Search This Blog
Showing posts with label திராவிடர் கழக மண்டல மாநாடு. Show all posts
Showing posts with label திராவிடர் கழக மண்டல மாநாடு. Show all posts
Friday, October 15, 2010
Saturday, October 9, 2010
கடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை
சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
அபிதான சிந்தாமணியில் இருக்கிறது-விநாயகர் சதுர்த்தி விரதம், விநாயகர் புராணம் இவை எல்லாவற்றையும் எழுதிக்கொண்டு வந்தார்கள்.
1751 பக்கம் இந்த நூல்-1910இல் போடப்பட்ட நூல் அபிதான சிந்தாமணி. இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனவும், வக்கிரகுண்டர் விநாயகர் எனவும், கலாதரர் எனவும், கணேசர் எனவும், பாலச்சந்திரர் எனவும், கபில விநாயகர் எனவும், கசாலகர் எனவும், தூமதேபி எனவும், அகோத்கடர் எனவும், உடும்பி விநாயகர் எனவும், வல்லபை கணேசர் எனவும் பெயர்.
விநாயகருக்கு எத்தனை மனைவிகள்?
விநாயகருக்கு சித்தி புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரியாகிய மோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசனி, காந்தை, சாரு ஹாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தவர் என்று எழுதி வைத்திருக்கின்றான். விநாயருக்கு ஒரு பெண்டாட்டி, இரண்டு பெண்டாட்டி இல்லை. பதினாறு பெண் டாட்டிகளை கணக்குப் போட்டிருக்கின்றான். இதில் சித்தி ஒரு மனைவி, புத்தி ஒரு மனைவி, புத்தியும் அவருக்கு வெளியிலிருந்துதான் வருகிறது. ஏனென்றால் களிமண் ஆனதினாலே வெளியி லிருந்துதான் புத்தி வரும்.
சித்தி, புத்தி விநாயகரே என்று நம்மாள் பொருள் தெரியாமலே பாடிக்கொண்டிருக்கின்றான். ஏனென்றால் இன்னொரு மொழியிலிருந்து வந்ததினாலே இவனுக்கு என்னவென்றே தெரியாது. வல்லபை கணபதி வல்லபை கணபதி என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். யாருக்காவது சந்தேகம் இருந்தால் அங்கே போய் பார்க்க வேண்டும். தாய்மார்களை வைத்துக்கொண்டு சொல்வது எனக்கே கொஞ்சம் சங்கடமான நிலை. வல்லபை என்பது விநாயகருடைய மனைவி. சுப்பிரமணியன் விநாயகருடைய தம்பி.
சுப்பிரமணியம்-சூரபத்மனோடு சண்டைக்குப் போகின்றார். சூரபத்மன்-அசுரன். அசுரன் என்றால் ரொம்ப பலமானவன். அவனுக்கு வீரர்கள் அதிகம். ஆனால் சுப்பிரமணியனுக்கு படை வீரர்கள் இல்லை. தனக்குப் படை வீரர்கள் வேண்டும் என்று தம்பி சுப்பிரமணியம் அண்ணனிடம்-விநாய கனிடம் கேட்கின்றார்.
ஆயிரக்கணக்கான வீரர்கள் உற்பத்தி
உடனே கணேசர் என்ன பண்ணுகிறார்? உனக்கு இராணுவம் வேண்டும்-சைனியம் வேண்டும். அவ்வளவு தானே என்று சொல்லி, தனது மனைவி வல்லபை மூலம் ஆயிரக்கணக்கான வீரர்களை உற்பத்தி பண்ணி அனுப்புகிறார். சைனியம் வந்து கொண்டேயிருக்கிறது. ஃபேக்டரியில் அச்சடித்து வெளியே வந்து கொட்டுகிற மாதிரியே இருக்கிறது. ஒரு கட்டத்தில் போதும், போதும் என்று சுப்பிரமணியரே நினைத்தார்.
கார்க் அடைக்கிற மாதிரி...
உடனே சைனியத்தை நிறுத்துவதற்காக விநாயகர் என்ன செய்தார்? துதிக்கையை வைத்து கார்க் மாதிரி அடைத்துவிட்டார். இதற்கு மேல் சொன்னால் எனது தகுதிக்கு குறைச்சல். உண்மையிலேயே ரொம்ப அசிங்கமான விசயம் அது. நான் இதை விட ரொம்ப நாசூக்காக சொல்ல முடியாது. இதெல்லாம் கற்பனை என்று நினைக்காதீர்கள். சிதம்பரம் ரொம்ப பக்கத்திலேயே இருக்கிறது போய் பார்க்கலாம்.
தீபாராதனை எதற்கு?
நாங்கள் எல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுது திராவிடர் கழக தலைமை நிலையம் சிதம்பரத்தில் இருக்கும். மறைந்த கு.கிருஷ்ணசாமி அவர்கள்தான் தலைவர். தலைமை அலுவலகத்திற்குப் போய் விட்டு வருவோம். அங்கு பக்கத்தில்தான் வல்லபை கணபதி கோயில் இருக்கிறது. ரொம்ப பேர் வெளிச்சம் போதவில்லை என்று கிட்டக்க போய் பார்ப்பான். அய்யர் தீபாராதனை காட்டுவதற்கே வெளிச்சத்தில் பார்ப்பதற்குத்தான். அதே போல தருமபுரிக்கு பக்கத்தில் மத்தூர் என்ற ஊர் இருக்கிறது. அங்கேயும் வல்லபை கணபதி கோயில் இருக்கிறது. அங்கே இருக்கிற ஒருவர் கோவிலுக்குள் சென்று வல்லபை கணபதி படத்தையே எடுத்து அனுப்பிவிட்டார். இந்த அசிங்கத்தை அசிங்கம் என்று சொன்னால் எங்கள் மீது வழக்கு போடுவேன் என்று சொல்லுகின்றான்.
உடைந்த எலும்பை உடைந்த எலும்பாக...
எக்ஸ்ரே கருவிமீது யாராவது வழக்குப் போடுவார்களா? எக்ஸ்ரே கருவி உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகத்தான் காட்டும்.
நீதிமன்றங்களில் இந்த விசயங்களைக் கொண்டு சென்றால்தான் வெளிச்சத்திற்கு வரும். நீதிபதிக்கும் தெரியவரும். ஏனென்றால் அங்கேயும் ரொம்பபேர் பிள்ளையார் படம் மாட்டியிருக்கின்றார்கள்.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
ஆகவேதான் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார் என்றால் யாரையும் வைவதற்கு அல்ல. யாரையும் கோபித்துக் கொள் வதற்கு அல்ல. வசைபாடுவதற்கு அல்ல.
மனிதன் மூடத்தனத்தில் இருந்தபொழுது பிறந்த கருத்து-கடவுள் மூடநம்பிக்கை. சீர்காழியில் அய்யா அவர்களை அழைத்தார்கள். அய்யா அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொன்னார். கட வுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியவன். கடவுளை வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்று.
ஏனய்யா, இவ்வளவு அசிங்கமான கடவுளை இன்னமும் இவன் கும்பிட்டுக் கொண்டிருக்கின்றான். இவன் காட்டுமிராண்டி காலத்து அறிவை அந்த மனப்பான்மையை வைத்திருக்கின்றான் என்ப தற்காக சொன்னார். யாரையும் வைவதற்கு அல்ல.
பெரியாருக்கு எதிர்ப்பு காட்ட....
அய்யா வருகிறார் என்றவுடன் இங்கேயிருக்கிற புத்திசாலிகள் என்ன செய்தார்கள்? பெரியாருக்கு எதிர்ப்புக் காட்டுவதற்காக இங்குள்ள கடைவீதியில் பக்கத்தில் ஒரு பெரிய போர்டை எழுதி வைத்து விட்டார்கள்.
ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. என்ன எழுதி வைத்தார்கள் தெரியுமா?
கடவுளைக் கற்பித்தவன் அறிவாளி. கடவுளைப் பரப்பியவன் யோக்கியன். கடவுளை வணங்குகிறவன் நாகரிகமானவன். இந்த மூன்று வார்த்தையைப் போட்டு அய்யா அவர்கள் பார்க்கிற மாதிரி எழுதி வைத்து விட்டார்கள்.
சீர்காழியில் அய்யா பேசுகிறார்
நமது தோழர்கள் ஆத்திரப்பட்டார்கள். நமது பொதுக்கூட்டத்திற்கு முன்னாலே இப்படி ஒரு போர்டை எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று அய்யா அவர்களிடம் சொன்னார்கள். அய்யா அவர்கள் இருக்கட்டும், அதுதான் முக்கியம் என்று சொன்னார். இதே சீர்காழியில் அய்யா பேசினார்.
