Pages

Search This Blog

Monday, February 21, 2011

தெகல்கா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது குஜராத் கலவர வழக்குகளின் அரசு வழக்கறிஞர்கள் சங்பரிவாரைச் சேர்ந்தவர்களே

கலவரங்களின்போது முஸ்லிம் மத மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வெறுப்புணர்வு கொண்டவரது ஆபத்து நிறைந்த நடத்தையை மோடி வெளிப்படுத் தினார். ஆனாலும் அவர் மீது குற்றச்சாற்று பதிவு செய்ய போதுமான சாட்சியம் இல்லை என்று சிறப்பு விசாரணைக் குழு கூறுகிறது.

தனது மாநிலத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு, சட்டப்படி இல்லா விட்டாலும், தார்மீக ரீதியிலாவது ஒரு முதலமைச்சரை பொறுப்பாக்க என்ன செய்ய வேண்டும்?

சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையின் 67 ஆம் பக்கத்தில் மல்ஹோத்ரா குறிப்பிடு கிறார்: 27-2-2002 அன்று கோத்ராவுக்குச் சென்றதாக முதலமைச்சர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டுள்ளார். குல்பர்கா சொசைடி, நரோடா பாடியா, மற்றும் கலவரங் களால் பாதிக்கப்பட்ட அகமதாபாதின் இதர பகுதிகளையும் தான் மார்ச் 5, 6 தேதிகளில் சென்று பார்த்ததாக மோடி ஒப்புக் கொண் டுள்ளார். இது அவரது பாகுபாடு காட்டும் மனப்பான்மையைக் காட்டுகிறது. ஒரே நாளில் 300 கி.மீ. பயணம் செய்து கோத் ராவுக்குச் சென்று வந்த அவர், உள்ளூர் பகுதிகளில் மோசமான கலவரங்கள் நடந்து, பெரும் அளவிலான முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட பகுதியை உடனே சென்று பார்க்கத் தவறிவிட்டார்.

எதிர் வினையாம்!

குஜராத்தில் மதக் கலவரங்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த 2002 மார்ச் 1 ஆம் தேதியன்று ஜீ செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி குறிப்பிட்டுள்ளார்: நடவடிக்கைக்கு எதிர்நடவடிக்கை என்ற நடைமுறை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு செயல் நடை பெறாமல் இருந்திருந்தால், அதற்கு எதிர்வினை என்று எதுவும் நிகழ்ந்திராது என்றுதான் நான் கூறுவேன். கோத்ரா முஸ்லிம்கள் குற்றவியல் மனப்பாங்கைக் கொண்டிருந்ததாகவும், சபர்மதி ரயில் தீ விபத்துக்குப் பின்னணியில் அவர்கள் இருந்தனர் என்றும் அதே பேட்டியில் மோடி கூறியுள்ளார். குஜராத்தில் அதன் பின் நடந்த கலவரங்கள் அதன் இயல்பான எதிர்வினைதான் என்றும் மோடி கூறியுள்ளார்.

தனது அறிக்கையின் 69 ஆவது பக்கத்தில் மல்ஹோத்ரா குறிப்பிடுகிறார்:
குல்பர்கா சொசைடி அருகே கூடியி ருந்த கலவரக் கும்பல் மீது இறந்து போன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாஃப்ரிதான் முதலில் துப்பாக்கியால் சுட்டார் என்றும், அதனால் கோபமடைந்த கலவரக்காரர்கள் சொசைடிக்குள் நுழைந்து தீ வைத்தனர் என்றும் ஜீ தொலைக் காட்சி பேட்டியில் நரேந்திர மோடி தெளிவாகக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. இந்தப் பேட்டியில் ஈஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதுதான் வினை என்றும், அதனைத் தொடர்ந்த படு கொலைகள் எதிர்வினையென்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

மல்ஹோத்ரா மேலும் எழுதுகிறார்:

குல்பர்கா சொசைடி மற்றும் இதர இடங்களிலும் முஸ்லிம்கள் மீது மேற்கொள் ளப்பட்ட பயங்கரமான வன்முறைத் தாக்கு தல்களுக்குப் பின்னும், அரசிடமிருந்து வந்த எதிர்ச் செயல், காட்டிய பிரதிபலிப்பு எவர் ஒருவரும் எதிர்பார்க்கக் கூடிய வகையில் இருக்கவில்லை. குல்பர்கா சொசைடி, நரோடா பாடியா மற்றும் இதர இடங்களில் நிலவிய தீவிரத் தன்மையை, ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் இருக்கத்தான் செய்யும் என்று கூறியதன் மூலம் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியையே முதலமைச்சர் மேற்கொண்டார் என்பதை மேற்கூறிய கலந்துரையாடல் காட்டுகிறது. மோடியின் கூற்று, சிறுபான்மை சமூக அப்பாவி உறுப் பினர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத் துவதாகவே இருந்தது. பாகுபாடு காட்டும் இத்தகைய மனநிலை ஒரு முதலமைச்சரிடம் எதிர்பார்க்கக்கூடியது அல்ல. மோடி கூறியது முக்கியமான பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அதிர்ச்சி தரத்தக்கதாகவும் இருக்கிறது என்று ராகவன் குறிப்பிடுகிறார். என்றாலும், மோடிக்கு எதிராக ஒரு வழக்கைத் தொடரத் தேவையான ஆதாரங்கள் போது மானவையாக இல்லை என்று மல்ஹோத்ரா முடிக்கிறார்.

