Pages

Search This Blog

Sunday, July 8, 2012

நம்மை முட்டாளாக்கவே பார்ப்பான், பண்டிகை, விழாக்கள்!

பேரன்புமிக்கத் தலைவர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! இந்தச் சிவகாசியில் என்னைப் பொங்கல் விழாக் குழுவினர் இன்று அழைத்துப் பொங்கல் விழாவினைப் பற்றிப் பேசச் சொல்லி இருக்கின்றார்கள். நான் இந்த ஊருக்குப் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு தடவை வந்து, இதே இடத்தில் பேசி இருக்கின்றேன். அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் காலஞ்சென்ற நண்பர் சவுந்தர பாண்டியன், பி.டி.ராசன் ஆகியவர்களுடன் சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்துள்ளேன்.

இந்த முப்பது ஆண்டுகளில் எவ்வளவோ மாறுதல் அடைந்திருக்கின்றது. இந்தப் பொங்கல் பண்டிகை தமிழனுடைய விழா என்று சொல்லும்படியான நிலையில் உள்ளது. அறிவுக்குப் பொருத்தமானதாகவும் அமைந் துள்ளது. மற்றப் பண்டிகைகள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும், முட்டாள்தன மான கருத்துகளை கொண்டனவாகவுமே இருக்கின்றன. ஒன்று கூடத் தமிழனுடையது - தமிழனுக்குச் சொந்தமானது என்று சொல்லத்தக்க நிலையில் இல்லை.

தீபாவளி விழாவை நம் மக்கள் புத்தி இல்லாமல் ஆடம்பரமாகக் கொண்டாடு கிறார்கள். அதன் தத்துவம் என்ன என்பதை எவனும் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது. பெரிய பட்டதாரிகள், புலவர்கள் என்பவர்கள் கூடக் கவலைப்படுவது கிடையாது. என்ன கதை அது?

இரணியனுடைய தம்பி இரண்யாட்சன் என்பான், இந்தப் பூமியையே பாயாகச் சுருட்டிக் கொண்டு போய்க் கடலில் போட்டு விட்டானாம். அதைத் திருமாலான வன் பன்றி உருவம் எடுத்துக் கடலுக்குள் சென்று மீட்டு வந்தா னாம். இது எவ்வளவு முட்டாள் தனமான கற்பனை என்பதை நம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூமி உருண்டை வடிவமானது என்று விஞ்ஞானி சொல்லுகின்றான். அப்படியே தட்டையாக இருந்த போதிலும், அவன் அதை எதன் மீது நின்று கொண்டு சுருட்டினான்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்படிக் கடலுக்குள் இருந்து மீட்டு வந்த அந்த பூமியை மீண்டும் விரித்து அதன் மீது அந்தப் பன்றி நடந்ததாம். அதனால் பூமாதேவிக்கு அந்தப் பன்றி மீது காதல் உண்டாயிற்றாம். இருவரும் சேர்ந்து ஒரு குட்டி போட்டார்கள். அவன் தான் நரகாசூரன் என்பவன். ஆணும், பெண்ணும் மனித இனத்தில் கூடிப் பிறப்பது தான் மனித உருவாகப் பிறக்கும் என்பது இயற்கை. ஆனால், பார்ப்பனர்கள் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான கதைகளை எல்லாம் எழுதி வைத்திருக்கின்றனர்.

அந்த நரகாசூரன் என்பவன் பெரிய வனாக ஆனதும், கடவுள்களை எல்லாம் உதைக்க ஆரம்பித்தான். தேவர்களுக்கெல் லாம் தொல்லை கொடுத்தான். அதனால், விஷ்ணு அவனைக் கொன்று போடச் சென்று முடியாமல் தன் மனைவியை விட்டுக் கொல்லச் செய்தான்.
அப்படி அந்த நரகாசூரன் இறந்த நாளைத் தான் நாம் தீபாவளி என்று கொண்டாட வேண்டுமாம். பார்ப்பானுக்குத் தொல்லை கொடுத்தவன் ஒழிந்ததற்குப் பார்ப்பான் சந்தோஷமாகக் கொண்டாடுகின்றான் என்றால், அதில் அர்த்தம் இருக்கின்றது. ஆனால், நம் மக்கள் இம்மாதிரி, நம்மவன் இறந்ததற்குத் துக்கப்படாமல், மகிழ்ச்சியாகக் குளித்து விட்டுப் புத்தாடை உடுத்திக் கொண்டு பலகாரம் சாப்பிட்டுக் குதியாட்டம் போடுகிறார்கள் என்றால், இந்த மக்களை என்ன என்று கூறுவது?

அடுத்து விநாயக சதுர்த்தி. பார்வதி யானவள் குளிக்கப் போகும் முன் தன் உடலில் இருந்த அழுக்குகளை எல்லாம் ஒன்று திரட்டி ஓர் உருவம் செய்து குளிக் கும் அறைக்கு வெளியே உட்கார வைத்து, தான் குளித்து முடிக்கும் வரை உள்ளே யாரையும் விட வேண்டாம் என்று கூறி விட்டுக் குளிக்கச் சென்றாளாம். வெளியே சென்றிருந்த சிவன் உள்ளே நுழைய, அந்த அழுக்குருண்டை ஆசாமி சிவனைத் தடுத்து நிறுத்தினானாம். உடனே சிவன் சினங்கொண்டு தலையை வெட்டி வீழ்த்தி விட்டுப் பார்வதியிடம் சென்று விட்டான். சங்கதி அறிந்த பார்வதியானவள் தன்னுடைய அழுக்கினால் உண்டாக்கப்பட்ட பிள்ளையைக் கொலை செய்ததற்காக மிகவும் விசனப்பட்டாளாம். சிவன் அவள் வருத் தத்தை மாற்ற ஒரு யானைத் தலையை வெட்டி வந்து அந்த அழுக்குருண்டைக்கு வைத் துப் பொருத்தினானாம். அதுதான் யானை முகப் பிள்ளையார் சங்கதி.

ராமன் பிறந்ததைக் கொண்டாட ராமநவமி, கிருஷ்ணர் பிறந்ததைக் கொண்டாட கிருஷ்ண ஜெயந்தி, சுப்பன், சஷ்டியில் பிறந்தான் - அதற்கு விழா. இப்படித்தான் அறிவுக்குப் பொருத்த மற்ற, காட்டுமிராண்டித்தனமான காரியங்களுக் காகத் தான் எல்லா விழாக்களும் ஏற்பட்டு இருக்கின்றன.

அத்தனை கதைகளும் பார்ப்பானால், நம்மை முட்டாள்கள் ஆக்க, நம்மை அடிமைப் படுத்த உண்டாக்கப்பட்ட கதைகளும், விழாக்களுமேயாகும். இதில் ஒன்று கூடத் தமிழ்நாடு சம்பந்தமானதாக இருக்கவில்லை. எல்லா விழாக்களும் இந்தக் கடவுள் இவனைக் கொன்றான், அந்தக் கடவுள் அவனைக் கொன்றான். அவன் 1,000 பேரைக் கொன்றான். இவன் 2,000 பேரைக் கொன்றான். இப்படி எல்லா விழாக்களும் கொலை பண்ணின சங்கதிகளுக்காக ஏற்பட்டதாகத் தான் இருக்கின்றன.

மதுரையில் வருஷா வருஷம் 8,000 சமணர்களைக் கழு மரத்தில் ஏற்றிக் கொன்றதற்காக விழா நடத்தப்படுகின்றது! கேட்டால் கூறுகின்றான் எங்கள் கடவுள் அன்பானவர், அருளானவர் என்று! உன் கடவுள்கிட்டே அருளும், அன்பும் எங்கே இருக்கிறது? எதற்கு அதன் கையில் வேலா யுதம், சூலாயுதம், அரிவாள், கொடுவாள், ஈட்டி, கொட்டாப்புளி இவற்றைக் கொடுத்து இருக்கின்றாய்? அதெல்லாம் கொலைகாரப் பசங்கள், திருட்டுப் பசங்கள் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்களாயிற்றே! இவை எல்லாம் உன் கடவுள் கையில் ஏன் கொடுத் திருக்கின்றாய்?
உலகத்திலே நாம் சங்கங்கள் வைத்துக் கொண்டு - இலக்கியங்கள் வைத்துக் கொண்டு நாகரிகமாக வாழ்ந்த காலத்தில், சுத்தக் காட்டுமிராண்டிகளாகத் துணி கூட உடுக்கத் தெரியாத மக்களாக வாழ்ந்த அய்ரோப்பிய மக்கள் எல்லாம். இன்று எவ்வளவோ முன்னுக்கு வந்து விட்டார்கள். அதிசயமான விஞ்ஞான அற்புதங்கள் எல்லாம் கண்டுபிடித்துக் கொண்டு இருக் கின்றார்கள். ஆனால், நாம் எந்த நிலையில் இருக்கின்றோம்? பழைய சிக்கி முக்கிக் கல் காலத்தில், கட்டை வண்டிக் காலத்தில் ஏற்பட்ட கடவுளையும், மதத்தையும் தானே கட்டிக் கொண்டு அழுகின்றோம்.

ஆரக்கால் இல்லாத மரப்பட்டரை வண்டியில் மணிக்கு மூன்று மைல் போய்க் கொண்டு இருந்த நாம், இன்று சைக்கிள், மோட்டார் ரயில், அதற்கும் மேலாக மணிக்கு 1,000, 1,500 மைல் போகும் ஆகாய விமான காலத்தில் வாழ்கின்றோம். அமெரிக்காவின் ஜனாதிபதி அய்சனோவர் மாலை 8 மணிக்கு அங்கு ரேடியோவில் பேசுகின்றார் என்றால், நாமும் 8 மணிக்கு உடனுக்குடன் கேட்கும் வாய்ப்புப் பெற்று இருக்கின்றோம் என்றால், நம் கடவுள்கள் பழைய ஆரக்கால் இல்லாத முழுமையும் மரத்தாலேயே செய்யப்பட்ட கட்டை வண்டிக் காலத்தை நினைவுபடுத்து வது மாதிரி, மரக்கட்டைகளால் ஆன தேரில் தானே போய் வருகின்றனர். கொஞ்சம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா?

நம் மக்களை எவ்வளவுக்கெவ்வளவு மடையர்களாக, காட்டு மிராண்டிகளாக ஆக்கி வைத்திருக்கின்றார்களோ, அவ்வளவுக் கவ்வளவு பார்ப்பானுக்குப் பிழைப்புக் கிடைக்கும். அதனால் தான் அடிக்கடிப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பண்டிகைகளையும், விழாக்களையும் நம் மக்களைக் கொண்டாடச் செய்து, அவர்களுடைய மடமை எத்தனை டிகிரி உயர்ந்திருக்கின்றது என்று பார்த்துக் கொள்ளுகின்றார்கள். எப்படிப் பார்ப்பனர்கள் தம் அறிவினைக் கெடுத்து மடமையில் ஆழ்த்தி இருக்கின்றார்களோ, அது போலவே சமுதாயத் துறையில் நம்மை நான்காம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி மக்களாக, சூத்திரர்களாக, பறையன், சக்கிலி, பஞ்சமர்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர். இந்த இழிநிலை பற்றி இன்று எங்களைத் தவிர, எந்த அரசியல் கட்சிக்காரன்களும் கவலைப்படுவது கிடையாது. ஆனால், சட்டசபைக்கும், பார்லிமெண்டுக்கும் பொறுக்கித் தின்ன மட்டும் சொல்லுகின்றார்கள். 100-க்கு 97 பேராக உள்ள இந்த நாட்டிற்குச் சொந்தக் காரர்களான நாம், உடல் உழைப்புக்காரர் களாகிய நாம் ஏன் இழிந்த ஜாதி? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் ஆக இருக்க வேண்டும்? 100-க்கு மூன்று பேராக உள்ள இந்த நாட்டிற்குச் சொந்தமில்லாதவன். உடலுழைப்புச் செய்யாதவன் ஆன பார்ப்பான் ஏன் மேல் ஜாதியாக இருக்க வேண்டும்? இதுபற்றி எவனாவது சிந்திக்கின்றானா? எதற்காக இந்த நாட்டில் பார்ப்பான் இருக்க வேண்டும்? அவனால் இந்த நாட்டிற்கு ஒரு கடுகு அளவு பிரயோசனமாவது உண்டா?

கக்கூஸ் எடுப்பவன் இல்லாவிட்டால் நகரமே நாறிப் போகும். அதற்காகக் கக்கூஸ் எடுப்பவன் இருக்க வேண்டும். துணி வெளுக்க வண்ணான் வேண்டும். மயிர் சிரைக்க சவரத் தொழிலாளி இருக்க வேண்டும். உடை நெய்ய நெசவாளி, உழுது உணவு தானியம் விளையச் செய்ய உழவன் வேண்டும். ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் எந்த வேலையும் செய்யாமல் சமுதாயத் தில் சேர்ந்திருக்க வேண்டும்? இவர்கள் இல்லாவிட்டால் எந்தக் காரியம் கெட்டுப் போகும்? சொல்லட்டுமே. தலைவணங்கி ஏற்றுக் கொள்ளுகின்றேன். வீணாக ராமசாமி, பார்ப்பானைத் திட்டுகிறான், திட்டுகிறான் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

இன்று உத்தியோகத் துறையினை எடுத்துக் கொண்டால், 100-க்கு மூன்று பேராக உள்ள இவர்களே, 100-க்கு 70, 80 பங்குகளுக்கு மேலாகவே பெற்றுக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். நம் வரிப் பணத்தில் இருந்து 60 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் முழுக்க முழுக்க இந்தப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் தானே நடைபெற்று வருகின்றது. ரூ.2,000, ரூ.1,500 இப்படிப்பட்ட பெரிய பதவியில் இருந்து சாதாரண கிளார்க் பதவிகளில் கூட அவர்கள் தான். ரயில்வே அக்கவுண்டெண்ட் ஆபீசில் வேலை பார்ப்பவர் எல்லாம் பார்ப் பனர் மயம்! இது பற்றி எவன் கவலைப்படுகின்றான்? மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்றுப் பொறுக்கித் தின்ன சட்டசபைக்கும், பார்லி மெண்டுக்கும் போகின்றார்களே தவிர, எவனாவது இதுபற்றிக் கேட்கின்றானா?

