Pages

Search This Blog

Showing posts with label அயோத்தி தீர்ப்பு. Show all posts
Showing posts with label அயோத்தி தீர்ப்பு. Show all posts

Monday, February 14, 2011

அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப்திப்படுத்துவது

அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப்திப்படுத்துவது
நீதிமன்றத்தின்வேலையாகாது! நம்பிக்கை என்பது ஆதாரத்துக்கான அடிப்படையா?
சென்னைப் பல்கலைக் கழகத்தில் அசோக்வர்தன் ஷெட்டி அய்.ஏ.எஸ். தொடுத்த வினா

சட் டத்தை அடிப்படை யாகக் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டுமா அல் லது நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டுமா என்ற வினாவை அசோக் வர்தன் ஷெட்டி எழுப் பினார்.

சென்னைப் பல் கலைக் கழகத்தின் இந் திய வரலாற்றுத் துறை சார்பில் வெள்ளியன்று (பிப்.11) நீதிபதி பி. ராஜ கோபாலன் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மதச் சார்பற்ற அரசும் மதம் சார்ந்த சமுதாயமும்; இந்தியாவின் மதச் சார்பின்மையை வடிவ மைப்பதில் சட்டம், நீதித்துறையின் பங்கு என்ற தலைப்பில் தமிழக அரசின் முதன்மைச் செயலர் (நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வியோகத்துறை) கே. அஷோக்வர்தன் ஷெட்டி உரையாற்றினார். வளர்ந்த பெரிய மனித ராக ராமனின் பல்வேறு செயல்பாடுகள் அனை வருக்கும் தெரிந்துள்ள நிலையில், அவரை என்றென்றும் சிறுவர் என்பதுபோல் அலகா பாத் நீதிமன்றம் எடுத் துக் கொண்ட தன் மூலம் சட்டத்தின் ஆட்சி யில் ஒரு கடுமையான உறுதியின்மைச் சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த வழக்கில் 1989-இல் ராம்லல்லா (பால ராமன்) சார்பில் தேவ்கி நந்தன் என்பவர், மூல வழக்கு தாக்கல் செய்யப் பட்ட 40 ஆண்டுகள் கழித்து தன்னை மூன்றா வது தரப்பாக இணைத் துக் கொண்டார். சிறு வர்கள், மூளை வளர்ச்சி யற்றவர்கள் போன் றோரின் உரிமைகளை பாதுகாப்பதற்காக உள்ள சட்ட விதிகளை ராமன் கோயிலுக்கு சாத கமாக பயன்படுத்த தேவ்கி நந்தன் முயன் றார். சட்டப்படி வழக் குத் தொடரப்பட்ட 12 ஆண்டுகளில், 1961-இல் பால பருவம் முடிந்து ராமன் வளர்ந்தவராகி விடுகிறார். இந்நிலையில் பாலராமன் சார்பில்தாக் கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்றார் அஷோக் வர்தன்.

