அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ்மேரி (வயது28). கன்னியாஸ்திரி. திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று நேற்று இரவு கொடுத்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2006-ம் ஆண்டு திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தேன். அப்போது திருச்சி ஜோசப் கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் ராஜரத்தினத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் இசை ஆல்பம் தயாரிப்பவர் என்பதால் அடிக்கடி அவரை சந்திப்பேன்.
கடந்த 22.1.2006 அன்று ராஜரத்தினத்தை பார்க்க சென்றேன். அப்போது பாதிரியார் ராஜரத்தினம் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.
இதில் மயங்கிய என்னை பாதிரியார் ராஜரத்தினம் கற்பழித்து விட்டார்.
மேலும் அதை செல்போன் காமிராவில் படம் எடுத்தார். மயக்கம் தெளிந்து எழுந்த நான் பாதிரியார் நியாயம் கேட்டேன். அதற்கு ராஜரத்தினம் செல்போனில் ஆபாசபடம் எடுத்ததை காட்டி அவருக்கு உடன்படாவிட்டால் வெளியில் பரப்பிவிடுவன் என்று மிரட்டினார்.
தொடர்ந்து என்னை பாதிரியார் ராஜரத்தினம் பல ஊர்களுக்கு அழைத்து சென்றார். அங்கு உடல் உறவு வைத்து கொண்டார். இதற்கிடையே நான் கர்ப்பம் அடைந்தேன்.
இதை பாதிரியார் ராஜரத்தினத்திடம் கூறினேன். உடனே கடந்த 2008-ல் கருவை கலைத்து விடுமாறு கூறினார். அதன்படி திருச்சியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரிக்கு சென்று கருவை கலைத்தேன்.
இதற்கிடையே கன்னியாஸ்திரியுடன் நான் கர்ப்பமான தகவலும் கருகலைத்த தகவலும் வெளியில் தெரிந்தது. கன்னியாஸ்திரிக்கு உரிய புனிதத்தை மீறியதாக கூறி என்னை சபையில் இருந்து நீக்கி விட்டார்கள்.
இதனால் கன்னியாஸ்திரி உடையை அணியாமல் ஊருக்கு சென்றால் அசிங்கமாகி விடுமே என பயந்தேன். பாதிரியார் ராஜரத்தினிடம் சென்று நியாயம் கேட்டேன். அப்போது பாதிரியார் ராஜரத்தினம் இது தொடர்பாக என்னை பார்க்ககூடாது வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது. மீறினால் கொன்று விடுவதாக மிரட்டினார்.
பாதிரியார் ராஜரத்தினத்துக்கு ஆதரவாக திண்டுக்கலை சேர்ந்த பாதிரியார் தேவதாஸ், மதுரை பாதிரியார் சேவியர் பிரான்சிஸ் கருமாந்தூர் சேவியர் ஆகியோரும் என்னை மிரட்டினார்கள்.
இவ்வாறு அவர் மனுவில் கூறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கோட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக பாதிரியார் ராஜரத்தினம் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், கருமாந்தூர் பாதிரியார் சேவியர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து கோட்டை போலீசார் பாதிரியார் ராஜரத்தினத்திடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் கன்னியாஸ்திரிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோட்டை உதவி கமிஷனர் சீனிவாசனிடம் கேட்டபோது பிரான்சிஸ்மேரி கொடுத்த புகார் மீது விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.
கன்னியாஸ்திரியை பாதிரியார் கற்பழித்து கருவை கலைத்து, கொலை மிரட்டல் விட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகாருக்கு உள்ளான ராஜரத்தினம் முதல்வராக உள்ள ஜோசப் கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மத்திய மந்திரி நெப்போலியன், உள்பட பல பிரபலங்கள் படித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 150 ஆண்டு பாரம்பரியமிக்க ஜோசப் கல்லூரியின் முதல்வர் மீது எழுந்து உள்ள செக்ஸ் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://www.maalaimalar.com/2010/10/12160507/pastor-torture-to-lady.html
Search This Blog
Showing posts with label பாதிரியார். Show all posts
Showing posts with label பாதிரியார். Show all posts
Thursday, October 14, 2010
கன்னியாஸ்திரியைக் கற்பழித்து, கருவைக் கலைத்து, வீடியோ படங்களைக் காட்டி மிரட்டிய பாதிரி
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிளாரன்ஸ் மேரி. 31 வயதான மேரி தன்னை ராஜரத்தினம், மிரட்டிக் கற்பழித்து, அதை செல்போனில் படம் பிடித்து வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பங்கப்படுத்தி வந்ததாகவும், கர்ப்பம் தரித்தபோது அதைக் கலைத்து விட்டதாகவும், தன்னை சீரழித்த அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராஜரத்தினம் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். நேற்று திருச்சி மருத்துவமனையில் மேரிக்கு மருத்துவப் பரிசோதனை [^] நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ராஜரத்தினம், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி வி.பெரியகருப்பையா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.எம்.அன்புநிதி, கற்பழிப்பு புகார் கூறி உள்ள பிளாரன்ஸ்மேரியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் மனுதாரருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதாடிநார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.பெரியகருப்பையா, பிளாரன்ஸ் மேரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
முதல்வர் பதவியிலிருந்து சஸ்பெண்ட்:
இந்த நிலையில், கற்பழிப்புப் புகாரில் சிக்கிய ராஜரத்தினம் முதல்வர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ராஜரத்தினம் கற்பழிப்புப் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து தமிழ்நாடு [^] ஜேசுயிட் கல்லூரிளின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் குழுவின் தலைவரான பாதிரியார் தேவதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
முதல்வர் பதவியிலிருந்து பாதிரியார் ராஜரத்தினம் விலக்கி வைக்கப்படுகிறார். அவரே கடந்த ஒருமாதமாக தன்னை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரி வந்தார். இருப்பினும் அவர் கல்லூரியில் பேராசிரியராக தொடர்ந்து செயல்படுவார் என்றார். தற்காலிக முதல்வராக பாதிரியார் செபாஸ்டியனை நியமித்துள்ளனர்.