ஆனால், பார்ப்பானுடன் சேர்ந்து கொண்டு எவன் தமிழனுக்காக நன்மை செய்கின்றானோ அவனை ஒழிக்கிறேன் என்று மட்டும் வந்து விடுகிறான். இன்று நான் எங்கு போனாலும் நீயேன் காமராசரை ஆதரிக்கின்றாய் என்று கேட்கின்றார்கள். நான் காமராசாரை ஆதரிக்காமல் இந்தத் தேர்தலில் இருந் திருந்தால், அந்த இடத்தில் யார் வந்திருப்பார்? ராஜகோ பாலாச்சாரியோ அல்லது அவரது அடிமைகள் தானே வந்திருப்பார்கள்? ராஜகோபாலாச்சாரி கொல்லைப்புற வழியாக மந்திரிசபை ஏற்றுக் கொண்ட சில மாதங்களுக்குள் பச்சை மனு தரும ஆட்சியை அல்லவா நிலைநாட்டி விட்டார். அவனவன் ஜாதித் தொழிலைப் படிக்க வேண்டும். அரை நேரம் மட்டும் பள்ளிக்கூடம் வந்தால் போதும். பாக்கி அரை நேரம் வண்ணான் மகன் வெளுக்க வேண்டும். அம்பட்டன் மகன் சிரைக்க வேண்டும். சக்கிலி மகன் செருப்புத் தைக்க வேண்டும். குயவன் மகன் சட்டிப்பானை செய்யப் பழக வேண்டும் என்றல்லவா சட்டம் போட்டு விட்டான்?

அவரை இந்தச் சட்டசபைக்காரர்களால் என்ன செய்ய முடிந்தது? நான் தானே ஒரு மாதத்துக்குள்ளாக இந்த உத்தரவை மாற்றாவிட்டால் கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் சொல்லும்போது உபயோகிக்கலாம் என்றவுடன், தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதாகக் கூறி விட்டு ஓடினார்.

பிறகு காமராசர் வந்தார். ஆச்சாரியாரின் வருணாசிரமக் கல்வித் திட்டத்தை, வந்ததும் - வராததுமாக உடனே எடுத்துப் போட்டார். ஆச்சாரியாரால் மூடப்பட்ட 3,000 பள்ளிக் கூடங்களையும் திறந்து, மேலும் 4,000 புதிய பள்ளிகளையும் திறந்தார். பள்ளிக்கூடத்துப் பசங்களுக்கு மத்தியான சாப்பாட் டுக்கு வகை செய்தார்! ஏராளமான அய்ஸ்கூல் களையும், காலேஜ்களையும் ஏற்படுத்தினார்! அய்ஸ்கூல் வரை சம்பளம் இல்லாமல் படிக்க ஏற்பாடு செய்தார்.

ஆச்சாரியார் காலத்தில் எஞ்சினியரிங், மெடிகல் காலேஜ், இவற்றில் பார்ப்பனப் பிள்ளைகள் 100-க்கு 60, 70 பேர் படித்து வந்தார்கள். பாக்கியில் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்பதன் கீழ் பார்ப் பானுக்குப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படும் மலையாளி களையும், கிறித்தவர், முஸ்லீம்கள் இவர் களுக்குக் கொடுத்தது போக மீதி நம்மவர் களுக்கு 10, 12 இடங்கள் தான் கிடைக்கும்.

ஆனால், காமராசர் முதன்மந்திரியாக வந்த பிறகு நம் பசங்கள் 60, 70 பேர்களும் பாக்கியில் கிறித்தவர்கள், முஸ்லீம் போகப் பார்ப்பாரப் பசங்கள் 10, 15 பேர்கள் தான் வரும்படியான நிலையை இன்று உண்டாக்கி இருக்கின்றார்.

மற்றும் ராஜகோபாலாச்சாரியார் மந்திரியாக இருந்தபோது, கூன் குருடு, சுடுகாட்டுக்குப் போக வேண்டிய வயதான பார்ப்பனர்களுக்கெல்லாம் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொண்டே இருந்தார். எல்லா பெரிய உத்தியோகங்களிலும் பார்ப்பனராகவே பார்த்துப் போட்டு வந்தார்.

காமராசர் வந்தபிறகு தான் நம் தமிழர்கள் சில பேர்களாவது உயர்ந்த பதவிக்கு வரும்படியான நிலை வந்திருக்கின்றது. இன்று முக்கியமான இலாக்காக்களில் பெரிய பதவிகளில் எல்லாம் நமது தமிழர்களே பதவி வகிக்கின்றனர். இப்படி இருப்பதனால் அந்த அந்த இலாகாக்களில் வேலை பார்க்கும் நமது கீழ்த்தர உத்தியோகஸ்தர்களுக்குத் தானே நன்மை.

தமிழர்களுக்காக, தமிழன் நன்மைக்காக என்றே கட்சி வைத்துத் தொண்டாற்றி வரும் எங்களுக்கு இப்படித் தமிழன் நலத்தில் அக்கறை கொண்ட ஒருவரை ஆதரிப்பது தான் கடமை.

நான் சென்ற தேர்தலில் மட்டும் அல்ல, இந்தக் காங்கிரஸ் கட்சி உயிரோடு இருக் கின்றவரை காமராசரே முதன்மந்திரியாக இருக்க வேண்டுமென்று கருதுபவன். காங்கிரஸ் ஒழியும்போது வேண்டுமானால் காமராசர் ஒழிந்து போகட்டும். கவலை யில்லை. அதுவரை அவர் தான் முதன் மந்திரி யாக இருக்க வேண்டும்.

அவர் பெண்டு பிள்ளை இல்லாதவர். ஆகையால் அவர் களுக்கென்று சொத்து முதலியவை சேர்த்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிலையில் இல்லாதவர். என்னைப் போலவே அவரும் ஒரு மொட்டை மரம். எனக்குப் பிள்ளைக் குட்டிகள் கிடை யாது. எனக்கும் காமராசர் தயவால் ஆக வேண்டிய காரியம் ஒன்றும் கிடையாது. இப்படிக் கல்வித் துறையிலும், உத்தியோகத் துறையிலுமாக காமராசர் செய்திருக்கின்ற அம்மாறுதல்களால் எங்கள் வீட்டுப் பிள்ளைகளா பலன் பெறப் போகிறார் கள்? 100-க்கு 97 பேராக உள்ள நம் சமுதாயம் முழுமைக்கும் தானே அதனால் பலன் ஏற் பட்டிருக்கின்றது.

19.1.1959 அன்று சிவகாசி பொங்கல் திருநாளில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை. (விடுதலை 31.1.1959.)

08-07-2012  (http://viduthalai.in/page-2/37903.html)

Sunday, May 27, 2012

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?

தோழர்களே!

தலைவர் அவர்கள் என்னை உங் களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந்நியாசம் இருக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் பல சொற் களோடு அறிமுகப்படுத்தினார்கள்.

முதலில் நான் அவரது பாராட்டு தலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

தமிழ் பாஷை

நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன். நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமே யாகும். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்த வன். என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டா மல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந் தேன். காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல் லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள். வீட்டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ் வொரு மாணவனும் எச்சில் துப்பி விட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டுமென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும். அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழையறக் கூட எழுத முடியாது என்பது தான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத்துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

பொதுவாகவே பள்ளிக் கூடங்களிலும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்ப் பந்தமுண்டு. இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது. அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப்பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது. தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரிய தரிசி சொன்னார். ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேசவேண்டிய வனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டிய வனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும் போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும்படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது. மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார்களே என்று பயப்பட வேண்டிய வனாய் இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசுவதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்

தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபார பற்று என்று தலைவர் சொன்னார். அதற்காகவே பாடுபடு கிறேன் என்றும் சொன்னார்.

தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசியபாஷை என்பதற்காகவோ, அகத்தியரால் உண் டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்று கிடையாது. அது மூடப்பற்று - மூட பக்தியே ஆகும். குணத் திற்காகவும், அக் குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.

எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன். மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார்களுடையது என்பதற்காக அல்ல.

அன்பு என்பது...

உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரிடத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன்களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும். புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும்வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக்கும். மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும். தகப்பனுக் கும் - பிள்ளைக்கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்துவிட்டால் பிள்ளையைப் பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது. 90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக் காது. தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை இறந்துபோனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசிகளில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண் பிள்ளை இறந்து போனால் படுவதில்லை. மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியோ, இன்பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுபவிப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ்வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.

அதுபோல்தான் நான் தமிழினிடத் தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்ட மேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத் துகிறேன்.

அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க்கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
நாடும் - காலமும்

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒருவித பழக்க வழக்கமும், அவைகளிடத் தில் சில விருப்பு வெறுப்பும் இருந்து வருவதுடன் விருப்பமானதைப் பெருக் கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப் பதுமுண்டு. ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டா ருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.

ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கலாம். ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழை யது - புதியது என்ப தற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக் காக அவன் போராடவேண்டியவனே ஆவான். மற்ற நாட்டு பாஷை எதினா லாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.

இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள். இங்கிலீஷால் தீமை இல் லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத் திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன். இது என் அபிப்பிராய மாத்திரமல்ல. இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லி இருக் கிறார்கள். அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னி யில் போற்றப்படுகிறார்கள். ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என்பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக் கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத் தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம். ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன்னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக் கின்றன என அறிகிறேன். ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.

பழங்காலம்

பழம் பெரியோர்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற் காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும். யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர்களைவிட, பழம் பெரியோர் களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர் களே ஆவோம். ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்பு களும் இன்று நமக்கு இருந்துவருகின்றன. இதன் மூலம் நாம் எவ்வளவோ முற் போக்கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக்கிறோம். இனி யும் எவ்வளவோ காரியங்களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.

முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்ததாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள். இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறைகூறவில்லை. அக்கால மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந்தது. இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என்கிறேன்.

இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமையர்கள் கேட்கலாம். பழங்காலத் தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச் சார்புகளும் இருந்திருக்கலாம். ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன் களும் உடையனவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்க லாம்; பூகம்பத்தால் மறைந்தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம். இப்போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத் திற்கு எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்து தான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப்பதைக் காண் கிறோம். ஆகையால், பெரும்பான்மை யான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என் பது எனது அபிப்பிராயம். இவற்றை யெல்லாம் மாணக்கர்களாகிய உங்களுக் குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர்களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.

தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக் காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள். நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது. நாம் பயன் படுத்துவதுமில்லை. உதாரணமாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற்றுக்கு சோச்சி என்றும், படுத்துக்கொள் வதற்கு சாச்சி என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். இன்று நாம் அவற்றையா பயன்படுத்துகிறோம்? அது போவே பாஷைகள் காலத்துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்கபடி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும். தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத்தில் இல்லாத பல காரியங்கள் அரசியல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரண மாகவும் இப்போது ஏற்பட்டு, அவற் றிற்காக பல அந்நிய பாஷை வார்த் தைகள் இன்று பழக்கத்தில் இருக் கின்றன. இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமா? அவசியமான வற்றை வைத்துக்கொள்ள வேண்டும். அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப்பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விடலாம்.

கேடு பயப்பவைகளை வார்த்தைகளா னாலும், கலைகளானாலும், இலக்கியங் களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதே யாகும். இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப்பதும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்களே! இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன். இதற்கு மேற்பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ்வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.

(21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - 06.08.1939http://viduthalai.in/page-2/34897.html

திராவிடர் - வார்த்தை விளக்கம்

திராவிடர் மாணவர் கழகம் என்பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப் படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவை போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். அவற்றிற்கு உங் களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண் டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களு மாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்து அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல் லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்ல வில்லை. நமக்குச் சிறு பிரயாயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினை விலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில் லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற் பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலி களாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க் கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட் பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறை பாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர் களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒரு கூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ் வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென் படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள் ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக் கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப் பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழி நிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன் றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார் களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனி யாமல் அது திறக்கப்படவும், உடைக்கப் படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப் பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப் பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங் கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண் டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத்தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டு கோல்தான் திராவிடர் என்பது.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகி விட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதே போல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக் கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிராமண னுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லு வதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுப விப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயன் அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த் திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும்.

கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்து போய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ் டானங்கள் கலந்துவிட்டனவா? பிரா மணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தா லென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கறுப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களு மாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமு மில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்து கொண்டிருந்த அவனைப் பறையனாக்கு வதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவை அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்துவிட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையது களுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவை இன்றைக்கும் அப்படியே பின்பற்றப் படவேண்டும் என்றால் அது அறியாமையே யாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார் கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக் காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற் போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டு வருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகிப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவை மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித் தாவது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டுபிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறை களை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945http://viduthalai.in/page-2/34450.html

Saturday, April 28, 2012

தேர்தலில் வென்றிருந்தால் ராமதாஸ் இந்த கருத்தைப் பேசுவாரா?

தமிழர்களின் நலன்களை திராவிட அரசியல் புறக் கணித்துவிட்டதாக தற்போது ஒரு கருத்தை சில அரசியல் கட்சிகள் சொல்கின்றனவே?

இப்போது திராவிடம் என்ற கருத் தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. அது வாக்கு வங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறை தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். கட்சி அரசியல் சார்ந்த குழப்படியாக இது உள்ளது. திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அடையாளச் சொல்லாடல் ஆகும். அந்தப் பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது. நான்கு தென்மாநிலங்களில் உள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமைக்கூறுகள் நிலவுகின்றன. மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். தாய் மாமனுக் கான மரியாதை என்பது இந்த நான்கு மொழிக்காரர்களுக்கிடையே இன்றும் தொடர்கிறது. இரண்டாவது தாய் தெய்வ வழிபாடு. மூன்றாவது இறந்த உடலுக் கான மரியாதை. இது நான்கு மொழிக்காரர்களிடமும் இருக்கிறது.