இந்திய ஆதாரங்கள் சட்டப்படி, நிரூபிக்கப் பட்ட அல்லது நிரூபிக் கப்படாத உண்மைகள் மட்டுமே வழக்குகளில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நம்பிக்கை என்பது ஒருபோதும் ஆதாரத்திற்கான அடிப் படையாக இருக்க முடி யாது. பாபர் மசூதியின் மய்யக் கோபுரப் பகுதி யில் தான் ராமன் பிறந்த தாக இந்துக்கள் பலர் நம்புகிறார்கள் என்று கூறி, உண்மை என்ப தற்கு மேலாக நம்பிக் கையை அடிப்படை யாகக் கொண்டு தீர்ப் பளிக்கப்பட்டிருப்பது ஒரு அபாயகரமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் பலரும் இந்த நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள் என் பதை நீதிமன்றம் உறுதிப் படுத்தியது எப்படி? வழக்கில் எதிர்த் தரப் பினரான முஸ்லிம் மக் களின் நம்பிக்கை என்ன ஆவது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மசூதி இருந்த இடத் தின் அடியில் முன் னொரு காலத்தில் ஒரு கோயில் இருந்ததாக தொல்லியல் துறையினர் தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் நீதி மன்றம் தனது தீர்ப்பை அளித்திருக்கிறது. அது கண்டிப்பாக ராமர் கோயிலாகத்தான் இருந் திருக்க வேண்டும் என்ப தில்லை. மசூதி கட்டப் படுவதற்கு முன் ஒரு கோயில் இருந்தது என் பது, நன்கு நிலைநாட் டப்பட்டுள்ள இந்திய சட்ட விதிகளின்கீழ் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று முடிவு செய்வதற்கான அடிப் படையாக இருக்க முடி யாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1949 முதல் 37 ஆண்டு களாக மூடப்பட்டிருந்த பாபர் மசூதியை 1986-இல் அன்றைய மத்திய அரசு திறந்து விட்டது. இந்துக் களை திருப்திப்படுத்த இவ்வாறு செய்யப்பட் டது. அதற்கு முன், ஜீவ னாம்ச உரிமை தொடர் பான ஷா பானு வழக் கில் அந்தப் பெண் ணுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதை ஒரு பகுதி சிறு பான்மை மத அடிப் படைவாதிகள் எதிர்த் தனர். அதைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் சட்டத்தை அன்றைய (ராஜீவ் காந்தி) அரசு கொண்டு வந்தது. இது சிறுபான்மையினரை திருப்திப்படுத்துகிற அணுகுமுறை என்ற குற்றச்சாற்றுக்கு வழி வகுத்தது.

பொதுவாக நாட் டின் அரசமைப்பு சாச னம் அனைத்து மதங் களையும் சமமாகவே நடத்துகிறது. எனினும், பல்வேறு சூழல்களில் சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. மாறுபட்ட மதங்களும், நம்பிக்கைகளும், பண் பாடுகளும் சமூகங்களும் உள்ள ஒரு நாட்டில் மதச் சார்பின்மை கோட் பாடு மிகவும் அவசிய மாகிறது. அரசு என்பது எந்த மதத்தையும் சாரா ததாக குடிமக்களின் நம் பிக்கைச் சுதந்திரத்தை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் எவ்வித பாகுபாடுகளும் இருக்க து என்பதை அரசு உறுதிப்படுத்த வேண் டும் என்றார் அவர்.

பொது சமூகச் சட் டம் குறித்த தமது கருத் துக்களை வெளியிட்ட அவர் மதவாதத்தின் அடிப்படையில் இதைப் பற்றிப் பேசுவது சிறு பான்மையினருக்கு அச் சத்தை ஏற்படுத்துகிறது என்றார். தேசிய ஒருமைப்பாட்டிற்கு இந்தச் சட்டம் தேவை என்பதாக முன்வைக் கிறபோது, சிறுபான்மை யினருக்கு தங்களது அடையாளங்கள் அழிக் கப்பட்டு விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. எனவே, பெண்களின் உரிமைகள், மனித உரி மைகள் என்ற அடிப் படையிலேயே தனி நபர் சட்டங்களில் திருத்தங் கள் கொண்டு வரப்பட வேண்டும். சிறுபான்மை மதங்களுக்குள் உள்ள முற்போக்குச் சிந்தனை யாளர்களின் ஒத்துழைப் போடு இதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும் அஷோக் வர்தன் ஷெட்டி கூறினார்.

