Pages

Search This Blog

Friday, February 18, 2011

குஜராத் கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

மாற்றுவது அரசின் உரிமை என்கிறது சிறப்பு விசாரணைக் குழு   - 7

கலவரங்களுக்கு ஆதரவாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு எவ்வாறு பரிசுகள் அளிக்கப்பட்டன என்பதை மட்டும் சிறப்பு விசாரணைக் குழு பதிவு செய்து இருக்கவில்லை. அதிர்ச்சி தரத்தக்க பல வழக்குகளில், நேர்மை யான காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்ததற்காக உடனடி யாக, வேறு தக்க காரணங்களின்றி தண்டிக்கப்பட்டது ஓர் எச்சரிக்கை செய் தியை அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதாக இருந்தது.  அரசு தவ றான நோக்கம் கொண்டிருந்தமைக்கு இது அடையாளம் இல்லையென்றால், வேறு எதனைத்தான் கூறமுடியும்?

1991 பேட்ச் அய்.பி.எஸ். அதிகாரி யான ராகுல் சர்மாவின் வழக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். 2002 இல் பவநகர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது, மத உணர்வுகளைத் தூண்டிவிட்ட இந்து மதத் தலைவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்தி, பாராட்டத் தக்க செயலை அவர் செய்தார். 

இந்து கலவரக் கும்பல் ஒன்று  ஒரு மசூதியை எரிக்க முயன்றபோது, தான் தடுத்து நிறுத்தியதாகவும், பல டஜன் முஸ்லிம் குழந்தைகளை அதனால் காப்பாற்ற முடிந்தது என்றும், அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்துதான் மாற்றப்பட்டதாக வும் ராகுல் சர்மா சிறப்பு விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார். அமைச்சர் ஜடாபியா தன்னை அழைத்துப் பாராட் டியபோது, காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்களை விட அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் இறந்தது முறையற்றது என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

1989 பேட்ச் அய்.பி.எஸ். அதிகாரி யான விவேக் சிறீவத்சவா குட்ச் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த போது, ஒரு முஸ்லிம் குடும்பத்தைத் தாக்கிய தற்காக பா.ஜ.க. தலைவர் ஒருவரைக் கைது செய்ததற்காக மாற்றம் செய்யப் பட்டார்.

உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களிலிருந்து தனக்கு சில தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், இந்த வழக்கின் விவ ரத்தைக் கேட்டதுடன், குற்றம் சாற்றப் பட்டவர்களுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் உள்ளனவா என்றும் கேட்கப் பட்டதாகவும், போதுமான சாட்சியங்கள் உள்ளன என்று தான் கூறியதாகவும் சிறீவத்சவா தெரிவித் தார் என்று சிறப்பு விசாரணைக் குழுவி அறிக்கை தெரிவிக்கிறது. 2002 மார்ச் கடைசி வாரத்தில் சிறீவத்சவா மாற்றப்பட்டு, அகமதாபாத் வட்ட மது விலக்கு துணை ஆணையராக நியமிக்கப் பட்டார்.

மற்றொரு  அய்.பி.எஸ். அதிகாரியான ஹிமான்சு பட், பனஸ்காந்தா மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தவர் 2002 மார்ச்சில் மாற்றப்பட்டு காந்திநகர் மாநிலப் புலனாய்வுத் துறையில் நியமிக்கப்பட்டார். கலவரக் கும்பலுக்கு உதவி செய்த ஓர் உதவி ஆய்வாளருக்கு எதிராக அவர் நடவடிக்கை மேற்கொண்டதே இதன் காரணம்.

அந்த உதவி ஆய்வாளருக்கு முக்கியமான அரசியல் தொடர்புகள் இருந்ததால், அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டது மட்டுமன்றி, அவர் முன்பிருந்த காவல் நிலையத்திலேயே பணி செய்ய அனுமதிக்கப்பட்டார். அதன் பின்பு, பட் வெளி நாடு சென்று அங்கேயே தங்கிவிட்டார். சிறப்பு விசாரணைக் குழு வினரால் அவரை விசாரிக்க முடிய வில்லை.

