சீர்காழியில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் கீழ்க்கண்ட முதல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும் ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ - எச் பிரிவில் திட்டவட்டமாக வலியுறுத்தப் பட்டுள்ள நிலையில், திராவிடர் கழகம் தமது கொள்கையின் அடிப்படையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்கையில், அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று இந்து முன்னணி மற்றும் சங்பரிவார்க் கும்பல் காவல்துறையிடம் புகார் கொடுப்பதும், அதனை ஆழ்ந்து நோக்காமல் நுனிப்புல் மேயும் தன்மையில் காவல்துறையினர் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களை அழைத்து விசாரிப்பதும், திட்டமிட்ட வகையில் ஏற்கெனவே முறைப்படி ஏற்பாடு செய்துள்ள கழகத்தின் நிகழ்ச்சி களுக்கு இடையூறு செய்து வருவதும் சட்டப்படியும், நியாயப்படியும் முறையானது அல்ல என்பதை இம் மாநாடு தெரிவித்துக் கொள்வதுடன், முதலமைச்சர் அவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தி, உரிய வழிகாட்டுதல்களைக் காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. இத்தீர்மானத்தின் அவசியத்தை அதிகம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. நம் நாட்டு ஊடகங்களும் குறிப்பாக தொலைக்காட்சிகள் காலைமுதல் இரவு வரை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மத்தியில் மூட நஞ்சை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே பழக்கவழக்கம் என்ற பெயரால் மூட நம்பிக்கை என்னும் பொல்லாத நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் அறிவின்மீது பலம் கொண்டு சம்மட்டி அடிகொடுப்பது போல, நம் நாட்டுத் தொலைக்காட்சிகள் சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்து வருகின்றன.
விஞ்ஞானம் தந்த கருவிகளைப் பயன்படுத்தி, அஞ்ஞானக் கருத்துகளை மக்கள் மூளையின் மீது திணித்து வருகின்றனர். தீர்மானத்தில் சுட்டிக்காட்டி யுள்ளபடி மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை - சீர்திருத்த உணர்வைப் பரப்புவது இந்த ஊடகங்களின் அவசியமான கடமையாகும். அப்படிச் செயல்படாத இந்த ஊடகங்கள் கண்டிப்பாக அறிவியல் மனப்பான்மையை, வளர்க்கும், பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிடவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவேண்டிய கடமை கூட மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
இந்த அடிப்படைக் கடமையினைச் செய்யத் தவறிய ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், கடமை உணர்வோடு சீர்திருத்தப் பிரச்சாரத்தைச் செய்துவரும் திராவிடர் கழகத்தின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டு வருவது வெட்கக்கேடான தாகும். தங்களால் அந்தக் கடமையினைச் செய்யத் தவறும் பட்சத்தில் சீர்திருத்தக் கடமையினைச் செய்துவரும் கழகத்தின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் எதிராகச் செயல்படாமல் இருக்கவேண்டாமா?
மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வுகளை ஏற்படுத்தும் செயல் திட்டங்களை வகுத்துச் செயல்பட கடமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிமகனுக்குமே அந்தக் கடமையை அடிப்படையானதாக இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும்போது, அரசிற்கு இதில் கூடுதல் கடமை உணர்வு இருக்கவில்லையா?
சீர்திருத்தப் பணிகளை அடிப்படைக் கடமையாகச் செய்துவரும் அமைப்புகளுக்கு ஊக்கம் தரவேண்டியதும், பாதுகாப்பு கொடுக்கவேண்டியதும் அரசுகளின் கடமை யாகும்.
மூட நம்பிக்கைகளுள் மிகவும் மோசமான மூத்த - முடைநாற்றமடிக்கும் மூட நம்பிக்கை கடவுள் நம்பிக்கையே!
