தினை ஜெய லலிதா மதித்தாரா? வரவேற்றாரா? அதுபற்றி அறிக்கைவிட்டாரா? ஜெய லலிதாவின் வீட்டைச் சோதனை யிட்ட போது கிடைத்த பொருள் களும், அதன் மதிப்பும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ஏடு களிலும் ஒரு பட்டியலாகவே வெளி யிடப்பட்டது. அந்தப் பட்டியலில் குறிப்பிட்டவாறு -

ஜெயலலிதாவின் 86 வகையான நகைகள் மதிப்பு - 17 லட்சத்து 50 ஆயிரத்து 31 ரூபாய்.

சசிகலாவின் 62 வகையான நகை கள் மதிப்பு - 9 லட்சத்து 38 ஆயிரத்து 460 ரூபாய்.

ஜெயலலிதாவின் 26 வகையான நகைகள் - 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய்.

ஜெயலலிதாவின் 41 வகையான நகைகள் - 1 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரத்து 958 ரூபாய்.

ஜெயலலிதாவின் 394 வகையான நகைகள் - 3 கோடியே 12 லட்சத்து 67 ஆயிரத்து 725 ரூபாய்.

சசிகலாவின் 34 வகையான நகை கள் - 17 லட்சத்து 54 ஆயிரத்து 868 ரூபாய்.

1116 கிலோ எடையுள்ள வெள்ளிப் பாத்திரங்கள் - 48 லட்சத்து 80 ஆயி ரம் ரூபாய்.

இந்தியன் வங்கி, அபிராமபுரம் கிளையில் முதலீடு - ஒரு கோடி ரூபாய்.

சொகுசு பேருந்து எண் டி.என். 09-எப். 2575 - 32 இலட்சத்து 40 ஆயிரத்து 278 ரூபாய்.

91 கைக் கடிகாரம் - 6 இலட்சத்து 87 ஆயிரத்து 350 ரூபாய்.

7 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் - 9 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்.

914 புதிய பட்டுச் சேலைகள் - 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய்.

6195 மற்ற புதிய சேலைகள் - 27 லட்சத்து 8 ஆயிரத்து 720 ரூபாய்.

2140 பழைய சேலைகள் மற்றும் துணிமணிகள் - 4 லட்சத்து 21 ஆயிரத்து 870 ரூபாய்.

389 ஜோடி காலணிகள் - 2 இலட்சத்து 902 ரூபாய்.

இவ்வளவு சொத்துக்களும் ஜெயலலிதாவுக்கு எப்படி கிடைத்தன? ஊழல் சொத்துக்கள்தானே?

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் வெளி யிட்ட விவரப்படி எடுத்துக் கொண்டால் 1-7-1991 அன்று ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பீடு 2 கோடியே ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய். 1991 ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு மே திங்கள் வரையில் ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல் அமைச்சர். 30.4.1996 அன்று ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய். எப்படி வந்தது இந்த 66 கோடி ரூபாய் சொத்துக்கள்? இதற்காகத்தானே இப்போது பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி வழக்கு நடைபெறுகிறது!

சாட்சிகள் பல்டி!

சொத்துக் குவிப்பு வழக்கினை வேறு மாநிலத்துக்கு - பெங்களூருக்கு மாற்றி தீர்ப்பு வழங்கியபோது உச்ச நீதிமன்றம் தெரிவித்தவை வருமாறு:- 1. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற பிறகு பல சாட்சிகள், தாங்கள் ஏற்கனவே கொடுத் திருந்த வாக்கு மூலத்திலிருந்து பல்டி அடித்துள்ளனர்

2. சுதந்திரமான நியாயமான முறையில் வழக்கு விசாரணை நடைபெறாவிட்டால் நீதி வழங்கும் முறையில் மக்களின் நம்பிக்கை சீர்குலைந்து விடும்

3. இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற விதத்தைப் பார்க்கும்போது, நீதி தோல்வி அடைந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 4. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதா விசாரணை நீதிமன்றத்தில், நீதிமன்றம் கேள்வி கேட்கும்போது சென்னையில் இருந்துகொண்டே ஆஜராகவில்லை

5. குற்றஞ்சாற்றப்பட்டவர் வெகுதூரத்தில் இருந்தால் மட்டுமே கேள்விப் பட்டியலைப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் ஒரேயொரு வழக்கில் விதிவிலக்காகக் கொண்டுவந்த முறையை - இந்த விவகாரத்தில் கடைப்பிடித்ததை ஏற்க இயலாது

6. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்த வழக்கில் திரும்ப அழைக்கப்பட்ட 76 அரசு தரப்பு சாட்சிகளில் 64 பேர் பல்டி அடித்துள்ளனர். அவர்கள் மீது அரசு வழக்கறிஞர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்பதும் கண்டனத்திற்குரியது

7. நீதி பரிபாலன முறையின் புனிதத்தையும் அதன் மீது சாதாரண மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் நிலைநாட்ட இந்த வழக்கு விசாரணை கருநாடக மாநில நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது.

