Pages

Search This Blog

Sunday, February 6, 2011

சோதிடம் - அறிவியல் அல்ல-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

(17.7.2010 அன்று பொன்னேரியில், ஏறத்தாழ ஆயிரம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூடியிருந்த அரங்கில், அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரையிடம் பல்வேறு வினாக் களை மாணவர்கள் எழுப்பினர். அதி லிருந்து சிலவினாக்களும், அவர் அளித்த விடைகளும்)

கேள்வி: கோதவாடி என்னும் ஒரு சிற்றூரில் பிறந்த நீங்கள், இவ்வளவு பெரிய விஞ்ஞானியாக எப்படி உயர்ந் தீர்கள்?

பதில்: அதற்குப் பல்வேறு காரணங் கள் இருக்கின்றன. குறிப்பாக ஒன்றைச் சொல்வதானால். நான் தமிழ் வழிக் கல்வியில் படித்தவன், தாய்மொழி வழிக் கல்வி தான் அறிவியல் செய்திகளை நன்றாகப் புரிந்து கொள்ளுவதற்கும், அதற்கும் மேல் நாம் சுயமாகச் சிந்திப்பதற்கும் உதவும். எனவே, என் முன்னேற்றத்தில் தமிழ்வழிக் கல்விக்குப் பெரும் பங்கு உண்டு.

கேள்வி: சந்திராயன் விண்கலத்தை அனுப்புவதற்கு முன் திருப்பதி கோயிலுக்குச் சென்று பூசை செய்து வழிபட்டது சரிதானா?

பதில்: நான் தனிப்பட்ட முறையில் அவ்வாறு எதுவும் செய்வதில்லை. பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் தொடக்குவதில்லை என்றுகூட ஒரு மரபு உண்டு. ஆனால் நான் பல புதிய திட்டங்களைச் செவ்வாய்க்கிழமைகளில் தான் தொடங்கியிருக்கிறேன் என்றா லும், திருப்பதிக்கு என் மேலதிகாரிகள் எல்லாம் சென்ற போது என்னையும் அழைத்தார்கள். அதை நான் மறுக்க முடியாது.

கேள்வி: உங்களுடைய இந்த வளர்ச்சி என்பது தனிப்பட்ட முயற்சியா அல்லது கூட்டு முயற்சியா?

பதில்: கண்டிப்பாகச் சந்திரயான் _ 1 இன் வெற்றி என்பது ஒரு குழு முயற்சிதான். முழுமையான ஒரு குழு வினுடைய முயற்சி. இதில் கிட்டதட்ட 3000 பேர் வேலை செய்திருக்கிறார்கள். இதில் இந்தியர்கள் மட்டுமல்ல, அமெரிக்கர்கள் வேலை செய்திருக் கிறார்கள். பல்கேரியர்கள் வேலை செய் திருக்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து, ஜெர்மனியிலிருந்து, ஜப்பானிலிருந்தெல் லாம் வந்து வேலை செய்திருக்கிறார்கள். இப்படிப் பலதரப்பட்ட பகுதியிலிருந்து வந்தவர்கள் இணைந்து என்னுடைய தலைமையில் செய்த கூட்டுப்பணிதான் சந்திரயான்_1

கேள்வி: இப்படி ஒரு சாதனையாள ராக மாறுவோம் என்று சிறுவயதில் தாங்கள் நினைத்திருப்பீர்களா?

பதில்: ஒரே ஒரு சொல்லில் பதில் சொல்வதாக இருந்தால், இல்லை. என்னுடைய அப்பாவின் வழிகாட்டு தலில்தான் நான் வந்தேன். விண் வெளித்துறை என்று ஒன்று இருக்கிறது என்றுகூட எனக்குத்தெரியாது. அவ்வ ளவு ஏன், அய்.அய்.டிக்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதுகூடத் தெரியாது. அந்தமாதிரி நிலையில் இருந்து வந்தவன் நான். ஆனால் எந்தக் கல்லூரியிலும் முதலாவதாக வரவேண் டும் என்று நினைத்ததால், என்னுடைய அப்பாவின் வழிகாட்டுதலி னால், அரசாங்கத்துறை என்பதால் பெங் களூரில் போய் வேலையில் சேர்ந்தேன். ஆனால் அங்கே போய்ச் சேர்ந்த பிறகு தான் என்னுடைய இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்தேன். நான் இந்தத் துறைக்குள் வந்ததை ஒரு விபத்து என்றுகூடச் சொல்லலாம். ஆனால் உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம். நான் இங்கு வந்ததன் நோக்கம் _ நீங்கள் செய்ய நினைப்பதைச் சரியாக செய்வதற்கு ஊக்கமளிப்பதற் காகத் தான்.