கலவரங்களின்போது குச்-பூஜ் எல்லைப் பகுதிகளில் உதவி காவல் துறைத் தலைவராக இருந்த சதீஷ் சந்திர வர்மா, கலவரங்களில் ஈடுபட்டு இரண்டு முஸ்லிம்களைக் கொன்றதற்காக சங்கர் சவுத்திரி என்னும் பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினரைக் கைது செய்ய உத்தர விட்டார். உடனடியாக அவர் மாற்றப்பட்டு, ஜுனாகட் சிறப்பு ரிசர்வ் காவல் துறை பயிற்சி நிலைய முதல்வராக நியமிக்கப் பட்டார்.

இந்த அதிகாரிகளில் எவர் ஒருவரும் இம் மாறுதல்களால் தாங்கள் பாதிக்கப் படவில்லை என்று தெரிவித்ததாக விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.  மாறுதல் என்பது அரசின் உரிமை என்று அவர்கள் அனை வருமே கூறினார்களாம். இந்த மாற் றங்கள்  வழக்கத்திற்கு மாறானவையாக சந்தேகத்திற்கிடமானவை யாக இருந்தன என்று குறிப்பிட்டதோடு மல்ஹோத்ரா நிறுத்திக் கொண்டார். ராகவனும் அவற்றின் முரண்பட்ட, கேள்விக்குரிய தன்மையைப் பற்றி ஒப்புக் கொண்டுள் ளார். ஆனால், அவர்கள் இருவரில் எவர் ஒருவரும் கலவரங்களில் மாநில அரசுக் குப் பங்கு இருந்ததா என்பதைக் கண் டறிய மேற்கொண்டு விசாரணை நடத் தும் நியாயமான முடிவுக்கு வரவில்லை.

கலவரங்களுக்கு உதவி செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு செல் வாக்கும், ஆதாயமும் உள்ள பதவிகள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்ளும் சிறப்பு விசாரணைக் குழு இதன்மீது மேலும் விசாரணை நடத்துவது என்ற தர்க்க ரீதியான முடிவை மேற்கொள்ள மட்டும் தவறி விட்டது.

தங்கள் கடமைகளைச் செய்த நியாயமான காவல்துறை அதிகாரி களின் இறக்கைகள், மோடி அரசால் ஒடிக்கப்பட்டன. அதே நேரத்தில், தாங்கள் அணிந்திருந்த சீருடையையும், மக்கள் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் கேவலப்படுத்திய தங்களது நியாயமான கடமைகளைச் செய்யத்  தவறிய அதிகாரிகளுக்கு பாராட்டிப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அகமதாபாத் இரண்டாம் பகுதியில் இணை காவல் துறை ஆணையராக இருந்த எம்.கே.டாண்டனின் பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரங் களுக்குப் பிறகு அவர் சூரத் வட்ட காவல்துறைத் தலைவராக நியமிக்கப் பட்டார். 2005 ஜூலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவராக மாநிலக் காவல்துறை தலைமை அலுவ லகத்தில் நியமிக்கப்பட்டார். டாண்டன் மாநிலம் முழுவதும் அதிகார எல்லை கொண்ட இந்தப் பதவியிலிருந்துதான் ஓய்வு பெற்றார்.