இன்றைக்கும் பிராமணர்கள், சடலத் துக்கு மரியாதை கொடுப்பதில்லை. பிராமணர்களுக்கும், பிராமணர் அல்லாத வர்களுக்கும் இன்னும் நீடித்திருக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பிராமணர்கள் இன்றும் கருப்பட்டிக் காப்பி சாப்பிடுவ தில்லை. ஏனெனில் கீழ்சாதியினராகக் கருதப்படுபவர்கள் கையில் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால், அவர்கள் அதை விரும்புவதில்லை. பிராமணர் வீடுகளில் பீன்ஸ்கூட போய்விட்டது. ஆனால் இன்னமும் பனங்கிழங்கு செல்ல முடியவில்லை. ஏனெனில் பூமிக்குக் கீழே விளையும் பொருளை சூத்திரனும், பன்றியும் சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் அதை அவர்கள் தொடுவ தில்லை. ஆம்லெட் சாப்பிடுகிறார்கள். உருளைக்கிழங்கு சாப்பிட ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் அவையெல்லாம் துரைமார் கொண்டு வந்த பொருட்கள். சங்கீத சீசனை டிசம்பரில் வைப்பது அவர்களது கண்டுபிடிப்புதானே. ஏன் தொண்டைக் கட்டுகிற டிசம்பரில் சங்கீத சீசன் வருகிறது? கோடையில் தானே வைக்க வேண்டும்? வெள்ளைக்காரர்களை மகிழ்விக்க அவர்களுக்கு உகந்த டிசம் பரில் சங்கீத கச்சேரிகளை வைத்தார்கள். அவர்களுடைய கிறிஸ்துமஸ் விடு முறையில் மகிழ்விக்கத்தானே இந்த ஏற்பாடு? இது இன்றும் தொடர்கிறது. அவர்களின் சாமிக்குக்கூட திரையை மூடித்தானே தளிகை வைக்கிறார்கள். ஆனால் சுடலைமாடனுக்கு முன்னால் பகிரங்கமாக ஆட்டை அறுத்துப் போட்டி ருப்பார்கள். அதை எல்லாரும் பார்க்கலாம். அதனால் பல வழக்கங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று பெரியார் சொன்னதை தமிழ்த் தேசியர்கள் இன்றும் சுட்டிக்காட்டு கிறார்களே?

பெரியார் நிறைய அதிர்ச்சி மதிப்பீடு களை வைத்தார். ராமன் படத்தை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார்தானே செய்தார். வேறு எந்த தமிழறிஞரும் செய்ய முன்வரவில்லையே. அவர் காலத்து தமிழறிஞர்களான மறைமலை அடிகளோ, தெ.பொ.மீயோ, மு.ராகவையங்காரோ செய்யவில்லையே. காட்டுமிராண்டி பாஷையைத் திருத்துவதற்கு அவர் முயற்சி எடுத்தவர் இல்லையா. உரைநடை என்பது மணிக்கொடியால்தான் வளர்ந்தது என்று வேதவசனம் மாதிரி சொல்கின்றனர். ஆனால் 1925 இல் பெரியாரின் தலையங் கங்களைப் பார்க்கவேண்டும். பெரியாரின் உரை நடை அத்தனை அற்புதமாக இருக் கிறது. இதுவெல்லாம் பெரியாரைத் திட்டி அதிகாரத்தைத் தக்கவைக்கிற முயற்சிகள் தான்.

கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் தமிழகத்தில் ஆட்சி செய்யமுடிகிறது என்றும், ஆனால் தமிழர்கள் அவர்கள் மாநிலத்தில் போய் முதலமைச்சராக முடியுமா என்று ஒரு தர்க்கம் முன்வைக்கப்படுகிறதே...

தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வாக்களித்தது இங்குள்ள தமிழன் தானே. அவன் ஒரு குறுகிய எண்ணத் துக்குள் அடைபட்டவன் அல்ல என்பதைத்தானே காட்டுகிறது. இந்தியாவிலேயே அரசியல் தலைவர்கள் சாதிப்பட்டம் போடாமல் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தானே. கருணாநிதி, ஜி.கே.வாசன் ஆகியோரின் சாதி, டெல்லியில் யாருக்காவது தெரி யுமா? ஆனால் வட இந்தியாவில் பார்த் தீர்கள் எனில் குப்தாக்கள், சர்மாக்கள் என எல்லாரும் சாதிப்பெயர் கொண்டவர் கள்தானே. கேரளாவில் கூட நம்பூதிரி, மேனன் எல்லாம் இருக்கிறார்களே. அந்த வகையில் சாதிப்பட்டத்தைத் துறந்தவன் தமிழன்தானே. இது பெரியாரின் வெற்றி அல்லவா. யாவரும் கேளிர் என்ற அடிப் படையில் தெலுங்கனும், மலையாளியும், கேளிர்தான் என்று வாழ்பவன் தமிழன். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் தமிழ னுக்கு விசுவாசமாக இருக்கிறாரா என்றுதான் பார்க்கவேண்டும் என்று பெரியார் தெளிவாகச் சொல்கிறார். காவிரி விஷயத்தில் ஜெயலலிதா தமி ழகத்தை விட்டுக்கொடுக்கமாட்டார் அல்லவா? அப்புறம் என்ன? தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துப் போவதில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வைகோ தெலுங்கர்தானே. அவரை தமிழர் இல்லையென்று சொன்னால் தமிழன் ஒத்துக்கொள்வானா?

திராவிடர் கழகம் மற்றும் திமுகவை தமிழர் கழகம் என்றும் தமிழர் முன்னேற்றக் கழகம் என்றும் வைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்திருப்பது பற்றி...

அதை அவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது புறக்கணிக்க வேண் டும். அது வாக்குவங்கி அரசியலோடு சம்பந்தப்பட்டது. ராமதாஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் இப்படிப் பேசியி ருப்பாரா? இது அரசியல். அறிவியல் சார்ந்த பிரச்சினை அல்ல.

திராவிடம் என்கிற கருத்தாக்கம் இன்னும் வலுவானது என்று நினைக் கிறீர்களா?

வலுவாக இருக்கிறது என்று கருத வில்லை. அர்த்தமுடையதாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

திராவிடமொழிக் குடும்பம் என்று கால்டுவெல் கூறினார். அவர்தான் இந்த திராவிடக் கருத்தாக்கத்துக்கு ஆணிவேர் என்று அவரையும்கூட தமிழ்த் தேசியர்கள் கூட்டங்களில் விமர்சிக்கிறார்கள்?

அவர் இன்னொன்றையும் சொன்னார். அது தமிழ்த்தேசியர்களுக்கு உவக்காத விஷயம். பறையர்களை தனது முதல் பதிப்பில் தூயதமிழ் சாதி என்று எழுதியி ருந்தார். அதற்கடுத்த பதிப்பில் அந்தப் பகுதி அகற்றப்பட்டு விட்டது. அந்தப் பகுதியோடு சேர்ந்து தற்போது ஒரு பதிப்பு கவிதாசரண் மூலம் வெளியிடப்பட் டுள்ளது. அத்துடன் கால்டுவெல் இன வரைவியலாளர்தானே தவிர அரசியல் வாதி அல்ல. அவர் வரலாற்றாய்வாளரும் கூட. அவருடைய கருத்துகளை எடுத்துக் கொள்வதும், மறுப்பதும் இவர்களது நேர்மை சார்ந்தது.

ராமதாஸ் சொல்லும் அதே கருத் துகளின் போக்கிலேயே விரக்தியான மனநிலையில் தலித்து களும் சொல் கிறார்கள். திராவிட அரசியல் ஏமாற்றி விட்டது என்ற விமர்சனத்தை வைக் கிறார்கள். ஆனால் அம்பேத்கரின் எழுத்துகளை முதலில் மொழிபெயர்த்து இங்கே 1935-லேயே அவரை அறிமுகப் படுத்தியவர் பெரியார். திராவிட இயக்கத் தலைமைகள் பின்பு, இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பை நம்பி நாசமாகப் போயின. அப்படி நடந்ததற்கு தொண்டர் கள் அல்ல காரணம்.

தமிழ்த் தேசிய இயக்கத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

எந்த இடத்துக்கும் இந்த இயக்கம் நகரமுடியாது. உலகிலேயே வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுதான் மிகவும் எளிமையானது. ஆனால் அதற்கு நீடித்த மதிப்போ, பலனோ கிடைக்காது.

பார்ப்பனர்கள் மேல் உள்ள வெறுப்பை முன்வைத்து தானே பெரி யாரும் அரசியல் செய்தார் என்கி றார்கள்?

பார்ப்பனர்கள் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் பார்ப்பனரல்லாதார் அரசியலை முன் வைத்து உண்மையான சமூக அதிகாரத் தையும் அரசியல் அதிகாரத்தையும் வென்றெடுப்பதற்கான அரசியலைச் செய்தவர் பெரியார். அதை வெறுப்பரசியல் என்று குறுக்கக் கூடாது. இன்று மாறியிருக்கும் தமிழ்ச் சமூகநிலையை வைத்து, அவர் செய்த அரசியல், வெற்றி பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

- (நன்றி: த சன்டே இந்தியன் 29 ஏப்ரல் 2012)

விடுதலை வியாழன், 26 ஏப்ரல் 2012 14:08
http://www.viduthalai.in/component/content/article/97-essay/32803-2012-04-26-08-43-53.html 

பாவேந்தர் செய்த பாவம் என்ன ?

பெங்குயின் வெளியீட்டகம் உலகளாவிய அளவிலும், இந்திய அளவிலும் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்து வருகிறது. அறிவார்ந்த வாசகர் உலகம் அதற்கு உரிய நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. 2009 என்று ஆண்டு குறிப்பிட்டு பெங்குயின் வைக்கிங் வெளியீட்டகம் The Rapids of a Great River என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளி யிட்டுள்ளது. இந்தத் தலைப்பை ஒரு மகாநதியின் பிரவாகம் என்று நாம் தமிழில் ஆக்கிக் கொள்ளலாம்.

இந்நூலில் சங்க இலக்கியக் கவிதை கள் தொடங்கி 1974 ல் பிறந்தவரான கவிஞர் குட்டி ரேவதி யின் கவிதைகள் வரை தமிழ்க் கவிதைகள் தொகுக்கப் பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளன.

தொகுப்பு நூல் என்பது (Anthology) முழுநூல் அல்ல. இது எல்லாருக்கும் தெரிந்த விசயமே; எல்லாரும் உடன் படுகிற விசயமும் ஆகும். தொகுப்பா சிரியர் எல்லாரும் இது பற்றிக் கருத்து தெரிவித்துப் பொறுத்துக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்வார்கள். இது மாதிரியான குறிப்பு ஏறத்தாழ தொகுப்பு நூல்கள் எல்லாவற்றிலும் இடம் பெறத்தான் செய்கின்றன.

இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. எனவே, எல்லாரும் குறிப்பிடுவது போலவே இவர்களும், ‘An anthology such as this, however representative it needs to be must, in the end, The subjective. We are aware that readers familiar with Tamil poetry may find a few of their favourite poems missing’ என்று பாதுகாப்பாக, எச்சரிக் கையாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு தொகுப்பு நூல் என்பது முழுமையானதாக இருக்க முடியாது என்பதும், சில கவிதைகள் அல்லது சில கவிஞர்கள் விடுபட்டுப் போவது என் பதும் நமக்கும் புரியத்தான் செய்கிறது.

இந்தத் தொகுப்பு நூலின் அடிப் படையான நோக்கம் குறித்து தொகுப் பாளர்கள் தெளிவுபடுத்தும் இடத்தில், தமிழ்க் கவிதை என்பது மிக நீண்ட வளமான மரபை உடையது. இதில் பழைமையும் உண்டு; புதுமையும் உண்டு. பழைமைக்கும் புதுமைக்குமான தொடர்பை, இணைப்பைத் தெளிவு படுத்தும் நோக்கத்துடனேதான் நாங்கள் இந்தத் தொகுப்பைத் தொகுத்தளித் திருக்கிறோம் என்று குறிப்பிட் டிருக்கிறார்கள்.

தொகுப்பாளர்களின் ஆர்வத்தை, உழைப்பை, நோக்கத்தைப் பாராட்டத் தான் வேண்டும். இது ஓர் அரிய முயற்சி என்பதில் எந்தவித அய்யப்பாடும் கொள்வதற்கில்லை.

நூலின் முதலாவது பாகத்தில் கவிதைகள் சங்க இலக்கியத்தில் தொடங்கி கோபால கிருஷ்ண பாரதி யுடன் முடிகிறது. நூலின் இரண்டாம் அத்தியாயம் மகாகவி பாரதியில் தொடங்கி, குட்டி ரேவதியுடன் நிறைவு பெறுகிறது.

நாம் கேட்கும் கேள்வி இவ்வளவு பெரிய, அரிய முயற்சியில், நல்ல முயற்சியில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனுக்கு இடம் இல்லையே, ஏன்? என்பதுதான். பாவேந்தர் ஏன் சேர்க் கப்படவில்லை? காரணம் என்னவாக இருக்கக்கூடும்? என்று எப்படி யோசித்துப் பார்த்தாலும் சரியான காரணம் நமக்குப் புலப்படவில்லை.

முதலாம் அத்தியாயத்தை கோபாலகிருஷ்ண பாரதியுடன் நிறைவு செய்து கொண்டது சரியே; அதே போல, இரண்டாம் அத்தியாயத்தை மகாகவி பாரதியுடன் தொடங்கிக் கொண்டதும் சரியே. இரண்டாவது அத்தியாயத்தில், பாரதியிலிருந்து குட்டி ரேவதி வரை புதுமைத் தமிழ் பிரவாகம் எடுத்து வருகிறது என்று கணித்து, தொகுப்பு முயற்சியில் இறங்கியதும் சரியே!