அதிலும் இந்து மதம் கற்பித்துள்ள கடவுள்கள் ஆபாசமும், அருவருப்பும் நிறைந்தவை. அழுக்கில் பிறந்த கடவுள், குதிரைக்குப் பிறந்த கடவுள் அவதாரம், விபச்சாரம் செய்யும் கடவுள், கொலை செய்யும் கடவுள், சண்டை போடும் கடவுள், மகளையே மனைவியாகக் கொண்ட கடவுள் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
இந்த ஆபாச, அறிவுக்குப் பொருத்தமற்ற கடவுளை நம்பி அறிவையும், தன்னம்பிக்கையையும், பொருளையும், பொழுதையும் பலி கொடுக்கும் மக்களைத் திருத்தும் பணியிலே திராவிடர் கழகம் ஈடுபடும்பொழுது, ஆதா ரங்களின் அடிப்படையில் இந்தக் கடவுள்களின் தன்மை கள்பற்றி அச்சிட்டுக் கொடுக்கும்பொழுது, மூட மக்களின் மனது புண்படுகிறது என்று கூறி, காவல்துறையினர் கழகப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிப்பது உகந்தது அல்ல.
அதுவும் மதவெறியைத் தூண்டும் இந்துத்துவா அமைப்புகளின் குரலுக்குச் செவிமடுத்து, துண்டு அறிக்கைகளை வழங்கக் கூடாது என்று தடுக்க முயற்சிப்பது சட்ட விரோதமும், கருத்துரிமையைத் தடுக்கும் தவறான அணுகுமுறையுமாகும்.
இதில் வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாக சில ஊர்களில் திராவிடர் கழகத்தினர்மீது வழக்குகளைப் பதிவு செய்தும் உள்ளனர்.
இராமனையும், சீதையையும், இலட்சுமணனையும் பகிரங்கமாகக் கொளுத்தி இராவண லீலாவை நடத்தி தமிழின மக்களின் தன்மான உணர்வை அன்னை மணி யம்மையார் கம்பீரமாக வெளிப்படுத்திக் காட்டினார்களே, தமிழர்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களே, அந்த நிகழ்ச்சிகூட இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக அரசு தொடர்ந்த வழக்கில் கழகம் வெற்றி பெற்றதே - வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதே - இந்த உண்மைகளையெல்லாம் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தெரிந்து வைத்திருந்தால் வழக்குப் பதிவு செய்வார்களா?
இந்துக்களைப்பற்றி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தெரிவித்த கருத்தின்மீதுகூட வழக்குப் பதிவு செய்யப் பட்டதுண்டு - பிறகு அது விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதையும் இந்தத் தருணத்தில் நினைவூட்டுகிறோம்.
Search This Blog
Showing posts with label திராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம். Show all posts
Showing posts with label திராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம். Show all posts
Wednesday, September 29, 2010
Tuesday, September 28, 2010
சீர்காழி கூறும் சிந்திக்கத்தக்க தீர்மானம்
1992 ஆம் ஆண்டு முதல் இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு பிரச்சினை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ராமஜென்மபூமி என்ற பெயராலே இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை இடித்த பிரச்சினையாகும்.
சீர்காழியில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் இதுகுறித்துத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமன் ஜென்ம பூமி என்று சொல்லி ஏற்கெனவேயிருந்த 450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கு 18 ஆண்டு காலமாக நிலுவையில் இருப்பதும், குற்றவாளிகள் பெரிய பதவிகளில் அலங்கரிப்பதும் நாட்டின் ஒட்டுமொத்தமான நிருவாகம், நீதி, மதச் சார்பின்மை இவற்றின் மீதான நம்பிக்கையை வெகு மக்கள் இழக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கினை விரைந்து முடித்து, உண்மையான குற்றவாளிகள் எந்தவகையிலும் தப்பிக்க முடியாத அளவுக்கு வழக்கினை செறிவாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறிக்கொண்டு மத அமைப்புகள் உரிமை கோரி போராடுவதும், வழக்குத் தொடுப்பதும் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கக் கூடியது என்பதையும், அதன்படி பார்த்தால், பெரும்பாலான இந்துக் கோயில்கள் ஒரு காலத்தில் புத்தர் விகார்களாக இருந்து, பிற்காலத்தில் வன்முறை யாலும், மன்னர்களின் அதிகாரத்தாலும் இந்துக் கோயில்களாக திட்டமிட்ட வகையில் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு அசைக்க முடியாத அனேக ஆதாரங்கள் உள்ளன என்பதையும் இம்மாநாடு வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு சுட்டிக் காட்டுகிறது. 1947 ஆகஸ்ட் 15 நாளை மய்யப் புள்ளியாக வைத்து, அதற்குமுன் இருந்த நிலை தொடரப்படவேண்டும் என்று அரசு ஏற்கெனவே முடிவு செய்த கருத்து நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.
