Pages

Search This Blog

Wednesday, February 16, 2011

நாய்க்கும் நாய்க்கும் கலியாணமாம்! சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் எப்போதாம்?

காதலர் தினத்தைக் கொச் சைப்படுத்துவதற்காக இந்து முன் னணியினர் நாய்க்கும் நாய்க்கும் சென்னையில் புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தெருவில் விவாஹ சுப முகூர்த்தம் (கல்யாணம்) செய்து வைத்தார்களாம். நாய் களைக் குதிரைகள்மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனராம்.

நாய் என்றால் அலட்சியம், கேவலம் என்று நினைத்துக் கல்யாணம் செய்து வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்பு வோமாக.

நாய் என்பது இந்து மதத் தத்துவப்படி வேதத்தின் உருவ மாகும். பைரவனின் வாகன மாகும்.... (சவுநக முனிவர் நாய்க்குத்தான் பிறந்தார் என்பது கூடுதல் தகவல்)

நாய் மட்டுமா? நேரம் கிடைக் காத காரணத்தால் கழுதைக்கும் கழுதைக்கும்கூட கல்யாணம் கட்டி வைத்திருப்பார்கள். கார ணம், காங்கேய முனிவர் கழுதைக்குப் பிறந்தவராக்கும். தவளைக்குக்கூட ஜாம் ஜாமென்று வேத மந்திரங்கள் முழங்க, கன்னியாதானம் (கல்யாணம்) செய்து வைத்திருப்பார்கள். தவளை என்றால் சாதாரணமா? மாண்டவியர் தவளைக்குத் தானே பிறந்தார்!

நரி சிக்கியிருந்தால் நரிக்கும் நரிக்கும்கூட புரோகிதரை அழைத்து, அக்னி குண்டம் வளர்த்து, சப்தபதி வைத்து தாரா முகூர்த்தம் நடத்தி வைத்திருப் பார்கள். காரணம் ஜம்புக முனி வர் இந்து மத புராணப்படி ஜம்புக முனிவர் நரிக்குப் பிறந்தவராக்கும்.

கோட்டான் கிடைத்திருந்தால் கோட்டானுக்கும் கோட்டானுக் கும் கோலாகலமாக பாணிக் கிரகம் செய்து வைத்திருப்பார்கள். காரணம் கணாதர் முனிவர் கோட்டானுக்குப் பிறந்த புத்திரர் ஆயிற்றே!

கரடிக்கும் கரடிக்கும் கலி யாணம் நடத்தி, சாந்தி முகூர்த் தமும் நடத்தி இருப்பார்கள். கரடி கையில் சிக்கினால் உயிரைக் காவு கொடுக்க நேருமோ என்ற பயம்தான்.

கரடி என்றால் சாதாரணமா? ஜாம்புவந்தர் முனிவர் கரடிக்கு க்ஷணித்தவர் ஆயிற்றே!
குதிரைக்கும் குதிரைக்கும் குஷியோடு கல்யாண மண்ட பத்தை வாடகைக்கு எடுத்துக்கூட நடத்தியிருப்பார்கள். இத்தாண்டு நடத்தாவிட்டால் என்ன, அடுத்த ஆண்டு நடத்தினால் போச்சு. குதிரைக்குப் பிறந்த அஸ்வத் தாமனைக் கவுரவிக்க வேண் டாமா?

கிளிக்கும் கிளிக்கும்கூட கில்ட்டுக் கலரில் பத்திரிகை அடித்து கின்னரர், கிம்புருடர், அட்டதிக்கு பாலர்கள் சாட்சியாக கல்யாணம் செய்யலாமே. சுகர் முனிவர் கிளியின் சேஷ்ட புத்திரனாயிற்றே!

காதலர் தினத்தை அவமானப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம் நடத்தியிருந்தால் அது இந்து மதத்தைக் கேவலப் படுத்துவதாகும். இந்து மக்களின் மத உணர்வையும் புண்படுத்து வதாகும். இந்து முன்னணிக்காரர் களும் தி.க.வில் சேர்ந்து விட் டார்களோ!

இதனை நாங்கள் சும்மா விடப் போவதில்லை என்று விசுவ ஹிந்து பரிஷத்காரர்கள் போராட் டம் நடத்தினாலும் நடத்தலாம். யார் கண்டது?

அது சரி, சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் சிங்காரம் செய்து எப்பொழுது திருக்கல் யாண உற்சவத்தை நடத்தப் போகிறார்களாம்!

நல்ல விருந்து கிடைக் கும் அல்லவா! (விருந்து பக்தர் களுக்கா - சிங்கத்துக்கா?)
பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

கருஞ்சட்டை
http://viduthalai.in/new/e-paper/3479.html 

No comments:


weather counter Site Meter