வழக்கறிஞர்கள் காவிகளே! காவி உடைப் படை உறுப்பினர்களையே அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக கலவர வழக்குகளில் குஜராத் அரசு நியமித்தது. ஆனால் அவர்கள் தவறாக நடந்து கொண் டார்கள் என்று குறிப்பிட்டுக் காட்டுவது எளிதாக இல்லை என்று விசாரணைக் குழு தெரிவிக்கிறது.

இந்த விரிவான பகுத்தாய்வு காட்டுவது போல், ஒவ்வொரு அம்சத்திலும் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை முரண் பாடுகளைப் பற்றிய ஒரு முழுமையான ஆய்வாக அமைந்துள்ளது. பல விஷயங் களில் மோடி அரசின் நெறி தவறிய செயல் களை விசாரணை அலுவலர் ஒப்புக் கொண் டாலும் மேலும் விரிவான விசாரணை ஒன்றை நடத்துவதற்குப் பரிந்துரைப்பதில் காரணம் கூற இயலாதவாறு தயக்கம் காட்டுகிறார்.

விசுவ இந்து பரிசத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களை அரசு குற்றவியல் வழக் கறிஞர்களாக நியமித்த விஷயத்தில், மற்ற விஷயங்களை விட அரசின் நெறி தவறிய செயல் நன்றாகவே தெரிகிறது.

அறிக்கையின் 157-ஆம் பக்கத்தில், 2002 இல் வதோதரா மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறி ஞராக ரகுவீர் பாண்டியா என்ற விசுவ இந்து பரிசத் ஆதரவாளர் நியமிக்கப்பட்டார். பெஸ்ட் பேக்கரி வழக்கை பாண்டியா நடத் தியதில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பாண்டியா வின் செயல் பாடுகள் பற்றி உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் பரிந்துரைத்துள்ளது என்று மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.

முடிவுக்கு வராத குழப்பம்!

விசுவ இந்து பரிசத் அல்லது ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட மேலும் அய்ந்து எடுத்துக்காட்டுகளை மல்ஹோத்ரா பட்டியலிட்டுள்ளார். இந்த நியமனங்களில், வழக்கறிஞர்களின் அரசியல் தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று மல்ஹோத்ரா குறிப்பிடுகிறார். பின்னர் அவரை மறுத்து அவரே, எந்த ஒரு அரசு குற்றவியல் வழக்கறிஞர் மீதும் தொழிலில் தவறாக நடந்து கொண்டார் என்ற குறிப்பிட்ட குற்றச்சாற்றும் வெளிச் சத்துக்கு வரவில்லை என்றும் கூறுகிறார்.

திரும்பத் திரும்பத் தங்களது கண்டுபிடிப் புகளை அவற்றின் இயல்பான முடிவுகளுக் குக் கொண்டு செல்வதற்குத் துணிவற்ற சிறப்பு விசாரணைக் குழுவின் நிலையைப் பற்றி என்ன கூறுவது, என்ன செய்வது என்ற முடிவுக்கு வரமுடியாத குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக, மேகசேனா மாவட் டத்தில் 2000 ஏப்ரல் முதல் டிசம்பர் 2007 வரை அரசு குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றிய குஜராத் விசுவ இந்து பரிசத் தின் பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி யின் கீழ் 12-க்கும் மேற்பட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் பணியாற்றி வந்தனர். இந்த மேகசேனா மாவட்டம்தான் கலவரங் களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தாகும். மேகசேனாவில் நடைபெற்ற இரண்டு கலவர வழக்குகளில் - விஸ்நகரில் கொல் லப்பட்ட தீப்சா தார்வாசா மற்றும் சர்தார்புரா படுகொலை வழக்குகள் மிகவும் கொடூர மானவை.

