Pages

Search This Blog

Monday, September 27, 2010

தினமலர், தினமணிக்கு ஏன் இந்தப் புத்தி?

தினமணியும், தின மலரும் கலைஞர் அரசை எதிர்க்கக் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதாகத் தெரி கிறது. துக்ளக் சோவின் பாணி பார்ப்பனக் கிண்டல் கள் இந்தக் கின்னரர்களின் எழுதுகோல் முனைகளில் தெறிக்கின்றன.
வாரத்துக்கு 5 நாள் கோழி முட்டை சத்துணவு மய்யத்தில் நமது குழந்தை களுக்கு அளிக்கப்படுகின் றன. தினமலர் எழுதுகிறது; சனிக்கிழமை அரை நாள் பள்ளி உள்ளதே அப் பொழுது அரை முட்டை போடப்படுமா? என்று கேலிச்சித்திரம் தீட்டுகிறது.
தினமணியின் மதி எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
சத்துணவில் வாரத் துக்கு 5 நாள் முட்டையாம்! நல்லது, அதையே கலக்கி, ஆம்லேட், பொடிமாஸ், ஆஃப் பாயில், ஃபுல்பாயில்னு நாளுக்கு ஒரு அயிட்டமா கொடுத்தால் பசங்களும் சலிப்பு தட்டாமல் சாப்பிடு வாங்களே..!
தினமலர், தினமணிக்கு ஏன் இந்தப் புத்தி? ஒருக் கால் எந்தப் பாப்பாரக் குஞ் சுக்கும் இந்த முட்டை அளிப் பால் பயனில்லை என்ற நினைப்பு இருக்குமோ!
இந்த ஒரு பிரச்சினை மட்டுமல்ல; தமிழ் செம் மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா? என்று கிண் டலடிக்கிறது.
சத்துணவு அளிப்பதும், வாரத்தில் 5 நாள்கள் முட்டை கொடுப்பதும் சாதாரண மான ஒன்றல்ல - தொலை நோக்கோடு பார்க்கும் பொழுதுதான் இதில் உள்ள அருமையும், விளைவும் புரியும்.
இந்தியாவில் 5 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுகின் றனர். ஆண்டு ஒன்றுக்கு குழந்தைகள் பாதிக்குமேல் மரணம் அடைவது இந்த ஊட்டச் சத்துக் குறைவால் தான்!
இந்தச் செய்தியையும் ஒரு பக்கத்தில் தினமலர் (4.5.2006) தான் வெளி யிடுகிறது.
47 விழுக்காடு குழந் தைகளுக்கு நம் நாட்டில் ஊட்டச்சத்து இல்லை என் கிற தகவலை வெளியிட்டது தினமணிதான் (5.5.2004).
இப்படி ஒரு பக்கத்தில் ஊட்டச் சத்தின் அவசி யத்தை வெளியிடும் தின மணியும், தினமலரும் ஊட்டச்சத்தினை கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அளிக்கும்போது, இந்த ஏடுகள் நல்ல புத்தியோடு பாராட்ட மனம் இல்லா விட்டாலும் கேலியும், கிண் டலும் செய்யாமலாவது இருக்கலாம் அல்லவா!
வாரத்துக்கு 5 நாள்கள் முட்டை அளித்தால், பார்ப்ப னர் அல்லாத குழந்தைகள் ஊட்டச் சத்து பெற்று, உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச் சியும் பெற்று, தேர்வுகளில் இதுவரை முட்டை மார்க்கு வாங்கியவர்கள் இனி அக் மார்க் முத்திரை பொறிப் பார்களோ என்கிற அழுக் குப் புத்திதான் இந்தப் பார்ப்பனர்களுக்கு.
அழுக்கு என்றால் அசிங்கம் மட்டுமல்ல - பொறாமையும்தான்!
- மயிலாடன்

1 comment:

Vijays said...

விடுங்கள் இந்த இரண்டும் அ.தி.மு.க சல்ராக்கள் . இதை அவர்கள் கொண்டு வந்தால் மாபொறும் திட்டம் என்பார்கள். மதி என்பவருக்கு பெயரில் இருக்கிறது மிதி என்று. மலர் என்ற பெயரில் இருக்கிறது இலையுடன் சால்ர அடிக்கும்.


weather counter Site Meter