கேள்வி: கான்ஸ்பியரன்சி தியரி ஆஃப் மூன் பற்றி கொஞ்சம் சொல் லுங்களேன்...

பதில்: நிலவில் போய் மனிதர்கள் இறங்கியதே உண்மையா என்பது போன்ற புத்திசாலித்தனமான கேள் விகள் அந்த கான்ஸ்பியரன்சி தியரியில் கேட்கப்பட்டுள்ளன.

அந்த கேள்வி களுக்கெல்லாம் நாசாவே பதில் சொல்லியிருக்கிறது. அந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அறிவியல் பூர்வமான பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. உதா ரணமாக, நிலவில் கொடி ஆடுமா, அங்கே காற்றே இல்லை. பிறகு எப்படிக் கொடி ஆடியது? என்று கேட் கிறார்கள். நிலவில் காற்று இல்லை என்பதை நாம் அனைவருமே அறி வோம். ஆனால் அங்கே கொடி ஆட வேண்டும் என்பதற்காகச் சிறப்பாகக் கொடி தயாரிக்கப்பட்டது. அங்கே காற்று இல்லாததால்தான் அந்தக்கொடி ஆடியது. ஏன் என்றால், அங்கே உள்ள மணல் மிகவும் நுண்ணியதாக இருக்கும்.

எனவே ஒரு குழாயினுள் ஆம்ஸ்ட்ராங் கொடியைச் செருகி வைத்தால், அப்படி அவர் வைக்கும்போது அந்தக் கொடி ஆடியது. அப்படி ஆடிக்கொண்டிருக் கின்ற கொடி, அங்கே காற்று இல்லாத தால் அதாவது அதை உராய்வதற்கு, உராய்ந்து கொடி ஆடுவதை நிறுத் துவதற்கு உராய்வு விசை இல்லாத காரணத்தால் வைத்தால், அப்படி அவர் வைக்கும்போது அந்தக் கொடி ஆடியது. அப்படி ஆடிக்கொண்டிருக்கின்ற கொடி, அங்கே காற்று இல்லாததால் அதாவது அதை உராய்வதற்கு. உராய்ந்து கொடி ஆடுவதை நிறத் துவதற்கு உராய்வு விசை இல்லாத காரணத்தால் நிலவில் கொடி ஆடியது. காற்று இல்லாத கண்ணாடிப் பெட் டிக்குள் (கடிகாரத்தில்) தனிஊசல் எப்படி ஒருமுறை கொஞ்சம் ஆட்டி விட்டால் தொடர்ந்து சீராக ஆடிக் கொண்டிருக்கிறதோ அப்படித்தான் இதுவும்.

இப்படி கான்ஸ்பியரன்சி தியரியில் உள்ள ஒவ்வொரு கேள்விக் கும் அறிவியல் பூர்வமாகப் பதில் சொல் லியிருக்கிறார்கள். நிலவில் மனிதர்கள் இறங்கியதற்கான காலடித் தடங்களை சந்திரயான்கூட படம் பிடித்திருக்கிறது. எனவே அந்தத் தியரி தவறானது.

கேள்வி: அண்மையில் நாகர்கோயி லில் ஒரு கோயில் கோபுரத்தின் மீது இது தாக்கியதில், அதில் இருந்த கலசம் இரிடியமாக மாறிவிட்டாகப் பத்திரிக் கைச் செய்தி வெளிவந்தது. கலசம் இரிடியமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: நானும் படித்தேன். ஊடகங்கள் வழியாக அது தொடர் பான கேள்விகளுக்குப் பதிலளித்து இருக்கிறேன். இது சரியானதில்லை. கோபுரங்களின் மீது இடி தாக்குவது என்பது அடிக்கடி நடக்கின்ற ஒன்று தான். ஆனால் அதை வேறு மாதிரி யாகப் பயன்படுத்துகின்றனர். அறிவி யல் பூர்வமாக அதெல்லாம் சாத்திய மில்லை என்பதுதான் உண்மை.

கேள்வி: சந்திராயன் _ 1அய் விண் ணில் ஏவும்போது உங்களுக்குள்ளே ஒரு மாற்றம், உணர்வு ஏற்பட்டிருக்குமே _ அதைப்பற்றிக் கொஞ்சம் சொல் லுங்கள்...

