Pages

Search This Blog

Monday, February 14, 2011

பா.ஜ.க.வின் சிண்டும் சிக்குகிறது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முன்னாள் அமைச்சர் அருண்ஷோரிக்கு சம்மன்

அருண்ஷோரி
2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, பா.ஜனதா முன்னாள் மத்திய அமைச் சர் அருண்ஷோரிக்கு, பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சி.பி.அய். சம்மன் அனுப்பி உள்ளது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட் டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத் தியது.

இந்தப் பிரச்சினை யில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரை முழுமையாக முடக்கின. இந்த புகா ரின் பேரில் கடும் நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று உச்சநீதிமன் றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சி.பி.அய். யும் தீவிர விசாரணை மேற்கொண்டது.

தொலைத் தொடர் புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, டி.பி.ரியாலிட்டி நிறுவன அதிபர் பல்வா மற்றும் தொலை தொடர்புத் துறை உயர் அதிகாரிகள் சிலரை சி.பி.அய். கைது செய்து விசாரணை நடத்தியது. ஆ. இராசாவும், பல்வா வும் தொடர்ந்து சி.பி. அய். காவலில் எடுக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையில் அமைக் கப்பட்ட விசாரணை ஆணையம் அறிக்கை யில், கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டில் வெளிப்படையான முடிவு எடுக்கப்பட வில்லை என்று குற்றம் சாற்றப்பட்டு இருந்தது.

சிக்குகிறது பா.ஜ.க.,

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற தவறான கொள்கை அறி முகப்படுத்தப்பட்டதற்கும் பா.ஜனதா கூட்டணி ஆட்சிதான் காரணம் என்றும் அதில் குறிப் பிடப்பட்டு இருந்தது. ஏற்கெனவே உச்சநீதி மன்றம் 2ஜி அலைக் கற்றை பிரச்சினையில் 2001ஆம் ஆண்டில் இருந்தே விசாரணை நடத்தும்படி உத்தர விட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து, வாஜ்பேயி தலைமை யிலான பா.ஜனதா கூட் டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவி வகித்த அருண்ஷோரி யிடம் விசாரணை நடத்த சி.பி.அய். முடிவு செய்தது.

அதன்படி ஸ்பெக்ட் ரம் முறைகேடு புகார் பற்றி விசாரணை நடத் துவதற்காக பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜ ராகும்படி அருண் ஷாரிக்கு, சி.பி.அய். சம் மன் அனுப்பி உள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்த அருண்ஷோரி, விசாரணையின்போது சில முக்கிய ஆவணங் களை சி.பி.அய்.யிடம் கொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

50 உரிமங்கள் மறைந்த பிரமோத் மகா ஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் ஆகியோர் தொலை தொடர்புத் துறை அமைச்சர்களாக பதவி வகித்தபோது நடை பெற்ற கூட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள் குறித்தும் சி.பி.அய் ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு மாறாக, பார்தி, வோட போன், அய்டியா போன்ற நிறுவனங்களுக்கு 50 உரிமங்கள் வரை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறு வனங்களுக்கு வழங்கப் பட்ட உரிமம் தொடர் பான ஆவணங்கள் குறித் தும் விசாரணை நடத் தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் முறை கேட்டால் பயன் அடைந்தவர்கள் பற்றி யும் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தின் புதிய உத்தரவுப்படி தனது விசாரணை வளை யத்தை சி.பி.அய். மேலும் விரிவுபடுத்தி யுள்ளது. தொழில் அதிபர் அனில் அம்பானியின் ஏ.டி.ஏ.ஜி. குழுமம் உள்பட பல் வேறு நிறுவனங்களின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வரு கிறது.

அனில் அம்பானி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு இது தொடர்பாக சம் மன் அனுப்பப்பட்டு உள்ளது. எங்கள் விசா ரணையின் ஒரு கட்ட மாக பல்வேறு அதிகா ரிகளை விசாரணைக்கு அழைத்து இருப்பதாக சி.பி.அய். செய்தித் தொடர்பாளர் வினிதா தாகூர் நேற்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். கடந்த வாரத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அருண்ஷோரி, ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பிரதமர் மன் மோகன்சிங்கை சந்தித்து ஆரம்பத்திலேயே எச்ச ரித்ததாகவும், ஆனால் பிரதமர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என்றும் புகார் கூறி இருந்தார்.

பா.ஜ.க.மீதும் குற்றச்சாற்று

அதேபோல் பா. ஜனதா தலைவர்களும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக் கடி கொடுக்கத் தவறி விட்டனர் என்றும் அவர் குற்றம்சாற்ற இருந் தார்.

அருண்ஷோரிக்கு சி.பி.அய். சம்மன் அனுப்பி இருப்பது குறித்து கருத் துத் தெரிவித்த பா. ஜனதா செய்தித் தொடர் பாளர், பா.ஜன தாவிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்ப தால் எந்த விசாரணை யையும் சந்திக்க தயார் என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், கடந்த 2007ஆம் ஆண் டிலேயே பா.ஜனதா தலைவர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம் இந்த முறைகேடு பற்றி தெரிவித்ததாகவும், அதற்கு அந்த தலை வர்கள் அமைதி காத்த தாகவும் அருண்ஷோரி குறிப்பிட்டு இருந்ததை அவர் நிராகரித்தார்.
http://viduthalai.in/new/e-paper/3405.html 

No comments:


weather counter Site Meter