Pages

Search This Blog

Showing posts with label குஜராத் கலவரம். Show all posts
Showing posts with label குஜராத் கலவரம். Show all posts

Thursday, March 3, 2011

நல்லவர் போல் தோற்றமளிக்கும் திறமைமிக்க ஏமாற்றுக்காரர் நரேந்திர மோடி - தெகல்கா அம்பலப்படுத்தியது

ஒரு மதக் கலவரப் படுகொலைகளில் மோடியின் பங்கு  என்ன என்பது பற்றி விசாரணையில் கேள்வி கேட்கப்படும் முதல் முதலமைச்சர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு உண்டு.  மென்மை யானவையாக இருந்தாலும், நேரடியாக பதில் கூறாமல் தவிர்ப்பவையாக இருந்த  அவர் அளித்த பதில்கள் குஜராத்தின் இரும்பு மனிதர் என்பவரின் மறுபக் கத்தைக் காட்டுவது போல் உள்ளன.

28.3.2010 காலை 9 மணிக்கு காந்தி நகரில் உள்ள சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்தின் முன் கூடியிருந்த தெலைக்காட்சி செய்தியா ளர்களை நோக்கி கை அசைத்துக் கொண்டே  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்திற்குள் நுழைகிறார். அதன் பின் நடந்த விசாரணை குஜராத் தின் இரும்பு மனிதர் எனப்படும் அவரின் ஆர்வத்தை அளிக்கும் மறுபக்கத்தைக் காட்டுவதாக இருந்தது.

கவுரவ யாத்திரையின் ஒரு பகுதியாக 9.9.2002 அன்று மேக சேனா மாவட்ட பெச்சார்ஜி என்ற ஊரில் தாங்கள் நிகழ்த்திய சொற்பொழிவை தயவு செய்து பாருங்கள்  என்று கூறிய விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா மதஉணர்வுகளைத் தூண்டும் முதல் வரின் பேச்சு அடங்கிய ஆவணத்தை மேஜை மீது வைக்கிறார்.

நிவாரண முகாம்களைக் கொச்சைப்படுத்திய மோடி

என்ன சகோதரர்களே, நாம் நிவா ரண முகாம்களை நடத்த வேண்டுமா? குழந்தைகளை உற்பத்தி செய்யும் மய் யங்களை நான் ஆரம்பிக்க வேண்டுமா? குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பின்பற்றி முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் 5 பேர், ஆனால் அவர்களோ 25 பேர். குஜராத் மாநிலத்தில் குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தவே முடியாதா? அதற்குக் குறுக்கே எவரால் தடைகள் ஏற்படுகின்றன?

எந்த மதம் இதற்குக் குறுக்கே நிற்கிறது? பணம் ஏன் ஏழைகளைச் சென்றடைவதில்லை? சிலர் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே போனால், அக்குழந்தைகள் சைக்கிள் டியூபுக்கு பஞ்சர் ஒட்டும் வேலையைத்தான் செய்ய முடியும். 2002 செப்டம்பரில் கவுரவ யாத்திரை என்ற பெயரில் மோடி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் பேசியது இது.

இந்தக் குறிப்புகள் முஸ்லிம்களைக் குறிப்பிடுபவையா? என்று மல்ஹோத்ரா கேட்கிறார்.
இந்தப் பேச்சு எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையோ, மதத்தினரையோ குறிப்பிடுவது அல்ல. இது ஒரு அரசியல் பேச்சு. அதில் வளர்ந்து வரும் இந்திய மக்கள் தொகையைச் சுட்டிக் காட்ட நான் முயன்றிருக்கிறேன். சில தீய சக்திகள் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ற வாறு எனது பேச்சுக்கு தவறான விளக் கம்  அளித்து திரித்து வெளியிட்டிருக் கின்றன. எனது தேர்தல் பேச்சுக்குப் பிறகு பதற்றமோ, கலவரமோ ஏற்பட வில்லை என்பது கவனிக்கத்தக்கது என்று மோடி பதிலளித்தார்.

இத்தகைய பதிலை ஏற்றுக் கொள்ள மல்ஹோத்ரா தயாகரா இல்லை. அவரது அறிக்கையில், மோடி அளித்த பதில் மனநிறைவை அளிப்பதாக இல்லை. நிச்சயமாக அது வளர்ந்து வரும் சிறுபான்மை மக்கள் தொகையைப் பற்றி யதுதான் என்று அவர் தெரிவித் துள்ளார்.

விசாரணை தொடரும்போது, - தனக்கு சாதகமானவற்றை தேர்ந்தெடுத் துக் கூறுவது, நேரடியாக பதிலளிக்காமல் தட்டிக் கழிப்பது, நினைவுமறதி, பச்சைப் பொய், தந்திரமான - திறமையான பேச்சுக்கலை - போன்ற புத்தகத்தில் உள்ள அத்தனை வித்தைகளையும் மோடி பின்பற்றிக் காட்டுகிறார்.

எதிர்வினையா?

1.3.2002 அன்று ஜீ தொலைக் காட்சியின் சுதிர் சவுத்ரிக்கு நீங்கள் அளித்த பேட்டியில், இவை ஒரு சங் கிலித் தொடர் போன்ற வினைகளும், எதிர் வினைகளுமாகும். வினைகளும், எதிர்வினைகளும் நிறுத்தப்படவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்  என்று கூறியிருக்கிறீர்கள். கோத்ரா நிழ்ச்சி இந்தியாவிலும், உலகம் முழுமையிலும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று நீங்கள் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். 

கோத்ரா பகுதி மக்கள் குற்றவியல் குணங்களைக் கொண்டவர்கள்; இதற்கு முன் அவர்கள் பெண் ஆசிரியர்களைக் கொன்றிருக் கின்றனர். இப்போது அவர்கள் இந்த மிருகத்தனமான குற்றத்தைச் செய்திருக் கின்றனர். அதன் எதிர்வினைதான் இப்போது அவர்கள் உணர்வது என்று கூறியிருக்கிறீர்கள். இதைப் பற்றி விளக்கமுடியுமா? என்று மல்ஹோத்ரா கேட்கிறார்.

நேரடியாக பதில் அளிப்பதை மோடி தவிர்த்துவிட்டுக் கூறுகிறார் : குஜராத் வரலாற்றைப் படித்தவர்களுக்கு மத வன்முறைகள் இங்கே ஒரு நீண்ட வரலாற்றைப் பெற்றிருக்கின்றன என்பதை நிச்சயமாக அறிந்திருப்பார்கள். நீண்ட காலமாக, நான் பிறப்பதற்கு முன்பே, இது போன்ற மதக் கலவரங்களைத் தொடர்ச் சியாக குஜராத் சந்தித்து இருக்கிறது. 1714 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, ஆயிரக்கணக்காக மதக் கலவரங்கள் குஜராத்தில் நிகழ்ந்திருப்ப தாக வரலாறு கூறுகிறது.

இன்னமும் அவர் கேள்விக்குப் பதில் கூறவில்லை.  1.3.2002 அன்று ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைப் பொறுத்தவரை, எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், நான் பயன்படுத்திய சொற் களை அவ்வாறே நினைவுபடுத்திக் காண என்னால் இயலவில்லை. என்றாலும், எப்போதுமே அமைதி நிலவவேண்டும், அமைதி மட்டுமே நிலவவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்து வந் துள்ளேன். மக்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று நேரடியான, எளிய மொழியில் கூறியிருக்கிறேன்.

இந்த பதில்களிலிருந்து தேர்தல் பேரணியில் தோன்றிய மோடியைப் பற்றி அறிந்து கொள்வது எளிதல்ல. ஷெரா புடீன் ஷெயிக் கொல்லப்பட்ட போலி என்குவுன்டர் 4-12-2007 அன்று நடந்த தற்குப் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு பெருங்கூட்டத்திடம் மோடி கேட்கிறார்: ஷொராபுடீனை நான் என்ன செய் திருக்க வேண்டும். உணர்ச்சி வயப்பட்ட கும்பல், அவனைக் கொல்; அவனைக் கொல் என்று கத்துகிறது. பின் மோடி சீறுகிறார் :

அதைச் செய்ய நான் சோனியா காந்தியின் அனுமதியை வாங்கவேண்டுமா?

ஆனால் அந்த மோடி இப்போது முற்றிலுமாகக் காணாமல் போய்விட்டார்.

ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை நிச்சயம் உண்டு என்ற நியூட்டனின் விதியைக் குறிப்பிட்டு கோத்ராவுக்குப் பிறகு நடந்த கலவ ரங்களைப் பற்றி ஊடகத்தினரிடம் நீங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட் டீர்களா? என்று மல்ஹோத்ரா கேட்கிறார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி

இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இண்டியா ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. உண்மை என்னவென்றால் டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் இருந்து எவருமே வந்து என்னை சந்திக்கவில்லை என்பது தான் என்று மோடி பதிலளிக்கிறார்.  வினை-எதிர்வினைக் கோட்பாடு என்று அழைக்கப்படுவதன் பொய்த் தன்மை இந்த உண்மையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அது போன்ற எந்த ஒரு பேட்டியையும் கொடுக்க வில்லை என்ற ஒரு மறுப்பை மாநில அரசு வெளியிட்டிருந்தது. அந்த நாளி தழின் உட்பக்கத்தில் ஒரு மூலையில் வெகுநாள்கள் கழித்த பிறகு அந்த மறுப்புச் செய்தி வெளியிடப்பட்டது என்று மோடி கூறினார்.

அந்த நேரத்தில் மோடி கூறுகிறார்:

குஜராத் மொழியில் ஒரு பழமொழி உண்டு. வன்முறைக்கு வன்முறையே பதிலாக இருக்க முடியாது என்பது எனது நிலையான கருத்தாக இருந்து வருவதாகும். அமைதி காக்கவேண்டும் என்றுதான் நான் வேண்டுகோள் விடுத்தேன். ஏதுமறியா அப்பாவிகள் மீது ஒரு கும்பல் மேற்கொண்ட வினை யையோ,  எதிர்வினையையோ நான் எப்போதுமே நியாயப்படுத்தியதில்லை; நியாயப்படுத்தவும் மாட்டேன்.

இன்னமும் சிக்கல்நிறைந்த கேள்வி களுக்கு மோடி தெளிவற்ற குழப்பமான பதில்களை அளித்தார். மோடி மீதான சிறப்பு விசாரணைக் குழுவிற்கு எந்த வித அதிகாரமும் அளிக்கப்பட்டிருக்க வில்லை என்பதால், மோடியால் இவ்வாறு செய்ய முடிந்தது. அவர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை.

மோடி விரும்பி யிருந்தால், சிறப்பு விசாரணைக் குழு வின் முன் ஆஜராவதற்கே அவரால் மறுத்திருக்க முடியும். சட்டத்தை மதிக்காதவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள அவர் விரும்ப வில்லை என்பதுதான் உண்மை. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் விசாரணை அதிகாரியார் தன்னை பதில் அளிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார்.

எனவே, மிகவும் மோசமான மதப் படுகொலை நடந்த 28.2.2002 அன்று மோடியின் நடமாட்டம் பற்றி மல் ஹோத்ரா கேட்டபோது, மோடி கூறி னார்: 28.2.2002 பிற்பகல் ஷாஹி பாக் சர்க்யூட் ஹவுஸ் இணைப்பில் செய்தியாளர்களை நான் சந்தித்தேன்.  ஒரு விசாரணைக் கமிஷன் அமைப்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதை  அப்போது நான் ஊடகத்தி னரிடம் தெரிவித்தேன்.

அமைதியையும், மதநல்லிணக்கத்தையும் காக்கும்படி அவர்கள் மூலம் நான் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அன்றைய தினமே, அமைதியையும் மத நல்லிணக் கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு நான் வெளியிட்ட வேண்டுகோள் பற்றிய ஒரு செய்தி தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

2001 அக்டோபரில் குஜராத் முதல மைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடிதான் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்த வகையில், சட்டம், ஒழுங்கு, உளவுத் துறை, புலனாய்வு ஆகியவை அனைத்தும் அவரது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால் இவை பற்றிய பிரச்சினைகளில் சிறப்பு விசாரணைக் குழு கேள்விகள் கேட்ட போது, தனது எதுவும் தெரியாதது போலவே மோடி நடித்தார்.

உளவுத்துறை

2002 ஆம் ஆண்டில் அயோத்தி யாவில் விசுவ இந்து பரிசத் நடத்த திட்டமிட்டிருந்த ராம் மகாயக்ஞம் தொடர்பாக குஜராத் மாநில புலனாய் வுத் துறை திரட்டிய உளவுத் தகவல்கள் என்னென்ன? என்று மல்ஹோத்ரா கேட்டார்.

2001 அக்டோபரில்தான் நான் குஜராத் முதலமைச்சராக ஆனேன். அதற்குமுன் டில்லியில் பா.ஜ.கட்சியின் பொதுச் செயலாளராக நான் இருந்தேன். 2001 இல் குஜராத்தில் நடந்த நிலநடுக்கத்திற்குப் பிறகுதான், இங்கு நிவாரணப் பணியையும், மறு கட்டமைப்புப் பணியையும் செய்ய கட்சி யின் தலைமை என்னை அனுப்பியது.

ராஜ்கோட் சட்டமன்றத் தொகுதியில் போட்டி யிட்டதுதான் நான் முதன் முதலாகத் தேர்தலில் கலந்து கொண் டது என்பதை இங்கு குறிப்பிட வேண் டும். 24.2.2002 அன்று அந்த இடைத் தேர்தல் நடைபெற்றது.  ராம் மகாயக்ஞம் பற்றிய உளவுத் துறை அறிக்கைகளைப் பொருத்தவரை, அவை பொதுவாக காவல்துறை தலைவர் மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகிய வர்களிடம் வரும்; அலுவலக விதிகளின் படி இவ் விவகாரங்களை அவர்கள்தான் கவனித்து வந்தார்கள்.

நன்றி: தெகல்கா 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
http://viduthalai.in/new/page-2/4658.html

Wednesday, March 2, 2011

கோத்ரா தீர்ப்பும் நாட்டின் எதிர்பார்ப்பும்

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கோத்ரா ரயில் எரிப்பில் 59 பேர் மடிந்தனர் (27.2.2002). இது தொடர்பான வழக்கில் 11 பேர்களுக்குத் தூக்கும், 20 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக் கூறிவிட்டது. அதற்குள் போக விரும்பவில்லை. தண்டனைக்கு ஆளானவர்களுக்கு மேல் முறையீடு செய்ய சட்டப்படி வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், கோத்ரா நிகழ்வினைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலை களுக்கு, பொருள் இழப்புகளுக்கு, வன்முறைத் தாண்டவங்களுக்குத் தண்டனை எப்பொழுது?

கோத்ரா குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாலேயே குஜராத்தில் மோடியின் முயற்சியால் நடந்தேறிய கொலைகளை நியாயப்படுத்த முடியாது.

2000 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன. 230 தர்க்காக்கள் மண் குவியலாகின. 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகள் சாம்பலாக்கப்பட்டன; ஆயிரம் உணவு விடுதிகள் குட்டிச் சுவர்களாக்கப்பட்டன. 3800 கோடி ரூபாய் இழப்புக்கு ஆளானார்கள்- சிறுபான்மை மக்களான முசுலிம்கள்.

இவ்வளவுக் கொடுமைகள் நிகழ்த்தப்படுவதற்கு 12 லட்சம் பேர்கள் களத்தில் இறக்கப்பட்டனர். இதன் பின்னணியில் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு இருந்திருக்கிறது.

ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்லப்படும் கற்பனை யல்ல இது. ஆளும் பி.ஜே.பி.யைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களிடமே தகவல்களை வாங்கி, தெகல்கா  ஊடகம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது.

48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்; அதற்குள் எல்லா வன்முறைகளையும் நடத்தி முடித்துவிடுங்கள் என்று தமது படைக்கு விசா வழங்கினார் எங்கள் முதலமைச்சர் மோடி என்று அவர்கள் சொல்லி யிருக்கிறார்கள். அவர் மட்டும் முதலமைச்சராக இருந்திராவிட்டால், அவரே நேரடியாக வீதிக்கு வந்து வன்முறையில் ஈடுபட்டு இருப்பார் என்றெல்லாம் கூறியிருக்கின்றனர்.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு எப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

நரோடா பாட்டியா என்னும் இடத்தில் சங் பரிவார்க் கும்பல் பந்த் நடத்தியதன் கோர விளைவால் 58 முஸ்லிம்கள், பெண்கள், குழந்தைகள் உள்படக் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்தப் படுகொலையின் மீது காவல் துறையின் குற்றப் பத்திரிகை வாசகம் என்ன தெரியுமா?

