நில மோசடி விவகாரத் தில் சிக்கியுள்ள கரு நாடக முதல்வர் எடி யூரப்பாவுக்குப் பதிலாக, வேறு ஒருவரை முதல் வராக நியமிக்க, பா.ஜ.க., மேலிடம் திட்டமிட் டுள்ளது. முதல்வர் பத வியிலிருந்து விலக மறுத்து, எடியூரப்பா அடம்பிடிக்கிறார். சண் டித்தனம் செய்கிறார். எனக்கு 120 எம்.எல். ஏ.,க்கள் ஆதரவு உள் ளது. எனக்கு பதிலாக வேறு ஒருவர் முதல்வ ராக நியமிக்கப்படுவாரா, என்ற கேள்விக்கே இடம் இல்லை' என, பா.ஜ.க., மேலிடத்துக்கு, எடியூ ரப்பா சவால் விடுத்துள் ளார்.
கருநாடக முதல்வர் எடியூரப்பா, அரசுக்கு சொந்தமான நிலத்தை தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாற்றியுள்ளன. எடியூரப்பாவை முதல் வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, அந்த கட்சிகள் போர்க் கொடி தூக்கியுள்ளன. இதில் மற்றொரு திருப்ப மாக, எடியூரப்பா சார் பில் நடத்தப்பட்ட பணப் பரிமாற்றங்கள் குறித்த வங்கிக் கணக்கு தகவல் கள் வெளிவந்திருக்கின் றன.
நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் செய்து வரும் பா.ஜ.க.,வுக்கு, எடி யூரப்பாவின் நில ஊழல் பிரச்சினை பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியுள் ளது. இந்த விவகாரம் குறித்து, பா.ஜ.க., மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவ ராஜ், ராஜ்நாத் சிங் ஆகி யோர் நேற்று டில்லியில் ஆலோசனை நடத்தினர். இதில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், கட் சித் தலைவர் நிதின் கட் காரிக்கு அளிக்கப்படுவ தாக முடிவு எடுக்கப்பட் டது.
இந்தக் கூட்டத்தில், எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்தால், அவ ருக்கு பதிலாக யாரை நியமிப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கரு நாடாகாவில் மிகச் செல் வாக்கான வீரசை லிங் காயத் பிரிவினர் ஆதரவு டைய அவரை அகற்று வது என்பது சுலபமல்ல என்ற நிலை ஏற்பட்டி ருக்கிறது. எடியூரப்பா வின் தலைமையை மாற் றினால், அதனால் ஏற் படும் சாதக, பாதகங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
எடியூரப்பாவிற்கு பதிலாக, லிங்காயத் இனத்தைச் சேர்ந்தவ ரான ஜெகதீஷ் ஷெட் டரை நியமிப்பதா? அல் லது பின்தங்கிய வகுப் பைச் சேர்ந்த ஈஸ்வரப் பாவை நியமிப்பதா? என்பது குறித்தும் ஆலோ சனை நடந்தது. எவ்வித ஊழல்களிலும் சிக்காத டாக்டர் ஆச்சார்யா அல்லது சுரேஷ் குமார் ஆகியோரை பதவியில் நியமிப்பது தொடர்பாக வும் ஆலோசனை நடத் தப்பட்டது. கட்சியின் மற்றொரு தரப்பினர், எடியூரப்பாவுக்கு ஆத ரவு தெரிவித்துள்ளனர்.
வேறு ஒருவர் முதல்வர்!
இருந்தாலும், பிரச்சி னையை சமாளிக்க, எடி யூரப்பாவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வ ராக நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள் ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
இந்நிலையில், கட்சி யின் மூத்த தலைவர் களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, எடியூ ரப்பா அடம்பிடித்து வருகிறார். நேற்று, எடி யூரப்பாவின் வீட்டில், அவரது ஆதரவு எம்.எல். ஏ.,க்களின் ஆலோச னைக் கூட்டம் நடந்தது.
