Pages

Search This Blog

Showing posts with label தினமணி கட்டுரை. Show all posts
Showing posts with label தினமணி கட்டுரை. Show all posts

Saturday, February 26, 2011

திரிநூல் தினமணியே ஸ்ரீரங்கம் நினைவிருக்கிறதா?


தினமணி ஏடு ஜாதி அரசிய லைப்பற்றி எழுதுகிறது. பல கட்சி களுக்கும் இப்பொழுதுதான் தங் களது சுயமரியாதை நினைவுக்கு வரும். ஜாதி பலமும், வாக்கு பலமும் வாக்கு வங்கிப் புள்ளி விவரங்களும் பயன்படும் என்றெல்லாம் தினமணி ஆவர்த்தனம் பாடுகிறது (7.2.2011). எந்தெந்தத் தொகுதிகளில் வன்னியர் கள் ஓட்டு இருக்கிறது என்றெல்லாம் முடி பிளந்து ஆய்வுக் கட்டுரை எழுதுகிறது.

ஜாதியைப் பற்றி எழுதட்டும். சுயமரியாதைப் பற்றியும் தாராளமாக எழுதித் தள்ளட்டும். காகிதம் இருக் கிறது எழுதுகோல் இருக்கிறது கணினி இருக்கிறது அச்சு இயந் திரம் இருக்கிறது அடித்துத் தள் ளட்டும்.

இதைப்பற்றியெல்லாம் எழுதுவதற் கான தகுதி தினமணிக்கு உண்டா என்ற ஒரு கேள்வி எழுகிறதே.

ஜாதி வேண்டாம் அது கூடாது  என்பது தினமணியின் கருத்தா தினமணி வக்கீலாக இருக்கும் -வைத்தியநாதய்யர்கள் மாய்ந்து மாய்ந்து தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்துக்கோ, சங்கர மடத்துக்கோ ஜாதி பற்றிய கருத்து என்ன என் பதை முதலாவதாகத் தெரிவித்து விட்டல்லவா கோதாவில் குதிக்க வேண்டும்?

தினமணி வைத்தியநாதய்யர் களோ, சோ இராமசாமிகளோ,  கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை குருமூர்த்திகளோ, சு.சாமி களோ ஆவணி அவிட்டம் கொண் டாடுகிறார்களா, இல்லையா? பூணூல் அணிந்து கொண்டு இருக் கிறார்களா, இல்லையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு, ஜாதியைப்பற்றி என்ன வேண்டு மானாலும் எழுதித் தொலையட்டும் நமக்கு ஒன்றும் அட்டியில்லை.

ஜாதியையும் தாண்டி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரை லோகக் குரு என்று துதிபாடுவதற்கு வெட்கப் படாதவர்கள் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதுவதற்கு என்ன யோக் கியதை இருக்கிறது? ஒரு பெரியார் தோன்றாமல் இருந்திருந்தால், திராவிடர் கழகம் என்ற ஒன்று உருவெடுக்காமல் இருந்திருந்தால், விடுதலை போன்ற ஏடுகள் விழிப் புணர்வை உண்டாக்காமல் இருந் திருந்தால் இந்தக் கேள்விகள்கூட பிராமணோத்தமர்களை நோக்கி எழுந்திருக்க வாய்ப்பில்லை.

பூணூல் போட்ட பார்ப்பனர் களைப் பார்த்து கும்பிடுகிறேன் சாமி, தோப்புக்கரணம் இதோ, சாமி! என்று கூப்பாடு போட்ட கால மும் துண்டை எடுத்துச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு சேவகம் செய்த காலமும் மலையேறி விட்டது என்று தினமணிகளுக்குத் தெரியாதா?

ஜாதி வாக்கு வங்கி என்றெல்லாம் குறைகூறும் தினமணி, ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் 1967 தேர்தலில் பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டளியுங்கள் என்று பார்ப்பனர்களுக்குக் கட்டளையிட் டாரே  அதற்கு என்ன பெயராம்? அதற்குப் பெயர் ஜாதி அரசியல் இல்லையா?

ஒவ்வொரு தேர்தலிலும் பார்ப் பனர் சங்கம் மாநாடு கூட்டி அல்லது சங்கக் கூட்டம் நடத்தி பிராமணர் கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு என்றும், பி.ஜே.பி.க்கு என்றும் தீர்மானம் போடுகிறார்களே அப்பொழுது இந்த உலக்கைக் கொழுந்துகள் எங்கே தீவட்டிகளைத் தூக்கிக் கொண்டு திரிந்தன?