பதில்: நான் இந்தக் கேள்விக்கான விடையை நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன். அதாவது நான் ஆணாக இருந்தபோதும் அந்த நேரத்தில் தாய்மையை உணர்ந்தேன். 60 மணிநேரத்திற்கு முன்பே கவுன்ட் டவுனை ஆரம்பித்து விடுவார்கள். அதை நேரில் பார்த்துக்கொண்டிருப் போம். 10,9,8 என்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சந்திரயான் விண்ணில் சீறிப்பாய்ந்தபோது நான் தாய்மையை உணர்ந்தேன். அதனால் தான் முதன்முதலாக ஊடகங்கள் என்னைக் கேட்டபோது. “Our baby is on the way to the moon” என்று சொன்னேன்.

கேள்வி: கோதவாடி என்ற குக் கிராமத்தில் பிறந்த நீங்கள் இன்று அறிவியலால் இவ்வளவு உயரத்தை எட்டியிருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

பதில்: இதே கேள்வியை, கர்நாடாக வில் ஒரு மாவட்டத்தில், ஏறத்தாழ 15,000 மாணவர்களுக்கு முன்னால் ஒரு பெரியவர் கேட்டார். இதற்கான பதிலை நீங்கள் தமிழிலேயேகூடச் சொல்லுங்கள். நான் கன்னடத்தில் மொழி பெயர்க்கச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னார். நான் நிறைய இடங்களில் சொன்னது தான்; செம்மொழி மாநாட்டில் கூட அதைத்தான் சொல்லியிருக்கிறேன். தாய் மொழியில் படித்தது எனக்குச் சுய சிந்தனையை உருவாக்கியது. அதாவது 70 கலங்கள் விண்வெளிக்குப் போயிருந் தாலும். மற்றவர்கள் செய்ததை நாங்கள் பின்பற்றவில்லை.

நாங்கள் சுயமாக சிந்தித்துச் செய்தோம். அதனால்தான் 69 கலங்கள் செய்ய முடியாததை 70 ஆவது கலமாக நாங்கள் விண்ணில் செலுத்திய சந்திரயான் செய்தது. இந்த சுய சிந்தனைக்குக் காரணம் கண்டிப் பாகத் தாய்மொழிக் கல்விதான் என்பதை நான் உணர்கிறேன்.

கேள்வி: சந்திரயான் _ 1 ஒவ்வொரு இந்தியனுக்கும் என்ன செய்திருக்கிறது, அதாவது ஒவ்வொரு இந்தியனுக்கும் அதனால் பயன் என்ன?

பதில்: ஏன் நிலவுக்குப் போகவேண் டும் என்பதற்கான 200 காரணங்களை முன்வைத்து ஒரு பெரிய புத்தகமே போட்டிருக்கிறார்கள். இந்தியாவின் மக்கள் தொகை இரண்டாம் இடத்தில் இருக்கிறது. என்பது நமக்குத் தெரியும். கூடிய விரைவில் முதல் இடத்திற்குப் போகக்கூடும் என்று ஆய்வுகள் சொல் லுகின்றன. நாளை ஒரு அமெரிக் காவோ, ஒரு ஆஸ்திரேலியாவோ நிலவில் உருவாகும்போது, இந்தியனுக்கும் அங்கே முழு உரிமையும் இருந்தே தீரவேண்டும். அதற்கான முதல் படி சந்திரயான் _ 1. இது 200 காரணங்களில் ஒரு காரணம் மட்டுமே, சந்திரயானுக்கு முன்பு, இந்தத்துறைக்கு நாங்கள் 40 பேரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந் தெடுப்போம். அதற்கு வெறும் 2000 பேர் மட்டும்தான் விண்ணப்பிப்பார் கள். ஆனால் சந்திரயானின் வெற்றிக் குப் பிறகு 1 இலட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். சந்திரயானுக்கு முன்பு 13 கலங்கள் செய்திருக்கிறேன். ஆனாலும் என்னை அடையாளம் காட்டியது சந்திராயான் _1 தான். தனிப்பட்ட மனிதனுக்கு மட்டு மல்ல, இன்று அறிவியல் துறையில் இந்தியாவின் முகவரியாகவே சந்திர யான்_ 1 அறியப்பட்டுள்ளது.