ஏம்பா, கடவுள் என்பவன் தானாக உற்பத்தி ஆனவன் அல்ல. மனிதன்தான் கடவுளை உற்பத்தி பண்ணியவன். அந்த மனிதன் முட்டாளாக இருக்கும்பொழுது இந்த மாதிரி கடவுளை உண்டாக்கினான். எனக்குப் போட்டி என்று நினைத்து நீ என்னுடைய விசயத்தையே ஒத்துக் கொண்டாயே, உன்னை அறியாமல்.
உடனே போர்டை கழற்றிவிட்டான்
கடவுளை உண்டாக்கியவன் அறிவாளி என்று எழுதிய வைத்திருக்கிறாய் அல்லவா? அப்படி என்றால் கடவுள் தானாக உண்டானவன் அல்ல. மனிதன்தான் உண்டாக்கினான் என்று நான் சொன்ன விசயத்தை நீ ஒத்துக்கொண்டாய். உனக்கும் , எனக்கும் என்ன பிரச்சினை? கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று நான் சொல்லு கின்றேன். நீ அறிவாளி என்று சொல்லுகின்றாய். இதை வேண்டுமானால் இரண்டு பேருமே விவாதம் பண்ணிக்கொள்ளாமே என்று சொன்னார்.
சீர்காழியில் எழுதி வைத்தவன் டக்கென்று போர்டைக் கழற்றி எடுத்துவிட்டுப் போய்விட்டான் (சிரிப்பு-கைதட்டல்). இதுவரை தந்தை பெரியாரிடம் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம் பெரியார் பதில் சொல்லியிருக்கின்றார். பெரியார் கேட்ட கேள்விக்குத்தான் இந்த நாட்டில் எவரும் பதில் சொல்லவில்லை (கைதட்டல்).
புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல
ஆகவே யாரையும் புண்படுத்துவது எங்களுடைய நோக்கமல்ல. இந்து முன்னணி சகோதரர்கள் உள்பட, ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கிற தமிழர்கள் உள்பட, பா.ஜ.க வில் இருக்கிற தமிழர்கள் உள்பட அவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிரிகள் அல்லர். சமூக நீதிக்குப் பாடுபட வேண்டும். மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டுமானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மின்சாரத்தை ஒதுக்க முடியுமா?
பெரியார் எங்களுக்கு மட்டும் உரியார் அல்லர். பெரியாருடைய கொள்கை அறிவியல் கொள்கை. மின்சாரத்தை நீங்கள் யாரும் மறுக்க முடியாது, ஒதுக்க முடியாது. கொஞ்சம் பவர்கட் என்றால் உடனே கோபித்துக்கொள்கிறான் அல்லவா?
ஏனென்றால் அவ்வளவு தொழிற்சாலை அந்த, அளவிற்கு வளர்ந்திருக்கிறது. எல்லாம் அவன் செயல். அவனின்றி ஓரணுவும் அசையாது என்று சொல்லுகின்றீர்களே. அப்படியானால் யாரிடம் கோபித்துக்கொள்ள வேண்டும்? அப்பொழுது அவன் செயல் இல்லை. இது மனிதன் செயல் என்று இப்பொழுது சொல்லுகின்றான். ஆகவே கடவுள் நம்பிக்கை என்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை.
மூடநம்பிக்கையின் விளைவு
அந்த மூடநம்பிக்கையினால்தானே இன்றைக்கு மனிதர்கள் மோதிக்கொள்ளுகிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற எங்களால் எந்தக் கோவிலுக்காவது ஆபத்தா? கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற நாங்கள் எங்கேயாவது கலவரம் பண்ணியிருக்கின்றோமா? மதம் இல்லை என்று சொல்லுகின்ற எங்களால் யாருக்காவது சங்கடம் உண்டா?
யாருக்காவது விரோதி உண்டா?
மதத்தை ஒப்புக்கொள்ளாத நாங்கள் யாருக் காவது விரோதியாக இருந்திருக்கிறாமா? மதத்தை ஏற்றுக்கொள்கிறவன்தானே என் மதம் பெரிது; என் கடவுள் பெரிது; கடவுள் இங்கேதான் பிறந்தார் என்று சொல்லுகின்றான். அந்த இடத்தில் நீ மசூதி கட்டிக்கொண்டுவிட்டாய் என்று சொல்லுகின்றான். எனவே மதவாதிகள் சம்மட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். கடவுள் நம்பிக்கையாளர்களால் இரத்த ஆறு கடவுள் நம்பிக்கையாளர்கள் இரத்தஆறு ஓடச்செய்கிறார்கள். மனிதநேயம் படைத்த பெரியார் தொண்டர்கள் மனிதர்களாக இருங்கள்; சகோதர்களாக வாழுங்கள் என்று சொல்லு கிறார்கள். எனவே கடவுளும், மதமும் நம்மைப் பிரித்திருக்கிறது. இணைக்கவில்லை. பெரியார் நம்மை மனிதராக்கி இணைத்திருக்கிறார். பெரியார் தத்துவம் என்பது மனிதநேயம்.
அரசியல் சட்டத்தில் ழரஅயளைஅ என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே பெரியார் தத்துவத்தை கடைப்பிடிப்பதன் மூலமாக ஒருவருக்கு ஒருவர் ஜாதி பிரச்சினைக்கோ, ஜாதிச் சண்டைக்கோ, மதச்சண்டைக்கோ இடமில்லை.
மாறுபட உரிமை உண்டு
மாறுபட்டால்கூட அவரவர் உரிமை அவரவர்க்கு. இந்தியாவில் மதப்பிரச்சினையால் இந்தியா முழுக்க பதற்றம். ஆனால் தமிழ்நாட்டில் அந்தப் பதற்றமே இல்லை. காரணம் என்ன? இந்த மண் பெரியார் பிறந்த மண்.
பெரியார் தொண்டர்கள் ஆளக்கூடிய மண்
பெரியார் ஆண்ட மண். அது மட்டுமல்ல. பெரியாருடைய தொண்டர்கள் ஆளக்கூடிய மண். எனவே தான் இந்த மண்ணில் மனிதநேயம் ஆளும். இந்த மண்ணில் சமூகநீதிக் கொடி பறக்கும். இந்த மண்ணில் அனைவர்க்கும் அனைத்தும் என்ற தத்துவம் இருக்கும் என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடித்துக்கொள்கின்றேன்.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
http://www.viduthalai.periyar.org.in/20101009/news20.html
அபிதான சிந்தாமணியில் இருக்கிறது-விநாயகர் சதுர்த்தி விரதம், விநாயகர் புராணம் இவை எல்லாவற்றையும் எழுதிக்கொண்டு வந்தார்கள்.
எத்தனை விநாயகர்?
அம்மாவைப் போல் பெண் வேண்டுமாம் விநாயகருக்கு!
நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். விநாயகருக்கு மனைவி கிடையாது என்று. விநாயகர் சொன்னாராம், அவருடைய தாயாரிடம், அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டு மானால் உன்னை மாதிரி பெண் வேண்டும் என அம்மாவைப் பார்த்துச் சொன்னாராம். அதனால் ஆற்றங்கரையில் பிள்ளையார் உட்கார்ந்திருக் கிறாராம். என்னை மாதிரி யார் வருகிறார் என்று பார். அவர்களை கல்யாணம் பண்ணிக்கொள் என்று விநாயகருடைய அம்மா சொன்னாராம். இப்படி கதையில் இருக்கிறது. ஏனென்றால் கதை எழுதுகிறவன் அந்தந்த காலகட்டத்தில் தோன்றியதை எழுதினான்.விநாயகருக்கு எத்தனை மனைவிகள்?
விநாயகருக்கு சித்தி புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரியாகிய மோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசனி, காந்தை, சாரு ஹாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தவர் என்று எழுதி வைத்திருக்கின்றான். விநாயருக்கு ஒரு பெண்டாட்டி, இரண்டு பெண்டாட்டி இல்லை. பதினாறு பெண் டாட்டிகளை கணக்குப் போட்டிருக்கின்றான். இதில் சித்தி ஒரு மனைவி, புத்தி ஒரு மனைவி, புத்தியும் அவருக்கு வெளியிலிருந்துதான் வருகிறது. ஏனென்றால் களிமண் ஆனதினாலே வெளியி லிருந்துதான் புத்தி வரும்.
