Pages

Search This Blog

Showing posts with label ஐயப்பன். Show all posts
Showing posts with label ஐயப்பன். Show all posts

Monday, March 7, 2011

மகரஜோதி மோசடி

சபரிமலையில் தோன் றுவதாகக் கூறப்படும் மகரஜோதி என்பது இயற்கையானதல்ல - அய்யப்பக் கடவுளின் சக்திக்கும் அதற்கும் எவ் வித சம்பந்தமும் இல்லை. கேரள மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் சட்டியில் சூடத்தைக் கொளுத்திக் காட்டுகிறார்கள். அதனை மகர ஜோதி என்று நம்பிப் பக்தர்கள் சேவிக்கிறார்கள் என்ற உண்மை அம்பலமாகி விட்டது.

கேரள மாநிலம் பகுத் தறிவாளர்கள் மகரஜோதி காட்டப்படும் அந்தப் பொன்னம்பல மேட்டுக்கே சென்று உண்மையைக் கண்டுபிடித்து மக்களுக் குத் தெரிவித்து விட் டார்கள். அவர்கள் கண்டுபிடித்த அந்தத் தகவல்கள் பிளிட்ஸ் (16-1-1982) ஏட்டில் வெளி வந்தது. இல்லஸ்ரேட்டட் வீக்லி ஏடும்(1988) அம்பலப்படுத்திவிட்டது.

கேரளமாநில முதல மைச்சர் ஈ.கே.நாயனாரும் ஒப்புக் கொண்டார். ஆனாலும் அதில் தலை யிடமாட்டோம் என்று கூறிவிட்டார்.

இப்பொழு துள்ள முதல் அமைச்சர் அச்சுதானந்தனும், உண்மை எப்படி இருந் தாலும் இதில் அரசு தலையிடாது; மக்களின் மத நம்பிக்கையில் குறுக் கிடப் போவதில்லை என்று ஒரு மார்க்ஸிஸ்டு முதல் அமைச்சரே கூறி விட்டார்.

இதற்கிடையே இந்தப் பிரச்சினையைத் திசை திருப்பினார்கள்.

மகர விளக்கு என்று கூறப்படுவது பொய்தான்; மனிதர்கள் செய்யும் ஏற்பாடுதான்; ஆனால் மகரஜோதி என்பது வேறு - அன்றைய தினம் வானில் தோன்றக் கூடி யது என்று சபரிமலைக் கோயில் மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரு கூறினார்.

சரி, அதாவது உண்மையா? மனிதர்கள் ஏற்றும் மகர விளக்கு அல்லாமல் அன்றைய தினம் அவர் கூறும் மகர ஜோதி தனியாக வானத் தில் தோன்றுகிறதா? இந்தக் கேள்விக்கு இது வரை பதில் கிடையாது.

இது பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் (கொலைக் குற்றத்தில் பிணையில் நடமாடிக் கொண்டு இருப்பவர்) ஜெயேந்திர சரஸ்வதி யிடம் காமகோடி என்னும் ஆன்மிக மாத (மார்ச் 2011) இதழ் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது.

கேள்வி: ஸ்ரீ சபரிமலை யில் தோன்றும் மகர ஜோதி என்பது அன்றைய தினம் வானில் தோன்றக் கூடிய பிரகாசமான நட் சத்திரம் ஆகும். ஆனால் மகரவிளக்கு என்பது பொன்னம்பல மேட்டில் காலம் காலமாக ஏற் றப்படும் தீபம் ஆகும்.

ஆகவே பக்தர்களின் நம்பிக்கையைக் குலைக் கும் விதத்தில் யாரும் செயல்படக்கூடாது என்று  ஸ்ரீ சபரிமலை கோயில் மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரு குறிப்பிட்டுள்ளது பற்றி?

ஜெயேந்திரர் பதில்: மகரஜோதி - மகர விளக்கு இரண்டும் ஒன்றுதான்.

(காமகோடி, மார்ச் 2011 பக்கம் 4)

இவர் கூற்றுப்படி மகர விளக்கும், மகர ஜோதி யும் ஒன்றுதான் என்றால் இரண்டும் மோசடி சமாச் சாரங்கள்தானே!