போதுமான ஆதாரம் உள்ளது

இந்தத் தீர்ப்பினை 18.11.2003 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என். வரியவா, எச்.கே. சேமா ஆகியோர் அளித்ததோடு, அதனை முடிக்கும்போது, தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கில் போதுமான முதல் நிலை ஆதாரங்கள் இருப்பதாகவே நீதிமன்றம் கருதுகின்றபடியால் இவ்வழக்கை தமிழ்நாட்டில் நடத்தினால் நியாயம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே இவ்வழக்கு மாற்றப்பட வேண்டிய வழக்கேயாகும். நீதி வழங்கப்படுவது முக்கியமெனினும், நீதி வழங்கப்படுவதாக மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவதும் நீதிமன் றங்களின் கடமையாகும்; எனவே இந்த வழக்கு மாறுதல் செய்யப்படுகிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, கர்நாடக அரசோடு கலந்து பேசி, இந்த வழக்கிற்காக ஒரு சிறப்பு நீதி மன்றத்தை ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆறு வார காலத்திற்குள் பெங்களூருவில் அமைக்க வேண்டும். குற்றவியல் வழக்குகளில் பயிற்சி பெற்ற முதுநிலை வழக்கறிஞர் ஒருவரை இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிப்பதுடன், அவருக்கு இளநிலை வழக்கறிஞர் ஒருவரும் அமர்த்தப் படவேண்டும். வழக்கறிஞர் ஊதியம் உள்பட, கட்டணங்கள் அனைத்தையும் கர்நாடக அரசு செலுத்த வேண்டும்; பிறகு தமிழ்நாடு அரசு அதனை கருநாடக அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும். தலைமை நீதிபதியினால் நியமிக்கப் படும் அரசு வழக்கறிஞர் ஏற்கனவே பிறழ் சாட்சியம் அளித்த- பல்டி அடித்த அரசுத் தரப்பு சாட்சிகளை (ழடிளவடைந) மீண்டும் அழைத்து மறு விசாரணை செய்வதுடன், வேண்டுமென்றே மாற்றி சாட்சியமளித்த அந்தச் சாட்சிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை தனியே எடுக்கவும் அறிவுறுத்தப்படுகின்றது. சாட்சிகளுக்கு மிரட்டுதல் இருப்பதாக கருதும் பட்சத்தில், அவர்களுக்கு கருநாடக அரசு போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் கேள்வி எழுப்பப்படும்போது நீதிமன்றத்தில் தவறாது ஆஜராவதுடன், இவ்வழக்கை தினமும் (னுயடைல க்ஷயளளை) எடுத்து விசாரிக்க வேண்டும். வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு நீதிமன்றத் திற்கு அனுப்பி வைக்க வேண்டும். என்று கூறியிருக்கிறார்கள்.

இவ்வளவு புகழுக்கும், பெருமைக்கும் உரிய ஜெயலலிதா ஊழல் பற்றி அறிக்கை விடலாமா?

ஜெயலலிதா ஊழலைப்பற்றி கேள்வி கேட்கலாமா?

பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் தற்போது நடைபெறும் சாட்சிகளின் விசாரணை முடிந்து என்ன தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறதோ என்று காத்திருக்கும் நிலையிலே உள்ள ஜெயலலிதா ஊழலைப் பற்றி அறிக்கை விடலாமா? அதைப் படிப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா? ஊழல் என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய அளவிற்கு தன்னை உத்தமியாகக் கருதிக் கொண்டு, ஜெயலலிதா ஊழலைப் பற்றி கேள்வி கேட்கலாமா?

நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்தே தீர வேண்டுமென்று நாடாளுமன்றத்தையே நடத்த விடாமல் செய்த பெரிய எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது அதைப் பற்றி வேகமாகக் குரல் கொடுக்க வில்லையே; அது ஏன்? ஏன்?

இவ்வாறு முரசொலியில் இன்று முதலமைச்சர் கலைஞர் எழுதியுள்ளார்.
http://www.viduthalai.periyar.org.in/20101220/news03.html

No comments:


weather counter Site Meter