ஆனால், புதுமைத் தமிழ் என்று வரும்போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இடம் பெற்றிருக்க வேண்டும்தானே! பாவேந்தரின் அரசியலை விட்டு விடுவோம். அவரது ஆரிய எதிர்ப்பு, திராவிட ஆதரவு என்ற நிலைப்பாடுகளையும் விட்டுவிடுவோம். அரசியல், இனப் பாகுபாடுகளை யெல்லாம் தாண்டி, விலக்கிச் சிந்திக்கும்போது பாவேந்தரின் குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, அமைதி (நாடகம்) ஆகிய மூன்றும் ஒருபுதிய அணுகுமுறைப் படைப்புகள் என்பதில் என்ன சந்தேகம்? இயற்கையைப் பாடிய ஏந்தல் என்றும் உலகம் முழுவதிலும் பாராட் டப்படுகிறது ஆங்கிலக் கவிஞர் வொர்ட்ஸ் வொர்த் என்பவரையும் தாண்டி, ஏன் வென்று நிற்கிற கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். மகாகவி பாரதியாரைத் தேர்வு செய்துவிட்டு,, அடுத்து, தொகுப்பாளர்கள், பாரதி தாசன், கவிமணி, நாமக்கல்லார் எல் லாரையும் விட்டு விட்டு, ஒரே பாய்ச் சலாக நா. பிச்சமூர்த்திக்கு வந்து விடுகிறார்கள்.

பாரதிக்கு அடுத்ததாக பிச்ச மூர்த்தியைத் தேர்ந்து எடுப்பதற்குக் காரணமாக தொகுப்பாளர்கள் சொல் லும் போது He broke free of traditional forms while introducing new themes என்று குறிப்பிட்டுக் கொள் கிறார்கள். பிச்சமூர்த்தி தொடங்கி குட்டி ரேவதி வரையிலான புதுக் கவிதைக்காரர்கள் செய்துள்ள யாப்புப் புரட்சி ஒரு வகையான ஆசிரிய யாப்பு மாற்று வடிவமே என்ற கருத்தை தொகுப்பாசிரியர்கள் அறியமாட்டார் கள் போலும்.

கம்பன் நமக்களித்த விருத்தப்பா வகைகளையும், பாவேந்தர் பாண்டியன் பரிசு நூல் முலமும், குடும்ப விளக்கு மூலமும், அழகின் சிரிப்பு மூலமும் அளித்துள்ள விருத்தப்பா வகைகளை யும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், பாவேந்தர் எத்தனை எத்தனை விருத் தப்பா புதுமைகளையும் எளிமை களையும் படைத்துத் தந்துள்ளார் என்று தெரிய வரும்!

மகாகவி பாரதியை எடுத்துத் தொகுத்துவிட்டு, அடுத்து, ஒரே பாய்ச்சலாக பிச்சமூர்த்திக்கு வருகி றோமே. இடையில் சுப்புரத்தினம் என்ற பெயரை விடுத்து, பாரதி தாசன் என்ற பெயர் புனைந்து, தமிழ்க் கவிதை உலகில் ஈடும் இணையும் சொல்லிக் காட்டமுடியாத அளவில் அரசோச் சினாரே ஒருவர், அவரை விட்டுவிட்டு வருகிறோமே என்ற சிந்தனையே, இந்தத் தொகுப்பாளர்களுக்குப் பெயரளவில் கூட இல்லாமல் போனது தான் வெகு ஆச்சரியம்!

மகாகவி பாரதியின் மறு அச்சுத் தான். மகாகவியை எடுத்துக் கொண் டால், அது பாரதிதாசனையும் எடுத்துக் கொண்டது மாதிரிதானே என்றாவது சமத்காரமாக முன்னுரையிலாவது விவாதித்திருக்கலாம்.

மகாகவி பாரதி பற்றிய வாழ்க்கைக் குறிப்பை, நூலின் பிற்பகுதியில் எழுதும்போது, மகாகவி பாரதி தனது பாண்டிச்சேரி வாசத்தின் போது அவர் அரவிந்தரைச் சந்தித்தார். வ.வே.சு. அய்யரைச் சந்தித்தார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் பாரதியாரும், பாரதிதாசனும் புதுச்சேரியில் சந்தித்துக் கொண்டார்கள் என்று எழுதவில்லை. இந்த இடத்தில் கூட ஒரு சிறு குறிப்பாகவாவது தொகுப்பாளர்கள் புரட்சிக் கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

நூலின் முன்னுரையிலும் பாவேந் தரின் பெயர் இல்லை. பாரதியார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளுக்கு இடையிலும் இல்லை; கவிதைகள் வரிசையிலும் இல்லை.

ஆம், நூலின் எந்த இடத்திலும் பாவேந்தர் குறிப்பிடப்படவில்லை. ஆமாம், அந்த அளவுக்கு புரட்சிக் கவிஞர் செய்த பாவம் என்ன?
- (நன்றி: ஜனசக்தி 11-2-2010)
http://viduthalai.in/page7/32953.html

தோழர் இரவிக்குமாருக்கு

திராவிட இயக்கத்தின் மீது அவ தூறுகளை அள்ளி வீசிட பார்ப்பனர்கள் மடி கட்டி நிற்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டே பார்ப்பனர்கள் திராவிடர் இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தலைவர்கள் மீதும், ஆத்திர நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றனர்.

அதில் ஒன்றுதான் உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும், அந்நிய தலையீடும் என்ற அதற்குப் பதிலடி கொடுத்து உடையும் இந்தி யாவா? உடையும் ஆரியமா? என்ற அரிய வரலாற்றுக் கருவூலத்தைக் கொடுத் துள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்தப் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு, கூட்டத்தில் கோவிந்தா போடும் ஒரு கூட்டம் கிளம்பி இருக் கிறது. அதுதான் தமிழ்த் தேசி யவாதிகள் எனப்படுவோர். பார்ப் பனர்களின் தொடையில் உட்கார்ந்து கொண்டு எரியீட்டி பாய்ச்சிக் கொண்டு திரிகிறார்கள்! பார்ப்பன ஊடகங்கள் நன்கு காற்றடைத்து வானில் பறக்க விடுகின்றன - அத்தகையவர்களை.

தைமுதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ரத்து செய்து - ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் அடிப்படையில் - கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த அறுபது பிள்ளைகள்தான் தமிழ் வருடங்கள் (ஒரு ஆண்டுக்குக் கூட தமிழ்ப் பெயர் கிடையாது.) என்ற அடிப்படையில் சித்திரை முதல் தேதிதான் தமிழ் வருஷப் பிறப்பு என்று பார்ப்பன அம்மையார் முதல்-அமைச்சராக இருந்து சட்டம் இயற்றிய இந்தக் கால கட்டத்தில், அய்ம்பொறிகளையும் அடக்கி ஆமையாக ஒடுங்கிய போதே இந்தத் தமிழ்த் தேசியவாதிகளின் ஆரிய முகவரி அவிழ்ந்து தொங்கி விட்டதே!

இப்பொழுது இன்னொரு பக்கத்தி லிருந்தும் இட்டுக்கட்டும் வேலை.

கொஞ்ச நாளில் சொந்தக் காரணங்களுக்காகவும் அரசியல் போக்கிற்காகவும் பதுங்கி இருந்தது போல காட்டிக் கொண்ட தோழர் ரவிக்குமார் மறுபடியும் தன் முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்.

சண்டே இந்தியன் (20.-4.-2012) இதழில் திராவிட இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தோற்றுநர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் மீதும் அபாண்டமான அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். இது அவருக்குத் தேவையிலலாத வீண் வேலை.

பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து தியாகராயர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, பிராமணரல்லாதார் என்பதில் தாழ்த்தப்பட்டோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர் என நம்புவதற்கு ஒரு ஆதாரமும் அந்தப் பிரகடனத்தில் இல்லை என்று அடித்துக் கூறி, திராவிடர் இயக்கத் திற்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் எந்த விதப் பாத்தியமும் இல்லை. அந்த இயக்கத்தால் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது என்று மங்களம் பாடி முடித்துவிட்டார்.

தியாகராயரின் அந்த அறிக்கையைப் பற்றி இந்து ஏடு என்ன தலையங்கம் தீட்டியிருக்கிறது தெரியுமா? தேசிய நலனுக்கு ஆபத்து (Perilous to the National Cause) என்று எழுதியது! பார்ப்பானுக்கு ஆபத்து என்றால் - அது தேசிய நலனுக்கு ஆபத்துதானே! - பார்ப்பனருக்குத் தெரிந்தது நம் மக்களுக்குத் தெரிய வில்லையே. என்ன செய்வது!

ஜாதி ஒழிப்பு சிந்தனை திராவிட இயக்கத்தவரிடம் இல்லை என்றெல் லாம் மனம் போனபோக்கில் எழுதித் தள்ளியுள்ளார்.

வரலாற்றில் எல்லா வகையான ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தி - இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் இழித்துத் தள்ளி, உரிமைகளற்ற வெறும் கூடாக ஆக்கிய ஆரியத்தை எதிர்த்து போர்கள் பல இதற்கு முன் நடந் திருந்தாலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் தோற்றுவிக் கப்பட்ட திராவிடர் இயக்கம் மிகப் பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும் மலர்வித்தது என்பதை மனச்சாட்சி உள்ளவர்களும் வரலாற்றைக் கோண லாகப் பார்க்காமல் நேர்மையாகப் பார்ப்பவர்களும் அறிவார்கள்.

பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனர் அல்லாதாரை ஒன்று திரட்டும் நோக்குடைய ஓர் அறிக்கையில் அனைத்தும் தாம் நினைப்பதெல்லாம் இடம் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானதுதானா?

அந்த இயக்கத்தின் பிற்காலச் செயல்பாடுகளில் செறிந்திருந்த நடவடிக்கைகளை நாணயமான கண் கொண்டு பார்த்து எடை போட வேண்டாமா?
1917 இல் சென்னையில் நடைபெற்ற மாகாண முதல் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டு உரையில் வெள்ளுடை வேந்தர் என்ன பேசினார்?

பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பித்தோரும், நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே! அவ்வருணாசிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய புத்தர் முயன்றார். முடியவில்லை. பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர்; தோற்றனர். இராமானுஜரும் புரோகிதர் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழி முயன்றார். தோல்வியே கண்டார். பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம்; இதுவே தக்க வாய்ப்பு- _ இப்படிப் பேசியவர்தான் வெள் ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்.

ஜாதி பற்றிய சிந்தனை அவருக் கில்லை என்று எழுதுவது அசாத்திய கற்பிதமே!

எத்தனையோ எடுத்துக் காட்டு களைச் சொல்ல முடியும்.

கோயில்களில் எல்லாச் சாதி யினரும் குருக்களாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிகளைப் பிராமணர் அல்லாதார் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆகமப் புரோகித பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டு, திராவிட பாஷையிலேயே புத்தகங் களும் எழுதிப் பயிற்றுவிக்கப் படவேண்டும் என்று தம் கருத்தைத் திராவிடனில் எழுதி மக்களிடையே சமுதாயச் சமநிலை உணர்வைத் தூண்டினார்.

வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் - முனைவர் பி.அரசு - பக்கம் 86)

பிராமணர்கள் கடவுளின் முகத்திலிருந்து தோன்றியவர்கள். மற்ற இனத்தார் பிற உறுப்புகளில் இருந்து தோன்றியவர்கள் என்று கூறப்படும் மனுநூலைக் கண்டித்துத் திராவிடர் பண்பாடு இதற்கு மாறுபட்டது என்பதை விளக்கினார். திருவள்ளுவர், அவ்வையார் போன்றோரின் கருத்துக் களை எடுத்துக் கூறி மக்கள் அனை வரும் சமம் என்ற கருத்தை வலியு றுத்தினார்.

(வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் - முனைவர் பி.அரசு - பக்கம் 85)

இதற்கு மேலும் தியாகராயரின் சமூகச் சிந்தனைக்கும், ஜாதி பற்றிய அவரின் கோட்பாட்டுக்கும் எடுத்துக் காட்டுகள் தேவைப்படாது.

ஒரு வேடிக்கை. ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்களை ஜாதிச் சிறையில்அடைத்து அவர்களைச் சிறுமைப்படுத்துவதனால், ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட நம் சமுதாய மக்கள் எந்தப் பலனைத் தட்டிப் பறிக்கப் போகிறார்களாம்? வேறு எதைத்தான் சாதிக்கப்போகிறார்கள்? எந்தப் பார்ப்பனராவது தன் சொந்த இனத்தின் தலைவர்களைக் காட்டிக் கொடுக்கிறார்களா? கொலைகாரரையே ஜெகத்குரு என்றுதானே தூக்கிக் கொண்டு ஆடுகிறார்கள்?

நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்பதை அடையாளம் காண்பதில் கூட நம் தோழர்களுக்குத் தடுமாற்றம் இருக்கலாமா?
இன்னும் எத்தனை பெரியாரும் அம்பேத்கரும் தோன்ற வேண்டுமோ தெரியவில்லையே!

ஓர் அபாண்டம்

நீதிக்கட்சிக்குத் தலைமை வகித்த பி.தியாகராஜ செட்டி மேலும் ஒரு துரோகத்தையும் செய்தார். 1821 செப்டம்பரில் கடிதமொன்றை பிரிட் டிஷ் ஆட்சியாளருக்கு எழுதினார்! ஆதி திராவிடத் தொழிலாளர்களை நகரை விட்டு அப்புறப்படுத்தி விடலாம் என்று பிரிட்டிஷ் அரசுக்கு அந்தக் கடிதத்தில் தியாகராஜ செட்டி ஆலோசனை தெரிவித்திருந்தார் என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் முண்டமாக எழுதியுள்ளார். எம்.சி. ராஜாவை சாட்சி போட்டு எழுதியுள்ளார்.

எப்பேர்ப்பட்ட மனிதர் இவருக்குச் சாட்சியாகக் கிடைத்துள்ளார்? அண்ணல் அம்பேத்கரின் முதுகில் குத்திய புண்ணியவான்தான் இவருக் குக் கிடைத்த அக்மார்க் சாட்சியோ!

இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சிதான் முதன் முதலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கு அமைச்சர்பதவியை அளித்து மகிழ்ந்தது. அந்த வாய்ப்பினைப் பெற்றவர்தான் இந்த மயிலை சின்னத்தம்பி ராஜா (எம்.சி.ராஜா).

இவரும், ஜான் ரத்தினமும் சேர்ந்து ஏற்பாடு செய்த கூட்டம்தான் பிரசித்தி பெற்ற சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலை பொதுக்கூட்டம் (7-.10.-1917). பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயரும் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அது. நாயரின் புகழ் பெற்ற உரையாக அது என்றும் பேசப்படும்.