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்ற வன்முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்திருக் கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், மோடி அரசில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும், வன்முறையாளர்களுக்குத் தண்டனையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

குஜராத் கலவரத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 4252; இவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டன. இதுகுறித்து உச்சநீதிமன்ற அமர்வு (நீதிபதிகள் ரூமாபால், சின்ஹா மற்றும் கபாடியா அடங்கியது) என்ன ஆணையிட்டது தெரியுமா?  அத்தனை வழக்குகள்மீதும் புதிய விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் அந்த ஆணை (17.8.2004).

மோடி அரசு மிக மோசமான அரசு என்பதற்கு இதைவிட மொத்து ஒன்று தேவையா?

குஜராத்தில் வதேரா என்னும் இடத்தில் முசுலிம் ஒருவருக்குச் சொந்தமான பெஸ்ட் பேக்கரி, அதில் பணிபுரிந்த 14 பேர்கள் உயிரோடு வைத்துக் கொளுத் தப்பட்டனர். மிகக் குரூரமான இந்தப் படுகொலையைப் படுதா போட்டு மறைக்க முடியவில்லை. 21 பேர் மீது குற்றப் பத்திரிகை தயார் செய்யப்பட்டது.

செஷன்ஸ் நீதிபதியின் தீர்ப்பு என்ன தெரியுமா? 21 பேர்களும் குற்றவாளிகள் அல்லர் என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். சாட்சிகள் பல்டியடித்தனர். இதன் காரணம் வெளிப்படையே!

இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதிக்கு வெகுமதி கொடுக்கப்படவேண்டாமா? குஜராத் மாநிலத்தில் மின் வாரியத்தின் ஆலோசகராக மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில்!

வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. நீதிபதிகள் கடுமையாகச் சாடினர். குஜராத் மாநிலத்திற்குள் இந்த வழக்கு நடத்தப்பட்டால், நீதி கிடைக்காது என்று கூறி, மகாராட்டிர மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. மோடி அரசு நியமித்திருந்த வழக்கறிஞர்களைத் தூக்கி எறிந்து விட்டு, நீதிமன்றமே புதிய வழக்குரைஞர்களை நியமனம் செய்தது என்றால், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் யோக்கியதையைத் தெரிந்துகொள்ளலாமே!

நீரோ மன்னன் என்ற அடைமொழியையும் தந்தது உச்சநீதிமன்றம். கோத்ரா ரயில் பெட்டி எரிப்பில் குற்ற வாளிகள் தண்டிக்கப்படட்டும். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட படுகொலைகளுக்குக் காரணமானவர் களுக்குத் தண்டனை என்னவென்று நாடே எதிர்பார்க்கிறது.
http://viduthalai.in/new/page-2/4537.html</div>

Monday, February 28, 2011

குஜராத் கலவரம்-காவல்துறை அதிகாரி சிறீகுமாரின் சாட்சியத்தை சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை

குஜராத் 9.4.2002 அன்று ஆர்.பி.சிறீகுமார் மாநில புலனாய்வுத் துறை கூடுதல் காவல்துறைத் தலைவ ராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த சிலரை தீர்த்துக்கட்டுவது உள்ளிட்ட மோடியின் சட்டத்திற்குப் புறம்பான, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான அறிவுரைகளின் படி தான் நடந்து கொள்ளாததால், மோடியின் வெறுப்புக்குத் தான் ஆளான தாக அவர் கூறினார். சிறீகுமார் அளித்த ஆவண ஆதாரங்களில், கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ளவையும் அடங்கும்.

1) அகமதாபாத் நகரில் தற்போது நிலவும் சமூக நிலவரம் என்ற அறிக் கையைத் தயார் செய்து அப்போதைய உள்துறை கூடுதல் தலைமைச் செய லாளராக இருந்த அசோக் நாராயணி டம் 24.4.2002 அன்று பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள அளிக்கப் பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்த முக்கியமான செய்திகள்:

அ) குற்றவியல் நீதித்துறை நடை முறையின்மீது கலவரங்களால் பாதிக் கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்து விட் டனர். பா.ஜ.க. மற்றும் வி.இ.ப. உறுப் பினர்களுக்கு எதிராக புகார்களை அளிக்க விடாமல் அவர்களைக் காவல் துறையினர் மிரட்டினர்.

ஆ) புகார்களில் அளிக்கப்பட்ட குற்றச் சாற்றுகளை காவல்துறை அதி காரிகள் நீர்த்துப் போகச் செய்ததுடன், முதல் தகவல் அறிக்கைகளைத் தனித் தனியாகப் பதியாமல், ஒன்றுக்கும் மேற் பட்டவற்றை ஒன்றாக இணைத்தனர்.

இ) முஸ்லிம்களுடன் வியாபாரம் செய்யக்கூடாது என்று வி.இ.ப. மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் வியாபாரிகளை வற்புறுத்தினர்.

ஈ) மத உணர்வுகளைத் தூண்டி விடும் அளவுக்கான செய்திகள் அடங் கிய பிரசுரங்களை வி.இ.ப. அமைப்பினர் விநியோகித்து வந்தனர்.

உ) காவல் நிலையங்களில் இருந்த ஆய்வாளர்கள் மேலதிகாரிகளின் அறி வுரைகளைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு மாறாக பா.ஜ.க. தலைவர்களின் நேரடியான வாய்மொழி அறிவுரை களைப் பின்பற்றினர்.

இந்த அறிக்கை உண்மையானது என்பதைக் கண்டு கொண்டது மட்டு மன்றி, மற்ற சில அதிகாரிகள் தயாரித்த அறிக்கைகள் சிறீகுமார் அறிக்கை யுடன் ஒத்துப் போவதாகவும் சிறப்பு விசாரணைக் குழு கண்டுகொண் டுள்ளது.

இது பற்றி சிறப்பு விசாரணைக் குழு கேட்டபோது, அந்த அறிக்கையை மோடியிடம் வைத்தேனா இல்லையா என்பது எனக்கு நினைவில்லை என்று அசோக் நாராயண் கூறினார்.

நீறு பூத்த நெருப்பு

2) குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மத உணர்வுகள் இன்னும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருப்பதால், மோடி மேற்கொள்ள உத்தேசித்திருந்த ரத யாத்திரைக்கு எதிராக மற்றொரு அறிக்கையை 25.6.2002 அன்று சிறீகுமார் அனுப்பி வைத்தார். அவரது பரிந்துரையை மோடி அரசு நிராகரித்துவிட்டது.

3) மக்களிடையே மத உணர்வுகள் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருவதை எடுத்துக்காட்டி, நியாயமற்ற காவல்துறை நடவடிக்கைகள் பற்றியும், கண்துடைப்பு விசாரணை பற்றியும் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து புகார் செய்து வருவதை எடுத்துக்காட்டியும் 20.8.2002 அன்று சிறீகுமார் மற்றொரு அறிக்கையைத் தயார் செய்து அனுப் பினார்.

இந்த அறிக்கை மீது அரசு நட வடிக்கை எடுக்கவில்லை என்று அசோக் நாராயண் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்புக் கொண்டார்.

4) நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒட்டி நிலவும் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலை பற்றிய மற்றொரு அறிக்கையை 28.8.2002 அன்று சிறீகுமார் தயாரித்து அளித்திருந்தார். அந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தன்னால் நினைவுபடுத்திக் கூற முடியவில்லை என்று அசோக் நாராயண் கூறினார்.

5) பின்னர் நானாவதி-ஷா கமிஷன் முன் சிறீகுமார் மூன்று பிரமாண வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். சபர்மதி ரயில் எரிப்பைத் தடுக்க மாநில மற்றும் மத்திய புலனாய்வுத் துறைகள் எவ்வாறு தவறிவிட்டன என்பதை முதல் பிரமாண வாக்குமூலம் விவரித்தது. மாநிலப் புலனாய்வுத் துறையின் அறிக்கை களை மோடி அரசு வேண்டுமென்றே கவனிக்காமல் புறக்கணித்தது என்று இரண்டாவது பிரமாண வாக்குமூலம் குற்றம் சாற்றியது.

சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னதாக நடத்துவதற்கு ஏற்றபடி மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலையைப் பற்றி ஆதரவான அறிக்கை அளிக்கும்படி மோடியின் அதி காரிகள் எவ்வாறு தன்னை நிர்ப்பந்தித் தனர் என்பதை மூன்றாவது பிரமாண வாக்குமூலத்தில் அவர் பதிவு செய்திருந் தார்.

அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி கே.எம்.லிங்கோத் தலைமை யில் 9.8.2002 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக மாநில உள்துறை அதி காரிகளை அவர் கண்டித்த நிகழ்ச்சி யையும் சிறீகுமார் விவரித்திருந்தார். 16.8.2002 பிறப்பித்த ஓர் ஆணையில் லிங்கோத் குறிப்பிட் டிருந்தார்:

182 சட்டமன்றத் தொகுதிகளில் 154 தொகுதிகளைச் சேர்ந்த 151 நகரங் களும், 993 கிராமங்களும் கலவரங் களால் பாதிக்கப்பட்டிருந்தன என்று கூடுதல் காவல்துறைத் தலைவர் சிறீகுமார் தேர்தல் ஆணையத்தின் முன் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும், சட்டத்திற்குப் புறம்பான, அரசமைப்பு சட்டத்திற்கு மாறான செயல் களைச் செய்யும்படி மோடியும் அவரது அதிகாரிகளும் தனக்கு வாய்மொழி ஆணைகளைப் பிறப்பித்ததாகவும் சிறீகுமார் தனது பிரமாண வாக்குமூலத் தில் குற்றம் சாற்றியிருந்தார்.

இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணைகளில் சில:

அ) காங்கிரஸ் தலைவர்கள், மோடி யின் போட்டியாளர்கள், ஹிரேன் பாண் டியா போன்ற பா.ஜ.கட்சிக்கு உள்ளேயே இருப்பவர்கள் ஆகியோரின் தொலைப் பேசிப் பேச்சுகளைப் பதிவு செய்வது.

ஆ) மோடியின் அரசியல் நலன் களுக்கு ஏற்றவாறான அறிக்கைகளை அளித்தல்.

இ) மோடியின் ரத யாத்திரைக்குக் குந்தகம் விளைவிக்க முயலும் முஸ்லிம் களை ஒழித்துக்கட்டுவது.

ஈ) மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்த குஜராத் காவல்துறைக்கு உதவி செய்து வந்த மத்திய ராணுவப் படைத் தலைவர் ஜஹுருடீன் ஷா-வின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்தி களைத் துப்பறிந்து கூறுவது.

சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய வாய்மொழி ஆணைகளைப் பதிவு செய்யும் பதிவேடு ஒன்றையும் சிறீகுமார் பராமரித்து வந்தார். ஆனால் சிறப்பு விசாரணைக் குழுவோ, சிறீகுமார் பராமரித்து வந்த பதிவேடு உள்நோக்கம் கொண்டதாகத் தோன்றுவதால், அதன் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடி யாது என்பதாலும், சிறீகுமாரின் வாய் மொழி சாட்சியத்தை வேறு எந்த ஒரு சுதந்திரமான சாட்சியும் உறுதிப்படுத்த வில்லை என்பதாலும், அதனை நம்பிக் கைக்குகந்த ஓர் ஆவணமாகக் கருத முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளது.

சுதந்திரமான சாட்சியங்கள் என்பதன் மூலம் அசோக் நாராயண், கே.சக்ரவர்த்தி, பி.சி.பாண்டே போன்ற அதிகாரிகளை சிறப்பு விசாரணைக் குழு குறிப்பிடுகிறது.

இந்த அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் அதிகாரமும் செல்வாக்கும் மிகுந்த பதவிகளை மோடி பரிசாக அளித்தார் என்பதால், அவர்கள் நேர்மையாகப் பேசுவதாகத் தோன்ற வில்லை என்று சிறப்பு விசாரணைக் குழுவே ஒப்புக் கொண்டுள்ளது.

நானாவதி-ஷா கமிஷன் முன்னி லையில் தான் எவ்வாறு சாட்சியம் அளிக்கவேண்டும் என்று பயிற்சி அளித்து, அச்சுறுத்திய உள்துறைச் செயலாளர் ஜி.சி.முர்மு, உள்துறை அதிகாரி தினேஷ் கபாடியா மற்றும் மாநில அரசின் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியா ஆகியோரின் பேச்சுகளைப் பதிவு செய்த ஒலிநாடாவையும் தனது மூன்றாவது பிரமாண வாக்குமூலத்துடன் சிறீகுமார் அளித்திருந்தார்.

இந்த ஒலிப்பதிவு உண்மையானது தான் என்று சிறப்பு விசாரணைக் குழு கண்டு கொண்டபோதும், பதவி உயர்வு அளிப்பதில் தனது பணிமூப்பைப் புறக் கணித்த பின்னர் ஏற்பட்ட கடுங்கோபத் தினால்தான் சிறீகுமார் இந்த ஒலி நாடாவை அளித்துள்ளார் என்று விசா ரணைக் குழு குற்றம் சாற்றியுள்ளது.

மோடி அரசின் மத மற்றும் அரசியல் செயல் திட்டங்களுக்கு எதிராக சிறீகுமார் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலைப்பாட்டைப் போற்றுவதற்கு சிறப்பு விசாரணைக் குழு தவறிவிட்டது.

மாநிலப் புலனாய்வுத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட தேதியிலி ருந்து ஒன்பது நாள்களுக்குப் பிறகு 18.4.2002 முதல் இந்தப் பதிவேட்டை சிறீகுமார் பராமரித்து வருகிறார். அப் போதைய நிருவாகம் மற்றும் பாதுகாப்பு காவல்துறைத் தலைவர் ஓ.பி. மாத்தூர் அவர்களைக் கொண்டு இந்தப் பதிவேட் டில் சான்றொப்பம் பெறப்பட்டுள்ளது.

நன்றி: தெகல்கா 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

http://viduthalai.in/new/page-2/4410.html 

Monday, February 21, 2011

தெகல்கா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது குஜராத் கலவர வழக்குகளின் அரசு வழக்கறிஞர்கள் சங்பரிவாரைச் சேர்ந்தவர்களே

கலவரங்களின்போது முஸ்லிம் மத மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வெறுப்புணர்வு கொண்டவரது ஆபத்து நிறைந்த நடத்தையை மோடி வெளிப்படுத் தினார். ஆனாலும் அவர் மீது குற்றச்சாற்று பதிவு செய்ய போதுமான சாட்சியம் இல்லை என்று சிறப்பு விசாரணைக் குழு கூறுகிறது.

தனது மாநிலத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு, சட்டப்படி இல்லா விட்டாலும், தார்மீக ரீதியிலாவது ஒரு முதலமைச்சரை பொறுப்பாக்க என்ன செய்ய வேண்டும்?

சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையின் 67 ஆம் பக்கத்தில் மல்ஹோத்ரா குறிப்பிடு கிறார்: 27-2-2002 அன்று கோத்ராவுக்குச் சென்றதாக முதலமைச்சர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டுள்ளார். குல்பர்கா சொசைடி, நரோடா பாடியா, மற்றும் கலவரங் களால் பாதிக்கப்பட்ட அகமதாபாதின் இதர பகுதிகளையும் தான் மார்ச் 5, 6 தேதிகளில் சென்று பார்த்ததாக மோடி ஒப்புக் கொண் டுள்ளார். இது அவரது பாகுபாடு காட்டும் மனப்பான்மையைக் காட்டுகிறது. ஒரே நாளில் 300 கி.மீ. பயணம் செய்து கோத் ராவுக்குச் சென்று வந்த அவர், உள்ளூர் பகுதிகளில் மோசமான கலவரங்கள் நடந்து, பெரும் அளவிலான முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட பகுதியை உடனே சென்று பார்க்கத் தவறிவிட்டார்.

எதிர் வினையாம்!

குஜராத்தில் மதக் கலவரங்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த 2002 மார்ச் 1 ஆம் தேதியன்று ஜீ செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி குறிப்பிட்டுள்ளார்: நடவடிக்கைக்கு எதிர்நடவடிக்கை என்ற நடைமுறை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு செயல் நடை பெறாமல் இருந்திருந்தால், அதற்கு எதிர்வினை என்று எதுவும் நிகழ்ந்திராது என்றுதான் நான் கூறுவேன். கோத்ரா முஸ்லிம்கள் குற்றவியல் மனப்பாங்கைக் கொண்டிருந்ததாகவும், சபர்மதி ரயில் தீ விபத்துக்குப் பின்னணியில் அவர்கள் இருந்தனர் என்றும் அதே பேட்டியில் மோடி கூறியுள்ளார். குஜராத்தில் அதன் பின் நடந்த கலவரங்கள் அதன் இயல்பான எதிர்வினைதான் என்றும் மோடி கூறியுள்ளார்.

