Pages

Search This Blog

Showing posts with label துக்ளக் பதிலடி. Show all posts
Showing posts with label துக்ளக் பதிலடி. Show all posts

Sunday, November 7, 2010

தமிழ்நாடு அரசு கவனிக்குமா?

இந்த வார துக்ளக் இதழில் (10.11.2010) ஜாதிக் கணக்கெடுப்பு ஒரு மோசடி வேலை எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை சந்திரன் என்பவர் எழுதியுள்ளார்.

வி.ஏ.ஓ.வுக்கு மாமூலைக் கொடுத்தால் எந்த ஜாதிச் சான்றிதழை வேண்டுமானாலும் வாங்கித் தந்து விடுவார் என்றும், எங்கள் சைவப் பிள்ளைமார் சமூகம், முற்பட்ட சமூகம். ஆனால் எனக்குத் தெரிந்து பலர் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூக ஜாதிச் சான்றிதழ்களை வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இவர் எழுதியுள்ள பிரச்சினை மிக மிக முக்கிய மானது. அவர் எழுதியிருப்பது உண்மையானால், இது குறித்து தமிழக அரசு தீவிரமாகக் கண்காணித்து, ஜாதிச் சான்றிதழ் தவறாக அளிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும். அரும்பாடுபட்டு நிலை நிறுத்திய சமூக நீதியைக் கொல்லைப்புறம் வழியாகத் தட்டிப் பறிப்பது அனுமதிக்க முடியாது - கூடாதுதான்.

தனது சமூகமான சைவப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (முற்பட்ட சமூகம்) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகச் சான்றிதழ்களை வைத்திருப்பது தமக்குத் தெரியும் என்று எழுதியுள்ளார்.

தனக்குத் தெரிந்த தகவலை அரசுக்குத் தெரிவித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

இந்தக் கட்டுரையை எழுதியுள்ளவரை அழைத்து விசாரித்து அவரிடம் தகவல் பெற்று உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், பொய்த் தகவல்கள் எழுதியதற்காக இவரைத் தண்டிக்க வேண்டும். வருவாய்த்துறை கவனிக்குமா?
http://www.viduthalai.periyar.org.in/20101107/news02.html

Wednesday, October 20, 2010

சோ ராமசாமியின் பார்ப்பன பூணூல் நரித்தனமும் -புரியாத தமிழினமும்

பார்ப்பான சோ ராமசாமியின் துக்ளக் இல் கேட்கப்பட்ட கேள்வி

கேள்வி : ‘பெரும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, தஞ்சைப் பெரிய கோவிலுக்குள் சென்றால் அசம்பாவிதம் நிகழும். அதனால் அவர்கள் பட்டாடை தரித்துக் கொண்டு, சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டு சென்றால் தோஷம் தட்டாது’ – என்று நாராயண நம்பூதிரி பிராமணர், சில முக்கிய புள்ளிகளுக்குச் சொல்லியதால், பலர் அதைக் கடைப்பிடித்து வருகிறார்களாமே! இது உண்மையா? அரிமளம் தளவாய் நாராயணசாமி, பெங்களூர்-76

பதில் : இதில், மூடி மறைக்க வேண்டிய அவசியமே இல்லையே! முதல்வரின் கோவில் விஜயம் பற்றி நேரிடையாகக் கேட்க வேண்டியதுதானே! கலைஞர் பட்டாடை அணிந்ததற்கும், பிரதான வாயிலைத் தவிர்த்ததற்கும் – ஒரு நம்பூதிரியின் வார்த்தை தேவையே இல்லை. பதவி பறி போகும் என்று ஒரு கிளி ஜோஸ்யக்காரர் சொன்னாலே போதும், கலைஞர் உஷாராகி விடுவார். அவருடைய பகுத்தறிவு அத்தகையது.


பார்ப்பனீயம் என்னும் நச்சு பாம்பின் தலையாக செயல்படுபவர் இந்த சோ ராமசாமி இதற்காவே இவர் நடத்தும் இதழ் துக்ளக் .

// பதவி பறி போகும் என்று ஒரு கிளி ஜோஸ்யக்காரர் சொன்னாலே போதும், கலைஞர் உஷாராகி விடுவார். அவருடைய பகுத்தறிவு அத்தகையது.//


அனைத்து சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டுவந்தாரே கலைஞர் அது ஆகம விதிகளுக்கு முரணானது என்று கைபர் ,போலன் கூட்டம் உச்சநீதிமன்ற படிக்கட்டுகளுக்கு சென்று தவம் கிடக்கிறிர்களே ஏன்?

அவ்வாறே கலைஞர் உங்களின் ஆகம விதிகளுக்கு பயந்திருந்தால் அதை ஏன் செய்ய வேண்டும்.ஆட்சி போய் விடும் என்று பயந்து இருப்பாரே?