டாக்டர் நாயர் தொடங்கும் போதே எப்படிப் பேசினார்? என் மாபெரும் - முதுபெரும் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டி யார் வள்ளலார் அவர்களே! என் ஆதி திராவிடர் தோழர்களே!, தோழி யர்களே! உங்கள் அனைவருக்கும், உங்கள் மாலை மரியாதைகளுக்கும், உங்கள் உற்சாக ஆரவாரங்களுக்கும் என் தாழ்மையான நன்றி கலந்த வணக்கம்.

உங்களை ஆதி திராவிடர்களென பெருமையோடு விளித்தேன். காரணம் இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர் களான நம் திராவிடர் இனம். மற்றொன்று நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம் என்றெல்லாம் பேசினார்.

நான்காம் ஜாதியான சூத்திரர்களும், அவர்ணஸ்தர்களான பஞ்சமர்களும் தான் இந்நாட்டின் கறுப்பர்களான திராவிடர்கள் என்றார்.

1917 இல் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசிய சென்னை ஸ்பர்டாங் சாலையில் கூடியிருந்த பஞ்சமர்களைப் (ஆதி திராவிடர்களை) பஞ்சைகள் என்றும், இழிசினர் என்றும், வீணர்கள் என்றும் இந்து ஏடு எழுதியுள்ளதைக் கண்டித்து நான்பிராமின் ஏடு எழுதியது (14-.10.-1917).

மாநகராட்சியின் ஆளுகைக் குட்பட்ட முறையில் பல பள்ளிகள் தொடங்கப்பெற வேண்டுமென்றும், அவற்றில் இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்றும் தியாகராயர் பலமுறை எடுத்துக் கூறி வந்தார். அதன் விளைவாக மாதிரிப் பள்ளிகள் பல ஏற்படுத்தப்பட்டன. 1915_-16 ஆம் ஆண்டுகளில் பல பள்ளிகள் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட (பஞ்சமர்) மக்களுக்காக நடத்தப்பட்டன. அவற்றில் அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. மாதிரிப் பள்ளிகளில் பாடத்திட்டம் வகுத்தல், பள்ளிகளைச் சீர்படுத்துதல் ஆகிய வற்றைக் கவனிக்க அமைக்கப் பட்ட குழுவில் தியாகராயர் உறுப்பினராக இருந்து அரும் தொண்டாற்றினார்.

முதன் முதலாக பள்ளிகளில் இலவச உணவை அறிமுகப் படுத்தியது நீதிக்கட்சித் தலைவரான தியாகராயர் மாநகராட்சித் தலைவராக இருந்தபோதுதானே!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அறிமுகப் படுத்தப்பட்டு, பிறகு வேறு சில இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த உணவுத் திட்டத்தால் பலன் பெற்றவர்கள் பெரும்பாலும் யாராக இருக்க முடியும்? இந்தத் திட்டத்தால் மாணவர்கள் வருகை 3075 லிருந்து 3705 ஆக உயர்ந்ததே!

பஞ்சமர் என்று அந்தக் காலக் கட்டத்தில் அழைக்கப்பட்ட ஆதி திராவிடர்களின் பிள்ளைகளை சென்னை மாநகராட்சி தன் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க முனைந்தது. இதைக் கண்டித்தும், தாழ்த்தப் பட்டவர் குழந்தைகளுக்குத் தனிப் பள்ளிக் கூடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்து நேசன் என்ற தேசிய ஏடு எழுதியது (18-.1.-1918)

உண்மைகள் இவ்வாறு இருக்க வாய் புளித்ததோ, மாங்காய் புளித் ததோ என்று சகட்டு மேனிக்கு எழுத லாமா? நிதானம் தேவையில்லையா?
- கவிஞர் கலி. பூங்குன்றன்
- (சந்திப்போம் மீண்டும்.)
விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012
http://viduthalai.in/page-1/32942.html 

இரத்தக்காட்டேரி

விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012
http://viduthalai.in/page3/32946.html

நீதித்துறை ஊழல் பற்றி சோ வா பேசுவது அச்சச்சோ

18.04.2012, தேதியிட்ட ''துக்ளக்'' ஏட்டில் பக்கம் 29-ல் ஒன்றுக்கு பதில் அளித்த ''துக்ளக்'' சோ.

''சென்னை உயர்நதிமன்றத்தில் 1962இல் ஊழல் நீதிபதி கிடையாது. இப்போது? ஊழல் இல்லா நீதிபதிகள் உண்டா என்று தெரியாது. இது தான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்'' என்று புலம்பியிருக்கிறார்.

''இது தான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்'' எனபதிலிருந்தே 1962க்குப் பின்னர் பார்ப்பனரல்லாதார் பெருமளவு (மக்கள் தொகை விகிதாசாரத்திற்கும் குறைவாகத்தான்) நீதிபதிகள் வநது வட்டார்கள் என்பதே பூணூல் அய்யரை இப்படிப் புலம்ப வைத்திருக்கிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்! இப்புலம்பலில் உண்மை அல்லது நாணயம் உள்ளதா என்பதே நமது கேள்வி.

இதோ வரலாற்றுக் குறிப்பு ஆதாரத்துடன் அய்யர்வாளுக்கு சமர்ப்பணம்:-

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர் களாகவே இருந்த காலத்தில், இன்று சென்னை என அழைக்கப்படும் மதராசபட்டினத்தில் 1644-ஆம் ஆண்டு முதன்முதலாக கிராம நீதிமன்றத்திற்கு அதிகாரியாக, அதாவது மாஜிஸ்ட்ரேட்டாக முதன்முதலாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் பெயர் கண்ணப்பா, அவர் பார்ப்பன இனத்தைச் சார்ந்தவர். சிவில் மற்றும் கிரிமினல் சம்பந்தமான சிறு வழக்குகளை விசாரித்து வந்தார். சிறிது காலத்திலேயே அவர் மீது லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார், தகுந்த விசாரணைக்குப்பின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவரை பதவியிலிருந்து நீககினார்கள். இதன் விளைவு என்ன தெரியுமா? 1648லிருந்து ஆங்கிலேயர்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு இநதியர்களுக்கு ''பெயர்'' வாங்கித்தந்த ''புனிதமான்'' புண்ணியவான்கள் தான் இந்தப் பார்ப்பனர்கள் என்பதை நாம் சொல்லவில்லை வரலாறு சொல்கிறது. இதோ ஆதாரம்:

‘’According to the old native system a Choultry court was administering justice in the village area of Madharasapatinam. This court was presised over by the village Headman known as “Adigar”, or a Governor of the Town as he was called. An Indian native Kannappa a Brahmin by caste, was appointed first Adigar and magistrate of the Town in 1644 to decide petty civil and criminal cases. Due to some charges of benbery and corruption against Kannappa, he was arrested and placed behind the bars. His downfall encouraged his enemies and a petition was handed over to the higher authorities against him stating certain serious charges. The Agent and the counsel made enquiry into these charges and held Kannappa guilty, and dismissed him from the office, dishonourably. One important consequence of this incident was that European persons were appointed judges to preside over the Choultry court from 1648 onwards.
ஆதாரங்கள்:

1. Lore “Vestiges of old Madras” Vol I, Pages 272,273

2. India Office records, original correspondence servies No. 2542.

மேலே கண்ட தகவல்கள் “Land Marks in Indian Legal History and consititutional History” by V.D. KULSHRESHTHA - Page 44 -ல் காணப்படுகிறது. இந்நுல் சட்டக்கல்லுரி மாணவர்களுக்கு பாட நுலாக பரிந்துரைக்கப்பட்ட நுல் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இப்பொழுது புரிகிறதா? இந்திய வரலாற்றில் முதல் (பார்ப்பன) நீதிபதியின் யோக்யதை?

இதைப் போல திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் ராசகோபாலச்சாரியார் புலம்பி தனது SWARAJYA இதழில் எழுதியதும் உண்டு. அதே சமயம் கோவையைச் சேர்ந்த பார்ப்பன வழக்கறிஞர் HINDU நாளிதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் இதே கருத்தை வெளியிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்ட வரலாறும் உண்டு.

இப்போது நமது உயர்நீதிமன்றம் என்ன செய்யபபோகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்ககிறோம். இன்னும் இது போன்ற ''சாதி ஆணவம்'' கொண்ட சோவை அறிவாளி என எண்ணும் ஏமாந்த அப்பாவித் தமிழர்களுக்கு இனியாவது இன உணர்வு வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

- பி.நடராசன், நீதிபதி (ஓய்வு), மதுரை
விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012
http://viduthalai.in/page3/32947.html 

Sunday, April 22, 2012

மணியனுக்குத் தம்பி சோ.ராமசாமியா?

ராமன் பாலம் பற்றி நாஸா சொன்னது என்று கயிறு விடும் சோ ராமசாமி மறைந்து போன ஆனந்த விகடன் மணியனுக்குத் தம்பி என்பதைவிட அண்ணன் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஆரிய வர்த்தத்துக்குச் சேவகம் புரிய பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதில் ஆகாய மண்டலம் வரை பூணூல் வாலை முறுக்கித் தாவிக் குதிக்கிறார்.

இப்படித்தான் ஆனந்தவிகடன் மணியன் என்று ஒரு பார்ப்பனர் இருந்தார். ஞானபூமி என்ற ஒரு மாத இதழையும் நடத்தி வந்தார். அதில் ஒரு கற்பனைக் கரடியை அவிழ்த்து விட்டு இருந்தார்; இதோ! நான் சென்ற வெளிநாடுகளிலெல்லாம், விஞ்ஞான வளர்ச்சி பெற்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் நம் மதத்தின் தத்துவங்கள் வேரோடிப் போயிருப்பதைக் கண்டு வியந்தேன். கலிபோர்னியாவில் உள்ள ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத்துக்கு சங்கரா (Sankara) என்று பெயரிட்டிருப்பதைக் கண்டு அவர் களிடம் விசாரித்தபோது, உங்கள் சங்கரரின் ருத்ர தாண்டவத் தத்துவத்தின் அடிப்படையிலேயே பெரிய விஞ்ஞானத் தத்துவம் அமைந்திருக்கிறது என்றார்கள். ஒரு விஞ்ஞானி சொன்னார்: உங்கள் மெய்ஞ்ஞானம் ஏற்கெனவே தேடிக் கண்டிருப் பதைத்தான் (Search) நாங்கள் மீண்டும் கண்டுபிடிக் கிறோம் (Research) என்றார்.

உண்மை என்ன?

அறிவியக்கத்தின் உண்மை நாடுவோர் ஒருவர் செயலில் இறங்கினார். சோமனூர் வழக்குரைஞர் மானமிகு பத்மநாபன் என்னும் அத்தோழர் முத லில் டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளருக்கு இதுபற்றிய விளக்கம் கேட்டு எழுதினார். தூதரகத்திலிருந்து அந்த மடல் சென்னையிலுள்ள அமெரிக்கச் செய்தி நிறுவனத்திற்குத் திருப்பி விடப்பட்டு, அந்நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி தோழர் பத்மநாபன் அவர்கட்கு மடல் எழுதினார்.

திரு. ஜே.எம். கோர்ஃப் எனும் அவ்வதிகாரி வரைந்த மடலில்,

கலிஃபோர்னியாக்காரன் என்ற முறையில் ஓரளவு உறுதிப்பாட்டோடு நான் கூற முடியும், அந்த மாநிலத்தில் சங்கரா என்ற பெயருடன் எந்த விண்வெளி ஆய்வு நடுவணும் நிறுவப் படவில்லை என்பதாக எனக் குறிப்பிட்டுவிட்டு, மேலும் இப்பொருள்பற்றித் தொடர்வதற்கு வாய்ப்பாக அமெரிக்க முகவரிகள் இரண்டினை அவர் கொடுத்தார்.

கோர்ஃப் அவர்களின் மடல் ஒன்றே. போதும் என்பதாக உள நிறைவு எய்திவிடவில்லை தோழர் பத்மநாபன்!

கிடைத்த முகவரிகளில் ஒன்றான கலிஃபோர்னியா மாநில லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழுக்கு எல்லாவற்றையும் விளக்க மாக எழுதிய நம் அறிவியக்க வழக்குரைஞர்க்கு, அவ்விதழின் அறிவியல் பகுதி ஆசிரியர் திரு ஜியார்ஜ் அலெக்சாண்டர் என்பவர் கீழ்க்கண்டவாறு விடையெழுதினார்.

ஹிந்து மதத்தின் அழிப்புக் கடவுள் சங்கரனுக்கான எல்லா மதிப்புடனும், கலிஃபோர்னியாவிலோ அல்லது அமெரிக்காவில் வேறெங்கிலுமோ எந்த ஆய்வுக் கூடமும் அவ்வாறு சங்கரன் பெயர் சூட்டப் பெறவில்லையென்பதை முழு உறுதியோடும் உங்கட்கு நாள் சொல்ல முடியும்.

- இப்படிக் கூறிவிட்டுக் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த லிவெர்மூர் எனுமூரிலுள்ள ஆய்வுக் கூடத்துடன் தொடர்பு கொள்ளுமாறு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழின் அறிவியல் எழுத்தாளர் எழுதினார்.

நம்முடைய வழக்குரைஞரின் உண்மை நாடும் உயர்ந்த குறிக்கோள் ஓய்ந்து போகாமல் ஊன்றி, நின்றமையால் லிவர்மூர் ஆய்வுக் கூடத்துடனும் தொடர்பு பூண்டார்.

அவ்வாய்வுக்கூட அதிகாரி திரு ஸ்டீஃபென்ஸன் என்பவரோ,

கலிஃபோர்னியாவிலோ அல்லது அமெரிக்க மாநிலங்களிலோ சங்கரா எனும் பெயரில் எந்த விண்வெளி ஆய்வுக்கூடமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என எழுதியதுடன் விட்டுவிடவில்லை. ஹிந்து மத நம்பிக்கைகளிலும் பழக்கங்களிலும் பற்றார்வம் தெரிவிப்பதில் விரும்பி ஈடுபடுவதற்கு அமெரிக்க அறவியலார்க்கு எந்தத் தேவையுமில்லை என்று ஓங்கி அறையவும் செய்தார். ஆம்; அந்த அறை, மானம் எனும் ஒரு பொருளிலா மணியன் கூட்டத்திற்குத்தான்!

அறிவியக்கத்தின் முயற்சியால் மணியனின் திருட்டும் புரட்டும் கண்டுபிடிக்கப்பட்டது; உண்மை வெளிக் கொணரப்பட்டது!