இதன்பின், செய்தியா ளர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:
கட்சித் தலைமை என் மீது நம்பிக்கை வைத் துள்ளது. எனவே, டில் லிக்கு யாரும் செல்ல வேண்டாம் என, எம்.எல்.ஏ.,க்களிடமும், அமைச்சர்களிடமும் தெரிவித்துள்ளேன். எனக்கு ஆதரவாக 110 இல் இருந்து, 120 எம்.எல். ஏ.,க்கள் உள்ளனர். வெறும் 20 பேரையோ, 40 பேரையோ வைத்துக் கொண்டு நான் அரசியல் நடத்தவில்லை. எனக்கு பதிலாக யார் முதல்வ ராக தேர்வு செய்யப்படு வார் என கேட்கின்றனர். எனக்குப் பதிலாக நான் தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
- இவ்வாறு எடியூ ரப்பா கூறினார்.
அடம்பிடிக்கும் எடியூரப்பா!
கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, எடியூரப்பா அடம் பிடிப்பதால், பா.ஜ.க., மேலிடத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள் ளது. இந்த விவகாரத் தால், கருநாடக பா.ஜ.க., வில் பிளவு ஏற்படுமோ என, பா.ஜ.க., தலைவர் கள் அஞ்சுகின்றனர். தென் மாநிலங்களில் முதலாவதாக ஆட்சியை பிடித்ததை இழக்க விருப்பமின்றியும், அதே சமயம் கட்சிக்கு ஏற் பட்ட கெட்ட பெயரை அகற்றமுடியாமலும் மேலிடம் இக்கட்டில் இருப்பதாக கூறப்படு கிறது.
முதல்வர் எடியூரப் பாவை மாற்ற வேண் டாம். தாலுகா, உள் ளாட்சி தேர்தல் வரும் இந்நேரத்தில் முதல்வர் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளேன்,'' என கருநாடகா மாநில பா.ஜ.க., தலைவர் ஈஸ் வரப்பா கூறினார்.
ஷிமோகாவில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
எடியூரப்பாவை மாற்றக்கூடாதென்பது தான் எனது முடிவு. இதையே மேலிடத்தில் கூறியுள்ளேன். ஆயினும் மேலிடம் எடுக்கும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன். நான் முதல் வர் வேட்பாளர் இல்லை. அந்த எண்ணம் எதுவும் இல்லை. நான் யாரிட மும் முதல்வர் வேட்பா ளர் என்று கூறவில்லை. பா.ஜ.க.,வில் மாநில தலைவர் முதல்வராக வேண்டும் என்ற மரபு இல்லை.முதல்வர் எடியூரப்பாவை மாற்ற வேண்டாம். தாலுகா, உள்ளாட்சி தேர்தல் வரும் இந் நேரத்தில் முதல்வர் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளேன். வெறும் 28 உறுப்பினர் களை கொண்டுள்ள ம.ஜ.த.,வில், ரேவுண்ணா துணை முதல்வர், குமார சாமி மத்திய அமைச்சர் என கனவு காண்கின்ற னர்.
-இவ்வாறு ஈஸ் வரப்பா கூறினார்.
அனந்தகுமார் அய்யர்வாள்
இதனிடையே, எடியூ ரப்பாவை நீக்கி விட்டு, அனந்தகுமாரை (அய் யரை) முதல்வராக்க ஜனார்த்தன ரெட்டி முயன்றதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த முயற்சி ஏன் வெற்றி பெறவில்லை என்று தெரியவில்லை.
http://www.viduthalai.periyar.org.in/20101122/news01.html
Search This Blog
Showing posts with label எடியூரப்பா. Show all posts
Showing posts with label எடியூரப்பா. Show all posts
Monday, November 22, 2010
Thursday, October 7, 2010
தார்மீகம் பேசும் பா.ஜ.க.வின் யோக்கியதை
தார்மீகம் பேசும் பாரதீய ஜனதா கட்சியின் யோக்கியதை கருநாடக மாநிலத்தில் அங்க மச்ச அடையாளங்களுடன் வெளிரிப்போய்விட்டது. எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைந்த நாள் தொட்டே, அங்கு உள்கட்சிக் குழப்பம் - பதவிச் சண்டை சிண்டைப் பிடித்துக்கொண்டு பகிரங்கமாகவே நடைபெறத் தொடங்கிவிட்டது.
அமைச்சர்கள் நீக்கம், புதிய அமைச்சர்கள் சேர்க்கை என்பது அங்கு வாடிக்கையான வேடிக்கையாகவே ஆகி விட்டது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி கருநாடக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. நான்கு அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். ஆறு புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்.
தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கருநாடக எல்லையைத் தாண்டி தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த சொகுசு ஓட்டலில் தங்கினர். 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துவிட்டனர். ஆளுநரும் அதனை ஏற்றுக்கொண்டு வரும் 12 ஆம் தேதி மாலைக்குள் தமது பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.
அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களையும், முதலமைச் சருடன் கருத்து மாறுபாடு கொண்ட அமைச்சர்களையும் சரி கட்ட பல முனைகளிலும் கடும் முயற்சியை மேற்கொண்ட எடியூரப்பாவிற்கு இறுதியில் தோல்வி முகம்தான்.
மறுபடியும் சிலருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார். உப்பு அதிகமாகப் போய்விட்டது என்று தண்ணீர் ஊற்றுவதும், தண்ணீர் அதிகமாகப் போய்விட்டது என்று உப்பை அள்ளிப் போடுவதும் போன்ற பரிதாப நிலைக்கு, தடுமாற்றத்திற்கு, பெரும் குழப்ப நிலைக்கு ஆளாகிவிட்டார் கருநாடக முதலமைச்சர்.
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் ரூ.30 கோடி கொடுத்து தம் பக்கம் இழுப்பதாகப் பரபரப்புக் குற்றப் பத்திரிகை படித்திருக்கிறார். பா.ஜ.க.வின் யோக்கியதைக்கு இதைவிட வேறு சான்று தேவைப்படாது.
தொடக்கத்தில் ரெட்டி சகோதரர்களால் (இருவருமே அமைச்சர்கள்) பிரச்சினை பேருரு எடுத்தது. கட்சியின் மேலிடம் நேரடியாகத் தலையிட்டு ஒட்டு வேலை செய்துவிட்டுப் போனார்கள். விளக்கெண்ணய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்தபாடில்லை என்ற நிலைதான் அங்கு.
அமைச்சர் ஒருவர் நண்பர் வீட்டில் தங்கி இருந்தபோது, நண்பரின் மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதைவிட வேறு கேவலம் எங்கேயிருக்கிறது? அடேயப்பா, பக்தியை இவர்கள் போல் கண்களில் ஒற்றிக் கொள்பவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? தெய்வ பக்தி, தேச பக்தி இரண்டும் இரண்டு கண்கள் என்பார்கள். இவர்களின் தெய்வ பக்தி, தங்கி இருந்த வீட்டுக்கே ரெண்டகம் செய்வதுதானா? இவர்கள்மீது குற்றம் சொல்லி என்ன பயன்? இவர்கள் நம்பும், வழிபடும் இந்து மதக் கடவுள்களின் யோக்கியதைகளே இந்தத் தரத்தில்தானே இருக்கின்றன? சின்ன வயதில் வெண் ணெய்யைத் திருடினான் என்றும், வாலிப வயதில் பெண்ணைத் திருடினான் என்றும் தங்கள் கடவுள்கள்பற்றிப் பெருமையாக பேசும் இவர்களின் புத்தியும், செயல்பாடுகளும் இவற்றை மீறி இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவிருந்த காட்டா சுப்பிரமணிய நாயுடு நில மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டார். இதுபற்றி மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கும்போதே, சம்பந்தப்பட்ட அமைச்சரின் மகன் சாட்சியத்தைக் கலைக்க லஞ்சம் கொடுத்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டு, இப்பொழுது சிறைக் கொட்டடியில் கிடக்கிறான்.
தென்மாநிலத்தில் கருநாடகத்தைப் பிடித்துவிட்டோம்; அடுத்தடுத்து தென்னக மாநிலங்களில் எங்கள் ஆட்சி வரும் என்று இறுமாப்போடு பேசிக் கிடந்தவர்கள், கைக்குக் கிடைத்த அந்த ஒரே ஒரு மாநில ஆட்சியைக்கூடத் தக்க வைத்துக்கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டுவிட்டது. பொதுமக்கள் வெறுப்படையக் கூடிய செயல்பாடுகள்தான் நாள்தோறும் - நாள்தோறும்.
கோயில் கோயிலாகச் சென்று கும்பிடு தண்டம் போட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மூட நம்பிக்கையில் கிடந்துழலுகிறார் முதலமைச்சர் எடியூரப்பா.
கருநாடக மாநிலத்தில் உள்ள கோயில்கள் போதாது என்று தமிழ்நாட்டுக் கோயில்களுக்கெல்லாம் சென்று கும்பிடு தண்டம் போட்டு, நன்கொடைகளை வாரி இறைத்து வருகிறார்.
