Pages

Search This Blog

Monday, September 20, 2010

சோம்பலை விரட்டி, சுறுசுறுப்பாக வாழுமாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, மூளைக்கு வேலை கொடுக்க முந்திடும் வாழ்க்கையை வாழுவோம், வாரீர்

வாழ்க்கையில் வயது முதிரும் நிலையில் பல்வேறு நோய்கள் நம் உடலை நோக்கி படையெடுத்து, வெற்றி பெற முயலுகின்றன. ஆனால், அவைகளுக்கு இடம் தராத அளவு நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலில் குறையாதபடி, நல வாழ்வில் நாம் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பர்த் மாநிலத்தில் உள்ள எடித்கோவான் பல்கலைக் கழகத்தின் முதுமை மற்றும் அல்ஷைமர்ஸ் என்ற மறதி நோய் சிகிச்சைத் துறை மருத்துவரான பேராசிரியர் ரால்ஃப் மார்ட்டின் சென்னையில் நேற்று ஓர் அறக்கட்டளை ஆய்வு சொற்பொழிவு நிகழ்த்தியதில் பல அரிய தடுப்பு முறைகளை முதுமை உளறலான மறதி நோயான அல்ஷைமர்ஸ் நோய் முதியவர்களைத் தாக்காமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று கூறியுள்ளார்.
65 வயது தாண்டிய சுமார் 3000 பேர்களை வைத்து நடத்திய ஓர் ஆராய்ச்சி சர்வேயில் கண்டறிந்த உண்மைகளை டாக்டர், பாடம் நடத்துதைப்போல வெளியிட்டுள்ளார்.
1. அதிகமான காய்கறிகளை உண்பவர்களுக்கு இத்தகைய மறதி நோய்கள் எளிதில் வருவதில்லை - 6 ஆண்டுகள் படிப்படியாக வரும் நிலையே ஏற்படுகிறது.
2. மாதுளைப் பழம், கிரீன் டீ (Green Tea) மீன், ஊரசஉரஅ போன்றவைகள் இந்த வகையில் தடுப்பான்களாகப் பயன்படுகின்றன.
3. வந்துவிட்டால் அதைத் தடுக்கப் போதிய மருந்துகளைப் பயன்படுத்துவதைவிட வாழ்க்கை முறைகளைக் (Life Style Changes) கடைப்பிடிக்கவேண்டும்.
4. அதிக ரத்தக் கொதிப்பு - Hypertension, உடல் எடை கூடுதலான நிலை, இதய நோயாளிகள், இவர்களுக்கு இந்த மறதி நோய் ஹ.னு. (அல்ஷைமர்ஸ் டிசீஸ்) வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
5. மனதிற்கு சதா வேலை கொடுத்து, மூளையை சுறுசுறுப்படையச் செய்தல், (பல முதியவர்களை கிராஸ்வேர்ட் பஸில் (Cross Word Puzzle) - குறுக்கெழுத்துப் போட்டிகள், கூட்டல், கழித்தல் கணக்குகளை சொடுக்கு (Soduku) என்பதை விடாமல் போடுவது மனதிற்கு - மூளைக்கு நல்ல வேலை கொடுப்பதற்காகவேயாகும்!
ஆண்ட்டி ஆக்சிடெண்ட்ஸ் என்ற பிராண வாயு பெருகிடும் நிலை, மற்றபடி அடிக்கடி சமூக குடும்ப நிகழ்வுகள் முதலியவைகளில் ஆர்வத்துடனும், சுறுசுறுப்புடனும் ஈடுபடுவோருக்கு இந்த மறதி நோய் எளிதில் தாக்காது என்பது கோடிட்டுக் காட்டப்படவேண்டிய உண்மையாகும்!
தந்தை பெரியார் அவர்களது நினைவாற்றல் கடைசிவரை அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தவரை மிகச் சிறப்பாக இருந்தது வியக்கத்தக்கதல்லவா?
நம் முதலமைச்சர் கலைஞருக்கு இந்த 87 வயதிலும், நமது நிதியமைச்சர் இனமானப் பேராசிரியருக்கு 89 வயதிலும் மறதி நோய் வராமல் உள்ளது என்பதற்கு மூலகாரணம் அவர்கள் சதா சிந்தித்து வாழுகிறார்கள்; துணிச்சலுடன் பிரச்சினைகளைச் சந்தித்து அவற்றுக்குத் தீர்வு காண முயலுகிறார்கள் என்ற அவர்கள் உடல் உழைப்புடன் கூடிய மூளை உழைப்பும் இணைந்த கூட்டணியால்தானே!
எனவே, சோம்பலை விரட்டி, சுறுசுறுப்பாக வாழுமாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, மூளைக்கு வேலை கொடுக்க முந்திடும் வாழ்க்கையை வாழுவோம், வாரீர்!

No comments:


weather counter Site Meter