தனது அறிக்கையின் 69 ஆவது பக்கத்தில் மல்ஹோத்ரா குறிப்பிடுகிறார்:
குல்பர்கா சொசைடி அருகே கூடியி ருந்த கலவரக் கும்பல் மீது இறந்து போன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாஃப்ரிதான் முதலில் துப்பாக்கியால் சுட்டார் என்றும், அதனால் கோபமடைந்த கலவரக்காரர்கள் சொசைடிக்குள் நுழைந்து தீ வைத்தனர் என்றும் ஜீ தொலைக் காட்சி பேட்டியில் நரேந்திர மோடி தெளிவாகக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. இந்தப் பேட்டியில் ஈஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதுதான் வினை என்றும், அதனைத் தொடர்ந்த படு கொலைகள் எதிர்வினையென்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

மல்ஹோத்ரா மேலும் எழுதுகிறார்:

குல்பர்கா சொசைடி மற்றும் இதர இடங்களிலும் முஸ்லிம்கள் மீது மேற்கொள் ளப்பட்ட பயங்கரமான வன்முறைத் தாக்கு தல்களுக்குப் பின்னும், அரசிடமிருந்து வந்த எதிர்ச் செயல், காட்டிய பிரதிபலிப்பு எவர் ஒருவரும் எதிர்பார்க்கக் கூடிய வகையில் இருக்கவில்லை. குல்பர்கா சொசைடி, நரோடா பாடியா மற்றும் இதர இடங்களில் நிலவிய தீவிரத் தன்மையை, ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் இருக்கத்தான் செய்யும் என்று கூறியதன் மூலம் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியையே முதலமைச்சர் மேற்கொண்டார் என்பதை மேற்கூறிய கலந்துரையாடல் காட்டுகிறது. மோடியின் கூற்று, சிறுபான்மை சமூக அப்பாவி உறுப் பினர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத் துவதாகவே இருந்தது. பாகுபாடு காட்டும் இத்தகைய மனநிலை ஒரு முதலமைச்சரிடம் எதிர்பார்க்கக்கூடியது அல்ல. மோடி கூறியது முக்கியமான பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அதிர்ச்சி தரத்தக்கதாகவும் இருக்கிறது என்று ராகவன் குறிப்பிடுகிறார். என்றாலும், மோடிக்கு எதிராக ஒரு வழக்கைத் தொடரத் தேவையான ஆதாரங்கள் போது மானவையாக இல்லை என்று மல்ஹோத்ரா முடிக்கிறார்.

வழக்கறிஞர்கள் காவிகளே! காவி உடைப் படை உறுப்பினர்களையே அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக கலவர வழக்குகளில் குஜராத் அரசு நியமித்தது. ஆனால் அவர்கள் தவறாக நடந்து கொண் டார்கள் என்று குறிப்பிட்டுக் காட்டுவது எளிதாக இல்லை என்று விசாரணைக் குழு தெரிவிக்கிறது.

இந்த விரிவான பகுத்தாய்வு காட்டுவது போல், ஒவ்வொரு அம்சத்திலும் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை முரண் பாடுகளைப் பற்றிய ஒரு முழுமையான ஆய்வாக அமைந்துள்ளது. பல விஷயங் களில் மோடி அரசின் நெறி தவறிய செயல் களை விசாரணை அலுவலர் ஒப்புக் கொண் டாலும் மேலும் விரிவான விசாரணை ஒன்றை நடத்துவதற்குப் பரிந்துரைப்பதில் காரணம் கூற இயலாதவாறு தயக்கம் காட்டுகிறார்.

விசுவ இந்து பரிசத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களை அரசு குற்றவியல் வழக் கறிஞர்களாக நியமித்த விஷயத்தில், மற்ற விஷயங்களை விட அரசின் நெறி தவறிய செயல் நன்றாகவே தெரிகிறது.

அறிக்கையின் 157-ஆம் பக்கத்தில், 2002 இல் வதோதரா மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறி ஞராக ரகுவீர் பாண்டியா என்ற விசுவ இந்து பரிசத் ஆதரவாளர் நியமிக்கப்பட்டார். பெஸ்ட் பேக்கரி வழக்கை பாண்டியா நடத் தியதில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பாண்டியா வின் செயல் பாடுகள் பற்றி உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் பரிந்துரைத்துள்ளது என்று மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.

முடிவுக்கு வராத குழப்பம்!

விசுவ இந்து பரிசத் அல்லது ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட மேலும் அய்ந்து எடுத்துக்காட்டுகளை மல்ஹோத்ரா பட்டியலிட்டுள்ளார். இந்த நியமனங்களில், வழக்கறிஞர்களின் அரசியல் தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று மல்ஹோத்ரா குறிப்பிடுகிறார். பின்னர் அவரை மறுத்து அவரே, எந்த ஒரு அரசு குற்றவியல் வழக்கறிஞர் மீதும் தொழிலில் தவறாக நடந்து கொண்டார் என்ற குறிப்பிட்ட குற்றச்சாற்றும் வெளிச் சத்துக்கு வரவில்லை என்றும் கூறுகிறார்.

திரும்பத் திரும்பத் தங்களது கண்டுபிடிப் புகளை அவற்றின் இயல்பான முடிவுகளுக் குக் கொண்டு செல்வதற்குத் துணிவற்ற சிறப்பு விசாரணைக் குழுவின் நிலையைப் பற்றி என்ன கூறுவது, என்ன செய்வது என்ற முடிவுக்கு வரமுடியாத குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக, மேகசேனா மாவட் டத்தில் 2000 ஏப்ரல் முதல் டிசம்பர் 2007 வரை அரசு குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றிய குஜராத் விசுவ இந்து பரிசத் தின் பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி யின் கீழ் 12-க்கும் மேற்பட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் பணியாற்றி வந்தனர். இந்த மேகசேனா மாவட்டம்தான் கலவரங் களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தாகும். மேகசேனாவில் நடைபெற்ற இரண்டு கலவர வழக்குகளில் - விஸ்நகரில் கொல் லப்பட்ட தீப்சா தார்வாசா மற்றும் சர்தார்புரா படுகொலை வழக்குகள் மிகவும் கொடூர மானவை.

தெகல்கா ரகசியமாக மேற்கொண்ட ஒரு புலன் விசாரணையில், குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தான் சென்று, அங்குள்ள அரசு குற்றவியல் வழக்கறிஞர் கள், விசுவ இந்து பரிசத் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிரதி வாதிகளின் வழக்கறிஞர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசி கலவர வழக்குகளில் குற்றம் சாற்றப்பெற்ற இந்துக்கள் அனைவரையும் தான் எவ்வாறு விடுவிக்கச் செய்தார் என்று தன்னைப் பற்றியே புகழ்ந்து பேசியதை தெகல்கா செய்தியாளரிடமே ஒப்புக் கொண்டது ஒலிப்பதிவு செய்யப் பட்டுள்ளது. மேகசேனாவில் இருந்த 74 கலவர வழக்கு களில் இரண்டு வழக்குகளில் மட்டுமே குற்றம் சாற்றப்பெற்றவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்று பெருமையாகக் கூறியதும் பதிவாகியுள்ளது. என்றாலும், மூன்று கலவர வழக்குகளில் இதே தெகல்கா செய்தியாளரை அரசு சாட்சியாகக் குறிப் பிட்ட சிறப்பு விசாரணைக் குழு, தற்போது உணர்ச்சி மிகுந்த, தன்னையே காட்டிக் கொடுக்கும் திரிவேதியின் வாக்குமூலத்தை உண்மை என ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

விசுவ இந்து பரிசத் மற்றும் ஆர்.எஸ். எஸைச் சேர்ந்த அரசு குற்றவியல் வழக் கறிஞர்கள் மாநிலம் முழுவதிலும் எவ்வாறு திட்டமிட்டு நீதியைக் குழிதோண்டிப் புதைத் தனர் என்பதை மிக விரிவாக அர்விந்த் பாண்டியா என்ற குஜராத் அரசின் மற்றொரு சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெகல்கா செய்தியாளரிடம் கூறியுள்ளதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தெகல்கா இதனை வெளிப்படுத்திய பிறகு பாண்டியா பதவியை விட்டு விலகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை யும் மேற்கொள்ள வேண்டிய நேரத்தில், நல்ல நோக்கத்தைக் கொண்டிருக்க வேண் டிய அரசு, பல சங்பரிவார அமைப்புகளின் உறுப்பினர்களை அரசு குற்றவியல் வழக் கறிஞர்களாக நியமித்திருப்பதையும் சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.