சித்தி, புத்தி விநாயகரே என்று நம்மாள் பொருள் தெரியாமலே பாடிக்கொண்டிருக்கின்றான். ஏனென்றால் இன்னொரு மொழியிலிருந்து வந்ததினாலே இவனுக்கு என்னவென்றே தெரியாது. வல்லபை கணபதி வல்லபை கணபதி என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். யாருக்காவது சந்தேகம் இருந்தால் அங்கே போய் பார்க்க வேண்டும். தாய்மார்களை வைத்துக்கொண்டு சொல்வது எனக்கே கொஞ்சம் சங்கடமான நிலை. வல்லபை என்பது விநாயகருடைய மனைவி. சுப்பிரமணியன் விநாயகருடைய தம்பி.
சுப்பிரமணியம்-சூரபத்மனோடு சண்டைக்குப் போகின்றார். சூரபத்மன்-அசுரன். அசுரன் என்றால் ரொம்ப பலமானவன். அவனுக்கு வீரர்கள் அதிகம். ஆனால் சுப்பிரமணியனுக்கு படை வீரர்கள் இல்லை. தனக்குப் படை வீரர்கள் வேண்டும் என்று தம்பி சுப்பிரமணியம் அண்ணனிடம்-விநாய கனிடம் கேட்கின்றார்.
ஆயிரக்கணக்கான வீரர்கள் உற்பத்தி
உடனே கணேசர் என்ன பண்ணுகிறார்? உனக்கு இராணுவம் வேண்டும்-சைனியம் வேண்டும். அவ்வளவு தானே என்று சொல்லி, தனது மனைவி வல்லபை மூலம் ஆயிரக்கணக்கான வீரர்களை உற்பத்தி பண்ணி அனுப்புகிறார். சைனியம் வந்து கொண்டேயிருக்கிறது. ஃபேக்டரியில் அச்சடித்து வெளியே வந்து கொட்டுகிற மாதிரியே இருக்கிறது. ஒரு கட்டத்தில் போதும், போதும் என்று சுப்பிரமணியரே நினைத்தார்.
கார்க் அடைக்கிற மாதிரி...
உடனே சைனியத்தை நிறுத்துவதற்காக விநாயகர் என்ன செய்தார்? துதிக்கையை வைத்து கார்க் மாதிரி அடைத்துவிட்டார். இதற்கு மேல் சொன்னால் எனது தகுதிக்கு குறைச்சல். உண்மையிலேயே ரொம்ப அசிங்கமான விசயம் அது. நான் இதை விட ரொம்ப நாசூக்காக சொல்ல முடியாது. இதெல்லாம் கற்பனை என்று நினைக்காதீர்கள். சிதம்பரம் ரொம்ப பக்கத்திலேயே இருக்கிறது போய் பார்க்கலாம்.
தீபாராதனை எதற்கு?
நாங்கள் எல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுது திராவிடர் கழக தலைமை நிலையம் சிதம்பரத்தில் இருக்கும். மறைந்த கு.கிருஷ்ணசாமி அவர்கள்தான் தலைவர். தலைமை அலுவலகத்திற்குப் போய் விட்டு வருவோம். அங்கு பக்கத்தில்தான் வல்லபை கணபதி கோயில் இருக்கிறது. ரொம்ப பேர் வெளிச்சம் போதவில்லை என்று கிட்டக்க போய் பார்ப்பான். அய்யர் தீபாராதனை காட்டுவதற்கே வெளிச்சத்தில் பார்ப்பதற்குத்தான். அதே போல தருமபுரிக்கு பக்கத்தில் மத்தூர் என்ற ஊர் இருக்கிறது. அங்கேயும் வல்லபை கணபதி கோயில் இருக்கிறது. அங்கே இருக்கிற ஒருவர் கோவிலுக்குள் சென்று வல்லபை கணபதி படத்தையே எடுத்து அனுப்பிவிட்டார். இந்த அசிங்கத்தை அசிங்கம் என்று சொன்னால் எங்கள் மீது வழக்கு போடுவேன் என்று சொல்லுகின்றான்.
உடைந்த எலும்பை உடைந்த எலும்பாக...
எக்ஸ்ரே கருவிமீது யாராவது வழக்குப் போடுவார்களா? எக்ஸ்ரே கருவி உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகத்தான் காட்டும்.
நீதிமன்றங்களில் இந்த விசயங்களைக் கொண்டு சென்றால்தான் வெளிச்சத்திற்கு வரும். நீதிபதிக்கும் தெரியவரும். ஏனென்றால் அங்கேயும் ரொம்பபேர் பிள்ளையார் படம் மாட்டியிருக்கின்றார்கள்.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
ஆகவேதான் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார் என்றால் யாரையும் வைவதற்கு அல்ல. யாரையும் கோபித்துக் கொள் வதற்கு அல்ல. வசைபாடுவதற்கு அல்ல.
மனிதன் மூடத்தனத்தில் இருந்தபொழுது பிறந்த கருத்து-கடவுள் மூடநம்பிக்கை. சீர்காழியில் அய்யா அவர்களை அழைத்தார்கள். அய்யா அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொன்னார். கட வுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியவன். கடவுளை வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்று.
ஏனய்யா, இவ்வளவு அசிங்கமான கடவுளை இன்னமும் இவன் கும்பிட்டுக் கொண்டிருக்கின்றான். இவன் காட்டுமிராண்டி காலத்து அறிவை அந்த மனப்பான்மையை வைத்திருக்கின்றான் என்ப தற்காக சொன்னார். யாரையும் வைவதற்கு அல்ல.
பெரியாருக்கு எதிர்ப்பு காட்ட....
அய்யா வருகிறார் என்றவுடன் இங்கேயிருக்கிற புத்திசாலிகள் என்ன செய்தார்கள்? பெரியாருக்கு எதிர்ப்புக் காட்டுவதற்காக இங்குள்ள கடைவீதியில் பக்கத்தில் ஒரு பெரிய போர்டை எழுதி வைத்து விட்டார்கள்.
ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. என்ன எழுதி வைத்தார்கள் தெரியுமா?
கடவுளைக் கற்பித்தவன் அறிவாளி. கடவுளைப் பரப்பியவன் யோக்கியன். கடவுளை வணங்குகிறவன் நாகரிகமானவன். இந்த மூன்று வார்த்தையைப் போட்டு அய்யா அவர்கள் பார்க்கிற மாதிரி எழுதி வைத்து விட்டார்கள்.
சீர்காழியில் அய்யா பேசுகிறார்
நமது தோழர்கள் ஆத்திரப்பட்டார்கள். நமது பொதுக்கூட்டத்திற்கு முன்னாலே இப்படி ஒரு போர்டை எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று அய்யா அவர்களிடம் சொன்னார்கள். அய்யா அவர்கள் இருக்கட்டும், அதுதான் முக்கியம் என்று சொன்னார். இதே சீர்காழியில் அய்யா பேசினார்.
ஏம்பா, கடவுள் என்பவன் தானாக உற்பத்தி ஆனவன் அல்ல. மனிதன்தான் கடவுளை உற்பத்தி பண்ணியவன். அந்த மனிதன் முட்டாளாக இருக்கும்பொழுது இந்த மாதிரி கடவுளை உண்டாக்கினான். எனக்குப் போட்டி என்று நினைத்து நீ என்னுடைய விசயத்தையே ஒத்துக் கொண்டாயே, உன்னை அறியாமல்.
உடனே போர்டை கழற்றிவிட்டான்
கடவுளை உண்டாக்கியவன் அறிவாளி என்று எழுதிய வைத்திருக்கிறாய் அல்லவா? அப்படி என்றால் கடவுள் தானாக உண்டானவன் அல்ல. மனிதன்தான் உண்டாக்கினான் என்று நான் சொன்ன விசயத்தை நீ ஒத்துக்கொண்டாய். உனக்கும் , எனக்கும் என்ன பிரச்சினை? கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று நான் சொல்லு கின்றேன். நீ அறிவாளி என்று சொல்லுகின்றாய். இதை வேண்டுமானால் இரண்டு பேருமே விவாதம் பண்ணிக்கொள்ளாமே என்று சொன்னார்.
சீர்காழியில் எழுதி வைத்தவன் டக்கென்று போர்டைக் கழற்றி எடுத்துவிட்டுப் போய்விட்டான் (சிரிப்பு-கைதட்டல்). இதுவரை தந்தை பெரியாரிடம் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம் பெரியார் பதில் சொல்லியிருக்கின்றார். பெரியார் கேட்ட கேள்விக்குத்தான் இந்த நாட்டில் எவரும் பதில் சொல்லவில்லை (கைதட்டல்).
புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல
ஆகவே யாரையும் புண்படுத்துவது எங்களுடைய நோக்கமல்ல. இந்து முன்னணி சகோதரர்கள் உள்பட, ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கிற தமிழர்கள் உள்பட, பா.ஜ.க வில் இருக்கிற தமிழர்கள் உள்பட அவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிரிகள் அல்லர். சமூக நீதிக்குப் பாடுபட வேண்டும். மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டுமானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மின்சாரத்தை ஒதுக்க முடியுமா?
