Pages

Search This Blog

Monday, February 14, 2011

சு.சாமியே, ஓடாதே, நில்! (5)

தோழர் திருச்சி வேலுச்சாமி என்பவர் சு.சாமியின் அத்தியந்த நண்பர். சு.சாமியின் ஜனதா கட்சிக்கு அகில இந்திய செயலாளர். மாணவர் காங்கிரசிலிருந்து மாநில காங்கிரஸ் வரை பொறுப்புகளில் ஒரு காலகட்டத்தில் இருந்தவருங்கூட.
 சு.சாமி

ஒரு கட்டத்தில் சு.சாமிக்கும், வேலுச்சாமிக்கும் கருத்து வேறுபாடுகள் முற்றின.ஜெயின் கமிஷன் விசாரணையில் சு.சாமியை கூண்டில் நிற்க வைத்து கேள்விக் கணைகளால் துளைத் தெடுத்தவர். மனுசன் ஆடிப்போய்விட்டார். ராஜிவ் கொலையில் சு.சாமிக்கும் தொடர்புண்டு என்று பகிரங்கமாகக் குற்றம் சாற்றியவர். பல அந்தரங்கத் தகவல்களை குமுதம் ரிப்போர்ட்டரில் (6-3-2008) அள்ளிக் கொட்டியவர்.

அந்தத் திடுக்கிடும் தகவல்கள் இங்கு அப்படியே தரப் படுகின்றன. படித்தால்தான் இந்தப் பச்சைப் பார்ப்பனரின் பதுங்குனித்தனங்கள் பச்சையகத் தெரியும்.

சொல்லுபவர் சு.சாமியின் கூட இருந்தவர் ஆயிற்றே - அவர் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஆயிற்றே - ஆதியும் அந்தமும் அங்குலம் அங்குலமாக அறிந்தவர் ஆயிற்றே - இதோ படியுங்கள்!

அன்பு நண்பர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களே... குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்கள் கொடுத்திருக்கும் பேட்டியைப் படித்தேன். எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.

முதலில் ஜெயலலிதாவும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்கிறீர்கள். அவரைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொன்னபோது நான்தான் உங்கள் இரண்டு பேரையும் சந்திக்க ஏற்பாடு செய்து அறிமுகப் படுத்தி வைத்தேன். அப்படிப்பட்ட எனக் கில்லாத அளவுக்கு ஜெயலலிதாவுடன் உங்களுக்கு நட்பு என்றால் அது எப்படி என்பது எனக்குப் புரிகிறது. 1991ஆம் வருடம் மே மாதம் 21 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகுதான் இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களின் புரோகிராம்களும் மாறின. ஆனால் அதற்கு முன்பே தேர்தல் புரோகிராமை மாற்றியவர்கள் இரண்டே இரண்டு அரசியல் தலைவர்கள்தான். அதில் ஒருவர் நீங்கள். இன்னொருவர் ஜெயலலிதா. அந்த விதத்தில் நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப நெருக்கம் என்று எனக்குப் புரிகிறது.

அப்படிப்பட்ட நெருங்கிய நண்பர் (ஜெ) சென்னை அய்க் கோர்ட்டுக்கு நீங்கள் போனபோது உங்களுக்கு அளித்த வரவேற்பை எந்த நண்பருமே கொடுத்திருக்க மாட்டார்கள். அதைப் போலவே நண்பர் என்ற முறையில் நீங்களும் அவருக்குச் செய்ததைப் போல எந்த நண்பரும் செய்திருக்க முடியாது. உங்கள் நண்பர், உயிர்த்தோழி இன்றைக்கு மீளமுடியாமல் போராடிக் கொண்டிருப்பது பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கிய சொத்துக் குவிப்பு வழக்கில்தானே? அதற்குக் காரணமான புகாரை எழுதிக் கொண்டு போய் கவர்னரிடம் கொடுத்தவர் நீங்கள்தானே? அதுசரி, உங்களுடன் உட்கார்ந்து அதை அப்போது எழுதியவர் பொன்னையன். இன்றைக்கு அவர் அந்த அம்மாவுக்கு அரசியல் ஆலோசகராக இருக்கிறார். வி.வி.சுவாமிநாதன், பி.ஹெச்.பாண்டியன் எல்லோரும்கூட அப்போது வந்து ஆலோசனை தந்தார்களே! மறைந்த முன்னாள் சபாநாயகர் க.ராசாராம் வீட்டில் உட்கார்ந்துதானே அந்தப் புகாரைத் தயார் செய்தீர்கள்? அப்போது நானும் அங்கே இருந்தேன். அதை மறந்துவிட்டீர்களா? நாம் எப்படியெல்லாம் தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் பார்த்தீர்களா? இந்த உண்மை யெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்தால் அவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்.