தீவிரவாதம் மற்றும் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், ஒன்பது முஸ்லிம்களைக் கொண்ட குடும்பம் ஒன்றைக் கொன்றதான ஒரு வழக்கு விசாரணையை முன்னொரு நாளில் எதிர்கொண்ட சேடன் ஷா என்ற விசுவ இந்து பரிசத் உறுப்பினர் 17-6-2003 அன்று முதல் 3 ஆண்டு காலத்திற்கு அரசு குற்ற வியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு முன் குல்பர்கா சொசைடி படுகொலை வழக்கில் குற்றம் சாற்றப்பெற்றவர்கள் பலருக்காக அவர் வாதாடினார் என்பது அதிர்ச்சி தரத்தக்க செய்தியாகும்.

சேடன் ஷா மீது நடைபெற்ற படுகொலை வழக்கில் அவருக்காக வாதாடிய எச்.எம். துருவ் என்ற வழக்கறிஞர் குல்பர்கா சொசைடி மற்றும் நரோடா பாடியா வழக்கு களில் அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

ஏ.பி.வி.பி மற்றும் வி.இ.ப. தலைவரான பியூஷ் காந்தி 15-3-1996 அன்று பஞ்சமாலில் அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக் கப்பட்டு, 1-9-2009 வரை அவர் அப்பதவியில் நீடித்தார். ஷபானா சுஹாங் கற்பழிப்பு மற்றும் கொலை உள்ளிட்ட பல கலவர வழக்குகளை அவர் நடத்தியுள்ளார். இந்த வழக்குகளில் குற்றம் சாற்றப் பெற்றவர்களில் பலர் மிகவும் எளிதாக ஜாமீன் வாங்கிச் சென்றனர். சிறப்பு விசாரணைக் குழு தலைவர் ராகவன் குறிப்பிடுகிறார்: இவ்வாறு நியமிக்கப்பட்ட வர்களில் சிலர் ஆளுங்கட்சியுடனோ அல்லது அதற்கு ஆதரவாக உள்ள அமைப்பு களுடனோ அரசியல் தொடர்பு கொண்ட வர்கள் என்பது தெரிய வந்துள்ளது. என்றாலும் மேற்கொண்டு எதுவும் கூறுவதை அவர் தவிர்த்துவிட்டார்.

நன்றி: தெகல்கா 12-2-2011
தமிழில் த.க.பாலகிருட்டிணன்

http://viduthalai.in/new/page-2/3838.html 

Friday, February 18, 2011

குஜராத் கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

மாற்றுவது அரசின் உரிமை என்கிறது சிறப்பு விசாரணைக் குழு   - 7

கலவரங்களுக்கு ஆதரவாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு எவ்வாறு பரிசுகள் அளிக்கப்பட்டன என்பதை மட்டும் சிறப்பு விசாரணைக் குழு பதிவு செய்து இருக்கவில்லை. அதிர்ச்சி தரத்தக்க பல வழக்குகளில், நேர்மை யான காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்ததற்காக உடனடி யாக, வேறு தக்க காரணங்களின்றி தண்டிக்கப்பட்டது ஓர் எச்சரிக்கை செய் தியை அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதாக இருந்தது.  அரசு தவ றான நோக்கம் கொண்டிருந்தமைக்கு இது அடையாளம் இல்லையென்றால், வேறு எதனைத்தான் கூறமுடியும்?

1991 பேட்ச் அய்.பி.எஸ். அதிகாரி யான ராகுல் சர்மாவின் வழக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். 2002 இல் பவநகர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது, மத உணர்வுகளைத் தூண்டிவிட்ட இந்து மதத் தலைவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்தி, பாராட்டத் தக்க செயலை அவர் செய்தார். 

இந்து கலவரக் கும்பல் ஒன்று  ஒரு மசூதியை எரிக்க முயன்றபோது, தான் தடுத்து நிறுத்தியதாகவும், பல டஜன் முஸ்லிம் குழந்தைகளை அதனால் காப்பாற்ற முடிந்தது என்றும், அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்துதான் மாற்றப்பட்டதாக வும் ராகுல் சர்மா சிறப்பு விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார். அமைச்சர் ஜடாபியா தன்னை அழைத்துப் பாராட் டியபோது, காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்களை விட அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் இறந்தது முறையற்றது என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

1989 பேட்ச் அய்.பி.எஸ். அதிகாரி யான விவேக் சிறீவத்சவா குட்ச் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த போது, ஒரு முஸ்லிம் குடும்பத்தைத் தாக்கிய தற்காக பா.ஜ.க. தலைவர் ஒருவரைக் கைது செய்ததற்காக மாற்றம் செய்யப் பட்டார்.

உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களிலிருந்து தனக்கு சில தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், இந்த வழக்கின் விவ ரத்தைக் கேட்டதுடன், குற்றம் சாற்றப் பட்டவர்களுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் உள்ளனவா என்றும் கேட்கப் பட்டதாகவும், போதுமான சாட்சியங்கள் உள்ளன என்று தான் கூறியதாகவும் சிறீவத்சவா தெரிவித் தார் என்று சிறப்பு விசாரணைக் குழுவி அறிக்கை தெரிவிக்கிறது. 2002 மார்ச் கடைசி வாரத்தில் சிறீவத்சவா மாற்றப்பட்டு, அகமதாபாத் வட்ட மது விலக்கு துணை ஆணையராக நியமிக்கப் பட்டார்.

மற்றொரு  அய்.பி.எஸ். அதிகாரியான ஹிமான்சு பட், பனஸ்காந்தா மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தவர் 2002 மார்ச்சில் மாற்றப்பட்டு காந்திநகர் மாநிலப் புலனாய்வுத் துறையில் நியமிக்கப்பட்டார். கலவரக் கும்பலுக்கு உதவி செய்த ஓர் உதவி ஆய்வாளருக்கு எதிராக அவர் நடவடிக்கை மேற்கொண்டதே இதன் காரணம்.

அந்த உதவி ஆய்வாளருக்கு முக்கியமான அரசியல் தொடர்புகள் இருந்ததால், அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டது மட்டுமன்றி, அவர் முன்பிருந்த காவல் நிலையத்திலேயே பணி செய்ய அனுமதிக்கப்பட்டார். அதன் பின்பு, பட் வெளி நாடு சென்று அங்கேயே தங்கிவிட்டார். சிறப்பு விசாரணைக் குழு வினரால் அவரை விசாரிக்க முடிய வில்லை.

கலவரங்களின்போது குச்-பூஜ் எல்லைப் பகுதிகளில் உதவி காவல் துறைத் தலைவராக இருந்த சதீஷ் சந்திர வர்மா, கலவரங்களில் ஈடுபட்டு இரண்டு முஸ்லிம்களைக் கொன்றதற்காக சங்கர் சவுத்திரி என்னும் பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினரைக் கைது செய்ய உத்தர விட்டார். உடனடியாக அவர் மாற்றப்பட்டு, ஜுனாகட் சிறப்பு ரிசர்வ் காவல் துறை பயிற்சி நிலைய முதல்வராக நியமிக்கப் பட்டார்.

இந்த அதிகாரிகளில் எவர் ஒருவரும் இம் மாறுதல்களால் தாங்கள் பாதிக்கப் படவில்லை என்று தெரிவித்ததாக விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.  மாறுதல் என்பது அரசின் உரிமை என்று அவர்கள் அனை வருமே கூறினார்களாம். இந்த மாற் றங்கள்  வழக்கத்திற்கு மாறானவையாக சந்தேகத்திற்கிடமானவை யாக இருந்தன என்று குறிப்பிட்டதோடு மல்ஹோத்ரா நிறுத்திக் கொண்டார். ராகவனும் அவற்றின் முரண்பட்ட, கேள்விக்குரிய தன்மையைப் பற்றி ஒப்புக் கொண்டுள் ளார். ஆனால், அவர்கள் இருவரில் எவர் ஒருவரும் கலவரங்களில் மாநில அரசுக் குப் பங்கு இருந்ததா என்பதைக் கண் டறிய மேற்கொண்டு விசாரணை நடத் தும் நியாயமான முடிவுக்கு வரவில்லை.

கலவரங்களுக்கு உதவி செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு செல் வாக்கும், ஆதாயமும் உள்ள பதவிகள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்ளும் சிறப்பு விசாரணைக் குழு இதன்மீது மேலும் விசாரணை நடத்துவது என்ற தர்க்க ரீதியான முடிவை மேற்கொள்ள மட்டும் தவறி விட்டது.