பெரியார் எங்களுக்கு மட்டும் உரியார் அல்லர். பெரியாருடைய கொள்கை அறிவியல் கொள்கை. மின்சாரத்தை நீங்கள் யாரும் மறுக்க முடியாது, ஒதுக்க முடியாது. கொஞ்சம் பவர்கட் என்றால் உடனே கோபித்துக்கொள்கிறான் அல்லவா?
ஏனென்றால் அவ்வளவு தொழிற்சாலை அந்த, அளவிற்கு வளர்ந்திருக்கிறது. எல்லாம் அவன் செயல். அவனின்றி ஓரணுவும் அசையாது என்று சொல்லுகின்றீர்களே. அப்படியானால் யாரிடம் கோபித்துக்கொள்ள வேண்டும்? அப்பொழுது அவன் செயல் இல்லை. இது மனிதன் செயல் என்று இப்பொழுது சொல்லுகின்றான். ஆகவே கடவுள் நம்பிக்கை என்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை.
மூடநம்பிக்கையின் விளைவு
அந்த மூடநம்பிக்கையினால்தானே இன்றைக்கு மனிதர்கள் மோதிக்கொள்ளுகிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற எங்களால் எந்தக் கோவிலுக்காவது ஆபத்தா? கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற நாங்கள் எங்கேயாவது கலவரம் பண்ணியிருக்கின்றோமா? மதம் இல்லை என்று சொல்லுகின்ற எங்களால் யாருக்காவது சங்கடம் உண்டா?
யாருக்காவது விரோதி உண்டா?
மதத்தை ஒப்புக்கொள்ளாத நாங்கள் யாருக் காவது விரோதியாக இருந்திருக்கிறாமா? மதத்தை ஏற்றுக்கொள்கிறவன்தானே என் மதம் பெரிது; என் கடவுள் பெரிது; கடவுள் இங்கேதான் பிறந்தார் என்று சொல்லுகின்றான். அந்த இடத்தில் நீ மசூதி கட்டிக்கொண்டுவிட்டாய் என்று சொல்லுகின்றான். எனவே மதவாதிகள் சம்மட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். கடவுள் நம்பிக்கையாளர்களால் இரத்த ஆறு கடவுள் நம்பிக்கையாளர்கள் இரத்தஆறு ஓடச்செய்கிறார்கள். மனிதநேயம் படைத்த பெரியார் தொண்டர்கள் மனிதர்களாக இருங்கள்; சகோதர்களாக வாழுங்கள் என்று சொல்லு கிறார்கள். எனவே கடவுளும், மதமும் நம்மைப் பிரித்திருக்கிறது. இணைக்கவில்லை. பெரியார் நம்மை மனிதராக்கி இணைத்திருக்கிறார். பெரியார் தத்துவம் என்பது மனிதநேயம்.
அரசியல் சட்டத்தில் ழரஅயளைஅ என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே பெரியார் தத்துவத்தை கடைப்பிடிப்பதன் மூலமாக ஒருவருக்கு ஒருவர் ஜாதி பிரச்சினைக்கோ, ஜாதிச் சண்டைக்கோ, மதச்சண்டைக்கோ இடமில்லை.
மாறுபட உரிமை உண்டு
மாறுபட்டால்கூட அவரவர் உரிமை அவரவர்க்கு. இந்தியாவில் மதப்பிரச்சினையால் இந்தியா முழுக்க பதற்றம். ஆனால் தமிழ்நாட்டில் அந்தப் பதற்றமே இல்லை. காரணம் என்ன? இந்த மண் பெரியார் பிறந்த மண்.
பெரியார் தொண்டர்கள் ஆளக்கூடிய மண்
பெரியார் ஆண்ட மண். அது மட்டுமல்ல. பெரியாருடைய தொண்டர்கள் ஆளக்கூடிய மண். எனவே தான் இந்த மண்ணில் மனிதநேயம் ஆளும். இந்த மண்ணில் சமூகநீதிக் கொடி பறக்கும். இந்த மண்ணில் அனைவர்க்கும் அனைத்தும் என்ற தத்துவம் இருக்கும் என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடித்துக்கொள்கின்றேன்.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
http://www.viduthalai.periyar.org.in/20101009/news20.html
Friday, October 8, 2010
விநாயகனின் சக்தி எங்கே?மனிதனே உருவாக்கி துண்டு துண்டாக வெட்டி கடலில் கரைக்கிறான்
களிமண்ணால் பிள்ளையாரை மனிதனே உருவாக்கி துண்டு துண்டாக வெட்டி கடலில் கரைக்கிறான் அதில் எங்கே விநாயகனுக்கு சக்தி இருக்கிறது? என்று தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் மூட நம்பிக்கையை விளக்கி உரையாற்றினார்.
சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: தந்தை பெரியார் அவர்கள் இனிவரும் உலகம் என்ற நூலில் இனிமேல் எதிர்காலத்தில் ஒவ் வொருவர் கையிலும், பையிலும் தொலைபேசி இருக்கும் என்று சொன்னார். இன்றைக்கு எல்லோர் கையிலும் தொலைபேசி இருக்கிறது. செல்பேசி இருக்கிறது. ஒவ்வொருவரும் ஆள்காட்டி பேசிக் கொள்வார்கள்.
இனிமேல் ஒருவர் ஒரு இடத்திலிருந்து கொண்டே எல்லா இடங்களுக்கும் பேசிக்கொண்டி ருக்கலாம் என்று சொன்னார். அதுதான் வீடியோ கான்ஃபரன்சிங்.
பெரியாரின் சமூக சிந்தனை
இன்றைக்கு அவ்வளவும் வந்தாகிவிட்டது. அவ்வளவு அறிவியல் சமூக சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்கள். எனவே அவருடைய சமூக சிந்தனை வந்தாகிவிட்டது. இன்றைக்கு நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றோம்.
கம்ப்யூட்டரில் பிள்ளையார் படம்
அந்தக் கம்ப்யூட்டரில் இவன் பிள்ளையாரை வரைகிறான். இந்தக் கூட்டம் முறைப்படி முன்னாலேயே நடந்திருக்க வேண்டும். 12ஆம் தேதியே இந்தப் பொதுக்கூட்டம் நடந்திருக்க வேண்டும். என்னுடைய சுற்றுப்பயணத்தில் ரொம்ப நாளைக்கு முன்னாலேயே தேதி கொடுத்தேன்.
ஜெகதீசன் புத்தகம் வெளியிடுவதற்காக கேட்டார். எனக்கும் சீர்காழியில் பேசி ரொம்பநாள் ஆகிவிட்டது என்று நினைத்தேன். புத்தகத்தை மண்டபத்தில் வெளியிடாதீர்கள். பொது மக்கள் மத்தியில் பேச வேண்டும். எல்லா கட்சி நண்பர்களும் இருப் பார்கள். அரசியல் கட்சி தெளிவுள்ள பகுதி அது. எல்லா கட்சி நண்பர்களும் வருவார்கள். அதனால் சீர்காழி பொதுக்கூட்டத்தில் பேச தேதி கொடுத்திருந்தோம்.
பதற்றத்தோடு சொன்னார்
திடீரென்று நமது ஜெகதீசன் ரொம்ப பதற்றத்தோடு, ரொம்ப சங்கடத்தோடு ஃபோன் பண்ணி சொன்னார். காவல்துறையினர் 12ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை அனுமதிக்க முடியாது. ஏனென்றால் அன்றைக்குத்தான் பிள்ளை யாரை எல்லாம் கரைக்கப் போகிறார்கள். ஊர்வலம் அன்றுதான் வருகிறது என்று சொன்னார்கள் என்று சொன்னார்.
நான் தலைமையைக் கேட்டுதான் சொல்வேன் என்றும் சொன்னார். அதுதான் இந்த இயக்கத்தி னுடைய கட்டுப்பாடு. அவர்களாக யாரும் எதுவும் செய்யமாட்டார்கள்.
நான் சொன்னேன். பரவாயில்லை, அவர்கள் என்ன நோக்கத்தோடு ஊர்வலம் வைத்தார்கள் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படவேண்டாம்.
காவல் துறையின் மரியாதையைக் குறைக்கக் கூடாது
காவல்துறை நமக்கு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிற துறை, பெரியார் அவர்களுடைய கருத்துப்படி காவல்துறைக்கு இருக்கின்ற மரியாதையை எந்தக் கட்சிக்காரரும் குறைத்துவிடக்கூடாது.