கேள்வி: நிலவின் மேற்பாறைகளில் உள்ள ஹீலியம் 2 அய் நாம் எப்படி உருக்கிக் கொண்டு வர முடியும்? அது ஒரு unstable எனும்போது அதை மின்சாரம் தயாரிக்க எப்படிப் பயன்படுத்த முடியும்?

பதில்: நிலவிற்கு மனிதர்கள் போனால் அங்கும் தண்ணீர் வேண்டும், மின்சாரம் வேண்டும்_ இல்லையா? அங்கிருக்கிற தண்ணீரை இங்கே கொண்டுவருவதற்காக இல்லை. இங்குள்ள தண்ணீர்த் தேவையை அங்கேயிருந்து கொண்டு வந்து நிறைவு செய்துவிட முடியாது. ஆனால் அங்கே போகும்போது அங்கு தண்ணீர் தேவை. அதே நேரத்தில் அங்கே மூலப் பொருள்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வது. மனிதன் எங்கே போய் இறங்கலாம் என்பதை அறிந்துகொள்ளத்தானே ஒழிய அங்கிருக்கின்ற மூலப்பொருள் களை எல்லாம் இங்கே கொண்டு வந்து விடுவதற்காக இல்லை. அப்படி அங்கி ருந்து ஏதாவது கொண்டு வருவதாக இருந்தால் ஹீலியம் _ 3 அய் மட்டும் தான் கொண்டு வருவோம். அதுவும் சில டன்கள் மட்டும்தான் கொண்டு வரலாம். மற்றபடி அங்கே இருப்ப வற்றை ஆராய்ச்சி செய்வது என்பது எதிர்காலத்தில் மனிதன் அங்கு போய் இறங்கும்போது எந்த இடத்தில் இறங் கினால் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்குத் தான்.

கேள்வி: சோதிடம் என்பது அறிவி யலா? வானத்திலுள்ள கோள்களைச் சோதிடர்கள் தங்களுக்குச் சாதமாக்கிக் கூறுகிறார்கள். இதைப்பற்றி தங்க ளுடைய கருத்து என்ன?

பதில்: இந்தக் கேள்விக்கு என்னு டைய சொந்தக் கருத்தைச் சொல்கிறேன். நான் என்னுடைய பதினொன்றாம் வகுப்புத் தேர்வுக்கான முடிவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு சோதிடர் எனக்குச் சோதிடம் பார்த்துவிட்டு என்னுடைய அப்பா விற்கு மேலே உனக்குப் படிப்பு இல்லை என்று சொன்னார்.

என்னுடைய அப்பா பத்தாவது வரை படித்திருக் கிறார். அவர் அன்றைக்குச் சொன்னது. நான் எஸ்.எஸ்.எல்.சிக்கு மேலே தேற மாட்டேன். அது எந்த அளவிற்குப் பலித்திருக்கிறது என்பது இப்போது உலகத்திற்கே நன்றாகத் தெரியும். அன்று அந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எங்கள் கல்வி மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். ஆக என்னு டைய அனுபவத்தில் சோதிடம் என்பது ஒன்றுமேயில்லை. அறிவியல் பூர்வ மாகப் பார்த்தால் சோதிடமும், வானி யலும் ஒன்று இல்லை. அறிவியல் படி அது சரியல்லை என்பது என்னுடைய கருத்து.

கேள்வி: செவ்வாயை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்ற இன்றை சூழ்நிலையிலும், ஆக்டோபஸ் சையும், கிளி சோதிடத்தையும் நம்பிக் கொண்டிருக்கிறோம். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில்: இது மூடநம்பிக்கையை விட மோசமான நம்பிக்கை. அந்த ஆக்டோ பஸ் பாவம்! அந்தக் கொடியினுடைய கலர் பிடித்து, அது போயிருந்திருக்க லாம். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி யான உணவைச் சாப்பிடப்பிடிக்காமல் அது வேறு பெட்டிக்குப் போயிருக்கிறது. மூன்று நான்கு நாள்களாகத் தொடர்ந்து ஜெர்மன் கொடி உள்ள பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உணவையே சாப்பிட்டதால், அடுத்த நாள் அது பிடிக்காமல் அடுத்த பெட்டிக்குப் போயிருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். அதைப்போய் இவர்கள் ஏதேதோ சொல்லி பரப்பரப்பாக்கி விட்டார்கள். அதே போலத்தான் கிளி சோதிடமும்.

(நன்றி: அறிவியல் தமிழ் பிப்ரவரி - மார்ச் -2011)
http://viduthalai.in/new/page4/2800.html 

No comments:


weather counter Site Meter