Pages

Search This Blog

Thursday, February 17, 2011

குஜராத் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச்சர்கள்

அதன் நோக்கம் என்ன?

தீவிரவாதத் தாக்குதல் அல்லது மதக் கலவரங்கள் போன்ற நெருக்கடி நேரங்களில், காவல்துறை கட்டுப்பாட்டு அறை ஒரு போர் அலுவலகம் (War Office) போன்று இருப்பதாகும். கலவரப் பகுதிகளுக்குக் காவல்துறையினரை அனுப்புவது, வெவ்வேறு இடங்களில் உள்ள காவல்துறைக் குழுக்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வைப்பது, சம்பவ இடங்களிலிருந்து அறிக்கை களைப் பெறுவது ஆகிய பணிகளை காவல்துறை செய்வது இந்தக் கட்டுப் பாட்டு அறைகளில்தான்.

2002 பிப்ரவரி 28 ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் கலவரங்கள் வெடித்தவுடன், தனது இரு அமைச்சர்களையும் அவர்களது அலுவலர்களையும் காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் மோடி இருக் கச் செய்த செயல் சட்டத்தினை மீறி யதும், மிகுந்த கருத்து வேறுபாட்டுக்கு இடம் கொடுப்பதுமாகும்.

அகமதாபாத்தின் நரோடா காவுன், நரோடா பாடியா மற்றும் குல்பர்கா சொசைட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி அளவில் தொடங்கிய கலவரங் கள் இரவு எட்டு மணி வரை தொடர்ந்து நடைபெற்றன. பாதிக்கப்பட்டவர்கள் தங்களைப் பாதுகாக்கக் கோரி காவல் துறையினரைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டபோதும், காவல் துறை அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது. இத்தகைய சூழ்நிலைகளில், காவல்துறைக் கட்டுப் பாட்டு அறையில் இரண்டு அமைச்சர் கள் இருந்தது பெருத்த சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது.

காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச்சர்கள்

சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையின் 30 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது: புலனாய்வுத் துறை யின் துணை ஆணையராக இருந்த சஞ்சீவ் பட் 28-2-2002 காலை முதல மைச்சர் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில், காவல்துறைத் தலைவர் மற்றும் புலனாய்வுத் துறை கூடுதல் தலைவர் ரெய்கருடன் (ரெய்கர் தனது விடுப்பை ரத்து செய்துவிட்டு பணிக்கு 28 ஆம் தேதி காலையில்  திரும்பிவிட்டார்) தானும் கலந்து கொண்டதாகக் கூறி னார்.

கூட்டம் முடிந்தபிறகு போலீஸ் பவனின் இரண்டாவது மாடியில் உள்ள தனது அலுவலகத்திற்கு காலை 11 மணி அளவில் திரும்பிய சிறிது நேரத்திற்குப் பின், அதே கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த காவல்துறைத் தலைவரின் அலுவலகத்திற்கு அவரைச் சந்திக்கச் சென்றதாகவும், முதல்வர் கூட்டத்தின் முடிவில் அறிவுறுத்தப்பட்டபடி குஜராத் மாநில அமைச்சர்கள்  அசோக் பட் மற்றும் ஜடேஜா இருவரும் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்து அங்கு உட்கார்ந் திருந்ததைக் கண்டதாகவும் சஞ்சீவ் பட் கூறினார். புலனாய்வுத் துறைத் தலைவர் ராய்கரும், சட்டம் - ஒழுங்கு பிரிவின் தலைவர் மணிராமும் அப்போது அங்கி ருந்ததாகவும் அவர் கூறினார்.

காவல் துறைத் தலைவருடன் பேசிவிட்டு, தேநீர் அருந்தி விட்டு பட் தன் அலுவலகத் திற்குத் திரும்பி விட்டார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சில ஆவணங் களைப் பெறுவதற்காக சஞ்சீவ் பட் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற போது, அமைச்சர் ஜடேஜாவும் அவரது அலுவலர் களும் கட்டுப்பாட்டு அறையில் இருந் தனர்.