பதவி ஏற்ற முதல் கை எழுத்தே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்று கோப்பில் கையெழுத்து தானே போட்டார் கலைஞர் .இன்று வரை அவருடைய ஆட்சி எந்தவித ஆபத்தும் இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது.உங்களின் ஆகமும் கடவுளும் கலைஞரிடம் ஒன்றும் புடுங்க முடியவில்லையே ஏன்?

எதற்க்காக உச்ச நீதிமன்றம் செல்கிரிர்கள் .அகில உலக லோக குரு, காவி சட்டைமுண்டம் ,பொம்பள பொறுக்கி ,அரை டிக்கெட்டு சங்கராச்சாரி ,தேவநாதன் ,முட்டாள் சோ ராமசாமி கூட்டம் எல்லாம் போய் யாகம் செய்ய வேண்டியது தானே ? கலைஞர் ஆட்சி கவிழ வேண்டும் என்று? மாறாக நீங்கள் அவ்வாறு செய்யவில்லை.ஆகவே நீங்கள் கடவுளை நம்பவில்லை என்பது தானே உண்மை.

சோ ராமசாமி கூட்டத்தின் எண்ணமெல்லாம் கலைஞரை சிறுமை படுத்து வேண்டும்.இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் அதை தன்னால் முடிந்தவரை செய்கிறார்கள்.ஏனென்றால் இன்னமும் பெரியார் என்றும் அண்ணா என்றும் திராவிடம் என்றும் அரசியலில் பேசி கொண்டு அத்தகைய திட்டங்களையும் நிறைவேற்றி கொண்டு இருப்பவர் கலைஞர் ஒருவரே.மற்றவர்கள் எல்லாம் அண்ணாவுக்கே நாமம் போட்டு விட்டனர்.எனவே பார்பனிய சோ ராம சாமி கூட்டம் இந்த கலைஞர் ஆட்சியை அவப்பெயர் செய்ய இவ்வாறு எழுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.ஆனால் இவற்றை எல்லாம் புரிந்து கொள்கிற பக்குவம் தமிழர்களுக்கு இல்லை என்பது தான் வருத்த படவேண்டிய விஷயம்.

சங்கராச்சாரிய எந்த பார்பானவது விட்டு கொடுக்கிறார்களா?
இன்னும் பெரியவா என்று தான் அழைக்கிறார்கள்.ஆனால் தமிழனோ ஒரு கலைஞரை எவ்வாறோ இழிபடுத்தும் கூட்டத்தோடு இணைந்து புரிந்தோ.புரியாமலோ ஜால்ரா அடிக்கும் போது தமிழன் ஏன் இன்னும் முன்னேறேவில்லை என்பதும் பார்ப்பனீயம் இன்னும் வேரூன்றி இருப்பதற்கும் ஒரு நல்ல உதாரணம்.

இதே போல் இவர்கள் இந்த திமுக ஆட்சி கவிழ 1971 ஆம் ஆண்டு கடவுளை வேண்டினர்.
இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் பார்ப்பான் அன்றிலிருந்து இன்று வரை எவ்வாறு மாறாமல் ஒத்த புத்தியுடன் உள்ளான் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்.இதோ அந்த செய்தி

சேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி - பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள்! ஊர்வலத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது.

அவ்வளவுதான்! மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனையும் பிரார்த்தித்தது தினமணி - தி.மு.க. தோற்க வேண்டுமாம்

முடிவு என்ன தெரியுமா? ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார்? தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.

இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.

சோ ராமசாமி கூட்டமே இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?

ஆஸ்திகம் - நாஸ்திகத்தை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ்திகம் வென்றுவிட்டதே - நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா? வீண் சவடால் வேண்டாம்! ஓடாதே, நில்!

கலைஞர் ஜோசியத்துக்கு பயந்தார் என்றால்..காஞ்சி லோககுரு சுப்ரமணியன் மடத்துக்குள் செய்த காம லீலைகளும்,சங்கரராமன் கொலையும் எந்த ஆகமத்துக்கு உட்பட்டது?

தேவநாதன் செய்த நீல வண்ண லீலைகள் எந்த ஆகமத்துக்கு உட்பட்டது ?

சோ ராமசாமி கூட்டம் இதற்க்கு விளக்கம் கொடுக்குமா?
இவ்வாறு செய்ததால் இந்த காவாலிகள் எல்லாம் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் என்று தன் பேனா முனையை சுலட்டுவாரா சோ ராமசாமி இல்லை இந்து கடவுள் களின் யோக்கிதையே அப்படிதான் அதன் வழி வந்த இந்த லோககுரு சுப்ரமணியன் ,தேவநாதன் அப்படிதான் என்று சொல்வாரா சோ ராமசாமி.

மரியாதையாக அடுத்து இதழிலாவது பதில் தரட்டும் யோக்கியமும் நாணயமும் இருந்தால்.

--அசுரன் திராவிடன்--

weather counter Site Meter