Pages

Search This Blog

Monday, February 21, 2011

குஜராத் மதக்கலவரப் படுகொலைகளில் பங்கேற்ற பாஜ.க., வி.இ.ப. தலைவர்கள் காவல்துறையினரால் வேண்டுமென்றே விசாரிக்கப்படவில்லை

குஜராத் கலவரங்களில் நரோடா காவுன், நரோடா பாடியா மற்றும் குல்பர்கா சொசைடி படுகொலைகளைப் பற்றி விசாரணை செய்த குஜராத் காவல் துறையினர் கலவரக்காரர்கள் மற்றும் பா.ஜ.க., வி.இ.ப. மூத்த தலைவர்களி டையே இருந்த தொடர்பைப் பற்றி விசாரிக்கவே இல்லை. உள்துறையை வைத்திருந்த முதலமைச்சர் நரேந்திர மோடி விரும்பியிருந்தால், கலவரங் களின்போது நிலைமையை மிக எளி தாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என்பதும், அதன்பின் நடத் தப்பட்ட விசாரணை நியாயமானதாக வும், வெளிப்படையானதாகவும் இருந் திருக்கக்கூடும் என்பதும் வலியுறுத்து வது முக்கியமானது.

ஆனால் அதற்கு நேர்மாறாகத்தான் நடந்தது. பவநகரிலிருந்து வெளியே தள்ளப்பட்ட காவல்துறை அதிகாரி ராகுல் சர்மா கலவரங்களின்போது அகமதாபாத் நகரில் செயல்பட்ட அனைத்து கைப்பேசி அழைப்புகள் பற்றிய புள்ளிவிவரங்கள் கொண்ட ஆவணங்களைத் திரட்டி வைத்திருந் தார். இந்த கைப்பேசி அழைப்பு ஆவ ணங்களின் நகல்களை சர்மா தனது மேல் அதிகாரிகளுக்கு மட்டுமன்றி, நானாவதி-ஷா கமிஷன் முன்பும், பானர்ஜி கமிஷன் முன்பும் சமர்ப்பித்தார். கலவரங்களில் பங்கு கொண்டதாகக் குற்றம் சாற்றப்பெற்ற ஜடாபியா, மாயாபென் கொண்டானி, ஜெய்தீப் படேல், பாபு பஜ்ரங்கி, எம்.கே.டாண்டன், பி.பி.கோண்டியா மற்றும் பல பத்து சங்பரிவார் உறுப்பினர்களுக்கு எதிராக ஒரு முக்கியமான சாட்சியமாக இந்தக் கைப்பேசி அழைப்புகள் ஆவணமாக விளங்குகிறது.

கலவர வழக்குகள் குஜராத் காவல் துறையின் கைகளில் இருந்தபோது, இந்த ஆவணங்களைப் பரிசீலித்து, குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று சிறப்பு விசாரணைக் குழு தெரி விக்கிறது. இவ்வாறு செய்யத் தவறிய குற்றத்தை, பொறுப்பை மாநகரக் காவல் துறை ஆணையர் மீதோ, காவல்துறை தலைவர் மீதோ, உள்துறை அமைச்சர் மீதோ சுமத்தாமல், சாதாரண நிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் மீது சுமத்துவதில் சிறப்பு விசாரணைக் குழு மகிழ்ச்சி அடைந்தது என்பது மிகவும் வியப்பளிக்கிறது.

விசாரணைக் குழு தெரிவிக்கிறது: அப்போது காவல் துறை ஆய்வாளராக இருந்து, தற்போது சிறப்பு செயல்திட்டப் பிரிவின் அகமதாபாத் உதவி காவல் துறை ஆணையராக உள்ள தாருன் பாரட் மற்றும், அப்போது குற்றப் பிரிவு உதவி ஆணையராக இருந்த, இப்போது அகமதாபாத் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் அகமதாபாத் கண்காணிப்பாள ராக உள்ள ஜி.எல். சிங்கால் ஆகியோர் கைப்பேசி அழைப்புகள் ஆவணத்தைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டனர்; அவர்களுக்குக் கடும் தண் டனை அளிக்கப்படுவதுடன், அவர்கள் மீது இலாகா நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற கண்துடைப்பு விசார ணைகள் மேலிடத்தின் அனுமதியின்றி நடைபெற்றன என்பதை மக்கள் நம்ப வேண்டுமென்று சிறப்பு விசாரணைக் குழு விரும்புகிறதா? ஒரு சில கீழ்நிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தாங் களாகவே செயல்பட்டிருக்க முடியுமா? பா.ஜக., வி.இ.ப. தலைவர்களைப் பற்றி விசாரணை நடத்தாமல் இருப்பதற்கான கட்டாயம், காரணம், விருப்பம் யாருக்கு இருக்கும்? ஒரு காவல்துறை ஆய்வாள ருக்கும், ஒரு உதவி காவல்துறை ஆணை யருக்கும் இருந்திருக்குமா? அல்லது பா.ஜ.க., வி.இ.ப. தலைமைக்கு இருந் திருக்குமா? இந்த அடிப்படைக் கேள்வி களைக் கேட்டு அவற்றுக்கான பதில் களை சிறப்பு விசாரணைக் குழு தேட வில்லை என்பது வருத்தமளிப்பதாக இருக்கிறது.