அக்ரகாரவாசிகளே, இது ஆகாது, ஆகாது; கூடாது, கூடாது. இதுபோல் தீர்மானம் போட்டு உங்களைத் தனியே பிரித்துக் காட்டிக் கொள்ளா தீர்கள். அது ஆபத்தில்  போய் முடி யும்! என்று மண்டையில் அடித்தது போல தினமணி தலையங்கம் தீட்டி யிருந்தால் அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருந்தால் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதிட அதற்கு அருகதை உண்டு.

காலமெல்லாம் பார்ப்பனர்களின் தாசானு தாசராகவும், திராவிட இயக்க வீராதி வீரருமாக விளங்கிய தொங்கு மீசைக்காரர் ம.பொ.சிவ ஞான கிராமணியார் 1971-இல் மயி லாப்பூர் தொகுதி சட்டமன்ற தேர் தலில் போட்டியிட்டபோது கற்ப காம்பாள் கோயிலில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டிக் கொண்டபோது, அந்த அர்ச்சகப் பார்ப்பான் அவரை எதிர்த்து நின்ற வேட்பாளரான டி.என். அனந்தநாயகி அம்மையாருக்காக மாற்றி அர்ச் சனை செய்தார் என்று ம.பொ.சி. புலம்பினாரே! ஆரிய தம்பிரானுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன? கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பானுக்குக்கூட இனவுணர்வு ஜாதி உணர்வு இருக்கும்போது மற்றவர்களுக்கு இருக்கக் கூடாதா?

வெகு தூரம் போக வேண்டாம் நடந்து முடிந்த மக்களவைத் தேர் தலில் திருச்சித் தொகுதியில் என்ன நடந்தது?

திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும் பூர், கந்தர்வக்கோட்டை, புதுக் கோட்டை, சிறீரங்கம் ஆகியவை அடங்கியவை.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க. வும் பெற்ற வாக்குகள் விவரம்:

திருச்சி கிழக்கு:
             காங்கிரஸ் - 51340
             அ.தி.மு.க.,  -48,954
திருச்சி மேற்கு
              காங்கிரஸ்  -50,890
             அ.தி.மு.க., -50,698
திருவெறும்பூர்:
              காங்கிரஸ் _ 56,312
             அ.தி.மு.க., _ 49,657
கந்தர்வக்கோட்டை
            காங்கிரஸ் _ 41977
            அ.தி.மு.க., _ 41236
புதுக்கோட்டை
              காங்கிரஸ் _ 42,228
             அ.தி.மு.க., _ 37,095
சிறீரங்கம்
            காங்கிரஸ் -- 50,767
           அ.தி.மு.க., -70,949
இந்தப் புள்ளி விவரத்தைக் கவனமாகப் பார்க்க வேண்டும். ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பா ளர் சாருபாலா தொண்டமான் அதிமுக வேட்பாளர் திரு ப. குமாரை விட அதிக வாக்குகள் பெற்றுள் ளார்.

சிறீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்குக் கிடைத்த அதிக வாக்குகள் மேற்கண்ட அய்ந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகளையும் கீழே தள்ளி, அதற்குமேலும் 4335 வாக்குகளை அதிகமாக அளித்து வெற்றி பெறச் செய்ததே -இதற்குப் பெயர் என்னவாம்? எல்லோருக்கும் தெரிந்த செய்திதானே? அக்கிரகார வாசிகள் அதிகம் நிறைந்த தொகுதி அல்லவா? சிறீரங்கம் தொகுதி உணர்த்தும் பாடம் என்ன?

ஒன்று திரண்டு ஒரே அடியாக வாக்குகளை அதிமுகவுக்கு அள்ளிப் போட்டுள்ளதில் ஜாதி உணர்வு கிடையவே கிடையாது என்று தினமணி சத்தியம் செய்யப் போகி றதா? துண்டை விரித்துத் தாண்டப் போகிறதா?

இதைப்பற்றி அப்பொழுது தினமணி எழுதியதுண்டா?

தமிழர்களே, தமிழர்களே!

பார்ப்பனர்களைப் பார்த்தாவது இனவுணர்வு கொள்ளுங்கள் என்ப துதான் கருஞ்சட்டை தொண்டர் களின் கனிவான வேண்டுகோள்.

நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைகூட ஆரியர் திராவிடர் போராட்டமாகத்தான் அமையப் போகிறது.

தினமணி, துக்ளக் கல்கி வகையறாக்கள் அதற்கான யாகக் குண்டத்தை வளர்க்க குச்சிகளைப் பொறுக்க ஆரம்பித்துவிட்டனர்; தூபக்கால் தயாராகி விட்டது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

கலைஞரைப் பார்த்து ஜென்மப் பகைவர் என்று சொன்ன ஆரியகுலத் திலகம் எதிர் அணியில். மீண்டும் ஆரியம் அரியணை ஏறலாமா? அதனை அனுமதிக்க லாமா?

மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தாரே, நினைவிருக் கிறதா?

ராமன் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்ட முடியும் என்று வினா தொடுத்தாரே அந்த அம்மையார் அதனை மறுந்துவிடலாமா?

ஆரிய கலாச்சாரங்களான யாகம், யோகம் இவற்றைப் புதுப்பிக்கும் போக்குக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா?

ஆமாம், நான் பாப்பாத்தி தான்! என்று சட்டப் பேரவையிலே ஆடித் தீர்த்தாரே ஆரிய குல மங்கை நெஞ்சில் நிறுத்துங்கள்.

அன்று புத்த மார்க்கத்தை ஊடுருவி ஆரியம் அழித்தது இன்று திராவிட இயக்கத்திலே ஊடுருவி திராவிடத் தத்துவத்தைக் கபளீகரம் செய்கிறது. மீண்டும் மனு தர்மமா?

தந்தை பெரியார் உழைத்ததும், அறிஞர் அண்ணா பிரச்சாரம் செய்ததும், தன்மான உணர்வுத் தீயை வளர்த்ததும் எல்லாம் பாழுக்குப் போய் விடலாமா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

இந்தத் தேர்தலில் திரண்டெழுகிற தமிழர்களின் இனவுணர்வு எரிமலை யால் காலா காலத்திற்கும் காகப்பட் டர் பரம்பரை எழுந்திருக்கக் கூடாது.

உணர்வு பெறுவீர்! உறுதி கொள்வீர்!

ஓங்கட்டும் இனமானம்!

ஒழியட்டும் ஆரியம்!
http://viduthalai.in/new/page-1/4253.html
--- மின்சாரம் -

கலைஞர், ஜீவாவை நினைவுகூர்ந்தது தவறா?

தினமணி (17.2.2011) நடுப்பக்கத்தில் பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும் (http://www.dinamani.com/edition/Story.aspx?artid=377577)எனும் ஒரு கட்டுரையைத் தகுதி உடைய ஒருவரால் எழுதப்பட்டு வெளியாகி இருக்கிறது. 

சில நாள் களுக்கு முன்பு ஜீவாவின் பெயர்த்தியின் திருமணத்தைப் பெரியார் திடலில் முதல்வர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார். 

அப்போது அவர் ஜீவாவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை, தோழமையை விவரித்துப் பேசி அது ஏடுகளில் எல்லாம் வெளியாகி இருக்கிறது. 

ஜீவாவுக்கும் கலைஞருக்கும் 18 ஆண்டுகள் வித்தி யாசம் இருந்தால் என்ன? அவரைச் சந்திக்கிற வாய்ப்பு, உரையாடுகிற வாய்ப்பு எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது.  அந்தத் தோழமையைத் தான் கலைஞர் அந்தத் திருமண விழாவில் எடுத் துரைத்தார். 

அதை மறுத்து ஒரு கட்டுரை ஒருவர் எழுத, அதை தினமணி வெளியிட்டு மகிழ்ந்து இருக்கிறது.கட்டுரையாளர் ஒரு சில வரலாற்று நிகழ்வுகளைச் சரியாக எடுத்துக் கூறி இருக்கிறார். 

அதற்குரிய புத்தகங்கள் அவரிடம் இருக்கின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால் 1957 தேர்தல் தொடர்பாக தினமணி கட்டுரையாளர் எழுதியுள்ள இமாலயப் பொய்யை எப்படிப் பொறுத்துக் கொள்ளுவது? 