தொகுப்புரையாற்றிய பேராசிரியர் கருணா கரன், நிலப்பிரபுத்துவ கால மனப்போக்குடன் ஒரு நவீன சமுதாயத்தை உருவாக்க முடியாது. மக்கள் ஒருமைப்பாட்டை உருவாக்க மதச்சார் பின்மை கோட்பாடு தான் நம்பகமான வழி மதச்சார்பற்ற மனப் போக்கை வளர்க்க நாட் டின் சட்டங்களும் தீர்ப் புகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை தலைவர் முனை வர் ஜி. வெங்கட்ராமன் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மகாராஷ்டிரா மாநில முன்னாள் தலைமை இயக்குநர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார் பேராசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
http://viduthalai.in/new/home/archive/3387.html 

Thursday, October 21, 2010

சேற்றில் புதைந்த யானையின் கதை!

அயோத்திப் பிரச்சினையில் அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு கட்டப் பஞ்சாயத்து முறையில், மூட நம்பிக்கைக்கு நம்பிக்கை என்னும் முகமூடி அணிந்து மகுடம் சூட்டிவிட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் ராமன் பிறந்த இடம் என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது என்று கூறி பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தும் வகையில் பேசித் திரிகின்றனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்ற வாளிகளின் பட்டியலில் உள்ளவர்கள் இப்பொழுதே விடுதலை அளிக்கப்பட்டதுபோல துள்ளிக் குதிக் கிறார்கள்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் காரணம் சொன்ன அடல் பிகாரி வாஜ்பேயி, அயோத்திப் பிரச் சினை தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு தாமதம் ஆனதால்தான் பாபர் மசூதி இடிக் கப்பட்டது என்று இடிப்புக்கு நியாயம் கற்பித்தார். இவர் எல்லாம் ஒரு பிரதமர் - அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காப்பாற்ற அவதரித்தவர் என்று நாட்டு மக்கள் நம்பித் தொலையவேண்டும்.

அலகாபாத் தீர்ப்பு - பாபர் மசூதி இடிப்புக் குற்ற வாளிகளைக் குற்றவாளிகள் அல்ல என்று சொல்ல வில்லை என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னார் என்றவுடன் அவர்மீது பாய்ந்து பிராண்டு கிறார்கள்.

காவி பயங்கரவாதம் என்ற சொல்லாடலை எப்படி பயன்படுத்தலாம் என்று எகிறிக் குதிக்கின்றனர்.

முஸ்லிம் பயங்கரவாதம் என்று பார்ப்பன ஏடுகளும், சங் பரிவார்க் கும்பலும் பயன்படுத்தியபோது பாயாசம் சாப்பிட்டதுபோல இருந்தது - உள்துறை அமைச்சர் என்கிற முறையில் தகவல்களை அதிகாரப்பூர்வமாகக் கையில் வைத்துக்கொண்டுள்ளவர் காவிப் பயங்கர வாதம் என்று அடையாளம் காட்டும்போது ஆத்திரம் அலை புரள்கிறதே - ஏன்? உண்மையைச் சொன்னால் எரிச்சல்தானா?

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் ஆட்டம் போட்டபோது, குண்டுவெடித்தபோது - அவை எல்லாம் முசுலிம்கள் முதுகின்மீது ஏற்றி முஸ்லிம் தீவிரவாதம் என்ற முத்திரையும் குத்தப்பட்டது.

2006 ஜூலையில் மும்பை ரயில், 2007 பிப்ரவரியில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், மே மாதத்தில் அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அக்டோபரில் அஜ்மீர் தர்கா ஷெரீஃப், 2008 ஜூலையில் அகமதாபாத் 2008 செப்டம்பரில் மாலேகான் முதலிய இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தபோது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது, இந்த வன்முறைகளின் பின்னணியில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் குறிப்பாக சிமி என்ற முஸ்லிம் அமைப்புதான் இருக்கிறது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது.

பார்ப்பன ஊடகங்கள் பச்சைப் பொய்களை அவிழ்த்துவிட்டன. உளவுத் துறையும் கூட இப்பிரச் சினையில் தடுமாறிவிட்டது.