நீங்கள் கொஞ்ச நாளைக்கு முன் எழுதிய விடை தெரியாத வினாக்கள் என்கிற புத்தகத்தில் பக்கம் முப்பதில் இலங்கையில் இருக்கக்கூடிய சிங்களர்கள் பீஹாரில் இருந்து குடி பெயர்ந்து போன ஆரிய வம்சாவளியினர் என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த சிங்களர்களுக்கு எதிராக இருக்கக் கூடிய தமிழர்களை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. அந்தச் சந்தேகம் உறுதியானதற்கு உங்கள் பேட்டியிலேயே காரணம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்துக் காகப் போராடிக் கொண்டிருக்கிற, தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற இளைஞ ரான திருமாவளவனை இவ்வளவு கொச்சையாகவும் கேவலமாகவும் நீங்கள் பேசும்போது உங்கள் மனதில் இருக்கும் நஞ்சு என்ன என்பது புரிகிறது. நான் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஓர் ஆரிய-திராவிட வர்க்கப்போர் உருவாகிவிடுமோ என்று நான் அச்சப்படுகிறேன். இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து உங்களை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் விரட்ட வேண்டும்.

திருமாவளவன் புலிகளிடம் காசு வாங்கினார் என்று சொல்கிறீர்களே... புலிகள் அவர்களுடைய வாழ்க் கைக்கும், போராட்டத்துக்குமே திண்டாடுகிற நிலையில், அவர்கள் எங்கே இவருக்குப் பணம் கொடுக்கப் போகிறார்கள்? ஆனால் உங்களுக்கு அமெரிக்காவின் சி.அய்.ஏ.விடம் இருந்து கோடி கோடியாக பணம் வருவதாகச் சொல்கிறார்களே? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் அப்பா தந்த சொத்து என்ன? நீங்கள் சம்பாதித்த சொத்து என்ன? என்று பட்டியல் போடுங்கள் பார்க்கலாம். அமெரிக்கா போகிறேன், ஜெர்மனி போகிறேன், லண்டன் போகிறேன் என்று சுற்றிக் கொண்டு இருக்கிறீர்களே, அதற்குப் பணம் எங்கேயிருந்து வந்தது? இதைச் சொல்லிவிட்டு அதன் பிறகு அல்லவா நீங்கள் எங்கள் இளவல் திருமாவிடம் கேள்வி கேட்கவேண்டும்?

திருமாவளவன் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் ஒரு தேச பக்தர், மனிதாபிமானி. ஆனால் நீங்கள் தேசபக்தர் இல்லை என்பது மற்றவர்களைவிட உங்களுக்கும் எனக்கும் பட்டவர்த்தனமாகத் தெரியுமே!

நீங்கள் இந்தியாவில் இருந்தாலும் இந்தியாவுக்கா விசுவாசமாக இருக்கிறீர்கள்? இல்லையே. ராஜிவ் காந்தியை நண்பர் என்று சொல்கிறீர்கள். ஆனால், ராஜிவ் காந்தி செத்ததால் லாபமடைந்த முதல் மனிதர் நீங்கள்தானே? நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது காங்கிரசுக்குத் துளிகூட சம்பந்தம் இல்லாத உங்களை எப்படி டங்கல் காட் ஒப்பந்தக் கமிட்டிக்குத் தலைவராகப் போட்டார்கள்? அதில் முன்னால் நின்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் நீங்கள்தானே? அதுவரை அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ராஜிவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகுதானே இந்தியச் சந்தை அவர்களுக்குத் திறந்து விடப்பட்டது?

