Pages

Search This Blog

Tuesday, February 8, 2011

அய்ன்ஸ்டின்-தீக்கதிர்

தீக்கதிர் இணைப்பு இதழான வண்ணக் கதிரில் (6.11.2011) பெட்டிச் செய்தி ஒன்று காணப்பட்டது.

அய்ன்ஸ்டின் இப்படி சொன்னார் என்ற தலைப்பில் அது வெளியாகியிருந்தது.
தீய சக்தி என்று எதுவும் இல்லை. அல்லது தீயசக்தி என்பது தானாக இல்லை. தீயசக்தி என்றால் கடவுள் இல்லை என்கிற நிலைமை அவ்வளவுதான். ஒளி இல்லாத இடத்தில் இருள் இருப்பது போல, வெப்பம் இல்லாத இடத் தில் குளிர் இருப்பது போல, கடவுள் இல்லாத மனிதனின் இதயத்தில் தோன்றுவதுதான் தீயசக்தி.

இப்படி ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் சொன்னதாக ஆன்மிகவாதிகள் அடிக்கடி சொல்வதுண்டு. அவ்வளவு பெரிய அறிவியல் மேதையே கடவுள் இருப்பதை நம்பியதற் கான ஒப்புதல் வாக்கு மூலம் தான் இது என்பார்கள். ஆனால் அவரது வாழ்க்கையையும், அவ ரது கருத்துகளையும் ஆராய்ந்த வர்கள் அவர் அப்படிச் சொன் னார் என்பதற்கு முழுமையான ஆதாரம் எதுவும் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள் (வண் ணக்கதிர் 6.2.2011 பக்கம் 2).

பிற்பகுதியில் வண்ணக் கதிர் சொன்னதுதான் உண்மை என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன.

2008 மே 15 அன்று லண்டனில் மேஃபேர் எனும் இடத்தில் புளும்ஸ்பரி ஏலக் கடையில் விஞ்ஞானி அய்ன்ஸ்டின் ஜெர்மனி மொழியில் எரிக்குட் கிண்ட் எனும் மெய்யறிவாள ருக்கு 1954 ஜனவரி மூன்றாம் தேதியிட்ட கடிதங்கள் இரண்டு லட்சம் பவுனுக்கு விற்கப்பட்டன. அக்கடிதத்தில் அய்ன்ஸ்டின் எழுதியிருப்பதாவது:

என்னைப் பொறுத்த வரையில், கடவுள் என்னும் சொல் மனிதரின் நலிவின் (weakness) வெளிப்பாடு என்றும், விளைவு என்றும் கருதுகிறேன். பைபிள் என்பது பெருமைக்குரிய ஆனால், நாகரி கம் அடையாத (Premitive) மக்களின் மரபு வழிக் கதை களின் திரட்டாகும். அவை சிறு பிள்ளைத்தனமானவை.

என்னைப் பொறுத்தவரை யில், மற்ற எல்லா மதங்களையும் போலவே (யூத மதமும்) மிக மிகச் சிறுபிள்ளைத்தனமான, மூடநம்பிக்கைகளின் வடிவ மாகவே தெரிகிறது. யூதர்களின் இனத்தைச் சேர்ந்தவன் என்ப தில் மகிழ்கிறேன். அவர்களு டைய மனநிலையுடன் ஆழ மான உறவு எனக்கு இருக் கிறது. ஆனால் பிற மக்களிட மிருந்து வேறுபடும் தன்மைகள் அவர்களிடம் இல்லை என்பது என் கருத்து. மற்ற மக்களைவிட யூதர்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்லர் என்பது என்னுடைய அனுபவம். அவர் களிடம் அதிகாரம் இன்மையால் மிக மோசமான புற்றுநோய் போன்ற நடப்புகளில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட்ட வர்கள். மற்றபடி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என யூதர்களிடம் எதையும் விசேட மாக நான் காணவில்லை என்று அந்தக் கடிதத்தில் அய்ன்ஸ்டின் எழுதியுள்ளார்.

உண்மை இவ்வாறு இருக்க, கடவுள் இல்லாத மனிதனின் இதயத்தில் தோன்றுவதுதான் தீய சக்தி என்று அறிவியல் அறிஞர் அய்ன்ஸ்டின் சொன்ன தாகக் கூறுவது, பரப்புவது உண்மைக்கு மாறானதாகும்.

இவ்வளவு தெளிவான நாத்திகரை கடவுள் என்னும் குப்பிக்குள் முடக்கப் பார்க்கும் மூடர்களை என்னென்று சொல் வது! பெரியார் வீட்டிலும் பிள்ளையார் இருக்கிறார் - தினந்தோறும் பூஜை செய்கிறார் என்று கையாலாகாத சிலர் இங்கு பிரச்சாரம் செய்ய வில்லையா?
அத்தகைய மனிதர்கள் எங்கும் இருக்கத்தான் செய் கிறார்கள்!

- மயிலாடன்
http://viduthalai.in/new/home/archive/2851.html 

No comments:


weather counter Site Meter