Pages

Search This Blog

Monday, February 28, 2011

குஜராத் கலவரம்-காவல்துறை அதிகாரி சிறீகுமாரின் சாட்சியத்தை சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை

குஜராத் 9.4.2002 அன்று ஆர்.பி.சிறீகுமார் மாநில புலனாய்வுத் துறை கூடுதல் காவல்துறைத் தலைவ ராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த சிலரை தீர்த்துக்கட்டுவது உள்ளிட்ட மோடியின் சட்டத்திற்குப் புறம்பான, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான அறிவுரைகளின் படி தான் நடந்து கொள்ளாததால், மோடியின் வெறுப்புக்குத் தான் ஆளான தாக அவர் கூறினார். சிறீகுமார் அளித்த ஆவண ஆதாரங்களில், கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ளவையும் அடங்கும்.

1) அகமதாபாத் நகரில் தற்போது நிலவும் சமூக நிலவரம் என்ற அறிக் கையைத் தயார் செய்து அப்போதைய உள்துறை கூடுதல் தலைமைச் செய லாளராக இருந்த அசோக் நாராயணி டம் 24.4.2002 அன்று பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள அளிக்கப் பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்த முக்கியமான செய்திகள்:

அ) குற்றவியல் நீதித்துறை நடை முறையின்மீது கலவரங்களால் பாதிக் கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்து விட் டனர். பா.ஜ.க. மற்றும் வி.இ.ப. உறுப் பினர்களுக்கு எதிராக புகார்களை அளிக்க விடாமல் அவர்களைக் காவல் துறையினர் மிரட்டினர்.

ஆ) புகார்களில் அளிக்கப்பட்ட குற்றச் சாற்றுகளை காவல்துறை அதி காரிகள் நீர்த்துப் போகச் செய்ததுடன், முதல் தகவல் அறிக்கைகளைத் தனித் தனியாகப் பதியாமல், ஒன்றுக்கும் மேற் பட்டவற்றை ஒன்றாக இணைத்தனர்.

இ) முஸ்லிம்களுடன் வியாபாரம் செய்யக்கூடாது என்று வி.இ.ப. மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் வியாபாரிகளை வற்புறுத்தினர்.

ஈ) மத உணர்வுகளைத் தூண்டி விடும் அளவுக்கான செய்திகள் அடங் கிய பிரசுரங்களை வி.இ.ப. அமைப்பினர் விநியோகித்து வந்தனர்.

உ) காவல் நிலையங்களில் இருந்த ஆய்வாளர்கள் மேலதிகாரிகளின் அறி வுரைகளைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு மாறாக பா.ஜ.க. தலைவர்களின் நேரடியான வாய்மொழி அறிவுரை களைப் பின்பற்றினர்.

இந்த அறிக்கை உண்மையானது என்பதைக் கண்டு கொண்டது மட்டு மன்றி, மற்ற சில அதிகாரிகள் தயாரித்த அறிக்கைகள் சிறீகுமார் அறிக்கை யுடன் ஒத்துப் போவதாகவும் சிறப்பு விசாரணைக் குழு கண்டுகொண் டுள்ளது.

இது பற்றி சிறப்பு விசாரணைக் குழு கேட்டபோது, அந்த அறிக்கையை மோடியிடம் வைத்தேனா இல்லையா என்பது எனக்கு நினைவில்லை என்று அசோக் நாராயண் கூறினார்.

நீறு பூத்த நெருப்பு

2) குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மத உணர்வுகள் இன்னும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருப்பதால், மோடி மேற்கொள்ள உத்தேசித்திருந்த ரத யாத்திரைக்கு எதிராக மற்றொரு அறிக்கையை 25.6.2002 அன்று சிறீகுமார் அனுப்பி வைத்தார். அவரது பரிந்துரையை மோடி அரசு நிராகரித்துவிட்டது.