உலகத்தில் எந்த ஒரு கொலை நடந்தாலும், என்ன மோடிவ்? அல்லது யார் பயனாளி என்று பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் ராஜிவ் கொலையில் கண்ணை மூடிக் கொண்டு உங்களைக் கை காட்டலாம். ஆனால், இந்த நாட்டின் துரதிருஷ்டம், உங்களை இன்னும் தீவிரமாக விசாரிக்கவில்லை. அதை வலியுறுத்தித்தான் நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

பாமரர்கள் எல்லாம் வாய்க்கும் வயிற்றுக்கும் போராடிக் கொண்டிருக்கிறபோது, உங்களுக்கு லட்சக் கணக்கில் செலவு பண்ணி பாதுகாப்புத் தருவதால் எங்களுக்கு அவர்கள் (மத்திய அரசு) மேலேயே சந்தேகமாக இருக்கிறது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. காங்கிரஸ்காரர்கள் எல்லாம் டூப்ளிகேட் என்று சொல்லியிருக்கிறீர்களே, எங்கள் கிராமத்தில் சொல்வார்கள் காமாலைக் கண்ணனுக்குக் கண்ட தெல்லாம் மஞ்சள் என்று. அது போல நீங்கள் டூப்ளி கேட் என்பதால்தானே பார்க்கிறவர்கள் எல்லாம் உங்களுக்கு டூப்ளிகேட்டாகத் தெரிகிறார்கள்.

நீங்கள் ராஜிவ் காந்தி கொலையில் பல விஷயங் களைப் பற்றி பேசுகிறீர்கள். உங்களுடைய நண்பன் நான். ஜெயின் கமிஷனில் உங்கள் மேலேயே குற்றம் சொன்னேனே! உங்களைக் கூண்டில் நிற்க வைத்துக் கேள்வி கேட்டேனே! நீங்கள் கைகால் வெலவெலத்துப் போய் வேர்த்து விறுவிறுத்து ஸ்தம்பித்து நின்றீர்களே... அந்தக் கமிஷனே அதற்குப் பிறகு ஒன்றும் சொல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டதே. மறந்துவிட்டீர்களா? அந்தக் கமிஷனிலேயே நீங்கள்தான் கொலைக் குற்றவாளி என்று சொல்லியிருக்கிறேனே.

உங்களுக்கு நார்கோ அனாலிசிஸ் என்ற உண்மை யைக் கண்டறியும் சோதனை நடத்தினால், ராஜிவ் கொலையின் உண்மைச் சதி என்ன? பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது உலகத்துக்கே தெரிய வந்து விடும். இதைச் சொல்கிற நேரத்தில் நீங்கள் இந்த டெஸ்ட்டுக்கு ரெடியா? என்று நீங்கள் கேட்கக்கூடும். முதலில் என்னை டெஸ்ட் செய்துவிட்டு, அப்புறம் உங்களை டெஸ்ட் செய்யட்டும். உங்களுடைய இந்த ஏமாற்று வேலை தமிழகத்தில் இனிமேல் எடுபடாது.

இப்படிக்கு,
உங்களை உள்ளும் புறமும் புரிந்த ஒரே நண்பன் வேலுச்சாமி
(குமுதம் ரிப்போர்ட்டர், 6.3.2008)

சு.சாமியைப் பார்த்து, நீ ராஜிவ் காந்தியின் கொலைக் குற்றவாளி என்று கூண்டில் ஏற்றி முகத்துக்கு முகம் சொல்லியிருக்கிறார். சிங்களர்கள் ஆரியர்கள் என்று சு.சாமி சொன்னதை எடுத்துக் காட்டியிருக்கிறார். ஈழத் தமிழர் - சிங்களர் சண்டையை ஆரியர்-திராவிடர் போராட்டம் என்று நினைத்ததால் தான், சிங்களர்களுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் சு.சாமி நின்றார் என்று கூறியிருக்கிறார். திருமாவளவன் மீது பழி சுமத்துவது பார்ப்பனக் கண்ணோட்டத்தில்தான் என்று பகிரங்க மாகக் கூறியிருக்கிறார். சொல்லியிருப்பது திராவிடர் கழகத் தலைவர் அல்ல.

சு.சாமியின் ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளர் என்பதை மறந்துவிடக் கூடாது.
இவர் மத்திய சட்ட அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார்? எந்த அளவு அத்து மீறினார்?

ராமகிருஷ்ண ஹெக்டே போன்றவர்கள் இந்த சு.சாமியை எவ்வளவு கேவலமாக விமர்சித்தனர்? தோண்டத் தோண்ட புதையல்கள் வருகின்றன.
அவற்றையும்தான் பார்த்துவிடுவோமே!
http://viduthalai.in/new/page-8/3432.html 

No comments:


weather counter Site Meter