Pages

Search This Blog

Wednesday, December 29, 2010

நுழைவுத் தேர்வு எதிர்ப்பு - நடந்துவந்த பாதை!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சராக இருந்த எச்.வி. ஹண்டே சட்ட மேலவையில் கோடிட்டுக் காட்டினார்.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் களைச் சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வு (Entrance Exam) நடத்தும் யோசனைபற்றி தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றார்.
ஹண்டே அறிவித்ததுதான் தாமதம். நச்சு விதையை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், அது ஆலகாலமரமாகி மக்களைக் கொன்று தீர்த்துவிடுமே.
செய்தி வந்த அன்றே கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர் கள் நுழைவுத் தேர்வு: ஆபத்தான யோசனை என்று கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். (விடுதலை, 23.3.1982).
காமராசர் அவர்கள் முதல்வராக இருந்தபோதும், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதும், கலைஞர் அவர்கள் முதலமைச் சராக இருந்தபோதும் - ஏற்கப்படவில்லை இந்த யோசனை. செயல்படுத்த முனைய வில்லை அன்றைய அரசுகள் என்றால், அதற்குத் தெளிவான, திட்டவட்டமான காரணங்கள் இருந்தே தீரவேண்டும் என்பதை இன்றைய முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் உணர்வார் என்று நம்புகிறோம்.
அ.தி.மு.க. ஆட்சி வகுப்புரிமையை அடிக்கடி புதைகுழிக்கு அனுப்ப முயற்சிக் கும் ஓர் ஆட்சி என்ற கெட்ட பெயர் தமிழர்கள் மத்தியில் - கட்சி வேறு பாடின்றி பெற்ற ஒரு கட்சியாக ஏற் கெனவே 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணை, பொருளாதார அடிப்படையில் சலுகை தேவை என்ற பேச்சு; என் ஜினீயரிங், மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களைத் தேர்ந் தெடுக்க இன்டர்வியூ மார்க்குகள் 75 ஆக இருந்ததை 30 ஆகக் குறைத்த நடவடிக்கை போன்ற பலவகை முறை களால் இந்த அரசுக்கு ஏற்பட்டிருக் கிறது.
இப்போது புதிய கேடு ஒன்றினைத் தொடங்கி வைக்கும் திருப்பணியையும் வரும் கல்வி ஆண்டிலிருந்து செய்ய முனைகிறார்கள் என்றால், தமிழர்களுக் குப் பேரபாயமான ஒரு புதிய ஏற்பாடும் தயாராகி வருகிறது என்றே அதற்குப் பொருள். (விடுதலை, 23.3.1982) என்று அறிவித்த கழகப் பொதுச்செய லாளர் அந்த அறிக்கையின் இறுதியில் கிளர்ச்சிகள் வெடிக்க வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நுழைவுத் தேர்வு ஆணை கொளுத்தவும் பட்டது (17.6.1984).
நுழைவுத் தேர்வைக் கொண்டு வந் தால் என்ன ஆகும்? அந்த அறிக்கையி லேயே அதற்கும் விடையளித்திருந்தார்.
நுழைவுத் தேர்வு என்று வைத்தால், பார்ப்பனர்களும், பணக்காரர்களும்தான் அதனால் பலன் பெறுவார்கள் டம்மி நெம்பர் வைத்தால்கூட அதற்கும் லஞ்சம் கொடுத்து தெரிந்துகொண்டு, மார்க் வேட்டை ஆடிவிடுவார்கள். பதவியில் உள்ளவர்கள் வீட்டுப் பிள்ளைகளும், பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளும், பணக் கார சீமான் வீட்டுப் பிள்ளைகளும், பட் டணத்துப் பிள்ளைகளும்தான் இதன் மூலம் பயன் அடைவார்களே தவிர, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களும், பட்டிக்காட்டுப் பிள்ளை களும், ஏழைகளும் இதனால் பாதிக்கப் படவே செய்வார்கள்.
மேற்காட்டிய முதல் ரக பிரிவினர்க்கு மார்க் வாங்கும் ரகசியம் தெரியும். ஆனால், அடுத்த பிரிவில் உள்ளவர் களுக்குத் தெரியாது என்று நடைமுறை உண்மையை - தோலை உரித்து சுளையை முழுமையாகக் காட்டினார் கழகப் பொதுச்செயலாளர்.
மாண்புமிகு நாவலர் இரா. நெடுஞ் செழியன் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தநேரத்தில் (1972 இல்) நுழைவுத் தேர்வு என்று தன்னிச்சையாக ஒரு பேச்சை ஆரம்பித்தார். அவ்வளவுதான்! தந்தை பெரியார் அவர்களிடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார் (17.7.1972).
அதற்குப் பின் அதுபற்றிய பேச்சே இல்லை. கப்-சிப் என்று பிறந்த தரு ணத்திலேயே மரணக் குழிக்குப் போய் விட்டது. முதலமைச்சர் மானமிகு கலை ஞர் ஆயிற்றே - அதற்குமேல் அனுமதிப் பாரா? நுழைவுத் தேர்வைத்தான் ஏற்றுக் கொள்வாரா?
இதில் இன்னொன்றையும் இந்த நேரத்தில் நினைவூட்டுவது மிகமிக முக்கியமாகும். நுழைவுத் தேர்வு விடயத் தில் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க் சிஸ்ட்) கட்சி எப்படி பார்ப்பனத்தனமாக நடந்துகொண்டது என்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி அது.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
http://www.viduthalai.periyar.org.in/20101229/news06.html

No comments:


weather counter Site Meter