3) மக்களிடையே மத உணர்வுகள் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருவதை எடுத்துக்காட்டி, நியாயமற்ற காவல்துறை நடவடிக்கைகள் பற்றியும், கண்துடைப்பு விசாரணை பற்றியும் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து புகார் செய்து வருவதை எடுத்துக்காட்டியும் 20.8.2002 அன்று சிறீகுமார் மற்றொரு அறிக்கையைத் தயார் செய்து அனுப் பினார்.

இந்த அறிக்கை மீது அரசு நட வடிக்கை எடுக்கவில்லை என்று அசோக் நாராயண் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்புக் கொண்டார்.

4) நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒட்டி நிலவும் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலை பற்றிய மற்றொரு அறிக்கையை 28.8.2002 அன்று சிறீகுமார் தயாரித்து அளித்திருந்தார். அந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தன்னால் நினைவுபடுத்திக் கூற முடியவில்லை என்று அசோக் நாராயண் கூறினார்.

5) பின்னர் நானாவதி-ஷா கமிஷன் முன் சிறீகுமார் மூன்று பிரமாண வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். சபர்மதி ரயில் எரிப்பைத் தடுக்க மாநில மற்றும் மத்திய புலனாய்வுத் துறைகள் எவ்வாறு தவறிவிட்டன என்பதை முதல் பிரமாண வாக்குமூலம் விவரித்தது. மாநிலப் புலனாய்வுத் துறையின் அறிக்கை களை மோடி அரசு வேண்டுமென்றே கவனிக்காமல் புறக்கணித்தது என்று இரண்டாவது பிரமாண வாக்குமூலம் குற்றம் சாற்றியது.

சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னதாக நடத்துவதற்கு ஏற்றபடி மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலையைப் பற்றி ஆதரவான அறிக்கை அளிக்கும்படி மோடியின் அதி காரிகள் எவ்வாறு தன்னை நிர்ப்பந்தித் தனர் என்பதை மூன்றாவது பிரமாண வாக்குமூலத்தில் அவர் பதிவு செய்திருந் தார்.

அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி கே.எம்.லிங்கோத் தலைமை யில் 9.8.2002 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக மாநில உள்துறை அதி காரிகளை அவர் கண்டித்த நிகழ்ச்சி யையும் சிறீகுமார் விவரித்திருந்தார். 16.8.2002 பிறப்பித்த ஓர் ஆணையில் லிங்கோத் குறிப்பிட் டிருந்தார்:

182 சட்டமன்றத் தொகுதிகளில் 154 தொகுதிகளைச் சேர்ந்த 151 நகரங் களும், 993 கிராமங்களும் கலவரங் களால் பாதிக்கப்பட்டிருந்தன என்று கூடுதல் காவல்துறைத் தலைவர் சிறீகுமார் தேர்தல் ஆணையத்தின் முன் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும், சட்டத்திற்குப் புறம்பான, அரசமைப்பு சட்டத்திற்கு மாறான செயல் களைச் செய்யும்படி மோடியும் அவரது அதிகாரிகளும் தனக்கு வாய்மொழி ஆணைகளைப் பிறப்பித்ததாகவும் சிறீகுமார் தனது பிரமாண வாக்குமூலத் தில் குற்றம் சாற்றியிருந்தார்.

இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணைகளில் சில:

அ) காங்கிரஸ் தலைவர்கள், மோடி யின் போட்டியாளர்கள், ஹிரேன் பாண் டியா போன்ற பா.ஜ.கட்சிக்கு உள்ளேயே இருப்பவர்கள் ஆகியோரின் தொலைப் பேசிப் பேச்சுகளைப் பதிவு செய்வது.

ஆ) மோடியின் அரசியல் நலன் களுக்கு ஏற்றவாறான அறிக்கைகளை அளித்தல்.

இ) மோடியின் ரத யாத்திரைக்குக் குந்தகம் விளைவிக்க முயலும் முஸ்லிம் களை ஒழித்துக்கட்டுவது.

