Pages

Search This Blog

Tuesday, September 28, 2010

மாணவிகளை மிரட்டி உறவுகொண்ட காமக்கொடூரன் பாதிரியார்

சாத்தான் குளம் அருகே விடுதியில் தங்கி படித்த மாணவிகளை மிரட்டி பாலியல் உறவு கொண்டோம் என்று, புகாரில் சிக்கிய போதகர் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மணிநகரில் கிறிஸ்தவ ஜெபக்கூடம் மற்றும் ஆதரவற்றோர் விடுதி உள்ளது. இதை அன்புநகரை சேர்ந்த போதகர் சவுந்தரராஜன் என்பவர் நடத்தி வந்தார். இங்கு கிருஷ்ணகிரி, ஓசூர், பவானி, தருமபுரி, ஈரோடு, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 22 சிறுவர்களும் 12 சிறுமிகளும் தங்கி இருந்து அன்புநகர் பள்ளியில் படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டாக இங்குள்ள மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாகவும், இதில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த 15 வயது மாணவி கர்ப்பம் ஆனதாகவும் கூறப்படு கிறது. சாத்தான்குளம் டிஎஸ்பி ஸ்டான்லி மற்றும் காவல்துறையினர் அந்த விடு திக்கு சென்று விசாரணை நடத்தியதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. திருச்செந்தூர் ஆர்டிஓ பாக்கியம் தேவகிருபை, சாத்தான்குளம் வட்டாட் சியர் ஹாரீஸ், வருவாய் ஆய்வாளர் விஜயகுமாரி மற்றும் அதிகாரிகள் விடுதியை ஆய்வு செய்து அங்கிருந்த 12 மாணவிகள், 22 மாணவர்களை சிறீவைகுண்டத்தில் உள்ள அரசு விடுதிக்கு மாற்றினர். இதுதொடர்பாக விடுதி காப்பா ளரும் போதகருமான சவுந்தரராஜன், அவரது மகன் ஜெபஸ்டின் கிறிஸ் டோபர் ஆகியோரை காவல்துறை யினர் கைது செய்தனர். காவல்துறை யிடம் சவுந்தரராஜன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மணிநகரில் ஜெபக்கூடம் தொடங்கினோம். கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ண கிரி ஆகிய பகுதிகளில் இருந்து இலவசமாக படிக்க வைப்பதாக கூறி மாணவ, மாணவிகளை அழைத்து வந்தோம். பின்னர் அவர்களை இங்கு தங்க வைத்து அன்பு நகரில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தோம். தினமும் வாகனம் மூலம் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து மாலையில் அதே வாகனத் தில் அழைத்து வருவோம். எனக்கு உறுதுதுணையாக மகன்கள் ஜெபஸ் டின் கிறிஸ்டோபர், உதய பாலஜெப சீலன் ஆகியோர் இருந்தனர். நாளடைவில் மாணவிகள் மீது எங்களுக்கு மோகம் ஏற்பட்டது. முதலில் அவர்களை தொடுவதற்கு பயமாக இருந்தது. அதன்பிறகு மிரட்டி பணிய வைத்தோம். இதனை மாணவிகள் யாரும் வெளி யில் சொல்லவில்லை. அதன்பிறகு நாள்தோறும் அவர்களிடம் செக்சில் ஈடுபட்டு வந்தோம். இதில் ஒரு மாணவி பாதிக்கப்பட்டார். இந்த விவரம் அவரது பெற்றோ ருக்கு தெரிய வந்ததால் காவல்துறை யில் புகார் செய்யப்பட்டது. காவல் துறையினர் விசாரணை நடத்திய தில் நாங்கள் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரி வித்துள்ளார். காவல்துறையினர் தேடுவதையறிந்த சவுந்தரராஜனின் மற்றொரு மகன் உதய பாலஜெப சீலன் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின் றனர். தட்டார்மடம் காவல் நிலையத்தில் நடந்த வழக்கு தற்போது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற் றப்பட்டுள்ளது. கைது செய்யப் பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

No comments:


weather counter Site Meter