இது ஒரு சங்கடமான கேள்விக்கு வழி வகுத்தது. மேற்கண்ட சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் உண்மைதான் என்று கண்டறிந்த விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா, காவல்துறைக் கட்டுப் பாட்டு அறையில் அமைச்சர் ஜடேஜா இருந்ததை மெய்ப்பிப்பதற்கு அவரது சாட்சியத்தைப் பயன் படுத்திக் கொண் டார். 28-2-2002 காலை முதல் அமைச் சர் கூட்டிய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டார் என்று அவர் கூறிய தையும் மல்ஹோத்ரா மறுக்கவில்லை.

அப்படி இருக்கும்போது, 27-2-2002 அன்று முதல் அமைச்சர் கூட்டிய கூட்டத் தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதாகக் கூறியது எவ்வாறு ஏற்றுக் கொள்ளப் படாமல் மறுக்கப்பட்டது. 28 ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு பட் பணியில் மூத்தவர் என்றால், 27 ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளுவதில் மட்டும் அவர் எப்படி பணியில் இளையவர் என்று கூறப்பட்டார்.

அவரது மூத்த அதிகாரி பணிக்குத் திரும்பிய பிறகும், 28 ஆம் தேதி கூட்டத் தில் பட் கலந்து கொண்டதை வைத்துப் பார்க்கும் போது, 27 ஆம் தேதி தனது மேலதிகாரி ராய்கர் விடுப்பில் இருந்த தால், அங்கிருந்த அடுத்த மூத்த அதி காரியான  தான் முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதாக பட் கூறியது அதிக நம்பிக்கைக்குரியதாகவே காணப்படு கிறது.

அதிக குழப்பம்!

இதில் இன்னமும் அதிக குழப்பம் விளைவித்தது என்ன வென்றால், காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர் இருந்ததையே உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளரான அசோக் நாராயண் மறுத்ததுதான். சிறப்பு விசாரணைக் குழுவிடம் காவல் துறைத் தலைவர் சக்ரவர்த்தி கூறிய தாவது: 

28-2-2002 அன்று அமைச்சர் ஜடேஜா சில தகவல்களைப் பெறுவதற் காக மாநிலக் கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் இருப்பார் என்று  என்னிடம் அசோக் நாராயண் கூறினார்.

அது போலவே அமைச்சர் அசோக் பட் அகமதாபாத் மாநகரக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இருப்பார் என்றும் அசோக் நாராயண் என்னிடம் கூறினார்.

ஜடேஜா நகர வீட்டு வசதி அமைச்ச ராகவும், அசோக் பட் சுகாதார அமைச்ச ராகவும் அச்சமயத்தில் இருந்தனர்.  காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருப்பதற்கு அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, சக்ரவர்த் திக்கு இது போன்ற அறிவுரைகள் வழங் கியதையே அசோக் நாராயண் மறுத் தார்.

அகமதாபாத்  காவல்துறை ஆணை யராக இருந்த பி.சி.பாண்டேயும் மாநக ரக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறை யில் அசோக் பட் தொடர்ந்து இருந்ததை மறுத்தார். அமைச்சர் 10 அல்லது 15 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்தார் என்று அவர் கூறினார்.

ஆனால் அமைச் சர் ஜடேஜாவைக் கேள்வி கேட்டபோது,  மோடியின் உள்துறை உதவி அமைச்ச ராக இருந்த ஜடாபியாதான் தன்னை காவல் துறைக் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும்படி கூறியதாகத் தெரிவித்தார்.

(ஜடாபியா தற்போது மோடியின்  ஆதரவை இழந்துவிட்டு, தனியாக ஒரு கட்சி துவங்கி உள்ளார். அதனால் அனைத்து குற்றத்தையும் அவர் மீது சுமத்துவது மோடிக்கும், பா.ஜ.கட்சிக்கும் எளிதாகப் போய்விட்டது.)