ஈ) மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்த குஜராத் காவல்துறைக்கு உதவி செய்து வந்த மத்திய ராணுவப் படைத் தலைவர் ஜஹுருடீன் ஷா-வின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்தி களைத் துப்பறிந்து கூறுவது.

சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய வாய்மொழி ஆணைகளைப் பதிவு செய்யும் பதிவேடு ஒன்றையும் சிறீகுமார் பராமரித்து வந்தார். ஆனால் சிறப்பு விசாரணைக் குழுவோ, சிறீகுமார் பராமரித்து வந்த பதிவேடு உள்நோக்கம் கொண்டதாகத் தோன்றுவதால், அதன் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடி யாது என்பதாலும், சிறீகுமாரின் வாய் மொழி சாட்சியத்தை வேறு எந்த ஒரு சுதந்திரமான சாட்சியும் உறுதிப்படுத்த வில்லை என்பதாலும், அதனை நம்பிக் கைக்குகந்த ஓர் ஆவணமாகக் கருத முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளது.

சுதந்திரமான சாட்சியங்கள் என்பதன் மூலம் அசோக் நாராயண், கே.சக்ரவர்த்தி, பி.சி.பாண்டே போன்ற அதிகாரிகளை சிறப்பு விசாரணைக் குழு குறிப்பிடுகிறது.

இந்த அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் அதிகாரமும் செல்வாக்கும் மிகுந்த பதவிகளை மோடி பரிசாக அளித்தார் என்பதால், அவர்கள் நேர்மையாகப் பேசுவதாகத் தோன்ற வில்லை என்று சிறப்பு விசாரணைக் குழுவே ஒப்புக் கொண்டுள்ளது.

நானாவதி-ஷா கமிஷன் முன்னி லையில் தான் எவ்வாறு சாட்சியம் அளிக்கவேண்டும் என்று பயிற்சி அளித்து, அச்சுறுத்திய உள்துறைச் செயலாளர் ஜி.சி.முர்மு, உள்துறை அதிகாரி தினேஷ் கபாடியா மற்றும் மாநில அரசின் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியா ஆகியோரின் பேச்சுகளைப் பதிவு செய்த ஒலிநாடாவையும் தனது மூன்றாவது பிரமாண வாக்குமூலத்துடன் சிறீகுமார் அளித்திருந்தார்.

இந்த ஒலிப்பதிவு உண்மையானது தான் என்று சிறப்பு விசாரணைக் குழு கண்டு கொண்டபோதும், பதவி உயர்வு அளிப்பதில் தனது பணிமூப்பைப் புறக் கணித்த பின்னர் ஏற்பட்ட கடுங்கோபத் தினால்தான் சிறீகுமார் இந்த ஒலி நாடாவை அளித்துள்ளார் என்று விசா ரணைக் குழு குற்றம் சாற்றியுள்ளது.

மோடி அரசின் மத மற்றும் அரசியல் செயல் திட்டங்களுக்கு எதிராக சிறீகுமார் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலைப்பாட்டைப் போற்றுவதற்கு சிறப்பு விசாரணைக் குழு தவறிவிட்டது.

மாநிலப் புலனாய்வுத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட தேதியிலி ருந்து ஒன்பது நாள்களுக்குப் பிறகு 18.4.2002 முதல் இந்தப் பதிவேட்டை சிறீகுமார் பராமரித்து வருகிறார். அப் போதைய நிருவாகம் மற்றும் பாதுகாப்பு காவல்துறைத் தலைவர் ஓ.பி. மாத்தூர் அவர்களைக் கொண்டு இந்தப் பதிவேட் டில் சான்றொப்பம் பெறப்பட்டுள்ளது.

நன்றி: தெகல்கா 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

http://viduthalai.in/new/page-2/4410.html 

No comments:


weather counter Site Meter