தங்கள் கடமைகளைச் செய்த நியாயமான காவல்துறை அதிகாரி களின் இறக்கைகள், மோடி அரசால் ஒடிக்கப்பட்டன. அதே நேரத்தில், தாங்கள் அணிந்திருந்த சீருடையையும், மக்கள் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் கேவலப்படுத்திய தங்களது நியாயமான கடமைகளைச் செய்யத்  தவறிய அதிகாரிகளுக்கு பாராட்டிப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அகமதாபாத் இரண்டாம் பகுதியில் இணை காவல் துறை ஆணையராக இருந்த எம்.கே.டாண்டனின் பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரங் களுக்குப் பிறகு அவர் சூரத் வட்ட காவல்துறைத் தலைவராக நியமிக்கப் பட்டார். 2005 ஜூலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவராக மாநிலக் காவல்துறை தலைமை அலுவ லகத்தில் நியமிக்கப்பட்டார். டாண்டன் மாநிலம் முழுவதும் அதிகார எல்லை கொண்ட இந்தப் பதவியிலிருந்துதான் ஓய்வு பெற்றார்.

மிகவும் பயங்கரமான படுகொலைகள் நடந்து கொண்டிருந்த குல்பர்க் சொசைடி, நரோடா காவுன், நரோடா பாடியா ஆகிய இடங்களிலிருந்து பாது காப்பு கேட்டு வந்த அவசர அழைப்புகள் பற்றி டாண்டன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்தக் கலவர இடங்களுக்குச் செல்லாமல், அகமதாபாத் நகரின் வேறு பகுதிகளில் போலியான வழக்குகளைப் பதிவு செய்துவிட்டு தானும், தனது அலுவலர்களும் அந்த இடங்களுக்குச் சென்று இருந்ததை நியாயப்படுத்தினார். நடோடா காவுன், நரோடா பாடியா பகுதிகளில் படுகொலைகளை ஏற்பாடு செய்து நடத்திய ஜெய்தீப் படேல் மற்றும் மாயாபென் கோட்னானி ஆகியோருடன் டாண்டன் கலவரங்களின் போது தொலைபேசியில் தொடர்பு கொண்டி ருந்தார் என்பதையும் சிறப்பு விசா ரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.

டாண்டனின் உதவி அதிகாரியான பி.பி.கோண்டியா என்பவர் அப்போது நான்காவது வட்ட துணை ஆணைய ராக இருந்தார். அவர் இப்போது அதி காரம் மிகுந்த பதவியான மாநில ரகசியப் பிரிவு காவல்துறைத் தலைவர் பதவியில் இருக்கிறார். மல்ஹோத்ரா கூறுகிறார்: நரோடா பாடியாவில் கலவர நிலை மிகவும் மோசமாகவும், கட்டுக்குள் அடங்காமலும் இருந்த பிற்பகல் 2.20 மணி அளவில் கோண்டியா பாதிக்கப்பட்டவர்களின் தொலைப்பேசி அழைப்புகளை ஏற்று கலவரப் பகுதிகளுக்குச் செல்லாமல்,  தனது தலைமையிடத்தை விட்டு வேறு இடத்திற்கு ஓடிப்போய் விட்டார் என்றே கூறவேண்டும்.

இந்த காவல்துறை அதிகாரிகள் மட்டுமன்றி, களங்கம் நிறைந்த செயல் களைச் செய்த இதர அதிகாரிகளும் கூட அரசின் உயர்ந்த  ஆதரவைப் பெற்றிருந்தனர்.அவர்களுள் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி.சுப்பாராவ், முன்னாள் உள்துறை தலைமைச் செயலர் அசோன் நாராயண், மோடியின் முன்னாள் தனிச் செயலாளராக இருந்த பி.கே. மிஸ்ரா, அகமதாபாத் மாநகரக் காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே, அப்போது வடோதரா வட்ட காவல் துறைத் தலைவராக இருந்த தீபக் ஸ்வரூப்,  முன்னாள் உள்துறைச் செய லாளர் நித்யானந்தம், தற்போதைய வடோதரா மாநகரக் காவல் துறை ஆணையர், என்கவுண்டர் கொலை களை ஏற்பாடு செய்ததற்காக தற்போது சிறையில் இருக்கும் டி.ஜி.வன்ஜரா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

பெஸ்ட் பேக்கரி வழக்கு விசாரணை நடந்தபோது அப்போதைய வடோதரா மாநகர இணை மாநகரக் காவல்துறை ஆணையராக இருந்த கே.குமாரசாமி, வடோதரா மாநகர உதவி ஆணையராக இருந்த ராம்ஜிபாய் பார்கி ஆகியோர் நீதியை வளைக்க முயற்சி செய்ததற்காக பம்பாய் பெருநகர கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதியால் கடுமையாகக் குற்றம் சாற்றப்பெற்று கண்டனமும் செய்யப்பட்டனர். இவ்வாறு முஸ்லிம் மக்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு, வெறுப்பு காட்டப்பட்டு கொடுமைகள் நடத்தப் பட்டமைக்கு தேவைக்கு அதிகமான இத்தகைய சாட்சிகளைப் பற்றி  சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையில் பதிவு செய்து  இருந்தபோதும், மாறுதல் களும், நியமனங்களும் அரசின் ஏகபோக உரிமை என்று சாக்கு கூறி முடித்துக் கொண்டது.
நன்றி: தெகல்கா, 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
http://viduthalai.in/new/page-2/3724.html

Thursday, February 17, 2011

குஜராத் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச்சர்கள்

அதன் நோக்கம் என்ன?

தீவிரவாதத் தாக்குதல் அல்லது மதக் கலவரங்கள் போன்ற நெருக்கடி நேரங்களில், காவல்துறை கட்டுப்பாட்டு அறை ஒரு போர் அலுவலகம் (War Office) போன்று இருப்பதாகும். கலவரப் பகுதிகளுக்குக் காவல்துறையினரை அனுப்புவது, வெவ்வேறு இடங்களில் உள்ள காவல்துறைக் குழுக்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வைப்பது, சம்பவ இடங்களிலிருந்து அறிக்கை களைப் பெறுவது ஆகிய பணிகளை காவல்துறை செய்வது இந்தக் கட்டுப் பாட்டு அறைகளில்தான்.

2002 பிப்ரவரி 28 ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் கலவரங்கள் வெடித்தவுடன், தனது இரு அமைச்சர்களையும் அவர்களது அலுவலர்களையும் காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் மோடி இருக் கச் செய்த செயல் சட்டத்தினை மீறி யதும், மிகுந்த கருத்து வேறுபாட்டுக்கு இடம் கொடுப்பதுமாகும்.

அகமதாபாத்தின் நரோடா காவுன், நரோடா பாடியா மற்றும் குல்பர்கா சொசைட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி அளவில் தொடங்கிய கலவரங் கள் இரவு எட்டு மணி வரை தொடர்ந்து நடைபெற்றன. பாதிக்கப்பட்டவர்கள் தங்களைப் பாதுகாக்கக் கோரி காவல் துறையினரைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டபோதும், காவல் துறை அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது. இத்தகைய சூழ்நிலைகளில், காவல்துறைக் கட்டுப் பாட்டு அறையில் இரண்டு அமைச்சர் கள் இருந்தது பெருத்த சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது.

காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச்சர்கள்

சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையின் 30 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது: புலனாய்வுத் துறை யின் துணை ஆணையராக இருந்த சஞ்சீவ் பட் 28-2-2002 காலை முதல மைச்சர் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில், காவல்துறைத் தலைவர் மற்றும் புலனாய்வுத் துறை கூடுதல் தலைவர் ரெய்கருடன் (ரெய்கர் தனது விடுப்பை ரத்து செய்துவிட்டு பணிக்கு 28 ஆம் தேதி காலையில்  திரும்பிவிட்டார்) தானும் கலந்து கொண்டதாகக் கூறி னார்.

கூட்டம் முடிந்தபிறகு போலீஸ் பவனின் இரண்டாவது மாடியில் உள்ள தனது அலுவலகத்திற்கு காலை 11 மணி அளவில் திரும்பிய சிறிது நேரத்திற்குப் பின், அதே கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த காவல்துறைத் தலைவரின் அலுவலகத்திற்கு அவரைச் சந்திக்கச் சென்றதாகவும், முதல்வர் கூட்டத்தின் முடிவில் அறிவுறுத்தப்பட்டபடி குஜராத் மாநில அமைச்சர்கள்  அசோக் பட் மற்றும் ஜடேஜா இருவரும் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்து அங்கு உட்கார்ந் திருந்ததைக் கண்டதாகவும் சஞ்சீவ் பட் கூறினார். புலனாய்வுத் துறைத் தலைவர் ராய்கரும், சட்டம் - ஒழுங்கு பிரிவின் தலைவர் மணிராமும் அப்போது அங்கி ருந்ததாகவும் அவர் கூறினார்.