மிகவும் பயங்கரமான படுகொலைகள் நடந்து கொண்டிருந்த குல்பர்க் சொசைடி, நரோடா காவுன், நரோடா பாடியா ஆகிய இடங்களிலிருந்து பாது காப்பு கேட்டு வந்த அவசர அழைப்புகள் பற்றி டாண்டன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்தக் கலவர இடங்களுக்குச் செல்லாமல், அகமதாபாத் நகரின் வேறு பகுதிகளில் போலியான வழக்குகளைப் பதிவு செய்துவிட்டு தானும், தனது அலுவலர்களும் அந்த இடங்களுக்குச் சென்று இருந்ததை நியாயப்படுத்தினார். நடோடா காவுன், நரோடா பாடியா பகுதிகளில் படுகொலைகளை ஏற்பாடு செய்து நடத்திய ஜெய்தீப் படேல் மற்றும் மாயாபென் கோட்னானி ஆகியோருடன் டாண்டன் கலவரங்களின் போது தொலைபேசியில் தொடர்பு கொண்டி ருந்தார் என்பதையும் சிறப்பு விசா ரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.

டாண்டனின் உதவி அதிகாரியான பி.பி.கோண்டியா என்பவர் அப்போது நான்காவது வட்ட துணை ஆணைய ராக இருந்தார். அவர் இப்போது அதி காரம் மிகுந்த பதவியான மாநில ரகசியப் பிரிவு காவல்துறைத் தலைவர் பதவியில் இருக்கிறார். மல்ஹோத்ரா கூறுகிறார்: நரோடா பாடியாவில் கலவர நிலை மிகவும் மோசமாகவும், கட்டுக்குள் அடங்காமலும் இருந்த பிற்பகல் 2.20 மணி அளவில் கோண்டியா பாதிக்கப்பட்டவர்களின் தொலைப்பேசி அழைப்புகளை ஏற்று கலவரப் பகுதிகளுக்குச் செல்லாமல்,  தனது தலைமையிடத்தை விட்டு வேறு இடத்திற்கு ஓடிப்போய் விட்டார் என்றே கூறவேண்டும்.

இந்த காவல்துறை அதிகாரிகள் மட்டுமன்றி, களங்கம் நிறைந்த செயல் களைச் செய்த இதர அதிகாரிகளும் கூட அரசின் உயர்ந்த  ஆதரவைப் பெற்றிருந்தனர்.அவர்களுள் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி.சுப்பாராவ், முன்னாள் உள்துறை தலைமைச் செயலர் அசோன் நாராயண், மோடியின் முன்னாள் தனிச் செயலாளராக இருந்த பி.கே. மிஸ்ரா, அகமதாபாத் மாநகரக் காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே, அப்போது வடோதரா வட்ட காவல் துறைத் தலைவராக இருந்த தீபக் ஸ்வரூப்,  முன்னாள் உள்துறைச் செய லாளர் நித்யானந்தம், தற்போதைய வடோதரா மாநகரக் காவல் துறை ஆணையர், என்கவுண்டர் கொலை களை ஏற்பாடு செய்ததற்காக தற்போது சிறையில் இருக்கும் டி.ஜி.வன்ஜரா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

பெஸ்ட் பேக்கரி வழக்கு விசாரணை நடந்தபோது அப்போதைய வடோதரா மாநகர இணை மாநகரக் காவல்துறை ஆணையராக இருந்த கே.குமாரசாமி, வடோதரா மாநகர உதவி ஆணையராக இருந்த ராம்ஜிபாய் பார்கி ஆகியோர் நீதியை வளைக்க முயற்சி செய்ததற்காக பம்பாய் பெருநகர கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதியால் கடுமையாகக் குற்றம் சாற்றப்பெற்று கண்டனமும் செய்யப்பட்டனர். இவ்வாறு முஸ்லிம் மக்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு, வெறுப்பு காட்டப்பட்டு கொடுமைகள் நடத்தப் பட்டமைக்கு தேவைக்கு அதிகமான இத்தகைய சாட்சிகளைப் பற்றி  சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையில் பதிவு செய்து  இருந்தபோதும், மாறுதல் களும், நியமனங்களும் அரசின் ஏகபோக உரிமை என்று சாக்கு கூறி முடித்துக் கொண்டது.
நன்றி: தெகல்கா, 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
http://viduthalai.in/new/page-2/3724.html

No comments:


weather counter Site Meter