Pages

Search This Blog

Sunday, December 19, 2010

அமைச்சர் பதவிக்காக தயாநிதி மாறன், தயாளு அம்மாளிடம் ரூ.600 கோடி கொடுத்ததாக சொல்வதை நிரூபிக்க தயாரா? நீதிமன்றத்தில் சந்திப்போம்! சோவுக்கு கலைஞர் சவால்

அமைச்சர் பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாக சொல்வதை நிரூபிக்க தயாரா'' என்று சோவுக்கு முதலமைச்சர் கலைஞர் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி: மத்திய அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் 600 கோடி ரூபாய் கொடுத்ததாக - நீரா ராடியா டேப் உரையா டல் செய்தி கூறுகிறதே?'' என்ற ஒரு கேள்விக்கு துக்ளக்'' இதழில் பதில் எழுதும் போது இது பற்றி, இன்னமும் எந்த விதமான உறுதியான மறுப்பும் வெளிவந்ததா கத் தெரியவில்லை. மத் திய அரசில், அமைச்சர் கள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க. பெற்றுள்ள பங்கு'' பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது'' என்று குறிப்பிடப் பட்டிருக்கிறதே?.

பதில்: பதினைந்து நாள்களுக்கு முன்பு ஒரு சில நாளேடுகளில் இது போன்றதொரு செய்தி வந்த போது, அதைப் பார்த்த நான் இப்படிப் பட்ட பைத்தியக்காரர் களும் நாட்டிலே இருக் கிறார்களே என்றுதான் எண்ணிக்கொண்டேனே தவிர, அதைக் கூடவா நம்புபவர்கள் இருப்பார் கள், எனவே அந்தச் செய் தியை மறுக்க வேண்டு மென்று தோன்றவில்லை.

திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய்!

ஆனால் இன்று அந் தச் செய்தி துக்ளக்'' இதழிலும் வெளி வந்து பதில் சொல்லப்பட்டி ருப்பதைக் காணும் போது - ஒரே பொய்யைத் திரும் பத் திரும்ப இவ்வாறு எழுதினால் அது நம்புவ தற்குரிய ஒன்றாக ஆகி விடுமோ என்ற நப்பா சையில் தொடர்ந்து அதை எழுதி வருவதால் அந்தச் செய்தியை மறுத்திட விரும்புகிறேன்.

அமைச்சர் பதவிக் காக தன் பேரனிடம் அது வும் 600 கோடி ரூபாய் அவரின் பாட்டியார் வாங்கினார் என்று உண்மையிலேயே ஒரு காலத்தில் எனக்கு நண் பராக இருந்த சோ'' நம்புகிறாரா? தயாநிதி மாறனுக்கு அல்ல, வேறு யாருக்காகவாவது அமைச் சர் பதவியை வழங்குவ தற்காக தி.மு.க பணம் பெற்றதாக சோ நிரூபிக் கத் தயாராக இருக் கிறாரா? ஏனென்றால் துக்ளக் பதிலில் அமைச் சர்கள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க. பெற்றுள்ள பங்கு பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது என்றும் சொல்லியிருப்ப தால், இதனை நான் தெளி வாக்க விரும்புகிறேன்.

இதுபோன்ற உண் மைக்கு மாறான பொய்ச் செய்திகளை திட்ட மிட்டு சோ'' போன்ற ஒரு சில பத்திரிகையா ளர்கள் திரித்து வெளி யிட்டோ அல்லது அதற் காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திரா விட இயக்கத்தை சேதப் படுத்த எண்ணுகிறார்களா?.

நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!

உண்மையிலேயே தயாநிதிமாறன் அமைச் சர் பதவிக்காக 600 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக துக்ளக் `சோ'வோ அல்லது அந் தச் செய்தியை வெளி யிட்ட பத்திரிகையாளர் களோ நிரூபிக்கத் தயா ராக இருக்கிறார்களா?. அப்படியிருந்தால் அந்தச் செய்தியை உறு திப்படுத்தி அவர்கள் இதழிலே அதனை அவர் கள் பெயரிலேயே வெளி யிடட்டும். அவர்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். சோ'' ராமசாமி, இதற் குப் பதில் சொல்வாரா?. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.http://www.viduthalai.periyar.org.in/20101218/news31.html

No comments:


weather counter Site Meter