தம்மைச் சுற்றியுள்ள சொந்தக் கட்சிக்காரர்கள்மீது நம்பிக்கையை இழந்து, குழவிக் கற்கள்மீது நம்பிக்கை வைப்பவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் - வெட்கக்கேடு.
சோ ராமசாமிகளும், குருமூர்த்திகளும் என்னதான் முட்டுக் கொடுத்துப் பார்த்தாலும், உண்மைதான் விஞ்சி நிற்கும் - அதுதான் இப்பொழுது கருநாடக மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கிறது!
சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், எடியூரப்பாவின் கீழ்க்கண்ட ஒப்புதல் வாக்குமூலமே பா.ஜ.க.வின் யோக்கிய தைக்குப் போதுமானது.
ஓட்டுக்காக அரசியலில் புகுந்து பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள செய்யக் கூடாத பணிகளைச் செய்து வருகிறோம்.
பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம். இதில் நானும் அடக்கம். மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல், தேவையற்ற வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலைதூக்கிய போதும், அமைச்சரவையின் பெண் அமைச்சர் ஷோபாவின் ராஜினா மாவை ஏற்றுக்கொண்ட போதும், நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது.
தொலைநோக்குப் பார்வை இல்லாமல், சுயநலத்திற்காக அரசியலில் மூழ்கி உள்ளதால், மக்களின் நலனை முழுமையாக மறந்து விடுகிறோம் என்று கூறியவர் வேறு யாருமல்லர் - கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா - மறைந்த கரு நாடக மாநில முதலமைச்சர் அனுமந்தய்யாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வாறு பேசினார் (தினமலர், 4.12.2009).
தனக்குத்தானே இப்படி ஒரு நடத்தைச் சான்றிதழைக் கொடுத்துவிட்டார்; வேறு விளக்கமும் தேவையோ!
http://www.viduthalai.periyar.org.in/20101007/news07.html
அமைச்சர்கள் நீக்கம், புதிய அமைச்சர்கள் சேர்க்கை என்பது அங்கு வாடிக்கையான வேடிக்கையாகவே ஆகி விட்டது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி கருநாடக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. நான்கு அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். ஆறு புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்.
தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கருநாடக எல்லையைத் தாண்டி தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த சொகுசு ஓட்டலில் தங்கினர். 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துவிட்டனர். ஆளுநரும் அதனை ஏற்றுக்கொண்டு வரும் 12 ஆம் தேதி மாலைக்குள் தமது பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.
அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களையும், முதலமைச் சருடன் கருத்து மாறுபாடு கொண்ட அமைச்சர்களையும் சரி கட்ட பல முனைகளிலும் கடும் முயற்சியை மேற்கொண்ட எடியூரப்பாவிற்கு இறுதியில் தோல்வி முகம்தான்.
மறுபடியும் சிலருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார். உப்பு அதிகமாகப் போய்விட்டது என்று தண்ணீர் ஊற்றுவதும், தண்ணீர் அதிகமாகப் போய்விட்டது என்று உப்பை அள்ளிப் போடுவதும் போன்ற பரிதாப நிலைக்கு, தடுமாற்றத்திற்கு, பெரும் குழப்ப நிலைக்கு ஆளாகிவிட்டார் கருநாடக முதலமைச்சர்.
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் ரூ.30 கோடி கொடுத்து தம் பக்கம் இழுப்பதாகப் பரபரப்புக் குற்றப் பத்திரிகை படித்திருக்கிறார். பா.ஜ.க.வின் யோக்கியதைக்கு இதைவிட வேறு சான்று தேவைப்படாது.
தொடக்கத்தில் ரெட்டி சகோதரர்களால் (இருவருமே அமைச்சர்கள்) பிரச்சினை பேருரு எடுத்தது. கட்சியின் மேலிடம் நேரடியாகத் தலையிட்டு ஒட்டு வேலை செய்துவிட்டுப் போனார்கள். விளக்கெண்ணய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்தபாடில்லை என்ற நிலைதான் அங்கு.