கோத்ரா ரயில்பெட்டி எரிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினரிடம் ஒப் படைக்காமல், விசுவ இந்து பரிசத் திடம் ஒப்படைத்தது, மக்களின் உணர்ச்சி யைத் தூண்டுவதாக அமைந்தது. ஆனால் இந்தக் குற்றத்தையும், சிறப்பு விசார ணைக் குழு கீழ் நிலைக் காவல் துறை அதிகாரி மீதே சுமத்துகிறது.

சபர்மதி விரைவு ரயில் பெட்டி எரிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை வி.இ.பரி சத்திடம் ஒப்படைப்பதை அனுமதித்தார் என்பது மோடி மீதுள்ள ஒரு முக்கிய குற்றச்சாற்றாகும். பின்னர் வி.இ.ப. அந்த உடல்களை அகமதாபாத் நகரில் ஊர்வலமாக எடுத்துச் சென்றதுதான், மத உணர்வுகளைக் கொலை வெறியாக மாறத் தூண்டியது; ஏற்கனவே பதற்றம் நிறைந்திருந்த சூழ்நிலையை மேலும் மோசமாக ஆக்கியது.

அப்போது கோத்ரா மாவட்ட மாஜிஸ் டிரேட்டாக இருந்த ஜெயந்தி ரவி என்ப வரின் அறிவுரைகளின்படி, ரயில்பெட்டி எரிப்பில் உயிரிழந்த 54 பேரின் உடல்கள் வி.இ.ப. தலைவர்கள் ஜெய்தீப் படேல், ஹஷ்முக் படேல் ஆகியோரிடம் ஒப்படைத் ததாக அப்போது கோத்ரா நிருவாக மாஜிஸ்டிரேட்டாக இருந்த எம்.எல். நால்வயா சிறப்பு விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஜெயந்தி ரவி இதனை மறுத்து, தன் கீழ் வேலை செய்த நால்வயா இந்த முடிவை அவரே மேற்கொண்டார் என்று கூறி யுள்ளார்.

ஜெயந்தி ரவி, ஜெய்தீப் படேல், அமைச்சர்கள் அசோக் பட், பிரபாத் சிங் சவுகான், கோர்தான் ஜடாபியா, நரேந்திர மோடி ஆகியோர் தாளிட்ட அறைக்குள் நடத்திய கூட்டம் ஒன்றில், இறந்தவர்களின் உடல்களை அகமதா பாத்துக்குக் கொண்டு செல்வது என்ற முடிவு எட்டப்பட்டது என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவிக்கிறது. ஆனால், இறந்தவர்களின் உடல்களை வி.இ.பரிசத்திடம் ஒப்படைப்பது என்ற முடிவை யார் எடுத்தார் என்ற கேள்வி வரும்போது மட்டும், நிருவாக மாஜிஸ் டிரேட் நால்வயாவை சிறப்பு விசாரணைக் குழு குற்றம் சாற்றுகிறது. (பக்கம் 23-24).

ஒரு கீழ்நிலை அதிகாரியான நால்வயா இது போன்றதொரு பெரிய முடிவை அவராகவே எடுத்திருக்க முடியுமா? நால்வயா கூறியதை ஒதுக்கிவிட்டு, ஜெயந்தி ரவி கூறியதை மட்டும் ஏற்றுக் கொள்ள சிறப்பு விசா ரணைக் குழு விரும்பியதேன்?

