Pages

Search This Blog

Monday, December 20, 2010

விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: ஆ.ராசா


சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன் என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஆ.ராசாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியதாக செய்தி வெளியானது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மருத்தவ பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார்.

அப்போது சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆ.ராசா,

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணையை கண்டு ஓடி ஒளியப்போவதில்லை. சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன்.


நான் ஒரு வழக்கறிஞர் என்பதால் எனக்கு சட்டங்கள் தெரியும். எந்த சட்ட விதிமுறைகளையும் நான் புறக்கணிக்க மாட்டேன். நான் முன் ஜாமீன் எதுவும் கோரப்போவதில்லை. ஏனென்றால் நான் எந்த குற்றமும் செய்யவில்லை.

வீணாக நீங்கள் யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் பயப்படுவதாக சில ஊடகங்கள் எனக்கு எதிராக மக்கள் மத்தியில் செய்தி வெளியிட்டு வருகின்றன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றார்.
http://nakkheeran.in/users/frmNews.aspx?N=45510

No comments:


weather counter Site Meter