மாலேகான் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மகா ராட்டிராவில் தீவிரவாத தடுப்புப் படை அதிகாரியாக (ATS) ஹேமந்த் கர்கரே பொறுப்பேற்ற நிலையில்தான், உண்மையில் இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணி யில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்கள் திட்ட மிட்ட வகையில் வட்டமாகச் சூழ்ந்துள்ளன என்பது ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

பெண் சாமியார் பிரக்யாசிங் சாத்வி, சங்கராச் சாரியார் தயானந்த பாண்டே, இராணுவத் துறையைச் சேர்ந்த புரோகித் உள்ளிட்டவர்களின் சதி வலைப் பின்னல் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டதே!

அகம்பாவம் பிடித்த ஆர்.எஸ்.எஸ். வட்டாரம் கலகலத்தது - வந்தது ஆபத்து என்று கவட்டிக்குள் தலை வைத்துக் கவிழ்ந்து படுத்தனர்.

இதற்கிடையே மும்பை தாஜ் ஓட்டல் பயங்கர வாதிகளால் தாக்கப்பட்டதைப் பயன்படுத்தி காவல் துறையில் நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட வரும், இந்தியாவின் தொடர் வன்முறைகளுக்குக் காரணமாக இருந்த சங் பரிவார் வட்டாரத்தை வெளி உலகுக்குக் காட்டியவருமான கர்கரே சந்தேகமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மகாராட்டிர மாநிலக் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம். முஷ்ரீப் வெளிப்படையாகவே நூல் ஒன்றை வெளியிட்டார். மத்திய அமைச்சரான அந்துலே அவர்களேகூட காவல்துறை அதிகாரி கர்கரே கொல் லப்பட்டதில் சதி இருக்கிறது என்று கூறவில்லையா?

உண்மைகள் எல்லாம் இவ்வாறு இருக்க, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தலைவர்கள் உத்தமபுத்திரர்கள் போல வன்முறை முத்திரையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பார்களேயானால் - அது, சேற்றில் புதைந்து கொண்டிருக்கும் யானை வெளியில் வர திமிரத் திமிர மேலும் மேலும் ஆழமாகப் புதைந்து போகும் நிலையைத்தான் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றோம்!

Saturday, October 16, 2010

ரொம்பவே துள்ள வேண்டாம் ராமர் கூட்டம்! - மின்சாரம்

ராமன் ஜென்ம பூமி வழக்கில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைத்து விட்டதையொட்டி மகிழ்ச்சியில் திளைத்து ஒருவருக்கொருவர் கேக் ஊட்டிக் கொள்கின்றனர் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள். இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ப்ரவின் தொகாடியாவுக்கு கேக் ஊட்டப்படும் காட்சி.

அயோத்தி தீர்ப்புப்பற்றி பார்ப்பன வட்டாரம் குதூகலிக்கிறது; சங்பரிவார் கும்பல் சதுராடுகிறது _ பா.ஜ.க., தலைவர்கள் ஒருவருக்கொருவர் கேக்குகளை ஊட்டிக் கொண்டு சிறுவர்கள் போல குதியாட்டம் போடுகிறார்கள்.

இந்த வரிசையில் துக்ளக் சோ ராமசாமி பூணூலுக்கு ஒரு முத்தம் கொடுத்துப் புளகாங்கிதம் அடைவதில் ஆச்சரியம் எப்படி இருக்க முடியும்?

இது மத்தியஸ்த தீர்ப்பு என்ற தலையங்கம் தீட்டியுள்ளார்.