அவர் எழுதுகிறார்:

1957 இல் வண்ணார்பேட்டை தொகுதியில் ஜீவா கம்யூனிஸ்ட் சார்பாகப் போட்டியிட்டபோது, ஜீவரத்தினம் என்ற ஒருவரை நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்த பெருமை தி.மு.கவுக்கு உண்டு, தி.மு.க, முதன் முதலில் பங்கேற்ற தேர்தல் அது.

அப்போதெல்லாம் 234 தொகுதிகளி லும் தி.மு.க. நிற்காது. வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு சில தொகுதிகளில் மட்டுமே நிற்கும்.  தி.மு.க. போட்டியிடாத தொகுதிகளில் காங்கி ரஸுக்கு எதிரான சுயேச்சைகளை ஆத ரிக்கும்.

அந்தச் சமயத்தில் ஜீவாவை எதிர்த்து வேட்பாளர் யாரையும் நிறுத்தவேண்டாம் என்று இடதுசாரி இயக்கத்தினர் கெஞ்சிக் கேட்டபோதும்கூட, அதைப் பொருட்படுத் தாமல், ஜீவரத் தினத்தை தி.மு.க. சார்பில் நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்தது தி.மு.க. ஜீவரத்தினத்தை வண்ணார் பேட்டை தொகுதியில் நிறுத்தவேண்டும் என்று முடிவெடுத்ததில் கருணாநிதிக் கும் பங்கு உண்டு.  இன்று ஜீவாவைப் பற்றிப் பேச தி.மு.க.வுக்கும், கருணாநிதிக் கும் என்ன தகுதி இருக்கிறது?

மேலே உள்ள கட்டுரையாளரின் கூற்றைப் பார்த்தால் அவர் எவ்வளவு கற்றுக்குட்டித்தனமாக,  எழுதுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

1957 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. நிற்க வேண்டும் என 1956 இல் முடிவு எடுத்துவிட்டது.  அதன்படி தி.மு.க. 124 இடங்களில் தமிழகச் சட்டமன்றத் திற்குப் போட்டியிட்டது.  போட்டி யிட்டதோடு நாடாளுமன்றத்திற்கு 11 இடங்களில் 1 ஆதரவு வேட்பாளர் 5 பேருக்காகப் பிரச்சாரம் செய்தது.

இது எப்படி வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் போட்டியிடுவது என்று ஆகும்?  இப்படி வேட்பாளர்களை நிறுத்தியதிலிருந்துதான் 15 பேர் சட்ட மன்றத்திற்கும் இருவர் நாடாளுமன்றத் திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது வரலாறு.

1957 ஆம் ஆண்டு தேர்தலில் ஜீவா வண்ணாரப் பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு நிற்கவில்லை.  அவர் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தி.மு.க. தேர்தலில் நிற்கவில்லை. 

திரா விட நாட்டுக் கொள்கையை ஆதரித்து உடன்படிக்கையில் கையெழுத்திட்ட வேட்பாளர்களையே தி.மு.க. ஆதரித்தது.  அதன்படி ஆல்பர்ட் ஜேசுதாசனை தி.மு.க ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது.  1952 இல் ஜீவாதான் வெற்றி பெற்றார்.

1957 ஆம் ஆண்டு தேர்தல் நிலவரம் என்ன? ஜீவா வண்ணாரப்பேட்டையில் சட்டமன்றத்திற்குப் போட்டியிட வில்லை, அவர் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட் டியிட்டார்.  அங்கே அப்போது தி.மு.க. வேட்பாளர் நாஞ்சில் கி. மனோகரன். 

ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர். சம்பந்தம் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றார்.  1957 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட்ட கம்யூ னிஸ்ட் வேட்பாளர் ஏ.எஸ்.கே. அய்யங் கார்.  தி.மு.க. வேட்பாளர் எஸ். ஜீவரத் தினம். காங்கிரஸ் வேட்பாளர் மாயாண்டி நாடார் வெற்றி பெற்றார். 

போட்டியிடாத ஜீவாவை யார் தோற்கடித்தது?  1962 ஆம் ஆண்டு தான் ஜீவா மீண்டும் வண்ணாரப் பேட்டை தொகுதியில் போட்டியிடு கிறார். 

மீண்டும் காங்கிரஸ் வேட் பாளர் மாயாண்டி நாடார்தான் வெற்றி பெறுகிறார். 

தி.மு.க. வேட்பாளர் மு. வேதாசலம் வெற்றி வாய்ப்பை இழக்கிறார். 