ராஜரத்தினம் மீது கற்பழிப்பு, கிரிமினல் செயலில் ஈடுபட்டு மிரட்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேரிக்கு செய்யப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் ராஜரத்தினத்தை கைது செய்ய போலீஸார் தீவிரமாக இறங்குவார்கள் எனத் தெரிகிறது.
ராஜரத்தினத்திற்கு பரிசோதனை கோரி போராட்டம் [^]:
இதற்கிடையே பாதிரியார் ராஜரத்தினத்தையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர் தப்ப அனுமதிக்கக் கூடாது, அவரை காப்பாற்ற யாரும் முயற்சிக்கக் கூடாது என்று கோரி மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று செயின்ட் ஜோசப் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜரத்தினத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
165 ஆண்டு பழமையான கல்லூரியான செயின்ட் ஜோசப் கல்லூரிக்குப் பெரும் களங்கமாக அமைந்துள்ளது ராஜரத்தினத்தின் செயல் என்று திருச்சி மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
http://thatstamil.oneindia.in/news/2010/10/14/trichy-st-joeseph-college-principal-rape.html
Tuesday, September 28, 2010
மாணவிகளை மிரட்டி உறவுகொண்ட காமக்கொடூரன் பாதிரியார்
சாத்தான் குளம் அருகே விடுதியில் தங்கி படித்த மாணவிகளை மிரட்டி பாலியல் உறவு கொண்டோம் என்று, புகாரில் சிக்கிய போதகர் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மணிநகரில் கிறிஸ்தவ ஜெபக்கூடம் மற்றும் ஆதரவற்றோர் விடுதி உள்ளது. இதை அன்புநகரை சேர்ந்த போதகர் சவுந்தரராஜன் என்பவர் நடத்தி வந்தார். இங்கு கிருஷ்ணகிரி, ஓசூர், பவானி, தருமபுரி, ஈரோடு, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 22 சிறுவர்களும் 12 சிறுமிகளும் தங்கி இருந்து அன்புநகர் பள்ளியில் படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டாக இங்குள்ள மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாகவும், இதில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த 15 வயது மாணவி கர்ப்பம் ஆனதாகவும் கூறப்படு கிறது. சாத்தான்குளம் டிஎஸ்பி ஸ்டான்லி மற்றும் காவல்துறையினர் அந்த விடு திக்கு சென்று விசாரணை நடத்தியதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. திருச்செந்தூர் ஆர்டிஓ பாக்கியம் தேவகிருபை, சாத்தான்குளம் வட்டாட் சியர் ஹாரீஸ், வருவாய் ஆய்வாளர் விஜயகுமாரி மற்றும் அதிகாரிகள் விடுதியை ஆய்வு செய்து அங்கிருந்த 12 மாணவிகள், 22 மாணவர்களை சிறீவைகுண்டத்தில் உள்ள அரசு விடுதிக்கு மாற்றினர். இதுதொடர்பாக விடுதி காப்பா ளரும் போதகருமான சவுந்தரராஜன், அவரது மகன் ஜெபஸ்டின் கிறிஸ் டோபர் ஆகியோரை காவல்துறை யினர் கைது செய்தனர். காவல்துறை யிடம் சவுந்தரராஜன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மணிநகரில் ஜெபக்கூடம் தொடங்கினோம். கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ண கிரி ஆகிய பகுதிகளில் இருந்து இலவசமாக படிக்க வைப்பதாக கூறி மாணவ, மாணவிகளை அழைத்து வந்தோம். பின்னர் அவர்களை இங்கு தங்க வைத்து அன்பு நகரில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தோம். தினமும் வாகனம் மூலம் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து மாலையில் அதே வாகனத் தில் அழைத்து வருவோம். எனக்கு உறுதுதுணையாக மகன்கள் ஜெபஸ் டின் கிறிஸ்டோபர், உதய பாலஜெப சீலன் ஆகியோர் இருந்தனர். நாளடைவில் மாணவிகள் மீது எங்களுக்கு மோகம் ஏற்பட்டது. முதலில் அவர்களை தொடுவதற்கு பயமாக இருந்தது. அதன்பிறகு மிரட்டி பணிய வைத்தோம். இதனை மாணவிகள் யாரும் வெளி யில் சொல்லவில்லை. அதன்பிறகு நாள்தோறும் அவர்களிடம் செக்சில் ஈடுபட்டு வந்தோம். இதில் ஒரு மாணவி பாதிக்கப்பட்டார். இந்த விவரம் அவரது பெற்றோ ருக்கு தெரிய வந்ததால் காவல்துறை யில் புகார் செய்யப்பட்டது. காவல் துறையினர் விசாரணை நடத்திய தில் நாங்கள் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரி வித்துள்ளார். காவல்துறையினர் தேடுவதையறிந்த சவுந்தரராஜனின் மற்றொரு மகன் உதய பாலஜெப சீலன் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின் றனர். தட்டார்மடம் காவல் நிலையத்தில் நடந்த வழக்கு தற்போது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற் றப்பட்டுள்ளது. கைது செய்யப் பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