சம்பந்தப்பட்ட இடம் ராமர் பிறந்த இடம்தான் என்று, இரண்டு நீதிபதிகள் கூறியிருப்பதுபற்றி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. ராமர் அங்கே பிறந்தார் என்று ஒரு நீதிமன்றத்தினால் எப்படிச் சொல்ல முடியும்? என்பது அந்தக் கேள்வி. உண்மைதான். இது நீதிமன்றத்தில் சாட்சியங்களின் அடிப்படை யிலோ, சட்ட ரீதியாகவோ முடிவு செய்யக்கூடிய விஷயம் அல்ல. ஆனால் ஒரு மதத்தினரின் நம்பிக்கை என்று கூறப்படுகிற விஷயம், திடீரென பிரச்சாரத்திற்காகவோ, வழக்கில் வெற்றி பெறுவதற் காகவோ எழுப்பப்பட்ட விஷயமா? அல்லது தொன்று தொட்டு அந்த மதத்தினரிடையே இருந்து வருகிற நம்பிக்கையா? என்பதை நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில், உறுதி செய்ய முடியும். அதைத்தான் இப்போது அலகாபாத் நீதிமன்றத்தின் மெஜாரிட்டி தீர்ப்பு செய்திருக்கிறது என்று வாதிட வருகிறார்.

நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தால், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அந்த நம்பிக்கை இந்து மதத்திற்கு மட்டுமே உள்ள தனி உரிமையா? அந்த நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? பிர்மாவின் நெற்றியிலிருந்து பிராமணன் பிறந்தான்; தோளிலிருந்து சத்திரியன் பிறந்தான்; இடுப்பிலிருந்து வைசியன் பிறந்தான்; பாதத்திலிருந்து சூத்திரன் பிறந்தான் என்பதுகூட இந்து மதக்காரர்களின் நம்பிக்கைதான்.

இது பார்ப்பனர்களின் நம்பிக்கை-யானால் அவர்களுக்கு அதில் வசதியும், மரியாதையும் அதிகமாக உண்டு. அதனை சூத்திரன் ஏற்றுக் கொண்டால் அவன் நிலை என்னாவது? பிறப்பிலேயே வேசி மகன் என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டுமே! நம்பிக்கை என்பதை அவரவர்களின் வசதியைப் பொறுத்து மாறாதா?

இந்தியாவில் வாழும் சிறுபான்மை மதத்தவர்கள் தங்கள் மதங்களை இந்தியமயமாக்கிக் கொள்ள வேண்டும். இந்துக் கடவுள்களான ராமனையும், கிருஷ்ணனையும் வணங்க வேண்டும் என்று சொல்பவர்கள் அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கைகளில் தலையிட்டவர்கள் ஆக மாட்டார்களா?

நம்பிக்கை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இரு நீதிபதிகள் தீர்ப்புக் கூறிவிட்டார்கள் என்பதற்காக அந்த நம்பிக்கை என்பதற்கு சோ கும்பல் பட்டுப் பீதாம்பரமும், சிவிகையும் தயாரிப்பதைப் பார்ப்பனர் அல்லாதார் -_ சிறுபான்மையினர் உள்ளிட்டோர் புரிந்துகொள்ள வேண்டும்.

தொல்லியல் துறை ஆதாரங்களைக் காட்டுகிறார்களே _ இதுவரை பல தொல்லியல் துறைகள் ஆய்வு செய்து முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்-துள்ளன. எதை எடுத்துக் கொள்வது? தங்களுக்கு வசதிப் பட்ட அறிக்கையை மட்டும் லபக்கென்று கவ்விக் கொள்-வதுதான் உச்சிக்குடுமி தத்துவமோ!

கோத்ரா ரயில் விபத்து தொடர்பாக நீதிபதி பானர்ஜி கொடுத்த அறிக்கை தங்களுக்குச் சாதகமாக இல்லை என்றவுடன் இதே சோ ராமசாமி எப்படி எப்படியெல்லாம் கிண்டல் செய்தார்? பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக நீதிபதி லிபரான் தலைமையில் அமைந்த விசாரணை ஆணையம் கொடுத்த அறிக்கையை எதிர்த்த இதே சோ அய்யர்வாள் எப்படி எப்படி-யெல்லாம் சண்டப் பிரசண்டம் செய்தார்?