காவல்துறையினுடைய பணி என்பது சாதாரண மானதல்ல. மத்தளத்திற்கு இரு பக்கம் அடி என்றால் அவர்களுக்கு பலபக்கம் அடி. அப்படிப் பட்ட ஒரு துறை.
பலிகடா ஆக்கக்கூடிய சூழ்நிலை
பல நேரங்களில் அவர்கள் பலிகடா ஆக்கப் படக்கூடிய சூழ்நிலைகளும் உண்டு. எனவே காவல்துறையினருக்கு நாம் சங்கடத்தை உண்டாக்க வேண்டாம். அதிகாரிகள் காக்கி சட்டையைப் போட்டுக் கொண்டு பெரிய பதவியில் இருக்கத்தான் நாம் பாடுபடுகின்றோம். நம்மால் அவர்களுக்கு சங்கடம் வரக்கூடாது. பரவாயில்லை, இன்னொரு நாள் மாற்றி வைத்துக்கொள்ளலாம். நீங்கள் யாரும் சங்கடப்படாதீர்கள் என்று சொன்னேன். தோழர்கள் எல்லாம் கொஞ்சம் வேகமாக இருந்தார்கள். நான் உடனே சொன்னேன். இந்த அரசாங்கம் நமது அரசாங்கம். இந்த அரசாங்கத்திற்கு நாம் சிக்கலை உண்டாக்கக் கூடாது. எனவே அவர்கள் எந்த நோக்கத்திற்காக சொன்னார்கள் என்பது புரியும். புரியாமல் இல்லை. ஆகவே இன்னொரு நாள் வைப்பதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் தெளிவாக நாளைக்கு சொல்லிவிடுங்கள் என்று தெளிவாக சொன்னோம்.
மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம்
நாங்கள் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் செய்கின்றோம். அது அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும். இந்தத் தீர்மானத்தில் ஒரு முக்கியமான தீர்மானமாகப் போட்டிருக்கின்றோம்.
முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு என்று போட்டிருக்கின்றோம். மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும், ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஹ () பிரிவில் திட்டவட்டமாக வலியுறுத்தப்படுகிறது. அரசியல் சட்டத்தில் குரனேயஅநவேயட னரவநைள என்று இருக்கிறது.
அடிப்படை கடமைகள்
எல்லோருக்கும் அடிப்படை உரிமைகள் பற்றித்தான் தெரியும். வழக்கறிஞர்களுக்குக் கூட. ஆனால், அதற்கடுத்து அடிப்படை கடமைகள் என்று ஒன்று இருக்கிறது. குரனேயஅநவேயட னரவநைள என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை கடமைகள் உண்டு.
1.விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். 2. ஏன், எதற்கு என்று கேட்க வேண்டும். 3. மனிதநேயத்தை வளர்ப்பது 4. சீர்திருத்தம். ஒவ்வொரு குடிமகனுடைய பொறுப்பு
ஒவ்வொரு இந்தியக் குடிமகனுடைய கடமை என்னவென்றால் இவை அத்தனையையும் பரப்ப வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. எதைப் பரப்ப வேண்டும்? அறிவியல் மனப்பான்மையை. அரசியல் சட்டத்தில் இப்படி இருக்கிறது. நம்மாள் வருடா வருடம் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடு கின்றார்கள்.
ஆரம்பத்தில் இது தமிழர்களுடைய, திராவிடர்களுடைய பண்பாடு கிடையாது. கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் வட நாட்டிலிருந்து பிள்ளையார் என்பது வாதாபியி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்.
அபிதான சிந்தாமணி
இதற்குப் பெரியாருடைய ஆதாரம் தேட வேண்டாம். 1910இல் வெளிவந்த அபிதான சிந்தாமணி. புலவர் சிங்காரவேலு முதலியார் எழுதிய என் சைக்ளோபீடியா, எல்லா விசயத்தைப் பற்றியும் இருக்கக் கூடியது.
புராணங்கள், இலக்கியங்களில் ஆதாரபூர்வமாக இருக்கிறது. இவை எல்லாவற்றைப் பற்றியும் எடுத்துப் போட்டிருக்கின்றார்கள். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் எழுதியிருக்கின்றார். பிறந்தது எப்படியோ? என்று எழுதியிருக்கின்றார். வட நாட்டிலிருந்து வந்தது.
வாதாபி கணபதே பஜம்! பஜம்!
பாட்டுப்பாடும் பொழுது முதலில் பாடுவார்கள். வாதாபி கணபதே பஜம்! பஜம்! என்று பாடுவார்கள். வாதாபி கணபதி என்றால் வாதாபியிலிருந்து வந்தது.
ஏழாம் நூற்றாண்டிற்குப்பிறகு வந்தது. வேதத்தி லேயோ அல்லது வேறு இடத்திலேயோ விநாயகர் புரம் என்று எழுதி வைத்திருக்கிறதா என்றால் இல்லை. இதிலே பெரிய சிக்கலே நாங்கள் படித்த அளவுக்குப் புராணத்தை எவனும் படித்துத் தொலைக்கவில்லை (கைதட்டல்). பெரியார் படித்த அளவுக்கு இராமாயணத்தை வேறு யாருமே படித்ததில்லை. ஆகவே அவருக்கு எந்த புள்ளி, எந்த கமா எங்கே இருக்கிறது என்பது தெரியும். பக்தி என்பது மூடநம்பிக்கையின் அடையாளம்.
கண்முன்னாலேயே கடவுளை உண்டாக்குகிறான்
இவன் அறிவு எவ்வளவு மழுங்கிப்போய்விட்டது என்று பாருங்கள். இவன் களி மண்ணைக் கொட்டி வைத்திருக்கின்றான். வண்டியில் கொண்டு வந்து களிமண்ணைக் கொட்டி வைத்திருக்கின்றான். நம் கண் முன்னாலேயே களி மண்ணால் கடவுளை உண்டாக்குகின்றான்.
அச்சு வைத்திருக்கின்றான். இரண்டு ரூபாய் பிள்ளையார் வேண்டுமா? நான்கு ரூபாய் பிள்ளையார் வேண்டுமா? கடவுளை சைஸ் வாரியாக விற்கிறவன் நம்மூரில்தான் இருக்கின்றான். வேறு எந்த நாட்டிலேயும் கிடையாது.
பிள்ளையாரை மணைக்கட்டையில் அடக்கி வைத்து. அதற்கு ஒரு பேப்பர் குடை வைத்து பெரப்ப பழம், இவை எல்லாம் வைத்து, கொழுக்கட்டையை இவன் செய்து சாப்பிட்டுவிட்டு-பிள்ளையார் சாப்பிட மாட்டார். மூன்றுநாள் களி மண் பிள்ளையாரை வீட்டில் வைத்திருந்து விட்டு, பிறகு கிணற்றிலேயோ, ஆற்றிலேயோ போட்டு விடுவான். அவரவர்கள் எடுத்துப் போட்டு விடுவார்கள். யாருக்கும் பிரச்சினை இல்லை. சில வருடங்களுக்கு முன்பு போலீஸ்காரர்களுக்கு வேலையே கிடையாது. இது சாதாரண பக்தி.
மதவெறி இயக்கங்கள்
மதவெறி இயக்கமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள், காந்தியைக் கொன்ற கோட்சேவை பயிற்றுவித்த அமைப்புகள், இந்தியாவி லேயே இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் என்று சொன்னால் அது ஆர்.எஸ்.எஸ். என்பதைத் தவிர வேறு கிடையாது. இதை யாரும் மறுக்க முடியாது. இந்த மண் பெரியார் மண். தலைகீழ் நின்றாலும் காவிக்கொடியை ஏற்ற முடியாது.
காவிக்கொடி ஏற்றுகிறவன் எல்லாம் அடிக்கடி ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருக்கின்றான். உங்களுக்குத் தெரியும். காஞ்சிபுரத்திலிருந்து ஆரம் பித்து நித்யானந்தா வரை போய் கொண்டிருக்கின் றான். கடவுள் இல்லை என்பதை அவர்கள் ஒரு வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின் றார்கள். நாங்கள் ஒரு வகையில் பண்ணுகின்றோம். காஞ்சிபுரத்தில் தேவநாதன் என்று ஒரு அர்ச்சகன். அவன் பெண்களை சந்திக் கத் தேர்ந்தெடுத் திருக்கின்ற இடம் கர்ப்பக்கிரகத் திற்குப் பின்னால். நாங்கள் கூட அவ்வளவு அற்புத மாக கடவுள் இல்லை என்று காட்ட முடியாது.