சென்னையின் அமெரிக்கச் செய்தியக அதிகாரி செப்புகிறார்; நான் ஒரு கலிஃபோர்னியன் என்னால் ஓரளவு உறுதியுடன் சொல்ல முடியும்! அங்கே சங்கரா எனும் பெயரிலே விண்வெளி ஆய்வுக்கூடம் கிடையாது என்று.

கலிஃபோர்னிய மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழின் அறிவியல் பகுதிப் பொறுப்பாளர் புகலுகிறார்: முழுமையான உறுதியோடு கூறுவேன். இங்கு எங்கும், எந்த விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கும் சங்கரா என்ற பெயர் சூட்டப்பட்டி ருக்கவில்லை என்று.

அதே கலிஃபோர்னிய லிவர்மூர் ஆய்வுக் கூடத்தின் அதிகாரி அறிவிக்கிறார்: சங்கரா எனும் பெயரிடப்பட்ட எந்த விண்வெளி ஆய்வுக்கூடம் பற்றியும் எனக்குத் தெரியாது என்று. இந்த மூன்று கலிஃபோர் னியாக்காரர்களும் தெரிவித் துள்ளதற்கு நேர்மாறாக, புராணப் புளுகர்களின் வழித்தோன்றல் மணியன் எனும் வணிகர், கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத் துக்குச் சங்கரா என்ற பெயரிட் டிருப்பதைக் கண்டதாகக் கதைக்கிறார்! கலிஃபோர்னியாவில் எந்த ஊரில் அந்த ஆய்வுக்கூடம் உள்ளதென்பதைக் குறிப்பிட வில்லை அவர்.

அவர்களிடம் விசாரித்த போது என்று மட்டும் எழுதும் மணியன் எவர்களிடம் என்று பெயர்கள் கொடாமல் ஏய்க்க முயல்கிறார்.

ஒரு விஞ்ஞானி சொன்னார் எனப் பெருமையடித்துக் கொள்ளும் மணியன் அந்த விஞ்ஞானியின் பெயரைக் கூற முடியவில்லை.
எதனால்?...

உண்மையிலேயே கலிஃபோர்னியாவில் சங்கரா எனும் பெயரில் ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத்தை கண்டதில்லை!

உண்மையிலேயே அமெரிக்க அறிவியலாளர்களிடம் மணியன் சங்கராவைப் பற்றிக் கேட்டதில்லை!

உண்மையிலேயே எந்த அமெரிக்க அறிவியலாரும் மணி யனிடம் Search - Research சொல்லாடல் புரிந்தது கிடையாது!

என்றாலும் மணியன் துணிச்சலாகப் புளுகித் தள்ளுகிறார். எத்துணை பெருமை பெற்றது நம் மதம்! என்பதாக. எவ்வளவு திருட்டுத்தனம்! எத்தனை புரட்டு தன்மை!

அவர் எண்ணிவிட்டார் இந்துமதப் பற்றாளன் எவன் போய் இவையெல்லாம் மெய்யாவென்பதைச் சரிபார்க்கப் போகிறான் என்று. மதப்பற்றாளர்கள் அப்படியே நம்பிக் கொண்டார்கள்; ஆனால் மாந்தப் பற்றாளர்கள் உண்மையைக் கண்டுபிடியாமல் விடமாட்டார்களே!

மணியனின் பொய்மையை - புன்மையை பித்தலாட்டத்தை வெளிப்படுத்த அயரா முயற்சிகள் மேற்கொண்ட தோழர் பத்ம நாபன் அவர்கள் பகுத்தறிவாளர் உண்மை நாடுவோர் மாந்தப் பற்றாளர் அனைவரின் பாராட்டுக்கும் உரியர். அவரின் விடா முயற்சி பார்ப்பனியக் கயமையை நாட்டுக்குக் காட்டுதற்குப் பயன் பட்டிருக்கிறது. மணியன் இன்னும் என்னென்ன மணியம் பண்ண முற்பட்டாலும் அறிவியக்கம் கடமையாற்றுவதில் ஓயவே ஓயாது.

(பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ. இறையன் உண்மை 15.6.1982 பக்கம் 28-_31)
மணியன் மறைந்துவிட்டார். அந்தப் பொய்யின் வாரிசாக அவர் தம்பியாக அண்ணனாக இதோ திருவாளர் சோ ராமசாமி கிளம்பி விட்டார்!
http://viduthalai.in/page6/32481.html

ஆமாம், நம்புங்கள் - பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் என்ற இன உணர்ச்சி அறவேயில்லை!

நம்புங்கள் - பார்ப்பனர்களுக்குப் பாப்பான் என்ற இன உணர்ச்சியே கிடையாது - வெறும் மானுடப் பற்று தான். வேண்டுமானால், இந்த வார துக்ளக்கைப் (18.-4.-2012) புரட்டி பாருங்கள்.

கேள்வி: ராமர் பாலம் கற் பனையானது. கற்பனையான வழி பாட்டு அமைப்பை காப்பாற்றுவதற்காக நாட்டின் வளர்ச்சியை காவு கொடுக்கக் கூடாது. சேதுக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்தவேண்டும் என்கிறாரே ராமதாஸ்?

பதில்: ராமர் பாலம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் புகைப்படத்திலேயே காணப் பட்டது. இன்றும் பலர் அங்கு போய் இந்தப் பாலத்தைப் பார்த்து வருகிறார்கள். அது பற்றிய குறிப்புகள், தமிழக அரசு நூல்களிலேயே இருக்கின்றன. அதன் புனிதத் தன்மை பற்றி, ராமர் சீதைக்கு விளக்கிச் சொல்வது, வால்மீகி ராமாயணத்தில் இடம பெறுகிறது. சேது கால்வாய்த் திட்டமோ - பொருளாதார ரீதியாகப் பயனளிக்காது என்று நிபுணர்கள் பலர் விவரித்துக் கூறி யிருக்கிறார்கள். இவையெல்லாம், ஏற்கெனவே துக்ளக் கில் விரிவாக அலசப்பட்ட விஷயங்கள். ராமதாஸ் பேசுவது உண்மையல்ல என்கிறார் சோ. அண்டப் புளுகு பேசுவதில் அக்கிரகார ஆசாமிகளை அடித்துக் கொள்ள அன்டார்டிகாவில் தேடினா லும் கிடைக்கமாட்டார்கள்.

இன்டோ-லிங்க்காம் - வைஷ்ணவா நெட்வொர்க் என்ற பார்ப்பன நிறுவனம் ராமன் பாலம் இருப்பதாக நாசா சொன் னதாக ஒரு கதையைக் கட்டிவிட்டது.

இந்தக் கட்டுக் கதையைக் கேள் விப்பட்ட மாத்திரத்தில் சேது சமுத் திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி அமெரிக்காவில் உள்ள நாசா நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்டார். நீங்கள் வெளி யிட்டுள்ள படத்தால் இங்குப் பிரச்னை எழுந்துள்ளது. ஆதாம் பாலம் செயற்கையாகக் கட்டப் பட்டதா? அல்லது இயற்கையாக அமைந்த மணல் மேடா? என்று கேட்டார். அன்று மாலையே நாசாவிடமிருந்து தகவல் வந்துவிட்டது. இந்தியா இலங்கைக்கிடையே உள்ள பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று முகத்தில் அறைந் தாற்போல் பதில் கூறிவிட்டதே!

இந்தத் தகவலை சேது சமுத் திரத்திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி செய்தியாளர்களிடம் தெரி வித்துவிட்டாரே. (தினமலர் 26--.7.-2007- பக்கம் 5)

அவாளின் தினமலரில் வெளிவந்த சேதிதான் இது!

உண்மை இவ்வாறு இருக்க சோ ராமசாமி துக்ளக்கிலும் திருவாளர் இல.கணேசன்வாள் சன் தொலைக் காட்சியிலும் புளுகுகிறார்களே! புளுகுதல் என்பது அவாளுக்கு புளியோதரையோ!

இராமநாதபுரத்திற்கும் இலங்கைக் கும் இடையே உள்ள மணல்திட்டு ராமன் கட்டிய பாலம் என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேல் இருக்கும் மணல் திட்டை ராமன் தம்பி லட்சுமணன் கட்டினானோ!

இந்தக் கேள்விக்கு இந்த அறிவு ஜீவிகள் இது வரை பதில் சொல்லாதது ஏன்?

இன்னொரு கேள்வி பதில், இதே தேதி துக்ளக்கில்.

கேள்வி: ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திடீ ரென்று தமிழக முதல்வர் கடிதம் ஏழுதுவதன் நோக்கம் என்ன?

பதில்: திடீரென்று கடிதம் எழுதவில்லை. ராமர் பாலம் பற்றி தனது முடிவான கருத்தைக் கூறி மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. ஆகையால் மத்திய அரசு இந்த விவகாரத்தில், இனியும் மழுப்பாமல் ஒரு முடிவான கருத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒட்டித்தான் தமிழக முதல்வர் ராமர் பாலம் தேசியச் சின்னமாக அறிவிக் கப்பட வேண்டும் என்று கோரியிருக் கிறார் என்று மிக சாமர்த்தியமாக பதில் எழுதிட முயற்சிக்கிறார்.

இதே ஜெயலலிதா 2001 சட்டப் வேரவை மற்றும் 2004 மக்களவைத் தேர்தல் அறிக்கைகளில் ராமன் பாலம் என்று குறிப்பிட்டு இருந்தாரா? இல்லையே! அதை மறைப்பதேன் இந்த மனுதர்ம வியாதி.?

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக கிழக்கு நோக்கிக் கப்பல் செல்லவேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள்,; பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப் பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதே. அன்றைய மணல் மேடுகள், பாறைகள் அடங்கிய ஆடம்ஸ் பிரிட்ஜ் - திடீரென்று ராமன் பாலம் என்று செல்வி ஜெயலலிதாவுக்கு ஏதாவது அசரீரி வந்து கூறிற்றா?

இன்னும் ஒரு கட்டம் மேலே தாண்டி சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்கிற அளவுக்கு ஜெய லலிதா சென்றுவிட்டாரே. தமிழர்கள் இதனை அனுமதிப்பார்களா?

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு ஏன் ரத்தம் கொதிக்கிறது? இதயம் சில நிமிடங்கள் நின்று விடுகிறது? தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

கேள்வி: மன்மோகன்சிங், வி.பி.சிங் ஒப்பிடுங்கள்.

பதில்: மன்மோகன்சிங் பதவியில் இருப்பதால் பல கெடுதல்கள் விளைந்தன. பல கெடுதல்களைச் செய்வதற்காகவே பதவியில் இருந்தார் வி.பி.சிங்.

புரிகிறதா? வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதில் 27 விழுக்காடு வேலை வாய்ப்பில் கொடுக்கச் செய்தார் அல்லவா? அந்த ஆத்திரம் அவாளை இன்றுவரை பாடாய்ப் படுத்துகிறது - படுபாவி என்று மண்ணை வாரித் தூற்றுகின்றனர்.

நூற்றுக்கு நூறு இடங்களையும் முழுவதுமாக சுளைசுளையாக முழுங்கி ஏப்பமிட்ட கூட்டம் அல்லவா! - அதில் மண் விழுந்து விட்டதே என்கிற ஆத்திரம்! பாவம் இவர்களுக்கு பார்ப்பன உணர்ச்சியே இல்லை. நம்பித் தொலையுங்கள்.

கேள்வி: கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு தி.மு.க.விற்கு சாதகமா? பாதகமா?

பதில்: காங்கிரசிற்கு இப்போது உப்பு சத்தியா கிரகம் எவ்வளவு தூரம் சாதகமாக இருக்குமோ, அவ் வளவு தூரம் தி.மு.க.விற்கு பார்ப்பன எதிர்ப்பு சாதகமாக இருக்கும். - இப்படி ஒரு துக்ளக் பதில்.

கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்றால் எதற்காக துக்ளக்கில் பக்கம் பக்கமாக பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான திராவிடர் இயக்கம் பற்றியும், அதன் தலைவர்கள் குறித்தும் பார்ப்பனர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்க வேண்டும்? அந்த உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றி இப்பொழுது எதற்கு எதிர்த்து எழுதிக்கொண்டு இருக்கவேண்டும்?

பரவாயில்லை அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர் எதிர்ப்பு சரியே என்று காலந் தாழ்ந்தாவது சோ அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளாரே!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் அதனை எதிர்த்து இப்பொழுதும் உச்சநீதி மன்றம் செல்பவர்கள் யார்?

தமிழ் செம்மொழியானால் வீட் டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா என்று எழுதுபவர்கள் யார்?

இப்படிப்பட்ட பார்ப்பனர்கள்தான் - கலைஞர் ஏதோ பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதாக பம்மாத்து அடிக்கின்றனர்.

இன்னொரு கேள்வியையும் கேளுங்கள்.

கேள்வி: இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் திராவிடம், ஆரியம், திரா விடப் பாரம்பரியம் என்று கலைஞர் பேசிக் கொண்டிருப்பது எதைக் காட்டுகிறது?

பதில்: தி.மு.க.வை அவர் வளர விடமாட்டார் என்பது: தெரிகிறது - இப்படி ஒரு பதில்.

கம்ப்யூட்டர் காலத்தில் இவர்கள் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் ராமன் பாலம் கட்டி னான் என்று எழுதலாம்.

கம்ப்யூட்டர் காலத்திலும் பூணூலைத் தரிப்பதற்காகவே, புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) கொண் டாடலாம்!
அதன் மூலம் தாங்கள் பிரா மணர்கள் - பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், - இருபிறப்பாளர்கள் என்று கூறி நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சூத்திரர்கள் என்று கூறலாமாம்.