சாதாரணமாக, ஒரு நீதி விசாரணையின் அறிக்கை என்றால், அதை சமர்ப்பிக்கிற நீதிபதி, சாட்சி-யங்கள் கூறியது என்ன? அதில் ஏற்கத்-தக்கது எது? _ ஏன்? நிராகரிக்கத்தக்கது எது? ஏற்கப்பட்ட சாட்சியங்கள் மூலம் தெரிய வருவது என்ன? என்பதைக் கூறி, தனது முடிவையும் கூறுவார். ஆனால் லிபரான் அவர்கள், தனது அறிக்கையில் அந்த மாதிரி எல்லாம் அவஸ்தைப்பட்டதாகத் தெரியவில்லை (துக்ளக் 9.12.2009) என்று தலையங்கம் தீட்டினாரா -_ இல்லையா?

லிபரான் ஆணையத்தின் அறிக்-கைக்கு சாட்சியங்கள் உண்டா என்று கேட்கிறார். அயோத்தி தீர்ப்பைப்பற்றிச் சொல்லும்போது நம்பிக்கை விஷ யத்துக்கு சாட்சியம் எதற்கு என்று உருட்டல் _ புரட்டல் கேள்வியை எழுப்புகிறார். சூத்திரன் கொலை செய்தால் மரண தண்டனை; பார்ப்பான் கொலை செய்தால் தலையை முண்டிதம் செய்துவிட வேண்டும் (கொலை செய்யப்பட்டவனின் உயிரும் கொலை செய்த பார்ப்பானின் மயிரும் சமம்!) என்பது தானே அவாளின் மனுதர்மம்!

அந்தப் புத்தி இன்று வரை போகவில்லையே! அலகாபாத் தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டில் இன்னும் என்னென்ன தெருப் புழுதிகளும், கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டிகளும் பூகம்பமாகப் புறப்படப் போகின்றனவோ தெரியவில்லை!

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் புத்தர் கோயில் என்பதற்கு நம்பிக் கையல்ல; ஆதாரமே இருக்கிறது. காஞ்சி மீனாட்சி கோயில் தாரா கேசரி ஆலயம் என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது. மதுரையையடுத்த யானை மலைக் குகைகளில் சமண முனிவர்களின் படுக்கைகளும், பிராமி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டுகளும் உள்ளன. இப்பொழுது அங்கு நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளது. திருப்பதி கோயில் புத்த விகார் என்பதை ருசுப்படுத்தி நூலே வெளி வந்துவிட்டது. அய்யப்பன் கோயிலும் அப்படியே!

ராமன் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டினார் என்று தீர்ப்பு வாங்கி விட்டதானது பல இந்துக் கோயில்களை இடிக்க வேண்டிய அவசியத்திற்கு அவர்களே அடிக்கல் நாட்டி விட்டார்கள். உப்பு தின்ற அளவுக்கு தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் சோ கூட்டம் ரொம்பத் துள்ள வேண்டாம்!

குறிப்பு: அய்யப்பன் கோயில் புத்தர் கோயில் என்பதற்கு ஜோசப் எடமருகு எழுதிய கட்டுரை இதே பக்கத்தில் தனியே வெளியிடப்பட்டுள்ளது. அது போலவே திருப்பதி வெங்கடாசலபதி கோயிலும் புத்த விகாரமே என்பதற்கு ஆதாரமாக _ மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜமனதாதாஸ் F.R.C.S என்பவர் எழுதியுள்ள Tirupati Balaji was a Buddhist Shrine எனும் நூலி லிருந்து ஒரு பகுதி தனியே வெளியிடப் பட்டுள்ளது.

இவை நம்பிக்கையின் அடிப்படை-யில் அல்ல; ஆதாரங்களின் _ ஆவணங்-களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்-டுள்ளன. இக்கோயில்களை மீண்டும் புத்த விகார்களாக மாற்ற குரல் கொடுக்க வேண்டியது அவசியம்தானே!

weather counter Site Meter