பீம்சிங், இது என்ன குழப்பம்?
- மயிலாடன்
http://viduthalai.in/new/page1/4916.html

Wednesday, February 2, 2011

அய்யப்பப் பக்தர்களின் சிந்தனைக்கு

அய்யப்பப் பக்தர்களே, உங்கள் மீது எங்களுக்கு ஒன்றும் கோபம் இல்லை - 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று மகரஜோதியைத் தரிசித்து வந்தால் பாவங்கள் பறந்து போய்விடும் என்பதுதானே உங்கள் நம்பிக்கை?

அந்த மகரஜோதி என்பதே மோசடி - தெய்வ ஜோதி அல்ல; அய்யப்பனின் மகிமையல்ல என்று தெளிவாக, திட்டவட்டமாகத் தெரிந்துவிட்ட பிறகு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

பாவங்கள் தொலைவது பிறகு இருக்கட்டும். இவ் வாண்டு (14.1.2011) மகரஜோதியைத் தரிசிப்பதற்காகச் சென்று திரும்பிய 102 பக்தர்கள் புல்மேடு எனும் இடத்தில் பரிதாபகரமான முறையில் பலியாகி விட்டார்களே - நெஞ்சம் பதறுகிறதே - 1999 ஆம் ஆண்டிலும் இதேபோல 54 பக்தர்கள் பலியானார்கள்.

உண்மையிலேயே அய்யப் பனுக்குச் சக்தியிருந்தால் தன்னை நாடி வந்த பக்தர்களைக் காப்பாற்றியிருக்க மாட்டானா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

பொன்னம்பலமேடு பகுதியில் தோன்றுவதாக நம்பும் மகரஜோதி என்பது உண்மையானதல்ல - தெய்வ சக்தி யல்ல; மனிதர்களால் காட்டப்படுவதுதான் என்று திரு வாங்கூர் தேவசம் போர்டு ஒப்புக்கொண்ட செய்தி தமிழ், ஆங்கில ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் (தொலைக் காட்சிகளில் 31.1.2011 அன்றும், ஏடுகளில் 1.2.2011 அன்றும்) விரிவாக வெளிவந்தனவே - கேட்டீர்களா - படித்தீர்களா?

102 பக்தர்கள் பலியான நிலையில் கேரள உயர்நீதி மன்றம் சந்தேகத்தை எழுப்பியதால், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை தேவசம் போர்டுக்கு ஏற்பட்டது. அந்தப் போர்டு கூடி (31.1.2011) கடவுள் சக்தியல்ல - மனிதர்கள் காட்டும் செயற்கையானதுதான் மகரஜோதி என்பதை நீதி மன்றத்தில் சொல்லப் போகிறோம் என்று கூறிவிட்டார்களே!

1973 ஆம் ஆண்டிலேயே கேரளாவில் உள்ள பகுத்தறி வாளர்கள் 24 பேர் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு நேரில் சென்று, அங்கு மின் வாரியத்தைச் சேர்ந்த கோபி என்னும் ஓட்டுநர்தான் சூடக் கட்டிகளை அலுமினிய சட்டியில் வைத்துக் கொளுத்திக் காட்டுகிறார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டனர்.

பகுத்தறிவாளர்கள் பட்டாசுகளை வெடித்துக் காட்டி பக்தர்களின் குழப்பங்களைத் தெளிய வைத்தார்கள். இவர்கள்மீது காவல்துறை வழக்குப் போட்டது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது - அவர்கள் செய்தது குற்றம் அல்ல என்றும் கூறிவிட்டதே!

1980 இல் ஒருமுறை திருச்சூரிலிருந்து பொன்னம்பல மேடு சென்று வழக்கமான திசைக்கு எதிர்த் திசையில் விளக்கைக் (ஜோதியை) காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள். பிளிட்ஸ் ஆங்கில இதழும் (16.1.1982) தெகல்கா இதழும் (21.6.2008) மகரஜோதி பொய்யை, மோசடியை படங்களுடன் வெளியிட்டு அம்பலப்படுத்திற்றே!

கேரள மாநில இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஜி. சுதாகரனும், தேவசம் போர்டு தலைவராக யிருந்த சி.கே. குப்தனும், ஆமாம், மகர விளக்கை மனிதன்தான் கொளுத்திக் காட்டுகிறான் என்று ஒப்புக்கொண்டார்களே!

இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத் தலைவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஜோசப் எடமருகு அன்றைய கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே. நாயனாரைச் சந்தித்து இதுகுறித்துச் சொன்னபொழுது, அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்; ஆனாலும், இதில் தலையிட வேண்டாம் என்று கூறினாரே!

இப்பொழுது உள்ள கேரள மாநில முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான அச்சுதானந்தன், உண்மை எதுவாகயிருந்தாலும் மக்களின் மதப் பிரச்சினையில் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளாரே - அது சரியானதுதானா?

அதேநேரத்தில், உண்மையை ஒப்புக்கொண்டு அதனை கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப் போவதாக தேவசம் போர்டு அறவித்துவிட்டது.

மார்க்சியம் பேசும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி மத மோசடிக்குத் துணை போவது வெட்கக்கேடானதும் - வருந்தத்தக்கதும் அல்லவா!

பொதுமக்கள் குறிப்பாகப் பக்த கோடிகள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும் ஆகும்.

மகரஜோதி என்றும், அது தெய்வ சக்தி என்றும், அது குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் தோன்றும் என்றும்தானே நம்பிக் கொண்டிருந்தீர்கள்; அந்த ஜோதியைத் தரிசித்தால் பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும், புண்ணியம் கிடைக்கும் என்று நம்பி தானே 48 நாள்கள் (ஒரு மண்டலம்) விரதம் இருந்து, பணத் தைச் செலவு செய்து, வெகுதூரம் பயணமும் செய்தீர்கள். இப்பொழுது அந்த மகர ஜோதியே உண்மையல்ல என்று ஆகிவிட்டதே!

கடவுள் அருளால் தோன்றுவது அல்ல என்று சம்பந்தப்பட்டவர்களே சொல்லிவிட்டார்களே! பக்தியைக் காட்டி பணம் சம்பாதிக்கச் செய்த திட்டமிட்ட ஏற்பாடு -மோசடி என்று தெரிந்துகொண்டுவிட்டீர்களா இல்லையா?

இன்னொரு சேதி உண்டு.

1956 இல் ஒருமுறை இந்த அய்யப்பன் கோயிலே தீப்பிடித்து எரிந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

இப்பொழுது உண்மையைத் தெரிந்துகொண்டுவிட்டீர் களே - இனியும் ஏமாறப் போகிறீர்களா? மோசடிக்குப் பலி யாகப் போகிறீர்களா? உங்களுக்கு உண்மையிலேயே பக்தி யிருந்தால் உள்ளூரில் கோயில்கள் இல்லையா? அந்தக் கோயில்களில் இருக்கும் சாமிகளுக்குச் சக்தியில்லை என்று கருதுகிறீர்களா?

சிந்திப்பீர்! எங்களுக்காக அல்ல, உங்களுக்காக! உங்கள் அறிவும், பொருளும், உழைப்பும், காலமும் வீணா கலாமா? ஒரே ஒருமுறை சிந்தித்தாலே போதும் - உண்மை தெரிந்துவிடும் - மூட நம்பிக்கையும் ஒழிந்துவிடும்!

மானமும் அறிவும் மனிதனுக்கழகு

- தந்தை பெரியார்

Wednesday, December 15, 2010

மதப் போதையும் - மனித நேயமும்

அய்யப்பப் பக்தர்களைக் கேட்டுப் பாருங்கள். ஒரு மண்டலம் (40 நாள்கள்) விரதம் - புலால், புகை, மது, மாது, சூது என்ற எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது - ஒழுக் கத்தை வளர்க்கக் கூடிய சமாச்சாரம் என்று நீள மான கட்டுக் கதைகளை அளந்து கொட்டுவார் கள்.

(அது என்ன 40 நாள் கள் மட்டும் ஒழுக்கம்? அப்படியென்றால் மீதி நாள்களில்?)

மண்டல விரதம் இருந்தவர்க்கும், மனதில் ஆசை விட்டவர்க்கும், மலையை வந்து அடைந்த வர்க்கும் மகரஜோதியாய் தோன்றிடுவார் என்று பாட்டாய்ப் பாடுவார்கள்.