இதுதான் 1952, 1957, 1962 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் விவரங்கள் சுருக்கமான நிலவரங்கள்.

அப்போது பெற்ற வாக்கு விவரங்கள் வருமாறு: 1957 ஆம் ஆண்டு  வண்ணாரப்பேட்டை தொகுதியின் வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள்

1.  எம். மாயாண்டி நாடார்    11,770  - 29.49%     (காங்)

2.  என் ஜீவரத்தினம் (தி.மு.க. ஆதரவு)       (சுயே)    11,279  - 28.26%

3.  பி.எம். லிங்கேசன்    9,152  - 22.93%       (சுயே)

4.  ஏ.எஸ்.கே. அய்யங்கார் 7,005 - 17.56%       (கம்யூ)

5. எஸ். தெய்வசிகாமணி    707  - 1.76%       (சுயே)

1962 ஆம் ஆண்டுவண்ணாரப் பேட்டை தொகுதியில்

வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள்

1.  எம். மாயாண்டி நாடார்    25,732- 37.8%    (காங்)
2.  எம். வேதாசலம்    24,095  - 35.4%       (தி.மு.க)
3.  பி.ஜீவானந்தம்    10,040  - 14.7%      (கம்யூ)
4.  பி.எம். லிங்கேசன்    2,190   -   -           (சுயே)

நிலைமை இப்படி இருக்கிறபோது, தினமணி கட்டுரையாளர் அவராகவே சில கதைகளை யெல்லாம் விடுகிறார்.  இடதுசாரிகளை எதிர்த்து வேட் பாளர்களைப் போடவேண்டாம் என்று யார் யாரிடம் கேட்டுக் கொண்டார் கள்? 

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் கடுமையாக உழைத்து முன்னேறிக் கொண்டிருந்த காலம் அது!

ஒவ்வொரு கட்சியும் கொள்கை முழக்கம் முழங்கிய நாள்கள் அவை.  கூட்டணி என்று இல்லாமல் தனியாக மக்களை சந்தித்த மகத்தான நாள்கள் அவை! 

கட்டுரையாளர் சொல்லுவது போல எவரும் யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை, இதற்கும் கலைஞரை அக்காலகட்டத்தில் சம்பந்தப்படுத்து வது பொருத்தமில்லாதது ஆகும்.  கட்டுரையாளரின் தெளிவின்மையையும் அறிவீனத்தையும் இது காட்டுகிறது.

தி.மு.க.வின் முதல் மாநில மாநாட் டின் மேடையில் அமர்ந்து இருந்தவர் ஜீவா!  திராவிட இயக்கத் தலைவர் களிடையே தோழமை பேணியவர் ஜீவா! 

சுயமரியாதை இயக்கத்தில் உழைத்தவர் ஜீவா!  முற்போக்கு எண் ணம் கொண்டவர்களை மதிப்பவர் ஜீவா.  அந்த வகையில் கலைஞர், ஜீவா வுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை தோழமை பொங்க ஜீவாவின் பெயர்த்தி திருமணவிழாவில் எடுத் துரைத்திருப்பது தவறா?  அதற்கு வயதை ஒப்பிட்டுக் காட்டுவது எப்படிச் சரி?

1963 ஆம் ஆண்டு ஜீவா இயற்கை எய்தினார்.  தமிழ்நாட்டு அர சியலில் கலைஞர் அதற்குள் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகி விட்டார்.  ஜீவாவின் மரணத்தின் போது கலைஞர் தி.மு.க.வின் பொருளா ளர்; நாடறிந்த தலைவர். 

ஜீவாவைச் சந்தித்துப் பேசுகிற அறிமுகமும், வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்து இருக்கின்றன.  இதில் 18 வயது ஜீவா மூத்தவர் என்கிற காரணம் எப்படிச் சரியாக இருக்கமுடியும்? 

அவர் மூத்தவர்தான். அதனால் இளையவர் தோழமை மேலிட முடியாதா, ஜீவா காந்தியைச் சந்தித்தது போல!  தோழமை பொங்க அவரோடு பழகியதை கலைஞர் நினைவு கூர்ந்தது ஒரு மறக்க முடியாத நிகழ்வே!  இது தவறாகுமா?
க. திருநாவுக்கரசு
http://viduthalai.in/new/page2/4254.html

weather counter Site Meter