மக்கள் பிரச்சினைகள் ஏராளம் உள்ள 110 கோடி மக்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில், மதப் பிரச்சினைகள், கோயில் பிரச்சினைகளை முன்னிறுத்தி, மக்களின் கவனத்தை ஒரு பக்கம் திருப்புவது, அரசின் கவனத்தை இன்னொரு பக்கம் திருப்புவது, அரசுக்குச் செலவினங்களை ஏற்படுத்துவது, சட்ட ஒழுங்குப் பிரச் சினையைக் கிளப்புவது என்பதெல்லாம் தேவையானவை தானா?
கடவுள், மதம் என்பவை எல்லாம் தனிப்பட்ட மனிதனின் பிரச்சினையாகக் கருதி வீட்டுச் சுவருக்குள் வைத்துக் கொள்ளாமல் வீதிக்குக் கொண்டுவரும்போதுதான் தேவையில்லாத சிக்கல்களும், பிரச்சினைகளும் வெடித்துக் கிளம்புகின்றன.
பாபர் மசூதியை இடிப்பதற்குமுன், எல்.கே. அத்வானி குஜராத் மாநிலம் சோமநாதபுரத்தில் உள்ள சோமநாதர் கோயிலிலிருந்து ரத யாத்திரை ஒன்றை நடத்தினார்; அது ரத்த யாத்திரையாக உருவெடுத்து நாடெங்கும் கலவரத் தீயை ஏற்படுத்தி, ஏராளமான மக்களின் உயிர் பலியானது.
ஒரு செம்பு நிறைய ரத்தத்தைச் சேகரித்து, அத் வானிக்குத் திலகமிட்ட பாசிச நிகழ்வுகளும் நடை பெற்றதுண்டு.
தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில்தான் அதன் அடிச்சுவடு தெரியாமல் அமைதித் தென்றல் வீசியது.
வட மாநிலங்களில் அமளிதுமளி ஏற்பட்டது. பிகாரில் ரத யாத்திரை தடை செய்யப்பட்டது.
மத்தியில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் தலைமையிலான ஆட்சிக்கு வெளியிலிருந்து கொடுத்து வந்த ஆதரவை பா.ஜ.க. விலக்கிக் கொண்டது. (மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்களை வி.பி. சிங் அரசு அளித்ததுதான் உண்மையான காரணமாகும்).
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சோமநாதபுரத்தில் அத்வானி ரத யாத்திரை தொடங்கிய அந்த செப்டம்பர் 25 ஆம் தேதியன்று, அத்வானி சோமநாதபுரத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயத்தில் வழிபாடு செய்வது வழக்கமாகும்.
இவ்வாண்டும் அவ்வாறே சென்றுள்ளார். பா.ஜ.க.வி லிருந்து விலகியவரும் - பாபர் மசூதி இடிப்புக் குற்றப் பத்திரிகையில் உள்ளவருமான செல்வி உமாபாரதியும் அவருடன் சோமநாதபுரம் சென்றுள்ளார். இது கூடுதல் முக்கியத்துவத்தை அளித்துள்ளது. பல்வேறு விமர் சனங்களும் எழுந்துள்ளன.
பழைய புண்ணைக் கிளற வேண்டாம் என்று காவல் துறையினரை பத்திரிகைத் தொடர்பாளர் மணீஷ்திவாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கக் கூடிய ஒரு காலகட்டத்தில், அத்வானி சோமநாதபுரத்திற்குச் சென்றுள்ளது - சங் பரிவார்க் கூட்டத்தின் மனோபாவத் தினை வெளிப்படுத்தக் கூடியதாகும். இந்தத் தீர்ப்பு எப்படியிருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், மக்கள் பிரச்சினையைவிட கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வுக்கும், அதன் பரிவாரங்களுக்கும் முக்கியமானதாக உள்ளது.
இந்த அமைப்புகளால் மக்கள் நலனுக்குத் தேவையான உகந்த எந்த நன்மைகள்பற்றியும் எண்ணிப்பார்க்கப்படவும் முடியாது - அந்த வகையில் செயல்படவும் முடியாது என்பதை வெகுமக்கள் உணர்வார்களாக!
Subscribe to:
Posts (Atom)