பெரியார் கருத்தை அவன் இப்படி விளக்கி விட்டான். நாங்கள் பல மணி நேரம் தொண்டை வறள கத்திக்கொண்டி ருக்கின்றோம். அவன் அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் போட்டோவாக எடுத்து, வீடியோவாக எடுத்து ரூ.80 லட்சம் சம்பாதித்து விட் டான் என்று ரிப் போர்ட்டே இருக்கிறது. சி.டி.யை வளைகுடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அவ்வளவு பணம் சம்பாதித்துவிட்டான். பகவான் அப்படியே நிற்கிறார். திருப்பதி ஏழு மலையானுக்குப் போட்ட நாமத்தை தேவநாதன் இவன் இருந்த கோவில் கடவுளுக்குப் போட்டு விட்டான். நகையைக் காணோம், தங்கத்தைக் காணோம். அதைக் காணோம், இதைக் காணோம் என்று சொல்லுகின்றான். அது மட்டுமல்ல; கடவுள் நம்மைக் காப்பாற்றவில்லை. எல்லோருக்கும் தெரிகிறது. இந்தப்போடு போடுகிறவனால் விட முடியவில்லை. தண்ணீர் போடுகிறவனாலே விட முடியவில்லை. சிகரெட் குடிக்கிறவனாலே விட முடியவில்லை. கடவுள் நம்பிக்கைகாரர்களே இந்த கடவுள் நம்பிக்கையை விட முடியவில்லை.
அரோகரா என்று சொல்லுகின்றான். திருவண்ணாமலை கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல். திருவண்ணாமலை அகண்ட தீபமாக எரிகிறவர். திருவண்ணாமலையாரிடம் தீவிரவாதி யாராவது போனால் அவர் எழுந்திருக்க வேண்டாமா? ஆனால் அவர் தீவிரவாதியை நம்பவில்லை. ஏ.கே.47த்தான் கடவுள் நம்புகிறார்.
நமது காவல்துறைதான் கடவுளுக்கும் பாதுகாப்பு கொடுக்கிறது. மனிதன் கடவுளைக் காப்பாற்றுகிறானா? மனிதனைக் காப்பாற்று கிறானா? என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
பிள்ளையாரை இங்கு எதற்காக இறக்குமதி பண்ணினான். இந்த நாட்டிலே மதக்கலவரத்தை உண்டாக்க மசூதிப் பக்கம் போய்தான் நாங்கள் மேளம் அடிப்போம் என்று சொல்லுகின்றார்கள். எங்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. நாங்கள் கோவிலுக்கு முன்னால் கூட்டம் போடுவோம். ஒருசிறு அசம்பாவிதம் நடக்காது.
தந்தை பெரியார் 1954இல் பிள்ளையாரை உடைத்துக்காட்டினார். உலகத்திலேயே அதை ஒரு இயக்கமாக செய்தவர் தந்தை பெரியார்தான்.வேறு இயக்கம் கிடையாது. உச்சநீதிமன்றம் வரையிலே வழக்கு போனது. நாங்கள் தண்டனை பெற்றாலும் இந்த பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்வோம். அரசியல் சட்டப்பிரிவின்படி அறிவியல் மனப்பான்மையை நாங்கள் வளர்க்கின்றோம். இந்தக் கதையை சொன்னால் அவ்வளவு அசிங்கமானது. விக்னேஸ்வரனை தொழுதால் எந்த கோணலும் வராது. அவ்வளவு பாதுகாப்பு இருக்கும். விக்னம் இல்லாமல் செய்கிறவருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு? பிள்ளையாரை கரைக்கிற வரையில் நமது காவல்துறை அதிகாரிகள் தாங்க மாட்டார்களே.
-(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101008/news12.html
Thursday, October 7, 2010
சாராயக் கடையிலே ஒழிந்த ஜாதி டீக்கடையிலே தலைதூக்குகிறதே என்ன காரணம்?-கி.வீரமணி உரை
சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபடுகின்ற கட்சி இந்தியாவிலே திராவிடர் கழகத்தைப் போல் இன்னொரு கட்சியைப் பார்க்க முடியாது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
டீக்கு மட்டும் ஜாதி; சாராயத்தில் இல்லையே!
ஜாதி என்பது இரட்டை குவளை முறையில் டீக்கு மட்டும் இருக்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சாத இடமில்லை. சாராயம் குடிக்கின்ற இடத்திற்குப் போகிறான். அங்கே என்ன வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் பார்க்கின்றானா? அங்கே ஏதாவது ஜாதியைப் பார்க்கின்றானா?
அந்த இடத்தில்தான் சமரச சன்மார்க்கம் நடக்கிறது. சாராயம் குடிக்க வருகிறவர்கள் என்ன ஜாதி? சாராயம் காய்ச்சுகிறவர் என்ன ஜாதி? என்பது தெரியாது.
நான் ஜாதியைக் குறிப்பிடுகிறேனே என்று தவறாக எண்ணக்கூடாது. சாராயம் எல்லோரும் காய்ச்சுகிறார்கள். அது குடிசைத் தொழில் மாதிரி சாராயம் குடிக்கிற இடத்தில் சகோதரத்தும் தானே வந்துவிடும். சாராயத்தை ஒரு கிளாசில் ஊற்றிக் கொடுக்கிறார்கள். முதலில் அரைகிளாஸ் உள்ளே இறங்குகிறவரையிலே சாதாரணமாக குடிக்கிறான். முழு கிளாஸ் சாராயத்தைக் குடித்தவுடனே இன்னொருத்தனுக்கு ஊற்றிக்கொடுப்பதற்கு முன்னாலே-இவன் பொறுக்க மாட்டேங்கிறானே, எனக்குக் கொடு என்று இழுக்கிறான்.
பிரதர் என்று சொல்லுகின்றான்
ஒரு கிளாஸ் சாராயம் உள்ளே போனவுடனே பிரதர் என்று சொல்லுகின்றான். அதுவும் இங்கிலீஷில் சொல்லுகிறான்-சாதாரணமல்ல. அங்கே ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி கிளாஸ் வைத்திருக்கின்றானா? சாராயக் கடையிலே ஒழிந்த ஜாதி டீக்கடையிலே தலைதூக்குகிறதே என்ன காரணம்? எவ்வளவு விழிப்பாக இருக்க வேண்டியிருக்கிறது?
இந்த மாதிரி ஓர் அமைப்பே கிடையாது
எனவே, சமுதாய மாற்றத்திற்காக இன்னமும் உழைக்க வேண்டியிருக்கிறது. மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இடையறாத பிரச்சாரம் இந்த மாதிரி ஓர் அமைப்பு இந்தியாவில் எங்கேயுமே கிடையாது. முன்னாலே பிரச்சாரம் பண்ணிக் கொண்டு போவதற்கே ஓர் இயக்கம்; பின்னாலே நடைமுறையிலே அதை அரசியல் ஆக்குவதற்கு இன்னொரு கட்சி. சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ் பாலம் அமைக்கக்கூடிய சூழல்கள் இவை எல்லாமே இருக்கின்றன. வகுப்புவாரி உரிமையைப் பற்றி நம்முடைய தோழர்கள் நிறைய சொன்னார்கள். வகுப்பு வாரி உரிமையைக் கொண்டு வந்த அமைச்சர் முத்தையா அவர்களுடைய பெயரை உங்களுடைய குழந்தை களுக்குச் சூட்டுங்கள் என்று தந்தை பெரியார் சொன்னார்.
ஒரு பார்ப்பனர் எம்.எல்.ஏ.,
ஒரு பார்ப்பன நண்பர் ஒவ்வொரு கட்சியிலேயும் இருந்துவிட்டு பிறகு எந்தக் கட்சிக்குப் போகலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கூட. அப்படிப்பட்ட ஒரு பார்ப்பனர்-அவர் சொன்னார், நாங்கள் பிராமணர் சங்கம் எல்லாம் வைத்திருக்கின்றோம். உங்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னார். மனிதாபி மான அடிப்படையில் நாம் எல்லோரையும் சந்திக்கக் கூடியவர்கள். அவர் வந்து சொன்னார், இல்லிங்க, எங்களுக்கும் நீங்கள் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுங்கள் என்று சொன்னார்.