அமைச்சர் ஒருவர் நண்பர் வீட்டில் தங்கி இருந்தபோது, நண்பரின் மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதைவிட வேறு கேவலம் எங்கேயிருக்கிறது? அடேயப்பா, பக்தியை இவர்கள் போல் கண்களில் ஒற்றிக் கொள்பவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? தெய்வ பக்தி, தேச பக்தி இரண்டும் இரண்டு கண்கள் என்பார்கள். இவர்களின் தெய்வ பக்தி, தங்கி இருந்த வீட்டுக்கே ரெண்டகம் செய்வதுதானா? இவர்கள்மீது குற்றம் சொல்லி என்ன பயன்? இவர்கள் நம்பும், வழிபடும் இந்து மதக் கடவுள்களின் யோக்கியதைகளே இந்தத் தரத்தில்தானே இருக்கின்றன? சின்ன வயதில் வெண் ணெய்யைத் திருடினான் என்றும், வாலிப வயதில் பெண்ணைத் திருடினான் என்றும் தங்கள் கடவுள்கள்பற்றிப் பெருமையாக பேசும் இவர்களின் புத்தியும், செயல்பாடுகளும் இவற்றை மீறி இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவிருந்த காட்டா சுப்பிரமணிய நாயுடு நில மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டார். இதுபற்றி மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கும்போதே, சம்பந்தப்பட்ட அமைச்சரின் மகன் சாட்சியத்தைக் கலைக்க லஞ்சம் கொடுத்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டு, இப்பொழுது சிறைக் கொட்டடியில் கிடக்கிறான்.
தென்மாநிலத்தில் கருநாடகத்தைப் பிடித்துவிட்டோம்; அடுத்தடுத்து தென்னக மாநிலங்களில் எங்கள் ஆட்சி வரும் என்று இறுமாப்போடு பேசிக் கிடந்தவர்கள், கைக்குக் கிடைத்த அந்த ஒரே ஒரு மாநில ஆட்சியைக்கூடத் தக்க வைத்துக்கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டுவிட்டது. பொதுமக்கள் வெறுப்படையக் கூடிய செயல்பாடுகள்தான் நாள்தோறும் - நாள்தோறும்.
கோயில் கோயிலாகச் சென்று கும்பிடு தண்டம் போட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மூட நம்பிக்கையில் கிடந்துழலுகிறார் முதலமைச்சர் எடியூரப்பா.
கருநாடக மாநிலத்தில் உள்ள கோயில்கள் போதாது என்று தமிழ்நாட்டுக் கோயில்களுக்கெல்லாம் சென்று கும்பிடு தண்டம் போட்டு, நன்கொடைகளை வாரி இறைத்து வருகிறார்.
தம்மைச் சுற்றியுள்ள சொந்தக் கட்சிக்காரர்கள்மீது நம்பிக்கையை இழந்து, குழவிக் கற்கள்மீது நம்பிக்கை வைப்பவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் - வெட்கக்கேடு.
சோ ராமசாமிகளும், குருமூர்த்திகளும் என்னதான் முட்டுக் கொடுத்துப் பார்த்தாலும், உண்மைதான் விஞ்சி நிற்கும் - அதுதான் இப்பொழுது கருநாடக மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கிறது!
சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், எடியூரப்பாவின் கீழ்க்கண்ட ஒப்புதல் வாக்குமூலமே பா.ஜ.க.வின் யோக்கிய தைக்குப் போதுமானது.
ஓட்டுக்காக அரசியலில் புகுந்து பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள செய்யக் கூடாத பணிகளைச் செய்து வருகிறோம்.
பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம். இதில் நானும் அடக்கம். மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல், தேவையற்ற வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலைதூக்கிய போதும், அமைச்சரவையின் பெண் அமைச்சர் ஷோபாவின் ராஜினா மாவை ஏற்றுக்கொண்ட போதும், நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது.
தொலைநோக்குப் பார்வை இல்லாமல், சுயநலத்திற்காக அரசியலில் மூழ்கி உள்ளதால், மக்களின் நலனை முழுமையாக மறந்து விடுகிறோம் என்று கூறியவர் வேறு யாருமல்லர் - கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா - மறைந்த கரு நாடக மாநில முதலமைச்சர் அனுமந்தய்யாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வாறு பேசினார் (தினமலர், 4.12.2009).
தனக்குத்தானே இப்படி ஒரு நடத்தைச் சான்றிதழைக் கொடுத்துவிட்டார்; வேறு விளக்கமும் தேவையோ!
Subscribe to:
Posts (Atom)