அதனை நாம் எதிர்த்துக் கேட்டால் - கம்ப்யூட்டர் கலத்தில் இப்படிக் கேட்கலாமா என்று கேள்வி கேட்கின்றனர்.
ஆக 2012_லும், நாங்கள் பிராம ணர்கள்தான் என்று மார்பு நிமிர்த்திக் காட்டும் இறுமாப்பைத் திமிர் தண்டத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆமாம். அன்று கலைஞர் வீட்டுக்கு ஓடோடிச் சென்று தேர்தல் கூட்டணிக்காகப் பேரம் பேசியபோது கலைஞர் ஆரியம்-திராவிடம் பேசக்கூடியவர் என்பது திருவாளர் சோ ராமசாமிக்குத் தெரியவில்லையோ!
http://viduthalai.in/page-1/32475.html 

திராவிடம் என்பது கற்பனையா?(2)

 PART 1 - http://naathigam.blogspot.in/2012/04/blog-post_14.html
திராவிடம் என்பது கற்பனை; அது ஒரு மாயை; கால்டுவெல் பாதிரிக்கு பிராமணர்மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே திராவிடம் என்பதனை விளம்பரப்படுத்தித் தனக்குப் புகழ் சேர்த்துக் கொண்டார். திராவிட இயக்கத்திற்கு இப்போது நூற்றாண்டு விழாக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? _ என்று பார்ப் பனர்களும் அவர்தம் அடிவருடிகளும் கேள்விக் கணை தொடுத்திருக்கிறார்கள்.

அரசியலில் ஏதிலிகளாக்கப்பட்ட வர்களும், தமிழ் இன எதிரிகளும், வரலாறு தெரியாத - _ வடிகட்டிய தற் குறிகளைப் போலப் பேசி வருகின்றனர். வரலாற்றை முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்; அல்லது வரலாறு தெரிந்தவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் சிலர் உளறி வருகிறார்கள்.

அண்மையில் செய்தியாளர்களிடம் ஒரு தலைவர், குடியரசுக் கட்சியில் பெரியார், தமிழ்நாடு தமிழருக்கே என்று எழுதினார் என்று பேசுகிறார். குடிஅரசு இதழுக்கும், குடியரசுக் கட்சிக்கும் வேறுபாடு தெரிய வேண்டாமா? அதுவும் கட்சியில் எப்படி எழுதுவது? இவர்களின் வரலாற்றறிவு எப்படிப்பட்டது தெரியுமா? இளம் தலைவர் பேசுகிறார், நாம் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்; நாம் ஆளப் பிறந்தவர்கள்
பல்லவர்கள்
பல்லவர்கள் வடபுலத்திலிருந்து வந்தவர்கள். சமற்கிருதத்தைத் தாய் மொழி எனப் போற்றியவர்கள். அதற்கு இலக்கியம் படைத்துக் கொடுத்தவர்கள். பல்லவர் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே! அவர்களில் ஒருவன் கூடத் தமிழன் இல்லை என்பது! தமிழ் மக்களின் செல்வத்தையெல்லாம் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கிய வர்கள் பல்லவர்கள்! நீங்கள் அவர்கள் வழி வந்தவர்களா?

நாட்டை ஆள வேண்டும் என்ற நசையோடு அலையும் இவர்கள் அந்த நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டாமா? அந்த நாட்டு மக்களின் மொழியைப் பிழையின்றிப் பேச வேண்டாமா? இந்த விளக்கெண்ணெய் வேலைக்கிடையில், திராவிடம் என்பது மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம்; சங்க இலக்கியத்தில் திராவிடம் என்பது இல்லை என்று வேட்டியை உருவித் தலையில் கட்டிக் கொண்டு வீதி வீதி யாய்ப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் தோன்றியது எப்போது?

ஆரியர் _ -திராவிடர் என்ற வேற் றுமையை விதைத்தவர் கால்டுவெல் தான்; திராவிடம் என்ற கற்பனையான ஒரு சொல்லைப் படைத்தவரும் அவர்தான்! என்று இப்போது பார்ப்பனர் புதுக்கரடி விடுகிறார்கள். இப்படியெல்லாம் பிற்காலத்தில் பார்ப்பனர்கள் பேசுவார்கள், வெட்கமில்லாமல் பொய்யுரைப்பார்கள் என்பதை அறிந்தோ என்னவோ கால்டுவெல் பெருமகனார் தொலை நோக்குப் பார்வையோடு தமது கருத்துக்களை வெளியிட்டார்.

திராவிடம் என்பது எனது படைப்பல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பண்டைய வடமொழி ஆசிரியர் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களேயன்றி நானில்லை என்று அறிஞர் கால்டுவெல் கம்பீரமாக நின்று உண்மையை வெளிப்படுத்து கிறார்.

மனுஸ்மிருதியில் பத்தாவது பிரிவில் சத்திரியக் குடியினர், படிப்படியாக ஆரியப் பழக்க வழக்கங்களிலிருந்து வழுவிப் பார்ப்பனர் தொடர்பை விட்டு விலகிக் கீழ்ச் சாதியினர் ஆனார்கள். அவர்கள் பவுண்டரர்கள், ஒட்ரர் திராவிடர், காம்போசர் என்று கூறப் பட்டுள்ளது. மேற்குறித்த குடியினரில் தென்னிந்தியாவிற்குரியவர் திராவிடர் என்று குறிக்கப்பட்டவர்களேயாவர். இதனால் தென்னாட்டு மக்களைப் பொதுப்படையாகக் குறிப்பதற்குத் திராவிடம் என்ற குறியீடு எடுத் தாளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என்றும் மகாபாரதத்திலும் திராவிடம் என்ற சொல்லாட்சி இப்பொருளிலேயே பயின்று வந்துள்ளது என்றும் டாக்டர் கால்டுவெல் விளக்கமாகத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் தம்முடைய நூலில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆதலின் கால்டுவெல் கண்காணியாரின் (பாதிரி யார்) காலத்திற்குப் பல நூற்றாண் டுகளுக்கு முன்பிருந்தே திராவிடம் என்ற சொல்லாட்சி, பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமை புலனாகின்றது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது:

திராவிடம் என்ற சொல் பார்ப்பனர்கள்மீது ஏற்பட்ட வெறுப்பினால் தோன்றியதல்ல மாறாகப் பார்ப்பனர் தமிழ்மக்கள்மீது கொண்ட வெறுப்பினால் அவர்களை இழிபிறப்பினர் என்று சுட்டுவதற்காகத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைப் பார்ப்பனர் நூலாகிய மனுதருமம் தெளிவுபடுத்துகிறது.

திராவிடம் மூவாயிரம் ஆண்டுத் தொன்மையுடையது. மாமன்னர் அசோகன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் இச்சொல் தென்னாட்டு மக்களை (தமிழர்களை) குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புகழ்வாய்ந்த ஓர் இனத்தையும், இடத்தையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் திடுமெனத் தோன்றியிருக்க முடியாது. மக்கள் வழக்காற்றில் அச்சொல் பயின்று பயின்று பண்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருக்க வேண்டும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு தோன்றியதாகப் பார்ப்பனர் கொண்டாடும் மனுதரும சாத்திரம் திராவிட மக்களைச் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்திக் கூறுகிறது. திராவி டத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று சுட்டுகிறது. மனுதருமம் (சுலோ 44 அத்தியாயம் 5) ஆனால் மாமன்னன் அசோகன் காலத்துக் கல்வெட்டு, தென்னாட்டையும், தென்னாட்டு மக்களையும் பெருந்தன்மையோடு திராவிடம் என்ற சொல்லால் குறிக்கின்றது. மாமன்னன் அசோகன் வட இந்தியாவின் பெரும்பகுதியை தன் ஆட்சியின்கீழ் வைத்திருந்தவன். கலிங்கம் (ஒரிசா) வரைதான் அவனால் தெற்கே படையெடுத்து வர முடிந்தது. கலிங்கத்திற்குத் தெற்கில் தமிழர்கள் வலிமையோடிருப்பதையறிந்து தெற்கே வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கலிங்கப் போருக்கு முன்பே கைவிட்டவன் மாமன்னன் அசோகன். அவன் திராவிட மக்களை மதித்தவன் பேரரசன்! ஆனால் நாடோடிகளான ஆரியப் பார்ப்பனர்கள், திராவிடத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று இழிவு படுத்திக் கூறியவர்கள்.

திராவிடம் என்ற சொல் கி.பி. முதல் நூற்றாண்டில் எழுத்தாளப்பட்டுள்ள தாகவும் இச்சொல் தமிழர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள தாகவும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனித்குமார் சட்டர்ஜி குறிப்பிடுகிறார்.

மனுவின் காலத்திற்குப்பின்னர்

மனுவின் காலத்திற்குப் பின்னர் வந்த வடமொழி ஆய்வாளர் பலரும் திரா விடம் என்ற சொல்லைத் தொன்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண்டுள்ளனர் என்பதையும் இந்திய பாகத மொழிகளைத் தொகைப் படுத்தி இனம் பிரித்த பண்டைய ஆராய்ச்சியாளர்கள் திராவிடி எனும் பெயரால் திராவிட மொழியினத்தைச் சேர்த்துள்ளனர் என்பதையும் கால்டு வெல் எடுத்துக்காட்டுகிறார். மேலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகக் கருதப்படும் சிறந்த வடமொழி அறிஞரான குமரிலபட்டர் என்பார் திராவிடாதி பாஷா என்ற சொற் றொடரைக் கையாண்டுள்ளதாகவும் அறிஞர் கால்டுவெல் குறிப்பிடுகிறார். இவ்வாறு எண்ணற்ற சான்றுகளை எடுத்துக்காட்டித் திராவிட என்ற சொல் மிகப் பழங் காலந்தொட்டே தென் னாட்டு மக்களையும் மொழியையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாக வடமொழியாளர்களால் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது என்று கால்டுவெல் நிறுவுகிறார்.

மேலும் இந்தியத் தொல்குடியினரில் ஒருவராகிய சத்திய விரதர் என்ப வரைப்பற்றிக் குறிப்பிடும்போது பாகவத புராணம் திராவிட மன்னர் என்று குறிப்பிடுவதாகவும் கால்டுவெல் கூறுகிறார்.

திராவிடச் சங்கம்:

சமணமும், பவுத்தமும் மனிதநேயம் கொண்ட -_ இயற்கை நெறிபோற்றும் அமைப்புகள் அறிவு நெறிப்பட்ட கருத்துக்களைப் பவுத்தரும், சமணரும் மக்களிடையே பரப்பிவந்தனர். இவை இரண்டும் தமிழகத்தில் ஒரு காலத்தில் உயர்ந்த நிலையில் சிறப்புற்றிருந்தன. இவற்றை அழிப்பதற்காக வைதீகப் பார்ப்பனர்கள் இடைவிடாத முயற்சி களை மேற்கொண்டு செயல்பட்டு வந்தனர்.

மக்களிடையே மூடநம்பிக்கைகளை விதைத்து அவர்களை அடிமைப்படு குழியில் தள்ளிவிட்டனர் வைதீக வெறியர்கள். கோயில்கள் என்ற இருட்சிறையிலிருந்து மக்கள் விடுபட முடியாமல் அல்லற்பட்டனர். மேல் உலகம், சொர்க்கம், நரகம், விதி, மறு பிறவி முதலான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை மீளாத் துயரில் பார்ப்பனீயம் ஆழ்த்திவிட்டது. இந்நிலையில், கி.பி. நான்காம் நூற்றாண்டில் வச்சிரநந்தி என்ற சமணத் துறவி மதுரையில் திராவிடச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

மக்களின் வாழ்வியல் முறைகளுக்கு எதிரான பார்ப்பனர்களின் வைதீகப் பழக்க வழக்கங்களை முறியடிப்ப தற்காகவும் மக்களிடையே அன்பு நெறியை வளர்ப்பதற்காகவும் அறிவு நெறி சார்ந்த கருத்துக்களையும், மனித நேயத்தையும் பரப்புவதற்காகவும், மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு மக்கள் முன்னேற்றம் காண முன்வர வேண்டும் என்பதற்காகவும் வச்சிர நந்தி ஒரு சங்கத்தை ஏற்படுத் தினார். அதற்கு அவர் திராவிடச் சங்கம் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் காணப்படும் திராவிடம் என்ற சொல், தென்னாட்டு மக்களையும் (தமிழர்கள்) தென்னாட்டையும் குறித்து நின்றது. வச்சிரநந்தியின் திராவிடச் சங்கம் திராவிடம் என்பதற்கு ஒரு மெய்யியல் அடிப்படையை அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது
திராவிடம் என்றால்,

1. மக்கள் வாழ்வியலுக்கு எதிரான ஆரியப் பார்ப்பனரின் வைதீகத்தை எதிர்ப்பது

2. மனிதநேயத்தை மக்களிடையே வளர்ப்பது.

3. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவது.

4. அறிவுநெறி சார்ந்த வழிமுறை களை மக்களுக்கு வகுத்துக் கொடுப்பது.

5. மூடநம்பிக்கைகளிலிருந்து மக் களை விடுவித்து அவர்களை நல் வழிப்படுத்துவது.

6. மக்களிடம் இயற்கையான அன்புநெறியை வளர்த்து ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களைப் பயன்படுத்துவது.

என்று பொருள்படுவதை நாம் அறிய முடிகிறது. இத்தகைய இயற்கை யான, எளிமையான கருத்துக்களால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். சமணத்தின் மதிப்பு மக்களிடையே உயர்ந்தது.

திருஞானசம்பந்தரின் திருவிளையாடல்:

வச்சிரநந்தியின் காலத்திற்குப் பின்வந்த சீர்காழி திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பனர், தமிழ்நாட்டில் சமணர் தொகை பெருகுவதைக் கண்டு மனம் வெதும்பி அவர்களை அழிப் பதற்கான முயற்சியை மேற்கொண்டான். மக்கள் நலப் பணியாளர்களாக விளங்கிய எண்ணாயிரம் சமணர்களை (அத்தனைப் பேரும் தமிழர்கள்) தேர்வு செய்து பாண்டிய மன்னன் துணை யோடு அவர்களை வைகையாற்றங் கரையில் கழுவிலேற்றிக் கொன்றான் திருஞானசம்பந்தன். (இந்தக் கழுவேற்று நிகழ்வின் நினைவாக ஆண்டுதோறும் வைகைக் கரையில் கழுவேற்றித் திருவிழா கொண்டாடப்பட்டுவருவதை வரலாற்று ஆய்வாளர் பலர் பதிவு செய்துள்ளனர்).

திராவிட சிசு!