அவர் சொன்ன செய்தி
நான் சொன்னேன், ரொம்ப மகிழ்ச்சிங்க. கலைஞர் அவர்களிடம் நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லிவிட்டால் இட ஒதுக்கீடு கொடுத்துவிடுவார் என்று சொன்னார். எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் பிராமணர்களை ஒன்று சேர்த்து ஓர் அமைப்பையே வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். இவர் இப்படி சொன்ன வுடனே நான் கேட்டேன். உங்களுக்கு சில வரலாற்று விசயம் சொல்ல வேண்டும். பார்ப்பனர்களுக்கு 16 சதவிகிதம்
வகுப்புவாரி உரிமை என்பதை நீதிக்கட்சி ஆட்சியில் முத்தையா முதலியார் கொண்டு வந்தார். 1928இல் வகுப்புவாரி உரிமை உத்தரவு கொடுத் தார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை விட பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. அவர்கள் நூற்றுக்கு மூன்று பேர்கூட கிடையாது. ஆனால் 16 சதவிகிதம் பார்ப்பனர்களுக்கு ஒதுக் கினார்கள். இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் இருந்த பார்ப்பனர்களுக்கு 16 சதவிகிதம் ஒதுக்கினார்கள். எதிலே?. கம்யூனல் ஜி.ஓ. உத்தரவில்.
ஆனால், நூற்றுக்கு நூறு அனுபவித்த காரணத்தினாலே அவர்கள் ஒரு சதவிகிதத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அது அவர்களுடைய ஏக போக உடைமைதானே!
சென்னைக்குச் செல்ல மாயவரத்தில் இருந்து வண்டி புறப்பட்டது என்றால், ரயிலில் ஏறி படுத்துக்கொள்வான். வைத்தீசுவரன் கோவில் தாண்டி சீர்காழிக்கு வருகிறபொழுது நாம் இரண்டு பேர் வண்டி ஏறுகிறோம். ரயிலில் உட்கார வேண்டிய இடத்தில் படுத்திருக்கிறவனைப் பார்த்து அய்யா கொஞ்சம் எழுந்துஉட்காருகிறீர்களா? இடம் கொடுக்கிறீர்களா? என்று கேட்டால், இவன் அப்படியே நிமிர்ந்து பார்ப்பான். ஆள் என்னை மாதிரி ஒல்லியாக இருக்கிறவனாக இருந்தால், ஏய்யா, உனக்கு வேறு வேலையில்லை அடுத்த கம்ப்பார்ட்மென்ட்டுக்குப் போய் பாரய்யா. இங்கே வந்து ஏன் எங்ககிட்டே கேட்கிறீர்கள். பக்கத்து இடம் காலியாக இருக்கிறதே அங்கே போய்யா என்று சொல்லுவான். ஆள் நன்றாக மோட்டாவாக இருந்தால், ஏங்க, அவசரப் படுகிறீர்கள்? கொஞ்சம் நிதானமாக இரு என்று சொல்லுவான். அது மாதிரி காலம் காலமாக கொடுமையை அனுபவித்துவிட்டான்
மனுவே போடாமல் வழக்கு
மெடிக்கல் காலேஜுக்கு மனுவே போடாமல் செண்பகம்துரைராஜன் என்பவர் வழக்குப் போட்டார். கம்யூனல் ஜி.ஓ. வகுப்புவாரி உரிமை செல்லாது என்று உயர்நீதிமன்றத்திலே தீர்ப்பு வாங்கி, உச்சநீதிமன்றத்திலே அதை உறுதி செய்யப்பட்ட நிலையிலேதான் தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்தினார். திராவிடர் இயக்கம் போராடியது. சமூக நீதிக்கொடி ஏற்றப்பட்டது.
இட ஒதுக்கீடு யார் கேட்க வேண்டும்?
இந்திய அரசியல் சட்டம் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய போராட்டத்தினால் முதன் முறையாகத் திருத்தப்பட்டது என்பதை நாடாளு மன்றத்திலே அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பதிவு செய்தார்கள். அன்றைய மத்திய சட்ட அமைச்சர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்துதான் மாற்றம் ஏற்படுத்தினார்கள்.
இந்த செய்திகளை எல்லாம் அந்தப் பார்ப்பன நண்பருக்குச் சொன்னேன். 16 சதவிகிதம் வாங்கியவர்கள் இப்பொழுது 7 சதவிகிதம் வேண்டும் என்று வந்திருக்கின்றீர்களே, தாராள மாக உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்தில்லை.
ஏனென்றால், பொதுவாக நம்முடைய நாட்டில் தலைகீழாக நடக்கிறது. இடஒதுக்கீடு யார் கேட்க வேண்டும் என்றால், யார் சிறுபான்மையினரோ அவர்கள்தான் இடஒதுக்கீடு கேட்க வேண்டும்.
நியாயப்படி பார்த்தால் பெரும்பான்மையோர் இடஒதுக்கீடு கேட்பது நம்முடைய நாட்டில்தான். இடமே நம்முடையது. நாம் இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டு, எனக்குக் கொஞ்சம் இடம்விடு, எனக்கு கொஞ்சம்இடம்விடு என்று சொல்வது சரியா? நம்முடைய வீட்டில் அவன் குடிபுகுந்து கொண்டான்.
இப்பொழுது நாம், அய்யா எங்களை கொல்லைப்புறத்திலாவது இருக்க வையுங்கள் அல்லது தாழ்வாரத்திலாவது இருக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்கிறோம்.
வீட்டை நாம் காக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம் இன்னும் சில பேர் வீடு நமக்கு வந்ததா? இல்லையா? என்று கவலைப்படாமல் எனக்கு முன்னால்தான் கொடுத்தது என்று சொல்லுகின்றார்.
மண்டல் கமிஷன் அறிக்கை
மண்டல் கமிஷன் வந்தபொழுது என்ன சொன்னார்கள்? பார்ப்பனர்கள் எப்படியிருப் பார்கள் என்பதற்கு உதாரணம்-மண்டல் கமிஷன் அறிக்கையையே வெளியிடவில்லை; வெளி வரவில்லை; அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது? எத்தனை சதவிகிதம் என்பது தெரியவில்லை; இடஒதுக்கீடு செய்தியே வெளிவரவில்லை.
வெளியே வராத ஒரு சூழலில் இந்து பத்திரிகை ஒரு செய்தியை முக்கியத்துவம் கொடுத்து அவசரமாக வெளியிட்டது. மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்று விடுதலையில் எழுதுவோம்.
பழைய விடுதலை ஆசிரியர் குருசாமிதான் அந்தப் பெயரை வைத்தார். இந்து பத்திரிகையில் எழுதினான்.Burry the Mandal Report என்று. இந்து பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் எவ்வளவு இருக்கிறது பாருங்கள்.
பரிந்துரையில் என்ன என்பதே தெரியாது
மண்டல் கமிஷன் அறிக்கையில் என்ன பரிந்துரை இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இதைப் படித்துவிட்டு மண்டல் அவர்கள் தொலைபேசி மூலம் என்னிடம் பேசினார். இந்தமாதிரி எழுதியிருக்கின்றார்கள். உங்களுடைய சமுதாய அமைப்பான திராவிடர் கழகம்தான் போராட முடியும்.
நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். அன்றைக்கு திருச்சியில் மத்திய கமிட்டி கூடுகிறது. நாங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.Burry the Mandal Report என்று எழுதியிருக்கின்றார்கள். அதைக் கண்டிக்கின்றோம் என்று சொன்னோம்.
உடனே இந்து பத்திரிகை செய்தியாளர் கமிட்டிக்கூட்டம் முடிந்த பிறகு என்னிடம் கேட்டார், சார், உங்க ளுக்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரி யுமா? ஏன் கண்டிக் கிறீர்கள் என்று கேட் டார். அதே கேள்வியை நான் திருப்பி உங்க ளுக்குப் பதிலாகச் சொல் லுகின்றேன்.
புதையுங்கள் என்று எழுதியது இந்து
அதிலே என்ன இருக்கிறது என்று தெரியாமல் இந்து பத்திரிகை மண்டல் ரிப்போர்ட்டை புதையுங்கள் என்று எழுதுகிறீர்களே, அது நியாயமா? என்று கேட்டேன். ஒன்றே ஒன்று இப்பொழுது தெரிந்துபோய்விட்டது.
நீங்கள் புதையுங்கள் என்று எழுதினால், மண்டல் கமிஷன் அறிக்கை எங்களுக்கு சாதகமானது என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால், நான் விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போகும் பொழுதே அய்யா அவர்களிடம் நான் கேட்டேன்.
பெரியார் அவர்களிடத்திலே, அய்யா, நான் வக்கீலாக இருக்கிறேன். சட்டம் படித்தேன். நான் இயக்கத்தில் இருந்தால்கூட விடுதலை நாளேடு கொள்கை நாளேடு-இதற்கு தலையங்கம் எழுதுவது சாதாரண விசயமல்ல.
கொள்கைக்கு மாறாக எழுத முடியாது. இது என்னுடைய கருத்து இல்லை என்று நீங்கள் ஏதாவது அறிக்கை கொடுத்து விட்டால் நான் என்னுடைய பொறுப்பைத் தொடர முடியாது.