இறந்தவர்களின் உடல்களை அகம தாபாத்துக்குக் கொண்டு செல்வதை தான் எதிர்த்ததாகவும், ஆனால் மோடி அதனை நிராகரித்துவிட்டார் என்றும் 2002 இல் கவலைப்படும் மக்களின் தீர்ப்பாயத்தின் முன் சாட்சியம் அளிக் கையில் ஜெயந்தி ரவி கூறியுள்ளார். ஆனால் பின்னர் அவர் தனது சாட்சி யத்தை மாற்றிக் கொண்டார். தற்போது அவர் அரசின் உயர்கல்வி ஆணையர் என்னும் அதிகாரம் நிறைந்த பதவி வகிக்கிறார்.

மோசமான நிகழ்ச்சி நடந்த 27-2-2002 அன்றே எரிந்துபோன 54 உடல் களும் அய்ந்து டிரக்குகளில் அகமதா பாத்துக்கு காவல்துறைப் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. இந்த 54 உடல் களில் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் 25 பேர் மட்டுமே என்று அடையாளம் காணப்பட்டது. சில உடல்கள் அவர் களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட் டன. மற்றும் சில ஒட்டு மொத்தமாக எரிக்கப்பட்டன.

அகமதாபாத்தில் சவஊர்வலம் நடைபெற்றதா என்ற கேள்வியைப் பொறுத்தவரை சிறப்பு விசாரணைக் குழு மவுனம் காக்கிறது. கோத்ராவில் இருந்து அகமதாபாத் துக்கு உடல்கள் ஊர்வலமாக எடுத்து வரப் படவில்லை என்று மோடி கூறியதை மட்டும் சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இந்தக் கூற்றை சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொண்டதற்கு எந்த ஒரு ஆவ ணத்தின் சாட்சியத்தின் அடிப்படையும் இல்லை. சுதந்திரமான, தனிப்பட்ட சாட்சிகள் எவரையும் அது விசாரிக்கவும் இல்லை.

கலவரங்களின்போது ராணு வத்தை அழைப்பதில் எந்தத் தாம தமும் இல்லை என்று கூறும் சிறப்பு விசாரணைக் குழு, வந்த ராணுவத்தை கலவரப்பகுதி களுக்கு அனுப்புவதில் மட்டும் ஏன் கால தாமதம் ஏற்பட்டது என்பது பற்றி விசாரிக்காமல் மவுனம் காக்கிறது.

மாநிலத்தில் நிலவிய கலவரச் சூழ் நிலையில், தங்களுக்கு ராணுவத்தின் உதவி பிப்ரவரி 27 அன்றே தேவைப் படலாம் என்று மாநில அரசு ராணுவத் திற்கு எச்சரித்துவிட்டது என்பதை சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் மாநில அரசுக்கு ஆதரவான தனது குறிப்பில் தெரிவிக்கிறார். மாநி லத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானியிடமும் மோடி பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 28-2-2002 அன்று ஒரு தொலைப்பதிவிக் கடிதமும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 - மார்ச் 1 இரவு நேரத்தில் ராணுவ வீரர்கள் அகமதாபாத்துக்கு வந்து சேரத் தொடங்கிவிட்டனர். ராணு வத்தை அழைப்பதில் மாநில அரசு மெத்தனமாக இருக்கவில்லை என்பது தெளிவாக மெய்ப்பிக்கப் பட்டுள்ளது என்று ராகவன் முடிக்கிறார்.

என்றாலும், ராணுவம் வந்துவிட்டால் மட்டும் போதாது. அதற்கு மாநில அரசின் ஆதரவும் இருக்க வேண்டும். மார்ச் 1 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில்தான் மோடி அரசு ராணுவத் தினரை எங்கே அனுப்பப்படவேண்டும் என்பதை முடிவு செய்தது. அதற்குள் பெருமளவிலான பயங்கரம் நேர்ந்து விட்டது. வந்த ராணுவ வீரர்களை கலவர இடங்களுக்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதத்தை, மெத்தனத்தை மட்டும் விசாரணைக் குழு அறிக்கை பதிவு செய்துள்ளதே அன்றி, அதனைப் பற்றி எந்தக் கருத்தும் கூறாமல் மவுனம் காத்தது.


நன்றி: தெகல்கா, 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

http://viduthalai.in/new/page-2/3920.html 

No comments:


weather counter Site Meter