ஒரு தகவல்: கரூர் மாவட்டம் குளித்தலையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கிராமப் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. கழகச் சொற்பொழிவாளர் முத்து கதிரவன் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு ஆசாமி நிதானமிழந்து வீழ்ந்து கிடந்தார். அவர் அணிந்தி ருந்த உடையில் இருந்து அய்யப்பப் பக்தன் என்பது பளிச்செனத் தெரிந்தது.

ம(து)தப் போதை ஏறி ஆள் மல்லாந்து கிடப் பதைக் கண்டு கருஞ் சட்டைத் தோழர்கள் கேலி, கிண்டலில் ஈடுபடவில்லை.

எந்த ஊரோ - எங்குப் போக வேண்டுமோ? சரக்கு அடித்து ஆள் மல்லாந்து விட்டான். இரவு நேரம் என்ன ஆகுமோ? என்ற உணர்வில் பக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, முகத்தில் தெளித்து, வேட்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் கிடந்த அந்த அய்யப்பப் பக்தன் மீது ஊற்றி, ஆளைக் கொஞ்சம் உலுக்கித் தெளிய வைத்து, பத்திரமாக அனுப்பி வைத் தனர்.

இதில் இரண்டு விடயம் கவனிக்கத் தக்கதாகும். விரதம் இருந்தால் ஒழுக்கம் வளரும், மது, மாது, சூது, புகை இவையெல்லாம் புகை என்று கதை விடும் ஆசாமி கள், வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் ஏடுகள், இதழ்கள் - இது போன்ற காட்சிகளைக் கண்ட பிற காவது போதை தெளிந்து புத்தியுடன் நடந்த கொள்ள வேண்டும்.

இரண்டாவது - கடவுள் இல்லை, மதம் ஒழிக என்று கருதும், பிரச் சாரம் செய்யும் திராவிடர் கழகத்தினர் - கருப்புச் சட்டைத் தோழர்கள் - ஏதோ ஒரு பக்திக் கிறுக் கன் விழுந்து கிடக்கிறான் என்று கிண்டலடித்துச் செல்லாமல், அந்த ஆளைத் தெளிய வைத்து, வீட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்ததில் தலை தூக்கி நிற்கும் மனிதாபி மான உணர்வையும், பகுத் தறிவையும் கொஞ்சம் சீர் தூக்கிப் பார்க்க வேண் டும்.

கடவுளை மற -மனிதனை நினை!

என்ற தந்தை பெரியா ரின் தத்துவம் மனித குலத்துக்கு எவ்வளவுத் தேவை என்பதை நிதானத் துடன் நினைத்துப் பார்க்கட்டும்! - கருஞ்சட்டை

குறிப்பு: கரூர் மாவட்ட விடுதலை செய்தியா ளர் அலெக்சாண்டர் இந் தச் செய்தியை அனுப்பி உதவினார்.
http://www.viduthalai.periyar.org.in/20101215/news40.html

Saturday, October 16, 2010

புத்தன் அய்யப்பனாக்கப்பட்ட வரலாறு!-ஜோசப் இடமருகு


சபரிமலையிலுள்ள கருவறைக் கடவுள் சாத்தன்தான் என்று மலைவாசிகள் கூறுகின்றனர். குளத்துப்புழை பகுதியிலும், பீர்மேட்டிலும் உள்ள மலைவாசிகளில் பலரும் சாத்தனைத்தான் வழிபடுகின்றனர் என்பதும் இங்கே நினைவு கூரத்தக்கதாகும். அய்யப்பனுக்கும் சாத்தன் என்ற பெயர் இருந்ததாம் குருகுலம் (1954 ஆகஸ்ட்) எனும் மாத இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு காணப்படுகின்றது.
சிலப்பதிகாரம் என்னும் பண்டைத் தமிழ் நூலில் அய்யப்பனை சாஸ்தா என்றும், பாசண்ட சாத்தன் என்றும் பாசண்டன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அந்த நூலுக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் இதைப் பற்றி கூறும்போது வைதீக மதத்துடன் தொடர்பில்லாத தொண்ணூற்றாறு சாத்திர நூல்களில் பாண்டித்தியம் பெற்றவர் அய்யப்பன் என்று விளக்கமளிக்கின்றார். ஆனால், எந்த ஒரு தமிழ் நூலிலும் அய்யப்பன் புத்த தர்மத்தைப் பின்பற்றியவர் என்று காணப்படவில்லை.