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, குற்றத்தை மற்றவர் மீது தள்ளிவிடும் முயற்சியில் சக்ரவர்த்தியும், அசோக் நாராயணும், பாண்டேயும் பொய்களைக் கூறியும், ஒருவர் கூறுவதை மற்றவர் மறுத்தும் கூறியது தெளிவாகத் தெரிகிறது.

காவல்துறை அதிகாரியின் எதிர்ப்பு

நடந்தவைகளைக் கூறுவதில் சஞ்சீவ் பட் ஒருவர் மட்டும்தான் தொடர்ந்து ஒரே மாதிரி கூறி வந்துள்ளார் என்று தோன் றுகிறது. அமைச்சர்கள் கட்டுப்பாட்டு அறைகளில் இருப்பதைப் பற்றிய தனது ஆட்சேபத்தை காவல் துறைத் தலைவர் சக்ரவர்த்தியிடம் தான் பதிவு செய்த தாகவும், அவரது அனுமதியுடன் அமைச் சரையும் அவரது அலுவலர்களையும் அதே கட்டடத்தில் இருந்த காலி அறை ஒன்றுக்கு தான் மாற்றியதாகவும் விசா ரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அன்றும் அதற்கடுத்த இரண்டு மூன்று நாட்களில் ஜடேஜாவின் அலுவலர்கள் சிலர் மாநில புலனாய்வுத் துறையிட மிருந்து சில விவரங்களைக் கேட்டது பற்றி தனக்கு நினைவிருப்பதாகவும் பட் கூறினார். (இவ்வாறு பட் கூறியதை சக்ரவர்த்தி மறுக்கவில்லை).

மிகவும் முக்கியமான கேள்வி என்ன வென்றால்,  எதற்காக அமைச்சர்களும், அவர்களின் அரசியல் அலுவலர்களும், எங்கே எவ்வளவு காவல்துறையினர் கலவரத்துக்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற உணர்ச்சி மிகுந்த தகவல்களை ஏன் கேட்டறிந்தனர் என்பதுதான்.

அங்கங்கே இருக்கும் கலவரக்காரர் களுக்கு இந்த தகவல்கள் அனுப்பப்பட் டனவா? எப்படியிருந்தாலும், காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் நகர்ப்புற வீட்டு வசதித்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் கூறுகிறார்:

2002 பிப்ரவரி 28 ஆம் தேதியிலிருந்து ஒரு சில நாட்கள் இந்த இரண்டு அமைச்சர்களும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செயல்பட்டிருக்கிறார்கள் என் பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக் கப்பட்டுள்ளது என்றாலும், காவல் துறையின் பணிகளில் அவர்கள் குறுக் கிட்டனரா என்பதைச் சுட்டிக்காட்டும் தகவல்கள் ஏதும் இல்லை.

தான் கண்டுபிடித்தவைகளைக் கொண்டு மேலும் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு எவ்வாறு தவறிவிட்டது என்பதைத் திரும்பத் திரும்பக் கூறுவதில் பயன் ஏதுமில்லை. அதற்கு மாறாக, ஒரு மாறுபட்ட கேள்வியைக் கேட்க வேண்டிய நேரமிது.  நாட்டின் ஒரு மோசமான மதக் கலவரப் படுகொலைகளைச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறியும் வழி இதுதானா?

கலவரங் களில் ஏதேனும் ஒரு வழியில் தொடர்பு கொண்டிருந்த காவல்துறை அலுவலர் களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதன் மூலமாக மட்டுமே, அரசே முன்னின்று நடத்திய வன்முறைப் படு கொலைகளை பற்றிய ஒரு மாபெரும் சதித் திட்டத்தை வெளிக் கொண்டு வர முடியுமா?

நன்றி: தெகல்கா, 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

No comments:


weather counter Site Meter