Pages

Search This Blog

Wednesday, September 22, 2010

இந்து என்றால் திருடன் சபரிமலையில் 94 கிலோ நெய் கடத்தல்!

சபரி மலை அய்யப்ப சுவாமி கோவிலில் இருந்து காணாமல் போன நெய், பம்பை அஞ்சல் நிலை யத்தில் கண்டெடுக்கப் பட்ட சம்பவத்தில் ஒப் பந்ததாரர் சிக்கி உள்ளார். இதில் சம்பந்தப்பட்ட தாக கருதப்படும் இருவர் தலைமறைவாகி விட் டனர்.
சபரிமலையில் பல் வேறு பிரசாதம் தயாரிக்க, ஒப்பந்ததாரர்கள் மூலம் நெய் வாங்கப்படுகிறது. இந்த நெய்யை பயன் படுத்தி அப்பம் தயாரிக் கப்படுகிறது. அப்பம் தயாரித்த பின் அந்த நெய் மீண்டும் பயன்படுத்தப் படும். அவ்வாறு மீண் டும் தயாரிக்க அந்த நெய் பயன் படுத்தப்படாமல் காணாமல் போனது. இவ் வாறு சில நாள்களுக்கு முன் 94 கிலோ நெய் காணாமற்போய் விட்டது.
இந்நிலையில் 19 ஆம் தேதி மாலை பம்பையில் செயல்படும் திருவி தாங்கூர் தேவஸ்வம் போர்டின் பொதுப் பணித்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விஜி லென்ஸ் பிரிவு அதிகாரி கள் விசாரணை மேற் கொண்டனர்.
அப்போது பம்பை அஞ்சல் நிலை யத்தில் இரு டின்களில் அடைத்து வைக்கப்பட்ட 94 கிலோ நெய் சிக்கியது. இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசார ணை யில், திருவனந்த புரத்தில் இருந்து சபரிமலைக்கு அப்பம் தயாரிக்க தொழி லாளி களை அழைத்து வரும் ஒப்பந்ததாரர் சுதன் என்பவர் சிக்கி னார். அவரிடம் நடத் திய விசாரணையில், நெய்யை சபரிமலையில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளிகள் மூலம் பம்பைக்கு கடத்தியது தெரிய வந்தது.
சபரிமலையில் ஒரு தடவை அப்பம் தயா ரித்த பின், வாணலியில் இருக்கும் நெய்யை கடத் தியது தெரிந்தது. இந்த நெய்யை மீண்டும் பயன் படுத்த முடியும் என்ப தால், இதுபோன்ற செயல் கள் அடிக்கடி நடப்ப தாகவும் தொழிலாளிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் மீண்டும் பயன் படுத்தப்பட்ட நெய்யை கடைசியில், கழிவாகக் கொட்டி விடுகின்றனர். இச்சம்பவத்தில் சம்பந் தப்பட்ட கிருஷ்ணன் குட்டி மற்றும் ரமேசன் ஆகியோர் தலைமறை வாகி விட்டனர். அவர் களைப் பிடித்து விசாரிக்க அதி காரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:


weather counter Site Meter