அய்யப்பனும், சாத்தனும் ஒருவரல்ல என்பதையே இது காட்டுகின்றது. சாஸ்தா என்ற புத்தமதப் பெயரே கிராமிய மொழியில் சாத்தன் என்றானது. சாஸ்தா என்ற சொல்லின் திரிபே சாத்தன் என்று குண்டர்ட்டும் சிறீகண்டேசுவரம் பத்மநாபப் பிள்ளையும் கூறுகின்றனர் சாத்தன். சாத்தனார் முதலிய பெயர்களும் கேரளத்தில் சாதாரணமாக நிலவின. கிராமிய மொழியில் சாத்தன் ஆனது சாஸ்தா. அதாவது புத்தன்தான் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரம். இப்பொழுது இயல்பாகவே ஓர் அய்யம் எழலாம். மலைப் பிரதேசங்களில் வாழ்கின்ற பழங்குடியினரான காணிக்காரர்களுக்கும் பிறருக்கும் புத்த மதத்துடன் தொடர்பு உண்டானது எப்படி என்பதே அந்த அய்யம் இன்று பழங்குடியினராகக் கருதப்படுகின்ற அவர்களில் பலரும் ஒரு காலத்தில் இதே நிலையில் இருந்தவர்களல்லர். பார்ப்பனர்கள் குடியேறிய காலத்திலும் அதற்குப் பிறகும் ஒவ்வொரு காரணங்களுக்காக காட்டில் தஞ்சம் புகுந்தவர்களே நம்முடைய மலை வாசிகளில் பெரும் பிரிவினர் பார்ப்பன மதத்துடன் நட்புக் கொள்ள மறுத்து காட்டுக்குச் சென்ற அவர்கள் பிற சமூகத் தொடர்புகள் இல்லாததனால் காலப்போக்கில், வீழ்ச்சியடைந்து விட்டனர். சபரிமலை சாஸ்தாவை இன்றும் இந்த மலைவாசிகள் அவர்களுடைய கடவுளாக வழிபடுகின்றனர். சபரிமலை சாத்தா என்றும் சபரிமலை சாத்தான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அய்யன்

சபரிமலையிலுள்ள மூலத்தான இறைவனை சாதாரண மக்கள் அய்யன் என்று கூறுகின்றனர். பழைய பாடல்களிலும், அய்யப்பன் துதிகளிலும் அய்யன் என்ற சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் பெயருடன் அய்யன் என்று சேர்க்கும் வழக்கம் இருந்தது. எடுத்துக்காட்டு; ராமய்யன், சுப்பய்யன், முத்தய்யன், வீரய்யன்.

தந்தை, செல்வாக்கு உடையவன், யஜமான் என பல பொருள்களையுடைய சொல் இது. இந்தச் சொல் பாலி மாழியிலிருந்து மலையாளத்தில் புகுந்ததே. புத்த மதத்தினர் தான் பாலிமொழியைக் கேரளத்திற் கொண்டு வந்தனர். இன்று அந்த மொழியைப் பேசுபவர்கள் கேரளத்துக்குக் இல்லையென்றாலும் பாலி மொழியிலுள்ள பல சொற்கள் மலையாளத்தில் உள்ளன. அய்யன் என்ற சொல்லும் சபரிமலை இறைவனுக்கு புத்த மதத்துடன் உள்ள தொடர்பையே வெளிப்படுத்துகின்றது. எல்.ஏ. ரவிவர்மா இதைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்:

புத்தருக்கு ஆர்ய என்ற பெயர் (சில சமயங்களில் ஆர்யக என்றும், இருப்பதை புத்த மத நூல்களில் தாராளமாகக் காணலாம். ஆர்ய என்ற ஓசை பாலி (புத்தமதத்தின் முக்கியமான இலக்கிய மொழியும் இது தான்) யில் அய்யோ என்றாகும். புத்தமத்தின் மதப் பிரச்சார முயற்சியில் பாலி மொழியிலுள்ள பல ஓசைகள் தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளத்தில் வந்து சேர்ந்துள்ளன.