இந்தப் படுகொலைப் பழியிலிருந்து ஞானசம்பந்தனைக் காப்பாற்றப் பார்ப்பனர் பல முயற்சிகளை மேற் கொண்டனர். எப்படியேனும் அவனுக்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டும் என்று அரும்பாடுபட்டனர். ஒரு நாள் ஞானசம்பந்தன் எங்கோ போய்விட்டுத் தன் இருப்பிடம் திரும்புகையில் தெரிந்தோ தெரியாமலோ ஆதி திராவிடர் வாழும் சேரிவழியாக வந்துவிட்டான். உடனே அவனைச் சுற்றியிருந்த பார்ப்பனர்கள் இதைக் கருவியாகப் பயன்படுத்தி மண்ணுக்கும், விண்ணுக்கும் எகிறிக் குதித்துப் பூணூலைக் கையில் பிடித்துக் கொண்டு, சம்பந்தப் பெருமாள் பெரிய புரட்சியே செய்துவிட்டார், சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பிறந்தவர் என்று கூச்சல் போட்டு ஞானசம்பந்தனுக்கு நற்பெயர் பெற்றுத் தர முயன்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் ஆதிசங்கரர் திருஞான சம்பந்தனைத் திராவிடச் சிசு என்று அழைத்துக் கொலைகாரன் என்ற பெயர் மறைவதற்கு உதவி செய்தார் ஆதிசங்கரர்! ஆனால் எந்தப் பார்ப்பனரும் திராவிடச் சிசு என்று ஞானசம்பந்தரை இன்றுவரை அழைப் பதில்லை! அவர்கள் திராவிடத்தை வெறுப்பவர்களாயிற்றே!

இங்கே நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியது திராவிடம் என்ற சொல் சாதி ஒழிப்பைக் குறித்து நிற்பது என்பதைத்தான்! ஆதிதிராவிடர் வாழும் சேரித் தெருவில் நடந்து வந்ததே பெரும் புரட்சியாகி விட்டது. அவன் எதற்காக அங்கே போனான் என்பது ஆய்விற்குரியது. என்றாலும் திராவிடம் என்பது சாதி ஒழிப்பைக் குறித்து நிற்கும் ஒரு குறியீடாகி விட்டது. திராவிடன் என்றால் சூத்திரன் என்று நம்மை இழிவுபடுத்திய பார்ப்பனியம் தனக்குத்தானே சூத்திரப் பட்டத்தைச் சூட்டிக் கொண்டு ஆப்பசைத்த குரங்கின் கதை போல அதனை விடவும் முடியாமல் பாராட்டிச் சொல்லவும் முடியாமல் தடுமாறியது. தந்தை பெரியார் பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்று கூறியதை நாம் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கி.பி. 1850 வரையில் அதாவது அறிஞர் கால்டுவெல் காலத்திற்குச் சற்று முன்புவரை வாழ்ந்த சமற்கிருத அறிஞர் பலரும் தென்னிந்திய மொழி களைத் திராவிட மொழிகள் என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்தி மொழி நூலறிஞரான பாபு இராசேந்திரலால் மித்ரா என்பவர் 1854ஆம் ஆண்டில் திராவிடி என்ற சொல்லைத் திராவிட மொழிகளைக் குறிப்பதற்குப் பயன் படுத்தி வந்துள்ளார். 1891இல் பேரா சிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும் என்று மனங்குளிரப் பாடுகிறார். வங்கக் கவிஞர் தாகூர் திராவிட உத்கலவங்கா என்று பாடு கிறார். இப்பாடல் இந்தியாவின் தேசியப் பாடலானது எப்படி என்பதைப் பார்ப்பனர் விளக்குவார்களா?

சிந்துவெளி நாகரிகம்

திராவிட இனம்பற்றிய ஆய்வும் மொழிபற்றிய ஆய்வும் இன்று உலக அளவில் விரிவடைந்து விட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதனை அறிவுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஆரியர் -_ திராவிடர் உண்மையைச் சமூகவியல், அடிப்படையிலும் அறிவியல் அடிப் படையிலும் தந்தை பெரியார் மிக விரிவாக விளக்கியிருக்கிறார். திராவிடர் என்பதற்குத் தந்தை பெரியார், தந்துள்ள கருத்துரைகளுக்கு மறுப்புரைக்க இன்றுவரை எவரும் முன்வரவில்லையே! ஆகவே திராவிடம் என்பது கற்பனை என்போர் கருத்துக் குருடர்கள்! அவர்கள் மனம் மாசுபடிந்தது!

திராவிடம் என்பது ஒரு குறியீடு:

திராவிடம் என்பது ஒரு குறியீட்டுச் சொல்; அசோக மாமன்னன் காலத்தில் திராவிடம் என்பது தென்னகத்தையும், தமிழ்த் தொல்குடி மக்களையும் குறித்தது. வச்சிரநந்தியின் காலத்தில் மக்கள் நலப் பணி என்ற மெய்யியல் கோட்பாட்டைக் குறித்தது. கால்டுவெல் காலத்தில் திராவிடம் என்பது திராவிட மக்கள் பேசிய மொழித் தொகுதியைக் குறித்தது. நீதிக்கட்சித் தலைவர்களின் காலத்தில் பார்ப்பனரல்லாத தென்னாட்டு மக்களைக் குறித்தது. தந்தை பெரியார் காலத்தில்தான் திராவிடம் என்ற சொல் அதன் முழுப்பொருண்மையைப் பெற்றுச் சிறப்படைந்தது.

கடல் என்பது ஒரு குறியீடு (ஷிஹ்னீதீஷீறீ), நடந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு பேராசிரியரைச் சுட்டிக்காட்டி, அவர் ஒரு பெரிய கடல் என்றால் அளந்தறிய முடியாத கடலின் ஆழத்தைப்போன்று அவர் ஆழ்ந்த அறிவு உடையவர் என்று பொருள்; கடலின் அகற்சியைப் போன்று விரிந்த அறிவுடையவர் என்று பொருள். அருமைப்பாடு மிக்க பல பொருள்களை (முத்து, பவளம், சங்கு) கடல் தன்னகத்தே கொண்டு விளங்குவதைப் போலப், பல்கலை பயின்ற தெளிவும் பன்னூற் பயிற்சியும், பட்டறிவுச் செல்வமும் நிறையப் பெற்றவர் என்று பொருள்.

இதைப் போன்றே திராவிடம் என்பது ஒரு குறியீடு. அது கடலைப்போல் பன்முகப் பொருளாற்றல் கொண்டது. திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும்; இனத்தைக் குறிக்கும்; இயக்கத்தைக் குறிக்கும்; தமிழோடு உறவுடைய பல மொழிகளின் தொகுப்பான ஒரு மொழித் தொகுதியைக் குறிக்கும். தமிழை மட்டுமே குறித்து நிற்கும் இடமும் உண்டு. கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, தன்மானம், சாதி ஒழிப்பு, சம உரிமையுடன் கூடிய சமஉடைமை, அறிவியல் நெறி முதலான பல்வேறு பொருள்களை உணர்த்தும் பன்முகப் பொருளாற்றல் கொண்ட, வலிமை வாய்ந்த ஒரு குறியீட்டுச் சொல்லாகத் திராவிடம் திகழ்கிறது இத்தகைய பொருள்களையும் இச்சொல்லுக்குள் அடக்கி, அதனைச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போல ஆக்கியவர் தந்தை பெரியார் அவர்களேயாவார்கள். இதன் பொருளை உணராத மொழித்திறம் முட்டிய மூங்கைகள் குன்றுமுட்டிய குருவியைப் போல இடர்ப்படுவர் என்பது உறுதி.

தோழர்களே! வரலாற்றை உற்று நோக்கிப் படியுங்கள். நீங்கள் இந்த நிலைக்கு உயர்ந்துவர எந்த இயக்கம் உற்றுழி உதவியது என்பதை எண்ணிப் பாருங்கள்!

திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் பயின்று வரவில்லை, அதனால் அதனை ஏற்க முடியாது என்கிறார் மருத்துவர் அய்யா! ஏறுதழுவுதல் என்ற வீர விளையாட்டு, தொல்காப்பியத்தில் இல்லை; கலித்தொகையைத் தவிர்த்த பிற சங்க இலக்கியங்களில் இல்லை. தொல்காப்பியத்தில் பயின்று வரும் பல அரிய சொற்கள் சங்க இலக்கியத்தில் இல்லை. அதனால் இவற்றையெல்லாம் நீக்கி விடலாமா? பாட்டாளி என்ற சொல்கூடச் சங்க இலக்கியத்தில் இல்லையே! அதைவிட்டு விடுவீர்களா!

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாட வேண்டிய அவசியம் என்ன என்கிறார்கள். அய்யா! 1912ஆம் ஆண்டு தொடங்கி 2012 ஆண்டுடன் திராவிடர் இயக்கத்திற்கு அமைப்பு வழியில் நூறாண்டுகள் ஆகிவிட்டன. 1912_-க்கும் 2012_க்கும் இடையில் நூறு ஆண்டுகள் இருக்கின்றன என்பதை எண்ணிப் பாருங்களேன்! கணக்கிலும் தடுமாற்றமா? நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாடாமல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தா கொண்டாடு வீர்கள்!

திராவிடத்தால் எழுச்சி பெற்ற இளைஞர்கள் அரசியல் அதிகா ரத்தையும், ஆட்சிப் பொறுப்பையும் கைப்பற்றினார்கள். ஆசிரியர் அலுவலர், மருத்துவர், பொறியாளர் என்று பல்கிப் பெருகிய அவர்கள் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அடுத்த தலைமுறை அறிவியல் வளர்ச்சியை உற்றுநோக்கித் தகவல் தொழில் நுட்பத்தை, தன் வயப்படுத்திக் கொண்டுவிட்டது. இன்று உலகெங்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ் இளைஞர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்! இத்தகைய புரட்சிக்கு யார் காரணம்? தந்தை பெரியாரின் கல்விக் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா இது! தேர்தலில் தோற்றுப் போன வுடன், பதவிகள் பறிக்கப்பட்டவுடன், பார்ப்பனர்களைப் போல பேசுவதும் அவர்கள் உதவியை நாடுவதும் நன்றி மறந்த செயல்!
 http://viduthalai.in/page2/31986.html

Wednesday, April 18, 2012

துக்ளக் சோ ராமசாமி அய்யர் மீது சென்னை உயர்நீதிமன்றம் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது


கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த துக்ளக் சோ ராமசாமி அய்யர்,

சென்னை உயர்நீதிமன்றத்தில் 1962 இல் ஊழல் நீதிபதி கிடையாது. இப்போது? ஊழல் இல்லா நீதிபதிகள் உண்டா என்று தெரியாது; இதுதான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்.(துக்ளக், 18.4.2012 - பக்கம் 29 என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போதுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊழலற்றவர்களா, இல்லையா என்கிற அய்யப்பாட்டை இதன்மூலம் உருவாக்கியிருக்கிறார் சோ.

இதன்மீது சென்னை உயர்நீதிமன்றம் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

1962 இல் ஊழல் நீதிபதிகள் கிடையாது என்று நற்சான்று கொடுத்திருக்கிறார் திருவாளர் சோ.

அப்படியா....?

தலைமை நீதிபதியாக இருந்த பார்ப்பனர் ஒருவர், தன் பிறந்த தேதியை மாற்றியது ஊழலுக்கு அப்பன் அல்லவா?

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இராமச் சந்திர அய்யர் பிறந்து 11 மாதம் கழித்து அவரது தம்பி பிறந் திருக்கிறாரே - இந்த அதிசயம் எப்பொழுது நடந்ததாம்?

பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் அல்லவா - (இ)எப்படியும் பிறந்திருக்கலாம் - ஆமென்க!

இதுபற்றி கோயங்கா வீட்டுக் கணக்குப்பிள்ளை எஸ். குருமூர்த்தி அய்யர் என்ன எழுதினார் தெரியுமா?

20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் பிறப்புச் சான்றுகள் என்பது அதிகாரபூர்வமாக இல்லையாம். அதனால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாம்! உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு போடப்பட்ட நிலையில், பதிவாளர் சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதி இராமச்சந்திர அய்யருக்கு முறைப்படி தெரிவித்த அடுத்த சில விநாடியே பதவி விலகி விட்டாராம். பதவி விலகவில்லை என்றால் என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியுமே - சங்கராச்சாரியார்களே கம்பி எண்ணியிருக்கிறார்களே! தலைமை நீதிபதியும் கம்பி எண்ணினார் என்ற பார்ப்பனர்களின் சாதனை வீண் போயிற்று!

அவர் பதவி விலகி இருந்தாலும், தேதியைத் திருத் தியதற்கான மோசடிக்கான தண்டனை எப்படி தப்பியது? குடியரசுத் தலைவர் ஒரு பார்ப்பனர் (டாக்டர் ராதாகிருஷ்ணன்) இவர் ஒரு பார்ப்பனர் என்ற பாசக்கயிறுதானே!

டில்லி தலைமைச் செயலகத்தில் இந்த இராமச்சந்திர அய்யர்வாளின் உடன் பிறப்பு பெரும் பொறுப்பில் இருந் தார். அந்த சாய்காலோடுதான் அய்யர்வாள் இப்படித் திமிர் முறித்தார்.

இதுபோன்ற குற்றம் பார்ப்பனர் அல்லாத பிரதம நீதிபதியான ராஜமன்னார் அவர்கள் மீதோ, அல்லது ஓய்வு பெற்றுள்ள தமிழர் நீதிபதிகளான சோமசுந்தரம், கணபதியாபிள்ளை போன்றவர்கள்மீதோ அவர்களது பதவிக் காலத்தில் வந்திருக்குமாயின் இந்நேரம் அக்ரகார ஏட்டினர் இதை அகில உலகத்திற் கும் தெரியும் வண் ணம் தம்பட்டம் அடித்திருக்க மாட்டார்களா? கூப் பாடு போட்டிருக்க மாட்டார்களா? என்று அன்று விடுதலையில் எழுதியவர் அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (20.4.1964). சென்னை - கடற்கரை பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தினார், சமூகநீதியின் தந்தையான பெரியார் (19.4.1964).

பார்ப்பனர்கள் நீதிபதியாக இருந்தால் ஊழல் நடக் காது என்ற பொருளில் எழுதியுள்ள சோவைப் புரிந்து கொள்வீர்.http://www.viduthalai.in/headline/32265-2012-04-18-08-31-56.html

weather counter Site Meter