தெகல்கா ரகசியமாக மேற்கொண்ட ஒரு புலன் விசாரணையில், குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தான் சென்று, அங்குள்ள அரசு குற்றவியல் வழக்கறிஞர் கள், விசுவ இந்து பரிசத் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிரதி வாதிகளின் வழக்கறிஞர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசி கலவர வழக்குகளில் குற்றம் சாற்றப்பெற்ற இந்துக்கள் அனைவரையும் தான் எவ்வாறு விடுவிக்கச் செய்தார் என்று தன்னைப் பற்றியே புகழ்ந்து பேசியதை தெகல்கா செய்தியாளரிடமே ஒப்புக் கொண்டது ஒலிப்பதிவு செய்யப் பட்டுள்ளது. மேகசேனாவில் இருந்த 74 கலவர வழக்கு களில் இரண்டு வழக்குகளில் மட்டுமே குற்றம் சாற்றப்பெற்றவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்று பெருமையாகக் கூறியதும் பதிவாகியுள்ளது. என்றாலும், மூன்று கலவர வழக்குகளில் இதே தெகல்கா செய்தியாளரை அரசு சாட்சியாகக் குறிப் பிட்ட சிறப்பு விசாரணைக் குழு, தற்போது உணர்ச்சி மிகுந்த, தன்னையே காட்டிக் கொடுக்கும் திரிவேதியின் வாக்குமூலத்தை உண்மை என ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

விசுவ இந்து பரிசத் மற்றும் ஆர்.எஸ். எஸைச் சேர்ந்த அரசு குற்றவியல் வழக் கறிஞர்கள் மாநிலம் முழுவதிலும் எவ்வாறு திட்டமிட்டு நீதியைக் குழிதோண்டிப் புதைத் தனர் என்பதை மிக விரிவாக அர்விந்த் பாண்டியா என்ற குஜராத் அரசின் மற்றொரு சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெகல்கா செய்தியாளரிடம் கூறியுள்ளதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தெகல்கா இதனை வெளிப்படுத்திய பிறகு பாண்டியா பதவியை விட்டு விலகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை யும் மேற்கொள்ள வேண்டிய நேரத்தில், நல்ல நோக்கத்தைக் கொண்டிருக்க வேண் டிய அரசு, பல சங்பரிவார அமைப்புகளின் உறுப்பினர்களை அரசு குற்றவியல் வழக் கறிஞர்களாக நியமித்திருப்பதையும் சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.

தீவிரவாதம் மற்றும் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், ஒன்பது முஸ்லிம்களைக் கொண்ட குடும்பம் ஒன்றைக் கொன்றதான ஒரு வழக்கு விசாரணையை முன்னொரு நாளில் எதிர்கொண்ட சேடன் ஷா என்ற விசுவ இந்து பரிசத் உறுப்பினர் 17-6-2003 அன்று முதல் 3 ஆண்டு காலத்திற்கு அரசு குற்ற வியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு முன் குல்பர்கா சொசைடி படுகொலை வழக்கில் குற்றம் சாற்றப்பெற்றவர்கள் பலருக்காக அவர் வாதாடினார் என்பது அதிர்ச்சி தரத்தக்க செய்தியாகும்.

சேடன் ஷா மீது நடைபெற்ற படுகொலை வழக்கில் அவருக்காக வாதாடிய எச்.எம். துருவ் என்ற வழக்கறிஞர் குல்பர்கா சொசைடி மற்றும் நரோடா பாடியா வழக்கு களில் அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

ஏ.பி.வி.பி மற்றும் வி.இ.ப. தலைவரான பியூஷ் காந்தி 15-3-1996 அன்று பஞ்சமாலில் அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக் கப்பட்டு, 1-9-2009 வரை அவர் அப்பதவியில் நீடித்தார். ஷபானா சுஹாங் கற்பழிப்பு மற்றும் கொலை உள்ளிட்ட பல கலவர வழக்குகளை அவர் நடத்தியுள்ளார். இந்த வழக்குகளில் குற்றம் சாற்றப் பெற்றவர்களில் பலர் மிகவும் எளிதாக ஜாமீன் வாங்கிச் சென்றனர். சிறப்பு விசாரணைக் குழு தலைவர் ராகவன் குறிப்பிடுகிறார்: இவ்வாறு நியமிக்கப்பட்ட வர்களில் சிலர் ஆளுங்கட்சியுடனோ அல்லது அதற்கு ஆதரவாக உள்ள அமைப்பு களுடனோ அரசியல் தொடர்பு கொண்ட வர்கள் என்பது தெரிய வந்துள்ளது. என்றாலும் மேற்கொண்டு எதுவும் கூறுவதை அவர் தவிர்த்துவிட்டார்.

நன்றி: தெகல்கா 12-2-2011
தமிழில் த.க.பாலகிருட்டிணன்

http://viduthalai.in/new/page-2/3838.html 

No comments:


weather counter Site Meter