அய்யோ என்ற சொல் திராவிடத்தில் வந்தபொழுது அன்னும் சேர்ந்து அய்யனும், அய்யோ+அப்பன்=அய்யோப்பனும் ஆனது. ஆர்யஓசையே பிராகிருத மொழியில் அஜ்ஜ என்றாகின்றது. அஜ்ஜ திராவிட மொழியில் அச்ச என்றும், அய்ய என்றும் மாறுகின்றது அச்சன் கோவில், புத்தச்சன் முதலிய சொற்களிலுள்ள அச்சன் ஆர்ய ஓசையின் திராவிட வடிவமாகும். சங்கரய்யன், பாலிய தச்சன் முதலியவற்றிலுள்ள அய்யன், அச்சன் என்ற பூஜக சொற்கள் சமஸ்கிருதத்திலுள்ள பூஜக சொல்லான ஆர்ய ஓசையின் பழைய வடிவிலிருந்து திராவிட உருவை அடைந்ததாகும் இரண்டினுடைய மூலம் ஒன்றான போதிலும் இரண்டு வழியில் நுழைவதால் இரண்டு பொருள்கள் உண்டாகின்றன. பாலி மார்க்கம் வந்ததால் அதன் மூல குணம் அனுசரித்து பெயரானது; பிராகிருத மார்க்கம் வந்ததால் அதன் மூலத்தை அனுசரித்து பூஜக வசனம் ஆனது.

ரவி வர்மா தொடர்ந்து கூறுவதாவது: தர்ம சாஸ்தா என்ற சொல்லிலுள்ள தர்ம என்ற சொல், சரணம் அழைத்தல் என்பதாகும். இவை புத்தர் பிறப்பு வாதத்துக்கு உதவியாக இருக்கின்றது. தர்மசிவன் என்றோ தர்ம விஷ்ணு சரணம் என்றோ சொல்வதில்லை தர்ம சொல் சவுகதர் (புத்தர்)களின் முக்கிய சொல்லாகும். அதுபோலவே சரணம் என்பதும் சங்கம் சரணம்,புத்தம் சரணம் தர்மம் சரணம், என்ற புகழ்பெற்ற புத்தவசனத்தைப் பாருங்கள். இது போல சிவம்சரணம், விஷ்ணு சரணம் என்று கூறுவதில்லை. சாஸ்த்ரு புசைகளில் பயன்படுத்துகின்ற ரேவந்தாதி பல சொற்களும் (ரேவந்தாய நம; உள்பட பல) புத்த தேவதை பெயர்களே. விஷ்ணு மாயையில் சிவனுக்குப் பிறந்தது சாஸ்தா. புத்தரும் மாயாதேவி சுதன்! இவ்வாறு பல வகைகளிலும் புத்த பிறப்பு வாதத்திற்கு வலிமை சேர்ப்பதாகக் காணப்படுகின்றது. (_ அய்யப்பன் மாதிகை மலர்_1, இதழ் _1.)

அய்யப்பனை அதாவது சாஸ்தாவை இந்துக் கடவுளாக மாற்ற முயன்றவர்கள் மாயாதேவியின் மகனான புத்தரை விஷ்ணு மாயையின் மகனாக ஆக்கி கதையைத் திருத்தினார்கள். அதனுடன் அவர்களுடைய கற்பனையையும் கலந்து அவரை இயற்கைக்கு முரணான வாரிசாகவும் ஆக்கிவிட்டனர். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு தென்னிந்தியாவில் சைவ மதத்தினருக்கும், வைணவ மதத்தினருக்குமிடையே நடந்து வந்த கலவரங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அந்த மதங்களை இணைக்கும் முயற்சிகளை இணைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் மகனான ஒரு கடவுளை உருவாக்கிய பின்னணியில் இத்தகைய ஒரு குறிக்கோளும் இருந்தது. அதனுடன் பழைய புத்தமதத்தின் ஆதரவாளர்களான சாதாரண மக்களையும் அந்த மதத்திற்குள் கொண்டுவர முடிந்தது.

அய்யன் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வழிபடப் பட்டு வருகின்ற கிராமிய கடவுள் சங்கல்பமும் புத்த மதத்துடன் தொடர்புடையதுதான். புத்த மதம் பரவுவதற்கு முன்பிருந்த மத சங்கல்பங்களை உட்கொண்டு அவர்களும் அந்த சங்கல்பத்தை வளர்த்திருக்கலாம்.
http://www.viduthalai.periyar.org.in/20101016/snews12.html

weather counter Site Meter