காவல் துறைத் தலைவருடன் பேசிவிட்டு, தேநீர் அருந்தி விட்டு பட் தன் அலுவலகத் திற்குத் திரும்பி விட்டார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சில ஆவணங் களைப் பெறுவதற்காக சஞ்சீவ் பட் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற போது, அமைச்சர் ஜடேஜாவும் அவரது அலுவலர் களும் கட்டுப்பாட்டு அறையில் இருந் தனர்.

இது ஒரு சங்கடமான கேள்விக்கு வழி வகுத்தது. மேற்கண்ட சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் உண்மைதான் என்று கண்டறிந்த விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா, காவல்துறைக் கட்டுப் பாட்டு அறையில் அமைச்சர் ஜடேஜா இருந்ததை மெய்ப்பிப்பதற்கு அவரது சாட்சியத்தைப் பயன் படுத்திக் கொண் டார். 28-2-2002 காலை முதல் அமைச் சர் கூட்டிய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டார் என்று அவர் கூறிய தையும் மல்ஹோத்ரா மறுக்கவில்லை.

அப்படி இருக்கும்போது, 27-2-2002 அன்று முதல் அமைச்சர் கூட்டிய கூட்டத் தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதாகக் கூறியது எவ்வாறு ஏற்றுக் கொள்ளப் படாமல் மறுக்கப்பட்டது. 28 ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு பட் பணியில் மூத்தவர் என்றால், 27 ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளுவதில் மட்டும் அவர் எப்படி பணியில் இளையவர் என்று கூறப்பட்டார்.

அவரது மூத்த அதிகாரி பணிக்குத் திரும்பிய பிறகும், 28 ஆம் தேதி கூட்டத் தில் பட் கலந்து கொண்டதை வைத்துப் பார்க்கும் போது, 27 ஆம் தேதி தனது மேலதிகாரி ராய்கர் விடுப்பில் இருந்த தால், அங்கிருந்த அடுத்த மூத்த அதி காரியான  தான் முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதாக பட் கூறியது அதிக நம்பிக்கைக்குரியதாகவே காணப்படு கிறது.

அதிக குழப்பம்!

இதில் இன்னமும் அதிக குழப்பம் விளைவித்தது என்ன வென்றால், காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர் இருந்ததையே உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளரான அசோக் நாராயண் மறுத்ததுதான். சிறப்பு விசாரணைக் குழுவிடம் காவல் துறைத் தலைவர் சக்ரவர்த்தி கூறிய தாவது: 

28-2-2002 அன்று அமைச்சர் ஜடேஜா சில தகவல்களைப் பெறுவதற் காக மாநிலக் கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் இருப்பார் என்று  என்னிடம் அசோக் நாராயண் கூறினார்.

அது போலவே அமைச்சர் அசோக் பட் அகமதாபாத் மாநகரக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இருப்பார் என்றும் அசோக் நாராயண் என்னிடம் கூறினார்.

ஜடேஜா நகர வீட்டு வசதி அமைச்ச ராகவும், அசோக் பட் சுகாதார அமைச்ச ராகவும் அச்சமயத்தில் இருந்தனர்.  காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருப்பதற்கு அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, சக்ரவர்த் திக்கு இது போன்ற அறிவுரைகள் வழங் கியதையே அசோக் நாராயண் மறுத் தார்.

அகமதாபாத்  காவல்துறை ஆணை யராக இருந்த பி.சி.பாண்டேயும் மாநக ரக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறை யில் அசோக் பட் தொடர்ந்து இருந்ததை மறுத்தார். அமைச்சர் 10 அல்லது 15 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்தார் என்று அவர் கூறினார்.

ஆனால் அமைச் சர் ஜடேஜாவைக் கேள்வி கேட்டபோது,  மோடியின் உள்துறை உதவி அமைச்ச ராக இருந்த ஜடாபியாதான் தன்னை காவல் துறைக் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும்படி கூறியதாகத் தெரிவித்தார்.

(ஜடாபியா தற்போது மோடியின்  ஆதரவை இழந்துவிட்டு, தனியாக ஒரு கட்சி துவங்கி உள்ளார். அதனால் அனைத்து குற்றத்தையும் அவர் மீது சுமத்துவது மோடிக்கும், பா.ஜ.கட்சிக்கும் எளிதாகப் போய்விட்டது.)

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, குற்றத்தை மற்றவர் மீது தள்ளிவிடும் முயற்சியில் சக்ரவர்த்தியும், அசோக் நாராயணும், பாண்டேயும் பொய்களைக் கூறியும், ஒருவர் கூறுவதை மற்றவர் மறுத்தும் கூறியது தெளிவாகத் தெரிகிறது.

காவல்துறை அதிகாரியின் எதிர்ப்பு

நடந்தவைகளைக் கூறுவதில் சஞ்சீவ் பட் ஒருவர் மட்டும்தான் தொடர்ந்து ஒரே மாதிரி கூறி வந்துள்ளார் என்று தோன் றுகிறது. அமைச்சர்கள் கட்டுப்பாட்டு அறைகளில் இருப்பதைப் பற்றிய தனது ஆட்சேபத்தை காவல் துறைத் தலைவர் சக்ரவர்த்தியிடம் தான் பதிவு செய்த தாகவும், அவரது அனுமதியுடன் அமைச் சரையும் அவரது அலுவலர்களையும் அதே கட்டடத்தில் இருந்த காலி அறை ஒன்றுக்கு தான் மாற்றியதாகவும் விசா ரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அன்றும் அதற்கடுத்த இரண்டு மூன்று நாட்களில் ஜடேஜாவின் அலுவலர்கள் சிலர் மாநில புலனாய்வுத் துறையிட மிருந்து சில விவரங்களைக் கேட்டது பற்றி தனக்கு நினைவிருப்பதாகவும் பட் கூறினார். (இவ்வாறு பட் கூறியதை சக்ரவர்த்தி மறுக்கவில்லை).

மிகவும் முக்கியமான கேள்வி என்ன வென்றால்,  எதற்காக அமைச்சர்களும், அவர்களின் அரசியல் அலுவலர்களும், எங்கே எவ்வளவு காவல்துறையினர் கலவரத்துக்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற உணர்ச்சி மிகுந்த தகவல்களை ஏன் கேட்டறிந்தனர் என்பதுதான்.

அங்கங்கே இருக்கும் கலவரக்காரர் களுக்கு இந்த தகவல்கள் அனுப்பப்பட் டனவா? எப்படியிருந்தாலும், காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் நகர்ப்புற வீட்டு வசதித்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் கூறுகிறார்:

2002 பிப்ரவரி 28 ஆம் தேதியிலிருந்து ஒரு சில நாட்கள் இந்த இரண்டு அமைச்சர்களும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செயல்பட்டிருக்கிறார்கள் என் பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக் கப்பட்டுள்ளது என்றாலும், காவல் துறையின் பணிகளில் அவர்கள் குறுக் கிட்டனரா என்பதைச் சுட்டிக்காட்டும் தகவல்கள் ஏதும் இல்லை.

தான் கண்டுபிடித்தவைகளைக் கொண்டு மேலும் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு எவ்வாறு தவறிவிட்டது என்பதைத் திரும்பத் திரும்பக் கூறுவதில் பயன் ஏதுமில்லை. அதற்கு மாறாக, ஒரு மாறுபட்ட கேள்வியைக் கேட்க வேண்டிய நேரமிது.  நாட்டின் ஒரு மோசமான மதக் கலவரப் படுகொலைகளைச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறியும் வழி இதுதானா?

கலவரங் களில் ஏதேனும் ஒரு வழியில் தொடர்பு கொண்டிருந்த காவல்துறை அலுவலர் களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதன் மூலமாக மட்டுமே, அரசே முன்னின்று நடத்திய வன்முறைப் படு கொலைகளை பற்றிய ஒரு மாபெரும் சதித் திட்டத்தை வெளிக் கொண்டு வர முடியுமா?

நன்றி: தெகல்கா, 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

weather counter Site Meter