உடனே நடைமுறைப்படுத்துங்கள் மண்டல் கமிஷனை
ஆகவே, நான் எப்படி எழுத வேண்டும்? எனக்குக் கொஞ்சம் அறிவுரை சொல்லுங்கள். எனக்குத் தெளிவுபடுத்துங்கள் என்று கேட்டுவிட்டுத்தான் நான் விடுதலை அலுவலகத்தில் ஆசிரியர் பணியைத் தொடங்க ஆரம்பித்தேன்.
அய்யா தெளிவோடு சொன்னார்
அய்யா அவர்கள் எல்லாவற்றிலும் ரொம்பத் தெளிவாகச் சொல்லக்கூடிய தலைவர். பட்டென்று, பட்டறிவோடு பேசக்கூடியவர். என்னப்பா, நீதான் இங்கிலீஷ் படித்திருக்கிறாயே. அதோடு சட்டம் வேறு படித்திருக்கிறீர்கள்.இந்து பத்திரிகையும்தான் படிக்கிறீர்கள். இந்து பத்திரிகையைப் பாருங்கள். தலையங்கம் என்ன எழுதியிருக்கிறான் என்று பாருங்கள். அதற்கு நேர் எதிராக எழுது. அதுதான் நமது கொள்கை (கைதட்டல்).
இப்படி ரொம்பத் தெளிவாகச் சொல்லி விட்டார். இதைவிட கலங்கரை விளக்கம் நமக்கு வேறு என்ன இருக்கிறது? அன்றிலிருந்து இன்று வரை அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.
மண்டல் ரிப்போர்ட்டை (Burry the mandal report) புதையுங்கள் என்று இந்து பத்திரிகை எழுதிய வுடனே, நான் உடனே ஆங்கிலத்தில் ழரசசல வாந ஆயனேயட சுநயீடிசவ என்று சொன்னேன். மண்டல் கமிஷன் அறிக்கையை உடனே செயல்படுத்து என்று எங்கே பார்த்தாலும் சொன்னோம்.
நான் இளைஞர்கள் மத்தியிலே பேசும்பொழுது கூட வேடிக்கையாகச் சொன்னேன். இளைஞர்களே! உங்கள் காதலியிடம் பேசும்பொழுது கூட முதலில் மண்டல் கமிசனைப் பற்றி பேசிவிட்டு அப்புறம் உங்கள் காதலைப் பற்றிப் பேசுங்கள் என்று சொன்னேன்.
இன்றைக்கு மண்டல் கமிஷன் எவ்வளவு பெரிய வெற்றியாக வந்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். எனவே எங்களைப் பொறுத்த வரையிலே நாங்கள் சமுதாயப் பணியை செய்து கொண்டிருக்கக் கூடியவர்கள்.
அறிவியல் கருவி வந்தால் மற்ற நாடுகளில் மூடநம்பிக்கை போகும். ஆனால், நம்முடைய நாட்டிலே அறிவியல் கருவி வந்தால் மூடநம்பிக்கை பெருகும். காரணம் என்ன? இந்த அறிவியல் கருவியை வைத்துக்கொண்டுதான் மூட நம்பிக் கையை வளர்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
கம்ப்யூட்டரில் பிள்ளையார் வரைகிறான். கடவுளைப் பார்க்க வேண்டுமா? மூன்று கொடுங்கள் என்று செல்ஃபோனால் கேட்கிறான்.
-(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101007/news15.html
Tuesday, September 28, 2010
சீர்காழியைக் குலுக்கிய சேனை!-திராவிடர் கழக மண்டல மாநாடு
தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம்
சீர்காழியில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. உடன் தமிழக பால்வளத்துறை அமைச்சர் உ. மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழக முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர் (சீர்காழி, 27.9.2010).
சீர்காழி மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் அளிக்கப்பட்டது. தராசில் தமிழர் தலைவர் அமர்வதற்குமுன் மாநாட்டு வரவேற்புக் குழுவினரும், பல்துறையைச் சேர்ந்த பொதுமக்களும் சால்வை போர்த்தி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். தராசின் ஒரு தட்டில் தமிழர் தலைவர் அமர, மறுதட்டில் ரூபாய் நாணயங்கள் கொட்டப்பட்டன. சம அளவு வந்தபோது, தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என்று பொதுமக்கள் முழக்கமிட்டனர். அதன் தொகை ரூபாய் 15 ஆயிரம் ஆகும். திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு இத்தொகை அளிக்கப்படும் என்று, மாநாட்டில் கழகத் தலைவர் அறிவித்தார்.
மாலை 5 மணிக்கு சீர்காழி தென்பாதியி லிருந்து மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி - மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோமல் மு. நடராசன் தலைமை யிலும், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், கழகப் பொதுக் குழு உறுப்பினர் வீ. மோகன் ஆகியோர் முன்னிலையிலும் புறப்பட்டது.
புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவ மனை சாலை, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக மாநாடு நடை பெற்ற பழைய பேருந்து நிலையத்தை வந் தடைந்தது. பேரணி தொடங்கப்பட்ட இடத் திலும், பேரணி அணிவகுத்து வந்த பாதை களின் இருபுறத்திலும் ஏராளமான பொது மக்கள் கூடிநின்று, பேரணியில் இடம்பெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
மூட நம்பிக்கைகளைச் சுட்டு எரிக்கும் முழக்கங்களைக் கழகத் தோழர்கள் வழி நெடுக ஒலித்து வந்தனர்.
அலகு குத்தி கார் இழுத்தல்
சாமி சக்தியால்தான் முதுகில் அலகு குத்தி கார் இழுக்க முடியும் என்ற மூட நம்பிக்கையின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் கழகத் தோழர்கள் திருக்குவளை கவியரசன் (திருவாரூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர்), தஞ்சைத் தோழர்கள் தேவா, ராஜா ஆகியோர் முதுகில் அலகு குத்தி கடவுள் மறுப்பு வாசகங்களை முழங்கிய வண்ணம் அம்பாசிடர் காரை இழுத்து வந்த காட்சியைக் கண்டு பொது மக்கள் அதிசயப்பட்டனர்.
அலகுக்காவடி
ஜெயங்கொண்டம் பெரியார் பெருந் தொண்டர் கே.பி. கலியமூர்த்தி, உரத்தநாடு வினோத், கண்கொடுத்தவனிதம் செந்தில் குமார், தஞ்சை ராஜேஷ் ஆகியோர் அலகுக் காவடி எடுத்து, மூட நம்பிக்கை ஒழிப்பு கருத்துகளை முழங்கி வந்தனர்.
அரிவாள்மீது ஏறி நின்று அசத்தல்!
கரம்பக்குடி தோழர் முத்து சில்லத்தூர் சிற்றரசு குழுவினர், பளபளக்கும் கூரிய அரிவாள்மீது ஏறி நின்று, கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று ஓங்கி ஒலித்தனர்.
திருவாரூர் மாவட்ட கழக மகளிர் பாசறை அமைப்பாளர் சி. செந்தமிழ்ச்செல்வி தலைமை யில் மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்தனர். தீச்சட்டி இங்கே - மாரியாத்தாள் எங்கே என்று அவர்கள் முழக்கமிட்டு வந்த காட்சியை பெண்கள் பார்த்து வியந்தனர். தோழியர்கள் சரசுவதி, சைனம்பூ, சூரனூர் அஞ்சம்மாள், சூரனூர் இராசாங்கம் ஆகியோர் தீச்சட்டி ஏந்தி வந்தனர்.
திராவிடர் கழக இளைஞரணி மாநில செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், மாநில மாணவரணி செயலாளர் ரெ.ரஞ்சித் குமார், தோழர்கள் திராவிட எழில், சாமி. அரசிளங்கோ, பர்தீன், ராஜேஷ் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்து வழிநடத்தி வந்தனர்.கட்டுக்கோப்போடு போக்குவரத்திற்கு இடையூறின்றி இருவர் இருவராக அணி வகுத்து தலைமைக் கழகம் அளித்த கொள்கை முழக்கங்களை பூமியதிர முழங்கி வந்த நேர்த்தியைக் கண்டு பொதுமக்கள் பாராட் டினர்; இளைஞர்கள் எழுச்சி பெற்றனர்.
சீர்காழியில் திராவிடர் கழக மண்டல மாநாட்டில் நடைபெற்ற மாபெரும்
மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி காட்சிகள் (27.9.2010)
மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி காட்சிகள் (27.9.2010)
சீர்காழியில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் உரையைக் கேட்க திரண்டிருந்தோர் (27.9.2010)
விடுதலை :28/09/2010
http://www.viduthalai.periyar.org.in/20100928/news26.html
Subscribe to:
Posts (Atom)

